ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

செவ்வாய், 31 ஜூலை, 2012

ரமளான் நாள் 12 - ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா

[அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதங்கள்: கடிதம் 1, கடிதம் 2கடிதம் 3கடிதம் 4கடிதம் 5கடிதம் 6கடிதம் 7கடிதம் 8 , கடிதம் 9, கடிதம் 10, கடிதம் 11 ]

அன்புள்ள தம்பிக்கு,

உனக்கு சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

உன் கடிதங்கள் கண்டு, மட்டில்லா மகிழ்ச்சி அடைகிறேன். நீ ஒளிவு மறைவின்றி நேர்மையுடன் உன் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துக் கொள்கின்றபடியால் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.  நேற்று நீ எழுதிய கடிதத்தில் "முஹம்மது ஒரு நல்ல வழிகாட்டி, அவரை நீங்கள் ஏன் பின்பற்றக்கூடாது?" என்று என்னிடத்தில் கேள்வி எழுப்பியிருந்தாய்.  தம்பி, நல்ல மனிதர்களை பின் பற்றுவதில் எனக்கு மாற்று கருத்தில்லை. நீ சொல்வது உண்மையாக இருக்குமானால், முஹம்மதுவை பின்பற்ற எனக்கு எந்த ஒரு தடையும் இல்லை. ஆனால், உண்மை உனக்கு விரோதமாக இருக்கிறது தம்பி.

நான் இஸ்லாமிய நூல்களை படித்தேன், ஹதீஸ்களை படித்தேன், குர்-ஆனை அனேக மொழியாக்கங்களில் படித்துள்ளேன், மேலும் இஸ்லாமிய விரிவுரையாளர்களின் கருத்துக்களையும் படித்துள்ளேன்.  என் தம்பி பின்பற்றும் வழிகாட்டியை பின் பற்ற எனக்கும் ஆவளாகத் தான்  உள்ளது, ஆனால், அந்த வழிகாட்டியின் முழு வாழ்க்கை வரலாறை படித்த பிறகு, என் எண்ணங்களை மாற்றிக்கொண்டேன். உடன் பிறந்த தம்பியின் ஆசையை நிறைவேற்றுவதை விட நேர்மையும், ஒழுக்கவும், உண்மையும், சத்தியமும் உயர்ந்தது. தம்பிக்காக உயிரை விடலாம், ஆனால், அநீதிக்கும் பொய்யுக்கும் வக்காளத்து வாங்கமுடியாதே!  எனவே உன் விருப்பத்தை நான் நிறைவேற்ற முடியாமல் போகிறதே என்று வருத்தப்படுகிறேன். நாம் பின்பற்றக்கூடிய நிலையில் முஹம்மதுவின் வாழ்க்கை இல்லை என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன். ஒரே ஒரு விஷயத்தை உனக்கு முன்பாக நான் வைக்க விரும்புகிறேன்.

இயேசுவிடம் சிறு பிள்ளைகள் வருவதை சீடர்கள் தடுத்தபோது, அவர்களை தடை செய்யாதீர்கள், பரலோக இராஜ்ஜியம் அப்படிப்பட்டவர்களுடையது என்றுச் சொல்லி, அந்த பிள்ளைகள் மீது தன் கரங்களை வைத்து ஆசீர்வதித்து அனுப்பினார். தன்னுடைய சீடர்களுக்கு பாடம் புகட்ட ஒரு சிறு பிள்ளையை காட்டி, இதோ இவர்களைப் போல நீங்கள் மாறாவிட்டால் பரலோக இராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியாது என்றார். சிறு பிள்ளைகளைப்போல நாமும் கள்ளம் கபடமில்லாமல் இருக்கவேண்டும் என்று இயேசு சுட்டிக்காட்டினார்.  ஆனால், உன் வழிகாட்டியாகிய முஹம்மது தனக்கு 50 வயதாகும் போது, 6 வயது ஆயிஷா என்ற ஒரு சிறுமியை திருமணம் செய்துக்கொள்ள  நிச்சயம் புரிந்தார், அதன் பிறகு தனக்கு 53 வயதாகும் போது, கள்ளம் கபடமற்ற 9 வயதான அந்த சிறுமியை திருமணம் செய்துக்கொண்டு, அந்த சிறுமியோடு தாம்பத்திய உறவில் ஈடுபட்டார்.

எனக்கு என்னவோ இந்த செயல் ஒரு ஆன்மீக தலைவர் செய்யக்கூடிய செயலாக தோன்றவில்லை. இதனை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. 9 வயது சிறுமியை 53 வயதுடைய ஆண் எப்படி கட்டிலுக்கு அழைக்கலாம்?  நாம் அவ்வப்போது செய்தித்தாள்களில் "பள்ளிக்கூடம் சென்றுக்கொண்டு இருந்த சிறுமியை வழிமறைத்து பலாத்காரம் செய்தார்கள், கற்பழித்தார்கள்" என்ற செய்திகளை வாசிக்கிறோம். இப்படி வாசிக்கும் போது ஏதோ மனதில் இனம் புரியாத வேதனை ஆட்கொள்கிறது, உலகத்தின் மீது ஒரு வகையான வெறுப்பு உண்டாகிறது. ஏன் இப்படி சில ஆண்கள் நடந்துக்கொள்கிறார்கள். தங்களுக்கு காமம் அதிகமாக இருந்தால் விபச்சார விடுதிக்குச் சென்று சாகவேண்டியது தானே? ஏன் இப்படி விளையாடவேண்டிய வயதில் இருக்கும் சிறுமிகளை கொடுமைப்படுத்துகிறார்கள் என்று பலவாறு கேள்விகள் எழுகின்றன.

உன்னுடைய வழிகாட்டியாகிய முஹம்மது தனக்கு 53 வயதாகும் போது, ஒரு 9 வயது சிறுமியை திருமணம் செய்துக்கொண்டது எந்த வகையில் நியாயமாகும்.  அவர் அன்று செய்த இந்த காரியத்தினால், இன்று இஸ்லாமிய உலகில் படிக்கவேண்டிய வயதில் இருக்கும் சிறுமிகள் தங்கள் வயதான கணவர்களுக்கு பிள்ளைகளை பெற்றுத் தருகின்ற இயந்திரங்களாக மாறியிருக்கின்றனர். இவைகளை பார்க்கும் போது மனதிலே வேதனையாக உள்ளது. இந்த நிலையில் நான் எப்படி உன் வழிகாட்டியை என் வழிகாட்டியாக எண்ணமுடியும்? இன்று உன்னிடம் நான் கேட்கும் கேள்வியை, என்னிடம் யாராவது கேட்டால் நான் என்ன பதில் சொல்லமுடியும்?  நம்மால் சமுதாயத்திற்கு நன்மை ஏற்படவில்லையானாலும் பரவாயில்லை, தீமை ஏற்படக்கூடாது?

புகாரி ஹதீஸ் ஒன்றை இப்போது காண்போம்:

பாகம் 6, அத்தியாயம் 78, எண் 6130
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகள் வைத்து விளையாடுவேள். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள்.
"அல்லாஹ்வின் திட்டப்படித் தான் முஹம்மது ஆயிஷாவை திருமணம் செய்தார்" என்று நீ சொல்லலாம். ஆனால் தம்பி, உண்மை இறைவன் இப்படியெல்லாம் செய்வார் என்று நீ நம்புகிறாயா? இது தவறான வழிகாட்டலாக இருக்கிறது. ஒன்பது வயது சிறுமியை நான் திருமணம் செய்துக்கொள்கிறேனே, அதுவும் என் பேத்தி வயதில் இருக்கும் சிறுமியாக இருக்கிறாளே என்ற எண்ணம் கூடவா உன் வழிகாட்டிக்கு இல்லாமல் போனது?  நீ சொல்லு, உனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அந்த குழந்தைக்கு ஒன்பது வயதாகும் போது, ஒரு இஸ்லாமிய இமாம் வந்து அதுவும் 50க்கும் அதிகமான வயதுள்ளவர் வந்து, இந்த சிறுமியை நான் திருமணம் செய்துக்கொள்கிறேன் என்றுச் சொன்னால், அவருக்கு உன் பதில் என்னவாக இருக்கும்? இப்படி கேட்பது நியாயமில்லை, அது பாவம் என்றுச் சொல்வாயா, அல்லது என் நபி இப்படி தான் வாழ்ந்துவிட்டுச் சென்றார், ஆகையால் நானும் அவரது வழியில் நடப்பேன் என்றுச் சொல்லி, அந்த கிழவனுக்கு உன் குழந்தையை தாரவாத்து கொடுப்பாயா?

உனக்குத் தெரியுமா? முஹம்மதுவின் இந்த ஒரு செயலால் அனேக சிறுமிகள் இஸ்லாமிய நாடுகளில் நரகத்தை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒருவயது குழந்தையோடு கூட திருமணம் ஒப்பந்தம் செய்யலாம் என்று இஸ்லாமிய அறிஞர்கள் அறிக்கையிடுகிறார்கள். உலகத்தை உன் வழிகாட்டி எந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளார் என்பதை கீழே உள்ள வீடியோக்களைப் பார்த்து தெரிந்துக்கொள். எந்த மார்க்கமாக இருந்தாலும் சரி, சிறுவயதில் திருமணம் செய்துவைப்பது தவறானதாகும்.

http://www.youtube.com/watch?v=cbZIVFyrx-s
http://www.youtube.com/watch?v=F13gtjjDEgE
http://www.youtube.com/watch?v=qYleXcpbzKY 


தம்பி, இந்த ஆண்கள் உன் நபியை பின்பற்றி இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகின்றார்கள். இதே போல என்னையும் செய்யச் சொல்கிறாயா? உன்னை மிகவும் வருந்திக்கேட்டுக்கொள்கிறேன், நீயும் இப்படிப்பட்டவர்களில் ஒருவனாக மாறிவிடாதே! முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு முழுவதையும் நீ படித்துள்ளாயா? அல்லது இஸ்லாமியர்கள் எழுதும் ஒரு சில நல்ல புத்தகங்களை மட்டுமே படித்துள்ளாயா?

ஓடி விளையாட வேண்டிய வயதில், திருமணத்தை செய்துவிட்டு, எதிர்காலத்தை சூன்யமாக்கிவிடுவது நாகரீகமுள்ளவர்கள் செய்யும் செயலா? உடல் திருமணத்திற்கு தயாராகிவிட்டாலும், மனது முதிர்ச்சி அடையவேண்டியது திருமண வாழ்விற்கு மிகவும் அவசியம் என்பதை உணரக்கூடாத அளவிற்கு உங்களுடைய மூளை கெடுக்கப்பட்டுள்ளதா? தம்பி சிந்தித்துப் பாரடா!

தம்பி ஒரு விஷயத்தை புரிந்துக்கொள், ஒன்பது வயதில் உள்ள ஒரு சிறுமியை, 90 வயதுள்ள ஆணோடு திருமணம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கும் என்பதை மறந்துவிடாதே! நெஞ்சை கல்லாக்கிக்கொண்டு கேட்கிறேன், ஒரு 90 வயது கிழவனுக்கு உன் 9 வயது மகளை திருமணம் செய்துவைப்பாயா? "ஆம் இஸ்லாம் அனுமதித்தால், நான் என் மகளை 90 வயது கிழவனுக்கும் தருவேன்" என்று நீ சொல்ல விரும்பினால், தம்பி ஒரு வரியில் எனக்கு தெரிவித்துவிடு, இனி உன் பக்கம் நான் தலைவைத்து கூட படுக்க மாட்டேன், உனக்கு ஒரு கடிதமும் எழுதமாட்டேன்.  "இல்லை இல்லை நான் இப்படியெல்லாம் செய்யமாட்டேன்" என்று எனக்கு பதில் எழுதினால், உன்னோடு மேலும் நான் தொடர்ந்து கடிதத்தொடர்பு வைத்துக்கொள்வேன்.

இதோடு முடித்துக்கொள்கிறேன், உன்னுடைய பதிலுக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன். என் அடுத்த கடிதம் உன்னிடமிருந்து வரும் பதிலின் மீது சார்ந்துள்ளது.

உன் மனக்கண்கள் திறக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவு உனக்கு கிடைக்கவும், நான் கர்த்தரிடம் வேண்டிக்கொள்கிறேன்.

இப்படிக்கு, உன் சகோதரன்
தமிழ் கிறிஸ்தவன்.

திங்கள், 30 ஜூலை, 2012

ரமளான் நாள் 11 - வாசிக்கிறவனும், கேட்கிறவனும், கைக்கொள்கிறவனும் பாக்கியவான்?


[அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதங்கள்: கடிதம் 1, கடிதம் 2கடிதம் 3கடிதம் 4கடிதம் 5கடிதம் 6கடிதம் 7கடிதம் 8 , கடிதம் 9, கடிதம் 10 ]

அன்புள்ள தம்பி,

உனக்கு சமாதானம் உண்டாவதாக.

உன் கடிதம் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். நீ திறந்த மனதுடன் என் கடிதங்களை படித்து, திறந்த மனதுடன் பதில் எழுதுகிறபடியால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

உன் கடிதத்தில் சில முக்கியமான கீழ்கண்ட கேள்விகளை கேட்டு இருந்தாய்:
1)       தேவன் தம் வார்த்தையை தீர்க்கதரிசிகள் மூலம் இறக்கினார், பைபிளில் தேவனுடையவார்த்தை எபிரேயம், கிரேக்கம் ற்றும் சிறிது அராமிக் மொழியிலும் உள்ளது. தேவன் இறக்கிய வார்த்தைகளில் உள்ள உண்மை அர்தத்தை அறிந்துக்கொள்ள வேண்டுமானால், அம்மொழியில் (எபிரேய, கிரேக்க) படித்தால் தானே புரியும். தமிழில் படித்தால் எப்படி புரியும்?
2)       மேலும் வெளிப்படுத்தின விசேஷம் 1:3ம் வசனத்தில், " இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள் " என்று உள்ளது, அதாவது வாசிப்பவனும், கேட்பவனும், கீழ்படிகிறவனும் பாக்கியவான். இறைவன் எந்த மொழியில் இறக்கினானோ அதே மொழியில் வாசிப்பதும்,கேட்பதும் பாக்கியமாக பைபிள் கருதுகிறது அல்லவா?
3)       ஆக, பைபிளே இப்படி சொல்லும்போது, குர்ஆனை அரபியில் படித்தல் எப்படி செல்லாததாக ஆகும். ஏன் நீங்கள் இஸ்லாமை குற்றப்படுத்துகிறீர்கள்?

உன் கேள்விகளை மேலோட்டமாக படித்தால், நீ சொன்ன விவரங்களில் நியாயம் இருக்கிறது என்று சொல்லத்தோன்றும், ஆனால், அவைகளை சிறிது ஆராய்ந்து பார்த்தால், உன் கேள்விகளில் உள்ள அறியாமை வெளிப்படும். இப்போது அவைகளை சுருக்கமாக விளக்குகிறேன்.

பைபிளின் தேவன் தன் தீர்க்கதரிசிகள் மூலமாக பேசும் போது, அவர்கள் பேசிய மொழியிலேயே பேசினார். அந்த தீர்க்கதரிசிகளுக்கு விவரம் புரிந்தால் தான் அவர்கள் அதனை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும். அவர்கள் எபிரேய, கிரேக்க மற்றும் அராமிக் மொழியில் அதனை மக்களிடம் கொண்டு வந்து சேர்த்தார்கள்.

மூலமொழியில் படித்தால் தான்  உண்மை அர்த்தம் விளங்கும், மொழியாக்கங்களில் படித்தல் அதன் அர்த்தம் பாதிக்கப்படும் என்பது உன் கேள்வி. உன்னுடைய கேள்வி சரியான கேள்வி தான்மேலும் நாம் ஆய்வு செய்வதற்கு முன்பாகஒரு சில உதாரணங்களை உனக்கு நான் காட்ட விரும்புகிறேன்.

கீழ்கண்ட இரண்டு வசனங்களை நான் மூலத்தில் கொடுத்துள்ளேன், அவைகளை படித்துப் பார்த்து, உனக்கு முழுவதுமாக புரிகின்றதா என்று பார்.
ஆங்கிலத்தில் உள்ள Transliteration நீ படிக்கலாம்.

Transliteration:  Houtōs gar ēgapēsen ho Theos ton kosmon, hōste ton Huion ton monogenē edōken, hina pas ho pisteuōn eis Auton mē apolētai all᾽ echē zōēn aiōnion.
Transliteration: Qāla 'Innamā 'Anā Rasūlu Rabbiki Li'haba Laki Ghulāmāan Zakīyāan

உனக்கு இவ்விரு வசனங்களின் பொருள் மிகவும் ஆழமாக புரிந்ததா? ஏனென்றால், இவைகள் மூல மொழிகளில் உள்ளன. உனக்கு தேவையானால், மூல  மொழி எழுத்துக்களிலேயே தருகிறேன், கீழே உள்ளவற்றை படித்துப்பார்.

Greek:  Οὕτως γὰρ ἠγάπησεν ὁ Θεὸς τὸν κόσμον, ὥστε τὸν Υἱὸν τὸν μονογενῆ ἔδωκεν, ἵνα πᾶς ὁ πιστεύων εἰς Αὐτὸν μὴ ἀπόληται ἀλλ᾽ ἔχῃ ζωὴν αἰώνιον.
قَالَ إِنَّمَا أَنَا رَسُولُ رَبِّكِ لِأَهَبَ لَكِ غُلَامًا زَكِيًّاِ :Arabic

நீ மூலமொழியில் படித்தாலும் உனக்கு புரியாது, அதனுடைய டிரான்ஸ்லிடெரேஷனில் படித்தாலும் புரியாது.

ஆனால், உன்னுடைய முதல் கேள்வி என்னவாக இருந்ததுஇறைவன் இறக்கிய மூல மொழியில் படித்தால் தானே பொருள் சரியாக புரியும்? என்பதாகும். ஆனால், மேலேயுள்ள இரண்டு வசனங்களை நீ மூல மொழியில் படித்தாய் ஆனால், உனக்கு 1% சதவிகிதமும் புரியவில்லை.

மூல மொழியில் படித்தால் உண்மை பொருள் புரியும் என்பது ஒரு புறமிருக்க, முதலாவது நமக்கு அந்த மொழி தெரிந்து இருக்கவேண்டும் என்பது அடிப்படை தேவையாகும். எனக்கு எபிரேய மொழி தெரியாது, கிரேக்க மொழியும் தெரியாது. நான் சங்கீதம் 1 () 23 மற்றும் இயேசுவின் மலைப்பிரசங்கத்தை எபிரேய மற்றும் கிரேக்க மொழியின் டிரான்ஸ்லிடெரஷனில் படித்தல் அதனால் என்ன பயன் கிடைக்கும்?

எனக்கு, கர்த்தர் சொன்ன வசனத்தின் பொருள் 100% புரியவேண்டும் என்பதற்காக நான் இப்போது உட்கார்ந்துக்கொண்டு, எபிரேயம் மற்றும் கிரேக்க மொழியை கற்கமுடியாது, ஒருவேளை எனக்கு நேரமும், திறமை இருந்து கற்றுக்கொண்டாலும், உலகத்தின் எல்லா மக்களும் மூல மொழிகளை கற்றுக்கொண்டு வேதங்களை படித்தால் தான் அந்த வேதங்களை கொடுத்த இறைவன் அங்கீகரிப்பான் என்பது தவறான கோட்பாடாகும்.

சங்கீதம் 1:1,2 வசனங்கள் எனக்கு தமிழ் மொழியிலேயே 100% புரிந்துவிட்டது, இதை புரிந்துக்கொள்ள நான் ஏன் மூல மொழிக்குபோகவேண்டும், அது வீணான காரியமாகும்:

சங்கீதம் 1:1,2 துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

மேலும் இயேசுவின் மலைப்பிரசங்கத்தில் உள்ள சாராம்சம் எனக்கு தமிழிலேயே நன்றாக புரிந்துவிடுகிறது, நான் ஏன் கிரேக்க மொழியில் அவைகளை படிக்க முயற்சி எடுக்கவேண்டும்?

மத்தேயு 5:7,8 இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள். இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.

வேதபண்டிதர்கள் அல்லது பைபிள் ஆய்வு செய்பவர்கள் தங்களின் ஆய்விற்கு உபயோகமாக இருக்கும் என்பதற்காக மூல மொழியை கற்று அவர்கள் அதன்  அடிப்படையில் தங்கள் ஆய்வை செய்யலாம். இப்படிப்பட்டவர்களுக்கு  மூல மொழியை கற்பது உபயோகமாக இருக்குமே ஒழிய, சாதாரண மக்களுக்கு மூல மொழியில் படிப்பது அவசியமற்றவது, இது சாத்தியமும் இல்லாதது. இறைவன் மூல மொழியில் படித்தால் தான் அங்கீகரிப்பேன் என்றுச் சொன்னால், அவன் உண்மையான இறைவனே இல்லை.

இரண்டாவதாக, நீ வெளி 1:3ம் வசனத்தை குறிப்பிட்டு, அதில் இருக்கும் வாசிக்கிறவனும், கேட்கிறவனும் பாக்கியான் என்ற சொற்றொடரை குறிப்பிட்டு உன் புரிந்துக்கொள்ளுதலை வெளிப்படுத்தியிருந்தாய்.

நீ புரிந்துக்கொண்டது போல, கிரேக்க அல்லது எபிரேய மொழியில் படித்தால் தான், கேட்டால் தான் பாக்கியவான் என்று தேவன் கூறவில்லை. ஏனென்றால், அப்படி செய்வது உண்மையாக இருந்திருந்தால், கடந்த 2000 ஆண்டுகளாக கிறிஸ்தவர்கள் பின்பற்றி இருந்திருப்பார்கள், ஆனால், அப்படி யாரும் செய்யவில்லை, அதாவது எல்லாரும் கிரேக்க மற்றும் எபிரேய மொழியை கற்றுக்கொண்டு வந்திருப்பார்கள், வேதபண்டிதர்கள் தவிர மற்ற யாரும் இபப்டி செய்யவில்லை. மேலும், அதே வசனத்தில் "கைக்கொள்கிறவனும்" என்ற சொற்றொடர் இருப்பதையும் காணவும். ஒருவருக்கு புரியவில்லையானால் எப்படி அவன் அவைகளை கைக்கொள்ளமுடியும்? ஒருவன் கீழ்படியவேண்டும் என்றுச் சொன்னால், அவனுக்கு முதலாவது புரியவேண்டும். ஒருவனுக்கு புரியவேண்டுமென்றால், அவனுக்கு புரியும் மொழியில் அவனுக்கு சொல்லவேண்டும்.

ஆகவெளி 1:3ல் சொல்லப்பட்ட விவரத்தின் படி, கிறிஸ்தவர்கள் எபிரேய மற்றும் கிரேக்க மொழியில் இயந்திரங்களைப் போல, படிக்கவேண்டும், கேட்கவேண்டும் என்று சொல்லப்பட்ட கட்டளையில்லை. கேட்பது நமக்கு புரியும் மொழியில் இருக்கவேண்டும், படிப்பது நமக்கு புரியும் மொழியில் இருக்கவேண்டும், அப்போது தான் படித்தவைகளுக்கு கீழ்படியமுடியும். ஆக, உன் புரிதல் தவறாக உள்ளது தம்பி.

நான் அடிக்கடி கேள்விபடுகின்ற விவரம் என்னவென்றால், குர்ஆனை அரபியில் படிக்கும் ஒவ்வொரு எழுத்துக்கும் அல்லாஹ் நன்மைகளை தருவார் என்பதாகும்.  இது மிகவும் தவறான ஒன்றாகும், ஒரு மனிதனுக்கு தான் படிப்பதே தனக்கு புரியாது என்று இருக்கும் போது இறைவன் எப்படி நன்மைகளை தருவான், இது அறிவுடையோருக்கு ஏற்றது அல்ல. ஒருவேளை அரபி தெரிந்தவர்கள் குர்ஆனை அரபியில் படிக்கும் போது ஒவ்வொரு எழுத்துக்கும் அல்லாஹ் நன்மைகளை தருவான் என்று சொன்னால், ஒரு பேச்சுக்காகவாவது ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், அரபியே தெரியாமல் ஒரு இயந்திரம் போல படித்துக்கொண்டே போனால், அல்லாஹ் நன்மைகளை தருவான் என்பது ஏமாற்றுவேலையாகும்.
  
மேலும், அரபியில் குர்ஆனை புரியாமல் படிப்பதற்கும், அதே குர்ஆனை நமக்கு புரியும் மொழியில் படிப்பதற்கும் அல்லாஹ் எப்படி நன்மைகளை தருவான் என்று கேள்வி கேட்டால், இரண்டிற்கும் நன்மைகள் உண்டு, ஆனால், அரபியில் படிப்பதற்கு (புரியாமல் படித்தாலும்) அதிக நன்மையை அல்லாஹ் கொடுப்பான் என்றுச் சொல்வார்கள். தமிழாக்கத்தில் குர்ஆனை படித்து புரிந்துக்கொள்ளவேண்டும் என்று ஆர்வம் இருப்பவர்களுக்கு இப்படிப்பட்ட விளக்கங்கள் தடைக்கற்களாக மாறிவிடுகின்றன.

தம்பி அதிகமாக எழுதிவிட்டேன், உன்னுடைய அடுத்த கடிதத்திற்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்.

இப்படிக்கு, உன் சகோதரன்
தமிழ் கிறிஸ்தவன்.