ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

புதன், 31 மே, 2017

2017 ரமளான் (22) – நிலமெல்லாம் இரத்தம் -அரேபியாவிற்கு வெளியே இஸ்லாம் எப்படி வெகுவேகமாக பரவியது? – பாராவின் சாட்சி

நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்திற்கு கொடுத்த முந்தைய கட்டுரைகளை படிக்க இங்கு சொடுக்கவும்.

முன்னுரை:

தற்போதைய பதிவில், பா. ராகவன் அவர்களின் நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்தின் 17வது அத்தியாயத்திலிருந்து இரண்டு விவரங்களை ஆய்வு செய்யப்போகிறோம். முதலாவதாக, ஹதீஸ்கள் பற்றி அவர் எழுதிய வரிகள் முஸ்லிம்களுக்கு வருத்தம் உண்டாக்கும் என்பதை அவருக்கு தெரிவிக்கவேண்டும். இரண்டாவதாக, இஸ்லாமின் இரண்டாம் கலிஃபா உமர் அவர்களின் ஆட்சியின் போது, இஸ்லாம் அரேபியாவிற்கு வெளியே வெகு வேகமாக பரவியது என்று பாரா அவர்கள் எழுதியுள்ளதை ஆய்வு செய்வோம். 

1) ஹதீஸ்கள் முஹம்மதுவுடையதா?

பாரா அவர்கள் கீழ்கண்ட விதமாக ஹதிஸ்கள் பற்றி எழுதியுள்ளார்கள்.

17) உமரின் மனமாற்றம்

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 17

ஆயிரக்கணக்கான பக்கங்கள் உள்ள குர்ஆன், பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் வரும் ஹதீஸ்கள் (முகம்மது நபியின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களும் அவரது போதனைகளும் அடங்கிய பிரதிகளுக்கு ஹதீஸ் என்று பெயர். சிலர் ஹதீத் என்றும் இதனை அழைப்பார்கள். குர்ஆனையும் ஹதீஸையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது. குர் ஆன் என்பது இறைவனால் அருளப்பட்டது. ஹதீஸ், முகம்மது நபியினுடையது.), 

பாரா அவர்களின் படி, குர்-ஆன் என்பது இறைவனால் அருளப்பட்டது, ஹதீஸ் என்பது இறைவனால் அருளப்படவில்லை, அது முஹம்மதுவுடையது.  அதாவது முஹம்மதுவின் வாழ்க்கையில் நடைப்பெற்ற  சம்பவங்கள் மற்றும் போதனைகள் அடங்கியது ஹதீஸ்கள் என்று குறிப்பிடுகிறார்.

இங்கு பாரா அவர்களுக்கும் இஸ்லாம் பற்றி எழுதும் மற்றவர்களுக்கும் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால், இஸ்லாமின் படி ஹதீஸ்கள் கூட அல்லாஹ் முஹம்மதுவிற்கு கொடுத்த வஹியே ஆகும். ஹதீஸ்களில் முஹம்மதுவின் சொல் மற்றும் செயல்களைக் காணலாம் என்பது உண்மையே! ஆனால், அவ்விரண்டும் முஹம்மதுவின் சொந்த செயல்பாடுகள் அல்ல, அவர் அல்லாஹ்வின் வஹியின்படியே பேசினார், அவரது செயல்களும் அல்லாஹ்வின் கட்டளையின்படியே அமைந்தது என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.

இரண்டு வகையான வஹிக்கள்:

முஸ்லிம்களின் படி வஹிகள் (வெளிப்பாடுகள்) இரண்டு வகைப்படும். முதலாவது வகை வஹி, ஜிப்ரீல் தூதன் மூலமாக அல்லாஹ் முஹம்மதுவிற்கு இறக்கியது, அதனை குர்-ஆன் என்று அழைப்பார்கள். இரண்டாவது வஹி, பல சந்தர்பங்களில் தேவைக்கு ஏற்ப, அல்லாஹ் முஹம்மதுவிற்கு வஹியை கொடுத்துள்ளான். அது எப்படி கொடுத்தான் என்று முஹம்மதுவிற்கு மட்டுமே தெரியும். முஸ்லிம்கள் முஹம்மதுவிடம் கேள்விகள் சந்தேகங்கள் கேட்கும் போது, முஹம்மது பதில் கொடுப்பார். இந்த பதில்கள் கூட, அல்லாஹ் முஹம்மதுவிற்கு கொடுத்த வஹி என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். 

ஹதீஸ்கள் முஹம்மதுவுடையது என்றுச் சொன்னால், முஸ்லிம்கள் அதனை பின்பற்றலாம் அல்லது விட்டுவிடலாம். ஆனால், ஹதிஸ்கள் பற்றிய  முஸ்லிம்களின் நிலைப்பாடு வேறுவிதமாக உள்ளது. குர்-ஆனும் வஹி தான், ஹதீஸ்களும் வஹி தான். எனவே, இரண்டையும் பின்பற்றவேண்டும்.  

முஸ்லிம்களிடையே இந்த ஹதீஸ் பிரச்சனை தீராத பிரச்சனையாக உள்ளது. ஹதீஸ்களை வைத்துக்கொண்டு, முஸ்லிம்கள் பிளவுப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பல ஆயிர ஹதீஸ்கள் இருப்பதினால், சில முஸ்லிம் அறிஞர்கள் (பீ. ஜைனுல் ஆபிதீன் போன்றவர்கள்) சில ஹதீஸ்களை மறுக்கும் போது, மற்ற முஸ்லிம்கள் இவரை எதிர்க்கிறார்கள். இவர்கள் ஒருவரை ஒருவர் காஃபிர் (முஸ்லிமல்லாதவன்) என்று சொல்லி திட்டிக்கொண்டு இருக்கிறார்கள். எனவே, பாரா அவர்களே, இனி முஸ்லிம்கள் பற்றி எழுதும் போது கொஞ்சம் பார்த்து எழுதுங்கள். நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்தில் நீங்கள் இஸ்லாம் பற்றி உயர்த்தி எழுதிவிட்டீர்கள், எனவே பிழைத்துவிட்டீர்கள், உண்மையை நீங்கள் எழுதியிருந்தால் உங்களை அவர்கள் உங்கள் தொடர் வந்துக்கொண்டு இருக்கும் போதே உயர்த்திவிட்டு இருந்திருப்பார்கள். இனி எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

2) அரேபியாவிற்கு வெளியே இஸ்லாம் எப்படி வெகுவேகமாக பரவியது?

திரு பாரா அவர்களே, இதே 17வது அத்தியாயத்தில், கீழ்கண்டவிதமாக நீங்கள் எழுதியுள்ளீர்கள்.

பாரா அவர்கள் எழுதியவைகள்:

இரண்டாவது கலீஃபாவாக முடிசூடி அமர்ந்தவர். (முதலாவது கலீஃபா, அபூபக்ர். இவர் அப்புறம் வருவார்.) உமரின் ஆட்சிக்காலத்தின் போதுதான் அரேபியாவுக்கு வெளியிலும் இஸ்லாம் வெகு வேகமாகப் பரவத் தொடங்கியது. உமர், கலீஃபாவாக இருந்த காலத்தில் ஜெருசலேம் எகிப்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்தது. ஒரு பெரும் படையெடுப்பின் இறுதியில் எகிப்தை அப்போது ஆண்டுகொண்டிருந்த (கிறிஸ்துவர்களான) பைசாந்தியர்கள் என்கிற இனத்தவரை வீழ்த்தி, ஜெருசலேத்தில் காலெடுத்து வைத்தார் உமர்.அப்போது ஜெருசலேத்தின் ஆர்ச் பிஷப்பாக இருந்தவர், நகரின் சாவியை (அடையாளச் சாவிதான்!) தாமே மனமுவந்து உமரிடம் அளித்து, ஆளவரும்படி அழைப்பு விடுத்தது வினோதமான ஆச்சர்யம்!

அ) அரேபியாவுக்கு வெளியிலும் இஸ்லாம் வெகு வேகமாகப் பரவத் தொடங்கியது

பாரா அவர்களே, உங்களுடைய மேற்கண்ட பத்தியின் முதல் வரியை முதலாவது கவனிப்போம்.  உமரின் காலத்தில் அரேபியாவிற்கு வெளியே "இஸ்லாம்  வெகு வேகமாகப் பரவத்தொடங்கியது" என்று எழுதியுள்ளீர்கள்.

இஸ்லாம் வெகு வேகமாகப் பரவத்தொடங்கியது  - இதன் அர்த்தமென்ன?

வாசகர்கள் கூர்ந்து கவனிக்கவேண்டும், இந்த நான்கு வார்த்தைகள் அடங்கிய வரியில் இரண்டு முக்கியமான விவரங்கள் அடங்கியுள்ளது.

கேள்வி 1: எது வேகமாக பரவியது?

பதில் 1: இஸ்லாம் வேகமாக பரவியது

கேள்வி 2: எங்கே வேகமாக இஸ்லாம் பரவியது?

பதில் 2: அரேபியாவிற்கு வெளியே உள்ள நாடுகளில்

இப்போது தான் முக்கியமான கேள்விக்கு வருகிறோம்:

கேள்வி 3: எப்படி இஸ்லாம் அரேபியாவிற்கு வெளியே வெகு வேகமாக பரவத்தொடங்கியது?

இந்த கேள்விக்கு பாரா அவர்கள் தான் பதில் சொல்லவேண்டும், அல்லது முஸ்லிம்கள் அவருக்கு பதில் சொல்ல உதவலாம். வாசகர்களுக்கு உதவும் என்பதற்காக நான் சில ஆப்ஷன்களை தருகிறேன், அதில் எது சரியாக இருக்கும் என்று நீங்கள் தெரிவு செய்யுங்கள்.

பதில் 3: 

Option A) இஸ்லாமிய தாவா ஊழியம்:

மதினாவில் இருந்த இஸ்லாமிய தலைவர் கலிஃபா உமர் அவர்கள்,  பல முஸ்லிம்களை அரேபியாவிற்கு வெளியே இருக்கும் நாடுகளுக்கு அனுப்பி, புத்த பிட்சுக்களைப்போல,  கிறிஸ்தவ மிஷனரிகளைப் போல, இஸ்லாமை அமைதியான முறையில் பரப்பும்படி அனுப்பினார். இதன் மூலமாக அந்நாடுகளில் இஸ்லாம் வேகமாக பரவியது.

Option B) இஸ்லாமிய கல்வி ஊழியம்

மதினாவில் இருந்த இஸ்லாமிய தலைவர் கலிஃபா உமர் அவர்கள், அரேபியாவிற்கு வெளியே இருக்கும் நாடுகளில் பல இஸ்லாமிய பல்கலைக்கழகங்களை, பள்ளிக்கூடங்களை அதாவது மதரஸாக்களை அமைத்து, இஸ்லாமை கற்றுக் கொடுத்தார். இஸ்லாமின் கோட்பாடுகளில், குர்-ஆனில் மயங்கிய அந்நாடுகள் இஸ்லாமை ஏற்றுக்கொண்டார்கள். இதனால் இஸ்லாம் அரேபியாவிற்கு வெளியே வெகு வேகமாக பரவியது.

Option C) இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் ஊழியம்

கலிஃபா உமர் அவர்கள், அரேபியாவிற்கு சுற்றியிருந்த நாடுகளுக்கு கடிதங்கள் எழுதி, எங்கள் நாட்டுக்கு (மதினாவிற்கு) எங்கள் இஸ்லாம் மார்க்கத்தை அறிந்துக்கொள்ள உங்கள் அறிஞர்களை அனுப்புங்கள். அவர்கள் இஸ்லாமை கற்றுக்கொண்டு, உங்களுக்கு அதனை விளக்குவார்கள். நீங்கள் விரும்பினால் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளலாம் என்று அன்பான அழைப்புவிடுத்தார். இப்படி வந்த அறிஞர்கள் இஸ்லாமினால் ஈர்க்கப்பட்டு தங்கள் நாடுகளுக்குச் சென்று இஸ்லாமை பரப்பினார்கள். இதனால் தான் அரேபியாவிற்கு வெளியே இஸ்லாம் வெகு வேகமாக பரவியது.

பாரா அவர்களுக்கு கேள்விகள்:

அன்பான பாரா அவர்களே, உமர் காலத்திலே அரேபியாவிற்கு வெளியே  "இஸ்லாம் வெகு வேகமாகப் பரவத்தொடங்கியது" என்று எழுதினீர்களே, உங்கள் ஆராய்ச்சியில் நீங்கள் கண்டுபிடித்த உண்மை என்ன? நான் கொடுத்த மூன்று தெரிவுகளில் நீங்கள் எதனை தெரிவு செய்யப்போகிறீர்கள்?

Option A) இஸ்லாமிய தாவா ஊழியம்?

Option B) இஸ்லாமிய கல்வி ஊழியம்?

Option C) இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் ஊழியம்?

என்ன! வாசகர்களுக்கு சிரிப்பு வருகிறதா?

இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்றுச் சொல்கிறீர்கள், மேலும் இஸ்லாமை தோற்றுவித்த முஹம்மதுவை பார்த்தவர்கள், அவரை தொட்டவர்கள், அவரது போதனைகளை தங்கள் சுய காதுகளால் கேட்ட அவரது தோழர்கள் வேறு எப்படி இஸ்லாமை பரப்பியிருக்கமுடியும்?

புத்தரின் சீடர்கள் இப்படித்தான் உலகமெல்லாம் சென்று புத்தரின் போதனைகளை பரப்பினார்கள். இயேசுவின் சீடர்கள் கூட இதே போலத்தான், உலகமெல்லாம் மிஷனரிகளாகச் சென்று, இயேசுவின் நற்செய்தியைப் பரப்பினார்கள். 

இயேசுவின் வழியில் தானும் வந்தேன் என்று பெருமைப்பட்டுக்கொண்ட முஹம்மதுவின் தோழர்கள் வேறு எப்படி இஸ்லாமை பரப்பியிருக்கமுடியும் என்று நினைக்கிறீர்கள்? 

பாரா அவர்களே, உங்கள் வரியில் 'இஸ்லாம்' என்றால் என்ன?

நீங்கள் எழுதிய கீழ்கண்ட வரியில் "இஸ்லாம்" என்று எதைச் சொல்கிறீர்கள்?

பாரா அவர்கள் எழுதியது:

"உமரின் ஆட்சிக்காலத்தின் போதுதான் அரேபியாவுக்கு வெளியிலும் இஸ்லாம் வெகு வேகமாகப் பரவத் தொடங்கியது."

இஸ்லாம் என்றால் --> குர்-ஆன் மற்றும் முஹம்மது காட்டிய ஆன்மீக போதனைகளை மக்கள் தங்கள் மனதளவில் ஏற்றுக்கொள்வதா?

அல்லது

இஸ்லாம் என்றால் --> மதினாவின் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கும் இஸ்லாமிய தலைவர் மற்ற நாடுகளில் மீது போர் புரிந்து, நாடுகளை பிடித்து, அங்கு ஒரு முஸ்லிமை நாட்டு தலைவராக நியமித்து, அந்நாடுகளில் வாழும் முஸ்லிமல்லாதவர்களிடம் "உங்கள் மார்க்கங்களை பின்பற்றிக்கொண்டு ஜிஸ்யா வரி கட்டுகிறீர்களா? அல்லது இஸ்லாமை ஏற்றுக்கொண்டு முஸ்லிமாக மாறுகிறீர்களா?" என்று கேட்பதா?

பாரா அவர்களே, உங்கள் அகராதியில் மேற்கண்ட உம்முடைய தமிழ் வரியில், இஸ்லாம் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? மனதளவில் இஸ்லாமா? அல்லது இஸ்லாமிய தலைவர் ஆட்சி செய்வதா?

இப்போது தான் நான்காவது ஆப்ஷன் வருகிறது…

Option D) போர் புரிந்து இஸ்லாமை பரப்புதல்

முஸ்லிம்கள் தலைவர்கள் போர் புரிந்து இஸ்லாமை பரப்பினார்களே தவிர, மக்களுக்கு ஊழியம் செய்து, இஸ்லாமை கற்றுக்கொடுத்து பரப்பவில்லை. இதனை எப்படி பாரா அவர்கள் எழுதுகிறார் என்பதை கீழே படியுங்கள்.

பாரா அவர்கள் எழுதியவைகள்:

இரண்டாவது கலீஃபாவாக முடிசூடி அமர்ந்தவர். (முதலாவது கலீஃபா, அபூபக்ர். இவர் அப்புறம் வருவார்.) உமரின் ஆட்சிக்காலத்தின் போதுதான் அரேபியாவுக்கு வெளியிலும் இஸ்லாம் வெகு வேகமாகப் பரவத் தொடங்கியது. உமர், கலீஃபாவாக இருந்த காலத்தில் ஜெருசலேம் எகிப்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்தது. ஒரு பெரும் படையெடுப்பின் இறுதியில் எகிப்தை அப்போது ஆண்டுகொண்டிருந்த (கிறிஸ்துவர்களான) பைசாந்தியர்கள் என்கிற இனத்தவரை வீழ்த்தி, ஜெருசலேத்தில் காலெடுத்து வைத்தார் உமர்.அப்போது ஜெருசலேத்தின் ஆர்ச் பிஷப்பாக இருந்தவர், நகரின் சாவியை (அடையாளச் சாவிதான்!) தாமே மனமுவந்து உமரிடம் அளித்து, ஆளவரும்படி அழைப்பு விடுத்தது வினோதமான ஆச்சர்யம்!

உமர் எப்படி ஜெருசலேமில் கால் எடுத்து வைத்தார்? யாராவது ஜெருசலேமிலிருந்து இவருக்கு அழைப்பு விடுத்தார்களா? அல்லது இவரது தாவா பணியாளர்கள் ஜெருசலேமில் ஊழியம் செய்து, இஸ்லாமை கற்றுகொடுத்தார்களா?

இவர் படையெடுத்துச் சென்றார் (தன் தளபதிகளை அனுப்பினார்), இதர நாடுகளை பிடித்தார். இப்படித்தான் இஸ்லாம் அரேபியாவிற்கு வெளியே வெகு வேகமாக பரவியது. அரேபியாவிற்கு வெளியே இஸ்லாம் பரவியது என்றுச் சொல்லாமல்,  இஸ்லாம் என்ற மதத்தை பின்பற்றிக்கொண்டு இருந்த உமர், இதர நாடுகளை பிடித்தார் என்றுச் சொல்லவேண்டும். இஸ்லாமுக்கு இங்கு என்ன வேலை இருக்கிறது? நாடுகள் மீது ஆசை கொண்டு, மதினாவில் சும்மா இருக்காமல், நாடுகளை பிடித்து, மக்களைக் கொன்று,  அடிமைகளாக பிடித்துக்கொண்டு, அவர்களை விற்று, அடிமைப்பெண்களை வைப்பாட்டிகளாக வைத்துக்கொண்டு இருந்தார்கள்.  இங்கு இஸ்லாமின் ஆன்மீகம் எங்கே இருக்கிறது? வெறும் ஆண்மீகம் தான் இருந்தது (நான் எழுத்துப்பிழை செய்யவில்லை).

இதனை யாராவது இல்லையென்று சொல்லமுடியுமா? பாரா அவர்கள் நிச்சயமாக இதனை மறுக்கமுடியாது, ஏனென்றால், அவரது வரிகளைத் தானே நாம் ஆய்வு செய்துக்கொண்டு இருக்கிறோம்.

முடிவுரை:

இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்பது முஸ்லிம்களின் வாதம். இதே வாதத்தை பாரா போன்ற எழுத்தாளர்கள் கூட கடன் வாங்கியாவது எழுதிவிடுகிறார்கள். ஆனால், உண்மையை மறைக்கமுடியுமா? ஆங்காங்கே சில உண்மை முத்துக்கள் எழுத்தாளர்களுக்கே தெரியாமல்  தெறித்துவிடுகின்றன. அப்படி தெறிக்கப்பட்ட ஒரு வரியைத் தான் நாம் இந்த பதிவில் கண்டோம்.

அடுத்த பதிவில் இதே 17வது அத்தியாயத்தில், பாரா அவர்கள்  "கலிஃபா உமர் அவர்களிடம், அப்போது ஜெருசலேமின் ஆர்ச் பிஷப்பாக இருந்தவர் மனமுவந்து நகர சாவியை கொடுத்தார்" எழுதிய வரிகளை சாவி கொண்டு திறந்து ஆய்வு செய்யப்போகிறோம்.  இவரது இவ்வரிகளை படிக்கும் போது, ஜெருசலேமின் ஆர்ச் பிஷப்  ஏழாம் நூற்றாண்டில், உமருக்கு ஒரு கடிதம் எழுதி, "வாங்கய்யா பழகலாம்" என்று சொன்னது போலவும், உமர் ஜெருசலேமுக்குச் சென்ற போது, ஆர்ச் பிஷம் நகரத்தின் சாவியை (முழு ஆட்சி செய்யும் பொறுப்பை) எடுத்து இவரிடம் சிரித்துக்கொண்டே கொடுத்தது மாதிரியும் தெரிகிறது. இது உண்மையா? வாங்க அடுத்த பதிவில் ஆய்வு செய்யலாம்.


2016-2017 ரமளான் தொடர் கட்டுரைகள்

ரமளான் தொடர் கட்டுரைகள் (2012 - 2017)

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2016ramalan/2017ramalan22.html



செவ்வாய், 30 மே, 2017

2017 ரமளான் (21) – நிலமெல்லாம் இரத்தம் – மூஸா ஹில்று கதை (18:60-82) யூதகட்டுக்கதையா?

துர்கர்னைன் மற்றும் அலேக்சாண்டர்  பற்றிய முந்தைய கட்டுரைகளை படிக்க இங்கு சொடுக்கவும்.

குர்-ஆனின் 18வது அத்தியாயத்தின் துல்கர்னைன் வசனங்களை(18:83-99) நாம் இதுவரை ஆய்வு செய்துக்கொண்டு இருக்கிறோம்.  இவ்வசனங்களுக்கு முன்பு இன்னொரு கதையை அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான். அதாவது குர்-ஆனின் 18:60-82 வரையிலான வசனங்களில் மூஸா நபி, ஹில்று(கிள்று) என்பவரிடம் பாடம் கற்றுக்கொண்ட நிகழ்ச்சியை அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான்.

இந்த கதைக்கு என்ன வந்தது? இதில் என்ன பிரச்சனை? என்று பார்த்தால், இந்த விவரமும் இஸ்லாமுக்கு முன்பு பல நூல்களில் இருந்தவைகள் தாம். அவைகளை அப்படியே கொஞ்சம் மாற்றி குர்-ஆனில் அல்லாஹ்வின் வசனங்களாக, உண்மை சரித்திரங்களாக பதிக்கப்பட்டுள்ளது. 

இந்த கட்டுரையை கீழ்கண்ட தலைப்புக்களில் ஆய்வு செய்வோம்:

1) குர்-ஆன் 18:60-82 வசனங்களின் சுருக்கம்

2) பீஜே அவர்களின் விளக்கம் - 273. மெஞ்ஞானமும் அஞ்ஞானமும்

3) மூஸாவும் காணாமல் போன மீனும், அலேக்சாண்டரும் ஜீவத்தண்ணீரும்

4) மூஸாவும் ஹில்றுவும், எலியாவும் ஜோஸுவா பென் லேவியும்

5) முடிவுரை


1. குர்-ஆன் 18:60-82 வசனங்களின் சுருக்கம்

இக்கட்டுரையின் அடிக்குறிப்பு [1]ல் இவ்வசனங்களை பதித்துள்ளேன், அவைகளை ஒரு முறை படித்துக்கொள்ளுங்கள். இவ்வசனங்களின் சுருக்கம் இது தான்:

கதை 1 - வசனங்கள் 18:60-64 

மூஸாவும், அவரது பணியாளரும் உணவுக்காக ஒரு  மீனை வைத்துக்கொண்டு நீண்ட பயணம் செய்தார்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தில், அந்த மீன் எப்படியோ தப்பித்துக் கொண்டு கடலில் நீந்திச் சென்றுவிட்டது. பணியாளனிடம் காலை ஆகாரத்துக்கு அந்த மீனை கொண்டுவா! என்று சொன்னபோது, பணியாளர் மீன் தப்பித்துவிட்டது என்று கூறுகின்றார். நான் தேடி வந்த இடம் இது தான் என்று மூஸா கூறுகிறார்.

கதை 2 - வசனங்கள் 18:65-82

அந்த மீன் தொலைந்த இடத்தில் மூஸா "ஹில்று" என்ற ஒரு அல்லாஹ்வின் அடியாரை சந்திக்கிறார், அவரோடு கூட இருக்க அனுமதி கேட்கிறார். ஹில்று மூஸாவிடம் நீ என்னோடு பொறுமையாக இருக்கமுடியாது. நான் உனக்கு விவரிக்கும் வரைக்கும், என்னுடைய எந்த செயலைப் பற்றியும் நீ கேள்வி கேட்கமாட்டாய் என்று உறுதி அளித்தால், என்னோடு வரலாம் என்று கூற, மூஸாவும் ஒப்புக்கொள்கிறார். ஹில்று மூன்று செயல்களைச் செய்கிறார், அம்மூன்று செயல்களின் பின்னணியை புரிந்துக்கொள்ளாமல், மூஸா மூன்று முறையும் ஹில்றுவிடம் கேள்வி கேட்கிறார். கடைசியாக, ஹில்று மூஸாவிற்கு அவரது செயல்களின் விளக்கத்தை தெரிவிக்கிறார். 

இது தான் குர்-ஆன் 18:62-82 வரையுள்ள வசனங்களில் வரும் இரண்டு கதைகளின் சுருக்கம். 

2. பீஜே அவர்களின் விளக்கம் - 273. மெஞ்ஞானமும் அஞ்ஞானமும்

மேற்கண்ட குர்-ஆன் வசனங்களுக்கு பீஜே அவர்கள் தம்முடைய குர்-ஆன் தமிழாக்கத்தில் விளக்கம்(எண் 273) அளித்துள்ளார்.  மேலும் இவ்வசனங்களின் பின்னணியைச் சொல்லும் கீழ்கண்ட ஹதீஸ்களையும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் பின்னணியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர்.

மூஸா நபியவர்கள் இஸ்ரவேலர்கள் மத்தியில் உரை நிகழ்த்துவதற்காக எழுந்தார்கள். "மனிதர்களில் மிகவும் அறிந்தவர் யார்?'' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. "இதுபற்றி அல்லாஹ்வே நன்கறிந்தவன்'' எனக் கூறாமல், "நானே மிக அறிந்தவன்'' எனக் கூறி விட்டார்கள். இதனால் அல்லாஹ் அவர்கள் மீது கோபமடைந்தான். "இரண்டு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் எனது அடியார் ஒருவர் இருக்கிறார். அவர் உம்மை விட அதிகம் அறிந்தவர்'' என்று அல்லாஹ் அறிவித்தான். அதற்கு மூஸா நபியவர்கள், "அவரை நான் எப்படி அடைவது?'' என்று கேட்டார்கள். "ஒரு பாத்திரத்தில் ஒரு மீனைப் போட்டுக் கொள்! அந்த மீனை எங்கே தவற விடுகிறாயோ அந்த இடத்தில் தான் அவர் இருக்கிறார்'' என்று அவர்களுக்குக் கூறப்பட்டது.

மூஸா நபியவர்களும், (அவர்களின் உதவியாளர்) யூஷஃ பின் நூன் அவர்களும் பாத்திரத்தில் மீனை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். ஒரு பாறையைக் கண்டு அங்கே தலைசாய்த்து தூங்கி விட்டார்கள். அந்த நேரத்தில் பாத்திரத்திலிருந்த மீன் நழுவி கடலில் சென்று விட்டது.

......இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர். (புகாரீ 122, 3401, 4725, 4726)

3. மூஸாவும் காணாமல் போன மீனும், அலேக்சாண்டரும் ஜீவத்தண்ணீரும்

அலேக்சாண்டர் ரொமான்ஸ் என்ற கட்டுக்கதை புத்தகங்களில் 'இஸ்லாமில் வரும் மூஸாவும் மீனும்' என்ற கதைப்போன்ற ஒரு கதை வருகிறது. அந்த கட்டுக்கதையில் அலேக்சாண்டர் 'ஜீவத்தண்ணீரை' தேடிச்சென்ற கதை வருகிறது.  அந்த தண்ணீரை குடிப்பவர் மரிக்கமாட்டாராம். அந்த இடத்தை எப்படி அறிந்துக்கொள்வது என்று கேட்க, ஒரு ஞானி அவருக்கு, ஒரு  மரித்த மீனை கொண்டு போய், ஒவ்வொரு ஊற்றிலும் கழுவு, எந்த ஊற்றில் கழுவும் போது, அது உயிர்பெருகின்றதோ, அந்த ஊற்று தான் 'ஜீவத்தண்ணீர் உள்ள ஊற்று' என்று அவருக்கு சொல்கிறார். 

One similarity between the Quran story and the Alexander romance concerns the fish that miraculously comes to life. This motif is found in the Syriac sermon by Jacob of Serugh, where Alexander travels in search of the Water of Life (Fountain of Youth). A shorter version of the story in also found in the Greek β-recension of the Alexander romance. In the Syriac legend, Alexander finds a wise man who tells Alexander to take a salted fish and wash it in the fountains in the Land of Darkness, and if the fish comes to life then he will have found the Water of Life:

The king [Alexander] said, "I have heard that therein [in the Land of Darkness] is the fountain of life, And I desire greatly to go forth and see if, of a truth, it is [there]. The old man said, ... "Command thy cook take with him a salt fish, and wherever he sees a fountain of water let him wash the fish; And if it be that it comes to life in his hands when he washes it, That is the fountain of the water of life which thou askest for, O King."

குர்-ஆன் ஆக்கியோன் இந்த கதையை அறிந்திருக்கிறார், எனவே மூஸா, ஹில்றுவை தேடிச்சென்றபோது, எப்படி அந்த இடத்தை அடையாளம் கண்டுபிடிப்பது என்று கேட்கும் போது, மேற்கண்ட மீன் கதை போன்ற ஒரு மீன் கதையை சொல்லியுள்ளார்.

4. மூஸாவும் ஹில்றுவும், எலியாவும் ஜோஸுவா பென் லேவியும்

யூதர்கள் தல்முத் என்ற நூல்களை எழுதினார்கள். அதோடு கூட பல கட்டுக்கதைகள் யூத வட்டாரங்களில் இஸ்லாமுக்கு முன்பு உலாவிக்கொண்டு இருந்தன. 

ஜோஸுவா பென் லேவி (Joshua ben Levi) என்பவர் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு சம்மந்தப்பட்ட யூத ரபி ஆவார். இவரது காலத்துக்கு பின்பு, இவர் பெயரில் பல கட்டுக்கதைகள் வந்தன. இவர் எலியாவின் தோழராக  அவரோடு கூட சென்றவராக கதைகள் எழுதப்பட்டன. அப்படிப்பட்ட ஒரு கதை தான் இப்போது நாம் பார்க்கப்போகிறோம். அந்த கதையை அப்படியே அல்லாஹ் உல்டா செய்து, குர்-ஆனிலும் புகுத்திவிட்டான். 

Rabbi Joshua ben Levi

References to Elijah in Jewish folklore range from short observations (e. g. It is said that when dogs are happy for no reason, it is because Elijah is in the neighborhood)[62] to lengthy parables on the nature of God's justice.

One such story is that of Rabbi Joshua ben Levi. The rabbi, a friend of Elijah's, was asked what favor he might wish. The rabbi answered only that he be able to join Elijah in his wanderings. Elijah granted his wish only if he refrained from asking any questions about any of the prophet's actions. He agreed and they began their journey. The first place they came to was the house of an elderly couple who were so poor they had only one old cow. The old couple gave of their hospitality as best they could. The next morning, as the travelers left, Elijah prayed that the old cow would die and it did. The second place they came to was the home of a wealthy man. He had no patience for his visitors and chased them away with the admonition that they should get jobs and not beg from honest people. As they were leaving, they passed the man's wall and saw that it was crumbling. Elijah prayed that the wall be repaired and it was so. Next, they came to a wealthy synagogue. They were allowed to spend the night with only the smallest of provisions. When they left, Elijah prayed that every member of the synagogue might become a leader.

Finally, they came to a very poor synagogue. Here they were treated with great courtesy and hospitality. When they left, Elijah prayed that God might give them a single wise leader. At this Rabbi Joshua could no longer hold back. He demanded of Elijah an explanation of his actions. At the house of the old couple, Elijah knew that the Angel of Death was coming for the old woman. So he prayed that God might have the angel take the cow instead. At the house of the wealthy man, there was a great treasure hidden in the crumbling wall. Elijah prayed that the wall be restored thus keeping the treasure away from the miser. The story ends with a moral: A synagogue with many leaders will be ruined by many arguments. A town with a single wise leader will be guided to success and prosperity. "Know then, that if thou seest an evil-doer prosper, it is not always unto his advantage, and if a righteous man suffers need and distress, think not God is unjust."[63]

இந்த கட்டுக்கதையின் சுருக்கம் இது தான், வாசகர்கள் கூர்ந்து படிக்கவும்.

1) எலியாவோடு தானும் வருவதாக ஜோஸுவா பென் லேவி அனுமதி கேட்டார். 

2) தான் எது செய்தாலும், கேள்வி கேட்காமல் வந்தால், அனுமதி கொடுப்பேன் என்று எலியா சொல்ல, ஜோஸுவா ஒப்புக்கொண்டார்.

3) நிகழ்ச்சி 1: இவ்விருவரும் ஒரு வயது முதிர்ந்த தம்பதியினரிடம் வந்து தங்குகிறார்கள். அவ்வேழை தம்பதியினர் இவர்களை நல்ல விதமாக உபசரிக்கிறார்கள். மறுநாள் கிளம்பும் போது, அந்த தம்பதியினருக்கு இருந்த ஒரு கிழட்டு மாடு சாகும்படி எலியா ஜெபம் செய்கிறார், அது அப்படியே செத்துவிடுகிறது. இது ஜோஸுவாவிற்கு பிடிக்கவில்லை. நம்மை நன்றாக கவனித்துக்கொண்ட இந்த ஏழை குடும்பத்திற்கு எலியா அநியாயம் செய்துவிட்டதாக ஜோஸுவா கோபம் கொள்கிறார்.

4) நிகழ்ச்சி 2: அடுத்ததாக, இவ்விருவர் ஒரு செல்வந்தர் வீட்டுக்கு வருகிறார்கள். நீங்கள் உழைத்து சாப்பிடுங்கள் என்றுச் சொல்லி, அவர் இவர்களை உபசரிக்காமல் துரத்துகிறார். இவ்விருவர் அங்கிருந்து கிளம்பும்போது, அந்த மனிதனுக்கு சொந்தமான ஒரு சுவர் விழும்நிலையில் இருந்ததை பார்த்து, எலியா உடனே அதை சரி செய்துவிடுகிறார். இந்த முறையும் ஜோஸுவாவிற்கு கோபம் வருகிறது.

5) நிகழ்ச்சி 3: அடுத்தபடியாக இவ்விருவரும் செழிப்பாக உள்ள ஒரு யூத தேவாலயத்துக்கு செல்கிறார்கள். ஆனால் அங்கு அவர்களுக்கு சரியான உபசரிப்பு கொடுக்கப்படவில்லை. அதை விட்டு புறப்படும் போது, எலியா, அந்த தேவாலயத்தின் அங்கத்தினர்கள் அனைவரும் தலைவர்கள் ஆகவேண்டும் என்று ஜெபம் செய்கிறார். இதனால் ஜோஸுவாவின் கோபம் உச்சத்தை அடைகிறது.

6) நிகழ்ச்சி 4: கடைசியாக  இவர்கள் ஒரு ஏழை ஜெப ஆலயத்திற்கு செல்கிறார்கள், அவர்கள் இவர்களை நன்றாக உபசரிக்கிறார்கள். அங்கிருந்து இவர்கள் கிளம்பும் போது, எலியா இந்த ஆலயத்திற்கு ஒரே ஒரு நல்ல தலைவர் கொடுக்கப்படவேண்டும் என்று ஜெபம் செய்கிறார். இப்படிப்பட்ட நல்ல ஜெப ஆலயத்திற்கு ