ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

சனி, 3 ஜூன், 2023

குர்‍ஆனும்(5:38) பைபிளும்: திருடர்களின் கைகளை வெட்டுதல் (அ) அவர்களின் கைகளால் வேலை செய்யவைத்து கடனை தீர்க்கச் செய்தல், எது சரியானது?


(குர்‍ஆன் 5:38 & லேவியராகமம் 6:1-5 & எபேசியர் 4:28)

திருடுவது யாருக்குத் தான் பிடிக்கும்? 'நீ செய்வது உனக்கு பிடிக்குமா?' என்று திருடனிடம் கேட்டால், அவனும் 'எனக்கு பிடிக்காது, ஆனால் செய்கிறேன் என்று பல காரணங்களைச் சொல்லுவான்'. 

  • சிலர் பணத்தை திருடுகிறார்கள்,
  • சிலர் பதவியை திருடுகிறார்கள்,
  • சிலர் மற்றவர்களின் நிம்மதியை திருடுகிறார்கள்,
  • சிலர் இறைவனுடைய மகிமையை திருடுகிறார்கள்,
  • ஒரு சிலரோ, இறைவனையும், அவனுடைய நபித்துவத்தையும் திருடுகிறார்கள்,
  • இப்படி ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றை திருடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

இப்போது கட்டுரையின் கருப்பொருளுக்குள் வருவோம்.

"களவு செய்யாதே" என்று பைபிளும், குர்‍ஆனும் எச்சரிக்கின்றது. களவு செய்பவர்களுக்கு இரண்டுமே தண்டனை கொடுக்கிறது. ஆனால், யார் என்ன தண்டனை கொடுக்கிறார்கள்? இவைகளில் எந்த தண்டனை சரியானது அல்லது சமுதாயத்திற்கு நன்மை செய்யும் என்பதை சுருக்கமாக காண்போம்.

முதலில் பைபிள் சொல்லும் தண்டனையை  பழைய ஏற்பாட்டிலிருந்து காண்போம்

1) திருடியவன் தண்டனையாக, திருடப்பட்டதையும் தரவேண்டும், ஐந்தில் ஒரு பகுதி அதிகமாகவும் கொடுக்கவேண்டும்

லேவியராகமம் 6:1-5

1. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

2. ஒருவன் கர்த்தருக்கு விரோதமாக அநியாயம் செய்து, தன் வசத்தில் ஒப்புவிக்கப்பட்ட பொருளிலாவது, கொடுக்கல் வாங்கலிலாவது, தன் அயலானுக்கு மாறாட்டம்பண்ணி, அல்லது ஒரு வஸ்துவைப் பலாத்காரமாய்ப் பறித்துக்கொண்டு, அல்லது தன் அயலானுக்கு இடுக்கண்செய்து,

3. அல்லது காணாமற்போனதைக் கண்டடைந்தும் அதை மறுதலித்து, அதைக்குறித்துப் பொய்யாணையிட்டு, மனிதர் செய்யும் இவைமுதலான யாதொரு காரியத்தில் பாவஞ்செய்தானேயாகில்,

4. அவன் செய்த பாவத்தினாலே குற்றவாளியானபடியால், தான் பலாத்காரமாய்ப் பறித்துக்கொண்டதையும், இடுக்கண்செய்து பெற்றுக்கொண்டதையும், தன் வசத்திலே ஒப்புவிக்கப்பட்டதையும், காணாமற்போயிருந்து தான் கண்டெடுத்ததையும்,

5. பொய்யாணையிட்டுச் சம்பாதித்த பொருளையும் திரும்பக் கொடுக்கக்கடவன்; அந்த முதலைக் கொடுக்கிறதும் அல்லாமல், அதினோடு ஐந்தில் ஒரு பங்கு அதிகமாகவும் கூட்டி, அதைத் தான் குற்றநிவாரணபலியை இடும் நாளில், அதற்குரியவனுக்குக் கொடுத்துவிட்டு,

2) திருடியதை அவன் செலவழித்துவிட்டால், அதற்கு தண்டனையாக, அவன் அடிமையாக விற்கப்பட்டு கடனை அடைக்கவேண்டும்

பழைய ஏற்பாட்டில் தேவன், திருடர்களுக்கு தரும் இன்னொரு தண்டனையைச் சொல்கிறார். அதாவது, எடுத்த பொருட்கள் திருடனால் செலவழித்துவிட்ட பிறகு பிடிக்கப்பட்டால், அவன் அடிமையாக விற்கப்பட்டு, அந்த கடனை அடைக்கவேண்டும்.

யாத்திராகமம் 22:1-3

1. ஒருவன் ஒரு மாட்டையாவது ஒரு ஆட்டையாவது திருடி, அதைக் கொன்றால், அல்லது அதை விற்றால், அவன் அந்த மாட்டுக்கு ஐந்து மாடுகளையும், அந்த ஆட்டுக்கு நாலு ஆடுகளையும் பதிலாகக் கொடுக்கக்கடவன்.

2. திருடன் கன்னமிடுகையில் கண்டுபிடிக்கப்பட்டு, அடிக்கப்பட்டுச் செத்தால், அவன் நிமித்தம் இரத்தப்பழி சுமராது.

3. சூரியன் அவன்மேல் உதித்திருந்ததானால், அவன் நிமித்தம் இரத்தப்பழி சுமரும்; திருடன் பதில் கொடுத்துத் தீர்க்கவேண்டும்; அவன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தால், தான் செய்த களவுக்காக விலைப்படக்கடவன்.

3) அடிமையாக விற்கப்பட்டவர்கள், ஆறு ஆண்டுகள் வேலை செய்தபிறகு விடுதலையாக்கப்படவேண்டும்

ஒரு திருடன் கண்டுபிடிக்கப்பட்டான், ஆனால் அவனிடம் திருடிய பணமோ பொருளோ செலவழிந்துவிட்டது, எனவே அவன் தன்னை அடிமையாக விற்று, அந்த பணத்தை சொந்தக்காரரிடம் கொடுக்கவேன்டும். இந்த திருடனை அடிமையாக வாங்கிய எஜமான், இவனிடம் ஆறு ஆண்டுகள் மட்டுமே வேலை வாங்கவேண்டும், 7வது ஆண்டு அவனை விடுதலை செய்யவேண்டும்.

ஏழாவது ஆண்டு விடுதலை செய்து அனுப்பும் போது, அவனை வெறுமையாய் அனுப்பாமல், 'கர்த்தர் அந்த எஜமானை எவ்வளவு செல்வம் கொடுத்திருக்கிறாரோ, அதன்படி, தனக்குள்ள ஆட்டு மந்தியிலிருந்தும், தானிய களத்திலிருந்தும், ஆலயத்திலிருந்து தாராளமாக அந்த அடிமைக்கு கொடுத்து அனுப்பும்படி, கர்த்தர் கட்டளையிட்டுள்ளார்'.  கர்த்தருக்கு மனிதனின் எதிர்காலம் மீது இருக்கும் கரிசனையைப் பாருங்கள். திருடன் கூட ஒரு மனிதன் தான், எனவே அவன் தண்டனைப் பெற்று திரும்ப புது வாழ்க்கையை தொடங்குவதற்கு தேவையான பொருட்களை, ஆறு ஆண்டுகள் உழைத்த அந்த எஜமான் கொடுத்து அனுப்பவேண்டும் என்று கட்டளையிடுகிறார்.

ஒருவேளை அவனை வெறுமையாக அனுப்பினால், மறுபடியும் அவன் திருட்டுத் தொழிலில் ஈடுபடவாய்ப்பு உண்டாகும். பொதுவாக வறுமையும் திருடுவதற்கு ஒரு காரணமாக இருப்பதை யாராளும் மறுக்கமுடியாது.

உபாகமம் 15:11-15

11. தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை; ஆகையால் உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறக்கவேண்டும் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.

12. உன் சகோதரனாகிய எபிரெய புருஷனாகிலும் எபிரெய ஸ்திரீயாகிலும் உனக்கு விலைப்பட்டால், ஆறுவருஷம் உன்னிடத்தில் சேவிக்கவேண்டும்; ஏழாம் வருஷத்தில் அவனை விடுதலைபண்ணி அனுப்பிவிடுவாயாக.

13. அவனை விடுதலைபண்ணி அனுப்பிவிடும்போது அவனை வெறுமையாய் அனுப்பிவிடாமல்,

14. உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததின்படி, உன் ஆட்டுமந்தையிலும் உன் களத்திலும் உன் ஆலையிலும் எடுத்து அவனுக்குத் தாராளமாய்க் கொடுத்து அனுப்பிவிடுவாயாக.

15. நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை மீட்டுக்கொண்டதையும் நினைவுகூரக்கடவாய்; ஆகையால் நான் இன்று இந்தக் காரியத்தை உனக்குக் கட்டளையிடுகிறேன்.

4) திருடுகிறவன் இனி வேலைகளை செய்து, மற்றவர்களுக்கு உதவி செய்யும் அளவிற்கு உயரவேண்டும்

புதிய ஏற்பாட்டின் எபேசியருக்கு எழுதின கடிதத்தில், 4:28ம் வசனம் திருடர்கள் என்னசெய்யவேண்டும் என்று அவர்களுக்கு கட்டளையிடுகிறது?

திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன். (எபேசியர் 4:28)

முதலாவதாக, திருடுகிறவர்கள்  திருடுவதை நிறுத்தவேண்டும் என்று மேற்கண்ட வசனம் கூறுகிறது.  மேலும் திருடுகிறவன் தன் இரண்டு கைகளாலும் (கவனிக்க பன்மை) உழைத்து மற்றவர்களுக்கு உதவி செய்யவேண்டும்.  எந்த திருடன் தன் இரண்டு கைகளை பயன்படுத்தி திருடினானோ, மற்றவர்களின் பொருட்களை அபகரித்தானோ, அதே கைகளை பயன்படுத்தி அவன் இப்போது கடினமாக உழைக்கவேண்டும். அவன் பணத்தை சம்பாதிக்கவேண்டும், அந்த சம்பாதித்த பணத்தைக் கொண்டு மற்றவர்களுக்கு உதவவேண்டும்.  திருட்டுத் தனத்திற்கு தண்டனை கொடுக்கும் சமுதாயத்தில் இரண்டு வகையான விஷயங்கள் தண்டனையாக கொடுக்கப்படும், முதலாவது அவன் திருடிய பொருட்களை திருப்பித் தரவேண்டும், இன்னும் அதிகமாக செலுத்தவேண்டும், மேலும் அவனுக்கு தண்டனையாக சில நாட்கள்/மாதங்கள்/வருடங்கள் சிறையில் போடவேண்டும்.  அவன் செய்த குற்றத்திற்கு ஏற்றது போல, இந்த தண்டனைகள் மாற்றமடையும். 

கடைசியாக, அவன் பணத்தை செலுத்திய பின்பு, சிறைத்தண்டனையை அனுபவித்த பின்பு, அவன் சமுதாயத்திற்கு பாரமாக இருக்காதபடி, அவன் விடுதலையாக வேண்டும். எந்த கைகளால் அவன் திருடினானோ, பாவம் செய்தானோ அந்த கைகளால் அவன் உழைத்து வாழவேண்டும்,  சமுதாயத்திற்கு அவன் பாரமாக இருக்கக்கூடாது.  ஒரு வேளை திருட்டுத்தனத்திற்கு அவன் கைகளை சட்டம் வெட்டிவிட்டால்,  அவன் வாழ்நாள் முழுவதும் அவன் சார்ந்த சமுதாயத்திற்கு பாரமானவனாக மாறிவிடுகின்றான்.  இந்த துள்ளியமான விஷயத்தில் பைபிளின் தேவன் எப்படி செயல்பட்டுள்ளார் என்பதை கவனியுங்கள். மனிதர்கள் பற்றி தேவன் எப்படிப்பட்ட செயல்திட்டத்தை வைத்துள்ளார் என்பதை கவனியுங்கள்.

குர்‍ஆன் கொடுக்கும் தண்டனையை இப்போது காண்போம்

அல்லாஹ்வின் கட்டளையின் படி, திருடியவர்களுக்கு தண்டனையாக அவர்களின் கைகளை வெட்டிவிடவேண்டும்.

குர்‍ஆன் 5:38. திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்.

5) குர்‍ஆன் திருடனை சமுதாயத்திற்கு பாரமாக மாற்றுகிறது

திருடர்களின் கைகளை வெட்டிவிட்டால், அதன் பிறகு அவர்கள் வாழ்நாள் முழுவதும், ஊனமுற்றவர்களாக தன் குடும்பத்துக்கும், சமுதாயத்திற்கும் பாரமாக மாறிவிடுகிறார்கள். அவர்கள் மனந்திரும்பி, இனி திருடப்போவதில்லை என்று முடிவு எடுத்தாலும், அவர்களால் நல்ல மனிதர்களாக மாறி சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ள குடிமக்களாக‌ வாழ வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. 

இதற்கு யார் காரணம்? குர்‍ஆனும் அல்லாஹ்வின் கட்டளையும் தான்.

6) பொருட்சேதத்திற்கு சரீர உறுப்புகளை வெட்டுவது நியாயமற்ற செயலாகும்

பொதுவாக நீதி செலுத்துவதில், தண்டனை கொடுப்பதில் ஒரு 'நியாயம்' இருக்கவேண்டும். கொலை செய்வது என்பது வேறு, பொருட்களை திருடுவது என்பது வேறு.

ஒருவரிடமிருந்து பொருட்களை/பணத்தை திருடினால், அதற்கு தண்டனையாக 'திருடிய அனைத்து பொருட்களையும் தரவேண்டும், அதோடு கூட கூடுதலாக இன்னும் அதிக பொருட்களை கொடுக்கவேண்டும்'.   

சிலவேளைகளில் திருடப்பட்ட பொருட்களின் அளவிற்கு ஏற்ப, சிறைச்சாலையிலும் சில மாதங்கள், சில ஆண்டுகள் அடைக்கலாம். ஆனால், பொருட்களை திருடியதற்கு தண்டனையாக 'தூக்கு தண்டனை கொடுப்பதும், கைகளை வெட்டுவதும்' மிகவும் அநியாயமான செயலாகும்.

7) மனந்திரும்பினாலும் வாழ்க்கையை இழந்துவிட்டதால், வாழ்நாள் முழுவதும் தண்டனை அனுபவிப்பது உண்மையான இறைவனின் செயல் அல்ல‌

மனிதன் அடிக்கடி மாறுபவன். நாம் எத்தனை முறை தவறுகள் செய்திருப்போம், அதன் பிறகு மனந்திரும்பி அந்த தவறுகளை செய்யாமல் இருந்திருப்போம். 

மனிதனுக்கு திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு கொடுக்கவேண்டும்.

எத்தனை உண்மை நிகழ்ச்சிகளை நாம் கேட்டிருப்போம், ரௌடிகளாக ஒரு காலத்தில் இருந்தவர்கள், மனந்திருந்தி நல்ல மனிதர்களாக மாறி சமுதாயத்திற்கு நன்மைகளைச் செய்யும் செம்மல்களாக மாறியிருக்கிறார்கள். திருடர்களாக இருந்தவர்கள் சிறைச்சாலைக்கு சென்று வந்த பிறகு நல்லவர்களாக வாழ்ந்தவர்கள் உலகில் உண்டு.

ஆனால் அல்லாஹ்வும் குர்‍ஆனும், திருடர்களின் கைகளை வெட்டிவிட்டு, அவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கிவிடுகிறார்கள்.

8) அல்லாஹ்வா யெகோவா தேவனா, யார் மனிதர்களை நேசிக்கிறார்கள், யார் உண்மையான தெய்வம்

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், உண்மையான இறைவன் யார் என்று அறிந்துக்கொள்வதற்கு, அல்லாஹ்விற்கும், யெகோவா தேவனுக்கும் இடையே இருக்கும் இந்த ஒரு வித்தியாசம் போதும். 

கைகள் எவ்வளவு முக்கியமானவைகள்! இயந்திர கைகளை தற்காலத்தில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தாலும்,  அவைகள் ஒருபோதும் இயற்கை கைகளுக்கு சமமாகாது. கைகளால் ஒரு பொருளை எடுத்து பயன்படுத்துவதற்கு, பயன்படும் தொழில்நுட்பம் நம் இயற்கையான கைகளில் வைத்திருக்கும் இறைவன், அவைகளை ஒரு திருட்டுக்காக எப்படி வெட்டுவான்? 

இதனால் தான் யெகோவா தேவன், பைபிளில் திருடர்களுக்கு சரியான தண்டனையை கொடுத்திருக்கிறார். ஆனால், அல்லாஹ்வோ திருடுபவர்களின் கைகளை வெட்டச் செய்து, சமுதாயத்திற்கும் தன் குடும்பத்திற்கும் பாரமாக அந்த நபரை மாற்றுகிறான்.

முடிவுரை:

நாட்டுக்கு கடினமான‌ சட்டங்கள் தேவை, அதே வேளையில்  அவைகள் நியாயமானதாகவும் இருக்கவேண்டியது அவசியமாக இருக்கிறது. எதிர்பாராதவிதமாக நடக்கும் தீமைகளுக்கு/குற்றங்களுக்கு மனிதாபமான முறையில் தண்டனைகள் இருக்கவேண்டும்.

பொருள் நஷ்டத்திற்கு ஒருவரை ஊனமாக்குவது மடமையாகும். உயிருக்கு உயிர் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம், சிறைச்சாலையில் பல ஆண்டுகள் போடலாம், அதுவும் எதிர்பாராத விதமாக நடந்தால் அதிக நஷ்டஈடை கொடுத்து தண்டிக்கலாம், உயிரை எடுக்கமுடியாது. 

வாகனத்தில் வேகமாக சென்றுக்கொண்டு இருக்கும் போது, திடீரென்று ஒருவர் வாகனத்திற்கு முன்பாக ஓடிவந்ததால், வாகனம் இடித்து அவர் மரித்துவிட்டால், அந்த வாகன ஓட்டுனருக்கு மரண தண்டனை கொடுக்கமுடியாது. இதே போன்று, ஒரு லட்ச ரூபாயை திருடிவிட்டான் என்பதற்காக அவரது கைகளை வெட்டிவிடமுடியாது, இது சரியானதல்ல.

நியாயமான முறையிலும், மனிதாபமான முறையிலும் அதே வேளையில் சமுகத்திற்கு அதிக நன்மையுண்டாகும் முறையிலும் பைபிளின் தேவன் 'திருடர்களுக்கு தண்டனை கொடுத்துள்ளார், அதுவும் பழைய ஏற்பாட்டு இஸ்ரேல் மக்களுக்கு மட்டுமே'. ஆனால், அநியாயமாகவும், மனிதாபமற்ற முறையில், சமுதாயத்திற்கு கேடுவிளைவிக்கும் வகையில் திருடர்களின் கைகளை வெட்டி, அல்லாஹ் தண்டனை கொடுத்திருப்பது 'ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை'.

திருடர்கள் இன்னொரு கட்டுரையை இங்கு படிக்கலாம்.

  1. திருடர்களின் கைகள் பற்றி இஸ்லாமும் கிறிஸ்தவமும் (The Hands of Thieves)

தேதி: 3rd Jun 2023


இதர கு‍ர்‍ஆன் ஆய்வு கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள் பக்கம்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/arabic_quran/5-38.html