ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

திங்கள், 15 ஜூலை, 2013

2013 ரமளான் நாள் 4 - பதிலுக்கு பதில்: நீங்கள் செல்வங்களை எடுத்துக்கொண்டீர்கள், நாங்கள் கொள்ளையடிக்கிறோம்

2013 ரமளான் நாள் 4 - பதிலுக்கு பதில்: நீங்கள் செல்வங்களை எடுத்துக்கொண்டீர்கள், நாங்கள் கொள்ளையடிக்கிறோம்


முந்தைய மூன்று தொடர் கட்டுரைகளை கீழேயுள்ள தொடுப்புகளை சொடுக்கி படியுங்கள்:
முஹம்மதுவும், முஸ்லிம்களும் மக்கா வியாபாரிகளை வழியில் மடக்கி கொள்ளையிட்டது நியாயமா? என்று கேட்டதற்கு, என் தம்பி கீழ்கண்ட பதிலை கொடுத்தான்:

  1. முதன் முதலில் மக்காவினர் தான் முஹம்மதுவை தாக்கினார்கள். எனவே, அவர்களுக்கு முஹம்மது பதிலடி கொடுத்தார்.
  2. முஸ்லிம்கள் மக்காவில் விட்டுவந்த செல்வங்களை மக்காவினர் எடுத்துக்கொண்டனர். அச்செல்வங்ளை மீட்டுக்கொள்ள அல்லாஹ் முஸ்லிம்களுக்கு போர் புரிய அனுமதி அளித்தான்.
மேற்கண்ட இரண்டு விவரங்களில் முதலாவது விவரத்திற்கு, மூன்றாம் பாகத்தில் பதில் அளித்துள்ளேன்.  இந்த கட்டுரையில் நாம்  இரண்டாவது விவரத்திற்கு பதிலைக் காண்போம்.
--------------------------------

அன்புள்ள தம்பிக்கு,

நான் என் முந்தைய கடிதத்தில் சொன்னது போல, இந்த கடிதத்தில், செல்வங்களை மீட்டுக்கொள்ள முஸ்லிம்கள் போர் புரிந்தார்கள் என்று நீ சொன்ன விவரத்திற்கு என் பதிலை இப்பொது தருகிறேன். நிதானமாக படித்துப் பார்த்து சிந்தி.

பதிலுக்கு பதில்: குறைஷிகளே! நீங்கள் ஒரு முறை கொள்ளையடித்தீர்கள், முஸ்லிம்களாகிய நாங்கள் அனேக முறை கொள்ளையடிக்கிறோம்

1) வழிப்பறி கொள்ளையில் ஈடுபட அல்லாஹ் அனுமதியளித்தார்:

மதினாவிற்கு முஹம்மது சென்றபிறகு, அனேக வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டார். அதாவது, குறைஷி வியாபாரிகள் தங்கள் வியாபார பொருட்களோடு நாடு திரும்பிக்கொண்டு இருக்கும் போது, முஸ்லிம்கள் வழியில் பதுங்கியிருந்து, அவர்கள் மீது திடீர் தாக்குதல் செய்து, சண்டையிட்டு, கொலை செய்து, பொருட்களை அபகரித்தார்கள். இப்படி முஸ்லிம்கள் கொள்ளையடிப்பது நியாயமா? என்று கேள்வி கேட்டால், "இதற்கு அல்லாஹ் எங்களுக்கு அனுமதி அளித்தான், முஸ்லிம்களை வீடுகளிலிருந்து துரத்தி, அவர்களின் பொருட்களை அபகரித்த மக்காவினரிடமிருந்து தங்கள் பொருட்களை மீட்டுக்கொள்ள அல்லாஹ் அனுமதி அளித்தான். இது நியாயமானது தான்" என்று முஸ்லிம்கள் பதில் அளிப்பார்கள்.

முதல் முறை இவைகளை கேள்விப்படுபவர்கள், "ஆம் முஸ்லிம்கள் சொல்வது சரியானது தான் என்று நினைப்பார்கள்". ஆனால், இவைகளை ஆழமாக ஆராய்ந்தால், இஸ்லாம் இறைவனால் உண்டான மார்க்கம் அல்ல என்பதை புரிந்துக்கொள்ளலாம். 

2) உழைத்து வாழவேண்டும், பிறரை அழித்து வாழக்கூடாது – முஸ்லிம்களின் வறுமையை அல்லாஹ் எப்படி நீக்கினார்?

இஸ்லாமுடைய ஆரம்ப காலத்தைப் பார்த்தால் மிகவும் அருமையாக இருக்கும்.  முஹம்மது தனக்கு இறைச்செய்து வந்தது என்றுச் சொல்லுதல், அதனை அவர் தன் மக்களிடம் பகிர்ந்துக்கொள்ளுதல், சிலர் அவரை எதிர்ப்பதும், சிலர் அவரை ஆதரிப்பதுமாக நிகழ்ச்சிகள் தொடர்ந்துக்கொண்டு இருந்தது. முஹம்மது குறைஷிகளின் தெய்வங்கள் பற்றி அதிகமாக விமர்சிக்க ஆரம்பித்தார்,  இவரின் வாயை மூடுவதற்கு குறைஷிகள் எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தது.  எனவே, இவரின் உயிரையே எடுக்க அவர்கள் எண்ணினர், இதர முஸ்லிம்களுக்கு அனேக தொல்லைகளை கொடுத்தனர். இதனால் முஸ்லிம்களும், முஹம்மதுவும் தங்கள் வீடுகளை விட்டும், செல்வங்களை விட்டும், உயிர் தப்ப மதினாவிற்கு சென்றுவிட்டனர்.  இதுவரை நடந்தது எல்லாம், புதிய மார்க்கத்தை பரப்பும் ஒவ்வொருவரும் சந்திக்கும் எதிர்ப்புகளாகும். இஸ்லாமும் இப்படிப்பட்ட எதிர்ப்பிற்கு உள்ளானது ஒன்றும் புதிய விஷயமல்ல.

ஆனால், இதன் பிறகு நடந்த நிகழ்ச்சிகள் தான் இஸ்லாமின் உண்மை முகத்தை நமக்கு காட்டுகிறது.

அ) மதினாவிற்கு முஸ்லிம்கள் வெறுங்கையோடு வந்து சேர்ந்தார்கள்.  இவர்களின் வறுமையை எப்படி நீக்குவது?  பொதுவாக தங்கள் வறுமையை போக்கிக்கொள்ள மக்கள் கடினமாக உழைப்பார்கள். 

ஆ) ஒரு மனிதன் பக்தியுள்ளனோ அல்லது பக்தியில்லாதவனோ, எவனாக இருந்தாலும் சரி, "உழைப்பு உயர்வு தரும்" என்ற சொல்லுக்கு இணங்க, அவன் கடினமாக உழைத்தால் அவனுடைய வறுமை நீங்கி அவன் உயருவான்.

இ) ஆனால், முஸ்லிம்களின் கதையை கண்டால்,  உழைப்பு மீது  அவர்களுக்கு நம்பிக்கையில்லை என்பது போல் உள்ளது.  தம்பி, இந்த கேள்விகளுக்கு பதில் தர உன்னால் முடியுமா? 

மதினாவில் முஹம்மதுவும், அவரோடு இடம்பெயர்ந்த முஸ்லிம்களும் என்ன தொழில் செய்தார்கள்?  உழவுத் தொழில் செய்தார்களா? ஆடுகளையும், ஒட்டகங்களையும் மேய்த்து தங்கள் குடும்பத்துக்கு தேவையான உணவை சம்பாதித்தார்களா?  வேறு நாட்டுக்குச் சென்று வியாபாரம் செய்து, அதன் மூலம கிடைத்த செல்வங்களினால் தங்கள் வறுமையை போக்கிக்கொண்டார்களா?

ஈ) அல்லாஹ் உண்மையான இறைவனாக இருந்திருந்தால், தன்னை நம்பி வெறுங்கையோடு மதினா வந்த முஸ்லிம்களை உழைக்கச் சொல்லி, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை அவன் ஆசீர்வதித்து இருந்திருப்பான்.

உ) குறைஷிகள்  உங்களை துரத்தி, உங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டார்கள், ஆகையால், அவர்களின் வியாபாரிகளை வழிகளில் திடீரென்று தாக்கி, அவர்களின் உடைமைகளை நீங்கள் கொள்ளையடித்துக் கொள்ளுங்கள் என்று இறைவன் கூறுவானா? இப்படி கூறுபவன் இறைவனா?

ஊ) அவன் உன்னை கொள்ளையிட்டான், ஆகையால் நீயும் அவனை கொள்ளையிடு – இதுவா இஸ்லாமின்  கோட்பாடு.  தம்பி, அல்லாஹ்வின் இந்த செயல்  மிகவும் கேவலமாக உள்ளது. 

எ) முஸ்லிம்களின் வறுமையை போக்க, அல்லாஹ் கொடுத்த  இந்த வழிமுறை கேவலமானதாகும், இது அநியாயமாகும். நல்ல முஸ்லிம்களை திருடர்களாக அல்லாஹ் மாற்றியது அநீதியாகும்.  மக்காவில் நல்ல பெயரோடு வாழ்ந்து வந்த முஹம்மதுவை ஒரு கொள்ளைக்கூட்டத்துக்கு தலைவனாக  அல்லாஹ் மாற்றியது அநீதியாகும். 


3) செல்வங்களை மீட்டுக்கொள்ள போர் புரியுங்கள் என்று குர்-ஆன் (2:217) சொல்லவில்லையே!

தம்பி, நீயும் முஸ்லிம்களைப் போலவே இஸ்லாமுடைய தர்மசங்கடமான செயல்களிலிருந்து அதனை காப்பாற்ற   சாக்குபோக்குகளை சொல்லிக்கொண்டு இருக்கிறாய். 

அந்த காலத்தில் "புனித மாதங்கள்" என்று சில மாதங்களை (நான்கு) கருதினார்கள். இந்த மாதங்களில்  போர் புரிவதோ, இதர வன்முறைகளில் ஈடுபடுவதோ கிடையாது.  ஆனால், இதனையும் மீறி முஸ்லிம்கள் குறைஷிகளை இம்மாதங்களில் கொள்ளையடித்தார்கள்.   குறைஷிகள் இதனை  மற்றவர்களிடம் பரப்ப ஆரம்பித்துவிட்டார்கள்.  முஸ்லிம்களுக்கும், முஹம்மதுவிற்கும் மிகவும் அவமானமாகிவிட்டது. இதனால், முஹம்மது ஒரு வசனத்தை இறக்கி முஸ்லிம்களின் செயல்கள் நியாயமானவைகள் தான், என்று அல்லாஹ் சொல்வது போல வசனத்தை இறக்கிவிட்டார்.  இதனை குர்-ஆன் 2:217ம் வசனத்தில் காணலாம்.

2:217 புனித மாதத்தில் போர் செய்வது குறித்து உம்மிடம் கேட்கின்றனர். 'அதில் போரிடுவது பெருங்குற்றமே. அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் (மற்றவர்களைத்) தடுப்பதும், அவனை ஏற்க மறுப்பதும், அதற்கு (மஸ்ஜிதுல் ஹராமுக்கு) உரியோரை அங்கிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ் விடம் இதை விடப் பெரியது. கொலையை விட கலகம் மிகப் பெரியது' எனக் கூறுவீராக! அவர்களுக்கு இயலுமானால் உங்கள் மார்க்கத்தை விட்டும் உங்களை மாற்றும் வரை உங்களுடன் போரிட்டுக் கொண்டே இருப்பார்கள். உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏக இறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும்   அழிந்து விடும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (2:217) பீஜே தமிழாக்கம்

2:217. (நபியே!) புனிதமான (விலக்கப்பட்ட) மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: "அக்காலத்தில் போர் செய்வது பெருங் குற்றமாகும்; ஆனால், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதும், அவனை நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமுக்குள் (வரவிடாது) தடுப்பதும், அங்குள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும் (-ஆகியவையெல்லாம்) அதைவிடப் பெருங் குற்றங்களாகும்; ஃபித்னா (குழப்பம்) செய்வது, கொலையைவிடக் கொடியது; அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள்; உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி, காஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும்; இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்." (முஹம்மது ஜான் டிரஸ்ட் தமிழாக்கம்) 

இங்கு கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால்,   குறைஷிகளிடமிருந்து தங்களின் செல்வத்தை திரும்பபெற போர் செய்வதாக முஸ்லிம்கள் சொல்வது எல்லாம் பொய்யாகும். இந்த வசனம் அதைப் பற்றிச் சொல்லவில்லை.  ஒட்டு மொத்த குறைஷிகளின் செயல்களுக்கு பதிலடியாக இந்த வழிப்பறி கொள்ளைகள் நடக்கின்றன என்று மேற்காணும் குர்-ஆன் வசனம் கூறுகிறது. 

புனித மாதங்களில் போர் செய்வது பெருங்குற்றமாகும் என்று  அல்லாஹ் ஒப்புக்கொள்கிறார். ஆனால், குறைஷிகளின் செயல்கள் அவைகளை விட பெருங்குற்றம் என்று அல்லாஹ் சொல்கிறார். 

அதாவது, முஸ்லிம்கள் பெருங்குற்றங்களைச் செய்ய அனுமதி அளித்துள்ளார், அவர்களுக்கு வக்காளத்து வாங்குகிறார். 

ஆக, வெறும் செல்வங்களை திரும்ப பெறத் தான் வழிப்பறி கொள்ளைகளில் முஸ்லிம்கள் ஈடுபட்டார்கள் என்றுச் சொல்வது தவறாகும். இதனை நாம் மேற்கண்ட வசனத்தின் மூலம் அறியலாம்.

தம்பி, நீ சொல்வது போல ஒரு பேச்சுக்காக நாம் ஏற்றுக்கொண்டாலும், அதிலும் அனேக சிக்கல்கள் உள்ளன:

அ) விட்டு வந்த செல்வங்களை திரும்பப் பெற வேண்டுமென்றால், ஏன் நேரடியாக மக்காவிற்குச் சென்று, போர் புரிந்து செல்வங்களை மட்டும் கொண்டு வந்து இருக்கக்கூடாது?

ஆ) ஏன் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு, தீடீர் தாக்குதல் நடத்தவேண்டும்?

இ) விட்டுவந்த செல்வங்களை திரும்ப பெறுவதற்கு பதிலாக, வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு, ஏன் மனிதர்களை கொல்லவேண்டும்?

ஈ) செல்வங்களுக்காக மனிதர்களை கொலை செய்வது இஸ்லாமில் நியாயமானதா?

உ) வெறும் பணத்திற்காக மனிதர்களை கொலை செய்ய அனுமதிக்கும் இறைவன் ஒரு இறைவனா?

ஊ) பணத்திற்காக உயிரை எடுக்கும் மார்க்கத்தில் எப்படி மேன்மையான நல்ல குணங்கள் உள்ள மனிதர்களைக் காணமுடியும்?

எ) மதினாவில் முஹம்மது மற்றும் அவரது குழுவின் வறுமையை போக்க, அல்லாஹ்விற்கு இப்படி கொள்ளையடிப்பதைத் தவிர வேறு வழியே தெரியவில்லையா?

ஏ) பல இலட்ச மக்களின் பசியை போக்க வானத்திலிருந்து தினமும் உணவை கொண்டு வந்தவன், சில நூறு மக்களின் உணவுப் பிரச்சனையை தீர்க்க, வழிப்பறி கொள்ளையை தெரிவு செய்வது கேவலமாக இல்லையா? 

முடிவுரை: தம்பி, மேற்கண்ட விவரங்களிலிருந்து நாம் அறிவது என்னவென்றால்,  முஹம்மதுவிற்கு ஆட்களின் பலம் அதிகமானதும்,  அவர் வலியச் சென்று சண்டையிட்டார், கொள்ளையிட்டார்.  இப்படிப்பட்ட   கோட்பாடுகள் உடைய மார்க்கத்தில் நீதி எங்கேயிருந்து வரும்? மன்னிப்பு எங்கேயிருந்து வரும்?  இதனை பின்பற்றும் மக்கள் எப்படி சமுதாயத்திற்கு நன்மை செய்யும் மக்களாக இருக்கமுடியும்?

நீ என்னை அடித்தாய், இதோ நான் உன்னை கொலை செய்கிறேன்.
எனக்கு ஒரு தீமையை புரிந்தாய், இதோ நான் உனக்கு அனேக தீமைகளை செய்கிறேன்.
நீ என்னையும், என் மார்க்கத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை, ஆகையால் உன்னை அழித்துவிடுகிறேன்.

இப்படியெல்லாம் கோட்பாடுகளை கொண்டுள்ள இஸ்லாம் எப்படி ஒரு அமைதி மார்க்கமாக மாறும்.  

தம்பி, சிறிது சிந்தித்துப் பார்.  குறைஷிகளின் இடத்தில் முஸ்லிம்கள் இருப்பதாக கற்பனை செய்துக்கொள். உங்கள் இடத்தில் குறைஷிகள் இருப்பதாக கற்பனை செய்துக்கொள். அவர்களிலிருந்து ஒரு நபி தோன்றி உங்கள் அல்லாஹ்வை விமர்சிக்கிறார் என்று வைத்துக்கொள்.  அப்போது முஸ்லிம்கள் எப்படி செயல்படுவார்கள்? அமைதியாக இருப்பார்களா? குறைஷிகள் எப்படி நடந்துக்கொண்டார்களோ, அதைவிட 100 மடங்கு அதிகமாக நீங்கள் நடந்துக்கொள்வீர்கள்.   இதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. 

தம்பி, நான் மேலே சொன்ன விவரங்களை சிறிது நேரம் ஒதுக்கி சிந்தித்துப்பார். சத்தியத்தை அறிந்துக்கொள், அது உன்னை விடுதலையாக்கும்.

தம்பி ஒரு முக்கியமான விஷயத்தை உனக்கு கடைசியாக சொல்ல விரும்புகிறேன்.

முஹம்மது உயிருக்கு பயந்து மதினாவிற்கு  தப்பித்துச் சென்றுவிட்டபிறகு, அலி மூன்று நாட்கள் மக்காவில் தங்கியிருந்து. முஹம்மதுவிற்கு வரவேண்டிய பணத்தையெல்லாம் சேகரித்துக்கொண்டாராம்:

Ali stayed in Mecca for three days and nights until he had restored the deposits which the apostle held.  (Ibn Ishaq/Hisham 335, page 227 – The Life of Muhammad, A translation of Ibn Ishaq's Sirat RAhul Allah by A. Guillaume)

இப்படிக்கு,
உன் அண்ணன்
உமர்


கருத்துகள் இல்லை: