ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2007

உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல! (இஸ்லாம்)

                 
BIBLE FAQ: உபாகமம் 33:1-2 வசனங்கள் குறிப்பிடுவது, "கர்த்தரையா (யேகோவா)" அல்லது "முகமதுவையா" ?

இது தான் இஸ்லாம் தளம் "பாரான் மலையின் அக்னி பிரமாணம்" என்று ஒரு கட்டுரையை எழுதினார்கள். அதில் கீழ் கண்ட வாதங்களை முன் வைத்தார்கள்.

1. பைபிளில் வரும் "பாரான்" என்ற இடம், அரேபியாவின் "மக்கா" ஆகும்.

2. உபாகமம் 33:1-2 வசங்களில் சொல்லப்பட்டவர் முகமது ஆவார்.

3. ஆபகூக் 3:3ல் சொல்லப்பட்ட "பரிசுத்தர்" முகமது ஆவார்.

இஸ்லாமியர்கள் பொதுவாக கொண்டுள்ள இந்த மூன்று தவறான வாதங்களுக்கு பதில் கொடுத்துவிட்டு, கடைசியாக "இது தான் இஸ்லாம்" தள கட்டுரைக்கு பதில் தருகிறேன். எனவே, என் பதிலை(மறுப்பை) கீழ் கண்ட நான்கு தனி கட்டுரைகளாக முன்வைக்கிறேன்.

1. பைபிளின் "பாரான் வனாந்திரம்", அரேபியாவின் "மக்கா" அல்ல. - (இந்த கட்டுரையை இங்கே படிக்கவும்)

2. உபாகமம் 33:1-2 வசனங்கள் குறிப்பிடுவது, "கர்த்தரையா - யேகோவா" அல்லது "முகமதுவையா" ?

3. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடும் "பரிசுத்தர்" யார்?

4. இது தான் இஸ்லாம் கட்டுரை "பாரான் மலையில் அக்னி பிரமாணம்" : ஈஸா குர்-ஆன் பதில் (மறுப்பு)



 
2. உபாகமம் 33:1-2 வசனங்கள் குறிப்பிடுவது, "கர்த்தரையா" அல்லது "முகமதுவையா" ?

(பாரான் மலையின் அக்னி பிரமாணம் கட்டுரைக்கு பதில் 2 (Part 2 of 4))
 

இஸ்லாமியர்கள் சில பைபிள் வசனங்கள் இறைவனின் வார்த்தை தான், அவைகளை யாரும் திருத்தவில்லை என்று சொல்கிறார்கள். முக்கியமாக அந்த வசனங்களில் அவர்கள் "முகமதுவை" பார்க்கிறார்கள், அதனால் தான் அவைகள் அவர்களுக்கு ஆதாரமாக தென்படுகிறது.

உபாகமம் 33:2ம் வசனத்தில் முகமதுவைப் பற்றி பைபிள் தீர்க்கதரிசனம் சொல்கிறது என்றுச் சொல்கிறார்கள்.


உபாகமம் 33:2ல்
வரும் "பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடு பிரசன்னமானார் " என்ற சொற்றொடர் "முகமது மக்காவிற்கு தன் தோழர்களோடு நுழைந்த நிகழ்ச்சியோடு " ஒப்பிடுகிறார்கள்.

இஸ்லாமியர்களுடைய இந்த கருத்து ஆதாரமற்றது என்றும், பைபிளின் இந்த வசனத்திற்கும் முகமதுவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதையும் இந்த கட்டுரையில் தகுந்த ஆதாரங்களோடு நாம் காணலாம்.

உபாகமம் 33:2ம் வசனத்தில் சொல்லப்பட்டவர் முகமது அல்ல என்பதற்கான ஆதாரங்கள் அல்லது காரணங்கள்.

1. இஸ்லாமியர்கள் நினைப்பது போல "பாரான்" என்பது "மக்கா" அல்ல என்பதை இந்த கட்டுரையை படித்தால் புரிந்துக்கொள்ளலாம். இது இஸ்லாமியர்களின் ஆதாரமற்ற ஒரு வாதமே ஒழிய உண்மையல்ல. ( படிக்க : பைபிளின் பாரான் அரேபியாவில் உள்ள மக்கா அல்ல)

2. முகமது இஸ்மவேலின் வம்சத்தில் வந்தவர் அல்ல. படிக்கவும் 1)
Ishmael is not the father of Muhammad and 2) Ishmael is not the father of Muhammad Revisited.

இனி உபாகமம் 33:2ம் வசனத்தை நம் ஆய்விற்கு எடுத்துக்கொள்வோம்.

உபாகமம் 33:1-2

உபாகமம்: 33:1-2 1. தேவனுடைய மனுஷனாகிய மோசே தான் மரணமடையுமுன்னே இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதித்த ஆசீர்வாதமாவது,2. கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி, சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்; பாரான் மலையிலிருந்து பிரகாசித்து, பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார் ; அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது .


இந்த வசனத்தில் நாம் முக்கியமாக ஆராயவேண்டிய வாக்கியங்கள் இவைகள்:

1. கர்த்தர்.....பிரசன்னமானார்.

2. சீனாய்.... சேயீர்.... பாரான்:

3. பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார்:

4. அக்கினி மயமான பிரமாணம்


இப்போது மேலே சொல்லப்பட்ட ஒவ்வொரு தலைப்பையும் நாம் சிந்திப்போம், இதன் மூலம் இவ்வசனத்தில் சொல்லப்பட்ட செய்திகள் முகமதுவிற்கும் இஸ்லாமிற்கும் எவ்விதத்திலும் சம்மந்தமில்லாதது என்பது விளங்கும்.

1. கர்த்தர்.....பிரசன்னமானார்.

இந்த வசனம் ஒரு மனிதனைப் பற்றியோ, இறைத்தூதரைப் பற்றியோ சொல்வதில்லை. குறைந்தபட்ச அறிவை பயன்படுத்தி இவ்வசனத்தை பார்த்தாலே போதும், இதில் சொல்லப்பட்டவர் "கர்த்தர்" அல்லது "தேவன்" என்பது விளங்கும்.

இஸ்லாமியர்கள் சொல்வது போல பாரானிலிருந்து பிரசன்னமானவர் "முகமது" அல்ல, அவர் கர்த்தர்.

தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலர்கள் வனாந்திரத்திலே சஞ்சரிக்கும் போது, பகலிலே "மேக ஸ்தம்பமாகவும் ", இரவிலே "அக்னி ஸ்தம்பமாகவும் " அவர்களின் 40 வருட பயணத்தின் போது அவர்களோடு வந்தார். இஸ்ரவேலர்கள் எத்தனைமுறை கோபப்படுத்தினாலும், அவர்களை விட்டு விலகாமல் அவர்களோடு வந்தார். இதையே மோசே அவர்களை ஆசீர்வதிக்கும் போது, முதலாவது சொல்கிறார்.

இஸ்லாமியர்கள் ஒன்றை கவனிக்கவேண்டும், ஏதோ முகமதுவை பைபிளில் கண்டுபிடிக்கிறேன் என்றுச் சொல்லி, "தேவன்" வரும் இடத்தில் முகமதுவை ஒப்பிட்டுச் சொல்வது, இஸ்லாமியர்கள் தினமும் தங்கள் வாயில் உச்சரிக்கும் "லாயிலாஹா இல்லல்லாஹூ" என்ற வாக்கியத்தையே அவர்கள் புறக்கனிக்கிறவர்களாக மாறிவிடுகின்றனர். அல்லாவோடு முகமதுவை ஒப்பிடுவது போல ஆகிவிடுகிறது. எனவே, அல்லாவிடம் மன்னிப்பை கோரும் படி கேட்டுக்கொள்கிறேன்.

2. சீனாய்.... சேயீர்.... பாரான்:

தேவன் இஸ்ரவேல் மக்களை மோசே தலைமையில் கானானுக்கு அழைத்துக்கொண்டு வரும் போது, அவர்களுக்கு சீனாய மலையில் கட்டளைகளை கொடுத்தார். அந்த கட்டளைகள் கொடுக்கும் நிகழ்ச்சி இஸ்ரவேல் மக்களின் மனதில் நீங்கா பாதிப்பை உண்டாக்க வேண்டுமென்றும், மோசேவுடைய மதிப்பு மரியாதை இன்னும் அதிகரிக்கவேண்டுமென்று தேவன் விரும்பினார்.

தேவன் சீனாய் மலையில் தன் மகிமையோடு இறங்கி பேசியதை பைபிளின் வார்த்தைகளில் பாருங்கள்.

யாத்திராகமம்: 19:9 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி, நான் உன்னோடே பேசும்போது ஜனங்கள் கேட்டு, உன்னை என்றைக்கும் விசுவாசிக்கும்படி, நான் கார்மேகத்தில் உன்னிடத்திற்கு வருவேன் என்றார். ஜனங்கள் சொன்ன வார்த்தைகளை மோசே கர்த்தருக்குச் சொன்னான். யாத்திராகமம் 19:11 மூன்றாம் நாளைக்கு ஆயத்தப்பட்டிருக்கக்கடவர்கள்; மூன்றாம் நாளில் கர்த்தர் சகல ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகச் சீனாய்மலையின்மேல் இறங்குவார் .

யாத்திராகமம்: 19:12 ஜனங்களுக்குச் சுற்றிலும் நீ ஒரு எல்லை குறித்து, அவர்கள் மலையில் ஏறாதபடிக்கும்,அதின் அடிவாரத்தைத் தொடாதபடிக்கும் எச்சரிக்கையாய் இருங்கள் என்று அவர்களுக்குச் சொல்; மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே கொல்லப்படுவான் .13. ஒரு கையும் அதைத் தொடலாகாது; தொட்டால், நிச்சயமாகக் கல்லெறியுண்டு, அல்லது ஊடுருவ எய்யுண்டு சாகவேண்டும்; மிருகமானாலும்சரி, மனிதனானாலும்சரி, உயிரோடே வைக்கப்படலாகாது; எக்காளம் நெடுந்தொனியாய்த் தொனிக்கையில், அவர்கள் மலையின் அடிவாரத்தில் வரக்கடவர்கள் என்றார்.

யாத்திராகமம் 19:16 மூன்றாம் நாள் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காளசத்தமும் உண்டாயிற்று; பாளயத்திலிருந்த ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள் .17. அப்பொழுது ஜனங்கள் தேவனுக்கு எதிர்கொண்டுபோக, மோசே அவர்களைப் பாளயத்திலிருந்து புறப்படப்பண்ணினான்; அவர்கள் மலையின் அடிவாரத்தில் நின்றார்கள். யாத்திராகமம் 19:18 கர்த்தர் சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது. யாத்திராகமம் 19:19 எக்காளசத்தம் வரவர மிகவும் பலமாய்த் தொனித்தது; மோசே பேசினான்; தேவன் அவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தார் . யாத்திராகமம் 19:20 கர்த்தர் சீனாய்மலையிலுள்ள கொடுமுடியில் இறங்கினபோது, கர்த்தர் மோசேயை மலையின் கொடுமுடியிலே வரவழைத்தார்; மோசே ஏறிப்போனான்.

இந்நிகழ்ச்சியை உங்கள் கற்பனையில் கொண்டுவாருங்கள். சீனாய் மலை புகைக்காடாய் தென்படுகிறது, அக்கினி தென்படுகிறது. இடியும், மின்னலும் தன் உக்கிரத்தை காட்டுகின்றன, மக்கள் மலையை தொடக்கூடாது, தொட்டால் நிச்சயம் மரணம். ஆனால், மோசே மலையில் ஏறிப்போகிறார். இதை கண்ட மக்களின் மனதில் ஒரு விதமாக பயம் வியாபிக்கிறது.

தேவனின் சத்தம் பல லட்ச இஸ்ரவேல் மக்களை களங்கடித்தது, எனவே அவர்கள் மோசேயிடம் வேண்டிக்கொண்டார்கள், நீர் பேசும், தேவன் எங்களோடு பேசவேண்டாம் என்று.


யாத்திராகமம்: 20:18 ஜனங்கள் எல்லாரும் இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, ஜனங்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று,19. மோசேயை நோக்கி, நீர் எங்களோடே பேசும், நாங்கள் கேட்போம்; தேவன் எங்களோடே பேசாதிருப்பாராக, பேசினால் நாங்கள் செத்துப்போவோம் என்றார்கள்.20. மோசே ஜனங்களை நோக்கி, பயப்படாதிருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம்செய்யாதபடிக்குத் தம்மைப் பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார் என்றான். யாத்திராகமம் 24:17 மலையின் கொடுமுடியிலே கர்த்தருடைய மகிமையின் காட்சி இஸ்ரவேல் புத்திரருடைய கண்களுக்குப் பட்சிக்கிற அக்கினியைப்போல் இருந்தது .18. மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாள் மலையில் இருந்தான்.



இப்படி இந்நிகழ்ச்சி இஸ்ரவேல் மக்களின் இதயங்களில் பதிந்துவிடுகிறது. பிறகு அவர்கள் சேயீர் வானாந்திர வழியாக, பாரான் வனாந்திர வழியாக கானானை அடைகின்றனர். பாரானில் அதிக நாட்கள் தங்குகின்றனர். மோசே வேவுக்காரர்களை அனுப்பி கானான் பற்றிய சில விவரங்களை தெரிந்துக்கொள்கிறார்.

பழைய ஏற்பாட்டு பக்தர்கள் தங்கள் பாடல்களில், ஜெபங்களில் இந்நிகழ்ச்சியைப் பற்றி குறிப்பிடுவார்கள்.

அ) தொபோராள் பெண் தீர்க்கதரிசினி தன் பாடலில் நினைவுகூறுகிறார்.

நியாயாதிபதிகள்: 5:3 ராஜாக்களே, கேளுங்கள்; அதிபதிகளே, செவிகொடுங்கள்; நான் கர்த்தரைப்பாடி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுவேன்.4. கர்த்தாவே, நீர் சேயீரிலிருந்து புறப்பட்டு, ஏதோமின் வெளியிலிருந்து நடந்துவருகையில், பூமி அதிர்ந்தது, வானம் சொரிந்தது, மேகங்களும் தண்ணீராய்ப் பொழிந்தது .5. கர்த்தருக்கு முன்பாகப் பர்வதங்கள் கரைந்தது; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக சீனாயும் கரைந்தது.



ஆ) தாவீது இராஜா நினைவு கூறுகிறார்:


சங்கீதம்: 68:7 தேவனே, நீர் உம்முடைய ஜனங்களுக்கு முன்னே சென்று அவாந்தரவெளியிலே நடந்துவருகையில்,(சேலா.)8. பூமி அதிர்ந்தது; தேவனாகிய உமக்கு முன்பாக வானமும் பொழிந்தது; இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற தேவனுக்கு முன்பாகவே இந்தச் சீனாய் மலையும் அசைந்தது.



இ) நெகேமிய நினைவு கூர்ந்து ஜெபிக்கிறார்:


நெகேமியா: 9:11 நீர் அவர்களுக்கு முன்பாகச் சமுத்திரத்தைப் பிரித்ததினால், கடலின் நடுவாகக் கால்நனையாமல் நடந்தார்கள்; வலுவான தண்ணீர்களிலே கல்லைப்போடுகிறதுபோல, அவர்களைத் தொடர்ந்தவர்களை ஆழங்களிலே போட்டுவிட்டீர்.12. நீர் பகலிலே மேகஸ்தம்பத்தினாலும் அவர்கள் நடக்கவேண்டிய வழியை அவர்களுக்கு வெளிச்சமாக்க இரவிலே அக்கினி ஸ்தம்பத்தினாலும், அவர்களை வழிநடத்தினீர்.13. நீர் சீனாய் மலையிலிறங்கி வானத்திலிருந்து அவர்களோடே பேசி, அவர்களுக்குச் செம்மையான நீதிநியாயங்களையும், நல்ல கட்டளைகளும் கற்பனைகளுமாகிய உண்மையான பிரமாணங்களையும் கொடுத்தீர்.



ஈ) ஆபகூக் தன் வேண்டுதலில்(பாடலில்) நினைவுகூறுகிறார்:


ஆபகூக்: 3:3 தேவன் தேமானிலிருந்தும், பரிசுத்தர் பாரான் பர்வதத்திலிருந்தும் வந்தார் ; சேலா. அவருடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது; அவர் துதியினால் பூமி நிறைந்தது.4. அவருடைய பிரகாசம் சூரியனைப்போலிருந்தது; அவருடைய கரத்திலிருந்து கிரணங்கள் வீசின; அங்கே அவருடைய பராக்கிரமம் மனறந்திருந்தது.5. அவருக்கு முன்பாகக் கொள்ளைநோய் சென்றது; அவர் செடிகளிலிருந்து எரிபந்தமான காய்ச்சல் புறப்பட்டது.6. அவர் நின்று பூமியை அளந்தார்; அவர் பார்த்துப் புறஜாதிகளைக் கரையப்பண்ணினார்; பூர்வ பர்வதங்கள் சிதறடிக்கப்பட்டது, என்றுமுள்ள மலைகள் தாழ்ந்தது ; அவருடைய நடைகள் நித்திய நடைகளாயிருந்தது.



இப்படியாக, இஸ்ரவேல் மக்கள் அந்த நிகழ்ச்சியை தங்கள் பாடல்களிலும், வேண்டுதல்களிலும் நினைவு கூர்ந்து தேவனை மகிமைப்படுத்தினார்கள். சீனாய், சேயீர், பாரான் என்றுச் சொல்லி, தேவன் எழுந்தார், நடந்தார், கட்டளை கொடுத்தார் என்றும், மலைகள் நடுங்கியது, அதிர்ந்தது என்று பாடல்களிலே பாடினார்கள். இந்த நிகழ்ச்சிக்கும் முகமதுவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இது மட்டுமல்ல, சீனாய், சேயீர், பாரான் என்ற மூன்று இடங்களும் சீனாய் தீபகர்பத்தில் உள்ளதை குறிக்கிறது.

(
பாரான் மக்கா அல்ல என்ற கட்டுரையை பார்க்கவும்)

3. பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார்:

இஸ்லாமியர்கள், இந்த வாக்கியத்தில் வரும் "பரிசுத்தவான்கள்" என்பதையும், "பதினாயிரங்களானவர்கள்" என்பதையும் தவறாக புரிந்துக்கொண்டுள்ளார்கள். முகமதுவோடு மக்காவில் பிரவேசித்த அவருடைய தோழர்கள் பத்தாயிரம் பேரைத் தான் இந்த வசனத்தில் "பரிசுத்தவான்கள்" என்று குறிப்பிட்டுள்ளது என்று எண்ணுகின்றனர். மற்றும் "பதினாயிரங்களான" என்ற வார்த்தையை அவர்கள் 10,000 என்று எண்ணிக்கொண்டுள்ளனர்.

இவ்வசனத்தின் உண்மை பொருளை இப்போது பார்க்கலாம்.

அ) இவ்வசனத்தில் "பரிசுத்தவான்களோடே" என்பது மனிதரை அல்ல, தேவ தூதர்களைக் குறிக்கிறது

கீழுள்ள பைபிள் வசனங்களைப் பார்க்கவும்.


அப் 7:53 தேவதூதரைக்கொண்டு நீங்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும் , அதைக் கைக்கொள்ளாமற்போனீர்கள் என்றான்.

கலாத்தியர்: 3:19. அப்படியானால், நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன? வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி வருமளவும் அது அக்கிரமங்களினிமித்தமாகக் கூட்டப்பட்டு, தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தன் கையிலே கட்டளையிடப்பட்டது .

எபிரெயர்: 2:2 ஏனெனில், தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு விரோதமான எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்க

ஆ) Ten -thousand மற்றும் Ten thousands வெவ்வேறானவை, ஒன்றல்ல.

இஸ்லாமியர்கள் சொல்வது போல, இந்த வசனத்தில் வரும் எண்ணிக்கை சரியாக Ten Thoousand – 10,000 (singular) என்று வராமல் Ten Thousands (Plural) என்று சொல்லப்பட்டுள்ளது. தமிழ் மொழிபெயர்ப்பில் "பதினாயிரங்களோடே" என்று மொழிபெயர்த்துள்ளனர். ஆங்கிலத்தில் சரியாக மொழி பெயர்த்துள்ளனர். சரியாக 10,000 எண்ணை குறிப்பிடவேண்டுமானால், TEN THOUSAND என்று எழுதுவோம், பல ஆயிரங்கள் என்றுச் சொல்லவேண்டுமானால், TEN THOUSANDS OR TENS OF THOUSNAD என்று குறிப்பிடலாம். இந்த வசனத்தில் வரும் "பதினாயிரங்கள்" என்பது இஸ்லாமியர்கள் சொல்வது போல, சரியாக 10,000 அல்ல.
இதில் சொல்லப்பட்டுள்ளது கணக்கிலடங்கா (myriads) எண்ணிக்கை என்று பொருள்.

ஆதாரம் தேவையானால், இதோ சங்கீதம் 68:17.

சங்கீதம் 68:17  தேவனுடைய இரதங்கள் பதினாயிரங்களும், ஆயிரமாயிரங்களுமாயிருக்கிறது, ஆண்டவர் பரிசுத்த ஸ்தலமான சீனாயிலிருந்தவண்னாமாய் அவைகளுக்குள் இருக்கிறார்.

Psalm 68: 17 The chariots of God are tens of thousands and thousands of thousands ; the Lord has come from Sinai in to his sanctuary.(NIV)  Source:  http://www.biblegateway.com/passage/?search=psalm%2068:17&version=31


இந்த சங்கீதம் சொல்கிறது, அவர் சீனாய் மலையில் இறங்கும் போது, எப்படி பல ஆயிர இரதங்களின் மத்தியில் இருந்தாரோ அது போல என்றுச் சொல்கிறது. பொதுவாக தேவன் இறங்குகிறார் என்றால், அந்த இடத்தில் தேவதூதர்கள், இரதங்கள், அக்கினி, மகிமை என்று பலவிதங்களில் வருனிப்பார்கள் . இதை நாம் பைபிளில் பல சந்தர்பங்களில் பார்க்கலாம்.

சீனாய் மலையில் தேவனொடு கூட அக்கினி, மகிமை, இடி,மின்னல் போன்றவைகளை மக்கள் கண்டு நடுங்கினர்.
சலொமோன் தேவாலயம் கட்டி பிரதிஸ்டை செய்யும் போது, இதே போல மகிமை ஆலயத்தை சூழ்ந்துக்கொண்டது(1 இராஜா 8:10-11).

இங்கு வரும் "பதினாயிரங்களோடே – Ten Thousands" என்ற வார்த்தை வரும் எபிரேய வார்த்தை பற்றிய ஆராய்ச்சி கட்டுரையை இங்கு (
Response to Osama Abdulla ) படிக்கலாம். இக்கட்டுரையில் ஒசாமா அப்துல்லா என்பவரின் இதே கேள்விக்கு மிகதெளிவாக எபிரேய வார்த்தையின் விவரங்களோடு, இலக்கணத்தோடு பதில் கொடுக்கப்பட்டுள்ளது. எபிரேய வார்த்தையைப் பற்றி தனி கட்டுரை வேண்டுமானால், பார்க்கலாம். அதைப்பற்றி இங்கு எழுதினால், கட்டுரை இன்னும் நீண்டதாக மாறும். எனவே, இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்கவும்.

பதினாறு ஆங்கில மொழி பெயர்ப்புகளில் இரண்டு மொழி பெயர்ப்பில் மட்டுமே தவறாக "TEN THOUSAND" என்று உள்ளது, மீதியுள்ள 14 மொழி பெயர்ப்புகளில் "TEN THOUSANDS " என்றும் "MYRIADS" என்றும் மொழிபெயர்த்துள்ளனர்.



First, it should be stated that the New American Standard and Today's English Version are the only ones that read the singular "ten thousand" in Deut. 33:2. So Osama is wrong regarding the rendering of the RSV, the Webster's Bible and the WEB. The following English translations also render the word as "ten thousands": ASV, DRA, ESV, GNV, KJV, NKJ, RWB; likewise, the Greek Septuagint (LXX) renders it as plural. The following English translations render the word as "myriads" [plural]: DBY, JPS, NIB, NIV, NRS, YLT. The following English translations translate the word as a place-name: BBE, NAB, NLT, TNK. One English translation (NJB) paraphrases the text as though no number is there. Of all the 16 translations that render the word as a number, roughly two (NAS and TEV) renders the plural word as a singular. One cannot build a case on an incorrect translation. Standard Hebrew grammar, syntax, and lexicography expect the plural form of the word to be translated plural. (Formats are mine -Isa Koran) Source : http://www.answering-islam.org/Responses/Osama/holy_ones.htm

எனவே, இந்த வசனத்தில் பதினாயிரங்கள் என்பது கணக்கிலடங்கா அல்லது ஆயிரமாயிரமானவர்கள் என்று பொருள்படுமே தவிர, சரியாக 10,000 என்று பொருள் அல்ல.

இ) இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் கூற்றுப்படி 12000 பேர் மக்காவில் நுழைந்தார்கள்

இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் இபின் இஷாக் தன் "சூரத்  ரசூலுல்லா " என்ற முகமதுவின் சரிதையில் சொல்கிறார் "முகமது மக்காவில் 12000 மனிதர்களோடு நிழந்தார்" .


Source: 
http://www.faithfreedom.org/Articles/sira/23.htm

Then the apostle marched out with two thousand Meccans and the ten thousand companions who had gone with him before to the conquest of Mecca . The apostle said, gazing at the greatness of this army of Allah, 'This day we shall not be overcome because our number is small!' They marched to meet the Hawazin.

4. அக்கினி மயமான பிரமாணம்

இஸ்லாமியர்கள் சொல்வார்கள், அக்னி மயமான பிரமாணம் என்பது "ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்ற இயேசுவின் கட்டளை" சரியாக பொருந்தாது, முகமது கொண்டுவந்த பிரமாணமாகிய "கணுக்கு கண், பல்லுக்கு பல்" என்பது தான் என்று சொல்கிறார்கள்.

இஸ்லாமியர்கள் ஒன்றை மறந்துப்போகிறார்கள், அது என்னவென்றால், "ஒரு கன்னத்தில் அறைந்தால்..." கட்டளையை கொடுத்தவர் மோசே அல்ல.

மோசே கொண்டுவந்த கட்டளை கூட "அக்னி மயமாக கட்டளைகள்" தான். அதாவது, பழைய ஏற்பாட்டு காலத்தில் மோசே முலமாக தேவன் கொடுத்த கட்டளை "கணுக்கு கண், பல்லுக்கு பல்" என்பதாகும்.

மக்களை குழப்புவதற்கு இஸ்லாமியர்கள் "இயேசுவின் கட்டளைகளை" இயேசுவிற்கு முன் 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மோசேவோடு சம்மந்தப்படுத்தி, மோசே கொண்டுவந்தது, அக்னி மயமான கட்டளைகள் கிடையாது என்று சொல்கிறார்கள். ஆனால், மோசேயின் கட்டளைப் போலவே, முகமது கொண்டுவந்ததும் "கண்ணுக்கு கண்" கட்டளைகள் தான்.(ஆனால், முகமதுவிற்கு இறக்கப்பட்ட கட்டளைகள் மோசேவிற்கு இறக்கப்பட்ட கட்டளைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு, ஜிஹாத், திருமண, விவாகரத்து கட்டளைகள் இன்னும் பல)

ஆனால், ஒரு விவரத்தை மறந்துப்போகிறார்கள், தேவன் கொடுக்கும் கட்டளைகள் அனைத்தும் "அக்னி மயமான கட்டளைகள்" தான். சீனாய் மலையில் அக்னி மலையை சூழ்ந்துக்கொண்டிருக்க பெற்ற கட்டளைகள் என்பதனால், அப்படி " அக்னி மயமான பிரமானம் (கட்டளை)" என்று குறிப்பிடப்பட்டதே தவிர,  இஸ்லாமியர்கள் சொல்வது போல் அல்ல.

தேவனுடைய வார்த்தைகள் அக்கினி போல் இருக்கிறது என்று தேவன் சொல்கிறார்.


எரேமிய 23:29. என் வார்த்தை அக்கினியைப் போலும் , கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப் போலும் இருக்கிறதல்லவோ? என்று கர்த்தர் சொல்லுகிறார்.

தேவனுடைய வார்த்தகள் நம் எலும்புகளிலும், இதயத்திலும் அக்கினிப்போல எரியும்.

எரேமியா 20:9 ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம்பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன் என்றேன்; ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து இளைத்துப்போனேன் ; எனக்குப் பொறுக்கக்கூடாமற்போயிற்று.


தேவன் தன் வார்த்தைகளை அக்கினி போல ஆக்குவார்

எரேமியா 5:14 ஆகையால் சேனைகளின் தேவனாகி கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் இந்த வார்த்தையைச் சொன்னபடியினால், இதோ, நான் உன் வாயிலிட்ட என் வார்த்தைகளை அக்கினியும், இந்த ஜனத்தை விறகும் ஆக்குவேன், அது இவர்களைப் பட்சிக்கும் .


இப்படி பல வசனங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

சங்கீதம் 29:7 கர்த்தருடைய சத்தம் அக்கினிஜுவாலைகளைப் பிளக்கும்.

உபாகமம் 4:15 கர்த்தர் ஓரேபிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களோடே பேசின நாளில் , நீங்கள் ஒரு ரூபத்தையும் காணவில்லை.



தேவன் இடிமுழக்கங்கள் மூலமாகவும், பேரொளி மூலமாகவும் பேசுவார்(பதில் அளிப்பார்) என்பதற்கான சில குர்-ஆன் வசனங்கள். இவ்வசனங்களில் இறைவனோடு இடிமுழக்கத்தையும், பேரொளியையும், சம்மந்தப்படுத்தி சொல்லப்பட்டதாலும், சீனாய் மலை(தூர் - ஸினாய்) பற்றிய மோசேயின் நிகழ்ச்சி சொல்லப்பட்டதாலும் இவ்வசனங்களை மேற்கோள் காட்டினேன்.

இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்;)நீங்கள், 'மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரை உம்மீது நம்பிக்கை கொள்ள மாட்டோம்" என்று கூறினீர்கள்; அப்பொழுது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்களை ஓர் இடி முழக்கம் பற்றிக்கொண்டது. (2:55)

நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்; அப்போது மூஸா "என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன், "மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!" என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், "(இறைவா!) நீ மிகவும் பரிசத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்" என்று கூறினார்.
(7:143)

இன்னும், நாம் அவரை தூர் (ஸினாய்) மலையின் வலப்புறத்திலிருந்து கூப்பிட்டோம்; மேலும் இரகசியத்தில் பேச நாம் அவரை நம்மிடம் நெருங்கி வரச் செய்தோம். (19:52)      Source : http://chittarkottai.com/quran/surawise.php



எனவே, அக்னி பிரமாணம் என்பது ஒன்றும் இஸ்லாமிய பிரமாணங்களை குறிக்காது . தேவனுடைய வார்த்தைகள் அனைத்தும் அக்னி போல, நம்மை சுடும், நம்மை நல்வழிப்படுத்தும், நம் அழுக்குகளை எரித்துவிடும். எனவே, இஸ்லாமியர்களின் வாதத்திற்கும் இவ்வசனத்தின் அக்னி பிரமானத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

இவ்வசனம் ஒரு தீர்க்கதரிசனமல்ல, அது கடந்த கால நிகழ்ச்சியின் ஒரு நினைவு:

முடிவாக, மோசே இஸ்ரவேல் மக்களை ஆசீர்வதிக்கும் போது, அவர்களை நடத்திக்கொண்டு வந்த தேவனின் செயலை ஒருமுறை அவர்களுக்கு நியாபகம் செய்கிறாரே தவிர, எதிர் காலத்தில் நடைபெறும் ஒரு தீர்க்கதரிசனத்தைச் சொல்லவில்லை. இவ்வசனத்தை கவனித்தால் தெரியும், "பிரசன்னமானார்" என்பது கடந்த கால நிகழ்ச்சியே தவிர எதிர கால நிகழ்ச்சி அல்ல.

எப்பிராயீமின் பதினாயிரங்கள், மனாசெயின் ஆயிரங்கள்:

இதே உபாகமம் 33ம் அதிகாரம் 17ம் வசனத்தை சிறிது கவனித்தால், நான் சொல்வது மிகத்தெளிவாகப் புரியும். அதாவது மோசே இஸ்ரவேலின் ஒவ்வொரு வம்சத்தையும் ஆசீர்வதிக்கிறார். எப்பிராயீம் மற்றும் மனாசே என்ற வம்சத்தை ஆசீர்வதிக்கும் போது, "பதினாயிரங்கள்" (33:2ல் சொல்லப்பட அதே வார்த்தை), "ஆயிரங்கள்" என்று ஆசீர்வதிக்கிறார்.  இஸ்லாமியர்கள் சொல்வதைப் போல, "பதினாயிரங்கள்" என்றுச் சொன்னால், சரியாக பத்தாயிரம் தான் என்றுச் சொன்னால், எப்பிராயீமின் பிள்ளைகள்(தலையீறுகள்) வெறும் பத்தாயிரம் அளவிற்கு மட்டும் தான் பெருகுவார்கள் என்று பொருள்படும். இது சரியான பொருளாக இருக்காது. உன் வம்சத்தின் பெருக்கம் பதினாயிரங்கள் என்று ஆசீர்வாதம் கூறினால், வெறும் பத்தாயிரம் என்று நினைப்பது தவறான புரிந்துக்கொள்ளுதல்(Interpretation) ஆகும்.

உபாகமம் 33:17 அவன் அலங்கரம் அவன் தலையீற்றுக் காளையினுடைய அலங்காரத்தைப்போலவும், அவன் கொம்புகள் காண்டாமிருகத்தின் கொம்புகளைப்போலவும் இருக்கும்; அவைகளாலே ஜனங்களை ஏகமாய் ஜனத்தின் கடையாந்தரங்கள்மட்டும் முட்டித் துரத்துவான்; அவைகள் எப்பிராயீமின் பதினாயிரங்களும் மனாசேயின் ஆயிரங்களுமானவைகள் என்றான்



முடிவுரை: முதலில், பாரான் என்பது மக்கா அல்ல. இதற்கு ஆதாரம் இல்லை. இரண்டாவதாக, சீனாய், சேயீர், மற்றும் பாரான் என்பது இஸ்ரவேல் மக்கள் கடந்து வந்த பாதையாகும். பரிசுத்தர்கள் என்பது, தேவ தூதர்களைக்குறிக்கும். பதினாயிரங்கள் என்று தமிழில் மொழி பெயர்த்தது, சரியாக 10000 என்பதல்ல, இது பல ஆயிரங்கள் என்று பொருள்.

முக்கியமாக இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் குறிப்பிடுவது போல, 12000 பேரோடு அவர் மக்காவிற்குள் நுழந்தார், 10000 பேரோடு அல்ல. பைபிள் முழுவதும் நாம் தேடுவோமானால், அக்கினியை தன் வார்த்தையாக தேவன் அதிகமாக பயன்படுத்துவதை காணலாம்.

மற்றுமொரு விவரம் என்னவென்றால், இவ்வசனம் சொல்வது, பதினாயிரங்களோடே பாரானிலிருந்து பிரசன்னமானார் (வெளிப்பட்டார்) என்பது, ஆனால், முகமது தன் 12000 மனிதர்களை மக்காவிலிருந்து வெளியே (மதினாவில்) சம்பாதித்துக்கொண்டு, மக்காவிற்குள்(பாரனுக்குள்) நிழைகிறார். இது எப்படி இவ்வசனத்திற்கு பொருந்தும்?

எனவே, மோசே சொன்ன பாரானிலிருந்து பிரசன்னமானார் என்பது கர்த்தரை குறிக்குமே ஒழிய "முகமதுவையோ, அல்லது அவரது பிரமானங்களையோ" குறிக்காது.

Source : http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/paran/deut332.htm

 

கருத்துகள் இல்லை: