ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

திங்கள், 24 டிசம்பர், 2018

நீங்களும் கடவுளே, நானும் கடவுளே மற்றும் நாம் அனைவரும் கடவுளே - இது சரியா?

நீங்களும் கடவுளே, நானும் கடவுளே மற்றும் நாம் அனைவரும் கடவுளே - இது சரியா?

நமக்கு வந்த ஒரு மெயில்:

From:  Hxxxxxxxxx 

Date: Jul 17, 2018, 2:10 AM

அன்பு தான் கடவுள் என்று நினைக்கிறேன். என்னை பொருத்தவரை இயேசுவும் கடவுளே, நீங்களும் கடவுளே, நானும் கடவுளே மற்றும் நாம் அனைவரும் கடவுளே. அதாவது கடவுளின் தன்மைக்கு (அன்பு) அதிகமாக முயற்சி செய்யும் உயிரினங்கள்.

இறைவனிடம் அன்பு மட்டும் தான் இருக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன்.

சூரியனில் எவ்வாறு நிழல் இல்லையோ, அவ்வாறே இறைவனிடம் தண்டனை என்ற குணம் இருக்காது.

என்னுடைய இந்த விசுவாசம் சரியானதா? அல்லது தவறானதா?

(நான் இஸ்லாமியன் இல்லை).


எங்களுடைய பதில்:

அன்பான சகோதரருக்கு,

உங்கள் கேள்விக்காக மிக்க நன்றி. தாமதமான பதிலுக்காக மன்னிக்கவும்.

உங்களுடைய வரிகளில் கீழ்கண்ட விவரங்கள் தெரிகின்றன.

1) உலகத்தில் பிறந்த அனைவரும் கடவுள்கள் தான்.

2) இறைவனிடம் அன்பு மட்டும் தான் இருக்கும், தண்டனை கொடுக்கும் குணம் இருக்காது.


1) உலகத்தில் பிறந்த அனைவரும் கடவுள்கள் தான்

(இக்கருத்தை கடவுள் ஏற்றுக்கொள்வாரா?)

மேலோட்டமாக பார்த்தால், "உலகத்தில் பிறந்த அனைவரும் கடவுள்கள் தான்" என்ற‌ நம்பிக்கை சரியானதாக தோன்றும். பொதுவாக, ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு காட்ட நேரமில்லாதவர்கள், ஆன்மீக விவரங்களை அதிகமாக ஆய்வு செய்யாதவர்கள், நம்புவது இப்படித்தான். மேலும் இந்தியா போன்ற நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் தோன்றும் புதிய சாமியார்கள் அல்லது ஆன்மீக குருக்கள், தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள இப்படிப்பட்ட 'ஆன்மீகத்தைச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்'.

"நீயும் கடவுள் தான், நானும் கடவுள் தான், எல்லோரும் கடவுள் தான்" என்பது ஒரு தனிப்பட்ட நபரின் நம்பிக்கை, அது நிஜமாவதில்லை. அதே நேரத்தில் இப்படி நம்புவதில் தவறில்லை.

"நான் இப்படி நம்புகிறேன்" என்று நீங்கள் சொன்னால், அது உங்கள் உரிமை. ஆனால், நாம் வாழும் உலகை நீங்கள் கூர்ந்து கவனித்தால், உங்களுடைய‌ நம்பிக்கைக்கு எதிராக உலகம் ஓடிக்கொண்டு இருப்பதை காணமுடியும். அதாவது, "இந்த நம்பிக்கை தவறு" என்று உலகம் நம்மிடம் அடித்துச் சொல்வதை காணமுடியும்.

எல்லோரும் கடவுள்கள் என்பது சாத்தியமா?

கடவுள் கடவுள் தான், மனிதன் மனிதன் தான். 

மனிதன் கடவுள் ஆகமுடியாது. (ஆனால், கடவுள் மனிதன் ஆகமுடியும். இதைப் பற்றி வேறு ஒரு கட்டுரையில் பார்க்கலாம், தேவைப்பட்டால்).

கடவுள் என்றால் யார்? என்ற ஒரு வரையறையைச் சொல்லாமல், நாம் நம் கருத்தை சொல்லிக்கொண்டு இருக்கிறோம் (அடக்கடவுளே!, நான் எப்படிப்பட்டவன் என்று நான் சொல்லாமலேயே, என்னைப் பற்றி இப்படியெல்லாம் மக்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்களே, என்று கடவுளே ஆச்சரியப்படுவார்).

அனேக விஷயங்களில் மனிதர்கள் ஒருவர் சொல்லும் வரையறையை மற்றொருவர் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஆனால், கடவுள் பற்றி ஒருவர் சொல்லும் வரையறையை உலக மக்கள் அனைவரும் ஒருமித்த கருத்தாக‌ ஏற்றுக்கொண்டதாக சரித்திரம் இல்லை, இனியும் அப்படிப்பட்ட ஒரு நிலை வரப்போவதும் இல்லை. 

கடவுள் வானத்தில் பிரமாண்டமாக‌ தோன்றி, உலக மக்கள் அனைவரும் காணும் படி மேகங்களில் வந்து, "நான் தான் கடவுள், இனியும் நீங்கள் என்னை மறுக்கமுடியாது" என்று அவர் சொன்னால் தான், மக்கள் அனைவரும் கடவுளை நம்புவார்கள். ஆனால், அப்படி அவர் வரும் போது, அதுவரை அவரை நம்பவேண்டிய படி நம்பாதவர்களுக்கு அவர் இன்னொரு வாய்ப்பை தருவாரா என்பது தான் முக்கியமான கேள்வி. 

இது ஒரு பக்கம் இருக்கட்டும், இப்போது 'எல்லோரும் கடவுள் தான்' என்ற கருத்து நடைமுறைக்கு சாத்தியமா? என்பதை கவனிப்போம். 

நடைமுறை சாத்தியமற்ற கருத்து:

'எல்லோரும் கடவுள் தான்' என்ற கருத்து நடைமுறைக்கு சாத்தியமற்றது, இதனை புரிந்துக்கொள்ள‌ சில உதாரணங்கள்:

  • ஒவ்வொரு மனிதனும் கடவுள் என்றால், ஏன் ஊருக்கு ஊர் காவல் நிலையம் உள்ளது? ஏன் நீதிமன்றங்கள் உள்ளன?
  • திருட்டு, கற்பழிப்புக்கள், ஏமாற்றுதல் போன்ற தீய காரியங்களை ஏன் மனிதன் (அதாவது கடவுள்) செய்கின்றான்.
  • ஒரு கடவுள் இன்னொரு கடவுளை ஏன் கொலை செய்கின்றான்? அதாவது ஒரு மனிதன் ஒன்னொரு மனிதனை ஏன் கொலை செய்கின்றான்?
  • மனிதர்களால் உலகில் நடக்கும் அனைத்து தீய செயல்களைக் கண்டால், "மனிதன் ஒரு போதும் கடவுள் ஆகமுடியாது" என்ற முடிவுக்குத்தான் வரவேண்டியுள்ளது. இதனை மறுக்கமுடியுமா?
  • இரக்கம் இல்லாமல் சிறுமிகளை, பெண்களை கற்பழிப்பவன் கூட உங்களின் கருத்துப்படி கடவுளா? நிச்சயமாக இல்லை. சில கடவுள்கள் (மனிதர்கள்) கிழவிகளையும் கற்பழித்துள்ளார்கள் என்று செய்திகளில் வாசிக்கிறோம், இவர்கள் மனிதர்களா! கடவுள்களா! 
  • உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு, தானும் செத்தும் மற்றவர்களையும் கொல்பவன் கடவுளா? நிச்சயமாக இல்லை.

மேற்கண்ட நாட்டு நடப்புக்கள், "மனிதன் கடவுள் ஆகமுடியாது" என்று சொல்லாமல் சொல்கின்றன.

தற்காலிக கடவுள்கள் உண்டு:

ஒரு ஏழை கஷ்டத்தில் இருக்கும் போது, அவனுக்கு ஒருவன் உதவி செய்தால், உதவி செய்தவனைப் பார்த்து, அந்த ஏழை 'நீங்க தான் என் கடவுள்' என்றுச் சொல்வான். உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் நபருக்கு, மருத்துவம் செய்து பிழைக்கவைத்தால், அந்த  மருத்துவரைப் பார்த்து, "நீங்கள் தான் என் கடவுள்" என்று உயிர் பிழைத்தவனும், அவன் குடும்பத்தாரும் சொல்வார்கள். (அவர்கள் இப்படி சொல்வதால், உதவி செய்தவரை இவர்கள் கடவுளாக்கிவிட்டு, தினமும் இவரை வணங்குவார்கள் என்று அர்த்தமல்ல. அவர்கள் இந்த அர்த்தத்தில் அவர்களை கடவுள் என்று அழைக்கவில்லை. கடவுளைப்போல வந்து உதவி செய்தார் என்ற நன்றி உணர்வு பொங்க அவர்களை கடவுள் என்று சொல்கிறார்கள் என்பதை மறக்கக்கூடாது.)

ஆக, நாம் அனைவரும் கடவுள் அல்ல, ஆனால், சில வேளைகளில் 'நல்ல செயல்களை செய்தால்' நம்மை பகுதி நேர கடவுளாக (Part-time gods) இவ்வுலகம் தற்காலிகமாக‌ பார்க்கும், இதனை நாம் அங்கீகரித்தே ஆகவேண்டும்.

இங்கு இன்னொரு விஷயம், மேற்கண்ட உதாரணங்களில் ஏழைக்கு உதவியவனும், உயிரைக்காத்த மருத்துவரும், கடவுள்கள் அல்ல. அவர்களின் வாழ்க்கையை பார்த்தால், வேறு காரியங்களில் அல்லது மற்றவர்களிடம் கடவுளாக அவர்கள் நடந்துக்கொண்டு இருந்திருக்க மாட்டார்கள்.  அவர்களும் தீமை செய்பவர்களாகவே இருப்பார்கள். ஒரு மனிதனால் எல்லா நாட்களும், எல்லா நேரங்களிலும், எல்லா மனிதர்களுக்கும் நன்மை (கடவுளாக முடியாது) செய்யமுடியாது என்பது தான் நிஜம்.

  • அந்த ஒரு குறிப்பிட்ட  நாள், 
  • அந்த ஒரு குறிப்பிட்ட  செயல், 
  • அந்த ஒரு குறிப்பிட்ட நபருக்கு 
  • அவர்கள் கடவுளாக காணப்படுவார்கள், அவ்வளவு தான்.

அந்த ஏழைக்கு வேறு ஒரு நபர், வேறு ஒரு சூழ்நிலையில் உதவி செய்தால், அவனையும் 'கடவுள்' என்று தான் அவன் அழைப்பான். உதவியைப் பெற்ற ஏழையைப் பொருத்தமட்டில், உதவி செய்பவன் யாராக இருந்தாலும் சரி, அவன் கடவுள் ஆவான்.

அடுத்ததாக, "நீயும் கடவுள் நானும் கடவுள்" என்று நம்புவது ஆபத்தானதாகும். 

பேருந்து அல்லது இரயில் நிலையத்தில் எந்த ஒரு கடவுளையும் (மனிதனையும்) நம்பி, நம் பணப்பையை கொடுத்துச் செல்வது ஆபத்தானது. இப்படி செய்பவனைப் பார்த்து உலகம் சிரிக்கும். அனைவரும் கடவுள் என்றால், அவனிடம் பயப்படாமல் பணப்பையை கொடுத்துச் செல்லலாமே! அப்படி யாருமே செய்யமாட்டோம், ஏனென்றால் "அனைவரும் மனிதர்கள் தான்" என்று நம் அடிமனதுக்கு நன்றாகத்தெரியும்.

கடைசியாக, காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள் எப்போது  இல்லாமல் போகுமோ,  இராணுவம்  இல்லாமல் நாடுகள் இருக்குமோ, பயங்கரமான விளைவுகளை கொடுக்கும் ஆயுதங்களை நாடுகள் அதிகமாக வாங்கி சேமித்துக்கொள்ளாமல் இருக்குமோ,  அன்று  'நீயும் கடவுள், நானும் கடவுள், எல்லோரும் கடவுள் என்று' சொல்லிக்கொள்ளலாம். அதுவரை இப்படி நாம் சொல்லமுடியாது, மன்னிக்கவும் சொல்லக்கூடாது.

நடைமுறைக்கு முரணான கருத்து தான் 'நீயும் கடவுள், நானும் கடவுள், எல்லோரும் கடவுள்' என்று நம்புவது.

இப்போது அடுத்த  பாயிண்டுக்குப்போவோம்.

2) இறைவனிடம் அன்பு மட்டும் தான் இருக்கும், தண்டனை தரும் குணம் இருக்காது:

இப்படி யார் சொன்னது? கடவுள் சொல்லியுள்ளாரா? என்ற கேள்வி கேட்கவேண்டி இருக்கிறது.

நீங்கள் கீழ்கண்ட விதமாக கூறினீர்கள்:

//இறைவனிடம் அன்பு மட்டும் தான் இருக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன்.

சூரியனில் எவ்வாறு நிழல் இல்லையோ, அவ்வாறே இறைவனிடம் தண்டனை என்ற குணம் இருக்காது.//

இங்கும் நாம் "கடவுள் யார்?" என்ற வரையறையை கொடுக்கவில்லை, ஆனால், கடவுளிடம் இருக்கவேண்டிய ஒரு குணத்தை சுட்டிக்காட்டிவிட்டோம். அந்த ஒரு குணம் தான் கடவுளிடம் இருக்கவேண்டும் அல்லது இருக்கும் என்று நம்பிவிட்டோம். இதனை அந்த கடவுள் ஏற்றுக்கொள்ளவேண்டுமே!

இதிலும் ஒரு குறை உள்ளது.  இறைவன் அன்பாக இருக்கிறான் என்பது உண்மை தான். ஆனால், அன்பு என்றால் என்ன? அது என்ன செய்யும்? அது என்ன செய்யாது என்ற விவரத்தை நீங்கள் சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என்றே நான் கருதுகிறேன். 

ஒரு உதாரணம்:

ஒரு அன்பான தகப்பன், தன் 10 வயது மகன் சாலையில் புகைபிடித்துக்கொண்டுச் செல்வதைப் பார்த்தால் என்ன செய்வான்? அவனை கண்டிப்பான் அல்லவா? அவன் திருந்தாமல் மறுபடியும் அப்படியே செய்தால், அடிக்கவும் செய்வான் அல்லவா? அன்பு இருந்தால் அடிப்பாரா? என்று நாம் கேள்வி கேட்டால் நம்மை விட அறிவீனன் யாருமே இருக்கமுடியாது. அன்பு இருப்பதினால் தான் தகப்பன் அடிக்கிறான் என்பது தானே சரியான பதில். நம் ஊர்களில் சிறுவர்கள் புகை பிடிப்பதை நாம் பார்த்தால், உடனே அதட்டுவோம் அவ்வளவு தான், அடிக்கமாட்டோம், ஏனென்றால், அவர்கள் நம் பிள்ளைகள் இல்லையே! அச்சிறுவர்களை அவர்களின் பெற்றோர்கள் பார்த்தால் திருந்தும் வரை அடிப்பார்கள், அல்லது பல வகையான தண்டனைகளைக் கொடுப்பார்கள்.

அதே குழந்தை வாலிபனாகி படிக்கவேண்டிய வயதில் படிக்காமல் ஊர் சுற்றிக்கொண்டு, புகைபிடித்தல், குடித்தல் போன்ற தீய செயல்களில் ஈடுபடும் போது, தந்தையின் அன்பு என்ன செய்யும்? அவன் நேர்வழி அடையும் படி, தன் தீய செயல்களை விடும் விதத்தில் சில தண்டனைகளை கொடுக்காதா?

தண்டனை என்பது கெட்ட குணமல்ல, அதுவும் அன்பின் ஒரு பாகம் தான்.

நான் என் மகனை நேசிக்கிறேன் எனவே, அவனை தண்டிக்கமாட்டேன் என்று ஒருவர் சொன்னால், நாளைக்கு அந்த பிள்ளை வாழ்க்கையை தொலைத்துக்கொண்டு, தீய செயல்களை அதிகமாக செய்ததால், சிறைக்குச் சென்றால் அல்லது எயிட்ஸ் போன்ற வியாதிகளால் பீடிக்கப்பட்டு மரணத்தை சந்தித்தால், இதற்கு யார்  காரணம்? அந்த தகப்பன் தானே! இப்படிப்பட்ட குணத்தை அன்பு என்று சொல்லமாட்டோம். தவறு செய்யும் போது, திருந்தும் வகையில் தண்டனை கொடுப்பதும், நல்வழியில் நடத்துவதும் உண்மையான அன்பு என்றே அழைக்கப்படும்.

எனவே, இறைவன் என்றால் அவனிடம் அன்பு இருக்கும், தண்டனை கொடுக்கும் குணம் இருக்காது என்றுச் சொல்வது தவறான கோட்பாடு ஆகும். குற்றம் செய்பவர்களை நீதிபதி தீர்ப்பு எழுதி தண்டிக்கிறார் என்றால், அதன் அர்த்தம் என்ன? அவர் செய்தது தீய செயலா? இல்லையே!

அன்பு என்றால் குறைந்தபட்சம் கீழ்கண்டவைகளின் கூட்டு குணமாகும்.

அன்பு = நேசித்தல் + வழி காட்டுதல் + கடிந்துக்கொள்ளுதல் + சகித்துக்கொள்ளுதல் + சீர்திருத்துதல் + தண்டித்தல் + தேவைப்பட்டால் உயிரையும் கொடுத்தல் + ...

 நீதிமொழிகள்  13:24 

பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்.

 நீதிமொழிகள்  29:15 

பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.

அன்பிலிருந்து நீங்கள் தண்டையையும், கடிந்துக்கொள்ளுதலையும் பிரிக்கமுடியாது. ஏனென்றால் யாரை நாம் அதிகமாக நேசிக்கிறோமோ, அவர்கள் தீயவைகளை செய்தால் கடிந்தும் கொள்ளுவோம், தேவைப்பட்டால் திருந்தும் படி தண்டனையும் கொடுப்போம். கடிந்துக்கொள்ளாத, தண்டனை கொடுக்காத அன்பு, முழுமையான அன்பு ஆகாது, அது ஆபத்தானது.

எபிரெயர் 12:5-7

5. அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.

6. கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்.

7. நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?

வெளி 3:19

நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.

முடிவுரை:

எல்லோரும் கடவுள் தான் என்று யாராவது உங்களுக்கு போதித்தால், அவர்கள் உங்களை உண்மையான கடவுளிடமிருந்து பிரிக்கப்பார்க்கிறார்கள் என்று பொருள். மனிதனை மனிதனாக பாவித்து நடந்துக்கொண்டாலே போதும். அதாவது உங்களை நீங்கள் நேசிப்பது போல, மற்றவர்களையும் நேசித்தால் போதும். உங்கள் அயலானை கடவுளாக பாவிக்கவேண்டிய அவசியமில்லை. முதலாவது அவனை மனிதனாக பாவித்து அன்பு செலுத்தினால் அது போதும்.

இரண்டாவதாக, இறைவன் என்றால் அவன் அன்புள்ளவன், தண்டிக்கமாட்டான் என்று நம்புவதும் சரியான கோட்பாடாக இருக்காது. இதுவும் ஆபத்தானது. இப்படிப்பட்ட நம்பிக்கை உங்களை 'கடவுள் மீது வைத்திருக்கும் விசுவாசத்தை இழக்கச்செய்யும்'. நமக்கு ஒரு தீமை நடந்துவிட்டால், எனக்கு ஏன் இப்படி நேரிடவேண்டும், என் மீது கடவுளுக்கு அன்பில்லையா? போன்ற கேள்விகள் கேட்கத்தோன்றும். என் தகப்பன் என் மேல் அதிக அன்பு கொண்டுள்ளார், நான் தவறு செய்யும் போது தண்டிப்பார், தற்காலத்தில் தீமை நேரிட்டாலும், அதனை நன்மையாக மாற்ற என் கடவுளால் முடியும் என்ற எண்ணமுடைய மகன்/மனிதன், ஒரு போதும், தகப்பனின் தண்டனையைக் கண்டு பயந்து வீட்டை விட்டு ஓடமாட்டான்.

இப்போது ஒரு புதிய கேள்வி உங்களுக்கு எழும், அது என்னவென்றால், "நம்மீது இறைவன் அதிக அன்பு வைத்திருந்தால், ஏன் மரணத்துக்கு  பிறகு நம்மை நரகத்தில் தள்ளுவேன் என்றுச் சொல்கிறார்?" என்பதாகும்.

இதற்கு பதில் வேண்டுமென்றால், இறைவன் நீதியுள்ளவர் என்றால் என்னவென்று நாம் புரிந்துக்கொள்ளவேண்டும். இறைவனுக்கு அன்பு என்பது மட்டும் ஒரு குணமல்ல, அவர் நீதியுள்ளவர் மற்றும் பரிசுத்தர் ஆவார். அன்போடு கூட நீதியும் இறைவனின் குணங்களில் கலந்துள்ளதால், நாம் இந்த சிக்கலில் மாட்டியுள்ளோம்.

இனி எந்த ஒரு மனிதனையும் க‌டவுள் என்று சொல்லவேண்டாம், அதற்கு பதிலாக அவனுக்கு நன்மை செய்தால் அதுவே நம்மை பகுதி நேர கடவுளாக மாற்றிவிடும்.

கர்த்தருக்கு சித்தமானால், அதைப் பற்றி இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்.

தேதி: 26 நவம்பர் 2018


உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

ஈமெயில் பதில்கள்

Source: https://www.answering-islam.org/tamil/emails/all_are_gods.html


ஞாயிறு, 11 நவம்பர், 2018

லூசிபர் என்றால் யார்? இயேசுவும் அல்லாஹ்வும் லூசிபரா?

(ஈமெயில் உரையாடல்கள்)

எனக்கு கீழ்கண்ட ஒரு கேள்வி வந்தது, அதற்கான பதிலை இக்கட்டுரையில் காண்போம்.


Date: Nov 2, 2018, 7:53 AM

Subject: லூசிபர்

Praise the lord,

Dear Beloved Brother's,

இதற்கு சரியான விளக்கம் தேவைப்படுகிறது

ஒரு இஸ்லாமியரின் கேள்வி பதில் இது:

லூசிபர் என்றால் அனைருக்கும் சாத்தான் தான் நியாபகம் வரும்.உண்மையில் அது என்ன? சாத்தானா என்று  பார்த்தால் அது இல்லை. அது ஒரு புனைவு பெயர். சரி இதை விடுவோம், விவிலியத்தின் அடிப்படையில் இது என்ன என்பதை காண்போம். பைபிளில் கிறிஸ்தவர்களின்  நம்பிக்கையின் படி தள்ளப்பட்ட தூதன் என்பவன் லூசிபர். லூசிபர் என்பதற்கு சரியான அர்த்தம் *விடிவெள்ளி நட்ச்சத்திரம்* மற்றும் இந்த வார்த்தை எபிரேய மொழியில் helel (or heylel) என்ற வார்த்தையில் இருந்து எடுக்கபட்டது.

பைபிளில் சாத்தான் என சொல்லப்படும் லூசிபர் மட்டும் தான் லூசிபரா என்று பார்த்தால் இல்லை . ஏசுவும் ஒரு லூசிபர் தான். ஆம் லூசிபர் என்றால் விடிவெள்ளி நட்சத்திரம். *ஏசுவும் தான் ஒரு விடிவெள்ளி நட்சத்திரம்* என்று கூறுகிறார்.

*வெளிபடுத்துதல் 22.16 சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.*

Kxxxxxxxxxx

கர்த்தருக்குள் பிரியமான சகோதரருக்கு,

எங்களிடம் உங்கள் சந்தேகத்தை கேட்டதற்காக மிக்க நன்றி. இப்போது அதற்கான பதிலை காண்போம்.

இந்த கேள்வியை ஒரு முஸ்லிம் கேட்டதாக எழுதி இருந்தீர்கள். ஆனால் இவைகள் நாத்திகர்களால் எழுப்பப்படும் கேள்விகள் ஆகும். அவைகளை படித்து தான் முஸ்லிம் நண்பர் இக்கேள்வியைக் கேட்டுள்ளார். யார் கேள்வி கேட்டாலும், எங்கேயிருந்து படித்து கேட்டாலும் பதில் சொல்வது நமது கடமையாகும்.

கீழ்கண்ட தலைப்புகளில் இக்கேள்விக்கான பதிலை காண்போம்:

1. லூசிபரும் ஏசாயா 14:12ம் வசனத்தின் மொழியாக்கங்களும்
2. ஏசாயா 14:12 - ஒரு அரசன் பற்றி வசனம் பேசும்போது, அது எப்படி சாத்தான் பற்றிய விவரமாக‌ அமையும்?
3. எசேக்கியேல் 28 ஆம் அதிகாரமும் சாத்தானும்
4. இயேசு விடிவெள்ளி நட்சத்திரம் என்று சொன்னால் அதன் அர்த்தம் என்ன?
5. அல்லாஹ் கூட லூசிபர் தானா?
6. முடிவுரை

1) லூசிபரும் ஏசாயா 14:12ம் வசனத்தின் மொழியாக்கங்களும்

லூசிபர் என்ற வார்த்தை பைபிளில் எங்கும் இல்லை. இது ஒரு இலத்தின் மொழி வார்த்தையாவும். எபிரேய மொழியில் இருக்கும் பழைய ஏற்பாட்டை இலத்தீன் மொழியில் மொழியாக்கம் செய்யப்படும்போது, ஹெலெல் / ஹெலைல் என்ற எபிரேய வார்த்தைக்கு, லூசிபர் என்று மொழியாக்கம் செய்தார்கள்.

இதைப் பற்றி வரும் ஏசாயா 14:12ம் வசனத்தை, தமிழிலும், ஆங்கிலத்திலும் (KJV & NIV), இலத்தின் மொழியிலும் படிப்போம்.

ஏசாயா14:12. அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!

KJV -  Isaiah 14:12 How art thou fallen from heaven, O Lucifer, son of the morning!how art thou cut down to the ground, which didst weaken the nations!

NIV - Isaiah 14:12 How you have fallen from heaven, morning star, son of the dawn!You have been cast down to the earth, you who once laid low the nations!

இலத்தின் மொழியாக்கம்: Isaiah 14:12:

quomodo cecidisti de caelo lucifer qui mane oriebaris corruisti in terram qui vulnerabas gentes

விடிவெள்ளி நட்சத்திரம் (லூசிபர்) என்ற வார்த்தையின் எபிரேய பொருள்:

Pronounce: hay-lale'
Strong: H1966
Orig: from 1984 (in the sense of brightness); the morning-star:--lucifer. H1984
Use: TWOT-499a Noun Masculine
Grk Strong: 
Lucifer = "light-bearer"

1) shining one, morning star, Lucifer 
1a) of the king of Babylon and Satan (fig.)

2) (TWOT) 'Helel' describing the king of Babylon

இலத்தின் மொழியில் லூசிபர் என்றால் "வெளிச்சம் கொடுப்பவன்" அல்லது காலையில் பிரகாசமாக தோன்றும் "வீனஸ் கிரகம்" என்று அர்த்தம். அதிகாலையில், வீனஸ் கிரகம் ஒரு நட்சத்திரத்தை போல ஜொலிப்பதை பார்க்க முடியும். இதனை தமிழில் சொல்ல வேண்டுமென்றால், "அதிகாலையில் காணப்படும் வெள்ளி கிரகமாகும்".

ஆங்கில மொழியாக்கங்களும் லூசிபர் என்ற பெயரும்:

அதிகாலையில் நமக்கு காணப்படும் பிரகாசமான நட்சத்திரத்தை இலத்தீனில் மொழியாக்கம் செய்யும்போது லூசிபர் என்று மொழியாக்கம் செய்தது அந்த மொழிக்கு சரியான வார்த்தையாகும். இதில் எந்த தவறும் இல்லை. ஆனால் இலத்தினை விட்டு வேறு மொழிகளில் அந்த வார்த்தையை மொழியாக்கம் செய்யும்போது:
  • அதிகாலையில் தோன்றும் பிரகாசமான நட்சத்திரமே என்றோ அல்லது
  • பிரகாசமான ஒளியே என்றோ அல்லது
  • விடிவெள்ளி நட்சத்திரமே என்றோ
மொழியாக்கம் செய்வது தான் சரியானதாக இருக்கும். இலத்தீன் மொழியின் ஒரு பெயரை  அப்படியே நம் மொழியில் எழுதுவது சரியானது அல்ல.

King James Version (KJV) என்ற ஆங்கில மொழியாக்கத்தில், இலத்தீன் வார்த்தையாகிய லூசிபர் என்ற வார்த்தையை மொழியாக்கம் செய்யாமல் அப்படியே  பயன்படுத்தினார்கள். இது தவறான மொழியாக்கமாகும், அதாவது ஆங்கிலத்தில் "லூசிபர்" என்ற பெயர் பொதுவாக‌ யாருக்கும் பயன்படுத்தப்படவில்லை. வேறு சில மொழியாக்கங்களில் லூசிபர் என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. உதாரணத்திற்கு தமிழ் மொழியாக்கத்தில் ஏசாயா 14:12ல் "அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே" இன்று சரியாக மொழியாக்கம் செய்துள்ளார். ஆங்கில NIV மொழியாக்கத்தில்:  "morning star, son of the dawn!"  என்று சரியாக‌ மொழியாக்கம் செய்துள்ளார்கள்.

லூசிபர் என்ற வார்த்தையினால் உண்டாகும் சங்கடம் என்ன?

லூசிபர் என்ற வார்த்தை KJV போன்ற‌ மொழியாக்கங்களில் சாத்தானுக்கு பயன்படுத்தப்பட்ட படியினால், அந்த வார்த்தையை வேறு ஒரு விவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறோம். லத்தீன் மொழியில் இன்றுகூட வெள்ளி கிரகத்தை குறிக்கும்போது லூசிபர் என்றே குறிப்பிடுகிறார்கள், பிரகாசமான ஒன்றை குறிப்பிடும்போது லூசிபர் என்றே குறிப்பிடுகிறார்கள். ஆனால் ஆங்கிலத்திலும், தமிழ் மொழியிலும் மற்றும் கிறிஸ்தவ வட்டாரங்களில் லூசிபர் என்று சொன்னால் அது சாத்தானை மட்டுமே குறிப்பதாக மாறிவிட்டது. இது தவறான மொழியாக்கங்களினால் உண்டான பிரச்சனையாகும்.   இது ஒரு  பெரிய குற்றமல்ல, ஆனால் வேற்று மொழி வார்த்தையை நம் மொழிகளில் தேவையில்லாமல் பயன்படுத்தியதால் உண்டான ஒரு சங்கடம் மட்டுமே.

இதுவரை லூசிபர் என்ற வார்த்தை ஏசாயா 14:12ல் எப்படி  மொழியாக்கம் செய்யப்பட்டது என்பதைப் பற்றி பார்த்தோம். அடுத்ததாக இவ்வசனத்தில் சொல்லப்பட்ட விவரம் ஒரு அரசனைப் பற்றியதா அல்லது சாத்தானை பற்றியதா என்பதை ஆய்வு செய்வோம்.

2) ஒரு அரசன் பற்றி வசனம் பேசும்போது, அது எப்படி சாத்தான் பற்றிய விவரமாக‌ அமையும்?

முதலாவதாக ஏசாயா 14:12-17 வரைக்கும் படிப்போம்.

ஏசாயா 14:12-17

12. அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!
13. நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,
14. நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.
15. ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்.
16. உன்னைக் காண்கிறவர்கள் உன்னை உற்றுப்பார்த்து, உன்னைக் குறித்துச் சிந்தித்து இவன்தானா பூமியைத் தத்தளிக்கவும், ராஜ்யங்களை அதிரவும் செய்து,
17. உலகத்தை வனாந்தரமாக்கி, அதின் நகரங்களை அழித்து, சிறைப்பட்டவர்களைத் தங்கள் வீடுகளுக்குப் போகவிடாமலிருந்தவன் என்பார்கள்.

இந்த அத்தியாயம் ஆரம்பத்திலிருந்து படித்தால், இஸ்ரேலின் எதிரியாக இருந்த பாபிலோன் அரசன் பற்றிய விவரமாக  (4ம் வசனத்திலிருந்து) தொடங்கியிருக்கும்.  பாபிலோனிய அரசன் "விடிவெள்ளி நட்சத்திரமாக" (இலத்தீனில் லூசிபர்) அழைக்கப்படுகின்றான். இந்த அரசன் எப்படி தன்னுடைய மகிமையான நிலையிலிருந்து தள்ளப்பட்டான் என்பதை பற்றி இவ்வசனங்கள் பேசுகின்றன.

இவைகள் எப்படி சாத்தானுக்கு சொல்லப்பட்டதாக கருதமுடியும் என்ற கேள்வி நமக்கு எழும். இதனை புரிந்துக்கொள்ள, தீர்க்கதரிசிகள் மூலமாக தேவன் சொல்லும் 'தீர்க்கதரிசன வசனங்கள்' பற்றிய சில அடிப்படை விவரங்களை அறியவேண்டும்.

பொதுவாக பைபிளின் தீர்க்கதரிசன வசனங்களை 3 பிரிவுகளாக பிரிக்கலாம்:

1) நிகழ்காலம் அல்லது சில நாட்கள்/மாதங்களில்/வருடங்களில் நிறைவேற இருக்கும் வசனங்கள்:

சொல்லப்பட்ட காலத்தைச் சுற்றியும், பல நூறு ஆண்டுகள் கழித்து அல்லாமல், சில நாட்கள்/மாதங்கள்/வருடங்களுக்குள் நடப்பவைகள் பற்றியதாகவே இவ்வசனங்கள் அமையும். மேலும் சொல்லப்பட்ட நபரிடம் மட்டுமே நிறைவேறும் ஒன்றாகவே அவைகள் இருக்கும். இவ்வசனங்களில் யாரைப் பற்றி சொல்லப்படுகின்றதோ, அவரிடம் மட்டுமே நடக்கும் நேரடியான பொருளைக் கொண்டு இருக்கும். ஆபிரகாமுக்கும், சாராளுக்கும் பிள்ளை பிறக்கும் என்றுச் சொன்னதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

2) இரண்டாம் வகையான தீர்க்கதரிசன வசனங்கள், எதிர்காலத்தில் நடப்பவைகள் பற்றியதாகவே 100% இருக்கும்

மேசியா பற்றிய பழைய ஏற்பாட்டு வசனங்கள் மற்றும் வெளிப்படுத்தின விசேஷத்தில் வரும் சில வசனங்கள், சொல்லப்பட்ட காலத்தில் அல்லாமல், எதிர்காலத்தில் நடப்பவைகளாக இருந்தன‌. கானான் தேசத்தை ஆபிரகாமின் சந்ததிக்கு கொடுப்பேன் என்று ஆபிரகாமிடம் தேவன் சொன்னது, பிறகு 400 ஆண்டுகளுக்கு பிறகு, அப்படியே அது நிறைவேறியது.

3) நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் பற்றி கலந்து இருக்கும். அதே நேரத்தில் வெளிப்படையாக ஒருவர் பற்றியும், மறைமுகமாக இன்னொருவர் பற்றியும் பேசும் தீர்க்கதரிசன வசனங்களாக இருக்கும்:

ஒரு பக்கம் அவ்வசனங்கள் நிகழ்காலத்தில் சொல்லப்பட்ட நபருக்கு நடப்பவையாகவும் இருக்கும், அதே வேளையில் எதிர்காலத்தில் வேறு ஒரு நபருக்கு நடப்பவைகளாகவும் இருக்கும்.

ஏசாயா 14வது அத்தியாயத்தில் சொல்லப்பட்டவைகள் இரண்டு காலங்களுக்கும் பொருந்தக்கூடியதாக இருக்கின்றன. அதாவது, பாபிலோன் அரசனுக்கும்(அரசர்களுக்கும்) பொருந்தும், அதே நேரத்தில், சாத்தான் என்று சொல்லக்கூடிய ஒரு தேவ தூதனுக்கும் பொருந்தும். (கவனிக்கவும், இவ்வசனங்களில் சாத்தான் பற்றி சொன்ன விவரமானது அவனது கடந்த கால நிகழ்ச்சியையும், அவன் எதிர்காலத்தில் பெறப்போகும் தண்டனையைப் பற்றியும் ஒன்றாக சேர்த்தே சொல்லப்பட்டுள்ளது).

அ) 12ம் வசனத்தை கவனித்தால், பிரகாசமான நட்சத்திரமே என்று அழைப்பது, அந்த  காலத்தில் இருந்த இராஜ்ஜியங்களில் மிகவும் பிரகாசமானதாக புகழின் உச்சியில் இருந்ததாக கருதப்பட்ட பாபிலோன் சாம்ராஜ்ஜியத்திற்கும் பொருந்தும், அதே வேளையில் தேவதூதனாக பிரகாசமானவனாக இருந்த சாத்தானுக்கும் அது பொருந்தும்.

ஆ) வானத்திலிருந்து விழுந்தாயே! என்ற வார்த்தைகளை கவனித்தால், பாபிலோன் அரசன் எப்படி வானத்திலிருந்து விழமுடியும்? என்ற கேள்வி எழும், அதே நேரத்தில் தேவனுடைய பிரசனத்திலிருந்து தள்ளப்பட்ட தூதனாக, இது சாத்தானுக்கு சரியாக பொருந்தும். மேலும், புகழின் உச்சியிலிருந்து விழுவதையும் 'வானத்திலிருந்து விழுந்தாயே!' என்று கூட பாபிலோன் அரசனைப் பார்த்து கூறமுடியும். ஆக, இரண்டிற்கும் இது பொருந்தும். ஒரே வாக்கியத்திற்கு இரண்டு பொருள் இருப்பது போல, இவ்வசனம் சொல்லப்பட்டுள்ளது.

இப்படி, 12  வசனத்திலிருந்து 17வது வசனம் வரைக்கும் சொல்லப்பட்டவைகளை ஆய்வு செய்தால், ஒவ்வொரு விவரமும் பாபிலோன் அரசனுக்கும், அதே வேளையில் சாத்தானுக்கும் பொருந்துவதையும் காணமுடியும். இதைப் பற்றி விவரமாக இன்னொரு கட்டுரையில் தேவைப்பட்டால் காணலாம்.

வலியச் சென்று ஏன் ஏசாயா 14ல் சாத்தான் பற்றி சொல்லப்பட்டதாக கருதுகிறீர்கள்?

மேலே படித்த வசனங்களை கவனித்தால், வலியச் சென்று நாமாக, சாத்தான் பற்றிய பொருளை கொண்டுவரவில்லை. அவற்றை படிக்கும் போது, மனிதர்களுக்கு ஏற்காத விவரங்கள் இருப்பதை காணமுடியும். உதாரணத்திற்கு, 13, 14ம் வசனங்களை கவனிக்கவும்:

13. நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,

14. நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்;உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.

இவைகள் மனிதனுக்கு பொருந்தாது, ஒரு ஆவிக்கு அல்லது  தேவதூதனுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது,
  • வானத்துக்கு  ஏறுவது,
  • சிங்கானத்தை நட்சத்திரங்களுக்கு மேலாக அமைப்பது,
  • மேகங்களுக்கு  மேலாக  உன்னதங்களில்  ஏறுவேன் என்று கூறுவது,
  • மேலும் உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்று கூறுவது
போன்ற சொற்றொடர்கள், தேவ தூதனுக்கு சரியாக பொருந்துமே ஒழிய,  மனித‌ உலக அரசர்களுக்கு 100% பொருந்தாது.

எந்த ஒரு பாபிலோன் அரசனாலும், நட்சத்திரங்களுக்கு மேலாக சிங்காசனத்தை  அமைக்கமுடியாது. எனவே, இவ்வசனங்களில் பாபிலோன் அரசன் அல்லாத இன்னொரு நபரும் சொல்லப்பட்டுள்ளான் என்று கருதுவதில் தவறு இல்லை.

அரசர்கள் & அதிகாரிகளுக்கு பின்னணியில் இயங்கும் சாத்தான்:

இன்னொரு வகையில் பார்ப்பதென்றால், பாபிலோன் அரசன் தன் மேட்டிமையினால் பேசினாலும் இருதயத்தில் நினைத்தாலும், அவனுக்கு பின்னால் இருப்பது சாத்தான் ஆவான். தீய காரியங்கள் சாத்தானின் தூண்டுதலினால் செய்யப்படுகின்றன. அவன் ஒரு அரசனுக்கு பின்னால் இருந்தால், எவ்வளவு பெரிய ஆபத்து வரும்? ஆகையால், அரசனுடைய மேட்டிமையை கடிந்துக்கொள்வதோடு கூட, ஆவிக்குரிய விதத்தில் சாத்தானையே கடிந்துக்கொண்டார் தேவன்.

கடைசியாக, சாத்தான்  பற்றி வேறு இடங்களில் பைபிள் என்ன சொல்லியுள்ளது என்று ஆய்வு செய்தால், இவ்வசனங்கள் அவைகளோடு ஒத்துஇருப்பதைக் காணமுடியும்.

ஒரு அரசனைப் பற்றி தீர்க்கதரிசன வசனங்கள் சொல்லும்போது, அதோடு கூட சாத்தான் பற்றியும் சொல்லிய  இன்னொரு  உதாரணத்தை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன், அப்போது தான் இதுவரை சொன்னவைகளில் உள்ள அர்த்தம் புரியும்.

எசேக்கியேல் 28ம் அத்தியாயத்திற்கு தாவுவோம் வாருங்கள், அங்கு பல ஆச்சரியங்கள் காத்துக்கொண்டு இருக்கின்றன.

3) எசேக்கியேல் 28 ஆம் அதிகாரமும் சாத்தானும்:

எசேக்கியேல் 28வது அதிகாரத்தில், மேலே பார்த்ததுபோல இன்னொரு அரசனைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. அதே வசனங்களுக்குள் சாத்தான் பற்றியும் பல விவர‌ங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லப்பட்டுள்ளது.  தீர்க்கதரிசனங்கள் எப்படி நிகழ்கால மற்றும் எதிர்கால நிகழ்ச்சிகளை துல்லியமாக சொல்கின்றன என்பதையும் இதன் மூலம் அறியலாம்.

தீரு (Tyre) என்ற நாட்டை ஆண்ட அரசன் பற்றி இவ்வதிகாரத்தின் ஆரம்பத்திலிருந்து சொல்லப்பட்டுள்ளது. முக்கியமாக 11 லிருந்து 15 வசனங்களில், தீரு அரசன் பற்றி சொல்லப்பட்டாலும், அவைகள் மனிதனாகிய அவ்வரசனுக்கு சிறிது கூட ஒத்துவராது, வேறு ஒருவனுக்கு கச்சிதமாக பொருந்துவதைக் காணமுடியும்.

எசேக்கியேல் 28:11-15

11. பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

12. மனுபுத்திரனே நீ தீரு ராஜாவைக்குறித்துப் புலம்பி அவனை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால். நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரைமோதிரம்நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன்.

13. நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம் புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது.

14. நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணப்பட்ட கேருப்; தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உன்னை வைத்தேன்அக்கினிமயமான கற்களின் நடுவே உலாவினாய்.

15. நீ சிருஷ்டிக்கப்பட்ட நாள் துவக்கி உன்னில் அநியாயம் கண்டுபிடிக்கப்பட்டதுமட்டும், உன் வழிகளில் குறையற்றிருந்தாய்.

சொல்லப்பட்ட விவரங்கள், தீரு அரசனுக்கு அல்ல, சாத்தானுக்கு சரியாக பொருந்துகிறது:
  • சாத்தான் ஞானத்தால் நிறைந்தவன்
  • பூரண அழகுள்ளவன்
  • தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்
  • பத்மராகம் புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகவித இரத்தினங்களும் பொன்னும் அவனை மூடிக்கொண்டிருக்கிறது
  • அவன் பிறந்தவன் அல்ல, சிருஷ்டிக்கப்பட்டவன்
  • அவன் கேருப் (மனிதனல்ல, தேவ தூதன்)
  • அக்கினிமயமான கற்களின் நடுவே உலாவினான் 
  • தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் வைக்கப்பட்டவன்
  • அவன் மேட்டிமை கொண்ட போது தான் குறையுள்ளவனாக காணப்பட்டான்.
தீருவின் இராஜா, ஒரு கேருப் அல்ல, அவன் மனிதன்.

ஆனால் 11வது வசனம் தீரு ராஜாவைப் பார்த்து இவ்வசனங்கள் சொல் என்று எப்படி சொல்கிறது?

இதனால் தான் இதனை தீர்க்கதரிசனங்கள் என்றுச் சொல்கிறோம், தீரு ராஜா ஆட்சி செய்தாலும், அவன் பின்னணியில் ஆவிக்குரிய விதத்தில் ஆட்சி செய்வது சாத்தானே. எனவே தான், சில வசனங்கள் இராஜாவையும், சில வசனங்கள் சாத்தானையும் குறிப்பவைகளாக இருக்கின்றன.

இதே போலத்தான், ஏசாயா 14வது அத்தியாயத்திலும், பாபிலோன் அரசன் பற்றி சொல்லப்பட்டது, ஆனால் மறைமுகமாக சாத்தான் பற்றி சொல்லப்பட்டது. இங்கு தீரு அரசன் பற்றி சொல்லப்பட்டு, இன்னும் கூடுதல் விவரமாக சாத்தான் பற்றியும் சொல்லப்பட்டது. மேலோட்டமாக படித்தால், அரசன் பற்றி சொல்லப்பட்டதாகத் தெரியும், ஆனால் ஆய்வு செய்து பார்த்தால், மனித அரசனுக்கு பொருத்தமில்லாத சில குண நலன்களையும், சூழ்நிலைகளும் சொல்லப்பட்டுள்ளதைக் காணமுடியும்.

இதுவரை தீர்க்கதரிசன வசனங்கள் மேலோட்டமாக ஒரு பொருளிலும், ஆழமாக ஆய்வு செய்தால் இன்னொரு பொருளிலும் இருப்பதைக் கண்டோம்.

அடுத்தபடியாக, இயேசு கூட லூசிபர் தானா? என்ற கேள்விக்கு நம் பதிலைப் பார்ப்போம்.

4) இயேசு விடிவெள்ளி நட்சத்திரம் என்று சொன்னால் அதன் அர்த்தம் என்ன?

முஸ்லிம்கள் கீழ்கண்ட விமர்சனத்தை வைத்ததாக நம்மிடம் கேள்வி கேட்கப்பட்டது, அதற்கான பதிலைக் காண்போம்:

முஸ்லிம்களின் விமர்சனம்:

//பைபிளில் சாத்தான் என சொல்லப்படும் லூசிபர் மட்டும் தான் லூசிபரா என்று பார்த்தால் இல்லை . ஏசுவும் ஒரு லூசிபர் தான். ஆம் லூசிபர் என்றால் விடிவெள்ளி நட்சத்திரம். *ஏசுவும் தான் ஒரு விடிவெள்ளி நட்சத்திரம்* என்று கூறுகிறார். 
*வெளிபடுத்துதல் 22.16 சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.//

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நான் விவரித்தபடி, லூசிபர் என்பது ஆங்கிலச் சொல்லும் அல்ல, தமிழ்ச் சொல்லும் அல்ல, அது ஒரு இலத்தின் மொழிச் சொல். அதன் அர்த்தம் பிரகாசமான வெளிச்சம் தரக்கூடியவன் அல்லது நேரடி பொருளில் இலத்தின் மொழியில் வெள்ளி கிரகத்து (வீனஸ்), லூசிஃபர் என்று பெயர்.

இலத்தின் மொழி பேசுபவர்கள்,  மேடையில் ஒருவரைப் பார்த்து பேசும் போது, அவருக்கு புகழாரம் சூட்டவேண்டி,  'ஓ பிரகாசம் கொடுப்பவரே (அ) வெளிச்சம் உடையவரே (அ) விடிவெள்ளி நட்சத்திரமே' என்று அழைக்கவேண்டுமென்றால், 'ஓ லூசிபரே' என்று அழைப்பார்கள். இது மிகவும் மரியாதைக்குரிய சொல் அம்மொழியில்.

பல ஆண்டுகளாக, லூசிபர் என்ற வார்த்தையை நாம் துர்பிரயோகம் செய்து இருப்பதினால், கிறிஸ்தவ வட்டாரத்தில், ஆங்கிலம் மற்றும் தமிழ் மக்களிடையே லூசிபர் என்றுச் சொன்னால், அது சாத்தானை மட்டுமே குறிப்பதாக இருக்கிறது.

வெளிப்படுத்தல், 22:16ல் இயேசு தன்னைப்  பற்றிச் சொல்லும் போது, 'நான் விடிவெள்ளி நட்சத்திரமாக' இருக்கிறேன் என்றுச் சொல்கிறார். நான் உலகத்துக்கு ஒளியாக இருக்கிறேன் என்று இயேசு சீடர்களிடம் சொல்லியுள்ளார். மேலும், நீங்களும் உலகத்துக்கு வெளிச்சமாக இருக்கிறீர்கள் என்றுச் சொல்லியுள்ளார்.

வெளிபடுத்துதல் 22:16. சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.

தமிழில் மொழியாக்கம் செய்தவர்கள், ஏசாயா 14:22ஐ எப்படி 'விடிவெள்ளி நட்சத்திரம்' என்று மொழியாக்கம் செய்தார்களோ, அதே போலத் தான் இங்கும் சரியாக மொழியாக்கம் செய்துள்ளார்கள். இலத்தின் மொழியின் பெயரைக் கொண்டு வந்து, எங்கும் அவர்கள் நுழைக்கவில்லை.

பாஸ்கா புகழுரை (இலத்தீன்: Praeconium Paschale) பாடல்:

இன்றும் ரோமன் கத்தோலிக்க திருச்சபைகளில், ஈஸ்டர் காலத்தில் ஒரு குறிப்பிட்ட பாடல் அல்லது ஜெபம் செய்யப்படுகின்றது. அதனை இலத்தின் மொழியில் கீழ்கண்ட விதமாக பாடுகிறார்கள், அதில் வரும் கடைசி வரிகளில், விடிவெள்ளி வெளிச்சம் என்ற சொற்றோடர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இலத்தின் மொழியில் இதற்காகவே உள்ள லூசிபர்(விடிவெள்ளி வெளிச்சம்) என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது.

Wikipedia:

பாஸ்கா புகழுரை (இலத்தீன்: Praeconium Paschale) என்னும் பாடல், புனித சனியன்று பாஸ்கா திருவிழிப்பின் போது கத்தோலிக்க திருச்சபையில் பாடப்படும் பாடலாகும். இது திருத்தொண்டராலோ அல்லது குருவாலோ பாஸ்கா தீயையும் திரியையும் மந்திரித்த பிறகு, இறைவாக்கு வழிபாட்டிற்கு முன்பு பாடப்படும். ஆங்கிலிக்கம், லூதரனியம்போன்ற கிறித்தவ உட்பிரிவுகளிலும் இம்முறை உண்டு.

இலத்தின் மொழியில்:

Flammas eius lúcifer matutínus invéniat: 
ille, inquam, Lúcifer, qui nescit occásum. 
Christus Fílius tuus, 
qui, regréssus ab ínferis, humáno géneri serénus illúxit, 
et vivit et regnat in sæcula sæculórum. 
R/ Amen.

தமிழில்:

உமது திருப்பெயரின் மகிமைக்காக அர்ச்சிக்கப்பெற்ற இந்த மெழுகுதிரி, 
இவ்விரவின் இருளை ஒழிக்குமாறு, 
குறைவுபடாமல் நின்று எரிவதாக. 
இது இனிமைதரும் நறுமணமாக ஏற்கப்பட்டு, 
விண்ணக விளக்குகளுடன் கலந்துகொள்வதாக. 
விடிவெள்ளி எழும்போதும் இது சுடர்விட்டு எரிவதாக. 
ஓருபோதும் மறையாத இந்த விடிவெள்ளி 
உம் திருமகன் கிறிஸ்துவேதான்
பாதாளத்திலிருந்து திரும்பி வந்து, 
மனித இனத்தின்மீது அமைதியுடன் ஒளிவீசி, 
என்றென்றும் வாழ்ந்து ஆட்சிசெய்கின்றவர் அவரே. 
எல்: ஆமென்

லூசிபர் என்ற இலத்தின் மொழி வார்த்தை தமிழ் பைபிளில் ஒரு இடத்திலும் இல்லை.

வேற்று மொழி பெயர்ச்சொற்களை சிலவேளைகளில் அப்படியே எழுதுகிறார்கள், அல்லது சிலர் தமிழில் மொழியாக்கம் செய்கிறார்கள். உதாரணத்திற்கு: பத்ரூஸ் என்ற வார்த்தையை தமிழில் பேதுரு என்று  உச்சரித்துள்ளார்கள், பைபிள் சொசைடி ஆஃப் இந்தியா குழுவினர். ஆனால், கத்தோலிக்கர்கள் அவரை 'ராயப்பர்' என்று மொழியாக்கம் செய்துள்ளார்கள்.  ராய் என்றால் 'கல்' அதோடு கூட 'அப்பர்' என்பதை சேர்த்து இராயப்பர் என்று மொழியாக்கம் செய்துள்ளார்கள். இரண்டும் சரியே.

இன்னொரு உதாரணம், மோடி கூட லூசிபர் தான்:

ஒரு எடுத்துக்காட்டுக்காக இந்த கற்பனை நிகழ்ச்சியை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
ஒரு மேடையில் நம் பாரத (பாரமான) பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை புகழ்ந்து  பேசுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த மேடையில், மற்றும் அரங்கத்தில் இலத்தின் மொழி பேசுபவர்களும், ஆங்கிலம் மற்றும் தமிழ் பேசும் மக்களும் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.

ஆங்கிலத்திலிருந்து, தமிழுக்கும், இலத்தின் மொழிக்கும் மொழியாக்கம் செய்யப்படுகின்றது என்று வைத்துக்கொள்வோம்.

ஒருவர் இப்படியாக பேசுகின்றார்:
ஆங்கிலத்தில்:  Indian Prime Minister Mr. Modi is a Morning Star, the light giver to all of us.

இதனை தமிழில் இப்படி மொழியாக்கம் செய்வார்கள்:
பாரதப் பிரதமர் மோடி அவர்கள், நம் எல்லோருக்கும் ஒரு  விடிவெள்ளி நட்சத்திரம் ஆவார்.

இதனை இலத்தின் மொழியில், எப்படி மொழியாக்கம் செய்வார்கள்?
பாரதப் பிரதமர் மோடி அவர்கள், ஒரு லூசிபர் ஆவார்.
(விடிவெள்ளி நட்சத்திரம் என்பதைப் மட்டும் நாம் லத்தீனில் கொடுத்துள்ளேன்)

ஆக, யாரெல்லாம் பிரகாசமாக வெளிச்சம் கொடுக்கிறார்களோ, இலத்தின் மொழியில் அவர்கள் அனைவரும் லூசிப்ர் என்று அழைக்கப்படுவார்கள்.

இதுவரை கொடுத்த விளக்கம் இன்னும் சில முஸ்லிம்களுக்கு புரியாமல் இருந்தால், அல்லது புரியாத மாதிரி அவர்கள் பாசாங்கு செய்தால், அடுத்த தலைப்பை படித்தவுடன் அவர்கள் சரியாக புரிந்துக்கொள்வார்கள் என்று லூசிபராகிய அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன்

5) அல்லாஹ் கூட லூசிபர் தானா?

குர்‍ஆனின் படி அல்லாஹ் கூட ஒரு லூசிபர் தான் (இலத்தின் மொழியில்). அல்லாஹ்வின் 99 பெயர்களில் 'அந்நூர்வெளிச்சம் என்ற பெயரும் உள்ளது.

நூர் என்பது இது சாதாரண மங்கலாக இருக்கும் வெளிச்சம் அல்ல, இது பிரகாசமான வெளிச்சம் ஆகும். லூசிபர் என்றால் வெளிச்சம் தருபவன், வெளிச்சம் உடையவன் என்று அர்த்தம். இதன் படி பார்த்தல், இலத்தின் மொழியில் அல்லாஹ்வையும் லூசிபர் என்று அழைப்பதில் தவறில்லை.

குர்‍ஆன் 24:35ம் வசனத்தில் அல்லாஹ் தன்னை உலகின் ஒளி என்று கூறுகின்றான்: அல்லாஹ் கூட ஒரு இலத்தின் லூசிபர் (பேரொளி) என்பதற்கு இவ்வசனம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்:

ஸூரத்துந் நூர் (பேரொளி)  வசனம் 35

24:35. அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது; அக் கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும். அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எறிக்கப் படுகிறது. அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று; மேல்திசையை சேர்ந்ததுமன்று. அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும், (இவை எல்லாம் சேர்ந்து) ஒளி மேல் ஒளியாகும். அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான். மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்.

Italino Language Quran 24:35

இன்று லாத்தினோ என்ற மொழியானது, லத்தின் மொழி போன்றது தான்: இந்த இத்தாலினோ மொழியில் குர்‍ஆன்ன் 24:35 படித்தால், ஒளி என்ற வார்த்தைக்கு லூசி என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதை பார்க்கமுடியும்:

குர்‍ஆனின் 24வது அத்தியாயத்தின் பெயர்: ல லூசி

Sura XXIV
An-Nûr
(La Luce)
35. Allah è la luce dei cieli e della terra. La Sua luce è come quella di una nicchia in cui si trova una lampada, la lampada è in un cristallo, il cristallo è come un astro brillante; il suo combustibile viene da un albero benedetto, un olivo né orientale, né occidentale, il cui olio sembra illuminare, senza neppure essere toccato dal fuoco. Luce su luce. Allah guida verso la Sua luce chi vuole Lui e propone agli uomini metafore. Allah è onnisciente.

மேற்கண்ட  குர்‍ஆன் வசனத்தில், அல்லாஹ் தன்னை பிரகாசமான ஒளி நட்சத்திரமாகவும்,  தன்னுடைய ஒளியை தருபவனாகவும் அடையாளப்படுத்துகிறான், அதாவது லத்தீன் மொழியில் தன்னை 'லூசிபர்' என்று சொல்லிக்கொள்கிறான்.

முடிவுரை:

நம்மிடம் கேள்வி கேட்ட சகோதரருக்கு, என் மனமார்ந்த நன்றிகளை மற்றொரு முறை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுவரை நாம் கண்ட விவரங்களின் படி, லூசிபர் என்ற இலத்தின் வார்த்தை நம்மிடம் (சில ஆங்கில மொழியாக்கங்களில்) பெரும் பாடு படுகிறது என்பதை அறிந்தோம். மொழியாக்கங்களில் செய்யப்படும் சிறிய தவறுகள், சில வேளைகளில் இப்படிப்பட்ட விளைவுகளை உண்டாக்கிவிடுகிறது. தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியிலும் King James Version மொழியாக்கத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதினால், லூசிபர் என்றுச் சொன்னாலே, எல்லோரும் சாத்தானையே குறிப்பிடுகிறார்கள். உண்மையில், வெளிச்சம் தருவபர்கள் அனைவரும் லூசிபரே! (இலத்தின் மொழியின் வார்த்தையின் படி, சாத்தானின் படி அல்ல).

மேலும், முஸ்லிம்களுக்கு நான் சொல்லும் அறிவுரை என்னவென்றால், பைபிள் மீது ஒரு விமர்சனத்தை முன்வைக்கும் போது சிறிது ஆய்வு செய்து, மூல மொழிகளை  படித்து முன்வைக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

இக்கட்டுரையில் கொடுக்கப்பட்ட  விளக்கம் (ஓரளவிற்கு) உங்கள் சந்தேகத்தை தீர்த்து இருக்கும் என்று நம்புகிறேன்.

இருளில் இருந்த என்னை, தேடி வந்து, சந்தித்து என் வாழ்க்கையை ஒளிமயமாக மாற்றிய இயேசுக் கிறிஸ்துவிற்கு என்றென்றும் மகிமை உண்டாவதாக.

அடிக்குறிப்புக்கள்:
3) பாஸ்கா புகழுரை - ta.wikipedia.org/s/xzn

புதன், 24 அக்டோபர், 2018

குர்‍ஆன் 5:47ல் அல்லாஹ் சொன்னதை நான் பின்பற்ற முடியுமா?

முஸ்லிம்களே! குர்‍ஆனில் அல்லாஹ் சொன்னவைகளை நாம் நம்பவேண்டுமா? அல்லது நம்பவேண்டாமா? குர்‍ஆனில் சொல்லப்பட்டவைகளை நீங்கள் நம்புகிறீர்களா?

குர்‍ஆனின் கீழ்கண்ட வசனத்தின் காரணமாகத் தான் நான் இக்கேள்வியை கேட்கிறேன், மூன்று குர்‍ஆன் தமிழாக்கங்களில் இவ்வசனத்தை படிப்போம்:

5:47. (ஆதலால்) இன்ஜீலையுடையவர்கள், அதில் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பு வழங்கட்டும்; அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் தான் பாவிகளாவார்கள். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

5:47. ஆகவே, இன்ஜீலை உடையவர்கள் அதில் அல்லாஹ் அறிவித்து இருக்கும் (கட்டளைகளின்)படியே தீர்ப்பளிக்கவும். எவர்கள், அல்லாஹ் அறிவித்த (கட்டளைகளின்)படியே தீர்ப்பளிக்க வில்லையோ அவர்கள் நிச்சயமாக பாவிகள்தான். (அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்)

5:47. மேலும், இன்ஜீல் அருளப்பட்டவர்கள், அதில் எந்தச் சட்டத்தை அல்லாஹ் இறக்கி வைத்தானோ அந்தச் சட்டத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கட்டும் (என்பதே நம் கட்டளையாக இருந்தது)! மேலும், எவர்கள் அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கவில்லையோ, அவர்கள்தாம் ஃபாஸிக்கள் பாவிகளாவர்.(இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் தமிழாக்கம்)

கிறிஸ்தவர்கள் இன்ஜிலில் சொல்லப்பட்டதின் படியே தீர்ப்பு அளிக்கவேண்டுமாம். குர்‍ஆனின் இந்த வசனத்துக்கு கீழ்படிய என்னை அனுமதிப்பீர்களா?

இல்லை.. இல்லை, இன்ஜில் தொலைந்துவிட்டது அல்லது மாற்றப்பட்டுவிட்டது என்று முஸ்லிம்கள் நம்மிடம் கூறுவார்கள்.

இன்ஜில் தொலைந்து போய் இருந்தால், ஏன் அல்லாஹ், அதனைக் கொண்டு தீர்ப்பு அளியுங்கள் என்று கட்டளையிடுகின்றான்?

குர்‍ஆன் 5:47 என்ற வசனத்துக்கு நான் கீழ்படிவது எப்படி?

இவ்வசனத்தை இறக்கும் போது, இன்ஜில்  என்பது தொலைந்துவிட்டது அல்லது எதிர்காலத்தில் தொலையப்போகிறது என்ற விவரம் அல்லாஹ்விற்கு தெரியவில்லையா? சர்வ ஞானியான அல்லாஹ் இதனை அறிந்திருக்கவேண்டுமல்லவா?

அல்லாஹ் இவ்வசனத்தை இறக்கும் போது, சொல்லாத விஷயத்தை, முஸ்லிம்களே, நீங்கள் எப்படி அறிந்துக்கொண்டீர்கள்?

ஒருவேளை நீங்கள் (முஸ்லிம்கள்), குர்‍ஆன் இறக்கப்பட்ட பிற்பாடு தான் இன்ஜில் தொலைந்துவிட்டது என்று சொல்வீர்களானால், இன்னமும் நீங்கள் அல்லாஹ்வின் வார்த்தையை கனவீனப்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம். ஏனென்றால், உங்கள் கூற்றின்படி, அல்லாஹ்வின் 5:47 என்ற வசனமானது இனி உபயோகத்தில் இல்லை, அது செல்லுபடியாகாது என்று சொல்லவருகிறீர்கள். அல்லாஹ்வின் வசனங்கள் ஒரு காலத்தில் (7ம் நூற்றாண்டில்) செல்லுபடியாகும், எதிர்காலத்தில் அவைகளினால் உபயோகமில்லை, அவைகள் செல்லுபடியாகாது என்று நீங்கள் சொல்கிறீர்கள், அப்படித்தானே!

இதுமட்டுமல்ல, அல்லாஹ் தன்னுடைய இன்னொரு வசனத்தின் மூலமாக, தன்னைத் தானே தர்மசங்கடத்தில் தள்ளிக்கொள்கிறான்:

ஸூரா 5:68ஐ படிக்கவும்:

5:68. "வேதமுடையவர்களே! நீங்கள் தவ்ராத்தையும், இன்ஜீலையும், இன்னும் உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கப்பட்டவற்றையும் நீங்கள் கடைப்பிடித்து நடக்கும் வரையிலும் நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களாக இல்லை" என்று கூறும்; மேலும் உம் இறைவனால் உம்மீது இறக்கப்பட்ட (வேதமான)து அவர்களில் பெரும்பாலோருக்கு குஃப்ரை (நிராகரித்தலை)யும் வரம்பு மீறுதலையும் நிச்சயமாக அதிகப்படுத்துகிறது; ஆகவே நிராகரித்துக் கொண்டிருக்கும் கூட்டத்தாருக்காக நீர் கவலைப்பட வேண்டாம். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

முஸ்லிம்களே, ஸூரா 5:68 ஐ கிறிஸ்தவர்கள் பின்பற்ற அனுபதிப்பீர்களா?

குர்‍ஆன் 5:68ல் சொல்லப்பட்டதின்படி யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு வழிகாட்டுதல் கிடைக்காது ஏனென்றால் தோராவும், இன்ஜிலும் தொலைந்துவிட்டன என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள்.

ஆனால், இவ்வசனத்தில் அல்லாஹ் தோராவும், இன்ஜிலும் தொலைந்துவிட்டன என்று சொல்லவில்லையே! முஸ்லிம்கள் அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு எதிராக‌ பேசுகிறார்கள். நல்வழிகாட்டுதலை தோராவிலும், இன்ஜிலிலும் காணலாம் என்று அல்லாஹ் சொல்கிறான். அல்லாஹ் ஒருவகையாக சொல்கிறான், அதற்கு எதிராக முஸ்லிம்கள் சொல்வதினால். இப்போது நாம் என்ன செய்வது? 

குர்‍ஆன் சொல்வதை நாம் நம்பவேண்டுமா? இல்லையா?

குர்‍ஆன் 5:47 செல்லுபடியாகாது என்று நாம் மேலே கண்டோம், இப்போது அந்த பட்டியலில் குர்‍ஆன் 5:68ம் வசனமும் சேர்ந்துவிட்டது. முஸ்லிம்களே, குர்‍ஆனிலிருந்து இன்னும் எத்தனை வசனங்களை நீங்கள் இரத்து செய்யப்போகிறீர்கள்? அல்லாஹ் சொல்லாத ஒன்றை சொன்னதாக நீங்கள் கற்பனை செய்துக்கொண்டு இன்னும் எத்தனை ஸூராக்களை பொய்யாக்கப்போகிறீர்கள்?

அல்லாஹ் தன் வேதத்தை நித்தியத்தில் எழுதியதாக முஸ்லிம்கள் நம்புகிறார்கள், ஆனால், அதனை பாதுகாக்க அல்லாஹ் தவறியிருக்கின்றான் என்று அவர்களே சாட்சியிடுகிறார்கள். முஸ்லிம்களிடமிருந்து  இன்னும் எப்படிப்பட்ட‌ அவமானங்களை அல்லாஹ் சகிக்கவேண்டி இருக்குமோ தெரியவில்லை!

சிந்திக்க சில வரிகள்:

முஹம்மது வாழ்ந்த காலத்தில் இருந்த கையெழுத்துப் பைபிள் பிரதிகள், கீழ்கண்ட இரண்டு பிரதிகளாக இப்போதும் நம்மிடம் உள்ளது.

  1. கோடக்ஸ் வாடிகனஸ் - The Vatican (Codex Vaticanus)
  2. கோடக்ஸ் சினாடிகனஸ் - British Museum (Codex Sinaticus)

இயேசு உலக மக்களுக்காக மரித்து, உயிர்த்தெழுந்த விவரங்கள், மேலும் பல சாட்சிகளுக்கு முன்பாக அவர் ப‌ரமேரிய விவரங்கள் அனைத்தும் இந்த பிரதிகளில் உள்ளது. புதிய ஏற்பாடு, இவ்விரு கிரேக்க  கையெழுத்து பிரதிகளில் பத்திரமாக பாதுக்காக்கப்பட்டு இருக்கிறது. இவைகள் முஹம்மதுவிற்கு முன்பு 200 ஆண்டுகள் பழைய பிரதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்தவ பைபிள் முஹம்மதுவிற்கு முன்பு 575 ஆண்டுகள் முந்தையதாகும். அதே போல, யூதர்களின் தோரா (பைபிளின் முதல் ஐந்து நூல்கள்), முஹம்மதுவிற்கு முன்பு 1000 லிருந்து 3000 ஆண்டுகள் முந்தையதாகும்.  இவைகளில் வெளிச்சமும், நேரான வழிகாட்டுதலும் இருக்கிறது, எனவே முஸ்லிம்கள் இவைகளை படிக்கவேண்டும் என்று முஹம்மது குர்‍ஆனில் கட்டளையிட்டுள்ளார். இவைகள் மாற்றப்பட்டுவிட்டன என்று இஸ்லாம் சொல்லுமானால், முஹம்மது ஒரு பொய்யர் என்று இஸ்லாம் அவர் மீது முத்திரை குத்துகிறது என்று அர்த்தம், ஏனென்றால் அவர் தான் தோரா, இன்ஜில் மற்றும் ஜபூரை படிக்கச் சொன்னவர் - Steve Perez