ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வியாழன், 27 பிப்ரவரி, 2020

முஸ்லிம்கள் இறைவனோடு எப்படி தொடர்பு கொள்ளமுடியும்?

நேரத்திற்குள்ளும் இடத்திற்குள்ளும் கட்டுப்பட்டுள்ள மனிதனால், நேரத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்ட எல்லையில்லாதவராகிய இறைவனிடம் எவ்வாறு தொடர்பு கொள்ள முடியும்?

உங்களுடன் பேசவேண்டும் என்று ஒரு எறும்பு விரும்புகிறது என்றுச் சொன்னால், நீங்கள் நம்புவீர்களா? படைத்தவருக்கும் (இறைவன்) படைக்கப்பட்டவைகளுக்கும் (மனிதன்) இடையே உரையாடல் நடக்கும் என்றுச் சொல்வது இதை விட பெரிய ஆச்சரியமானதாகும்.

"மனிதன் இறைவனுடன் தொடர்பு கொள்ள முடியும்" என்று நீங்கள் நம்பினால், கீழ்கண்ட இரண்டு தெரிவுகளில் ஏதாவது ஒன்றை தெரிவு செய்யவேண்டி வரும்: 

1. நீங்கள் அவருடைய நிலைக்கு உங்களை உயர்த்திக்கொள்ள வேண்டும் 

அல்லது

2. நீங்கள் இறைவனை உங்கள் நிலைக்கு இழுத்துக்கொண்டு, அவர் தன்னை தாழ்த்தும் படி செய்யவேண்டும்

இந்த இரண்டு காரியங்களுக்கும் இஸ்லாமில் ஒரு சொல் உண்டு, அது தான் ஷிர்க். உங்களை இறைவனுக்கு சமமாக நீங்கள் மாற்ற விரும்புகிறீர்கள் என்று இதன் பொருள். இஸ்லாமில் இது மிகப்பெரிய பாவம் (ஷிர்க்) ஆகும்.

இறைவன் மனிதனாக தன்னை தாழ்த்திக்கொண்டு, நம் நிலைக்கு இறங்கி வருவதை கிறிஸ்தவம் "மனித அவதாரம்" என்றுச் சொல்கிறது.

கண்ணுக்குத் தெரியாத இறைவன் மனிதனாக வருவதினால் அவரை பார்க்கமுடிகின்றது, நாம் அவரை அறிந்து கொள்ளமுடிகின்றது. இஸ்லாமிய தெய்வம் அறியப்படாதவராக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லையே!

நாம் புரிந்துக்கொள்ளக் கூடிய வகையில் நம்முடைய இறைவன் தம்மை வெளிப்படுத்துகின்றார். அதனால் தான் அவருக்கு இம்மானுவேல் என்று பெயர். இம்மானுவேல் என்றால் "தேவன் நம்மோடு இருக்கிறார்" என்று அர்த்தம். அவர் தான் இயேசு.

மோசேவுடன் தேவன் எப்படி பேசினார், மோசே தேவனுடன் எப்படி பேசினார் என்பதை சிறிது சிந்தித்தால், இங்கு சொல்லப்படும் விவரம் இன்னும் தெளிவாக புரியும். தேவனுடன் பேசுவதற்காக மோசே தன்னை அவருக்கு சமமாக உயர்த்திக்கொண்டாரா? இல்லை. அதற்கு பதிலாக தேவன் தான் தன்னை மோசேக்கு வெளிப்படுத்துவதற்காக எரியும் புதரிலிருந்து பேசினார்.  இப்படி செய்தால் தான் தேவனின் வார்த்தைகளை மோசே கேட்கமுடியும்.

இப்படி சொல்வதினால், நெருப்பு தான் தேவன் என்றோ, எரியும் புதர் தான் தேவன் என்றோ நான் சொல்லவில்லை. எந்த வகையில் பேசினால் மனிதனாகிய மோசே தன்னுடைய புலன்களால் அதாவது கண்களால் கண்டு, காதுகளால் தேவன் பேசுவதை கேட்டு புரிந்துக்கொள்ள முடியுமோ, அப்படி தம்மை தேவன் வெளிப்படுத்தினார்.

சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், எல்லையில்லாதவரும் கண்ணுக்குத் தெரியாதவருமாகிய‌ தேவன், தன்னை ஒரு எல்லைக்குட்படுத்திக் கொண்டு (புதரிலிருந்து பேசியதால்), தன் நிலையிலிருந்து கீழே இறங்கி வந்தார்.

மனிதனின் அறிவுக்கும் அனுபவங்களுக்கும் அப்பாற்பட்டவராக தேவன் இருந்தாலும், மனிதன் தன்னை அறியவேண்டும் என்பதற்காக அவர் தன்னை தாழ்ந்தி வந்தார். இப்படி செய்ததால் தான் மனிதன் தேவனோடு உறவாடவும் அறியவும் முடிந்தது.

இதனை புதிய ஏற்பாடு கீழ்கண்டவாறு கூறுகின்றது:

5. கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; 6. அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், 7. தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். 8. அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். (பிலிப்பியர் 2: 5-8)

இஸ்லாமிய இறைவன் தன்னை மனிதன் அறியவேண்டுமென்று விரும்புவதில்லை, அதனால் தான் அவன் ஏழு வானங்களுக்கு மேலே இருக்கிறான், பூமியில் இறங்கி வருவதில்லை. ஆனால் பைபிளில் தேவன் மனிதன் தன்னை அறிந்துக்கொள்ளவேண்டும் என்று விரும்பி பரலோகத்திலிருந்து இறங்கி  வந்தார். பழைய ஏற்பாட்டில் மோசேவுடனும், இதர தீர்க்கதரிசிகளுடனும் பூமியில் வந்து உரையாடினார். மனிதனுக்காக அவர் தன்னை தாழ்த்தினார்.

மனிதன் தன்னை தேவனுக்கு சமமாக உயர்த்திக்கொள்வது ஷிர்க் என்று அழைப்பது சரியே, அதே போல‌, தேவன் தன்னை தாழ்த்தி மனிதனுக்காக இறங்கி வருவதை அன்பு என்று அழைப்பதும் சரி தானே. 

ஆங்கில மூலம்: www.faithbrowser.com/how-can-you-communicate-with-god/

தேதி: 27th Feb 2020


புதன், 26 பிப்ரவரி, 2020

முஸ்லிம்கள் நித்திய ஜீவனைப்பெற என்ன செய்யவேண்டும்?

நித்திய ஜீவனை பெற நான் என்ன செய்யவேண்டும்? இந்த கேள்வியை ஒரு பணக்கார இளைஞன் இயேசுவிடம் கேட்டான் (பார்க்க: மத்தேயு 19: 16-22, மாற்கு 10: 17-22 & லூக்கா 18: 18-23)

அந்த இளைஞனுக்கு இயேசு என்ன பதில் கூறினார்?

. . . நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார் (மத்தேயு 19:17)

குறிப்பு: 'கட்டளை - Law/Commandment' என்ற வார்த்தை பைபிளில் 'கற்பனை' என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

சிலர் முக்கியமாக முஸ்லிம்கள், இந்த உரையாடல் இந்த வசனத்தோடு முடிந்துவிட்டது என்று நினைத்து, அவர்கள் அடுத்தடுத்த வசனங்களை படிப்பதில்லை.  அதன் பிறகு முஸ்லிம்கள் ஆச்சரியத்துடன் "பார்த்தீர்களா? நித்திய ஜீவனில் பிரவேசிக்க இயேசு கட்டளைகளுக்கு கீழ்படியவேண்டும்" என்றுச் சொல்கிறார் என்று நம்மிடம் கூறுவார்கள்.

ஆனால், அந்த உரையாடல், அதோடு நின்றுவிடவில்லை, மேற்கொண்டு படித்தால் தான் அந்த இளைஞன் என்ன பதில் கூறினான், அதற்கு இயேசு மறுபடியும் என்ன பதில்  அளித்தார் என்று புரியும். 

அந்த வாலிபன் அவரை நோக்கி: இவைகளையெல்லாம் என் சிறு வயது முதல் கைக்கொண்டிருக்கிறேன்; இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன என்றான் (மத்தேயு 19:20)

என்ன ஆச்சரியம்! அந்த  இளைஞன் அனைத்து  கட்டளைகளையும் கைகொண்டு இருப்பதாக கூறுகின்றானே! இதனால் நித்திய ஜீவனுக்கு போகும்படியான தகுதி அவனுக்கு முழுவதுமாக இருப்பதாக நாம் கருதலாம் அல்லவா?

அந்த வாலிபனின் பதிலுக்கு இயேசு என்ன உத்தரவு கொடுத்தார்?  

"ஓ, நீ அனைத்து கட்டளைகளையும் பின்பற்றினபடியினால் உனக்கு நித்திய ஜீவன் நிச்சயம் உண்டு, நீ கலங்காதே, திகையாதே" என்றுச் சொன்னாரா? 

அல்லது 

இயேசு தம் சீடர்களைப் பார்த்து, "பார்த்தீர்களா, ந்த வாலிபன் நித்திய ஜீவனுக்கு போகும்படியான தகுதியை பெற்று இருக்கிறான்" என்றுச்  சொன்னாரா?  

இரண்டு பதில்களையும் இயேசு கூறவில்லை. ஆனால் அதற்கு பதிலாக கீழ்கண்டவாறு கூறினார்:

இயேசு அதைக் கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். (லூக்கா 18:22)

என்ன இது? ஒரு மனிதன் கட்டளைகள் அனைத்தையும் கடைபிடித்தாலும், அவனிடம் இன்னும் குறை இருக்குமா?  

இதன் அர்த்தம் என்னவென்றால், ஒரு மனிதன் எல்லா  கட்டளைகளை பின்பற்றினாலும் அது நித்திய ஜீவனுக்கு போவதற்கு போதாது என்பதாகும்.

ஒரு கசப்பான உண்மை என்னவென்றால், எந்த ஒரு மனிதனாலும் எல்லா கட்டளைகளையும் முழுவதுமாக எல்லா காலங்களிலும்  கடைபிடிக்கமுடியாது என்பது தான். நான் எல்லா  கட்டளைகளையும் சிறுவயது தொடங்கி பின்பற்றுகிறேன் என்று அந்த இளைஞன் சொன்னதே ஒரு அறியாமை ஆகும். அந்த இளைஞனின் அறியாமையை இயேசு கண்டார். இருந்த போதிலும் அவர் அவனை கடிந்துக் கொள்ளவில்லை.

இதைப் பற்றி மாற்கு 18:21ல் சொல்லும்போது, "இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து" என்று அழகாக சொல்லப்பட்டுள்ளது.

இன்று ஒவ்வொரு மதமும் குறையுள்ள மனிதர்களை எப்படி பார்க்கிறது? மதங்கள் மனிதனை தண்டிக்கிறது, அவர்களை கடிந்துக்கொள்கிறது. ஆனால், இயேசு இவ்விரண்டையும் செய்யவில்லை, அவர் அந்த இளைஞன் மீது  அன்பு செலுத்தினார். 

சரி, மையக்கருத்துக்கு வருவோம்.

அந்த இளைஞனிடம் இருந்த ஒரு குறை என்ன? அவன் இன்னும் அதிகமாக கீழ்படிய வேண்டுமா? அல்லது இன்னும் நல்ல செயல்களைச் செய்யவேண்டுமா? - இல்லை.

இயேசு அந்த இளைஞனுக்கு கூறிய அந்த ஒரு காரியம் என்ன தெரியுமா?

". . .என்னைப் பின்பற்றிவா என்றார்." (மத்தேயு 19:21, மாற்கு 10:21, லூக்கா 18:22)

கட்டளைகள் அனைத்தையும் கடைபிடித்து கீழ்படிவது நல்லது  தான், ஆனால் அந்த ஒரு செயல் நமக்கு நித்திய ஜீவனை கொடுக்க போதாது.  நல்ல செயல்களைச் செய்வதும் நல்லது தான், ஆனால் நித்திய ஜீவனை அது சம்பாதித்து நமக்கு கொடுக்காது. அந்த வாலிபன்,  ஒருவேளை தன் சொத்துக்களை விற்று ஏழைகளுக்கு கொடுத்தாலும், அது  போதாது, இன்னும் ஒரு காரியம் குறைவாக உள்ளது.

உலக மக்களுக்கு  நித்திய ஜீவனை கொடுக்கின்ற அந்த ஒரு காரியம் என்னவென்றால், "இயேசுவை பின் தொடர்வது தான்". ஏனென்றால், அவர் தான் நித்திய ஜீவனை கொடுப்பவர்.

என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை. (யோவான் 10:27, 28)

இயேசு தான் நித்திய ஜீவனைக் கொடுக்கின்றவர். ஒரு வேளை நீங்கள் உங்கள் வாலிப வயதிலிருந்து அனைத்து நல்ல கட்டளைகளை பின்பற்றுகிறவராக இருக்கலாம், ஆனால் இயேசுவை நீங்கள் பின்பற்றவில்லையென்றால், நித்திய ஜீவனை பெறும்படியான தகுதியை இழந்து விடுகின்றவர்களாக மாறிவிடுவீர்கள்.

இயேசுவை பின்பற்ற முடிவு செய்யுங்கள். அவரிடம் இப்பொழுதே உள்ளத்தில் பேசுங்கள், நான் உங்களை பின்பற்ற விரும்புகிறேன் என்று அவரிடம் சொல்லுங்கள்.  உங்களின் இந்த ஜெபத்தை அவர் நிச்சயம் கேட்பார், அவர் தனக்கே உரித்தான ஆச்சரியமான முறையில் உங்களுக்கு பதிலும் கொடுப்பார். இயேசுவின் ஆரம்பகால சீடர்களில் ஒருவர் இயேசு கொடுத்த ஒரு வாக்குறுதியை கீழ்கண்டவாறு கூறுகிறார்:

நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.  (1 யோவான் 2:15)

இந்த வாக்குறுதியை நம்பி, 'இயேசுவை பின்பற்றுவேன்' என்றுச் சொல்லி, அவரை உண்மையாக பின்பற்றுகிறவர்களுக்கு நித்திய ஜீவன் நிச்சயம் உண்டு. 

அடிக்குறிப்பு:

[1] நித்திய ஜீவன்: மரணத்திற்கு பிறகு நித்திய நித்தியமாக இறைவனோடு வாழும் வாழ்க்கை 

ஆங்கில மூலம்: http://www.faithbrowser.com/what-must-i-do-to-inherit-eternal-life/

தேதி: 26th Feb 2020


ஃபெயித் ப்ரவுசர் கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/faith_browser/inherit-eternal-life.html

புதன், 19 பிப்ரவரி, 2020

சுலைமான் (சாலமோன்) ராஜா ஒரு முஸ்லிமா?

மன்னன் சுலைமான் அவர்களைப் பற்றி நான் 2 நாளாகமம் 2ம் அத்தியாயத்தில் படித்துக்கொண்டு இருந்தேன். இந்த சுலைமான் நபியைத் தான் என் முஸ்லிம் நண்பர்கள் "அவர் ஒரு முஸ்லிம் நபி" என்று  சொல்கிறார்கள்.

இந்த அத்தியாயத்தில் படிக்கும் போது, சுலைமான் தன் இறைவனுக்கு (யெகோவா)  கனத்தைக் கொடுக்கும்படியாக ஒரு ஆலயத்தை கட்ட ஆயத்தப்படுவதாக வருகிறது (2 நாளாகமம் 2:1). சுலைமான் ஒரு முஸ்லீம் என்று நீங்கள்(முஸ்லிம் நண்பர்கள்) கூறுவதால், அந்த ஆலயத்தை அல்லாஹ்விற்காகத் தானே அவர் கட்டி இருந்திருப்பார்? நான் சொல்வது சரி தானே!

இறைவனுடைய ஆலயம் பற்றி சுலைமான் எப்படி விவரிக்கின்றார் என்பதை பாருங்கள்:

இதோ, என் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாகச் சுகந்தவர்க்கங்களின் தூபம்காட்டுகிறதற்கும், சமுகத்தப்பங்களை எப்போதும் வைக்கிறதற்கும், காலையிலும் மாலையிலும், ஓய்வுநாட்களிலும், மாதப்பிறப்புகளிலும், எங்கள் தேவனாகிய கர்த்தரின் பண்டிகைகளிலும், இஸ்ரவேல் நித்தியகாலமாகச் செலுத்தவேண்டியபடி சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துகிறதற்கும், அவருடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்டி அதை அவருக்குப் பிரதிஷ்டைபண்ணும்படி நான் எத்தனித்திருக்கிறேன் (2 நாளாகமம் 2:4).

சுலைமான் அரசனின் மேற்கண்ட வார்த்தைகள் இஸ்லாத்தை விவரிகின்ற மாதிரி உள்ளதா? முஸ்லீம் தீர்க்கதரிசியான சுலைமான் இஸ்லாத்தை மேற்கண்ட விதமாக‌ கடைபிடித்தாரா? 

இஸ்லாமிய தொழுகையில் தேவ சமூகத்து அப்பங்கள் உண்டா?

இஸ்லாமில் இறைவனுடைய‌ சந்நிதியில் எப்போதும் வைக்கப்படவேண்டிய ரொட்டிகள் (சமுகத்தப்பங்க‌ள்) அல்லது சுகந்த வர்க்கங்கள் கொண்டு தூபம் காட்டுதல் மேலும் சனிக்கிழமை என்ற நாளை விசேஷித்த விதமாக ஆசரிப்பது போன்றவைகள் உண்டா? இவைகளின்  முக்கியத்துவம் என்ன? இவை அனைத்தும் அல்லாஹ்வுக்காக செய்யப்பட்டதா? சுலைமான் அரசர் செய்த இவைகள் அனைத்தும் எனக்கு இஸ்லாமுக்கு சம்மந்தப்பட்ட வழிபாடுகள் போன்று தெரியவில்லையே!

சுலைமான் செய்தவைகள் அனைத்தும் எங்கள் இஸ்லாமின் வழிபாடுகள் என்று நீங்கள் சொல்வீர்களானால், சுலைமானின் காலத்திற்கு பிறகு எப்போது இவைகளை அல்லாஹ் மாற்றினான் என்று சொல்லமுடியுமா? அது மட்டும் அல்ல, இதை என்றென்றும் (இஸ்ரவேல் நித்தியகாலமாகச் செலுத்தவேண்டியபடி) செய்யும்படி அவர் இஸ்ரவேலுக்குக் கட்டளையிட்டார்.

யூதர்களை ஒதுக்கி, இறைவன் அரபியர்களை தெரிவு செய்துக்கொண்டானா?

இந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்காக, சில முஸ்லிம்கள் "யூதர்களை ஒதுக்கி, இறைவன் அரபியர்களை தெரிவு செய்துக்கொண்டான், அதனால் வழிபாடுகளையும் மாற்றினான்" என்று சொல்லக்கூடும். 

சுலைமான் அரசரிடம் யெகோவா தேவன் நேரடியாக பேசியதாக 1 இராஜாக்கள் 6:11-13 வசனங்கள் கூறுகின்றன. வேறு ஒரு தூதர் மூலமாகவோ அல்லது மத்தியஸ்தர் மூலமாகவோ அல்லாமல், நேரடியாக பேசியதாக வசனங்கள் கூறுகின்றன. அவர் "என் ஜனமாகிய இஸ்ரவேலைக் கைவிடாதிருப்பேன் என்றார்." என்று சுலைமானிடம் கூறினார். சுலைமானிடம் பேசியது அல்லாஹ் என்றால், ஏன் தன் நபியிடம் இப்படிப்பட்ட வார்த்தைகளை அல்லாஹ் பேசுகின்றான்? அதே அல்லாஹ், 1600 ஆண்டுகளுக்கு பிறகு இன்னொரு முஸ்லிம் நபி (முஹம்மது) மூலமாக. யூதர்கள் பன்றிகள் என்று பேசியுள்ளான். சுலைமானிடம் பேசும் போது மட்டும், நான் இஸ்ரவேலை கைவிடாதிருப்பேன் என்றுச் சொன்னார், முஹம்மதுவிடம் மட்டும், அவர்கள் பன்றிகள் என்று ஏன் கூறுகின்றான் அல்லாஹ்? அல்லாஹ் தன் மனதை எப்போது மாற்றிக்கொண்டான்?

மேலும் பார்ப்போம்…

சுலைமான் அரசர் எப்படி தொழுதுக்கொண்டார் என்று கவனியுங்கள். 

1 இராஜாக்கள் : 8:22-23

22 பின்பு சாலொமோன்: கர்த்தருடைய பலிபீடத்திற்குமுன்னே இஸ்ரவேல் சபையாரெல்லாருக்கும் எதிராக நின்று, வானத்திற்கு நேராய்த் தன் கைகளை விரித்து:

23 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உமக்கு ஒப்பான தேவன் இல்லை, தங்கள் முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியாருக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்துவருகிறீர்.

மேலும் 54ம் வசனத்தில்: . . . அவன் கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்பாகத் தன் கைகளை வானத்திற்கு நேராக விரித்து, முழங்காற்படியிட்டிருந்ததைவிட்டெழுந்து,. ..  என்று சொல்லப்பட்டுள்ளது

முஸ்லிம்கள் இப்படித்தான் தொழுதுக்கொள்கிறார்களா? ஜெபிக்கிறார்களா? சுலைமான் முழங்கால் படியிட்டு, வானத்தை நோக்கி கைகளை உயர்த்தி தொழுதுக்கொண்டார். இது போல முஸ்லிம்கள் அல்லாஹ்வை தொழுதுக்கொள்கிறார்களா? ஒருவேளை, முஸ்லிம்கள் தொழுதுக்கொள்ளும் முறையை அல்லாஹ் மாற்றிவிட்டானா?

ஆம், அல்லாஹ் மாற்றினான் என்றுச் சொன்னால், எப்போது மாற்றினான்? சுலைமான் காலத்திலிருந்து எப்படி தொழுதுக்கொள்ளவேண்டும் என்று முஸ்லிம்களுக்கு கட்டளையிட்டதாக குர்‍ஆனிலிருந்து முஸ்லிம்கள் சான்றுகளை வசனங்களை காட்டமுடியுமா?

இறுதியாக, சுலைமான் கட்டிய‌ ஆலயத்தில் நடந்த வழிபாட்டின் காட்சி இதுதான்.

12. ஆசாப், ஏமான், எதுத்தூனுடைய கூட்டத்தாரும், அவர்களுடைய குமாரர் சகோதரருடைய கூட்டத்தாருமாகிய பாடகரான லேவியரனைவரும் மெல்லியபுடவைகளைத் தரித்து, கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் பிடித்துப் பலிபீடத்திற்குக் கிழக்கே நின்றார்கள்; அவர்களோடும்கூடப் பூரிகைகளை ஊதுகிற ஆசாரியர்கள் நூற்றிருபதுபேர் நின்றார்கள்.

13. அவர்கள் ஒருமிக்கப் பூரிகைகளை ஊதி, ஏகசத்தமாய்க் கர்த்தரைத் துதித்து ஸ்தோத்திரித்துப் பாடினார்கள்; ஆசாரியர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படுகையிலும், பாடகர் பூரிகைகள் தாளங்கள் கீதவாத்தியங்களுடைய சத்தத்தைத் தொனிக்கப்பண்ணி கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதென்று அவரை ஸ்தோத்திரிக்கையிலும், கர்த்தருடைய வீடாகிய தேவாலயம் மேகத்தினால் நிறையப்பட்டது.

14. அந்த மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்து நிற்கக் கூடாமற்போயிற்று; கர்த்தருடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பிற்று. (II நாளாகமம் 5:12-14)

மேற்கண்ட வசனங்களில் தொழுதுக்கொள்கின்ற அனைவரும் அல்லாஹ்வையா தொழுதுக் கொண்டிருக்கிறார்கள்? இசைக்கலைஞர்கள், பாடகர்கள் இசைக்கருவிகளைக் கொண்டு பாடிக்கொண்டு தொழுதுக்கொண்டு இருக்கிறார்கள். இப்படித் தான் இன்று முஸ்லிம்கள் தங்கள் மசூதிகளில் அல்லாஹ்வை தொழுதுக்கொள்கிறார்களா? அதாவது பல இசைக்கருவிகளை மீட்டி, பாடிக்கொண்டு தொழுதுக்கொள்கிறார்களா? பாடல் பாடிக்கொண்டும், இசைக்கருவிகளை இசைத்துக்கொண்டும் பாடி தன்னை தொழுதுக்கொள்வதை, எந்த காலத்திலிருந்து அல்லாஹ் மாற்றிவிட்டான்? இசையோடு தன்னை தொழுதுக்கொள்வதை எப்போது அல்லாஹ் முஸ்லிம்களுக்கு தடை செய்தான்?

Source:  https://www.answering-islam.org/tamil/authors/umar/faith_browser/was-king-solomon-a-muslim.html