புதன், 29 ஜூலை, 2009

பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு

சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A - பாகம் 4



Appendix A4: Samarqand MSS VS 1924 Egyptian Edition



பக்கம் #622: 



- எட்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 36:18ம் வசனத்தில் "மீம்" எழுத்து காணப்படவில்லை, ஆனால் தற்கால குர்‍ஆனில் அது உள்ளது. 



- பத்தாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 36:23ம் வசனத்தில் "அலீஃப்" உள்ளது, ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆனில் அவ்வெழுத்து காணப்பாவில்லை.



பக்கம் #684: 



- பதினோராம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 40:81ம் வசனத்தில் காம்பு போன்ற உறுப்பு காணப்படவில்லை, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் "" என்ற எழுத்து காணப்படுகிறது.



பக்கம் #652: 



- இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 37:103ம் வசனத்தில் முதலில் "வாவ்" என்ற எழுத்தும் அதைத் தொடர்ந்து "மீம்-அலீஃப்" என்ற எழுத்துக்களும் வருகின்றன. ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆன்களில் "ஃப-லாம்-மீம்-அலீஃப்" என்ற வரிசையில் எழுத்துக்கள் வருகின்றன (முழுவசனத்தையும் பார்க்க 67ம் பக்கத்தைப் பார்க்கவும்). 



- நான்காம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 37:105ம் வசனத்தில் "ஸாத்" என்ற எழுத்து இல்லை, ஆனால் தற்கால குர்‍ஆனில் அது இடம் பெற்றுள்ளது. 'மூல' குர்‍ஆனில் "அலீஃப்" காணப்படுகிறது, ஆனால் தற்கால குர்‍ஆனில் "ட (ta)" காணப்படுகிறது. 



- ஆறாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் அதே வசனத்தில் "நூன்" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால், தற்கால குர்‍ஆனில் "நூன்" எழுத்து காணப்படுகிறது. 



- ஏழாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 37:106ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால் தற்கால குர்‍ஆனில் இவ்வெழுத்து காணப்படுகிறது. 



- எட்டாம் வரியில் அதே வசனத்தில் 'மூல' குர்‍ஆனில் "ப (ba)" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆனில் இவ்வெழுத்து காணப்படுகிறது.



xix


சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A - பாகம் 4


பக்கம் #665:



- எட்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 38:12ம் வசனத்தில் அனேக சிறிய எழுத்துக்கள் காணப்படுகின்றன. 'மூல' குர்‍ஆனில் ஏற்கனவே அந்த இடத்தில் இருந்த "'மூல' (பெரிய) எழுத்துக்களை" நீக்கிவிட்டு, இந்த சிறிய எழுத்துக்களை அவ்விடத்தில் நுழைத்துள்ளார்கள். இந்த சிறிய எழுத்துக்கள் தற்கால குர்‍ஆனிலும் காணப்படுகிறது.


- பத்தாம் வரியில் அதே வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால், அது தற்கால குர்‍ஆனில் காணப்படவில்லை.



பக்கம் #669:



- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 38:22ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆனில் அந்த இடத்தில் "" என்ற எழுத்து காணப்படுகிரது.



- பன்னிரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 38:23ம் வசனத்தில் "நூன்" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆனில் 'நூன்" காணப்படுகிறது.



பக்கம் #671:



- எட்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 38:26ம் வசனத்தில் "" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆனில் "" காணப்படுகிறது.


xx



சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A - பாகம் 4


பக்கம் #673:



- நான்காம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 39:6ம் வசனத்தில் ஒரு காம்பு போன்ற உறுப்பும் ஒரு "லாம்" என்ற எழுத்தும் காணப்படுகிறது, ஆனால், தற்கால அரபிக் கு‍ர்‍ஆனில் இரண்டு காம்பு போன்ற உறுக்கள் காணப்படுகிறது, அவ்விடத்தில் ஒரு "" என்ற எழுத்தும், மற்றும் ஒரு "நூன்" என்ற எழுத்தும் காணப்படுகிறது.


- அதே வரியில், 'மூல' குர்‍ஆனில் ஒரு காம்பு காணப்படுகிறது, அதோடு கூட "ஜீம்" காணப்படுகிறது, இந்த "ஜீம்" என்ற எழுத்தானது நீண்டுக்கொண்டு சென்றுள்ளது, இவ்வெழுத்து பொதுவாக ஒரு வால் போல மாறி திரும்ப பின்னோக்கி வரவேண்டும், இது நமக்கு எதைக் காட்டுகிறது என்றால், இந்த ஜீம் என்ற எழுத்துக்கு பிறகு வேறு எழுத்து(க்கள்) இருப்பதாக தெரிகிறது. தற்கால அரபிக் குர்‍ஆனில் இந்த ஜீம் என்ற எழுத்து ஒன்று மட்டுமே காணப்படுகிறது.


- பதினோராம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 39:7ம் வசனத்தில் "இரண்டு காம்புகள்" இல்லாமல் காணப்படுகிறது, ஆனால் தற்கால குர்‍ஆன்களில் "நூன் மற்றும் ட (ta)" காணப்படுகிறது.



பக்கம் #696:



- பத்தாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 41:31ம் வசனம் தற்கால அரபிக் குர்‍ஆனில் உள்ள வசனத்தை விட வித்தியாசமாக காணப்படுகிறது.


xxi



ஆங்கில மூலம்: Appendix A4: Samarqand MSS VS 1924 Egyptian Edition



சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு - இதர பாகங்கள்


பின் இணைப்பு A - பாகம் 1, பாகம் 2 & பாகம் 3
.


பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு

சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A - பாகம் 3


Appendix A3: Samarqand MSS VS 1924 Egyptian Edition


பக்கம் #406:

- முன்றாம் வரியில் 'மூல' குர்‍ஆனின் 11:97ம் வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால், தற்கால குர்‍ஆனில் அது உள்ளது.



- பதினோராம் வரியில் 'மூல' குர்‍ஆனின் 11:99ம் வசனத்தில் "தால் (dal)" என்ற எழுத்து உள்ளது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அவ்வெழுத்து காணப்படுவதில்லை.



பக்கம் #461:



- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 16:89ம் வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்து உள்ளது, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் இவ்வெழுத்து காணப்படுவதில்லை.



பக்கம் #496: 



- ஆறாம் வரியில் 'மூல' குர்‍ஆனின் 18:15ம் வச‌னத்தில் "அலீஃப்" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் "" காணப்படுகிறது.



பக்கம் #514: 



- ஆறாம் வரியில் 'மூல' கு‍ர்‍ஆனில் 18:57ம் வசனத்தில் ஒரு காம்பு போன்ற உறுப்பு காணப்படுகிறது, ஆனால் தற்கால குர்‍ஆன்களில் அந்த காம்பு போன்ற எழுத்து காணப்படுவதில்லை.



xiii


சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A - பாகம் 3


பக்கம் #515:



- இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 18:58ம் வசனத்தில் "அலீஃப்" எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் அவ்வெழுத்து காணப்படுவதில்லை.


- இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் "அலீஃப்" என்ற எழுத்து காணப்படுவதில்லை, ஆனால் தற்கால குர்‍ஆனில் காணப்படுகிறது.



பக்கம் #518:



- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 18:70ம் வசனத்தில் "லாம்" என்ற எழுத்து வருகிறது, ஆனால் இதற்கு பதிலாக தற்கால குர்‍ஆனில் "ட (ta) " என்ற எழுத்து காணப்படுகிறது.


- இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் "அலீஃப்" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் அது காணப்படுவதில்லை.



பக்கம் #519:



- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 18:74ம் வசனத்தில் "லாம்" காணப்படுகிறது ஆனால், தற்கால அரபி குர்‍ஆன்களில் "லாம்" எழுத்திற்கு பதிலாக "ட (ta)" என்ற எழுத்து காணப்படுகிறது.


- நான்காம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 18:75ம் வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால் தற்கால அரபி குர்‍ஆன்களில் "லாம்" எழுத்து காணப்படுகிறது.



பக்கம் #520:



- நான்காம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 18:83ம் வசனத்தில் "மீம்" உள்ளது, ஆனால் தற்கால அரபி குர்‍ஆன்களில் "நூன்" மற்றும் "" என்ற எழுத்துக்கள் அவ்விடத்தில் காணப்படுகிறது.


 xiv


சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A - பாகம் 3


பக்கம் #535:



- ஒன்பதாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 19:39ம் வசனத்தில் "லாம் அலீஃப்" காணப்படுகிறது, ஆனால் தற்கால குர்‍ஆனில் "மீம்" என்ற எழுத்து காணப்படுகிறது.



பக்கம் #541:



- பன்னிரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 19:72ம் வசனத்தில் "ஃப" அல்லது "காப்" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆனில் "நூன்" என்ற எழுத்து காணப்படுகிறது.



பக்கம் #548:



- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 19:98ம் வசனத்தில் "மீன் அலீஃப்" என்ற எழுத்துக்கள் காணப்படுகிறது (இவைகள் ஃப அல்லது காப் என்ற எழுத்தாகவும் இருக்கலாம்). ஆனால் தற்கால குர்‍ஆனில் "வாவ்" என்ற எழுத்து காணப்படுகிறது.



- ஒன்பதாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 20:3ம் வசனத்தில் "நூன்" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால், தற்கால அரபி குர்‍ஆன்களில் "நூன்" காணப்படுகிறது.



பக்கம் #555:



- ஆறாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 20:42ம் வசனத்தில் அதிகபடியான ஒரு காம்பு போன்ற உறுப்பு காணப்படுகிறது, ஆனால், அது தற்கால குர்‍ஆனில் காணப்படுவதில்லை.


xv



சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A - பாகம் 3


பக்கம் #556:



- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 20:46ம் வசனத்தில் "மீம்" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால் தற்கால குர்‍ஆனில் அது காணப்படுகிறது.



பக்கம் #557:



- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 20:50ம் வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்து உள்ளது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அது காணப்படுவதில்லை.



பக்கம் #563:



[இந்த பகுதியின் விவரத்திற்காக, நாங்கள் நான்கு குர்‍ஆன்களை ஸ்கான் செய்துள்ளோம், அதாவது சமர்கண்ட் 'மூல' குர்‍ஆன், 1924ம் ஆண்டு எகிப்தில் வெளியான அரபிக் குர்‍ஆன், வார்ஸ் குர்‍ஆன் மற்றும் துருக்கியில் வெளியான குர்‍ஆன்]


- சமர்கண்ட் 'மூல' குர்‍ஆனில் 20:76ம் வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்திற்கு அடுத்ததாக "வாவ்" எழுத்து தொடர்ந்து வந்துள்ளது. ஆனால், 1924ம் ஆண்டின் எகிப்திய குர்‍ஆனிலும், வார்ஸ் குர்‍ஆனிலும் [மூன்றாவது ஸ்கான் படத்தை பார்க்கவும்] முதலில் "அலீஃப்" வருகிறது அதை தொடர்ந்து "ஹம்ஜா" என்ற எழுத்து வருகிறது. துருக்கி குர்‍ஆனில் [நான்காவது ஸ்கான் படம்] முதலில் "வாவ்" என்ற எழுத்து வருகிறது அதன் பிறகு "அலீஃப்" வருகிறது.



பக்கம் #564:



- ஏழாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 20:79ம் வசனத்தில் "நூன்" என்ற எழுத்து வருகிறது, தற்கால குர்‍ஆனில் அவ்வெழுத்து "" என்று உள்ளது.


xvi


சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A - பாகம் 3


பக்கம் #572:



- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 20:108ம் வசனத்தில் "ஸீன்" என்ற எழுத்து காணப்படவில்லை. ஆனால் தற்கால குர்‍ஆனில் "ஸீன்" உள்ளது.



பக்கம் #582:



- இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 26:77ம் வசனத்தில் "" என்ற எழுத்து உள்ளது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அவ்வெழுத்து "ப (ba)" என்று காணப்படுகிறது.



பக்கம் #584:



- ஐந்தாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 26:93ம் வசனத்தில் இரண்டு காம்பு போன்ற உறுப்பு காணப்படுகிறது, ஆனால் தற்கால குர்‍ஆனில் "" உள்ளது.



பக்கம் #598:



- எட்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 27:3ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆனில் "" உள்ளது.


- பன்னிரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 27:4ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து வருகிறது, ஆனால் தற்கால குர்‍ஆனில் அது காணப்படவில்லை. [கட்டம் வரையப்பட்ட இடத்தில் 'மூல' குர்‍ஆனில் அந்த குறிப்பிட்ட வார்த்தை இருந்ததா?]


xvii


சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A - பாகம் 3


பக்கம் #599:



- இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 27:5ம் வசனத்தில் "" மற்றும் "நூன்" என்ற எழுத்துக்கள், பக்கத்தின் மார்ஜினில் (margin) பிறகு அதிகபடியாக சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், அந்த எழுத்துக்கள், தற்கால குர்‍ஆனிலும் சேர்க்கப்பட்டுள்ளது.



பக்கம் #621:



- பன்னிரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 36:18ம் வசனத்தில் "அலீஃப்" எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆனில் "லாம்" மற்றும் "" என்ற எழுத்துக்கள் அவ்வார்த்தையின் அடுத்ததாக சேர்க்கப்பட்டுள்ளது.



[கட்டம் இடப்பட்ட இடத்தில் 'மூல' குர்‍ஆனில் "வாவ்" என்ற எழுத்து இருந்ததா?]



பக்கம் #700:



- மூன்றாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 42:21ம் வசனத்தில் "லாம் அலீஃப்" என்ற எழுத்துக்கள் பிற்காலத்தில் 'மூல' குர்‍ஆனில் சொறுகப்பட்டுள்ளது, இவ்வெழுத்துக்கள் தற்கால குர்‍ஆனில் காணப்படுகிறது.



பக்கம் #702:



- பத்தாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 42:25ம் வசனத்தில் இரண்டு காம்புகள் காணப்படுகிறது, ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆனில் ஒரு "காம்பு" மட்டுமே காணப்படுகிறது. கட்டம் வரையப்பட்ட இடமானது, 'மூல' குர்‍ஆனிலிருந்து "ஏதோ ஒரு வார்த்தை நீக்கப்பட்டது" போல காணப்படுகிறது.



பக்கம் #705:



- பன்னிரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 42:35ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து "லாம்" என்ற எழுத்து இல்லாமல் காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆனில் இரண்டு எழுத்துக்களும் காணப்படுகிறது.


xviii


ஆங்கில மூலம்: Appendix A3: Samarqand MSS VS 1924 Egyptian Edition



சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு - இதர பாகங்கள்


பின் இணைப்பு A - பாகம் 1, பாகம் 2 & பாகம் 4.


செவ்வாய், 28 ஜூலை, 2009

பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு

சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A - பாகம் 2


Appendix A2: Samarqand MSS VS 1924 Egyptian Edition

பக்கம் #279: 



- இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனின் 6:59ம் வசனத்தில் ஒரு காம்பு போன்ற எழுந்து இருக்கிறது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அது இல்லை.

- நான்காம் வரியில் 'மூல' குர்‍ஆனில் ஒரு காம்பு போன்ற எழுத்து இல்லை, ஆனால் அதே வசனத்தில் தற்கால குர்‍ஆன்களில் அங்கு "ப (ba)" உள்ளது.



பக்கம் #283:

- எட்டாவது வரியில், 'மூல' குர்‍ஆனில் 6:68ம் வசனத்தில் காம்பு போன்ற எழுத்து நான்காவது முறை வந்துள்ளது, ஆனால் தற்கால அரபிக் கு‍ர்‍ஆனில் அது இல்லை.



பக்கம் #295:

- முதல் வரியில் "ஸீன்" அல்லது "ஸாத்" என்ற எழுத்து 'மூல' குர்‍ஆனின் 6:91ம் வசனத்தில் வருகிறது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அந்த இடத்தில் "" உள்ளது. இன்னும் 'மூல' குர்‍ஆனின் அந்த முதல் வரியிலேயே "மீம்" வந்துள்ளது, அந்த இடத்தில் தற்கால குர்‍ஆனில் "" வந்துள்ளது.

- இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனின் 6:92ம் வசனத்தில் "மீம்" வருகிறது, ஆனால், தற்கால அரபி குர்‍ஆனில் அந்த இடத்தில் "" உள்ளது. [சதுர பெட்டி வரையப்பட்ட எழுத்தாகிய "வாவ்" என்ற எழுத்து தற்கால அரபி குர்‍ஆனில் காணலாம், ஆனால், 'மூல' கு‍ர்‍ஆனில் அவ்வெழுத்து இல்லை]



பக்கம் #297:

- பத்தாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 6:94ம் வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்து "வாவ்" என்ற எழுத்து இல்லாமல் இருக்கின்றது, ஆனால், தற்கால குர்‍ஆனில் "வாவ்" என்ற எழுத்து சேர்க்கப்பட்டுள்ளது.



vii




சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A - பாகம் 2


பக்கம் #296:

- இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனின் 6:93ம் வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அது இல்லை.



- பன்னிரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் "லாம்" என்ற எழுத்து உள்ளது, ஆனால், அதே வசனத்தில் தற்கால குர்‍ஆனில் அது காணப்படவில்லை.



பக்கம் #314:



- ஒன்பதாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 6:129ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து இல்லை. ஆனால் தற்கால குர்‍ஆனில் அது சேர்க்கப்பட்டுள்ளது.



பக்கம் #336:



- முதல் வரியில் 'மூல' குர்‍‍ஆனின் 7:3ம் வசனத்தில் "அதிகபடியான காம்பு போன்ற" உறுப்பு காணப்படுகிறது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆன்களில் அது இல்லை.



பக்கம் #337:



- ஏழாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:9ம் வசனத்தில் அதிகபடியான ஒரு காம்பு போன்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆன்களில் அது இல்லை.



viii



சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A - பாகம் 2


பக்கம் #338:



- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:11ம் வசனத்தில் "ஸாத்" என்ற எழுத்து உள்ளது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆனில் அதற்கு பதிலாக "ஸீன்" உள்ளது.



பக்கம் #340:

- மூன்றாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:19ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து உள்ளது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆன்களில் "ஃப" என்ற எழுத்து அடுத்து வரும் வார்த்தையோடு சேர்க்கப்பட்டுள்ளது.



பக்கம் #342:



- நான்காம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:26ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து உள்ளது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆனில் அவ்வெழுத்து கொடுக்கப்படவில்லை.



பக்கம் #343:



- மூன்றாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:27ம் வசனத்தில் "மீம்" மற்றும் "நூன்" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் அவ்விரு எழுத்துக்களும் காணப்படவில்லை.



ix


சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A - பாகம் 2


பக்கம் #350:



- ஒன்பதாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:38ம் வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால் தற்கால குர்‍ஆனில் அது காணப்படுகிறது.



பக்கம் #351:



- பதினோராம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:40ம் வசனத்தில் ஒரு அதிகபடியான காம்பு போன்ற உறுப்பு உள்ளது, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் அது இல்லை.



பக்கம் #353:



- எட்டாவது வரியிலும், பத்தாவது வரியிலும் 'மூல' குர்‍ஆனில் 7:43ம் வசனத்தில் "அதிகபடியான" காம்பு போன்ற உறுப்பு இல்லை, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் அது உள்ளது.



பக்கம் #356:



- நான்காவது வரியிலும், ஐந்தாவது வரியிலும் 'மூல' குர்‍ஆனில் 7:47ம் வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்து இல்லை, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் அது உள்ளது. வாய்வழி பாரம்பரியத்தின் படி இந்த "அலீஃப்" எழுத்து 'மூல' குர்‍ஆனில் இருந்ததாக சொல்லப்படுகிறது.



x


சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A - பாகம் 2


பக்கம் #359:



- மூன்றாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:51ம் வசனத்தில் அதிகபடியான காம்பு உள்ளது, ஆனால் தற்கால குர்‍ஆனில் அந்த காம்பு இல்லை.




பக்கம் #363:



- ஆறாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:58ம் வசனத்தில் அதிகபடியான காம்பு உள்ளது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆனில் அது இல்லை.



பக்கம் #367:



- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:68ம் வசனத்தில் "ஸீன்" உள்ளது, ஆனால் தற்கால குர்‍ஆனில் "மீம்" மற்றும் "" உள்ளது.



- ஏழாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:69ம் வசனத்தில் "ஸீன்" உள்ளது, ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆனில் "ஸாத்" உள்ளது.



பக்கம் #389:



- பன்னிரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 11:58ம் வசனத்தில் "டால் (dal)" என்ற எழுத்து இருக்கின்றது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அந்த எழுத்திற்கு பதிலாக "ப (ba)" உள்ளது.




xi



சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A - பாகம் 2


பக்கம் #369:



- எட்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:73ம் வசனத்தில் "அலீஃப்" உள்ளது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அந்த இடத்தில் "" உள்ளது.



பக்கம் #370:



- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:73ம் வசனத்தில் "லாம் அலீஃப்" என்ற இரண்டு எழுத்துக்கள் உள்ளது, ஆனால், பிறகு யாரோ ஒரு நபர் "லாம்" என்ற எழுத்தின் மீது ஒரு கோடு போட்டுள்ளார், அதனால், தற்கால குர்‍ஆன்களில் அவ்வெழுத்து நீக்கப்பட்டுள்ளது.



பக்கம் #373 / #374:



- பன்னிரண்டாம் வரியிலும், அடுத்த பக்கத்தின் முதல் வரியிலும் 'மூல' குர்‍ஆனில் 7:82ம் வசனத்தில் உள்ள வார்த்தை குறிப்பிடும் அளவிற்கு தற்கால குர்‍ஆன்களில் மாற்றப்பட்டுள்ளது.




பக்கம் #382:



- ஆறாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:100ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து உள்ளது, ஆனால் தற்கால குர்‍ஆன்களில் "" மற்றும் "வாவ்" உள்ளது.



பக்கம் #421:



- எட்டாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 15:21ம் வசனத்தில் "அலீஃப்" காணப்படுகிறது, ஆனால் தற்கால குர்‍ஆனில் அது காணவில்லை.


xii



ஆங்கில மூலம்: Appendix A2: Samarqand MSS VS 1924 Egyptian Edition



சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு - இதர பாகங்கள்


பின் இணைப்பு A - பாகம் 1, பாகம் 3 &  பாகம் 4.


சனி, 25 ஜூலை, 2009

Answer Mist: தூதன் போல வேஷம் போடும் சாத்தான் Vs சாத்தானாக மாறும் தூதன்

Answer Mist: தூதன் போல வேஷம் போடும் சாத்தான் Vs சாத்தானாக மாறும் தூதன்



முன் கதை:



ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது கட்டுரைக்கு மூன்று பின்னூட்டங்கள் வந்தன:


1. ஆதரவிற்கு ஏமாற்றுதல் ஒரு ஆயுதம்: டாக்டர் ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது


2. யார் ஏமாற்றுக்காரர்? Dr. நாயக் அவர்களா? (அ) பின்னூட்டமிட்டவர்களா?



Mist Said:


உமரண்ணா how are you? மேடை போட்டு உங்க ஆளுங்க பட்டப்பகலில் காதுல பூ சுத்துரதை எல்லாம் கேட்டு பழகிப் போன உங்களுக்கு ஜாகிர் நாயக் சொல்ற புள்ளி விவரம் தவறாக தெரியுதாக்கும். ஒ.கே விஷயத்திற்கு வருவோம்.



Umar:


ஹலோ மிஸ்ட் அவர்களே, நான் நன்றாகவே இருக்கிறேன், நீங்க எப்படி இருக்கீங்க?


ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்றுச் சொல்லுவார்கள், அது போல, நான் விவரமாக இந்த கட்டுரையில் சொன்னேன், அதாவது "முதலில் ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த புள்ளிவிவரங்கள் சரியா இல்லையா என்று தெரிவியுங்கள், அப்போது தான் உங்களையும், உங்கள் இஸ்லாமையும், இஸ்லாமியரல்லாதவர்கள் நம்புவார்கள்" என்றுச் சொன்னேன்.


மேலே பின்னூட்டமிட்டவர்கள் என்ன செய்தார்களோ, அதையே நீங்களும் செய்துள்ளீர்கள். எந்த காலத்திலும் நீங்கள் திருந்தப்போவதில்லை என்பது மட்டும் மிகவும் தெளிவாகத் தெரிகிறது.


அது எப்படி மிஸ்ட் அவர்களே , பின்னூட்டம் இடும் எல்லா இஸ்லாமியர்களும் ஒரே மாதிரி சிந்திக்கிறீர்கள்?


// Mist Said: உங்களுக்கு ஜாகிர் நாயக் சொல்ற புள்ளி விவரம் தவறாக தெரியுதாக்கும்.//


அவர் கொடுத்த புள்ளிவிவரம் உங்களுக்கு எப்படித் தெரிகிறது? உண்மையாகத் தெரிகிறதா?


சகோதரர் மிஸ்ட் அவர்களே, உங்களுக்கு ஜாகிர் நாயக் சொன்ன புள்ளிவிவரங்கள் சரியாக இருக்கின்றதா? அப்படி சரியாக இருந்தால், ஆதாரத்தைக் கொடுக்கவேண்டியது தானே!


மறுபடியும் சொல்கிறேன், மிஸ்ட் அவர்களே,


ஜாகிர் நாயக் அவர்கள் சொன்ன விவரம் சரியானது என்ற ஆதாரம் இருந்தால்?


டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த புள்ளிவிவரங்களை ஆராய்ந்து அதற்கு ஆதாரங்களைத் தாருங்கள்.


அப்படி இல்லாத பட்சத்தில்,


நீங்கள் ஒரு பொய்யார்? ஜாகிர் நாயக் அவர்கள் ஒரு 420?


ஆதாரங்களை கொடுங்கள் கட்டுரையை நீக்குகிறேன்:


ஆதாரங்களை கொடுத்தால், நான் இந்த ஜாகிர் நாயக் பற்றிய கட்டுரையை நீக்கிவிடுகிறேன் என்றுச் சொன்னேன்.


ஜாகிர் நாயக் பற்றிய‌ இந்த கட்டுரை இருக்கக்கூடாது, இணையத்தில் உலாவக்கூடாது, இது ஒரு பொய்யான கட்டுரை, ஜாகிர் நாயக் அவர்களுக்கு அவதூறு கொண்டு வரும் கட்டுரை, இஸ்லாமுக்கு அவதூறை கொண்டு வரும் கட்டுரை என்ற அக்கரை ஒவ்வொரு முஸ்லீமுக்கும் இருந்தால், முக்கியமாக மிஸ்ட் அவர்களுக்கு இருந்திருந்தால், ஆதாரத்தை காட்டியிருப்பார், அதனை பரிசோதித்து, நானும் 2007லிருந்து என் தளத்தில் இருக்கும் "ஜாகிர் நாயக் அவர்களின் சாயம் வெளுத்தது" என்ற கட்டுரையும், பின்பு மூன்று பின்னூட்டங்களுக்கு நான் அளித்த பதில் கட்டுரையையும் நீக்கியிருப்பேன்.


ஆனால், எந்த ஒரு இஸ்லாமியருக்கும்


நேர்மை இல்லை, உண்மையில்லை,


டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் புள்ளி விவரங்கள் மீது நம்பிக்கையில்லை,


மொத்தமாக மறைமுகமாக "ஜாகிர் நாயக் அவர்கள் ஒரு பொய்யர் என்பதை" பின்னூட்டமிடாத இஸ்லாமியர்கள் நிருபித்துக்கொண்டு இருக்கிறார்கள், அதே போல பின்னூட்டமிடுகின்ற மிஸ்ட் போன்றவர்கள், ஜாகிர் நாயக்கின் பொய்யை இன்னும் அனேகர் அறிந்துகொள்ளும்படி செய்கிறார்கள்.


// Mist Said: உங்களுக்கு ஜாகிர் நாயக் சொல்ற புள்ளி விவரம் தவறாக தெரியுதாக்கும்.//


நான் பல முறை சொல்லிவிட்டேன், இஸ்லாமுக்கு நல்லபெயரை கொண்டுவரவேண்டியது, இணையத்தில் எழுதும் இஸ்லாமியர்களின் கடமை அதனை நேர்மையான முறையில் செய்தால் நன்றாக இருக்கும் என்று பல முறை சொல்லிவிட்டேன், ஆனால், இஸ்லாமியர்களுக்கு நேர்மையைப் பற்றிச் சொல்வதும் செவிடன் காதியில் ஊழிய சங்கும் ஒன்று தான்.


ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த விவரம் தவறு என்று தெரிந்தால், "ஆமாம், அவர் தவறான விவரத்தை கொடுத்துவிட்டார்" என்று சொல்லிவிட்டால், ஒருவரியில் முடிந்துவிடும் விவாதங்கள். அவரின் நேர்மை கேள்விக்குரியதாக மாறுமே ஒழிய, இஸ்லாமுக்கு கெட்டபெயர் இல்லையே! ஆனால், மிஸ்ட் போன்றவர்கள் என்ன செய்கிறார்கள்? இன்னும் பொய்யுக்கு, ஜாகிர் நாயக் அவர்களுக்கு வக்காளத்து வாங்குகிறார்கள், இதனால் விளையும் தீமை என்ன?


மிஸ்ட் எப்படியோ அப்படி ஜாகிர் நாயக் இருப்பார்! ஜாகிர் நாயக் அவர்கள் எப்படியோ, அப்படி முஹம்மது இருப்பார், இஸ்லாமும் இருக்கும் என்று இஸ்லாமியாரல்லாதவர்கள் தெரிந்துகொள்வார்கள். (செய்கின்ற எல்லா வேலையையும் இஸ்லாமியர்கள் செய்துவிட்டு, "இஸ்லாமுக்கு கெட்டப்பெயர் கொண்டுவந்துவிட்டார்கள் இவர்கள்" என்று மற்றவர்கள் மீது குற்றச்சாட்டுகளை அள்ளிவீசுவார்கள்)


மிஸ்ட் உங்களிடம் நான் கேட்கிறேன்,


நீங்கள் குர்‍ஆனை படிக்கிறீர்கள் தானே!


தினமும் அல்லாஹ்வை தொழுதுக்கொள்கிறீர்கள் தானே!


நேர்மையாக வாழவேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது என்பதை நம்புகிறீர்கள் தானே!


பொய் சொல்லக்கூடாது என்று இஸ்லாம் சொல்கிறது என்பதை நம்புகிறீர்கள் தானே!


இப்படி இருக்கும் போது, ஒரு இஸ்லாமிய அறிஞர் தவறு செய்யும் போது, "அவர் செய்தது தவறு தான் என்றுச் சொல்ல உங்களுக்கு தடையாக இருப்பது எது?".


உங்களுக்கு இஸ்லாம் முக்கியமா? அல்லது ஜாகிர் நாயக் அவர்கள் முக்கியமா?


இஸ்லாம் பற்றி நீங்கள் பதில் சொல்வதற்கு அனேக காரியங்கள் உலகத்தில் உள்ளன! இஸ்லாமுக்கு நல்ல பெயர் கொண்டு வருவதற்கு முஸ்லிம்களாகிய நீங்கள் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் நேர்மையானவர்களாக வாழ்ந்து காட்டவேண்டும், அப்போது தான் நீங்கள் கேட்காமலேயே இஸ்லாமியரல்லாதவர்கள் உங்கள் குர்‍ஆனை படிக்க ஆர்வம் கொள்வார்கள்? இஸ்லாமை பற்றி அறிந்துக்கொள்ள உங்களிடம் வருவார்கள்.


இஸ்லாமையும், முஹம்மதுவின் பெயரும் எக்கேடு கெட்டுப்போனாலும் பரவாயில்லை மிஸ்ட் ஆகிய நான் மட்டும் "இன்னும் ஜாகிர் நாயக் அவர்களின் பொய்யுக்கு குடை பிடிப்பேன்" என்றுச் சொல்வது உங்களுக்கு நெருடலாக தெரியவில்லை?


என்னுடைய இந்த கட்டுரையை (பதிலை) படிக்கும் இஸ்லாமியரல்லாதவர்களின் மனதில் எது இடம் பிடிக்கும், சாதார முஸ்லீம் முதல் ஜாகிர் நாயக் போன்ற பெரிய அறிஞர்கள் வரை பொய்யர்கள் என்பது என்று நினைக்க மாட்டார்களா?


இது தான் உங்களுக்கு வேண்டுமா?


முதலில் "ஆமாம், ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த விவரங்கள் தவறானவை" என்று ஒப்புக் கொள்ளுங்கள், பிறகு இஸ்லாம் பற்றி பேசவேண்டிய, எழுத வேண்டிய இதர விவரங்களைப் பற்றி சிந்தியுங்கள், இது தான் நானும் விரும்புவது. இப்படி யாரும் உங்களுக்கு அறிவுரை சொல்லமாட்டார்கள், நான் ஏன் சொல்கிறேன் என்றால், இப்படி இஸ்லாமிய அறிஞர்களாக உள்ள நாயக் போன்றவர்களைப் பற்றியே நாம் பின்னூட்ட்ம் இட்டுக்கொண்டு பதில்கள் சொல்லிகொண்டு இருந்தால், இஸ்லாம் பற்றியுள்ள மீதமுள்ள முக்கியமான விவரங்களை எப்போது பேசப்போகிறீர்கள் நீங்கள்?


இதோ உங்களுக்காகவும், ஜாகிர் நாயக் போன்றவர்களுக்காகவும் சில வசனங்கள், அதுவும் குர்‍ஆனிலிருந்து:


நேர்மையான சொல்லை சொல்லவேண்டும்:



ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள். (33:70)



…… அன்றியும் பொய்யான சொல்லையும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (22:30)



ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள். (9:119)



உங்களுக்குத் தெரியாத விஷயத்தை அறிவில்லாமல் சொல்லக்கூடாதாம்



இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு, உங்களுக்குத் (திட்டமாக) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித் திரிகின்றீர்கள்; இன்னும் இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய (பாவமான)தாக இருக்கும். (24:15)



பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகும்:



(நபியே!) இதுபற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும் எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால்; "வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும்; எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும்; எங்களையும் உங்களையும் அழைத்து (ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு) 'பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்' என்று நாம் பிரார்த்திப்போம்!" என நீர் கூறும். (3:61)



பொய் சொல்கிறவர்கள் மீது ஷைத்தான்கள் இறங்குவார்களாம்



எவர்கள் மீது ஷைத்தான்கள் இறங்குகிறார்கள் என்பதை நான் உமக்கு அறிவிக்கட்டுமா? பெரும் பொய்யனான ஒவ்வொரு பாவியின் மீதும் அவர்கள் இறங்குகிறார்கள். தாங்கள் கேள்விப்பட்டதையெல்லாம் (ஷைத்தான்களை அவர்களின் காதுகளில்) போடுகிறார்கள்; இன்னும் அவர்களில் பெரும் பாலோர் பொய்யர்களே. (26: 221- 223)



இனியாவது மிஸ்ட் அவர்களே, பொய் சொல்கிறவர்களுக்கு வாக்காளத்து வாங்கிக்கொண்டு இருக்க விருப்பம் கொள்கிறீர்களா?



Mist said:


// Umar quoted:



1) இஸ்லாம் ஒரு பொய் மார்க்கம், முஹம்மது ஒரு பொய் தீர்க்கதரிசி, கிறிஸ்து உண்டாக்கிய இரட்சிப்பை மக்கள் அடையக்கூடாது என்பதற்காக சாத்தான் உருவாக்கிய ஒரு மார்க்கம் தான் இஸ்லாம் (இக்கட்டுரையில் கிறிஸ்தவம் உண்மையானதாக இருந்தால்..." என்ற கடைசி பாகத்தை படிக்கவும்).//



உண்மையிலேயே சாத்தான் உண்டாக்கிய மார்க்கமாக இருந்தால் என்னவெல்லாம் நடக்கும்? ஒரே கடவுளை வணங்கு,சிலைகளை வணங்காதே,கடவுளுக்கு இணை வைக்காதே, விபச்சாரம் செய்யாதே, மது அருந்தாதே, வட்டி வாங்காதே, சம்பாதிப்பதில் ஹராம் ஹலால் பாரு, உண்பதில் ஹராம் ஹலால் பாரு, பெண்களை போகப்பொருளாக ஆக்காதே இப்படியெல்லாம் சொல்வானாக்கும். என்ன கொடுமை சார் இது? உமரண்ணா கொஞ்சமாவது யோசிச்சு எழுதுங்க சார். மனசை தொட்டு ஆண்டவனுக்கு பயந்து சொல்லுங்க இந்த சாத்தானிய தனங்களையெல்லாம் இன்றைய உலகில் செய்வது யார்?



Umar said:

ஏமாற்றுபவன் (சாத்தான்) எப்படி ஏமாற்ற முயற்சி எடுப்பான்:

மிஸ்ட் அவர்களே, சாத்தான் பற்றியும் அவன் தந்திரங்கள் பற்றியும், சரியான கேள்வியைத் தான் கேட்டு இருக்கீங்க.


ஒரு நபர் இன்னொரு நபரை ஏமாற்றவேண்டுமானால் எப்படி ஏமாற்றுவான்?


நேரடியாக வந்து முகத்துக்கு நேராக நான் உன்னை ஏமாற்றப்போகிறேன் என்றுச் சொல்லி ஏமாற்றுவானா?


இப்படி செய்யமாட்டான், தான் நல்லவன் போல நடிப்பான், நல்ல பெயர் எடுக்க முயற்சி எடுப்பான், நல்ல கருத்துக்களையே சொல்லுவான், மக்கள் சிறிது அவன் மீது நம்பிக்கை வைத்த பிறகு சிறிது சிறிதாக தன் உண்மை முகத்தை காட்டி கடைசியாக ஏமாற்றிச் சென்றுவிடுவான். சாத்தானுக்கும் சிறிது அறிவு இருக்குதுங்கோ!


இப்படித் தான் முஹம்மது மூலம் செய்யவைத்தான் சாத்தான், மக்காவில் இருக்கும் வரையில் நல்ல பிள்ளையாக இருந்தார், ஒரே மனைவியோடு வாழ்ந்தார், உங்களுக்கு உங்கள் வழி, எனக்கு என் வழி, உங்களுக்கு உங்கள் மார்க்கம் எங்களுக்கு என் மார்க்கம் என்றுச் சொன்னார், அதே முஹம்மது மதினாவிற்கு வந்த பிறகு, கத்தி குத்து இரத்தம் வன்முறை ஆபாசம் என்று உண்மையான நிலையை காட்டிவிட்டார்.


அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக் கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத் தக்கதாயிருக்கும். (2 கொரி 11:14-15)


சாத்தான் என்ன செய்வான், "தானே ஒளியின் தூதன்" போல முதலில் காட்சியளிப்பான், நீதியின் ஊழியக்காரர் போல காட்சி அளிப்பான், இதில் எந்த ஆச்சரியமும் இல்லை.


மக்காவில் முஹம்மது இருந்த போது, எடுத்த எடுப்பிலேயே, நான் தான் நபி என்னோடு எல்லாரும் சேருங்கள், இல்லையானால் நான் கொன்றுவிடுவேன், இஸ்லாமை ஏற்காதவர்களை நான் ஊர் கடத்திவிடுவேன், இஸ்லாம் தவிர‌ வேறு மார்க்கம் அனுமதிக்கப்படுவதில்லை, போர் புரிந்து அதில் வரும் பெண்களை கற்பழிக்கலாம் என்றுச் சொல்லியிருந்தால், அவரோடு கூட்டம் சேர்ந்த சிலரும் சேர்ந்து இருக்கமாட்டார்கள்.


ஆனால், அப்படி செய்யவில்லை முஹம்மது, முதலில் அமைதி மதமாக தன் மார்க்கத்தை காட்டினார், கிறிஸ்தவர்கள் யூதர்களுக்கு ஏற்ற விதமாக, எருசலேமுக்கு நேராகவே பல ஆண்டுகள் தொழுதுக் கொள்ளவேண்டும் என்றுச் சொன்னார், மார்க்கத்தில் கட்டாயம் இல்லை என்றுச் சொன்னார், அனேக துன்பங்களை அவதூறுகளை சகித்தார், அதாவது "ஒளியின் வேஷத்தை" போட்டுக் கொண்டார், நீதியின் ஊழியக்காரர்களின் வேஷத்தை போட்டுக்கொண்டார்.



பிறகு மதினாவிற்கு வந்த பிறகு தான், உண்மை இஸ்லாம் வெளிப்பட்டது, இதன் விளைவு நாம் இன்றும் அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம்.


எனவே, எடுத்த எடுப்பிலேயே வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்றுச் சொன்னால், வேலை நடக்காது என்பது சாத்தானுக்கு நன்றாகத் தெரியும். எனவே தான் சாத்தான் முஹம்மதுவை முதலில் நல்ல மார்க்கமாக இஸ்லாமைக் காட்டினான், பிறகு தான் தன் உண்மையான முகத்தைக் காட்டினான்.


கிறிஸ்தவர்களுக்கு சாத்தானின் தந்திரங்கள் மிகவும் நன்றாகவே தெரியும்.



// Mist said



உண்மையிலேயே சாத்தான் உண்டாக்கிய மார்க்கமாக இருந்தால் என்னவெல்லாம் நடக்கும்? ஒரே கடவுளை வணங்கு, சிலைகளை வணங்காதே,கடவுளுக்கு இணை வைக்காதே, விபச்சாரம் செய்யாதே, மது அருந்தாதே, வட்டி வாங்காதே, சம்பாதிப்பதில் ஹராம் ஹலால் பாரு, உண்பதில் ஹராம் ஹலால் பாரு, பெண்களை போகப் பொருளாக ஆக்காதே இப்படியெல்லாம் சொல்வானாக்கும். என்ன கொடுமை சார் இது? உமரண்ணா கொஞ்சமாவது யோசிச்சு எழுதுங்க சார். மனசை தொட்டு ஆண்டவனுக்கு பயந்து சொல்லுங்க இந்த சாத்தானிய தனங்களையெல்லாம் இன்றைய உலகில் செய்வது யார்?//



நான் முதலிலேயே சொன்னது போல, நாம் இறைவனுக்கு எதிராக பெரிய பாவங்களை செய்ய சாத்தான் தூண்டுவான் என்று நாம் நினைக்கவேண்டியதில்லை, சாத்தான் இறைவனின் சின்ன கட்டளைகளையும் மீறச் செய்வான். சின்னதோ பெரியதோ இறைவனுக்கு கீழ்படியாமல் கட்டளைகளை மனிதன் மீறவேண்டும், இது தான் சாத்தானுக்குத் தேவை.


உதாரணத்திற்கு: ஏவாளிடம் சாத்தான் வந்து, நீ இறைவனுக்கு நேராகச் சென்று, கெட்ட வார்த்தையில் வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டு என்றுச் சொல்லவில்லை, அதற்கு பதிலாக இறைவனின் கட்டளையை மனிதன் மீறும்படிச் செய்தான், அதாவது அந்த மரத்தின் கனியை புசி என்றுச் சொன்னான், இது சிறிய தவறு தான், ஆனால், இறை கட்டளையை மீறுவது ஆகும். இறை கட்டளையை மீறுவது தான் பாவம், அது பெரியதா சின்னதா என்பதில்லை.


அது போல, இஸ்லாம் வட்டிக்கு வாங்கச் சொல்லவில்லை, இதனால் இது இறைவனின் மார்க்கமே என்றுச் சொல்வதற்கு வாய்ப்பு இல்லை. நாத்தீகர்கள் கூட வட்டிக்கு வாங்காதே என்றுச் சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், அப்படியானால், நாத்தீகமும் இறைவனால் உண்டானது என்று நம்பிவிடுவீர்களோ! இது முரண்பாடாக இல்லை!


உலகில் இருக்கும் எல்லா மார்க்கங்களிலும் நல்ல கட்டளைகள் அனேகம் உண்டு, அப்படியானால், இஸ்லாமைப் போல‌ நல்ல கட்டளைகள் இருக்கும் மீதி இருக்கின்ற மார்க்கங்கள் இறைவனால் உண்டாக்கப்பட்டது என்று நீங்கள் நம்புகிறீர்களா?


நம்ப மாட்டீர்கள் என்று எனக்குத்தெரியும் அப்படியானால், அம்மார்க்கங்களில் உள்ள நல்ல கட்டளைகள் என்ன ஆவது? எல்லா மதங்களிலும் நீதியான வாக்கியங்கள் உண்டே, நல்லது செய், தீமை செய்யாதே, பொய் பேசாதே, நேர்மையானவனாக இரு என்று எல்லா மார்க்கங்களும் சொல்கின்றனவே!


இயேசு கொடுத்த இரட்சிப்பை மனிதன் பெறுவதற்கு தடையாக சாத்தம் உண்டாக்கிய ஒரு வழி தான் "இஸ்லாம்", சிலுவை மரணமில்லை, உயிர்த்தெழுதலில்லை என்றுச் சொன்னான், இது போதும் மனிதன் இரட்சிப்பு அடையாமல் பார்த்துக் கொள்வதற்கு.


நீங்கள் எழுதிய வரிகளில் சிலவற்றை குறிப்பிட்டு எழுத ஆசைப்படுகிறேன்:


//Mist said: விபச்சாரம் செய்யாதே…. , பெண்களை போகப் பொருளாக ஆக்காதே //


இஸ்லாம் விபச்சாரம் செய்யாதே என்றுச் சொல்கின்றதா? அப்படியானால், இந்த வசனத்தின் பொருள் என்னவோ?



அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும். (4:3)



(குர்‍ஆன் 4:3ம் வசனத்தில் ஓர் அடிமைப்பெண் என்று எழுதி இஸ்லாமின் பெயரை நிலை நாட்ட முயற்சித்துள்ளார் மொழியாக்கம் செய்த இஸ்லாமியர்)



போரில் கிடைத்த அடிமைப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளாமல் அவளோடு உடலுறவுக் கொள்வது விபச்சாரம் இல்லையா?



இஸ்லாம் அதனை விபச்சாரம் என்று அழைக்கவில்லை என்பதால், விபச்சாரம் ஆகாதா?


போரில் பிடிப்பட்ட பெண்களை கற்பழிக்க உங்கள் முஹம்மது அனுமதி அளித்தாரே, இது பெண்களை மோகமாக பார்ப்பதில்லையா?


பெண்களை மோகமாக பார்க்காதவர்களா நான்கு பெண்களை திருமணம் செய்துக் கொள்ளமுடியும்?


திருமண பந்தமில்லாமல் ஒரு பெண்ணோடு உடலுறவுக் கொள்வதை இஸ்லாம் என்னவென்றுச் சொல்கிறது? தெய்வீக பந்தமா அல்லது விபச்சாரமா?


ஆறு வயசு சிறுமியைக் கூட விட்டுவைக்கவில்லையே உங்கள் நபி?


அவர் செய்த அந்த செயலினாலே, இஸ்லாமிய நாடுகளில் எத்தனை சின்னஞ்சிறு குழந்தைகள் வேதனை அடைகின்றன என்று உங்களுக்குத் தெரியுமா?


ஒருவேளை மிஸ்ட் அவர்களுக்கு ஆறுவயது மகள் இருந்து, அந்த மகளை ஒரு இஸ்லாமிய அறிஞர், 50 வயதிற்கு அதிகமாக இருக்கும் ஒருவர் திருமணம் செய்துகொள்ள அனுமதி கேட்டால் கொடுப்பீர்களா?


சொர்க்கத்தில் அனேக பெண்கள் காத்திருக்கிறார்கள் நீங்கள் வந்து அனுபவிக்கலாம் என்று சொல்லும் ஒரு மார்க்கம் "இறைவனால் உண்டானதா என்று சிந்தித்துப்பாருங்கள்"?


//Mist said: இந்த சாத்தானிய தனங்களையெல்லாம் இன்றைய உலகில் செய்வது யார்?//


முஸ்லீம்கள் தான்,


ஹோட்டலுக்கு செல்லமுடியலே,


இரயிலில் பிரயாணம் செய்யமுடியலே,


குறைந்த பட்சம் கிரிக்கேட் விளையாட்டையாவது நேரடியாக பார்ப்போம் என்றுச் சொன்னால், அதற்கும் வாய்ப்பில்லே,


வெடிகுண்டு மழை உலகம் முழுவதும் பெய்துக்கொண்டு இருக்கிறது... யார் செய்கிறாங்க இந்த சாத்தானிய காரியங்கள்?


அமெரிக்காகாரன் ஈராக்கில் குண்டை வீசுகின்றானாம், இஸ்லாமியர்களும் உலகம் முழுவதும் குண்டு வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்? இஸ்லாமியர்களும் அமெரிக்காகாரணும் குண்டுகளைப்போட்டு, உலகத்தை அழித்துவிடுங்கள். யூதர்கள் மும்பையில் எங்கோ வாழுகிறார்களாம், அதனால், ஹோட்டலில் கூட நிம்மதியாக உட்கார்ந்து சாப்பிடமுடியவில்லை. எவனோ, ஐரோப்பா கண்டத்தில் எங்கோ பத்திரிக்கையில் முஹம்மது பற்றி படங்களை வரைந்தானாம், ஒரு பையித்தியக்காரன் ஆப்ரிக்கா கண்டத்தில் கிறிஸ்தவர்களை தாக்குகிறான். போப் முஹம்மது பற்றிச் சொன்னாராம், ஏதோ ஒரு பயித்தியம் பிடித்தவன், யாரோ ஒரு பெண்ணை கொன்றானாம்.


நம் எதிர்ப்புக்களை நேர்மையான முறையில் அஹிம்சை முறையில் சொல்லத் தெரியாதவர்கள் இருக்கும் வரை உலகத்தில் நிம்மதிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.


ஒரு வயது குழந்தையை கூட திருமணம் செய்துக் கொள்ளலாம்,


http://www.youtube.com/watch?v=F13gtjjDEgE


ஒரு வயது குழந்தையை கூட திருமணம் செய்துக் கொள்ள ஒப்பந்தம் போடலாம் என்றுச் சொல்கிறார் இந்த பெரியவர். மிஸ்ட் அவர்களே இது தான் "இறைத் தன்மையோ" இது தான் இறை மார்க்கமோ. இவருக்கு சட்டம் போட வேறு தலைப்பே கிடைக்கவில்லையா?


முஸ்லீம்களுக்கு திருமண ஒப்பந்தங்கள் போட‌ பெண்கள் கிடைக்கவில்லையா? அவ்வளவு பஞ்சமாகிவிட்டதா சௌதியில் பிறக்கின்ற குழந்தைகளோடு ஒப்பந்தம் போடுவதற்கு? சொல்வதற்கே கேவலமாக‌ தெரியவில்லை? கீழ் தரமாக தெரியவில்லை?


இஸ்லாமிய இமாம்களை நம்பி, எப்படி சிறு பிள்ளைகளை அவர்களிடம் மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளுங்கள் என்று அனுப்பமுடியும்?


இவைகள் எல்லாம் யாருடைய செயல்கள், இறைவனின் செயலா? இறைவனின் கட்டளைகளா? சிந்திக்கும் மனிதன் சிந்திக்கட்டும்.


எனவே, மிஸ்ட் அவர்களே, சாத்தான் ஒளியின் வேஷம் போடுவான், தன்னை ஒரு ஆடு என்று காண்பித்துக்கொள்வான், ஆனால், அவன் ஒரு ஓணாய் என்பதை சீக்கிரத்திலேயே தெரிந்துவிடும், இஸ்லாம் அமைதி மார்க்கமல்ல என்பது மதினாவிற்கு முஹம்மது வந்ததும் தெரிந்துவிட்டது.



Mist said:


Umar said:


2) இஸ்லாமிய அறிஞர்கள் இஸ்லாமை பிழைக்கவைப்பதற்காக பல பொய்களை அள்ளிவீசுவதில் தயங்குவதில்லை, உண்மையை திசைத் திருப்பி, மக்களை முட்டாள்களாகவே வைத்திருக்க முயற்சிப்பார்கள். இதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு, ஜாகிர் நாயக் அவர்களின் பல தார மண கட்டுரையாகும்.


பொய்களை அள்ளி வீசுவது யாருன்னு கொஞ்ச நேரம், ஒரு ஒன் ஹவர் ஏஞ்சல் TVயை பாருங்க புரிந்து விடும்.(சரக்கு இருந்தால்)



Umar said:


நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் தருவதற்கு முன்பாக, நான் இரண்டாம் பாயிண்டாகச் சொன்ன விவரம் பற்றி ஏன் நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லை? ஒருவேளை ஒரு சில இஸ்லாமியர்களுக்கு ரோஷம் வந்து, அதாவது வேகம் வந்து, ஜாகிர் நாயக் அவர்கள் பொய் சொல்லமாட்டார், அவர் உண்மையைத் தான் சொல்வார் என்று வேகவேகமாக‌ உண்மையை கொண்டுவர முயற்சி எடுப்பார்கள் என்று நினைத்து, உலக புள்ளிவிவரங்கள் உள்ள ஒரு தொடுப்பையும் என் கட்டுரையின் கடைசியில் கீழ்கண்டவாறு கொடுத்தேன்:

// 1989 லிருந்து 2009 வரையுள்ள உலக ஜனத்தொகை கணக்கெடுப்புக்கள் இந்த தளத்தில் உண்டு - CIA World Factbook - http://www.theodora.com/wfb/. டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் கணக்கெடுப்பிற்கு உதவி செய்ய விரும்புகிறவர்களுக்கு இந்த தளம் உதவியாக இருக்கலாம். //


மிஸ்ட் அவர்களே, நீங்கள் அந்த தொடுப்பில் சென்று, உங்கள் நேர்மையாளர் ஜாகிர் நாயக் அவர்கள் சொல்லும் விவரங்களின்படி புள்ளிவிவரங்கள் உள்ளதா என்று பார்த்தீர்களா?


அதையெல்லாம் பார்க்காமல், இப்படி பதிலே சொல்லாமல் என்னிடம் கேள்வி கேட்டால் எப்படி?


இஸ்லாமின் உண்மை முகத்தை வெளிக்காட்டுகிறவன் கிறிஸ்தவன் என்பதால், கேட்ட கேள்விக்கு பதில்களைத் தராமல், ஏஞ்சல் டீவியை பாருங்கள், இந்த ஊழியரை பாருங்க அவரைப்பாருங்க என்றுச் சொல்வீர்கள், ஆனால், ஒரு நாத்தீகனாக இருந்தால், பதிலைச் சொல்லாமல் யாரைக் காட்டி நீங்கள் மழுப்பமுடியும்?


நான் தமிழாக்கம் செய்த கட்டுரை ஒரு நாத்தீகர் எழுதியது, அவருக்கு என்ன பதில் தரப்போகிறீர்கள்?


கிறிஸ்தவத்தை குற்றப்படுத்திவிட்டால், இஸ்லாம் உண்மையாகிவிடுமோ? ஜாகிர் நாயக் அவர்கள் சொன்னது சரியான புள்ளி விவரங்களாக மாறிவிடுமோ?


இனி கிறிஸ்தவ ஊழியர்கள் பற்றி என் கருத்தைச் சொல்கிறேன்:


டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த விவரங்கள் தவறானவை, அவைகளுக்கு பதிலைத் தாருங்கள் என்று கேட்டால், அதற்கு பதிலே சொல்லாமல், இப்படி இஸ்லாமுக்கு கெட்டப்பெயர் வரும் படி ஏன் ஜாகிர் நாயக் அவர்கள் தவறான விவரங்களைச் சொல்கிறார் என்று சிந்திப்பதை விட்டுவிட்டு, வேதனை அடைவதை விட்டுவிட்டு,


// Mist said : "மேடை போட்டு உங்க ஆளுங்க பட்டப்பகலில் காதுல பூ சுத்துரதை எல்லாம் கேட்டு பழகிப் போன உங்களுக்கு ஜாகிர் நாயக் சொல்ற புள்ளி விவரம் தவறாக தெரியுதாக்கும்//


"ஜாகிர் நாயக் சொல்ற புள்ளி விவரம் தவறாக தெரியுதாக்கும்"என்ற வரியை கொஞ்சமும் வெட்கமில்லாமல், வாய்க்கூசாமல் சொல்லியுள்ளார் மிஸ்ட் அவர்கள். நான் ஏன் இப்படி எழுதுகிறேன் என்றுச் சொன்னால், "நாயக் அவர்கள் கொடுத்த விவரம் தவறு என்று முகத்திலே அறைந்தாற்போல கேள்வி கேட்டு இருக்கும் போது" அதற்கு பதில் சொல்ல முயற்சி எடுப்பதை விட்டு விட்டு, ஆதாரங்களை தேடிகண்டுபிடிப்பதை விட்டுவிட்டு, "நாயக் அவர்கள் சொல்லும் புள்ளிவிவரம் பெரியதாகத் தெரியுதாக்கும்" என்று சொல்லும் இப்படிப்பட்டவர்கள் இருக்கும் வரை இஸ்லாம் உருப்படுமா? ஏனென்றால், "தலைவர்கள்" செய்யும் தவறுகளை மறுக்கும், மறைக்கும் தொண்டர்கள் இருக்கும் வரை, தலைவர்கள் தொண்டர்களை ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள். மிஸ்ட் அவர்களே, உண்மையைச் சொல்கிறேன் " இஸ்லாமியர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?" என்று சிந்திக்கும் போது, மிகவும் வேதனையாக உள்ளது. அதாவது, மனிதன் இப்படியும் இருப்பானா? என்று யோசிக்கத் தோன்றுகிறது.


சரி, இப்போது கிறிஸ்தவ கூட்டங்கள், ஏஞ்சல் டீவி என்று சொன்னீர்களே, அதைப் பற்றிய விஷயத்திற்கு வருகிறேன்.


சாத்தானாக மாறும் தேவதூதர்கள்


கிறிஸ்தவ ஊழியர்கள் கூட்டங்கள் போட்டு, மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று குற்றம் சுமத்துகிறீர்கள். அப்படியானால், அவர்கள் எந்த புள்ளிவிவரங்கள் சொல்லி ஏமாற்றுகிறார்கள், யாரை ஏமாற்றுகிறார்கள் என்று நீங்கள் கண்டுபிடித்து, அரசாங்கத்திற்கும் சட்டத்திற்கும் தெரிவிப்பீர்களானால் மிகவும் நன்றாக இருக்கும்.


ஏனென்றால், உங்களைப்போல கிறிஸ்தவர்கள் இருக்கமாட்டார்கள், ஒரு கிறிஸ்தவ ஊழியர் பண விஷயத்தில், பெண் விஷயத்தில் வேறு எந்த விஷயத்திலும் தவறுகள் இழைக்கும் போது, சட்டம் அவர்களை தண்டிக்கவேண்டும், சட்டம் தன் வேலையை செய்யவேண்டும்.


சில நேரங்களில் கிறிஸ்தவ ஊழியர்களிலும் சிலர் முஹம்மதுவைப் போல நடந்துவிடுவதுண்டு, பணத்தின் மீது ஆசைப்பட்டு, இயேசுவின் முதுகில் கத்தியால் குத்திவிடுகின்றனர், ஒரு சிலர் பெண்களிடம் முஹம்மது போல ஆசைப்பட்டு தகாதவாறு நடந்துக் கொள்வதுண்டு, இப்படிப்பட்டவர்கள் தண்டிக்கபப்டவேண்டும்.


நீங்கள் இப்போது ஜாகிர் நாயக் அவர்களின் மிகப்பெரிய பொய்யுக்கும் புரட்டலுக்கும் வக்காளத்து வாங்குவது போல, இப்படிப்பட்டவர்களுக்கு கிறிஸ்தவர்கள் வக்காளத்து வாங்க வரமாட்டார்கள். எனவே, உங்களால் முடிந்தால், கிறிஸ்தவ ஊழியர்களில் இருக்கும் ஒரு சில முஹம்மதுக்களை இனம் கண்டுக்கொண்டு சட்டத்திற்கு ஒப்புவியுங்கள், அதனால் கிறிஸ்தவத்திற்கு நன்மை உண்டாகும். அவ்வப்போது செய்திகளில் நாம் காண்கிறோம், ஒரு சில கிறிஸ்தவ ஊழியர்களின் குற்றங்கள் சட்டத்தின் முன் கொண்டுவரப்படுகிறது, அவர்கள் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படுகிறார்கள், இவர்கள் உங்கள் முஹம்மதுவிற்கு நண்பர்கள், இவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.


எனவே, வினை விதைப்பவன் வினையையே அறுக்கட்டும். இதற்கு நாங்கள் எக்காலத்திலும் ஆதரவு அளிக்கமாட்டோம்.


இயேசு இன்றும் அற்புதங்கள் செய்கிறார்:


இரண்டாவதாக, கண்களில் மிளகாய் அறைத்துபோட்டால் எப்படி எரியுமோ அது போல, முஸ்லீம்களின் கண்கள் எரிவதற்கு காரணம், கிறிஸ்தவர்களுக்கு இயேசு இன்றும் அற்புதங்களைச் செய்கிறார் என்று கிறிஸ்தவர்கள் தொலைக்காட்சிகளிலும், கூட்டங்களிலும் சாட்சி சொல்வது தான். இதை ஜீரணித்துக்கொள்ள முடியாத சிலர், கூட்டம் போட்டு ஏமாற்றுகிறார்கள் என்று குற்றம் சுமத்துகிறார்கள்.


இஸ்லாமியர்களிடம் நான் கேட்கிறேன், "கடவுள் அற்புதங்களை செய்கிறார், சுகமாக்குகிறார், நமக்கு நன்மை செய்கிறார்" என்று நீங்கள் நம்புகிறீர்களா?


அதாவது, அல்லாஹ் இன்றும் முஸ்லீம்களுக்கு சுகத்தை தருகிறார் என்று நம்புகிறீர்களா? இல்லையா?


"அல்லாஹ் நன்மைகளை தருகிறார்" என்று தான் நீங்கள் பதில் சொல்வீர்கள்.


இதே போலத்தான், எங்களுக்கும் இயேசு அற்புதங்களை செய்கிறார், நாங்கள் அதற்கு சாட்சிகளாக இருக்கிறோம். கிறிஸ்தவர்கள் ஒன்றும் தீவிரவாதிகளுக்கு சாட்சிகளாக இல்லை, வெடிகுண்டு போட்டு, மக்களை அழிக்கும் நபருக்கு சாட்சிகளாக இல்லை. எங்களுக்கு இரட்சிப்பைக் கொடுத்து, எங்களுக்கு ஆரோக்கியத்தைக் கொடுத்து, எங்களுக்காக உயிரைக் கொடுத்தவருக்கு நாங்கள் சாட்சிகளாக இருக்கிறோம்.


மனித இனத்திற்கு எதிரான சட்டங்களைக் கொடுத்த அல்லாஹ்விற்கு நீங்கள் சாட்சிகளாக இருந்தால், கிறிஸ்தவர்கள் ஏன் இயேசுவிற்கு சாட்சிகளாக இருக்கக்கூடாது, ஏன் அவர் செய்த அற்புதங்களை உலகத்திற்குச் சொல்லக்கூடாது.


"இல்லை, நாங்கள் நம்பமாட்டோம், உங்கள் ஊழியர்கள் பொய் சொல்கிறார்கள்" என்று நீங்கள் சொன்னால் அதை நிருபியுங்கள், சமுதாயத்தின் மீதும் உண்மையின் மீதும் அவ்வளவு அக்கரையுள்ளவர்களாக நீங்கள் இருந்தால் நிருபியுங்கள். தவறு இழைத்தவன் தண்டனை அனுபவிக்கட்டும்.


ஒரு சில ஊழியர்கள் இப்படி பொய்யர்களாக இருப்பதும் உண்மையே! ஆனால், யாரோ ஒருவர் நூற்றுக்கு ஒருவர் முஹம்மதுவைப்போல பொய்யராக இருப்பார், விசுவாசிகளை சுரண்டுவார், இப்படிப்பட்டவர்கள் ரொம்ப நாள் தாக்குபிடிக்கமுடியாது, தேவனும் சரியான நேரம் பார்த்து தண்டிப்பார். சட்டத்தின் முன் கொண்டுவரப்பட்டு தண்டனைப் பெறுவார். இதற்காக, எல்லாரும் அப்படி இல்லை.


எனவே, ஒரு சிலரின் தவறுக்காக எல்லாரையும் குற்றப்படுத்துவது மடத்தனம்.


"முஸ்லீம்களாகிய நங்கள் நம்பமாட்டோம், கிறிஸ்தவர்கள் அற்புதங்கள் சுகம் பெறுகிறோம் என்றுச் சொல்வதெல்லாம் பொய்" என்று சொல்வீர்களானால், இஸ்லாம் பற்றிய அற்புதங்கள் மட்டும் எப்படி உண்மையாகும்? நீங்கள் ஒரு நாத்தீகராக இருந்தால், ஒன்றும் கேட்கமுடியாது, அற்புதங்களுக்கு ஆதாரத்தை காட்டமுடியாது, ஆனால், ஒரு ஆத்திகராக இருந்து, நீங்கள் நம்ப மறுத்தால், உங்கள் இஸ்லாமின் நிலை என்ன?


முஹம்மது, எனக்கு காபிரியேல் தூதன் காணப்பட்டான் என்பதற்கு என்ன ஆதாரம்? இதை மட்டும் நம்புவீங்க!


எனக்கு குர்‍ஆனை காபிரியேல் தூதன் இறக்கினான் என்றுச் சொன்னால் நம்புவீங்க!


என் வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்துக்கொள்ளும்படி அல்லாஹ் சொல்கிறான் என்றுச் சொன்னால், நம்புவீங்க, ஆனால், மற்றவர்கள் சொல்லுவதை நம்பமறுப்பீங்க? முஹம்மது தனக்காக இப்படி பொய்யாக சொல்கிறார் என்று சந்தேகப்படமாட்டீங்க!


வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்துக்கொள்ள அனுமதி அளித்ததினால், அப்படி என்ன தான் ஒரு புதிய தத்துவத்தை அல்லாஹ் சொல்லிவிட்டார்? இதன் மூலம் உலகத்திற்கு என்ன நன்மை உண்டாகப்போகிறது? என்னவோ, உலகத்தில் கோடிக்கணக்கான பேர்களுக்கு வளர்ப்பு மகன்கள் இருப்பது போலவும், அவர்கள் அனைவரும் தங்கள் மனைவிகளை விவாகரத்து செய்துவிட்டது போலவும், அந்தப் பெண்களுக்கு வாழ்வு கொடுக்க உலகத்தில், அவளின் மாமனார் தவிர வேறு யாரும் இல்லாதது போலவும், அல்லாஹ் கட்டளைகளை இறக்குகிறார். இதில் வேறு "இனி யாருக்கும் இப்படி திருமணம் செய்வதினால் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக" நான் இப்படி என் நபி மூலமாக செய்யவைத்தேன் என்று, என்னவோ தன் நபிக்கு ஒரு மிகப்பெரிய துன்பத்தை கொடுத்துவிட்டது போல, வசனத்தை இறக்குகிறார். இதை சிந்திக்கமாட்டீங்க!


ஆனால், உங்களுக்கு மற்றவர்கள் சொல்லும் அற்புதங்கள் உங்களுக்கு பொய்யாகத் தெரியும்!


ஒரு நாள் இரவு என்னை அல்லாஹ் அப்படியே அலேக்காக எடுத்து வானத்தில் பறக்கவிட்டு, எருசலேமுக்கு அனுப்பினார், நான் அங்கு பைபிளின் நபிகளைக் கண்டேன் என்று ஒரு பொய்யான கதையை முஹம்மது சொன்னால் நம்புவீர்கள்! மற்றவர்கள் எங்கள் இறைவன் எங்களுக்கு சுகம் கொடுத்தார் என்றுச் சொன்னால் நம்பமாட்டீர்கள்?


தனக்காக, தன்னுடைய நன்மைக்காக, தன்னுடைய ஆசைகளுக்காக, தனக்கு சாதகமாக அனேக வசனங்களை அல்லாஹ்வின் பெயரில் இறங்கியது என்று முஹம்மது சொன்னால், கேள்வியே கேட்காமல் நம்புவீர்கள், ஆனால், மற்றவர்கள் சொல்வதை நம்பமறுப்பீர்கள்?


முஹம்ம்து உருவாக்கிக்கொடுத்த அல்லாஹ் இன்று அற்புதங்கள் செய்கிறாரோ இல்லையோ எனக்குத் தெரியாது, ஆனால், இயேசு இன்றும் கிறிஸ்தவர்களுக்கு நன்மைகள் செய்துக்கொண்டு இருக்கிறார்.


கிறிஸ்துவிற்காக உண்மையாக உழைக்கும் கிறிஸ்தவ ஊழியர்களுக்காக நான் இயேசுவை துதிக்கிறேன், உண்மையான ஊழியர்களுக்காக இயேசுவை துதிக்கிறேன், நேர்மையான ஊழியர்களுக்காக இயேசுவை துதிக்கிறேன்.


அதே நேரத்தில் இயேசுவிற்கு கெட்டப்பெயர் ஒரு சில கிறிஸ்தவ ஊழியர்கள் கொண்டு வருகிறார்கள், இப்படிப்பட்டவர்களுக்கு சட்டம் தன் கடமையைச் செய்யவேண்டும் என்று வேண்டுகிறேன்.


முடிவாக, மிஸ்ட் அவர்களே, முதலில் உங்கள் இஸ்லாமிய அறிஞர்கள் செய்யும் தவறுகளை ஒப்புக்கொள்ளுங்கள், அவர்களைத் திருந்தச் சொல்லுங்கள், முடிந்தால் நீங்கள் அவர்களை திருத்த முயற்சி எடுங்கள், நேர்மையாக இருக்கச் சொல்லுங்கள், பிறகு மற்றவர்களிடம் இருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள். நீங்களும் அவர்களுக்கு ஜால்ரா தட்டாதீர்கள் (இந்த வார்த்தையை விட சரியான வார்த்தை வேறு இல்லை, ஏனென்றால், ஜாகிர் நாயக் அவர்களின் கட்டுரைக்கு மொத்தமாக நான்கு பேர்கள் பின்னூட்டமிட்டார்கள், முதல் மூன்று பேர் செய்த அதே வேலையை நீங்களும் செய்துள்ளீர்கள்).


அதே நேரத்தில் நாங்களும் உங்களுக்குச் சொல்லிக்கொள்கிறோம், ஒரு சில கிறிஸ்த ஊழியர்கள் தவறுகள் செய்யும் போது, அதற்கு "சபாஷ்" என்று நாங்கள் சொல்லமாட்டோம்.

அடுத்த பின்னூட்ட பதிலில் சந்திக்கும் வரை......

சனி, 18 ஜூலை, 2009

இஸ்லாமிய-கிறிஸ்தவ கலப்புத் திருமணங்களின் உண்மை

இஸ்லாமிய-கிறிஸ்தவ கலப்புத் திருமணங்களின் உண்மை



ஜேம்ஸ் அர்லண்ட்சன்


ஒரு முஸ்லீம் ஆண் ஒரு கிறிஸ்தவ பெண்ணைத் திருமணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றான், ஆனால் ஒரு கிறிஸ்தவன் ஒரு முஸ்லீம் பெண்ணைத் திருமணம் செய்ய அனுமதியில்லை.

சில வருடங்களுக்கு முன்பு ஒரு வானொலி நிகழ்ச்சியில் ஒரு இஸ்லாமியருடன் நடந்த‌ நேர்க்காணலை கேட்டது என் நினைவிற்கு வருகிறது. அந்த நேர்க்காணல் தொடங்கியதும் நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்த இஸ்லாமியரிடம் "நீங்கள் திருமணமானவரா?" என்று பேட்டி எடுப்பவர் கேட்டார். இதற்கு அந்த இஸ்லாமியர் "இஸ்லாம் மிகவும் சகிப்புத்தன்மையும் சுதந்திரமும் கொண்டது, எனவே நான் ஒரு கிறிஸ்தவ பெண்ணை திருமணம் செய்திருக்கிறேன்" என்று கூறினார். இஸ்லாம் பாகுபாட்டை அல்ல சமத்துவத்தை குறிக்கிறது என்றும் அவர் கூறினார்.


உடனே, பேட்டி எடுப்பவர் துரிதமாக "அப்படியானால் ஒரு யூதனையோ அல்லது ஒரு கிறிஸ்தவனையோ ஒரு முஸ்லீம் பெண்ணைத் திருமணம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதா?" என்று கேட்டார். அந்த இஸ்லாமிய‌ விருந்தாளியின் உற்சாகம் சிறிது குறைந்து போனது. இஸ்லாம் அதை அனுமதிப்பதில்லை என்று அவர் ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. வானொலி நிகழ்ச்சியாளர் அந்த விருந்தாளியிடம் "உங்களுடைய முதல் கூற்று கொஞ்சம் தவறாக வழிகாட்டுவதாக உள்ளது இல்லையா" என்று துருவி துருவி கேட்டார். அவர்கள் அதைப் பற்றி ஒரிரூ நிமிடங்கள் விவாதித்தார்கள். பிறகு, அந்த விருந்தாளியின் சிரமத்தை உணர்ந்து பேட்டியெடுப்பவர் வேறு விஷயத்தைப் பற்றி பேச ஆரம்பித்தார்.


ஒரு இஸ்லாமிய தளத்தின் கட்டுரைகள், கலப்புத் திருமணம் பற்றி கீழ்கண்டவாறு கூறுகிறது:



ஒரு முஸ்லீம் பெண்ணுக்கு முஸ்லீம் அல்லாத ஒரு ஆணை திருமணம் செய்ய அனுமதியில்லை.


ஒரு முஸ்லீம் ஆணுக்கு ஒரு யூத / கிறிஸ்தவ பெண்ணைத் திருமணம் செய்ய பின்வரும் இரண்டு நிபந்தனைகளின் கீழ் அனுமதி உண்டு.

1) அந்தப் பெண் பெயரள‌வில் அல்லது தத்து எடுக்கப்பட்டதினால் அவள் ஒரு யூத / கிறிஸ்தவ பெண்ணாக இருக்கக்கூடாது, இதற்கு பதிலாக‌, அவள் ஒரு உண்மையான யூத / கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த‌ பெண்ணாக இருக்கவேண்டும்.


2) அவள் இஸ்லாமிலிருந்து கிறிஸ்தவத்திற்கோ அல்லது யூதமதத்திற்கோ மாறியிருக்கக் கூடாது.



ஏன் இந்த திருமணம் ஒரு பக்கமாக சாய்ந்து ஆண்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது? இதற்கு ஏழாம் நூற்றாண்டு அரபி கலாச்சாரம் பதிலளிக்கும். ஒரு பெண் திருமணம் ஆனவளாக இருந்தாலும் சரி, ஆகாமல் இருந்தாலும் சரி, குர்‍ஆன் அப்பெண்ணை மதிப்பதில்லை.

புதிய ஏற்பாடு இதைப்பற்றி என்னச் சொல்லுகிறது?

குர்‍ஆன்


இந்த சூரா 5ன் பின்னணியை அறிய இந்த தொடுப்பில் சென்று படிக்கவும்.

சூரா 5: 5ல் குர்‍ஆன் சொல்கிறது.


… முஃமின்களான கற்புடைய பெண்களும், உங்களுக்கு முன்னர் வேதம் அளிக்கப்பட்டவர்களிலுள்ள கற்புடைய பெண்களும் விலைப் பெண்டிராகவோ, ஆசை நாயகிகளாகவோ வைத்துக் கொள்ளாது, அவர்களுக்குரிய மஹரை அவர்களுக்கு அளித்து, மண முடித்துக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. …. (குர்‍ஆன் 5:5)



இந்த வசனத்தில் குறிப்பிட்டபடி ஒரு முஸ்லீம் ஆண், இஸ்லாமியரல்லாத பெண்ணாக இருக்கும் ஒரு கிறிஸ்தவ அல்லது யூதப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது, ஆனால் ஒரு யூத, கிறிஸ்தவ மனிதன் ஒரு முஸ்லீம் பெண்ணைத் திருமணம் செய்யக் கூடாது. (இந்தக் கட்டுரையில் நான் கிறிஸ்தவ சமுதாயத்தைப் பற்றி மட்டும் எழுதுகிறேன்.)


இந்த சட்டம் வருவதற்கான காரணம் என்ன?


இஸ்லாம் ஒரு குலத் தலைவன் முறையை (Patriarchal) பின்பற்றுகிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆகையால், குடும்ப உறவுகளில் மற்ற எல்லா காரியங்களில் ஆணின் ஆதிக்கமே ஓங்கியிருக்கும். உதாரணமாக சூரா 4:34 சொல்லுகிறது "ஒரு கணவன் தன் மனைவியை அடிக்கலாம்", ஆனால் எந்த வசனத்திலும் மனைவி கணவனை அடிக்கலாம் என்று குர்‍ஆன் சொல்லுவதில்லை - குடும்பத்தில் கணவன் மனைவியை எவ்வளவு துன்புறுத்தி கொடுமைப்படுத்தினாலும் சரி, மனைவிக்கு இந்த உரிமையில்லை.


ஆரம்ப காலத்தில் முஹம்மது யூதர்கள் மீதும், கிறிஸ்தவர்கள் மீதும் மரியாதை கொண்டு இருந்தார் என்பது உண்மை தான். ஆனால், பிறகு தன் வாழ்நாட்களில் அவரே அவர்களுக்கு எதிராக மாறினார், இதனை இந்த இரண்டு கட்டுரைகள் (Muhammad and the Jews, Islamic Crusades vs. Christian Crusades) விளக்குகின்றன. எனவே இதன்படி ஏழாம் நூற்றாண்டின் அரபு கலாச்சாரத்தில் ஒரு அரபு மனிதன் தன்னுடைய மனைவி அல்லது மனைவிகள் மீது அதிகாரம் செலுத்தலாம். ஆனால் ஒரு கிறிஸ்தவன் தன் இஸ்லாமிய மனைவி மீது அதிகாரம் செலுத்தக் கூடாது.


முழு மனித இனத்திற்கும் இஸ்லாம் தான் இறுதியான சிறந்த மார்க்கம் என்று இஸ்லாமியர்களால் நம்பப்படுகிறது, ஒரு முஸ்லீம் ஆண் தன் அடிபணிந்த மனைவியை மதம் மாற்றலாம். ஒரு முஸ்லீம் தீவிர மதப்பற்றுள்ளவனாக இருந்தால் அவனை எந்த பெண்ணாலும் மாற்ற முடியாது என்று ஒரு வேளை முஹம்மது த‌ன் மனதில் எண்ணியிருக்கக்கூடும். இன்றைக்கும் ஒரு முஸ்லீம் தீவிரமாக இஸ்லாமை பின்பற்றும் நாட்டைச் சார்ந்தவனாக இருந்தால் அல்லது தீவிர இஸ்லாமிய கட்டுப்பாடுகள் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவனாக இருந்தால் கூட‌ இது உண்மையே.


எனவே கிறிஸ்தவ பெண்கள் ஒரு முஸ்லீம் மனிதனைத் திருமணம் செய்வது பற்றி மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இஸ்லாம் ஆண்களுக்கு கொடுக்கும் அதே உரிமைகளை பெண்களுக்கு கொடுப்பதில்லை. உண்மையில் பெண்கள் ஆண்களை விடத் தாழ்ந்தவர்களே என்று குர்‍ஆன் தெளிவாக கூறுகிறது.


இன்னும் எதையும் மூடி மறைக்காமல் மழுப்பாமல் நேரடியாகச் சொல்ல வேண்டுமானால், மற்றும் உண்மையைச் சொல்லவேண்டுமானால், "இஸ்லாம் ஒரு கொடூரமான எஜமான்-அடிமை தத்துவம் கொண்ட" ஒரு மதமாகும். முஸ்லீம் ஆண்கள் தங்கள் பெண் அடிமைகளோடு உடலுறவு வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது. ஏன் இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமாக‌ இல்லை என்பதற்கான முக்கியமான பத்துக் காரணங்களை இந்த தமிழ் கட்டுரை விளக்குகிறது. இயேசு நமக்கெல்லாம் ஒரு மிகச்சிறந்த நெறியை காண்பித்து ஆறு நூற்றாண்டுகளுக்கு பிறகும், ஏன் இஸ்லாமிய சட்டங்கள் மித மிஞ்சியதாகவும் இரத்தம் சிந்தச் செய்யக் கூடியதாகவும் மற்றும் கொடூரமானதாகவும் இருக்கிறது என்பதற்கான பத்து முக்கிய காரணங்களை இந்த கட்டுரை விளக்குகிறது. இறுதியாக பெண்களை ஒடுக்கி அவமானப்படுத்தும் குர்‍ஆனின் பத்து முக்கிய சட்டங்களைப் பற்றி இந்தக் கட்டுரை விளக்குகிறது. முழு உலகமும் அறிந்திருக்கிறபடி, உலகத்தில் நடந்துக்கொண்டு இருக்கும் அனேக‌ நிகழ்வுகள் நமக்கு "இஸ்லாம் பெண்களை மதிக்கவில்லை" என்பதை நிருபிக்கின்றன.


ஆகையால், சாதாரண மனிதனாக இருந்து, பெரும்பான்மையான நேரங்களில் மிகவும் கொடுமையானவராகவும், கடினமுள்ளவராகவும், பெண்களை வெறுத்தவராகவும் இருந்த, மரிக்கும் தூதுவராக இருந்த முஹம்மதுவிற்காக (சூரா 3:144, 39:30, 41:4), மக்களை விடுதலையாக்குகிறவராகவும், இறைவனின் அன்பை தருபவராகவும் இருந்த தேவக் குமாரனை கிறிஸ்தவர்கள் புறக்கணிக்கக்கூடாது. இஸ்லாம் பெண்களை கவுரப்படுத்தவில்லை.


ஒரு கிறிஸ்தவ‌ பெண் ஒரு இஸ்லாமிய ஆணை திருமணம் செய்துக்கொண்ட பிறகும், அவள் இயேசு தான் தேவகுமாரன் என்றும், அவர் தான் மேசியாவாகிய தேவன் என்றும் நம்பிக்கொண்டு இருந்தால், குர்‍ஆனின் மற்றும் இஸ்லாமிய பாரம்பரியங்களாக உள்ள ஹதீஸ் சட்டங்களின் படி அவள் ஒரு தவறான நம்பிக்கைக் கொண்டு இருப்பவளாகவும் மற்றும் அவள் "காஃபிராக"வும் கருதப்படுவாள்.


மேலும் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் கிறிஸ்தவர்களாக கருதப்படுவார்களா அல்லது முஸ்லீமாக அல்லது மதச்சார்பற்றவர்களாக இருப்பார்களா? இஸ்லாம் உறுதியாக பின்பற்றப்படும் போது அதற்கான பதில் தெளிவாக உள்ளது.


எனவே இது எப்படிப்பட்ட திருமணமாக இருக்கும்? கணவனுக்கும் மனைவிக்கும் இறைவனுக்கும் இடையில் காணப்படும் ஆன்மீக வாழ்வு மற்றும் தொடர்பு எப்படி இருக்கும்?



புதிய ஏற்பாடு


புதிய ஏற்பாடு, திருமணம் செய்ய விரும்புகிறவர்களுக்கு துணையை தெரிந்தெடுப்பதில் சமமான நிலைப்பாடு கொடுத்து தொடங்குகிறது.


புதிய ஏற்பாட்டில் 1 கொரிந்தியர் 7:39 சொல்லுகிறது, கிறிஸ்தவ பெண் ஒரு கிறிஸ்தவ ஆணையே மணம் முடிக்கவேண்டும் (ஆணும் அப்படியே) (மேலும் 2 கொரிந்தியர் 6:14-18 வசனங்களை படிக்கவும்). முதன் முதலில் இந்த புனித ஆலோசனையை படிக்கும் போது, இது மிகவும் கட்டுப்பாடு கொண்டதாக தெரியும், ஆனால் சற்று ஆழமாக பார்க்கும் போது இதில் அதிக ஞானம் இருப்பதை காணமுடியும். திருமணமான தம்பதிகள் தங்கள் வாழ்க்கையை தங்களுடைய ஒரே விதமான நம்பிக்கை மற்றும் கொள்கையுடன் தொடங்கும் போது தங்கள் துணையை மற்ற நம்பிக்கைக்கு மாற்றவேண்டிய பெரும் நெருக்கத்தை தவிர்க்க முடிகிறது. துணையில் ஒருவர் மற்றொருவருக்கு சுவிசேஷம் சொல்லி ஆயத்தப்படுத்த வேண்டுவதில்லை. ஒருவர் இன்னொருவரைக் குறித்து "இவள்/இவன் தவறான நம்பிக்கையில் இருக்கிறார் என்றோ, அல்லது காஃபிர் என்றோ" கருதவேண்டிய அவசியமிருக்காது.


பைபிள் காட்டும் கிறிஸ்தவத்தில் ஆணும் பெண்ணும் திருமணத்தில் ஒரே சரீரமாக மாறுவதற்கு முன் பரிசுத்த ஆவியின் வல்லமையினால் அவர்கள் தனிப்பட்ட ரீதியில் இயேசு கிறிஸ்துவோடு ஆழமான ஆவிக்குரிய உறவில் பலப்படவேண்டும். இதன் அர்த்தம் என்னவென்றால் இறைவனோடுள்ள அவர்களுடைய ஆழமான ஆன்மீக‌ நெருக்கமானது அவர்களுடைய தனிப்பட்ட‌ நெருக்கத்தோடு பகிர்ந்துகொள்ளப்படுகிறது.


மேலும் இந்த ஆவிக்குரிய சமத்துவமானது அவர்களுக்குள் உள்ள எல்லா அதிகாரப் பிரச்சனைகளையும் எடுத்துப்போடுகிறது. மார்க்க சம்பந்தமான காரியங்களில் ஏற்கனவே மனைவி கணவனோடு ஒருமனப்பட்டு இருப்பதினால், கட்டுப்படுத்துதவற்காகவும் கணவன் மனைவி மீது மதம் சம்மந்தப்பட்ட எந்த சட்டங்களையும், பிரயோகிக்க வேண்டிய அவசியமில்லை.


ஒருவகையில் சொல்லவேண்டுமானால், இஸ்லாம் கூட இப்படிப்பட்ட கட்டுப்பாட்டை அங்கீகரிக்கிறது, அதாவது ஒரு முஸ்லீம் பல தெய்வ வழிபாடுகளை பின்பற்றும் பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்ற தடை உள்ளது (சூரா 2:221). பல தெய்வ வழிப்பாட்டுக்கும் இஸ்லாமுக்கும் இடையே கோட்பாடுகளில் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. இதே போல, இஸ்லாமும் கிறிஸ்தவமும் பல தெய்வ வழிப்பாட்டு மார்க்கமாக இல்லாமல் இருந்தாலும், இவ்விரண்டிற்கும் இடையே கோட்பாடுகளில் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.


முக்கியமான வித்தியாசமாக கூறவேண்டுமானால், கிறிஸ்தவத்தில் அடிப்படையாக உள்ள மற்றும் மாற்றியமைக்கமுடியாத கோட்பாடாக உள்ள, இயேசுவின் தெய்வத்தன்மையை முஹம்மது மறுத்துள்ளார். இது தான் இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசமாகும். இயேசு ஒரு சாதாரண நபி என்று இஸ்லாம் தவறாக சொல்கிறது. புதிய ஏற்பாட்டின் எல்லா இடங்களிலும் இயேசுவின் தெய்வத்துவம், குமாரத்துவம் உறுதிசெய்யப்படுகிற‌து.


இதயத்தில் உணரக்கூடிய அளவிற்கு முஸ்லீம்க‌ள் பரிசுத்த ஆவியைப் பெறுவதில்லை ஏனென்றால் அவர்கள் இயேசுவை ஆண்டவரும் இரட்சகருமாக ஏறறுக்கொள்வதில்லை. உண்மையில் இஸ்லாமிய போதனை பரிசுத்த ஆவியை தவறுதலாக காபிரியேல் தூதனுக்கு சமமாக குறைத்துள்ளது. இதன்படி ஒரு முஸ்லீமுக்கும் கிறிஸ்தவ பெண்ணுக்கும் இடையே திருமணம் சமாதானமானதாக இருக்காது. எனவே ஒரு கிறிஸ்தவளுக்கு இது மிகவும் கடினமானதாக இருக்கும், ஏனென்றால் திருமணத்திற்கு பிறகு தன் குடும்ப வாழ்வில், ஆண் ஆதிக்கம் தலை தூக்கும், அப்போது அவளது வாழ்வு இன்பமானதாக இருக்காது.


மனைவிகளின் கை குடும்பங்களில் ஓங்குகிறது என்று அல்லது அவர்கள் தன்னை எதிர்க்கிறார்கள் என்று இஸ்லாமிய கணவன் நினைத்தால், அவன் தன் மனைவிமார்களை அடிக்க அவனுக்கு குர்‍ஆன் (சூரா 3:43) அதிகாரம் கொடுக்கிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.


இந்த நடைமுறை காரணங்கள் ஒரு புறமிருக்க, ஒரு கிறிஸ்தவன் புதிய ஏற்பாட்டை சரியாக புரிந்து கொண்டால், அவன் அல்லது அவள் ஆவிக்குரிய மற்றும் இறையியல் காரணங்களுக்காக கண்டிப்பாக ஒரு முஸ்லீமைத் திருமணம் செய்யக் கூடாது.


ஒரு கிறிஸ்தவ தம்பதிகள் ஆவிக்குரிய ஒற்றுமையை காத்துக் கொள்ளவேண்டும். அவர்கள் தங்கள் பிள்ளைகளை ஆவிக்குரிய பழக்க வழக்கங்களில் கிறிஸ்துவின் அடியவர்களாக வளர்க்க‌வேண்டும்.



முடிவுரை


என்னுடைய விமர்சனங்கள் முஸ்லீம்களுக்கு எதிரான விமர்சனங்கள் அல்ல, மாறாக இஸ்லாமின் மத அமைப்புச் சட்டத்திற்கும், அதன் ஆரம்பகால‌ வரலாற்று வன்முறைகளுக்கும், முஹம்மது தன் சொந்த சமுதாயத்தை உருவாக்கிவிட்ட பிறகு தொடாந்த ஆரம்பகால‌ வன்முறைகளுக்கும் எதிரானதாகும்.


இஸ்லாம் பற்றிய உண்மைகள் நிச்சயம் வெளியே வரவேண்டும்.


இந்த கட்டுரை இனத்தைப் (Race) பற்றி சொல்வதற்காக எழுதப்படவில்லை. கிறிஸ்தவமும், இஸ்லாமும் வெவ்வேறான‌ இனத் திருமணங்களை அனுமதிக்கிறது. உதாரணமாக ஒரு வெள்ளைக் கிறிஸ்தவன் ஒரு கருப்பின கிறிஸ்தவளை திருமணம் செய்யலாம், எந்த பிரச்சனையும் இல்லை. கிறிஸ்தவத்தில் உள்ள ஒரே நிபந்தனை என்னவென்றால் ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியைப்பெற்று, இயேசு கிறிஸ்துவின் விசுவாசியாக அடியவர்களாக இருக்கவேண்டும்.



இந்த கட்டுரையானது நற்குணங்கள் மதிப்பீடுகள் மற்றும் இறையியல் கோட்பாடுகள் பற்றியதாகும். முக்கியமாக இது இயேசுவுடன் நம்முடைய உறவைக் குறித்ததாகும். அவரோடு நல்ல உறவு இல்லாமல் இருந்தால் அது மிகவும் துக்ககரமானது.


இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தின் மதசம்பந்தமான திருமணத்தில் உள்ள வித்தியாசம் எளிமையாது.


முஸ்லீம் ஆண்கள் கிறிஸ்தவ பெண்களை திருமணம் செய்து கொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது. ஆனால் ஒரு கிறிஸ்தவ ஆண் ஒரு முஸ்லீம் பெண்ணைத் திருமணம்செய்ய அனுமதியில்லை. எனவே இஸ்லாமின் "திறந்த மனப்பான்மை" "சகிப்புத் தன்மை" மற்றும் "இனபாகுபடற்றது" என்று சொல்வதெல்லாம் ஒருவழிப் பாதையாகும், அதாவது மாய்மாலமாகும். இஸ்லாமிய‌ ஆண்கள் தான் எப்போதும் சர்வ அதிகாரமும் செலுத்துபவர்கள். ஆனால், இஸ்லாமியர்களில் சிலர் ஆண் ஆதிக்கம் செலுத்தாதவர்களாகவும், இன்னும் சிலர் நற்குணமுள்ளவர்களாகவும் இருப்பார்கள். இருந்த போதிலும் அவர்கள் குர்‍ஆனை பின்பற்றுவார்களென்றால் மேலே குறிப்பிட்ட குர்‍ஆன் 4:34ல் சொல்லப்பட்டதின் படி, மனைவிகளை அடிக்க அதிகாரம் பெற்று, ஆண் ஆதிக்க அதிகாரத்தை பிரயோகிப்பார்கள்.


முஸ்லீம் மனிதன் - வீட்டிற்குத் தலையாக இருந்து - இஸ்லாமை பின்பற்றும் போது , குழந்தைகள் முஸ்லீம்களாக வளர்க்கப்படுகின்றனர். இவ்வாறு அந்தக் குடும்பம் சரியான ஐக்கியத்தில் ஒருமனத்தில் இருக்காது.


கிறிஸ்தவம் அதற்கு எதிர்மறையாக சொல்லுகிறது, ஒரு கிறிஸ்தவ திருமணத் தம்பதிகள் சமமாக கிறிஸ்துவின் ஆவிக்குரிய குடும்பத்தில் பிணைக்கப்பட்டிருக்கவேண்டும். அதன்படி அவர்கள் ஆழமான எந்த இறையியல் வித்தியாசங்களுக்கா கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் ஒற்றுமையோடு அதை துவக்குகிறார்கள். மனைவி வேறு மார்க்கத்தை பின் பற்றுகிறாளே என்று ஆண் கவலைப் படவேண்டியதில்லை. ஆணுக்கு தன்னுடைய ஆண் ஆதிக்க‌ அதிகாரத்தை பயன்படுத்தவேண்டிய‌ அவசியமில்லை குடும்பத்தில் நிலவிக்கொண்டு இருக்கும் ஒருமனத்தை அமைதியை காத்துக்கொண்டால் போதும். பிள்ளைகள் இயேசுவின் சிறிய அடியார்களாக கிறிஸ்தவர்களாக வளர்க்கப்படுகின்றனர். அதினிமித்தம் அந்த் குடும்பம் மிக இணக்கமாக காணப்படும்.


கிறிஸ்துவில் குடும்பங்கள் இணக்கமாக ஒற்றுமையாக‌ இருக்கிறது. இஸ்லாமிய கலப்புத் திருமணங்களில் குடும்ப வேறுபாடுகள், உயர்வு தாழ்வுச் சண்டைகள் காணப்படுகிறது.


மேலதிக விவரங்களுக்காக கட்டுரைகள்


இயேசு பற்றி குர்‍ஆனின் குழப்பம் பற்றி விவரிக்கும் இந்த கட்டுரையின் "முடிவுரையை படிக்கவும்".


ஒரு இஸ்லாமிய ஆணை திருமணம் செய்துக்கொண்டு பிரச்சனைகளை சந்திக்கும் கிறிஸ்த பெண்களின் பிரச்சனையை அலசுகிறது இந்த பக்கத்திலுள்ள கட்டுரைகள், இன்னும் இதர கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறது.


ஒரு இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமியரல்லாதவரின் (திம்மி/ஜிம்மி - Dimmi or Zimmi) வாழ்க்கையைப் பற்றி அலசுகிறது, இந்த கட்டுரை. Dimmi என்றால் அது யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் குறிக்கும், இவர்கள் இஸ்லாமிய நாட்டில் இரண்டாம் தர குடிமக்களாக வாழ்கிறவர்கள். இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமியரல்லாதவர்களின் வாழ்க்கை இனிமையானதாக இருக்காது, இன்றும் இதனை காணமுடியும், முக்கியமாக இஸ்லாமியர்களை திருமணம் செய்துக்கொள்ளும், இஸ்லாமியரல்லாத பெண்களின் நிலையும் இதே தான்.


ஆங்கில மூலம்: The truth about Muslim-Christian marriages


ஜேம்ஸ் அர்லண்ட்சன் அவர்களின் இதர கட்டுரைகள்

பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை

பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை



ஒரு கிறிஸ்தவ பார்வை



செப்டம்பர் 11ம் தேதியன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு, வன்முறை மற்றும் மதம் பற்றிய கருத்து பரிமாற்றங்கள் விவாதங்கள் சூடு பிடித்துள்ளன. இஸ்லாமின் பெயரில் நடக்கும் வன்முறைகளை இஸ்லாமியர்கள் நியாயப்படுத்துகிறார்கள். இறைவனின் பெயரில் நடக்கும் இப்படிப்பட்ட வன்முறைகளை குர்‍ஆனையும், முஹம்மதுவின் வாழ்க்கை சம்பவங்களைக் காட்டி இஸ்லாமியர்கள் நியாயப்படுத்த முயற்சிக்கிறார்கள். இதனை கிறிஸ்தவர்களும் மற்றும் சமுதாயத்தின் நன்மைக்காக பாடுபடும் சிலரும் கண்டிக்கும் போது, உடனே இஸ்லாமியர்கள் "பைபிளில் வன்முறை உள்ளது, முக்கியமாக பழைய ஏற்பாட்டில் உள்ளது , சபையின் சரித்திரங்களில் கூட வன்முறை இருக்கிறது, எனவே பைபிளை விட்டுவிட்டு குர்‍ஆனின் வன்முறையை மட்டும் அதிகப்படுத்திக் காட்டுவது சரியானது அல்ல என்று கூறுகிறார்கள்.



ஒரு எடுத்துக்காட்டு சொல்லவேண்டுமானால், பரீத் ஜகரியா என்பவர், நியூஸ் வீக் (News Week) என்ற பத்திரிக்கையில் "அவர்கள் நம்மை ஏன் எதிர்க்கின்றனர், இஸ்லாமிய வன்முறையின் வேர் எது? இதைக் குறித்து நாம் என்ன செய்யவேண்டும்" என்ற தலைப்பிட்ட கட்டுரையில் கீழ் கண்ட விதமாக எழுதுகிறார்.


"சரித்திர ஆசிரியர் பால் ஜான்சன் என்பவர், 'இஸ்லாம் ஒரு கொடூரமான தீவிர வன்முறையைக் கொண்ட மற்றும் சகிப்புத் தன்மையற்ற மதமாக உள்ளது' என கூறுகிறார். ஆனால், இதர அறிஞர்கள் இதனை மறுத்து, 'இஸ்லாம் பாமர மக்கள் கொல்லப்படுவதை எதிர்க்கிறது மற்றும் தற்கொலை செய்துக்கொள்வதற்கு தடைவிதிக்கிறது' என்றுச் சொல்கிறார்கள். இப்போது "உண்மையான இஸ்லாம்" எது என்று தேடுவதினாலேயோ அல்லது குர்‍ஆனிலிருந்து அனேக வசனங்களை மேற்கோள் காட்டுவதினாலேயோ எந்தப் பிரச்சனையும் தீரப்போவதில்லை. குர்‍ஆன் என்பது பெரிய புத்தகம், குழப்பம் தரக்கூடிய கவிதை நடையில் உள்ள புத்தகம் மற்றும் பல முரண்பாடுகளைக் கொண்ட (பைபிளைப் போல) ஒரு புத்தகமாகும்". குர்‍ஆனில் நீங்கள் யுத்தங்களை எதிர்க்கக்கூடிய வசனங்களை காணமுடியும், மற்றும் சண்டைப்போடுவதை தூண்டும் வசனங்களையும் காணமுடியும். இன்னும் சகிப்புத்தன்மை பற்றிய அழகான வசனங்களையும் காணமுடியும், அதே நேரத்தில் இஸ்லாமியரல்லாதவர்களை தாக்கும் பற்றி கடுமையான வசனங்களையும் காணமுடியும்.


குர்‍ஆனிலிருந்து மேற்கோள் காட்டப்படும் வசனங்களை வைத்து, இஸ்லாமை அல்ல, இதற்கு பதிலாக,இந்த வசனங்களை மேற்கோள் காட்டக்கூடிய நபரைப் பற்றி அதிகமாக அறிந்துக்கொள்ளலாம். ஒவ்வொரு மதமும் அனேக நல்ல விஷயங்களை தன்னிடம் கொண்டுள்ளது, அதே போல, மனித இனத்திற்கு எதிரான விவரங்களையும் கொண்டுள்ளது. கிறிஸ்தவ சபையின் மிக நீண்ட சரித்திர பின்னணியைக் கண்டால், அதில் யூதர்களுக்கு எதிரான சண்டைகளை அது ஆதரித்துள்ளது, பல அடக்குமுறையை அது ஆதரித்துள்ளது, அதே நேரத்தில் மனித உரிமைகளையும், சமுதாயத்திற்கு நன்மை செய்வதையும் அது ஆதரித்துள்ளது."



மேலே கூறப்பட்ட விமர்சனத்திற்கு கிறிஸ்தவர்கள் என்ன பதில் கூறப்போகிறார்கள்? இறைவனின் பெயரில் வன்முறையில் ஈடுபட்டு தங்கள் எதிரிகள் அழிய வேண்டும் என்று விரும்பும் இஸ்லாமிய தீவிரவாதிகள்/இதர தீவிரவாதிகள் பின்பற்றும் வேதத்திற்கும் கிறிஸ்தவர்களின் வேதத்திற்கும் வித்தியாசமே இல்லையா? நம்முடைய சபையின் இருண்ட சரித்திரத்தைப் பற்றியும், பழைய ஏற்பாட்டில் சில உவமைகளாகவும் படங்களாகவும் சொல்லப்பட்ட கருத்துக்களுக்கு நாம் எப்படி பதில் தரப்போகிறோம்? நம்முடைய பாரம்பரிய சபை சரித்திரம் அதிக வெளிச்சத்தில் இல்லாமல் காணப்படுகிறதே! இதற்கு நம்முடைய பதில் என்ன? இப்படிப்பட்ட கேள்விகளின் விளைவு தான் இந்த கட்டுரையாகும். நேரமின்மையால் நான் ஒவ்வொரு தலைப்பையும் அதிகமாக விவரிக்கப்போவதில்லை, ஆனால், மேலே கண்ட பிரச்சனைகளை நாம் புரிந்துக்கொள்ள இந்த விவரங்கள் நமக்கு உதவியளிக்கும் என்று நான் நம்புகிறேன்.



1. கிறிஸ்துவின் பெயரை முன்னிலைப்படுத்தி அனேக கிறிஸ்தவர்கள் ஒரு காலத்தில் வெட்கப்படக்கூடிய காரியங்களை செய்துள்ளார்கள் என்பதை அறியும் போது கிறிஸ்தவர்களாகிய நமக்கு வேதனையாக உள்ளது, ஆனால் பிரச்சனை என்ன தெரியுமா: "இயேசுக் கிறிஸ்துவின் பெயரை பயன்படுத்தி தங்கள் எதிரிகளை அழித்த கிறிஸ்தவர்கள், தங்கள் செயல்களை நியாயப்படுத்த ஆதாரமாக இயேசுக் கிறிஸ்துவை உதாரணம் காட்டமுடியாது, இவர்களுக்கு இயேசுவின் வாழ்க்கை, செயல்கள் மற்றும் புதிய ஏற்பாட்டின் போதனைகளிலிருந்து வன்முறையில் ஈடுபடலாம் என்பதற்கு ஒரு ஆதாரமும் கிடைக்காது". ஆனால், இஸ்லாமை எதிர்ப்பவர்களை அழிக்கும் இஸ்லாமியர்களுக்கும், வன்முறையில் ஈடுபடும் இஸ்லாமியர்களுக்கும், தங்கள் வன்முறை செயல்களை நியாயப்படுத்த‌ குர்‍ஆனிலிருந்தும், அவர்களின் நபியாகிய‌ முஹம்மதுவின் போதனைகள், செயல்கள் என்றுச் சொல்லப்படும் ஹதீஸ்களிலிருந்தும் தேவையான அளவிற்கு ஆதாரங்கள் கிடைக்கும். குர்‍ஆனிலிருந்தும், ஹதீஸ்களிலிருந்தும் மற்றும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறுகளிலிருந்தும் வன்முறை வசனங்களை இக்கட்டுரையில் மேற்கோள்களாக காட்டுவது இக்கட்டுரையின் வரைமுறைக்கு அப்பாற்பட்டது (இந்த விவரங்கள் தேவை என்றுச் சொல்லும் வாசகர்கள் இந்த தொடுப்புக்களில் சென்று படித்துப்பார்த்துக் கொள்ளவும், 1. முஹம்மதுவும் அவரது எதிரிகளும் 2. இஸ்லாமும் மற்றும் தீவிரவாதமும்).


ஆனால், சந்தேகத்திற்கு இடமில்லாமல், இது மட்டும் உண்மையாகும், அதாவது, இஸ்லாமிய நபியாகிய முஹம்மது "எதிரிகளை கொல்வதையும் அவர்களை கொடுமைப் படுத்துவதையும் உற்சாகப்படுத்தினார்", இஸ்லாமியர்கள் சொல்வது போல, "அவர் தற்காப்பிற்காக அப்படி செய்தார்" என்ற ஒரு காரணத்திற்காக மாத்திரமல்ல‌, அல்லாஹ்வின் பெயரிலும் இஸ்லாமை பரப்பவேண்டும் என்பதற்காகவும் அவர் வன்முறையையும் கொடுமைப்படுத்துவதையும் கையாண்டுள்ளார். இஸ்லாமிய இறைத்தூதராகிய முஹம்மதுவின் செயல்கள் அனைத்தும் இயேசுக் கிறிஸ்துவின் மற்றும் அவரது சிடர்களின் செயல்களுக்கும் நேரடி எதிர்மறை என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.


இதனால், கிறிஸ்தவர்கள் வன்முறையில் மற்றும் இதர செயல்களில் ஈடுபடவில்லை என்று இதன் அர்த்தமில்லை. கிறிஸ்தவர்கள் பல பயங்கரமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர், ஆனால், அவர்கள் இப்படிப்பட்ட செயல்களைச் செய்யும் போது, அவர்கள் யாரை பின் பற்றுகிறார்களோ (இயேசுவை) அவரின் முதுகில் குத்தியுள்ளார்கள், அவரை காயப்படுத்தியுள்ளார்கள், நம்பிக்கை துரோகம் செய்துள்ளார்கள். ஆனால், இதே போல செயல்களை இஸ்லாமியர்கள் செய்யும் போது, தங்கள் நபியின் வாழ்க்கையை உதாரணத்தை நாங்கள் பின்பற்றுகிறோம் என்று அவர்கள் சொல்கிறார்கள், நாங்கள் அல்லாஹ்வின் விருப்பத்தை நிறைவேற்றுகிறோம் மற்றும் அல்லாஹ்விற்காக செய்கிறோம் என்றுச் சொல்கிறார்கள். இது தான் உண்மையிலேயே இரண்டிற்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசமாகும்!



2. இப்போது நாம் பழைய ஏற்பாட்டின் யோசுவா புத்தகத்திலுள்ள வசனங்களைக் குறித்து கவனிப்போம். கானானியர்களை துரத்தியடித்த போர்களைக் குறித்து நாம் அனேக வசனங்களை காணலாம். இப்படி இருந்தும் யோசுவாவின் நிகழ்ச்சிகளுக்கும் இஸ்லாமின் ஆரம்ப கால நிகழ்ச்சிகளுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதை நாம் காணலாம். யோசுவா புத்தகத்தின் நிகழ்ச்சிகளின் பின்னணி, "தேவனின் பரிசுத்தம் பற்றியதாகும்". கானானை ஆக்கிரமிப்பதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, தேவன் ஆபிரகாமிடம் கூறினார், அதாவது கானானியர்களின் பாவம் இன்னும் உச்சக்கட்டம் அடையவில்லை, அதாவது என்னிடம் வந்தடையவில்லை, அது முழுமையடையவில்லை, அவர்கள் தேசத்தை தங்கள் பாவங்களால் நிரப்பி பாழாக்கும் போது, தேசம் அவர்களை புறந்தள்ளிப்போடும் என்றுச் சொன்னார். இதே போல, தேவன் இஸ்ரவேல் தேசத்திற்கும் இப்படியே கூறினார், அதாவது "உங்களுக்கு முன்பாக இருந்த மக்களைப்போல பாவம் செய்வீர்களானால், உங்களையும் தேசம் புறந்தள்ளிப்போடும்" என்று எச்சரிக்கை செய்தார். ஆகையால், தேசத்தில் அக்கிரமம் பெருகி பாவம் பெருகியபோது, இஸ்ரவேல் மக்களைக்கொண்டு கானானியர் மீது தன் நியாயத்தீர்ப்பை தேவன் கொண்டு வந்தார். பிறகு, இதே போல அசீரியர்களைக் கொண்டும், பாபிலோனியர்களைக் கொண்டும், இஸ்ரவேல் மக்களின் பாவங்களுக்காக அவர்கள் மீது நியாயத்தீர்ப்பைக் கொண்டு வந்து இஸ்ரவேலர்களை அழித்தார்.


ஆனால், முஹம்மதுவின் வழிப்பறி கொள்ளைகளையும், போர்களையும் இஸ்லாமிய ஆரம்ப கால நிகழ்ச்சிகளையும் ஒருவர் படிப்பாரானால், மக்களின் பாவங்கள் பெருகினதினாலே, இறைவன் த‌ன் நியாயத்தீர்ப்பை முஹம்மது மூலமாக கொண்டுவந்தார் என்ற ஒரு மையக்கருத்தை நாம் காணமுடியாது. இதற்கு பதிலாக, முஹம்மது ஈடுபட்ட அனைத்து போர்களின் முக்கிய நோக்கம், எதிரிகளை கொல்வது, அவர்களது பொருட்களை அபகரிப்பது, சொர்க்கத்தை அடையவேண்டும் என்ற நோக்கத்தோடு போரிடுதல், எதிரி நாடுகளை பிடித்தல், மற்றும் இஸ்லாமிய நபியின் ஆட்சியை பரவச்செய்தல் போன்றவைகளாகத் தான் இருந்தது. இஸ்லாமுக்கு எதிராக யாரோ சொன்ன விவரங்களை நான் இப்போது கிளிப்பிள்ளையைப் போல சொல்லவில்லை. இப்போது தான் நான் மிகவும் பழமைவாய்ந்த இஸ்லாமிய காலத்தின் இரண்டாம் நூற்றாண்டின் முஹம்மதுவின் சரிதையை படித்து முடித்துள்ளேன் (translated by A. Guillaume and published by Oxford University Press in 1955). நீங்கள் இஸ்லாமியராக இருந்தாலும், அல்லது இஸ்லாமியரல்லாதவராக இருந்தாலும் இந்த புத்தகத்தை படிக்கவேண்டும் என்று நான் உங்களை உற்சாகப்படுத்துகிறேன், ஏனென்றால், முஹம்மதுவின் நடத்தைகளில் உள்ள வன்முறையையும், அவரது ஆரம்பகால சஹாபாக்களின் நடக்கையில் உள்ள வன்முறையை நீங்களே படித்து தெரிந்துக்கொள்ளலாம்.



3. இன்னொரு முக்கியமான விவரத்தை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும், அது என்னவென்றால், கானானிய சில பட்டணங்களை அழிக்கும் படி தேவன் கொடுத்த கட்டளையானது, ஒரு குறிப்பிட்ட மக்களுக்கும், ஒரு குறிப்பிட்ட நேரத்திலும் மற்றும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டுமே கொடுக்கப்பட்டது. பழைய ஏற்பாட்டில் வேறு எங்கும் தேவன் இஸ்ரவேல் நாடானது, மற்ற நாடுகள் மீது தானாகச் சென்று போர் தொடுக்கவேண்டும் என்று சொல்லவில்லை. அதாவது, தற்காப்பிற்காகவோ, அல்லது வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய இஸ்ரவேலின் தேவன் பற்றிய நம்பிக்கையை பரப்புவதற்காகவோ கூட தேவன் இப்படி மற்றவர்களின் நாடுகளின் மீது வலியச் சென்று சண்டையிடுங்கள் என்றுச் சொல்லவில்லை. ஆனால், குர்‍ஆனில் பல பொதுவான வசனங்களை நாம் காணலாம், அதாவது இஸ்லாமின் எதிரிகளை எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா மக்களையும் கொல்லும் படியான வசனங்கள் குர்‍ஆனில் உண்டு. முஹம்மதுவின் மரணத்திற்குப் பிறகு அவரை பின்பற்றினவர்கள் தனித்தனியாக பிரிந்துச் சென்று ஒருவரை ஒருவர் சண்டையிட்டு ஒருவரையொருவர் கொன்றுபோட்டதும், கொலைகள் செய்துக்கொண்டதும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிருபனமாகிறது. இஸ்லாமிய சரித்திரத்தில், அன்று முதன் இன்றுவரை தங்கள் எதிரிகளை அழித்து கொல்லும் இஸ்லாமியர்கள் தங்களின் இந்த வன்முறைகளுக்கு ஆதரவாக இஸ்லாமிய வசனங்களையே ஆதாரமாக காட்டி வருகின்றனர்.



4. இந்த சிறிய கட்டுரையை இஸ்லாமியர்கள் "உண்மை என்று நம்பும் தங்கள் கோட்பாட்டை" சொல்லி நிறைவு செய்யலாம் என்று விரும்புகிறேன். இஸ்லாமியர்களை பொருத்தமட்டில், இஸ்லாம் மட்டுமே கடைசியான ஓர் இறைக்கொள்கையுடைய மார்க்கமாகும், இதனால், இஸ்லாம் யூத மற்றும் கிறிஸ்தவத்தை விட உயர்ந்தது என்று நம்புகிறார்கள். மத்திய கிழக்கு நாட்டில் வாழ்ந்துக்கொண்டு இருப்பதாலும், இஸ்லாமிய நாட்டில் நான் வளர்ந்தவன் என்பதாலும், எங்களுக்கு அடிக்கடி கீழ் கண்டவிதமாக கூறுவார்கள். அதாவது, யூத மார்க்கம் என்பது ஒரு ஆரம்ப பள்ளியைப் போன்றது, கிறிஸ்தவ மார்க்கம் என்பது மேல்நிலைப்பள்ளியைப் போன்றது, மற்றும் இஸ்லாம் என்பது பல்கலைக் கழகத்தைப் போன்றது என்று கூறுவார்கள். இந்த எல்லா மார்க்கமும் இறைவனிடமிருந்து வந்தது, ஆனால், ஒவ்வொரு மார்க்கமும் தனக்கு முன்பு இருந்த மார்க்கத்தைவிட சிறந்ததாக விளங்கியது என்று கூறுவார்கள். ஆனால், இப்போது நாம் கேட்கவேண்டிய கேள்வி என்னவென்றால், புதிய ஏற்பாட்டின் கோட்பாடுகள் கட்டளைகளை விட எந்த விதத்தில் இஸ்லாம் சிறந்த நற்குணங்களை, கட்டளைகளை கொண்டு விளங்குகிறது? அதாவது இஸ்லாம் வன்முறையை பின்பற்றுகிறது, இது ஒரு வகையில் யூத பாரம்பரியங்களில் காணப்பட்டது போல இருக்கின்றதே! எப்படி இஸ்லாம் கிறிஸ்தவத்தை விட சிறந்ததாக இருக்கமுடியும்? இஸ்லாம் இயேசுக் கிறிஸ்துவின் மற்றும் புதிய ஏற்பாட்டின் போதனைகளுக்கு மேலாக இன்னும் சிறந்த மார்க்கமாக இல்லாமல் போனதுமட்டுமல்ல, இந்த நன்னடத்தையில் இஸ்லாம் இன்னும் கிறிஸ்தவத்திற்கு முன்னால் அனேக நூற்றாண்டுகள் பின் தங்கியுள்ளது.



தற்காலத்தில் குர்‍ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வன்முறையைப் பற்றி ஒரு சில சந்தேகங்களுக்கு இந்த சிறிய கட்டுரை உதவி செய்யும் என்று நான் நம்புகிறேன். கிறிஸ்தவர்களாகிய நாம் இந்த உலகையும், பைபிளையும் மற்றும் எதையானாலும் காணக்கூடிய கண்ணாடியாக இயேசுக் கிறிஸ்துவின் சிலுவையுள்ளது. கடைசியாக, இந்த சிலுவைத் தான் இறைவன் யார் என்று நமக்கு காட்டுகிறது, அவர் எப்படி இருப்பார் என்று காட்டுகிறது, அவர் எப்படி நம்மை இவ்வுலகத்திலிருந்து மீட்டெடுத்தார் என்பதை இதே சிலுவைத்தான் நமக்கு காட்டுகிறது.


ஆங்கில மூலம்: Violence in the Bible and the Qur'an - A Christian Perspective



இந்த தலைப்பு சம்மந்தப்பட்ட இதர கட்டுரையை படிக்கவும்: The Goodness of God

இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?

இயேசுவின் சில கட்டளைகள்



இன்ஜீலில் பதிவு செய்யப்பட்ட அதிகாரபூர்வமான கட்டளைகள்


தொகுத்தவர்: தாவுத் ஜபால்


இஸ்லாமிய நண்பர்கள் இப்படியாக கூறுவார்கள், அதாவது "இயேசு ஒரு நபியாக இருந்தார் மற்றும் அவர் இறைவனின் செய்தியையும் கட்டளைகளையும் கொடுத்தார். இன்ஜிலில் இருந்த இயேசுவின் போதனைகள் கட்டளைக‌ள் அனைத்தின் சாராம்சம், அவருக்கு 600 ஆண்டுகளுக்கு பிறகு வந்த குர்‍ஆனில் சுருக்கமாக சொல்லப்பட்டுள்ளது, எனவே குர்‍ஆனை நாங்கள் படித்தால் போதும் என்பார்கள். பைபிளில் உள்ள‌ இன்ஜிலில் சொல்லப்பட்ட‌ இயேசுவின் கட்டளைகளை படிக்கும் போது, அவைகளின் மேன்மை "இயேசுவின் கட்டளைகள் உள்ளன" என்றுச் சொல்லும் வேறு எந்த புத்தகத்திலும் இல்லை என்பதை அறியலாம்.


இயேசுவை ஒரு நபி என்றுச் சொல்லும் எல்லா இஸ்லாமியர்களும் அவரது வார்த்தைகளை படிக்கவேண்டும். இயேசுவின் வசனங்களை நாம் ஒவ்வொருவரும் பின்பற்றினால், இந்த உலகம் வாழுவதற்கு மிகவும் இனிதான இடமாக மாறும். சில இஸ்லாமியர்கள் இயேசு எப்படி தொழுதுக்கொண்டாரோ அதன் படி தொழுதுக்கொள்ள நாங்கள் கடமைப்பட்டவர்கள் என்று கூறுகிறார்கள். இதனை கீழ் கண்ட பகுதிகளில் 6:5-8 மற்றும் 6:9-13ல் காணலாம்.


கீழே தரப்பட்டுள்ள கட்டளைகள் அனைத்தும் மத்தேயு எழுதின சுவிசேஷமாகிய இன்ஜிலிலிருந்து எடுக்கப்பட்டது, அவைகளுக்கு அதிகார மற்றும் வசன எண்களும் தரப்பட்டுள்ளது. சில நேரங்களில் இயேசு தன்னை பின்பற்றும் சில சீடர்களுக்கு மட்டுமல்லாமல், அதிகமான பொது ஜனங்களுக்கு கொடுத்த கட்டளைகளும் தரப்பட்டுள்ளது, அவைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


  • என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே. (5:11-12)

  • நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக் கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். (5:17)

  • இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. (5:16)

  • ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறைஉண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து. (5:23-24)

  • நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; பரிச்சேதம் சத்தியம்பண்ணவேண்டாம்; வானத்தின்பேரில் சத்தியம்பண்ணவேண்டாம், …... பூமியின் பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், ….; எருசலேமின்பேரிலும் சத்தியம் பண்ணவேண்டாம், …... உன் சிரசின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், ….உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும். (5-34-37)

  • நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு. (5:39)

  • உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன்வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே. (5:42)

  • நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். (5:44).

  • ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறது போல,நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள். (5:48)

  • மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை. நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது.(6:1,3)

  • அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப்போலிருக்க வேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். (6:5-8)

  • நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே. (6:9-13)

  • நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும்பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார். (6:16-18)

  • பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்: பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். (6:19-21)

  • ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? (6:25)

  • முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும். (6:33-34)

  • நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். (7:1-2)

  • கேளுங்கள், … தேடுங்கள், … தட்டுங்கள், … உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? (7:7:11)

  • ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்க தரிசனங்களுமாம். (7:12)

  • இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். (7:13-14)

  • கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையும் பறிக்கிறார்களா? … பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை … ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு. இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். … நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார். (7:15-27)

  • அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார். (8:21)

  • பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்;… (9:13)

  • ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.(9:38)

  • வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். (11:28)

  • நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார். (11:29-30)

  • ஆகையால் விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள். ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன்.. …. நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் என்றார். (13:18-23)

  • வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள். அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார். (13:24-30)

  • …ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான். அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன். (18:21-22)

  • இயோசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி, அவர்கள் மேல் கைகளை வைத்து, பின்பு அவ்விடம்விட்டுப் புறப்பட்டுப் போனார். (19:14-15)

  • …அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். (22:15-21)

  • இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாத படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். (24:4-5)

  • யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது. (24:6)

  • ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாதிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள். மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறது போல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும். (24:26-27)

  • உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள். திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள். நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள். (24:42-44)

ஆங்கில மூலம்: Some of the Commands of Jesus, the Prophet Authoritatively recorded in the Injil


என் கேள்விகளுக்கு பதில்களை கண்டுக்கொண்டேன்

என் கேள்விகளுக்கு பதில்களை கண்டுக்கொண்டேன்



என் பெயர் தர்மிக்ஷி. நான் மலேசியாவில் வாழும் மலாய் இனத்தைச் சேர்ந்தவன். நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துக்கொண்டு இருக்கிறேன்.


நான் என் சுய விருப்பத்தின் படி கிறிஸ்தவத்தை அறிந்துக் கொண்டேன். பல ஆண்டுகளுக்கு முன்பு, எந்த ஒரு மனிதனின் வற்புறுத்தலும் இல்லாமல், சுயமாக‌ கிறிஸ்தவத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, தபால் மூலம் அது தொடர்பான பயிற்சியை எடுத்துக் கொண்டேன். அந்த சமயத்தில் என்னை சுற்றியிருந்த நண்பர்களும் நான் வாழ்ந்த சூழ்நிலையும், நான் கிறிஸ்தவத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள தூண்டுதலாக இருந்தது . ஆனால், என் இஸ்லாமிய நண்பர்களிடமிருந்து வந்த எதிர்ப்பு என்னை தர்ம‌சங்கடமான நிலையில் வைத்தது. ஏனென்றால், இஸ்லாமில் சில ஏற்றுக்கொள்ள முடியாத சடங்குகள் இருப்பதாக எனக்குப் பட்டது, உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால், நமாஜ் என்றுச் சொல்லக்கூடிய தொழுகையை ஒரு குறிப்பிட்ட வகையில் தான் செய்யவேண்டும், மற்றும் அந்த தொழுகை நேரத்தில் நமக்கு புரியாத மொழியில் தான் சூராக்களை ஓதவேண்டும் போன்றவைகளைச் சொல்லலாம். அப்பயிற்சியின் மூலம் அடிப்படை கிறிஸ்தவ சித்தாந்தத்தையும், இஸ்லாத்துடன் அது கொண்டுள்ள ஒற்றுமையையும் அறிந்து கொண்டேன் (அதாவது நரகம் பற்றிய நம்பிக்கையைப் பற்றிச் சொல்லலாம்). அந்த தபால் வழி கிறிஸ்தவ படிப்பை முடித்ததும் எனக்கு ஒரு சான்றிதழ் அனுப்பினார்கள்.

அதன் பிறகு நான் கோலாலம்பூரில் உள்ள ஒரு தேவாலயத்தில் ஆராதனைக்குச் சென்றேன். இங்கு நான் என் சுய விருப்பத்தின்படிச் சென்றேன். அங்கு செல்வதற்கு முன்பு, அந்த தேவாலயத்தின் நிர்வாகத்தொடு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு, என்னை அறிமுகம் செய்துக்கொண்டு, நான் கிறிஸ்தவத்தை அதிகமாக அறிய விரும்புகிறேன், அதற்காக வரவிரும்புகிறேன் என்றுச் சொன்னேன். நீங்கள் தாராளமாக ஆராதனையில் (தொழுகையில்) கலந்துக்கொள்ளலாம் என்று சொன்னார்கள். ஆராதனையில் கலந்துக்கொண்ட போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அங்கிருந்த மக்கள் என்னை அன்புடன் வரவேற்று நட்புடன் பழகினார்கள். அந்த தேவாலயத்தில் எந்த ஒரு சிலை அல்லது விக்கிரகத்தை நான் காணவில்லை, இது எனக்கு இன்னும் மகிழ்ச்சியை கொடுத்தது. அந்த தேவாலயம் (சர்ச்) ஒரு பெரிய அறையாக (ஹால்) இருந்தது, மொத்தத்தில் ஒரு மசூதியைப் போல இருந்தது.


அந்த ஆராதனையில் "இரா போஜனம்" என்றுச் சொல்லக்கூடிய "ஹோலி கம்யூனியன்" இருக்கும் என்று எதிர்ப்பார்த்தேன். அப்படிப்பட்ட சமயத்தில் இஸ்லாமியர்களை வலையில் சிக்கவைப்பதற்கு, ஒரு ரொட்டித் துண்டைக் கொடுபபர்கள். அந்த ரொட்டித் துண்டை சாப்பிட்டவுடன் நம்முடைய இருதயம் இருளடையும், பிறகு நாம் எல்லாவற்றையும் மறந்துவிடுவோம் என்று நான் இஸ்லாமியர்களால் போதிக்கப்பட்டு இருந்தேன். ஆனால், அன்று "இரா போஜனம்" நடைப்பெறவில்லை. ஆராதனை முடியும் தருவாயில் எனக்கு ஒரு சிறு புத்தகம் வழங்கப்பட்டு, என்னுடைய எதிர்கால‌ நம்பிக்கையைப் பற்றி சிந்திக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டேன்.


உள்ளத்தின் ஆழத்தில் விசுவாசிக்க வேண்டும் என்று தோன்றினாலும், தீர்வு காணப்படாத பல ஐயங்கள் இருந்தன. நான் என்னையே கேட்டுக்கொண்டேன், "இந்த புதிய நம்பிக்கையினால் எனக்கு என்ன நன்மை உண்டாகப்போகிறது?". நான் ஏன் இப்படி கேட்டுக்கொண்டேன் என்றுச் சொன்னால், அக்காலத்தில் மலேசியாவில், "ஒரு முஸ்லீம் எந்த காரணத்தைக் கொண்டும், இயேசுவை பின்பற்றுகிறவராக மாறமுடியாது". இன்னும் அனேக கேள்விகள் எழும்பி என்னை வாட்டின‌, ஆதாவது, "இந்த புதிய நம்பிக்கைக்காக நான் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிவரும்?, நான் எந்தெந்த பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்? என்னுடைய இந்த முடிவு சரியானதா?". இப்படிப்பட்ட அனேக கேள்விகள் பதிலளிக்கப்படாமல் இருந்தன. இக்கேள்விகள் அனைத்தையும் நான் புறந்தள்ளிவிட்டேன், மறுபடியும் இஸ்லாமுக்கு திரும்பிவிட்டேன் (ஹஜ்ரத் ஈஸாவின் மீதுள்ள நம்பிக்கையை விட்டுவிட்டேன்).


இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நான் ஒரு மதப்பற்றுள்ள இஸ்லாமியனாக மாறினேன். என் குடும்ப அங்கத்தினர்களும், என் நண்பர்களும் தொடர்ந்து தொழுகையை நிலைநாட்ட உற்சாகப்படுத்தினர். அவர்கள் கேட்டுக்கொண்டபோதெல்லாம் அவர்களுடன் இணைந்து நான் தொழுவேன். தொழுகை முடிந்ததும் நிம்மதியாக நான் ஓய்வு எடுத்துக்கொள்வேன். இப்படி பலமுறை நடந்தது. சுமார் ஆறு மாதங்களாக என் இஸ்லாமிய கடமைகளை செய்ய நான் தவறவில்லை. அதன் பிறகு சிறிது அமைதியாகிவிட்டேன். என்னை சுற்றியுள்ள மக்களால் நான் அதிகமாக கவரப்பட்டேன். எனக்கு திருமணமாவதற்கு முன்பே நான் மத கடமைகளை செவ்வனே செய்வதில், அதிக ஆர்வம் காட்டிவந்தேன். தினமும் ஐந்து வேளை தொழுகையை நான் கடைபிடிக்காமல் விட்டுவிட்டதில்லை. இதோடு கூட, நான் திருமணம் செய்ய இருந்த பெண் கூட (இப்போது என் மனைவி) என்னை அதிகமாக உற்சாகப்படுத்தினாள். நான் தொலைபேசியில் அப்பெண்ணோடு தொடர்பு கொண்டு பேசும் போதெல்லாம், "இன்று எத்தனை மணிக்கு எழுந்தீர்கள்?" என்று கேட்பாள். நான் தினமும் சிறிது கால தாமதமாக எழுந்திருப்பேன், இதனால் எங்கே நான் என் காலைத் தொழுகையை தவறவிட்டுவிடுவேனோ என்று எண்ணி இப்படி கேள்வி கேட்பாள். ஏன் இன்னும் அதிகாலையில் எழுந்து காலைத் தொழுகையை செய்யக்கூடாது என்று கேட்கத்தொடங்கிவிடுவாள். இப்படிப்பட்ட தொடர்ச்சியான உற்சாகத்தினால், நான் என் ஆன்மீக வாழ்வில் உச்சியை அடைந்திருந்தேன்.


வளர்ந்த பிறகு உம்ரா கடமையை நிறைவேற்ற நான் மெக்காவிற்குச் சென்றேன். பல நாட்டிலிருந்து வந்திருந்த பல இன மக்களின் நடவடிக்கைகளைக் கவனித்துப் பார்த்தேன். இஸ்லாத்திலும் கருத்து வேறுபாடும் சபை வேறுபாடும் இருப்பதைக் கண்டேன். ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக தொழுகை நடத்தினார்கள். ஒரே திசையை நோக்கினாலும் வெவ்வேறு விதமாகவே தொழுது கொண்டார்கள். இந்த தொழுகைகளில் கண்ட வித்தியாசம் என்னை சந்தேகத்திற்குள்ளாக்கியது. தொழுகை எப்படி செய்யவேண்டும் என்ற முறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, கண்டிப்பாக இதன் படி மட்டுமே செய்யவேண்டும் என்று நான் போதிக்கப்பட்டேன். ஆனால், இங்கு மக்காவிலேயே தொழுகை பலவகைகளில் செய்யப்படுவதை என்னால் காணமுடிந்தது. இந்த தொழுகை முறைகளில் எது சரியான முறை என்று நான் ஆச்சரியப்பட்டேன். மற்றும் இதுவரை நான் பின் பற்றி செய்த தொழுகை முறை சரியானதா என்ற சந்தேகம் உண்டானது. ஒருவேளை நான் செய்துக்கொண்டு வந்த தொழுகை முறை தவறானதாக இருக்குமானால், என் தொழுகைகள், வேண்டுதல்கள் அனைத்தையும் அல்லாஹ் அங்கீகரிக்கமாட்டார். இப்படியில்லாமல், நான் செய்துக்கொண்டு வந்த தொழுகை முறை சரியானதாக இருந்தால், மக்காவில் நான் என் கண்களுக்கு முன்பாக காணும் தொழுகைகளை அல்லாஹ் அங்கீகரிக்கமாட்டார். இது மிகவும் வேதனையான, தர்மசங்கடமான முடிவாகும்.


தொழுகையை எந்த முறையில் செய்யவேண்டும் என்று குர்‍ஆனில் சொல்லப்படவில்லை, முஹம்மதுவின் செய்கைகள், வார்த்தைகள் என்றுச் சொல்லப்படும் ஹதீஸ்களில் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. ஒருவர் எந்த முறையில் தொழுகையை செய்கிறாரோ அதன் மீது சார்ந்து தான் அவர் ஹதீஸ்களுக்கு பொருள் கூறுவார். ஒரு குறிப்பிட்ட தொழுகை முறைக்கு பழக்கப்பட்டுவிட்ட ஒரு இஸ்லாமியர், மற்றவர்கள் வேறு முறையில் தொழுகையை செய்வதைக் கண்டால், சரமாரியாக கேள்விகள் கேட்க ஆரம்பித்துவிடுவார். உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமானால், தொழுகை நேரத்தில் கைகளை வைத்துக்கொள்ளும் நிலையைப் பற்றிச் சொல்லலாம். அதாவது கைகளை விரித்து வைத்துக்கொள்ளவேண்டுமா, அல்லது இடது புறத்திலிருந்து வலது புறத்திற்கு மாற்றவேண்டுமா? ஒருமுறைக்கு அடுத்த முறைக்கு இடைவெளி எவ்வளவு நேரம் இருக்கவேண்டும்? அல்லது எவ்வளவு நேரம் இடைவெளி இருக்கக்கூடாது? இப்படிப்பட்ட விவரங்கள் அனைத்தும் குர்‍ஆனில் சொல்லப்படவில்லை அல்லது குர்‍ஆனினால் உறுதியாக்கப்படவில்லை. இறைத்தூதரின் வார்த்தைகளாகிய ஹதீஸ்களுக்கு இஸ்லாமிய அறிஞர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக பொருள் கூறுகிறார்கள். இப்படிப்பட்ட விஷயங்களை நான் என் கண்களால் கண்டு சாட்சியிடுகிறேன். இஸ்லாமிய அறிஞர்கள் வித்தியாசமாக பொருள் கூறுவதினால், அனேக புதிய முறைகளை நான் கண்டிருக்கிறேன். ஒரு சில முறைகளைத் தவிர மலேசியாவில் எல்லாவித தொழுகை முறைகளை பார்க்கமுடிவதில்லை. மலேசியாவில் ஷபியா தொழுகை முறை கற்றுக்கொடுக்கப்படுகிறது. மக்காவில் மலேசிய முறைப்படியான தொழுகை முறையை பின்பற்றி நான் தொழுதுக்கொண்டேன்.


நான் மக்காவில் இருந்த சமயத்திலேயே என் உள்ளத்தின் ஆழத்தில் அனேக கேள்விகள் எழும்பின. என்னை நானே கேட்க ஆரம்பித்தேன், "ஏன் நாங்கள் இப்போது தொழுதுக்கொள்வதுப் போல தொழுதுக்கொள்ள வேண்டும்?" ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நபி செய்தது போலவே நாம் ஏன் இன்று செய்யவேண்டும்? இப்படி தொழுதுக்கொள்வதில் உள்ள தத்துவம் பற்றி கேள்வி எழுப்பினேன். என் மனதில் நான் போராடினேன். "இவைகள் பல ஆண்டுகளுக்கு முன்பாக செய்யப்பட்டவைகள், நான் இப்போது செய்துக்கொண்டு இருப்பது சரியானதா?" என்று கேள்வி கேட்டுக்கொண்டேன். மக்காவில் உள்ள கருப்புக் கல்லை முத்தமிட நான் எல்லா மக்களுக்கு போட்டியாக‌ முட்டியடித்துக்கொண்டு சென்றுக்கொண்டு இருக்கும் போது, என்னை நானே கேட்டுக்கொண்டேன், "ஏன்? ஏன்? ஏன்? இப்படி செய்வது எதற்காக?"


நான் மக்காவிலிருந்து என் தாய் நாட்டிற்கு வந்த பிறகு, என் தொழுகை வாழ்க்கையை சிறிது தளர்த்தினேன். கிறிஸ்தவம் பற்றி மறுபடியும் சிந்திக்க ஆரம்பித்தேன். இப்படி சிந்தித்ததாலும் எனக்கு எந்த நன்மையும் இல்லை, எனென்றால், யாரும் கிறிஸ்தவம் பற்றி எனக்கு போதிக்கவில்லை. இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன என்று சரியாக விளங்கவில்லை.


திடீரென்று என் மனதில் ஒரு ஆலோசனை வந்தது. நான் தொலைபேசி புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஒரு கிறிஸ்தவ சபை விலாசத்தை எடுத்துக்கொண்டு அவர்களோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். நான் பேசிய நபர் ஒரு இந்திய பெண்மணியாவார், அவர் தன்னை வந்து சந்திக்கும்படிச் சொன்னார். ஆகையால், நான் அவரைக் காணச் சென்றேன். நான் அவரிடம் சில கேள்விகளைக் கேட்டேன். இக்கேள்விகளில் ஒரு கேள்வி, "உருவச் சிலைகளைப் பற்றியது". இதற்கு முன்பு ஒரு பிலிப்பினோ நண்பர் எனக்கு ஒரு சிறிய இயேசுவின் சிலையை கொடுத்து இருந்தார். அச்சிலையை நான் என்னுடன் கொண்டு வந்திருந்தேன், அதனை அப்பெண்மணியிடம் காண்பித்தேன். அவர் "இது சரியானது அல்ல" என்றுச் சொன்னார். இது தான் நான் முதல் முறை இப்படிப்பட்ட பதிலை கேட்டது. இந்த பதிலைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அந்த பெண் எனக்கு இன்னும் அதிகமாக விவரித்தார்கள், பிறகு ஒரு சிறிய புத்தகத்தை கொடுத்து வீட்டிற்குச் சென்று படிக்கும் படிச் சொன்னார்கள். அந்த சிறிய புத்தகத்தை படித்த பிறகு நான் அந்தப் பெண்ணை மறுபடியும் சந்தித்து, "நான் ஹஜ்ரத் ஈஸாவை என் இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன், இதற்கு உதவி புரியுங்கள்" என்றுச் சொன்னேன். அந்த நாளில் ஒரு சிறிய‌ ஜெபத்தை சொல்லி, நான் இயேசுவை ஏற்றுக்கொள்ள அவர் உதவி புரிந்தார்கள். அந்த சகோதரி ஒரு சிறிய‌ ஜெபத்தைச் சொல்லச் சொல்ல நான் திரும்பச் சொன்னேன், அது ஒரு சிறிய ஜெபம் தான், அதாவது மனந்திரும்புதலுக்கான ஜெபம் மற்றும் ஹஜ்ரத் ஈஸாவிற்கு என்னை ஒப்புவித்ததற்கான சிறிய ஜெபம். பிறகு எனக்கு பைபிளின் ஒரு பிரதி கொடுக்கப்பட்டது.


அந்த பெண்மணி என்னிடம் "உங்களை தொடர்ந்து வழி நடத்த, ஒரு பெண்ணாக என்னால் முடியாது, எனவே, உங்களோடு தொடர்பு கொண்டு வழி நடத்த ஒரு சகோதரனை" நான் காண்பிக்கிறேன் என்றுச் சொன்னார்கள். அவர் சகோதரர் "அ" என்பவரின் விலாசத்தைக் கொடுத்தார்கள், அதன் பிறகு இந்த சகோதரர் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார்கள்.


இப்பொழுதெல்லாம், "ஏன்" என்ற கேள்விகளை நான் கேட்பதில்லை, ஏனென்றால், நான் என் அனைத்து கேள்விகளுக்கும் பதிலை கண்டுக்கொண்டேன். நான் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பிறகு ஒரு நண்பர் ஒரு புத்தகத்தைக் கொடுத்தார்கள், அதினால் என் அனேக சந்தேகங்கள் தீர்ந்தன. அந்த புத்தகத்தில், புதிதாக இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் விசுவாசிகள் கேட்கும் பொதுவான கேள்விகளுக்கு பைபிளிலிருந்து பதில்கள் கொடுக்கப்பட்டு இருந்தது. இது மிகவும் உபயோகமான புத்தகமாகும்.


இஸ்லாமிய சமுதாயத்திலிருந்து ஹஜ்ரத் இயேசுவை பின் பற்றுகிறவனாக நான் மாறியதால், என் நம்பிக்கையை வெளிக்காட்டுவதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டியுள்ளது. இஸ்லாமை விட்டு வெளியேறுகிறவர்களுடன் இஸ்லாமிய சமுதாயம் மிகவும் கொடுமையான முறையில் நடந்துக்கொள்கிறது, அதுவும் காரணமில்லாமலேயே வெறுக்கிறது. இஸ்லாமை விட்டு வெளியேறுபவனின் மீது கோபமும், மூர்க்கமும் கொண்டு அவதூறாக பேசுகிறார்கள், ஏனென்றால், இஸ்லாமை விட வேறு ஒரு மார்க்கத்தை தெரிந்தெடுக்க அவன் தைரியம் கொண்டதால், இந்த நிலை. எல்லா விதமாக பயங்கரமான விளைவுகள் இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்கள் சந்திக்க வேண்டி வரும்.


ஈஸா அல் மஸீஹாவை பின் பற்றிய நாள் முதற்கொண்டு என் நம்பிக்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. நான் முஸ்லீமாக இருந்த போது, கடவுள் பயப்படவைப்பவர் போலவும், தண்டிக்கிறவர் போலவும் கண்டேன். ஆனால், இப்போது அவரை வித்தியாசமாக காண்கிறேன். இப்போதும் அவர் மிகவும் வல்லமைமிக்க உயர்ந்த தேவன் தான், ஆனால், அதே நேரத்தில் நான் அன்போடு அவரோடு பேசி, என் எண்ணங்களை அவரோடு பகிர்ந்துக்கொள்ளும் அளவிற்கு அவரை அவ்வளவு நெருக்கமாக காண்கிறேன். எனக்கு நெருக்கமாக அவர் இருக்கிறார், நான் சொல்வதை அவர் கேட்கிறார் என்பதை நான் அறிவேன். என்னை பொருத்த மட்டில், ஈஸா மஸீஹா உலக இரட்சகர் ஆவார், அவரே தேவனாவார். நான் ஜெபம் செய்யும் போதெல்லாம், இதனை நான் நினைவில் நிறுத்துகிறேன்.


தேவனிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட மிகவும் சிறப்பான ஆசீர்வாதம் என்னவென்றால், அவரது இரட்சிப்பை நான் காணும்படிச் செய்ததாகும், என்னை அவர் தெரிந்தெடுத்துக்கொண்டதாகும். தேவன் என்னை தெரிந்தெடுத்துக் கொண்டார் மற்றும் என்னைப் பற்றிய அவரது திட்டம், மலேசிய இஸ்லாமியர்களுக்கு அவரைப் பற்றி எனக்குத் தெரிந்ததை பகிர்ந்துக்கொள்வதாகும். சமீபத்தில், ஒரு மலேசிய பெண்ணை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் அனேக விஷயங்களை பேசினோம், அதாவது அப்பெண்ணின் கிறிஸ்தவ நண்பர்கள், பைபிள் மற்றும் ஈஸா மஸீஹா போன்ற தலைப்புக்கள் பற்றி பேசினோம். ஆனால், அப்பெண் விசுவாசத்தில் காலெடுத்து வைக்க தயாராக இல்லை. இருந்தபோதிலும், ஒரு மலாய் பெண்ணாக இருந்தால், கட்டாயமாக ஒரு முஸ்லீமாகத் தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றுச் சொன்னாள்.


மலேசிய அரசாங்கம், மக்கள் இதர மதங்களுக்கு மாறுவதற்கு தடை விதிக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன். ஒரு மனிதன் பின்பற்றும் தன் நம்பிக்கைக்காக முடிவுகளுக்காக, எந்த பயமுறுத்தலும் அவனுக்கு எதிராக இருக்கக்கூடாது. மனிதர்கள் சில விஷயங்களில் தீவிரமாகவும், சில விஷயங்களில் லேசான கண்ணோட்டத்தோடும் இருக்கிறார்கள். அரசாங்கத்தின் திட்டங்கள் தெளிவாக இருக்கவேண்டும், ஒரு பக்கமாக சாராமல் இருக்கவேண்டும், மக்கள் தங்களுக்கு பிடித்தபடி தொழுதுக்கொள்ள அனுமதிக்கவேண்டும். ஒரு மனிதன் தனக்கு பிடித்த நம்பிக்கையை பின்பற்றும்படியான சுதந்திரம் அவனுக்கு கிடைக்கும் நாட்கள் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அவன் எடுத்த நம்பிக்கையை மதித்து குடும்பமும், நண்பர்களும், சமுதாயமும், வேலை ஸ்தலங்களும் அவன் எடுத்த முடிவிற்காக அவனை மதிக்கும் நாட்கள் வரவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறேன்.


ஆங்கில மூலம்: Tarmizi Testimony


புதன், 8 ஜூலை, 2009

அல்-ஜன்னத்திற்கு "யூதன்" தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்

ல்-ஜன்னத்திற்கு "யூதன்" தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்

அல் ஜன்னத்தின்


"யூதர்கள் ஜாக்கிரதை" என்ற எச்சரிப்பிற்கு ஒரு எச்சரிக்கை


முன்னுரை:



எனக்கு ஒரு நண்பர் மார்ச் மாத அல்ஜன்னத் இஸ்லாமிய பத்திரிக்கையின் 17ம் பக்கத்தை ஸ்கான் செய்து படமாக அனுப்பினார். இந்த 17ம் பக்கத்தில் "யூதர்கள் ஜாக்கிரதை" என்ற தலைப்பில், நான்கு வலைத்தளங்களின் பெயர்களை குறிப்பிட்டு "இத்தளங்களை யூதர்கள் நடத்துகிறார்கள், இஸ்லாமுக்கு எதிரான பல விவரங்களை அவர்கள் பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்" என்று எழுதியிருந்தார்கள், மற்றும் யூதர்களை வன்மையாக கண்டிக்கிறோம் என்று எழுதியிருந்தார்கள். யூதர்கள் பற்றி இஸ்லாமியர்கள் எழுதியிருந்தால் எழுதட்டும் என்று விட்டுவிடலாம், ஆனால், அவர்கள் குறிப்பிட்ட நான்கு தளங்களில் ஒரு தளம் "ஆன்சரிங் இஸ்லாம்" தளமாகும். ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் தமிழ் பிரிவில் "தமிழ் பேசும் கிறிஸ்தவர்களாகிய நாங்கள் ஒருசிலராக சேர்ந்து" கட்டுரைகளை தமிழாக்கம் செய்து பதித்துக்கொண்டு இருக்கிறோம்.


ஆன்சரிங் இஸ்லாம் தளம், யூதர்களால் நடத்தப்படும் தளம் என்று அல் ஜன்னத் இஸ்லாமிய பத்திரிக்கை சொன்னதால், அவர்களுக்கு பதில் அளிக்கவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இந்த கட்டுரையில் இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டிற்கு என் பதிலையும், அதே நேரத்தில், அவர் குறிப்பிட்ட இதர தளங்கள் பற்றி ஒரு சில வரிகளையும் எழுதலாம் என்று எண்ணுகின்றேன், அதாவது மக்கள் படிக்கும் பத்திரிக்கையில் ஒரு விவரத்தைச் சொல்லும் போது, குறைந்த பட்சம் பட்டியலிடும் அத்தளங்களை ஒரு முறையாவது பார்த்துவிட்டு எழுதியிருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். இக்கட்டுரையில் அல் ஜன்னத் பத்திரிக்கை செய்த வேடிக்கையை தந்திரத்தை உங்களுக்கு காட்ட விரும்புகிறேன்.


இப்பொழுது, அல் ஜன்னத் பத்திரிக்கை 17ம் பக்கத்தில் என்ன எழுதியிருக்கிறது என்று படியுங்கள்.



யூதர்கள் ஜாக்கிரதை




யூதர்கள் அன்று முதல் இன்றுவரை மனித சமூகத்தில் ஒழுக்கவீனத்தைப் பரப்புவதிலும், மானக்கேடான விஷயங்களைச் செய்யத் தூண்டுவதிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். பொய்யையும், பித்தலாட்டங்களையுமே தங்கள் மூலதனமாகப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தின் மீது பொய் தகவல்களையுப் பரப்புவதில் கை தேர்ந்தவர்கள். சமீபகாலமாக தங்களுடைய பொய் தகவல்களைப் பரப்புவதற்கு இணைய தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது ஒரு சில வலைத் தளங்களை இஸ்லாமியப் பெயர்களிலேயே துவங்கி அதன் வாயிலாக இஸ்லாத்தை அழித்துவிடலாமெனவும் இஸ்லாமிய வளர்ச்சியைத் தடுத்துவிடலாம் எனவும் கருதுகின்றனர். எனவே இது விஷயத்தில் முஸ்லிம்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.



w.w.w.  answering  islam.  org,      www.  about islam. com



w.w.w. The quran. com,     w.w.w. allah



இந்த முகவரித் தளங்களில் வருகின்ற எந்தச் செய்தியானாலும் அதை அப்படியே நம்பிவிடக்கூடாது. இதில் நிறைய தகவல்கள் இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராகப் பரப்பப்படுகின்றன. முஸ்லிம்கள் இதையெல்லாம் நம்பி ஏமாந்துவிடாமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.



இஸ்லாத்தின் பெயரைப் பயன்படுத்தி இதுபோன்ற தில்லு முல்லுகளைச் செய்துவரும் யூத சக்திகளை வன்மையாகக் கண்டிக்கவேண்டும்.



Source: அல் ஜன்னத் இஸ்லாமிய மாத இதழ் - மார்ச் 2009, பக்கம் 17
emphasis mine


ஜன்னத் இஸ்லாமிய மாத இதழ் - மார்ச் 2009, பக்கம் 17




1. முதலாவதாக‌, யூதர்கள் மீது குற்றச்சாட்டுகளை குவிக்கிறது -அல் ஜன்னத் பத்திரிக்கை:


அல் ஜன்னத் பத்திரிக்கையின் கீழ்கண்ட தகவலுக்கு வேறு ஒரு கட்டுரையில் விவரிக்கலாம் என்று விரும்புகிறேன், ஆகையால், இந்த கட்டுரையில், "ஆன்சரிங் இஸ்லாம் தளம்" பற்றிய விவரத்திற்கு மட்டுமே பதிலை அளிக்கிறேன்.



அல் ஜன்னத் பத்திரிக்கை எழுதியது:



யூதர்கள் அன்று முதல் இன்றுவரை மனித சமூகத்தில் ஒழுக்கவீனத்தைப் பரப்புவதிலும், மானக்கேடான விஷயங்களைச் செய்யத் தூண்டுவதிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். பொய்யையும், பித்தலாட்டங்களையுமே தங்கள் மூலதனமாகப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தின் மீது பொய் தகவல்களையுப் பரப்புவதில் கை தேர்ந்தவர்கள்.



2. முஸ்லீம்களுக்கு யூதன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்


இஸ்லாமிய உலகில் எது நடந்தாலும் சரி, அதற்கு யூதன் தான் காரணம், இது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. இஸ்லாமை யாராவது விமர்சித்தால் உடனே, அதன் பின்னால் யூதன் இருப்பான், முஸ்லீம்களுக்கு எங்கும் யூதன் எதிலும் யூதன், தூணிலும் யூதன் துரும்பிலும் யூதன் இருப்பான்.


இந்த நிலை தொடருமானால், ஒரு இஸ்லாமியரின் வீட்டில் பிரியாணில் இருக்கும் கறி வேகவிலையானாலும் சரி, அதற்கு காரணம் யூதன் தான் என்று முஸ்லீம்கள் சொன்னாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. (இதில் சில விஞ்ஞான விவரங்களையும் இஸ்லாமியர்கள் தருவார்கள், அதாவது இந்தியாவில் வளர்க்கும் ஆடுகளுக்கு தரும் மருந்துக்கள், ஊசிகள் இஸ்ரேல் நாட்டிலிருந்து இறக்குமதியாகின்றன, அதனால் தான் கறி வேக வில்லை என்று ஆவேசமாக சொல்லும் இஸ்லாமியர்களும் இருப்பார்கள்.)


3. ஆன்சரிங் இஸ்லாம் தளம் யூத தளமா?


அல் ஜன்னத் நான்கு தளங்களில் பெயர்களை குறிப்பிட்டு, அவைகள் யுத தளங்கள் என்றுச் சொல்கிறது. அவைகளில் ஆன்சரிங் இஸ்லாம் தளம் பற்றிய விவரத்தை இப்போதுச் சொல்கிறேன்.



அல் ஜன்னத் பத்திரிக்கை எழுதியது:



சமீபகாலமாக தங்களுடைய பொய் தகவல்களைப் பரப்புவதற்கு இணைய தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது ஒரு சில வலைத் தளங்களை இஸ்லாமியப் பெயர்களிலேயே துவங்கி அதன் வாயிலாக இஸ்லாத்தை அழித்துவிடலாமெனவும் இஸ்லாமிய வளர்ச்சியைத் தடுத்துவிடலாம் எனவும் கருதுகின்றனர். எனவே இது விஷயத்தில் முஸ்லிம்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.




w.w.w.  answering  islam.  org,      www.  about islam. com



w.w.w. The quran. com,     w.w.w. allah



நான் அல் ஜன்னத் இஸ்லாமிய பத்திரிக்கையின் ஆசிரியரிடம் கேட்க விரும்புவது:


1) நீங்கள் ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் உள்ள கட்டுரைகளில் ஒரு சில கட்டுரைகளையாவது படித்தீர்களா? குறைந்த பட்சம் தமிழ் பிரிவில் உள்ள கட்டுரைகளையாவது படித்ததுண்டா?


2) அப்படி படித்து இருந்தால், ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் எத்தனை கட்டுரைகள் உங்களுக்கு, இந்த தளம் ஒரு "யூத தளம்" என்ற எண்ணத்தைக் கொடுத்தது? உங்கள் கணிப்பு/நம்பிக்கை சரியாக இருந்தால், கட்டுரைகளின் தொடுப்புக்களை பெயர்களைத் தரமுடியுமா? ஏனென்றால், நான் அந்த தளம் ஒரு கிறிஸ்தவ தளம் என்பதாலேயே ஆங்கில கட்டுரைகளை தமிழில் மொழியாக்கம் செய்து, பதிக்கிறேன். முக்கியமாக கடந்த பல ஆண்டுகளாக நான் அத்தளத்தின் கட்டுரைகளை படித்துக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் சந்தேகம் படும்படி இருக்கின்ற கட்டுரைகளின் பெயர்களை கொடுத்தால், எனக்கு உதவி செய்பவர்களாக இருப்பீர்கள், இதனை செய்யமுடியுமா?


3) அல்லது, இப்படி எதுவுமே படிக்காமல், யாரோ சொன்னார்கள் ஆகையால் நானும் சொல்கிறேன் என்பதாக சொல்கிறீர்களா? ஒரு வேளை யூதனின் பெயரை பயன்படுத்தினால் தான் ஆன்சரிங் இஸ்லாம் கட்டுரைகளை முஸ்லீம்கள் படிக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இப்படி செய்தீர்களோ?



ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் உள்ளன, தமிழில் 50க்கும் அதிகமான கட்டுரைகள் உள்ளன? இவைகளில் எந்தெந்த கட்டுரைகளை யூதர்கள் எழுதினார்கள்/எழுதியிருப்பார்கள் என்று உங்களால் சொல்லமுடியுமா?



4. இஸ்லாமுக்கு பதில் சொல்ல/விமர்சிக்க "யூதன்" தான் வேண்டுமா?


ஒருவர் இஸ்லாமை விமர்சித்தால், இஸ்லாமின் உண்மை முகத்தை உலகம் அறியும் படி எழுதினால், அவன் நிச்சயமாக யூதனாகத் தான் இருக்க வேண்டும் என்ற குருட்டு நம்பிக்கையா அல் ஜன்னத்திற்கு?



ஒருவன் யூதனாக இருக்கட்டும், கிறிஸ்தவனாக இருக்கட்டும், இந்துவாக இருக்கட்டும் அல்லது நாத்தீகனாக இருக்கட்டும், ஒரு மதம் அல்லது மார்க்கம் என்றால், கேள்வி கேட்கத்தான் செய்வான்? (இன்னும் அந்த மார்க்கத்தை ஸ்தாபித்தவரின் நடத்தையில் ஆபாசமோ அல்லது வன்முறையோ இருந்தால், சொல்லவேண்டியதில்லை கேள்விகளுக்கு பஞ்சமிருக்காது).



உலக நியதிக்கு எதிராகவும், சமுதாயத்தில் மனிதனுக்கு தீமை விளைவிக்கும் சட்டங்களை கொண்டுள்ள இஸ்லாமை விமர்சிக்க ஒரு யூதன் தான் வரவேண்டும் என்பதில்லை, மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும், சிந்திக்கும் திறமையுள்ள ஒவ்வொருவனும் கேள்வி கேட்கலாம், விமர்சிக்கலாம்.



இந்த நிலை இஸ்லாமுக்கு மட்டுமல்ல, கிறிஸ்தவத்திற்கும் பொருந்தும், இந்துத்துவத்திற்கும் பொருந்தும் அவ்வளவு ஏன் நாத்தீகனுக்கும் பொருந்தும். பெற்றோர்கள் நாத்தீகர்களாக இருந்தால், அவர்களின் வளர்ந்த பிள்ளைகளும் நாத்தீகர்களாக இருக்கவேண்டிய அவசியமில்லை, தனக்கு சரி என்று படுகின்ற வழியை மனிதன் பின்பற்றுவான்.



எனவே, எதற்கெடுத்தாலும் யூதன் யூதன் என்றுச் சொல்வதை விட்டு, நேர்மையானவர்களாக குற்றங்களை முன்வைத்தால், உலகம் உங்களை நம்பும்.


5. கிறிஸ்தவ போர்வையில் "யூதன்" தளம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன?

 

ஆன்சரிங் இஸ்லாம் யூதர்களால் நடத்தப்படும் தளம் என்று நீங்கள் சொல்வதை ஒரு பேச்சுக்காக ஒப்புக்கொண்டாலும், அதற்கான ஆதாரங்களை நீங்கள் தரவேண்டுமே?


ஆன்சரிங் இஸ்லாம் தளத்தின் கட்டுரைகளை படித்துப்பாருங்கள், எத்தனை கேள்விகள், பதில்கள் மறுப்புக்கள், மற்றும் புதிய ஏற்பாட்டிலிருந்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில்கள் மறுப்புகள், பழைய ஏற்பாட்டிலிருந்து மேசியாவாகிய இயேசுவைக் குறித்த கேள்விகளுக்கு பதில்கள் என்று நூற்றுக்கணக்கான கட்டுரைகள் உள்ளன.


இக்கட்டுரைகளை படிப்பவன் கண்டிப்பாக "இக்கட்டுரைகளை யூதர்கள் தான்" எழுதினார்கள் என்பதை நம்பமாட்டான், ஏனென்றால்,


இஸ்லாமை விமர்சிக்கிறேன் என்பதற்காக ஒரு யூதன் கிறிஸ்தவத்திற்கு ஆதாரவாக நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதி பதிப்பானா?


நீங்கள் நினைப்பதுபோல செய்வதற்கு யூதர்கள் என்ன முட்டாள்கள் என்று நினைத்தீர்களா?


"வருவார் என்று நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் மேசியா இயேசு அல்ல", என்றுச் சொல்லும் யூதன், இயேசு தான் மேசியா (மஸீஹா) என்பதற்காக தன் ஆயிரக்கணக்கான மணித்துளிகளை இதற்காக செலவிடுவானா? பணத்தை செலவிடுவானா?


6. யூதன் யூதனாகவே இஸ்லாமை விமர்சிக்க/மறுப்புக்கள் எழுத அவனுக்கு என்ன தடை?


ஒரு யூதன் யூதனாக இருந்து இஸ்லாமுக்கு பதில்கள் தருவது சுலபம், ஆனால், கிறிஸ்தவ போர்வையில் அவன் பதில்கள் கொடுத்தால், அது மிகவும் கடினம்.


ஏனென்றால், யூதன் யூதனாக இருந்து பதில்கள் அளித்தால், அவன் பழைய ஏற்பாடு அல்லது யூத சட்டங்கள் பற்றிய கேள்விகளுக்கு மட்டும் பதில்களை கொடுத்தால் போதும், ஆனால், அவன் கிறிஸ்தவனாக தன்னை அடையாளம் கட்டிக்கொண்டு பதில்கள் எழுதினால், அவனிடம் கேட்கப்படும் கேள்விகள், பழைய ஏற்பாட்டிலிருந்து மட்டுமல்ல, புதிய ஏற்பாட்டிலிருந்தும் கேட்கப்படும்.


ஆன்சரிங் இஸ்லாம் ஆங்கில தளத்தில் சென்று பாருங்கள், எத்தனை பதில்கள் மறுப்புக் கட்டுரைகள் புதிய ஏற்பாட்டைப் பற்றியும், இயேசுவின் சீடர்கள், அப்போஸ்தலர் பவுல் போன்றவர்கள் பற்றியும் கொடுக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு விளங்கும்.


யூதன் யூதனாக தன்னை காட்டிகொண்டால் இந்த புதிய ஏற்பாட்டிலிருந்து பதில்களை கொடுக்கவேண்டிய கடமை இருக்காதல்லவா? அல் ஜன்னத் ஆசிரியர்களே, இப்போதாவது சிறிது புரிகின்றதா? உங்கள் கற்பனை உலகத்திலிருந்து வெளியே வந்து சிந்துத்துப் பாருங்கள், உண்மைகள் விளங்கும்.


7. கிறிஸ்தவர்கள் ஏன் இஸ்லாமை விமர்சிக்கக்கூடாது?


இதுவரை, ஆன்சரிங் இஸ்லாம் தளம் யூதர்களால் நடத்தப்படும் தளம் அல்ல, இதற்கு அவசியமே யூதர்களுக்கு இல்லை என்பதை விளக்கினேன், இப்போது, ஆன்சரிங் இஸ்லாம் தளம் ஏன் கிறிஸ்தவர்களால் நடத்தப்படக்கூடாது என்பதை விளக்குகிறேன்.


7.1 யூதர்களை விட இஸ்லாமை விமர்சிக்க கிறிஸ்தவர்களுக்கு உரிமை அதிகம்:


யூதர்களை விட கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாமை கேள்வி கேட்க, முஹம்மது பற்றிய உண்மைகளை வெளிக்கொணர, விமர்சிக்க உரிமை உண்டு என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், முஹம்மது இயேசுவை நபி என்றுச் சொன்னார், இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை மறுத்தார், குர்‍ஆனில் எழுதியும் வைத்துவிட்டார், கிறிஸ்தவத்தை விமர்சித்தார். ஆக, இஸ்லாமுக்கு நாங்கள் பதில் சொல்லவேண்டாமா? உங்களுக்கு பதில் சொல்ல கிறிஸ்தவர்களுக்கு அதிக விவரங்கள் உண்டு, அதே போல, இஸ்லாமின் தரத்தை சரிபார்க்க, தராசில் நிறுத்தி தரத்தை பரிசோதிக்க கிறிஸ்தவர்களுக்கு உரிமை உண்டு.


தன்னைப் பற்றி பைபிளில் உள்ளது என்று முஹம்மது கூறினார், அவர் சொல்வது உண்மையா இல்லையா என்று நாங்கள் சோதிக்கவேண்டாமா? ஆராய்ச்சி செய்யவேண்டாமா? முஹம்மது உண்மையிலேயே ஒரு நபி தானா என்று சோதிக்கவேண்டாமா? பைபிளை விமர்சிக்க குர்‍ஆனுக்கும் முஹம்மதுவிற்கும் தகுதி உள்ளதா என்று சோதித்துபார்க்க வேண்டாமா? இஸ்லாம் சொல்வதையெல்லாம் அப்படியே அங்கீகரிக்கவேண்டிய அவசியம் இல்லையே!


இஸ்லாமியர்கள் கேள்விகளை கேட்டால், யூதர்களுக்கு வெறும் பழைய ஏற்பாடு பற்றிய கேள்விகளுக்கு மட்டும் பதில்கள் கொடுத்தால் போதும், ஆனால், நாங்கள் பழைய மற்றும் புதிய ஏற்பாடு பற்றிய கேள்விகளுக்கு பதில்களை தரவேண்டும். "பைபிள் கூறும் நபிகள் வரிசையில் நான் கடைசியானவன்" என்று முஹம்மது சொன்னதாலும், பைபிளின் மீது "இஸ்லாம்" ஆதாரப்பட்டு இருப்பதாலும், எங்களுக்கு இஸ்லாமை கேள்வி கேட்க அதிகாரம் உண்டு.


தங்கத்தை சுத்தம் செய்ய நெருப்பில் சுடவேண்டும், அப்படி செய்யும் போது, அசுத்தம் நீங்கும், அப்போது தான் சுத்தப்பொன்னாக அது மாறும், எனவே, இஸ்லாமை நாங்கள் நெருப்பில் போட்டு சுடுகிறோம், உண்மையிலேயே, உங்கள் நபி ஒரு உண்மை நபியாக இருந்தால், சுத்த பொன்னாக மாறுவார். நெருப்பிலே போட்டது தங்கம் என்று நினைத்து கரித்துண்டை போட்டால், அது எரிந்து சாம்பலாகி விடும். அக்கினி எல்லாவற்றையும் சோதித்தறியும், உண்மை கண்டிப்பாக வெளியே வரும்.


ஆனால், இஸ்லாமை விமர்சிக்கும் போது, அதற்கு எதிராக கேள்விகள் கேட்கப்படும் போது, முஹம்மதுவின் நடத்தையை வெளிச்சத்தில் வைத்து சரி பார்க்கும் போது, இஸ்லாமியர்களுக்கு அதிகமாக கோபம் வருகிறது? ஏன் கோபம் வரவேண்டும்? தங்கமாக இருந்தால், இன்னும் சுத்தமாகுமே, இஸ்லாம் ஒரு தங்கமல்ல அது ஒரு கரித்துண்டு என்ற நம்பிக்கை உங்களுக்கு அதிகமோ?


எனவே, நான் உங்களை கேட்டுகொள்கிறேன், ஆன்சரிங் இஸ்லாம் ஒரு யூத தளம் என்ற பொய்யை சொல்வதை விட்டுவிடுங்கள், அல்லது அதற்கான ஆதாரங்களைத் தாருங்கள்?


மருந்து மாத்திரைகளை போல "பொய்கள் ஒரு கால அவகாச தேதியோடு (Expiry Dates)" தான் வரும் . அந்த மாத்திரையின் காலம் முடிந்துவிட்டால், அந்த மாத்திரை வேலை செய்யாது, மட்டுமல்ல‌ அவைகள் எதிர்விளைவுகளை கொண்டுவரும். அது போல, இஸ்லாமியர்கள் 14 நூற்றாண்டுகளாக சொல்லிக்கொண்டு வந்த பொய்களுக்கு முடிவு தேதி (Expiry Date) நெருங்கிவிட்டது. இன்னும் அந்த மாத்திரைகளை பயன்படுத்தினால், பயன்படுத்துபவருக்கு பக்க விளைவுகளை கொடுக்கும், 14 நூற்றாண்டுகளாக குணமாக்கிய அதே மருந்து இப்போது விஷமாக மாறும். பொய்களை அனேக நாட்கள் வாழவைக்கவும் முடியாது, அதே போல, உண்மைகளை அனேக நாட்கள் மண்ணுக்குள் புதைத்து வைத்திருக்கவும் முடியாது.


ஆக, ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும், இஸ்லாமை கேள்வி கேட்கும் உரிமை உண்டு, இது எங்கள் பிறப்புரிமை. இதே போல மற்றவர்களுக்கும் கிறிஸ்தவத்தை, இதர மார்க்கங்களை கேள்வி கேட்க, விமர்சிக்க உரிமை உண்டு.


இனி அல் ஜன்னத் கொடுத்த இதர தளங்கள் யூத தளங்களா என்று பார்ப்போம்.



அபவுட் இஸ்லாம் டாட் காம் தளம்: (www.aboutislam.com)


இந்த தளத்தின் பெயரை கொடுத்துப் பார்த்தால், அது "http://www.perfumesofarabia.com/" என்ற தளத்தைக் காட்டுகிறது. அதாவது, அரேபிய பெண்களின் வாசனை திரவியங்கள் (சென்ட்) பற்றிய தளம் வருகிறது (Redirected to perfumeofarabia site). இந்த தளம் ஒரு வியாபார தளமாக வாசனை திரவியங்களை விற்கும் தளமாக‌ இருக்கிறது.


ஒரு வேளை, இந்த தளம் முதலாவது ஒரு யூதர்களின் தளமாக (அல் ஜன்னத் ஆராய்ச்சி செய்து சொன்னது போல) இருந்து, பிறகு அவர்கள் தங்கள் டொமைனை (domain) விட்டுவிட்டு தங்கள் தள கட்டுரைகளை நீக்கிவிட்டு சென்று இருப்பார்கள், என்ற சந்தேகத்தில் வெப் ஆர்கவ்வில் (Web Archive) சென்று பார்த்தேன்.


இந்த பக்கத்தை சொடுக்கி பார்க்கவும்: http://web.archive.org/web/*/http://www.aboutislam.com


இந்த தொடுப்பில், "About Islam" தளம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது, எத்தனை முறை கட்டுரைகள் பதிக்கப்பட்டது போன்ற விவரங்களை காணலாம்.


இதன் படி "About Islam" ஒரு கிறிஸ்தவ தளமாக ஜனவரி மாதம் 1999ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அனேக கிறிஸ்தவ இஸ்லாமிய கட்டுரைகள் பதிக்கப்பட்டுள்ளது.


பார்க்கவும்: http://web.archive.org/web/19990117021402/http://www.aboutislam.com/


பல ஆண்டுகளுக்கு பிறகு, கிறிஸ்தவ தளமாக இருந்த இந்த தளம், இஸ்லாமிய தளமாக மாறியுள்ளது. இஸ்லாமை தழுவுகிறவர்கள் இந்த தளப்பெயரை வாங்கி தங்கள் தளத்தோடு இணைத்துள்ளார்கள்.


பார்க்கவும்: http://web.archive.org/web/20071023173418/www.convertstoislam.org/


www.convertstoislam.org என்ற தளம் www.aboutislam.com என்ற டொமைனை வாங்கி. பல ஆண்டுகள் பயன்படுத்தி மறுபடியும் விற்றுவிட்டு இருக்கும், இன்று www.aboutislam.com என்ற தளத்தை சொடுக்கினால், நமக்கு அரேபிய பெண்களின் வாசனை தரவியங்கள் என்ற வியாபார தளம் தான் வருகிறது. இவைகள் தான் www.aboutislam.com தளப் பெயரைப் பற்றிய மேலோட்ட விவரங்களாகும், இதனை வெப் ஆர்கவ்வில் சென்று மேலும் அறிந்துக்கொள்ளுங்கள் (http://web.archive.org/web/*/http://www.aboutislam.com).



அல் ஜன்னத் ஆசிரியருக்கு கேள்விகள்:


2009ம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் தேதி, இந்த தளம் www.aboutislam.com பற்றி எச்சரிக்கை செய்தியை உங்கள் பத்திரிக்கையில் பிரசுரிப்பதற்கு முன்பு, நீங்கள் ஒருமுறையாவது இணையத்தில் இந்த தளத்தை சொடுக்கி பார்த்தீர்களா? பார்த்து இருந்தால், இப்படி எழுதியிருக்கமாட்டீர்கள்?


எந்த ஆதாரத்தை வைத்து, இந்த தளம் யூதர்கள் நடத்தும் தளம் என்று எழுதினீர்கள்?


உங்கள் பத்திரிக்கையை படிக்கும் வாசகர்க‌ள் உங்களின் நேர்மையை கவனிக்கட்டும். மற்ற மார்க்க விஷயங்களை எழுதுவதில் இவ்வளவு நேர்மையற்ற விவரங்களை தரும் நீங்கள், உங்கள் இஸ்லாமிய விவரங்களை சொல்வதில் எவ்வளவு விஷயங்களை மறைப்பீர்கள்! இறைவனுக்கே வெளிச்சம்.



அல்லாஹ் டாட் காம் தளம் (www.allah.com)



அடுத்ததாக, நீங்கள் "அல்லாஹ் டாட் காம்" என்ற தளத்தைப் பற்றி எழுதினீர்கள்! இந்த தளமும் யூதர்களின் தளம் என்று எழுதிவிட்டீர்கள். ஆனால், இந்த தளத்தை சொடுக்கிப்பார்த்தால் இது ஒரு "ஷியா முஸ்லீம்களின்" தளம் போல தென்படĬ