Wednesday, July 8, 2009

அல்-ஜன்னத்திற்கு "யூதன்" தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்

ல்-ஜன்னத்திற்கு "யூதன்" தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்

அல் ஜன்னத்தின்


"யூதர்கள் ஜாக்கிரதை" என்ற எச்சரிப்பிற்கு ஒரு எச்சரிக்கை


முன்னுரை:



எனக்கு ஒரு நண்பர் மார்ச் மாத அல்ஜன்னத் இஸ்லாமிய பத்திரிக்கையின் 17ம் பக்கத்தை ஸ்கான் செய்து படமாக அனுப்பினார். இந்த 17ம் பக்கத்தில் "யூதர்கள் ஜாக்கிரதை" என்ற தலைப்பில், நான்கு வலைத்தளங்களின் பெயர்களை குறிப்பிட்டு "இத்தளங்களை யூதர்கள் நடத்துகிறார்கள், இஸ்லாமுக்கு எதிரான பல விவரங்களை அவர்கள் பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்" என்று எழுதியிருந்தார்கள், மற்றும் யூதர்களை வன்மையாக கண்டிக்கிறோம் என்று எழுதியிருந்தார்கள். யூதர்கள் பற்றி இஸ்லாமியர்கள் எழுதியிருந்தால் எழுதட்டும் என்று விட்டுவிடலாம், ஆனால், அவர்கள் குறிப்பிட்ட நான்கு தளங்களில் ஒரு தளம் "ஆன்சரிங் இஸ்லாம்" தளமாகும். ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் தமிழ் பிரிவில் "தமிழ் பேசும் கிறிஸ்தவர்களாகிய நாங்கள் ஒருசிலராக சேர்ந்து" கட்டுரைகளை தமிழாக்கம் செய்து பதித்துக்கொண்டு இருக்கிறோம்.


ஆன்சரிங் இஸ்லாம் தளம், யூதர்களால் நடத்தப்படும் தளம் என்று அல் ஜன்னத் இஸ்லாமிய பத்திரிக்கை சொன்னதால், அவர்களுக்கு பதில் அளிக்கவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இந்த கட்டுரையில் இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டிற்கு என் பதிலையும், அதே நேரத்தில், அவர் குறிப்பிட்ட இதர தளங்கள் பற்றி ஒரு சில வரிகளையும் எழுதலாம் என்று எண்ணுகின்றேன், அதாவது மக்கள் படிக்கும் பத்திரிக்கையில் ஒரு விவரத்தைச் சொல்லும் போது, குறைந்த பட்சம் பட்டியலிடும் அத்தளங்களை ஒரு முறையாவது பார்த்துவிட்டு எழுதியிருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். இக்கட்டுரையில் அல் ஜன்னத் பத்திரிக்கை செய்த வேடிக்கையை தந்திரத்தை உங்களுக்கு காட்ட விரும்புகிறேன்.


இப்பொழுது, அல் ஜன்னத் பத்திரிக்கை 17ம் பக்கத்தில் என்ன எழுதியிருக்கிறது என்று படியுங்கள்.



யூதர்கள் ஜாக்கிரதை




யூதர்கள் அன்று முதல் இன்றுவரை மனித சமூகத்தில் ஒழுக்கவீனத்தைப் பரப்புவதிலும், மானக்கேடான விஷயங்களைச் செய்யத் தூண்டுவதிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். பொய்யையும், பித்தலாட்டங்களையுமே தங்கள் மூலதனமாகப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தின் மீது பொய் தகவல்களையுப் பரப்புவதில் கை தேர்ந்தவர்கள். சமீபகாலமாக தங்களுடைய பொய் தகவல்களைப் பரப்புவதற்கு இணைய தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது ஒரு சில வலைத் தளங்களை இஸ்லாமியப் பெயர்களிலேயே துவங்கி அதன் வாயிலாக இஸ்லாத்தை அழித்துவிடலாமெனவும் இஸ்லாமிய வளர்ச்சியைத் தடுத்துவிடலாம் எனவும் கருதுகின்றனர். எனவே இது விஷயத்தில் முஸ்லிம்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.



w.w.w.  answering  islam.  org,      www.  about islam. com



w.w.w. The quran. com,     w.w.w. allah



இந்த முகவரித் தளங்களில் வருகின்ற எந்தச் செய்தியானாலும் அதை அப்படியே நம்பிவிடக்கூடாது. இதில் நிறைய தகவல்கள் இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராகப் பரப்பப்படுகின்றன. முஸ்லிம்கள் இதையெல்லாம் நம்பி ஏமாந்துவிடாமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.



இஸ்லாத்தின் பெயரைப் பயன்படுத்தி இதுபோன்ற தில்லு முல்லுகளைச் செய்துவரும் யூத சக்திகளை வன்மையாகக் கண்டிக்கவேண்டும்.



Source: அல் ஜன்னத் இஸ்லாமிய மாத இதழ் - மார்ச் 2009, பக்கம் 17
emphasis mine


ஜன்னத் இஸ்லாமிய மாத இதழ் - மார்ச் 2009, பக்கம் 17




1. முதலாவதாக‌, யூதர்கள் மீது குற்றச்சாட்டுகளை குவிக்கிறது -அல் ஜன்னத் பத்திரிக்கை:


அல் ஜன்னத் பத்திரிக்கையின் கீழ்கண்ட தகவலுக்கு வேறு ஒரு கட்டுரையில் விவரிக்கலாம் என்று விரும்புகிறேன், ஆகையால், இந்த கட்டுரையில், "ஆன்சரிங் இஸ்லாம் தளம்" பற்றிய விவரத்திற்கு மட்டுமே பதிலை அளிக்கிறேன்.



அல் ஜன்னத் பத்திரிக்கை எழுதியது:



யூதர்கள் அன்று முதல் இன்றுவரை மனித சமூகத்தில் ஒழுக்கவீனத்தைப் பரப்புவதிலும், மானக்கேடான விஷயங்களைச் செய்யத் தூண்டுவதிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். பொய்யையும், பித்தலாட்டங்களையுமே தங்கள் மூலதனமாகப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தின் மீது பொய் தகவல்களையுப் பரப்புவதில் கை தேர்ந்தவர்கள்.



2. முஸ்லீம்களுக்கு யூதன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்


இஸ்லாமிய உலகில் எது நடந்தாலும் சரி, அதற்கு யூதன் தான் காரணம், இது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. இஸ்லாமை யாராவது விமர்சித்தால் உடனே, அதன் பின்னால் யூதன் இருப்பான், முஸ்லீம்களுக்கு எங்கும் யூதன் எதிலும் யூதன், தூணிலும் யூதன் துரும்பிலும் யூதன் இருப்பான்.


இந்த நிலை தொடருமானால், ஒரு இஸ்லாமியரின் வீட்டில் பிரியாணில் இருக்கும் கறி வேகவிலையானாலும் சரி, அதற்கு காரணம் யூதன் தான் என்று முஸ்லீம்கள் சொன்னாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. (இதில் சில விஞ்ஞான விவரங்களையும் இஸ்லாமியர்கள் தருவார்கள், அதாவது இந்தியாவில் வளர்க்கும் ஆடுகளுக்கு தரும் மருந்துக்கள், ஊசிகள் இஸ்ரேல் நாட்டிலிருந்து இறக்குமதியாகின்றன, அதனால் தான் கறி வேக வில்லை என்று ஆவேசமாக சொல்லும் இஸ்லாமியர்களும் இருப்பார்கள்.)


3. ஆன்சரிங் இஸ்லாம் தளம் யூத தளமா?


அல் ஜன்னத் நான்கு தளங்களில் பெயர்களை குறிப்பிட்டு, அவைகள் யுத தளங்கள் என்றுச் சொல்கிறது. அவைகளில் ஆன்சரிங் இஸ்லாம் தளம் பற்றிய விவரத்தை இப்போதுச் சொல்கிறேன்.



அல் ஜன்னத் பத்திரிக்கை எழுதியது:



சமீபகாலமாக தங்களுடைய பொய் தகவல்களைப் பரப்புவதற்கு இணைய தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது ஒரு சில வலைத் தளங்களை இஸ்லாமியப் பெயர்களிலேயே துவங்கி அதன் வாயிலாக இஸ்லாத்தை அழித்துவிடலாமெனவும் இஸ்லாமிய வளர்ச்சியைத் தடுத்துவிடலாம் எனவும் கருதுகின்றனர். எனவே இது விஷயத்தில் முஸ்லிம்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.




w.w.w.  answering  islam.  org,      www.  about islam. com



w.w.w. The quran. com,     w.w.w. allah



நான் அல் ஜன்னத் இஸ்லாமிய பத்திரிக்கையின் ஆசிரியரிடம் கேட்க விரும்புவது:


1) நீங்கள் ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் உள்ள கட்டுரைகளில் ஒரு சில கட்டுரைகளையாவது படித்தீர்களா? குறைந்த பட்சம் தமிழ் பிரிவில் உள்ள கட்டுரைகளையாவது படித்ததுண்டா?


2) அப்படி படித்து இருந்தால், ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் எத்தனை கட்டுரைகள் உங்களுக்கு, இந்த தளம் ஒரு "யூத தளம்" என்ற எண்ணத்தைக் கொடுத்தது? உங்கள் கணிப்பு/நம்பிக்கை சரியாக இருந்தால், கட்டுரைகளின் தொடுப்புக்களை பெயர்களைத் தரமுடியுமா? ஏனென்றால், நான் அந்த தளம் ஒரு கிறிஸ்தவ தளம் என்பதாலேயே ஆங்கில கட்டுரைகளை தமிழில் மொழியாக்கம் செய்து, பதிக்கிறேன். முக்கியமாக கடந்த பல ஆண்டுகளாக நான் அத்தளத்தின் கட்டுரைகளை படித்துக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் சந்தேகம் படும்படி இருக்கின்ற கட்டுரைகளின் பெயர்களை கொடுத்தால், எனக்கு உதவி செய்பவர்களாக இருப்பீர்கள், இதனை செய்யமுடியுமா?


3) அல்லது, இப்படி எதுவுமே படிக்காமல், யாரோ சொன்னார்கள் ஆகையால் நானும் சொல்கிறேன் என்பதாக சொல்கிறீர்களா? ஒரு வேளை யூதனின் பெயரை பயன்படுத்தினால் தான் ஆன்சரிங் இஸ்லாம் கட்டுரைகளை முஸ்லீம்கள் படிக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இப்படி செய்தீர்களோ?



ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் உள்ளன, தமிழில் 50க்கும் அதிகமான கட்டுரைகள் உள்ளன? இவைகளில் எந்தெந்த கட்டுரைகளை யூதர்கள் எழுதினார்கள்/எழுதியிருப்பார்கள் என்று உங்களால் சொல்லமுடியுமா?



4. இஸ்லாமுக்கு பதில் சொல்ல/விமர்சிக்க "யூதன்" தான் வேண்டுமா?


ஒருவர் இஸ்லாமை விமர்சித்தால், இஸ்லாமின் உண்மை முகத்தை உலகம் அறியும் படி எழுதினால், அவன் நிச்சயமாக யூதனாகத் தான் இருக்க வேண்டும் என்ற குருட்டு நம்பிக்கையா அல் ஜன்னத்திற்கு?



ஒருவன் யூதனாக இருக்கட்டும், கிறிஸ்தவனாக இருக்கட்டும், இந்துவாக இருக்கட்டும் அல்லது நாத்தீகனாக இருக்கட்டும், ஒரு மதம் அல்லது மார்க்கம் என்றால், கேள்வி கேட்கத்தான் செய்வான்? (இன்னும் அந்த மார்க்கத்தை ஸ்தாபித்தவரின் நடத்தையில் ஆபாசமோ அல்லது வன்முறையோ இருந்தால், சொல்லவேண்டியதில்லை கேள்விகளுக்கு பஞ்சமிருக்காது).



உலக நியதிக்கு எதிராகவும், சமுதாயத்தில் மனிதனுக்கு தீமை விளைவிக்கும் சட்டங்களை கொண்டுள்ள இஸ்லாமை விமர்சிக்க ஒரு யூதன் தான் வரவேண்டும் என்பதில்லை, மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும், சிந்திக்கும் திறமையுள்ள ஒவ்வொருவனும் கேள்வி கேட்கலாம், விமர்சிக்கலாம்.



இந்த நிலை இஸ்லாமுக்கு மட்டுமல்ல, கிறிஸ்தவத்திற்கும் பொருந்தும், இந்துத்துவத்திற்கும் பொருந்தும் அவ்வளவு ஏன் நாத்தீகனுக்கும் பொருந்தும். பெற்றோர்கள் நாத்தீகர்களாக இருந்தால், அவர்களின் வளர்ந்த பிள்ளைகளும் நாத்தீகர்களாக இருக்கவேண்டிய அவசியமில்லை, தனக்கு சரி என்று படுகின்ற வழியை மனிதன் பின்பற்றுவான்.



எனவே, எதற்கெடுத்தாலும் யூதன் யூதன் என்றுச் சொல்வதை விட்டு, நேர்மையானவர்களாக குற்றங்களை முன்வைத்தால், உலகம் உங்களை நம்பும்.


5. கிறிஸ்தவ போர்வையில் "யூதன்" தளம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன?

 

ஆன்சரிங் இஸ்லாம் யூதர்களால் நடத்தப்படும் தளம் என்று நீங்கள் சொல்வதை ஒரு பேச்சுக்காக ஒப்புக்கொண்டாலும், அதற்கான ஆதாரங்களை நீங்கள் தரவேண்டுமே?


ஆன்சரிங் இஸ்லாம் தளத்தின் கட்டுரைகளை படித்துப்பாருங்கள், எத்தனை கேள்விகள், பதில்கள் மறுப்புக்கள், மற்றும் புதிய ஏற்பாட்டிலிருந்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில்கள் மறுப்புகள், பழைய ஏற்பாட்டிலிருந்து மேசியாவாகிய இயேசுவைக் குறித்த கேள்விகளுக்கு பதில்கள் என்று நூற்றுக்கணக்கான கட்டுரைகள் உள்ளன.


இக்கட்டுரைகளை படிப்பவன் கண்டிப்பாக "இக்கட்டுரைகளை யூதர்கள் தான்" எழுதினார்கள் என்பதை நம்பமாட்டான், ஏனென்றால்,


இஸ்லாமை விமர்சிக்கிறேன் என்பதற்காக ஒரு யூதன் கிறிஸ்தவத்திற்கு ஆதாரவாக நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதி பதிப்பானா?


நீங்கள் நினைப்பதுபோல செய்வதற்கு யூதர்கள் என்ன முட்டாள்கள் என்று நினைத்தீர்களா?


"வருவார் என்று நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் மேசியா இயேசு அல்ல", என்றுச் சொல்லும் யூதன், இயேசு தான் மேசியா (மஸீஹா) என்பதற்காக தன் ஆயிரக்கணக்கான மணித்துளிகளை இதற்காக செலவிடுவானா? பணத்தை செலவிடுவானா?


6. யூதன் யூதனாகவே இஸ்லாமை விமர்சிக்க/மறுப்புக்கள் எழுத அவனுக்கு என்ன தடை?


ஒரு யூதன் யூதனாக இருந்து இஸ்லாமுக்கு பதில்கள் தருவது சுலபம், ஆனால், கிறிஸ்தவ போர்வையில் அவன் பதில்கள் கொடுத்தால், அது மிகவும் கடினம்.


ஏனென்றால், யூதன் யூதனாக இருந்து பதில்கள் அளித்தால், அவன் பழைய ஏற்பாடு அல்லது யூத சட்டங்கள் பற்றிய கேள்விகளுக்கு மட்டும் பதில்களை கொடுத்தால் போதும், ஆனால், அவன் கிறிஸ்தவனாக தன்னை அடையாளம் கட்டிக்கொண்டு பதில்கள் எழுதினால், அவனிடம் கேட்கப்படும் கேள்விகள், பழைய ஏற்பாட்டிலிருந்து மட்டுமல்ல, புதிய ஏற்பாட்டிலிருந்தும் கேட்கப்படும்.


ஆன்சரிங் இஸ்லாம் ஆங்கில தளத்தில் சென்று பாருங்கள், எத்தனை பதில்கள் மறுப்புக் கட்டுரைகள் புதிய ஏற்பாட்டைப் பற்றியும், இயேசுவின் சீடர்கள், அப்போஸ்தலர் பவுல் போன்றவர்கள் பற்றியும் கொடுக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு விளங்கும்.


யூதன் யூதனாக தன்னை காட்டிகொண்டால் இந்த புதிய ஏற்பாட்டிலிருந்து பதில்களை கொடுக்கவேண்டிய கடமை இருக்காதல்லவா? அல் ஜன்னத் ஆசிரியர்களே, இப்போதாவது சிறிது புரிகின்றதா? உங்கள் கற்பனை உலகத்திலிருந்து வெளியே வந்து சிந்துத்துப் பாருங்கள், உண்மைகள் விளங்கும்.


7. கிறிஸ்தவர்கள் ஏன் இஸ்லாமை விமர்சிக்கக்கூடாது?


இதுவரை, ஆன்சரிங் இஸ்லாம் தளம் யூதர்களால் நடத்தப்படும் தளம் அல்ல, இதற்கு அவசியமே யூதர்களுக்கு இல்லை என்பதை விளக்கினேன், இப்போது, ஆன்சரிங் இஸ்லாம் தளம் ஏன் கிறிஸ்தவர்களால் நடத்தப்படக்கூடாது என்பதை விளக்குகிறேன்.


7.1 யூதர்களை விட இஸ்லாமை விமர்சிக்க கிறிஸ்தவர்களுக்கு உரிமை அதிகம்:


யூதர்களை விட கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாமை கேள்வி கேட்க, முஹம்மது பற்றிய உண்மைகளை வெளிக்கொணர, விமர்சிக்க உரிமை உண்டு என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், முஹம்மது இயேசுவை நபி என்றுச் சொன்னார், இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை மறுத்தார், குர்‍ஆனில் எழுதியும் வைத்துவிட்டார், கிறிஸ்தவத்தை விமர்சித்தார். ஆக, இஸ்லாமுக்கு நாங்கள் பதில் சொல்லவேண்டாமா? உங்களுக்கு பதில் சொல்ல கிறிஸ்தவர்களுக்கு அதிக விவரங்கள் உண்டு, அதே போல, இஸ்லாமின் தரத்தை சரிபார்க்க, தராசில் நிறுத்தி தரத்தை பரிசோதிக்க கிறிஸ்தவர்களுக்கு உரிமை உண்டு.


தன்னைப் பற்றி பைபிளில் உள்ளது என்று முஹம்மது கூறினார், அவர் சொல்வது உண்மையா இல்லையா என்று நாங்கள் சோதிக்கவேண்டாமா? ஆராய்ச்சி செய்யவேண்டாமா? முஹம்மது உண்மையிலேயே ஒரு நபி தானா என்று சோதிக்கவேண்டாமா? பைபிளை விமர்சிக்க குர்‍ஆனுக்கும் முஹம்மதுவிற்கும் தகுதி உள்ளதா என்று சோதித்துபார்க்க வேண்டாமா? இஸ்லாம் சொல்வதையெல்லாம் அப்படியே அங்கீகரிக்கவேண்டிய அவசியம் இல்லையே!


இஸ்லாமியர்கள் கேள்விகளை கேட்டால், யூதர்களுக்கு வெறும் பழைய ஏற்பாடு பற்றிய கேள்விகளுக்கு மட்டும் பதில்கள் கொடுத்தால் போதும், ஆனால், நாங்கள் பழைய மற்றும் புதிய ஏற்பாடு பற்றிய கேள்விகளுக்கு பதில்களை தரவேண்டும். "பைபிள் கூறும் நபிகள் வரிசையில் நான் கடைசியானவன்" என்று முஹம்மது சொன்னதாலும், பைபிளின் மீது "இஸ்லாம்" ஆதாரப்பட்டு இருப்பதாலும், எங்களுக்கு இஸ்லாமை கேள்வி கேட்க அதிகாரம் உண்டு.


தங்கத்தை சுத்தம் செய்ய நெருப்பில் சுடவேண்டும், அப்படி செய்யும் போது, அசுத்தம் நீங்கும், அப்போது தான் சுத்தப்பொன்னாக அது மாறும், எனவே, இஸ்லாமை நாங்கள் நெருப்பில் போட்டு சுடுகிறோம், உண்மையிலேயே, உங்கள் நபி ஒரு உண்மை நபியாக இருந்தால், சுத்த பொன்னாக மாறுவார். நெருப்பிலே போட்டது தங்கம் என்று நினைத்து கரித்துண்டை போட்டால், அது எரிந்து சாம்பலாகி விடும். அக்கினி எல்லாவற்றையும் சோதித்தறியும், உண்மை கண்டிப்பாக வெளியே வரும்.


ஆனால், இஸ்லாமை விமர்சிக்கும் போது, அதற்கு எதிராக கேள்விகள் கேட்கப்படும் போது, முஹம்மதுவின் நடத்தையை வெளிச்சத்தில் வைத்து சரி பார்க்கும் போது, இஸ்லாமியர்களுக்கு அதிகமாக கோபம் வருகிறது? ஏன் கோபம் வரவேண்டும்? தங்கமாக இருந்தால், இன்னும் சுத்தமாகுமே, இஸ்லாம் ஒரு தங்கமல்ல அது ஒரு கரித்துண்டு என்ற நம்பிக்கை உங்களுக்கு அதிகமோ?


எனவே, நான் உங்களை கேட்டுகொள்கிறேன், ஆன்சரிங் இஸ்லாம் ஒரு யூத தளம் என்ற பொய்யை சொல்வதை விட்டுவிடுங்கள், அல்லது அதற்கான ஆதாரங்களைத் தாருங்கள்?


மருந்து மாத்திரைகளை போல "பொய்கள் ஒரு கால அவகாச தேதியோடு (Expiry Dates)" தான் வரும் . அந்த மாத்திரையின் காலம் முடிந்துவிட்டால், அந்த மாத்திரை வேலை செய்யாது, மட்டுமல்ல‌ அவைகள் எதிர்விளைவுகளை கொண்டுவரும். அது போல, இஸ்லாமியர்கள் 14 நூற்றாண்டுகளாக சொல்லிக்கொண்டு வந்த பொய்களுக்கு முடிவு தேதி (Expiry Date) நெருங்கிவிட்டது. இன்னும் அந்த மாத்திரைகளை பயன்படுத்தினால், பயன்படுத்துபவருக்கு பக்க விளைவுகளை கொடுக்கும், 14 நூற்றாண்டுகளாக குணமாக்கிய அதே மருந்து இப்போது விஷமாக மாறும். பொய்களை அனேக நாட்கள் வாழவைக்கவும் முடியாது, அதே போல, உண்மைகளை அனேக நாட்கள் மண்ணுக்குள் புதைத்து வைத்திருக்கவும் முடியாது.


ஆக, ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும், இஸ்லாமை கேள்வி கேட்கும் உரிமை உண்டு, இது எங்கள் பிறப்புரிமை. இதே போல மற்றவர்களுக்கும் கிறிஸ்தவத்தை, இதர மார்க்கங்களை கேள்வி கேட்க, விமர்சிக்க உரிமை உண்டு.


இனி அல் ஜன்னத் கொடுத்த இதர தளங்கள் யூத தளங்களா என்று பார்ப்போம்.



அபவுட் இஸ்லாம் டாட் காம் தளம்: (www.aboutislam.com)


இந்த தளத்தின் பெயரை கொடுத்துப் பார்த்தால், அது "http://www.perfumesofarabia.com/" என்ற தளத்தைக் காட்டுகிறது. அதாவது, அரேபிய பெண்களின் வாசனை திரவியங்கள் (சென்ட்) பற்றிய தளம் வருகிறது (Redirected to perfumeofarabia site). இந்த தளம் ஒரு வியாபார தளமாக வாசனை திரவியங்களை விற்கும் தளமாக‌ இருக்கிறது.


ஒரு வேளை, இந்த தளம் முதலாவது ஒரு யூதர்களின் தளமாக (அல் ஜன்னத் ஆராய்ச்சி செய்து சொன்னது போல) இருந்து, பிறகு அவர்கள் தங்கள் டொமைனை (domain) விட்டுவிட்டு தங்கள் தள கட்டுரைகளை நீக்கிவிட்டு சென்று இருப்பார்கள், என்ற சந்தேகத்தில் வெப் ஆர்கவ்வில் (Web Archive) சென்று பார்த்தேன்.


இந்த பக்கத்தை சொடுக்கி பார்க்கவும்: http://web.archive.org/web/*/http://www.aboutislam.com


இந்த தொடுப்பில், "About Islam" தளம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது, எத்தனை முறை கட்டுரைகள் பதிக்கப்பட்டது போன்ற விவரங்களை காணலாம்.


இதன் படி "About Islam" ஒரு கிறிஸ்தவ தளமாக ஜனவரி மாதம் 1999ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அனேக கிறிஸ்தவ இஸ்லாமிய கட்டுரைகள் பதிக்கப்பட்டுள்ளது.


பார்க்கவும்: http://web.archive.org/web/19990117021402/http://www.aboutislam.com/


பல ஆண்டுகளுக்கு பிறகு, கிறிஸ்தவ தளமாக இருந்த இந்த தளம், இஸ்லாமிய தளமாக மாறியுள்ளது. இஸ்லாமை தழுவுகிறவர்கள் இந்த தளப்பெயரை வாங்கி தங்கள் தளத்தோடு இணைத்துள்ளார்கள்.


பார்க்கவும்: http://web.archive.org/web/20071023173418/www.convertstoislam.org/


www.convertstoislam.org என்ற தளம் www.aboutislam.com என்ற டொமைனை வாங்கி. பல ஆண்டுகள் பயன்படுத்தி மறுபடியும் விற்றுவிட்டு இருக்கும், இன்று www.aboutislam.com என்ற தளத்தை சொடுக்கினால், நமக்கு அரேபிய பெண்களின் வாசனை தரவியங்கள் என்ற வியாபார தளம் தான் வருகிறது. இவைகள் தான் www.aboutislam.com தளப் பெயரைப் பற்றிய மேலோட்ட விவரங்களாகும், இதனை வெப் ஆர்கவ்வில் சென்று மேலும் அறிந்துக்கொள்ளுங்கள் (http://web.archive.org/web/*/http://www.aboutislam.com).



அல் ஜன்னத் ஆசிரியருக்கு கேள்விகள்:


2009ம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் தேதி, இந்த தளம் www.aboutislam.com பற்றி எச்சரிக்கை செய்தியை உங்கள் பத்திரிக்கையில் பிரசுரிப்பதற்கு முன்பு, நீங்கள் ஒருமுறையாவது இணையத்தில் இந்த தளத்தை சொடுக்கி பார்த்தீர்களா? பார்த்து இருந்தால், இப்படி எழுதியிருக்கமாட்டீர்கள்?


எந்த ஆதாரத்தை வைத்து, இந்த தளம் யூதர்கள் நடத்தும் தளம் என்று எழுதினீர்கள்?


உங்கள் பத்திரிக்கையை படிக்கும் வாசகர்க‌ள் உங்களின் நேர்மையை கவனிக்கட்டும். மற்ற மார்க்க விஷயங்களை எழுதுவதில் இவ்வளவு நேர்மையற்ற விவரங்களை தரும் நீங்கள், உங்கள் இஸ்லாமிய விவரங்களை சொல்வதில் எவ்வளவு விஷயங்களை மறைப்பீர்கள்! இறைவனுக்கே வெளிச்சம்.



அல்லாஹ் டாட் காம் தளம் (www.allah.com)



அடுத்ததாக, நீங்கள் "அல்லாஹ் டாட் காம்" என்ற தளத்தைப் பற்றி எழுதினீர்கள்! இந்த தளமும் யூதர்களின் தளம் என்று எழுதிவிட்டீர்கள். ஆனால், இந்த தளத்தை சொடுக்கிப்பார்த்தால் இது ஒரு "ஷியா முஸ்லீம்களின்" தளம் போல தென்படுகிறது.



இந்த தளத்தின் முகப்புப் பக்கத்திலேயே கீழ் கண்ட வரிகள் கொட்டை எழுத்துக்களில் தென்படுகிறது.



THE FIRST AND LARGEST SITES ON IMAN, ISLAM, IHSAN

இந்த தளத்தை நீங்கள் பார்வையிட்டீர்களா? என்று நான் கேட்க மாட்டேன், ஏனென்றால், இதனால் உபயோகமில்லை.


இந்த தளத்தின் முகப்புப் பக்கத்தை ஒருமுறை பார்வையிட்டால், அனேக இஸ்லாமிய அறிஞர்களின் படங்கள் (அஹமத் தீதத் அவர்கள் உட்பட), இஸ்லாம் பற்றிய கட்டுரைகள், வீடியோக்கள் என்று அனேக தொடுப்புக்கள், புத்தகங்கள், குர்‍ஆன் என்று அனேக விவரங்கள் உள்ளன.


சிந்திக்கும் எந்த மனிதனும் இந்த தளத்தைக் கண்டு, இது யூதர்களின் தளம் என்றுச் சொல்லமாட்டான்.


குறிப்பு: அல் ஜன்னத் குறிப்பிட்ட தளம் www.allah.com இல்லை, அது www.allah.org என்று பதில் சொல்ல அவசரப்படாதீர்கள் இஸ்லாமியர்களே, இந்த அல்லாஹ் டாட் ஓஆர்ஜி தளமும் ஒரு இஸ்லாமிய தளமாகும் என்பதை மனதில் கொள்ளவும்.


இப்போது அடுத்த தளத்திற்குச் செல்வோம்…



த குர்‍ஆன் தளம் (www.thequran.com)



அடுத்ததாக நீங்கள் "த குர்‍ஆன் டாட் காம்" என்ற தளத்தின் பெயரைக் குறிப்பிட்டு, இதுவும் யூதர்களின் தளம் என்று எழுதியிருந்தீர்கள். நான் இந்த தளத்தையும் பார்வையிட்டேன்.


இந்த தளத்தில் ஆங்கிலம் உட்பட அனேக குர்‍ஆன் மொழியாக்கங்கள் தரப்பட்டு இருந்தன (Arabic, Shakir (English), yusufali (English), Pickthal (English), Al-Hilali (English), Spanish, French and Turkish).


இந்த தளத்தில் குர்‍ஆன் பிழைகள் (Quranic Errors), இரத்து செய்யப்பட்ட வசனங்கள் (Abrogated Verses) மற்றும் ஒரே மாதிரியாக அடிக்கடி வரும் வசனங்கள் (Repeated Verses) என்று ஒரு சில பக்கங்கள் இருக்கின்றன.


இந்த தளம் கண்டிப்பாக ஒரு இஸ்லாமிய தளம் இல்லை என்பது மட்டும் நிச்சயம். ஆனால், இந்த தளம் ஒரு கிறிஸ்தவராலோ கூட ஆரம்பிக்கப்பட்டு இருக்கலாம்.


குர்‍ஆனின் பிழைகள் என்ற பக்கத்தில் அனேக புதிய ஏற்பாட்டு வசனங்களை குறிப்பிட்டு விவரங்கள் உள்ளன. எனவே, இந்த தளமும் கிறிஸ்தவ தளமாக இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், யூதர்களின் தளம் என்பதற்கு சரியான ஆதாரம் எதுவும் இல்லை.


ஒரு பேச்சுக்காக இந்த ஒரு தளத்தை மட்டும் யூத தளமாக நாம் கருதினாலும், அல்‍ ஜன்னத் குறிப்பிட்ட நாங்கு தளங்களில் மூன்று தளங்கள் யூதர்களின் தளங்கள் இல்லை என்பது மட்டும் உண்மை.




வெட்டு ஒன்று துண்டு மூன்று - அல் ஜன்னத்தின் யுக்தி வேலை செய்யவில்லை




அல் ஜன்னத் பிரசுரித்த விவரங்களின் உண்மை நிலையை நாம் கண்டோம். சில முஸ்லிம்கள் "ஏதோ தெரியாதவிதமாக நடந்துவிட்டது" என்று அல் ஜன்னத்தின் பொய்யுக்கு சாயம் பூசலாம். ஆனால், பல ஆண்டுகளாக இயங்கும் பத்திரிக்கை, இப்படிப்பட்ட விவரங்களைத் தருவது சரியா? இப்படித் தான் எல்லா விவரங்களும் இருக்குமா?



இதில் இவர்களின் (முக்கியமாக முஸ்லிம்களின்) தந்திரமும் தெரியவரும், அதாவது கிறிஸ்தவ தளத்தையும், ஷியா முஸ்லீம்களின் தளத்தையும் குறிப்பிட்டுவிட்டு, அவைகள் யூதர்களின் தளம் என்ற பொய்யைச் சொன்னால், தமிழ் முஸ்லிம்களை சுலபமாக முட்டாள்களாக்கி விடலாம் என்று கனவு கண்டது, அல் ஜன்னத் பத்திரிக்கை. ஆனால், அது பகல் கனவாக முடிந்துவிட்டது.



எதெற்கெடுத்தாலும் யூதனை இழுத்தால் போது, முஸ்லிம்களுக்கு அப்படியே கண்கள் சிவக்கும், உடலில் சூடு உண்டாகும், அதனால் இந்த தளங்கள் பக்கமும் தலை வைத்து படுக்கமாட்டார்கள். இதனை கருத்தில் கொண்டு தான் அல் ஜன்னத் இந்த புதிய வேஷத்தை போட்டது, ஆனால், என்ன செய்யமுடியும், வேஷம் போட்டால் ஒரு நாள் கலையத்தானே வேண்டும்.



ஷியா இஸ்லாமை எதிர்க்கவேண்டுமானால், நேரடியாகவே எதிர்க்கலாம் அல்லவா? ஏன் இந்த யூத வேஷம் போடவேண்டும்?



அல்லாஹ் டாட் காம் என்ற தளத்தின் முதல் பக்கத்தை பார்த்தலோ போதும், அது ஒரு ஷியா தளம் என்பது தெளிவாக விளங்கும். தமிழ் முஸ்லிம்கள் இந்த தளத்தை பார்வையிடக்கூடாது என்று நீங்கள் விரும்பினால், அதற்காக ஒரு கட்டுரையை தனியாக எழுதவேண்டியது தானே! இந்த குறிப்பிட்ட தளம் ஷிய தளமாகும், அந்த தளத்தை யாரும் பார்வையிடவேண்டாம், என்று முஸ்லீம்களுக்கு நேரடியாகச் சொல்லவேண்டியது தானே! ஷியா கோட்பாட்டிற்கு மறுப்புக்களோ/பதில்களோ எழுதவேண்டியது தானே! அதை விட்டுவிட்டு ஏன் யூதர்களை அழைக்கிறீர்கள்? இஸ்லாமிய அறிஞர்களே, உங்களின் வேஷம் சிறிது சிறிதாக வெட்ட வெளிச்சத்திற்கு வருகிறது, இனியும் உங்கள் தந்திரங்கள் வேலை செய்யாது. எவ்வளவு புத்திசாலித் தனமாக நீங்கள் நடந்துக்கொண்டாலும், பொய்யை அதிக நாட்கள் மறைத்து வைக்க முடியாது, என்பதை சொல்லிகொள்கிறேன்.



அல் ஜன்னத்தும் பொய்யும் பித்தலாட்டமும்



அல் ஜன்னத் கீழ் கண்ட வரிகளை யூதர்களுக்கு சூட்டியது, இப்போது இந்த கட்டுரையை படித்த நீங்கள், இந்த வரிகள் அல் ஜன்னத்திற்கு சரியாக பொருந்துவதைக் காணமுடிகிறதா?


யூதர்கள் பற்றி அல் ஜன்னத் கூறியது



பொய்யையும், பித்தலாட்டங்களையுமே தங்கள் மூலதனமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.



ஆன்சரிங் இஸ்லாம் தளம் ஒரு கிறிஸ்தவ தளம், அதன் கட்டுரைகளை படிக்கக்கூடாது என்பதற்காக அதற்கு ஒரு "யூத சாயம்" பூசி, பொய்யையும் பித்தலாட்டத்தையும் மூலதனமாக அல் ஜன்னத் பத்திரிக்கை செயல்படுகிறது. இதற்கு இந்த கட்டுரையில் தரப்பட்ட விவரங்களே போதும்.



அல் ஜன்னத் பத்திரிக்கைக்கு நான் கூறிக்கொள்வது, நீங்கள் யூதர்க்ளை திட்டுங்கள், சபியுங்கள் என்னவாவது செய்துக்கொண்டு போங்கள், நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது, ஆனால், கிறிஸ்தவ பெயரை பயன்படுத்தி தில்லுமுல்லு செய்தால் பொய்களைச் சொன்னால் மட்டும் சரியான பதில் கண்டிப்பாக தரப்படும்.



நீங்கள் கண்டித்த அதே வரிகளை உங்களுக்குச் சொல்கிறேன், "இஸ்லாத்தின் பெயரைப் பயன்படுத்தி இதுபோன்ற தில்லு முல்லுகளைச் செய்துவரும் அல் ஜன்னத் சக்திகளை வன்மையாகக் கண்டிக்கவேண்டும்".



இதோடு இன்னும் முடியவில்லை, அல் ஜன்னத் கீழ் கண்ட விதமாக எழுதியுள்ளது,



யூதர்கள் அன்று முதல் இன்றுவரை மனித சமூகத்தில் ஒழுக்கவீனத்தைப் பரப்புவதிலும், மானக்கேடான விஷயங்களைச் செய்யத் தூண்டுவதிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.



7ம் நூற்றாண்டிலிருந்து சமுதாயத்திற்கு, உலகிற்கு யாரால் அதிக நன்மைகள் முஸ்லீம்களாலா அல்லது யூதர்களாலா? என்பதைப் பற்றிய தலைப்பை என் சிந்தையில் நிறுத்திக்கொண்டு இப்போதைக்கு விடைபெறுகிறேன்.


Source: http://sites.google.com/site/isakoran/rebuttals/aljannath/aljannathjews1



Monday, July 6, 2009

யார் ஏமாற்றுக்காரர்? Dr. நாயக் அவர்களா? (அ) பின்னூட்டமிட்டவர்களா?

யார் ஏமாற்றுக்காரர்?


Dr. நாயக் அவர்களா? (அ) பின்னூட்டமிட்டவர்களா?



முன்னுரை:


பெயித் பிரீடம் (www.faithfreedom.org) தளத்தில் 2007 ம் ஆண்டு Dr. ஜாகிர் நாயக் அவர்களின் "பல தார மணம் பற்றிய பதிலுக்கு" மறுப்பாக ஒரு கட்டுரை வெளியிடப்பட்டு இருந்தது. நான் இக்கட்டுரையை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிப்பெயர்த்து வெளியிட்டு இருந்தேன்.



