ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

திங்கள், 24 செப்டம்பர், 2007

கேள்வியும் நானே, பதிலும் நானே - 1

    
கேள்வியும் நானே, பதிலும் நானே - 1


நம் தளத்தில் இஸ்லாம் பற்றிய கட்டுரைகள் வருகின்றன. சில கிறிஸ்தவர்களுக்கு இது தர்மசங்கடமாக இருக்கலாம். அதாவது, இப்படி நேரடியாக கட்டுரை எழுதாமல், அவர்களுக்காக ஜெபிக்கலாம் அல்லவா என்ற சந்தேகம், இன்னும் பல கேள்விகள் இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த பதிவில் சில விவரங்களை கொடுக்கலாம் என்று நினைத்து, நானே கேள்விகளையும், பதிலையும் எழுதுகிறேன். நமக்கு கேள்விகள் மெயில் மூலமாக வந்தது என்றுச் பொய் சொல்லி நம்மால் கட்டுரைகள் எழுதமுடியாது. எனவே, தான் தலைப்பு : கேள்வியும் நானே, பதிலும் நானே என்று வைத்தேன். என் மெயில் விலாசம்: isa.koran@gmail.com or isa_koran@yahoo.co.in


1. உங்கள் தளத்தின் நோக்கம் என்ன? உங்கள் தளத்திற்கு "ஈஸா குர்-ஆன்" என்ற பெயர் வைத்ததற்கான காரணம் என்ன ?


என் தளத்தின் நோக்கம், இயேசுவைப் பற்றியும், பைபிளைப் பற்றியும் இஸ்லாமியர்கள் பறப்பிக்கொண்டு வரும் சில தவறாக கோட்பாடுகள் தவறு என்று தகுந்த ஆதாரங்களோடு எடுத்துச் சொல்வதாகும். பைபிளின் "தேவன்" குர்-ஆனின் "அல்லா" இல்லை என்பதை உலகிற்கு முக்கியமாக தமிழ் மக்களுக்குச் சொல்வதாகும்.

இயேசுவை தேவனின் வார்த்தை என்று பைபிள் சொல்கிறது, அது போல "குர்-ஆனை" இஸ்லாமியர்கள் இறைவனின் வார்த்தை என்றுச் சொல்கிறார்கள். எனவே தான் "ஈஸா குர்-ஆன்" என்று பெயர் வைத்தேன்
.


2. உங்கள் கட்டுரைகள் இஸ்லாமியர்களின் நம்பிக்கையை புண்படுத்தும் என்று நினைக்கிறேன். நான் நினைக்கிறது சரியா?


முதன் முதலில் 7ம் நூற்றாண்டில் முகமது "யூதர்களின் மற்றும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கைகள் தவறு", என்று சொன்னார். மக்கா மக்களின் வணக்க வழிபாடு தவறு என்றுச்சொன்னார். அப்போது அவர்கள் மனது புண்பட்டது. முகமது "உண்மை" என்று நம்பின தன் செய்தியைச் சொல்லும் போது, சிலருக்கு அது வேதனையை கொடுக்குமே என்பதற்காக, தன் செய்தியை சொல்லாமல் இருந்துவிட்டாரா! இல்லையே?

இயேசு தேவனின் குமாரன் இல்லை என்று சொன்னார்? கிறிஸ்தவர்கள் புண்பட்டார்கள். இப்போதும் இஸ்லாமியர்கள் அதையே செய்கின்றனர்.

இதில் புண்படுவதற்கு ஒன்றுமில்லை, சொல்லும் செய்தி உண்மையா இல்லையா என்று அவரவர் மனதிற்கு தெரியும். உண்மையென்று உங்கள் மனது சொன்னால், நம்புங்கள். இல்லையென்றால் விட்டுத்தள்ளுங்கள்.

இதைத் தான் நான் கிறிஸ்தவர்களுக்கு சொல்வேன். யாராவது இயேசுவைப் பற்றி விமர்சித்தால், உங்களுக்கு பதில் சொல்லமுடிந்தால் சொல்லுங்கள், இல்லையானால் விட்டுவிடுங்கள். விமர்சிப்பவர்கள் மீது அவதூறான வார்த்தைகளைச் சொல்லாதீர்கள்.

காயத்திற்கு மருந்து போடும் போது வலிக்கத்தான் செய்யும், அதற்காக நாம் மருந்துக்களே பயன்படுத்தாமல் இருக்கமுடியுமா? வியாதி போவது எப்படி?

இருந்தாலும், என் கட்டுரைகளில் பெரும்பான்மையாக வசன ஆதாரம் இல்லாமல் எதையும் முன்வைக்க மாட்டேன். மற்றும் "தறுதலைகள்", "காரி உமிழ்வார்கள்" என்று "இஸ்லாம் இணைய பேரவை" சொல்வதைப் போல நான் எழுதமாட்டேன், விமர்சிப்பவர்களை திட்டமாட்டேன்.

ஒரு வேளை நான் சொன்ன ஆதாரம் அல்லது செய்தி தவறாக இருக்கிறது என்று நிருபிக்கப்பட்டால், உடனே நான் அதை என் கட்டுரையிலிருந்து எடுத்துவிடுவேன், அல்லது ஒரு குறிப்பு செய்தியை அதைப் பற்றி தெரிவிப்பேன்.

எல்லாரையும் நேசிக்கும்படி என் வேதம் சொல்கிறது. எனவே, இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்துவது என் நோக்கமல்ல? எனக்கு தெரிந்த சில உண்மைகளைச் சொல்வது தான் என் நோக்கம்.

யாருடைய மனதாவது புண்பட்டு இருக்குமானால், என்னை மன்னிக்கும்படி வேண்டுகிறேன். அதற்காக நான் கட்டுரை எழுதுவதை நிறுத்தமுடியாது.

லூக்கா 8:16 ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பாத்திரத்தினாலே மூடவுமாட்டான், கட்டிலின்கீழே வைக்கவுமாட்டான்; உள்ளே பிரவேசிக்கிறவர்கள் அதின் வெளிச்சத்தைக் காணும்படிக்கு அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்.


3. இஸ்லாமைப் பற்றி விமர்சிக்க கிறிஸ்தவத்தில் அனுமதியுண்டா? பைபிளிலிருந்து ஏதாவது ஒரு வசனத்தை ஆதாரமாக காட்டமுடியுமா ?

என் கட்டுரைகள் "இஸ்லாமை விமர்சிக்கின்றன" என்றுச் சொல்வதை விட "என் நம்பிக்கையைப் பற்றிய இஸ்லாமிய கேள்விகளுக்கு" அவைகள் பதிலாக அமைகின்றன எனலாம். இருந்தாலும், என்னை பொருத்தமட்டில், ஆரோக்கியமான விமர்சனம் நல்லது.

கிறிஸ்தவத்தில், ஒரு தேவனுடையை ஊழியக்காரன் எதிர் பேசுகிறவர்களுக்கும், மற்றவர்களுக்கும் சாந்தமாக பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளான்.


2 தீமோத்தேயு: 2:24. கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்.25. எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும்,26. பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.


ஒரு தேவனுடைய ஊழியக்காரன் "கிறிஸ்தவர்களுக்கு கட்டுக்கதைகள்" சொல்லி அவர்களை சத்தியத்திலிருந்து சிலர் விலகச் செய்வதை காணும் போது, அவர்களுக்கு புத்திச் சொல்லவேண்டும், கண்டனம் செய்யவேண்டும்.

2 தீமோத்தேயு: 4:1. நான் தேவனுக்கு முன்பாகவும் உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது,2. சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.3. ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,4. சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.5. நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.

சில நேரங்களில் கடிந்துக்கொள்ளவேண்டிய அவசரம் வரலாம். இதைத் தான் தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளமும் செய்துக்கொண்டு இருக்கிறது.


தீத்து: 1:13. இந்தச் சாட்சி உண்மையாயிருக்கிறது; இது முகாந்தரமாக, அவர்கள் யூதருடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தை விட்டு விலகுகிற மனுஷருடைய கற்பனைகளுக்கும் செவிகொடாமல்,14. விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி, நீ அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொள்.


இப்படி இஸ்லாமியர்களுக்கு பதில் சொல்வதும், கிறிஸ்தவர்களுக்கு எச்சரிக்கை செய்வதும் ஒரு ஊழியக்காரனின் கடமையாகும். ஒவ்வொரு விசுவாசியும் தேவனுடைய ஊழியக்காரனே.


4. உங்கள் கட்டுரைகளைப் படிக்கும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை தவறாக புரிந்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது என்று நினைக்கிறேன் .


கிறிஸ்தவர்கள் அப்படி தவறாக புரிந்துக்கொள்ள வாய்ப்புக்கள் மிக மிக குறைவு, காரணம்:

1. கிறிஸ்தவர்கள் பைபிளை படிக்கிறார்கள்(படிக்கனும்), எனவே, எது சரி எது தவறு என்று சரியாக நிதானிக்க அவர்களால் முடியும்.

2. ஆலயத்திற்குச் செல்லும் கிறிஸ்தவன் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் தன்னைத் தான் சோதித்து அறிவான், போதகரின் போதகத்தைக் கேட்கிறான். எனவே, அவன் எல்லாரையும் நேசிக்கவேண்டும் என்ற இயேசுவின் கட்டளையை பின்பற்ற வேண்டும்.

3. பைபிளில் இல்லாத வார்த்தைகளை நாம் அவர்களுக்குச் சொன்னால் அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அல்லா குர்-ஆனில் சொன்னது போல "யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் நண்பர்களாக" ஏற்றுக்கொள்ளவேண்டாம் என்று, பைபிள் சொல்வதில்லை. முஸ்லீம்களையும் மற்ற மார்க்கத்தை பின்பற்றுபவர்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளவேண்டாம் என்று நான் சொன்னால், எந்த ஒரு கிறிஸ்தவனும் ஏற்றுக்கொள்ளமாட்டான்.

4. இன்னும் சொல்லப்போனால், ஒரு கிறிஸ்தவன் இஸ்லாமை அதிகமாக அறியும் போது, அவன் முஸ்லீம்களுக்காக அதிகமாக தேவனிடம் வேண்டுதல் செய்வான், அதற்கு பதிலாக விரோதிக்கமாட்டான்(விரோதிக்கக்கூடாது).

5. தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்தில் இஸ்லாமிய கட்டுரைகள், செய்திகளை எல்லாரும் படிக்கிறார்கள், பதிவுசெய்கிறார்கள். இருந்தாலும், அதை படிக்கும் வாசகர்கள் என்ன பதில்(பின்னூடல்) எழுதுகிறார்கள் என்று பாருங்கள். முஸ்லீம்களுக்காக ஜெபிப்போம், காத்திருப்போம் தேவன் உதவிசெய்வார் என்று எழுதுகிறார்களே தவிர, அவர்கள் அழிக்கப்படவேண்டும் என்று யாரும் எழுதுவதில்லை. அது தான் கிறிஸ்துவம், இதைத் தான் இயேசு போதித்தார்.

எனவே, கிறிஸ்தவர்கள் தவறாக புரிந்துக்கொள்ளமாட்டார்கள். அப்படி நினைப்பவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல.


5. உங்களின் இந்த முயற்சி நல்ல பலனைத் தரும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா ?


கட்டாயமாக பலன் தரும். முக்கியமாக இஸ்லாமியர்களுக்கு பதில் சொல்வது, ஆங்கிலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்புலிருந்து நடந்துவருகிறது. ஆனால், இந்தியாவில் அது குறைவு, சொல்லப்போனால் இல்லை என்றே சொல்லலாம்.

இப்போது சிலர் எழுத ஆரம்பித்துள்ளார்கள், முக்கியமாக தமிழ் கிறிஸ்தவ தள வாசகர்கள் "மைகோவை", " தேவன்", "ரமேஷ்பிஸ்", மற்றும் தனி தளம் மூலம் கட்டுரைகளை பதிக்கும் "உண்மையடியான்" என்றுச் சொல்லி பலர் எழும்பியுள்ளனர். இன்னும் சில ஆண்டுகளில் பலர் எழுத ஆரம்பிப்பார்கள். எத்தனையோ பேருக்கு எழுதவேண்டும் என்ற ஆவல் இருக்கிறது, ஆனால், இப்போது தான் அதற்கு வாய்ப்பு "தமிழ் கிறிஸ்டியன்ஸ்" தளம் மூலமாக உருவாகியுள்ளது.

முக்கியமாக ஆங்கிலத்தில் அனேக கட்டுரைகள் இணையத்தில் கிடைக்கிறது. அதாவது இவைகளை மொழிபெயர்த்தாலே போதும், இஸ்லாமியர்கள் முன்வைக்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிடும். நாம் ஒன்றும் தனியாக கட்டுரைகளை எழுதவேண்டியதில்லை.

கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாமைப் பற்றிச் சொல்வதும், இஸ்லாமியர்களுக்கு இயேசுவைப் பற்றிச் சொல்வதுமே என் தளத்தின் முக்கிய நோக்கமாகும்.


6. ஒருவேளை உங்கள் முயற்சியினால், ஒரு நன்மையும் விளையவில்லை என்று வைத்துக்கொள்வோம்? அப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?


இது என் வேலை இல்லை. இது தேவனின் வேலை. எனக்கு கிடைக்கும் ஒரு சில மணித்துளிகளை பயன்படுத்தி சில கட்டுரைகளை எழுதுகிறேன், அவ்வளவு தான். எங்களுடைய வேலை விதையை விதைப்பது(தூவுவது), நீர் பாய்ச்சுவது அவ்வளவு தான், விளையச் செய்து தேவன் தான்.

இன்றைக்கு செடி நடுகிறோம், அது உடனே பலன் தருவதில்லை. அதற்கு பல ஆண்டுகள் ஆகும், அப்போது தான் அதன் கனிகளை நம் கண்களில் காணமுடியும். அது வரையில் நாம் அவசரப்படுவதில் அர்த்தமில்லை.

சங்கீதம் 126:6 அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.

எனவே, பலன் உண்டா இல்லையா என்பது இப்போது கேள்வியில்லை.

பலன் விளையவில்லை என்று சொல்லமுடியாது. ஏற்கனவே பலன் விளைந்துவிட்டது. அதாவது தமிழிலே பல இஸ்லாமிய தளங்கள் உருவாகியுள்ளன. கேள்விகள் கேட்டு பதில் கொடுத்தால் தானே விவரங்கள் புரியும். அனேக இஸ்லாமிய சகோதரர்கள் பைபிள் சம்மந்தப்பட்ட கட்டுரைகளை எழுதுகிறார்கள்.

தமிழ் முஸ்லீம், இது தான் இஸ்லாம் தளமும் தொடர்ந்து கிறிஸ்தவ தலைப்பில் கட்டுரைகளை எழுதுகிறார்கள். அவைகளுக்கு பதில்கள் தரப்படுகின்றன. பல ஆயிரம் பேர் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். எத்தனையோ கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாம் பற்றிய அறிவு பெருகிக்கொண்டு இருக்கிறது. மற்றும் பல இஸ்லாமியர்களுக்கும் உண்மை கிறிஸ்தவம் என்னவென்று புரிந்து இருக்கும். எனவே காத்திருப்போம், ஜெபிப்போம், ஜெயம் பெருவோம்.


7. கிறிஸ்தவர்கள் முதல் முதலில் எப்போது இப்படி இஸ்லாமுக்கு பதில்கள், மறுப்புக்கள் எழுதினார்கள்?


முதன் முதலில் என்று சொல்லவேண்டுமானால், முகமதுவின் காலத்திலேயே கிறிஸ்தவர்களும், யூதர்களும் நேரடியாக அவரிடமே சில கேள்விகளை கேட்டுயிருப்பதை சொல்லமுடியும். ஆனால், எனக்கு தெரிந்த ஒரு விவரத்தை சொல்லவிரும்புகிறேன்.

அதாவது முஸ்லீம் காலிஃபா "அல்-மாமுன் (கி.பி. 813 to 833)" என்பவரின் அரச சபையில் இப்படி ஒரு "கேள்வி பதில்" நிகழ்ச்சி நடந்ததாக ஒரு புத்தகம் உள்ளது.

இந்த கருத்து பரிமாற்றம் கிறிஸ்தவரான அல்-கின்டி(Al-Kindy) மற்றும் முஸ்லீமான ஹாஷிமி(Al-Hashimi ) என்பவருக்கும் இடையே நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்த பரிமாற்றம் பாதுகாப்பை கருதி, அரச சபையில் நடத்தப்படாமல், தனியே நடந்ததாக சொல்லபடுகிறது.

இந்த புத்தகத்தில் முதலாவது, கிறிஸ்தவரகளை இஸ்லாமுக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்படுகிறாதாம், அதனை கிறிஸ்தவர் மறுத்து, இஸ்லாமியர்களை கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ளும்படி அழைப்பு விடுப்பதாக உள்ளதாம். இந்த புத்தகத்தில் கிறிஸ்தவர் கொடுக்கும் பதில் சுமாராக புத்தகத்தின் மொத்த அளவில் ஏழில் ஆறு பாகம் உள்ளதாம். நான் சில பக்கங்களை மட்டுமே படித்தூள்ளேன்.

இந்த புத்தகத்தை 1880ல் வில்லியம் முர் என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்தார்.


1. Apology_of_al-Kindy ஆங்கிலத்தில் இங்கு படிக்கலாம்

2.
Download Apology_of_al-Kindy in PDF format

3. Download Apology_of_al-Kindy zip format

4. About Abd_al-Masih_ibn_Ishaq_al-Kindi in Wikipedia

5. About Apology_of_al-Kindy_(book) in Wikipedia


Quote:
Reference: William Muir, The Apology of Al Kindy, Written at the Court of Mâmûm (Circa A.H. 215; A.D. 830), In Defence Of Christianity Against Islam, Society For Promoting Christian Knowledge, London, England, Second Edition, 1887, pp. 122.

Background: Abd al-Masih ibn Ishaq al-Kindi wrote an apology of the Christian faith to al-Hashimi while serving in the court of the Caliph Al-Mamun in approximately the year A.H. 215 (A.D. 830). This edition of the text was originally prepared by Sir William Muir and first published in 1887. Muir gives the historical setting of the dialogue between al-Kindi and al-Hashimi and includes extensive quotations from this ancient work.


Source:
http://en.wikipedia.org/wiki/Apology_of_al-Kindy_(book)

The Apology (or Risāla) purports to be a record of a dialogue between a Muslim and a Christian. In fact, the book contains two apologies: The Muslim first invites the Christian to embrace Islam. The Christian declines this and in turn invites the Muslim to embrace Christianity. The Christian's answer comprises some six sevenths of the text.

The two participants are referred to by pseudonyms, according to the text to secure their safety. [4]. The Muslim participant, called "Abd-Allah ibn Ismail al-Hashimy" (which translates as "Servant of Allah, son of Ishmael, from the clan Banu Hashim), is described as a cousin of the unnamed Caliph, living in the Caliph's castle and being well versed in Christian theology. He is also described as having a close and trusted Christian friend called "Abd al-Masih ibn Ishaq al-Kindi" (which translates as "Servant of the Messiah, son of Isaac, from the clan Banu Kindah").

In his preface, Muir identifies the Caliph, who remains unnamed in the epistles, as Al-Ma'mun, who reigned from 813 to 833, arguing that


http://en.wikipedia.org/wiki/Abd_al-Masih_ibn_Ishaq_al-Kindi

Abd al-Masih ibn Ishaq al-Kindi (Arabic,عبد المسيح ابن اسحاق الكندي )(English: servant of Messiah, son of Isaac, from the clan of Kindah) is the alias of a Christian character in the medieval theological work Apology of al-Kindy. The book was translated into Latin by a team working for Peter the Venerable, and into English by Sir William Muir. Abd al-Masih ibn Ishaq al-Kindi lived in the 9th century.


இவைகள் ஒரு சில விவரங்கள் மட்டுமே, முழுவிவரத்திற்கு கொடுக்கப்பட்ட தொடுப்புக்களில் சென்று பார்க்கவும். இன்னும் பலர் இப்படி பல காலங்களில் பதில் கொடுத்துள்ளார்கள். இப்புத்தகத்தை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.


8. உங்கள் கட்டுரைகளில், முஸ்லீம்களுக்கு "குர்-ஆனை", "ஹதீஸ்களை", "முகமதுவின் சரிதைகளை" படிக்கும் படி சொல்கிறீர்களே, இது கொஞ்சம் அதிமாக படவில்லை உங்களுக்கு? கிறிஸ்தவர்களைப் பார்த்து நீங்கள் பைபிள் படியுங்கள் என்று ஒரு இஸ்லாமியர் சொன்னால் எப்படி இருக்கும் ?


முதலாவது ஒன்றை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும், அது என்னவென்றால், இஸ்லாமியர்கள் முதலாவது குர்-ஆனை படிக்க ஆரம்பிப்பது அரபியில் தான். தங்கள் தாய் மொழியில் இல்லை. இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லும் சில நல்ல வசனங்கள், ஹதிஸ்கள் மட்டும் தான் அவர்களுக்கு தெரியும், அதாவது நான் சொல்வது ஒரு சராசரி சாதாரண முஸ்லீமைப்பற்றி. அதனால், தான் நான் அவர்களை குர்-ஆனை படிக்கும் படி சொல்கிறேன். ஹதீஸ்களை படிக்கும்படி சொல்கிறேன். குர்-ஆனை அரபியில் படிக்க உட்சாகப்படுத்தும் அளவிற்கு, தங்கள் தாய்மொழியில் படிக்க இஸ்லாமியர்கள் உட்சாகப்படுத்துவதில்லை. நான் சொல்வது இந்திய முஸ்லீம்களைப் பற்றி. அவர்கள் அப்படி தாய் மொழியில் படித்தால், சில உண்மைகள் அவர்களுக்கு புரியும் என்பது என் கருத்து.

ஆனால், கிறிஸ்தவர்களின் நிலை அப்படி இல்லை. எல்லாரும் தங்களுக்கு தெரிந்த மொழியில் அதுவும் பல மொழிகளில் படிக்கிறார்கள். ஆகையினால், கிறிஸ்தவர்களைப் பார்த்து பைபிளை படி என்றுச் சொன்னால், அவர்கள் அமோதிப்பார்கள்.

1. முகமதுவும் அவருடைய தோழர்களும் 10 ஆண்டுகளுக்கு மேலாக "எருசலேமில் உள்ள தேவலயத்தை" நோக்கியே தொழுதார்கள் என்றும், பிறகு தான் அதை "விக்கிரகங்கள் இருக்கும்" காபாவிற்கு முகமது மாற்றினார் என்று எத்தனை முஸ்லீம்களுக்குத் தெரியும்?

2. முகமதுவிற்கு முந்தைய வேதம் அல்லது நபிகள் பற்றி சந்தேகம் வந்தால், அதை தீர்த்துக்கொள்ள யூதர்களையும் அல்லது கிறிஸ்தவர்களை கேட்டு தெரிந்துக்கொள் என்று அல்லா அவருக்கு கட்டளை கொடுத்துள்ளது எத்தனை முஸ்லீம்களுக்குத் தெரியும்?


3. முகமது எத்தனை போர்கள் புரிந்தார் என்று எத்தனை முஸ்லீம்களுக்குத் தெரியும்?

4. முஸ்லீம்களுக்கு தங்கள் மனைவிகளை அடிக்க அல்லா அனுமதி கொடுத்த வசனம் குர்-ஆனில் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

5. முகமதுவிற்கு எத்தனை மனைவிகள் என்று எத்தனை முஸ்லீம்களுக்கு தெரியும்?



இப்படி சொல்லிக்கொண்டு போகலாம், அதனால் தான் முதலாவது அவர்கள் மார்க்கம் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள் என்றுச் சொல்கிறேன்.

கிறிஸ்தவம் என்னவென்று தெரிந்துக்கொள்ளவேண்டுமா - இயேசுவின் வாழ்க்கையைப் படி.
இஸ்லாம் என்னவென்று தெரிந்துக்கொள்ளவேண்டுமா - முகமதுவின் வாழ்க்கையைப் படி.


மட்டுமல்ல, கிறிஸ்தவர்களுக்கும் நான் குர்-ஆன் படியுங்கள், ஹதீஸ் படியுங்கள் என்று சொல்கிறேன். இப்படி ஒரு முஸ்லீம் தளத்தில் " இஸ்லாமியர்களே நீங்கள் பைபிள் படியுங்கள், படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்" என்று இஸ்லாமிய அறிஞர்கள் தங்கள் வாசகர்களுக்கு சொல்லமுடியுமா?


9. இப்படி கட்டுரைகளை எழுதுவதற்கு பதிலாக பல இஸ்லாமிய அறிஞர்கள் நடத்தும் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம், டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று அங்கு கேள்விகள் கேட்கலாம் அல்லவா? உங்களுக்கு இன்னும் உதவியாக இருக்கும் அல்லவா ?


இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் அனேகமாக நாம் கேள்வி கேட்கத்தான் அனுமதிக்கப்படுகிறோமே ஒழிய பதில் சொல்ல அல்ல. அது மட்டுமல்லாமல், நமக்கு கொடுக்கப்படும் சில மணித்துளிகளில் நாம் என்ன சொல்லவருகிறோம் என்று சொல்வதற்கு முடிவதில்லை. எனவே, இவைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை.

ஆனால், இப்படி இணையத்தில் கட்டுரைகள், கேள்வி பதில்கள் எழுதுவதினால், நிறைய விவரங்களை ஆதாரங்களை நாம் சொல்லமுடியும். எனவே, நான் கிறிஸ்தவர்களை கேட்டுக்கொள்வேன், இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கு பெருங்கள், ஆனால், கேள்விகள் எதுவும் கேட்கவேண்டாம். அதனால், ஒரு நன்மையும் நமக்கு உண்டாகப்போவதில்லை. ஏதாவது சொல்லவேண்டுமென்றால், இணையத்தில் எழுதுங்கள் இதனால் அதிக நன்மைகள் விளையும்.
10. நீங்கள் கிறிஸ்தவர்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

இன்றைய காலகட்டத்தில் அனேக இஸ்லாமிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. அவைகளில் பல கிறிஸ்தவ கேள்விகளுக்கும் அவர்கள் குர்-ஆன் அடிப்படையில் பதில் சொல்கிறார்கள். இந்நிகழ்ச்சிகளில் பங்கு பெருங்கள்.

குர்-ஆனையும், ஹதீஸ்களையும் படியுங்கள், அப்போது தான் பைபிள் சொல்லும் செய்திக்கும், குர்-ஆன் சொல்லும் செய்திக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் புரியும்.

இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லும் செய்தியை மட்டும் கேட்டுவிட்டு இது தான் இஸ்லாம் என்று நினைக்கவேண்டாம். அது மிகப்பெரிய தவறு. இஸ்லாமில் உள்ள சில நல்ல விவரங்களை மட்டும் தான் அவர்கள் முன்வைப்பார்கள், எனவே நீங்களாகவே குர்-ஆனை, ஹதீஸ்களை படியுங்கள். அப்போது தான் உண்மை விளங்கும்.

உதாரணத்திற்கு, ஒருவன் இஸ்லாமில் சேர்ந்துவிட்ட பிறகு அதிலிருந்து வெளியே வந்துவிட்டால், அவனுக்கு இஸ்லாமில் மரண தண்டனை உண்டு. பல இஸ்லாமிய நாடுகளில் இப்படி ஷரியா சட்டம் உண்டு. அதை இஸ்லாமியர்கள் முதலில் உங்களுக்கு சொல்லமாட்டார்கள். டாக்டர் ஜாகிர் நாயக் கூட சொல்லியிருக்கிறார், இஸ்லாமிய நாடுகளில் ஒரு முஸ்லீம் வேறு மதத்திற்கு மாறினால், அவனுக்கு மரணதண்டனை என்று. தெரியாமல் உள்ளே நிழைந்துவிட்டீர்கள், பிறகு எக்காரணத்தைக் கொண்டும் வெளியே வரமுடியாது.

இந்தியாவில் அப்படி சட்டம் இல்லை என்றுச் சொல்லலாம், ஆனால், இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி நடக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரு வேளை இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி நடக்குமானால், ஷரியா சட்டம் கொண்டுவந்தால், நிச்சயமாக இதே ஜைனுல் ஆபிதீன் அவர்கள், ஜாகிர் நாயக் அவர்கள் இதற்கு அனுமதி அளிப்பார்கள்.

எனவே, எச்சரிக்கையாக இருக்கவேண்டுகிறேன்.

மத்தேயு: 7:15. கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். 16. அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? 17. அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். 18. நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது. 19. நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். 20. ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.


கர்த்தருக்கு சித்தமானால் தொடரும்...

Isa Koran Home Page Back - Question and Answers Index page
1

2 கருத்துகள்:

muthupandi சொன்னது…

praise the lord.i read your msg daily .it is very useful for me.Every Thursday we contact prayer in this time ,we have preyed for ur website.Paster i got one book.it is against for Christianity.So i want to give to u.so please give the answer for that.

abu abdhullah சொன்னது…

அன்புள்ள சகோதரர் (ஈஸா குரல் ) அன்பான அழைப்பு

உங்களுக்காக நான் மிகவும் கவலைபடுகிறேன் , ஏனென்றால் கர்த்தருடைய பரலோக ராஜ்யம் யாருக்கு என்ற கேள்வி ஏசப்பவின் இரண்டாம் வருகையின் போது விளங்கும் . சுவர்க்கம் இது மட்டுமே உண்மையான நோக்கமாக இருந்தது முஹம்மது அவர்களுக்கு .பராவயில்லை தெரிந்து கொண்டே புறகனிபவர்கள் நரகத்தை தங்களுக்கு சொந்தமாக்கி கொள்ளவார்கள் . உங்களுக்கு வசதியான பைபிள் வசனங்களை மட்டுமே எடுத்து கொள்ளுகிரிர்கள் , நீங்கள் ஒருவிசயத்தை பின்பற்றிவிட்டிர்கள் என்பதற்காக அது தவறான கொள்கையாக இருந்தாலும் பின்பட்ருகிற மூடத்தனம் தங்களை புதிசலிகளகவும் காட்டிகொல்லுகிற அறியாமை பரிதபதிற்குரியது
உங்கள் சிந்தனைக்கு :
நீங்கள் பின்பற்றுகிற பைபிள் மனிதனின் கையாடல் இல்லாததா
பைபிள் உண்மையானதா அப்படியானால் அந்த பைபிள் எங்கே ?
குரான் பொய்யானது என்றால் அதை ஏன் உங்களுடைய சமூகம் நிருபிக்கவில்லை ?அதனால் இன்று மக்கள் கிருத்துவத்தின் பக்கம் வந்திருக்கவேண்டும் ஏன்? நடக்க வில்லை?
இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்று உலகமே சொல்லும் போது கிறிஸ்தவர்களில் இருந்து எதற்கு அதில் உறுதியாக இருந்த பாதிரியார்கள் வந்தார்கள் ?
வெறும் அற்புதத்தை மட்டும் நம்பி இருக்கும் உங்களால் ,பகுத்தறிவிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் இஸ்லாத்தின் மிது அவதுற்றை பரப்புவது உங்களை நீங்கள் பிரபல படுத்திக்கொள்ள என்பது உங்கள் சமூகம்கடை பிடிக்கும் உத்தி என்பது எங்களுக்கு தெரியும் .
நீங்கள் கூறும் அத்தனை குற்றசாட்டுகளும் வெறும் கால்புனற்சியே !! என்னுடைய இந்த அன்பான வேண்டு கோளுக்கு பதிலளிக்கவும் உங்களிடம் உண்மை இருந்தால்.
உங்கள்ளுக்கு விளக்கம் வந்தபிறகு இது (குரானை ) குறித்து உம்மிடம் யாராவது விதண்டம் வதம் செய்தால் "வாருங்கள் எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும் , உங்கள் பெண்களையும் அழைப்போம் நாங்களும் வருகிறோம், நீங்களும் வாருங்கள் ! பின்னர் இறைவனிடம் வேண்டி பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தை கேட்போம் " எனக்கூருவீராக ! அல் குரான் (3 :61).
இதை படித்து விட்டு எங்கள் மதம் எங்களுக்கு எதிரியியே நேசிக்க சொல்லுகிறது அதனால் நான் இவ்வாறு கூற மாட்டேன் என கூறுவது உங்களின் போலித்தனத்தை காட்டி கொடுக்கும் உங்களிடம் உண்மை இருந்தால் இதை சவாலாக ஏற்று உங்கள் பிராத்தனையில் சேர்த்து கொள்ளுங்கள் . இதை படிக்ககூடிய நண்பர்கள் இதை isakoran.blogspot.com மிற்கு தெரியபடுத்தவும்