ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

திங்கள், 28 டிசம்பர், 2015

யாருக்கு முதன்மையான இடம் தரப்படவேண்டுமென இறைவன் கட்டளை கொடுத்தான்? ஏன்?

The Place of Prominence

என் தேவனுக்கு நன்றிகளை செலுத்த நான் கடமைப்பட்டுள்ளேன், ஏனென்றால் "இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம்" பற்றிய கட்டுரைகளை நான் எழுதும்போதெல்லாம், இஸ்லாமின் இறைவனாகிய அல்லாஹ் எப்படி பைபிளின் தேவனுக்கு முரண்பட்டு காணப்படுகிறார் என்பதை தெளிவாக காண தேவன் உதவி செய்கிறார். உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமென்றால், இயேசுவும் முஹம்மதுவும் தம்முடன் இருக்கும் நபர்களிடம் எப்படி நடந்துக் கொண்டார்கள் என்பதைச் சொல்லலாம். குறிப்பிட்டுச் சொல்வதானால், இயேசுவும் முஹம்மதுவும் தங்கள் உள்வட்ட சீடர்கள் அல்லது தொழர்களிடம் எப்படிப்பட்ட எதிர்ப்பார்ப்பை கொண்டிருந்தார்கள் என்பதைச் சொல்லலாம்.

முஹம்மதுவோடு வாழ்ந்தவர்கள் எவ்விதம் முஹம்மதுவிடம் நடந்துக் கொள்ளவேண்டும் என்று குர்-ஆன் எதிர்ப்பார்க்கிறது? இதே போல, சீடர்கள் இயேசுவிடம் எவ்விதம் நடந்துக் கொள்ளவேண்டும் என்று பைபிள் எதிர்ப்பார்க்கிறது? இவைகளைத் தான் இந்த கட்டுரையில் சுருக்கமாக நாம் ஆய்வுச் செய்யப்போகிறோம்.

சஹாபாக்களிடம் அல்லாஹ் எதிர்ப்பார்த்தவைகள்:

முதலாவதாக, முஹம்மதுவிடம் சஹாபாக்கள் எவ்விதம் நடந்துக் கொள்ளவேண்டும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டார்கள் என்பதைக் காணலாம். இந்த விவரத்தை சரியாக புரிந்துக் கொள்வதற்கு குர்-ஆன் சொல்வதைப் படிக்கவேண்டும். குர்-ஆன் பொதுவாக முஸ்லிம்கள் எப்படி நடந்துக் கொள்ளவேண்டும், அவர்களின் நம்பிக்கை எப்படி இருக்கவேண்டும் என்பதைப் பற்றி அனேக கட்டளைகளை கொடுத்துள்ளது.  ஆனால், இந்த கட்டளைகளை குர்-ஆன் சுருக்கமாகச் சொல்கிறதே தவிர, அவைகளை தெளிவாக விவரிப்பதில்லை.  உதாரணத்திற்கு, ஒவ்வொரு நாளும் அல்லாஹ்வை தொழுதுக் கொள்ளும்படி குர்-ஆன் கட்டளையிடுகிறது, ஆனால், ஒரு நாளுக்கு எத்தனை முறை தொழவேண்டும் என்று சரியான எண்ணிக்கையை அது தெளிவாகச் சொல்வதில்லை. மேலும், தொழுகையின் போது எவைகளை முதலாவது செய்யவேண்டும், எந்த வசனங்களை ஓதவேண்டும்? அடுத்தது என்ன செய்யவேண்டும்? போன்ற தொழுகையின் விவரங்களை கோர்வையாக குர்-ஆன் சொல்வதில்லை. தொழுகையின் முழு விவரமும் நமக்குத் தேவையென்றால், அவைகளை ஹதீஸ்களில் மட்டுமே காணமுடியும். ஆகையால், ஒன்றை நாம் தெளிவாக புரிந்துக் கொள்ளவேண்டும், அது என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட செயலை குர்-ஆன் செய்யச் சொன்னால், அது முக்கியமானது என்று அறிந்துக் கொள்ளவேண்டும், ஆனால், அந்தச் செயலை எப்படி செய்யவேண்டும் என்ற விவரம் மட்டும் குர்-ஆனில் காணப்படாது, அது ஹதீஸ்களில் மட்டுமே காணப்படும், இதனை மனதில் வைக்கவேண்டும். 

முஸ்லிம்கள் முஹம்மதுவிடம் எவ்விதம் நடந்துக் கொள்ளவேண்டும் என்று குர்-ஆன் சொல்கிறது, ஆனால் அதைப் பற்றி தெளிவான விவரத்தை குர்-ஆன் தருவதில்லை.  உதாரணத்திற்கு, முஸ்லிம்கள் முஹம்மதுவிடம் அனுமதி பெறாமல், அவரை விட்டு போகக்கூடாது என்று குர்-ஆன் 24:62ல் சொல்கிறது.  இந்த வசனத்தை கீழே படியுங்கள்: 

குர்-ஆன் 24:62. அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும் ஈமான் கொண்டவர்களே! (உண்மை) முஃமின்களாவார்கள், மேலும், அவர்கள் ஒரு பொதுவான காரியம் பற்றி அவருடன் (ஆலோசிக்கக் கூடி) இருக்கும் போது அவருடைய அனுமதியின்றி (அங்கிருந்து) செல்லமாட்டார்கள்; (நபியே!) உம்மிடத்தில் (அவ்வாறு) அனுமதி பெற்றுச் செல்பவர்களே நிச்சயமாக அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் மெய்யாகவே ஈமான் கொண்டவர்கள், ஆகவே தங்கள் காரியங்கள் சிலவற்றுக்காக அவர்கள் உம்மிடம் அனுமதி கேட்டால், அவர்களில் நீர் விரும்பியவருக்கு அனுமதி கொடுப்பீராக; இன்னும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் நீர் மன்னிப்புக் கோருவீராக; நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்; கிருபையுடையவன்.

இப்போது அடுத்த குர்-ஆன் வசனத்தை கவனியுங்கள். முஹம்மதுவின் வீட்டில் முஸ்லிம்கள் இருக்கும் போது, அவரை அதிகமாக சொந்தரவு செய்யாமல் சீக்கிரமாக சென்றுவிடவேண்டும், அதிக நேரம் அவருடன் பேசிக்கொண்டு இருக்கக்கூடாது என்று குர்-ஆன் சொல்கிறது. மேலும் முஹம்மது மரித்துவிட்ட பிறகு, அவரது மனைவிமார்களை முஸ்லிம்கள் மறுமனம் செய்துக் கொள்ளக்கூடாது என்றும் இவ்வசனம் கட்டளையிடுகிறது. 

குர்-ஆன் 33:53 முஃமின்களே! (உங்களுடைய நபி) உங்களை உணவு அருந்த அழைத்தாலன்றியும், அது சமையலாவதை எதிர்பார்த்தும் (முன்னதாகவே) நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர்கள்; ஆனால், நீங்கள் அழைக்கப்பட்டீர்களானால் (அங்கே) பிரவேசியுங்கள்; அன்றியும் நீங்கள் உணவருந்தி விட்டால் (உடன்) கலைந்து போய் விடுங்கள்; பேச்சுகளில் மனங்கொண்டவர்களாக (அங்கேயே) அமர்ந்து விடாதீர்கள்; நிச்சயமாக இது நபியை நோவினை செய்வதாகும்; இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுவார்; ஆனால் உண்மையைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை; நபியுடைய மனைவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களையும் அவர்கள் இருதயங்களையும் தூய்மையாக்கி வைக்கும்; அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது உங்களுக்கு தகுமானதல்ல; அன்றியும் அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் நீங்கள் மணப்பது ஒருபோதும் கூடாது; நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் (பாவ) காரியமாகும்.

கடைசியாக, முஹம்மதுவிடம் பேசும்போது, மக்கள் தங்கள் சப்தத்தை முஹம்மதுவின் சப்தத்தைவிட உயர்த்திப் பேசாமல், சிறிது குறைவான சப்தத்தில் பேசுங்கள் என்று குர்-ஆன் கட்டளையிடுகிறது. யார் தங்கள் சப்தத்தை முஹம்மதுவின் சப்தத்தைவிட அதிகமாக உயர்த்திப் பேசுகிறாரோ, அவர் செய்த நன்மைகள் (அமல்கள்) இதனால் அழிந்துப்போகும் என்றும் குர்-ஆன் எச்சரிக்கிறது.

குர்-ஆன் 49:2. முஃமின்களே! நீங்கள் நபியின் சப்தத்திற்கு மேலே, உங்கள் சப்தங்களை உயர்த்தாதீர்கள்; மேலும், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசுவதைப் போல், அவரிடம் நீங்கள் இரைந்து போசாதீர்கள், (இவற்றால்) நீங்கள் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உங்கள் அமல்கள் அழிந்து போகும்.

இதுவரை கண்ட குர்-ஆன் வசனங்களிலிருந்து ஒன்றை தெளிவாக புரிந்துக் கொள்ளமுடியும், அதாவது, முஹம்மது எங்கு இருந்தாலும், அங்கு அவருக்கு சிறப்பான இடம் அல்லது அந்தஸ்து தரவேண்டும் என்று அல்லாஹ் எதிர்ப்பார்க்கிறார் என்பதாகும். இஸ்லாமின் தீர்க்கதரிசி என்ற முறையில் மக்கள் அவருக்கு தனிச்சிறப்பான மதிப்பு தரவேண்டும், மேலும் அவருடன் இருப்பவர்களைக் காட்டிலும் அவர் உயர்ந்த நிலையில் இருக்கிறார் என்பதை காட்டக்கூடிய வகையில் மக்கள் நடந்துக் கொள்ளவேண்டும். இது தான் முஹம்மதுவைப் பற்றி குர்-ஆன் முஸ்லிம்களுக்குச் சொல்லும் கட்டளைகளாகும்.  

இயேசுவும் முதன்மையான இடமும்:

ஒருவர் சுயமாகச் சென்று உயர்ந்த இடத்தை பிடிப்பதைப் பற்றி இயேசு எச்சரித்துள்ளார் (லூக்கா 14:8). இப்படி செய்பவர்களுக்கு என்ன நடக்கலாம் என்றும் இயேசு எச்சரித்தார் (லூக்கா 14:11). மேலும் இப்படி சுயமாக முக்கியமான இடங்களை தேடுபவர்களை பின்பற்றவேண்டாம் என்றும் இயேசு கட்டளையிட்டார் (லூக்கா 20:46).

இயேசு இப்பூமியில் இருக்கும்போது, அவர் எப்படி நடந்துக் கொண்டார் என்பதை பார்ப்போம். இயேசு இறைவனாக இருந்தபடியினால், அவரோடு "யார் இருந்தார்கள்?" என்பது ஒரு முக்கியமில்லாத ஒன்றாகும். இயேசுவோடு யார் இருந்தாலும் சரி, அந்த இடத்தில் இயேசு மட்டுமே மேன்மையானவராக இருப்பார், ஏனென்றால் அவர் இறைவனாக இருப்பதால், அவரை விட உயர்ந்தவர் யாருமில்லை. ஒரு எல்லைக்குள் உட்பட்டு சில ஆண்டுகள் வாழ்ந்து, நிச்சயமாக  மரிக்கக்கூடிய மனிதர்கள் இயேசுவோடு இருந்ததினால், எவ்விதத்திலும் அவர்கள் இயேசுவைவிட முதன்மையானவர்களாக இருக்கமுடியாது. இப்படிப்பட்ட மேன்மைகளை கொண்ட தெய்வமாகிய இயேசு மனிதர்களின் துதி, புகழ்ச்சி, ஆராதனை போன்ற அனைத்துவிதமான கனத்திற்கு பாத்திரராக இருந்தாலும், அவர் தன்னை ஒரு வேலைக்காரன் (ஊழியக்காரன்) என்ற நிலையிலே தம்மை காண்பித்துக் கொண்டார் (மாற்கு 10:45). 

ஒருமுறை இயேசுவின் சீடர்கள், தங்களில் யார் பெரியவராக இருக்கிறார் என்று பேசிக்கொண்டு இருக்கும் போது, இயேசு பெரியவராக இருந்தாலும், தம்முடைய சீடர்களுக்கு தாம் ஊழியம் செய்கிறவராக (வேலைக்காரனாக) இருப்பதாக இயேசு சொன்னார். தன் தெய்வீகத்தன்மையின் மேன்மையை அவர் வெளிப்படுத்தாமல், தம்மைத் தாழ்த்திக் கொண்டார், இதனை லூக்கா 22:27ல் காணலாம்.

பந்தியிருக்கிறவனோ, பணிவிடைசெய்கிறவனோ, எவன் பெரியவன்? பந்தியிருக்கிறவன் அல்லவா? அப்படியிருந்தும், நான் உங்கள் நடுவிலே பணிவிடைக்காரனைப்போல் இருக்கிறேன். (லூக்கா 22:27)

இந்த சத்தியத்தை அவர் இன்னும் தெளிவாக இன்னொரு முறை நடைமுறையில் செய்து காட்டினார், அதாவது இயேசு சீடர்களின்  கால்களை கழுவும் போது இதனை செய்து காட்டினார் (யோவான் 13:5). அழுக்கு இல்லாத சுத்தமான கால்கள் தான் பரிசுத்தத்திற்கு அடையாளம் என்பதால் அவர் சீடர்களின் கால்களை கழுவவில்லை. அதற்கு பதிலாக, தாம் ஆண்டவராக இருந்தாலும், எல்லா வித கனத்திற்கு பாத்திரராக இருந்தாலும், ஒரு பணிவிடைக்காரனின் நிலையை தரித்துக் கொண்டு தம்மை விட தாழ்வானவர்களுக்கு (மனிதர்களுக்கு) ஊழியம் செய்தார் என்பதை வெளிப்படுத்தவே இப்படி செய்தார். வேறுவகையில் சொல்லவேண்டுமென்றால், இதே போல தம்முடைய சீடர்களும், மற்றவர்களுக்கு ஊழியம் செய்யவேண்டும் என்பதை வெளிப்படுத்தினார் (யோவான் 13:15).

இஸ்லாமிலே முஹம்மதுவிற்கு தனிப்பட்ட சிறப்பு சலுகைகள், மதிப்பு மரியாதை தரப்படவேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டார். கிறிஸ்தவத்திலே, இயேசு மற்றவர்களுக்கு ஊழியம் செய்யவே வந்திருக்கிறார் என்று எடுத்துரைத்தார், அதனை செயலிலும் செய்துக் காட்டினார். இவ்விருவருடைய இச்செயல்களில் உங்களுக்கு ஏதாவது துப்பு தெரிகின்றதா? யார் உண்மை தெய்வத்தை வெளிப்படுத்த வந்தவர்கள் என்று உங்களால் கணிக்கமுடிகின்றதா?

குறிப்பு: குர்-ஆன் வசனங்கள் அனைத்தும் டாக்டர் முஹம்மது ஜான் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது.

யார் எங்கே போகிறார்கள்? முஹம்மதுவின் முடிவு அவருக்குத் தெரியுமா?

Who is Going Where?

எல்லா மார்க்கங்களிலும் அதிகமாக விவாதிக்கப்படும் ஒரு தலைப்பு உண்டு, அது 'மனிதனின் முடிவு' பற்றியதாகும். அதாவது ஒரு மனிதன் மரித்த பிறகு அவனுக்கு என்ன நடக்கும்? என்பது தான் முக்கியமான தலைப்பு. மரித்த பிறகு நாம் இறைவனோடு இருப்போமா? "ஆம்" என்பது நம் பதிலானால், எந்த சூழ்நிலைகளில் நம்மை இறைவன் சொர்க்கத்தில் அனுமதிப்பார்? என்பது அடுத்த முக்கியமான கேள்வி. 

என்னுடைய முந்தைய கட்டுரையில், இஸ்லாம் போதிக்கும் முஹம்மதுவின் முடிவும், கிறிஸ்தவம் போதிக்கும் இயேசுவின் முடிவும் எப்படி இருந்தது என்பதைப் பற்றி சிந்தித்தோம். இந்த தற்போதைய கட்டுரையில் அதே விவரத்தை இன்னும் ஆழமாக பார்க்கப் போகிறோம். 

குர்-ஆனின் கீழ்கண்ட வசனம், முஹம்மதுவிற்கு அவரது எதிர்காலம் பற்றிய நிச்சயம் இருந்ததில்லை என்றுச் சொல்கிறது:

46:9. "(இறை) தூதர்களில் நாம் புதிதாக வந்தவனல்லன்; மேலும் என்னைப் பற்றியோ, உங்களைப் பற்றியோ, என்ன செய்யப்படும் என்பதை நான் அறியமாட்டேன், எனக்கு என்ன வஹீ அறிவிக்கப்படுகிறதோ அதைத் தவிர (வேறெதையும்) நான் பின்பற்றுவதில்லை; தெளிவாக அச்சமூட்டி எச்சரிப்பவனேயன்றி நான் வேறில்லை" என்று (நபியே!) நீர் கூறும். (டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்)

முஹம்மதுவிற்கு அவரது எதிர்காலம் பற்றிய நிச்சயம் இல்லை என்ற விவரம் முஸ்லிம்களை கலங்கச்செய்கிறது. ஏனென்றால், முஹம்மதுவிற்கு தன் எதிர் காலம் தெரியாத போது, அவரை பின்பற்றும் முஸ்லிம்களுக்கு தங்கள் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை எப்படி வரும்? மேற்கண்ட குர்-ஆன் வசனத்தில் இப்படிப்பட்ட பிரச்சனை இருப்பதினால், தற்கால இஸ்லாமிய அறிஞர்கள், இந்த குர்-ஆன் வசனத்திற்கு வேறு விதமாக விளக்கம் கொடுக்கிறார்கள். அதாவது, குர்-ஆன் 46:9ம் வசனம் முஹம்மதுவின் உலக வாழ்க்கைப் பற்றி பேசுகின்றது, அவர் மரித்த பிறகு இறைவனிடம் செல்லும் வாழ்வு பற்றி பேசவில்லை என்று விளக்கம் கொடுக்கிறார்கள்.