தமிழில்: ஆதரவிற்கு ஏமாற்றுதல் ஒரு ஆயுதம்: டாக்டர் ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது


ஆங்கிலத்தில்: Deception as a means for support: Dr. Naik's lies uncovered



[Note: ஏகத்துவம் தளம் ஜாகிர் நாயக் அவர்களின் இந்த பல தார மணம் பற்றிய கட்டுரையை தமிழில் வெளியிட்டுள்ளார்கள்: இஸ்லாத்தில் ஆண்கள் மட்டும் பலதார மணம் செய்து கொள்ள அனுமதிக்கப் பட்டிருப்பது ஏன்?

குறைந்த பட்சம் இவர்களாவது (ஏகத்துவம் தளம்) சரியான விளக்கம் அளிப்பார்கள் அல்லது சரியான புள்ளிவிவரங்களை தருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.]


ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த புள்ளிவிவரங்கள் பொய் என்றுச் சொல்லி பெயித் பிரீடம் இக்கட்டுரை எழுதப்பட்டு இருந்தது, சுருக்கமாக சொல்லவேண்டுமானால், "இஸ்லாமின் பல தார மணத்தை நியாயப்படுத்த ஜாகிர் நாயக் அவர்கள் வேண்டுமென்றே பொய் சொன்னார்" என்று பல ஆதாரங்களோடு இக்கட்டுரை எழுதப்பட்டு இருந்தது.


இந்த தமிழ் கட்டுரைக்கு மூன்று பின்னூட்டங்கள் வந்துள்ளன.


இக்கட்டுரைக்கு பின்னூட்டமிட்டவர்கள் கட்டுரையில் சொல்லப்பட்ட பதில் குறித்து ஜாகிர் நாயக் அவர்களிடம் தெளிவு பெறுவதற்கு பதிலாக, என்னை ஏமாற்றுக்காரன் என்றும், ஜாகிர் நாயக்கிற்கு கெட்டபெயர் கொண்டுவர முயற்சிக்கவேண்டாமென்றும் எழுதியுள்ளார்கள். அதாவது, கொடுத்த ஆதாரங்களை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, தங்கள் இஸ்லாமிய அறிஞர்களின் பொய்யுக்கும், ஏமாற்று வேலைக்கும் இப்படிப்பட்ட இஸ்லாமியர்கள் உதவி செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.


சராசரி இஸ்லாமியர்கள் எப்படி இஸ்லாமிய அறிஞர்களின் பொய்யான விவரங்களுக்கு கேள்வி கேட்காமல் மயங்கியிருக்கிறார்கள் என்பதை இக்கட்டுரையில் காணலாம். இக்கட்டுரைக்கு வந்த மூன்று பின்னூட்டங்களுக்கு என் பதிலையும், அதே நேரத்தில் இஸ்லாமியரல்லாதவர்கள் இஸ்லாமிய அறிஞர்களிடம் எதிர்பார்க்கும் எதிர்ப்பார்ப்பு என்ன என்பதையும் இக்கட்டுரையில் காண்போம்.


இஸ்லாமியரல்லாதவர்களுக்கு பதில் கொடுக்கும் போது, டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களிடம் இஸ்லாமியரல்லாதவர்கள் மற்றும் நாத்தீகர்கள் நேர்மையை எதிர்பார்ப்பது சரியா தவறா?


டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் பல நிகழ்ச்சிகளை நடத்தி இஸ்லாமியரல்லாதவர்களுக்கும், நாத்தீகர்களுக்கும் இஸ்லாம் பற்றி விளக்கமளிக்கிறார், கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில்களைத் தருகிறார். இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் தருகிறார். ஒரு மிகப்பெரிய இஸ்லாமிய அறிஞர் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் புள்ளிவிவரங்களை தரும் போது, அல்லது ஒரு ஜனத்தொகை கணக்கெடுப்பு எண்ணிக்கையை தரும் போது, உண்மையான விவரம் தருவது தான் சரியான முறையாகும்.


டாக்டர் நாயக் அவர்கள் சொல்லும் அனைத்திற்கும் இஸ்லாமியரல்லாதவர்கள் தஞ்சாவூர் பொம்மைகள் போல தலையாட்ட முடியாது. அவர் சொல்லும் விவரங்கள் உண்மையா பொய்யா என்று சோதித்துப்பார்க்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், இஸ்லாமியர்கள் இப்படி அவரது புள்ளிவிவரங்களை பரிசோதிக்க மாட்டார்கள், ஏனென்றுச் சொன்னால், "ஜாகிர் நாயக் அவர்கள் பொய் சொல்லமாட்டார், தவறான விவரங்களை தரமாட்டார்" என்ற நம்பிக்கையில் சரிபார்க்கமாட்டார்கள்.


ஆனால், உண்மை எது என்று பரிசோதித்துப் பார்த்தால், அவர் சொல்லும் விவரங்கள் பொய்யாகவும், ஆதாரமற்றதாகவும் இருக்கின்றன. அவர் சொல்லும் புள்ளிவிவரங்களை சரி பார்க்க அவர் எந்த ஆதாரத்தையும் தருவதில்லை, மற்றும் நாமாகவே புள்ளிவிவரங்களை சரி பார்த்தாலும் அது தவறானதாக உள்ளது, முக்கியமாக இந்த பல தார மணம் பற்றிய அவரது பதிலில் உண்மை இல்லை.


மேடை போட்டு, பணம் செலவு செய்து, இஸ்லாமியரல்லாதவர்களை முட்டாள்களாக்குவதை யாரும் விரும்பமாட்டார்கள். எனவே, தான் பெயித் பிரீடம் தளத்தில் ஒரு கட்டுரையை சார்லஸ் கோயினிக் என்பவர் (இவர் நாத்தீகர் என்று நினைக்கிறேன்) ஜாகிர் நாயக் அவர்களின் புள்ளிவிவரங்களை அலசி, பதிலை எழுதினார். இதே போல ஆன்சரிங் இஸ்லாம் தளத்திலும் புள்ளிவிவரங்களோடு கட்டுரை எழுதப்பட்டுள்ளது (இதனை இங்கு தமிழில் படிக்கலாம்).


சரியான தகவல்களை புள்ளிவிவரங்களை ஜாகிர் நாயக் அவர்கள் தரவேண்டும் என்று இஸ்லாமியரல்லாதவர்கள் எதிர்ப்பார்ப்பது தவறா? இவர் மட்டுமல்ல, எந்த அறிஞராக இருந்தாலும் சரி, எந்த மார்க்கத்தை சம்மந்தப்பட்டவராக இருந்தாலும் சரி உண்மையான புள்ளிவிவரங்களை தருவது தானே சரியானது?


எனவே, இஸ்லாமியர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால், உங்கள் இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லும் அனைத்தையும் சோதித்துப்பார்த்து, அவைகள் தவறாக இருக்கும்பட்சத்தில் அதனை வெளிச்சத்திற்கு கொண்டுவருவது ஒவ்வொருவரது கடமையாகும்.


நாத்தீகனின் நேர்மையை விட ஆத்தீகனின் நேர்மை அதிகமாக இருக்கவேண்டாமா?


ஜாகிர் நாயக் அவர்கள் ஒரு ஆத்தீகர், அதாவது இறைவன் உண்டு என்று சொல்பவர், நாம் மொழியாக்கம் செய்த ஆங்கில கட்டுரையை எழுதியவர் ஒரு நாத்தீகர். எந்த மதமாக இருந்தாலும் சரி, பொதுவாகவே இறைவன் மீதுள்ள பக்தி, பயம், சொர்க்கம், மற்றும் நரகம் போன்றவற்றின் மீதுள்ள நம்பிக்கை ஒரு ஆத்தீகனை நேர்மையுள்ளவனாக மாற்றுகிறது என்று எல்லா ஆத்தீகர்ளும் நம்புகிறோம். இப்படி இருக்கும் போது, அல்லாஹ்வை வணங்கும் ஜாகிர் நாயக் அவர்களின் நேர்மை நாத்தீகரின் நேர்மையை விட குறைவாக இருக்குமானால், யாருக்கு கெட்டபெயர் அல்லாஹ்விற்குத் தானே. இது ஜாகிர் நாயக்கிற்கு மட்டுமல்ல, இறைவன் உண்டு என்று நம்பும் எல்லாருக்கும் பொருந்தும் என்று நான் நம்புகிறேன்.


நான் இப்படி சொல்வதினால், நாத்தீகர்கள் நேர்மையற்றவர்களாக இருப்பார்கள் என்று நான் சொல்லவரவில்லை, ஆனால், ஆத்தீகர்களாகிய நாம் "இறைநம்பிக்கை நல்லது, இதனால் நாம் நேர்மையானவர்களாக வாழ்கிறோம்" என்றுச் சொல்கிறோம், தம்பட்டம் அடிக்கிறோம், என்வே, ஆத்திகர்களுக்கு தங்கள் நேர்மையை நிருபிக்கவேண்டிய பொறுப்பு நாத்தீகர்களைவிட‌ அதிகம்.


இறைவன் இல்லை என்றுச் சொல்பவனின் நேர்மையை விட, இறைவன் உண்டு என்றுச் சொல்பவனின் நேர்மை அதிகமாக இருக்கவேண்டாமா? ஒரு நாத்தீகர் ஒரு ஆத்தீகரை அதாவது ஜாகிர் நாயக் அவர்களை பொய்யர், நேர்மையற்றவர் இது தான் ஆதாரம் என்றுச் சொல்லும் அவமானத்தைவிட வேறு ஏதாவது பெரிய அவமானம் அல்லாஹ்விற்கு உண்டா? இதை இஸ்லாமிய அறிஞர்களும், சராசரி இஸ்லாமியர்களும் உணரவேண்டாமா?


இனி, நம் தமிழ் இஸ்லாமியர்கள் கொடுத்த மூன்று பின்னூட்டங்களுக்கு பதிலைக் காண்போம்.


முதல் பின்னூட்டம்:



பெயரில்லா சொன்னது…



how we can belive your thoughts we think DR thoughts is right plz plz plz we think you want to create bad name about DR THAT WISE YOUR DOING THAT TYPE OF 420 JOBS ABOUT DR STOP THIS NONSENCE



January 27, 2009 10:49 PM



முதல் பின்னூட்டம் பெயரில்லாமல் (அனானிமஸ்) வந்துள்ளது. இப்போது அவாது வரிகளுக்கு பதிலைக் காண்போம்.


அனானிமஸ் எழுதியது:


how we can belive your thoughts we think DR thoughts is right …



ஈஸா குர்‍ஆன்:


அருமை இஸ்லாமிய நண்பரே, நீங்கள் எங்கள் "எண்ணங்களை, நினைவுகளை" நம்பச் சொல்லவில்லை, நாங்கள் முன்வைக்கும் விவரங்களைப் பாருங்கள், அவைகள் சரியானவையா இல்லையா என்பதை நீங்களே கொடுக்கப்படும் தொடுப்புக்களுக்குச் சென்று சரிபாருங்கள். இதே போல, உங்கள் ஜாகிர் நாயக் அவர்கள் சொன்னாலும், உடனே நம்பிவிடாமல், அவர் சொன்னது சரியான தகவலா என்று சரிபாருங்கள்.


நீங்கள் என் தமிழ் மொழியாக்கத்தை படித்து தான் பின்னூட்டம் இட்டுள்ளீர்கள் என்று நம்புகிறேன். ஜாகிர் நாயக் அவர்கள் சொன்ன விவரங்கள் தவறானவைகள் என்று புள்ளிவிவரங்களோடு பதில் எழுதியிருப்பதைக் கண்டும், நீங்கள், நாயக் அவர்கள் சொல்வது தான் சரியானது என்றுச் சொன்னால், உங்களை என்னவென்றுச் சொல்வது?


நாயக் அவர்கள் கொடுத்த புள்ளிவிவரங்களுக்கு ஆதாரமே இல்லையே. ஆனால், நாம் புள்ளிவிவரங்களை தேடி கண்டுபிடித்து சரிபார்த்தால், அவைகள் ஜாகிர் நாயக் சொல்வதற்கு எதிராகவே உள்ளதே, இதை கூடவா நீங்கள் படித்துவிட்டு, நாயக் அவர்கள் சொல்வது தான் சரி என்றுச் சொல்கிறீர்கள்?



அனானிமஸ் எழுதியது:


plz plz plz we think you want to create bad name



ஈஸா குர்‍ஆன்:


ஜாகிர் நாயக் அவர்களுக்கு நான் ஏன் கெட்ட பெயரை கொண்டுவரவேண்டும்? அவர் மேடை பேச்சுக்கள் போதுமல்லவா அவருக்கு கெட்டபெயரை கொண்டுவர. அவர் கொடுக்கும் விவரங்கள் போதுமல்லவா அவர் சொல்வது பொய் என்பதை அறிந்துக்கொள்ள?


அவர் உண்மையைச் சொன்னால், சரியான விவரங்களைக் கொடுத்தால் ஏன் கெட்டபெயர் வரப்போகிறது?


அவருடைய பெயர் இதனால் கெடுகிறது என்று உங்களுக்கு அக்கரை இருந்தால், அவர் சொன்ன விவரங்களுக்கு ஆதாரங்களைத் தாருங்கள். அவரோடு தொடர்பு கொண்டு, "உங்களின் புள்ளிவிவரங்கள் எந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் அதற்கு ஆதாரங்கள் என்ன?" என்று கேட்டு, தெரிந்துக்கொண்டு எழுதுங்கள், அப்போது கெட்டபெயர் தானாகவே நீங்கிவிடுமே.


ஒரு வேளை நீங்கள் அவர் சொன்ன தகவல்களுக்கு ஆதாரங்களைக் கொடுத்தால், அவைகள் உண்மை என்று நிருபனமானால், நான் இந்த தமிழ் கட்டுரையை நீக்கிவிடுகிறேன். அதே போல, பெயித் பிரீடம் தளத்துடன் தொடர்பு கொண்டு ஆங்கிலத்திலும் இருக்கும் கட்டுரையை நீக்கச் சொல்கிறேன்.


ஜாகிர் நாயக் அவர்களின் பதில் எப்படி உள்ளதென்றால், ஒரு ஆண்டில் அல்ல, எல்லா ஆண்டிலும், எல்லா நாடுகளிலும் பெண்கள் தான் ஆண்களை விட அதிகமாக உள்ளார்களாம், அதனால், தான் பல தார மணம் என்பது சரியாம். எனவே, எல்லா ஆண்டிலும் அவரது புள்ளிவிவரம் படி, ஆண்களை விட பெண்கள் அதிகமாக இருக்கவேண்டும். அப்போது தான் சரியான ஆதாரமாக முடியும்.



அனானிமஸ் எழுதியது:


DR THAT WISE YOUR DOING THAT TYPE OF 420 JOBS ABOUT DR STOP THIS NONSENCE



ஈஸா குர்‍ஆன்:


பொய்யான விவரங்களை கொடுத்து ஏமாற்றுபவர் ஏமாற்றுக்காரரா அல்லது சரியான புள்ளிவிவரங்களை தருபவர் ஏமாற்றுக்காரரா என்பதை நீங்கள் படித்த கட்டுரையை படிப்பவர்கள் புரிந்துக்கொண்டு இருப்பார்கள். ஆனால், உங்களுக்கு மட்டும் புரியவில்லை? ஏன்?


அருமை இஸ்லாமியரே, எது "நான்சன்ஸ்"? மேடைகள் போட்டு, பதில் தருகிறேன் என்றுச் சொல்லி, பொய்யான விவரங்களை சொல்வது நான்சன்ஸா அல்லது அவரது பொய்களை உலகிற்கு எடுத்துக் காட்டுபவர்களின் செயல்கள் நான்சன்ஸா?


அவர் உண்மையிலேயே சரியான விவரங்களை கொடுத்துயிருந்தால் மற்றவர்கள் ஏன் கேள்வி எழுப்பப்போவார்கள்?


எனவே, அருமை இஸ்லாமிய நண்பரே, உண்மையிலேயே உங்கள் மனதிற்கு வேதனையாக இருந்தால், அவருடன் தொடர்பு கொண்டு, என்ன விஷயம்? ஏன் இப்படி சரியில்லாத ஜனத்தொகை புள்ளிவிவரங்களைத் தருகிறீர்கள், உண்மையான விவரம் என்ன என்று கேட்டு எழுதுங்கள். அப்போது உலகம், "ஜாகிர் நாயக் அவர்கள் உண்மை சொன்னார்கள் என்று" அறிந்துக்கொள்ளும். இப்படி பதில் வராத பட்சத்தில் நீங்கள் சொன்ன அந்த "420" யாருக்கு சரியாக பொருந்தும் என்று இந்த கட்டுரைகளை படித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு சரியாகத் தெரியும்.



இரண்டாவது பின்னூட்டம் அஜீஜுல்லாஹ் என்பவரிடமிருந்து வந்துள்ளது, அதற்கான பதிலை இப்போது காண்போம்.



Azeezullah சொன்னது…



You can talk generally against Dr. Zakir But you can not/never talk with Dr.


If you are ready, why do not you call him for debate in front of the public and let us see your skill.



ஈஸா குர்‍ஆன்:


அருமை அஜீஜுல்லாஹ் அவர்களே உங்களிடம் நான் நேரடியாக கேள்வியை கேட்கிறேன்.


1) டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் சொன்ன கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள் எந்த ஆண்டின் விவரங்களாகும்?


2) அவர் எந்த புத்தகத்திலிருந்து விவரங்களை எடுத்துச் சொல்கிறார்? உங்களால் ஆதாரங்களைத் தரமுடியுமா?


இங்கு கட்டுரைகளை எழுதிக்கொண்டு இருப்பது, என்னுடைய திறமைகளை வெளிக்காட்டுவதற்காக அல்ல?


பல பேர்களின் பொய் முகங்களை உலகிற்கு காட்டுவதற்காக!


இஸ்லாமியர்கள் 14 நூற்றாண்டுகளாக சொல்லிக்கொண்டு வரும் பொய்களுக்கு பதில்கள் தருவதற்காக!


இஸ்லாமின் மற்றும் இஸ்லாமிய அறிஞர்களின் உண்மை முகத்தை காட்டுவதற்காக‌ !


கடைசியாக உங்கள் முஹம்மது ஒரு கள்ள / பொய் நபி என்ற உண்மையை உலகம் அறியவேண்டும் என்பதற்காகவே கட்டுரைகள்,பதில்கள் தரப்படுகின்றனவே தவிர, பெயருக்காகவோ, புகழுக்காகவோ அல்ல.


டாக்டர் நாயக் அவர்கள் உண்மை முகம் தெரிந்துவிடுகிறதே என்று கவலைப்படும் நீங்கள், ஏன் அவரிடம் கேட்டு பதிலைத் தரக்கூடாது, அவரது தளத்திலேயே, மூல ஆதாரங்களைத் தரலாமே! அப்படி அவர் கொடுத்து இருந்தால், எனக்கு தொடுப்பு தாருங்கள், அவைகள் உண்மையானால், அவரது கருத்துப்படி, உலகில் இருக்கும் எல்லா நாடுகளிலும் எப்போதும் (பெண் சிசுக்கொலை போன்ற‌ சில எதிர்பாராத காரணங்களினால், பெண்கள் குறைவாக இருந்தால் பரவாயில்லை) ஆண்களை விட பெண்கள் அதிகமாக இருந்தால், நான் இககட்டுரையை நீக்கிவிடுகிறேன். மற்றும் இக்கட்டுரைக்காக மன்னிப்புக் கோரி, ஒரு பதிவை வெளியிடுகிறேன்.



Azeezullah சொன்னது…



The Islam is truth and it spoke the real and amazing thing for day to day life as well as hereafter.



ஈஸா குர்‍ஆன்:


இதைத்தான் நீங்கள் 14 நூற்றாண்டுகளாக சொல்லிக்கொண்டு தான் வருகிறீர்களே, பாடிய பல்லவியையே ஏன் மறுபடியும் பாடுகிறீர்கள். இந்த கட்டுரைக்கும் நீங்கள் சொல்லும் விவரத்திற்கும் சம்மந்தம் உண்டா?


கேள்வி எழுப்பியது, இஸ்லாமிய அறிஞர், மேடை பேச்சாளர், பல புத்தகங்களின் ஆசிரியர் உலகம் சுற்றும் அறிஞர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் சொன்ன விவரத்திற்கு ஆதாரம் எங்கே என்று தான். உங்களை குர்‍ஆன் பற்றி யாரும் கேட்கவில்லை.


ஒவ்வொரு மனிதனுக்கு அவன் பின் பற்றும் மார்க்கம் தான் உண்மையானது, அது போல, இஸ்லாமியராக இருப்பவருக்கு குர்‍ஆன் உண்மை என்று தான் நம்புவார், இதனை யாரும் கேட்கவில்லை. குர்‍ஆன் பற்றி வேண்டுமானால், என் தளத்தில் படித்துப்பாருங்கள், விவரம் தெரியும்.


இங்கு உங்கள் அன்பு அறிஞர் ஜாகிர் நாயக் அவர்களின் நேர்மையைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது, அவரது உண்மையைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது, இதற்கு பதில் சொல்லமுடியுமா என்று சிறிது சிந்தித்து இருந்தால், நீங்கள் அவருக்கு நன்மை செய்பவராக இருப்பீர்கள்?



Azeezullah சொன்னது…


Do not waste your time and try to learn about Islam if you learn Islam, you will find lots of Miracles.


Azeezullah.


March 25, 2009 9:42 AM



ஈஸா குர்‍ஆன்:


இஸ்லாம் பற்றி எல்லாம் தெரிந்து தான் எழுதிக்கொண்டு இருக்கிறேன். எனவே, இந்த கட்டுரையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள்,


முக்கியமாக இந்த பலதார மணம் பற்றிய கட்டுரையில், ஜாகிர் நாயக் அவர்கள் பேசுவது உண்மையா பொய்யா? உண்மை என்றுச் சொன்னால், அது எங்கே?


குர்‍ஆனில் அற்புதம் இருந்தால் என்ன இல்லாமல் போனால் என்ன? அதில் அற்புதம் இருப்பதாக இஸ்லாமியர்களாகிய நீங்கள் நம்புகிறீர்கள் அவ்வளவு தான். குர்‍ஆன் அற்புதம் என்பவர்கள் இந்த பக்கத்தில் இருக்கும் தமிழ் கட்டுரைகளை ( http://www.answering-islam.org/tamil/quran.html) படித்துப்பாருங்கள், உண்மை தெரியும்.


இந்த கேள்வி குர்‍ஆன் அற்புதங்கள் பற்றி கேட்கப்படவில்லை, உங்கள் அறிஞர் ஜாகிர் நாயக் அவர்கள் பற்றிய கேள்வி, அதற்கு மட்டும் பதிலைத் தாருங்கள், இதற்கு பதில் வராத வரை, மேலே அனானிமஸ்ஸாக வந்து ஒரு இஸ்லாமியர் சொன்ன 420 யாருக்கு பொருந்தும் என்பதில் சந்தேகமில்லை.


மூன்றாவது பின்னூட்டம், ஆதம் என்ற பெயரில் வந்துள்ளது



ஆதம் சொன்னது…



உங்கள் நோக்கம் என்ன ,இஸ்லாம் பிழை என்பதா? அல்லது முஸ்லிம்கள் பிழை என்பதா ? அல்லது கிறிஸ்த்துவம் சரி எண்பதா?



ஈஸா குர்‍ஆன்:


நீங்களும் மற்றவர்கள் போலத்தானா? எனக்கு ஆச்சரியமாக உள்ளது! அதாவது சொல்லிவைத்தார் போல முஸ்லீம்கள் எப்படி ஒரே மாதிரியாக சிந்திக்கிறீர்கள்? கேட்ட கேள்வியை காற்றிலே விட்டுவிட்டு, எப்படியாவது கதையை திசை திருப்பப் பார்க்கிறீர்களே, அடேங்கப்பா என்னே ஒரு தந்திரம், என்னே ஒரு ஞானம்.


மேலே இரண்டு பின்னூட்டம் கொடுத்தவர்கள் குறைந்தபட்சம் ஜாகிர் நாயக் என்ற பெயரையாவது பயன்படுத்தினார்கள், ஆனால், திசை திருப்ப முயற்சித்தார்கள். ஆனால், நீங்கள் அவரது பெயரை பயன்படுத்தாமலேயே திசை திருப்புகிறீர்கள்.


என் நோக்கம் அல்லது என் கருத்து வேண்டும், அவ்வளவு தானே, இதோ சொல்கிறேன், பைபிளின் படி கிறிஸ்தவம் இஸ்லாமை கீழ்கண்ட விதமாகத்தான் பார்க்கிறது, இது தான் என் கருத்தும்கூட.



1) இஸ்லாம் ஒரு பொய் மார்க்கம், முஹம்மது ஒரு பொய் தீர்க்கதரிசி, கிறிஸ்து உண்டாக்கிய இரட்சிப்பை மக்கள் அடையக்கூடாது என்பதற்காக சாத்தான் உருவாக்கிய ஒரு மார்க்கம் தான் இஸ்லாம் (இக்கட்டுரையில் கிறிஸ்தவம் உண்மையானதாக இருந்தால்..." என்ற கடைசி பாகத்தை படிக்கவும்).



2) இஸ்லாமிய அறிஞர்கள் இஸ்லாமை பிழைக்கவைப்பதற்காக பல பொய்களை அள்ளிவீசுவதில் தயங்குவதில்லை, உண்மையை திசைத் திருப்பி, மக்களை முட்டாள்களாகவே வைத்திருக்க முயற்சிப்பார்கள். இதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு, ஜாகிர் நாயக் அவர்களின் பல தார மண கட்டுரையாகும்.


3) உண்மையாக இஸ்லாம் பற்றி அறிந்துகொள்ளும் எந்த ஒரு சராசரி மனிதனும் அதில் நிலைத்து இருப்பதில்லை, அதனால் தான் இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமை விட்டு வெளியேறுபவனை கொன்று, மக்களை பயப்படவைத்து கேவலமான நிலையில் இஸ்லாம் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறது. இஸ்லாமை விட்டு வெளியெறுபவனை நாங்கள் தாக்குவதில்லை,என்றுச் சொல்லி, இஸ்லாமிய நாடுகளில் சட்டம்கொண்டு வந்து அதை சரியாக பின்பற்றட்டும், விரல்விட்டு எண்ணும் ஆண்டுகளில், இஸ்லாமின் நிலை அம்போ கதி தான்.




4) கிறிஸ்தவம் தான் சரியான மார்க்கம், அதற்கு எதிர் மறையான மார்க்கம் தான் இஸ்லாம். இஸ்லாமிய நாடுகளில் இன்னும் எவ்வளவு தான் நீங்கள் கொடுமைப்படுத்தினாலும், கிறிஸ்தவம் இன்னும் வளரும் (கிறிஸ்தவர்கள் ஒன்றுக்கு நான்கு மனைவிகளை திருமணம் செய்துக்கொண்டு கணக்கில்லாமல் பிள்ளைகள் பெற்று கிறிஸ்தவத்தை வளர்க்க விரும்புவதில்லை, படுக்கை அறையில் கிறிஸ்தவத்தை வளர்க்கவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.)


ஆதம் சொன்னது…



இங்கே நிருபிக்க வந்த விடயத்தின் 1 % கூட உம்மால் முடியவில்லை .



ஈஸா குர்‍ஆன்:


ஜாகிர் நாயக் அவர்களின் முகத்தில் கரியை பூசி, அவர் பொய்யர் என்று இந்த கட்டுரைச் சொல்லும் போது, இத்தனை பேர் நீங்கள் இருந்தும் பல முறை இக்கட்டுரை ஆங்கிலத்திலும் தமிழிலும் படிக்கப்பட்டும், இதுவரை பதிலே சொல்லாமல் இஸ்லாமியர்கள் இதர தமிழ் இஸ்லாமிய தளங்களை நடத்தும் அறிஞர்கள் மௌனமாக இருக்கும் போதே தெரியவில்லையா? எத்தனை சதவிகிதம் இந்த கட்டுரை வெற்றிப்பெற்றுள்ளது என்று?


டாக்டர் ஜாகிர் நாயக்கின் புகழை கூரு போட்டு, நடு ரோட்டில் வைத்து ரூபாக்கு நாலூ என்று விற்பது போல, சார்லஸ் கோயினிக் அவர்களின் கட்டுரை நச்சென்று உண்மையை சொல்லும் போது, இன்னும் 1% கூட இக்கட்டுரையினால் முடியவில்லை என்றுச் சொல்கிறீர்கள். நீங்களாவது சொல்லுங்களேன், ஜாகிர் நாயக் சொல்லும் விவரங்களின் ஆதாரங்கள் என்ன?


சார்லஸ் கோயினிக் அவர்களின் கட்டுரை நிருபிக்க வந்தது, டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் ஒரு "பொ ய் ய ர்" என்பதாகும், அதற்கு ஆதாரங்களும் தரப்பட்டன. ஆனால், நாயக் அவர்கள் உண்மையாளர் என்பதற்கு ஒரு ஆதாரத்தையும் கொடுக்க அவராலும் முடியவில்லை, அவரது சீடர்களாகிய உங்களாகும் முடியவில்லை. இன்னும் என்ன இருக்கின்றது நிருபிப்பதற்கு?



ஆதம் சொன்னது…



நாங்கள் முஸ்லிமாய் இருக்க வேண்டும் என்றால் இரைதுதர்களை ஏறுக்கொள்ள வேண்டும் இயேசுவை கூட,



ஈஸா குர்‍ஆன்:


அய்யய்யோ யாராவது வந்து காப்பாற்றுங்களேன்!



இந்த கட்டுரைக்கும் நீங்கள் முஸ்லீமாக இருப்பதற்கும் சம்மந்தமில்லை சகோதரரே. இந்த கட்டுரைக்கும் நீங்கள் இறைத்தூதர்களை, இயேசுவை நம்புவதற்கும் சம்மந்தமில்லை.


முதலில் உங்கள் ஜாகிர் நாயக் அவர்களிடம் சென்று கேள்வி எழுப்பி பதிலை கொண்டு வாருங்கள். நீங்கள் முஸ்லீமாகவோ இருங்கள், அல்லது இல்லாமலோ போங்கள், இதனால், இந்த கட்டுரைக்கு என்ன பயன்? அல்லது ஜாகிர் நாயக் அவர்களுக்கு என்ன பயன்? நீங்கள் முஸ்லீமாக இருப்பதால், ஜாகிர் நாயக் அவர்கள் சொன்ன விவரங்கள் உண்மையாகிவிடுமா என்ன? அல்லது நீங்கள் முஸ்லீமாக இருப்பதால், தானாகவே இந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்துவிடுமா?



ஆதம் சொன்னது…



பைபிளில் இஸ்லாத்தைப் பற்றியோ முஹம்மதத் அவர்களைப் பற்றியோ சொல்லவிட்டால் பைபிள் திர்க்கதரிசனம் இல்லா மறை நூலா ?



June 15, 2009 2:53 AM



ஈஸா குர்‍ஆன்:


அருமை நண்பரே, ஆயிரம் பேர் "நான் தான் நபி" என்றுச் சொல்லிக் கொண்டு வருவார்கள். முஹம்மதுவிற்கு பிறகும் அனேகர் அப்படி வந்தார்கள். சொந்தமாக நபியாக பிரகடனப்படுத்தி கொள்கிறவர்களை பற்றியெல்லாம் வேதங்களில் இருக்கவேண்டுமானால், அவ்வளவு தான் கதை.


முஹம்மது என்ன உண்மை தீர்க்கதரிசியா? இல்லையே! அவர் ஒரு கள்ளத் தீர்க்கதரிசி. நீங்கள் இயேசுவை ஒரு நபியாக எண்ணுகின்றீர்கள், அது உங்கள் நம்பிக்கை. அது போல, நாங்கள் உங்கள் முஹம்மது ஒரு பொய் நபி என்று நம்புகிறோம், இது எங்கள் நம்பிக்கை.


உலகத்தில் நபியாக சொல்லிக்கொண்டு வருகிறவர்களை எல்லாம் உங்கள் குர்‍ஆனில் உள்ளதா? ரஷீத் கலிபா என்று ஒருவர்(http://en.wikipedia.org/wiki/Rashad_Khalifa), அவர் தன்னை நபி என்றுச் சொன்னார், குர்‍ஆனில் பல இடங்களில் தன்னிடம் அல்லா பேசியதாகச் சொல்லி, தன் பெயரை குர்‍ஆனில் புகுத்தியும் விட்டார். இரண்டு குர்‍ஆன் வசனங்களையும் (குர்‍ஆன் 9:128-129) அவர் நீக்கி, அவைகள் இல்லாமலேயே குர்‍‍ஆனை திருத்தியும் விட்டார் .


அவரைப் பற்றி ஏன் உங்கள் குர்‍ஆனில் இல்லை?


ரஷீத் கலிபா பற்றி உங்கள் குர்‍ஆனில் இல்லையானால், உங்கள் குர்‍ஆன் தீர்க்கதரிசனம் இல்லாத மறை நூலா?


பைபிளில் உங்கள் முஹமம்து பற்றியும், இஸ்லாம் பற்றியும் இல்லை என்றுச் சொன்னால், மிகவும் வேதனை அடைவீர்கள் போல் உள்ளது, எனவே, முஹம்மது பற்றியும், இஸ்லாம் பற்றியும், அவ்வளவு ஏன், சில தீவிர இஸ்லாமியர்கள் பற்றியும் உள்ள வசனங்களை பைபிளிருந்து எடுத்துக் காட்டுகிறேன், இப்போது சந்தோஷம் தானே. சரியாக விளங்கும் என்பதற்காக அடைப்பிற்குள் சில வார்த்தைகளை எழுதியுள்ளேன்.



… மேலும் உங்களை (கிறிஸ்தவர்களை)க் கொலை செய்கிறவன் (முஸ்லீம்) தான் தேவனுக்கு (இறைவனுக்கு)த் தொண்டு செய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும். யோவான் 16:2



இன்று முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களை கொன்று விட்டு, நான் அல்லாஹ்வின் தொண்டு செய்கிறேன் என்றுச் சொல்கிறார்கள். இதனை இயேசு அன்றே சொல்லியுள்ளார். இது இஸ்லாம் பற்றியது தானே.



கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு (முஹம்மதுவிற்கு) எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக் கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். மத்தேயு 7:15



அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் (முஹம்மது) எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். மத்தேயு 24:11



மேலே உள்ளவைகள் எல்லாம் இஸ்லாம் பற்றிய வசனங்கள், இப்போது திருப்தி தானே.


இஸ்லாமிய நண்பர்களே, முதலாவது எந்த கட்டுரைக்கு பின்னூட்டம் இடுகின்றோம் என்பதை கவனித்து, அதற்கு பதிலைச் சொல்லப் பாருங்கள். கடைசியாகவும் சொல்கிறேன். ஜாகிர் நாயக் அவர்களின் விவரங்களுக்கு ஆதாரங்கள் தரப்படுமானால், இந்த கட்டுரையையும், இதற்கான மூல தமிழ் கட்டுரையையும் நான் நீக்கிவிடுகிறேன்.


அதுவரை, ஜாகிர் நாயக் அவர்களின் சாயம் வெளுத்துக் கொண்டே இருக்கும்…..



1989 லிருந்து 2009 வரையுள்ள உலக ஜனத்தொகை கணக்கெடுப்புக்கள் இந்த தளத்தில் உண்டு - CIA World Factbook - http://www.theodora.com/wfb/. டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் கணக்கெடுப்பிற்கு உதவி செய்ய விரும்புகிறவர்களுக்கு இந்த தளம் உதவியாக இருக்கலாம்.



Friday, June 26, 2009

அபூ அப்திர் ரஹ்மானும், நிர்வாணமும், லூக்கா 22:36ன் பட்டயமும்

அபூ அப்திர் ரஹ்மானும், நிர்வாணமும், லூக்கா 22:36ன் பட்டயமும்

அபூ அப்திர் ரஹ்மானும், நிர்வாணமும், லூக்கா 22:36ன் பட்டயமும்



கிறிஸ்தவம் பார்வை தளத்தின் "பைபிளில் பயங்கரவாதம் (3)க்கு பதில்"


முன்னுரை:



கிறிஸ்தவம் பார்வை என்ற இஸ்லாமிய தளம் "பைபிளில் பயங்கரவாதம்" என்ற தலைப்பில் கட்டுரைகளை எழுதிக்கொண்டு வருகிறது. அவர்களின் இந்த தொடர் கட்டுரைகளுக்கு இதுவரை நான்கு பதில்கள் தரப்பட்டுள்ளன, அவைகளை இங்கு படிக்கவும்:


பாகம் 1, பாகம் 2, பாகம் 3.1 மற்றும் பாகம் 3.2 - (லூக்கா 22:36ல் உள்ள பட்டயம் பற்றி ஒரு சிறு விளக்கம்)



இக்கட்டுரையின் அவசியம் என்ன?


அபூ அப்திர்ரஹ்மான் அவர்கள் "லூக்கா 22:36ல், பட்டயம் பற்றி இயேசு சொல்கிறாரே, அதன் அர்த்தம் என்ன? தன் சீடர்களும் பட்டயங்களை பயன்படுத்த இயேசு அனுமதிப்பது போல உள்ளதே? என்று கேட்டு இருந்தால், மேலே கொடுத்த இந்த கட்டுரையே "பாகம் 3.2: லூக்கா 22:36 ல் உள்ள பட்டயம் பற்றி ஒரு சிறு விளக்கம்" போதுமானது. ஆனால், அவர் அப்படி கேட்காமல், இஸ்லாமியர்களுக்கே உரித்தான பாணியில் "நிர்வாணமாக இருந்தாலும் பரவாயில்லை, பட்டயத்தை வாங்கிக் கொள்ளுங்கள்" என்று இயேசு சொன்னார் என்று சொந்தமாக விரிவுரை கொடுத்ததால், அதற்கான பதிலைச் சொல்லவே, அவரது வரிகளை மேற்கோள் காட்டி இந்த கட்டுரை எழுதப்படுகிறது.


கிறிஸ்தம் பார்வை தளம் தன் மூன்றாம் பாகத்தில் புதிய ஏற்பாடு வசனம் பற்றி என்ன எழுதியிருக்கிறது என்பதை முதலில் காண்போம்.



அபூ அப்திர் ரஹ்மான் அவர்கள் எழுதியது:



பைபிள் கூறும் பயங்கரவாதம் (3)



"நீ ஆடையின்றி நிர்வாணமாக இருந்தாலும் ஆயுதமின்றி மட்டும் இருக்காதே" என்று பைபிள் கட்டளையிடுகிறது. பைபிளின் இவ்வசனப்படி கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் கையில் ஒரு துப்பாக்கியின்றி இருக்கக் கூடாது. இக்கலாச்சாரத்தின் வெளிப்பாடாகத் தான் அமெரிக்காவில் பள்ளி மாணவன் சக மாணவனை துப்பாக்கியால் சுடுவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறதோ?






… "நீங்கள் உங்கள் ஆடைகளை விற்றாவது ஒரு ஆயுதத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்" என்று புதிய ஏற்பாட்டில் இயேசுவின் கட்டளையாகக் கூறப்பட்டிருப்பதைக் குறித்து என்ன விளக்கம் கூறுவார்கள்?



அதற்கு அவர், இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக் கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன். (லூக்கா: 22:36)
.



"ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்ட வேண்டும்" என்று கூறும் அதே பைபிள் தான், "உன் எதிரியிடமிருந்து உன்னைப் பாதுகாத்துக் கொள்ள உன் ஆடையை விற்றாவது ஒரு வாளை வாங்கிக் கொள்" என்று கட்டளையிடுகிறது. அதாவது "நீ ஆடையின்றி நிர்வாணமாக இருந்தாலும் ஆயுதமின்றி மட்டும் இருக்காதே" என்று பைபிள் கட்டளையிடுகிறது. பைபிளின் இவ்வசனப்படி கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் கையில் ஒரு துப்பாக்கியின்றி இருக்கக் கூடாது. இக்கலாச்சாரத்தின் வெளிப்பாடாகத் தான் அமெரிக்காவில் பள்ளி மாணவன் சக மாணவனை துப்பாக்கியால் சுடுவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறதோ?



Source: http://christianpaarvai.blogspot.com/2009/02/3.html
(emphasis mine)



மேற்கண்ட அபூ அப்திர் ரஹ்மான் அவர்களின் வரிகளை காணும் போது, கீழ் கண்ட விவரங்களை அவர் சொல்வதைக் காணலாம்.



1) ஆடையின்றி நிர்வாணமாக இருந்தாலும் ஆயுதமின்றி இருக்கவேண்டாம் என்று பைபிள் கூறுகிறதாம்.



2) இவ்வசனத்தின் படி கிறிஸ்தவர்கள் தங்கள் கைகளில் ஆயுதமின்றி இருக்கக்கூடாதாம் (பல நூற்றாண்டுகளாக‌ இந்த வசனத்தை படித்துக்கொண்டு இருக்கும் கிறிஸ்தவர்களுக்கே வராத புதிய யோசனை இஸ்லாமியர்களுக்கு வந்துள்ளது - அருமையான முற்போக்குச் சிந்தனை).



3) இவ்வசனத்தின் வெளிப்பாடு தான் அமெரிக்காவில் மாணவன் சகமாணவனை துப்பாக்கியால் சுடுகின்றானாம் (21ம் நூற்றாண்டின் இஸ்லாமிய கண்டுபிடிப்பு)



4) லூக்கா 22:36ம் வசனத்தின் விளக்கமாக கிறிஸ்தவர்கள் என்ன கூறுவார்கள் என்று கேட்கிறார்?



5) லூக்கா 22:36ம் வசனம் "எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்ள ஒரு ஆயுதத்தை வாங்கிக்கொள் என்று" கட்டளையிடுகிறதாம்



இந்த ஐந்து விவரங்களுக்கும் நாம் இப்போது பதிலைக் காண்போம்.


ஆரம்பமாக குர்‍ஆனின், முஹம்மதுவின் பயங்கரவாதத்தை மறைக்க இஸ்லாமியர்களின் ஒரு புதிய யுக்தியை காண்போம்.


இஸ்லாமியர்கள் நபியாக கருதும் முஹம்மதுவின் வாழ்க்கையிலும், குர்‍ஆனிலும், ஹதீஸ்களிலும் வன்முறையும், பயங்கரவாதமும் மிகுதியாக காணக்கிடக்கிறது. அதனை இன்று இஸ்லாமிய நாடுகளிலும், இஸ்லாமிய நாடுகளில் வாழும் இஸ்லாமியர்களின் வாழ்க்கையிலும் காணலாம். இன்று தீவிரவாதத்தினால் உலகை அழித்துக்கொண்டு இருக்கும் "இஸ்லாமிய தீவிரவாதிகள்" தங்கள் வழிகாட்டியாக முஹம்மதுவையும், குர்‍ஆனையும் வைத்துள்ளார்கள். ஒரு கையில் துப்பாக்கியுடனும் இன்னொரு கையில் குர்‍ஆனுடனும் காட்சியளிக்கிறார்கள். இது என் சொந்த கருத்தல்ல, நீங்கள் செய்தித்தாள்களை படிப்பவர்களாக இருந்தால், இப்படிப்பட்ட தீவரவாதிகளின் படங்களை காணலாம்.


இப்படி இருந்தும், இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்பதை நிருபிக்க இஸ்லாமிய அறிஞர்கள் படாத படு படுகிறார்கள், மற்றும் இஸ்லாமின் பெயரில் தீவிரவாத செயல்கள் புரிபவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல என்றுச் சொல்கிறார்கள்.


இஸ்லாமிய அறிஞர்களின் இப்படிப்பட்ட யுக்தியில் ஒரு யுக்தி தான் "இயேசுவின் வாழ்க்கையிலும் செயலிலும்" வன்முறையை கண்டுபிடிக்க முயல்வது. ஆனால், அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால், இயேசுவின் வாழ்வில், செயலில் தீவிரவதத்தை/பயங்கரவாதத்தை கண்டுபிடிக்க முயல்வது, குருடனாக இருக்கும் முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போலாகும்.



1) ஆடையின்றி நிர்வாணமாக இருந்தாலும், ஆயுதமின்றி இருக்கவேண்டாம் என்று பைபிள் கூறுகிறதாம்.



உண்மையில் அபூ அப்திர்ரஹ்மான் அவர்கள் புதிய ஏற்பாட்டை படித்து தான் எழுதுகிறாரா? என்ற சந்தேகம் வருகிறது.


லூக்கா 22:36ம் வசனத்தை குறிப்பிட்டு கேள்வி எழுப்பிய அபூ அப்திர் ரஹ்மான் அவர்கள் முதலில் இயேசுவின் வாழ்க்கை வரலாறையும், அவரது கட்டளைகளையும் படித்தாரா? இல்லையா? ஏதோ ஒரு வசனத்தை எடுத்துக்கொண்டு அதற்கு முன்பும் பின்பும் உள்ள வசனங்களை படிக்காமல் (அப்படி படித்தாலும், குற்றப்படுத்தவேண்டும் என்ற காரணத்தால் மறைத்துவிட்டு) வியாக்கீனம் செய்வது சரியானதா?


அருமை இஸ்லாமிய அறிஞரே, நீங்கள் சொல்வது போலவா லூக்கா 22:36ம் வசனம் சொல்கிறது?



லூக்கா 22:36



அதற்கு அவர், இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக் கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்.



இவ்வார்த்தைகளை சொல்லும் போது, இயேசுவின் மனதில் நீங்கள் நினைப்பது போல "ஆடையின்றி நிர்வாணமாக இருந்தாலும் பரவாயில்லை, என் சீடர்கள் பட்டயங்கள் இல்லாமல் இருக்கக்கூடாது" என்ற கண்ணோட்டத்திலா சொல்லியிருப்பார்?


ஒரு பெண்ணை ஆபாச இச்சையோடு பார்க்கின்ற ஒவ்வொருவனும், ஒரு ஆணை ஆபாச இச்சையோடு பார்க்கின்ற பெண்களும், "விபச்சார" குற்றம் செய்தவர்களுக்கு சமம் என்றுச் சொன்ன இயேசுவா தன் சீடர்கள் நிர்வாணமாக இருந்தாலும் பரவாயில்லை, வாளோடு இருக்கக்கூடாது என்று சொல்லியிருப்பார்?


ஓ! முஹம்மதுவை வழிகாட்டியாக பின் பற்றும் இஸ்லாமியர்களே, சிறிது சிந்தித்து எழுதமாட்டீர்களா? எதை எழுதினாலும் கிறிஸ்தவர்கள் கேட்கமாட்டார்கள் என்ற தைரியமா உங்களுக்கு? கிறிஸ்தவர்கள் வாள்களை தூக்க மாட்டார்கள் உண்மை தான், ஆனால், வாளை விட வலிமையான பேனாவை பயன்படுத்துவார்களே! நீங்கள் பைபிள் பற்றி, இயேசுவைப் பற்றி என்ன சொன்னாலும் கிறிஸ்தவர்கள் உங்களை சபிக்கமாட்டார்கள், உண்மை தான், ஆனால், கேள்வி கேட்கப்படும் போது சரியான பதிலைக் கொடுப்பார்கள் என்பதை மட்டும் அறிந்துக் கொள்ளுங்கள்.



• இயேசு போர்கள் புரிந்து, அதில் பிடிபடும் பெண்களை பிடிபட்ட அன்றே கற்பழிக்கும் நபர் என்று நினைத்துவிட்டீர்களா?



• என்னை பின்பற்றினால் சொர்க்கத்தில் அனேக பெண்கள் உங்களுக்கு கிடைப்பார்கள் என்று தன் சீடர்களுக்கு ஆபாச ஆசைக் காட்டியவர் என்று நினைத்துக் கொண்டீர்களா?



• ஆறுவயது சிறுமியையும் திருமணம் செய்ய விரும்பியர் என்று நினைத்துக் கொண்டீர்களா?



• வளர்ப்பு மகனின் மனைவியையும் விவாகரத்திற்கு பிறகு திருமணம் செய்துக்கொண்ட நபர் என்று இயேசுவை நினைத்துக் கொண்டீர்களா?



• அடிமைப் பெண்களை திருமணம் செய்துக் கொள்ளாமல் உடலுறவு கொள்ள தன்னை பின் பற்றுகிறவர்களுக்கு கட்டளைகளை கொடுத்துச் சென்றவர் என்று நினைத்துவிட்டீர்களா?



அருமை அப்திர் ரஹ்மான் அவர்களே, லூக்கா வசனத்தில் "பட்டயம்" என்ற வார்த்தை உங்கள் கண்களுக்கு தெரிந்ததே, அதே வசனத்தில் உள்ள "பணப்பையும், சாமான் பையும்" என்ற வார்த்தைகள் இருப்பதை உங்கள் கண்களுக்கு தெரியாமல் போனதென்ன? இயேசு, ஏன் தன் சீடர்கள் "பணப்பையும், சாமான்கள் வைக்கும் பையும் உள்ளவன் எடுத்துக்கொள்ளுங்கள்?" என்றுச் சொல்கிறார் என்று விளக்கமுடியுமா? இந்த வசனத்தில் "நிர்வாணம்" இருப்பதாக எங்கு கண்டீர்கள்? உடைகளை விற்றாவது பட்டயத்தை வாங்குங்கள் என்றுச் சொல்லும் போது, நாம் உடுத்திக்கொண்டு இருக்கும் உடையை கழற்றி விற்று, நிர்வாணமாகித் தான் வாங்கவேண்டும் என்று ஏன் புரிந்துக்கொண்டீர்கள் நீங்கள்? நம்மிடம் இருக்கும் வேறு உடையை விற்று வாங்கலாம் என்று நீங்கள் ஏன் புரிந்துக்கொள்ளவில்லை? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் என்று இயேசு கூறியிருப்பது, எவ்வளவு உண்மையாக இருக்கிறது!



2) இவ்வசனத்தின் படி கிறிஸ்தவர்கள் தங்கள் கைகளில் ஆயுதமின்றி இருக்கக்கூடாதாம். (பல நூற்றாண்டுகளாக இந்த வசனத்தை படித்துக்கொண்டு இருக்கும் கிறிஸ்தவர்களுக்கே வராத புதிய யோசனை இஸ்லாமியர்களுக்கு வந்துள்ளது - அருமையான முற்போக்குச் சிந்தனை)



கிறிஸ்தவர்களின் வேத வசனத்திற்கு இஸ்லாமிய முறையில் விரிவுரை கொடுக்க முன்வருவதற்கு முன்பு, ஒரு முறையாவது, இந்த வசனம் பற்றி கிறிஸ்தவ அறிஞர்கள் என்ன உரை எழுதுகிறார்கள்? இதன் பின்னணி என்ன என்று படித்தீர்களா?


இவ்வசனத்தின் முன்பும் பின்பும் உள்ள வசனங்கள் என்ன சொல்கின்றன என்று ஒருமுறையாவது படித்தீர்களா?


அருமை அப்திர் ரஹ்மான் அவர்களே, இந்த வசனத்தை கிறிஸ்தவர்கள் பல்லாண்டு காலமாக படித்துக்கொண்டு இருக்கிறார்கள், ஆனால், நீங்கள் சொல்வது போன்ற ஒரு அர்த்தத்தை அவர்கள் புரிந்துக்கொண்டதில்லை, புரிந்துக்கொண்டு இருந்திருந்தால், கிறிஸ்தவர்களும் தங்களோடு எப்போது ஆயுதங்களை வைத்துக்கொண்டு அவைகளை பயன்படுத்தியிருந்தால், இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களை இஸ்லாமியர்கள் தாக்கும் போது, அவர்களின் தலைகளை அல்லவா வெட்டிச் சாய்த்து இருப்பார்கள். இது போல எந்த இஸ்லாமிய நாடுகளிலாவது நடக்கின்றதா?


ஒரு நாளுக்கு ஆயிரம் முறை "இஸ்லாம் அமைதி மார்க்கம்" என்று ஓயாமல் சொல்லிக்கொண்டு இருந்தால், இஸ்லாம் அமைதி மார்க்கமாக மாறிவிடாது, அதனை அமைதி மார்க்கமாக அதனை பின் பற்றும் இஸ்லாமியர்களே வாழ்ந்து காட்டவேண்டும் (பிளீஸ், இந்திய இஸ்லாமைப் பற்றி எதுவும் சொல்லவேண்டாம், இங்கு பின் பற்றுவது, இஸ்லாம் அல்ல, இஸ்லாம் மாதிரி). கிறிஸ்தவர்கள் உங்களைப்போலச் சொல்வதில்லை, ஆனால், வன்முறையில்லாமல் வாழ்ந்து காட்டிவிடுகிறோம்.


நீங்கள் இந்த வசனத்தை மட்டுமே பார்க்கிறீர்கள், ஆனால், கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் முழு வாழ்க்கையையும் பார்க்கிறார்கள். இன்று நீங்கள் இதற்கு ஒரு புதிய விளக்கத்தை இஸ்லாமிய முறைப்படி கொடுத்துள்ளீர்கள்.


எங்கே காட்டுங்கள்? கிறிஸ்தவர்கள் ஒரு கையில் பைபிளோடும் இன்னொரு கையில் துப்பாக்கியுடனும் இருப்பதை உங்களால் காணமுடியுமா? ஆனால், இதற்கு நேர் எதிராக, ஒரு கையில் துப்பாக்கியுடனும் இன்னொரு கையில் குர்‍ஆனுடனும் காட்சியளிக்கும் அமைதிப் புறாக்களை நாம் காணமுடியும்.


கீழ் கண்ட படங்களை ஒருமுறை பார்க்கவும், அவர்களது கையில் இருப்பது என்ன? பைபிளா அல்லது குர்‍ஆனா? அவர்கள் பின்பற்றுவது இயேசுவையா முஹம்மதுவையா? அவர்கள் பின்பற்றுவது இஸ்லாமையா அல்லது கிறிஸ்தவத்தையா?



ஒருவேளை இந்த படங்களில் இருக்கும் இஸ்லாமியர்கள், பைபிளில் இருக்கும் லூக்கா 22:36ம் வசனம் குர்‍ஆனில் இருப்பதாக தவறாக நினைத்துக் கொண்டு இப்படி புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கிறார்களோ?



3) இவ்வசனத்தின் வெளிப்பாடு தான் அமெரிக்காவில் மாணவன் சகமாணவனை துப்பாக்கியால் சுடுகின்றானாம் (21ம் நூற்றாண்டின் இஸ்லாமிய கண்டுபிடிப்பு)



எவனோ ஒருவன் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு சகமாணவர்களை கொன்றால், அதற்கு லூக்கா 22:36ம் வசனம் தான் காரணம் என்று நீங்கள் சொன்னால், இது தான் கிறிஸ்தவத்தின் கலாச்சாரம் என்று முஸ்லீம்கள் அதுவும் முஹம்மதுவை வழிகாட்டியாக வைத்துள்ள முஸ்லீம்கள் சொன்னால், கீழ் கண்ட செய்திகள் இஸ்லாமின் கலாச்சாரமா சொல்லுங்கள்?


இந்த படங்களில் துப்பாக்கியுடன் இருக்கும் இந்த பிஞ்சுக் குழந்தைகள் யார்? இவர்கள் முஸ்லீம்களா அல்லது கிறிஸ்தவர்களா? இந்த சிறிய வயதில் இவர்களின் நோக்கம் என்ன? இவன் இயேசுச் சொன்ன லூக்கா 22:36ம் வசனம் போதிக்கப்பட்டதால் தான் இப்படி காட்சியளிக்கிறானோ? அல்லது குர்‍‍ஆன் படி இவன் போஸ் கொடுக்கின்றானா?



இஸ்லாம் அமைதி மார்க்கமானால் ஏன் இப்படி ஒரு கையில் குர்‍ஆனோடும், இன்னொரு கையில் ஆயுதத்தோடும் காட்சியளிக்கிறான்.


எங்கோ இடிக்கிறது போல இருக்கிறதே? லூக்கா 22:36ம் வசனத்தை படிப்பவர்களாகிய கிறிஸ்தவர்கள்/பிள்ளைகள் என்னடா என்றால், இப்படி காட்சியளிப்பதில்லை, ஆனால், உலகத்திலேயே மிகவும் அமைதியான மதமாக இஸ்லாமியர்களால் மட்டுமே கருதப்படும் முஸ்லீம்கள் கையில் துப்பாக்கியுடனும், குர்‍ஆனுடனும் காட்சியளிக்கிறார்களே! எங்கேயோ பிரச்சனை உள்ளது. அது என்ன என்று இப்போதாவது புரிகிறதா?



நான் இஸ்லாமியர்களுக்குச் சொல்லிக்கொள்வது, அமெரிக்கர்கள் செய்வதெல்லாம் கிறிஸ்தவம் என்று எண்ணிவிடாதீர்கள். யாரோ துப்பாக்கியால் சுட்டால் அவன் பைபிளை படித்து தான் இப்படி செய்கின்றான் என்றுச் சொல்வது அறிவுடமையாகாது. ஆனால், அனேக இஸ்லாமிய தீவிரவாத செய்லகள் புரிபவர்களும், தீமைகள் புரிபவர்களும் தாங்கள் இஸ்லாமுக்காகத் தான் இப்படி செய்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.


உலகத்தில், எல்லா மதங்களை பின்பற்றுகிறவர்களிலும், நாத்தீகர்களிலும் நல்லவர்களும் உண்டு, கெட்டவர்களும் உண்டு. திருடர்கள் உண்டு, லஞ்சம் வாங்குபவர்கள் உண்டு, வன்முறையில் ஈடுபவர்கள் உண்டு, மனைவிமார்களை அடிப்பவர்கள் உண்டு, பெற்றோரை கொலை செய்பவர்கள், சொந்த குடும்ப நபர்களை கொல்பவர்கள் உண்டு. முக்கியமான நான் சொல்லவருவது என்னவென்றால்,


மற்ற மார்க்கங்களை பின்பற்றுகிறவர்கள் மற்றும் நாத்தீகவாதிகள் தாங்கள் தவறுகள் செய்யும் போது (முக்கியமாக தீவிரவாத செயல்களில் ஈடுபடும் போது, கொலைகளை செய்யும்போது) அதற்கு தாங்களே பொறுப்பு என்று ஒப்புக்கொள்கின்றனர், தங்கள் மார்க்கம் இப்படி செய்யச்சொன்னது என்று சொல்வதில்லை, அல்லது நான் வளர்ந்த சூழ்நிலை என்னை இப்படி மாற்றியது என்றுச் சொல்வார்கள், ஆனால், இதே குற்றத்தை செய்யும் முஸ்லீம்களில் பெரும்பான்மையானவர்கள் இதற்கு காரணம் எங்கள் மதம், இஸ்லாம் மற்றும் கு‍ர்‍ஆன் என்றுச் சொல்கிறார்கள், நாங்கள் இப்படித்தான் செய்வோம், இதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம் என்றுச் சொல்வார்கள். இது தான் மற்ற எல்லா மார்க்கங்களை விட இஸ்லாமை உலகம் ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் காண்பதற்கு காரணம். ஏன் இப்படி என்று இஸ்லாமியர்களே நீங்களே சிந்தியுங்கள்.


இப்படிப்பட்ட இஸ்லாமியர்களின் இந்த செயல்கள் எந்த கலாச்சாரம் சொல்லமுடியுமா?


அமெரிக்கா "கிறிஸ்தவம்" அல்ல, இங்கிலாந்து "கிறிஸ்தவம்" அல்ல, வேறு எந்த நாடும் கிறிஸ்தவம் அல்ல, கிறிஸ்தவம் தனிப்பட்ட மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கையில் காணமுடியும்.


ஆனால், சௌதி அரேபியா தான் இஸ்லாம், பாகிஸ்தான் தான் இஸ்லாம், மலேசியா தான் இஸ்லாம், ஆப்கானிஸ்தான் தான் இஸ்லாம், எகிப்து தான் இஸ்லாம். இந்த நாடுகளில் இஸ்லாமை பொதுவில் காணலாம், சாலைகளில் காணலாம், அரசாங்க சட்டங்களில் காணலாம். இஸ்லாமியர்கள் சொல்வார்கள், இந்த நாடுகளில் பின் பற்றப்படுவது இஸ்லாம் இல்லை என்று, ஆனால், இந்த வார்த்தைகள் ஜனநாயக நாட்டின் பாமர மக்களை திசைத் திருப்பும் வரிகளாகும். யாருக்குத் தெரியும், நாளைக்கு இந்தியாமும் ஒரு இஸ்லாமிய நாடாக மாறினால், எத்தனை பெண்கள் கற்பழிக்கப்படுவார்கள், கற்பழித்தவனுக்கு எதிராக சாட்சிச் சொல்ல நம் இந்தியப் பெண்கள் ஆண்களை எங்கே தேடுவார்கள், எத்தனை பேர் சாலைகளின் மத்தியில் தூக்கிலிடப்படுவார்கள்? ஆகையால், அமெரிக்காவில் நடக்கும் அட்டூழியங்களுக்கு கிறிஸ்தவத்தை குறை கூறாதீர்கள், அங்கு கிறிஸ்தவ சட்டம் நடைபெறவில்லை.



4) லூக்கா 22:36ம் வசனத்தின் விளக்கமாக கிறிஸ்தவர்கள் என்ன கூறுவார்கள் என்று கேட்கிறார்?


இதற்கான பதிலை இந்த கட்டுரையில் காணலாம்:

பாகம் 3.2: லூக்கா 22:36ல் உள்ள பட்டயம் பற்றி ஒரு சிறு விளக்கம்



5) லூக்கா 22:36ம் வசனம் "எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்ள ஒரு ஆயுதத்தை வாங்கிக்கொள் என்று" கட்டளையிடுகிறதாம்



லூக்கா 22:36ம் வசனத்தின் உண்மைப் பொருள் எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்ள அல்ல என்பதை மேலே காட்டியுள்ள கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது, மட்டுமல்ல, இந்த கட்டுரையிலும் நான் அதை விளக்கவுள்ளேன்.


நம்மை எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்ள சண்டையிடுவது பயங்கரவாதமா?


நாம் சென்றுக்கொண்டு இருக்கும் போது திருடர்கள் வழிமறித்து பணமும் நகையும் கொடுக்கவேண்டும் என்றுச் சொல்கிறார்கள், நாம் கொடுக்காமல் சண்டைபோடுகிறோம், இது பயங்கரவாதமா?


அபூ அப்திர ரஹ்மான் அவர்களிடம் கேட்கிறேன், "கட்டுரையின் பெயரை பயங்கரவாதம்" என்று வைத்துவிட்டு, எதிரிகளிடமிருந்து, தற்காத்துக்கொள்வதை இந்த கட்டுரையில் எழுதியுள்ளீர்களே! இது நியாயமா?


எது பயங்கரவாதம் / எது தற்காப்பு:


உங்களுக்கு எது பயங்கரவாதம் எது தற்காப்பு என்று தெரியவில்லை என்று நினைக்கிறேன். அதை நான் விளக்குகிறேன். மக்கா வியாபாரிகள் மதினாவிலிருந்து 70 அல்லது 80 மைல் தொலைவில் பத்ரு என்ற இடம் வழியாக அமைதியாகச் சென்றுக்கொண்டு இருக்கும் போது, உங்கள் முஹம்மது தன் அடியார்(ட்)களோடுச் சென்று தாக்கினாரே அதைத் தான் பயங்கரவாதம், வன்முறை என்றுச் சொல்வார்கள்.


அதே போல, முஹம்மது தங்கள் வியாபாரிகளை தாக்க வருகிறார் என்று தெரிந்துக்கொண்டு மக்கா மக்கள் ஒரு பெரும்படையோடு வந்து சண்டையிட்டார்களே, அதனை "தற்காப்பு" என்பார்கள்.


ஆக, லூக்கா 22:36ம் வசனம் ஒரு தற்காப்புக்காக என்று நீங்கள் சொல்பவர்களாக இருந்தால், இந்த கட்டுரையில் அதைப் பற்றி எழுதியிருக்கக்கூடாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.


இப்போது லூக்கா 22:36ம் தற்காப்புக்காக சொல்லப்படவில்லை என்பதை விளக்குகிறேன்.



இயேசு தற்காப்புக்காக பட்டயங்களை வாங்கிக்கொள்ளுங்கள் என்றுச் சொல்லவில்லை


இயேசு தற்காப்புக்காக இப்படி பட்டயங்களை வாங்குங்கள் என்றுச் சொல்லவில்லை என்பதற்கு அனேக ஆதாரங்கள் உள்ளன.



ஆதாரம் 1: அக்கிரமக்காரரில் ஒருவராக இயேசு கருதப்படவேண்டும் - லூக்கா 22:37:



லூக்கா 22:36ம் வசனத்தை படித்த அபூ அப்திர ரஹ்மான் அவர்கள் அடுத்த வசனமாகிய 37ம் வசனத்தை படித்துயிருந்தால் இப்படியெல்லாம் கேட்டு இருக்கமாட்டார்.


அடுத்த வசனத்திலேயே ஏன் இயேசு பட்டயங்களை வாங்கச் சொல்கிறார், அதுவும் தங்கள் உடைகளை விற்றாவது வாங்குங்கள் என்று ஏன் சொல்கிறார் என்று லூக்கா 22:37ல் சொல்லப்பட்டுள்ளது, இந்த வசனத்தை படிக்க அபூ அப்திர் ரஹ்மான் அவர்கள் மறந்துவிட்டார்கள் (என்ன செய்யமுடியும் அவருக்கு தேவையானதை மட்டும் அவர் படித்தார்)



லூக்கா 22:37 இவ்விதமாகச் சொல்கிறது:


அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் முடிவுபெறுங்காலம் வந்திருக்கிறது என்றார்.



மேசியா (மஸீஹா) பற்றி பழைய ஏற்பாடு சொல்லும் தீர்க்கதரிசனங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறிக்கொண்டு இருக்கின்றன. அது போல, "மேசியா ஒரு அக்கிரமக்காரனைப் போல, ஒரு குற்றவாளியைப்போல கருதப்படவேண்டும்" என்ற ஏசாயா 53:12ம் வசனத்தின் நிறைவெறுதலுக்காகவே அவர் இப்படிச் சொன்னார்.



அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக் கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார். ஏசாயா 53:12



ஆக, இயேசு அக்கிரமக்காரர்களில் ஒருவர் என்று கருதப்படவேண்டும் என்றுச் சொன்னால், அவரின் சீடர்களில் யாரிடமாவது சில பட்டயங்கள் இருக்கவேண்டும். அதற்காகவே அவர் இப்படிச் சொன்னார் என்பது தெளிவு. இதனை ஏன் அப்திரரஹ்மான் அவர்கள் பார்க்கவில்லை. இந்த வசனத்தில் இல்லாத வார்த்தையாகிய "நிர்வாணம்" என்ற வார்த்தையை நுழைத்து பொருள் கூறத்தெரிந்த அவருக்கு, அடுத்த வசனத்தில் சொல்லப்பட்ட பதில் ஏன் தெரியவில்லை. இதைத் தான் "கண்கள் இருந்தும் காணாதவர்களாய் இருக்கிறார்கள்" என்று இயேசு கூறினாரோ?


உங்கள் வஸ்திரங்களை விற்றாவது என்று இயேசு சொல்லும் போது, உடலில் போட்டுக்கொண்டு இருக்கின்ற உடைகளை கழற்றி நிர்வாணமாகித் தான் பட்டயத்தை வாங்க வேண்டும் என்று ஏன் அபூ அப்திர் ரஹ்மான் அவர்கள் புரிந்துக் கொள்ளவேண்டும்? சீடர்களிடமிருக்கும் இன்னொரு ஜோடி உடைகளை விற்று வாங்கக்கூடாது என்று என் அவர் புரிந்துக்கொள்ளவில்லை?


மத்தேயு 5:40ஐ அபூ அப்திர ரஹ்மான் அவர்கள் எப்படி புரிந்துக்கொள்வார்கள்?


மத்தேயு 5:40 உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக் கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு.



And if any man will sue thee at the law, and take away thy coat, let him have thy cloke also. (KJV)



இன்றைய நம்முடைய உடைகளின் படி, ஒருவன் உங்களுடன் வழக்காடி உங்கள் கோட் அல்லது மேல் சட்டையை எடுத்துக்கொண்டால், அவனுக்கு உங்கள் பனியனையும் கொடுத்துவிடுங்கள் என்று அப்திர ரஹ்மான் புரிந்துக்கொள்வாரா, அல்லது மேல் சட்டைக்காக ஒருவன் வழக்காடினால், அவனுக்கு உங்கள் பனியன், கால் சட்டை (பேண்ட்), உள்ளாடை கூட கொடுத்துவிட்டு, உடலில் ஒரு ஆடையும் இல்லாமல் நிர்வாணமாக சென்று விடுங்கள் என்று இயேசு சொன்னார் என்று புரிந்துக்கொள்வாரா? ஒரு வசனம் சொல்லப்படும் போது, அது சொல்லப்பட்ட இடம், சொல்லும் நபர், அவரின் குணநலன்கள், பின்னணி போன்றவைகளை தெரிந்துக்கொண்டால் தான் சரியான பொருள் வரும், இல்லையானால், அப்திர ரஹ்மான் அவர்களுக்கு தென்பட்டது போல, எல்லாவற்றிலும், "நிர்வாணமே தெரியும்".



ஆதாரம் 2: இயேசு சண்டையிட்டு, தப்பித்துக் கொண்டாரா? இல்லையே!?



இயேசு பட்டயங்களை வாங்கிக்கொள்ளுங்கள் என்றுச் சொன்னது, தீர்க்கதரிசனம் நிறைவேற்றுவதற்காகவே தவிர தப்பிப்பதற்கு அல்ல என்பதை மேலே விளக்கினோம்.



இப்போது, உண்மையில் அன்று இரவு என்ன நடந்தது? உண்மையாகவே தப்பித்துக்கொள்ளவே இயேசு பட்டயங்கள் வாங்குங்கள் என்றுச் சொன்னாரா என்பதை காண்போம்.



1) இயேசு தன் மூன்றரை ஆண்டு காலத்தில் பல முறை எருசலேமுக்கு வந்துள்ளார்
, ஆனால், இந்த முறை தான் அவர் ஒரு திட்டத்தோடு வந்தார். அவருடைய மரணம், உயிர்த்தெழுதல் பற்றி சீடர்களிடம் முன்னுரைத்தார். (லூக்கா 18:31-34)



2) உண்மையாகவே இயேசு தப்பித்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்திருந்தால்
, அவர் எருசலேமுக்குள் வந்திருக்கவே மாட்டார்.



3) உண்மையாகவே அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க விரும்பியிருந்தால்,
வழக்கமாகச் செல்லும் இடத்திற்கு அவர் அன்று இரவு சென்றுயிருக்கவே மாட்டார். அன்று இரவு, "தன்னோடு சாப்பிடும் ஒருவன் காட்டிக்கொடுப்பான்" என்றுச் சொன்னவர், தப்பிக்க விரும்பியிருந்தால், வேறு இடத்திற்கு சென்றுயிருப்பார், கெத்சமனே தோட்டத்திற்கே வழக்கமாக சென்றுயிருக்கமாட்டார்.


பின்பு: இதோ, என்னைக் காட்டிக்கொடுக்கிறவனுடைய கை என்னுடனேகூடப் பந்தியிலிருக்கிறது. தீர்மானிக்கப்பட்டபடியே மனுஷகுமாரன் போகிறார், ஆனாலும் அவரைக் காட்டிக்கொடுக்கிற மனுஷனுக்கு ஐயோ என்றார். (லூக்கா 22:21-22)


4) தன்னை விட்டு தன் சீடர்கள் ஓடிப்போவார்கள் என்று இயேசு முன்னுரைத்தார்.




அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள். (மத்தேயு 26:31)




இப்படி தன்னை விட்டு ஓடிப்போகும் இவர்களை நம்பியா இயேசு இரண்டு பட்டயங்கள் போதும் என்றுச் சொல்வார்?



5) உண்மையிலேயே சீடர்கள் இயேசுவை விட்டு ஓடிப்போனார்கள்




இயேசு அவர்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக் கொண்டிருந்தேன்; அப்பொழுது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; ஆனாலும் வேதவாக்கியங்கள் நிறைவேறவேண்டியதாயிருக்கிறது என்றார். அப்பொழுது எல்லாரும் அவரை விட்டு ஓடிப்போனார்கள். (மாற்கு 14:48-50)




இரண்டு பட்டயங்கள் எங்களிடம் உண்டு என்றுச் சொன்னவர்கள் தான் தப்பி ஓடினார்கள், நான் உங்களை விட்டு ஓடமாட்டேன் என்றுச் சொன்ன சீடர்கள் தான் அவரை விட்டு ஓடினார்கள், ஆனால், இயேசு அங்கேயே இருந்தார்.



6) இயேசு தப்பிக்க முயற்சி எடுக்கவில்லை, அவர்கள் அவரை பிடித்துக்கொண்டார்கள்




அவன் வந்தவுடனே, அவரண்டையில் சேர்ந்து: ரபீ, ரபீ, என்று சொல்லி, அவரை முத்தஞ் செய்தான். அப்பொழுது அவர்கள் அவர்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள். (மாற்கு 14:45-46)



இயேசு தப்பிக்க நினைத்திருந்தால், இப்படி அவர்களுக்கு முன்பாக நின்று பேசியிருக்கமாட்டார், பட்டயத்தை எடுத்து சண்டைபோடவில்லையானாலும் குறைந்தபட்சம் ஓடியாவது இருப்பார், ஆனால், இயேசு இப்படி செய்யவில்லை, காரணம் அவர் அதற்காகவே வந்தார்.


ஆனால், இதே இயேசு தன் ஆரம்ப கால ஊழியத்தின் போது, தன் சிலுவை மரணம் நேரம் வரவில்லை என்பதால், பரிசேயர் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியபோது, அவர்களிடமிருந்து தப்பித்துச் சென்றார்.



அப்பொழுது, பரிசேயர் வெளியே போய், அவரைக் கொலை செய்யும்படி அவருக்கு விரோதமாய் ஆலோசனைபண்ணினார்கள். இயேசு அதை அறிந்து, அவ்விடம்விட்டு விலகிப்போனார். திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள்; அவர்களெல்லாரையும் அவர் சொஸ்தமாக்கி, தம்மைப் பிரசித்தம்பண்ணாதபடி அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார். (மத்தேயு 12:14-16)



எருசலேமுக்கு வெளியே தான் மரணிக்கப்போவதில்லை, எருசலேமில் மட்டுமே தன் மரணம் இருக்கும் என்பதை இயேசு தெளிவாகச் சொல்லியுள்ளார்.



அந்த நாளிலே சில பரிசேயர் அவரிடத்தில் வந்து: நீர் இவ்விடத்தை விட்டுப் போய்விடும்; ஏரோது உம்மைக் கொலைசெய்ய மனதாய் இருக்கிறான் என்றார்கள். இன்றைக்கும் நாளைக்கும் மறுநாளைக்கும் நான் நடமாடவேண்டும்; எருசலேமுக்குப் புறம்பே ஒரு தீர்க்கதரிசியும் மடிந்துபோகிறதில்லை யென்று நான் சொன்னதாக நீங்கள் போய் அந்த நரிக்குச் சொல்லுங்கள். (லூக்கா 13:31, 33)



மரணத்தை முத்தமிட வந்தவர் அதிலிருந்து தப்பிக்க முயற்சி எடுக்கவில்லை. எனவே இரண்டு பட்டயங்களை வாங்கச் சொன்னது, தீர்க்கதரிசன நிறைவேறுதலுக்காகவேயாகும் தற்காப்புக்காக அல்ல.



ஆதாரம் 3: இரண்டு பட்டயங்கள் வைத்துக் கொண்டு 12 பேர் தப்பிப்பது எப்படி?



இயேசு இரண்டு பட்டயங்களை வாங்குங்கள் என்றுச் சொன்னபோது, சீடர்கள் இதோ இரண்டு பட்டயங்கள் இங்குண்டு என்றுச் சொன்னார்கள், அதற்கு இயேசு மறுமொழியாக, "போதும்" என்றுச் சொன்னார்.


இஸ்லாமியர்கள், முக்கியமாக அப்திர் அரஹ்மான் அவர்கள் சொல்வது போல, இயேசு தப்பித்துக்கொள்ளத் தான் பட்டயங்களை வாங்குங்கள் என்றுச் சொல்லியிருந்தால், ஒவ்வொருவருக்கு ஒரு பட்டயமாவது தேவைப்பட்டிருக்குமே, குறைந்த பட்சம் 12 பட்டயங்களாவது தேவைப்பட்டிருக்குமே! ஆனால், இரண்டு பட்டயங்களை சீடர்கள் உண்டு என்றுச் சொன்னபோது "இது போதும்" என்று ஏன் சொன்னார்? இதனை அப்திர ரஹ்மான் அவர்கள் தான் விளக்கவேண்டும்.



அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார். பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே ஒலிவமலைக்குப் போனார்; அவருடைய சீஷரும் அவரோடேகூடப் போனார்கள். (லூக்கா 22:38-39)



உண்மையாகவே, தற்காப்பிற்காக பட்டயங்களை வாங்குங்கள், அதுவும் அப்திர ரஹ்மான் அவர்களின் விரிவுரையின் படி நிர்வாணமாக இருந்தாலும் பரவாயில்லை, பட்டயம் வேண்டும் என்ற கோணத்தில் இயேசு சொல்லியிருந்தால், "இரண்டு பட்டயங்கள்" இருக்கின்றது என்று சீடர்கள் சொல்லியிருந்தால், இயேசு மேற்கொண்டு சில கேள்விகளை கேட்டுயிருக்கமாட்டாரா?


1) என்ன சீடர்களே, இரண்டு பட்டயங்களை வைத்துக்கொண்டு நாம் அனைவரும் தப்பிக்கமுடியுமா?


2) எனவே, எல்லாரும் சென்று ஒவ்வொருவரும் ஒரு பட்டத்தை வாங்கிக்கொண்டு வாருங்கள் (அப்திர் ரஹ்மான் அவர்கள் சொன்னதுபோல, நீங்கள் நிர்வாணமாக எனக்கு முன்பாக வந்தாலும் பரவாயில்லை, ஆனால், பட்டயம் இல்லாமல் இருக்கக்கூடாது)


என்று இயேசு கேட்டிருப்பாரே, ஆனால், இயேசு இப்படி கேட்கவில்லையே?! ஒரு வேளை இயேசுவின் சீடர்களுக்கு மார்ஷியல் ஆர்ட்ஸ் என்றுச் சொல்லக்கூடிய, கராத்தே, குன்பூ, வர்மக்கலை போன்ற சண்டைப்பயிற்சிகளை இயேசு கற்றுக்கொடுத்துயிருப்பாரோ? பட்டயம் இல்லாமல் மீதமுள்ளவர்கள் சண்டையிடுவதற்கு!


குறிப்பு: மீன்களை பிடித்துக்கொண்டு இருந்த பேதுருவிற்கு பட்டயத்தை எப்படி கையாளுவது என்று சரியாகத் தெரியவில்லை, இதனால் தான் அவர் தலையை வெட்டப்போய், காதை வெட்டினார். எனவே, சீடர்களுக்கு எந்த சண்டைப் பயிற்சியும் கொடுக்கப்படவில்லை, இதற்கெல்லாம் முஹம்மதுவின் சீடர்கள் தான் சரி.



ஆதாரம் 4: பட்டய பயன்பாடு பற்றி இயேசுவின் எச்சரிப்பு



தற்காப்பிற்காக பட்டயம் தேவை, இயேசு தப்பிக்க வேண்டும் என்று நினைத்து இருந்தால், பேதுரு பட்டயத்தால் ஒருவனின் காதை வெட்டும் போது, அதை உற்சாகப்படுத்தியிருப்பரே அன்றி, காயப்பட்ட தன் எதிரியை அந்த இடத்திலேயே சுகப்படுத்தியிருக்கமாட்டார்.



அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கைநீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான். அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள். (மத்தேயு 26:51-52)



பட்டயத்தை அநியாயமாக கையாள்பவர்கள் அதனாலேயே மரிப்பார்கள் என்று இயேசு கூறினார். இந்த உலகம் எத்தனையோ சர்வாதிகாரிகளைக் கண்டது, அவர்களின் முடிவு, கொலை செய்யப்பட்டோ, விஷம் வைத்து கொல்லப்பட்டோ, தற்கொலை செய்துக்கொண்டோ மரித்துள்ளார்கள்.


ஒரு ஹிட்லர், சத்தாம் உசேன், இன்னும் முஹம்மதுவிற்கும் ஒரு யூதப்பெண் விஷத்தைக் கொடுத்தாளே, அதன் பயனாக அவர் நோய்வாய்ப்பட்டு மரித்தாரே. பட்டயத்தை அநியாயமாக பயன்படுத்துபவர்களுக்கு இயேசுவின் இந்த வார்த்தைகள் எச்சரிக்கைகள்.


ஆக, முடிவாக சுருக்கத்தைச் சொல்கிறேன்,


1) இயேசு தற்காப்பிற்காக பட்டயத்தை வாங்கச் சொல்லவில்லை.



2) தீர்க்கதரிசன நிறைவேறுதலுக்காகவே பட்டயம் பற்றி சொன்னார்.



3) சீடர்கள் தன்னை விட்டு ஓடிப்போவார்கள் என்றுச் சொன்னார், அப்படியே நடந்தது.



4) இயேசு தானாகவே எருசலேமுக்கு வந்தார், வ‌ழக்கமாக செல்லும் இடத்திற்கே அன்றும் சென்றார்.



5) சீடர்களுக்கு அனேக கடைசி கட்டளைகளை கொடுத்தார்.


6) தீர்க்கதரிசன நிறைவேறுதலுக்காக பட்டயங்களை வைத்துக்கொள்ளுங்கள் என்றார், ஏனென்றால், இவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்படவேண்டும் என்று ஏசாயா 53:12ல் வரப்போகும் மேசியாவைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது.



7) வழக்கமான இடத்திற்கே சென்றார், யூதாஸும் சரியாக அந்த இடத்திற்கே காவலாளிகளோடு ஆசாரியர்களோடு வந்தான்.



8) பிடிபட்டார், அவர் நினைத்து இருந்தால், அனேக தேவ தூதர்கள் அவருக்கு பாதுகாப்பிற்கு வந்திருப்பார்கள், ஆனால், அவர் அந்த பாத்திரத்தில் குடிக்கவே வந்தார், அப்படியே செய்தார்.



9) மட்டுமல்ல, பேதுருவும் மற்ற சீடர்களும் இயேசுவின் பட்டயம் பற்றிய லூக்கா 22:36ஐ நீங்கள் சொல்வது போல புரிந்துக்கொள்ளவில்லை. ஆகையால், சீடனாகிய யோவான் தவிர மற்ற அனைவரும் இரத்தசாட்சிகளாக கிறிஸ்துவிற்காக மரித்தார்களே தவிர, கிறிஸ்துவின் பெயரினால் "இரத்தம் சிந்தவில்லை".



அபூ அப்திர ரஹ்மான் அவர்கள் கூறுவது போல, தற்காப்பிற்காக இயேசு பட்டயங்களை வாங்கச் சொல்லவில்லை. கிறிஸ்தவ சபையோ, கிறிஸ்தவர்களோ வன்முறையில் ஈடுபடக்கூடாது என்பதற்கு இயேசுவின் வாழ்க்கையும், அவரது கட்டளைகளும் ஒரு அடித்தளமாக அமைகிறது.


கிறிஸ்தவர்கள் தங்களை எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளக்கூடாது என்பதல்ல, இதன் அர்த்தம், "இயேசு பட்டயங்களை வாங்கச் சொன்னது, தற்காப்பிற்காக அல்ல" என்பதை விளக்கவே இந்த கட்டுரை எழுதப்படுகிறது.


இஸ்லாமியர்களுக்குச் சவால்: இயேசுவோ, அவரது சீடர்களோ, அல்லது புதிய ஏற்பாட்டில் எந்த புத்தகத்திலாகிலும், "கிறிஸ்தவ சபையை நிறுவுவதற்கு வன்முறையை பயன்படுத்தலாம்" என்று எங்கும் சொல்லப்படவில்லை. கிறிஸ்துவை விட்டு வெளியேறுகிறவர்களை கொல்லுங்கள் என்று இயேசு எங்கும் சொல்லவில்லை, அவரது சீடர்களும் அதனை போதிக்கவில்லை. உங்களால் முடிந்தால், கிறிஸ்துவின் நற்செய்தியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லையானால் அவர்களை கொலை செய்யுங்கள், கிறிஸ்தவர்கள் வேறு மார்க்கத்திற்கு மாறினால் அவர்களை கொலை செய்யுங்கள் என்று ஒரு வசனத்தை இயேசுவின் கட்டளையாகவோ, அவரது சீடர்களின், அப்போஸ்தலர்களின் கட்டளைகளாகவோ, புதிய ஏற்பாட்டில் காட்டுங்கள், பார்க்கலாம்.


ஆகவே, இஸ்லாமியர்களே வன்முறைக்கும் கிறிஸ்தவ சபைக்கும் முடிச்சு போடாதிருங்கள். அப்படி நீங்கள் போட்டாலும், அவைகளை எப்படி அவிழ்க்கவேண்டும் என்று கிறிஸ்தவர்களுக்குத் தெரியும். இயேசுவின் வாழ்க்கையும், போதனையும் கிறிஸ்தவ சபைக்கு அடித்தளமாக இருக்கிறது, அவரது சீடர்களின் வாழ்க்கையும் போதனையும், அந்த அடித்தளத்தில் எழுப்பப்பெற்ற அழகான மாளிகையாக இருக்கின்றது. ஒரு வேளை உலகம் கிறிஸ்தவர்களில் சிலரிடம் வன்முறையை காணலாம், ஆனால், கிறிஸ்துவிடம் காணமுடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


இன்னும், லூக்கா 22:36ம் வசனம் பற்றி ஏதாவது தெரியவேண்டுமானால், மறுப்போ பதிலோ எழுதுங்கள், அதற்கு பதிலை நான் மறுபடியும் எழுதுவேன்.


கர்த்தருக்கு சித்தமானால், நான்காம் பாகத்தில் சந்திக்கலாம். அதுவரை, தன்னை பிடிக்கவந்தவனுக்கும் சுகம் கொடுத்து, தன்னை சிலுவையில் அறைந்தவர்களும் அறியாமையினால் இப்படி செய்தார்கள் என்று பரிந்து பேசிய இயேசுக் கிறிஸ்துவின் சமாதானம், அமைதி உங்கள் உள்ளங்களையும் இல்லங்களையும் ஆண்டுக்கொள்வதாக. ஆமென்.


Source: http://sites.google.com/site/isakoran/rebuttals/abunoora/abdhirrahman_luke_2236


Monday, June 22, 2009

கிறிஸ்தவம் பார்வைக்கு பதில்: லூக்கா 22:36 ல் உள்ள பட்டயம் பற்றி ஒரு சிறு விளக்கம்

கிறிஸ்தவன் பார்வையின்: "பைபிள் கூறும் பயங்கரவாதம் (3)" கட்டுரைக்கு பதில்: 3.2


முன்னுரை:


கிறிஸ்தவம் பார்வை என்ற இஸ்லாமிய தளம் "பைபிளில் பயங்கரவாதம்" என்ற தலைப்பில் கட்டுரைகளை எழுதிக்கொண்டு வருகிறது. அவர்களின் இந்த தொடர் கட்டுரைகளுக்கு இதுவரை மூன்று பதில்கள் தரப்பட்டுள்ளது, அவைகளை இங்கு படிக்கவும்: 






மூன்றாம் பாகத்திற்கான இரண்டாம் பகுதி ( 3. 2 ) பதிலை இந்த கட்டுரையில் காணலாம். அதாவது, லூக்கா 22:36ம் வசனத்தில் இயேசு பட்டயத்தை பயன்படுத்தவேண்டும் என்று போதித்தார் என்று இவர்கள் கூறியுள்ள விமர்சனத்திற்கு மறுப்பாக இந்த பதில் தரப்படுகிறது.  


அபூ அப்திர ரஹ்மான் அவர்கள் இந்த மூன்றாம் பாகத்தில் லூக்கா 22:36ம் வசனம் பற்றி எழுதிய வரிகளுக்கு தனியாக இன்னொரு பதிலை வேறு கட்டுரையில் தருகிறேன்.
-----------------------------------------


லூக்கா 22:36 ல் உள்ள பட்டயம் பற்றி ஒரு சிறு விளக்கம்


ஜேம்ஸ் அர்லண்ட்சன்


சுவிசேஷங்களில் இயேசு வன்முறையை ஆதரித்ததும், ஊக்குவித்தமும் உண்டா? குறைந்த பட்சம் நியாயமான முறையில் வன்முறையில் ஈடுபடுவதையாவது அவர் ஆதரித்ததுண்டா? அவர் தன்னுடைய உண்மையான சீடர்களை இதற்கென்று அழைத்தாரா? அவர் தன்னுடைய எல்லா சீடர்களிடமும் பட்டயங்களை வாங்கும்படி உண்மையாகவே கட்டளையிட்டாரா? அவர் இப்படி சொன்னதாக ஒரு வசனத்தைக் குறிப்பிடலாம். 



லூக்கா 22:36 சொல்லுகிறது.



அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்.



இந்த வசனத்தை தனியாக நாம் படிக்கும் போது, வன்முறையும் பட்டயமும் சாத்தியமானவைகள் என்று இந்த வசனம் சொல்வதாக தெரிகிறது. எல்லா சீடர்களும் சென்று பட்டயங்களை கட்டாயமாக‌ வாங்கிக் கொள்ளவேண்டும் என்று இவ்வசனத்தில் காணப்படுகிறது. இயேசுவின் மரணம் மற்றும் அடக்கத்திற்கு பின் அவரில்லாமல் தனியாக உலகத்தை சந்திக்க வேண்டும் என அவர்கள் நினைத்தார்கள்.



எனினும், இந்த வசனத்தை தனியாக பிரித்துபடிக்காமல் அதன் பின்னணியத்தோடு படிக்கையில் அதன் பிரத்தியட்சமான அர்த்தம் என்னவாயிருக்கும்? உண்மையாக இயேசு ஒரு பட்டயத்தை உபயோகித்தாரா? மேலும் தன்னுடைய சீடர்கள் ஆளுக்கொரு பட்டயத்தை வாங்கிக்கொள்ள வேண்டும் என்று விரும்பினாரா?



லூக்கா 22:36ம் வசன‌ விளக்க உரை



சுமார் மூன்று வருடங்கள் அவர் எருசலேமுக்குள் வெளிப்படையான ஒரு வெற்றி பவனியாக நுழைவதை தவிர்த்தார் ஏனென்றால் அப்படி அவர் பரிசுத்த நகரத்திற்குள் கால் வைக்கும் போது பல நூறு வருடங்களுக்கு முன் ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டபடி (ஏசாயா 53:12) ஒரு சாதாரண குற்றவாளியின் மரணத்தை போல மரணம் அடைந்து தன் ஊழியத்தை நிறைவேற்ற வேண்டியிருக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார் என்று லூக்கா 22:36 ன் சரித்திர பின்னணி தெளிவாக விளக்குகிறது. எனவே அவர் தன்னுடைய பணிகளை எருசலேமுக்கு வெளியே முடிக்க வேண்டியிருந்தது.



இறுதியாக தன்னுடைய தீர்க்கதரிசிகளை கொல்லுவதில் புகழ்பெற்ற அந்த நகரத்திற்குள் இயேசு நுழைகிறார் (லூக்கா 13:33-34). அவர் தன்னுடைய கைது, விசாரணை மற்றும் சிலுவையில் அறையப்படுதல் போன்றவைகள் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பே அவை எல்லாவற்றையும் பற்றி முன்னுரைத்திருந்தார். மதத்தலைவர்கள் அவரை இரக‌சியமாக கண்காணித்துக் கொண்டிருந்தார்கள் அவர் மீது பழி சுமத்துவதற்காக வஞ்சகமான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் (லூக்கா 20:20). இந்த நேர்மையற்ற கேள்விகள் அவர் நகரத்திற்குள் நுழைவதற்கு முன் கேட்கப்பட்டிருந்தாலும், அந்த நெருக்கடியான நாட்களில் இப்படிப்பட்ட கேள்விகள் அதிகமாக கேட்கப்பட்டது. ஆனால் அவர்களுடைய எல்லா தந்திர வலைகளையும் தவிர்த்து அவர் ஆச்சரியமான விதத்தில் பதிலளித்தார். பிரச்சனைகளுக்கு நடுவிலும் ஒவ்வொரு நாளும் அவர் தேவாலயத்தில் பிரசங்கித்தார், ஜனங்கள் திரளாய் கூடிவந்தார்கள் ஜனங்களுக்கு பயந்ததினால் அதிகாரிகள் அவரை கைது செய்ய முடியவில்லை. பிறகு யூதாஸ், ஜனக்கூட்டம் இல்லாத போது தான், அவர்களுக்கு அறிவிப்பு கொடுப்பதற்கும், அவரைக் காட்டிக் கொடுப்பதற்கும் தானாகவே முன்வந்தான். (லூக்கா 22:1-6)



பஸ்கா பண்டிகை நெருங்கியிருந்த போது அவர் இறுதி போஜனத்தை ஆயத்தப்படுத்தும் படி தன்னுடைய சில சீடர்களுக்குச் சொன்னார். புதிய உடன்படிக்கையில் (லூக்கா 22:17-20) உலகத்தின் பாவத்திற்காக சிந்தப்படுகிற தன் இரத்தத்தையும் உடைக்கப்படுகிற தன் சரீரத்தையும் பிரதிபலிக்கிற ரொட்டியையும் திராட்சைரசத்தையும் அவர் உயர்த்திப்பிடித்தார். அப்படியிருக்கும்போது அந்த போஜனத்திலிருந்து யூதாஸ் நைசாக நழுவினான், அதிகாரிகளிடம் அவனுக்கு போகவேண்டியிருந்தது. ஏனென்றால் இயேசு வழக்கமாக ஒலிவ மலைக்கு சென்று ஜெபிப்பார் என்பதை அவன் அறிந்திருந்தான் (லூக்கா 21:37). அந்த இரவிலும் எந்த வித்தியாசமின்றி அப்படியே நடந்தது.



இப்பொழுது நாம் லூக்கா 22: 36ம் வசனத்தின் வசன பின்னணியை (Textual Context) கவனிப்போம். இயேசு தாம் காட்டிக் கொடுக்கப்பட்ட அந்த இராத்திரியிலே கடைசி போஜனத்தை சாப்பிடுகிறார்.



லூக்கா 22:35-38 சொல்லுகிறது:



35 பின்னும் அவர் அவர்களை நோக்கி: நான் உங்களைப் பணப்பையும் சாமான்பையும் பாதரட்சைகளும் இல்லாமல் அனுப்பின போது, ஏதாகிலும் உங்களுக்குக் குறைவாயிருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாயிருந்ததில்லை என்றார்கள்.



36 அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக் கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்.


37 அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் முடிவு பெறுங்காலம் வந்திருக்கிறது என்றார்.



38 அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார்.



இதன் வசன‌ பின்னணி (Textual Context) குறைந்தது இரண்டு உண்மைகளை வெளிப்படுத்துகிறது. முதலாவதாக, வேவுபார்க்கிறவர்களும் அதிகாரிகளும் இயேசுவை எப்படியாவது சிக்கவைக்க வேண்டும் என்று தீவிரமாக இருந்த அந்த பதட்டமான‌ சில நாட்களில் எருசலேமுக்குள் நுழைவதற்கு முன் இயேசு தம்முடைய ஊழியத்தை வித்தியாசப்படுத்துகிறார். இயேசு எதற்காக தன்னுடைய சீடர்களிடம் பட்டயத்தைப் போய் வாங்கிக்கொள்ளுங்கள் என்றுச் சொன்னார் என்பதை புரிந்து கொள்ளுவதற்கு இந்த பதட்டமான‌ சூழ்நிலை ஏதாவது பங்கு வகிக்கிறதா? இந்தக் கேள்விக்கு கீழே பதிலளிக்கப்பட்டுள்ளது. ஏசாயா 53:12 ல் முன்னுரைக்கப்பட்டபடி தான் கைது செய்யப்படுவார் என்றும் அக்கிரமக்காரனைப் போல விசாரிக்கப்படுவார் என்பதையும் அவர் கூறினார். இதற்கும் பட்டயத்திற்கும் ஏதாவது தொடர்பு உண்டா? குற்றவாளிகள் பட்டயங்களை தங்களோடு சுமந்து கொண்டிருப்பார்களா? இதுவும் கீழே விளக்கப்பட்டுள்ளது. பட்டயத்தை உபயோகப்படுத்தும் வன்முறையைக் காட்டிலும் ஏதோ ஆழமான அர்த்தம் இயேசுவின் மனதில் இருக்கும். அது என்ன?



இந்த வசனங்களின் பொருளை இரண்டு வகைகளில் புரிந்துக்கொள்ளலாம்.



முதலாவதாக‌, எழுத்தின் படி இவ்வசனத்தை படித்தால், "இயேசுவின் கடைசி மணித்துளிகளில் பட்டயங்களை பயன்படுத்தலாம்" என்று சொல்வது போல தோன்றும். இரண்டாவதாக, இதே வசனங்களை சரித்திர மற்றும் வசன பின்னணியத்தோடு படித்தால், "இயேசுவின் கடைசி மணி நேரத்தில் பட்டயங்களை பயன்படுத்தக்கூடாது" என்று சொல்வதாகத் தோன்றும்.



மேற்கண்ட வசனங்களின் உண்மையான பொருள் நிச்சயமாக "எழுத்தின் படியான பொருள்" இல்லை என்பது மட்டும் தெளிவு. முதலில், ஏன் இவ்வசனங்களின் பொருள் "பட்டயங்களை பயன்படுத்த வேண்டும்" என்ற எழுத்தின் படியான பொருளில் இல்லை என்பதை காண்போம். ஏன் லூக்கா 22:34-38 க்கும் கெத்சமனே தோட்டத்தில் கைது செய்யப்பட்ட (லூக்கா 22: 39-53) பகுதிக்கும் சரியாக பொருந்தாது என்பதை ஆராய்வோம்.



பட்டயங்களின் கொடூர உபயோகம் (Violent use of Swords)



இயேசு தன்னுடைய சீடர்களிடம் பட்டயங்களை வாங்கும் படிச் சொல்கிறார், அவர்கள் இரண்டு பட்டயங்களை காண்பித்தபோதோ அது போதும் என்கிறார். வசனங்களை புரிந்துக் கொள்வதில் முதல் முறையானது, "வசனத்தை அப்படியே படித்து எழுத்தின்படி புரிந்துக் கொள்வதாகும்". இவ்வசனங்களுக்கு "எழுத்தின்படி பொருள் கூறுதல்" பொருந்துவதாக இல்லை. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.



முதலாவதாக, ஒரு வெளிப்படையான கேள்வியை கவனிப்போம்:



இரண்டு பட்டயங்கள் எதற்கு போதுமானது?


காவலாளிகள் அவரை கைது செய்வதை தடுத்து எதிர்த்து போராடுவதற்கு அந்த இரண்டு பட்டயங்கள் போதுமா?



இது அரிதான காரணம் ஏனென்றால் இயேசு கைது செய்யப்படும்போது சீடர்களில் ஒருவன் (யோவான் 18:10 ன் படி பேதுரு) தன்னுடைய பட்டயத்தை எடுத்து பிரதான ஆசாரியனின் வேலைக்காரர்களில் ஒருவனுடைய (யோவான் 18: 10 ன் படி மல்குஸ்) காதை வெட்டினான். இயேசு பேதுருவிடம் பட்டயத்தை போடும்படி 'இம்மட்டும் போதும் நிறுத்துங்கள்" என்று கடுமையாக கூறுகிறார். பிறகு அவனுடைய காதை மறுபடியும் அவனுக்கு பொருத்தி அவனை சுகப்படுத்துகிறார் (லூக்கா 22: 49-51) . இரண்டு பட்டயஙகள் இயேசுவை கைது செய்வதை எதிர்த்து போராடுவதற்காக மட்டும் போதுமானதாக நிச்சயமாக‌ இருக்கமுடியாது.



இரண்டாவதாக, அந்த இரண்டு பட்டயங்கள் கைது செய்யவரும் அதிகாரிகளை எதிர்த்து, ஆயுதங்களை வைத்துக்கொண்டு போராடும் ஒரு அரசியல் சேனையாக மற்றும் இராணுவ ரீதியான‌ "இயேசு இயக்கத்தை" ஸ்தாபிப்பதற்கு போதுமானதா?



லூக்கா 22:52ல் இயேசு இந்த நோக்கத்தை மறுக்கிறார். அதிகாரிகள் அவரை பிடிக்க வந்திருக்கும் போது, "நீங்கள் தடிகளோடும் பட்டயத்தோடும் என்னைப் பிடிக்க வருவதற்கு நான் என்ன கலவர கூட்டத்தையா நடத்திக் கொண்டிருக்கிறேன்?" என்று கேட்கிறார். அவர் ஒரு கலவர கூட்டத்தை நடத்தவில்லை என்பது தான் இதற்கு பதில். எனவே, அவர் பிடிக்கப்பட்டார் கொண்டுச் செல்லப்பட்டார் (வசனம் 54).



எனவே லூக்கா 22:36ல் எழுத்தின்படியுள்ள விளக்கமாகிய‌ "பட்டயம் உபயோகப்படுத்தபடவேண்டும்" என்பது அதன் நீண்ட பின்னணியை ஆராய்ந்துப் பார்த்தால், இது ஒவ்வாத விளக்கமாக உள்ளது என்பதை அறியலாம். இரண்டு பட்டயங்களானது இயேசு கைது செய்வதை எதிர்த்து எந்தவித கலகம் செய்வதற்கோ அல்லது இயேசுவும் சீடர்களும் கெத்சமெனேத் தோட்டத்தில் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கோ போதுமாயிராது.



பட்டயம் பற்றி வசன பின்னணி ரீதியிலான விளக்கம் (Contextual meaning of the Swords)



பட்டயங்களை உபயோகிக்க வேண்டும் என்ற எழுத்தின்படியான விளக்கத்திற்கு முரண்பாடாக பின்வரும் விளக்கமானது அமைப்பில் இலகுவாக காணப்படுகிறது, அதனால் குழப்பத்தின் எல்லா பகுதிகளும் சரியாக இந்த விளக்கத்தின் மூலம் இணைக்கப்படுகிறது.



முதலாவது, இயேசு எருசலேமுக்குள் பிரேவேசிப்பதற்கு முன்னரே தன்னுடைய சீடர்களிடத்தில் அவர்களுக்கான தன்னுடைய ஊழியத்தின் நோக்கம் என்ன என்பதை நினைவு படுத்துகிறார் (லூக்கா 9:3; 10:1-17). இயேசு அவர்களோடு இருந்த காலக் கட்டத்தில் சீடர்களுக்கு அதிகமான பணப்பையும், சாமான் பையும் அல்லது அதிகபடியான இன்னொரு ஜோடி காலணிகளும் தேவைப்பட்டதா? என்று கேட்டால், "இல்லை" என்பது தான் பதிலாக இருந்தது. ஏனென்றால் ஜனங்கள் அவர்களிடத்தில் நட்பாக இருந்தார்கள்.



இயேசுவின் மீது, மதத்தலைவர்களின், அதிகாரிகளின் எதிர்ப்பு மூன்று வருடங்களாக சிறிது சிறிதாக பரவியது. இப்பொழுது அவர் எருசலேமில் இருக்கிறார், அவருடைய வார்த்தைகளாலேயே அவரை குற்றப்படுத்த வேண்டும் என்று முனைப்பாயிருந்த அதிகாரிகளின் கட்டுப்பாடான விரோதத்திற்கு உள்ளாயிருந்தார். அதிகாரிகள் இல்லாத போது இயேசுவிடம் அவர்கள் தங்கள் ஆட்களை வேவுபார்க்க அனுப்புவார்கள். எனவே சூழ்நிலையானது மிகவும் பதட்டமானதாக காணப்பட்டது - அந்த இரண்டு பட்டயங்கள் - பதட்டத்தை இன்னும் வெளிக்காட்டுகிறது. இயேசுவின் ஊழியம் தெளிவாக ஒரு ஆபத்திற்குள்ளாக‌ மாற்றப்பட்டிருந்தது, சீடர்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டியிருந்தது. இருந்தபோதும், நாம் மேலே பார்த்தபடி நேரடியாக தன்னுடைய சீடர்கள் பட்டயங்களை உபயோகிக்க வேண்டும் என்று நிச்சயமாக அவர் சொல்லவில்லை. ஏனெனில் பேதுருவிடம் பட்டயத்தை தன் ஸ்தானத்தில் வைக்கும்படி இயேசு சொல்கிறார்.



இரண்டாவதாக, அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் முடிவுபெறுங்காலம் வந்திருக்கிறது என்றார். (லூக்கா 22:37) இரண்டு பட்டயங்களுக்கான தெளிவான நோக்கம் ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை (53:12) மேற்கோள்காட்டும் இயேசுவின் குறிப்பினால் விளங்குகிறது. அவர் ஒரு அக்கிரமக்காரனைப் போல் கைது செய்யபடவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தார், ஒரு அக்கிரமக்காரனைப் போலவே விசாரிக்கப்ட்டார், ஒரு அக்கிரமக்காரனைப் போலவே சிலுவையிலும் அறையப்பட்டார். ( ஆனால் அவரது கைது, விசாரணை, மரண தண்டன எல்லாம் பொய்ச் சாட்சிகளினிமித்தம் வழங்கப்பட்டது, அவர் நன்மையைத் தவிர‌ ஒன்றுமே செய்யவில்லை) இருந்தாலும் அவர் இரண்டு கள்ளர்களுக்கு நடுவே தொங்க வேண்டியாதயிற்று, அதுவும் ஏசாயா தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாகும் (லூக்கா 23:32, 39-43) அக்கிரமக்காரர்கள் தங்களோடு எதை சுமந்துசெல்வார்கள்? ஆயுதங்களை, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்படுவதற்கு இயேசுவும் ஆயுதங்களை வைத்திருப்பது அவசியமாயிருந்தது. எனவே தான் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்ற இயேசு, இரண்டு பட்டயங்கள் போதுமென்று சொன்னார்.



இன்னும் தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றுவது பற்றி மத்தேயு (26:54) கூறுகிறார். ஒருவேளை இயேசுவை கைது செய்வதைத் தடுக்க பேதுரு தொடர்ந்து பட்டயத்தை உபயோகப்படுத்திக் கொண்டேயிருந்தால், தீர்க்கதரிசனம் தடையில்லாமல் இலகுவாக நிறைவேற்றப்பட்டிருக்க முடியாது. தான் வேண்டிக் கொண்டால் பன்னிரண்டு லேகியோனுக்கும் (இராணுவ சேனைக்கும்) மேற்பட்டவர்களை தன்னுடைய பாதுகாப்பிற்காக பெறமுடியும் என்று இயேசு கூறுகிறார். ஆனால், தான் மரிக்க வேண்டிய பணியை நிறைவேற்றுவதற்காக பிதாவினால் நியமிக்கப்பட்டிருப்பதால், அதை நிறைவேற்றுவதிலிருந்து மகா ரோமப் படைகளை தடுத்து நிறுத்துவதற்கு இயேசு அனுமதிக்கவில்லை (மத்தேயு 26:53). எனவே தான் இயேசு பேதுருவிடம் பட்டயத்தை அதன் உறையிலே போடும் படிச் சொன்னார் (மத் 26:52). மேலும் லூக்கா சுவிசேஷத்தில் பேதுரு ஒருவனுடைய காதை வெட்டின பிறகு அவனிடம் சொல்லுகிறார், 'இம்மட்டும் நிறுத்துங்கள்" அல்லது "இனி ஒருபோதும் வேண்டாம்"! (22: 51) என்றுச் சொல்கிறார்.



மூன்றாவதும் இறுதியுமான விளக்கம் கூறுவதென்னவென்றால், இயேசு அடிக்கடி வெளிப்படையான பொருட்களைக் குறிப்பிட்டே (விதைகள், விளக்கு, திராட்சைத் தோட்டம், நாணயம், தொலைந்துபோன ஆடு இன்னும் பல உள்ளன), ஆன்மீக பாடங்களை, சத்தியங்களை கற்றுக் கொடுத்திருக்கிறார். அது தான் அந்த இரண்டு பட்டயங்களின் காரியத்திலும் உண்மையாக இருக்கமுடியும். இந்த அர்த்தத்திற்குரிய விளக்கத்திற்கு ஆதரவாக மத்தேயு 10:34 காணப்படுகிறது. "நான் பூமியின் மீது சமாதானத்தை அனுப்ப வந்தேன் என்று எண்ணாதிருங்கள் சமாதானத்தை அல்ல பட்டயத்தையே அனுப்பவந்தேன்" (10:34) . இந்த கட்டுரையில் படிப்பது போல‌ மத்தேயு 10: 34 ம் வசனத்தின் பின்னணியத்தை பார்க்கும் போது அவர் வெட்டிச் சாய்த்து குடும்பத்தை இரத்தக்களரியாக்கும் ஒரு நிஜமான பட்டயத்தை குறிப்படவில்லை. மாறாக ஒரு ஆவிக்குரிய பட்டயம், அது சரீரரீதியற்ற உள்ளான பிரிவினையை உண்டாக்கலாம். மேலும், ஒரே மாதிரிப் பகுதிகளான மத்தேயு 10:34 மற்றும் லூக்கா 12:51 ல் இயேசு குறிப்பிட்ட "பட்டயத்திற்கு" நேரடியான எழுத்தின் படியான (Literal) அர்த்தம் இல்லை என்பதை லூக்கா விளக்குகிறார். லூக்கா 12:51 இல் இதை லூக்கா செய்திருந்தாரானால், பிறகு ஏன் லூக்கா 22:36-38ல் "பட்டயம்" என்பதன் அர்த்தத்தை கொஞ்சம் மாற்றியிருக்கவில்லை?



ஆதி கிறிஸ்தவத்தின் வரலாறு (Early Christian History)



நேரடியாக பட்டயங்களை உபயோகிப்பது மேற்கண்ட வசனங்களின் உண்மைப்பொருள் அல்ல என்று சொன்னதால், இவ்வசனங்களில் பட்டயமே இருக்கவில்லை என்ற அர்த்தம் கிடையாது (லூக்கா 22:38). அவைகள் அடையாளக்குறிகளோ, காணப்படாத கற்பனைகளோ அல்ல. பேதுரு உண்மையாகவே இரண்டு பட்டயங்களில் ஒன்றை எடுத்து ஒரு வேலைக்காரனுடைய காது அறுபடும்படி வெட்டினான் (மத்தேயு 26:50-51; லூக்கா 22:49-51) .



இருந்தபோதும், பேதுரு பட்டயத்தை உபயோகப்படுத்தினது சபை உருவான பெந்தோகோஸ்தே நாளுக்கு முன்பாக ஆகும். பெந்தோகோஸ்தே நாள் அன்று பேதுரு முன் எப்போதும் நிகழ்ந்திராத விதத்தில் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார் (அப்போஸ்தலர் 2) . பேதுரு பரிசுத்த ஆயினால் நிரப்பப்படுவதற்கு முன் நடந்த‌ நிகழ்ச்சியாகும், அந்த பட்டயத்தை பயன்படுத்திய நிகழ்ச்சி. பெந்தேகோஸ்தே நாளுக்கு முன் இயேசு கைது செய்யப்பட்ட அந்த இராத்திரியில் அன‌ல்பர‌ந்த நேரத்தில் நடந்த பேதுரு காதை வெட்டிய அச்செயலின் மீது சபைக் கொள்கைகளை கட்டி எழுப்புவது தவறான வழிமுறையாகும். பேதுரு அந்த சூழலில் பட்டயத்தை பயன்படுத்தினார் என்பதற்காக, கிறிஸ்தவ சபையின் கொள்கைகள் அதன் மீது சார்ந்து உருவாக்குவது தவறானதாகும்.



இது மட்டுமல்ல, இயேசு தோட்டத்தில் பேதுருவிடம் கூறினார், "பட்டயத்தை அதன் இடத்திலே வை" என்றார். இத‌ன் அர்த்தம் – "பட்டயத்திற்குரிய உறையிலே அல்லது பேதுருவின் இடுப்பில் கட்டியிருக்கும் பெல்ட்டிலே அல்லது ஆயுதம்பொருத்தக்கூடிய வேறு உடையிலே வை" என்பதாகும். அவர் பட்டயத்தை எட்டாத அளவிற்கு தூரத் தூக்கிப்போடும்படிக் கூறவில்லை. எனவே சில சீடர்கள் அவருடைய சிலுவை மற்றும் மரணத்திற்கு பிறகும் எதிர்ப்பு நிறைந்திருந்த அந்த தேசப்பகுதியில் அந்த இரண்டு பட்டயங்களையும் தங்களோடு வைத்திருந்தார்கள் என அறியலாம். இன்னும் சிலர் அவருடைய உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதலுக்கும் பின்னும் தங்களோடு ஆயுதங்களை வைத்திருந்திருக்கலாம்.



இருந்தபோதிலும், நம்பத்தகுந்த பாரம்பரியங்கள், சரித்திரங்கள் அப்போஸ்தலர்களில் ஒருவராவது போரிடவும், கொடிய சோதனைகளிலிருந்து தப்பிப்பதற்கு தவறாக வழிநடத்தப்பட்ட, புரட்டப்பட்டிருந்த கலகக்கார இரத்தசாட்சிகளைப் போல பட்டயங்களை உபயோகிக்க முயற்சிக்கவும் இல்லை என்று கூறுகிறது. அதற்கு பதிலாக யோவானைத் தவிர எல்லா சீடர்களும் உபத்திரவத்தினாலே இரத்தசாட்சிகளாக கொல்லப்பட்டனர். (யோவான் முதிர் வயதிலே இயற்கையாக மரித்தார்). சீடர்களுடன் இயேசு வாழ்ந்த நாட்களிலும், கெத்சமனே தோட்டத்திலும் இயேசுவின் முன்னுதாரமான வாழ்க்கை அவர்களுக்குள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியருந்தது.



முடிவுரை:



கெத்சமனே தோட்டத்தில் நடந்த சம்பவங்களும் அங்கே இயேசு தன்னுடய சீடர்களுக்கு கட்டளையிட்டவைகளும் அவர்களுக்கு அகிம்சையை அல்லது சாந்தத்தை கற்றுக்கொடுத்தது, எனவே லூக்கா 22:36 வன்முறையை அனுமதிப்பதில்லை. "அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்." (மத் 26:52). பேதுருவும் மற்றவர்களும் பட்டயத்தை உபயோகப்படுத்துவதினால் உண்டாகும் விளைவு பற்றி இயேசு சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்டார்கள். எனவே, இயேசுவின் உயிர்த்தெழுத்த நம்பிக்கையின் செய்தியை பிரசங்கிக்கும் சீடர்களின் வாழ்க்கையில், "பட்டயங்கள்" ஒரு பகுதியாக இருக்கவே முடியாது.



புதிய ஏற்பாட்டில் "பட்டயம்" என்ற தலைப்பின் கீழ் எழுதப்பட்ட தொடர் கட்டுரைகளை படிக்க இங்கு சொடுக்கவும்: Jesus, Pacifism, and the Sword. இப்போது நீங்கள் படித்த கட்டுரை இந்த தொடர் கட்டுரையின் இரண்டாம் பாகத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பாகமாகும்.



புதிய ஏற்பாட்டின் மத்தேயு 10:34ம் வசனத்தில் இயேசு பயன்படுத்திய "பட்டயம்" என்ற வார்த்தைக்கான சிறிய விளக்க கட்டுரைக்காக இங்கு சொடுக்கவும்.


ஆங்கில மூலம்: A Brief Explanation of the Sword in Luke 22:36


ஜேம்ஸ் அர்லண்ட்சன் அவர்களின் கட்டுரைகள்


Tamil Source:  http://www.answering-islam.org/tamil/authors/arlandson/luke_22_36.html