ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

ரமளான் நாள் 19 - இயேசு தம் தெய்வீகத்தை தாமே சுவிசேஷங்களில் மறுக்கிறார், இதற்கு உங்கள் பதில் என்ன?

அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதங்கள்: கடிதம் 1, கடிதம் 2கடிதம் 3கடிதம் 4கடிதம் 5கடிதம் 6கடிதம் 7கடிதம் 8 , கடிதம் 9, கடிதம் 10, கடிதம் 11, கடிதம் 12கடிதம் 13கடிதம் 14கடிதம் 15கடிதம் 16, கடிதம் 17கடிதம் 18]

அன்புள்ள தம்பி,

உனக்கு சமாதானம் உண்டாவதாக.

நீ அனுப்பிய மெயிலை படித்தேன், நீ கேட்ட கேள்வியையும் படித்தேன். நீ தற்போது அதிகமாக இஸ்லாமிய புத்தகங்களை படிப்பதாகவும், அனேகரிடம் இதைப் பற்றி பேசி விவரங்களை சேகரிப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தாய். நீ சரியான ஒன்றைத் தான் இப்போது செய்துக்கொண்டு இருக்கிறாய். 

உன் கடிதத்தில் நீ என்னிடம் "இயேசு தனக்கு தெய்வீகத்தன்மை இல்லையென்றும், தன் தெய்வீகத்தன்மையை தாமே மறுக்கும்படியாகவும் நான்கு நற்செய்தி நூல்களில் கூறியிருக்கும் போது, ஏன் கிறிஸ்தவர்கள் வலியச் சென்று, இயேசுவிற்கு தெய்வீகத்தன்மையை ஒட்டவைக்கிறீர்கள்? சுவிசேஷ நூல்களை சரியாக கிறிஸ்தவர்கள் படிக்கமாட்டார்களா?" என்ற கேள்வியை எழுப்பியிருந்தாய்.

உன்னுடைய இந்த கேள்விகான பதிலை இப்போது நாம் பார்ப்போம்.

இஸ்லாமியர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு:

இஸ்லாமியர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு என்னவென்றால், இயேசுவின் தெய்வீகத்தன்மையை மறுப்பதற்கு அவர்கள் புதிய ஏற்பாட்டை முக்கியமாக முதல் நான்கு சுவிசேஷங்களை ஆதாரமாக காட்டுவதுதான். குர்ஆனை ஆதாரமாக காட்டி, இயேசு தெய்வமில்லை என்றுச் சொன்னாலும், அவர்களால் ஓரளவிற்கு சமாளித்துக் கொள்ளமுடியும், ஆனால், நற்செய்தி நூல்களை ஆதாரமாக காட்டுவது அடிமட்ட அறியாமையாகும்.

எந்த ஒரு மனிதனும், புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு சுவிசேஷ நூல்களை படித்துவிட்டு, இந்த நூல்களில் இயேசு தம்முடைய தெய்வீகத்தைப் பற்றி எதுவும் சொல்லவில்லை, அதற்கு பதிலாக 'அவர் ஒரு மனிதன்' என்பதை மட்டுமே வெளிக்காட்டுகிறார் என்றுச் சொல்வாரானால், ஒன்று இந்த மனிதன் பொய் சொல்லவேண்டும், அல்லது இவருக்கு சுயநினைவு சரியில்லை என்று அர்த்தம்.  ஏனென்றால், இறைவன் இல்லை என்றுச் சொல்லக்கூடிய நாத்தீகர்கள் கூட, இந்த நான்கு சுவிசேஷங்களை படித்துவிட்டு, இயேசு தம்முடைய தெய்வீகத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளார் என்று தான் கூறுவார்கள்.
அடிப்படையில் நான்கு சுவிசேஷங்கள் இயேசுவின் தெய்வீகத்தன்மையை பறைசாற்றுகிறதா இல்லையா என்று கேட்டால், "ஆம், பறைசாற்றுகிறது" என்பது தான் பதிலாக அமையும்.

எந்த ஒரு இஸ்லாமியராவது நான்கு சுவிசேஷங்களை படித்துவிட்டு, இதில் இப்படி இயேசு தம்முடைய இறைத்தன்மையைப் பற்றிச் சொல்லவில்லையே என்று கூறுவாரானால், அவர் எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும் சரி, அவர் பொய் சொல்கிறார் என்று அர்த்தம் (இதில் முதல் இடத்தை நான் பி, ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்குத் தரவிரும்புவேன்).

இப்போழுது நான், இயேசு தம்முடைய தெய்வீகத்தைப் பற்றி கூறிய விவரங்களில் சில காரியங்களைப் பற்றி உனக்கு விவரித்து கேள்வி எழுப்பப்போகிறேன். இதனை உன் இஸ்லாமிய அறிஞர்களிடம் தெரிவித்து, இவைகள் அந்த நான்கு சுவிசேஷங்களில் தான் உள்ளது, இவைகளை நீங்கள் படிக்கவில்லையா என்று கேட்டுச் சொல்வாயா?

1. இயேசு தேவாலயத்திலும் பெரியவர்:

இயேசு ஒரு முறை "தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன" என்று கூறியுள்ளார் (மத்தேயு 12:6). அதாவது ஓய்வு நாளில் சீடர்கள் கதிர்களை கொய்து சாப்பிட்டார்கள், ஓய்வு நாளில் ஏன் உம்முடைய சீடர்கள் சட்டத்தை மீறுகிறார்கள் என்று யூத மார்க்க தலைவர்கள் கேட்கும் போது, பழைய ஏற்பாட்டின் ஒரு நிகழ்ச்சியை குறிப்பிட்டுவிட்டு, தம்மைப் பற்றி இயேசு கூறும் போது இவ்விதமாக கூறுகிறார்.

எருசலேம் தேவாலயம், யூத சரித்திரத்தில் மிகவும் முக்கியமான அங்கமாக உள்ளது. தாவீது கட்ட விரும்பினார், ஆனால் தேவன் சாலொமோனின் மூலம் கட்டவைத்தார், பாபிலோன் அரசன் அதை பாழாக்கினான், மறுபடியும் எஸ்றா, நெகேமியா காலத்தில் பழுது பார்க்கப்பட்டது. 
 
கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்து கட்டப்படும் தேவாலயம் பெரியதா அல்லது அதில் வாசம் செய்யும் தேவன் பெரியவரா? தேவாலயத்தை விட தேவன் தான் பெரியவர். இராஜா வாழும் மாளிகை பெரியதா அல்லது அதில் வாசம் செய்யும் இராஜா பெரியவரா? இராஜா தான் பெரியவர்.

தேவாலயத்தை விட தேவன் தான் பெரியவர். விஷயம் இப்படி இருக்க இயேசு சொன்ன வார்த்தைகளின் அர்த்தமென்ன? "தேவாலயத்திலும் பெரியவர் இங்கு இருக்கிறார்" என்றுச் சொன்னால், இயேசு தன்னை அந்த தேவாலயத்தில் வாசம் செய்யும் தேவனுக்கு சமமாக அல்லவா பேசியுள்ளார். தன்னை தேவன் என்ற நிலையில் அல்லவா அவரது கூற்று காணப்படுகிறது?

தம்பி இயேசு சொன்ன இந்த வார்த்தைகளை சிறிது நீ ஆய்வு செய்து பார்ப்பாயா? எருசலேம் தேவாலயத்துக்காகவும், தேவனுக்காகவும் வைராக்கியமாக இருக்கும் யூத தலைவர்களிடம் இவ்விதமாக இயேசு பேசியுள்ளார். இஸ்லாம் சொல்வது போல 'இயேசு வெறும் ஒரு தீர்க்கதரிசியாக மட்டும்' இருந்திருந்தால் இப்படி பேசியிருப்பாரா? நீ சிறிது சிந்தித்துப் பார் தம்பி.

2. இயேசு ஓய்வு நாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார்:

இயேசு தம்மைப் பற்றி என்ன தான் நினைக்கிறார்? இஸ்லாம் சொல்வது போல இயேசு ஒரு தீர்க்கதரிசியாக மட்டும் இருந்திருந்தால், இப்படிப்பட்ட வார்த்தைகளை சொல்லியிருப்பாரா? ஒருபோதும் சொல்லமாட்டார். ஆனால், இயேசு தீர்க்கதரிசியை விட மேலானவராக இருக்கிறார்.

நாம் மேலே கண்ட அதே நிகழ்ச்சியில் (மத்தேயு 12ம் அதிகாரம்), முதலாவது தாம் தேவாலயத்திலும் பெரியவர் என்று சொன்னார், அதற்கு பிறகு, தாம் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராக இருப்பதாக, வசனம் 8ல் கூறுகிறார்.

எல்லா நாட்களுக்கும் ஆண்டவர் யெகோவா தேவனல்லவா? ஓய்வு நாளுக்கும் ஆண்டவர் யெகோவா தேவன் அல்லவா? இப்படி இருக்க இயேசு எப்படி 'நான் தான் யெகோவா' என்பது போல பேசுகிறார்?
 தம்பி,  'இயேசு பேசிய வார்த்தைகள்' வெறும் சாதாரண மனிதன் பேசும் வார்த்தைகள் அல்ல, தீர்க்கதரிசிகள் பேசும் வார்த்தைகள் அல்ல, இவைகள் அவர்களை விட மேலான ஒருவர் பேசும் வார்த்தைகளாகும்.

"மனுஷ குமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார்" என்றுச் சொல்வதிலிருந்து, முதலாவதாக அவர் ஓய்வு நாள் அல்லாத நாட்களுக்கும் ஆண்டவராக இருக்கிறார் என்றுச் சொல்கிறார், இரண்டாவதாக ஓய்வு நாளுக்கும் அவர் ஆண்டவராக இருப்பதாக சொல்கிறார். எந்த தீர்க்கதரிசியாவது இப்படி பேசுவாரா? சிந்தித்துப்பார்.

3. இயேசு யோனாவிலும் பெரியவர்:

இந்த மத்தேயு 12ம் அதிகாரத்தில் இயேசு தம்முடைய தெய்வீகத்தன்மைக்கான காரியங்களை அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டு இருக்கிறார். 

இயேசு 41ம் வசனத்தில் என்ன கூறுகிறார் என்று ஒரு முறை கவனி:

12:41 யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள்.

பொதுவாக தீர்க்கதரிசிகளில் பெரியவர் சின்னவர் என்று யாரும் இல்லை. அவரவருக்கு தேவன் ஒப்புவித்த வேலையை அவர்கள் செய்துமுடித்தார்கள்.  ஆனால், இந்த இடத்தில் இயேசு பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியோடு ஒப்பிட்டு, அவரை விட தான் பெரியவர் என்றுச் சொல்கிறார்.

மேலும் நியாயத் தீர்ப்பு நாளில் என்ன நடக்கும் என்றும் சொல்கிறார். இப்படி ஒரு தீர்க்கதரிசி பேசுவது சாதாரணமானது அல்ல. ஒரு தீர்க்கதரிசி இப்படி பேசுவது அவருக்கு அடுக்காது. ஆனால், இயேசு இவ்விதமாக கூறியுள்ளார்! எந்த வகையில் இயேசு யோனாவை விட பெரியவர்?
a) பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்ட மேசியாவாக இயேசு இருக்கிறார், யோனா வெறும் தீர்த்தரிசியாக உள்ளார். மேசியாவின் தகுதி, ஊழியம்,  இதர தீர்க்கதரிசிகளை விட மேன்மையானதாக உள்ளது.

b) யோனா நினிவே மக்களுக்கு 40 நாட்கள் பிரசங்கித்தார், ஆனால், இயேசு யூதர்களுக்கு 3 ஆண்டுகளுக்கும் அதிகமாக பிரசங்கித்தார்.

c) யோனா தன் செய்தியை சொல்வதற்காக அற்புதங்கள் செய்யவில்லை, வெறும் தேவசெய்தியை பிரசங்கித்தார். ஆனால், இயேசு சென்ற இடமெல்லாம் அற்புதங்கள் செய்தார், தன் தெய்வீகத்தன்மையை பலவகைகளில் விளக்கிக்காண்பித்தார்.

d) மேலும், இயேசுவின் முந்தைய வார்த்தைகளின்படி, அவர் தேவாலயத்திலும் பெரியவராகவும் இருக்கிறார், ஒய்வு நாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார், ஆனால், யோனா வெறும் தீர்க்கதரிசியாக இருக்கிறார். 

e) கடைசியாக, இயேசுவின் எச்சரிக்கை என்னவென்றால், யோனாவின் செய்தியை கேட்ட மக்கள் மனந்திரும்பினார்கள், எந்த ஒரு அற்புதத்தையும் காணாமல் விசுவாசித்தார்கள், இரட்சிக்கப்பட்டார்கள், ஆனால், மேசியா யூதர்களின் மத்தியில் இருந்த போதிலும்,அனேக அற்புதங்களை கண்டபோதிலும், அவர்கள் விசுவாசியாமல் போனதால், நியாயத்தீர்ப்பு நாளிலே நினிவே மக்கள் இவர்களை குற்றப்படுத்துவார்கள் என்று இயேசு கூறினார்.
தம்பி, நீ பைபிள் முழுவதுமாக படித்துப்பார்த்தலும் இயேசு பேசியது போல் பேசிய தீர்க்கதரிசியை காணமுடியாது.

4. இயேசு சாலொமோனிலும் பெரியவர்:

தம்பி, நான்கு சுவிசேஷங்களை படித்துவிட்டு, இதில் இயேசு தன் தெய்வீகத்தைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என்றுச் சொல்லும் நபர்களை பார்த்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது.

யூதர்கள் இயேசுவின் அற்புதங்களை கண்டு பொறாமை கொண்டு அவரை சிலுவையில் அறையவில்லை, அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும், உலகில் பிறந்த மனிதன் பேசக்கூடிய வார்த்தைகளாக  காணப்படவில்லை, ஏதோ வேறு கிரகத்திலிருந்து வந்த மனிதனைப்போல அல்லது வானத்திலிருந்து வந்த இறைவன் போல பேசினார், யூதர்கள் அனேக முறை அவரை கொலை செய்ய முயற்சி எடுத்தார்கள். அவரது வார்த்தைகளில் பொதிந்து இருந்த சத்தியத்தை, தெய்வீகத்தை அவர்கள் உணர்ந்துக்கொண்டார்கள், ஒரு மனிதன் இப்படி தேவன் பேசுவது போல பேசக்கூடாது என்று இயேசு மீது குற்றம் சாட்டினார்கள்.

இதே மத்தேயு 12ம் அதிகாரம் 42ம் வசனத்தில் இயேசு சொன்ன இன்னொரு விஷயத்தை கவனிப்போம்:

12:42 தென்தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள்.

இயேசு யாரையும் விடுவதாக தெரியவில்லை, தேவாலயம் முதற்கொண்டு, ஓய்வு நாள் வரையும், ஆபிரகாம் முதற்கொண்டு சாலொமோன் வரையிலும் அவர் முக்கியமான நபர்கள் பற்றி பேசியுள்ளார்.  இப்போது சாலொமோனைப் பற்றி பேசுகிறார், தாம் அவரை விட பெரியவர் என்று கூறுகிறார். சாலொமோனை விட பெரியவனாகிய நான் சொல்லும் விவரங்களை நீங்கள் நம்பாமல் இருப்பதினால், சாலொமோனின் ஞானத்தை கேட்டு அறிந்த இராஜஸ்திரி  உங்கள்மேல் குற்றம் சுமத்துவாள் என்று இயேசு கூறுகிறார். இதன் பொருள் என்னவென்றால், நான் சாலொமோனை விட பெரியவன் என்பதால் என் வார்த்தைகளுக்கு நிச்சயம் நீங்கள் கீழ்படியவேண்டும் என்று இயேசு கூறுகிறார்.

தம்பி இவைகள் எல்லாம் ஒரு சாதாரண மனிதனின் வார்த்தைகளா? ஒரு சாதாரண நபியின் வார்த்தைகளா? நிச்சயமாக இல்லை.

நீ சொர்ந்து போவாய் என்பதால் இதோடு இந்த கடிதத்தை முடித்துக்கொள்கிறேன், அடுத்த கடிதத்தின் இன்னும் சில விவரங்களை உனக்கு எழுதுவேன்.

சுவிசேஷங்கள் இயேசுவின் தெய்வீகத்தன்மையை மறுக்கிறது என்று இஸ்லாமியர்கள் கூறுவது சுத்தப் பொய்யாகும். நீ உன் நண்பர்களிடம் கேட்டுப்பார், இயேசு இவ்விதமான உரிமைப்பாராட்டலை கொடுத்துள்ளாரே, இவைகள் ஒரு தீர்க்கதரிசியின் வாதங்கள் அல்லவே, ஒரு தீர்க்கதரிசியை விட அதிகமாக இயேசு தம்முடைய தெய்வீகத்தை குறித்து உரிமைப்பாராட்டியுள்ளாரே, இதற்கு உங்கள் பதில் என்னவென்று கேட்டுப்பார்.

1. இயேசு தேவாலயத்திலும் பெரியவர்:
2. இயேசு ஓய்வு நாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார்:
3. இயேசு யோனாவிலும் பெரியவர்:
4. இயேசு சாலொமோனிலும் பெரியவர்:

இன்னொரு விஷயத்தை கூறி முடிக்கிறேன், இயேசு இறைவனாகவும் உள்ளார், அதே நேரத்தில் மனிதனாக வந்தபடியால், மனிதனாகவும் உள்ளார்.  அவர் பேசியது எல்லாம், மனிதன் பேசுவது போலத்தான் உள்ளது என்றுச் சொல்பவர்கள் தெரிந்துக்கொண்டே பொய் சொல்கிறார்கள் என்று அர்த்தம்.  சுவிசேஷ நூல்களில் "இயேசு பசியாக இருந்தார், சோர்வாக இருந்தார்" என்று கூறியிருப்பதினால் அவர் மனிதன் தான் என்று வாதிக்கும் இஸ்லாமியர்கள், நான் மேலே கூறிய விவரங்களையும் இயேசு கூறியுள்ளாரே, ஒரு மனிதன் இவைகளை கூறுவது எப்படி சாத்தியமாகும் என்பதை விளக்கவேண்டும். வெறும் ஒரு சில வசனங்களை மட்டுமே மேற்கோள் காட்டி இதர வசனங்களை மறுப்பது எப்படி சரியான ஆய்வாகும்.

இயேசுவின் தெய்வீகத்தன்மையை விளக்கும் இதர விவரங்களை உனக்கு நான் அடுத்த கடிதத்தில் எழுதுகிறேன்.

உனக்கு சமாதானம் உண்டாவதாக.

இப்படிக்கு, உன் சகோதரன்,
தமிழ் கிறிஸ்தவன்.



கருத்துகள் இல்லை: