ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வியாழன், 2 ஜூலை, 2015

2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

ரமளான் மாத தொடர் கடிதங்களை இங்கு சொடுக்கி படிக்கலாம். 

[நேற்று எழுதிய கடிதத்தை படித்தவுடன், உமரின் தம்பி தொலைபேசியில் அழைத்து உமருடன் பேசுகிறார். இவ்வுரையாடலில் முஹம்மதுவிற்கு பிறகு சஹாபாக்களின் நிலை, இயேசுவிற்கு பிறகு சீடர்களின் நிலை ஒப்பிடப்படுகின்றது. இவர்களில் யார் வழிகாட்டுதல் இல்லாத அனாதைகள்? தெரிந்துக் கொள்ள மேற்கொண்டு படிக்கவும். உமரின் மொபைள் அலறுகிறது, உங்களுக்கு பிடித்தமான ட்யூனை நீங்கள் கற்பனை செய்துக் கொள்ளலாம்….]

உமர்: ஹலோ, தம்பி

தம்பி: ஹலோ அண்ணா, அஸ்ஸலாமு அலைக்கும்.

உமர்: வாஅலைக்கும் ஸலாம் தம்பி. நீ எப்படி இருக்கிறாய்?

தம்பி: இது நலம் விசாரிக்கின்ற நேரமல்ல, அதை அப்புறம் விசாரித்துக் கொள்ளலாம். 

இப்போது ஒரு முக்கியமான விஷயத்துக்கு வருகிறேன். உங்களின் கடிதத்தை படித்தவுடன், உங்களுக்கு போன் செய்து, நச்சென்று நாலு கேள்விகள் கேட்கலாம் என்று நினைத்து போன் செய்தேன். உங்களுக்கு இப்போது நேரமிருக்கிறதா?

உமர்: நீ ரொம்ப கோபமாக இருக்கிறாய் போல தெரிகிறது. கோபத்தில் எதையும் பேசவேண்டாம், நாம் பிறகு பேசலாம்.

தம்பி: இல்லை.. இல்லை.. நான் கோபமாக இல்லை. இப்போதே பேசனும்.

உமர்: சரி, உன் விருப்பம். 

தம்பி: நேற்று நீங்க அனுப்பிய கடிதத்தில் அனேக தவறான விவரங்களைச் சொல்லியிருக்கிறீர்கள். அதில் ஒன்று, "சஹாபாக்கள் அனாதைகளாக விடப்பட்டார்கள்" என்றுச் சொன்னது தான்.

உமர்: உண்மை தானே! சஹாபாக்கள் அனாதைகளாகவும், சரியான வழிநடத்துதலும், உதவியும் இல்லாமலும் தங்கள்  மனம் போன போக்கில் நடந்துக்கொண்டார்கள் இல்லையா?

தம்பி: நீங்க என்ன சொல்ல வருகிறீங்க? எங்க இறைத்தூதர் சஹாபாக்களோடு நிரந்தரமாக வாழ்ந்திருக்கவேண்டும் என்றுச் சொல்கிறீர்களா? இது சாத்தியமான ஒன்றா? மனிதனாக பிறந்தவர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும், ஒரு நாள் மரணித்தே ஆகவேண்டுமல்லவா? இது கூடவா உங்களுக்கு தெரியவில்லை?

உமர்: முஹம்மது பல நூறு ஆண்டுகள் உயிரோடு இருந்திருக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லையே!

தம்பி: இப்படி இல்லையென்றால், உங்க வரிகளுக்கு வேறு என்ன அர்த்தமாம்?

உமர்: சஹாபாக்கள் அனாதைகள் என்றுச் சொன்னது, மனித வடிவில் முஹம்மது அவர்களோடு இருந்திருக்கவேண்டும் என்று  அர்த்தமில்லை.  இது சாத்தியமும் இல்லை என்று எனக்குத் தெரியும்.

முஹம்மதுவிற்கு பிறகு அவர்களை நேர் வழியில் நடத்த எந்த ஒரு ஏற்பாட்டையும் அல்லாஹ்வோ அல்லது முஹம்மதுவோ செய்யவில்லையே! என்ற அர்த்தத்தில் சொன்னேன்.

தம்பி: என்ன ஏற்பாடு தேவைப்படுகின்றது என்று நீங்க நினைக்கிறீங்க? சஹாபாக்கள் என்ன  சின்ன பிள்ளைகளா? அவர்களை கண்காணிக்க கார்டியன் (Guardian) வைத்துப்போக!  அவர்கள் அனைவரும் முதிர்ச்சி அடைந்தவர்கள், உலகத்தைப் பற்றியும் இஸ்லாம் பற்றியும் நன்கு அறிந்தவர்கள். 

இது மட்டுமல்ல, அவர்களை நேர் வழியில் நடத்த அவர்களிடம் குர்-ஆனும், சுன்னாவும் இருந்தன. மேலும் அவர்கள் முஹம்மதுவை நேரடியாக பார்த்த முதல் தர சாட்சிகளாக இருந்தார்கள். 

உமர்: என் கேள்வியும் இதைப் பற்றியது தான். குர்-ஆனும் சுன்னாவும் சஹாபாக்களை நேர்வழியில் நடத்தியிருந்தால், இப்படி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டும், எதிரிகளைப்போல கருதிக்கொண்டும் இருந்திருப்பார்களா?

முஹம்மது உயிரோடு இருந்தபோது, காணப்பட்ட அந்த ஐக்கியம் அவர் மரித்தவுடன் ஏன் காணாமல் போய்விட்டது?

தம்பி: அப்படி என்ன செய்துவிட்டார்கள் சஹாபாக்கள்?

உமர்: விடிய விடிய இராமாயணம் கேட்டு, சீதை இராமனுக்கு என்ன உறவு என்று கேட்டானாம் ஒருத்தன், அது போல இருக்கு உன் கேள்வி.

முதலாவதாக, முஹம்மது மரித்த பிறகு, ஃபாத்திமாவும், அலியும் சொத்துக்காக போட்ட சண்டையை என் கடிதங்களில் எழுதினேன்.

அண்ணன் எப்போ காலியாவான், திண்ணை எப்போ காலியாகும் என்பதற்கு ஏற்றாற்போல, முஹம்மது மரித்தவுடன் அடுத்த தலைவர் யார் என்று முடிவு செய்ய முக்கியமானவர்களுக்கும் சொல்லாமல் கூட்டம் கூடிவிட்டார்கள் அன்ஸார்கள். அங்கு சென்ற அபூ பக்கரும், உமரும் தங்களுக்குத் தான் அந்த பதவி, முஹம்மது எங்களைத் தான் தலைவராக நியமிக்க விரும்பினார் என்றெல்லாம் சொல்லி சண்டை போட ஆரம்பித்துவிட்டார்கள். 

இதுவரை மேற்கண்ட இரண்டு விஷயங்களை மட்டுமே பார்த்துள்ளோம், இன்னும் அனேக விவரங்கள் பாக்கியுள்ளது. அவைகளை சொல்வதற்கு முன்பாகவே, "சஹாபாக்கள் அப்படி என்ன செய்தார்கள்?" என்று நீ கேட்கிறாய்?  இது ஆரம்பம் தான் இன்னும் பார்க்கவேண்டியது நிறைய இருக்கிறது தம்பி. 

இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள், சஹாபாக்கள் அல்ல

தம்பி: நீங்க என்ன சொல்லவருகிறீங்க என்று எனக்கு புரியலே! 23 ஆண்டுகள் இறைத்தூதர் ஊழியம் செய்தார், குர்-ஆனை கொடுத்தார், குர்-ஆனின் விளக்கமாக தானே வாழ்ந்துவிட்டுச் சென்றார். இத்தனை வழிகாட்டுதல் இருந்தும், சஹாபாக்களை அனாதைகள் என்றுச் சொல்ல என்ன இருக்கிறது?

இன்னும் சொல்லப்போனால், இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்.  இயேசு மரித்த பிறகு அவர்களிடம் புதிய ஏற்பாடு இல்லை, குறைந்த பட்சம் நற்செய்தி நூல்களும் அவர்களிடம் இல்லை.  அவர்கள் மத்தியிலே இயேசு வாழ்ந்த 3.5 ஆண்டுகள் தான் இவர்களின் சொத்துக்களாக இருந்தது. ஆக, இஸ்லாமோடு ஒப்பிடும் போது:

  1. சஹாபாக்களிடம் --> குர்-ஆன் இருந்தது மற்றும் சுன்னா இருந்தது (23 ஆண்டுகால முஹம்மதுவின் வாழ்க்கை)
  2. அப்போஸ்தலர்களிடம் --> புதிய ஏற்பாடு இல்லை, நற்செய்தி நூல்கள் இல்லை, இயேசுவின் சுன்னா மட்டும் இருந்தது அதுவும் 3.5 ஆண்டுகள் மட்டும் தான்.

சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள், சஹாபாக்கள் அல்ல. 

இப்போது உங்களுக்கு சரியாக புரிந்திருக்குமே! நச்சென்று உச்சந்தலைக்கு காரம் ஏறியிருக்குமே!

உமர்: தம்பி, நீ முன்னேறி விட்டாய் என்று நினைக்கிறேன். லாஜிக்கை நல்லா பிடிக்கிறாயே!

தம்பி: உங்களிடம் பதில் இல்லையா?!? அதனால் தான் சொல்கிறேன், அதிகமாக இஸ்லாமோடு விளையாடாதீர்கள், "மாட்டேன்" என்று அடம் பிடித்தால், இப்படி மூக்கு அறுக்கப்பட்டுப் போகவேண்டி வரும். இது எப்படி இருக்கு?

உமர்: நான் இன்னும் முடிக்கவில்லையே தம்பி. யாருடைய மூக்கு அறுக்கப்போகுது என்று கடைசியில் தானே தெரியும். என் தரப்பு வாதத்தை நான் வைக்கட்டும். தம்பி, இப்புடு சூடு!?! [தமிழே பாதி தான் வரும், இதில் தெலுங்கு வேறா…]

சஹாபாக்களை குர்-ஆனும், ஹதீஸ்களும் நேர் வழியில் நடத்தியிருந்தால், அவர்கள் ஒருவரை ஒருவர் கடித்துக் கொண்டு, வசை மொழிகளை கூறிக்கொண்டு, அடித்துக் கொண்டு செத்து இருந்திருக்கமாட்டார்கள். இவர்களை குர்-ஆனும், சுன்னாவும் நேர் வழியில் நடத்தவில்லை என்பது தான் உண்மை.

இயேசுவின் சீடர்கள் அனாதைகளாக வாழவில்லை, அவர்கள் நேர் வழியில் நடத்தப்பட்டார்கள்.

தம்பி: உங்களால் பதில் சொல்லமுடியவில்லை என்பதால்,  எதையோ சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்.

உமர்: உனக்கு தெளிவாக விளக்குகிறேன்.  

நாம் இந்த வருடம் ரமளான் மாதத்தில், சஹாபாக்களின் நடபடிகளை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இதுவரை ஐந்து சதவிகிதம் கூட நான் எழுதி முடிக்கவில்லை. அதற்குள், நீ சஹாபாக்களை இயேசுவின் அப்போஸ்தலர்களோடு ஒப்பிட முந்திவிட்டாய். இந்த ஒப்பிடுதலை நான் கடைசியில் செய்யலாம் என்று விரும்பியிருந்தேன், ஆனால், நீ கேள்வியை இப்போதே கேட்டபடியினால், ஒரு சுருக்கத்தை உனக்குத் தருகிறேன். இதனை ஞாபகத்தில் வைத்துக்கொள், அதாவது, சஹாபாக்களின் நடபடிகளில் இன்னும் 95% சதவிகித விவரங்களை நாம் நம் உரையாடல்களில் தொடவே இல்லை.

அப்போஸ்தலர்கள் நேர்வழியில் நடத்தப்பட்டார்கள் (Rightly Guided Apostles)

இயேசுவின் சீடர்கள் நேர்வழியில் நடத்தப்பட்டார்கள் (Rightly Guided Apostles) என்பதை இப்போது விளக்குகிறேன்.  இந்த தொடர்கள் அனைத்தும் முடிக்கும்  போது, முஹம்மதுவின் சஹாபாக்கள் தவறான வழியில் நடத்தப்பட்டார்கள் (Wrongly Guided Caliphs) என்பதை நீயே புரிந்துக் கொள்வாய்.

தம்பி: போதும் போதும்… முதலில் இயேசுவின் சீடர்கள் எப்படி அனாதைகள் இல்லை என்பதை விளக்குங்கள். எனக்கு வளவளவென்று பேசிக்கொண்டு இருக்க நேரமில்லை.

உமர்: அடப்பாவமே!  நீ தானே என்னை அழைத்து உடனே பேசனும் என்றுச் சொன்னாய்!  இப்போது அப்படியே தலைகீழாக பேசுகிறாயே! நீ அவசரக்காரணுக்கு தம்பியாக இருப்பாய் போல் இருக்கிறதே!

தம்பி: உங்களின் கடைசி வரியை நான் மனப்பூர்வமாக அங்கீகரிக்கிறேன் [கிண்டலாக சிரிக்கிறார்….]

உமர்: சிரிப்பாய் தம்பி, சிரிப்பாய்…. 

சரி போகட்டும் விவரத்திற்கு வருகிறேன்,

அப்போஸ்தலர்களை இயேசு எப்படி வழிநடத்தினார் என்பதை உனக்கு விளக்குகிறேன். 

நீ அப்போஸ்தலர் நடபடிகளை வாசிக்கும்போது, சீடர்களோடு எப்படி தேவன் இடைப்பட்டார் என்பதை கவனிக்கமுடியும். அதே நேரத்தில், சஹாபாக்களை எப்படி அல்லாஹ் அம்போ என்று விட்டுவிட்டார் என்பதையும் ஒப்பிட்டு பார்க்கமுடியும்.

அப்போஸ்தலர்கள் நடபடிகள்சஹாபாக்கள் நடபடிகள்
இயேசுவின் ஊழியம் 3.5 ஆண்டுகள்
முஹம்மதுவின் ஊழியம் 23 ஆண்டுகள்.
இயேசுவின் சொல்லும் செயலும் மட்டுமே அவர்களின் சொத்து. பழைய ஏற்பாடு அவர்களிடம் இருந்தது.
குர்-ஆனின் 6236+ வசனங்களும், 23 ஆண்டுகால சுன்னாவும் (முஹம்மதுவின் சொல்லும் செயலும்)
உலக பிரகாரமாக, இயேசுவின் உடன் பிறந்த சகோதரர்கள் கூட அவருடைய சீடராகவில்லை. இயேசுவின் தாய் மரியாள் விசுவாசியாக இருந்தார்கள்.
முஹம்மதுவிற்கு பெண் கொடுத்த மாமனார்கள், முஹம்மதுவின் மருமகன்கள், இதர சொந்தக்காரர்கள், மதினா முஸ்லிம்கள், இதர முஸ்லிம்கள் இருந்தார்கள்.
தலைவர்கள்: பேதுருவும், யோவானும். இவர்களை இதர சீடர்கள் தலைவர்களாக அல்லது முக்கியமான முடிவுகளை எடுக்கக்கூடியவர்களாக கண்டார்கள். இயேசுவும் பேதுருவை "சீடர்களை வழி நடத்தும் படி தயார் படுத்தியிருந்தார்".  பார்க்க யோவான் 21:15-17
தலைவர்கள்: முஹம்மதுவிற்கு நெருங்கிய தோழர்களில், சிலர் தாங்கள் தலைவராக வேண்டும் என்றனர், ஒருவர் "இன்னார் தலைவராக வரும்வரை நான் உருவிய வாளை உறையில் போடுவதில்லை" என்றார்.  அன்ஸார்கள் தாங்கள் தான் தலைவர் பதவிக்கு தகுதியானவர்கள் என்றனர், முஹாஜிர்கள் தங்களுக்கு தலைவர் பதவி வேண்டுமென்றனர்.  இவர்கள் மத்தியிலே ஒருமனம் இல்லை.
அப்போஸ்தலர்கள் இயேசுவின் சொல்லையும் செயல்களையும் மனதில் பதித்து இருந்தனர்.
சஹாபாக்கள் முஹம்மதுவின் சொல்லையும் செயல்களையும் மனதில்  பதித்து இருந்தனர். குர்-ஆனை முழுவதுமாக மனப்பாடம் செய்தவர்களும் இருந்தார்கள் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.
இயேசு மரித்தார், உயிர்த்தெழுந்தார், 40 நாட்கள் அவர்களோடு அனேக காரியங்களை பேசினார், சீடர்களை தயார்படுத்தினார்.
முஹம்மது மரித்தர், மண்ணோடு மண்ணாக மாறிவிட்டார். சஹாபாக்களை தயார்படுத்தவில்லை, தனக்குப்பிற்பாடு யார் தலைவர் என்று தெளிவாக சொல்லிவைக்கவில்லை, எழுதியும் வைக்கவில்லை.
இயேசுவின் சீடர்களிடம் ஒருமனம் இருந்தது.
சஹாபாக்களிடம் ஒருமனம் தவிர்த்து மற்ற அனைத்தும் இருந்தது.
இயேசு பரலோகம் சென்றார், பரிசுத்த ஆவயானவர் சீடர்களிடம் வந்தார். உங்களை நான் திக்கற்றவர்களாக விடேன் என்றார் (பார்க்க யோவான் 14:16-18, 6:7-11)
முஹம்மது மரித்தார், ஜிப்ராயீல் தூதனும் தன் ஜிராக்ஸ் கடையை முடிவிட்டு சென்றுவிட்டார் (இனி ஜிராக்ஸ் எடுக்க ஒன்றுமில்லை என்பதால், அவர் சென்றுவிட்டார் என்று முஸ்லிம்கள் சொல்லுவார்கள்)
சீடர்கள் ஒருமனப்பட்டு, தங்கள் ஆஸ்திகளை நிலங்களை விற்று பொதுவாக அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள். (அப் 2:45,46)
தந்தை மரித்த அடுத்த நாளே தனக்கு ஆஸ்திகளை கொடுங்கள் என்று சண்டை போட்ட மகள் ஃபாத்திமா. ஆறு மாதங்கள் இதனால் அபூ பக்கரிடம் பேசாமல் இருந்து அப்படியே மௌனமாக மரித்துவிட்டர். ஆஸ்திக்காக மருமகனும், முஹம்மதுவின் இதர மனைவிகளும், சொந்தக்காரர்களும் போட்டி போட்டனர். 

முஹம்மது மரித்த பிறகு, சஹாபாக்கள் தங்கள் இச்சைகளின் படி வாழ ஆரம்பித்தனர். இவர்களை வழி நடத்த யாருமே இல்லை, பெற்றோர்கள் இருந்தும் அனாதைகளாகவும், பிள்ளைகள் இருந்தும் மலடிகளாகவும் காணப்படும் மக்களைப் போல இவர்களும் வாழ்ந்தார்கள். 

தம்பி: இன்னும் நீங்கள் "இயேசுவின் சீடர்கள் அனாதைகள் இல்லை என்று நிருபிக்கவில்லையே!".

உமர்: வருகிறேன்.. வருகிறேன். 

அ) இயேசுவைப் போல அற்புங்கள் செய்த சீடர்கள்: 

அற்புதங்களும் அடையாளங்களும் சீடர்கள் மூலமாக இயேசு செய்தார். இதனால், இவர்களுக்கு மக்கள் கீழ்படிந்தார்கள், இவர்களின் வார்த்தைகளுக்கு தெய்வீக அங்கீகாரம் உள்ளது என்பதை மக்கள் கண்டனர், இந்த வசனங்கள் ஒவ்வொன்றிலும்  ஒரு அற்புத அடையாளமுண்டு, நீயே இவைகளை படித்துப் பார் தம்பி: அப் 3:1-11, 5:15-16, 5:19-20, 8:5-13, 9:32-42, 12:7-17, 13:8-11, 14:8-10, 16:16-18, 16:24-33, 19:11-20.

ஆனால், சஹாபாக்கள் முஹம்மதுவைபோல, சண்டைபோட்டார்களே  தவிர, தெய்வீக கரம் இவர்களோடு இருந்தது என்பதற்கு அடையாளமாக எந்த அற்புதமும், அடையாளமும் சஹாபாக்கள் செய்யவில்லை. சஹாபாக்கள் மூலமாக அல்லாஹ் செய்யவில்லை.

ஆ) பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலர்களுக்கு வழிகாட்டியாக இருந்தார்:

இயேசுவின் சீடர்களுக்கு வழிகாட்டியாக பரிசுத்த ஆவியானவர் இருந்தார், தேவைப்படும் நேரத்தில் சரியான வழியில் அவர்களை நடத்தினார் (பார்க்க அப்: 8:26-40, 13:2-4, 16:6-7).

சீடர்களுக்கு தரிசனங்கள் மூலமாக வழி காட்டினார், (பார்க்க அப் 10:1-48, 16:9-10). 

இவர்களையா தம்பி நீ அனாதைகளென்றுச் சொல்கிறாய்? இப்படிப்பட்ட வழிகாட்டல்கள் சஹாபாக்களுக்கு இல்லை என்பதால், அவர்களை அனாதைகள் என்றேன்.

தேவன் தீர்க்கதரிசிகளை எழுப்பி சபை செய்யவேண்டிய காரியங்களை முன்கூட்டியே சொன்னார் (பார்க்க அப் 11:27-30). இயேசு தரிசனத்தில் காணப்பட்டு, பவுலை பலப்படுத்தினார் (பார்க்க 18:9-10)

இப்படி பல வகைகளில், தேவனின் கரம் அப்போஸ்தலர்களோடு இருந்து, வழி காட்டியது. 

இஸ்லாமை எடுத்துக் கொண்டால், நான் ஒருவன் (அல்லாஹ்) எனக்கு ஒருவன் (முஹம்மது) அவ்வளவு தான் கதை முடிந்துவிட்டது. முஹம்மதுவிற்கு பிறகு மக்கள் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? சஹாபாக்களுக்கு குர்-ஆன் வழிகாட்டிவிடும் என்ற ஆசையில் அல்லாஹ் கவனக்குறைவாக இருந்துவிட்டார் என்று சொல்லத் தோன்றுகிறது.

இ) சீடர்களின் பரம எதிரியை, பரலோக நண்பனாய் மாற்றினார்:

சவுல் என்ற பெயரில் ஒரு யூத அறிஞன், சீடர்களை துன்புறுத்திக் கொண்டு இருக்கும் போது, இயேசு அவனை சந்தித்து, இரட்சித்து, சபையிலே சேர்த்தார், இவர் தான் பவுல், இவரை அறியாமல் தற்கால முஸ்லிம்கள் இருக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன் (பார்க்க அப் 9:1-30).

இப்படி, இயேசுவின் சீடர்களோடு, பரிசுத்த ஆவியானவர் இருந்தார், தேவைப்படும் போதெல்லாம் வழி காட்டினார். ஆனால், இப்படிப்பட்ட வழிகாட்டுதல் இஸ்லாமிலே எங்கே என்று தேடிப்பார் தம்பி.

முஹம்மது உயிரோடு இருந்தபோது,  அற்பமான விஷயங்களுக்கெல்லாம், ஓடிப்போய் குர்-ஆன் வசனங்களை கொண்டு வந்த ஜிப்ராயீல் தூதன், சஹாபாக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு, கழுத்தை வெட்டிக்கோண்டு செத்துக் கொண்டுஇருக்கும் போது ஏன் ஒரு முறை கூட வரவில்லை?  

சஹாபாக்களும் மனிதர்கள் என்பதால், அவர்களுக்கு வழிக்காட்டல் தேவைப்பட்டது. குர்-ஆனை தனக்கு ஏற்றாற்போல பொருள் கொள்வதும், எதைச் செய்தாலும், முஹம்மது இப்படிச் சொன்னார் என்று சாக்கு சொல்லிக்கொண்டு, இதர முஸ்லிம்களை ஈவு இரக்கமின்றி கொல்வதும், சஹாபாக்களின் வாழ்வில் அனுதின நிகழ்வு ஆகிவிட்டது. இதற்கு ஒத்தாசையாக குர்-ஆனின் வசனங்கள் இருந்தது தான் முக்கியமான காரணம். வேலியே பயிரை மேய்ந்தால், யாரிடம் சென்று முறையிடுவது? குர்-ஆனை அடிப்படையாக வைத்து தான் அனைத்து தீய செயல்கள் இஸ்லாமிய ஆரம்ப காலத்தில் நடந்தது.

முதல் நான்கு கலிபாக்கள் "நேர் வழி நின்ற கலிஃபாக்கள் அல்ல, கோணலான வழிநின்ற கலிஃபாக்கள்" ஆவார்கள். இதற்கு முழுவதுமாக பொறுப்பேற்கவேண்டியவர், குற்றவாளி கூண்டில் நிற்கவேண்டியவர் "அல்லாஹ்" தான்.  இந்த விஷயத்தில் முஹம்மதுவையும் நான் குற்றவாளியாக தீர்க்கமாட்டேன், அவர் வெறும் அம்பு தான், எய்தவனுடையது தான் எல்லா குற்றமும்.

தம்பி: போதும் நிறுத்துங்கள்! உங்களுக்கு அவசர அவசரமாக போன் செய்து பேசினேன் பாருங்கள், என் புத்தியை ….

உமர்: வேண்டாம் தம்பி, உன் புத்தியை திட்டாதே, அதை சரியாக தீட்டு. 

தம்பி: வாய் ஜாலம் எல்லாம் போதும், அடுத்த முறை பார்க்கலாம்.  ஒரு நாள் உங்களை நான் சரியான லாஜிக்கை வைத்து வாரப்போகிறேன் பாருங்க, அப்போது, துண்டைக்காணும், துணியக்காணும் என்று நீங்க ஓடப்போறீங்க. 

உமர்: என்ன தான் இருந்தாலும், நீ என் தம்பி உன்னிடம் தோற்பது எனக்கு பெரிய பிரச்சனை இல்லை. ஆனால், கிறிஸ்தவத்தை யாரிடமும் தோற்கவிடமாட்டேன். நீ தோற்றுப்போகும் பக்கத்தில் இருக்கிறாய் அல்லவா… அதை நெனச்சாத் தான்…

[கால் கட்டாகி விட்டது… பீப்… பீப்… பீப்… மறுபடியும் கால் செய்தால், "நீங்கள் அழைத்த இந்த எண் இப்போது உபயோகத்தில் இல்லை" என்ற சத்தம் வருகிறது…]

உமர்: ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டியா…. அடுத்த முறை நான் கடிதம் எழுதாமல் இருப்பேனா… நீ படித்து மறுபடியும் எனக்கு கால் பண்ணாமல் தான் இருக்கப்போகிறாயா… பார்த்துக் கொள்ளலாம் தம்பி…. 

அன்பான ஆண்டவரே, என் தம்பியை இரட்சியும்.

தேதி: 2 ஜூலை 2015


உமரின் ரமளான் கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: http://www.answeringislam.org/tamil/authors/umar/ramalan/ramalan2015day10.html


கருத்துகள் இல்லை: