ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

ஞாயிறு, 26 ஜனவரி, 2020

ஜிஹாதின் அடிச்சுவடுகளில் சிலுவைப்போர் – சின்னஞ்சிறு 25 கேள்வி பதில்கள் (பாகம் 6)

இந்த கட்டுரையில் ஜிஹாதின் வழியில் நடந்த சிலுவைப்போர் பற்றிய சின்னஞ்சிறு கேள்வி பதில்களைக் காண்போம். இது தான் இந்த தொடரின் கடைசிக் கட்டுரை. யாராவது இதைப் பற்றி மேலதிக விவரங்கள் கேட்டால் அப்போது அதைப் பற்றி எழுதலாம்.

முந்தையக் கட்டுரைகளை படிக்க:

  1. ஜிஹாதின் அடிச்சுவடுகளில் சிலுவைப்போர் – ஓர் ஆய்வு
  2. சிலுவைப்போர் என்றால் என்ன? அவைகள் தொடங்கப்பட காரணங்கள் யாவை? - பாகம் 2
  3. முஹம்மது முதல் சிலுவைப்போர் வரை - வரைபடங்கள் மற்றும் விளக்கங்கள்: பாகம் 3
  4. முதல் சிலுவைப்போரை நிஜமாக்கியவர்கள் யார்? செல்ஜுக் துருக்கி முஸ்லிம்களும் & அர்பன் II போப்பும் (பாகம் 4)
  5. சிலுவைப்போர்கள் பற்றிய தவறான 6 கேள்விகளும் அவைகளுக்கான பதில்களும் (பாகம் 5)

சின்னஞ்சிறு 25 கேள்வி பதில்கள்

1. ஏன் கிறிஸ்தவர்கள் சிலுவைப் போர்களை தொடங்கினார்கள்?

முஹம்மதுவின் மரணம் தொடங்கி (கி.பி. 632) முஸ்லிம்கள், கிறிஸ்தவ நாடுகளை போர் மூலம் ஆக்கிரமித்துக்கொண்டு வந்தார்கள்.  எருசலேமில் உள்ள தங்கள் புனித ஸ்தலங்களைக் காண கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் புனித பயணம் செய்துக்கொண்டு இருந்தார்கள்.  இப்படி பயணம் செய்பவர்களை முஸ்லிம்கள் தாக்கினார்கள், அதிக தொல்லைகளை கொடுத்தார்கள். எருசலேம் முஸ்லிம்களின் கைகளில் இருந்தது. மேலும் பைசாந்திய கிறிஸ்தவ நாட்டு அரசரும் முஸ்லிம்களின் ஆக்கிரமிப்புகளிலிருந்து விடுபட தங்களுக்கு உதவி செய்யும் படி போப்பை கேட்டுக்கொண்டார். எருசலேமை முஸ்லிம்களின் கைகளிலிருந்து கைப்பற்ற போப் அர்பன் II முடிவு செய்தார். முஹம்மதுவிற்கு 450+ ஆண்டுகளுக்கு பிறகு கிறிஸ்தவர்கள் எருசலேமை கைப்பற்ற தொடுத்த போர்கள் தான் சிலுவைப்போர்கள்.

2. ஒருவரியில் பதில் சொல்லுங்கள் - சிலுவைப்போர்கள் பைபிளுக்கு எதிரானதா?

ஆம், சிலுவைப்போர்கள் பைபிளுக்கு எதிரான செயலாகும்.

3. ரோமன் கத்தோலிக்கர்கள் சிலுவைப்போர்களை ஆதரிக்கிறார்களா?

முன்னாள் போப் ஜான் பால் II, 1204ம் ஆண்டு நடந்த சிலுவைப்போர்களுக்காக ஈஸ்டன் திருச்சபை பிரதிநிதியிடம் மன்னிப்பு கோரியிருக்கின்றார் (பார்க்க‌: en.wikipedia.org/wiki/List_of_apologies_made_by_Pope_John_Paul_II)

4. முன்னாள் போப் ஜான் பால் II, சிலுவைப்போர்களை திருச்சபை புரிந்ததற்காக முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரினார் என்பது உண்மையா?

இல்லை, முஸ்லிம்களிடம் அவர் மன்னிப்பு கோரவில்லை. முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியமும் இல்லை.

5. இன்றைய கிறிஸ்தவர்கள் சிலுவைப்போர்களுக்காக மன்னிப்பு கோருவார்களா?

யாரிடம்? 

கடந்த காலத்தில் திருச்சபை செய்த தவறுக்காக யூதர்களிடம் மன்னிப்பு கோரலாம், மற்ற மக்களிடம் மன்னிப்பு கோரலாம், ஆனால் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரமுடியாது, கோரக்கூடாது. ஏனென்றால், முஸ்லிம்கள் மற்ற நாடுகள் மீது வலியச் சென்று போர் புரிந்து, கொள்ளையிட்டு வன்முறையில் ஈடுபட்டதால், திருச்சபை 450 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களுக்கு எதிரடி கொடுத்தது, அதுவும் எருசலேமை அவர்களிடமிருந்து மீட்க. எனவே, சிலுவைப் போர்களுக்காக இன்றைய கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களிடம் மட்டும் மன்னிப்பு கோரக்கூடாது.  

இது எப்படி உள்ளதென்றால், இந்திய சுதந்திர போராட்டத்தினால் ஆங்கிலேயர்கள் விரட்டி அடிக்கப்பட்டதால், இன்று 'பிரிட்டீஷ்காரர்களிடம் இந்தியர்கள் மன்னிப்பு கோரவேண்டும்' என்றுச் சொன்னால், அது வேடிக்கையாக இருக்குமல்லவா? 

அது போலத்தான், முஸ்லிம்களிடம் கிறிஸ்தவர்கள் மன்னிப்பு கேட்கமுடியாது.

6. முஹம்மதுவும் முஸ்லிம்களும் செய்த கொடுமைகளுக்கு இன்று முஸ்லிம்கள் மன்னிப்பு கோரவேண்டுமா?

நிச்சயம் கோரவேண்டும்.

முஸ்லிம்களுக்கு சரித்திரம் தெரிந்திருந்தால், அவர்கள் இஸ்லாமிய சரித்திரத்தை படித்து புரிந்துக்கொண்டு இருந்தால், முஸ்லிம்களுக்கு அன்புள்ளமிருந்தால், அவர்கள் நேர்மையானவர்களாக தங்களை கருதினால், முஹம்மதுவும், கலீஃபாக்களும் செய்த கொடுமைகளுக்காக உலக மக்களிடம் மன்னிப்பு கோரவேண்டும்.

7. முஸ்லிம்கள் தான் சிலுவைப்போருக்கு காரணம் என்பது சரியான கூற்றாக இருக்கமுடியுமா?

சிலுவைப்போர்களுக்கு  100% முஸ்லிம்களின் ஆட்சி மோகம் தான் காரணம், இஸ்லாம் தான் காரணம்.

இந்திய சுதந்திர போராட்டத்திற்கும், அதனால் நமக்கு உண்டான உயிர்ச்சேதத்திற்கும், இழப்புகளுக்கும் ஆங்கிலேயர்கள் காரணம் என்றுச் சொன்னால், அது பொய்யாகுமா?

முதலாவது முஸ்லிம்கள் வலியச் சென்று நாடுகளை தொடர்ந்து பிடித்துக்கொண்டு வந்ததால் தான் காலதாமதமாக (450+ ஆண்டுகளுக்கு பிறகு) கிறிஸ்தவர்கள் சிலுவைப்போர் புரிந்தார்கள், அதுவும் ஒரு பட்டணத்திற்காக மட்டுமே. முஸ்லிம்கள் ஆட்சி செய்துக்கொண்டு இருந்த தங்கள்  நாடுகளை மீட்க சிலுவைப்போர்கள் தொடங்கப்படவில்லை.

8. கிறிஸ்தவ புனித ஸ்தலங்களை முஸ்லிம்களிடமிருந்து (மற்றவர்களிடமிருந்து) மீட்கும் படி பைபிள் சொல்கின்றதா?

இல்லை, நிச்சயமாகச் சொல்லவில்லை. 

யூதர்களுக்கும் அது கட்டளையில்லை, கிறிஸ்தவர்களுக்கும் கட்டளையில்லை.

யூதர்களுக்கு  எருசலேம் அட்டாச்மெண்ட் உண்டு, கிறிஸ்தவர்களுக்கும் உண்டு, ஆனால் சண்டைப்போட்டு பூமியை மீட்டுக்கொள்ள வேண்டிய அளவிற்கு அட்டாச்மெண்ட் கிறிஸ்தவர்களுக்கு இல்லை, கட்டளையும் இல்லை.

9. எத்தனை சிலுவைப்போர்கள் நடந்தன?

கி.பி. 1095/96 லிருந்து கி.பி. 1272ம் ஆண்டு வரை 8 அல்லது 9 நடந்தது. அதன் பிறகு நடந்தவை எருசலேமுக்காக அல்ல, அவைகளுக்கு வேறு காரணங்கள் உள்ளன.

10. ஏன் ஒவ்வொரு சிலுவைப்போருக்கும் இடையே பல ஆண்டுகள் இடைவெளி உள்ளது? உதாரணத்திற்கு முதல் மற்றும் இரண்டாம் சிலுவைப்போருக்கு இடையே 48 ஆண்டுகள் இருப்பது ஏன்?

சிலுவைப்போர்களின் நோக்கம் நாடுகளை பிடிப்பதாக இருந்திருந்தால், எருசலேமை பிடித்தவுடன் பக்கத்து நாடுகள் மீது போர் தொடுத்து இருந்திருப்பார்கள்.

எருசலேமை கைப்பற்றியவுடன், பாதுகாப்பிற்காக‌ 300 போர் வீரர்களையும்(Knight), 2000 காலாட்படை வீரர்களையும் எருசலேமில் விட்டுவிட்டு, மற்றவர்கள் தங்கள் ஊர்களுக்கு (ஐரோப்பா) சென்றுவிட்டனர்.  அதன் பிறகு எருசலேமுக்கு புனிதப்பயணம் தொடர்ந்து தடையில்லாமல் நடந்தது. மறுபடியும் முஸ்லிம்கள் எருசலேமை பிடிக்க வந்த போது இரண்டாம் போர் தொடங்கியது. முதல் மற்றும் இரண்டாம் சிலுவைப்போர்களுக்கு இடையே 48 ஆண்டுகள் இருப்பதற்கும், இதே போல மற்ற போர்களுக்கும் இடையே இப்படியே பல ஆண்டுகள் இடைவெளி இருப்பதற்கும் இதுவே காரணம்.

முஹம்மது மதினாவில் வாழ்ந்த 10 ஆண்டுகளில் 95 வன்முறைகளில், போர்களில் ஈடுபட்டார். தன் ஆட்சி மோகத்தினால் முழு அரேபியாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். முஹம்மதுவிற்கு பிறகு 50 ஆண்டுகளில் கலீஃபாக்கள் பெரும்பான்மையான மத்திய கிழக்கு நாடுகளை பிடித்துக்கொண்டார்கள். 

இதன் மூலம் அறிவதென்ன? மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை யாருக்கு இருப்பதாக அறியமுடிகின்றது? முஹம்மதுவிற்கும் முஸ்லிம்களுக்குமா? அல்லது சிலுவைப்போர் வீரர்களுக்கா?

11. மொத்தத்தில் சிலுவைப்போரினால் யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம்?

சிலுவைப்போர்களினால் கிறிஸ்தவ உலகிற்கு மிகப்பெரிய இழப்பு உண்டானது. ஒரு கணக்கின் படி, 80% சதவிகிதத்திற்கும் அதிகமாக சிலுவைப்போர் வீரர்கள் மரித்திருக்கிறார்கள்.  இரண்டாம் சிலுவைப்போர்களிலிருந்து எட்டாம் சிலுவைப்போர்கள் வரை அனைத்தும் பெரும் உயிர் நஷ்டத்தில்  முடிந்தது, பல தோல்விகளும், இழப்புக்களும் தான் மிஞ்சியது.

முதல் சிலுவைப்போருக்கு பிறகு அதிகபட்சமாக 40 ஆண்டுகள் எருசலேம் கிறிஸ்தவர்களிடம் இருந்தது, அதன் பிறகு மறுபடியும் முஸ்லிம்கள் ஆக்கிரமித்தார்கள். அடுத்தடுத்த வந்த போர்களும் தோல்வியில் முடிந்தது, மறுபடியும் சில ஆண்டுகள் கிறிஸ்தவர்களிடம்  வந்தது, கடைசியாக முஸ்லிம்களின் கைகளுக்கே அது திரும்பியது.

உலகத்திற்கு நன்மை என்றுச் சொல்லவேண்டுமென்றால், முஸ்லிம்களின் அதிவேக ஆக்கிரமிப்புக்களுக்கு சிலுவைப்போர்கள் தடை போட்டது, அதனால் முஸ்லிம்களின் ஆக்கிரமிப்புக்கள் கொஞ்சம் வேகம் குறைந்தது.

12. பிள்ளைகள் சிலுவைப்போர் (Children Crusade) என்றால் என்ன?

முதல் சிலுவைப்போருக்கு பிறகு முஸ்லிம்கள் மறுபடியும் எருசலேமை ஆக்கிரமித்துக்கொண்ட போது, பிரான்ஸில் சிறுவர்களின் ஒரு குழு தாங்கள் எருசலேமை மீட்க புறப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. ஆனால், அவர்கள் போகின்ற வழியிலேயே பனியினாலும் பட்டினியினாலும் மாட்டிக்கொண்டு, அனேகர் மரித்துவிட்டதாகவும், மற்றவர்கள் திரும்பி வந்து ஊர் சேர்ந்ததாகவும் சொல்லப்படுகின்றது.

13. முஸ்லிம்களிடம் பழிக்கு பழி வாங்கியதாக சிலுவைப்போர்களை கருதலாமா?

பழிக்கு பழி அல்ல, தங்கள் புனித ஸ்தலங்களை மீட்டு, அங்கு புனிதப் பயணங்களை பயமில்லாமல் தொடர எடுக்கப்பட்டதே சிலுவைப்போர்கள். பழிக்குபழி வாங்கவேண்டும்னெறால் ஏன் அவர்கள் முஸ்லிம்களின் நாடுகளை தொடர்ந்து  பிடித்து தங்கள் ஆட்சியை நிறுவவில்லை?

14. முஸ்லிம்களின் நாடுகளை சிலுவைப்போராளிகள் ஆக்கிரமித்தார்களா?

இல்லை, இது தவறு.

எருசலேமை பிடிக்கச் சென்ற போது கூட சிலுவைப்போராளிகள் அனைத்து முஸ்லிம் நாடுகளை பிடித்து தங்கள் ஆட்சியை அமைக்க வில்லை. அப்படி அமைத்து இருந்திருந்தால் மறுபடியும் முஸ்லிம் நாடுகள் எழும்பி எருசலேமை பிடித்திருக்க மாட்டார்கள். அன்று கிறிஸ்தவர்களுக்கு அரசியல் தெரியாது மற்றும் போர் யுக்தி தெரியாமல் போனது தான் எருசலேம் மறுபடியும் இழந்ததற்கு காரணம். 

15. முஹம்மதுவின் மரணம் முதல் சிலுவைப்போர்கள் தொடங்கும் வரை 500க்கும் அதிகமான போர்களை முஸ்லிம்கள் புரிந்தார்கள் என்பது உண்மையா?

ஆம், இந்த வீடியோவை மற்றும் கட்டுரையைப் பார்க்கவும்: 

மூலம்: Jihad vs Crusades - Bill Warner, PhD - www.politicalislam.com/jihad-vs-crusades/

16. சிலுவைப்போராளிகள் புனித நகரத்தை மீட்டுக்கொள்வதைத் தவிர வேறு எந்த ஒரு தீமையும் செய்யவில்லையா?

சிலுவைப்போர்களின் நோக்கம் வெறும் எருசலேமை மீட்பதாக இருந்தது. ஆனால் வழியில் சில இராணுவ‌குழுக்கள், யூதர்களையும், மற்ற கிறிஸ்தவர்களையும் கொன்று, அவர்களின் ஊர்களையும் கொள்ளையிட்டனர். இதனை சிலுவைப்போரை துவக்கிய போப்மார்கள் வன்மையாக கண்டித்தனர்.  சிலுவைப்போராளிகள் பல தீய காரியங்களை செய்தது உண்மை தான்.

17. ஒருவேளை முஹம்மதுவும், கலீஃபாக்களும் மற்ற நாடுகளை அநியாயமாக ஆக்கிரமிப்பதை தவிர்த்து இருந்திருந்தால், சிலுவைப்போர்கள் நடந்திருக்காதா?

நிச்சயமாக தவிர்க்கப்பட்டு இருந்திருக்கும்.  

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்ததால் தானே, நாம் சுதந்திர போராட்டத்தில் இறங்கினோம், பல கொடுமைகளை இந்திய மக்கள் சந்தித்தார்கள். ஆங்கிலேயர்கள் வராமல் இருந்திருந்தால், முஹம்மதுவும் கலீஃபாக்களும் அமைதியாக இஸ்லாமிய தாவா செய்திருந்தால், இவைகள் நடந்திருக்குமா? 

சரி, அமைதியாக இஸ்லாமை பரப்பவேண்டுமென்று குர்‍ஆன் சொன்னால் தானே!

18. கிறிஸ்தவர்களின் புனித நகரம் எருசலேமா?

கிறிஸ்தவர்களுக்கு ஒரு புனித நகரம் உண்டு என்று பைபிள் கட்டளையிடவில்லை. எருசலேம் கிறிஸ்தவர்களின் புனித நகரம் என்று இயேசுவும் சொல்லவில்லை.

ஒரு குறிப்பிட்ட நாடு, ஒரு குறிப்பிட்ட நகரம் கிறிஸ்தவர்களுக்கு புனிதமில்லை, எனென்றால் இயேசுவின் நற்செய்தி உலக மக்கள் அனைவருக்கும் செல்லவேண்டும். மேலும் புனித நகரம் என்ற ஒன்றை கட்டளையிட்டுவிட்டால், அதனால் பல பிரச்சனைகள் வரும் என்று இயேசுவிற்குத் தெரியும், எனவே, அதனை கட்டளையிடவில்லை.

யூதர்களுக்காக எருசலேம் புனித நகரமாக மேசியா வரும் வரை கட்டளையிடப்பட்டு இருந்தது. ஆனால், மேசியாவாகிய இயேசு வந்த பிறகு, ஒரு குறிப்பிட்ட தேவாலயம், ஒரு குறிப்பிட்ட நகரம் என்று இல்லாமல், உலகமெங்கிலும் அவரை தொழுதுக்கொள்ளவேண்டும் என்று தேவன் கட்டளையிட்டார். இதனை புரிந்துக்கொள்ளாததினால் தான் அதாவது மேசியாவை யூதர்கள் ஏற்றுக்கொள்ளாததினால் தான் மத்திய கிழக்கு பகுதியில் இன்றுவரை போர்கள் சண்டைகள் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. இந்த சண்டைகளுக்கு இன்னொரு காரணம், முஸ்லிம்களும் எருசலேமை தங்களின் மூன்றாம் புனித நகரமாக கருதியது தான்.

கிறிஸ்தவர்களுக்கு புனிதர் இயேசு உண்டு, புனித நகரம் இல்லை.  ஆனால், இயேசுவின் இரண்டாம் வருகைக்கு பிறகு, யாருமே எருசலேமை சொந்தம் கொண்டாடமுடியாத காலத்தில் நமக்கு அது புனித நகரமாக மாறும். அதுவரை கிறிஸ்தவர்கள் எந்த நகரையும் புனித நகரமாக கருதவேண்டியதில்லை.

19. இயேசு புனிதப்பயணம் செய்யும் படி கட்டளையிட்டுள்ளாரா?

இல்லை, இயேசுவோ, பைபிளோ கிறிஸ்தவர்களுக்கு கட்டளையிடவில்லை. 

வசதி படைத்தவர்கள் எருசலேமை ஒரு சுற்றுலா பயணம் போன்று சென்று பார்த்துவிட்டு வரலாம்.  இயேசுவும், அப்போஸ்தலர்களும், இதர பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களும் வாழ்ந்த இடம் என்பதால் ஒரு சுற்றுலா சென்று வருவதில் தவறில்லை. கிறிஸ்தவர்கள் எருசலேமின் சமாதானத்திற்காக ஜெபம் செய்யவேண்டும், சொந்தம் கொண்டாடத்தேவையில்லை.

20. கிறிஸ்தவ‌ திருச்சபை அரசியலில் ஈடுபடலாமா?

ஆன்மீகத்தையும், அரசியலையும் ஒன்றாக வைப்பது தவறு. இயேசுவின் படி திருச்சபையும் அரசாங்கமும் தனித்தனியாக இருப்பது தான் சரியாது.

21. சமுதயாத்திற்கு நன்மை உண்டாகும்படி, கிறிஸ்தவ ஊழியர்கள் அரசியலில் குதிக்கலாமா?

குதிக்கட்டும், அதற்கு முன்பாக தங்களுடைய ஊழிய பணியை இராஜினாமா செய்யட்டும். அதாவது ஒரு சபை போதகர் "நான் ஒரு சட்டமன்ற உறுப்பினர் (MLA) அல்லது பாராளுமன்ற உறுப்பினருக்காக‌ (MP) நிற்கப்போகிறேன்" என்று சொல்வாரானால், அவர் தன் போதகர்/சுவிசேஷகர் பணியை விட்டு வரட்டும். கர்த்தருடைய ஊழியத்தையும், அரசியலையும் ஒரே நேரத்தில் செய்வது, சபைக்கும் நன்மையில்லை, நாட்டுக்கும் நன்மையில்லை. சபையின் சாட்சி கெட இது வழி வகுக்கும்.

சிலுவைப்போர்களின் தொடக்கத்திற்கு ஒரு முக்கியமான காரியம், ஆன்மீகத்தில் உள்ள போப்மார்கள் அரசு செய்யவேண்டிய வேலையைச் செய்ய முயன்றது தான்.

அரசன் தன் வேலையைச் செய்யவேண்டும், ஆசாரியன் தன் வேலையைச் செய்யவேண்டும், இவை இரண்டையும் ஒன்று சேர்க்கக்கூடாது.

22. கிறிஸ்தவர்கள் இராணுவத்தில் சேர்ந்து போர்களில் சண்டையிடுவதை இயேசு அங்கீகரிப்பாரா?

இராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக தன் உயிரைக் கொடுப்பதும், போர்க்களத்தில் சண்டையிட்டு எதிர்களை வீழ்த்துவதும் பைபிளின் படி, இயேசுவின் படி ஏற்றுக்கொள்ளப்பட்டதே.

ஒரு கிறிஸ்தவன் ஒரு நல்ல குடிமகன் என்பதை மறக்க வேண்டாம். திடீரென்று நம் இந்தியாவின் மீது போர் தொடுக்க யாராவது வந்தால், நம் இராணுவத்தில் ஆட்கள் தேவைப்படுகிறார்கள் என்ற தேவை வந்தால், நிச்சயம் நாம் இராணுவத்தில் சேர்ந்து போரிடவேண்டும். 

23. தேர்தல் சமயங்களில் சில திருச்சபைகள் எந்த நபருக்கு  ஓட்டு போடவேண்டுமென்று தங்கள் சபை அங்கத்தினர்களுக்குச் சொல்கிறதே, இது சரியா? 

ஓட்டு உரிமை என்பது மிகவும் முக்கியமான உரிமையாகும். நம்மை ஆள நாம் ஒரு நபரை தெரிவு செய்யும் போது, தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். திருச்சபைகள் தங்கள் அங்கத்தினர்களிடம் யாருக்கு ஓட்டு போடவேண்டும்? ஏன் போடவேண்டும்? போன்றவற்றை விளக்கவேண்டும், மற்றும் அறியாமையில் இருக்கும் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை கொண்டுவரவேண்டியது சபையின் கடமையாகும்.

ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்துக்கொண்டு, அந்த கட்சி சமுதாயத்திற்கு எந்த நன்மையும் செய்யவில்லையென்றாலும், அதற்கே ஓட்டு போடவேண்டும் என்று சபை சொல்லக்கூடாது. வேறுவகையில் சொல்வதானால் சபை அரசியல் செய்யக்கூடாது.

24. கிறிஸ்தவ சபை சரித்திரத்தில் சிலுவைப்போர்கள் ஒரு இருண்ட காலம் என்றுச் சொல்வது சரியா?

இயேசுவின் தியாகபலியின் மீது கட்டப்பட்ட சபை, அவரது கட்டளைகள் அஸ்திபாரங்களாக வைத்திருக்கும் சபை, அவரது கட்டளைகளை மீறியது சபையின் இருண்டகாலம் தானே!

25. சிலுவைப்போர்கள் தவறு என்று நீங்கள் சொல்வதினால், கத்தோலிக்க சபையினர் துக்கமடைவார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?

ரோமன் கத்தோலிக்கர்களின் போப், சிலுவைப்போர்களுக்காகவும், தங்கள் சபையின் இதர தவறுகளுக்காகவும் மன்னிப்பு கேட்டு இருப்பதால், கத்தோலிக்கர்களின் மனது இதனால் துக்கப்படுமா? 

கடந்த கால சரித்திரத்தை யாரும் மாற்றமுடியாது. அதனைப் படித்து பாடங்களைக் கற்றுக்கொண்டு தவறுகளை சரி செய்துக்கொள்வது தான் அறிவுடமையாகும். தவறுகளை நியாயப்படுத்த விரும்பினால், அதே தவறுகளை எதிர்காலத்தில் மக்கள் செய்ய‌ வழி வகுக்கும். எனவே தவறு என்றால் தவறு தான் என்று ஒப்புக்கொண்டு சத்தியத்தை நோக்கி பயணிப்பது தான் சரியானது.

தேதி: 26th Jan 2020


ஜிஹாதின் அடிச்சுவடுகளில் சிலுவைப்போர்கள் - பொருளடக்கம்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/crusades/crusades-6.html


செவ்வாய், 14 ஜனவரி, 2020

சிலுவைப்போர்கள் பற்றிய தவறான 6 கேள்விகளும் அவைகளுக்கான பதில்களும் - பாகம் 5

சிலுவைப்போர்கள் பற்றிய முந்தைய கட்டுரைகளை கீழ்கண்ட தொடுப்புகளில் படிக்கலாம்

சரித்திரத்தை சரியாக படிக்காதவர்கள் சிலுவைப்போர்கள் பற்றி பல தவறான கருத்துக்களை பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். தற்போதைய கட்டுரையில், சிலுவைப்போர்கள் பற்றிய 6 தவறான புரிதல்களைக் காண்போம், அவைகளுக்கான பதில்களைக் காண்போம்.

சிலுவைப்போர்கள் பற்றிய 6 தவறான நம்பிக்கைகள்/புரிதல்கள்:

  1. கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் அமைதியாக வாழ்ந்துக்கொண்டு இருந்த போது, வலியச்சென்று முஸ்லிம்கள் மீது சண்டையிட்டனர் சிலுவைப்போராளிகள் (கிறிஸ்தவர்கள்).
  2. சீக்கிரமாக பணக்காரர்கள் ஆகவேண்டுமென்ற பேராசையால் கிறிஸ்தவர்கள் முஸ்லிம் நாடுகள் மீது போரிட்டனர், அவைகள் தான் சிலுவைப்போர்கள்.
  3. சிலுவைப்போர்கள் மூலமாக முஸ்லிம் நாடுகளை தாக்கியதால் தான், அன்றிலிருந்து இன்று வரை முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களை வெறுக்கிறார்கள் மற்றும் தாக்குகிறார்கள்.  முஸ்லிம்களுக்கு சண்டையிட தூண்டியதே சிலுவைப்போர்கள் தான்.
  4. இன்றைய இஸ்லாமிய தீவிரவாதிகளும், சிலுவைப்போராளிகளும் ஒரே வகை தானே! (அல்லது) ஜிஹாதும் சிலுவைப்போர்களும் ஒரே வகை தானே
  5. சிலுவைப்போர்கள் யூதர்களுக்கும் எதிராக நடந்ததே, இது எப்படி நியாயம்?
  6. முதல் சிலுவைப்போராளிகள் (கி.பி. 1099) எருசலேமைக் கைப்பற்றியபோது, வீதிகளில் கணுக்கால் அளவு இரத்தம் ஓடும் அளவிற்கு, எருசலேம் நகரின் ஒவ்வொரு ஆணையும், பெண்ணையும், குழந்தைகளையும் கொலை செய்தனர்.

இப்போது மேற்கண்ட ஒவ்வொரு புரிதலையும் ஆய்வு செய்வோம்.


தவறான புரிதல் 1:

கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் அமைதியாக வாழ்ந்துக்கொண்டு இருந்த போது, வலியச்சென்று முஸ்லிம்கள் மீது சண்டையிட்டனர் சிலுவைப்போராளிகள் (கிறிஸ்தவர்கள்).

இது ஒரு தவறான புரிதலாகும்.

முஹம்மது மரணம் அடைந்த ஆண்டு முதல், கிறிஸ்தவ நாடுகளை பிடிப்பதே தங்கள் தலையாய கடமையாகக் கொண்டு இஸ்லாமிய கலீஃபாக்கள் போர்கள் புரிந்தார்கள். கிறிஸ்தவ நாடுகள் மீது முஸ்லிம்கள் வலியச் சென்று யுத்தம் செய்தார்கள். அக்காலத்தில் இருந்த மொத்த கிறிஸ்தவ நாடுகளில் கிட்டத்தட்ட 2/3 (மூன்றில் இரண்டு பாக) கிறிஸ்தவ நாடுகளை கைப்பற்றினார்கள் முஸ்லிம்கள். கிறிஸ்தவ தேவாலயங்களை அழித்தார்கள். பைசாண்டைன் கிறிஸ்தவ ஆட்சியாளர்களோடு சண்டையிட்டு எருசலேமை பிடித்தார்கள், எகிப்து, வட ஆப்ரிக்க நாடுகள், ஆசியா மைனர் என்றழைப்படும் இன்றைய துருக்கி, மேலும் ஸ்பெயின்வரைக்கும் சென்று நாடுகளை பிடித்து, கொள்ளையிட்டார்கள், பெண்களையும், குழந்தைகளையும அடிமைகளாக விற்றார்கள்.

700 லிருந்து 2 ஆக குறைக்கப்பட்ட பிஷப்புக்கள்:

இஸ்லாமிய ஆட்சியாளர்களின் கைகளில் கிறிஸ்தவ சமுதாயம் எப்படிப்பட்ட துன்பங்களை சந்தித்தது என்பதை அறிய இந்த சிறிய புள்ளிவிவரத்தை கவனியுங்கள். 

கி.பி. 5ம் நூற்றாண்டில் ஆஃப்ரிக்க நாடுகளில் இருந்த மொத்த கத்தோலிக்க தேவாலயங்களில் 700 ஆயர்கள் (பிஷப்கள்) பணியில் இருந்தார்கள்.  இஸ்லாமுக்கு பிறகு மொத்த ஆயர்களின் எண்ணிக்கை 2ஆக குறைந்தது.

இப்படங்களை பாருங்கள்:

அட்டவணை: ஆப்ரிக்காவில் ஆயர்களின் எண்ணிக்கை - இஸ்லாமுக்கு முன்னும் பின்னும்

வரைபடம் (Bar Chart): ஆப்ரிக்காவில் ஆயர்களின் எண்ணிக்கை - இஸ்லாமுக்கு முன்னும் பின்னும்:

மேலும், கீழ்கண்ட கட்டுரையை படித்துத் பாருங்கள், முதல் சிலுவைப்போர் தொடங்கப்பட்ட நூற்றாண்டில் இஸ்லாமியர்கள் செய்த வன்கொடுமைகள் என்னென்னவென்றும், ஏன் சிலுவைப்போர்கள் தொடங்கப்பட்டன என்றும் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் ஆட்சி செய்யும் நாடுகளில் கிறிஸ்தவர்கள் ஒரு இரண்டாம் தர மக்களாக, ஜிஸ்யா வரி செலுத்திக்கொண்டு வாழ்ந்தார்கள்.

ஒரு வரியில் சொல்லவேண்டுமென்றால், தங்கள் நாடுகள் மீது அநியாயமாக முஸ்லிம்கள் போர் புரிந்த பிறகும், 463 ஆண்டுகள் கழித்து தான் முதல் சிலுவைப்போரை துவக்கினார்கள் கிறிஸ்தவர்கள், அதுவும் கிறிஸ்தவத்தின் புனித ஸ்தலங்களை மீட்கவே இப்போர்கள் நடத்தப்பட்டன.

இதுவரை கண்ட விவரங்களின் படி, கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் அமைதியாக வாழ்ந்துக்கொண்டு இருந்தார்கள் என்ற வாதம் தவறானதாகும். முஸ்லிம்களின் கைகளில் கிறிஸ்தவர்கள் பட்ட பாடுகள் அதிகம், அதன் உச்சக்கட்டமே சிலுவைப்போர்கள்.

தவறான புரிதல் 2:

சீக்கிரமாக பணக்காரர்கள் ஆகவேண்டுமென்ற பேராசையால் கிறிஸ்தவர்கள் முஸ்லிம் நாடுகள் மீது போரிட்டனர், அவைகள் தான் சிலுவைப்போர்கள்.

இதுவும் ஒரு தவறான புரிதல் தான். ஏனென்றால், சிலுவைப்போரில் ஈடுபட்டவர்கள் போரிடுவதற்கு ஆகும் செலவுகளை தங்கள் சொந்த சொத்துக்களை விற்று போருக்காக செலவிட்டார்கள். ஒரு கிறிஸ்தவன் தன் மார்க்கத்தின் புனித இடங்களை முஸ்லிம்களிடமிருந்து காக்க சிலுவைப்போரில் ஈடுபடவேண்டுமென்றால், தன் குடும்பத்தை காப்பதற்கு தேவையான பணத்தை தயார் படுத்தி கொடுத்துவிட்டு போருக்கு வரவேண்டும். தன்னுடைய செலவிற்கும் தேவையான பணத்தை வைத்துக்கொண்டு தான் போரிட வரவேண்டும்.

சிலுவைப்போராளிகள் தாங்கள் இறைவனுக்கு தொண்டு செய்வதாக நினைத்து சண்டையிட்டனர். மேலும் அன்று சிலுவைப்போரை தொடங்க காரணமாக இருந்த போப்மார்கள், உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட நீங்கள் சிலுவைப்போர்களில் ஈடுபடவேண்டும் என்று மக்களை உற்சாகப்படுத்தினதினால், மக்கள் திரண்டு வந்தனர். எப்படி ஜிஹாதில் ஈடுபட்டு மரித்தால் சொர்க்கம் நிச்சயம், அங்கு 72 கன்னிகைகள் கிடைப்பார்கள் என்று முஸ்லிம் அறிஞர்கள் முஸ்லிம் வாலிபர்களை உற்சாகப்படுத்தி ஜிஹாதில்  பங்கு கொள்ள வைத்துக்கொண்டு இருக்கிறார்களோ, அதே போலத்தான் போப்மார்கள் அன்று "புனித இடங்களை மீட்க நீங்கள் போரிட்டால், உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படும்" என்று போதனை செய்தார்கள் (இது பைபிளின் படி தவறு என்பது தான் கசப்பான உண்மை).

மேற்கத்திய ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் தங்கள் உடைமைகளை வைத்து தான் போரில் ஈடுபட்டனர். ஆனால், கிழக்கத்திய கிறிஸ்தவர்களில் சிலர் பயனடைந்தார்கள் என்பதும் உண்மையே. ஆனால், அந்த சதவிகிதம் மிகவும் குறைவு. கடைசியாக, சிலுவைப்போர்களின் நோக்கம் பணம் சம்பாதிப்பது அல்ல, கிறிஸ்தவ புனித இடங்களை முஸ்லிம்களிடமிருந்து மீட்டு, புனித யாத்திரை செய்பவர்களுக்கு ஆபத்து இல்லாத பயணங்களை  உண்டாக்கிக் கொடுப்பதாகவே இருந்தது. சரித்திரத்தை படிப்பவர்கள் இதனை புரிந்துக்கொள்வார்கள்.

குருசேடர்கள் தங்களை வறியவர்களாக்கிக் கொண்டு தான் போருக்குச் சென்றார்கள்.  சிலுவைப்போர்கள் அனைத்தையும் பார்க்கும் போது, அது ஒரு மிகப்பெரிய நஷ்டமடைந்த ஒரு செயலாகவே இருந்தது.

முக்கியமாக கவனிக்கவேண்டி விவரம் என்னவென்றால், மேற்கத்திய சிலுவைப்போராளிகள் எருசலேமை பிடித்த பிறகு, புனித இடங்களை மீட்க எடுத்துக்கொண்ட வாக்குறுதியை நிறைவேறிவிட்டபடியினால், அவர்கள் கிழக்கு நாடுகளில் தங்கிவிடாமல் தங்கள் நாடுகளுக்கு திரும்பிவிட்டனர். இதனால் தான் மறுபடியும் எருசலேம் முஸ்லிம்களின் கைகளுக்கு மாறியது.

இந்த போர்களில் ஈடுபட்ட பணக்காரர்கள் தங்களுக்குத் தேவையான உணவுகளை வாங்கிக்கொள்ள அவர்களால் முடிந்தது, ஆனால் பலரால் முடியாத போனபோது, இவர்கள் சில இடங்களில் வழிப்பறி கொள்ளைகளிலும் ஈடுபட்டனர், இது துரதிஷ்டவசமானதாக மாறியது. உணவு பஞ்சத்தாலும், உடல்  நலக்குறைவினாலும் சிலுவைப்போராளிகளில் இருந்த ஏழைகள் மரித்தார்கள், ஆனால் பணத்தைக் கொண்டுவந்தவர்கள் இதனை தாக்குபிடித்தார்கள்.

முதல் சிலுவைப்போரை துவக்கிய போப் அர்பன் 2 என்பவர் கீழ்கண்ட விதமாகச் சொல்லி, மக்களை உற்சாகப்படுத்தினார்: உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படும், உங்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்றுச் சொல்லி, மக்களை உற்சாகப்படுத்தினார். பணத்திற்காக சிலுவைப்போருக்கு அவர் அழைத்திருந்தால், யாருமே வந்திருக்கமாட்டார்கள்.

Pope Urban II (1042-1099 A.D.), said:

"If those who set out thither should lose their lives on the way by land, or in crossing the sea, or in fighting the pagans, their sins shall be remitted. This I grant to all who go, through the power vested in me by God."1

"Let those who have been accustomed to make private war against the faithful carry on to a successful issue a war against the infidels, which ought to have been begun ere now. Let these, who for a long time have been robbers now become soldiers of Christ. Let those who once fought against brothers and relatives now fight against the barbarians."2

சிலுவைப்போர்கள் சரித்திரத்தை முழுவதுமாக படிப்பவர்கள் "சிலுவைப்போராளிகளின் நோக்கம் பேராசை இல்லை" என்பதை புரிந்துக்கொள்வார்கள்.

தவறான புரிதல் 3:

சிலுவைப்போர்கள் மூலமாக முஸ்லிம் நாடுகளை தாக்கியதால் தான், அன்றிலிருந்து இன்று வரை முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களை வெறுக்கிறார்கள் மற்றும் தாக்குகிறார்கள்.  முஸ்லிம்களுக்கு சண்டையிட தூண்டியதே சிலுவைப்போர்கள் தான்.

சிலுவைப்போர்களுக்கு பிறகு தான் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களை வெறுக்க ஆரம்பித்தார்கள் என்ற கூற்றில் உண்மை இல்லை. சரித்திரம் இதற்கு எதிராக சாட்சி சொல்கிறது, குர்‍ஆன் இதற்கு எதிராக சாட்சி சொல்கிறது. 

முஸ்லிமல்லாதவர்களை நேசிக்கும்படி குர்‍ஆனோ, முஹம்மதுவோ கட்டளையிடவில்லை. குர்‍ஆன் சொல்லாத ஒன்றை, முஹம்மது கற்றுக்கொடுக்காத ஒன்றை முஸ்லிம்கள் எப்படி பின்பற்றுவார்கள்?  மக்காவில் முஹம்மது தன் பிரச்சாரத்தை ஆரம்பித்த போது, யூத கிறிஸ்தவர்களைப் பற்றி கரிசனையாக குர்‍ஆன் பேசியது, ஆனால், யூதர்களும், கிறிஸ்தவர்களும் முஹம்மதுவை நபி என்று ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால், அவர்களை எதிர்க்கவும், போர் புரியவும் குர்‍ஆன் கட்டளையிட்டது.

யூதர்களும் கிறிஸ்தவர்களும் காஃபிர்கள் என்ற பட்டியலில் சேர்க்கப்பட்டார்கள், இஸ்லாம் என்ற ஒரு மார்க்கம் மட்டும் தான் அரேபிய நிலப்பகுதியில் இருக்கவேண்டும் என்று முஹம்மது கட்டளையிட்டார், யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் தாக்கினார்.

முஹம்மதுவிற்கு ஒரு யூதப்பெண் விஷம் வைத்தாள் என்பதால் முஸ்லிம்களின் கோபம் (இன்று கூட) இன்னும் அதிகரித்தது. முஹம்மது மரித்த ஆண்டே பைசாண்டைன் ஆட்சியாளருக்கு எதிராக முஹம்மது போரை துவங்கிவிட்டார், இவரது வழியில் தான் பிறகு வந்த கலீஃபாக்கள் கிறிஸ்தவ நாடுகளை பிடித்தார்கள்.

இந்த தொடர் கட்டுரைகளின் பாகம் 2, 3 மற்றும் 4ஐ படித்துப் பாருங்கள். முஹம்மது மரித்த ஆண்டு கி.பி. 632 முதல், 11வது நூற்றாண்டில் (463 ஆண்டுகளுக்கு பிறகு) முதல் சிலுவைப்போர் தொடங்கப்பட்ட ஆண்டுவரை (கி.பி. 1096)  எத்தனை கிறிஸ்தவ நாடுகளை முஸ்லிம்கள் கைப்பற்றினார்கள், எத்தனை தேவாலயங்களை அழித்தார்கள் என்ற பட்டியல் சரித்திர விவரங்களோடு கொடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றை தெளிவாக நாம் புரிந்துக்கொள்ளவேண்டும், அது என்னவென்றால், இஸ்லாமின் அடிப்படை கோட்பாடு, "போர் புரிந்து மற்ற நாடுகளை பிடித்து, உலகமனைத்தையும் ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவரவேண்டும் என்பது தான்".

இதனைத் தான் முஹம்மது செய்தார், அரேபியாவை முழுவதுமாக ஆக்கிரமித்தார், இதையே கலீஃபாக்களும் செய்தார்கள், அக்காலத்தில் இருந்த மத்திய கிழக்கு நாடுகளில் மூன்றில் இரண்டு பாகங்களை பிடித்தார்கள். இவைகளெல்லாம் கி.பி. 1096க்குள் (முதல் சிலுவைப்போர்) முடிந்துவிட்டது, இப்படி இருக்க, 'சிலுவைப்போர்களினால் தான் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களை தாக்குகிறார்கள், வெறுக்கிறார்கள்' என்றுச் சொல்வது மடமையாகும், இஸ்லாமிய சரித்திரத்தை, குர்‍ஆனையும், இஸ்லாமையும் அறியாதவர்கள் பேசும் பேச்சாகும்.

இன்றைய முஸ்லிம்கள் ஏன் கிறிஸ்தவர்களை வெறுக்கிறார்கள்:

சரி, இன்றைய முஸ்லிம்கள் ஏன் கிறிஸ்தவர்களை வெறுக்கிறார்கள் (ஜனநாயக நாடுகளில் இதனை வெளியே காட்டுவதில்லை) என்று கவனித்தால், இன்னும் அதிகமான காரணங்கள் நமக்குத் தெரியும்.

1) ஏற்கனவே குர்‍ஆனும், ஹதிஸ்களும் காஃபிர்களை வெறுக்கச் சொல்கிறது, இதனை முஸ்லிம்கள் அறிவார்கள், கீழ்படிகிறார்கள்.

2) இஸ்லாம் கிறிஸ்தவர்களுக்கு ஆரம்பத்திலிருந்து என்ன செய்தது என்ற சரித்திரத்தை முஸ்லிம்கள் படிப்பதில்லை.

3) சிலுவைப்போர்கள் பற்றிய தவறான கருத்துக்களை, ஜாகிர் நாயக், பீஜே போன்ற அறிஞர்கள் பரப்ப அதனை உண்மையென்று நம்புகிறார்கள் இன்றைய முஸ்லிம்கள்.

4) இது போதாது என்றுச் சொல்லி, எரிகிற புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று, இஸ்ரேல் என்ற நாடு 1900 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென்று 1945ம் ஆண்டுகளில் முளைத்தெழும்பியது.

5) அதுவும் பல இஸ்லாமிய நாடுகளுக்கு  மத்தியில் முளைத்தெழும்பி  இஸ்ரேல் அசைக்கமுடியாத ராஜ்ஜியமாக முஸ்லிம் நாடுகளுக்கு சவால் விட்டுக்கொண்டு இருக்கிறது.

6) முஸ்லிம்களின் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தும்விதமாக மேற்கத்திய நாடுகள் முக்கியமாக அமெரிக்கா போன்ற நாடுகள் இஸ்ரேல் நாட்டை ஆதரிக்கிறது. மேற்கத்திய நாடுகள் கிறிஸ்தவ நாடுகள் என்று முஸ்லிம்கள் கருதுகிறார்கள் (இதில் பாதி உண்மை, பாதி பொய் உள்ளது). இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்றிருக்கிறார்கள் முஸ்லிம்கள்.

7) சும்ம கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் என்று சொல்வதுபோன்று ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் மீது அமெரிக்க போர் தொடுத்து, இன்னும் முஸ்லிம்களின் கோப அக்கினியை ஊதிவிட்டது.

8) முஸ்லிம்களால் ஹீரோக்கள் என்று கருத்தப்பட்ட மற்றும் உலகத்தினால் பயங்கரவாதிகள் என்று கருதப்படுகின்ற சத்தாம் உசேன், பின்லாடன், ஐஎஸ் ஐஎஸ் தலைவர் பக்தாதி மற்றும் ஈரானின் சுலைமானி போன்றவர்களை பொறுக்கி பொறுக்கி அழித்துக்கொண்டு வருகிறது அமெரிக்கா.

இப்படி சரித்திரத்தில் நடந்த மற்றும் நம் காலக்கட்டங்களில் நடந்துக்கொண்டு இருக்கிற நிகழ்ச்சிகளின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்கும் முஸ்லிம்கள் 'இவைகளுக்கெல்லாம் காரணம் கிறிஸ்தவர்களே' என்று தவறாக புரிந்துக்கொண்டு வெறுக்கிறார்கள், தாக்குகிறார்கள்.

சிலுவைப்போர்கள் மூலமாக நடந்த ஒரு நல்ல காரியம் எதுவென்றால், வேகமாக உலக நாடுகளை கைப்பற்றிக்கொண்டு இருந்த முஸ்லிம்களின் கொட்டத்தை சிறிதளவு அது தடுத்தது, அல்லது தாமதப்படுத்தியது. சிலுவைப்போர்கள் நடக்காமல் இருந்திருந்தால் இன்றுள்ள உலகின் பாதிக்கு மேல் இஸ்லாமிய நாடுகளாக மாறியிருக்க வாய்ப்பு உள்ளது.

இது கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனம் என்று நினைத்தாலும் இதனை நான் சொல்லிவைக்கிறேன், அதாவது மீனுக்கு நீந்த கற்றுக்கொடுக்கவேண்டுமா! முஸ்லிம்களுக்கு முஸ்லிமல்லாதவர்களை வெறுக்க கற்றுக்கொடுக்கவேண்டுமா என்ன?

இந்த கூற்றில் தவறு இருந்தால், கோர்வையாக குர்‍ஆனை படியுங்கள், தஃப்ஸீர்களை படியுங்கள், முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறை படியுங்கள், ஹதீஸ்களில் முஹம்மது கற்றுக்கொடுத்திருப்பவைகளை படியுங்கள், அப்போது தான் மேலே சொன்ன என்னுடைய கூற்றில் உண்மை இருக்கிறது என்று உங்களுக்கு புரியும்.

தவறான புரிதல் 4:

இன்றைய இஸ்லாமிய தீவிரவாதிகளும், சிலுவைப்போராளிகளும் ஒரே வகை தானே! (அல்லது) ஜிஹாதும் சிலுவைப்போர்களும் ஒரே வகை தானே.

இதுவும் ஒரு தவறான கூற்று. ஜிஹாத் பற்றிய உண்மையை அறியாதவர்களின் கூற்று. ஜிஹாத் என்பது வேறு, சிலுவைப்போர் என்பது வேறு. இவ்விரண்டிற்கும் இடையே பல வித்தியாசங்கள் உள்ளன. அவைகளை சுருக்கமாக கீழே தருகிறேன், அப்போது தான் உங்களுக்கு உண்மை புரியும்.

பட்டியல்: ஜிஹாதுக்கும் சிலுவைப்போர்களுக்கும் இடையே இருக்கும் வித்தியாசங்கள்:

எண் ஜிஹாத் (இஸ்லாமிய புனித போர்)சிலுவைப்போர்
1

கட்டளை: ஜிஹாத் குர்‍ஆனின் கட்டளை. முஹம்மதுவும் ஈடுபட்டார், முஸ்லிம்களுக்கும் கட்டளையிட்டார்:

 

சிலுவைப்போர் பைபிளின் கட்டளையில்லை.  இயேசு புனிதப்போரை அனுமதிக்கவில்லை
2கடமை: முஸ்லிம்களுக்கு ஜிஹாதில் ஈடுபடுவது கடமைகிறிஸ்தவர்களுக்கு புனிதப்போர்களில் ஈடுபடுவது கடமையில்லை. உண்மையில் கிறிஸ்தவத்தில் புனிதப்போர் இல்லை.
3உலக முடிவு வரை கடமை: உலகத்தின் கடைசி நாள் வரை ஜிஹாத் முஸ்லிம்களுக்கு ஒரு கட்டளையாக இருக்கும்புனிதப்போர் என்று ஒன்று கிறிஸ்தவர்களுக்கு இல்லை
4குர்‍ஆனுக்கு கீழ்படிவது: குர்‍ஆனுக்கு உட்பட்டு, அதன் கட்டளையின் படி ஜிஹாத் நடத்தப்படுகின்றதுபைபிளுக்கு எதிராக செயல்பட்டு, நடத்தப்பட்டதே சிலுவைப்போர்கள். இது தேவன் அனுமதிக்காதது
5சொர்க்கம் கியாரண்டி: ஜிஹாதில் மரிப்பவர்கள் சொர்க்கம் அடைவார்கள் என்று இஸ்லாம் சொல்கிறது  சிலுவைப்போர்களில் மரிப்பவர்களுக்கு சொர்க்கம் உண்டு என்று பைபிள் சொல்லவில்லை, கிறிஸ்தவம் இதனை ஆதரிப்பதில்லை. தவறாக சில கிறிஸ்தவ ஊழியர்கள் (போப்புக்கள்) செய்த காரியம் தான் சிலுவைப்போர்கள்.
6ஜிஹாதிகள் ஹீரோக்கள்: இஸ்லாமியர்களின் (இஸ்லாமின்) பார்வையில் ஜிஹாத் செய்பவர்கள் ஹீரோக்கள் (நல்லவர்கள்)சிலுவைப்போராளிகள் ஹீரோக்கள் என்று சொல்வதற்கு பைபிளில், இயேசுவின் போதனைகளில், அப்போஸ்தலர்களின் வழிகாட்டுதலில் ஆதாரம் இல்லை. இயேசுவை உண்மையாக விசுவாசிக்கின்ற கிறிஸ்தவர்கள் சிலுவைப்போராளிகளை ஹீரோக்களாக பார்ப்பதில்லை மேலும் பார்க்கமுடியாது.
7ஒரே குடையின் கீழ்  உலக நாடுகள்: ஜிஹாதின் இன்னொரு நோக்கம் உலக நாடுகளை இஸ்லாமிய ஆட்சியின் கீழ் கொண்டுவருவது. இதனால் தான் முஹம்மது முதற்கொண்டு, இன்றுவரை இஸ்லாமிய நாடுகள் முயற்சி செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.சிலுவைப்போர்களின் நோக்கம், கிறிஸ்தவ புனித ஸ்தலங்களை முஸ்லிம்களிடமிருந்து மீட்டு, அவ்விடங்களுக்கு யாத்திரை செய்பவர்களுக்கு நன்மை செய்வதாகவே இருந்தது. சிலுவைப் போர்கள் நடந்த இடங்களை கவனித்தால் இதனை புரிந்துக்கொள்ளலாம். இதர முஸ்லிம் நாடுகளை பிடிக்க ஒருபோதும் சிலுவைப்போர்கள் நடக்கவில்லை. கிறிஸ்தவ நாடுகளாக மற்ற நாடுகளை  ஆக்குவோம் என்ற நோக்கில் அவைகள் நடத்தப்படவில்லை.

மேலே கண்ட வித்தியாசங்களை கவனித்தீர்களா? 

  • ஜிஹாதிகளும் சிலுவைப்போராளிகளும் ஒன்றா? இல்லை. 
  • ஜிஹாதும் சிலுவைப்போர்களும் ஒன்றா? இல்லை.

சுருக்கமாகச் சொல்வதென்றால், குர்‍ஆனை பின்பற்றுபவன் ஜிஹாதில் ஈடுபடுவான், பைபிளை பின்பற்றுபவன் எந்த ஒரு புனிதப்போரிலும் ஈடுபடமாட்டான். 

ஜிஹாதி குர்‍ஆனுக்கு கீழ்படிகின்றான், சிலுவைப்போராளி பைபிளுக்கு கீழ்படியவில்லை.

தவறான புரிதல் 5

சிலுவைப்போர்கள் யூதர்களுக்கும் எதிராக நடந்ததே, இது எப்படி நியாயம்?

எந்த போப்பும் யூதர்களுக்கு எதிரான சிலுவைப் போரை தொடங்கவில்லை. முதல் சிலுவைப் போரின் போது, பிரதான இராணுவத்துடன் தொடர்புபடுத்தப்படாத ஒரு பெரிய குழு, தாங்கள் சுயமாக முடிவு செய்துக்கொண்டு, ரைன்லேண்ட் நகரங்களில் இறங்கி, அங்கு அவர்கள் கண்ட யூதர்களைக் கொள்ளையடித்து கொலை செய்தார்கள். இது ஒரு தவறான செயலாகும், சிலுவைப்போரை தொடங்கச் சொன்ன போப் யூதர்களை தாக்குங்கள் என்று சொல்லவும் இல்லை, கட்டளையிடவும் இல்லை. இயேசுவை சிலுவையில் அறைந்தது யூதர்கள் என்ற தவறான கருத்தை நம்பிக்கொண்டு, சிலர் இந்த  காரியத்தைச் செய்தார்கள். இயேசு சிலுவையில் அறையப்பட்டபோதே அனைவரையும் மன்னித்துவிட்டார் என்பதை இவர்கள் சரியாக புரிந்துக்கொள்ளவில்லை, கிறிஸ்தவ இறையியலையும் இவர்கள் சரியாக புரிந்துக்கொள்ளவில்லை.  

முதல் சிலுவைப்போரை துவக்கிய போப் அர்பன் II என்பவரும், அவருக்கு பிறகு வந்த போப்புக்களும், யூதர்கள் மீதான இந்த தாக்குதலை வன்மையாக கண்டித்தார்கள். சிலுவைப்போராளிகளில் சிலர் யூதர்களை தாக்கும் போது, அவர்களை காக்க அந்த பகுதியில் இருந்த ஆயர்கள் மற்றும் கிறிஸ்தவ குருமார்கள் அதனை தடுக்க தங்களால் இயன்ற முயற்சியைச் செய்தார்கள், ஆனால் நிலைமை கையைவிட்டு போய்விட்டதால், அதிகமாக இவர்களின் முயற்சி பயன்படவில்லை.

இதேபோல், இரண்டாம் சிலுவைப் போரின் தொடக்க கட்டத்தின்போது, சிலுவைப்போராளிகளில் இருந்த சில துரோகிகள் ஜெர்மனியில் யூதர்களை கொலை செய்தனர், இவர்களை புனித பெர்னார்ட்  தடுத்து நிறுத்தி யூதர்களை கொல்வதற்கு ஒரு  முற்றுப்புள்ளி வைத்தார்.

சிலுவைப்போராளிகள் சிலரின் தவறான கோபத்தினால் உண்டான விளைவு தான் யூதர்களை கொலை செய்தது. யூதர்களையோ, மற்ற மக்களை கொல்வதோ சிலுவைப்போர்களின் நோக்கங்கள் அல்ல. தங்கள் கைகளில் ஆயுதம் உண்டு என்ற மமதையில் சிலர் சிலுவைப்போர்களின் அடிப்படை நோக்கங்களுக்கு எதிராக செயல்பட்ட நிகழ்ச்சிகள் தான் இவைகள். 

இந்த பரிதாப நிலையை புரிந்துக்கொள்ளவேண்டுமென்பதற்கு ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன்,  இரண்டாம் உலகப் போரின்போது சில அமெரிக்க வீரர்கள் வெளிநாடுகளில் இருந்தபோது குற்றங்களைச் செய்தனர். அந்தக் குற்றங்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டனர். ஆனால் இரண்டாம் உலகப் போரின் நோக்கம் வெளிநாடுகளில் சென்று குற்றங்கள் செய்யுங்கள் என்பதாக இருக்கவில்லை, ஆனால் சிலர் நோக்கங்களை மறந்தார்கள். இதே போன்று தான், நோக்கங்களை மறந்த சிலுவைப்போர் வீரர்கள் இப்படி யூதர்களையும் கொன்று அழித்தனர்.

தவறான புரிதல் 6:

முதல் சிலுவைப்போராளிகள் (கி.பி. 1099) எருசலேமைக் கைப்பற்றியபோது, வீதிகளில் கணுக்கால் அளவு இரத்தம் ஓடும் அளவிற்கு, எருசலேம் நகரின் ஒவ்வொரு ஆணையும், பெண்ணையும், குழந்தைகளையும் கொலை செய்தனர்.

சிலுவைப்போர்களை விமர்சிக்க விரும்புகிறவர்கள் இந்த குற்றசாட்டை முன்வைப்பார்கள். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிங்டன்,  ஒரு மேடையில் பேசும் போது இந்த நிகழ்ச்சியை குறிப்பிட்டார். குருசேடர்கள் எருசலேமை பிடித்த போது, எருசலேம் தெருக்களில் கணுக்கால் அளவு இரத்தம் ஓடும்படி எல்லோரையும் கொன்றார்கள் என்றுச் சொன்னார்.

சிலுவைப்போராளிகள் எருசலேம் நகரை கைப்பற்றிய பின்னர் பலர் கொல்லப்பட்டனர் என்பது உண்மை தான். ஆனால் இதை வரலாற்று சூழலில் (Historical Context) புரிந்து கொள்ள வேண்டும். நவீன ஐரோப்பிய மற்றும் ஆசிய காலத்திற்கு முந்தைய காலத்தின் போர் நியமங்களின் படி,ஒரு நாடு வேறு ஒரு நகரத்தை முற்றுகையிடும் போது, அந்த நகரத்தார்கள், அமைதியான முறையில் அடிபணிந்துவிட்டால், சண்டையில்லாமல் அந்த நகரத்தை எடுத்துக்கொள்வார்கள். ஆனால், அந்த நகரத்தார் எதிர்த்தால் அவர்களை கடைசியாக வெற்றிக்கொள்பவர்களுக்கு அவர்கள் சொந்தமாவார்கள்.

அந்த நகரத்தின் கட்டிடங்கள் மற்றும் பொருட்கள் மட்டுமல்ல, மக்களும் வெற்றிக்கொள்பவர்களுக்குச் சொந்தமாவார்கள். அதனால் தான் ஒரு நகரம் அல்லது கோட்டை முற்றுகையிடப்படும் போது, அந்த நகரத்தார்கள் எதிராளியிடம் சரணடைந்து உயிரோடு வாழ்வதா அல்லது சண்டையிட்டு மாள்வதா என்பதை புத்திசாலிதனமாக பரிசீலித்து முடிவு எடுக்கவேண்டும். தங்கள் இராணுவ பலத்தை கணக்கில் கொண்டு செயல்படவேண்டும். ஒருவேளை நம் இராணுவத்தால் அவர்களை ஜெயிக்கமுடியாது என்று கண்டுபிடிக்கப்பட்டால், உடனே முற்றுகையிட்ட நாட்டிடம் சமரசம் பேசி, சில நிபந்தனைகளில் கையெழுத்து இட்டு, சரணடையவேண்டும். இது தான் அக்கால போர் நியமங்களாக இருந்தன (இதையே முஹம்மதுவும் செய்தார், இஸ்லாமுக்கு அடிபணிகின்றாயா? அல்லது எங்களிடம் மாண்டு மடிகிறாயா? என்று கேட்டு செய்ல்பட்டார். ஒரு நபியாக இருந்து இப்படி நடந்துக்கொண்டது தான் ஜீரணிக்கமுடியாத ஒன்றாக இருக்கிறது).

முதல் சிலுவைப்போரின் போது, எருசலேமை அவர்கள் முற்றுகையிட்டபோது, அவர்களிடம் சரணடைய முஸ்லிம்கள் மறுத்துவிட்டனர். எருசலேமின் மதில் சுவர்களை தகர்த்துக்கொண்டு அவர்கள் வரமுடியாது, அச்சுவர்கள் தங்களை பாதுகாக்கும் என்று நம்பினர். மேலும், அதற்குள் எகிப்திலிருந்து தங்களுக்கு உதவி வரும் என்று நம்பினர். இந்த இடத்தில் தான் முஸ்லிம்கள் தவறு செய்தனர். நடந்தது என்ன? எருசலேமை சிலுவைப்போராளிகள் கைப்பற்றினர். எருசலேம் நகரில் பலர் கொல்லப்பட்டனர், இன்னும் பலர் பணம் கொடுத்து மீட்கப்பட்டனர் அல்லது விடுதலையாகிச் சென்றனர். நவீன தரத்தின்படி இதனை பார்த்தால், இது ஒரு மிருகத்தனமான செயலாகத் தோன்றும். ஆனால், நவீன கால யுத்த‌ ஆயுதங்களினால் உண்டாகும் விளைவுகள், அக்கால வாள்வீச்சு கொலைகளைவிட அதிகமாக இருப்பதை மறுக்கமுடியாது.

ஒன்றை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும், சிலுவைப்போராளிகள் எருசலேமுக்கு வரும் வழியில் இருந்த இஸ்லாமிய நாடுகள், பட்டணங்கள் இவர்களை எதிர்க்காமல் வழி விட்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பட்டணங்களை சிலுவைப்போராளிகள் தாக்கவில்லை, அவர்கள் சொத்துக்களை அபகரிக்கவில்லை, அவர்கள் பழைய படியே சுதந்திரமாக தங்கள் அல்லாஹ்வை தொழுதுக்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள்.

எருசலேம் நகரத்தின் தெருக்களில் கணுக்கால் அளவு இரத்தம் ஓடியது என்று சொல்லப்படும் விமர்சனத்தை எந்த ஒரு சரித்திர ஆசிரியரும் ஏற்றுக்கொள்வதில்லை. ஏனென்றால் அது மிகைப்படுத்திச் சொல்லப்பட்ட கூற்றாகும். ஏனென்றால், எருசலேம் ஒரு பெரிய நகரம். அந்த நகரத்தின் தெருக்களில் குறைந்தபட்சம் மூன்று இன்சு அளவு இரத்தம் தொடர்ந்து ஓடியது என்றுச் சொல்லவேண்டுமென்றால், பல லடசம் பேர் கொல்லப்படவேண்டும், மேலும், அந்த நகரத்தில் அன்று இருந்த மக்களைக் காட்டிலும் அதிகமான மக்களை வெளியே இருந்து கொண்டு வந்து, கொன்று இருக்கவேண்டும். இது சாத்தியமான கூற்றாக தெரிகின்றதா?

மேடை பேச்சுக்காகவும், விமர்சனம் வைக்கவேண்டுமென்பதற்காகவும் நடந்த உண்மையை அப்படியே சொல்லாமல் மிகைப்படுத்திச் சொல்லபட்டது தான் இந்த கூற்று என்று நமக்கு தெரிகின்றதல்லவா!

முடிவுரை:

இந்த கட்டுரையில் சிலுவைப்போர்கள் பற்றிய ஆறு தவறான புரிதல்களைப் பற்றி கண்டோம். மேலும் பல கேள்விகளை அடுத்தடுத்த கட்டுரைகளில் காண்போம். 

குறிப்பு: சிலுவைப்போர்கள் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கவே இந்த தொடர்கள் எழுதப்படுகின்றன. சிலுவைப்போர்களை நான் ஆதரிக்கவில்லை, இயேசுவின் போதனைகளுக்கு எதிராக நடந்த ஒன்றை எப்படி ஒரு கிறிஸ்தவன் ஏற்றுக் கொள்ளமுடியும்?

சரித்திர ஆசிரியர் தாமஸ் எஃப் மத்தன் (Thomas F. Madden) என்பவரின் பதில்களிலிருந்து இந்த இக்கட்டுரையின் ( Crusade Myths ) விவரங்கள் எடுக்கப்பட்டன.

தேதி: ஜனவரி 14, 2020

திங்கள், 6 ஜனவரி, 2020

முதல் சிலுவைப்போரை நிஜமாக்கியவர்கள் யார்? செல்ஜுக் துருக்கி முஸ்லிம்களும் & அர்பன் II போப்பும் (பாகம் 4)

(முதல்  சிலுவைப்போரின் தொடக்க நிமிடங்கள். . .)

இடைவெளி 463 ஆண்டுகள்:

முஹம்மது இறந்த கி.பி. 632ம் ஆண்டு முதல், கி.பி. 1095ல் புனித இடங்களை விடுவிக்க முதல் சிலுவைப் போர் தொடங்கும் வரையில் 463 ஆண்டுகள் இடைவெளி உள்ளது. இந்த ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கும் ஐரோப்பிய அல்லது பைசாண்டைன் கிறிஸ்தவர்களுக்கும்(Byzantine Christians) இடையில் ஒரு அமைதி வாழ்வு நிலவியது (peaceful co-existence) என்று சிலர் கூறுவது தவறான கூற்றாகும். முஸ்லிம்கள் ஆக்கிரமித்திருந்த நாடுகளில் வாழ்ந்த கிறிஸ்தவர்களின் நிலைப் பற்றி மேலதிகமாகச் சொல்லத்தேவையில்லை.  முஸ்லிம் படையெடுப்பிற்கு முன்பு தங்கள் கிறிஸ்தவ நாடுகளில்  வாழ்ந்த கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பிற்கு பிறகு இரண்டாம்தர குடிமக்களாக, குறைந்த சலுகைகளை உடையவர்களாக‌ "இஸ்லாம் விதித்த‌ ஜிஸ்யா வரி" கொடுத்து வாழ்ந்து வந்தார்கள்.

கி.பி. 1000வது ஆண்டுக்கு பிறகு கிறிஸ்தவர்களின் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. கி.பி. 1009 ஆம் ஆண்டில் எகிப்தின் பாத்திமத் கலீஃபா, அபூ-அலி மன்சூர் அல்-ஹக்கீம் (Fatimid Caliph of Egypt, abu-'Ali Mansur al-Hakim), எருசலேமில் உள்ள "புனித கல்லறையை(Holy Sepulchre)" அழிக்க உத்தரவிட்டார். துரதிருஷ்டவசமாக வேறு வழியின்றி அந்த அழிவுக்கான கட்டளை ஆவணத்தில் அவரது கிறிஸ்தவ செயலாளர் இப்னு-அப்துன் கையெழுத்திட்டார். முஸ்லிம்கள் இயேசுவின் கல்லறையையும், அந்த இடத்தில் கட்டப்பட்டிருந்த திருச்சபையின் மேல் பகுதிகளையும் அழித்தனர். அவர்கள் இடித்த கட்டிடத்தின் உடைந்த சுவர்கள், ஒரு பெரிய குவியலாக இருந்தது. அதனால் முழூ திருச்சபையையும் அவர்கள் அழிக்கமுடியவில்லை. அதன் பிறகு, 11 ஆண்டுகள் கிறிஸ்தவர்களுக்கு அந்த‌ இடிக்கப்பட்ட திருச்சபை இடிபாடுகளைப் பார்க்கவோ அல்லது இடிபாடுகள் மத்தியில் நின்று ஜெபிக்கவோ கூட தடை விதிக்கப்பட்டது. கிறிஸ்தவர்களின் புனிதமான ஆலயம் அழிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போப் IV செர்ஜியஸ்(Pope Sergius IV) அதை மீண்டும் கட்ட பாலஸ்தீனத்திற்கு செல்ல உதவி கோரினார். அவரது வேண்டுகோள் செவிடன் காதில் சங்கு ஊதியதைப்போன்று பயனற்றதாகிவிட்டது. 

போப் கிரிகோரி VII:

கி.பி. 5ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதாவது முஹம்மது தோன்றுவதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்காவில் 700 கத்தோலிக்க ஆயர்கள் (பிஷப்கள்) இருந்தனர்[1]. அவர்களில் 200 ஆயர்கள் கி.பி 535 இல் நடந்த கார்தேஜ் கவுன்சிலில் (Council of Carthage) கலந்து கொண்டார்கள். கி.பி. 10 ம் நூற்றாண்டின் (900) மத்திய காலத்தில் வெறும் 40 ஆயர்கள் மட்டுமே மிஞ்சி இருந்தனர். இந்த நிலை  கி.பி. 1050ம் ஆண்டில்  முஸ்லிம்களின் அமைதியான! ஆட்சியின் விளைவாக வெறும் 5 ஆயர்களாக குறைந்தனர். இவர்கள் 1076ன் ஆண்டில் 2 ஆயர்களாக ஆக்கப்பட்டனர். இந்த விவரங்களை நாம் போப் கிரிகோரி VII (Pope Gregory VII), "கி.பி. 1076ம் ஆண்டில், கர்தேஜ் பகுதியின் பேராயர் சிரியகஸ்ஸுக்கு (Cyriacus, Archbishop of Carthage) எழுதிய கடிதத்திலிருந்து அறிகிறோம்".

அட்டவணை: ஆப்ரிக்காவில் ஆயர்களின் எண்ணிக்கை - இஸ்லாமுக்கு முன்னும் பின்னும்

வரைபடம் (Bar Chart): ஆப்ரிக்காவில் ஆயர்களின் எண்ணிக்கை - இஸ்லாமுக்கு முன்னும் பின்னும்

ஒரு ஆயரை நியமிக்க (பிரதிஷ்டை செய்ய) மூன்று வேறு ஆயர்கள் தேவைப்படுகிறார்கள். ஆகையால், பேராயர் கிரிகோரி ரோமுக்கு ஒரு பாதிரியாரை அனுப்பும் படி கேட்டுக்கொண்டார். அவரை துணை ஆயரகாக நியமித்தால், ஒரு புதிய ஆயரை நியமிக்க மூன்று ஆயர்கள் கிடைத்துவிடுவார்கள்.  இதன் மூலம் தானும் (சிரியாகஸ்), சர்வாண்டஸ்ஸும் (மவுரித்தேனியாவில் உள்ள புஜியாவின் ஆயர் - Servandus, bishop of Buzea in Mauritania) மற்றும் இந்த புதிய துணை ஆயரும் சேர்ந்து, ஆப்ரிகக கத்தோலிக்கர்களுக்காக வேறு புதிய ஆயர்களை நியமிக்கமுடியும்[2].

கிரிகோரி VII, 1085இல் தம்முடைய மரணத்தருவாயில், இஸ்லாத்திற்கு எதிராக ஒரு கிறிஸ்தவ இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதைப் பற்றி, அவர் 'நான் இந்த உலகை ஆளுவதைவிட, முஸ்லிம்களிடமிருந்து கிறிஸ்தவ புனித இடங்களை  மீட்பதற்காக என் உயிரைப் பணயம் வைப்பேன்' என்று கூறினார். [3]

செல்ஜுக் துருக்கி(Seljuk Turkish) முஸ்லிம்கள்:

கி.பி. 1076இல் ஜெருசலேமை செல்ஜுக் துருக்கி முஸ்லிம்கள் கைப்பற்றினார்கள். அதுவரை பொறுமையை காத்துக்கொண்ட ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் பொறுமையை இழந்தார்கள்.  போப் கிரிகோரியின் விருப்பத்தை நிறைவேற்றவேண்டிய தேவையை அப்போது தான் ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் உணர்ந்தார்கள்.

செல்ஜுக் முஸ்லிம்கள் ஜெருசலேமை கைப்பற்றிய பிறகு, அங்கு புனித யாத்திரை செல்வது மிகவும் கடினமாகிவிட்டது. ஜெருசலெமுக்கு புனித யாத்திரையாக வருபவர்கள் மீது, அதிக வரிகளை விதித்தார்கள். இந்த தொல்லைகளின் மத்தியிலும் ஜெருசலேமுக்கு  பயணம் செய்யத் துணிந்தவர்கள் முஸ்லிம் ஆட்சியாளர்களால் துன்புறுத்தப்பட்டனர், கொள்ளையடிக்கப்பட்டனர், சிலர் அடிமைப்படுத்தப்பட்டனர்.

போப் அர்பன் II (Pope Urban II):

கி.பி. 1095ல், இரண்டாம் போப் அர்பன் "பியாசென்சா கவுன்சிலுக்கு -Council of Piacenza" அழைப்புவிடுத்தார். பைசாண்டன் நாட்டு கிறிஸ்தவ பிரதிநிதிகள் கலந்துக்கொண்டு, இஸ்லாமிய ஆக்கிரமிப்புக்களால் கிறிஸ்தவ உலகம் சந்தித்துக்கொண்டு இருக்கும் வேதனைகளையும், ஒடுக்கப்படுதலையும் வலியுறுத்தினார்க‌ள். முஸ்லிம்களின் ஆக்கிரமிப்புக்களுக்கு தடை போடவேண்டும் என்றும், மத்திய கிழக்கு கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் கஷ்டத்தையும் எடுத்துக்காட்டினார்கள். இதிலிருந்து தங்களை விடுவிக்கும் படி கேட்டுக்கொண்டார்கள் [4].

முஸ்லிம்களுடன் போராடுகின்ற பைசாண்டன் அரசுக்கு இராணுவ உதவி செய்யும் படி, அரசர் அலேக்ஸியஸ் (Emperor Alexius), ஃப்ளாண்டரின் அரசர் ராபர்ட்(Robert of Flanders) என்பவரை கேட்டுக்கொண்டார். அதே ஆண்டின் இறுதியில், பிரான்சில் கிளேர்மாண்டில்  (Council held at Claremont in France) நடைபெற்ற மற்றொரு கவுன்சிலில், போப்  அர்பன் II, இந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டார். மேலும்  'ஜெருசலேமில் உள்ள புனித ஸ்தலங்களை நோக்கி செல்லுங்கள் ... ஒவ்வொருவரும் தன்னை தான் வெறுத்து  தன் சிலுவையை எடுத்துக்கொண்டு புறப்படுவானாக' என்று ஐரோப்பிய கிறிஸ்தவர்களுக்கு பிரசங்கம் செய்தார். அதை கேட்டுக்கொண்டு இருந்த கிறிஸ்தவர்கள், 'இது கர்த்தருடைய சித்தமாகும், என்று ஆக்ரோஷமாக சத்தமிட்டனர்'.

இது தான் முதல் சிலுவைப்போர் தொடக்கத்தின் கடைசி நிமிடங்களில் நடந்த நிகழ்வுகள்.

முஹம்மது கி.பி 632 ஜூன் 8 அன்று இறந்தார். ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் தங்கள் படைகளை ஒன்றிணைத்து தங்களையும் தங்கள் விசுவாசத்தையும் பாதுகாக்கவேண்டும் என்று முடிவு செய்து,  எழுந்திருக்க‌  அவர்களுக்கு 463  ஆண்டுகள் பிடித்தது.

ஆங்கில மூலம்: https://www.answering-islam.org/Authors/Stenhouse/crusades.01.htm

அடிக்குறிப்புக்கள்:

[1] H. Daniel-Rops, The Church in the Dark Ages, ed. cit., pp. 340, 344.

[2] Register of Gregory VII, III, 19.

[3] H. Daniel-Rops, Cathedral and Crusade, J.M.Dent and Sons, London, 1957, p. 434.

[4] Steven Runciman, A History of the Crusades, ed. cit., vol. i, p. 105.

தேதி: ஜனவரி 6, 2020