பக்கங்கள்

சனி, 13 மார்ச், 2010

பீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை

பீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை



முன்னுரை: பீஜே அவர்களின் அதிகார பூர்வமான தளத்தில் "இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை" என்ற பெயரில் ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது. இயேசு இறைமகனா என்ற புத்தகத்தின் ஒன்பதாம் பதிப்பில் வரவிருக்கும் விவரங்களில் ஒரு பாகத்தை அக்கட்டுரையில் வெளியிடுவதாகச் சொல்லியிருந்தார்கள். அவரின் இந்த புத்தகத்திற்கு பதில்கள் தர நான் கடனாளியாக இருக்கிறேன், கர்த்தருக்கு சித்தமானால், தொடர்ந்து பதில்களை தந்து, பீஜே அவர்களின் பைபிள் பற்றிய விரிவுரையை மக்கள் அறியும் படி செய்வேன். 



பீஜே அவர்கள் பைபிள் விவரங்கள் பற்றி எவ்வளவு அறியாமையில், மேலோட்டமாக கட்டுரைகளை எழுதுகிறார் என்பதை நாம் தொடர் பதிலாக காணலாம். இக்கட்டுரையில் அவரது முதல் கேள்விக்கு சுருக்கமாக பதில் அளிக்கப்படுகிறது, தேவைப்பட்டால், விவரமாக பதில்கள் தரப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.



பீஜே அவர்கள் எழுதியவைகள்


இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை


கிறித்தவ நண்பர்கள் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயத்தை நாம் இங்கே சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.


நீங்கள் இயேசுவை உண்மையாகவே மதிப்பவர்களாக இருந்தால் இயேசு தான் உலகில் வாழும் போது எதைச் சொன்னாரோ அதை ஏற்று நடக்க வேண்டும்.


அவர் இந்த உலகில் வாழும் போது தன்னைக் கடவுள் என்றோ கடவுளின் தன்மை பெற்றவர் என்றோ கடவுளின் அவதாரம் என்றோ அவர் கூறவில்லை.


மூலம்: http://www.onlinepj.com/vimarsanangal/iyesuvuku_sammanthamillai/


"இயேசு நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்" என்று சொல்லியுள்ளாரா?




கேள்வி:


கிறிஸ்தவர்கள் நினைப்பது போல பைபிளில் எங்கேயாவது "இயேசு நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்" என்று சொல்லியுள்ளாரா? தயவு செய்து காட்டமுடியுமா?


பதில்:


என்னிடம் இந்த கேள்வி அனேக முறை கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்வியைப் பற்றிய ஒரு சுருக்கமான மற்றும் முக்கியமான பதிலாக இக்கட்டுரை அமையும் என்று நான் நினைக்கிறேன்.


"நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்" என்று இயேசு சொல்லவில்லை.


ஒரு எடுத்துக்காட்டிற்காக, உண்மையாகவே ஒரு மனிதன் உங்களிடம் வந்து, "நான் தான் இறைவன், என்னை வணங்குங்கள்" என்று சொன்னால், நீங்கள் என்ன செய்வீர்கள்?


அவர் இறைவன் தான் என்று நம்பி உடனே அவரிடம் நம்பிக்கை வைப்பீர்களா?


அவரை இறைவன் என்று நம்பி உடனே அவரை தொழுதுக்கொள்ள/வணங்க ஆரம்பித்துவிடுவீர்களா?


மேலே சொன்னது போல, ஒரு நபர் உரிமை கொண்டாடி சொல்லும் போது, ஒரு சராசரி மனிதன் அதுவும் "ஒர் இறைக்கொள்கையுடைய மனிதன்" இப்படிப்பட்ட உரிமைக் கொண்டாடும் நபர் மீது "தேவ தூஷணம் அல்லது இறைக் குற்றம்" சுமத்துவான். நீங்களும் இப்படிப்பட்ட குற்றத்தைத் தான் அப்படிப்பட்டவர் மீது சுமத்துவீர்கள் என்று நம்பலாம். திடீரென்று ஒருவர் வந்து "நான் தான் இறைவன்" என்றுச் சொன்னால் அதனை நம்ப மறுக்கும் நீங்கள், இயேசு மட்டும் "எல்லாரிடமும் சென்று நான் தான் இறைவன், என்னை வணங்குங்கள்" என்று நேரடியாகச் சொல்லவேண்டும் என்று எப்படி எதிர்ப்பார்க்கிறீர்கள். நீங்களே ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாத ஒன்றை இயேசு சொல்லவேண்டும் என்று எப்படி எதிர்ப்பார்க்கிறீர்கள்? இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை ஒருவர் சொல்வாரானால், மனிதர்கள் உடனே அவருக்கு "பைத்தியக்காரர்" பட்டம் கட்டி ஒதுக்கிவிடுவார்கள். இயற்கையாகவே மனிதர்கள் இப்படிப்பட்ட வாதத்தை வெறுமனே ஏற்கமாட்டார்கள் என்பதை மற்ற எல்லா மனிதர்களைக் காட்டிலும் இயேசுவிற்கு நன்றாக தெரிந்திருந்தபடியினால் தான், அவர் நேரடியாக இப்படிப்பட்ட வாதத்தை வைக்கவில்லை. இப்படி வெறுமனே சொல்வது ஒரு முட்டாள் தனம் என்பதினால் தான் அவர் அப்படி நேரடியாகக் கூறவில்லை. ஆனால், தான் ஒரு இறைவன் என்பதை அவர் மறைமுகமாக பல வழிகளில் காட்டியுள்ளார், மற்றும் இந்த இதர வழிகளே "இயேசு இறைவன்" என்பதை நிருபிக்க போதுமானதாகும்.


நீங்கள் ஒருவேளை இறை விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடையவராக இருக்கலாம், அதே நேரத்தில் யாராவது வந்து நான் தான் இறைவன் என்றுச் சொன்னால், அதனை உடனே நம்பிவிடாமல், அதைப் பற்றி ஆராய்கிறவராக இருக்கலாம். இறைவன் மனித உருவில் வரமாட்டார் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால், சர்வ வல்லவராகிய இறைவன் மனித உருவில் வந்தால் அவரது வல்லமைகள் குறைந்துவிடுமா? நீங்கள் இறைவனால் எல்லாம் முடியும் என்று நம்புகிறீர்கள், அப்படி இருக்கும் போது, இப்படிப்பட்ட இறைவன் நான் தான் என்று ஒருவர் சொன்னால், உடனே நம்பிவிடுவீர்களா? அப்படி சொன்னவரிடமிருந்து ஆதாரங்களை எதிர்ப்பார்க்கமாட்டீர்கள்? நிச்சயமாக எதிர்ப்பார்ப்பீர்கள். ஒரு வேளை, நான் தான் இறைவன் என்று ஒருவர் சொன்னவுடன், அவரிடம் எந்த ஒரு ஆதாரத்தையும் பார்க்காமல் அவரை வணங்க ஆரம்பித்துவிட்டால், நீங்கள் இறைக்குற்றம் புரிந்தவராக கருதப்படுவீர்கள். அதே நேரத்தில், தான் ஒரு இறைவன் என்று முழு ஆதாரங்களையும் கொடுத்துவிட்ட பிறகும், அவரை வணங்க மறுப்பீர்களானால், இறைவனின் பார்வையில் இதுவும் மிகப்பெரிய குற்றமாக கருதப்படும்.


எல்லாவற்றிற்கும் மேலாக கடைசியாக தேவையானது எதுவென்றால், "நான் தான் இறைவன், என்னை வணங்குங்கள்" என்ற எழுத்தின்படியான வரிகள் உள்ளனவா என்பதல்ல, அதற்கு பதிலாக, அவர் இறைவன் என்பதை பல வகைகளில் தெளிவாக அவர் நிருபித்து, ஆதாரத்தை வைத்துச் சென்றுள்ளாரா என்பது தான் மிகவும் முக்கியமானது. இயேசு இறைவன் என்ற வாதத்தை அவர் "வார்த்தையில் மட்டும் தான் சொல்லவேண்டும்" என்பதல்ல, இதர வழிகளில் அவர் அதனை தெளிவாக நிருபித்துள்ளாரா என்பது தான் முக்கியமானது. இயேசு தன் இறைத்தன்மையை தெளிவாக நிருபித்து இருக்கும்போது, அவரை வணங்க வேண்டியது உங்கள் கடமையாக இருக்கிறது. நீங்கள் நினைக்கும் வரிகளே அல்லது வார்த்தைகளே அவர் சொல்லயிருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது தவறானதாகும். நாம் இறைவனை அங்கீகரிப்பதற்கு முன்பு, இந்த வகையிலே அல்லது வழியிலே தான் நீங்கள் உங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று நாம் இறைவனுக்கு கட்டளைகளைக் கொடுத்து வரையறுக்கமுடியாது.


உதாரணத்திற்கு, யோவான் நற்செய்தி நூலில், நித்திய வாழ்வு பற்றி இயேசு கூறும் போது:


"நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;" (யோவான் 11:25). என்று கூறினார்.


இயேசு, தன் மீது நம்பிக்கை வைக்கும் மனிதர்களுக்கு நித்திய வாழ்வை கொடுப்பேன் என்று கூறுகிறார். இந்த வாதத்தை ஒரு இறைவன் தவிர வேறு யாராவது சொன்னால், அது தேவதூஷண பாவமாகும். இதனை இறைவன் மட்டுமே சொல்லமுடியும். இது மிகவும் முக்கியமான இறைவனுக்குத் தகுந்த உரிமைக் கொண்டாடலாகும். இப்படிப்பட்ட வாதத்தை முன்வைப்பதற்கு இயேசு ஏதாவது செய்தாரா, இந்த அதிகார வார்த்தைகளுக்கு தகுந்த நிருபனத்தை அவர் முன்வைத்தாரா? இந்த வாதம் புரிந்த அதே நாளில் என்ன செய்தார் என்பதை வேதம் பல விவரங்களைச் சொல்கிறது, இதன் பிறகு கடைசியாக நாம் வாசிக்கின்றோம்:


"இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்." (யோவான் 11:43,44).


நீங்கள் நற்செய்தி நூல்களை கவனமாக வாசிக்கும் போது, கீழ்கண்ட விவரங்களை தெளிவாகக் காணலாம்:


1) இயேசு, தான் ஒரு இறைவன் என்ற தோரணையிலேயே அதிகாரமுடையவராக பேசினார்.


2) இயேசு, தான் ஒரு இறைவன் என்ற முறையிலேயே அதிகாரமுடையவராக நடந்துக்கொண்டார்.


3) இயேசு, தனக்கு எல்லாவற்றையும் செய்ய அதிகாரமுண்டு என்பதை பல அற்புதங்கள், அதிசயங்களை செய்துக்காட்டி தன் இறைத் தன்மையை நிருபித்தார்.


தம்முடைய சீடர்களுடன் 3 ஆண்டுகள் வாழ்ந்த‌ பிறகு ஒரு சீடன் , "பிதாவை (இறைவனை) எங்களுக்கு காட்டும்" என்று கேட்டபோது:


அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? ..... நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள். (யோவான் 14:9-11)


இயேசு தன் சீடர்களும், மற்றும் தன்னைச் சுற்றி இருக்கும் இதர மக்களும் தன்னுடைய இறைத் தன்மையை அதிகாரம் நிறைந்த தம்முடைய வார்த்தைகளைக் கண்டு தெரிந்துக்கொள்ளவேண்டுமென்றும், இன்னும் இறைவனால் மட்டும் செய்யமுடியக்கூடிய அற்புதங்களை தான் செய்வதைக் கண்டும் தெரிந்துக்கொள்ளவேண்டும் என்றும் எதிர்பார்த்தார். இயேசு தான் ஒரு இறைவன் என்பதற்கு அனேக ஆதாரங்களை கொடுத்துள்ளார், எனவே இனி நீங்கள் தான் உங்கள் முடிவை எடுக்கவேண்டும்.


எந்த மனிதனானாலும் தான் ஒரு இறைவன் என்று சொல்லக்கூடும், சிலர் இன்னும் மேலே சென்று நான் தான் உலகை உண்டாக்கிய இறைவன், நான் ஆதியிலிருந்து இருக்கிறேன் என்றும் சொல்லக்கூடும். ஆனால், உண்மையான இறைவனால் மட்டுமே தான் ஒரு இறைவன் என்ற ஆதாரங்களை நிருபனங்களைத் தரமுடியும், மற்ற யாராலும் முடியாது. இறைவன் நமக்கு தேவையான ஆதாரங்களை கொடுத்து இருக்கும் பட்சத்தில், தன்னை வணங்கும் படியாக "எழுத்தின் படியான நேரடியான கட்டளை" தேவையில்லை. எந்த ஒரு ஆதாரமும் கொடுக்காமல், அற்புதங்களும் செய்யாமல், "நான் தான் இறைவன்" என்றுச் சொல்வது, ஒரு இறைவனுக்கு எந்த ஒரு மேன்மையையும் கொடுக்கப்போவதில்லை. ஒரு இறைவனின் உண்மை இறைத்தன்மை, அவரது செயல்களில் வெளிப்படும். இப்படி இல்லாமல், நான் தான் இறைவன் என்ற வாதத்தை உலகத்தில் எல்லாரும் முன்வைக்கமுடியும், இதனால் எந்த பயனும் இல்லை. தான் ஒரு இறைவன் என்ற நிருபனத்தை மிகவும் ஆணித்தரமாக கொடுத்துவிட்ட பிறகு, இதனை வார்த்தையில் சொல்லவேண்டிய அவசியமில்லை. திறந்த மனதுடன் இந்த ஆதாரங்களைக் காணும் நபர்கள் உண்மையான இறைவன் யார் என்பதை கண்டுக்கொள்வார்கள், அப்படியில்லாமல், இயேசு "நான் இறைவன்" என்று நேரடியாக சொல்லியிருந்தாலும் இந்த நிருபனங்களை நிராகரித்துவிட்டவர்கள் நம்பப்போவதில்லை. அவரது உண்மை இறைத்தன்மையை நீங்கள் அறிந்து இருந்தால், அவரை தொழுதுக்கொள்வது தான் சரியான பதிலாகும்.


இது மிகவும் முக்கியமான விஷயம் என்றும் இதனை நம்புவது சிலருக்கு கடினம் என்றும் எனக்குத் தெரியும். இதனால், தான் இயேசுவின் சீடர்களுக்கும் இதனை புரிந்துக்கொள்ள சில காலம் பிடித்தது. இயேசுவின் அனைத்து வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் சரியான விளக்கத்தை இயேசுவின் சீடர்கள் புரிந்துக்கொண்டது, அவரது மரணத்திற்கு பிறகு மற்றும் உயிர்த்தெழுத்த இயேசுவை அவர்கள் கண்ட பிறகு தான்.


யோவான் நற்செய்தி நூலின் 20ம் அதிகாரத்தின் கடைசியிலும், மத்தேயு நற்செய்தி நூலின் 28ம் அதிகாரத்திலும் நாம் இதனை காணலாம். அதாவது தன்னை அவர்கள் இறைவன் என்று தொழுதுக்கொள்வதையும், அதனை இயேசு ஆமோதிப்பதையும் காணலாம். ஆனால், அவர் அந்த தொழுதுக்கொள்ளுதலை அவர்களிடம் கட்டாயப்படுத்தி அதற்கு முன்பாக எதிர்பார்க்கவில்லை, அதே நேரத்தில் தன்னை தொழுதுக்கொள்வதை அவர் அங்கீகரித்தார் மற்றும் அது தான் சரியானது என்பதை ஆமோதித்தார்.


உங்களின் வாதம், "நான் இறைவன், என்னை வணங்குங்கள்" என்று இயேசு சொல்லவில்லையே என்பதாகும். இந்த வார்த்தைகளை அப்படியே அவர் சொல்லவில்லை, ஆனால், இந்த வரிகளை விட அதிகமாக, அவர் பல வழிகளில் தன் இறைத் தன்மையை நிருபித்தார். உங்கள் மனக்கண்களை திறந்து உண்மையைக் கண்டுக்கொள்ளுங்கள். ஆங்கில மூலம்


இதர கட்டுரைகள்:

ஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும்

உமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு !?!



17 கருத்துகள்:

  1. மாற்கு 8: 27-30வரை வசித்தாலே புறியும் இயேசு இறைவன் என்று பேதுருவுக்கு தெறிந்த போதிலும் இயேசு தம்மைக்குறித்து ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு கட்டளையிட்டார்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல சமாளிப்பு!

    மனித உருவில் வந்த கடவுளான இயேசு கிறிஸ்து தன்னை கடவுள் என்று பிரகடனப்படுத்தி கொள்ள ஏன் இவ்வளவு தயங்க வேண்டும்.தன்னை யாரென்று நேரடியாக சொல்லகூட திராணியற்றவரா கடவுள் & ஏன் கடவுளின் தன்மையை கொச்சை படுத்துகிறீர்கள்.

    மனிதனுக்குள்ள பலஹீனத்தை கடவுளுக்கு APPLY பண்ணுவது அறிவீனம்.

    சொல்லாத ஒன்றை சொன்னார் என்று திரித்து, பொய்யை பரப்பி, வழி கெட்டு, மற்றவர்களையும் வழி கெடுக்கிறீர்கள்.

    Regards,
    Ameer.

    பதிலளிநீக்கு
  3. சகோதரர் அமீர் அவர்களே,

    ஒருவர் கடவுளாக இருந்தாலும், அவர் தன்னை கடவுள் என்ற ஆதாரத்தைக் காட்டாமல், நான் தான் இறைவன் என்று தினமும் ஆயிரம் முறை சொன்னாலும், தினமும் கடைத் தெருவிற்கு வந்து, குய்யோ முறையோ என்று முறையிட்டாலும் என்ன உபயோகம் சொல்லுங்கள். யாராவது நம்புவார்களா?

    இதைத் தான் உங்கள் முஹம்மது செய்தார், தான் ஒரு தீர்க்கதரிசி என்பதை நிருபிக்காமல், எல்லாரிடமும் வந்து நான் தான் இறைவன் அனுப்பிய நபி என்றுச் சொன்னபோது, எல்லாரும் நம்பவில்லை, அற்புதங்கள் எங்கே, அடையாளங்கள் எங்கே நிருபனங்களே எங்கே என்று கேட்டனர். உண்மையாகவே அவரை இறைவன் அனுப்பியிருந்தால், முஹம்மது மூலமாக அற்புதங்கள் செய்யச் செய்து, அவர் தன்னை நிருபித்து இருப்பார். ஆனால், முஹம்மது ஒரு கள்ள தீர்க்கதரிசி எனவே, அவரால் ஒரு அற்புதமும் செய்யவில்லை.

    இயேசு ஒரு அற்புதமும் செய்யாமல் நான் தான் இறைவன் என்னை நம்புங்கள் என்றுச் சொல்லியிருந்தால், யார் நம்பியிருப்பார்கள். என்னுடையை அடுத்த கட்டுரையில் இன்னும் அதிக விவரங்களோடு பீஜே அவர்களுக்கு இதே தலைப்பில் பதிலை எழுதிக்கொண்டு இருக்கிறேன். அதை படித்துப்பாருங்கள்.

    உலகத்தில் ஆயிரம் பேர் வருவார்கள், நான் தான் இறைவன் என்பார்கள், நபி என்பார்கள். எங்கே ஆதாரம் என்றுச் சொன்னால், கேள்வி கேட்காமல் நம்பு என்பார்கள். இவர்களை நீங்கள் நம்புவீர்களா?

    நம் நாட்டில், ஒரு தெருவிற்கு ஒரு STD கடைப்போல‌, அனேக சாமியார்கள், ஆசிரமங்கள் உள்ளன. பெரும்பான்மையாக எல்லாரும் நான் தான் இறைவனின் அவதாரம் என்றுச் சொல்கிறார்கள், அவர்களை நம்புகிறீர்களா? உதாரணத்திற்கு, கல்கிபவனான் என்ற நபரைச் சொல்லலாம். அவர் தன்னை கடவுள் என்றுச் சொல்கிறாரே அவரை நீங்கள் நம்பலாம் அல்லவா?

    ஆக, வார்த்தைகளில் மட்டுமல்ல, செயல்களிலும் இறைவனின் செயல்பாடுகள் வெளிப்படவேண்டும்.

    தன்னை கடவுள் என்றுச் சொல்லக்கூடிய நபரிடம் மனிதன் குறைந்தபட்சம் எதிர்ப்பார்ப்பது "இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதங்களாகும்". இவைகள் குறைந்தபட்சம் தான், அதன் பிறகு அந்த நபரின் நடத்தைகள், வாழ்க்கை முறை,கோட்பாடுகள் நல்லதாக இருக்கவேண்டும். முஹம்மதுவை அப்படியே நாம் இன்று பின்பற்றினால், தடா சட்டத்தில், பெண்களை கற்பழித்த சட்டத்தில் சிறைச்சாலையில் போட்டுவிடுவார்கள்.

    எனவே, அற்புதமும் செய்யாமல், நல்ல வாழ்க்கையையும் வாழ்ந்துகாட்டாமல் இருந்த முஹம்மதுவை எந்த காரணத்தைக் கொண்டு நீங்கள், "இறைவன் அனுப்பிய நபி" என்று நம்புகிறீர்கள்.


    இது சுருக்கம் தான், இதைப் பற்றி அமீர் அவர்கள் எழுதினால் மேலும் அதிக விவரங்களை எழுதுவேன்.

    பதிலளிநீக்கு
  4. நண்பரே,

    என்னுடைய நேரடியான கேள்வி தன்னை கடவுள் என்று சொல்லிக்கொள்வதில் ஏன் இந்த தயக்கம்? ஆரம்ப காலத்தில் சொல்லாவிடினும் தன்னுடைய மறைவுக்கு முன்பாகவாவது சொல்லியிருக்கலாம் அல்லவா? பைபிளை படிக்கும் எந்த ஒரு பொதுவான மனிதனும் இயேசுவை குறித்து ஒரு குறிப்பிட்ட முடிவுக்கு வர இயலாது, அதுவும் கடவுள் என்ற முடிவுக்கு வருவது மிகவும் கடினம்.

    கடவுள் தன்னை கடவுள் என்று சொல்லிக்கொள்ள என்ன தயக்கம், ஏன் பயம்?

    Ameer.

    பதிலளிநீக்கு
  5. மாற்கு 8: 27-30வசனத்தை வாசித்தாலே புறியும் ஏன்று சொன்னது உங்களை வாசிக்க சொன்னனே அல்லாமல் சமாளிக்க சொல்லவில்லை அந்த வசனத்தின் விறிவாக்கம் இந்த உலகத்தில் வாழம் ஓவ்வறு மனிதனும் தன் சுயவிறுப்பபடியும் தன் சுய அறிவின்படியும் கட்டாயம் இல்லாமல் தன் தன் விறுப்படி உன்மையாண இறைவணை அறிந்துகொள்ள விறும்புகிறார் அவ்வளவெ.

    (மனிதனுக்குள்ள பலஹீனத்தை கடவுளுக்கு APPLY பண்ணுவது அறிவீனம், சொல்லாத ஒன்றை சொன்னார் என்று திரித்து, பொய்யை பரப்பி, வழி கெட்டு, மற்றவர்களையும் வழி கெடுக்கிறீர்கள்)

    1. top 10 scientiest christian

    2. india keral top 1 education christian country world level america

    நாங்கள் அறிவுடன் தான் இறுக்கிறோம் நீங்கள் குன்டுவைப்பதும், கொலைசெய்வதும், ஏங்கள் மதத்தில் மாறினால் பல பென்களை மனக்கலாம் ஏன்று குறி வாலிபர்களுக்கு அசைவார்த்தை குறி வளி கெடுப்பது
    நாங்களா இல்லை நீங்களா ஏன்று உலக மக்கள் அறிந்துகொள்வார்கள்.

    பதிலளிநீக்கு
  6. உங்கள் நெசன்18 மார்ச், 2010 அன்று 7:41 PM

    மக்கள் தங்கள் விறுப்பபடி மதம்மாறுவதற்க்கு ஓரு நல்வளி அன்றே இயேசு குறிசென்றுள்ளார். அதற்க்கு போய்
    1. தயக்கம்
    2. திராணியற்றவர்
    3. கொச்சை படுத்துகிறீர்கள்
    4. பலஹீனம்
    5. அறிவீனம் ஏன்று சொல்லி முகமது தனது பாலியல் இச்சைமுலம் கோன்டுவந்த இஸ்லாமியமதத்தை கப்பாற்ற அலைகிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  7. நண்பர் அமீர் அவர்களுக்கு,


    உங்களின் கேள்விக்கு பதில் இந்த இரண்டாம் பாகத்தில் உள்ளது, படிக்கவும், பின்னூட்டமிடவும், நான் பதிலைத் தருகிறேன்.

    பீஜே அவர்களுக்கு பதில் - 2: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை

    நற்செய்தி நூல்களில் இயேசுவின் இறைத்தன்மை - 1



    Umar

    பதிலளிநீக்கு
  8. என்னுடைய நேரடியான கேள்வி தன்னை கடவுள் என்று சொல்லிக்கொள்வதில் ஏன் இந்த தயக்கம்?

    மத்தேயு 26 62-66வரைவாசிக்கவும்.

    62 அப்பொழுது, பிரதான ஆசாரியன் எழுந்திருந்து, அவரை நோக்கி: இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சாட்சிசொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்றான்.

    63 இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான்.

    64 அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனுஷகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள் மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

    65 அப்பொழுது பிரதான ஆசாரியன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இவன் தேவதூஷணம் சொன்னான்; இனிச்சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ, இவன் தூஷணத்தை இப்பொழுது கேட்டீர்களே.

    66 உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்று கேட்டான். அதற்கு அவர்கள்: மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றார்கள்.

    இப்போழதாவது புரிகிறதா அமீர் ஏசுபயப்படவில்லை ஏண்று.

    பதிலளிநீக்கு
  9. சகோதரர் ஷாபு அவர்களே, சரியான வசனத்தை குறிப்பிட்டு உள்ளீர்கள்.

    பீஜே அவர்கள் ஏதாவது பதிலை கொடுப்பாரானால், நற்செய்தி நூல்களில் இயேசுவின் இறைத்தன்மை இரண்டாம் பாகத்தை எழுதலாம் என்று உள்ளேன். இது போல அனேக வசனங்கள் உண்டு.

    யார் யாரிடம் எப்படி பேச வேண்டும், எதை பேச வேண்டும் என்று இயேசுவிற்கு நன்றாகத் தெரியும் என்ற விவரம் இஸ்லாமியர்களுக்குத் தெரியாது, மட்டுமல்ல, அவர்கள் சுயமாக இயேசுவின் வாழ்க்கையை படித்து எழுதமாட்டார்கள்.

    Umar

    பதிலளிநீக்கு
  10. நண்பர் சாபு அவர்களே,

    தாங்கள் குறிப்பிட்டுள்ள வசனம் 63-இல் தேவகுமாரனா? என்று கேட்ட கேள்விக்கு 64-இல் இயேசு மனுஷ குமாரன் என்று பதில் அளிக்கிறார். பிறகு எப்படி அவரை கடவுள் என்று நிரூபிக்க நீங்கள் அந்த வசனத்தை பயன் படுத்துகின்றீர்கள்?

    இப்படிதான் பைபிள் முழுவதும் முரண்பாடுகள்,என்பதற்கு நீங்கள் காட்டியுள்ள வசனமும் ஒரு சாட்சி.

    Ameer.

    பதிலளிநீக்கு
  11. அன்பு சகோதரர் உமர் அவர்களே, தாங்கள் இன்னும் பல கட்டுரைகளை பதித்து இருளில் வாழம் இஸ்லாமிய மக்களை வேளிச்சத்திற்க்கு கோன்டு
    வர, உங்களுக்கு நல்ல அறோக்கியத்தைதர, நல்ல அயுசை தர இறைவனை பிராத்திக்கிரேன்.

    பதிலளிநீக்கு
  12. //Ameer said:

    தாங்கள் குறிப்பிட்டுள்ள வசனம் 63-இல் தேவகுமாரனா? என்று கேட்ட கேள்விக்கு 64-இல் இயேசு மனுஷ குமாரன் என்று பதில் அளிக்கிறார். பிறகு எப்படி அவரை கடவுள் என்று நிரூபிக்க நீங்கள் அந்த வசனத்தை பயன் படுத்துகின்றீர்கள்?

    இப்படிதான் பைபிள் முழுவதும் முரண்பாடுகள்,என்பதற்கு நீங்கள் காட்டியுள்ள வசனமும் ஒரு சாட்சி. \
    //

    இயேசு மனிதனாக வந்ததால் மனுஷ குமாரன் என்றும், அவர் இறைவனாக இருப்பதால் தேவகுமாரன் என்றும் பயன்படுத்தப்படுகிறது.

    நீங்கள் கண்டுபிடித்த கண்டுபிடிப்பில், 64ம் வசனத்தில்,

    அந்த மனுஷகுமாரன் (இயேசு) சொல்கிறார்: "அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்;". இதன் பொருள் என்ன?

    நீ தேவகுமாரனாகிய கிறிஸ்து தானா? என்ற கேள்விக்கு, நீர் சொன்னபடிதான் என்று இயேசு பதில் கொடுத்துள்ளார், அதாவது நான் தான் தேவகுமாரனாகிய கிறிஸ்து என்றுச் சொல்லிவிட்டு, இன்னும் ஒரு படி மேலே சென்று அவர்கள் கேட்காத ஒரு விவரத்தைச் சொல்லியுள்ளார். அதாவது மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலது பக்கத்தில் சிங்காசனத்தில் உட்கார்ந்து இருப்பதையும், வானங்களின் மேல் வருவதையும் காண்பீர்கள் என்றார்.

    ஆக, அமீர் அவர்களே, பைபிளிடம் விளையாடவேண்டாம், அது கள்ள தீர்க்கதரிசி முஹம்மதுவின் சொந்த வார்த்தைகளாகிய குர்‍ஆன் அல்ல.

    ===============

    63 இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான்.

    கேள்விக்கான முதல் பதில் :64 அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்;

    அவர்கள் கேட்காத கேள்விக்கான பதில்: அன்றியும், மனுஷகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள் மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

    =============
    அடுத்து என்ன நடந்தது..? ஆம் நான் தேவகுமாரனாகிய கிறிஸ்து தான் என்று பதிலையும் சொல்லிவிட்டு, இன்னும் அதிகபடியாக, இறைவனின் பக்கத்தில் உட்கார்ந்து இருப்பேன், நான் மேகங்கள் மேல் வருவேன் என்றுச் சொன்னதை, அந்த யூதர்கள் கேட்டு, இனி நமக்கு அதிக ஆதாரங்கள் தேவையில்லையே , இவன் தேவதூஷணம் ( தன்னை இறைவன் என்று )சொன்னானே என்று சொல்லியுள்ளார்கள்.

    65 அப்பொழுது பிரதான ஆசாரியன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இவன் தேவதூஷணம் சொன்னான்; இனிச்சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ, இவன் தூஷணத்தை இப்பொழுது கேட்டீர்களே.

    தன்னை மனுஷகுமாரன் என்றுச் சொன்னது மனித தன்மையை வெளிப்படுத்தும் இறைத்தன்மையை வெளிப்படுத்தாது என்று நினைத்தால், ஏன் யூதர்கள் இவன் தேவதூஷணம் சொன்னான் என்றுச் சொன்னார்கள். ?

    அமீர் அவர்களே, இப்போது புரிந்ததா? இன்னும் விளக்கவேண்டுமா....

    குர்‍ஆன் படிப்பதைப்போல, பைபிள் வசனங்களை படிக்காமல், நுனிப்புல் மேயாமல், வார்த்தைக்கு வார்த்தை அர்தத்தை புரிந்தவர்களாக படிக்கவும்.

    Umar

    பதிலளிநீக்கு
  13. பாசமிக்க நம்பர் அமீர் அவர்களே:
    உங்களுக்கு இன்னும் ஏதாவது பைபிள் பற்றி அறிய சன்டேகிளாஸ் ஏடுக்கவேன்டும் ஏன்ரு நினைக்கிறேன். தயவு சேய்து அருகாமையில் உள்ள கிருத்துவ சபைக்கு சேல்லவும். அல்லது சகோதரர் உமர் அவர்களிடம் கேட்கவும் தங்கள் கேள்விக்கு சகோதரர் உமர் அவர்களே சரியான பதில் அளித்துள்ளார். இன்னும் இதற்க்கு எனது பின்னோட்டம் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
    அனாலும் தாங்களின் தோடர் அன்பு தோல்லையின் காரனமாக இதோ இன்னோறு வசனம்.

    மத்தேயு 4: 5-7வரை

    5 அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி:

    6 நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.

    7 அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.

    இந்த வசனமாவது தாங்களுக்கு இயேசு தேவனுடைய குமாரன் என்று தேளிவாகிறுக்கும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. நண்பர் உமர் அவர்களே பைபிளின் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் பார்க்கும்போதுதான் தலை சுற்றுகிறது,
    இயேசுவை பார்த்து வைக்கப்படும் கேள்வி தேவ குமாரனா? அளிக்கும் பதில் மனித குமாரன்! இதைக்கூட புரிய வைக்க உங்களை போன்ற ஆசாமிகளின் உதவி பைபிளுக்கு தேவைப்படுவதை பார்த்தால், பைபிளின் பரிதாபகரமான நிலையை உணர முடிகிறது.

    இப்படி அடுக்கி கொண்டே போகலாம், உங்களுடைய பைபிளை பற்றி.

    நுனி புல் மேயவில்லை நண்பரே உங்களுடைய பைபிளை முழுவதுமாக படித்து விட்டுதான் விமரிசனம் செய்கிறோம்.

    Ameer.

    பதிலளிநீக்கு
  15. இசுலாம்பற்றி அவர்களுக்கே தெரியாது

    பதிலளிநீக்கு
  16. முஹம்மது என்பவர் நபி அன்று அவர் ஒரு காம வெறி கொண்ட மனிதன் அவர் தனது 52 ஆவது வயதில் 9 வயதே ஆன ஒரு சிறுமியை மணம்புரிந்துள்ளார் அதுமட்டுமல்லாமல் அவர் எழுதியதாக சொல்லப்படும் குர் ஆன் தற்சமயம் முஸ்லிம் சகோதரர்களிடம் இருப்பது உண்மையான மூலம் அன்று மூலமானது முஹம்மது மறித்து சில நாட்களில் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டு அதற்கு பதிலாக காலிப்உதுமான் உண்டாக்கிய நகல் உருவாக்கப்பட்டுள்ளது தற்பொழுது முஸ்லிம் பிரதர் கரங்களில் உள்ளது டுப்ளிகேட் ஆதாரம் புஹாரி வோல் 6 ப 479

    பதிலளிநீக்கு
  17. இயேசு இறைவன் என்று யோவான் 13 ; 14 ஆண்டவரும் போதகருமாகிய நானே .... இதற்க்கு மேல் என்ன வேண்டும்?

    பதிலளிநீக்கு