ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

தலாக் 7 – நபிவழி: பத்து மனைவிகளில் ஆறு மனைவிகளை விலக்கவேண்டும் – அவர்கள் யார்?

தலாக் பற்றிய முந்தைய கட்டுரைகளை இங்கு சொடுக்கி படிக்கவும்.

இஸ்லாமின் மூல நூல்களில் 'பெண்களைப் பற்றியும்,அவர்களுக்கு இழைக்கப்பட்ட தலாக் கொடுமைகள் பற்றியும் ஆய்வு செய்துக்கொண்டு இருக்கிறோம்'. இக்கட்டுரையில், முஹம்மதுவிடம் 'தலாக் பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டபோது, அவர் என்ன பதில் கொடுத்தார்' என்பதைக் காண்போம்.

1) ஒரு மனிதனுக்கு நான்கிற்கும் அதிகமான மனைவிகள் இருந்தால் அவன் என்ன செய்யவேண்டும்?

கைலன் என்பவர் புதிதாக இஸ்லாமை தன் மார்க்கமாக ஏற்றுக்கொள்கிறார். அவருக்கு ஏற்கனவே பத்து மனைவிகள் இருந்தார்கள். இதே போல, 'ஹரித்' என்பவருக்கும் எட்டு மனைவிகள் இருக்கிறார்கள். ஆனால், இஸ்லாமின் படி அதிகபட்சமாக நான்கு மனைவிகளைத் தான் ஒரு முஸ்லிம் திருமணம் செய்யவேண்டும். இப்போது இவர்களின் நிலை என்ன? இவர்களுக்கு மனைவிகளாக இருப்பவர்களின் நிலை என்ன?

முஹம்மது என்ன பதில் சொல்லியுள்ளார் என்பதை, திர்மிதி மற்றும் சுனன் அபூ தாவுத் ஹதீஸ் தொகுப்புக்களில் பதிவு செய்யப்பட்டவைகளை நாம் முதலாவது படித்து, அதன் பிறகு முஹம்மதுவின் பதிலை ஆய்வு செய்வோம்.

அப்துல்லாஹ் இப்னு உமர் அறிவித்ததாவது:

கைலன் இப்னு ஸலமா அத்தகஃபி என்பவர் இஸ்லாமை ஏற்றுக்கொண்டார். இஸ்லாமை தழுவுவதற்கு முன்பாக அவருக்கு 10 மனைவிகள் இருந்தார்கள். அவரிடம் இறைத்தூதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) 'நான்கு மனைவிகளை வைத்துக்கொண்டு, மீதியுள்ளவர்களை விலக்கிவிடு (விவாகரத்து கொடுத்துவிடு)' என்று கூறினார். (நூல்: திர்மிதி, ஆங்கில தொகுப்பு எண் 945)

அல்ஹரித் இப்னு கஸ் அல்-அஸாதி அறிவித்ததாவது:

எனக்கு எட்டு மனைவிகள் இருந்தபோது நான் இஸ்லாமை தழுவினேன். எனவே நான் இறைத்தூதருக்கு (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) இதைப் பற்றிச் சொன்னேன். இறைத்தூதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) "அவர்களில் நான்கு பேரை மட்டும் வைத்துக்கொள் என்று" கூறினார்கள். (நூல்: சுனன் அபூ தாவுத், புத்தகம் 12, ஆங்கில தொகுப்பு எண் 2233) . 

Narrated Abdullah ibn Umar

Ghaylan ibn Salamah ath-Thaqafi accepted Islam and that he had ten wives in the pre-Islamic period who accepted Islam along with him; so the Prophet (peace be upon him) told him to keep four and separate from the rest of them. Ahmad, Tirmidhi and Ibn Majah transmitted it. (Al-Tirmidhi, Number 945;)

Narrated Al-Harith ibn Qays al-Asadi:

I embraced Islam while I had eight wives. So I mentioned it to the Prophet (peace_be_upon_him). The Prophet (peace_be_upon_him) said: Select four of them. (Sunan Abu Dawud, Book 12, Number 2233)

2) இஸ்லாமும் நான்கு மனைவிகளும்

ஒரு முஸ்லிம் அதிகபட்சமாக நான்கு மனைவிகளை திருமணம் செய்துக்கொள்ளலாம் என்று குர்-ஆனில் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். ஆனால், இந்த கட்டளை முஹம்மதுவிற்கு இல்லை. முஹம்மது எத்தனை மனைவிகளை வேண்டுமானாலும் திருமணம் செய்துக்கொள்ளலாம், இதற்கு சிறப்புச் சலுமை முஹம்மதுவிற்கு மட்டும் உண்டு. [இவைகள் தவிர முஹம்மதுவும் முஸ்லிம்களும் பல அடிமைப் பெண்களையும் வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்ளலாம், அதாவது திருமணம் செய்துக் கொள்ளாமலேயே அப்பெண்களோடு உடலுறவு கொள்ளாலாம்].

இரண்டு தமிழாக்கங்களில் குர்-ஆன் 4:3ஐ படிப்போம்.

4:3. அநாதைகளுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால், உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக் கொள்ளுங்கள். ஆனால் (அவர்களிடையே) நீதமாக நடந்திட முடியாது என்று நீங்கள் அஞ்சுவீர்களாயின் ஒரு பெண்ணை மட்டும் மணமுடித்துக் கொள்ளுங்கள்; அல்லது உங்கள் கைகள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களையே மனைவியாக்கிக் கொள்ளுங்கள். நீதி தவறாமலிருப்பதற்கு இதுவே மிக நெருக்கமானதாகும். (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்)

4:3. அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால்393 உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்!106(மனைவியரிடையே) நீதியாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடைமையாக உள்ள அடிமைப் பெண்களை107 (போதுமாக்கிக் கொள்ளுங்கள்!). இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி. (பிஜே தமிழாக்கம்).

மனைவிகளின் எண்ணிக்கைக்கு  குர்-ஆன் இப்படி ஒரு கட்டுப்பாடு விதித்து இருப்பதினால், முஸ்லிமாக மாறுகின்ற ஆண்கள், தங்களுக்கு ஏற்கனவே இருக்கும் நான்கிற்கும் அதிகமான மனைவிகளை விவாகரத்து செய்யவேண்டும். இது நியாயமான கூற்று தான், இதில் தவறு இல்லை. ஆனால், ஒரு முக்கியமான நியாயமான சிக்கல் முஹம்மதுவின் பதிலில் உள்ளது, அதனை காண்போம்.

3) எந்தெந்த மனைவிகளுக்கு விவாகரத்து கொடுக்கவேண்டும்?

ஒருவர் முஹம்மதுவிடம் வந்து எனக்கு 10 மனைவிகளுண்டு என்றுச் சொல்லும் போது, இஸ்லாமின் படி நான்கு மனைவிகளை வைத்துக்கொண்டு, மீதியுள்ளவர்களை விவாகரத்து செய்துவிடு என்று முஹம்மது கூறினார். ஆனால், 

எந்த நான்கு மனைவிகளை வைத்துக்கொள்ளவேண்டும்?

எந்த ஆறு மனைவிகளை விலக்கவேண்டும் 

என்று முஹம்மது கூறவில்லை.

இதில் என்ன பிரச்சனை இருக்கிறது? இந்த நிகழ்ச்சி எப்படி பெண்களுக்கு எதிரானதாக இருக்கும்? முஹம்மதுவின் பதில் குர்-ஆனின் படி உள்ளது தானே? போன்ற நியாயமான கேள்விகள் எழும்.

மேற்கண்ட பதிலில், முஹம்மது எந்த நான்கு மனைவிகளை வைத்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லவில்லை. அதாவது மேற்கண்ட உதாரணத்தை எடுத்துக்கொண்டால். ஒரு ஆண் இளவயதாக இருக்கும் போது ஒரு இளவயது மனைவியை முதலாவது திருமணம் செய்துக்கொள்வான். ஆண்டுகள் செல்லச்செல்ல, தனக்கு செல்வம் வந்துச் சேரச்சேர, அவனது சமுதாயத்தில் அனுமதி இருந்தால், இன்னும் அதிக பெண்களை திருமணம் செய்துக்கொண்டு தன் மோகத்தை தீர்த்துக்கொள்ள முயலுவான். அதாவது, இரண்டாவது மனைவி, மூன்றாவது மனைவி என்று தொடர்ந்துக்கொண்டே செல்வான். 

இதே போலத்தான், மேற்கண்ட நபர் 10 மனைவிகளை திருமணம் செய்துள்ளான். இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், இந்த ஆண் திருமணம் செய்துக்கொண்ட அடுத்தடுத்த மனைவிகள் பெரும்பான்மையாக இளவயது மனைவிகளாகவே இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. 

அதாவது முதல் மனைவியை விட குறைந்த வயதுள்ளவள் தான் இரண்டாவது மனைவியாக வந்திருப்பாள். இரண்டாவதை விட, மூன்றாவது மனைவி கொஞ்சம் இளயவளாகத் தான் இருந்திருப்பாள். இப்படி பத்து மனைவிவரைக்கும் செல்லும் போது, இவனது கடைசி நான்கு மனைவிகள், இளவயதுள்ளவர்களாக இருந்திருப்பார்கள் என்று நாம் கருதலாம். மோகம் அதிகமாகி, பல மனைவிகளைத் திருமணம் செய்பவன், இளவயது பெண்களை விட்டுவிட்டு, வயதான பெண்களை அடுத்தடுத்த மனைவிகளாக  திருமணம் செய்யமாட்டான் என்பது நமக்கு தெரிந்தது தான். ஒருவேளை அதிகமாக அழகியாக இருந்தால், வயதை கொஞ்சம் தள்ளிவைப்பான்.

ஆக, பத்து மனைவிகளை உடைய இந்த மனிதனின் நிகழ்ச்சிக்கு வரும் போது, இவனது முதலாவது மனைவி வயது சென்றவளாக இருப்பாள், இவனின் 10வது மனைவி இளவயதுள்ளவளாக இருப்பாள். 

இந்த நேரத்தில், முஹம்மது உண்மையான இறைத்தூதராக இருந்திருந்தால் என்ன பதில் சொல்லியிருக்கவேண்டும்? பெண்களைப் பற்றி அல்லாஹ் அக்கரையுள்ளவராக இருந்திருந்தால், முஹம்மது என்ன பதில் சொல்லியிருக்கவேண்டும்?

"உன்னுடைய முதல் நான்கு மனைவிகளை வைத்துக்கொள், அதாவது முதலாவது, இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவதாக நீ திருமணம் செய்த மனைவிகளை வைத்துக்கொண்டு, ஐந்திலிருந்து பத்துவரை திருமணம் செய்த பெண்களை விலக்கிவிடு." என்று சொல்லியிருக்கவேண்டும்.

ஆனால், முஹம்மது என்ன பதில் சொன்னார்? ஏதாவது நான்கு மனைவிகளை வைத்துக்கொண்டு, மீதமுள்ளவர்களை விலக்கிவிடு என்று பதில் சொன்னார்.

இந்த பத்து மனைவிகளை உடைய மனிதன் அல்லது பெரும்பான்மையான ஆண்கள் இந்த நிலையில் என்ன செய்வார்கள்? தன் கண்களுக்கு அழகாகவும், இளமையாகவும் இருக்கும் மனைவிகள் நான்கு பேரை வைத்துக்கொண்டு, தான் முதன் முதலாவதாக திருமணம் செய்த பெண் வயது சென்றவளாக இருப்பதினால் அவளை நிச்சயம் தல்லிவிடுவான். ஆக, முஹம்மதுவின் பதில் 'உனக்கு விருப்பமான நான்கு மனைவிகளை வைத்துக்கொள்' என்பதாகும். இதன் விளைவு, அம்மனிதனின் முதல், இரண்டாவது, மூன்றாவது மனைவிகளை நிச்சயம் அம்மனிதன் விலக்கியிருப்பான், ஏனென்றால், மற்றவர்களோடு ஒப்பிடும் போது இவர்களுக்கு வயது அதிகமாக இருக்கும். 

முஹம்மது, 'முதல் நான்கு மனைவிகளை வைத்துக்கொண்டு, மீதமுள்ளவர்களை விலக்கிவிடு' என்று பதில் சொல்லியிருந்தால், உண்மையாகவே, பெண்களைப் பற்றி இஸ்லாம் அக்கரைக்கொள்கிறது என்றுச் சொல்லலாம். ஆனால், ஆண்களின் விருப்பத்திற்கு ஏற்றது போல முஹம்மது பதில் சொல்லியுள்ளார், இது பெண்களுக்கு விளைந்த கொடூரமாகும். 

4) சிறந்த நற்குணச்சீலர் முஹம்மது என்ன செய்தார்?

முஸ்லிம்களில் சிலர் "இப்படியெல்லாம் நடக்காது, அந்த 10 மனைவிகளை உடையவன், தன் மூத்த மனைவிகளுக்கு அநியாயம் செய்யமாட்டான்" என்று சொல்லக்கூடும்.  ஆனால், இவர்கள் கவனிக்க தவறுவது என்னவென்றால், தங்கள் இறைத்தூதரே இப்படித்தான் செய்தார். அதாவது தனக்கு இளவயது மனைவிகள் தன் அந்தப்புறத்தில் சேரச்சேர தன் மூத்த மனைவிக்கு விவாகரத்து கூறினார். இதைப் பற்றி அறிய கீழ்கண்ட கட்டுரையை படிக்கவும்:

உலகத்துக்கே வழிகாட்டி, சிறந்த நற்குணம் உடையவர் என்று கருதப்படுபவராகிய முஹம்மதுவே தன் வயதான மனைவிக்கு தலாக் கொடுப்பாரானால், இந்த 10 மனைவிகளைவுடைய இந்த மனிதன் எப்படி நடந்துக்கொள்வான் என்பதை அறிந்துக்கொள்ளலாம்.

முடிவுரை:

இந்த பத்து மனைவிகளை உடைய மனிதனின் நிகழ்ச்சியில், ஆறு பெண்களுக்கு நிச்சயம் அநியாயம் நடக்கும். அவர்கள் கடைசி ஆறு பேராகவும் இருக்கலாம் (இதற்கு சாத்தியமில்லை), அல்லது அம்மனிதன் விலக்கிவிடும் யாராவது இருக்கலாம். ஒரு மதத்தை தழுவும் போது, அது சொல்லும் படி நடந்துக்கொள்வது சரியானது தான், ஒரு முஸ்லிம் இதர மனைவிகளை விலக்கிவிட்டு, குர்-ஆன் சொல்வது படி, நான்கு மனைவிகளை வைத்துக்கொள்வதுதான் சரி. இந்த சூழலில் கணவனோடு கடைசி வரை இருக்கும் வாய்ப்பு முதல் நான்கு மனைவிகளுக்கு கொடுக்கவேண்டும். இளவயதை கணக்கில்கொண்டு, அழகை கணக்கில் கொண்டு மனைவிகளை தெரிவு செய்யும் அதிகாரத்தை ஆண்களுக்கு முஹம்மது கொடுத்தது கொடுமையாகும். பெண்கள் பற்றி முஹம்மதுவோ, இஸ்லாமோ அக்கரையற்று இருக்கிறது என்பது இதன் மூலம் விளங்குகிறது. இதையே முஹம்மதுவும் தன் வாழ்வில் செய்துக்காட்டினார். ஸவ்தா என்ற தன் மனைவிக்கு வயது கூடிவிட்டது, அவருக்கு அழகில்லை, பருமனாக இருக்கிறார் என்பதால், அவரை விவாகரத்து செய்ய விரும்பினார். நீங்கள் என்னிடம் செலவிடும் நாளை நான் விட்டுக்கொடுக்கிறேன், நீங்கள் உங்கள் இளவயது சிறுமி மனைவியுடன் செலவிடுங்கள் என்றுச் சொல்லி, அவர் தன் உரிமையை விட்டுக்கொடுத்தார், இதற்கு குர்-ஆனின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

நான் இத்தொடர் கட்டுரைகளில் மேற்கோள் காட்டும் விவரங்களை வாசகர்கள் சுயமாக குர்-ஆனிலும், ஹதீஸ்களிலும், முஸ்லிம்களின் விளக்கவுரைகளிலும் சரி பார்த்துக்கொள்ளலாம். இஸ்லாம் பற்றிய அவதூறுகளை பரப்புவது என் நோக்கமல்ல, தற்கால தலாக் பற்றிய பின்னணியை புரிந்துக்கொள்வது, இந்தியாவில் நமக்கு மிகவும் முக்கியமானதாகும். முஹம்மதுவை முதலாவது அறிந்துக்கொள்ளாமல், முஸ்லிம்களை அறிந்துக்கொள்ள முயலுவது வீணான முயற்சியாகும். அன்று முஹம்மது காட்டிய வழியில் தான் முஸ்லிம்கள் இன்று நடக்கிறார்கள். எனவே இவர்களின் மூலங்களை வாசகர்கள் ஆய்வு செய்யவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

முஸ்லிம் பெண்கள் தானே அவதிப்படுகிறார்கள்! நமக்கு என்ன? என்று நாம் நினைக்கக்கூடாது, இது மனிதாபமற்ற செயலாகும். 

தலாக் 6 – நபிவழி: மாமனாருக்கு விருப்பமில்லையா! மருமகளை தலாக் கொடுத்துவிடு

தலாக் பற்றிய முந்தைய கட்டுரைகளை இங்கு சொடுக்கி படிக்கவும்.

இந்த 21ம் நூற்றாண்டு "முஹம்மதுக்கள்" எப்படி தலாக்கை புரிந்துக் கொண்டுள்ளார்கள் என்பதை அறிவதற்கு முன்பாக, ஏழாம் நூற்றாண்டின் "முஹம்மது" தலாக் பற்றி என்ன சொல்லியுள்ளார் என்பதை புரிந்துக்கொள்வது முக்கியமானதாகும். இக்காலத்தின் முஸ்லிம்கள் பெண்களை எப்படி கௌரவிக்கிறார்கள் என்பதை புரிந்துக்கொள்ள அக்காலத்தின் முஹம்மது எப்படி கௌரவித்தார் என்பதை புரிந்துக் கொள்ளவேண்டும். 

ஒரு சமுதாயம் முழுவதும் "பெண்களை ஒரு உயிரற்ற பொருளாக" மதித்துள்ளது என்பதை அறியும் போது மனதுக்கு துக்கமாக உள்ளது. இதோ, இங்கு இன்னொரு உதாரணத்தைக் காண்போம், மனதை கல்லாக்கிக்கொண்டு படியுங்கள்.

1) மருமகளுக்கு தலாக் கொடுக்க கட்டாயப்படுத்திய மாமனார் (உமர்):

அப்துல்லாஹ் இப்னு உமர் அறிவித்ததாவது: 

என் மனைவியை நான் அதிகமாக நேசித்தேன், ஆனால் என் தந்தை அவளை வெறுத்தார். அவளுக்கு விவாகரத்து கொடுத்துவிடு என்று என்னிடம் கூறினார், நான் 'முடியாது' என்று மறுப்பு கூறினேன். அவர் இறைத்தூதர் முஹம்மது(அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) அவர்களிடம் சென்று இதைப் பற்றி தெரிவித்தார். இறைத்தூதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) "அவளை விகாரத்து கொடுத்துவிடு" என்று கூறினார். (ஆதார நூல்: சுனன் அபூ தாவுத், புத்தகம் 41, ஆங்கில  எண் 5119)

Narrated Abdullah ibn Umar:

A woman was my wife AND I LOVED HER, but Umar hated her. He said to me: Divorce her, but I refused. Umar then went to the Prophet (peace_be_upon_him) and mentioned that to him. The Prophet (peace_be_upon_him) said: Divorce her. (Sunan Abu Dawud, Book 41, Number 5119)

2) முஹம்மது, உமர் மற்றும் அப்துல்லாஹ் இப்னு உமர் – யார் இவர்கள்?

மேற்கண்ட நிகழ்ச்சியில் மூன்று நபர்கள் வருகிறார்கள். 

அ) முஹம்மது – இவர் இஸ்லாமிய இறைத்தூதர், உலக மக்களில் சிறந்தவர், நற்குணச்சீலர் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.

ஆ) உமர் – இவர் முஹம்மதுவின் தோழர் (முக்கியமான சீடர்), மேலும் முஹம்மதுவிற்கு அடுத்ததாக இரண்டாவது தலைவராக (கலிஃபா) இருந்து இஸ்லாமிய ஆட்சி புரிந்தவர். உலக முஸ்லிம்கள் முஹம்மதுவிற்கு அடுத்தபடியாக, மதிப்பது அவரது தோழர்களைத் தான். இவர்களில் அபூ பக்கருக்கு அடுத்தபடியாக முக்கியமானவர் உமர் ஆவார். 

இ) அப்துல்லாஹ் இப்னு உமர் – இவர் மேற்சொன்ன உமரின் மகன் ஆவார்.

உமரும், அவரது மகனும் முஹம்மதுவை கண்டவர்கள், அவரோடு பேசியவர்கள், அவரது அறிவுரைகளின் படி நடந்தவர்கள்.

3) மாமனாருக்கு யார் இந்த அதிகாரத்தைக் கொடுத்தார்கள்?

அப்துல்லாஹ் தன் மனைவியை அதிகமாக நேசித்தார். ஆனால், உமருக்கு மருமகளை பிடிக்கவில்லை. அவளை விவாகரத்து செய்துவிடு என்று சொன்னாலும் மகன் கேட்கவில்லை. நேரடியாக முஹம்மதுவிடம் முறையிட்டார். 

முஹம்மது யார்? அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறைத்தூதர், உலகத்துகே வழிகாட்ட வந்தவர், மேலும், உமரின் மகள் ஹஃப்ஸாவை திருமணம் புரிந்தவர். சுருக்கமாகச் சொல்வதானால், உமரின் மருமகன் முஹம்மது ஆவார். 

அந்த காலத்தில், முஹம்மதுவின் முடிவிற்கு எதிராக யாரும் பேசமுடியாது. முஹம்மது ஒரு முடிவை எடுத்தால், அல்லாஹ்வும் அதே முடிவை எடுத்துள்ளார் என்று அர்த்தம். 

முஹம்மது என்ன செய்திருக்கவேண்டும்? 

"உமரே! உம் மருமகளை விவாகரத்து செய்யச் சொல்ல உமக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? உம்முடைய மருமகளிடம் பிழைகள் இருந்தால், அவளுக்கு அறிவுரை கூறவேண்டியது கணவனின் வேலை. நீர் ஏன் இப்படி அவசரப்படுகின்றீர்?" என்று கேள்வி கேட்டு இருந்திருக்கவேண்டும். ஆனால், முஹம்மது தன் மாமனாரின் பேச்சைக் கேட்டு, "அவளை விவாகரத்துச் செய்" என்று அப்துல்லாஹ்விற்கு கட்டளையிட்டுள்ளார். இது கண்டிக்கப்படவேண்டிய செயலாகும். 

4) இது பெண் இனத்துக்கு எதிரான சதிச்செயல் அல்லவா? 

முஹம்மதுவிற்கும் சரி, உமருக்கும் சரி, ஒரு பெண்ணுக்கு தலாக் வாங்கிக்கொடுக்க அதிகாரம் கொடுத்தவர் யார்?

நீதியாக தீர்ப்புச் சொல்லவேண்டிய முஹம்மது, எடுத்தேன் கழித்தேன் என்று இப்படி தீர்ப்புச்சொல்வது எப்படி சரியானதாக இருக்கும்?

தற்கால முஸ்லிம் அறிஞர்களிடம் கேட்டுப்பாருங்கள்? ஒரு பெண்ணுக்கு தலாக் கொடுக்க "பல நிபந்தனைகள் உள்ளன, பல வழிமுறைகள் உள்ளன" என்று சொல்வார்கள். ஆனால், அவர்கள் பின்பற்றும் முஹம்மதுவோ, அவரது தோழர் உமரோ, கீழ்தரமாக நடந்துக் கொண்டுள்ளார்கள்.

இது பெண்களுக்கு எதிராக நடந்துக்கொள்வது ஆகாதா?

முஹம்மது உமரிடம் மற்றும் அப்துல்லாஹ்விடம், பலவாறு விசாரித்து இருந்திருக்கலாம் அல்லவா? அவளிடம் திருந்தமுடியாத அளவிற்கு பிழைகள் இருந்தால், அவளின் பெற்றோர்களிடம் பேசி சமரசம் செய்திருக்கவேண்டும். கடைசியாகத் தான் தலாக் பற்றி சிந்தித்து இருக்கவேண்டும்.

குறைந்த பட்சம், தலாக் பற்றி அல்லாஹ் குர்-ஆனில் சொன்னவைகளின் படி நடந்துக்கொள்ள முஹம்மது முயற்சி எடுக்கவில்லையே ஏன்?

உமரின் மகனாகிய அப்துல்லாஹ் மிகவும் நல்லவர் என்று நான் சொல்லவில்லை, அதே போல அவரது மனைவியிடம் தவறுகள் இல்லையென்றும் நான் சொல்லவரவில்லை. இங்கு கேட்கப்படும் கேள்வி என்னவென்றால், 'முஸ்லிம்களின் இறைத்தூதர் முஹம்மது நடந்துக்கொண்டது சரியா? தவறா?' என்பது தான். இப்படிப்பட்ட முடிவுகளை கொண்டுள்ள இஸ்லாமிய சமுதாயத்தில் பெண்களுக்கு என்ன மரியாதை இருக்கும்? 

5) இன்று இதே போல மாமனார்கள் நடந்துக்கொண்டால். . .?

இன்று முஸ்லிம்களின் குடும்பங்களில் இப்படி நடந்தால்?

அன்பு முஸ்லிம் நண்பனே! உன் தகப்பன் உன்னிடம் வந்து, 'உன் மனைவியை எனக்கு பிடிக்கவில்லை, அவளை விவாகரத்து செய்துவிடு' என்றுச் சொன்னால் என்ன செய்வீர்கள்?

ஏன் ஏதற்கு? என்று காரணங்கள் கேட்பீர்கள் அல்லவா?

பெண்ணின் குடும்பத்தார்களும் அதன் பின்னணியை கேட்பார்கள் அல்லவா? மாமனாரின் பேச்சைக் கேட்டு, எந்த ஒரு தவறும் செய்யாத பெண்ணுக்கு தலாக் சொன்னால், அந்த மாமனாரின், மாப்பிள்ளையின் தோலை உரித்துவிடுவார்கள் அல்லவா?  நாங்கள் எங்கள் மகளை உனக்கு திருமணம் செய்துக்கொடுத்தது, நல்ல வாழ்க்கை வாழுவதற்கு, இப்படி மாமனார் சொன்னார், வழியில் வந்தவன் போனவன் சொன்னான் என்றுச் சொல்லி விவாகரத்து கொடுப்பதற்கு அல்ல என்றுச் சொல்லி சரியான பாடத்தை கற்றுக்கொடுப்பார்கள் பெண் வீட்டார்.

6) முஹம்மதுவின் மற்றும் உமரின் நிழல் கூட, நம் முஸ்லிம்கள் மீது படக்கூடாது

முஹம்மதுவின் மனைவிமார்கள் குடும்ப செலவிற்கு கொஞ்சம் பணத்தை உயர்த்துங்கள் என்று கேட்டதால், தலாக் பற்றிய மிரட்டலை அல்லாஹ் வஹியாக இறக்கினான். இது முதல் கொடுமை.

ஒரு இரகசியத்தை கட்டிக்காக்கவில்லை என்பதால், அல்லாஹ் முஸ்லிம்களின் அன்னைகளை மிரட்டுகின்றார். இது இரண்டாம் கொடுமை.

இது போதாது என்றுச் சொல்லி, முஹம்மது தன் மனைவி கவர்ச்சியாக இல்லை என்பதாலும், பருமனாகவும் இருப்பதாகவும் சொல்லி, விவாகரத்து கொடுக்க முயன்றார். இது மூன்றாவது கொடுமை.

இக்கட்டுரையில் பார்த்தபடி, முஹம்மதுவும், உமரும், இன்னொருவரின் குடும்பத்தை பிரித்து புன்னியத்தைக் கட்டிக்கொண்டார்கள், அப்பெண்ணின் வயிற்றெறிச்சலுக்கு காரணமாக இருந்தார்கள்.

முஹம்மதுவின் போதனைகளை பின்பற்றும் முஸ்லிம் சமுதாயங்களில் பெண்களின் நிலை இவ்வளவு தானா!? அவர்களுக்காக குரல் கொடுக்க யாருமில்லையா? 

வேலியே பயிரை மேய்ந்தால், யாரிடம் சென்று முறையிடமுடியும்? கணவனாகவும், தந்தையாகவும், அண்ணனாகவும், தம்பியாகவும் இருக்கும் முஸ்லிம் ஆண்களே தங்கள் குடும்ப பெண்களை இப்படி கீழ்தரமாக மதித்தால், யார் அப்பெண்களுக்கு ஆதரவாக போராடுவார்கள்?

முடிவுரை: இந்த 21ம் நூற்றாண்டில் முஸ்லிம் சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை புரிந்துக்கொள்ள, முஹம்மதுவின் வாழ்க்கையை நாம் அறியவேண்டும். முஸ்லிம்களின் அன்னையர்கள் பட்ட பாடுகளை ஆய்வு செய்யவேண்டும். 

முஸ்லிம் ஆண்களும், முஹம்மதுவும் மற்றும் அல்லாஹ்வும் பெண்களுக்கு எதிராக சதி செய்து, அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக, உயிரற்ற பொருட்களைப் போல நடத்தினால், யார் அவர்களை விடுதலையாக்கமுடியும்?

சனி, 25 பிப்ரவரி, 2017

தலாக் 5 – நபிவழி: மனைவிக்கு வயதாகிவிட்டால் விவாகரத்து செய்யலாம்

தலாக் பற்றிய தொடர் கட்டுரைகளை படிக்க இங்கு சொடுக்கவும்.

முஹம்மதுவின் மனைவிமார்களை அல்லாஹ் இரண்டு முறை தலாக் பற்றிச் சொல்லி மிரட்டினார் என்பதை முந்தைய கட்டுரைகளில் குர்-ஆனின் உதவிக்கொண்டு விளக்கப்பட்டது. இக்கட்டுரையில் ஒரு அற்பமான காரணத்திற்காக முஹம்மது தம் மனைவிக்கு தலாக் கொடுக்க முயன்றார் என்ற விவரத்தை ஆய்வு செய்வோம்.

1) முஹம்மது - உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவர்

குர்-ஆனின் பார்வையில், முஹம்மது உயர்ந்த நற்குணமுடையவர், சிறந்த முன்மாதிரி ஆவார். இதனை குர்-ஆன் 68:4 மற்றும் 33:21 தெளிவாகச் சொல்கிறது.

குர்-ஆன்  68:4. மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர். 

குர்-ஆன்  33:21. அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்)

இதன் அர்த்தமென்னவென்றால், முஹம்மதுவின் அனைத்துச் செயல்களும் சிறந்த செயல்கள் ஆகும், நாம் முகம் சுளித்துக்கொள்ளும் அளவிற்கு அவரது செயல்கள் இருக்காது என்பதாகும். அவர் செய்தவைகள் அனைத்தும் 7ம் நூற்றாண்டில் மட்டுமல்ல, இந்த 21ம் நூற்றாண்டிலும் நல்லச் செயல்கள் தான். உலக முடிவு வரையிலும் அவர் தான் சிறந்தவர். உலகில் இறைவனுக்கு அடுத்தபடியாக நல்ல மனிதர் ஒருவர் இருப்பாரானால் அவர் முஹம்மது ஆவார் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள், இன்னும் சிலர் அவர் பாவமே செய்யவில்லை என்றும் சொல்வார்கள். எனவே எல்லா முஸ்லிம்களும்  அவரை அணுவணுவாக பின்பற்ற முயலுகின்றார்கள். முஸ்லிம்கள் நம்புவது போல, முஹம்மது உண்மையாகவே நல்லவராக இருந்தால் அவரைப் பின்பற்றுவதில் என்ன தவறு இருக்கிறது?

2) மனைவிக்கு வயதானால், அவளை விவாகரத்து செய்யலாமா?

இந்த கேள்வியை யாராவது நம்மிடம் கேட்டால், நம்முடைய பதில் என்னவாக இருக்கும்? கேள்வி கேட்டவரை ஒரு மாதிரியாக பார்ப்போம். இப்படியும் கேள்வி கேட்பார்களா? என்று ஆச்சரியப்படுவோம். ஆனால், இஸ்லாமியர்கள் "நற்குணத்தின் சிகரம்" என்று போற்றுகின்ற முஹம்மது, தம்முடைய இரண்டாவது மனைவிக்கு (ஸவ்தா) வயது கூடிவிட்டது என்பதால், அவரை விவாகரத்து செய்ய விரும்பினார் என்ற விவரம் எத்தனைப் பேருக்குத் தெரியும்? முஹம்மது தம்மை ஒதுக்கிவிட்டால், தாம் தனிமரமாக ஆகிவிடுவோமே! ஏற்கனவே முந்தையை கணவர் இறந்ததால் விதவை என்ற பட்டம் கிடைத்தது, இப்போது விவாகரத்து பெற்றவள் என்ற பட்டம் வேண்டுமா? இதற்கு பதிலாக, தன்னுடைய முக்கியமான ஒரு உரிமையை விட்டுக்கொடுத்துவிட்டு, முஹம்மதுவின் மனைவியாகவே மரிக்கலாம் என்று விரும்பினார் அந்த மனைவி. எந்த உரிமையை ஸவ்தா விட்டுக்கொடுத்தார்? அது என்ன உரிமை? ஆம், அதே தான், கணவருக்கும் மனைவிக்கும் இடையே இருக்கும் அந்த உன்னத உறவை பேணும் அந்த உரிமை. அதாவது முஹம்மது தன்னிடம் செலவிடும் நாளை அவருக்கு மிகவும் பிரியமான மனைவியாகிய சிறுமி ஆயிஷாவிற்கு விட்டுக்கொடுத்துவிட்டார். இது ஒரு "நல்ல முடிவு" என்று முஹம்மதுவும் ஏற்றுக்கொண்டார். கிழவியிடம் ஒரு நாளை செலவிடுவதில் என்ன இன்பம் இருக்கும்? குமரியிடம் இரண்டு நாட்கள் செலவிடுவது அல்லவா இன்பம்! கரும்பு திண்ணக்கூலி வேண்டுமா என்ன? ஸவ்தாவின் இந்த முடிவை ஆதரித்து குர்-ஆன் 4:128ம் இறங்கிவிட்டது.

இதைப் பற்றி 2010ம் ஆண்டு  மார்ச் மாதம் ஒரு கட்டுரையை தமிழில் பதித்தேன், அதனை கீழேயுள்ள தொடுப்பில் படித்துவிட்டு, இக்கட்டுரையின் மீதமுள்ள விவரங்களைப் படிக்கவும். இவ்விவரங்களுக்கு ஆதாரமாக குர்-ஆன், ஸஹீஹ் ஹதீஸ்கள் மற்றும் இஸ்லாமிய அறிஞர்களின் விரிவுரைகளை மேற்கோள்களாக காட்டப்பட்டுள்ளது.

மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது (ஸவ்தா பின்ட் ஜமா) - ஈஸா குர்-ஆன் & ஆன்சரிங் இஸ்லாம் தொடுப்புக்கள்

3) விவாகரத்துக்கு வயது ஒரு காரணமா?

மேற்கண்ட கட்டுரையில் கொடுக்கப்பட்ட விவரங்களை படிப்பவர்கள் முகத்தை நிச்சயமாக சுளிப்பார்கள், அப்படி அவர்கள் சுளிக்கவில்லையென்றால் அவர்கள் முஸ்லிம்களாக இருப்பார்கள். ஒரு மகன் தன்  தாய்க்கு வயது கூடிவிட்டது என்பதால் தன் தந்தை அவரை விவாகரத்து செய்தால், 'சீ, இவனெல்லாம் ஒரு மனிதனா? இப்படிப்பட்டவனுக்கு மகனாக பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன்' என்பான்.

முஹம்மதுவின் முதல் மனைவி கதிஜா அவர்கள் மரித்தபோது, முஹம்மதுவிற்கு இரண்டாவது மனைவியாக மாறி, அவரையும், அவரது பிள்ளைகளையும் கவனித்துகொண்டு வாழ்ந்த அந்த பெண்மணிக்கு வயது கூடிவிட்டது என்றுச் சொல்லி, விவாகரத்து செய்ய முயன்றது மன்னிக்கமுடியாத குற்றமாகும். புதிய மனைவிகள் வந்தவுடன், பழைய மனைவியை ஒதுக்க முயலுவது ஒரு நல்ல முன்மாதிரியா?

பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற தமிழர்களின் முதுமொழியை தன் குடும்பத்தில் நடைமுறைப்படுத்த முயன்றார் முஹம்மது. முஸ்லிம் ஆண்கள் இப்படிப்பட்டவரை அணுவணுவாக பின்பற்றுவது முஸ்லிம் பெண்களுக்கு ஆபதல்லவா? (நல்லவேளை, அனேக முஸ்லிம்களுக்கு முஹம்மது பற்றிய அனைத்து விவரங்களும் தெரியாது).

விவாகரத்துக்கு பலமான காரணங்கள் இருக்கவேண்டும். அந்த காரணங்களையும் பெரியோர்கள் முன்பு கொண்டுச் சென்று, சமரசம் செய்வதற்கே முயலவேண்டும். 

4) முஸ்லிமே! இன்று உன் தாய்க்கு அழகில்லை என்பதால் உன் தந்தை தலாக் சொன்னால். . .

அன்பான தமிழ் முஸ்லிம் நண்பனே! இன்று உன் தாயை, உன் தகப்பன் தலாக் செய்ய முயன்றால் என்ன செய்வாய்? உன் தாய்க்கு வயதாகிவிட்டது, பருமனாக இருக்கிறார், அவர் இப்போது அழகாக இல்லை, முகத்தில் சுருக்கம் விழுந்துவிட்டது போன்ற காரணங்களை உன் தகப்பன் சொன்னால் உனக்கு கோபம் வருமா? அல்லது எங்கள் நபியைப் போல என் தகப்பனார் நடந்துக்கொள்கிறார் என்ற பெருமிதம் வருமா? இன்னும் ஒரு படி மேலே சென்று, உன் தகப்பனிடமிருந்து நீயே உன் தாய்க்கு விவாகரத்தை வாங்கிக்கொடுத்து, உன் தாயை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிடுவாயா? மேலும், உன் தகப்பனின் கண்களுக்கு அழகாகவும், இளமையாகவும் தென்படுகின்ற, மெலிந்த உடலமைப்பு கொண்ட, உன் தகப்பனின் காமத்துக்கு ஈடுகொடுக்கின்ற அளவிற்கு உள்ள பெண்களை உன் தகப்பனுக்கு திருமணம் செய்து வைப்பாயா? 

உன்னை அவமதிக்கவேண்டுமென்று இக்கேள்விகளைக் கேட்கவில்லை, என் வயிறு எறிவதினால் கேட்கிறேன், இஸ்லாமின் பெண்களின் நிலையைக் கண்டு துக்கப்பட்டுக்கேட்கிறேன். 

ஒரு வேளை, என் தகப்பன் இப்படி கீழ்தரமாக நடந்துக்கொள்ளமாட்டார் என்றுச் சொல்வாயானால், "மனைவிக்கு வயதானதால் தலாக் கொடுக்க விரும்பியவர் (முஹம்மது) கீழ்தரமாக நடந்துக்கொண்டார்" என்று ஒப்புக்கொள்வாயா? 

புதிய கார் மாடல் வந்தவுடன், பணக்காரர்கள் பழைய காரை விற்றுவிட்டு, புதிய காரை வாங்குவதைப் போல பெண்களை நடத்தமுடியாது, அப்படி நடத்துபவர் மனித சமுதாயத்தில் வாழ்வதற்கே தகுதியற்றவர். முஹம்மதுவைப் போல நம் முஸ்லிம்கள் நடக்காதபடியினால், வயதுமுதிர்ந்த நம் அன்னையர்கள் நம்மோடு வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள்.

5) ஸவ்தாவின் தலாக்கை ஆதரிக்கும் சில வாதங்கள்

முஸ்லிம்கள் எப்போதும் முஹம்மதுவை விட்டுக்கொடுக்கமாட்டார்கள்.  ஒரு நாயைப் பார்த்து இது மாடு என்று முஹம்மது சொல்லிவிட்டால், முஸ்லிம்கள் கண்மூடித்தனமாக அதனை ஆதரிப்பார்கள். "அது நாய் அல்ல, அது மாடு தான்" என்று நிருபிக்க பல வாதங்களை முன்வைப்பார்கள்.  இப்படிப்பட்ட முஸ்லிம்களின் சில வாதங்களை ஆய்வு செய்வோம். 

5.1 இவ்விஷயத்தில் முஹம்மதுவை ஆதரிக்காதவர்கள் முட்டாள்கள் – இப்னு அல்-அரபி & இப்னு அபி மாலிக்

முதுமையை காரணம் காட்டி விவாகரத்து கொடுப்பது தவறு என்று சொல்பவர்கள் "முட்டாள்கள்" என்று இஸ்லாமிய அறிஞர் இப்னு அல்-அரபி மேற்கோள் காட்டியுள்ளர்.

".. ஸவ்தா பின்ட் ஜமா வயது சென்றவராக மாறினபோது, அல்லாஹ்வின் தூதர் அவரை விவாகரத்து செய்ய விரும்பினார். இருந்தபோதிலும், ஸவ்தா முஹம்மதுவின் மனைவிமார்களில் ஒருவராக இருக்கவே விரும்பினார். ஆகையால், ஸவ்தா "என்னை விவாகரத்து செய்யவேண்டாம், என் நாள் ஆயிஷாவின் நாளாக இருக்க நான் விட்டுக்கொடுக்கிறேன்" என்றார். அதே போல, முஹம்மதுவும் அவரை விவாகரத்து செய்யவில்லை. ஆக, ஸவ்தா மரிக்கும் போது முஹம்மதுவின் மனைவிகளில் ஒருவராக‌மரித்தார்கள். இபின் அபி மாலிக் கூறும் போது: இந்த‌ வ‌ச‌ன‌ம் ஆயிஷாவிற்காக‌ இற‌க்க‌ப்ப‌ட்ட‌து, ஒரு ம‌னித‌ன் ஒரு இள‌ம் பெண்ணை திரும‌ண‌ம் செய்துக்கொண்டு, பிற‌கு அவ‌ளுக்கு வ‌ய‌து அதிகமான போது, அவளை விவாகரத்து செய்து அவளுக்கு பதிலாக வேறு ஒரு திருமணம் செய்துக்கொள்ளக்கூடாது என்றுச் சொல்லும் சில முட்டாள்களுக்கு இந்த வசனம் வெளிச்சம் தருகிறது. இப்படிப்பட்ட குழப்பத்திலிருந்து விடுதலையாக அல்லாஹ் இறக்கிய இவ்வசனத்திற்காக நான் அல்லாஹ்வை புகழுகிறேன். [1]

மேற்கண்ட சிந்தனை காட்டுமிராண்டிதனமான சிந்தனையாகும். ஒரு முஸ்லிம், ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு, அவளோடு வாழ்ந்துவிட்டு, அவளுக்கு வயதாகிவிட்டால், அவளின் அழகு குறைந்துவிட்டால், உடனே அவளை விவாகரத்து செய்துவிட்டு, இன்னொரு மனைவியை திருமணம் செய்துக்கொள்வது தவறு இல்லையாம்! இவர் மட்டும் "என்றும் பதினாறு" என்று இளமையாகவா இருப்பாரா? இவருக்கு முகத்தில் சுருக்கங்கள் வராதா? இப்படிப்பட்ட முஸ்லிம் அறிஞர்கள் இருந்தால், இஸ்லாமிய சமுதாயம் எப்படி உறுப்படும்? சிலருக்கு இன்னும் புரியவில்லை, இப்போது புரியவைக்கிறேன் : முஹம்மதுவிற்கு வயது கூடவில்லையா? இவர் மட்டும் என்றும் இளமையாகவே இருந்துவிட்டாரா? இவரது முகத்தில் சுருக்கங்கள் விழவில்லையா? அல்லது விழாதா? இன்னும் சில ஆண்டுகளில் இவரது பற்கள் விழுந்து இவரின் இளமை அழியாதா?

5.2 என்னே முஹம்மதுவின் இரக்க குணம்! இதர மனைவிகளோடு போட்டி போடமுடியாதபடியினால் தலாக் செய்தாராம்

இன்னொரு இஸ்லாமிய மேதாவி இப்படிச் சொல்கிறார்.

When she was older, the prophet was worried that Sawda might be upset about having to compete with so many younger wives, and offered to divorce her. She said that she would give her night to Aisha, of whom she was very fond, because she only wanted to be his wife on the Day of Rising. She lived on until the end of the time of Umar ibn al Khattab. She and Aisha always remained very close.

ஸவ்தாவிற்கு பிறகு, முஹம்மது ஆயிஷாவை (வயது 9) திருமணம் செய்தார், இன்னும் இதர பெண்களையும் திருமணம் செய்துக்கொண்டார். முஹம்மதுவின் மற்ற மனைவிகள் இளமையாக இருப்பதினால், இம்மனைவிக்கு கொஞ்சம் வயது அதிகமாக இருப்பதினால், "போட்டி அதிகமாக இருக்குமாம்". எனவே, இரக்க குணமுள்ள முஹம்மது, ஸவ்தாவின் நன்மையைக் கருதி "தலாக்" கொடுக்க விரும்பினாராம். 

மூளை எந்த அளவிற்கு துரு பிடித்து இருந்தால் இப்படியெல்லாம் முஸ்லிம்கள் சிந்திப்பார்கள் என்பதை கவனித்துப் பாருங்கள். மேற்கண்ட விதமாக எழுதியவருக்கு சில கேள்விகளை நாம் கேட்கவேண்டும்:

அ) அருமை முஸ்லிம் நண்பரே! மனைவிக்கு வயது கூடும் போது, கணவனுக்கு வயது கூடாதோ? ஸவ்தா அவர்களின் வயது கூடும் போது, முஹம்மதுவின் வயது அதே நிலையில் நின்றுவிட்டிருந்ததா? ஆண்களுக்கு வயது கூடாமல் இருப்பதற்கு ஏதாவது லேகியம் கிடைத்ததா அன்று?

ஆ) முஹம்மதுவின் மனைவிகள் மத்தியில் இடையில் உலக அழகிப்போட்டியா நடந்துக்கொண்டு இருந்தது? ஸவ்தா அவர்கள் மற்ற இளம் போட்டியாளர்களோடு போட்டிப்போட முடியாமல் போவதற்கு? என்ன கொடுமையடா இது!

இ) உண்மையாகவே முஹம்மதுவிற்கு இரக்க குணம் அதிகமாக இருந்திருந்தால், யாரிடம் குறையுள்ளதோ (முதுமை வந்துவிட்டதோ) அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஆதரித்து இருந்திருக்கவேண்டும். அவர் நபி தானே! மனைவிமார்களின் மத்தியிலே ஒரு நல்ல உறவை உண்டாக்கியிருந்திருக்கவேண்டும், அவரால் முடியவில்லையென்றால் அல்லாஹ்வை உதவிக்கு அழைத்து இருந்திருக்கலாம் அல்லவா? இரண்டும் செய்யாதவருக்கு எதற்கு இத்தனை மனைவிகள்? [வாசகர்கள் கவனிக்க: அல்லாஹ்வை உதவிக்கு அழைத்தால், அவர் தலாக் பற்றி மிரட்டுகின்றார் என்பது வேறு விஷயம். முந்தைய இரண்டு கட்டுரைகளை படிக்கவும், அல்லாஹ்வை உதவிக்கு அழைத்தால், பெண்களின் நிலை என்னவென்பது புரியும்.] தானே அனேக இளம் மனைவிகளை திருமணம் செய்துக்கொள்வது, அதன் பிறகு, மூத்த மனைவிகள் போட்டியில் ஜெயிக்கமாட்டார்கள் என்றுச் சொல்லி முஹம்மது மூத்த மனைவிகளை விவாகரத்து செய்ய முயலுவது நகைப்பிற்கு உரியது.

ஈ) ஒரு கணவனுக்கு மனைவி மீது அதிக அக்கரையிருந்தால், என்ன செய்வான்? அவளை விவாகரத்து செய்வானா? அல்லது இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுத்து, அவளுக்கு உண்டான வேதனையை நீக்கி ஆறுதல்படுத்துவானா? காஃபிர்களை மருத்துவ மனைகளில் சென்று நோட்டமிடுங்கள். தங்கள் வயது முதிர்ந்த மனைவிகளுக்கு சுகம் கிடைக்க, எப்படிப்பட்ட துன்பங்களை காஃபிர் ஆண்கள் திருப்தியாக சகித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை கவனித்துப் பார்த்து திருந்துங்கள். தன்னோடு பல ஆண்டுகள் வாழ்ந்த மனைவிக்கு முதுமை வந்து உடல்நலம் குறைந்துவிட்டது என்பதற்காக, தன் சொத்துக்கள் மற்றும் மீதியுள்ள வாழ்க்கை அனைத்தையும் அவள் ஒருத்திக்காக தாரவாத்து கொடுக்கும் காஃபிர் ஆண்களைப் பார்த்து பாடம் கற்கவேண்டும் முஸ்லிம்கள். இப்படிப்பட்டவர்கள் எங்கே! தன் மனைவிக்கு வயதானதால் விவாகரத்து செய்ய விரும்பிய முஹம்மது எங்கே! முடிவு வாசகர்களிடமுள்ளது. முஹம்மதுவா பின்பற்றத்தகுந்த முன்மாதிரி, வெட்கம்.

5.3 முஹம்மதுவை விட ஸவ்தாவிற்கு அதிக வயது இருக்கும்

இன்னும் சில முஸ்லிம் மேதாவிகள், "முஹம்மது ஸவ்தாவை விவாகரத்து செய்ய விரும்பியதற்கு காரணம், அவர் முஹம்மதுவை விட மூத்தவர்" என்பதால் என்று காரணங்களைக் சொல்கிறார்கள். இதுவும் வேடிக்கையான கூற்றாகும், இதைப் பற்றி முஹம்மதுவின் முதல் மனைவி கதிஜாவோடு ஒப்பிட்டு அடுத்த பாயிண்டில் எழுதியுள்ளேன், அதனை படிக்கவும். ஆனால், உண்மையில் ஸவ்தாவிற்கு முஹம்மதுவை விட குறைவான வயது இருக்கும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 

பி. ஜைனுல் ஆபிதீன் – குர்-ஆன் தமிழாக்கம் விளக்கம் 378

378. நபிகள் நாயகம் (ஸல்) பல திருமணம் செய்தது ஏன்?

இந்த விதவையைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டாவதாகத் திருமணம் செய்தார்கள். விதவை என்றால் இளம் வயது விதவையோ, நடுத்தர வயது விதவையோ அல்ல. மாறாக இல்லற வாழ்வுக்குரிய தகுதியையே இழக்கத் துவங்கிவிட்ட முதிய விதவையாகவே அவர்கள் இருந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸவ்தா (ரலி) அவர்களைத் திருமணம் செய்யும் போது ஸவ்தாவின் வயது ஐம்பத்தைந்து. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வயது ஐம்பது.

. . . 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இளம் பெண்ணைத் தேர்வு செய்வதற்கு அன்றைய சமூக அமைப்பில் தடை ஏதும் இருக்கவில்லை. கதீஜா (ரலி) அவர்களின் திரண்ட செல்வங்களுக்கு ஒரே வாரிசாக அவர்கள் இருந்ததால் பணத்தாசையைக் காட்டியாவது இளம் பெண்ணைத் தமக்குத் துணையாக ஆக்கியிருக்க முடியும். இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் இரண்டாவது மனைவியாக அவர்கள் தேர்ந்தெடுத்தது தம்மை விட ஐந்து வயது அதிகமான இல்வாழ்வுக்கான தகுதியை இழக்கும் நிலையில் இருந்த விதவையான ஸவ்தா (ரலி) அவர்களைத் தான். நிச்சயமாக காம உணர்வு இதற்குக் காரணமாக இருக்க முடியாது என்பது உறுதி.

. . .

இரண்டு மனைவியருடன் வாழ்ந்தார்கள் என்று கூறுவது கூட சரியாக இருக்காது. ஏனெனில் ஆயிஷாவுடன் மதீனா சென்ற பிறகு தான் வாழ்ந்தார்கள். மூதாட்டி ஸவ்தாவுடன் மட்டும் தான் இந்தக் கால கட்டத்தில் பெயரளவுக்கு வாழ்ந்தார்கள்.

அதாவது ஐம்பது வயது நிரம்பிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஐம்பத்தைந்து வயதுடைய முதிய விதவையான ஸவ்தாவுடனும், இல்வாழ்வுக்குரிய தகுதியைப் பெற்றிராத சிறுமி ஆயிஷாவுடனும் பெயரளவுக்கு இந்தக் காலகட்டத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். ஐம்பத்தி ஆறாவது வயது வரை இந்த நிலையே நீடித்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருமணங்களுக்குக் காம உணர்வைக் காரணமாகக் கூறுவோர் இதை இங்கே கவனிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

மூலம்: பி. ஜைனுல் ஆபிதீன் – குர்-ஆன் தமிழாக்கம் விளக்கம் 378

ஆசிய இஸ்லாமிய மாநாட்டில் முதல்பரிசு பெற்ற முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரம்:

. . . அவன் மரணத்திற்குப் பின் நபி (ஸல்) ஸவ்தாவை மணமுடித்தார்கள். இவர்கள் ஹிஜ்ரி 54, ஷவ்வால் மாதம் மதீனாவில் மரணமடைந்தார்கள்.

. . .

கதீஜா (ரழி) மரணமான பின்பே ஸவ்தாவை மணமுடித்தார்கள். இவரும் வயதில் நபி (ஸல்) அவர்களை விட மூத்தவராக இருந்தார்

மூலம்: அறிஞர் ஸஃபிய்யுர் ரஹ்மான் (முபாரக்பூர், உ.பி., இந்தியா), புத்தகம்: அர்ரஹீக்குல் மக்தூம் - முத்திரையிடப்பட்ட உயர்ந்த மதுபானம்.

மேற்கண்ட விளக்கத்தில், பிஜே அவர்கள் கூறியவை:

அ) முஹம்மது ஸவ்தா அவர்களை திருமணம் செய்யும் போது, முஹம்மதுவிற்கு 50 வயது, ஸவ்தாவிற்கு 55 வயது

ஆ) ஸவ்தா இளம் வயது விதவையோ, நடுத்தர வயது விதவையோ அல்ல. மாறாக இல்லற வாழ்வுக்குரிய தகுதியையே இழக்கத் துவங்கிவிட்ட முதிய விதவை

இ) முஹம்மது மூதாட்டி ஸவ்தாவுடன் மட்டும் தான் இந்தக் கால கட்டத்தில் பெயரளவுக்கு வாழ்ந்தார்கள்.

இப்போது உண்மையில் ஸவ்தா அவர்களின் வயது எவ்வளவு இருக்கும் என்பதை  கணக்கிடுவோம். ரஹீக் புத்தகத்தில், ஸவ்தா முஹம்மதுவை விட மூத்தவர் என்று மேலோட்டமாகச் சொல்லப்பட்டுள்ளது, ஆனால், பிஜே அவர்கள் தான் அது என்ன வயது சொல்லியுள்ளார்.

பீஜே அவர்கள் சொன்ன வயது எண்ணிக்கையை (55 வயது) எடுத்துக்கொண்டால், நமக்கு கீழ்கண்ட வயது பட்டியல் கிடைக்கும்.

விவரம்முஹம்மதுவின் வயதுஸவ்தாவின் வயதுகி.பி.ஹிஜ்ரி
முஹம்மது ஸவ்தாவை திருமணம் செய்த போது5055620ஹிஜ்ரிக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு
விவாகரத்து செய்ய விரும்பிய போது5358623ஹிஜ்ரி 1
முஹம்மதுவின் மரணத்தின் போது6267632ஹிஜ்ரி 10
ஸவ்தா மரித்த போது104109674ஹிஜ்ரி 54

ஸவ்தா சதத்தை தாண்டிய பிறகு மரித்தார்களா?

பிஜே அவர்கள் கொடுத்த வயதை கணக்கிடும் போது, அதாவது இவ்விருவரின் திருமணத்தின் போது, முஹம்மதுவிற்கு 50, ஸவ்தாவிற்கு 55 வயது என்று கணக்கிட்டால், ஸவ்தா மரிக்கும் போது அவருக்கு 109 வயது இருக்கவேண்டும். இது சாத்தியமில்லை என்பதை அறியலாம், ஏனென்றால், முஸ்லிம்களின் அன்னைகள் என்று அழைக்கப்பட்ட முஹம்மதுவின் மனைவிகளில் ஒருவரான ஸவ்தா அவர்கள் 109 வயதில் மரித்தால், நிச்சயமாக இந்த விவரத்தை நாம் ஹதீஸ்களில் அல்லது இதர சரித்திர நூற்களில் (சீராக்கள்) கண்டு இருந்திருப்போம். ஆனால், எந்த ஒரு ஹதீஸ் தொகுப்பில் கூட, "ஸவ்தா அவர்கள் 100 வயதுக்கு பிறகு (109ல்) மரித்தார்கள்" என்ற விவரமில்லை (தெரிந்தவர்கள் அதனை எனக்கு தெரிவிக்கவும்). முஹம்மதுவின் தோழர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் ஸவ்தா அவர்கள் பற்றிய இந்த  முக்கியமான விவரத்தை மற்றவர்களுக்கு அறிவிக்காமல் இருந்திருக்கமாட்டார்கள்.

ஆக, பிஜே அவர்கள் குறிப்பிட்ட வயது விவரம் தவறானது என்பது இதன் மூலம் அறியலாம். ஸவ்தா அவர்கள் தம்முடைய 55வது வயதில் முஹம்மதுவை திருமணம் செய்தார் என்பதை ஒப்புக்கொள்ளமுடியாது, மேலும் அதற்கு சரியான ஆதாரமில்லை.

முஹம்மதுவின் இந்த விவாகரத்துச் செயல், அனேக முஸ்லிம் அறிஞர்களுக்கு தர்மசங்கடமாக இருப்பதினால், மற்றவர்கள் முன்பு முகம் சுளிக்கச்செய்வதால், பழியை ஸவ்தா அவர்கள் மீது சுமத்துகிறார்கள். ஸவதா கிழவியாக இருந்தார்கள், அதனால் அவர் விவாகரத்து செய்ய விரும்பினார் என்று சொந்தமாக கருத்தைச் சொல்லி, முஹம்மதுவின் வாழ்க்கையில் உள்ள கரும்புள்ளையை பச்சைப்பொய்யால் மூடப் பார்க்கிறார்கள். 

ஸவ்தா அவர்களுக்கு என்ன வயது இருந்திருக்க வாய்ப்பு உள்ளது?

பிஜே அவர்களின் வயது கணக்கு தவறு என்பதைக் கண்டோம். இப்போது இன்னொரு கணக்கைப் பார்ப்போம். ஸவ்தா அவர்களுக்கு 50 வயதில் திருமணம் ஆகியிருந்தால்? அதாவது முஹம்மதுவிற்கும், ஸவ்தா அவர்களுக்கும் ஒரே வயது (50) இருக்கும் போது திருமணம் ஆகியிருந்தால்?

இந்த கணக்கின்படி பார்த்தாலும்,  ஸவ்தா அவர்கள் மரிக்கும் போது அவரது வயது 104 என்று வருகிறது. இதுவும் சரியானதாக இருக்கமுடியாது. இதற்கு காரணம் முஸ்லிம்களின் அன்னையர் 100 வயதை தாண்டி மரித்திருந்தால், ஆரம்பகால முஸ்லிம்கள் அதனை நிச்சயம் பதிவு செய்திருப்பார்கள். ஆக, ஸவ்தா அவர்களுக்கு 50 வயது இருக்கும் போது திருமணம் ஆனது என்பதைக் கூட ஏற்கமுடியாது. 

ஸவ்தா அவர்களின் வயது திருமணத்தின் போது முஹம்மதுவிற்கு சமமாக இருக்கமுடியாது, அதே போல அதிகமாகவும் இருக்கமுடியாது என்பதைக் கண்டோம்.

ஸவ்தா மரிக்கும் போது 90 அல்லது 80 வயது இருந்திருந்தால்?

ஸவ்தா அவர்கள் மரித்த ஆண்டு, ஹிஜ்ரி 54 (கி.பி. 674) ஆகும். அவர் 100ஐ தாண்டியிருக்கமாட்டார் என்பதை மேலே கண்டோம். ஒருவேளை அவர் மரிக்கும் போது 80 அல்லது 90 வயதுடையவராக இருக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படியானால், முஹம்மதுவை அவர் திருமணம் செய்யும் போது அவருக்கு என்ன வயது இருந்திருக்கும்?

ஸவ்தாவின் வயது பற்றிய முழு பட்டியல்:

விவரம்முஹம்மதுவின் வயதுஸவ்தாவின் வயதுகி.பி.ஹிஜ்ரி
முஹம்மது ஸவ்தாவை திருமணம் செய்த போது5055503727620ஹிஜ்ரிக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு
விவாகரத்து செய்ய விரும்பிய போது5358534030623ஹிஜ்ரி 1
முஹம்மதுவின் மரணத்தின் போது6267624939632ஹிஜ்ரி 10
ஸவ்தா மரித்த போது1041091049080674ஹிஜ்ரி 54

கூர்ந்து கவனியுங்கள், ஸவ்தா 80 வயதில் மரித்திருந்தால், அவருக்கு 27ம் வயதில் முஹம்மதுவோடு திருமணம் ஆகியிருக்கும். அவர் 90 வயதில் மரித்திருந்தால் அவருக்கு 37ம் வயதில் திருமணம் ஆகியிருக்கும். இந்த இரண்டு நிலையிலும், முஹம்மதுவை விட 13 அல்லது 23 ஆண்டுகள் குறைவானவராக ஸவ்தா இருந்திருக்கவேண்டும். பிஜே போன்ற அறிஞர்களுக்கு புரிகின்றதா?

ஆக, ஸவ்தா அவர்கள் முஹம்மதுவை திருமணம் செய்யும் போது, அவரை விட குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் இளயவராக இருந்திருப்பார். மூன்று ஆண்டுகள் கழித்து முஹம்மது அவரை விவாகரத்து செய்ய விரும்பியுள்ளார். இந்த காலத்திலும் கூட ஸவ்தா அவர்கள் 30/40 வயதில் இருந்திருப்பார், முஹம்மதுவின் வயது 53 ஆண்டுகளாக இருந்திருக்கும். எப்படிப்பார்த்தாலும், ஸவ்தா முஹம்மதுவை விட இளையவரே என்பது இதன் மூலம் அறியலாம்.

இப்னு இஷாக் 'இவர் முதியவர் (Old Woman)' என்பதின் அர்த்தமென்ன?

இதைப் பற்றி நான் ஆய்வு செய்யும் போது, விக்கிபீடியாவில் ஸவ்தாவின் கட்டுரையின் நம்பகத்தன்மையைப் பற்றிய விவாதங்களை காணநேரிட்டது. அதனை கீழே தருகிறேன், ஏதாவது புரிகின்றதா என்பதைப் பாருங்கள்.

If in 620 she is 50 years old, at shes death in 674 she is 104 years old. Hummm, I don't think that this is correct. Enciclopaedya of Islam give the death date as 674, then she must be younger in 620, perhaps about 30.--88.16.136.91 (talk) 12:03, 25 July 2011 (UTC)

Sawda's age is not given in any primary source. I agree with you that if she had lived to be 104, this would have been so unusual that people would have commented, so she was almost certainly younger than Muhammad. We can only guess her age from indirect information. (1) Encyclopaedia of Islam is quoting Tabari, who definitely says she died in September/October 674, and adds that some alternative date of which he is aware is wrong. (2) The date when Muhammad began divorcing Sawda was "after he married Umm Salama" (April 626), suggesting it was before he married his next wife. This was Zaynab bint Jahsh, whom he married in March 627. It makes sense that Muhammad would have considered divorcing someone at that point, since Zaynab would be his fifth concurrent wife, and he had always said a Muslim should not have more than four wives. The reason given by Tabari and Abu Dawud, however, is that "Sawda grew old". In context, this probably means that she "reached menopause" - Arabic has two different words for a "woman of childbearing age" and a "post-menopausal woman", and the latter is often translated as "old woman", even though she might be only 45 years old. (3) If Muhammad considered Sawda "old", this presumably means she was significantly older than his next-oldest wife. This was Zaynab bint Jahsh, who was born around 589. All this information together suggests that Sawda was born around 580, but that we can't be dogmatic on this point.Grace has Victory (talk) 03:17, 21 August 2012 (UTC)

முஹம்மதுவின் ஐந்தாவது மனைவி ஜைனப்பை அவர் திருமணம் செய்யும் போது, ஜைனப்பிற்கு 34/35 வயது இருக்கும். இந்த நேரத்தில் முஹம்மதுவிற்கு இருந்த மனைவிகளில் மிகவும் வயது சென்றவர் ஸவ்தா, அதாவது இவருக்கு வயது 40 இருக்கலாம். எனவே, யாரையாவது ஒருவரை விவாகரத்து செய்ய முஹம்மது விரும்பினார். இந்த நேரத்தில் அவருக்கு இருந்த மனைவிகளில் அதிக வயதுடையவர் என்று சொல்லும் போது, அது 40 வயதுடைய ஸவ்தா தான். ஆக, வயது மூத்தவர் என்ற சொற்றொடர், ஸவ்தா முஹம்மதுவை விட மூத்தவர் என்ற பொருளில் அல்லாமல், முஹம்மதுவிற்கு அப்போது இருந்த மனைவிமார்களில் இவர் மூத்தவர் என்ற அர்த்தம் தருகின்றது. மேலும், ஒரு பெண் 40 வயதை தாண்டும் போது, மாதவிடாய் நின்றுவிடும் வாய்ப்பு இருக்கிறது, இதனை குறிக்கவும் சொல்லப்பட்டு இருந்திருக்கலாம். 

37-40 வயதுடைய மனைவியை முஹம்மது விவாகரத்து செய்ய முயன்றது சரியானதல்ல. விவாகரத்து விஷயத்துக்கு வரும் போது, எந்த வயது மனைவியாக இருந்தாலும், அவளை வயதின் காரணம் காட்டி விவாகரத்து செய்வது, ஒரு நல்ல மனிதனுக்கு அழகல்ல. 

இதுவரை கண்ட விவரங்களின் சுருக்கம் இது தான். ஸவ்தாவை முஹம்மது திருமணம் செய்யும் போது, அல்லது மூன்று ஆண்டுகளூக்கு பிறகு விவாகரத்து செய்ய விரும்பிய போது, ஸவ்தா அவர்கள்  முஹம்மதுவை விட 10லிருந்து 13 ஆண்டுகள் வரை குறைவானவராகத் தான் இருந்திருக்கிறார். ஸவ்தா அவர்கள் பருமனானவராக இருந்திருக்கின்றார் என்பதாலும், தனக்கு புதிய இளம் மனைவிகள் கிடைத்துக்கொண்டு இருந்ததாலும், ஒரு முஸ்லிமுக்கு நான்கு மனைவிகள் தான் அதிகபட்சம் என்பதால், தானும் அதன் படி செய்ய விரும்பியிருக்கலாம்.  பழைய காரை விற்றால் தானே புதிய கார் வாங்கமுடியும்!

6) ஸவ்தாவின் இடத்தில் கதிஜா அவர்கள் இருந்திருந்தால் - அமிலப்பரிட்சை

முஸ்லிம்களின் அன்னையர்களில் முஹம்மதுவின் முதலாவது மனைவி கதிஜா அவர்களுக்கு ஒரு தனி இடம் உள்ளது. சில விவரங்கள் சரியாக சென்றடையவேண்டுமென்றால், சில நேரங்களில் முஸ்லிம்களுக்கு அமிலப்பரிட்சை வைக்கவேண்டும். ஸவ்தா அவர்களின் நிலையில், முஹம்மதுவின் முதல் மனைவி கதிஜா அவர்கள் இருந்திருந்தால், முஹம்மது இப்படி தலாக் கொடுத்து இருந்திருப்பாரா? என்பது பல கோடி மதிப்புப்பெறும் கேள்வியாகும்.

என்னுடைய தனிப்பட்ட கருத்தை சொல்லவேண்டுமென்றால், 'கதிஜா அவர்கள் மரிக்காமல் இன்னும் 10 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்திருந்தால், முஹம்மது ஒரு ஒழுக்கச்சீலராக திகழ்ந்து இருந்திருப்பார், அவருடைய மரணம் வரை அவர் இந்த கதிஜாவோடு மட்டுமே வாழ்ந்திருப்பார், அவருடைய வாழ்க்கையிலே இன்னொரு மனைவிக்கு இடமிருந்திருக்காது, அடிமைப்பெண்களோடு விபச்சாரம் புரிவது இருந்திருக்காது, முஸ்லிம்கள் அனைவரும் ஏகபத்தினி விரதம் பூண்டு இருந்திருக்கவேண்டி வந்திருக்கும்' என்பது என் திடமான நம்பிக்கையாகும்.

வாசகர்கள் கவனிக்கவேண்டும், கதிஜா அவர்கள் முஹம்மதுவை திருமணம் செய்த போது, அவருக்கு 40 வயது மற்றும் முஹம்மதுவிற்கு 25 வயது. கதிஜா அவர்கள் முஹம்மதுவை விட 15 வருடங்கள் மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கதிஜா அவர்கள் முஹம்மதுவிற்கு வேலை கொடுத்த எஜமானர் ஆவார். அதன் பிறகு இவ்விருவரும் திருணம் செய்துக்கொண்டார்கள். அடுத்த 25 ஆண்டுகள், இவர்கள் இருவரும் ஈருடல் ஓருயிர் போல வாழ்ந்தார்கள். முஹம்மதுவிற்கு 50 ஆண்டுகள் இருக்கும் போது, கதிஜா 65 வயது நிரம்பிய மூதாட்டியாவார். பிஜே அவர்களின் அதே வரிகளில் சொல்லவேண்டுமென்றால் கதிஜா அவர்கள் "இல்லற வாழ்வுக்குரிய தகுதியையே இழக்கத் துவங்கிவிட்ட முதியவர்".

கதிஜா அவர்களை ஒருவேளை அல்லாஹ் எடுத்துக்கொள்ளாமல் இருந்திருந்தால்…!?!

முஸ்லிம்களிடம் கேட்கவேண்டிய சில கேள்விகள்:

அ) ஒரு வேளை கதிஜா அவர்கள் உயிரோடு  இருந்திருந்தால், முஹம்மது இத்தனை திருமணங்கள் செய்திருப்பாரா? (11க்கும் அதிகமான மனைவிகள், மற்றும் செக்ஸ் அடிமைகள்).

ஆ) ஸவ்தாவை விட, கதிஜா தான் கிழவியாக இருந்திருப்பார். அந்த நேரத்தில் முஹம்மது கதிஜா அவர்களை முதலாவது தலாக் கொடுத்து இருந்திருப்பாரா?

இ) முஹம்மது ஏழ்மையில் 25 வயதுடைய வாலிபனாக இருந்தபோது, தனக்கு நல்ல செல்வம் கிடைக்கும் என்பதால், 40 வயது பெண்ணையும் திருமணம் செய்ய தயங்காமல், கதிஜாவை திருமணம் செய்தார். ஆனால், அதே முஹம்மது நபியாக முடிசூட்டப்பட்ட பிறகு, தலைகீழாக மாறிவிட்டாரே! இது என்ன கொடுமை? நபியாக மாறுவதற்கு முன்பாக மிகவும் நல்லவராக இருந்துள்ளார். நபியாக மாறியபிறகு தான் அவருடைய சுயரூபம் வெளிப்பட்டது. 

ஈ) ஒருவேளை கதிஜா அவர்கள் மரிக்காமல் இருந்திருந்தால், முஹம்மது தம் வாழ்நாள் முழுவதும் ஒரே மனைவியை உடையவராகவே வாழ்ந்திருப்பார். இல்லை, கதிஜா உயிரோடு இருந்திருந்தாலும், முஹம்மதுவிற்கு பல மனைவிகளை அல்லாஹ் கொடுத்திருப்பார் என்று முஸ்லிம்கள் சொல்வார்களா?

உ) முஹம்மதுவின் பலதாரமணத்தை கதிஜா ஒப்புக்கொள்ளாமல் இருந்திருந்தால், அவருக்கு விவாகரத்து கொடுத்திருந்திருப்பாரா முஹம்மது? அல்லாஹ் கதிஜாவை தலாக்  பற்றிச் சொல்லி மிரட்டி இருந்திருப்பாரா?

ஊ) கதிஜா அவர்கள் எதிர்க்கவில்லையென்றாலும்,  முஹம்மதுவை விட 15 ஆண்டுகள் மூத்தவர் என்பதால், தாம்பத்ய வாழ்விற்கு உபயோகமற்றவர் என்பதால், முஹம்மது அவருக்கு விவாகரத்து கொடுத்திருந்திருப்பாரா?

எ) பிஜேவின் படி, ஸவ்தாவிற்கு 5 வயது அதிகம் என்பதால், விவாகரத்து செய்தது சரியானது என்று முஹம்மதுவிற்கு வக்காளத்து வாங்கும் முஸ்லிம்கள்,  முஹம்மதுவை விட, 15 ஆண்டுகள் அதிகமாக இருந்த மூதாட்டியை கதிஜாவை விவாகரத்து செய்திருந்தால், அதற்கும் வக்காளத்து வாங்குவீர்களா?

முடிவுரை:

இதுவரை நாம் ஆய்வு செய்த விவரங்களை திறந்த மனதுடன் சிந்தித்துப்பாருங்கள். உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவர், தன் மனைவி அழகாக இல்லை என்பதால், வயதாகிவிட்டது என்பதால் அவரை விவாகரத்து செய்தால், இதனை நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா? ஒவ்வொரு முஸ்லிமும், முஹம்மதுவை பின்பற்ற நினைத்தால், முஸ்லிம் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்குமா? திருமணத்தின் போது இளமையாக இருந்தாலும், 40-50ம் வயதின் போது, என் கணவர் என்னை விவாகரத்து செய்துவிடுவார் என்று பெண்கள் பயப்படமாட்டார்களா? இப்படியெல்லாம் முஸ்லிம் ஆண்கள் செய்வதில்லை என்று நீங்கள் சொன்னால், 'முஹம்மதுவின் இந்த செயல் தவறானது, நாங்கள் அதனை இன்று பின்பற்றுவதில்லை' என்று ஒப்புக்கொள்கிறீர்கள் என்று நாம் கருதலாமா?

தலாக் 4 – இஸ்லாமிய அன்னையர்களுக்கு இரண்டாம் (தலாக்) மிரட்டல் விடுத்த அல்லாஹ்

தலைப்பைப் பார்த்தால், அல்லாஹ் மீது அவதூறு சொல்வதைப் போலத் தெரிகிறதே! என்ற சந்தேகம் வருகிறதா? இந்த விவரம் குர்-ஆனில் இருப்பதால் நாம் ஒன்றும் செய்வதற்கில்லை, அது வேதவாக்கு, அதாவது குர்-ஆன் இறைவாக்கு முஸ்லிம்களுக்கு. அதில் சொல்லப்பட்டதை அப்படியே நம்புவது தானே சரி.

முந்தைய கட்டுரையில், முஹம்மதுவின் மனைவிமார்களுக்கு அல்லாஹ் விடுத்த முதல் மிரட்டலை ஆய்வு செய்தோம். அதாவது, வீட்டு செலவிற்கு கொஞ்சம் பணத்தை அதிகப்படுத்தி கொடுங்கள் என்று முஹம்மதுவிடம் கேட்டது பெரும்பாவமாகிவிட்டது. வானத்திலிருந்து புர்ரென்று ஜிப்ரீல் தூதன் இறங்கி, முதல் மிரட்டலை வஹியாக முஹம்மதுவின் செவிகளில் போட்டுவிட்டுச் சென்றார். இந்த தற்போதைய கட்டுரையில், அந்த பரிதாபமான அன்னையர்களுக்கு இரண்டாவது முறையாக அல்லாஹ் தலாக் மிரட்டல் விடுத்ததை ஆய்வு செய்வோம். இக்கட்டுரையின் ஆய்விற்காக நாம் குர்-ஆன், புகாரி, முஸ்லிம் ஹதீஸ்கள் மற்றும் மூன்று குர்-ஆன் விரிவுரையாளர்களின் விளக்கங்களை ஆதாரமாக பயன்படுத்தியுள்ளோம்.

1) குர்-ஆனில் இரண்டாவது தலாக் மிரட்டல் – வசனம் 66:5

முஹம்மதுவின் மனைவிமார்கள் அப்படி என்ன பெரிய பிழையைச் செய்துவிட்டார்கள்? 

முஹம்மது உங்களை தலாக் சொல்லிவிட்டால், அவருக்கு எந்த நஷ்டமும் இல்லை, உங்களுக்குத்தான் நஷ்டம். அவருக்கு நான் பல மறுமணங்களை செய்விப்பேன். அவருக்கு கன்னிப்பெண்களையும், கன்னிமை கழிந்தவர்களையும் உங்களுக்கு பதிலாக முஹம்மதுவிற்கு மனைவிகளாக கொடுப்பேன் என்று அல்லஹ் இந்த வசனத்தில் அனல் கக்குகின்றான். 

குர்-ஆன் 66:5 அவர் உங்களை ´தலாக்´ சொல்லி விட்டால், உங்களை விடச் சிறந்த - முஸ்லிம்களான, முஃமினான, (இறைவனுக்கு) வழிபட்டு நடப்பவர்களான, தவ்பா செய்பவர்களான, வணங்குபவர்களான, நோன்பு நோற்பவர்களான - கன்னிமை கழிந்தவர், இன்னும் கன்னிப் பெண்டிர் - இத்தகையவரை அவருடைய இறைவன் அவருக்கு (உங்களுக்குப்) பகரமாக, மனைவியராய் கொடுக்கப் போதுமானவன். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

2) அல்லாஹ்வின் இந்த கடுங்கோபத்துக்கு காரணம் என்ன?

அல்லாஹ் ஏன் இப்படி கோபமாக இருக்கிறான் என்ற விவரத்தை மூன்றாம் வசனத்தில் கூறுகின்றான். 

குர்-ஆன் 66:3 மேலும், நபி தம் மனைவியர் ஒருவரிடம் ஒரு செய்தியை இரகசியமாக ஆக்கிவைத்த போது அவர் (மற்றொருவருக்கு) அதை அறிவித்ததும், அ(வ்விஷயத்)தை அல்லாஹ் அவருக்கு வெளியாக்கி வைத்தான், அவர் அதில் சிலதை தெரிவித்ததும், சிலதை(த் தெரிவிக்காது) புறக்கணித்தும் இருந்தார், (இவ்வாறு) அவர் அதைத் தெரிவித்த போது "உங்களுக்கு இதைத் தெரிவித்தவர் யார்?" என்று அப்பெண் கேட்டார். அதற்கு அவர் "(யாவற்றையும்) நன்கறிந்தோனும் உணர்ந்தோனும் (ஆகிய அல்லாஹ்) என்குத் தெரிவித்தான்" என்று (பதில்) கூறினார்.

முஹம்மதுவிற்கும் அவரது மனைவி ஒருவருக்கும் இடையே ஒரு இரகசியம் இருந்ததாம். அந்த இரகசியத்தை யாரிடமும் சொல்லவேண்டாம் என்று முஹம்மது சொல்லியுள்ளார் (சொன்னால் நபித்துவத்துக்கு என்ன கேடு வந்துவிடும்? ஏன் முஹம்மது பயப்பட்டார்?). அம்மனைவி முஹம்மதுவின் இன்னொரு மனைவியிடம் அதனைச் சொல்லிவிட்டார், இது தான் விஷயம். முஹம்மதுவின் ஒரு மனைவி ஒரு  இரகசியத்தைக் கட்டிக்காக்கவில்லை. அல்லாஹ்விற்கு வந்தது பாருங்க கோபம், குர்-ஆன் அத்தியாயம் 66ன் முதல் ஐந்து வசனங்கள் முஹம்மதுவிற்கு கொரியர் ஆகிவிட்டன. 

அல்லாஹ் வஹி மூலமாக வசனங்களை இறக்கி திட்டவேண்டிய அளவிற்கு அது எப்படிப்பட்ட இரகசியமாக இருந்தது? அந்த இரகசியம் வெளியே தெரிந்தவுடன், ஏன் முஹம்மதுவும் அல்லாஹ்வும் கோபத்தின் சிகரத்திற்கே சென்றுவிட்டார்கள்? போன்ற கேள்விகள் நமக்குத் தோன்றும்.

3) அது இரகசியம் மட்டுமல்ல, அது முஹம்மதுவின் சத்தியமாகும்

ஏதோ ஒரு விஷயத்துக்காக, தம்முடைய மனைவியிடம் முஹம்மது 'இனி நான் இதை செய்யமாட்டேன்' என்று சத்தியம் செய்தாராம். 

"ஏன் நீர் நான் அனுமதித்த (ஹலால்) காரியத்தை, ஹராம் என்று கருதி செய்யமாட்டேன் என்று சத்தியம் செய்துவிட்டீர்? போனால் போகட்டும், ஒரு பரிகாரத்தோடு அந்த சத்தியத்தை முறித்துக்கொள்ளும்" என்று அல்லாஹ்வே முஹம்மதுவிற்கு கட்டளைத் தருகின்றார். கீழ்கண்ட இரண்டு வசனங்களில் அல்லாஹ் முஹம்மதுவை கடிந்துக்கொள்கிறார்.

66:1. நபியே! நீங்கள் உங்களுடைய மனைவிகளின் திருப்தியைக் கருதி, அல்லாஹ் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்த பொருள்களை (உபயோகிப்பது இல்லை என்று) நீங்கள் ஏன் (சத்தியம் செய்து அதனை ஹராம் என்று) விலக்கிக்கொண்டீர்கள்? அல்லாஹ் மிக மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். 

66:2. ஆகவே, உங்களுடைய அந்தச் சத்தியத்திற்கு (நீங்கள் பரிகாரம் கொடுத்து) அதனை நீக்கிவிடுமாறு நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகின்றான். அல்லாஹ்தான் உங்களது எஜமானன். அவன் (அனைவரையும்) நன்கறிந்தவனும் ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான். (அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்)

4) அந்த என்ன இரகசியம்? அது எப்படிப்பட்ட சத்தியம்?

அல்லாஹ்வே ஜிப்ரீல் தூதனை அனுப்பினார் என்று பார்க்கும் போது, அது மிகவும் முக்கியமான இரகசியமாகத் தோன்றுகிறது. முஹம்மது சத்தியம் செய்தாரென்றால் அது சாதாரண விஷயமாக இருக்குமா? நிச்சயமாக மிகப்பெரிய விஷயமாக இருக்கவேண்டும். மேலும், அந்த இரகசியத்தை வெளியிட்டதற்காக அல்லாஹ் 'தலாக்' நிலைக்கு இறங்கி, முஹம்மதுவின் மனைவிமார்களை மிரட்டுகின்றார் என்று பார்க்கும் போது, இதில் ஏதோ மிகப்பெரிய விஷயம் அடங்கியிருக்கிறது என்பதை புரிந்துக்கொள்ளலாம்.

குர்-ஆன் 66ம் அத்தியாயம், 1-5 வசனங்களை இதுவரை நாம் படித்தோம். விஷயம் புரிந்தது போல நமக்குத் தெரிகிறது ஆனால் முழுவதுமாக புரியவில்லை. இவ்வசனங்கள் போட்ட முடிச்சை அவிழ்ப்பது எப்படி?

  • முஹம்மதுவிற்கும் அவரது மனைவிக்கும் இடையே இருந்த அந்த இரகசியம் என்ன?
  • அந்த இரகசியத்தை அம்மனைவி காப்பதற்காக, முஹம்மது போட்ட சத்தியம் என்ன?
  • அல்லாஹ் கோபம் கொண்டு, தலாக் பற்றிய மிரட்டல் விடும் அளவிற்கு எப்படிப்பட்ட நிகழ்ச்சி அவ்விருவருக்கும் இடையே நடந்தது?

போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல அல்லாஹ்வின் வேதமாகிய குர்-ஆன் பயன்படாது. இதற்கான பதிலை அறிய நாம் ஹதிஸ்களையும், இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கவுரைகளையும் படிக்கவேண்டும். 

இதன் பின்னணியை புரிந்துக்கொள்ள உதவும் இரண்டு நிகழ்ச்சிகள் 

4.1 கருவேலம் பிசினின் துர்வாடை:

இந்த நிகழ்ச்சியின் பின்னணி 'இது தான்' என்று புகாரி மற்றும் முஸ்லிம் ஹதீஸ்களில் ஆயிஷா அவர்களின் மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது (புகாரி எண்கள்: 4912, 5267, 5268, 6691, 6972; முஸ்லிம் எண்கள்: 2937, 2938).

புகாரி ஹதீஸ் எண் 6972ஐ இங்கு படிப்போம்.

ஆயிஷா(ரலி) அறிவித்தார். 

இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு இனிப்பு தேனும் விருப்பமானவையாக இருந்தன. நபி(ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையை முடித்ததும் தம் துணைவியரிடம் வந்து பகல்பொழுதைக் கழிப்பார்கள்; அவர்களுடன் நெருக்கமாக இருப்பார்கள். இவ்வாறு (ஒரு நாள்) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் சென்ற நபியவர்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் இருந்துவிட்டார்கள். அது குறித்து நான் விசாரித்தேன். அப்போது ஹஃப்ஸாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு (தாயிஃப் நகர சுத்த)த் தேன் உள்ள ஒரு தோல்பையை அன்பளிப்பாக வழங்கினாள் என்றும், அதிலிருந்து தயாரித்த பானத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸா புகட்டினார் என்றும் என்னிடம் கூறப்பட்டது. உடனே நான் 'அல்லாஹ்வின் மீதாணையாக! இதை நிறுத்துவதற்காக இதோ ஒரு தந்திரம் செய்வோம்' என்று கூறிக்கொண்டு, (நபியவர்களின் துணைவியரில் ஒருவரான) சவ்தா(ரலி) அவர்களிடம் அதைப் பற்றிக் கூறி, 'நபி(ஸல்) அவர்கள் உங்களிடம் வரும்போது உங்களை நெருங்குவார்கள். அப்போது, இறைத்தூதர் அவர்களே! கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? என்று கேளுங்கள். 'இல்லை' என்று நபியவர்கள் கூறுவார்கள். உடனே இது என்ன வாடை? என்று அவர்களிடம் கேளுங்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்மிடமிருந்து (துர்) வாடை வீசுவதைக் கடுமையாகக் கருதுவார்கள். எனவே, 'எனக்கு ஹஃப்ஸா தேன் பானம் புகட்டினார்' என்று கூறுவார்கள். உடனே நீங்கள் 'இதன் தேனீக்கள் கருவேல மரத்தில் அமர்ந்து (தேனை உறிஞ்சி)விட்டு வந்திருக்கலாம். (எனவே தான் வாடை வருகிறது)' என்று சொல்லுங்கள். நானும் இவ்வாறே சொல்வேன். ஸஃபிய்யாவே! நீங்களும் இவ்வாறே சொல்லுங்கள் என்று (மற்றொரு துணைவியாரான ஸஃபிய்யாவிடமும்) சொன்னேன். 

நபி(ஸல்) அவர்கள் சவ்தா(ரலி) அவர்களிடம் சென்றபோது (நான் சொன்னபடி செய்துவிட்டு) சவ்தா (என்னிடம்) கூறினார்கள்: எவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவனுமில்லையோ அத்தகைய (இறை)வன் மீதாணையாக! நபி(ஸல்) அவர்கள் என் வீட்டு வாசலில் இருந்தபோது உங்களுக்கு பயந்து நீங்கள் என்னிடம் சொன்னபடி நபியவர்களிடம் சொல்ல விரைந்தேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னை) நெருங்கியதும் அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் கருவேலம் பிசினைச் சாப்பிட்டீர்களா?' என்று கேட்டேன். அவர்கள் 'இல்லை' என்று பதிலளித்தார்கள். 'அப்படியானால், (இது என்ன வாடை?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'ஹஃப்ஸா எனக்குத் தேன் பானம் புகட்டினார்' என்றார்கள். நான், 'அதன் தேனீக்கள் கருவேல மரத்தில் அமர்ந்து (தேன் உறிஞ்சி)விட்டு வந்திருக்கலாம் (எனவேதான் தேனில் வாடை ஏற்பட்டுவிட்டது போலும்)' என்று சொன்னேன். 

(தொடர்ந்து ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) என்னிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தபோது அதைப் போன்றே நானும் சொன்னேன். ஸஃபிய்யாவிடம் நபி(ஸல்) அவர்கள் சென்றபோது அவரும் அதைப் போன்றே தெரிவித்தார். பிறகு (மறுநாள்) நபி(ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவிடம் சென்றபோது நபியவர்களிடம் அவர், 'இறைத்தூதர் அவர்களே! அருந்துவதற்கு தங்களுக்குச் சிறிது தேன் தரட்டுமா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'அது எனக்குத் தேவையில்லை' என்று கூறினார்கள். 

(இது குறித்து) சவ்தா(ரலி) அவர்கள், 'அல்லாஹ் தூயவன்! நபி(ஸல்) அவர்களை அதை அருந்தவிடாமல் நாம் தடுத்து விட்டோமே!' என்று (வருத்தத்துடன்) கூறுவார்கள். நான் அவரிடம், 'சும்மா இருங்கள்! (விஷயம் பரவிவிடப்போகிறது)' என்று சொல்வேன்.

இதைப் பற்றி பி.ஜைனுல் ஆபீதின் அவர்கள் தம்முடைய குர்-ஆன் தமிழாக்கத்தின் விளக்கம் 272ல் குறிப்பிட்டுள்ளார் ("272. இறைவன் அனுமதித்ததைத் தடை செய்யக் கூடாது"). இந்த ஹதீஸில் சொல்லப்பட்ட இந்த பின்னணி சரியானதா இல்லையா என்பதை இன்னொரு கட்டுரையில் ஆய்வு செய்வோம்.

அடுத்தபடியாக, மேற்கண்ட பின்னணி தவறானது, இது சரியானதல்ல என்றுச் சொல்லும் இதர பின்னணி நிகழ்ச்சியை இப்போது பார்ப்போம். 

4.2 ஹஃப்ஸாவின் படுக்கையில் மரியாளிடம் புரிந்த களியாட்டத்தின் துர்வாடை:

குர்-ஆன் 66:1-5 வரையிலான வசனங்களின் பின்னணி "இது தான் என்று" சில இஸ்லாமிய அறிஞர்கள் தங்கள் விளக்கவுரைகளில் கூறியுள்ளனர். இவர்களின் தஃப்ஸீர்கள் (குர்-ஆன் விளக்கவுரைகளை இந்த தொடுப்பில் படிக்கலாம் www.altafsir.com). நான் இங்கு இம்மூவர்களின் முதல் வசனத்தின் விளக்கவுரையைத் தருகிறேன் (முழூ விளக்கவுரையை மேற்கண்ட தளத்தில் படிக்கலாம், அல்லது 5 வசனங்களின் விளக்கவுரைகளை இக்கட்டுரையின் அடிக்குறிப்பில் படிக்கலாம்).

தஃப்ஸீர் ஜலலைன்:

வசனம் 66:1:

O Prophet! Why do you prohibit what God has made lawful for you in terms of your Coptic handmaiden Māriya — when he lay with her in the house of Hafsa who had been away but who upon returning and finding out became upset by the fact that this had taken place in her own house and on her own bed — by saying 'She is unlawful for me!' seeking by making her unlawful for you to please your wives? And God is Forgiving Merciful having forgiven you this prohibition.

தஃப்ஸீர் இப்னு அப்பாஸ்:

வசனம் 66:1

And from his narration on the authority of Ibn 'Abbas that he said regarding the interpretation of Allah's saying (O Prophet!): '(O Prophet!) i.e. Muhammad (pbuh). (Why bannest thou that which Allah hath made lawful for thee) i.e. marrying Maria the Copt, the Mother of Ibrahim; that is because he had forbidden himself from marrying her, (seeking to please thy wives) seeking the pleasure of your wives 'A'ishah and Hafsah by forbidding yourself from marrying Maria the Copt? (And Allah is Forgiving) He forgives you, (Merciful) about that oath.

தஃப்ஸீர் வஹிதி:

வசனம் 66:1, 2 & 3

(O Prophet! Why bannest thou that which Allah hath made lawful for thee…) [66:1]. . . . . Ibn 'Abbas> 'Umar who said: "The Messenger of Allah, Allah bless him and give him peace, entered the house of Hafsah along with the mother of his son, Mariyah. When Hafsah found him with her [in an intimate moment], she said: 'Why did you bring her in my house? You did this to me, to the exception of all your wives, only because I am too insignificant to you'. He said to her: 'Do not mention this to 'A'ishah; she is forbidden for me [i.e. Mariyah] if I ever touch her'. Hafsah said: 'How could she be forbidden for you when she is your slave girl?' He swore to her that he will not touch her and then said: 'Do not mention this incident to anyone'. But she went ahead and informed 'A'ishah. The Prophet, Allah bless him and give him peace, decided not to go to his wives for a month. He stayed away from them twenty nine days when Allah, glorious and exalted is He, revealed . . . . .

மேற்கண்ட விளக்கவுரைகளின் சுருக்கம் இது தான். முஹம்மதுவிற்கு மரியாள் என்ற பெயர் கொண்ட ஒரு காப்டிக் கிறிஸ்தவப்பெண் அடிமையாக இருந்தாள். (எகிப்தின் அரசன் கொடுத்திருந்தான்) அவள் மனைவியல்ல, அவள் முஹம்மதுவின் வைப்பாட்டி, குர்-ஆனின் படி 'முஹம்மதுவின் வலக்கரத்துக்கு சொந்தமானவள்'. ஒரு முறை முஹம்மதுவின் மனைவி ஹஃப்ஸா தம் தந்தையாகிய உமரின் வீட்டிக்குச் சென்று திரும்பி தம் வீட்டிற்குள் நுழையும் போது, முஹம்மது ஹஃப்ஸாவின் படுக்கையில் மரியாளோடு நெருக்கமாக இருப்பதைக் கண்டுவிட்டார்கள். இது என் நாள் அல்லவா? என் வீடு அல்லவா?  என் கட்டில் அல்லவா? அப்படியிருக்க, உம்முடைய அடிமைப்பெண்ணிடம் என் நாளில் உடலுறவு கொள்வது எப்படி என்று கேட்டுயிருக்கிறார் (முஹம்மது தம்முடைய ஒவ்வொரு மனைவிக்கும் ஒருநாள் ஒதுக்கியிருந்தார். ஆனால், தம்முடைய அடிமைப்பெண்களுக்கு அவர் நாட்கள் ஒதுக்கவில்லை, எனவே, மற்றவர்கள் அசைந்த நேரம் பார்த்து காரியத்தை நடத்தவேண்டியது தான்). ஹஃப்ஸா சீக்கிரமாக வீடு திரும்புவார் என்று எதிர்ப்பார்க்காத முஹம்மதுவிற்கு தர்ம சங்கடமாக ஆகிவிட்டது (என்ன தான் இறைத்தூதராக இருந்தாலும், மனைவியிடம் நீதி நியாயம் தவறும் போது, கொஞ்சம் அடக்கிவாசிக்கத்தான் வேண்டுமல்லவா?). நிலைமையை சமாளிக்க, 'இனி மரியாளோடு நான் உடலுறவு கொள்வதில்லை' என்று முஹம்மது  சொன்னார். அது எப்படி, அல்லாஹ்வின் வார்த்தையின் படி, அடிமைப்பெண்களோடு உடலுறவு கொள்வது ஹலால் அல்லவா? என்று திருப்பிக்கேட்டார் ஹஃப்ஸா. இது என்னடா தலைவலியாகப் போச்சு என நினைத்த முஹம்மது 'சத்தியம் செய்துவிட்டார், அல்லாஹ் குர்-ஆனில் அனுமதித்து இருந்தாலும் நான் மரியாளோடு (அடிமைப்பெண்ணோடு) உடலுறவு கொள்ளமாட்டேன், நீயும் இதை யாரிடம் சொல்லவேண்டாம், முக்கியமாக ஆயிஷாவிடம் சொல்லவேண்டாம் என்றுச் சொல்ல, ஹஃப்ஸா அப்போது அமைதியானார். 

ஆனால், ஹஃப்ஸாவினால் இதனை ஜீரணித்துக் கொள்ளமுடியவில்லை. முஹம்மதுவின் மனைவிகளுக்கு "என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்" என்றுச் சொல்லும் பாக்கியம் இல்லையென்றாலும், "எனக்கு ஒதுக்கிய நாளில் என் புருஷன் எனக்கு மட்டும் தான்" என்று சொல்லிக்கொள்ளும் வாய்ப்பு கூட ஹப்ஸாவிற்கு கிடைக்கவில்லை என்பதால், அவர் மிகவும் நொந்துபோய்விட்டார். எனவே,  யாரிடம் சொல்லக்கூடாது என்று முஹம்மது சொன்னாரோ, அதே நபரிடம் அதாவது ஆயிஷாவிடம் சொல்லிவிட்டார். இந்த குழப்பங்களுக்கெல்லாம் மூலகாரணம் தாம் தான் என்பதை உணர்ந்த முஹம்மது, எந்த மனைவியிடமும் நான் செல்வதில்லை என்றுச் சொல்லி, ஒரு மாதம் (29 நாட்கள்) தனியாக வாழ்ந்துக்கொண்டு இருந்தார். அல்லாஹ்வினால் தன் நபி இப்படி தனிமையில் வாழ்வது பிடிக்கவில்லை, எனவே அல்லாஹ் வசனங்களை இறக்கினார். அதாவது, குர்-ஆன் 66வது அத்தியாயத்தின் முதல் ஐந்து வசனங்கள் மற்றும் கடைசி மூன்று வசனங்களை (66:10-12) அல்லாஹ் இறக்கியுள்ளான். இவ்வசனங்களில் தான் அல்லாஹ் முஹம்மதுவின் மனைவிமார்களை தலாக் பற்றி மிரட்டியுள்ளான். 

5) பின்னணி எதுவானாலும் – அன்னையர்களை தலாக் பற்றி மிரட்டுவது சரியா?

குர்-ஆன் 66வது அத்தியாயத்திற்கு இரண்டு பின்னணிகளை முஸ்லிம் அறிஞர்கள் கூறுகிறார்கள் (இவைகளில் எது சரியாக இருக்கும் என்பதை இன்னொரு கட்டுரையில் பார்க்கலாம்). இந்த கட்டுரையைப் பொருத்தமட்டில், முஹம்மதுவின் அன்னையர்களிடம், முஹம்மது உங்களை தலாக் கொடுத்துவிட்டால், நான் அவருக்கு இன்னும் பல திருமணங்களை செய்விப்பேன் என்று அல்லாஹ் மிரட்டுவது 'இறைவன் என்ற நிலையில் இருக்கும் ஒருவருக்கு ஏற்புடையதாக தெரியவில்லை'.

மேலும், இப்படிப்பட்ட குர்-ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் முஸ்லிம் ஆண்களின் மனதில் எப்படிப்பட்ட தாக்கத்தை உண்டாக்கும்? பெண்களின் சின்னச்சின்ன பிழைகளுக்காக தலாக் வரைக்கும் செல்வது, அல்லது தலாக் கொடுத்துவிடுவேன் என்று மிரட்டுவது தவறு இல்லை என முஸ்லிம் ஆண்கள் தைரியம் கொள்வார்கள் அல்லவா? பெண்களை பயமுறுத்த இப்படிப்பட்ட குர்-ஆன் வசனங்களை முஸ்லிம் ஆண்கள் தங்களின் சுயலாபத்துக்காக  பயன்படுத்துவார்கள் அல்லவா?

தலாக் 4 – முடிவுரை:

இந்த கட்டுரையில், முஸ்லிம்களின் அன்னைகள் என்று மரியாதையோடு போற்றப்படும் பெண்களுக்கு நடந்த கொடுமையைப் பார்த்தோம். ஒரு இரகசியத்தை காக்கவில்லையென்பதால் தலாக் கொடுத்துவிடுவேன் என்று மிரட்டுவது காட்டுமிராண்டித்தனமாகும். ஒருவேளை 7ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த அரேபிய பாலைவன நாடோடி மக்களின் மத்தியில் இப்படிப்பட்ட தலாக் மிரட்டல்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கலாம், ஆனால் நாகரீகம் வளர்ந்த இந்நாட்களிலும் மேற்கண்ட குர்-ஆன் வசனங்கள் சொன்னது தவறு இல்லை முஸ்லிம்கள் சொல்வது அறிவுடமையாக தெரியவில்லை.

முஹம்மதுவின் மனைவிமார்களுக்கே இந்த நிலை என்றால், சாதாரண முஸ்லிம் குடும்ப பெண்களின் நிலை இன்னும் பரிதாபமாக இருக்கும். இதனால் தான் முஸ்லிம் சமுதாயங்களில் தலாக் (விவாகரத்துக்கள்) அதிகமாக நடைபெறுகின்றன, ஆனால் அவைகள் ஊடகம்வரைக்கும் வருவதில்லை, அந்தந்த பகுதி ஜாமாத்தின் பதிவேடுகளில் பதிக்கப்படுவதோடு நின்றுவிடுகின்றன. இதையும் தாண்டி வெளியே வருகின்ற ஓரிரு தலாக் கேஸுக்கள் இந்தியாவில்  பிரேகிங் நியூஸ் ஆகிவிடுகின்றது.

இதுவரை இத்தொடர்கள் மூலமாக அறிந்துக்கொண்டவை.

  1. முஸ்லிம் பெண்களை எக்காரணங்களைக் கொண்டு முஸ்லிம் ஆண்கள் தலாக் கொடுக்கலாம் என்பதை குர்-ஆன் தெளிவுபடுத்தவில்லை.
  2. ஆனால், குடும்ப செலவிற்கு பணத்தை அதிகப்படுத்திக் கொடுங்கள் என்று கேட்டதற்காக, முஸ்லிம் சமுதாயத்திலேயே உயர்ந்தவர்கள் என்று கருதப்படும் முஹம்மதுவின் மனைவிமார்களுக்கு அல்லாஹ்வால் முதல் 'தலாக் மிரட்டல்' விடுக்கப்பட்டது.
  3. இக்கட்டுரையில் கண்டது படி, ஒரு இரகசியத்தை காத்துக்கொள்ளவில்லை என்பதற்காக இரண்டாவது முறையாக அல்லாஹ் தலாக் மிரட்டல் அதே அன்னையர்களுக்கு விடுத்தார். 

அடுத்த கட்டுரையில், முஹம்மது தம்முடைய ஒரு மனைவிக்கு தலாக் கொடுக்க முடிவு செய்தார், ஆனால், கடைசியில் அதனை நிறைவேற்றவில்லை. என்ன காரணத்திற்காக முஹம்மது அப்பெண்மணியை விவாகரத்து செய்ய விரும்பினார்? அதன் பிறகு எந்த காரணங்களுக்காக தலாக் முடிவை வாபஸ் பெற்றுவிட்டார் என்பதை ஆய்வு செய்வோம். 

தலாக் தொடரின் அடுத்த கட்டுரையில் சந்திப்போம்.

அடிக்குறிப்புக்கள்:

[1] Tafsir al-Jalalyn (தஃப்ஸீர் ஜலலைன்):

வசனம் 1:

O Prophet! Why do you prohibit what God has made lawful for you in terms of your Coptic handmaiden Māriya — when he lay with her in the house of Hafsa who had been away but who upon returning and finding out became upset by the fact that this had taken place in her own house and on her own bed — by saying 'She is unlawful for me!' seeking by making her unlawful for you to please your wives? And God is Forgiving Merciful having forgiven you this prohibition.

வசனம் 2:

Verily God has prescribed He has made lawful for you when necessary the absolution of your oaths to absolve them by expiation as mentioned in the sūrat al-Mā'ida Q. 589 and the forbidding of sexual relations with a handmaiden counts as an oath so did the Prophet s expiate? Muqātil b. Sulaymān said 'He set free a slave in expiation for his prohibition of Māriya'; whereas al-Hasan al-Basrī said 'He never expiated because the Prophet s has been forgiven all errors'. And God is your Protector your Helper and He is the Knower the Wise.

வசனம் 3:

And mention when the Prophet confided to one of his wives namely Hafsa a certain matter which was his prohibition of Māriya telling her 'Do not reveal it!'; but when she divulged it to 'Ā'isha reckoning there to be no blame in doing such a thing and God apprised him He informed him of it of what had been divulged he announced part of it to Hafsa and passed over part out of graciousness on his part. So when he told her about it she said 'Who told you this?' He said 'I was told by the Knower the Aware' namely God.

வசனம் 4:

If the two of you namely Hafsa and 'Ā'isha repent to God … for your hearts were certainly inclined towards the prohibition of Māriya that is to say your keeping this secret despite knowing the Prophet's s dislike of it which is itself a sin the response to the conditional 'if the two of you repent to God' has been omitted to be understood as 'it will be accepted of both of you'; the use of the plural qulūb 'hearts' instead of the dual qalbayn 'both your hearts' is on account of the cumbersomeness of putting two duals together in what is effectively the same word; and if you support one another tazzāharā the original second tā' of tatazāharā has been assimilated with the zā'; a variant reading has it without this assimilation tazāharā against him that is the Prophet in what he is averse to then know that God He huwa a pronoun for separation is indeed his Protector His supporter and Gabriel and the righteous among the believers Abū Bakr and 'Umar may God be pleased with both of them wa-Jibrīlu wa-sālihu'l-mu'minīna is a supplement to the syntactical locus of the subject of inna sc. 'God' who will also be his supporters and the angels furthermore further to the support of God and those mentioned are his supporters assistants of his in supporting him to prevail over both of you.

வசனம் 5

It may be that if he divorces you that is if the Prophet divorces his wives his Lord will give him in your stead read yubaddilahu or yubdilahu wives better than you azwājan khayran minkunna is the predicate of 'asā 'it may be' the sentence being the response to the conditional — the replacement of his wives by God never took place because the condition of his divorcing them never arose — women submissive to God affirming Islam believing faithful obedient penitent devout given to fasting — or given to emigrating in God's way — previously married and virgins. (Source)

Tanwir al-Miqbas min Tafsir Ibn Abbas (தஃப்ஸீர் இப்னு அப்பாஸ்)

வசனம் 1

And from his narration on the authority of Ibn 'Abbas that he said regarding the interpretation of Allah's saying (O Prophet!): '(O Prophet!) i.e. Muhammad (pbuh). (Why bannest thou that which Allah hath made lawful for thee) i.e. marrying Maria the Copt, the Mother of Ibrahim; that is because he had forbidden himself from marrying her, (seeking to please thy wives) seeking the pleasure of your wives 'A'ishah and Hafsah by forbidding yourself from marrying Maria the Copt? (And Allah is Forgiving) He forgives you, (Merciful) about that oath.

வசனம் 2

(Allah hath made lawful for you (Muslims) absolution from your oaths (of such a kind)) and so the Prophet (pbuh) absolved himself from his oath and married Maria the Copt, (and Allah is your Protector) and Helper. (He is the Knower) He knows that you forbade yourself Maria the Copt, (the Wise) in that which He enjoined about the expiation of oaths.

வசனம் 3

(When the Prophet confided a fact unto one of his wives) i.e. Hafsah (and when she afterward divulged it) Hafsah divulged to 'A'ishah what the Prophet (pbuh) told her in confidence (and Allah apprised him thereof) and Allah informed him that Hafsah informed 'A'ishah, (he made known (to her) part thereof) part of what she said to 'A'ishah regarding the leadership of Abu Bakr and 'Umar; and it is said: about seeing Maria the Copt on his own (and passed over part) he did not mention making forbidding Maria the Copt on himself nor what he told her concerning the leadership of Abu Bakr and 'Umar after him, for he did not reproach him for this. (And when he told it her) when the Prophet (pbuh) informed Hafsah about what she said to 'A'ishah (she said) Hafsah said: (Who hath told thee) that I informed 'A'ishah? (He said) the Prophet (pbuh) said: (The Knower, the Aware hath told me) what you divulged to 'A'ishah.

வசனம் 4

(If ye twain turn unto Allah repentant) if you two, i.e. Hafsah and 'A'ishah, repent of hurting and disobeying the Prophet (pbuh) ((ye have cause to do so) for your hearts desired (the ban)) for your hearts have deviated from the Truth; (and if ye aid one another against him (Muhammad)) but if you help one another to harm and disobey him (then lo! Allah, even He, is his protecting Friend) then Allah is his Protector and Helper against you, (and Gabriel) will help him against you (and the righteous among the believers) all true believers are helpers to him against you: Abu Bakr, 'Umar, 'Uthman, 'Ali, may Allah be well pleased with, and all other true believers; (and furthermore the angels are his helpers) and the angels are with all these his helpers against you.

வசனம் 5

(It may happen) and this will surely happen (that his Lord, if he divorce you, will give him in your stead wives better than you) in obedience, (submissive (to Allah)) by stating it openly, (believing) true in their faith both with their tongues and hearts, (pious) obedient to Allah and to their husband, (penitent) from their sins, (inclined to fasting, widows) like Asiyah Bint Muzahim, the wife of Pharaoh (and maids) like Mary daughter of Amran, the mother of Jesus. (Source)

Asbab Al-Nuzul by Al-Wahidi (தஃப்ஸீர் வஹிதி:)

வசனம் 1, 2 & 3

(O Prophet! Why bannest thou that which Allah hath made lawful for thee…) [66:1]. Muhammad ibn Mansur al-Tusi informed us> 'Ali ibn 'Umar ibn Mahdi> al-Husayn ibn Isma'il al-Mahamili> 'Abd Allah ibn Shabib> Ishaq ibn Muhammad> 'Abd Allah ibn 'Umar> Abu'l-Nadr, the client of 'Umar ibn 'Abd Allah> 'Ali ibn 'Abbas> Ibn 'Abbas> 'Umar who said: "The Messenger of Allah, Allah bless him and give him peace, entered the house of Hafsah along with the mother of his son, Mariyah. When Hafsah found him with her [in an intimate moment], she said: 'Why did you bring her in my house? You did this to me, to the exception of all your wives, only because I am too insignificant to you'. He said to her: 'Do not mention this to 'A'ishah; she is forbidden for me [i.e. Mariyah] if I ever touch her'. Hafsah said: 'How could she be forbidden for you when she is your slave girl?' He swore to her that he will not touch her and then said: 'Do not mention this incident to anyone'. But she went ahead and informed 'A'ishah. The Prophet, Allah bless him and give him peace, decided not to go to his wives for a month. He stayed away from them twenty nine days when Allah, glorious and exalted is He, revealed (O Prophet! Why bannest thou that which Allah hath made lawful for thee, seeking to please thy wives?)". Abu Ibrahim Isma'il ibn Ibrahim al-Wa'iz informed us> Bishr ibn Ahmad ibn Bishr> Ja'far ibn al-Hasan al-Firyabi> Minjab ibn al-Harith> 'Ali ibn Mushir> Hisham ibn 'Urwah> his father> 'A'ishah who said: "The Messenger of Allah, Allah bless him and give him peace, used to like sweet and honey. It was also his habit to go to his wives after finishing the 'Asr prayer. In one occasion he went to Hafsah bint 'Umar and stayed with her more than he usually did. When I found out about this, I enquired about the reason and I was told that a woman from her clan gifted her with a pot of honey which she offered to the Prophet, Allah bless him and give him peace. I said to myself: by Allah I will spoil it for him. I said to Sawdah bint Zam'ah: 'When he comes to your apartment and draws closer to you, say: O Messenger of Allah, did you eat Maghafir?' When he says: 'Hafsah fed me some honey', say: 'The bees which produced it must have eaten the 'Urfut'.

வசனம் 4 & 5

(If ye twain turn unto Allah repentant, (ye have cause to do so) for your hearts desired (the ban)…) [66:4]. Abu Mansur al-Mansuri informed us> Abu'l-Hasan al-Daraqutni> al-Husayn ibn Isma'il> 'Abd Allah ibn Shabib> Ahmad ibn Muhammad ibn 'Abd al-'Aziz> his father> al-Zuhri> 'Ubayd Allah ibn 'Abd Allah> Ibn 'Abbas who said: "Hafsah found the Messenger of Allah, Allah bless him and give him peace, with Umm Ibrahim when it was 'A'ishah's turn. She said to him: 'I will definitely inform her!' The Messenger of Allah, Allah bless him and give him peace, said: 'She is forbidden for me if I touch her again'. Hafsah went ahead and informed 'A'ishah. Allah informed His Messenger of this and he let Hafsah know some of the things she said. She asked him: 'Who informed you of this?' He said: '(The Knower, the Aware hath told me) [66:3]'. The Messenger of Allah, Allah bless him and give him peace, stayed away from his wives for a month and then Allah, glorious and exalted is He, revealed: (If ye twain turn unto Allah repentant, (ye have cause to do so) for your hearts desired (the ban)…)". (Source)