ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

சனி, 31 ஆகஸ்ட், 2019

குர்‍ஆன் 24:61 - உன் வீட்டில் நீ சாப்பிடுவது பாவமில்லை! அல்லாஹ் அள்ளித்தந்த சலுகை

(இந்த கட்டளையை அல்லாஹ் இறக்கும்வரை முஸ்லிம்கள் தெருவில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்)

திடீரென்று ஒரு நாள் ஜிப்ரீல் தூதன் உங்கள் முன் தோன்றி, அல்லாஹ் உங்களுக்காக சில கட்டளைகளை கொடுத்துள்ளான். அதனை நீங்கள் நிச்சயம் கடைபிடிக்கவேண்டும் என்று சொன்னால் எப்படி இருக்கும்? உங்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது அல்லவா! 'சொல்லுங்கள் இறைவன் என்ன சொன்னான்'? என்று உடனே கேட்பீர்கள் அல்லவா!

அதற்கு ஜிப்ரீல் தூதன், இதோ இறைவன் உங்களுக்காக அனுப்பிய கட்டளைக‌ள்:
  • நீங்கள் குருடராக இருந்தால், உங்கள் வீட்டில் நீங்கள் சாப்பிடலாம் இது பாவமில்லை. 
  • நீங்கள் முடவராக இருந்தால், உங்கள் வீட்டில் நீங்கள் சாப்பிடலாம் இது பாவமில்லை. 
  • நீங்கள் சுகமில்லாதவராக இருந்தாலும், நீங்கள் உங்கள் வீட்டில் சாப்பிடலாம் இதில் குற்றமில்லை.
  • உங்கள் தகப்பன் வீட்டில் சாப்பிடலாம், உங்கள் தாய் வீட்டில் சாப்பிடலாம் இது குற்றமல்ல.  
  • உங்கள் தந்தையின் சகோதரர்கள் வீட்டில் சாப்பிடலாம், உங்கள் தாயின் சகோதரிகள் வீட்டில் சாப்பிடலாம், இது பாவமாகாது. 
  • அதே போல, உங்கள் நண்பர்கள் வீட்டிலும் சாப்பிடலாம், இது பாவமாகாது. 
  • கடைசியாக, நீங்கள் தனியாகவும் சாப்பிடலாம், சேர்ந்தும் சாப்பிடலாம் இது பாவமாகாது.  
இவைகள் தான் அல்லாஹ் உங்களுக்காக கொடுத்த கட்டளைகள் என்றுச் சொன்னால், உங்களுக்கு எப்படி இருக்கும்? இதனை கேட்டவுடன்,  'இவருக்கு என்ன பையித்தியமா பிடித்திருக்கிறது?' - என்று நீங்கள் நினைப்பீர்கள் அல்லவா?

ஒரு முட்டாள்தனமான அறிவுரையாக இது தெரிகின்றதல்லவா? என் வீட்டில் நான் சாப்பிடுவதற்கு அல்லாஹ் எனக்கு கட்டளை கொடுக்கவேண்டுமா? பிறந்ததிலிருந்து நான் என் வீட்டில் சாப்பிடாமல் மற்றவர்கள் வீட்டிலா சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன்!?  என்று சொல்வீர்கள் அல்லவா? இவர் உண்மை ஜிப்ரீல் தூதனில்லை, இவர் ஒரு வஞ்சகத்தூதன், இவர் பொய் சொல்கிறார் என்று மனதுக்குள் எண்ணுவீர்கள் தானே!

சரி வாருங்கள், குர்‍ஆனிலிருந்து ஒரு வசனத்தை வாசிப்போம்.  ஐந்து குர்‍ஆன் தமிழாக்கங்களிலும், மூன்று ஆங்கில மொழியாக்கங்களிலும் இந்த வசனத்தை வாசிப்போம். கடைசியாக, மூல மொழி அரபியிலும் இவ்வசனத்தின் முதல் வாக்கியத்தின் பொருளை பார்ப்போம்.

[நான் வசனத்தை மாற்றி பொருள் கூறுகிறேன் என்று யாரும் குற்றப்படுத்தக்கூடாது என்பதற்காகவே,  இத்தனை மொழியாக்கங்களில் நாம் இவ்வசனத்தை பார்க்கிறோம்]

குர்‍ஆன் 24:61:

பி.ஜே. தமிழாக்கம்:

24:61. உங்கள் வீடுகளிலோ, தந்தையர் வீடுகளிலோ, அன்னையர் வீடுகளிலோ, சகோதரர்கள் வீடுகளிலோ, சகோதரிகளின் வீடுகளிலோ, தந்தையின் சகோதரர்கள் வீடுகளிலோ, தந்தையின் சகோதரிகள் வீடுகளிலோ, தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ, தாயின் சகோதரிகளின் வீடுகளிலோ, அல்லது எதன் சாவிகளை நீங்கள் உடமையாக வைத்துள்ளீர்களோ அங்கேயோ, அல்லது உங்கள் நண்பரிடமோ நீங்கள் சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. நோயாளியின் மீதும் குற்றமில்லை. ஊனமுற்றவர் மீதும் குற்றமில்லை. குருடர் மீதும் குற்றமில்லை. நீங்கள் அனைவரும் சேர்ந்தோ, தனியாகவோ சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. வீடுகளில் நுழையும்போது அல்லாஹ்விடமிருந்து பாக்கியமிக்க தூய்மையான காணிக்கையாக உங்கள் மீதே ஸலாம்159 கூறிக் கொள்ளுங்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இவ்வாறே உங்களுக்கு வசனங்களை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.376

டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

24:61. (முஃமின்களே! உங்களுடன் சேர்ந்து உணவருந்துவதில்) குருடர் மீதும் குற்றமில்லை; முடவர் மீதும் குற்றமில்லை, நோயாளியின் மீதும் குற்றமில்லை; உங்கள் மீதும் குற்றமில்லை; நீங்கள் உங்கள் சொந்த வீடுகளிலோ அல்லது உங்கள் தந்தைமார் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாய்மார் வீடுகளிலோ, அல்லது உங்கள் சகோதரர் வீடுகளிலோ, அல்லது உங்கள் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையின் சகோதரர் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையின் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயாரின் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது எ(ந்த வீட்டுடைய)தின் சாவிகள் உங்கள் வசம் இருக்கின்றதோ (அதிலும்) அல்லது உங்கள் தோழரின் வீடுகளிலோ, நீங்கள் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ புசிப்பது உங்கள் மீது குற்றமாகாது; ஆனால் நீங்கள் எந்த வீட்டில் பிரவேசித்தாலும் அல்லாஹ்விடமிருந்து உங்களுக்குக் கிடைத்திருக்கும் முபாரக்கான - பாக்கியம் மிக்க - பரிசுத்தமான ("அஸ்ஸலாமு அலைக்கும்" என்னும்) நல்வாக்கியத்தை நீங்கள் உங்களுக்குள் கூறிக்கொள்ளுங்கள் - நீங்கள் அறிந்து கொள்வதற்காக, இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு(த் தன்) வசனங்களை விவரிக்கிறான்.

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:

24:61. (நம்பிக்கையாளர்களே! உங்களுடன் சேர்ந்து உணவு உண்பதில்) குருடன் மீதும் குற்றமாகாது; நொண்டி மீதும் குற்றமாகாது; நோயாளி மீதும் குற்றமாகாது; உங்கள் மீதும் குற்றமாகாது. நீங்கள் உங்கள் வீட்டிலோ அல்லது உங்கள் தந்தைகள் வீட்டிலோ அல்லது உங்கள் தாய்மார்கள் வீட்டிலோ அல்லது உங்கள் சகோதரர்கள் வீட்டிலோ அல்லது உங்கள் சகோதரிகள் வீட்டிலோ அல்லது உங்கள் தந்தையின் சகோதரர்கள் வீட்டிலோ அல்லது உங்கள் தந்தையின் சகோதரிகள் வீட்டிலோ அல்லது உங்கள் தாயினுடைய சகோதரர்கள் வீட்டிலோ அல்லது உங்கள் தாயுடைய சகோதரிகள் வீட்டிலோ அல்லது சாவி உங்கள் வசமிருக்கும் வீட்டிலோ அல்லது உங்கள் தோழர்கள் வீட்டிலோ நீங்கள் (உணவு) புசிப்பது உங்கள் மீது குற்றமாகாது. இதில் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து புசித்தாலும் சரி, தனித்தனியாகப் புசித்தாலும் சரியே (உங்கள் மீது குற்றமில்லை). ஆனால், நீங்கள் எந்த வீட்டில் நுழைந்தபோதிலும் அல்லாஹ்வினால் உங்களுக்குக் கற்பிக்கப்பட்ட மிக்க பாக்கியமுள்ள பரிசுத்தமான ("ஸலாமுன்" என்னும்) வாக்கியத்தை நீங்கள் உங்களுக்குள் (ஒருவருக்கு மற்றொருவர்) கூறிக்கொள்ளவும். இவ்வாறே இறைவன் உங்களுக்குத் தன்னுடைய வசனங்களை விவரித்துக் கூறுகிறான்! (என்பதை) நீங்கள் அறிந்து கொள்வீர்களாக!

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:

24:61. குருடர், நொண்டி, நோயாளி போன்றவர்கள் (யாருடைய வீட்டில் சாப்பிடுவதிலும் அவர்கள்) மீது எவ்விதக் குற்றமும் இல்லை. ஆனால், நீங்கள் உங்களின் வீடுகளிலோ அல்லது உங்கள் தந்தையரின் வீடுகளிலோ, உங்கள் அன்னையரின் வீடுகளிலோ அல்லது உங்கள் சகோதரர்களின் வீடுகளிலோ, உங்கள் சகோதரிகளின் வீடுகளிலோ அல்லது உங்கள் சிறிய தந்தை பெரிய தந்தையரின் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையின் சகோதரிகளின் வீடுகளிலோ, உங்கள் தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ அல்லது உங்கள் சிற்றன்னை, பெரியன்னையரின் வீடுகளிலோ அல்லது எந்த வீடுகளின் திறவுகோல்கள் உங்கள் பொறுப்பில் உள்ளனவோ அந்த வீடுகளிலோ அல்லது உங்கள் நண்பர்களின் வீடுகளிலோ சாப்பிடுவதில் உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. நீங்கள் அனைவரும் சேர்ந்தோ தனித்தனியாகவோ சாப்பிடுவதிலும் உங்கள் மீது குற்றமில்லை. எவ்வாறாயினும் வீடுகளில் நீங்கள் நுழையும்போது நீங்கள் உங்களைச் சார்ந்தவர்களுக்கு ஸலாம் கூறுங்கள். இது நல்லாசி எனும் முறையில் இறைவனிடமிருந்து நிர்ணயிக்கப்பட்டதும், பாக்கியங்கள் கொண்டதும், தூய்மையானதுமாகும். இவ்வாறு அல்லாஹ் அறிவுரைகளை உங்களுக்கு விவரிக்கின்றான்; இதனால் நீங்கள் சிந்தித்துணர்ந்து செயல்படக்கூடும்!

மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்:

24:61. (விசுவாசிகளே! உங்களுடன் சேர்ந்து உண்ணுவதில்) குருடர் மீதும் குற்றமில்லை, முடவர் மீதும் குற்றமில்லை, நோயாளியின் மீதும் குற்றமில்லை, நீங்கள் உங்கள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தைகள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாய்மார்கள் வீடுகளிலோ, அல்லது உங்கள் சகோதரர்களின் வீடுகளிலோ, அல்லது உங்கள் சகோதரிகளின் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையுடைய சகோதரர்களின் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையுடைய சகோதரிகளின் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயுடைய சகோதரர்களின் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயுடைய சகோதரிகளின் வீடுகளிலோ அல்லது எ(ந்)த (வீட்டி)ன் சாவிகளை நீங்கள் உடமையாக்கிக் கொண்டீர்களோ, அவற்றிலோ, அல்லது உங்கள் தோழர்களிடத்திலோ நீங்கள் உண்பது உங்கள் மீது குற்றமில்லை, நீங்கள் (பலர்) ஒன்று சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ உண்பது உங்கள் மீது குறறமில்லை, ஆகவே, நீங்கள் வீடுகளில் நுழைந்தால், அல்லாஹ்விடமிருந்துள்ள பரிசுத்தமான பாக்கியமுள்ள காணிக்கையாக உங்களின் மீது நீங்கள் ஸலாம் சொல்லிக் கொள்ளுங்கள், நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இவ்வாறு அல்லாஹ் (தன்) வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்.

ஆங்கில மொழியாக்கம்:  Quran 24:61

Yusuf Ali Translation:

24:61. It is no fault in the blind nor in one born lame, nor in one afflicted with illness, nor in yourselves, that ye should eat in your own houses, or those of your fathers, or your mothers, or your brothers, or your sisters, or your father's brothers or your father's sisters, or your mohter's brothers, or your mother's sisters, or in houses of which the keys are in your possession, or in the house of a sincere friend of yours: there is no blame on you, whether ye eat in company or separately. But if ye enter houses, salute each other - a greeting of blessing and purity as from Allah. Thus does Allah make clear the signs to you: that ye may understand.

Talal Itani Translation:

24: 61. There is no blame on the blind, nor any blame on the lame, nor any blame on the sick, nor on yourselves for eating at your homes, or your fathers' homes, or your mothers' homes, or your brothers' homes, or your sisters' homes, or the homes of your paternal uncles, or the homes of your paternal aunts, or the homes of your maternal uncles, or the homes of your maternal aunts, or those whose keys you own, or the homes of your friends. You commit no wrong by eating together or separately. But when you enter any home, greet one another with a greeting from God, blessed and good. God thus explains the revelations for you, so that you may understand.

SAHIH INTERNATIONAL

24:61 There is not upon the blind [any] constraint nor upon the lame constraint nor upon the ill constraint nor upon yourselves when you eat from your [own] houses or the houses of your fathers or the houses of your mothers or the houses of your brothers or the houses of your sisters or the houses of your father's brothers or the houses of your father's sisters or the houses of your mother's brothers or the houses of your mother's sisters or [from houses] whose keys you possess or [from the house] of your friend. There is no blame upon you whether you eat together or separately. But when you enter houses, give greetings of peace upon each other - a greeting from Allah, blessed and good. Thus does Allah make clear to you the verses [of ordinance] that you may understand.

தமிழாக்கம் செய்தவர்களின் வஞ்சனை:

குர்‍ஆனின் 24:61ம் வசனத்தில் அல்லாஹ்வின் மதியீனம் வெட்டவெளிச்சமாகத் தெரிகின்றது. இதனை கவனித்த குர்‍ஆன் தமிழாக்கம் செய்தவர்களாகிய‌:
  1. முஹம்மது ஜான், 
  2. அப்துல் ஹமீது பாகவி, 
  3. இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மற்றும் 
  4. மன்னர் ஃபஹத் வளாகம் அச்சிட்ட தமிழாக்கம்
போன்றவர்கள், ஒரு வஞ்சகமான அடைப்புக்குறிகள் இட்டு, அல்லாஹ்வை காப்பாற்ற முயன்றுள்ளனர். இவ்வசனத்தை பிஜே அவர்கள் அரபிக்கு மிகவும் நெருக்கமான மொழியாக்கம் செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அல்லாஹ்வின் அறிவீனமான கட்டளைகள்:

குர்‍ஆனில் அல்லாஹ்வின் ஞானம் இருக்கிறது, விஞ்ஞானம் இருக்கிறது, மெய்ஞானம் இருக்கிறது. அல்லாஹ்வைப்போல வசனங்களை செய்திகளை சொல்பவர் யாருமில்லை என்று முஸ்லிம்கள் குர்‍ஆனை மெச்சிக்கொள்வார்கள். ஆனால், இந்த ஒருவசனத்தை கவனிக்கும் போது நமக்கு சிரிப்பும், கோபமும் தான் வருகிறது.

மேற்கண்ட தமிழாக்கத்தைச் செய்தவர்கள், இந்த வசனத்தில் இருக்கின்ற பிரச்சனையையும், அல்லாஹ்வின் அறிவீனமான கட்டளைகளையும் கவனித்துள்ளார்கள். இதனை மறைப்பதற்காக, அடைப்பிற்குள் கீழ்கண்டவாறு எழுதி தங்களால் இயன்றவரை வாசகர்களுக்கு காதுகுத்த முயன்றுள்ளார்கள்:

டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்
24:61. (முஃமின்களே! உங்களுடன் சேர்ந்து உணவருந்துவதில்) குருடர் மீதும் குற்றமில்லை; முடவர் மீதும் குற்றமில்லை, நோயாளியின் மீதும் குற்றமில்லை; . . .

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:
24:61. (நம்பிக்கையாளர்களே! உங்களுடன் சேர்ந்து உணவு உண்பதில்) குருடன் மீதும் குற்றமாகாது; நொண்டி மீதும் குற்றமாகாது; நோயாளி மீதும் குற்றமாகாது; . . .

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:
24:61. குருடர், நொண்டி, நோயாளி போன்றவர்கள் (யாருடைய வீட்டில் சாப்பிடுவதிலும் அவர்கள்) மீது எவ்விதக் குற்றமும் இல்லை. . . .

மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்:
24:61. (விசுவாசிகளே! உங்களுடன் சேர்ந்து உண்ணுவதில்) குருடர் மீதும் குற்றமில்லை, முடவர் மீதும் குற்றமில்லை, நோயாளியின் மீதும் குற்றமில்லை, . . .

அரபி மூல மொழியில் இவ்வசனம் மேற்கண்ட தமிழாக்கங்கள் போல இல்லை. இவ்வ‌சனத்தின் பொருள் அறிவுடையோர்கள் ஏற்காதவண்ணமாக இருப்பதால், முதல் இரண்டு வரிகளில் சில விவரங்களை சொந்தமாக சேர்த்துவிடலாம் என்று எண்ணி, இப்படி தில்லுமுல்லு செய்துள்ளார்கள், இஸ்லாமிய அறிஞர்கள்.

இது ஒரு புறமிருக்கட்டும்,  குர்‍ஆன் தமிழாக்க அறிஞர்களின் வஞ்சக வாசகத்தை அப்படியே அங்கீகரித்தாலும், ஒரு குருடர், முடவர் முஸ்லிம்களோடு உண்பது பாவம் என்று யார் சொன்னார்கள்? திடீரென்று அல்லாஹ் வந்து இப்படி சாப்பிடுவது பாவமில்லை என்று சொல்வதற்கான காரணம் என்ன? குர்‍ஆன் தமிழாக்கம் செய்தவர்கள் பதில் சொல்வார்களா?

இவ்வளவு முயன்ற இவர்கள், இவ்வசனத்தின் மீதமுள்ள  எழுத்துக்களை மாற்றமுடியாமல் விட்டுவிட்டனர். ஒரு மனிதன் தன் வீட்டில் சாப்பிட அவனுக்கு அல்லாஹ் கட்டளை கொடுக்கவேண்டுமா?  இந்த வசனத்தை அல்லாஹ் இறக்குவதற்கு முன்பு வரை முஸ்லிம்கள் தங்கள் சொந்த வீடுகளில் சாப்பிட்டது பாவமாக கருதினார்களா? தங்கள் பெற்றோர்களின் வீட்டில் சாப்பிடுவதும், சகோதர சகோதரிகளின் வீடுகளில் சாப்பிடுவதும் பெரிய பாவமாக முஸ்லிம்கள் எண்ணினார்களா? இது எப்படிப்பட்ட ஞானம்!?

அல்லாஹ் சொன்னதைப்போல, யாராவது தங்கள் வேதங்களில் இப்படி இறைவன் சொன்னதை காட்டமுடியுமா?

பீஜே அவர்களின் விளக்கம் - பிறர் வீடுகளில் சாப்பிடுதல் (விளக்கம் 376):

வசனத்தை சரியாக மொழியாக்கம் செய்த  பீஜே அவர்கள், அதில் சொல்லப்பட்ட முக்கியமான அல்லாஹ்வின் ஞானம் பற்றி விளக்குவதை விட்டுவிட்டு, பிறரது வீடுகளில் சாப்பிடுவது பற்றி இவ்வசனம் சொல்கிறது என்றுச் சொல்லி, வேறு விளக்கத்தை கொடுத்துள்ளார். தலையை விட்டுவிட்டு, வாலை பிடித்து ஆட்டுகின்றார் பீஜே. அல்லாஹ்வின் ஞானப்பிழையை மறைக்க‌ வேறுவகையில் முயன்றுள்ளார் பீஜே.  எது எப்படியோ! எல்லா முஸ்லிம் அறிஞர்களும் குர்‍ஆனை காப்பாற்ற முயற்சி மேற்கொண்டுள்ளார்கள் என்பது மட்டும் புரிந்துக் கொள்ளமுடிகின்றது.

அரபி மூல மொழியில்: 

"வீடுகளில் சாப்பிடுவது" பற்றி வரும் வார்த்தைகள் அரபி மூல மொழியில் எங்கே வருகின்றது என்பதை கவனிக்கவும்.


டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

24:61. (முஃமின்களே! உங்களுடன் சேர்ந்து உணவருந்துவதில்) குருடர் மீதும் குற்றமில்லை; முடவர் மீதும் குற்றமில்லை, நோயாளியின் மீதும் குற்றமில்லை; . . .

நம் தமிழ் மொழியாக்கங்கள் செய்த பிழை என்னவென்று மூல மொழியில் பார்த்து புரிந்துக் கொள்ளுங்கள்.

முடிவுரை:

இதுவரை குர்‍ஆனில் அல்லாஹ் சொன்ன தேவையில்லாத, அறிவீனமான கட்டளைப் பற்றிப் பார்த்தோம். தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள் குர்‍ஆன் தமிழாக்கத்தில் செய்த தில்லுமுல்லு என்னவென்றும் பார்த்தோம்.

குர்‍ஆன் என்பது ஞான ஊற்று என்று பெருமையாகப் பேசும் முஸ்லிம்களிடம் சுருக்கமாக கேட்க விரும்பும் கேள்விகள்: 
  • உங்கள் வீட்டில் நீங்கள் சாப்பிட உங்களுக்கு அல்லாஹ் கட்டளை தரவேண்டுமா? 
  • உங்கள் வீட்டில் நீங்கள் சாப்பிடுவது குற்றமாகுமா? பாவமாகுமா?
  • ஒருவர் தன் பெற்றோர்கள், சகோதர சகோதரிகள் வீட்டில் சாப்பிட அல்லாஹ் அனுமதி தரவேண்டுமா?
இப்படிப்பட்ட ஞானம் உலகத்தில் வேறு யாரிடமாவது பார்க்கமுடியுமா? முஸ்லிம்களே, சிந்தியுங்கள். உங்களுக்கு கேள்விகள் இருந்தால் எனக்கு அனுப்புங்கள்.


இஸ்மாயீலை காட்டுக்கழுதை என அழைத்து பைபிள் அவமானப்படுத்தியதா?

ஒரு முஸ்லிம் நண்பர் என்னிடம், 'பைபிள் இஸ்மவேலுக்கு துரோகம் புரிந்துள்ளது, அதாவது ஈசாக்கை முன் நிறுத்தும்படி இஸ்மவேலின் பெயர் வெளியே தெரியாமல் பைபிள் மறைத்துவிட்டது' என்று தான் எண்ணுவதாக கூறினார்.

முஸ்லிம் நண்பரே, உங்களின் கருத்து தவறானதாகும். ஆபிரகாமுக்கு (இப்ராஹீமுக்கு) இஸ்மவேல் மற்றும் ஈசாக்கு மட்டுமல்லாமல், வேறு மகன்களும் இருந்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர்களின் பெயர்களையும் பைபிள் பதிவு செய்யதவறியதில்லை என்ற உண்மையை தாழ்மையுடன் உங்களிடம் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.  ஈசாக்கை உயர்த்தும் படி பைபிள் நினைத்து இருந்திருந்தால், ஆபிரகாமுக்கு பிறந்த மற்ற மகன்களின் பெயர்களை ஏன் குறிப்பிடுகின்றது? ஆரம்பத்திலிருந்து அந்த மகன்கள் பற்றிய பெயர்களையே சொல்லாமல் இருந்திருந்தால், பிரச்சனை தீர்ந்தது அல்லவா? உண்மை என்னவென்றால், பைபிள் உள்ளதை உள்ளது போலவே சொல்கிறது, அது நமக்கு சரியாக தெரிந்தாலும் சரி தவறாக தெரிந்தாலும் சரி, வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்றுச் சொல்கிறோமே, அது போல ஒளிவு மறைவு இன்றி பைபிள் பேசுகின்றது.

மேசியாவின் (மஸீஹாவின்) வம்சாவழி:

இதை கவனியுங்கள். ஈசாக்கிற்கு இரண்டு  மகன்கள் இருந்தார்கள், ஒருவரின் பெயர் ஏசா, இன்னொருவரின் பெயர் யாக்கோபு. யாக்கோபு பற்றிய  விவரங்கள் தொடர்ச்சியாக பைபிள் சொல்லிக்கொண்டு வருகிறது, ஆனால் ஏசாவின் விவரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டுவிட்டது. இப்போது ஏசாவின் பெயரைக்கூட  பைபிள் வேண்டுமென்றே மறைத்துவிட்டது என்று முஸ்லிம்கள் சொல்வார்களா? 

இஸ்மவேலை ஆபிரகாம் நேசித்தார் என்று பைபிள் சொல்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? ஆனால், முக்கியமாக  கவனிக்கவேண்டிய விவரம் என்னவென்றால்,  'இஸ்மவேல்' கர்த்தரால் தெரிந்துக் கொள்ளப்பட்டவர் அல்ல என்பதாகும்.

இது தான் திருப்புமுனை, அதாவது பைபிளின் விவரங்களை கவனித்தால், அது மேசியாவை (Messiah - மஸீஹா) நோக்கியே நகர்வதைக் காணமுடியும். அதாவது மேசியாவின் வருகைப் பற்றிய  விவரங்களுக்கு ஆதிக முக்கியத்துவம் கொடுத்து, பைபிள் தொடர்கிறது.

பைபிளின் மொத்த சாராம்சத்தை கவனித்தால், மேசியாவின் விவரங்களில் 'இஸ்மவேல் மற்றும் ஏசாவின்' விவரங்களை தேவையான அளவிற்கு மட்டுமே அது சொல்கிறது, தேவையில்லாதவைகளை சொல்வதில்லை.

இஸ்மவேலும் ஏசாவும் ஈசாக்கோடும், யாக்கோபோடும், அடுத்தடுத்த பகுதிகளில் வாழ்ந்தார்கள் என்று பைபிள் சொல்கிறது. ஆனால், அவர்கள் மேசியா வரப்போகும் வம்சமாக இல்லாததால், அவர்கள் பற்றிய  விவரங்களை குறைத்துக் கொண்டது பைபிள், அவ்வளவு தான், இதில் எந்த ஒரு இரகசிய துரோகமோ, வஞ்சனையோ இல்லை.

ஈசாக்கோ அல்லது இஸ்மவேலோ, யாராவது ஒருவரின் குடும்ப பரம்பரையில் எதிர்காலத்தில் மேசியா வரவேண்டும். அந்த‌ நபர் ஈசாக்கு என்று தேவன் முடிவு செய்தார், அவ்வளவு தான். யாக்கோபா அல்லது ஏசாவா? யாருடைய பரம்பரையில் மேசியா வரவேண்டும்? யாராவது ஒருவரின் பரம்பரையில் தான் மேசியா வரமுடியும். யாக்கோபை தேவன் தெரிவு செய்தார், அவ்வளவு தான். இந்த முடிவை தேவன் தான் செய்தார், மனிதன் அல்ல. 

முஸ்லிம் நண்பர்களே, உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? ஈசாக்கு தனக்கு பிற்பாடு தன் சொத்துக்கள் அனைத்தும் அல்லது ஆசீர்வாதங்கள் அனைத்தும் தன் மூத்த மகன் ஏசாவிற்கு  வரவேண்டும் என்று தான் விரும்பினார், யாக்கோபுக்கு அல்ல‌. இதையும் பைபிளே சொல்கிறது என்பதை மறக்கவேண்டாம். ஆனால், தேவனுடைய திட்டம் வேறுவிதமாக இருந்தது. தேவனுடைய திட்டம் மற்றும் ஞானத்திற்கு முன்பு மனிதனின் (ஈசாக்கின் விருப்பம்) ஒரு பொருட்டல்ல. தேவன் யாக்கோபை தெரிவு செய்தார்.

பைபிளில் தேவன் தன்னைப் பற்றி பேசும் போது, தான் ஆபிரகாமின் தேவன், லோத்துவின் தேவன், இஸ்மவேலின் தேவன், ஈசாக்கின் தேவன், ஏசாவின் தேவன் மற்றும் யாக்கோபின் தேவன் என்று சொல்லவில்லை. அதற்கு பதிலாக, தாம் ஆபிராமின், ஈசாக்கின் யாக்கோபின் தேவன் என்று சொன்னார், காரணம் இந்த வம்சா வழியில் தான் மேசியா வரவேண்டும் என்பதற்காக அவர் அப்படிச் சொன்னார். இப்படி அவர் சொன்னதால் அவர் மற்றவர்களின் தேவனாக  இல்லாமல் போய்விட்டாரா என்று கேட்டால் இல்லை, அவர் சர்வ உலக மக்களின் தேவன் தான், ஆனால், மேசியாவின் நேரடி வம்சா வழியில் வருபவர்களின் பெயர்களை அவர் குறிப்பிடுகின்றார் அவ்வளவு தான்.

யாக்கோபும், அவரின் 12 மகன்களும் மேசியாவின் வம்சமும்:

தேவன் முதலாவது ஆபிரகாமை தெரிவு செய்தார், பிறகு ஈசாக்கு, அதன் பிறகு யாக்கோபு. இப்போது யாக்கோபுக்கு 12 மகன்கள் பிறந்தார்கள். ஆனால், இந்த 12 பேர்களில் ஒருவரின் வம்சத்தில் தான் மேசியா வரவேண்டும். மீதி 11 பேர்களின் வசமத்தில் மேசியா பிறக்கமுடியாது, இதில் எந்த ஒரு வஞ்சகமோ, துரோகமோ கிடையாது. யாக்கோபின் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் ஒரு  வேலை இருந்தது, ஆனால் ஒருவரின் குடும்ப வழியில் தான் மேசியா வரவேண்டும் அல்லது  வரமுடியும்! அதற்காக யூதா என்ற மகனின் குடும்பத்தை தேவன் தெரிவு செய்தார், இவருடைய வம்சத்தில் தாவீது இராஜா வந்தார், இவரது வம்சத்தில் மேசியா  வந்தார். இதன் அடிப்படையில் தான் மேசியாவின் பட்டப்பெயர்களில் 'யூதாவின் சிங்கம் (Lion of Judah)' என்றும் மற்றும் 'மேசியா  தாவீதின் குமாரன்(Son of David)' என்றும் அழைக்கப்பட்டார்.

பைபிளின் பழைய ஏற்பாடு, இஸ்ரேலின் சரித்திரத்தை மட்டும் சொல்லவில்லை, முக்கியமாக ஆதியாகமம் முதல் மல்கியா புத்தகம் வரை, அது மேசியாவின் வருகையை ஆங்காங்கே தீர்க்கதரிசனமாக சொல்லிக்கொண்டே வந்துள்ளது. மேசியா தான் பைபிளின் முக்கிய நடுப்புள்ளி என்பதால், வம்சா வழி பெயர்கள் பைபிளில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. பழைய ஏற்பாட்டின் சரித்திரம் மற்றும் தீர்க்கதரிசனங்கள் அனைத்தும், மேசியாவை நோக்கியே நகர்ந்துக்கொண்டு வந்துள்ளது என்பதை கவனிக்கவேண்ன்டும்.

இதனையே இயேசு புதிய ஏற்பாட்டில் சுருக்கமாக, லூக்கா 24ம் அத்தியாயத்தில் கூறியுள்ளார்:

அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக் குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார். ( லூக்கா 24:43)

மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார். ( லூக்கா 24:27)

பழைய ஏற்பாட்டில் நூற்றுக்கணக்கான தீர்க்கதரிசனங்கள் மேசியாவைப் பற்றி கூறப்பட்டுள்ளது.

1) மேசியா பிறப்பதற்கு 700 ஆண்டுகளுக்கு முன்பு, ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக தேவன் 'மேசியா ஒரு கன்னியின் வயிற்றில் பிறப்பார்' என்றுச் சொன்னார் (ஏசாயா 7:14)

2) மேசியா பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு, மீகா தீர்க்கதரிசி மூலமாக தேவன் 'மேசியா பெத்லகேமில் பிறப்பார்' என்று சொல்லியுள்ளார் (மீகா 5:2)

3) மேசியா பிறப்பதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பாக, தாவீது ராஜாவின் மூலமாக, மேசியா எப்படிப்பட்ட ஒரு மரணத்தை சந்திப்பார் என்று தேவன் சொல்லியுள்ளார் (சங்கீதம் 22)

மேற்கண்ட மூன்று மட்டுமல்லாமல், மீதமுள்ள அனைத்து தீர்க்கதரிசங்கள் அனைத்தும் இயேசு மீது நிறைவேறியது.

1500 ஆண்டுகளுக்கும் மேலாக‌ பழைய ஏற்பாடு மேசியாவின் வருகைக்காக காத்திருந்தது. ஆகையால் தான் பழைய ஏற்பாட்டின் கடைசி புத்தகமாகிய "மல்கியா புத்தகத்தில் தேவன்" கீழ்கண்டவாறு சொல்கிறார்:

கர்த்தர் உரைக்கிறார்: நான் உன்னை சந்திக்க வருவேன்.

400 ஆண்டுகள் கழித்து, புதிய ஏற்பாடு, மத்தேயு நற்செய்தி நூலில், ஒரு பரம்பரை பட்டியலோடு தொடங்குகிறது, இந்த பட்டியலைப் படித்து சிலருக்கு சலிப்பு (Boring) உண்டாகிவிடும்...

ஆனால், ஒரு நிமிடம் கவனியுங்கள். மத்தேயு ஏன் இப்படி தொடங்குகிறார் என்று சிந்தித்து பார்த்து இருக்கிறீர்களா?

அவர் என்ன சொல்கிறார்: "நில்லுங்கள் . . . கவனியுங்கள் . . . இதோ, பல நூற்றாண்டுகளாக காத்திருந்த மேசியா  இதோ இங்கே இருக்கிறார்" என்றுச் சொல்கிறார். 

இப்போது உங்களுக்கு புரிந்ததா? ஏன் புதிய ஏற்பாடு ஒரு பரம்பரை பட்டியலோடு தொடங்குகிறது என்று?

மேலும் ஏன் கிறிஸ்தவர்கள் பைபிள் சொல்லாத இன்னொரு நற்செய்தியை நம்புவதில்லை என்று இப்போது புரிகின்றதா?  மேலும், மேசியாவின் சந்ததியில் அல்லாமல் ஆயிர மைல்களுக்கு அப்பால் ஒரு நபி (முஹம்மது) தோன்றி நான் தான் யெகோவா தேவன் அனுப்பிய நபி என்று சொன்னாலும் ஏன் கிறிஸ்தவர்கள் நம்புவதில்லை என்று புரிகின்றதா?  பைபிளின் படி மேசியா தான் கடைசி தீர்க்கதரிசி மற்றும் அவருக்குப்  பிறகு இன்னொரு தீர்க்கதரிசி (இஸ்லாமிய நபி முஹம்மது) தேவையே இல்லை. பைபிளின் இறையியலின் படி, இயேசுவிற்கு பிறகு இன்னொரு நபி தேவையில்லை, அப்படி  வந்தால் அவர்கள் கள்ளத்தீர்க்கதரிசி ஆவார்கள்.

பைபிளின் மொத்த சுருக்கத்தைப் இப்போது அறிந்துக்கொண்டீர்களா? இந்த பின்னணியில் பார்த்தால், இஸ்மவேல் என்பவர் ஒரு சாதாரண நபர் தான்.

கடைசியாக, பழைய ஏற்பாடு எப்படி முடிவடைகின்றதோ, அதே போல  புதிய ஏற்பாடும் முடிவு பெறுவதைக் காணமுடியும்.

அதாவது, பழைய ஏற்பாடு மேசியாவின் முதல் வருகைக்காக காத்திருப்பதோடு முடிவடைகிறது. புதிய ஏற்பாடு அதே மேசியாவின் இரண்டாம் வருகைக்காக காத்திருப்பதோடு முடிந்திருக்கிறது.

மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும். (வெளி 22:20)

காட்டுக்கழுதை என்பது அவமானப்படுத்துவதா?

அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார். (ஆதியாகமம் 16:12)

இஸ்மவேலை "காட்டு கழுதை" என்று அழைப்பதன் மூலம் பைபிள் அவரை அவமதிக்கிறது என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள். அது தவறானது.

21 ஆம் நூற்றாண்டை மனதில் வைத்து படிக்கும் போது, இது ஒரு அவமானம் போல் தோன்றலாம். இருப்பினும்,  4000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சூழலை நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டால், "காட்டுக்கழுதை" என்றுச் சொல்லப்பட்ட வார்த்தையில் அத்தகைய நோக்கம் இங்கே இல்லை என்பதை புரிந்துக்கொள்ளலாம். ஒரு மிருகத்தின் குணத்தை ஒரு உதாரணத்திற்காக அவருக்கு ஒப்பிட்டு இங்கு பேசுகின்றது. இதில் நல்ல குணங்களும் அடங்கும், கெட்ட குணங்களும் அடங்கும். பொதுவாக பைபிள் அனேக முறை அனேகருக்கு ஒப்பிட்டு இப்படி பேசியுள்ளது, வெறும் இஸ்மவேலுக்கு மட்டும் பைபிள் சொல்வதில்லை.

தன் கடைசி காலத்தில் யாக்கோபு தன் மகன்களை ஆசீர்வதிக்கும் போது, இசக்கார் என்ற மகனைப் பார்த்து, "பலத்த கழுதை" என்று ஒப்பிட்டுச் சொல்கிறார். 

ஆதியாகமம் 49:14

இசக்கார் இரண்டு பொதியின் நடுவே படுத்துக்கொண்டிருக்கிற பலத்த கழுதை.

இப்படி சொல்வதினால் யாக்கோபு தன் மகனை அவமதித்தார் என்று எடுத்துக்கொள்ளலாமா? இல்லை. இசக்காரின் சந்ததிகள்  அனைவரும் எழுந்து, என் மூதாதையரை பைபிள் அவமதித்தது என்றுச் சொன்னார்களா? இல்லை.

இந்த இடத்தில், "பலத்த கழுதை" என்றச் சொல் எதனை தெரிவிக்கிறது? அவருடைய சந்ததிகள் பலமுள்ளவர்களாக இருப்பார்கள் என்பதையும், அதே நேரத்தில் ஒரு கழுதையைப் போல மற்றவர்கள் இவர்களிடம் அதிகமாக வேலை வாங்குவார்கள் என்பதையும் தெரிவிக்கிறது. இதில் கூட நேர்மறை எதிர்மறை பண்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதே அத்தியாயத்தில், இசக்காரின் சகோதரர் பென்யமீன் "ஒரு கொடூரமான ஓநாய்" என்று அழைக்கப்படுகிறார். இது ஒரு அவமதிப்பா? "ஓநாய் உருவம்" பெஞ்சமின் சந்ததியினர் ஆக்ரோஷமான போர்வீரர்களாக இருப்பார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த தீர்க்கதரிசனமும் 1 நாளாகமம் 8:40ல் நிறைவேறியது என்றுச் சொல்லலாம்.

ஊலாமின் குமாரர் பராக்கிரமசாலிகளான வில்வீரராய் இருந்தார்கள்; அவர்களுக்கு அநேகம் புத்திரர் பௌத்திரர் இருந்தார்கள்; அவர்கள் தொகை நூற்றைம்பதுபேர்; இவர்கள் எல்லாரும் பென்யமீன் புத்திரர். (1 நாளாகமம் 8:40)

நப்தலி ஒரு புறாவிற்கு ஒப்பிடப்பட்டார். தான் (Dan) என்பவர் ஒரு பாம்பிற்கு ஒப்பிடப்பட்டார். யோசேப்பு ஒரு சிங்கக்குட்டிக்கு ஒப்பிடப்பட்டார். இவர்கள் அனைவரும் யாக்கோபின் மகன்களே! இவர்களை இப்படி மிருகங்களோடு ஒப்பிட்டதும் அவர்களின் தகப்பனே! 

பைபிள் அவர்களை மிருகங்களின் பெயர்களைக் கொண்டு அழைக்கவில்லை அல்லது அவர்கள் மிருகங்கள் போல காணப்பட்டார்கள் என்றும் பைபிள் சொல்லவில்லை. ஆனால், எதிர்காலத்தில் அவர்களின் நேர்மறை எதிர்மறை பண்புகளை மிருகங்களோடு ஒப்பிட்டு பேசியுள்ளது அவ்வளவு தான்.

ஆகையால், ஆதியாகமம் 16:12ல் இஸ்மவேல் ஒரு காட்டுக்கழுதையைப் போல பண்புகளைக் கொண்டு வாழப்போகிறான் என்று சொல்லப்பட்டது. இதன் அர்த்தம் என்ன?  இஸ்மவேலின் சந்ததிகள் சுதந்திரமானவர்களாக, கட்டுப்படுத்தமுடியாதவர்களாக, பலமுள்ளவர்களாக இருப்பார்கள் என்று சொல்லப்பட்டது அவ்வளவு தான்.  இது அவர்கள் பற்றிச் சொல்லப்பட்ட நல்ல நேர்மறை பண்பாகும். 

இதே போல, ஒரு எதிர்மறை பண்பும் சொல்லப்பட்டது. அது என்னவென்றால் அவர்களின் இந்த பலமுள்ள குணம், மற்றவர்களுக்கு எதிராக செயல்படுபவர்களாக காட்டப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

உங்களுடைய தண்டனையை மற்றவர்கள் மீது சுமத்தி, அல்லாஹ் அவர்களை தண்டிப்பானா?

(CAN SOMEONE ELSE TAKE YOUR PUNISHMENT?)

ஒருவரின் பாவங்களுக்காக மற்றொருவர் தண்டிக்கப்படமாட்டார்கள் என்று முஸ்லிம்கள் கூறுவார்கள். ஆனால், இஸ்லாம் இப்படி போதிப்பதில்லை, அது வேறு விதமாக போதிக்கிறது.

அல்லாஹ் முஸ்லிம்களின் பாவங்களை கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் மீது சுமத்தி முஸ்லிம்களுக்கு பதிலாக யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் நரகத்தில் தள்ளுவான் என்று இஸ்லாம் சொல்கிறது.

நூல்: சஹீ முஸ்லிம் ஹதீஸ், எண் 5342, 5343, 5344

5342. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் ஒவ்வொரு முஸ்லிமிடமும் ஒரு யூதரையோ அல்லது கிறித்தவரையோ ஒப்படைத்து, "இவன்தான் உன்னை நரகத்திலிருந்து விடுவித்தான்" என்று சொல்வான். இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

5343. அவ்ன் பின் அப்தில்லாஹ் (ரஹ்), சயீத் பின் அபீபுர்தா (ரஹ்) ஆகியோர் கூறியதாவது: 

"ஒரு முஸ்லிமான மனிதர் இறக்கும்போது நரகத்தில் அவரது இடத்திற்கு யூதர் ஒருவரையோ கிறித்தவர் ஒருவரையோ அல்லாஹ் அனுப்பாமல் இருப்பதில்லை" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக (தம் தந்தை) அபூமூசா (ரலி) அவர்கள் கூறினார்கள் என அபூபுர்தா (ரஹ்) அவர்கள் (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தார்கள்.. . . .

5344. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் முஸ்லிம்களில் சிலர் மலைகளைப் போன்ற பாவங்களுடன் வருவார்கள். ஆனால், அவற்றை அவர்களுக்கு அல்லாஹ் மன்னித்துவிட்டு, யூதர்கள்மீதும் கிறித்தவர்கள் மீதும் அவற்றை வைத்துவிடுவான். . . .

குர்‍ஆன் 2:62ல், யூதர்களும் கிறிஸ்தவர்களுக்கும் நற்கூலி அல்லாஹ்விடம் உள்ளது என்று சொல்கிறது. ஆனால், மேலே கண்ட ஹதிஸ் குர்‍ஆனுக்கு மாற்றமாகச் சொல்கிறது.

குர்‍ஆன்  2:62. ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது; மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

இஸ்லாமின் படி, தாம் விரும்புபவர்களை அல்லாஹ் வழிதவறச் செய்கின்றான், தான் விரும்புபவர்களை நேர்வழியில் நடத்துகிறான். ஆகையால், இஸ்லாமில் அழைப்புப்பணி (தாவா பணி) செய்யவேண்டிய அவசியமில்லை, ஏனென்றால், யார் இஸ்லாமை ஏற்கவேண்டும் என்று அவன் ஏற்கனவே முடிவு செய்துவிட்டானே! 

முஸ்லிம்கள் தாவா பணி செய்து அல்லாஹ்வின் முடிவை மாற்ற முயலுவது சாத்தியமான காரியமா? இதுமட்டுமல்ல, குர்‍ஆனில் எங்கும் முஸ்லிம்கள் தாவா பணி செய்யும்படி சொல்லப்படவில்லை. இது மட்டுமல்ல, வேதம் கொடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களிடம் சென்று, உங்களுக்கு எவைகள் இறக்கப்பட்டுள்ளதோ அதனை பின்பற்றுங்கள் என்று சொல்லுவது முஸ்லிம்கள் செய்யவேண்டியது. ஏனென்றால், இதைத் தான் குர்‍ஆன் சொல்கிறது.

முஸ்லிம்களுக்கு குர்‍ஆன் 'வேதங்கள் மீதும், மலக்குகள் (தேவ தூதர்கள்) மீதும், நபிகள் மற்றும் கடைசி நியாயத்தீர்ப்பு நாள் மீதும் நம்பிக்கைக் கொள்ளுங்கள்' என்று அடிக்கடி சொல்கிறது. ஆனால், இந்த குர்‍ஆனின் கட்டளையை பின்பற்றக்கூடிய ஒரு முஸ்லிமையும் நான் இதுவரை காணவில்லை. அதற்கு பதிலாக முந்தைய வேதங்கள் தொலைந்துவிட்டன அல்லது மாற்றப்பட்டுவிட்டன என்று சொல்லும் முஸ்லிம்கள் தான் உள்ளனர். குர்‍ஆனின் மேலே கண்ட கட்டளை நியாயத்தீர்ப்பு நாள்வரையுள்ள  கட்டளையென்று முஸ்லிம்களுக்குத் தெரியுமா?

இவர்களில் யார் உண்மையான இயேசு? (WHO IS THE REAL JESUS?)

உலகில் இயேசு பற்றி பல கதைகள் உலா வந்துக்கொண்டு இருக்கின்றன.

அவைகளில் சிலவற்றை இங்கு சுருக்கமாக தருகிறேன். கடைசியாக, இயேசுவின் உண்மையான சரித்திரம் எங்கு கிடைக்கும் என்ற விவரத்தையும் தருகிறேன்.

1. ஜப்பானில் இயேசு:

இயேசு ஜப்பான் தேசத்திற்கு தப்பித்துச் சென்றுவிட்டாராம். அங்கு ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் வெள்ளைப்பூண்டுகளை பயிரிட்டு வாழ்ந்தாராம். அங்கு மியுகோ (Miyuko) என்ற பெண்ணை திருமணம் செய்து, மூன்று பிள்ளைகளைப் பெற்று தம்முடைய 106வது வயதில் மரணமடைந்தாராம். எருசலேமில் சிலுவையில் மரித்தவர் இயேசுவின் சகோதரர் இசுகிரி (Isukiri) என்பவராம். இன்றும், ஜப்பான் வடக்கு பகுதியில் ஷிங்கோ (Shingo) என்ற இடத்தில் இயேசுவின் கல்லறையைக் காணலாம் என்று ஜப்பானில் இயேசு பற்றிய கதைகள் உலா வருகின்றன.

2. இந்தியாவில் இயேசு:

இந்தியாவிலும், இமயமலையிலும் நேபாளத்திலும் இயேசு பல ரிஷிகளிடம் பலவற்றைக் கற்றார் என்ற இன்னொரு கதை இந்தியாவில் உண்டு.

3. எகிப்தில் இயேசு:

இயேசு எகிப்திற்கு சென்றுவிட்டார் என்றும், அங்கு தம்முடைய முதிர் வயதுவரை வாழ்ந்து கடைசியாக மரித்தார் என்றும் ஒரு கதை உண்டு.

4. காஷ்மீரில் (இந்தியா) இயேசு:

இயேசு காஷ்மீர் பகுதிக்குச் சென்றார். அந்த காலத்தில் ஷாலிவாஹன்(Shalivahan) அரசன் காஷ்மீரை ஆட்சி செய்துக்கொண்டு இருந்தார். அவரை இயேசு சிரிநகரில் சந்தித்தார். அந்த அரசன் இயேசுவிடம் நீர் யார்? உம் பெயர் என்ன? என்று கேட்டபோது, என் பெயர் "யுசாஸபத் (Yusashaphat)" என்று இயேசு பதில் அளித்தாராம்.

5. திபேத்தில் இயேசு:

மஹாயான புத்தமதத்திலும் இயேசு வருகிறார். இயேசு திபேத்தில் 'போதிசத்வா அவலோகிதேஸ்வராவாக இருந்தராம். அவரது கைகள் மற்றும் கால்களில் ஒரு சிறிய துவாரம் போன்ற காயம் இருந்ததாம். இந்த காயங்கள் அவரை சிலுவையில் அறையப்பட்டபோது உண்டானவைகள். இந்த காயங்களை புத்த பிட்சுக்கள், 'புத்தரின் வாழ்க்கை சக்கரங்கள்' இவைகள் என்று சொல்கிறார்கள்.

6. ரோம கட்டுக்கதையில் இயேசு:

ரோமர்களின் கதைகளிலும் இயேசு வருகின்றார். இயேசு சிலுவையிலிருந்து தப்பித்துவிட்டாராம், அதன் பிறகு அவர் "அப்பொல்லோனியஸ் (டைனா ஊரிலிருந்து வந்தவர்)" என்ற பெயரில் தலைமறைவாக வாழ்ந்தாராம்.

7. செவ்விந்தியர்களின் இயேசு:

அமெரிக்க இந்தியர்களிடம் (செவ்விந்தியர்கள்) கூட ஒரு கதை உள்ளது. அதாவது இந்த செவ்விந்தியர்களின் இனக்குழுவில் 'மிகப்பெரிய சுகமளிப்பவர் (Pale Great Healer)' என்ற பட்டப்பெயரோடு ஒருவர் அவர்கள் மத்தியில் வாழ்ந்தாராம்.

8. இஸ்லாமில் இயேசு:

இயேசுவின் சிலுவைக்கு 600 ஆண்டுகள் கழித்து, பல ஆயிர மைல்களுக்கு அப்பால் உள்ள அரேபியா தீபகர்ப்பத்தில் 7ம் நூற்றாண்டில், ஒரு கதை உலா வந்தது. அந்த கதையின் படி, இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது (அ) சிலுவைக்கு முன்பு,  யாரோ ஒரு நபர் இயேசுவைப்போல முகம் மாற்றப்பட்டு, இயேசுவின் இடத்தில் அமர்த்திவிட்டார்களாம். ஆகையால், இயேசுவிற்கு பதிலாக, அந்த முகவரி இல்லாத நபர் சிலுவையில் மரித்தானாம். இந்த கதை 7ம் நூற்றாண்டில் தோன்றிய மதத்தின் வேதமாகிய குர்‍ஆனில் காணப்படுகின்றது.

இயேசுவைப் பற்றி இன்னும் அனேக கதைகள் உலகில் உலாவுகின்றன. ஆனால், அவைகள் எல்லாம் பொய்யான கட்டுக்கதைகளாகும்.

இயேசுவின் உண்மையான வாழ்க்கை வரலாறை தெரிந்துக்கொள்ள, அவரோடு வாழ்ந்த அவரது உள்வட்ட சீடர்கள் எழுதிய சரித்திரங்களை படிக்கவேண்டும். இவர்கள் தான் இயேசுவோடு வாழ்ந்தவர்கள்: மத்தேயு, யோவான், பேதுரு மற்றும் இதர சீடர்கள்.

உண்மையான இயேசுவை நீங்கள் அறிய விரும்பினால், அவரது வாழ்க்கை வரலாறை பைபிளில் படிக்கலாம்.

இயேசுவின் சீடர் பேதுருவின், எழுத்தாளராகிய மாற்கு கீழ்கண்ட விதமாக இயேசுவின் வாழ்க்கை வரலாறை தொடங்குகிறார்.

தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம். (மாற்கு 1:1)

அல்லாஹ் மூன்று நபர்களா? (ARE THERE THREE ALLAHS?)

அல்லாஹ், கலிமதுல்லாஹ் (அல்லாஹ்வின் வார்த்தை) மற்றும் ரூஹுல்லாஹ் (அல்லாஹ்வின் ஆவி).

இதன் அர்த்தம் 'மூன்று அல்லாஹ்க்கள்' என்றா? 

இப்போது கிறிஸ்தவத்திற்கு வருவோம்.

தேவன், தேவனின் வார்த்தை, தேவனின் ஆவி.

அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் வார்த்தையையும், அல்லாஹ்வின் ஆவியையும் சேர்த்துச் சொல்லும் போது "ஒன்று" என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள். ஆனால், தேவனையும், தேவனுடைய வார்த்தையையும், தேவனுடைய ஆவியையும் சேர்த்துச் சொல்லும் போது மட்டும் "மூன்று" என்று ஏன் முஸ்லிம்கள் சொல்கிறார்கள்? 

கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது (சங்கீதம் 33:6)

தேவன் தம்முடைய வார்த்தை மற்றும ஆவியின் வல்லமையினால் உலகமனைத்தையும் படைத்தார்.

அடுத்தபடியாக,

அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; . . .  (யோவான் 1:14)

தேவனுடைய வார்த்தை = இயேசு

தேவனுடைய ஆவி = பரிசுத்த ஆவியானவர்

ஆக,

ஒரே தேவன் = தேவன் + தேவனுடைய‌ வார்த்தை + தேவனுடைய‌ ஆவி

ஒருவேளை முஸ்லிம்கள், தேவனும் அவருடைய வார்த்தையும், அவருடைய ஆவியும் சேர்த்து மூன்று என்று சொல்வார்களானால், அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய‌ வார்த்தையும், அல்லாஹ்வுடைய‌ ஆவியும் சேர்த்து மூன்று அல்லாஹ்க்கள் என்று சொல்வார்களா?

மூலமhttp://www.faithbrowser.com/are-there-three-allahs/


ஃபெயித் ப்ரவுசர் தள இதர கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள் பக்கம்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/faith_browser/was-isa-pbuh-a-failure.html