முஸ்லிம்கள் அதிகார பூர்வமானதாக நம்பும் புகாரி ஹதீஸில் ஆரம்ப கால முஸ்லிம்களின் மத்தியில் ஒரு உரையாடல் நடக்கிறது. அதாவது, ஒருவர் மரித்துவிடுகிறார் அவர் சொர்க்கத்தில் இருப்பார் என்று சொல்லப்படும் போது, முஹம்மது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.  மேலும், மரணத்திற்கு பிறகு ஒருவருக்கு என்ன நேரிடும் (சொர்க்கமா? நரகமா?) என்பது நமக்கு தெரியாது என்று முஹம்மது கூறுகிறார். மேலும், முஹம்மது "நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் என்னுடைய நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாது" என்றும் கூறுகிறார். இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமான ஹதீஸ் ஆகும், இதே விவரத்தை இன்னும் சில ஹதீஸ்களிலும் காணலாம்.[1]

சில இஸ்லாமிய அறிஞர்கள் இந்த ஹதீஸ் சொல்வதை மறைக்க விரும்புகிறார்கள், எனவே அதற்கு எதிராக விளக்கமளிக்கிறார்கள். அதாவது, மரணத்திற்கு பிறகு தனக்கு என்ன நடக்கும் என்று முஹம்மதுவிற்கு நன்றாகத் தெரியும் என்றுச் சொல்கிறார்கள். தங்களின் இந்த புதிய விளக்கத்திற்கு ஆதரவாக பல சப்பைக் கட்டு காரணங்களை அவர்கள் கூறுகிறார்கள்.  மேலே கண்ட ஹதீஸையும், குர்-ஆனின் வசனத்தையும் பார்க்கும் போது, இவ்விரண்டும், முஹம்மதுவின் பூமிக்குரிய வாழ்வு பற்றிச் சொல்லாமல், அவரது மரணத்திற்கு பிறகு நடக்கும் விவரம் பற்றிச் சொல்வதை கவனிக்க முடியும்.  முஹம்மதுவின் முடிவு பற்றிய இந்த தர்ம சங்கடமான நிலையை சமாளிப்பதற்காக, அனேக இஸ்லாமியர்கள் பலவாறு முயற்சி எடுக்கிறார்கள். ஆனால், பஸ்ஸாம் ஜவாதி என்பவர் வேறு வழியில்லாமல், கீழ்கண்ட விதமாக விளக்கம் அளிக்கிறார். இதன் மூலம், அவர் தனக்கு தானே குழியை தோண்டிக்கொள்கிறார்:

". . . என்னைப் பொருத்தமட்டில், இந்த புகாரி ஹதீஸ் சொல்லும் விவரங்களின் பின்னணியை கவனிக்கும் போது,  இறைத்தூதருக்கு (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) தன் மரணத்திற்கு பிறகு தனக்கு என்ன நடக்கும் என்று தெரியாது என்று தெரிகிறது"[2].

இஸ்லாமிய இறையியல் என்னும் கண்ணாடியின் வழியாக பார்த்தால், முஹம்மது கடைசியாக எங்கு போய் சேருவார் என்பது நிச்சயமில்லாத ஒன்றாக இருக்கிறது. மேற்கண்ட குர்-ஆன் வசனம் மற்றும் ஹதீஸை நாம் ஆழமாக ஆய்வு செய்தால், முஹம்மதுவிற்கு தன் இரட்சிப்பு பற்றிய நிச்சயம் இல்லை என்பது தெளிவாக புரியும். 

ஆனால், இயேசு தம்மைப் பற்றி என்ன சொன்னார் என்பதைப் பற்றி நான் ஏற்கனவே என் முந்தைய கட்டுரையில் விளக்கியுள்ளேன் (யோவான் 11:25). இது முஹம்மதுவிற்கு நேர் எதிராக உள்ளது. மேலும் இயேசு எங்கே போகப்போகிறார் என்பதைப் பற்றி அவர் கூறியதையும் நாம் பார்த்தோம் (யோவான் 14:2-3, 16:28). நாம் எப்போதும் செய்வது போலவே, இப்போதும் கூட அதிகமாக பயணிக்காத பாதையை நாம் கடப்போம் வருகிறீர்களா? அதாவது இயேசுவைப் பற்றியும், அவரது முடிவு  பற்றியும் இஸ்லாம் என்ன போதிக்கிறது என்பதை ஆய்வு செய்வோம்.

இஸ்லாமிலே முஹம்மதுவின் முடிவு நம்பிக்கையற்ற நிலையில் காணப்படுகிறது, இதே போல, இஸ்லாமில் இயேசுவின் நிலைமையும் இருக்கவேண்டும் என்று முஸ்லிம்கள் எதிர்ப்பார்ப்பார்கள். ஆனால், அது தான் இல்லை. குர்-ஆன் இயேசுவின் எதிர்காலம் பற்றி வேறு வகையாகச் சொல்கிறது.

இயேசுவைப் பற்றி குர்-ஆனில் அனேக வசனங்களை காணலாம். இயேசுவைப் பற்றிய முதலாவது வசனத்தில் அவர் மறு உலகத்தில் கண்ணியமிக்கவராக இருப்பார் என்று அல்லாஹ் குர்-ஆனில் சொல்கிறான்.

குர்-ஆன் 3:45 

மலக்குகள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;

இஸ்லாமிய ஆரம்பகால விரிவுரையாளராகிய இப்னு கதீர் என்பவர், இவ்வசனத்தை விளக்கும் போது, ஒரு படி மேலே சென்று, மறு உலகத்தில் இயேசு அல்லாஹ்விற்கு நெருக்கமானவராக இருப்பார் என்றும், அப்போது இயேசு தன்னை பின்பற்றியவர்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்து பேசுவார் என்றும் விளக்கமளிக்கிறார்.

இதுமட்டுமல்ல, இன்னொரு இடத்தில் "இயேசு சொர்க்கத்தில் இருப்பர்" என்று குர்-ஆன் மிகவும் தெளிவாகச் சொல்கிறது. 

குர்-ஆன் 3:55

"ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்" என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!

இயேசுவின் வேலை பூமியில் முடிந்துவிட்டால், அவரை தன்னளவில் அதாவது சொர்க்கத்திற்கு அல்லாஹ் எடுத்துக் கொள்வார் என்று மேற்கண்ட குர்-ஆன் வசனம் இயேசுவின் முடிவு பற்றி தெள்ளத்தெளிவாகச் சொல்கிறது. இந்த குர்-ஆன் வசனத்திற்கு இந்த விளக்கத்தை விட வேறு விளக்கத்தை யாராலும் கொடுக்கமுடியாது. இயேசுவைப் பற்றி இந்த வசனம் சொல்லும் அல்லாஹ்வின் திட்டத்தை ஹதீஸ்களிலும் காணலாம். இஸ்லாமிய அறிஞர்கள் எப்படிப்பட்ட வாய் ஜாலங்கள் காட்டினாலும், இந்த வசனத்திற்கு அவர்கள் வேறு விளக்கம் கொடுக்கமுடியாது. முஸ்லிம்களின் மற்றும் முஹம்மதுவின் எதிர்காலம் நம்பிக்கையற்ற ஒன்றாக ஆபத்தில் மாட்டிக்கொண்டு இருக்கிறது என்றுச் சொல்லும் அதே குர்-ஆன், இயேசுவின் எதிர்காலம் பற்றி மிகவும் தெளிவாக உள்ளது. இயேசுவின் எதிர்காலம் என்ன என்பதை குர்-ஆன் சொல்லிவிட்டது, அதைப் பற்றி எந்த ஒரு குழப்பமும் இல்லை. அணு அளவு சந்தேகமின்றி இயேசு சொர்க்கத்தில் இருப்பார் என்பது தான் குர்-ஆனின் சாட்சி.

இப்போது சுருக்கத்தைக் காண்போம். முஹம்மதுவின் முடிவு பற்றி இஸ்லாமிய நூல்கள் குழப்பமான விவரங்களைத் தருகின்றன. மேலும், முஹம்மதுவிற்கு தன் எதிர்காலம் என்னவாகும் என்று தெரியாது என்று குர்-ஆன் சொல்கிறது. ஆனால், அதே இஸ்லாமிய நூல்கள், இயேசு சொர்க்கத்தில் இருப்பார் என்று தெளிவாகச் சொல்கிறது. இவ்விவரம் முஸ்லிம்களின் கண்களை திறந்து சத்தியத்தை காணச் செய்யும் விவரமாகும்.  குர்-ஆன் "தீர்க்கதரிசிகள்" என்று அழைக்கும் இவ்விருவரில், முஸ்லிமாக நீங்கள் யாரை பின்பற்ற முடிவு எடுக்கப்போகிறீர்கள்? தன் எதிர் காலம் என்னவென்றே தெரியாத முஹம்மதுவையா? அல்லது இயேசுவையா? சிந்தியுங்கள்.

குறிப்பு: குர்-ஆன் வசனங்கள் அனைத்தும் டாக்டர் முஹம்மது ஜான் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது.

அடிக்குறிப்புக்கள்

[1] புகாரி ஹதீஸ் எண்:1243 

1243. நபி(ஸல்) அவர்களிடம் பைஅத் செய்திருந்த அன்சாரிப் பெண்மணியான உம்முல் அலா(ரலி) அறிவித்தார். வந்த முஹாஜிர்களில் யார் யாருடைய வீட்டில் தங்குவது என்பதையறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக் கொண்டிருந்தபோது உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) எங்கள் வீட்டில் தங்குவது என முடிவானது. அதன்படி அவரை எங்கள் வீட்டில் தங்க வைத்தோம். பிறகு அவர் நோயுற்று மரணமடைந்தார். அவரின் உடல் குளிப்பாட்டப்பட்டு அவரின் ஆடையிலேயே கஃபனிடப்பட்டதும் நபி(ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். நான் (உஸ்மானை நோக்கி), 'ஸாயிபின் தந்தையே! உம் மீது இறையருள் உண்டாகட்டும்! அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சி கூறுகிறேன்' எனக் கூறினேன். உடனே, நபி(ஸல்) அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது உனக்கெப்படித் தெரியும்?' என்று கேட்டார்கள். 

அல்லாஹ்வின்தூதர் அவர்களே! என்னுடைய தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். பின் யாரைத்தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்?' என கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இவர் மரணமடைந்துவிட்டார். எனவே, அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவர் விஷயத்தில் நன்மையையே விரும்புகிறேன். ஆயினும் நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் என்னுடைய நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாது" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதற்குப் பிறகு நான் யார் விஷயத்திலும் (அவ்வாறு) பாராட்டிக் கூறுவதேயில்லை."  Volume :2 Book :23  (மேலும் பார்க்க ஹதீஸ்கள்: 2687, 3929 & 7003)

ஆங்கில மூலம்: http://unravelingislam.com/blog/?p=476 

நீங்கள் எங்கே போகிறீர்கள்? தான் எங்கே போகப்போகிறேன் என்பதை தெரியாத முஹம்மதுவின் பின்னே போகிறீர்களா?

Where are you going?

ஆசிரியர் : ராபர்ட் ஸீவர்ஸ்

முந்தைய காலங்களை விட, தற்காலத்தில் விலாசம் சரியாக தெரியாத ஊர்களுக்குச் செல்வது மிகவும் சுலபமாகும். புதிய சாதனங்களாகிய ஜிபிஎஸ் (GPS) மற்றும் கூகுள் மேப் (Google Map) போன்றவை நம்முடைய விலாசதேடலை சுலபமாக்கிவிட்டன. பழங்காலங்களில், நாம் சரியான விலாசத்தை சென்றடையவேண்டுமென்றால், அவ்வழிகளை அறிந்து வைத்திருக்கின்ற நபரின் உதவியை நாடவேண்டும்.

இந்த விவரங்களுக்கும் கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமுக்கும் என்ன சம்மந்தம்? முஹம்மது மற்றும் இயேசு இவ்விருவரும் தங்களின் உலக வாழ்க்கையின் முடிவுக்கு பிறகு தங்களின் நிலை என்னவாக இருக்கும் என்று சொல்லியுள்ளார்கள்.  இயேசு தம்முடைய வாழ்நாளின் கடைசி வாரத்தில், அனேக கட்டளைகளை சீடர்களுக்கு கொடுத்தார். மேலும் சீடர்கள் உற்சாகம் அடையும் வகையில் இதர முக்கியமான விவரங்களையும் பகிர்ந்துக் கொண்டார். இந்த உரையாடல்களில் அவர் சொன்ன அதிமுக்கியமான விவரம் என்னவென்றால், "தாம் சீடர்களை விட்டுச் செல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது, அதாவது, இயேசு சென்று அவர்களுக்காக ஒரு இடத்தை ஆயத்தப்படுத்தி, அதன் பிறகு அவர்கள் தம்மோடு சொர்க்கத்தில் நிரந்தரமாக தங்கும் படி அழைத்துச் செல்வார்" என்று கூறினார்.

என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.  நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன். ( யோவான் 14:2-3)

இயேசு முதலாவது சொர்க்கத்திற்குச் சென்று, சீடர்களுக்கு இடத்தை தயார்படுத்துவதாக சொல்கிறார். மேலும், சில ஆண்டுகளுக்கு பிறகு சீடர்கள் கூட அவரோடு அதே சொர்க்கத்தில் இருப்பார்கள் என்றும் வாக்கு கொடுக்கிறார். ஒரு கிறிஸ்தவர் மரித்த பிறகு அவர் சொர்க்கம் செல்வாரா? இதைப் பற்றிய நிச்சயம் அவருக்கு எப்படி வரும்? என்பவைகளைப் பற்றி இன்னொரு கட்டுரையில் ஆய்வு செய்வோம் (எபேசியர் 1:13-14).  

ஆனால், இந்த கட்டுரையின் கருப்பொருள் 'இயேசு பிதாவோடு சொர்க்கத்தில் இருப்பார் என்றும், அவர் தன்னை பின்பற்றுபவர்களுக்கு இடத்தை ஆயத்தப்படுத்துவார்' என்றும் அவர் கொடுத்த வாக்கு பற்றியதாகும்.  இயேசு தாம் எங்கே போகிறார் என்று அறிந்திருந்தார் மேலும், அங்கு (சொர்க்கம்) சென்ற பிறகு அவர் என்ன செய்யப்போகிறார் என்றும் அறிந்திருந்தார்.

முஹம்மது தம்முடைய மரணத்திற்கு பிறகு எங்கே போவார் என்று ஏதாவது சொல்லியுள்ளாரா? முஹம்மது மரித்த பிறகு அவர் அல்லாஹ்வோடு இருப்பார் என்று முஹம்மது சொல்லியிருப்பார் என்று பொதுவாக எல்லாரும் நினைத்திருப்பார்கள், ஆனால் அது தவறாகும். முஹம்மது இப்படி சொல்லவில்லை, அவர் வேறுவகையாக சொல்லியுள்ளார்.  முஸ்லிம்கள் அதிகார பூர்வமானதாக நம்பும் புகாரி ஹதீஸில் ஆரம்ப கால முஸ்லிம்களின் மத்தியில் ஒரு உரையாடல் நடக்கிறது. அதாவது, ஒருவர் மரித்துவிடுகிறார் அவர் சொர்க்கத்தில் இருப்பார் என்று சொல்லப்படும் போது, முஹம்மது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.  மேலும், மரணத்திற்கு பிறகு ஒருவருக்கு என்ன நேரிடும் (சொர்க்கமா? நரகமா?) என்பது நமக்கு தெரியாது என்று முஹம்மது கூறுகிறார். மேலும், முஹம்மது "நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் என்னுடைய நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாது" என்றும் கூறுகிறார். இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமான ஹதீஸ் ஆகும், இதே விவரத்தை இன்னும் சில ஹதீஸ்களிலும் காணலாம்[1], அந்த ஹதீஸை அடிக்குறிப்பில் படிக்கவும்.

ஒரு அனுபவ சாட்சி புத்தகத்திலிருந்து ஒரு மேற்கோளை இப்போது படியுங்கள்:

"நான் என் தாத்தாவிடம் சென்று, "முஹம்மது மரிக்கும் போது அவர் என்ன கூறினார்?" என்று கேள்வி கேட்டேன். அவர் என்னிடம் முஹம்மது சொன்னவைகளைச் சொன்னார். அதன் பிறகு நான் என் தாத்தாவிடம் "இயேசுவைப் பாருங்கள், தன் பிதாவினிடத்தில் அவர் போவதாகச் சொன்னார், தன்னை பின்பற்றுபவர்களுக்காக இடத்தை ஆயத்தப்படுத்துவதாக அவர் கூறினார், அதன் பிறகு அவர் திரும்பி வந்து தம்முடையவர்களை அழைத்துச் செல்வதாகச் சொன்னார். ஆனால், தாம் எங்கு போகிறோம் என்று முஹம்மதுவிற்கே தெரியவில்லை. இப்போது சொல்லுங்கள், யாரை நீங்கள் பின்பற்றப்போகிறீர்கள்?" என்று கேட்டேன். என் தாத்தா "யாருக்கு தாம் போவது எங்கே என்று தெரிந்திருக்கிறதோ, அவரைத் தான் நான் பின்பற்றப்போகிறேன்" என்றுச் சொன்னார். "நான் சர்சுக்கு இப்போது போகப்போகிறேன்" என்றுச் சொன்னேன். இப்படித் தான் நான் இயேசுவை அறிந்துக் கொண்டேன். [2]

நீங்கள் எங்கே போகப்போகிறீர்கள்? இந்த கேள்வியை இப்படி கேட்டால் தான் சரியாக இருக்கும் – நீங்கள் அங்கே எப்படி போகப்போகிறீர்கள்?  தான் எங்கே போகிறேன் என்று தெரிந்திருக்கின்றவரை (இயேசுவை) நீங்கள் பின்பற்றப்போகிறீர்களா? அல்லது தன்னுடைய பயணம் எங்கே போய் முடியும் என்று தெரியாதவரை (முஹம்மதுவை) பின்பற்றப்போகிறீர்களா?

அடிக்குறிப்புக்கள்:

[1] புகாரி ஹதீஸ் எண்: 1243.

நபி(ஸல்) அவர்களிடம் பைஅத் செய்திருந்த அன்சாரிப் பெண்மணியான உம்முல் அலா(ரலி) அறிவித்தார். 

வந்த முஹாஜிர்களில் யார் யாருடைய வீட்டில் தங்குவது என்பதையறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக் கொண்டிருந்தபோது உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) எங்கள் வீட்டில் தங்குவது என முடிவானது. அதன்படி அவரை எங்கள் வீட்டில் தங்க வைத்தோம். பிறகு அவர் நோயுற்று மரணமடைந்தார். அவரின் உடல் குளிப்பாட்டப்பட்டு அவரின் ஆடையிலேயே கஃபனிடப்பட்டதும் நபி(ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். நான் (உஸ்மானை நோக்கி), 'ஸாயிபின் தந்தையே! உம் மீது இறையருள் உண்டாகட்டும்! அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சி கூறுகிறேன்' எனக் கூறினேன். உடனே, நபி(ஸல்) அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது உனக்கெப்படித் தெரியும்?' என்று கேட்டார்கள். 

அல்லாஹ்வின்தூதர் அவர்களே! என்னுடைய தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். பின் யாரைத்தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்?' என கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இவர் மரணமடைந்துவிட்டார். எனவே, அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவர் விஷயத்தில் நன்மையையே விரும்புகிறேன். ஆயினும் நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் என்னுடைய நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாது" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதற்குப் பிறகு நான் யார் விஷயத்திலும் (அவ்வாறு) பாராட்டிக் கூறுவதேயில்லை."  Volume :2 Book :23  (மேலும் பார்க்க ஹதீஸ்கள்: 2687, 3929 & 7003)

[2] Trousdale, Jerry. Miraculous Movements. Nashville, TN: Thomas Nelson, 2012, p79.

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

அத்தியாயம் 1: ஆமீன் - எளிய முறையில் அரபி மொழியை கற்றுக்கொள்ளுங்கள்

அத்தியாயம் 1: ஆமீன்

 

இந்த அத்தியாயத்தை  நீங்கள் முடிக்கும் போது, கீழ்கண்டவைகளை கற்றுக்கொண்டு இருப்பீர்கள்:

1) ஆமீன் என்ற அரபி வார்த்தையில் உள்ள நான்கு எழுத்துக்களை படிக்கவும் எழுதவும் கற்றுக்கொள்வீர்கள். இவ்வெழுத்துக்களை நெடிலாக மாற்ற கற்றுக் கொள்வீர்கள்.

2) அரபி எழுத்துக்கள் எப்படி சேர்த்து எழுதப்படுகின்றன என்பதை அறிந்துக் கொள்வீர்கள்.

3) அரபி உயிரெழுத்து குறியீடுகளை கற்றுக் கொள்வீர்கள்.

4) இந்த நான்கு எழுத்துக்களில் உருவாகும் அரபி வார்த்தைகளை கற்றுக்கொள்வீர்கள் (ஆமீன், அமீன், மின், மன், மா, அனா).

5) இப்பாடத்தில் கற்றுக் கொள்ளும் நான்கு அரபி எழுத்துக்களை குர்-ஆனின் முதல் அத்தியாயம் மற்றும் பைபிளின் 100வது சங்கீதத்தில் சுலபமாக அடையாளம் காணுவீர்கள்.


ஆமீன்

இந்த முதலாவது  பாடத்தில் நாம் "ஆமீன்" என்ற வார்த்தையை கற்றுக் கொள்ளப்போகிறோம். இவ்வார்த்தையில் உள்ள நான்கு அரபி எழுத்துக்களை கற்றுக்கொள்வோம். 

யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் அதிகமாக பயன்படுத்தும் வார்த்தை "ஆமீன்" ஆகும். வெளிப்படுத்தின விசேஷத்தின் கடைசி வார்த்தையும் "ஆமீன்" வார்த்தையாகும். ஆமீன் என்ற வார்த்தை குர்-ஆனில் ஒரு முறை கூட வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் முஸ்லிம்கள் தங்கள் அனுதின தொழுகையில் அதிகமாக இவ்வார்த்தையை பயன்படுத்துகிறார்கள்.

அரபிதமிழ்ஆங்கிலம்பொருள்
 ஆமீன்  Aameen

 ஆம் – Yes

 அப்படியே ஆகட்டும் 

வலமிருந்து இடம்:

அரபி எழுத்துக்களை வலமிருந்து இடமாக படிக்கவும் எழுதவும் வேண்டும். சிலருக்கு இப்படி வலமிருந்து இடமாக எழுதுவது, படிப்பது கடினமாக இருக்கும். ஆனால், அரபியை தொடர்ந்து கற்றுக்கொள்ளும் போது இது பழக்கமாகிவிடும். எனவே, முதல் பாடத்தில் அரபியை படிப்பது கடினமாக இருக்கிறது என்று நினைத்து சோர்ந்துவிடவேண்டாம்.

சேர்த்து எழுதுதல்:

ஆங்கிலத்தில் நாம் எப்படி சேர்த்து எழுதுகிறோமோ, அது போல, அரபி எழுத்துக்களையும் சேர்த்து எழுதவேண்டும். அப்படி சேர்த்து எழுதும் போது, எழுத்துக்களின் வடிவம் மாற்றமடையும். உதாரணத்திற்கு, மேலே கண்ட "ஆமீன்" வார்த்தையில் நான்கு எழுத்துக்கள் உள்ளன. அவைகளை தனித்தனியாகவும், கூட்டாகவும் நாம் படித்து கற்றுகொள்வோம்.  ஆமீன் என்ற  வார்த்தையில் மூன்று எழுத்துக்கள் தானே உள்ளது, நான்காவது எழுத்து எங்கே இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? இவ்வார்த்தையில் நான்காவது எழுத்தும் உள்ளது, அது 'ய்' என்ற எழுத்தாகும், அதனையும் நாம் இப்பாடத்தில் கற்றுக்கொள்வோம்.

நான்கு எழுத்துக்கள்:

இந்த வார்த்தையில் அ, ம, ன (ந) மற்றும் ய என்ற நான்கு எழுத்துக்கள் உள்ளன. 

அரபியில் 29 எழுத்துக்கள் உள்ளன. அவைகளில் உள்ள நான்கு எழுத்துக்களை நாம் இந்த பாடத்தில் கற்றுக்கொள்ளப் போகிறோம். கீழேயுள்ள அட்டவணையில் வட்டமிடப்பட்ட நான்கு எழுத்துக்களை கவனியுங்கள். மீதமுள்ள எழுத்துக்களை அடுத்தடுத்த அத்தியாயங்களில் காண்போம், அவைகளை படிக்க இப்போது முயலவேண்டாம், அதிகமாக குழப்பமடைவீர்கள்.

அட்டவணை 1: அரபி எழுத்துக்கள்  

மூலம்: விக்கீபீடியா

(சிலர் அரபியில் 28 எழுத்துக்கள் என்றுச் சொல்வார்கள், அவர்கள் ஹம்ஸா என்ற எழுத்தை கணக்கில் கொள்ளமாட்டார்கள்.)

பெயரும் உச்சரிப்பும்:

ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு பெயர் உண்டு, ஆனால், அதன் உச்சரிப்பு வேறுபடும். உதாரணத்திற்கு: அலிஃப் என்பது எழுத்தின் பெயராகும். ஆனால், அதன் உச்சரிப்பு"அ" என்பதாகும்.  மேலேயுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்ட நான்கு   எழுத்துக்களின் பெயர்களையும், உச்சரிப்புகளையும் பல முறை படித்துப் பார்க்கவும். 

அலிஃப்:

அரபி எழுத்துக்களின் முதலாவது எழுத்தின் பெயர் அலிஃப் ஆகும். "அ" என்ற உச்சரிப்பிற்கு இதனை பயன்படுத்த வேண்டும். (அடுத்த பாடத்தில் ஹம்ஸா என்ற எழுத்தைப் பற்றி சில விவரங்களைக் காண்போம், ஹம்ஸா என்ற எழுத்தும் அ என்ற உச்சரிப்புக்கு பயன்படுகிறது. இது முதலாவது பாடம் என்பதால் ஒவ்வொரு எழுத்தின் அடிப்படை விவரங்களை மட்டுமே பார்க்கப்போகிறோம்.)

'அ' குறிலை 'ஆ' நெடிலாக மாற்றுவது எப்படி? 

இது மிகவும் சுலபம். அலிஃப் எழுத்துக்கு மேலே கீழ்கண்ட படத்தில் உள்ளது போல ஒரு குறியீட்டை (Maddah - மத்தாஹ்) எழுதினால், அது "ஆ" என்று மாறிவிடும். இது அலிஃப் என்ற எழுத்துக்கு மட்டுமே பொருந்தும்.

மீம் என்ற எழுத்து:

ஆமீன் வார்த்தையின் இரண்டாவது எழுத்து, "ம" என்பதாகும். அரபியில் இதனை மீம் () என்று அழைப்பார்கள்.

எழுத்துக்களின் இடச்சூழல்: 

அரபி எழுத்துக்கள் ஒரு சொல்லின் முதல் எழுத்தாகவும், இடையேயும், கடைசியாகவும் வரும்பொழுது அவைகளின் வடிவங்கள் மாறுபடும். "ம"என்ற எழுத்து ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வரும் போது ஒருவடிவத்திலும், இடையில் வரும் போது வேறு வகையாகவும், கடைசியில் வரும் போது இன்னொரு வகையாகவும் இருக்கும். கீழே தரப்பட்ட அட்டவணையை வலது பக்கத்திலிருந்து படிக்கவும்.

1வார்த்தையின் கடைசியில் ம   வரும் போது வார்த்தையின் இடையில் ம வரும் போதுவார்த்தையின் முதலில் ம வரும் போது'ம' தனித்து வரும் போதுஎழுத்தின் உச்சரிப்பு
2                              ம (Ma)
3<-- மஞ்சலில் குறிப்பிடப்பட்டவைகளை மட்டுமே அடையாளம் காணுங்கள்.  'ம' என்ற எழுத்து எப்படி  தன் உருவத்தை இடத்தைப் பொருத்து மாற்றிக் கொள்கிறது என்பதை கவனியுங்கள்.
4

 லகும்

 (Lakum)

 மத்தேயு 6:33

கலிமதி

(Kalimathi)

 மல்கியா 1:1 

 மலாகீ (க்ஹி)

(Malaakhi)

மல்கியா 1:1

<-- இவ்வார்த்தைகள் அனைத்தும் அரபி பைபிளிலிருந்து எடுக்கப்பட்டன

அட்டவணை 2: மீம் எழுத்து - இடச்சூழல் வடிவங்கள்

ஆமீன் () என்ற வார்த்தையில் "மீ" என்பது இரண்டாவது எழுத்தாக (மத்தியில்) வருகிறது, எனவே,   என்ற வடிவில் அது வரவேண்டும், முந்தைய எழுத்திலிருந்து ஒரு வால் போல ஒரு கோடு வந்து 'ம' வோடு ஒட்டவேண்டும். ஆனால், முதல் எழுத்து அலிஃப் என்பதால்,  முதல் வடிவிலேயே ( ) மீ வந்துள்ளது. அடுத்தடுத்த பாடங்களில் இவைகள் பற்றி விவரமாக காண்போம். 

உயிர் எழுத்துக்கள் (குறில்)

ம என்ற எழுத்தை எப்படி மீ என்று மாற்றுவது:

அடுத்த எழுத்துப் பற்றி கற்றுக்கொள்வதற்கு முன்பு, அரபி உயிரெழுத்துக்களில் குறில் உயிரெழுத்துக்கள் (Short Vowels) பற்றி சுருக்கமாக காண்போம்.

அரபியில் முன்று குறில் உயிர் எழுத்துக்கள்  (short vowels) உள்ளன, அவை அ, இ, உ என்பவைகளாகும்.

அட்டவணை 3: குறில் உயிர் எழுத்துக்கள்

ஃபதாஹ்: ஒரு எழுத்துக்கு மேலே ஒரு சிறிய சாய்வு கோடு போட்டால், அதை ஃபதாஹ் என்றுச் சொல்வார்கள், எழுத்துக்களை 'அ' என்று உச்சரிக்க இதை பயன்படுத்த வேண்டும். 

உதாரணம்:

ம் + அ = ம

க் + அ = க

கஸ்ராஹ்: ஒரு எழுத்துக்கு கீழே ஒரு சிறிய சாய்வு கோடு போட்டால், அதை 'இ' என்று உச்சரிக்கவேண்டும்.

உதாரணம்:

ம் + இ = மி 

க் + இ = கி

தம்மாஹ்: ஒரு எழுத்துக்கு மேலே 9 போல இருக்கும் குறியீட்டை("தம்மாஹ்"வை) எழுதினால், அது "உ" போல உச்சரிக்கப்படவேண்டும். ("தம்மாஹ்" என்பதை "தண்டனை" என்ற வார்த்தையில் வரும் "த" வைப்போல உச்சரிக்கவேண்டும்.)

உதாரணம்:

ம் + உ = மு 

க் + உ = கு

இதுவரை கற்றுக்கொண்டவைகளை இந்த அட்டவணையில் காணலாம்.

மேற்கண்ட இலக்கண விதி "ம" என்ற எழுத்துக்கு மட்டுமல்ல, இதர எழுத்துக்களுக்கும் பொருந்தும். அவைகளை தேவைப்படும் இடங்களில் கற்றுக்கொள்வோம்.

நமக்கு 'ம' என்ற எழுத்தை எப்படி 'மி' யாக மாற்றுவது என்று தெரிந்துவிட்டது (ம என்ற எழுத்தின் கீழே கஸ்ராஹ் என்ற குறியீட்டை போடவேண்டும்).  இப்போது மி என்ற குறில் எழுத்தை எப்படி மீ நெடிலாக மாற்றுவது என்பதை கற்றுக்கொள்வோம். அரபியில் மீ என்பது எப்படி இருக்கிறது என்பதை இன்னொரு முறை கீழ்கண்ட படத்தில் பாருங்கள்.

அரபி எழுத்து 'ய'

மி என்ற எழுத்தோடு கூட  (ய்)  என்ற எழுத்தை சேர்த்து எழுதினால், அது மீ  என்றாகிவிடும். 

"ய" எழுத்து இடச்சூழலில் எப்படி எழுதப்படும் என்பதை கீழ்கண்ட அட்டவணை காட்டுகிறது (வலமிருந்து படிக்கவும்).

1வார்த்தையின் கடைசியில் ய வரும் போது வார்த்தையின் இடையில் ய வரும் போதுவார்த்தையின் முதலில் ய வரும் போது'ய' தனித்து வரும் போதுஎழுத்தின் உச்சரிப்பு
2                            ய (Ya)
3<-- மஞ்சலில் குறிப்பிடப்பட்டவைகளை மட்டுமே அடையாளம் காணுங்கள்.  ய என்ற எழுத்து எப்படி  தன் உருவத்தை இடத்தைப் பொருத்து மாற்றிக் கொள்கிறது என்பதை கவனியுங்கள்.
4

 யஹ்யா

(Yahyaa)

குர்-ஆன் 6:85

ஆமீன்

(Aameen)

வெளி 22:21 

 யஸூஅ

(Yashooa or Yashua)

மாற்கு 1:1

<-- இவ்வார்த்தைகள் பைபிள் மற்றும் குர்-ஆனிலிருந்து  எடுக்கப்பட்டன

அட்டவணை 4: யா எழுத்து - இடச்சூழல் வடிவங்கள்

மேற்கண்ட அட்டவணையில் இருக்கும் "ய்" என்ற எழுத்து மி என்ற எழுத்தோடு கூட்டு சேரும் போது மீ என்று மாறுகிறது. கீழ்கண்ட அட்டவணையை பார்க்கவும். இந்த இலக்கண விதி இதர எழுத்துக்களுக்கும் பொருந்தும், தேவையான இடங்களில் அவைகளைக் காண்போம். (ய என்ற எழுத்துக்கு மேலே சுகூன் என்ற ஒரு குறியீடு உள்ளது, அதாவது "ய்" மெய் எழுத்தாக இருக்கிறது. இந்த சுகூன் பற்றி தனி தலைப்பில் விளக்கப்பட்டுள்ளது).

இதுவரை ஆமீன் என்ற வார்த்தையில் வரும் இரண்டாவது எழுத்து 'மீ' என்ற எழுத்தைப் பற்றி பார்த்தோம். 'ம' என்ற எழுத்து எப்படி 'மி' யாக மாறியது என்றும், அதன் பிறகு அது எப்படி 'மீ' யாக மாறியது என்றும் புரிந்துக் கொண்டீர்களா?

இப்போது அடுத்த எழுத்துக்குப் போவோம்.

நூன் என்ற எழுத்து:

தமிழில் மூன்று எழுத்துக்கள் நூன் என்ற எழுத்துக்கு இணையாக உள்ளன. அவைகள்: ந, ன, ண என்பவைகளாகும். அரபியில் ஒரே ஒரு "ந" உள்ளது. கீழ்கண்ட அட்டவணையில் நூன் என்ற எழுத்தின் இடச்சூழல் உருவங்களைக் காண்போம் (வலமிருந்து படிக்கவும்).

1வார்த்தையின் கடைசியில் வரும் போது வார்த்தையின் இடையில் வரும் போதுவார்த்தையின் முதலில் வரும் போது'ந' தனித்து வரும் போதுஎழுத்தின் உச்சரிப்பு
2                            ந / ன / ண (Na)
3<-- மஞ்சலில் குறிப்பிடப்பட்டவைகளை மட்டுமே அடையாளம் காணுங்கள்.  ந என்ற எழுத்து எப்படி  தன் உருவத்தை இடத்தைப் பொருத்து மாற்றிக் கொள்கிறது என்பதை கவனியுங்கள்.
4

 நஹ்னு

(Nahnu)

யோவான் 1:16

குர்-ஆன் 2:11

கனீஸஹ்

(Kaneesah)

அப் 12:1

 

 நஹம்யா

(Nahamyaa)

நெகேமியா 1:1

<-- இவ்வார்த்தைகள் பைபிள் மற்றும் குர்-ஆனிலிருந்து  எடுக்கப்பட்டன

அட்டவணை 5: நூன் எழுத்து - இடச்சூழல் வடிவங்கள்

இதுவரை நாம் ஆமீன் என்ற வார்த்தையில் வரும் எழுத்துக்களை கற்றுக் கொண்டோம். அவைகள், அ, ம, ன, ய என்பவைகளாகும். 

ஆமீன் என்ற அரபி வார்த்தையை இப்போது படித்துப் பாருங்கள், உங்களால் எழுத்துக்களை அடையாளம் காட்டமுடிகின்றதா?

குறில் மெய் எழுத்துக்களை நெடிலாக மாற்றுவது எப்படி?

'அ' என்ற எழுத்தை 'ஆ' வாக மாற்றுவது எப்படி என்பதைப் பார்த்தோம். இப்பாடத்தில் அலிஃப் தவிர இன்னும் மூன்று எழுத்துக்களை நாம் கற்றுக்கொண்டுள்ளோம், அவையாவன: ம, ய, மற்றும் ந. இவ்வெழுத்துக்களை எப்படி நெடிலாக மாற்றுவது என்பதையும் கற்றுக்கொண்டால், இப்பாடம் முழுமை அடைந்துவிடும். 

ஒரு குறில் மெய் எழுத்தை நெடிலாக மாற்றுவது மிகவும் சுலபம். மெய் எழுத்தோடு அலிஃப ஐ சேர்த்துவிட்டால், அது நெடிலாக மாறிவிடும். இந்த விதி எல்லா எழுத்துக்களுக்கும் பொருந்தும். எழுத்துக்கள் நெடிலாக மாறும் போது, சில எழுத்துக்களின் உருவம் மாற்றமடையும் கீழே உள்ள அட்டவணையை பார்க்கவும்:

 * நா மற்றும் யா எழுத்துக்கள் ஒரே மாதிரியாக காணப்படுகிறது. எழுத்துக்கு மேலே ஒரு புள்ளி இருந்தால், அது நா ஆகும், எழுத்துக்கு கீழே இரண்டு புள்ளிகள் இருந்தால், அது யா ஆகும், இதனை நினைவில் வைக்கவும்.

சுகூன் (ஸுக்கூன் - Sukoon):

இந்த முதலாவது பாடத்திற்கு இதோடு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று விரும்புகிறேன்.  சுகூன் என்றால் என்னவென்று இப்போது காண்போம்.

சுகூன் என்பது ஒரு அரபி எழுத்தின் மீது வைக்கும்  ஒரு சிறிய வட்டமாகும். ஒரு மெய் எழுத்துக்கு பிறகு உயிர் எழுத்து வரவில்லையென்றால், அதன் மீது ஒரு வட்டம் வைக்கப்படும். தமிழில் மெய் எழுத்துக்களுக்கு மேலே வைக்கும் புள்ளியைப் போலத்தான் இந்த சுகூனும்  என்று இப்போதைக்கு தெரிந்துக் கொண்டால் போதுமானது. சிலர் முழு வட்டம் வைப்பதற்கு பதிலாக, அறைவட்டம் கொடுத்திருப்பார்கள்.

அட்டவணை 6: சுகூன் குறியீடு

உதாரணம்: மின் என்ற அரபி வார்த்தையை இரண்டு முறைகளிலும் எழுதப்படுவதை கீழே காணலாம். மீம் எழுத்துக்கு கீழே கஸ்ராஹ் எழுதினால் அது மி ஆகும், அதன் பிறகு நூன் எழுத்துக்கு மேலே ஒரு சுகூன் (ஒரு சிறிய வட்டம்/அறைவட்டம்) எழுதினால், அது 'ன்' என்று உச்சரிக்கப்படும்.

நாம் இதுவரை படித்து தெரிந்துக்கொண்ட எழுத்துக்கள்:

அட்டவணை 7: அத்தியாயம் 1ல் கற்றுக்கொண்ட எழுத்துக்கள்

இவ்வெழுத்துக்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு வார்த்தையை நாம் அரபி குர்-ஆன் மற்றும் பைபிளிலிருந்து அடுத்தடுத்த பாடங்களில் பார்ப்போம். முதல் பாடத்திலேயே அதிக விவரங்களை கற்றுக் கொள்வது சிலருக்கு சலிப்பை உண்டாக்கும். 

அரபி எழுத்துக்களை எழுதும் முறை:

இதுவரை ஆமீன் வார்த்தையில் வரும் நான்கு எழுத்துக்களை எப்படி படிப்பது என்று கற்றுக்கொண்டோம்.  இப்போது,  இவ்வெழுத்துக்களை எப்படி எழுதுவது என்பதைப் பார்ப்போம். சிலருக்கு அரபி எழுத்துக்களை எழுத கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அவர்களுக்கான பகுதி இது.

அரபியை வலது பக்கத்திலிருந்து எழுதவும், படிக்கவும் வேண்டும் என்பதை மனதில் வைக்கவும்.

அரபி எழுத்துஎழுதும் முறை

மேலிருந்து கீழாக ஒரு கோடு போடவேண்டும். சிலருக்கு வசதியாக இருக்கும் என்பதால் அல்லது பழக்கம் என்பதால், இவ்வெழுத்தை கீழிருந்து மேலாக எழுத முயலாதீர்கள். இப்படி செய்தால், தொடர்ச்சியாக அரபி எழுதும் போது சிரமம் உண்டாகும். இது எல்லா எழுத்துகளுக்கும் பொருந்தும். எனவே, எழுதும் போது, கொடுக்கப்பட்டபடியே எழுதி பழக்கப்படவும்.

தமிழில் உள்ள "ம" எழுத்தில் வரும் முதலாவது நேர்க்கோட்டை  கீழே இழுத்துவிட்டால், அது அரபியின்  மீன் எழுத்து போல தெரியும்.

அரபியில் எழுத பழகுபவர்கள், கொடுக்கப்பட்டு இருக்கும் வரிசைப் படியே (1 – 4) எழுதி பழகவேண்டும்.

தமிழில் இருக்கும் "ப்" என்ற எழுத்தைப் போலவே இவ்வெழுத்தை எழுதவேண்டும். எழுதும் முறையில் கொடுக்கப்பட்டு இருக்கும் வரிசைப்படியே எழுதவேண்டும். இவ்வெழுத்தை சேர்த்து எழுதும் போது, மேலேயுள்ள புள்ளியானது (4) நடுவில் இல்லாமல், வலது பக்க கோட்டின் மீது வரும்: நூன் எழுத்தின் முதல் நிலை எழுத்தை கீழே பார்க்கவும்:

தமிழில் இருக்கும் "பி" போன்ற உருவம் கொண்டது, ஆனால் எழுத்தின் வலைவுகளை கவனிக்கவும்.  தமிழில் பி என்ற எழுத்தை எழுதுவது போல எழுதக்கூடாது. எழுதும் போது, கொடுக்கப்பட்ட வரிசை எண்களின் படி எழுதவும். 

அட்டவணை 8: அத்தியாயம் 1ல் கற்றுக்கொண்ட எழுத்துக்களை எழுதும் முறை


அருஞ்சொற்பொருள்:

நாம் இதுவரை கற்றுக்கொண்ட நான்கு எழுத்துக்களை மட்டுமே வைத்துக்கொண்டு, வேறு புதிய வார்த்தைகளை உருவாக்குவோமா? இது தான் இந்த முதலாவது பாடத்தின் கடைசி பகுதி, இதற்கு பிறகு உங்களுக்காக ஒரு அருமையான பயிற்சி உள்ளது, அதனை நீங்கள் செய்யவேண்டும்.

அமீன்:

அமீன் என்றால் நேர்மையான/நம்பிக்கைக்குரிய/உண்மையான என்று பொருள். (இன்னும் பல பொருள்களில் இவ்வார்த்தை சிறிது மாற்றத்துடன் குர்-ஆனில் வருகிறது, அவைகளை பிறகு பார்ப்போம்.)

குர்-ஆன் 26:107ஐ படிப்போம்:

Innee lakum rasoolun ameenun

இன்னீ லகும் ரஸூலுன் அமீனுன் 

குர்-ஆன் 26:107. நிச்சயமாக நான் உங்களுக்கு (இறைவனால்) அனுப்பப் பெற்ற நம்பிக்கைக்குரியதூதன் ஆவேன். 

பைபிளிலும் இவ்வார்த்தையை பல இடங்களில் காணலாம், நாம் இரண்டு எடுத்துக்காட்டுக்களை காண்போம். முதலாவது தேவன் உண்மையுள்ளவர் என்றுச் சொல்லும் வசனம், அடுத்தபடியாக உண்மையுள்ள மனுஷன் எப்படி ஆசீர்வதிக்கப்படுவான் என்ற வசனம்.

. . . அமீனுன் ஹுவ அல்லாஹு . . .

1 கொரிந்தியர் 1: 9 (1 Cor 1: 9) . . . தேவன் உண்மையுள்ளவர் . . . 
God is faithful…

அர்ரஜூலு  அல் அமீனு . . .

நீதிமொழிகள் 28:20 (Proverbs 28:20)
உண்மையுள்ள மனுஷன் . . . 
A faithful man…

*1 கொரி 1:9ல் அலிஃப் எழுத்துக்கு மேலே  ஒரு குறியீடு இருப்பதை கவனியுங்கள். அதனை ஹம்ஸா என்றுச் சொல்வார்கள், அதைப் பற்றி அடுத்த பாடத்தில் நாம் கற்றுக்கொள்வோம்.

மா என்றால் என்ன? (What is Ma?)

அரபியில் "மா" என்றால் "என்ன" என்று பொருள், உதாரணத்திற்கு, "உன் பெயர் என்ன?" என்று கேள்வியை அரபியில் எப்படி கேட்பது?  பைபிளிலிருந்து எடுத்துக்காட்டுக்களை காண்போம். மீம் + அலிஃப் இரண்டையும் சேர்த்தால், நமக்கு "மா" கிடைக்கும் என்பதை நாம் ஏற்கனவே இப்பாடத்தில் கற்றுக்கொண்டோம்.

மா ஸ்முக?

What is your name?

ஆதியாகமம் 32:27 (Genesis)

அவர்: உன் பேர் என்ன என்று கேட்டார்; யாக்கோபு என்றான்.

இதே கேள்வியை இயேசு ஒரு அசுத்த ஆவி பிடித்தவனிடமும் கேட்கிறார், பார்க்க மாற்கு 5:9.

மா ஸ்முஹு?

What is his name?

யாத்திராகமம் 3:13 (Exodus)

அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது,அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான்.

நீதிமொழிகள் 30:4 (Proverbs)

. . .அவருடைய நாமம் என்ன? அவர்குமாரனுடைய நாமம் என்ன? அதை அறிவாயோ?

Ma alqariAAatu

மா அல்காரி அது

குர்-ஆன் 101:2 (Quran)

திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன?

மன் என்றால் யார்? (Who is Man?):

அரபியில் மன் என்றால் "யார்" என்று அர்த்தம். இதற்கும் சில எடுத்துக்காட்டுக்களை குர்-ஆன் மற்றும் பைபிளிலிருந்து காண்போம்.

Waqeela man raqin

வகீலா மன் ராகின்

குர்-ஆன் 75:27 (Quran)

"மந்திரிப்பவன் யார்?" எனக் கேட்கப்படுகிறது.

மன் ஹுவ அர்ரப்பு

யாத்திராகமம் 5:2 (Exodus)

அதற்குப் பார்வோன்: நான் இஸ்ரவேலைப் போகவிடக்கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்?

மன் ஹுவ அர்ரப்பு

நீதிமொழிகள் 30:9 (Proverbs)

நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து,கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; . . .

அனா (நான் – I am):

"நான்" என்பதை அரபியில் "அனா" என்று சொல்வார்கள். 

யாத்திராகமம் 6:2ஐ பார்ப்போம், அதில் கர்த்தர் மோசேயிடம் பேசும் போது சொல்லும் வாசகத்தை படிப்போம்.

அனா அர்ரப்பு

யாத்திராகமம் 6:2(Exodus)

மேலும், தேவன் மோசேயை நோக்கி: நான் யேகோவா

 God also said to Moses, "I am the LORD".

அரபியில் தேவன் பேசிய வாக்கியம்: "அனா அர்ரப்பு" (Anaa Arrabbu) என்பதாகும். அரபியில் ரப் என்றால் "இறைவன், கடவுள், தேவன்" என்று அர்த்தமாகும். "அனா" என்றால் "நான்" என்று அர்த்தம். ஆக, "அனா அர்ரப்பு" என்றால், "நான் தேவன்" என்பதாகும். (எபிரேய மொழியில் யேகோவா என்று இருந்தாலும், ஆங்கிலத்தில் "LORD" என்றும், அரபியில் "ரப்" என்றும் மொழியாக்கம் செய்துள்ளனர். உண்மையில் தமிழில் இவ்வசனத்தை மொழியாக்கம் செய்தது போல, "நான் யேகோவா" என்று அரபியில் மொழியாக்கம் செய்திருக்கவேண்டும்).

குர்-ஆனிலும் இந்த நிகழ்ச்சி கீழ்கண்ட விதமாக வருகிறது.

அனா அல்லாஹு 

குர்-ஆன் 28:30

. . . ."மூஸாவே! நிச்சயமாக நானே அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்!" என்று கூப்பிடப்பட்டார்.

மின் (இருந்து – From):

அரபியில் "மின்" என்றால், "இருந்து" என்று ஒரு பொருள் உண்டு. அதனை மட்டும் இப்போது காண்போம்.

. . . இர்மியா மின் அர்ரப்பி 

எரேமியா 7:1 கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வசனம்:

Jeremiah 7:1 The word that came to Jeremiah from the LORD, saying,

இன்னொரு உதாரணத்தைக் காண்போம். ஒருவரைப் பார்த்து நீங்கள் எந்த நாட்டவர் என்று கேட்கும் போது, அவர் "நான் சைனாவிலிருந்து வந்திருக்கிறேன்" என்றுச் சொல்வாரானால், அதனை அரபியில் கீழ்கண்டவாறு எழுதலாம்.

 ana min al-Siin

 அனா மின் அல்-சீன்

 I am from China

 நான் சைனாவிலிருந்து வந்திருக்கிறேன் 


அத்தியாயம் 1 – பயிற்சிகள்

பயிற்சி 1:

குர்-ஆனின் முதல் அத்தியாயம் "அல்-ஃபாத்தியா" கீழே அரபியில் கொடுக்கப்பட்டுள்ளது (7 வசனங்கள்). அதே போல, சங்கீதம் 100ஐ அரபியில்  கொடுத்துள்ளேன். நாம் இதுவரை படித்த அ, ம, ந, மற்றும் ய என்ற எழுத்துக்களையும், அவைகளின் இதர வடிவங்களையும் அடையாளம் காணுங்கள்.

குர்-ஆன் அத்தியாயம் 1: அல் ஃபாத்தியா

 

சங்கீதம் 100

பயிற்சி 2:

கேள்விகளுக்கு பதில் அளியுங்கள்.

1) நீங்கள் கற்றுக்கொண்ட நான்கு அரபி எழுத்துக்கள் எவை? 

2) ஃபதாஹ், கஸ்ராஹ் மற்றும் தம்மாஹ் என்றால் என்ன? அவைகளின் பயன்பாடு என்ன?

3) 'அலிஃப் மத்தாஹ்'வின் பயன் என்ன?

4) இப்பாடத்தில் கற்றுக்கொண்ட நான்கு எழுத்துக்களின் மூன்று இடச்சூழல்களை எழுதிக் காட்டவும்.

பயிற்சி 3:

பின்வருபவற்றை பொருத்துக:

பயிற்சி 4

கீழ்கண்ட வாத்தைகளை அரபியில் தனித்தனி எழுத்தாகவும், சேர்த்தும் எழுதி பழகவும். இது எழுதும் பயிற்சிக்காக தரப்பட்டுள்ளது, எல்லா வார்த்தைகளுக்கும் பொருள் இல்லை.


இப்பாடங்களில் பயன்படுத்தப்படும்

அரபி பைபிள் மற்றும் குர்-ஆன் மொழியாக்கங்கள்

இப்பாடங்களில் "Smith & Van Dyke (1865)" அரபி பைபிள் மொழியாக்கத்தை நான் பயன்படுத்தியுள்ளேன். இந்த மொழியாக்கத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ள கீழ்கண்ட தொடுப்புக்களை சொடுக்கவும்:

1) ஆன்லைனில் படிக்க: http://www.arabicbible.com/arabic-bible/text.html

2) Ms-Word document ஆக பதிவிறக்கம் செய்துக் கொள்ள: http://www.arabicbible.com/arabic-bible/word.html

3) உங்களிடம் e-sword மென் பொருள் இருந்தால், அதில் இந்த மொழியாக்கத்தை சேர்த்துக் கொள்ள இங்கு சொடுக்கவும்: http://www.arabicbible.com/arabic-bible/online/e-sword.html

4) PDF Format ஆக பதிவிறக்கம் செய்துக் கொள்ள: http://www.arabicbible.com/arabic-bible/pdf.html

5) அரபி பைபிள் ஒலி வடிவத்தில் (ஆடியோ) பதிவிறக்கம் செய்துக் கொள்ள:http://www.arabicbible.com/arabic-bible/audio.html

6) பைபிள் கேட்வே (www.biblegateway.com) தளத்தில் மேலும் இரண்டு அரபி மொழியாக்கங்கள் உள்ளன. 

அரபி குர்-ஆன்:

அரபி  குர்-ஆனின் வசனங்கள் அனைத்தையும் நான் பல தளங்களிலிருந்து எடுத்து பயன்படுத்தி இருக்கிறேன். ஏனென்றால், பல அரபி ஃபாண்ட் (Font) களில் அரபி குர்-ஆன்கள் ஒவ்வொரு தளத்திலும் உள்ளது.  நம்முடைய பாடங்களை சுலபமாக புரிந்துக் கொள்ளவேண்டுமென்பதால், கீழ் கண்ட தளங்களிலிருந்து நான்  குர்-ஆன் வசனங்களை எடுத்துள்ளேன்:

1) தமிழில் குர்-ஆன் தளம் (tamililquran) - http://www.tamililquran.com/ 

2) ஸர்ச் ட்ரூத் (searchtruth) - http://www.searchtruth.com/ 

3) குர்-ஆன் புரௌஸர் (quranbrowser) -  http://www.quranbrowser.com/ 

4) குர்-ஆன் கார்பஸ் - http://corpus.quran.com/ 

5) இதர குர்-ஆன் மென்பொருள்கள்

தமிழ் குர்-ஆன்:

தமிழ் குர்-ஆன் வசனங்கள் அனைத்தும் 'முஹம்மது ஜான் தமிழாக்கத்திலிருந்து' எடுக்கப்படுகின்றன. இதர தமிழாக்கங்கள் பயன்படுத்தப்படும் போது அவைகளின் பெயர்கள் தகுந்த இடத்தில் குறிப்பிடப்படும்.

அரபி பைபிள் சம்மந்தப்பட்ட பயனுள்ள தளங்கள்:

1) Bible Translations into Arabic - https://en.wikipedia.org/wiki/Bible_translations_into_Arabic

2) List of Christian Terms in Arabic - https://en.wikipedia.org/wiki/List_of_Christian_terms_in_Arabic

3) Website and app with six Arabic versions - https://www.bible.com/bible/13/jhn.1.avd

4) Arabic Bible: Book of Life (pdf and audio) - http://www.biblica.com/en-us/bible/bible-versions/arabic-bible/

5) MT. SINAI ARABIC CODEX 151 -- Oldest known translation of the New Testment to Arabic  -http://www.arabicbible.com/arabic-bible/codex/15-mt-sinai-arabic-codex-151.html


முன்னுரை        பொருளடக்கம்       அத்தியாயம் 2 - முஹம்மது


Source: