ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

சனி, 11 டிசம்பர், 2021

குர்‍ஆன் 3:18 - இஸ்லாமின் உண்மையான ஷஹதா எது? முஸ்லிம்கள் ஏன் பாதி ஷஹதாவைச் சொல்கிறார்கள்?

இஸ்லாமின் ஐந்து தூண்களில் முதலாவது தூண், ஷஹதா என்றுச் சொல்லக்கூடிய 'விசுவாச அறிக்கை/சாட்சியம் கூறுதல்/சாட்சிப்பிரமாணம்' ஆகும். இதனை கலிமா என்றும் கூறுவார்கள்.

ஒருவர் இஸ்லாமை தழுவும் போது, இந்த சாட்சியம் அல்லது ஷஹதாவை கூறவேண்டும், அப்போது தான் அவர் 'இஸ்லாமை ஏற்றதாக கருதப்படும்'.  அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மது அல்லாஹ்வின் இறைத்தூதர் என்றும் சாட்சியம் சொன்னால் தான், அவரை முஸ்லிமாக கருதுவார்கள். மேலும், இதனை அவர் அரபியில் சொல்லவேண்டும் அதாவது அரபியில் அறிக்கையிடவேண்டும். 

தமிழில் இதன் பொருளை புரிந்துக்கொண்டாலும், அரபியில் சொன்னால் தான் அல்லாஹ் அங்கீகரிப்பான்.

முஸ்லிம்களின் சிந்தனைக்கு ஒரு கேள்வி: ஒருவர் ஷஹதாவை தமிழிலோ, அல்லது அரபி அல்லாத வேறு மொழியிலோ சொல்லி, இஸ்லாமை ஏற்றதை நான் இதுவரை கண்டதில்லை, வாசகர்கள் யாராவது கண்டிருந்தால், தெரிவிக்கவும். ஒருவர் இஸ்லாமை தழுவும் போது, அரபியில் ஷஹதா சொல்லாமல் தன்னுடைய தாய் மொழியில் சொன்னால், அதனை இஸ்லாம் ஏற்குமா? அவரை முஸ்லிமாக இஸ்லாமிய சமுதாயம் கருதுமா? உலக மக்கள் அனைவருக்காகவும் அல்லாஹ் வகுத்த மார்க்கம் இஸ்லாம் என்று சொல்லும் நீங்கள், தன் தாய் மொழியில் சாட்சி பிரமாணம் சொல்ல அனுமதிப்பதில்லை ஏன்? அப்படியானால், இஸ்லாம் ஒரு அரேபிய மக்களுக்கான மார்க்கமேயன்றி, உலக மார்க்கம் என்று எப்படி சொல்லமுடியும்?

சரி, இப்போது நம்முடைய ஆய்வுக்கு வருவோம்.

இது தான் ஷஹதா: 

  • அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நான் சாட்சி கூறுகிறேன் மற்றும் முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி கூறுகிறேன்.
  • Arabic Transliteration: "Ashhadu an la ilaha illa 'llah; ashhadu anna Muhammadan rasulu 'llah"
  • English: "I witness that there is no god but Allah, and Muhammad is the messenger of Allah."

இன்று ஒரு சிறிய முஸ்லிம் கூட்டம் இருக்கிறார்கள், இவர்களின் படி, மேலே சொன்ன ஷஹதா என்பது தவறானதாகும், இது ஷிர்க் என்றுச் சொல்லக்கூடிய அளவுக்கு பெரிய பாவமாகும். ஏனென்றால், அல்லாஹ்வோடு சேர்த்து, முஹம்மதுவின் பெயரும் வருவதினால், இது தவறானது என்று கூறுகிறார்கள். முஹம்மது என்பவர் அல்லாஹ்வின் தூதர் தான், ஆனால், 'ஷஹதாவில்' அவரது பெயரை சேர்த்தால், அது ஷிர்க் ஆகிவிடும் என்று கூறுகிறார்கள் இவர்கள்.

கீழ்கண்ட குர்‍ஆன் வசனத்தின் படி, "ஷஹதா" என்பது "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை" என்றுச் சொல்வது மட்டுமே என்று அவர்கள் கூறுகிறார்கள். 

மலக்குகளும், அறிவுரையோரும் எப்படி ஷஹதா சொல்லவேண்டும்? "அவனைத்(அல்லாஹ்வைத்)தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை" என்று சாட்சி கூறவேண்டும். இதோடு கூட வேறு எதையும் சேர்க்கக்கூடாது.

பார்க்க குர்‍ஆன் 3:18. 

குர்‍ஆன் 3:18 அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன்.

இந்த வசனத்தின்படி, சாட்சியம் கூறும் போது, "முஹம்மதுவையும் சேர்த்துச் சொல்லவேண்டும்" என்ற விவரங்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை.

இதே போன்று, "அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை" என்ற சொற்றொடர்கள் இன்னும் சில இடங்களில் குர்‍ஆனில் வருகின்றது.  ஆனால், எந்த ஒரு வசனத்திலும், அதோடுகூட "முஹம்மது அல்லாஹ்வின் இறைத்தூதர்" என்று சேர்த்து எங்கும் குர்‍ஆனில் வருவதில்லை.

குர்‍ஆன்  37:35. "அல்லாஹ்வைத் தவிர நாயன் இல்லை" என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், மெய்யாகவே அவர்கள் பெருமையடித்தவர்களாக இருந்தனர்.

குர்‍ஆன்  47:19. ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக; இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களான ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக - அன்றியும் உங்களுடைய நடமாட்டத்தலத்தையும் உங்கள் தங்குமிடங்களையும் அல்லாஹ் நன்கறிகிறான்.

மேலும், ஷஹதாவின் இரண்டாவது பாகம், கீழ்கண்ட வசனத்திலிருந்து எடுக்கப்பட்டதென்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள். இந்த வசனத்தில் முதலாவது வாக்கியத்தைப் பார்க்கவும்.

குர்‍ஆன்  48:29. முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; . . .  

ஆனால், ஹதீஸ்களில், முஸ்லிம்கள் இன்று கூறுவது போன்று ஷஹதா உள்ளது. 

உண்மையாகவே ஷஹதாவில் முஹம்மதுவின் பெயரை சேர்த்து பயன்படுத்தவேண்டுமென்றால், குர்‍ஆனில் அல்லாஹ் சொல்லியிருக்கவேண்டுமல்லவா? ஒரு வேளை 'எல்லாவற்றையும் குர்‍ஆனில் எழுதியே இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை, நாங்கள் ஹதீஸ்களிலிருந்துகூட எடுத்துக்கொள்வோம்' என்று முஸ்லிம்கள் பதில் சொல்லக்கூடும், இந்த கூற்று உண்மை தான். ஆனால், இஸ்லாமின் முதல் தூண் என்றும், முஸ்லிம்களின் முதல் கடமையென்றும், இஸ்லாமிய மார்க்கத்தை தழுவுகிறவர்களின் முதல் படியென்றும் கூறப்படும் 'சாட்சியம் கூறுதல்' குர்‍ஆனில் இருக்காது, ஆனால், இஸ்லாம் தோன்றி 200 ஆண்டுகளுக்கு பிறகு பதிவு செய்யப்பட்ட, பல இலட்சக்கணக்கான பொய்கள் கலந்திருக்கும் ஹதீஸ்களிலிருந்து நாங்கள் எடுத்துக்கொள்வோம் என்று முஸ்லிம்கள் சொல்வது, அறிவுடமைக்கும் ஏற்காத ஒன்றாக தெரிகின்றது.

குர்‍ஆனின்படி அல்லாமல், ஹதீஸ்களின்படி ஷஹதா சொல்கிறார்கள் முஸ்லிம்கள்:

முஸ்லிம்கள், குர்‍ஆனிபடி ஷஹதா (சாட்சியம்) கூறவேண்டுமென்றால், வெறும் "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை" என்று மட்டுமே கூறவேண்டும். ஆனால், அவர்கள் ஹதீஸ்களில் உள்ளது போன்று ஷஹதா கூறுகிறார்கள்.

புகாரி எண்: 8. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இஸ்லாம் ஐந்து தூண்கள்மீது எழுப் பப்பட்டுள்ளது. 1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதிமொழிவது. 2. தொழுகையைக் கடைப்பிடிப்பது. 3. (கடமையானோர்) ஸகாத் (கட்டாய தர்மம்) வழங்குவது. 4. (இயன்றோர் இறையில்லம் கஅபாவில்) ஹஜ் செய்வது. 5. ரமளானில் நோன்பு நோற்பது. இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இன்னும் அனேக ஹதீஸ்கள் இதைப் பற்றி கூறுகின்றது.

ஷஹதாவில் ஈசா, சொர்க்கம், நரகம் பற்றியும் வரவேண்டுமா?

இப்போது அதிகாரபூர்வமான "புகாரி மற்றும் முஸ்லிம்" ஹதீஸ்களின் படியுள்ள சாட்சியம் பற்றி பார்ப்போம்.

கீழ்கண்ட ஹதிஸ்களின் படி ஷஹதாவில், அல்லாஹ், முஹம்மது, ஈஸா, சொர்க்கம் மற்றும் நரகம் என்ற ஐந்து காரியங்கள் வரவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இவைகள் பொய்யான ஹதீஸ்கள் என்று யாரும் கூறமாட்டார்கள்.

புகாரி எண் 3435. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; அவன் தனித்தவன் அவனுக்கு இணை கிடையாது' என்றும் முஹம்மத் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்' என்றும் 'ஈசா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்' என்றும், 'அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன (யிஆகுக!› என்னும்) ஒரு வார்த்தை(யால் பிறந்தவர்)› என்றும், 'அவனிடமிருந்து உருவான ஓர் உயிர்' என்றும், சொர்க்கம் (இருப்பது) உண்மை தான்' என்றும், நரகம் (இருப்பது) உண்மை தான்' என்றும், எவர் (சொல்லால் உரைத்து, உள்ளத்தால் நம்பி) உறுதிமொழி கூறுகின்றாரோ அவரை அல்லாஹ் அவருடைய செயல்களுக்கேற்ப சொர்க்கத்தில் புகுத்துவான்.

இதை உபாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இப்னு ஜாபிர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ''அவரை அல்லாஹ், சொர்க்கத்தின் எட்டு வாசல்களில் தான் விரும்பிய வாசல் வழியாக அனுமதிப்பான்" எனறு கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

முஸ்லிம் எண்: 46. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையாளன் யாருமில்லை. முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவேன்; (இறைத் தூதர்) ஈசா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய அடிமையின் புதல்வரும் ஆவார்; அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன ("ஆகுக" எனும்) ஒரு வார்த்தை(யில் பிறந்தவர்); அவனிடமிருந்து (ஊதப்பட்ட) ஓர் உயிர்சொர்க்கம் உண்மை; நரகம் உண்மை என்றெல்லாம் யார் உறுதிமொழி கூறுகின்றாரோ அவரைச் சொர்க்கத்தின் எட்டு வாசல்களில் தான் நாடிய வாசல் வழியாக அல்லாஹ் நுழைவிப்பான்.

இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆனால், (அதன் இறுதியில்) "அவரை அல்லாஹ் அவருடைய செயல்களுக்கேற்ப சொர்க்கத்தில் நுழைவிப்பான்" என்று இடம்பெற்றுள்ளது. "சொர்க்கத்தின் எட்டு வாசல்களில் தான் நாடிய வாசல் வழியாக நுழைவிப்பான்" என்பது இடம்பெறவில்லை.

நன்றாக கவனியுங்கள் புகாரியில் "எவர் (சொல்லால் உரைத்து, உள்ளத்தால் நம்பி) உறுதிமொழி கூறுகின்றாரோ" என்றும்,  முஸ்லிம் ஹதீஸில் "யார் உறுதிமொழி கூறுகின்றாரோ" என்றும் வருகிறது. அதாவது, இப்படி உறுதி மொழி எடுக்கும் எவராக இருந்தாலும் சரி, அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் புகுத்துவான் என்று ஹதீஸ்கள் பதிவு செய்கின்றன, அவர்கள் முஸ்லிம்களாகிவிடுகிறார்கள் என்று முஹம்மது சொல்கிறார். இப்படி ஷஹதா சொல்வது ஷிர்க் என்று யாராவது கூறமுடியுமா? இது அங்கீகரிக்கப்படாத ஒன்று என்று கூறமுடியுமா?

இஸ்லாமின் முழுமையான ஷஹதா எது?

நாம் மேலே கண்ட ஹதீஸும் அதிகார பூர்வமானதாகும், இதன் படி முழுமையான (100%) ஷஹதா என்பது, கீழ்கண்ட 7 வகையான வாக்கியங்கள் கொண்டது.

  1. 'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; அவன் தனித்தவன் அவனுக்கு இணை கிடையாது'
  2. 'முஹம்மத் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்'
  3. 'ஈசா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்'
  4. 'அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன ஒரு வார்த்தை ஈசா ஆவார்'
  5. 'அல்லாஹ்விடமிருந்து உருவான ஓர் உயிர் ஈசா ஆவார்'
  6. 'சொர்க்கம் உண்மை'
  7. 'நரகம் உண்மை'

மேற்கண்ட ஏழு வாக்கியங்கள் கொண்ட ஷஹதா (சாட்சியம்) தான் 100% முழுமையான ஷஹதா. ஆனால், இன்று முஸ்லிம்கள் சொல்லும் ஷஹதா, பாதி ஷஹதா தான், சரியாகச் சொல்லவேண்டுமென்றால், பாதிக்கும் குறைவான ஷஹதா ஆகும். 7 வாக்கியங்களில், 2 வாக்கியங்களைத் தான் இன்று முஸ்லிம்கள் ஷஹதாவாக‌ சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள், அதாவது 28.5% ஷஹதாவைத் தான் முஸ்லிம்கள் சொல்கிறார்கள் (100/7x2 = 28.5%).

இது கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாமை தழுவுகிறவர்களின் ஷஹதாவா?

மேற்கண்ட ஷஹதா கிறிஸ்தவர்களுக்குத் தான் என்று சில முஸ்லிம்கள் கூறக்கூடும். ஆனால், இது கிறிஸ்தவர்களுக்குத் தான் என்று மேற்கண்ட ஹதிஸ்களும் முஹம்மதுவும் சொல்லவில்லை என்பதை கவனிக்கவேண்டும், இதற்கு எந்த சான்றுமில்லை.  மேலும் எல்லா மக்களையும் உள்ளடக்கும்வகையில் "எவர் இப்படி கூறுகின்றாரோ" என்று ஹதீஸில் தெளிவாக கூறப்பட்டுள்ளதால், இது கிறிஸ்தவர்களுக்கான ஷஹதா இல்லை என்று கூறலாம்.

முடிவுரை: முஸ்லிம்கள் எதை ஷஹதாவாக பயன்படுத்துவது?

இதுவரை நாம் ஆய்வு செய்த விவரங்களிலிருந்து மூன்று வகையான ஷஹதா இருப்பதாக அறிகிறோம்.

ஹதீஸ்கள் சொல்லும் இரண்டாம் வகையான " பாதி ஷஹதாவை" முஸ்லிம்கள் சொல்கிறார்கள், முழுமையான ஷஹதாவை சொல்வதில்லை, அதையும் ஆதார பூர்வமான ஹதீஸ்களே சொல்கின்றன. இந்த முழுமையான ஷஹதா எந்த வகையிலும் குர்‍ஆனின் அடிப்படை கோட்பாடுகளுக்கு முரணானதும் அல்ல. குர்‍ஆனுக்கு முரண்படும் வகையில் முஹம்மது எதையும் போதிக்கமாட்டார் என்று முஸ்லிம்கள் நன்கு அறிவார்கள், சரி தானே! அப்படியானால், ஏன் முழுமையான ஷஹதாவை முஸ்லிம்கள் அறிக்கையிடுவதில்லை?

முழுமையான ஷஹதாவை முஸ்லிம்கள் ஏன் பயன்படுத்துவதில்லை என்ற காரணத்தை கூறுவார்களா? 

குறைந்தபட்சம் குர்‍ஆன் சொல்லும் ஷஹதாவையாவது ஏன் முஸ்லிம்கள் பயன்படுத்துவதில்லை என்ற காரணத்தைச் சொல்வார்களா?

மேலும், ஒரு கேள்வி இன்னும் பதில் அளிக்கப்படாமல் இருக்கிறது. ஆதாம் முதல் முஹம்மது வரை, பல முக்கியமான நபிகளை அல்லாஹ் அனுப்பியிருக்கும் போது, அதாவது இப்றாஹீம், மூஸா, தாவூத், சுலைமான், யஹ்யா போன்ற முக்கியமானவர்கள் இருக்கும் போது, மேற்கண்ட முழுமையான ஷஹதாவில் "ஈசாவிற்கு" மட்டும் ஏன் இடம் கொடுக்கப்பட்டுள்ளது? அப்படியென்ன ஈசா சிறந்தவராக அல்லாஹ்விற்கு தென்பட்டுள்ளார்? ஒருவேளை ஈசா 'அல்லாஹ்வின் வாக்காகவும், அல்லாஹ்வின் ஆன்மாவாகவும்("கலிமதுல்லாஹ் மற்றும் ரூஹ‌ல்லாஹ்")' இருப்பதாலா'?

தேதி: 11th Dec 2021


குர்‍ஆனின் இதர ஆய்வுக் கட்டுரைகள்

குர்‍ஆன் பக்கம்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/arabic_quran/half_shahada.html