ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வெள்ளி, 25 மே, 2018

2018 ரமளான் - 5: பர்னபா சுவிசேஷத்தை எழுதியவர், புதிய ஏற்பாட்டின் பர்னபாவா?

முந்தைய கட்டுரையில், பர்னபா சுவிசேஷத்தை எழுதியவர், இயேசுவின் உள்வட்ட சீடராக இருந்தவர் அல்ல, அவர் 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மோசடி நபர் என்பதைக் கண்டோம். 

முதல் நூற்றாண்டில், இதர அப்போஸ்தலர்களோடு சேர்ந்து ஊழியம் செய்த "பர்னபா"  என்பவர்,  இந்த 'பர்னபா சுவிசேஷத்தின் ஆசிரியர் அல்ல' என்பதை சான்றுகளுடன் இப்போது காண்போம்.

ஒரு புத்தகம் பர்னபா பெயரை ஏந்தி இருந்தால், உடனே அது முதல் நூற்றாண்டின் புதிய ஏற்பாட்டு பர்னபா எழுதி இருப்பார் என்று முடிவு செய்யமுடியாது. அந்த விவரம் உண்மையா? என்பதை ஆய்வு செய்து முடிவு செய்யவேண்டும். முக்கியமாக, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட நூல்களாக இருந்தால், அவைகளின் உண்மையான ஆசிரியர் யார்? அவைகள் எழுதப்பட்ட காலக்கட்டம் என்ன? போன்றவைகளை கண்டறிய சில வழிமுறைகளை பின்பற்றி கண்டுபிடிக்கலாம்.

கீழ்கண்ட இரண்டு வகையான சான்றுகள் இப்புத்தகத்தின் உண்மை நிலையை அறிந்துக்கொள்ள‌ நமக்கு உதவியாக இருக்கும்.

1) அகச்சான்றுகள் (Internal Evidences):

எந்த ஒரு புத்தகமானாலும் சரி, அந்த புத்தகத்தின் வரிகளில் காணப்படும் சரித்திர, புவியியல், மொழி நடை, எழுத்துவடிவம் மற்றும் இறையியல் விவரங்களை ஆய்வு செய்தால், அதன் காலத்தை கண்டுபிடிக்கலாம் அல்லது குறைந்தபட்சம் எழுதப்பட்ட காலத்திற்கு நெருங்கி வந்துவிடலாம். 

இதன் அடிப்படையில் பர்னபா சுவிசேஷத்தின் அகச்சான்றுகளை, முதல் நூற்றாண்டு சரித்திர, புவியியல், மொழி நடை, எழுத்துவடிவம் மற்றும் இறையியல் விவரங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து உண்மையை கண்டரிய முடியும்.

2) புறச்சான்றுகள் (External Evidences):

கண்டெடுக்கப்பட்ட புத்தகத்தின் அல்லது கையெழுத்துப் பிரதிகளின் காலத்தை நவீன விஞ்ஞானத்தின் உதவியுடன் காலத்தை கண்டுபிடிப்பதாகும். மேலும், அதே காலத்தில் எழுதப்பட்ட இதர நூல்களோடு ஒப்பிட்டு அதன் காலத்தையும் இதர விவரங்களையும் கண்டுபிடிக்கமுடியும். 

இன்னும் அனேக வழிமுறைகள் இருந்தாலும், நாம் இந்த புத்தகத்தின் உண்மையை கண்டறிய மேற்கண்ட இரண்டு ஆய்வுகளின் முடிவு என்ன என்பதை கண்டறிந்தால், இந்த 'பர்னபா சுவிசேஷம்' புத்தகத்தின் ஆசிரியர் உண்மையாகவே முதல் நூற்றாண்டின் பர்னபா தானா? இல்லையா? என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

சான்றுகள்:

இந்த மோசடி சுவிசேஷத்தை முஸ்லிம்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள், இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் 'இந்த பர்னபா என்பவர், முதல் நூற்றாண்டின் பர்னபா ஆவார் மேலும் இயேசுவோடு ஊழியம் செய்த 12 சீடர்களில் இவரும் ஒருவர் ஆவார்' என்று முஸ்லிம்கள் கருதுவதாகும். ஆனால், இச்சான்றுகள் முஸ்லிம்களின் நம்பிக்கையை தகர்த்துவிடுகின்றது, மட்டுமல்ல, குர்-ஆனை பொய்யாக்கிவிடுகின்றது. சத்தியத்தை அறிந்துக்கொள்ளவேண்டும் என்று ஆர்வமுள்ள முஸ்லிம்கள் இச்சான்றுகளை மேலோட்டமாக பார்த்தாலும் கூட‌, உடனே தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்வார்கள். இப்போது இச்சான்றுகளில் சிலவற்றைக் காண்போம்.

சான்று 1. மஸீஹா(மேசியா) மற்றும் கிறிஸ்து என்ற வார்த்தைகளின் அர்த்தத்தை அறியாத பர்னபா

கிறிஸ்து என்ற கிரேக்க வார்த்தையும், மேசியா என்ற எபிரேய வார்த்தையும் ஒரே பொருளை கொண்ட வார்த்தைகளாகும். அதாவது மேசியா என்று எபிரேயத்தில் சொல்வதை கிரேக்க மொழியில் கிறிஸ்துஎன்று மொழியாக்கம் செய்யவேண்டும். இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் தமிழில் "அபீஷேகம் செய்யப்பட்டவர் (அ) தெரிந்துக்கொள்ளப்பட்டவர்" என்பது பொருளாகும். சுருக்கமாகச் சொன்னால், இயேசு "கிறிஸ்து"வாக இருக்கிறார், இதை குர்‍ஆனில் "ஈஸா அல்-மஸீஹா" என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இயேசு என்பது அவருக்கு இட்டப்பெயர், மஸீஹா (மேசியா/கிறிஸ்து) என்பது அவரது பட்டப்பெயர்.

இந்த பர்னபா சுவிசேஷத்தின் ஆசிரியர் எப்படி தன் மோசடி புத்தகத்தை தொடங்குகிறார் என்பதை கவனிக்கவும்:

உலகிற்கு இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு புதிய தீர்க்கதரிசியும், கிறிஸ்து என்று அழைக்கப்பட்டவருமாகிய இயேசுவின் உண்மையான நற்செய்தி. இவருடைய அப்போஸ்தலனாகிய பர்னபா என்பவர் எழுதிய நற்செய்தி.

கிறிஸ்து என்று அழைக்கப்பட்ட நசரேயனாகிய இயேசுவின் அப்போஸ்தலர் பர்னபா, அமைதியையும், ஆறுதலையும் விரும்பும் உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் எழுதிக்கொள்வது. 

True Gospel of Jesus, called Christ, a new Prophet sent by God to the world: according to the description of Barnabas his apostle.

Barnabas, apostle of Jesus the Nazarene, called Christ, to all them that dwell upon the earth desireth peace and consolation.

மூலம்: http://www.sacred-texts.com/isl/gbar/gbar000.htm

"கிறிஸ்து (மஸீஹ்)" என்று அழைக்கப்பட்ட இயேசுவின் சுவிசேஷம் என்று தொடங்குகிறார். ஆனால், இந்த புத்தகம் முழுவதிலும் கவனித்தால், அனேக இடங்களில் இயேசு தான் "மேசியா இல்லை" என்றுச் சொல்வதை காணலாம். 

உதாரணத்திற்கு, கீழ்கண்ட இயேசுவின் பதிலை கவனிக்கவும்.  சில யூத தலைவர்கள் இயேசுவிடம் வந்து நீர் யார்? என்று கேள்வி கேட்டபோது, நான் மேசியா இல்லை என்று இயேசு பதில் கொடுத்ததாக பர்னபா சுவிசேஷம் சொல்கிறது:

இயேசு அறிக்கையிட்டு உண்மையைச் சொன்னார்: 'நான் மேசியா இல்லை.' 

Jesus confessed, and said the truth: 'I am not the Messiah.'

மூலம்: பர்னபா சுவிசேஷம் அத்தியாயம் 42: 

இந்த மோசடி சுவிசேஷத்தை எழுதியவருக்கு 'மேசியா' என்றாலும், 'கிறிஸ்து' என்றாலும் ஒன்று தான் என்ற உண்மை தெரியவில்லை. இவர் நிச்சயமாக கிறிஸ்தவத்தை முழுவதுமாக அறியாத அரைகுறை நபராக (முஸ்லிமாக) இருந்திருக்கவேண்டும்.  "நான் மேசியா இல்லை" என்று இயேசு புத்தகத்தின் உள்ளே சொல்லியிருக்கும் போது, அந்த புத்தகத்தை, 'கிறிஸ்து என்று அழைக்கப்பட்ட இயேசு' என்று தொடங்குவதிலிருந்து, தனக்குத்தானே முரண்படுகின்றார் இந்த பர்னபா சுவிசேஷத்தின் ஆசிரியர். 

இயேசு கிறிஸ்துவாக இருந்தால், அவர் எப்படி "கிறிஸ்து" இல்லை என்று மறுக்கமுடியும்?  இது இவ்வாசிரியர் செய்த மிகபெரிய இறையியல் தவறாகும்.

இவ்விவரம் சில முஸ்லிம்களுக்கு இன்னும் புரியாமல் இருக்க வாய்ப்பு உள்ளது, எனவே ஒரு இஸ்லாமிய உதாரணத்தைக் காண்போம். ஒரு புத்தகத்தில் 'அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஆவார்' என்று ஒருவர் எழுதுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அதே புத்தகத்தில், 'நீங்கள் அல்லாஹ்வின் தூதரா?' என்று கேள்வி கேட்கப்பட்டால், அதற்கு முஹம்மது, 'நான் அல்லாஹ்வின் தூதர் இல்லை' என்று பதில் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த புத்தகத்தை படிக்கும் வாசகர்கள் இப்போது எந்த முடிவுக்கு வருவார்கள்? முஹம்மது அல்லாஹ்வின் தூதரா? இல்லையா? முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்று புத்தகத்தின் தொடக்கத்தில் கூறிவிட்டு, புத்தகத்தின் உள்ளே "நான் அல்லாஹ்வின் தூதர் இல்லை" என்று முஹம்மது கூறினால், அப்புத்தகத்தை எழுதிய ஆசிரியர் ஒரு பொய்யர் என்று அர்த்தமாகின்றது அல்லவா? அல்லது அவருக்கு முஹம்மது பற்றிய‌ அடிப்படை உண்மைகள் தெரியவில்லை என்று அர்த்தமாகின்றது அல்லவா? இதே போலத்தான், இயேசுவைப் பற்றி பர்னபா சுவிசேஷத்தின் ஆசிரியர் தன்னுடைய அரைகுறை ஞானத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த மோசடியைச் செய்தவருக்கு எபிரேய மொழியில் மேசியா என்றால், கிரேக்க மொழியில் கிறிஸ்து என்று பொருள் என்ற அடிப்படை விவரம் கூட‌ தெரியவில்லை. இதனால், இவர் ஒரு மோசடி பேர்வழி என்பதை அறிந்துக்கொள்ளலாம்.  

குர்‍ஆனை கேவலப்படுத்தும் பர்னபா சுவிசேஷம்: 

குர்‍ஆனில் 'அல் மஸீஹ்' என்று அல்லாஹ்  இயேசுவை குறிப்பிடுகின்றான், ஆனால், பர்பனா சுவிசேஷம் 'இயேசு மஸீஹ் இல்லை' என்றுச் சொல்கிறது.

குர்‍ஆன் 3:45. மலக்குகள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;

குர்‍ஆன் 4:157. இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்);  . . ..

குர்‍ஆன் 4:171. வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; . . .

குர்‍ஆன் 5:17. திடமாக எவர் மர்யமுடைய குமாரர் மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ் என்று கூறுகிறாரோ, அத்தகையோர் நிச்சயமாக நிராகரிப்போர் ஆகிவிட்டனர். "மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருடைய தாயாரையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்துவிட நாடினால், (அதிலிருந்து அவர்களைக் காக்க) எவர் சிறிதளவேனும் சக்தியோ அதிகாரமோ பெற்றிருக்கிறார்" என்று (நபியே!) நீர் கேளும்; . . . .

குர்‍ஆன் 5:72. "நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்" என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்: . . .

குர்‍ஆன் 5:75. மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை, இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் வந்து சென்றுவிட்டனர். . . . (முஹம்மது ஜான் தமிழாக்கம்).

குர்‍ஆன் 9:30. யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; . . . .

குர்‍ஆன் 9:31. அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; . . . .

மேற்கண்ட அனைத்து குர்‍ஆன் வசனங்களையும் பர்னபா சுவிசேஷம் பொய்யாக்குகிறது.

மேசியா/கிறிஸ்து வார்த்தைகளின் பயன்பாடு

மேசியா மற்றும் கிறிஸ்து என்ற வார்த்தைகள் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மத்தியிலே அதிகமாக பயன்படுத்தப்பட்ட சிறப்புமிக்க வார்த்தைகளாகும். முதல் நூற்றாண்டின் பர்னபா இந்த வார்த்தைகளை நன்கு அறிந்தவர், ஏனென்றால், இவர் பக்தியுள்ள கிறிஸ்தவராக இருந்தவர். முதல் நூற்றாண்டு பர்னபா 'சைப்ரஸ்' என்ற தீவில் வாழ்ந்துவந்த எபிரேயம் பேசும் யூதனாக இருந்தார், மேலும் இந்த தீவு கிரேக்க மொழி பேசும் மக்களைக் கொண்ட தீவாகும். இவர் கிரேக்க மொழி பேசும் நாடுகளுக்கு பயணம் செய்து சுவிசேஷ ஊழியம் செய்தவர். இவருக்கு தன் தாய்மொழியாகிய எபிரேயமும் தெரியும், தான் வாழும் நாட்டில் பேசப்படும் கிரேக்க மொழியும் தெரியும். இந்த நிலையில் இப்படிப்பட்ட அடிப்படை தவறை இவர் செய்திருக்கமுடியாது. இவ்வளவு புகழ் பெற்ற மேசியா மற்றும் கிறிஸ்து என்ற வார்த்தைகள் வெவ்வேறானவை என்று இவர் கருத வாய்ப்பு இல்லை. எனவே, இந்த அடிப்படை தவறைச் செய்தவர் ஒரு மோசடி நபராகத்தான் இருக்கமுடியும்.

அரபி குர்‍ஆனையும், தமிழ் குர்‍ஆனையும், தமிழ் பைபிளையும் நன்கு கற்றறிந்திருக்கிறேன் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு முஸ்லிம், ஒரு புத்தகம் எழுதும் போது, அதில், அரபி குர்‍ஆனில் வரும் மஸீஹா என்ற வார்த்தையும், தமிழ் பைபிளில் வரும் 'கிறிஸ்து' என்ற வார்த்தையும் வெவ்வேறானவை என்று விளக்கமளிப்பாரானால், அவரை என்னவென்றுச் சொல்லமுடியும்? அவர் ஒரு பொய்யர் மற்றும் பித்தளாட்டக்காரர் ஆவார் என்றும், தனக்கு அரைகுறை ஞானம் இருந்தும், தனக்கு எல்லாம் தெரியும் என்று பொய்யைச் சொல்லிக்கொண்டு திரிகிறார் என்றும் கருதுவோம் அல்லவா? அது போலத்தான், பர்னபா சுவிசேஷத்தை எழுதியவரும் கருதப்படுவார்.

பர்னபா சுவிசேஷத்தை எழுதியவர் முதல் நூற்றாண்டு பர்னபா இல்லை, அவர் பல நூற்றாண்டுகளை தாண்டி வாழ்ந்தவர், மேலும் தான் விவரிக்கும் நிகழ்ச்சி எந்த கலாச்சார சூழலில் நடந்தது, அப்பொழுது நடைமுறையில் இருந்த மொழிகள் பற்றிய விவரங்களை அறியாத ஒரு மோசடி பேர்வழி என்பது இதன் மூலம் அறிந்துக் கொள்ளமுடியும். 

முடிவுரை:

இக்கட்டுரையில் பர்னபா சுவிசேஷத்தை எழுதியவர் 'முதல் நூற்றாண்டு பர்னபா இல்லை' என்பதற்கு ஒரு அகச்சான்றைக் கண்டோம். இயேசுவோடு வாழ்ந்த ஒருவருக்கு தெரிந்திருக்கவேண்டிய அடிப்படை விவரம் (மேசியா என்றால் கிறிஸ்து என்று அர்த்தம் என்பதைக்) கூட தெரியாத இவர் எப்படி இயேசுவின் சீடராக இருந்திருக்கமுடியும்?

அடுத்த கட்டுரையில் இன்னும் சில சான்றுகளைக் காண்போம்.


Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/rebuttal_gob/rebuttal_gob_part5.htm

வியாழன், 24 மே, 2018

2018 ரமளான் - 4: பர்னபா சுவிசேஷத்தை எழுதியவர், இயேசுவின் உள்வட்ட சீடராக இருந்தாரா?

முந்தைய கட்டுரையில் பர்னபா சுவிசேஷம் யாரால், எப்போது எழுதப்பட்டது என்பதை பார்த்தோம். 

இக்கட்டுரையில், "பர்னபா" இயேசுவின் சீடர்களில் ஒருவராக இருந்தாரா? என்பதை ஆதாரங்களுடன் காண்போம். அதாவது, பர்னபா சுவிசேஷத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விவரங்களின் அடிப்படையிலும், சரித்திர விவரங்களின் அடிப்படையிலும்  இதனை காண்போம்.

1) இவர் இயேசுவின் சீடராக இருந்தாரா?

பர்னபா சுவிசேஷத்தை எழுதியவர் தன்னை இயேசுவின் உள்வட்ட சீடர்களில் ஒருவராக காண்பிக்கிறார். இயேசுவிற்கு உள்வட்ட சீடர்களாக 12 பேர் இருந்தனர்.

பர்னபா சுவிசேஷம் கீழ்கண்ட விதமாக தொடங்குகிறது:

உலகிற்கு இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு புதிய தீர்க்கதரிசியும், கிறிஸ்து என்று அழைக்கப்பட்டவருமாகிய இயேசுவின் உண்மையான நற்செய்தி. இவருடைய அப்போஸ்தலனாகிய பர்னபா என்பவர் எழுதிய நற்செய்தி.

கிறிஸ்து என்று அழைக்கப்பட்ட நசரேயனாகிய இயேசுவின் அப்போஸ்தலர் பர்னபா எழுதிக்கொள்வது.  அமைதியையும், ஆறுதலையும் விரும்பும் உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் எழுதிக்கொள்வது. 

True Gospel of Jesus, called Christ, a new Prophet sent by God to the world: according to the description of Barnabas his apostle.

Barnabas, apostle of Jesus the Nazarene, called Christ, to all them that dwell upon the earth desireth peace and consolation.

மேற்கண்ட வரிகளிலும், இன்னும் இதர இடங்களிலும் இப்புத்தகத்தை எழுதியவர் இயேசுவின் உள்வட்ட சீடர்கள் பன்னிருவரில் ஒருவராக தன்னை அடையாளம் காட்டிக்கொள்கிறார். இயேசு அனேக முறை இவரிடம் பேசியதாக இவர் குறிப்பிடுகிறார், அதாவது இயேசுவோடு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் இவர் இருந்ததாகவும், அவரது ஊழியத்தில் பங்கு பெற்றவராகவும் குறிப்பிடுகிறார்.

2) போலி 'பர்னபாவும்' இயேசுவின் இதர சீடர்களும்

இயேசுவின் மற்ற 11 சீடர்களோடு இவர் மூன்றறை ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், இவருக்கு நிச்சயம், அச்சீடர்களின் பெயர்கள், புனைப்பெயர்கள் தெரிந்திருக்கும். இது உண்மையா என்பதை இப்போது பார்ப்போம்.

பர்னபா சுவிசேஷம் அத்தியாயம் 14ல் இயேசுவின் சீடர்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. 

அவர்களின் பெயர்களாவன: அந்திரேயா, இவரின் சகோதரர் மீனவர் பேதுரு; இந்த புத்தகத்தை எழுதிய பர்னபா, வரிகளை வசூல் செய்யும் மத்தேயு; செபெதேயுவின் குமாரர்களாகிய யோவான் மற்றும் யாக்கோபு; ததேயு மற்றும் யூதா; பற்தொலொமேயு மற்றும் பிலிப்பு; யாக்கோபு மற்றும் துரோகியாகிய யூதாஸ்காரியோத்து . . .

. . .  Their names are: Andrew and Peter his brother, fisherman; Barnabas, who wrote this, with Matthew the publican, who sat at the receipt of custom; John and James, sons of Zebedee; Thaddaeus and Judas; Bartholomew and Philip; James, and Judas Iscariot the traitor. . .  . (பர்னபா சுவிசேஷம் அத்தியாயம் 14).

இந்த மோசடி இஸ்லாமியர் பர்னபா கொடுத்த பட்டியலோடு, புதிய ஏற்பாட்டின் உண்மை சுவிசேஷங்களில் கொடுக்கப்பட்டு இருக்கும் பட்டியலை ஒப்பிட்டுப் பார்ப்போம்.

மேற்கண்ட பட்டியலில் கொடுக்கப்பட்டிருக்கும் விவரங்களை ஒப்பிட்டுப்பார்க்கும் போது, பர்னபா மோசடி ஆவணத்தில் மூன்று தவறுகள் இருப்பதை காணமுடியும்.

பர்னபா சுவிசேஷ பட்டியலின் மூன்று தவறுகள்

முதல் தவறு (எண் 3):

பர்னபா தன்னை அப்போஸ்தலர்கள் பட்டியலில் ஒருவராக இணைத்துக்கொண்டார்.

புதிய ஏற்பாட்டின் படி பர்னபா என்பவர், இயேசுவின் உள்வட்ட சீடரல்ல, இதுமட்டுமல்ல, இயேசு உயிர்த்தெழுந்து பரலோகம் சென்றுவிட்டபிறகு தான் பர்னபா என்பவர் கிறிஸ்தவராகிறார்.  இதைப் பற்றி நாம் அப்போஸ்தலர் நடபடிகளில் காணலாம். இயேசுவின் உள்வட்ட சீடராகிய மத்தேயு எழுதிய நற்செய்தி நூலில் இவரின் பெயர் சீடர்களின் பட்டியலில் இல்லை. இவர் உண்மையாகவே இயேசுவைக் கண்டு பேசிய உள்வட்ட சீடர்களில் ஒருவராக இருந்திருந்தால், மத்தேயு இவருடைய பெயரை குறிப்பிடாமல் இருந்திருக்கமாட்டார். இதர சுவிசேஷ நூல்களிலும் இவரது பெயர் எங்கும் வருவதில்லை. பர்னபா சுவிசேஷத்தை எழுதியவர் போலியான நபர் என்பதையும், அவர் எழுதிய புத்தகம் ஒரு மோசடியான புத்தகம் என்பதையும் கண்டறிய நமக்கு இந்த விவரம் உதவி புரிகின்றது.

இரண்டாவது தவறு (எண் 7 & 8):

ததேயு மற்றும் யூதா என்பவர்கள் இருவர் என்று இவர் நினைத்துக் கொண்டது.

பர்னபா சுவிசேஷம் கொடுக்கும் சீடர்களின் பட்டியலை நாம் காணும் போது ஒரு மிகப்பெரிய தவறு பளிச்சென்று தெரிவதைக் காணமுடியும். அதாவது, இயேசுவின் சீடர்களில் ஒருவரின் பெயர் 'ததேயு' என்பதாகும்.  இவருக்கு இன்னும் இரண்டு பெயர்கள் உண்டு, அவை: 'லபேயு' மற்றும் 'யூதா' என்பவைகளாகும். 

  1. மத்தேயு 10:3ல் 'ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு' என்று பெயர் வருகின்றது.
  2. மாற்கு 3:18ல் 'ததேயு' என்று வருகின்றது.
  3. லூக்கா 6:16ல் / அப் 1:13ல் 'யாக்கோபின் சகோதரனாகிய யூதா' என்று வருகின்றது.
  4. யோவான் 14:22ல் 'ஸ்காரியோத்தல்லாத யூதா' என்றும் வருகிறது. 

ஆக, ததேயு, யுதா, மற்றும் 'லபேயு' என்னும் பெயர்கள் ஒருவரையே குறிக்கும். ஆனால், பர்னபா சுவிசேஷத்தை எழுதியவர் இப்பெயர்கள் இரண்டு நபர்களைக் குறிக்கும் என்று தவறாக‌ எழுதிவிட்டார். மேலேயுள்ள பட்டியலின் எண்கள் 7 மற்றும் 8ஐ பார்க்கவும்.

இந்த பர்னபா என்பவர் இயேசுவின் சீடர்களில் ஒருவராக இருந்திருந்தால், இந்த தவறை செய்து இருக்கமாட்டார். கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் ஒன்றாக இருந்தவர்கள், ஊழியம் செய்தவர்கள் எப்படி ஒருவரின் பெயரை இன்னொருவர் அறிந்திருக்கமாட்டார்கள்? இந்த மோசடி புத்தகத்தை எழுதியவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்பதையும், இவர் முதல் நூற்றாண்டின் பர்னபா இல்லை என்பதையும் இதன் மூலம் அறிந்துக் கொள்ளலாம். முக்கியமாக இவர் இயேசுவின் 12 சீடர்களில் ஒருவரல்ல என்பதை இதன் முலம் தெளிவாக புரிந்துக் கொள்ளலாம். 

முன்றாவது தவறு (எண் 13 & 14):

சீமோன் மற்றும் தோமா என்ற சீடர்களின் பெயர்கள் விடப்பட்டுள்ளன.

புதிய ஏற்பாட்டு நற்செய்தி நூல்களில் காணப்படும் சீடர்களின் பட்டியலில் சீமோன் மற்றும் தோமா என்ற இரண்டு பெயர்கள் உள்ளன.  ஆனால், இந்த மோசடி பர்னபா தன் பட்டியலிலிருந்து இவ்விருவரை நீக்கிவிட்டார்.  இவர்களை நீக்கிய இடத்தில் தன்னை ஒருவராக சேர்த்துவிட்டார். மேலும் ஒரே நபருக்கு பல பெயர்கள் இருப்பதை புரிந்துக்கொள்ளாமல், இரண்டு நபர்களாக அவர்களை கருதிவிட்டார் (மேலே உள்ள இரண்டாம் தவறை பார்க்கவும்).

முடிவுரை:

இதுவரை கண்ட ஆதாரங்களின் படி, பர்னபா சுவிசேஷத்தை எழுதியவர் உண்மையாகவே இயேசுவின் சீடரல்ல என்பதை அறியலாம்.  

மூன்றாண்டுகளுக்கு மேலாக நண்பர்களாக வாழ்ந்த 12 சீடர்களில் ஒருவராக தன்னை அடையாளப்படுத்தும் இவர், ஏன் இப்படிப்பட்ட அடிப்படை தவறுகளைச் செய்யவேண்டும்? இவர் செய்த இந்த தவறுகளைக் கண்ட இதர‌ சீடர்கள் எப்படி இவரது இந்த புத்தகத்தை ஏற்றுக்கொண்டிருப்பார்கள்? பதினோர் பெயர்களை சரியாக ஞாபகத்தில் வைத்திருக்காத இவர் எப்படி 3.5 ஆண்டுகள் நடந்த நிகழ்ச்சிகளை ஞாபகத்தில் வைத்திருந்து இப்புத்தகத்தை எழுதியிருப்பார்? இப்படிப்பட்ட கேள்விகள், பர்னபா சுவிசேஷத்தின் அஸ்திபாரத்தை தகர்த்துவிடுகின்றன என்பதை நாம் அறிந்துக்கொள்ளலாம்.

இவர் ஒரு மோசடி நபராவார், தன் சுய விருப்பத்தை நிறைவேற்ற அதாவது "இஸ்லாமுக்கு ஏற்றபடி ஒரு சுவிசேஷம் வேண்டும்" என்ற விருப்பத்தினால், இப்படி அரைகுறையாக சீடர்களின் பட்டியலை எழுதியுள்ளார். 

இவர் இயேசுவின் உள்வட்ட சீடர்கள் 12 பேர்களில் ஒருவர் இல்லை என்பதை அறிந்துக்கொண்டோம். ஒருவேளை, இவர் அப்போஸ்தலர் நடபடிகளில் வரும் 'பர்னபா'வாக இருப்பாரோ என்ற சந்தேகம் சிலருக்கு வரலாம். அடுத்த கட்டுரையில், அப்போஸ்தலர் நடபடிகளில் வரும் பர்னபாவும், இந்த மோசடி சுவிசேஷ ஆசிரியரும் ஒருவரல்ல என்பதை தகுந்த ஆதாரங்களோடு பார்ப்போம்.


Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/rebuttal_gob/rebuttal_gob_part4.html

புதன், 23 மே, 2018

2018 ரமளான் - 3: பர்னபா சுவிசேஷம் - யாரால், எப்போது எழுதப்பட்டது?

முஸ்லிம்களின் படி, பர்னபா என்பவர் இயேசுவின் சீடர் ஆவார், அவர் கி.பி.  முதல் நூற்றாண்டிலேயே இந்த சுவிசேஷத்தை எழுதினார். ஆனால், உண்மையில் இந்த சுவிசேஷத்தை பர்னபா என்பவர் எழுதவில்லை. பர்னபா சுவிசேஷம் பற்றி முஸ்லிம்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை தவறானதாகும். இது ஒரு மோசடியான ஆவணமாகும். கிறிஸ்தவத்துக்கு எதிரான கருத்துக்கள் இப்புத்தகத்தில் இருப்பதினால், நான் இப்படி கூறுகிறேன் என்று யாரும் நினைக்கவேண்டாம். குர்-ஆனின் அடிப்படை கோட்பாடுகளை விழுங்கி ஏப்பமிடும் விவரங்கள் பர்னபா சுவிசேஷத்தில் உள்ளது. இதனை முஸ்லிம்கள் ஆதரித்தால், அவர்கள் அல்லாஹ்வை அவமானப்படுத்தி, முஹம்மதுவை கள்ள நபியாக சித்தரிக்கிறார்கள் என்று அர்த்தமாகும். ஓட்டுப்போடச் சென்று, தான் ஆதரிக்கும் வேட்பாளரின் சின்னத்தில் முத்திரையிட்டு, அந்த ஓட்டுச் சீட்டை அப்படியே வீட்டுக்கு பத்திரமாக கொண்டு வந்த நபரின் கதி தான், பர்னபா சுவிசேஷத்தை ஆதரிக்கும் முஸ்லிமின் நிலை (இப்போது ஓட்டு போடும் இயந்திரங்கள் உள்ளன, என்பது குறிப்பிடத்தக்கது).   

பர்னபாவின் பெயரை ஏந்திய இந்த புத்தகம் கிறிஸ்துவிற்கு 14 நூற்றாண்டுகளுக்கு பிறகு, முஹம்மதுவிற்கு 7 நூற்றாண்டுகளுக்கு பிறகு ஒரு மோசடி முஸ்லிமினால் எழுதப்பட்டதாகும் அல்லது ஒரு முஸ்லிமினால் 'மோசடி' செய்வதற்காகவே எழுதப்பட்டதாகும்.  இஸ்லாமிய கோட்பாடுகளை ஆதரிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடும், கிறிஸ்தவத்தை எதிர்க்கவேண்டும் என்ற தீய நோக்கத்தோடும் எழுதப்பட்ட புத்தகமாகும். இதன் சரித்திரம் பற்றி இவ்வளவு உறுதியாக எப்படி உங்களால் சொல்லமுடியும்? என்ற கேள்வி வாசகர்களுக்கு எழலாம், இது நியாயமான கேள்வி தான். ஆனால், ஓரளவிற்கு இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் பற்றிய அறிவுடைய எந்த ஒரு நபரானாலும் சரி, அவர் இப்புத்தகத்தை படித்தால், அவருக்கு பளிச்சென்று உண்மை தெரியும். மேலும், இப்புத்தகத்தின் அக மற்றும் புற ஆதாரங்களின் அடிப்படையில் ஆய்வு செய்தால், பர்னபா சுவிசேஷம் எப்படி இஸ்லாமுக்கு கல்லறையை தோண்டுகிறது என்பதை தெளிவாக புரிந்துக்கொள்ளலாம். அவைகளை இந்த தொடர் கட்டுரையில் சுருக்கமாக காண்போம்.

புத்தகம்:பர்னபா சுவிசேஷம் (The Gospel of Barnabas)
ஆசிரியர்:ஆசிரியரின் உண்மைப் பெயர் யாருக்கும் தெரியாது. 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவரால் இது எழுதப்பட்டிருக்கவேண்டும். அவர் ஒரு முஸ்லிமாக இருந்திருக்கவேண்டும். இந்த புத்தகத்தின் படி பர்னபா என்பது ஆசிரியரின் பெயர். ஆனால், கி.பி. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த பர்னபா இவர் அல்ல.
மூலம்:இலத்தீன் மற்றும் ஸ்பானிஸ் மொழியில் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் உள்ளன. ஸ்பானிஸ் மொழியில் முழு புத்தகம் கிடைக்கவில்லை, வெறும் சில துண்டு கையெழுத்துப்பிரதிகள் அதுவும் 18வது நூற்றாண்டில் எழுதப்பட்ட பிரதிகளிலிருந்து கிடைத்துள்ளன.  இலத்தீன் மொழியில் முழு புத்தகம் கிடைத்துள்ளது.
எழுதிய காலம்:ஆசிரியர் இதனை 14ம் நூற்றாண்டில் எழுதியிருக்கவேண்டும், ஆனால் நமக்கு கிடைத்துள்ள கையெழுத்துப் பிரதிகள் 15/16ம் நூற்றாண்டுகளுக்கு  சம்மந்தப்பட்டவையாகும்.http://en.wikipedia.org/wiki/Gospel_of_Barnabas 
மொழியாக்கம்: 

இலத்தின் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் இப்புத்தகத்தை ராக் லண்ட்ஸ்டேல் மற்றும் ராக் லாரா மரியா என்பவர்கள் 1907ம் ஆண்டு மொழியாக்கம் செய்தார்கள்.

Ragg, Lonsdale, 1866-1945

Ragg, Laura Marie (Roberts)

அட்டவணை 1: பர்னபா சுவிசேஷத்தின் ஆசிரியர் மற்றும் எழுதிய காலம்.

இந்த பர்னபா சுவிசேஷம் என்பது 14/15ம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட ஒரு மோசடி ஆவணம் என்பதை அங்கீகரிக்கும் இஸ்லாமிய கலைக்களைஞ்சியம்:

The Concise Encyclopedia of Islam:

As regards the "Gospel of Barnabas" itself, there is no question that it is a medieval forgery ... It contains anachronisms which can date only from the Middle Ages and not before, and shows a garbled comprehension of Islamic doctrines, calling the Prophet the "Messiah", which Islam does not claim for him. Besides it farcical notion of sacred history, stylistically it is a mediocre parody of the Gospels, as the writings of Baha Allah are of the Koran. 

(Cyril Glassé, The Concise Encyclopedia of Islam, San Francisco: Harper & Row, 1989, p. 65)

இப்புத்தகம் முதல் நூற்றாண்டில் எழுதப்படவில்லை என்பதற்கும், இது 14ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பதற்கும் அனேக சான்றுகள் இதில் காணப்படுகின்றன. அடுத்தடுத்த தொடர்களில் அச்சான்றுகளைக் காண்போம்.


Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/rebuttal_gob/rebuttal_gob_part3.html

செவ்வாய், 22 மே, 2018

2018 ரமளான் - 2: பர்னபா சுவிசேஷத்தை ஏன் முஸ்லிம்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்?

முந்தைய கட்டுரை: பர்னபா சுவிசேஷம் - ஓர் அறிமுகம் (14ம் நூற்றாண்டு முஸ்லிமின் ஒரு மிகப்பெரிய மோசடி ஆவணம்)

முந்தையை கட்டுரையில், பர்னபா சுவிசேஷம் பற்றிய அறிமுகத்தைக் கண்டோம்.  இக்கட்டுரையில் முஸ்லிம்கள் ஏன் இந்த சுவிசேஷத்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள் என்பதற்கான காரணத்தைக் காண்போம்.

இக்கட்டுரையை படிக்கும் வாசகர்கள் சிலருக்கு இஸ்லாம் பற்றிய அடிப்படை விவரங்கள் தெரியாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இஸ்லாம் பற்றிய ஒரு சுருக்கத்தை இங்கு தருகிறேன்.

இஸ்லாம் என்ற மதம் 7ம் நூற்றாண்டில் அரேபியாவில் உள்ள மக்கா என்ற நகரில் முஹம்மது என்பவரால் உருவாக்கப்பட்டது. முஹம்மது கி.பி. 570ல் பிறக்கிறார். கி.பி. 610ல் தன்னை ஒரு தீர்க்கதரிசி என்றுச் சொல்லிக்கொண்டு, அல்லாஹ் என்ற இறைவன் தனக்கு வசனங்களை இறக்குகிறார் என்று அறிவிக்கிறார். அதன் பிறகு 23 ஆண்டுகள் உயிரோடு இருந்து, கி.பி 632ம் ஆண்டு மரித்துவிடுகிறார். இந்த 23 ஆண்டுகள் முஹம்மதுவிற்கு அல்லாஹ் வெளிப்படுத்திய வசனங்களை குர்-ஆன் என்ற பெயரில் முஸ்லிம்கள் வைத்திருக்கிறார்கள். குர்-ஆனை முஸ்லிம்கள் வேதமாக கருதுகிறார்கள்.

பைபிளின் தேவன் தன்னை தீர்க்கதரிசியாக தெரிந்தெடுத்தார் என்று முஹம்மது  சொன்னார், மேலும் பைபிளின் படி வந்த தீர்க்கதரிசிகளில் தாம் கடைசியாக வந்தவர் என்றும் கூறிக்கொண்டார். பைபிளில் காணப்படும் அனேக நிகழ்ச்சிகளை குர்-ஆனில் மறுபதிவு செய்தார், சிலவற்றை மாற்றி பதிவு செய்தார். இப்படி அவர் மாற்றிச் சொன்ன விவரங்களில் முக்கியமானது இயேசுவைப் பற்றி அவர் குர்-ஆனில் சேர்த்த விவரங்களாகும். பைபிளுக்கு எதிராக அனேக விவரங்களை அவர் குர்-ஆனில் சேர்த்துவிட்டார்.

முக்கியமாக,

  • இயேசு ஒரு தீர்க்கதரிசி மட்டுமே ஆவார். அவர் தேவ குமாரன் இல்லை என்று உண்மைக்கு புறம்பான விவரங்களை குர்-ஆனில் சேர்த்தார்.  (குர்-ஆன் 4:171).
  • இயேசு சிலுவையில் மரிக்கவில்லை, சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பாக அல்லாஹ் அவரை உயிரோடு தன்னிடத்தில் எடுத்துக்கொண்டார். எனவே சிலுவையில் மரித்தது இயேசு அல்ல, எனவே, இயேசு உயிர்த்தெழவுமில்லை என்றும் குர்-ஆனில் சேர்த்துவிட்டார்.  (குர்-ஆன் 3:55, 4:157).
  • தனக்கு பிறகு ஒரு தீர்க்கதரிசி வருவார் என்றும் அவரது பெயர் 'அஹ்மத் (முஹம்மது)' என்றும் இயேசு சொன்னதாக முஹம்மது குர்-ஆனில் பதித்துவிட்டார் (குர்-ஆன் 61:6).

மேற்கண்ட விவரங்களை முஸ்லிம்கள் கண்மூடித்தனமாக நம்புகிறார்கள். கி.பி. முதல் நூற்றாண்டில் நடந்த நிகழ்ச்சிகளை, 7ம் நூற்றாண்டில் வந்த குர்-ஆன் மாற்றிச் சொல்கிறது. முதல் நூற்றாண்டில் இயேசுவின் சீடர்களைக் கொண்டும், அந்த சீடர்களை கண்களால் கண்ட சாட்சிகளைக் கொண்டும் பரிசுத்த ஆவியானவரால் எழுதப்பட்ட நற்செய்தி நூல்கள் தான் (மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான்) நமக்கு இயேசுவின் உண்மைச் சரித்திரத்தைச் சொல்கின்றன. 

முஸ்லிம்கள் சந்தித்த அமிலச் சோதனை:

பரிசுத்த வேதாகமம் இயேசுவைப் பற்றி ஒருவகையாகச் சொல்கிறது, குர்-ஆன் இன்னொரு வகையாகச் சொல்கிறது. இதனை எப்படி விளங்கிக்கொள்வது? 

• பைபிள் சொல்வது உண்மை என்று முஸ்லிம்கள் கூறினால், 'தங்கள் குர்-ஆன் சொல்வது பொய்' என்று அவர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டி இருக்கும். முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி என்று அங்கீகரிப்பதாக அமைந்துவிடும். இது ஒரு மிகப்பெரிய தர்மசங்கடத்தில் முஸ்லிம்களை தள்ளுகிறது.

• எனவே, இதிலிருந்து விடுபட முஸ்லிம்கள் கண்டுபிடித்த ஒரு வழி 'பைபிள் திருத்தப்பட்டுவிட்டது' என்ற பொய்யான குற்றச்சாட்டாகும். 7ம் நூற்றாண்டுவரை பைபிள் சரியாகத்தான் இருந்தது, ஆனால், அதன் பிறகு கிறிஸ்தவர்களும்  யூதர்களும் தங்கள் வேதங்களை மாற்றிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டை முஸ்லிம்கள் வைக்கிறார்கள், இதற்காக எந்த ஒரு ஆதாரத்தையும் அவர்களால் இன்று வரை முன்வைக்கமுடியவில்லை. 

• இப்படிப்பட்ட நிலையில் முஸ்லிம்களுக்கு வரப்பிரசாதமாக கிடைத்த புத்தகம் தான் 'பர்னபா சுவிசேஷம்'. முதல் நூற்றாண்டில் எழுதப்பட்ட பைபிளின் புத்தகங்களில் இல்லாத அனேக விஷயங்கள் இந்த பர்னபா சுவிசேஷத்தில் உள்ளது. முக்கியமாக, குர்-ஆனில் இயேசுவைப் பற்றி என்ன சொல்லப்பட்டுள்ளதோ, அவைகள் பெரும்பான்மையாக இந்த புத்தகத்திலும் காணப்படுகின்றது. அதாவது இயேசு தம்மை தேவகுமாரன் இல்லை என்றுச் சொன்னதாகவும், தனக்கு பிற்பாடு அஹ்மத் (முஹம்மது) என்ற தீர்க்கதரிசி வருவார் என்று இயேசு சொன்னதாகவும், இயேசுவை சிலுவையில் அறைவதற்கு முன்பாக தேவன் இயேசுவை தன்னிடம் எடுத்துக்கொண்டதாகவும் இந்த பர்னபா சுவிசேஷம் என்ற புத்தகத்தில் காணப்படுகின்றது.

• இப்படிப்பட்ட புத்தகத்தைத் தான் முஸ்லிம்கள் ஆவலாக எதிர்ப்பார்த்திருந்தனர். தங்களுக்கு சாதகமாக இந்த புத்தகம் பேசுவதினால், அந்த புத்தகத்தைப் பற்றிய எந்த ஒரு ஆய்வும் செய்யாமல், ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வின் முடிவை அங்கீகரிக்காமல், பைபிளை கண்மூடித்தனமாக குற்றப்படுத்தவேண்டும் என்ற ஒரே காரணத்தால், பர்னபா சுவிசேஷத்தை இவர்கள் பிரிண்ட் செய்து விற்பனைச் செய்கிறார்கள். அனேக முஸ்லிம்கள் இதனை உதாரணம் காட்டி, புதிய ஏற்பாட்டை குற்றப்படுத்துகிறார்கள். 

இத்தொடர்கள் எழுதுவதின் நோக்கங்களில் ஒன்று, பர்னபா சுவிசேஷத்தின் பின்னணியை, அதன் நம்பகத்தன்மையை ஆதாரங்களோடு தமிழ் பேசும் உலகிற்கு எடுத்துரைப்பதாகும். புத்தியுள்ள எந்த ஒரு முஸ்லிமும், 'பர்னபா சுவிசேஷம், ஒரு மோசடியான புத்தகம்' என்பதை அறியும் தருவாயில், அதனை பயன்படுத்துவதை விட்டுவிடுவான். இது மட்டுமல்ல, இஸ்லாமுக்கு கல்லறைக் கட்டும் பணியை இதே பர்னபா சுவிசேஷம் செவ்வனே செய்துள்ளது, இதனை அறிய தொடர்ந்து அடுத்தடுத்த கட்டுரைகளை படியுங்கள்.

ஏன் முஸ்லிம்கள் இந்த பர்னபா சுவிசேஷத்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள் என்ற காரணத்தை இதுவரைக் கண்டோம். அடுத்த அத்தியாயத்தில், பர்னபா சுவிசேஷத்தின் நம்பகத்தன்மையை அலசுவோம்.


பர்னபா சுவிசேஷம் - பொருளடக்கம்

உமரின் இதர கட்டுரைகள்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/rebuttal_gob/rebuttal_gob_part2.html

திங்கள், 21 மே, 2018

பர்னபா சுவிசேஷம் - ஓர் அறிமுகம்

பர்னபா சுவிசேஷம் - ஓர் அறிமுகம்

(14ம் நூற்றாண்டு முஸ்லிமின் ஒரு மிகப்பெரிய மோசடி ஆவணம்)

இயேசுவின் வரலாற்றை எழுதிய மத்தேயு, மார்க், லூக்கா, யோவான் ஆகிய நால்வரும் இயேசுவின் நேரடிச் சீடர்கள் அல்லர். அவர்கள் கேள்விப்பட்டதைத்தான் எழுதினார்கள்.

இயேசுவின் நேரடிச் சீடராக பர்னபா என்பவர் திகழ்ந்தார். அவர் இயேசு பிடிபடும்போது உடன் இருந்தவர். அவர் எழுதிய சுவிசேஷம் இஸ்லாம் கூறுவது போலவே இந்த நிகழ்வைச் சொல்கிறது. இதன் காரணமாக கிறித்தவ மதகுருமார்கள் பர்னபா சுவிசேஷத்தை நீக்கி விட்டனர். பி ஜைனுல் ஆபிதீன், குர்-ஆன் தமிழாக்கம் விளக்க எண்: 456

முன்னுரை

இயேசுக் கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு புத்தகங்களில் காணலாம். அப்போஸ்தலர்களும் அவர்களது சீடர்களும் எழுதிய இயேசுவின் வாழ்க்கை சரிதைகள் நான்கும் கி.பி. முதலாம் நூற்றாண்டிற்குள் எழுதப்பட்டுவிட்டது, அவைகள் மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் என்ற புத்தகங்களாகும். 

கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து அனேகர் இயேசுவின் சரிதையை எழுத ஆரம்பித்தனர், தங்கள் சொந்த கருத்துக்களையும், கட்டுக்கதைகளையும் சேர்த்து எழுதினர். இப்படி எழுதப்பட்ட புத்தகங்களை தள்ளுபடி ஆகமங்கள் என்று அழைக்கிறோம். அவைகள் பரிசுத்த வேதாகமத்தின் ஒரு பகுதியாக கருதப்படவில்லை. 

ஏழாம் நூற்றாண்டில் முஹம்மது என்பவரால் உருவாக்கப்பட்ட மதம் இஸ்லாமாகும். இம்மதத்தை பின் பற்றுபவர்களை முஸ்லிம்கள் என்பார்கள். இவர்களின் வேதம் "குர்-ஆன்" ஆகும். குர்-ஆனில் பைபிளின் அனேக நிகழ்ச்சிகள் திருத்திச் சொல்லப்பட்டுள்ளது. முக்கியமாக, இயேசுவிற்கு தெய்வீகத்தன்மையில்லை, அவர் சிலுவையில் அறையப்படவில்லை, அவர் உயிர்த்தெழவில்லை என்று குர்-ஆன் பைபிளுக்கு எதிராகச் சொல்கிறது. மேலும், இயேசு வெறும் ஒரு சாதாரண தீர்க்கதரிசி மட்டுமே என்றும் குர்-ஆன் சொல்கிறது.  ஆனால், பைபிளில் பதிவு செய்யப்பட்ட இயேசுவின் வாழ்க்கை வரலாறு தான் உண்மையானது. இயேசுவிற்கு 700 ஆண்டுகளுக்கு பின்பு வந்த குர்-ஆன் சொல்லும் விவரங்கள் அனைத்தும் தவறானவை என்பதை கிறிஸ்தவர்கள் அறிவார்கள். இதனை ஜீரணித்துக் கொள்ளமுடியாத முஸ்லிம்கள் பல யுக்திகளை கையாண்டார்கள், அதில் ஒன்று தான் 'பைபிள் திருத்தப்பட்டது' என்ற குற்றச்சாட்டு. குர்-ஆனில் உள்ள விவரங்களில் எங்கேயெல்லாம் பைபிள் முரண்படுமோ, அங்கேயெல்லாம் பைபிள் திருப்பட்டது என்று குற்றம் சாட்டுகிறார்கள் முஸ்லிம்கள். 

முஸ்லிம்களின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு சாதகமாக ஒரு புத்தகம் இவர்கள் கையில் கிடைத்துள்ளது. அதன் பெயர் 'பர்னபா சுவிசேஷம்' என்பதாகும். இந்த புத்தகத்தை வைத்துக்கொண்டு முஸ்லிம்கள் கிறிஸ்தவத்திற்கும், பைபிளுக்கும் எதிராக எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.  முக்கியமாக குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால், 'தமிழ் நாடு தௌஹித் ஜமாத்' என்ற பெயரில் இயங்கும் அமைப்பின் குர்-ஆன் தமிழாக்கத்தில் இந்த 'பர்னபா சுவிசேஷத்தை' குறிப்பிட்டு எழுதி, பைபிளை குற்றப்படுத்தியுள்ளார். புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு சுவிசேஷங்கள், இயேசுவின் சீடர்களால் எழுதப்படவில்லை என்றும், இந்த பர்னபா சுவிசேஷம் மட்டும் தான் இயேசுவின் நேரடி சீடரால் எழுதப்பட்டது என்றும் எழுதியுள்ளார். 

இந்த புத்தகம் கீழ்கண்ட மூன்று நோக்கங்களுக்காக எழுதப்படுகின்றது.

1. பர்னபா சுவிசேஷம் என்ற புத்தகத்தை யார் எழுதினார்கள்? எப்போது எழுதினார்கள்? இது முதலாம் நூற்றாண்டு காலகட்டத்தில் எழுதப்பட்ட ஒரு அதிகாரபூர்வமான புத்தகமா? என்பதை ஆய்வு செய்து, இதன் உண்மை நிலையை தமிழ் பேசும் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்களுக்கு அறிவிப்பது இப்புத்தகத்தின் முதல் நோக்கமாகும்.

2. மோசடி புத்தகமாகிய 'பர்னபா சுவிசேஷத்தின்' உண்மை நிலையை அறிந்துக்கொள்ளாமல், அல்லது உண்மையை அறிந்திருந்தாலும், பைபிளை குற்றப்படுத்தவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இணையத்திலும், புத்தகங்களிலும் எழுதிக்கொண்டு இருக்கும் இஸ்லாமிய அறிஞர்களின் கேள்விகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் ஆதார பூர்வமான பதில்களைத் தருவது இப்புத்தகத்தின் இரண்டாவது நோக்கமாகும்.

3. கடைசியாக, மேற்கண்ட இஸ்லாமியர்களின் மோசடி புத்தகங்களை படித்துவிட்டு, அவர்களின் பேச்சுக்களை கேட்டுவிட்டு, குழப்பமடையும்  கிறிஸ்தவர்களுக்கு ஒரு சரியான வழிகாட்டுதலை பைபிளின் படி தருவதாகும். இதன் மூலம், கிறிஸ்தவர்கள் இஸ்லாமின் உபதேசத்தை இணம் கண்டுக்கொள்ள இப்புத்தகம் உதவியாக இருக்கும்.

மேற்கண்ட மூன்று நோக்கங்களை இந்த புத்தகம் பூர்த்தி செய்ய கர்த்தர் கிருபை அளிப்பாராக. 

அடுத்த தொடரில் சந்திப்போம்.


பின் குறிப்பு:

ஜீசஸ் இன்வைட்ஸ் தளத்தில் 'ஆய்வாளன்' என்ற பெயரில் வந்த கட்டுரையை கீழே அப்படியே கொடுத்துள்ளேன். ஏனென்றால், என்னுடைய 'இந்த பர்னபாஸ் சுவிசேஷம் தொடர்கள் ஆதாரங்களோடு' வெளிவரும் போது, ஜீசஸ் இன்வைட்ஸ் தள நிர்வாகிகள், வேறு வழியில்லாமல் நிச்சயம், கீழ்கண்ட கட்டுரையை நீக்குவார்கள். வாசகர்களுக்கு உண்மை விளங்கவேண்டும் என்பதற்காக, அக்கட்டுரையை முழுவதுமாக பதிக்கிறேன்.

பைபிளின் நான்கு சுவிஷேசங்கள் போல் இன்னும் பலரும் எழுதினார்கள். பவுல் உண்டாக்கிய கோட்பாட்டுக்கு அவை சம்மட்டி அடியாக இருந்ததால் அவற்றை வேத புத்தகத்தில் இருந்து கிறித்தவர்கள் நீக்கி விட்டனர். அவற்றுள் முக்கியமானது பர்னபா என்பவர் எழுதிய சுவிஷேசமும் ஒன்றாகும்.

பர்னபா சுவிஷேசம் மற்ற அனைத்து சுவிஷேசங்களில் இருந்தும் சிறப்புற்றதாகும். ஏனெனில் மற்ற சுவிஷேசக்காரர்கள் இயேசுவின் நேரடிச் சீடர்களாக இருக்கவில்லை. இது குறித்து முன்னர் விளக்கப்பட்டுள்ளது. ஆனால் பர்னபா இயேசுவின் நேரடிச் சீடராக இருந்தார். இயெசுவைச் சிலுவையில் அறையத் தேடிய போது என்ன நடந்தது என்பதை இவர் நேரடியாகப் பார்த்தவர்.

நான்கு சுவிஷேசம் எழுதியவர்களும் அப்போது நடந்ததை தாங்கள் நேரடியாகப் பார்த்ததாகக் கூறவில்லை. கேள்விப்பட்டதையும் யூகித்ததையும் தான் எழுதினார்கள். ஆனால் பர்னபா, நான் சம்பவத்தை நேரடியாகப் பார்த்தவன் என்று கூறுகிறார்.

கீழே நாம் எடுத்துக் காட்டிய மேற்கோளில் இருந்தும் இவர் இயேசுவின் சீடர் என்பதை அறியலாம்.

நாங்கள் அனைவரும் அவன் இயேசுவென்று நினைக்கும் நிலைக்கு ஆகிவிட்டது என்று பர்னபா கூறுகிறார். தன்னையும் மற்ற சீடர்களையும் உள்ளடக்கி நாங்கள் அனைவரும் நினைத்தோம் என்று கூறுகிறார். இவர் இயேசுவின் நேரடியான சீடர் என்பதற்கு இதுவே சான்று.

இவரது சுவிஷேசத்தை வேதப் புத்தகத்தில் இருந்து தூக்கி வீசியது போல் இவரையும் பன்னிரண்டு சீடர்களில் இருந்து தூக்கி விட்டனர். இவரை இயேசுவின் சீடரான மாற்குவின் சீடர் என்று ஒரு படி இறக்கி விட்டனர்.

பர்னபா என்பவர் பவுல் காலத்தில் அவருடன் இணைந்து போதனை செய்தவர். பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவர். இயேசு சிலுவையில் அறையப்படவில்லை என்று இவர் எழுதிய சுவிஷேசம் கூறுவதால் இவரது சுவிஷேசத்தை வேதப்புத்தகத்தில் இருந்து நீக்கி விட்டனர்.

பர்னபா பற்றி பைபிளில் காணப்படும் குறிப்புகள் அவரது முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.

அப்பொழுது பர்னபா என்பவன் அவனைச் சேர்த்துக் கொண்டு, அப்போஸ்தலரிடத்தில் அழைத்துக் கொண்டு போய், வழியிலே அவன் கர்த்தரைக் கண்ட விதத்தையும், அவர் அவனுடனே பேசினதையும், தமஸ்குவில் அவன் இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்ததையும் அவர்களுக்கு விவரித்துச் சொன்னான்.

அப்போஸ்தலர் நடபடிகள் 9:27

எருசலேமிலுள்ள சபையார் இந்தக் காரியங்களைக் குறித்துக் கேள்விப்பட்ட போது, அந்தியோகியா வரைக்கும் போகும்படிக்குப் பர்னபாவை அனுப்பினார்கள். அவன் போய்ச் சேர்ந்து, தேவனுடைய கிருபையைக் கண்ட போது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்தி சொன்னான். அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான்; அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய்ச் சேர்க்கப்பட்டார்கள். பின்பு பர்னபா சவுலைத் தேடும்படி, தர்சுவுக்குப் புறப்பட்டுப் போய், அவனைக் கண்டு, அந்தியோகியாவுக்கு அழைத்துக் கொண்டு வந்தான். அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம் பண்ணினாட்;கள். முதல் முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.

(அப்போஸ்தலர் நடபடிகள் 11:21-26)

அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும், நீகர் என்னப்பட்ட சிமியோனும், சிரேனே ஊரானாகிய லுகியும், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோதுடனே கூட வளர்க்கப்பட்ட மனாயீனும், சவுலும், தீர்க்கதரிசிகளாயும் போதகர்களாயும் இருந்தார்கள். அவர்கள் கர்த்தருக்கு ஆராதனை செய்து, உபவாசித்துக் கொண்டிருக்கிற போது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்து விடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர் திருவுளம்பற்றினார்.

அப்போஸ்தலர் நடபடிகள் 13:1,2

அவன் விவேகமுள்ள மனுஷனாகிய செர்கியுபவுல் என்னும் அதிபதியுடனே கூட இருந்தான். அந்த அதிபதி பர்னபாவையும் சவுலையும் அழைப்பித்து, அவர்களிடத்தில் தேவ வசனத்தைக் கேட்க ஆசையாயிருந்தான்.

அப்போஸ்தலர் நடபடிகள் 13:7

ஜெப ஆலயத்தில் கூடின சபை கலைந்து போன பின்பு, யூதரிலும் யூத மார்க்கத்தமைந்த பக்தியுள்ளவர்களிலும் அநேகர் பவுலையும் பர்னபாவையும் பின்பற்றினார்கள். அவர்களுடனே இவர்கள் பேசி, தேவனுடைய கிருபையிலே நிலை கொண்டிருக்கும்படி அவர்களுக்குப் புத்தி சொன்னார்கள்.

அப்போஸ்தலர் நடபடிகள் 13:43

அடுத்த ஓய்வு நாளிலே கொஞ்சங்குறையப் பட்டணத்தாரனைவரும் தேவ வசனத்தைக் கேட்கும்படி கூடி வந்தார்கள். யூதர்கள் ஜனக் கூட்டங்களைக் கண்ட போது பொறாமையினால் நிறைந்து, பவுலினால் சொல்லப்பட்டவைகளுக்கு எதிரிடையாய்ப் பேசி, விரோதித்துத் தூஷித்தார்கள். அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியங்கொண்டு அவர்களை நோக்கி: முதலாவது உங்களுக்கே தேவ வசனத்தைச் சொல்ல வேண்டியதாயிருந்தது; நீங்களோ அதைத் தள்ளி, உங்களை நித்தியஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக் கொள்ளுகிற படியினால், இதோ, நாங்கள் புறஜாதியரிடத்தில் போகிறோம்.  நீர் பூமியின் கடைசி பரியந்தமும் இரட்சிப்பாயிருக்கும்படி உம்மை ஜாதிகளுக்கு ஒளியாக வைத்தேன் என்கிற வேத வாக்கியத்தின்படி கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறபடியினால் இப்படிச் செய்கிறோம் என்றார்கள்.

அப்போஸ்தலர் நடபடிகள் 13:44-47

பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவிலே சஞ்சரித்து, வேறே அநேகரோடுங் கூடக் கர்த்தருடைய வசனத்தை உபதேசித்துப் பிரசங்கித்துக் கொண்டிருந்தார்கள். சில நாளைக்குப் பின்பு பவுல் பர்னபாவை நோக்கி: நாம் கர்த்தருடைய வசனத்தை அறிவித்திருக்கிற சகல பட்டணங்களிலுமுள்ள சகோதரர்கள் எப்படியிருக்கிறார்களென்று போய்ப் பார்ப்போம் வாரும் என்றான். அப்பொழுது பர்னபா என்பவன் மாற்கு என்னும் பேர் கொண்ட யோவானைக் கூட அழைத்துக் கொண்டு போக வேண்டும் என்றான்.

(அப்போஸ்தலர் நடபடிகள் 15:37)

பவுலோ: அவன் பம்பிலியா நாட்டிலே நம்மை விட்டுப் பிரிந்து நம்மோடே கூட ஊழியத்துக்கு வராததினாலே, அவனை அழைத்துக் கொண்டு போகக் கூடாது என்றான். இதைப் பற்றி அவர்களுக்குள்ளே கடுங்கோபமூண்டபடியினால் அவர்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தார்கள். பர்னபா மாற்குவைக் கூட்டிக் கொண்டு கப்பல் ஏறிச் சீப்புரு தீவுக்குப் போனான். பவுலோ சீலாவைத் தெரிந்து கொண்டு, சகோதரராலே தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டு, புறப்பட்டு, சீரியாவிலும் சிலிசியாவிலும் திரிந்து, சபைகளைத் திடப்படுத்தினான்.

அப்போஸ்தலர் நடபடிகள் 15:38-41

பதினாலு வருஷம் சென்ற பின்பு, நான் தீத்துவைக் கூட்டிக் கொண்டு பர்னபாவுடனே கூட மறுபடியும்  எருசலேமுக்குப் போனேன்.

கலாத்தியர் 2:1

எனக்கு அளிக்கப்பட்ட கிருபையை அறிந்த போது, தூண்களாக எண்ணப்பட்ட யாக்கோபும், கேபாவும், யோவானும், தாங்கள் விருத்தசேதனமுள்ளவர்களுக்கும், நாங்கள் புறஜாதிகளுக்கும் பிரசங்கிக்கும்படி, அந்நியோந்நிய ஐக்கியத்திற்கு அடையாளமாக எனக்கும் பர்னபாவுக்கும் வலதுகை கொடுத்து, தரித்திரரை நினைத்துக் கொள்ளும்படிக்கு மாத்திரம் சொன்னார்கள்; அப்படிச் செய்யும்படி அதற்கு முன்னமே நானும் கருத்துள்ளவனாயிருந்தேன்.

கலாத்தியர் 2:9,10

பவுலுக்கு நிகராகவும் அவரை விட மேலாகவும் இருந்த பர்னபா எழுதிய சுவிஷேசத்தில் சிலுவை மரணம் குறித்து பின்வருமாறு கூறுகிறார்.

பர்னபாஸின் சுவிசேஷம் (ஆங்கிலத்தின் தமிழாக்கம்)

பர்னபாஸின் சுவிஷேசம் 222 அதிகாரங்களைக் கொண்டது. இதில் இயேசுவை சிலுவையில் அறைவதற்காக எதிரிகள் திட்டமிட்ட போது என்ன நடந்தது என்பதை 215 முதல் பர்னபா விரிவாக விளக்குகிறார். அதில் 215, 216 217 ஆகிய அதிகாரங்களை மட்டும் கீழே தருகிறோம்.

பர்னபாவின் சுவிஷேசத்தை ஆங்கிலத்தில் முழுமையாக ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ள்ஹஸ்ரீழ்ங்க்-ற்ங்ஷ்ற்ள்.ஸ்ரீர்ம்/ண்ள்ப்/ஞ்க்ஷஹழ்/ண்ய்க்ங்ஷ்.ட்ற்ம்.. என்ற முகவரியில் காணலாம்.

215.

When the soldiers with Judas drew near to the place where Jesus was, Jesus heard the approach of many people, wherefore in fear he withdrew into the house. And the eleven were sleeping.

Then God, seeing the danger of his servant, commanded Gabriel, Michael, Rafael, and Uriel, his ministers, to take Jesus out of the world.

The holy angels came and took Jesus out by the window that looketh toward the South. They bare him and placed him in the third heaven in the company of angels blessing God for evermore..

இயேசு நின்ற இடத்திற்கு அருகே யூதாசும் படையாளிகளும் வந்தடைந்த போது இயேசு ஜனங்களின் ஆரவாரத்தைக் கேட்டார். வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றார். பயத்தின் காரணமாக அவர் வீட்டிற்குள் பின்வாங்கிச் சென்றார். பதினொரு அப்போஸ்தலர்களும் அப்போது நித்திரையிலிருந்தனர்.

அப்பொழுது கர்த்தர் தன் ஊழியக்காரனுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதை அறிந்து, தன்னுடைய மந்திரிகளாகிய கப்ரியேல், மீக்காயேல், ராஃபேல், உரியேல் என்போருக்கு இயேசுவைப் பூலோகத்திலிருந்து புறமே எடுத்துவிடும் படிக்குக் கட்டளையிட்டார்.

தெற்குப் பக்கமாக திறந்திருக்கும் சாளரம் வழியாக  இயேசுவை தேவ ஊழியர்கள் வெளியே எடுத்தார்கள். அவரையும் கொண்டு அவர்கள் கர்த்தரின் அருள் என்றைக்கும் நிலைத்து நிற்கக் கூடிய தேவ ஊழியக்காரர்கள் தங்கியிருக்கக் கூடிய மூன்றாவது வானத்துக்குக் கொண்டு சென்றார்கள்.

216. Judas entered impetuously before all into the chamber whence Jesus had been taken up. And the disciples were sleeping. Whereupon the wonderful God acted wonderfully, insomuch that Judas was so changed in speech and in face to be like Jesus that we believed him to be Jesus. And he, having awakened us, was seeking where the Master was. Whereupon we marvelled, and answered: 'Thou, Lord, art our master; hast thou now forgotten us?'

And he, smiling, said: 'Now are ye foolish, that know not me to be Judas Iscariot!'

And as he was saying this the soldiery entered, and laid their hands upon Judas, because he was in every way like to Jesus.

We having heard Judas' saying, and seeing the multitude of soldiers, fled as beside ourselves.

And John, who was wrapped in a linen cloth, awoke and fled, and when a soldier seized him by the linen cloth he left the linen cloth and fled naked. For God heard the prayer of Jesus, and saved the eleven from evil..

இயேசு எடுக்கப்பட்ட உடனே யூதாஸ் மற்றவர்கள் முன்னிலையில் அறைக்குள் சாடிச் சென்றான். அப்போது எல்லா அப்போஸ்தலர்களும் நித்திரை கொண்டிருந்தனர். அப்பொழுது அற்புதங்களை உடைய கர்த்தர் அற்புதத்தை நிகழ்த்தினார்! யூதாசின் உரையாடலும் அவனது முகமும் இயேசுவினுடையது போல ஆயிற்று! நாங்கள் அனைவரும் அவன் இயேசுவென்று நினைக்கும் நிலைக்கு ஆகிவிட்டது! எங்களை எழுப்பி அவன் குரு எங்கே என்று தேடினான். அப்பொழுது நாங்கள் வியப்புடன் அவனுக்குப் பதில் கூறினோம் "ஆண்டவரே! தாங்கள் தானே எங்களுக்கு குருவானவர், இப்போது எங்களை மறந்து விட்டீர்களா?" அவன் புன்னகைத்துக் கொண்டு கூறினான்: நான்தான் யூதாஸ் இஸ்காரியாத், இதனைப் புரியாத நீங்கள் இப்போது அறிவீனர்களே!"

இப்படிக் கூறிக் கொண்டிருக்கையில் படையாட்கள் உள்ளே நுழைந்தனர். முற்றிலும் இயேசுவைப் போல மாறிவிட்டிருந்த யூதாசைப் பிடித்துக் கொண்டார்கள். எங்களைச் சுற்றியிருந்த படையாட்களுக்கு இடையில் நாங்கள் ஓடுகையில் யூதாஸ் கூறிக் கொண்டிருந்ததை நாங்கள் கேட்டோம். நார்ப்பட்டுத் துணியால் தன்னைப் போர்த்தியிருந்த  யோவான் எழுந்து ஓடிய போது ஒரு படையாள் நார்ப்பட்டுத் துணியைப் பிடித்த போது, அவர் அதை விட்டு விட்டு ஆடையின்றித் தப்பி ஓடினார்! இயேசுவின் வேண்டுதலுக்கு கர்த்தர் செவிகொடுத்து, பதினொன்று பேரும் தீமையிலிருந்து காப்பாற்றப்பட்டார்கள்.

217. The soldiers took Judas and bound him, not without derision. For he truthfully denied that he was Jesus; and the soldiers, mocking him, said: 'Sir, fear not, for we are come to make thee king of Israel, and we have bound thee because we know that thou dost refuse the kingdom.'

Judas answered: 'Now have ye lost your senses! Ye are come to take Jesus of Nazareth, with arms and lanterns as [against] a robber; and ye have bound me that have guided you, to make me king!'

படையாட்கள் யூதாசைப் பலவந்தமாகப் பிடித்து வைத்திருந்தனர். அவனோ தான் இயேசு அல்ல என்று மறுத்துக் கொண்டிருந்தான். படையாட்கள் அவனைப் பரிகசித்துக் கொண்டு சொன்னார்கள், ஐயா, தாங்கள் பயப்பட வேண்டாம், தங்களை இஸ்ரவேலரின் மன்னராக ஆக்குவதற்கு நாங்கள் வந்திருக்கிறோம். அரசாட்சியை தாங்கள் மறுப்பீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அதனால் தான் உங்களைப் பிடித்து வைத்துள்ளோம்!"

இப்போது நீங்கள் உங்கள் மதியை இழந்து விட்டீர்கள். நீங்கள் ஒரு திருடனைப் (பிடிப்பது) போல் நாஸரேத்துடைய இயேசுவைப் பிடிப்பதற்காக ஆயுதங்கள் மற்றும் விளக்குகளுடன் வந்துள்ளீர்கள். உங்களுக்கு வழிகாட்டிய என்னையே அரசனாக்குவதற்காக நீங்கள் பிடித்து வைத்துள்ளீர்கள்" என்று யூதாஸ் பதிலளித்தான்.

இது குறித்து கிறித்தவ குருமார்கள் பதில் அளிக்கும் போது பர்னபா சுவிஷேசம் என்பது முஸ்லிம்களின் கற்பனை என்ற ரெடிமேட் பதிலைக் கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் இதர்கு அவர்கள் எவ்வித ஆதாரத்தையும் காட்டுவதில்லை.

பர்னபாவின் சுவிஷேசத்தை கிறித்தவ குருமார்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவர்கள் ஏற்றுக் கொண்ட ஆதாரங்கள் மூலமே சிலுவைப் பலி சித்தாந்தம் தவிடு பொடியாகியுள்ளதை மறுக்க முடியாது.

ஆய்வாளன்


பர்னபா சுவிசேஷம் - பொருளடக்கம்

உமரின் இதர கட்டுரைகள்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/rebuttal_gob/rebuttal_gob_intro.html