ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

புதன், 30 ஜூன், 2010

கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? (அ) ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?

கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? 

அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?

Are Christian Dyed or Baptized?

சூரா 2:138 கீழ்கண்டவாறு கூறுகின்றது:

"(இதுவே) அல்லாஹ்வின் வர்ணம் (ஞான ஸ்னானம்) ஆகும்;, வர்ணம் கொடுப்பதில் அல்லாஹ்வைவிட அழகானவன் யார்? அவனையே நாங்கள் வணங்குகிறோம்" (எனக் கூறுவீர்களாக) - (முஹம்மது ஜான் மொழியாக்கம்) 

(Our religion is) the Baptism of Allah: And who can baptize better than Allah? And it is He Whom we worship. (Yusuf Ali) 

(Receive) the baptism of Allah, and who is better than Allah in baptising? and Him do we serve. (Shakir) 

Say, "Belief in God and following the guidance of Islam are God's means of purification for us. Islam is the baptism of God. No one is a better baptizer than He and we Muslims worship Him." (Sarwar)

இந்த வசனத்தில் ஞானஸ்நானத்திற்காக பயன்படுத்தப்பட்ட வார்த்தை "சிப்காஹ் - sibghah " என்பதாகும், இதை எழுத்தின் படி (literal translation) மொழியாக்கம் செய்தால் இதன் பொருள் "வர்ணம் - dye" என்பதாகும். அல் ஜலாலைன் மற்றும் அல் பைஜாவி விரிவுரையாளர்கள் இந்த வார்த்தை "ஞானஸ்நானத்தை" குறிக்கும் என்று கூறுகிறார்கள். 

அல் பைஜாவி கீழ்கண்டவாறு கூறுகிறார்:

"நஸ்ரேயர்கள் (கிறிஸ்தவர்கள்) தங்கள் பிள்ளைகளை மஞ்சல் தண்ணீரில் மூழ்க வைப்பார்கள், இதை அவர்கள் "அல் மமுதியா - al-Ma'mudiyah" என்று அழைக்கிறார்கள். இப்படி செய்வதினால், அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டு கிறிஸ்தவர்களாக கருதப்படுவார்கள் என்று கூறுகிறார்கள். (Tafsiru'l-Baizawi)

தமிழில் பீஜே அவர்களின் மொழியாக்கமும், ஆங்கிலத்தில் இதர இரண்டு மொழியாக்கங்களும் இந்த பொருளை தருகின்ற விதமாக மொழியாக்கம் செய்துள்ளார்கள்.

'(நாங்கள்) அல்லாஹ் தீட்டும் வர்ணத்தை 38 (ஏற்பவர்கள்.) அல்லாஹ்வை விட அழகிய வர்ணம் தீட்டுபவன் யார்? நாங்கள் அவனையே வணங்குபவர்கள்' (என்று கூறுங்கள்!) - (பிஜே மொழியாக்கம்) 

(We take our) colour from Allah, and who is better than Allah at colouring. We are His worshippers. (Pickthall) 

(Our religion) takes its hue from Allah. And who can give a better hue than Allah. And it is He Whom we worship. (Yusuf Ali, Saudi corrected version)

மத்தேயு சுவிசேஷம் 21:24-26ம் வசனங்களில், பிரதான ஆசாரியர்கள் மற்றும் தேவாலய பொறுப்பாளிகள் இயேசுவை சோதிக்க வந்தார்கள். அந்த நேரத்தில் இயேசு அவர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டார், அதே கேள்வியை நாம் இப்போது இஸ்லாமியர்களிடம் கேட்க விரும்புகிறோம்.

இயேசு பிரதியுத்தரமாக: நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுவீர்களானால், நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன். யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? யாரால் உண்டாயிற்று? என்று கேட்டார். அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று நம்மைக் கேட்பார்; மனுஷரால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், ஜனங்களுக்குப் பயப்படுகிறோம், எல்லாரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறார்களே என்று, தங்களுக்குள்ளே ஆலோசனைபண்ணி, 

Jesus replied, "I will also ask you one question. If you answer me, I will tell you by what authority I am doing these things. John's baptism—where did it come from? Was it from heaven, or from men?" They discussed it among themselves and said, "If we say, 'From heaven,' he will ask, 'Then why didn't you believe him?' But if we say, 'From men'—we are afraid of the people, for they all hold that John was a prophet."

அதாவது, இறைவன் தன் தீர்க்கதரிசியாகிய (நபியாகிய) யோவான் மூலமாக, 'ஞானஸ்நானத்தை' கட்டளையிட்டு இருக்கும் போது, இஸ்லாமியர்கள் ஏன் இறைவனின் இந்த இறைக்கட்டளையை பின்பற்றுவதில்லை? 

இறைவன் கட்டளையிடாமல் தானாகவே யோவான் ஸ்நானகன் இட்டுக்கட்டி இந்த ஞானஸ்நானத்தை கொடுத்து இருந்தால், ஏன் இஸ்லாமியர்கள் இன்னும் யோவான் ஸ்நானகனை 'நபி' என்று மரியாதையாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்? 

ஆங்கில மூலம்: Are Christian Dyed or Baptized?

இதர குர்‍ஆன் விரிவுரை கட்டுரைகள்

அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?

எல்லா மனிதருக்கும் தங்கள் சொந்த கருத்தைச் சொல்ல உரிமை உண்டு,
ஆனால், உண்மையை மறைக்கும் உரிமை எவருக்குமில்லை - பெர்னாட் புருச்

மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் 

The Messiah and the Qur'an

மேசியா அல்லது மஸீஹா என்ற வார்த்தையைப் பற்றி குர்‍ஆனுக்கு பிரச்சனை உள்ளது. 

மஸீஹா என்ற வார்த்தையைப் பற்றி அடிக்கடி குர்‍ஆன் பேசுகின்றது. கிறிஸ்தவ மற்றும் முக்கியமாக யூத வேதங்களில் உள்ள விவரங்களை தெரிந்துக்கொள்ளாமல் குர்‍ஆன் அறியாமையில் மஸீஹா பற்றி பேசுகின்றது. குர்‍‍ஆனை படிக்கும் போது இது மிகவும் தெளிவாக தெரிகின்றது.

குர்‍ஆன் 4:171

வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்;. நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா அல்மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்;. …. 

O People of the Scripture! Do not exaggerate in your religion nor utter aught concerning Allah save the truth. The Messiah, Jesus son of Mary, was only a messenger of Allah, and His word which He conveyed unto Mary, and a spirit from Him. So believe in Allah and His messengers, ... 

குர்‍ஆன் 5:75

மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை . இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் வந்து சென்றுவிட்டனர். …. 

The Messiah, son of Mary, was no other than a messenger, messengers (the like of whom) had passed away before him. ...

ஒரே வசனத்தில் இயேசுவை மஸீஹா என்றுச் சொல்வதும், மற்றும் அதே வசனத்தில் அவர் மற்றவர்களைப் போல வெறும் "இறைத்தூதர்" மட்டும் தான் என்றுச் சொல்வதும், குர்‍ஆனின் சுய முரண்பாடு ஆகும்

மஸீஹா இதர நபிகளைப்போல ஒருவர் தான் என்று சொன்னால், பின் ஏன் அவருக்கு மட்டும் மஸீஹா என்ற சிறப்புப் பட்டப்பெயர் கொடுக்கப்பட்டுள்ளது?

மஸீஹா என்ற பட்டப்பெயருக்கு அர்த்தம் என்ன? என்று குர்‍ஆன் சொல்வதில்லை, முக்கியமாக யூத கிறிஸ்தவ வேதங்களிலிருந்து இவ்வார்த்தையை குர்‍ஆன் எடுத்து கையாண்டுள்ளது என்பது மட்டும் புரிகின்றது. ஆகையால், இஸ்லாமியர்களிடம் நாம் கேட்கிறோம், இவ்வார்த்தையின் பொருள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? யூத கிறிஸ்தவ வேதங்களில் இவ்வார்த்தைக்கு என்ன பொருள் கொடுக்கப்பட்டுள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா? 

மஸீஹா அல்லது மேசியா என்றால் என்ன என்று தெரிந்துக்கொள்ள இக்கட்டுரைகளை படிக்கவும்

ஆங்கில மூலம்: The Messiah and the Qur'an

இதர குர்‍ஆன் விரிவுரை கட்டுரைகள்

திங்கள், 28 ஜூன், 2010

"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4

"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4

"LIFE OF MUHAMMAD" SEMINAR - PART 4

முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு பாகம் 1ஐ இங்கு படிக்கவும்.

முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு பாகம் 2ஐ இங்கு படிக்கவும்.

முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு பாகம் 3ஐ இங்கு படிக்கவும்.

இந்த கட்டுரையில் அதன் தொடர்ச்சியாக நான்காம் பாகத்தை காண்போம்.

தேவையில் இருந்த மனிதர்கள் (The People in Need)

[மக்காவிலிருந்து மதினாவிற்கு: Tabari vol 6 p93-150, LoM p191-218]

இஸ்லாமியர்கள் ஊரை விட்டு போகவேண்டுவதில்லை என்று சொல்லப்பட்டபோது, அவர்களுக்கு நிம்மதி உண்டானது. ஆனால், முஹம்மதுவின் அன்பான மனைவி கதிஜா மரித்துவிட்டார்கள். பிறகு அவரது சித்தப்பாவும் மரித்துவிட்டார்கள். இதோடு முஹம்மதுவிற்கு கிடைத்த பாதுகாப்பு ஒரு முடிவிற்கு வந்துவிட்டது. இப்போது முஹம்மது ஒரு பெரிய ஆபத்தில் இருக்கிறார் என்பதை மட்டும் அறிந்துக்கொண்டார்.

அவர் பழங்குடி நகரமான அல்-தையிபிற்கு‍ (al-Taif) பாதுகாப்பிற்காகச் சென்றார். அவர்கள் அவரை நிராகரித்துவிட்டனர், இந்த தோல்வியை இரகசியமாக வைத்திருக்கும் படி அவர்களுக்குச் சொன்னார். ஆனால், அவர்கள் அவரை துன்புறுத்தி கேலி செய்தனர், இதனால் அவர் அந்நகரத்தை விட்டு வெளியேறினார்.

"அபூ தலிப்பின் மரணத்திற்கு பின்பு, குரைஷி மக்களினால் அதிக வேதனை உண்டானபோது, இறைத்தூதர் தையிபிற்குச் சென்று, தகீப்பின் உதவியை நாடினார், தன் இன மக்களுக்கு எதிராக உதவும் படி கேட்டுக்கொண்டார்.... இதனால், தகீப்பினால் எந்த நன்மையும் இல்லை என்பதினால் இறைத்தூதர் எழுத்து சென்றுவிட்டார். அவர் இப்படி கூறினார் என்று எனக்கு அறிவிக்கப்பட்டது "நீங்கள் உங்களுக்கு விரும்பியபடி நடந்துக்கொண்டீர்கள், எனினும் இதனை இரகசியமாக வைத்திருங்கள்". ஏன் இப்படி சொன்னார் என்றுச் சொன்னால், முஸ்லீம்கள் இதனை கேள்வியுற்றால், தனக்கு அவமானமாக இருக்கும் என்பதால் இப்படிச் சொன்னார்." LoM p192-193.

மக்காவில் முஹம்மது இன்னும் தன் பிரச்சாரத்தை தொடர்ந்துக்கொண்டு இருந்தார். தனக்கு ஆபத்து இருக்கிறது என்பதை தெரிந்தும், முஹம்மது பலவகையான புனிதப் பிராயணத்திற்காக வரும் அரபி இனத்தவர்களிடம் தன் பிரச்சாரத்தை தொடர்ந்தார், தான் ஒரு நபி என்றுச் சொன்னார், அவர்களிடம் தனக்கு பாதுகாப்பு கொடுக்கும் படி கேட்டுக்கொண்டார்.

"அரபி இனத்தவர்களின் புனிதப்பயணத்தின் போது, இறைத்தூதர் அவர்களுக்கு முன்பாக தோன்றி, இறைவனிடம் அனைவரும் சேருங்கள் என்றும், தான் இறைவன் அனுப்பிய நபி என்று பிரகடனப்படுத்திக்கொண்டு, தன் வார்த்தைகளை நம்பும்படியும், தன்னை காப்பாற்றும் படியும் கேட்டுக்கொண்டார். தனக்கு பாதுகாப்பு கிடைத்தால், அவர் இறைவனின் செய்தியை பறைசாற்ற வாய்ப்பு உண்டாகும் என்றுச் சொன்னார்." Tabari volume 6, page 120.

ஒருமுறை மதினாவிலிருந்து வந்த கஜ்ரஜ் இனத்தவர்களான சில மனிதர்களை சந்தித்தார். அவர்கள் அவரிடம் மதினாவில் உள்ள அரபியர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே உள்ள சண்டைகளை அறிவித்தார்கள். இம்மனிதர்கள் யூதர்களுடன் கருத்துவேறுபாடு கொண்டு இருந்தனர். மதினாவின் யூதர்கள் இவர்களிடம், "ஒரு நாள் எங்களிலிருந்து ஒரு நபி (தீர்க்கதரிசி) தோன்றுவார், அப்போது அவருடன் சேர்ந்து உங்களை (அரபியர்களை) நாங்கள் தோற்கடிப்போம்" என்று எச்சரிக்கை கொடுத்துயிருந்தார்களாம்.

முஹம்மது குர்‍ஆன் பற்றிச் சொல்வதை கேட்டு, இந்த கஜ்ரஜ் இனத்தவர்கள் ஈர்க்கப்பட்டார்கள். யூதர்கள் வருவார் என்றுச் சொன்ன நபி (தீர்க்கதரிசி) இவர் தான் என்று அம்மக்கள் நம்பினர். இதனால், யூதர்கள் இவரோடு சேர்ந்துவிடுவதற்கு முன்பாக, இவர்கள் முஹம்மதுவோடு சேர்ந்துவிட முடிவு செய்தனர். இதனால் இவர் அவர்களுக்கு எதிரியாக இருக்க வாய்ப்பில்லாமல் போகும் என்று நம்பினர். அவர்கள் முஹம்மதுவிடம், "மதினாவில் பிரிவினைகள் உண்டு, அதனை முடிவிற்கு கொண்டுவர உம்மால் முடியும் என்றுச் சொன்னார்கள்".

"இதனை குறித்துக்கொள்ளுங்கள்! இறைவனின் பெயரில், உங்களை பயமுறுத்துகின்ற யூதர்கள் குறிப்பிட்ட நபி (தீர்க்கதரிசி) இவர் தான். யூதர்கள் அவரை அங்கீகரிப்பதற்கு முன்பாக நீங்கள் அவரை ஏற்றுக்கொள்ளுங்கள். இந்த அழைப்பை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள், அவர் சொன்ன செய்தியில் இருக்கும் உண்மையை நம்பினார்கள், அவர்களிடம் சொல்லப்பட்ட இஸ்லாமை ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் கீழ்கண்டவாறு கூறினார்கள்:

"நாங்கள் எங்கள் மக்களை விட்டு வந்திருக்கிறோம், எந்த இன மக்களிடமும் காணமுடியாத அளவிற்கு எங்கள் மக்கள் விரிவினைகளினால் விரோதங்களினால் பிரிந்து இருக்கிறார்கள். உங்களின் மூலமாக இறைவன் எங்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பானாக. நாங்கள் எங்கள் மக்களிடம்(மதினாவிற்கு) சென்று அவர்களை ஒன்று கூட்டி, உங்கள் இஸ்லாமிய அழைப்பைப் பற்றி கூறுவோம். நாங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொண்டது போல, அவர்களும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளும் படி நாங்கள் அழைப்பு விடுப்போம். அவர்கள் மறுபடியும் ஒன்று கூடி ஒற்றுமையாக இருந்தால், உம்மைப் போல பலமுள்ளவர் யாருமே இருக்கமுடியாது" Tabari, volume 6, page 125
.

அவர்கள் மதினாவிற்கு திரும்பிச் சென்று, முஹம்மது மற்றும் இஸ்லாம் பற்றி அங்குள்ளவர்களுக்குச் சொன்னார்கள். அவர்களில் 12 பேர் மக்காவிற்கு திரும்பி வந்து முஹம்மதுவிற்கு நம்பிக்கையாளர்களாக இருப்போம் என்று உறுதிமொழி கொடுத்தார்கள். இது தான் "அகபாவின் முதல் உறுதி மொழியாகும் (First Pledge of Aqabah)".

இவ்வித‌மாக‌ இஸ்லாமுக்கு மாறிய‌வ‌ர்க‌ள் ம‌தினாவில் இஸ்லாமை பிர‌ச்சார‌ம் செய்தார்க‌ள். அவர்களுக்கு இஸ்லாமைப் பற்றி இன்னும் போதிப்பதற்காக முஹ‌ம்ம‌து முஸ்லீம்க‌ளை ம‌தினாவிற்கு அனுப்பினார். ஓரிரு ஆண்டுக‌ளுக்குள் ம‌தினாவில் அனேக‌ர் இஸ்லாமை தீவிர‌மாக‌ பின்ப‌ற்றுகிற‌வ‌ர்க‌ளாக‌ மாறினார்க‌ள். அவ‌ர்க‌ள் முஹ‌ம்ம‌துவை காப்ப‌தாக‌ உறுதிய‌ளித்தார்க‌ள்.

[மதினா மக்கள் கூறினார்கள்]: "உம்மை சத்தியத்துடன் அனுப்பியவரின் பெயரில் உறுதிகூறுகிறோம், எங்கள் பெண்களை நாங்கள் பாதுகாப்பது போல, உங்களை நாங்கள் பாதுகாப்போம். ஓ இறைத்தூதரே, எங்களுடன் நீங்களும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். நாங்கள் போர் புரியக்கூடிய அளவிற்கு வலிமையுள்ளவர்களாக இருக்கிறோம். இதனை நாங்கள் எங்கள் முன்னோர்களிடமிருந்து பெற்று இருக்கிறோம். Tabari vol 6, page 133

அவருடன் ஒற்றுமையாக இருப்போம் என்று நீங்கள் எடுத்துக்கொண்ட உறுதி மொழியானது, உலக மக்கள் அனைவரிடமும் போர் புரிய நீங்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியாகும். Tabari vol 6, page 134

பிறகு எழுபதிற்கும் அதிகமான மதினா மக்கள் மக்காவிற்கு திரும்பி வந்து முஹம்மதுவை சந்தித்து தங்கள் நம்பிக்கையை உறுதிபடுத்துவதாக சொன்னார்கள். இது தான் "அகபாவின் இரண்டாம் உறுதிமொழியாகும் (Second Pledge of Aqabah)". அவர்கள் மதினாவிற்கு திரும்பி வந்தார்கள், இஸ்லாம் அதிகமாக வளர்ந்தது.

இங்கு முக்கிய‌மாக‌ க‌வ‌னிக்க‌ப்ப‌ட‌வேண்டிய‌ ஒரு விஷ‌ய‌ம் என்ன‌வென்றால், இப்போது முஹ‌ம்மதுவிற்காக‌ அதிக‌ எண்ணிக்கையில் ம‌க்க‌ள் சேர்ந்தார்க‌ள், இவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் உயிரையும் அவ‌ருக்காக‌ தியாக‌ம் செய்ய‌வும் த‌யாரானார்க‌ள், என்பது தான்.

முஹம்மது மதினாவிற்கு தப்பி ஓடுகிறார் (MUHAMMAD FLEES TO MEDINA)

[முஹம்மது மதினாவிற்கு தப்பி ஓடுதல்: LoM p219-221, Tabari vol 6 p145-150]

"A hard beginning maketh a good ending." John Heywood

"ஒரு கடினமான ஆரம்பம், சுகமான முடிவை உருவாக்கும்"

முஸ்லீம்களுக்கு மக்காவில் துன்பம் அதிகரித்தது, ஒரு நாள் மக்காவினர் தன்னை கொன்றுவிடுவார்கள் என்று முஹம்மது உணர்ந்துக்கொண்டார். முஹம்மது தன்னை பின்பற்றுகிறவர்களின் பாதுகாப்பு கருதி அவர்களை மதினாவிற்கு அனுப்புகிறார். இப்படி மக்காவிலிருந்து மதினாவிற்கு இடம்பெயர்ந்த நிகழ்ச்சியைத் தான் "ஹிஜ்ரா" என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி பற்றிய முக்கியத்துவம் அனேகருக்கு தெரிவதில்லை. இந்த இடம்பெயர்தல் தான் "இஸ்லாமிய சமுதாயம்" உருவாக காரணமாக இருந்தது. இஸ்லாம் ஒரு ஆன்மீக, சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ அமைப்பாகும்.

இந்த "ஹிஜ்ரா" இஸ்லாமில் முக்கியமான மாற்றம் ஏற்பட காரணமாக இருந்தது. இஸ்லாமை உருவாக்க வன்முறை கட்டளைகள் உருவாக்க‌ப்ப‌ட்ட‌து.


ம‌தினாவிற்கு இட‌ம் பெய‌ர்வ‌த‌ற்கு முன்பாக‌, ம‌க்காவில் இருக்கும் போதே, "ச‌ண்டையிட‌ க‌ட்ட‌ளை வெளிப்ப‌ட்ட‌து": குர்‍‍ஆன் சூரா 22:39-41 & 2:193

போர் தொடுக்கப்பட்டோருக்கு அவர்கள் அநியாயம் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதனால் (அவ்வாறு போர் தொடுத்த காஃபிர்களை எதிர்த்துப் போரிடுவதற்கு) அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது நிச்சயமாக அவர்களுக்கு உதவி செய்ய அல்லாஹ் பேராற்றலுடையவன். (குர்‍ஆன் 22:39)

இவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; 'எங்களுடைய இறைவன் ஒருவன்தான்' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் சிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான். (குர்‍ஆன் 22:40)

அன்றியும், இவர்கள் (எத்தகையோரென்றால்) இவர்களுக்கு நாம் பூமியில் இடம்பாடாக்கிக் கொடுத்தால், இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள்; ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையான காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள்; தீமையை விட்டும் விலக்குவார்கள் மேலும், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது. (குர்‍ஆன் 22:41)

ஃபித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்;. ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் - அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது. (குர்‍ஆன் 2:192)

முஹம்மது மதினாவிற்கு செல்வதற்கு முன்பு "இனி மக்கா மக்களிடம் நீர் சண்டையிடலாம்" என்றுச் சொல்லியிருந்தார். இஸ்லாமியரல்லாதவர்களோடு தீவிரமான மற்றும் பாதுகாப்பு கருதி செய்யப்படும் சண்டைகள் இனி அனுமதிக்கப்படுகிறது, கற்றுக்கொடுக்கப்படுகிறது, உற்சாகப்படுத்தப்படுகிறது மற்றும் பின்பற்றப்படுகிறது. கு‍ர்‍ஆனில் காணப்பட்ட அஹிம்சை வசனங்கள் இப்போது "இரத்து செய்யப்படுகிறது" அல்லது "செல்லாது என்றுச் சொல்லப்படுகிறது".

சூழ்நிலைகள் மாறின,

முஹம்மதுவிற்கு கிடைத்த வாய்ப்புக்கள் மாறின,

சட்டங்கள் மாறின,

கடைசியாக முஹமம்துவின் இஸ்லாமும் மாறிவிட்டது.

(Many of the non-violent verses in the Quran were now "abrogated", or canceled. Circumstances changed, Muhammad's opportunities changed, the rules of the game changed, and thus Muhammad's Islam changed.)


முஹம்மது மிகவும் கஷ்டப்பட்டு மதினாவிற்கு ஓடினார். மதினா 200 மைல்கள் தூரத்தில் வட திசையில் இருக்கிறது. அங்கு அனேக அரபி மற்றும் யூதர்கள் வாழ்ந்துக்கொண்டு இருந்தார்கள்.

ஹிஜ்ராவின் தேதி: கி.பி. 622 (அ) 623 ஆகும். இந்த தேதிலிருந்து தான் இஸ்லாமிய நாட்காட்டி ஆரம்பிக்கிறது (After Hijrah = "AH"). இஸ்லாமிய சமுதாயம் மதினாவில் ஸ்தாபிக்கப்பட்டது.

பாகம் 4 முற்றிற்று

ஆங்கில மூலம்: "LIFE OF MUHAMMAD" SEMINAR

ஐந்தாம் பாகம் அடுத்த கட்டுரையில்....

"கிறிஸ்தவர்களுக்காக" பக்கத்தை காண்க‌

"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3

"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3

"LIFE OF MUHAMMAD" SEMINAR - PART 3

முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு பாகம் 1ஐ இங்கு படிக்கவும்.

முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு பாகம் 2ஐ இங்கு படிக்கவும்.

இந்த கட்டுரையில் அதன் தொடர்ச்சியாக மூன்றாம் பாகத்தை காண்போம்.

எச்சரிப்பவராக முஹம்மது: "பிரச்சாரம் செய்தல், ஒடுக்கப்படுதல் மற்றும் பாதுகாக்கப்படுதல்"

[பிரச்சாரம் செய்தல், ஒடுக்கப்படுதல் மற்றும் பாதுகாக்கப்படுதல்: LoM p117-218, Tabari vol 6 p88-145, various Hadith]

முஹம்மது இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகள் வரை தனக்கு ஏற்பட்ட அனுபவத்திற்கு பிறகு, இஸ்லாமைப் பற்றி வெளிப்படையாக மக்காவின் மக்களுக்கு பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். அவர்கள் "ஓர் இறைவனை" வணங்கும் படி, தன்னை ஒரு உண்மையான அல்லாஹ்வின் நபி என்று நம்பும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அவர்களின் இதர தெய்வ நம்பிக்கையைப் பற்றி கடுமையாய் விமர்சித்தார்.

இந்த காலக்கட்டத்தில் முஹம்மது "எச்சரிக்கை" செய்பவராக மட்டுமே இருந்தார். மக்கள் தன் கொள்கை மீது நம்பிக்கை கொள்ளும் படிச் செய்ய, அவர்களை கட்டாயப்படுத்த‌ அவருக்கு ஆற்றல் இல்லாமல் இருந்தது.

"வரவிருக்கும் பயங்கரமான அழிவைப் பற்றி எச்சரிக்கை செய்ய‌ நான் வந்திருக்கிறேன்". "நான் உங்கள் அனைவரையும் ஒன்று கூட்டி, இறைவனின் தண்டனையைப் பற்றி எச்சரிக்கை செய்கிறேன்". Tabari vol 6, page 89, 92.

மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா? குர்‍ஆன் 10:99

மக்காவில் முஹம்மதுவின் வாழ்க்கை இயேசுவின் வாழ்க்கைக்கு ஒத்து இருந்தது.

முஹம்மது தன் செய்தியை உறுதியுடன் போதித்தார். அவர் நிந்தனைகளையும், அவமானங்களையும் பயமுறுத்தல்களையும் சந்தித்தார் மற்றும் சகித்தார். முஹம்மது மக்கா மக்களின் நம்பிக்கையை பரிகாசம் செய்தார் அதனால், மக்கா மக்கள் அவர் மீது கடுங்கோபம் கொண்டு கொதித்தெழுந்தனர். ஒரு குறிப்பிட்ட சமயத்தில், "தங்கள் நம்பிக்கையைப் பற்றி பரிகசித்து பேசுவதை நிறுத்திவிட்டால், உம்மை விட்டுவிடுகிறோம்" என்று அம்மக்கள் சொன்னார்கள், ஆனால், முஹம்மது மறுத்துவிட்டார்.

முஹம்மது மக்கா மக்களின் மத நம்பிக்கையை அவமானப்படுத்தியதாலும், வேறு ஒரு நம்பிக்கையை தங்களுக்கு போதித்ததாலும், அவர்கள் அவருக்கு எதிராக எழும்ப ஆரம்பித்தார்கள். முஹம்மதுவின் சித்தப்பா அபூ தலிப் அவருக்கு பாதுகாப்பு அளித்துக்கொண்டு வந்தார். இதன் காரணமாக, மக்கா மக்கள் உடனே அவரை கொல்லமுடியவில்லை.

"அபூ தலிப் உங்கள் சொந்தக்காரர் [முஹம்மது] எங்கள் தெய்வங்கள் பற்றி தவறாக பேசுகிறார், நம் மதத்தை பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகிறார். நம்முடைய கலாச்சாரத்தை ஏளனம் செய்கிறார் மற்றும் நம்முடைய முற்பிதாக்கள் வழிதவறியவர்கள் என்றுச் சொல்கிறார். அவர் எங்கள் மீதான தன் குற்றச்சாட்டுக்களை நிறுத்திக்கொள்ளும்படி செய்யும், அல்லது நாங்கள் அவருக்கு தகுந்த பதில் அளிக்க (ஒரு கை பார்க்கும் படி) எங்களுக்கு அனுமதி அளியும். நாங்கள் எப்படி அவருக்கு எதிராக இருக்கிறோமோ, அதே போல நீரும் இருக்கிறீர், உங்களுக்காக வேண்டுமானால் நாங்கள் அவரை பார்த்துக்கொள்கிறோம். Tabari, vol 6, pages 93, 94.

தன்னை பின்பற்றும் சிலரை முஹம்மது சம்பாதித்தார். மக்கா மக்கள் அவரை பின்பற்றுகிறவர்களை அடிக்கடி தாக்கி பேசினார்கள்.

"இஸ்லாமை ஏற்றுக்கொண்டு முஹம்மதுவின் சகாக்களாக இருந்தவர்களுக்கு எதிராக குரைஷி மக்கள் விரோதத்தை வளர்த்துக்கொண்டார்கள், அவர்களுக்கு எதிராக கலகஞ்செய்தார்கள்." Tabari vol 6, page 97.

தன்னை எதிர்த்த சிலரை முஹம்மது வெறுத்தார், "கேளுங்கள் குரைஷி மக்களே, முஹம்மதுவின் உயிர் தங்கியிருக்கும் இறைவனின் பெயரில் சொல்கிறேன், உங்களுக்கு நான் மரணத்தை தருவேன்" என்று முஹம்மது கூறினார். Tabari vol 6 page 102.

இஸ்லாமியர்களுக்கு ஒடுக்குதல் மிகவும் தீவிரமாக இருந்தது, அதனால் முஹம்மது தன்னை பின்பற்றுகிறவர்கள் சிலரை பாதுகாப்புக்காக அபிசீனியாவிற்கு அனுப்பிவிட்டார். முஸ்லீம்களுக்கு எதிராகவும் அவர்களின் இனத்திற்கு எதிராகவும் மக்கா மக்கள் மிகப்பெரிய புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்தார்கள். முஹம்மது தன் மார்க்கத்தை விட்டுவிட, மக்கா மக்கள் அவருக்கு இலஞ்சம் கொடுக்கவும் முயற்சித்தார்கள்.

இறைத்தூதருக்கு குரைஷி மக்கள் அதிகமதிகமான சொத்துக்களை கொடுப்பதாகவும், அதனால், மக்காவில் முஹம்மது மட்டுமே மிகப்பெரிய பணக்காரராக இருப்பார் என்றும் வாக்களித்தனர். அவருக்கு எத்தனை மனைவிகள் விருப்பமோ அத்தனை மனைவிகளை கொடுப்பதாகும், மற்றும் அவரது கட்டளைகளுக்கு கீழ்படிந்து இருப்பதாகும் வாக்களித்தனர்.

குரைஷி மக்கள் முஹம்மதுவிடம் இவ்விதமாக கூறினார்கள், "முஹம்மதுவே நீர் எங்கள் தெய்வங்கள் பற்றி ஏளனமாக பேசாமல் இருந்தால், குற்றப்படுத்தாமல் இருந்தால், இவைகளை நாங்கள் உங்களுக்குத் தருவோம். இப்படி நீர் செய்யவில்லையானால், இன்னொரு விஷயத்தையும் நாங்கள் சொல்கிறோம், இதனால் நீரும் நாங்களும் நன்மையடைவோம்". அது என்ன என்று அவர் கேட்டார். அதற்கு அவர்கள் "நீர் எங்கள் தெய்வங்களான அல் லத் மற்றும் அல் உஜ்ஜாவை ஒரு ஆண்டுகாலம் வணங்கவேண்டும், அதே போல நாங்கள் உங்கள் இறைவனை ஒரு ஆண்டுகாலம் வணங்குவோம்" என்றனர். Tabari, vol 6, pages 106, 107.

இதற்கு முஹம்மது ஒப்புக்கொள்ளவில்லை. அவர் தன் நிலையைவிட்டுவிடவோ, தன் நம்பிக்கையை விட்டுவிடவோ விரும்பவில்லை (பார்க்கவும் குர்‍ஆன் சூரா 109:1 லிருந்து 6 வரை). முஸ்லீம்களுக்கு செய்யப்பட்ட கொடுமைகள் உச்சியை எட்டியது, அவர்களுக்கு வாழ்வு மிகவும் கடினமாக இருந்தது.

ஏதாவது கேள்விகள் உண்டா?

முக்கிய அம்சம்: சாத்தானின் வசனங்கள் (THE SATANIC VERSES)

[சாத்தானின் வசனங்கள்: "Tabari's History", vol 6 p 107-113, "Kitab al-Tabaqat al-Kabir", pages 236-239, LoM p165-167, "The Life of Mahomet", Volume 2, pages 150-152, by W. Muir, quoting "Kitab al-Wakidi"]

அநேகங் கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள் - இயேசு, மத்தேயு 24:11

"And many false prophets will appear and deceive many people." Jesus, Matthew 24:11

அனேக‌ இஸ்லாமிய‌ர்க‌ள் இப்ப‌டிப்ப‌ட்ட‌ ஒரு நிக‌ழ்ச்சி (சாத்தானின் வசனங்கள்) ந‌டைபெற‌வில்லை என்றுச் சொல்கிறார்க‌ள். ஆனால், உண்மையில் "சாத்தானின் வ‌சன‌ங்க‌ள்" நிகழ்ச்சி ப‌ற்றிய‌ விவ‌ர‌ங்க‌ள் ஆர‌ம்ப‌கால‌ இஸ்லாமிய‌ நூல்க‌ளில் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. இது ம‌ட்டும‌ல்ல‌, இந்த‌ விவ‌ர‌ங்க‌ள் ஹ‌தீஸ்க‌ள் ம‌ற்றும் குர்‍ஆனில் உள்ள‌ விவ‌ர‌ங்க‌ளோடு ஒத்துப்போகிற‌து.

முஹ‌ம்ம‌து த‌ன்னை ந‌ம்புகிற‌வ‌ர்க‌ளின் துன்ப‌ங்க‌ளுக்கு ஒரு முடிவு க‌ட்ட‌வேண்டும் என்று விரும்பினார். அதே நேர‌த்தில் த‌ன் ஊர் ம‌க்க‌ளாகிய‌ ம‌க்காவின‌ரோடு ச‌மாதான‌மாக‌ இருக்க‌ விரும்பினார். இந்த பிரச்சனைகளுக்கு முடிவு கட்ட அல்லாஹ் ஒரு வெளிப்பாட்டை அனுப்புவார் என்று முஹ‌ம்ம‌து ந‌ம்பினார்.

"இறைத்தூதர் தன் மக்களின் நலனில் அதிக அக்கரையுள்ளவராக இருந்தார் மற்றும் மக்காவினரோடு ஒற்றுமையடைந்து சமாதானமாக இருக்க விரும்பினார்..." Tabari vol 6, page 107, 108.

இந்த சந்தர்ப்பத்தை சாத்தான் பயன்படுத்திக்கொண்டு முஹம்மதுவின் வாயில் தன் வசனங்களை போட்டுவிட்டான். முஹம்மது சாத்தானின் வார்த்தைகளை அப்படியே அல்லாஹ்வின் வார்த்தையாக வெளிப்படுத்திவிட்டார் மற்றும் மக்காவினரின் தெய்வங்களுக்கு மரியாதையும் செய்ய அனுமதித்து விட்டார்.

குர்‍ஆன் சூரா 53:19-20 நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா? மற்றும் மூன்றாவதான "மனாத்"தையும் (கண்டீர்களா?) இவைகள் உயர பறப்பவைகள், இவர்களின் மத்தியஸ்தம் அங்கீகாரத்தோடு ஏற்றுக்கொள்ளப்படும்.

முஹம்மதுவின் வார்த்தைகளை மக்கா மக்கள் ஏற்றுக்கொண்டனர், ஏனென்றால், இவர் அவர்களின் தெய்வங்களை அங்கீகரித்தார்.

"குரைஷிகள் இதை கேட்டதும், மட்டில்லா மகிழ்ச்சி கொண்டனர், மற்றும் அவர் தங்கள் தெய்வங்கள் பற்றி சொன்ன விதம் அவர்களுக்கு அதிக சந்தோஷத்தை கொடுத்தது..." Tabari vol 6, page 108.

காபிரியேல் தூதன் முஹம்மதுவை கடிந்துக்கொண்டு அவரின் தவறை திருத்தினார். இதனால், முஹம்மது குர்‍ஆனில் இருந்த அந்த சாத்தானின் வசன பகுதிக்கு பதிலாக வேறு வசனத்தைச் சொன்னார், மறுபடியும் இது மக்காவினரின் மனதை வேதனைக்குள்ளாக்கியது. முஹமம்து தன் பாவத்திற்காக அதிகமாக வேதனையடைந்தார், ஆகையால், காபிரியேல் முஹம்மதுவிடம் "அல்லாஹ் உன் தவறை லேசாக எடுத்துக்கொண்டார்" என்றுச் சொன்னார், அதாவது சாத்தானின் பொய்யான வசனத்தை குர்‍ஆனோடு சேர்த்த முஹம்மதுவின் பாவத்தை அல்லாஹ் அவ்வளவு பெரிய பாவமாக கருதவில்லை. இதோடு நின்றுவிடாமல், முந்தைய நபிகளும் இதே போல சாத்தானால் தூண்டப்பட்டு, இதே பாவத்தை செய்தார்கள், அதாவது சாத்தானின் வசனத்தை இறைவனின் வசனமாகச் சொன்னார்கள் என்றும் அல்லாஹ் கூறினார்.

"முஹம்மதுவே நீர் செய்தது என்ன? நான் இறைவனிடமிருந்து கொண்டுவராத வசனத்தை நீர் சொல்லியிருக்கிறீர் மற்றும் உம்மிடம் சொல்லாத ஒன்றை சொன்னதாக சொல்லியுள்ளீர்". இதனால் இறைத்தூதர் மிகவும் வேதனையுற்றார் மற்றும் இறைவனுக்கு அதிகமாக பயந்தார். ஆனால், இறைவன் அவருக்கு வெளிப்பாட்டை அனுப்பினார், ஏனென்றால், அவர் மிகவும் கிருபையுள்ளவர், முஹம்மதுவை தேற்றினார் மற்றும் இந்த விஷயத்தை மிகப்பெரிய தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. மேலும், அவருக்கு முன்பிருந்த நபிகளும் அல்லது இறைத்தூதர்களும், முஹம்மது விரும்பியது போல விரும்பினார்கள், ஆனால், சாத்தான் தன் வார்த்தைகளை அவர்களின் வெளிப்பாடுகளில் புகுத்திவிட்டான், எப்படி முஹம்மதுவின் நாவில் போட்டானோ அது போல" என்று அல்லாஹ் முஹம்மதுவிற்கு அறிவித்தார். Tabari Vol 6, p109

பழைய ஏற்பாட்டின்படி, யாராவது ஒரு நபர் தேவனைவிட்டு வேறு தெய்வங்களை வணங்கும்படி செய்தால், அப்படிப்பட்டவர் கொல்லப்படவேண்டும் என்று கட்டளையுண்டு. யாராவது உண்மையான தேவன் சொல்லாத வசனத்தைச் சொன்னால், அவர் கொல்லப்படவேண்டும் உபாகமம் 13:1-5.

யேகோவா தேவன் இப்படிப்பட்ட பாவத்தை லேசாக எடுத்துக்கொள்ள மாட்டார். ஆனால், அல்லாஹ் இப்படிப்பட்ட பாவத்தை லேசாக எடுத்துக்கொண்டார். ஆகையால், யேகோவா தேவனும் அல்லாஹ்வும் ஒருவரே அல்ல. துரதிஷ்டவசமாக, சில கிறிஸ்தவர்கள், இஸ்லாமிய அல்லாஹ்வும், கிறிஸ்தவ தேவனும் அல்லது யேகோவா தேவனும் ஒருவரே என்றுச் சொல்கிறார்கள், ஆனால், உண்மையில் அது தவறாகும், இவ்விருவரும் ஒருவரல்ல.

சிந்திக்க ஆய்வு செய்ய சில கேள்விகள் (QUESTIONS FOR THOUGHT AND STUDY)

1) தேவன் எப்போதாவது இப்படிப்பட்ட மிகப்பெரிய பாவத்தை, லேசாக விட்டுவிடுவாரா?

2) குர்‍ஆன் ஒரு விசேஷித்த ஒன்றாக இருந்தால், ஏன் சாத்தானின் வசனத்திற்கும் அல்லாஹ்வின் வசனத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை குர்‍ஆனால் சொல்லமுடியவில்லை?

3) முஹம்மதுவினாலும், முஸ்லீம்களாலும் எது சாத்தானின் வசனம் எது அல்லாஹ்வின் வசனம் என்று வகைபிரிக்க தெரியாமல் இருக்கும்போது, குர்ஆனில் எவ்வளவு வசனங்கள் சாத்தானால் இறக்கப்பட்டு இருக்கும்?

4) குர்‍ஆன் என்பது பரிசுத்தமான இறைவனின் வேதமாக இருந்தால், முஹம்மதுவினால் உடனே அவ்வசனம் சாத்தானின் வசனம் என்று ஏன் கண்டுபிடிக்கமுடியவில்லை? ஏன் முஹம்மதுவை பின்பற்றினவர்களும் கண்டுபிடிக்கவில்லை? முஹம்மதுவினால், எது சாத்தானின் வசனம், எது அல்லாஹ்வின் வசனம் என்று வேறுபிரித்து சொல்லத் தெரியவில்லையானால், அவர் ஒரு உண்மையான நபி (தீர்க்கதரிசி) என்றுச் சொன்னால் ஏற்கக்கூடியதாக உள்ளதா?

பாகம் 3 முற்றிற்று

ஆங்கில மூலம்: "LIFE OF MUHAMMAD" SEMINAR

நான்காம் பாகம் அடுத்த கட்டுரையில்....

"கிறிஸ்தவர்களுக்காக" பக்கத்தை காண்க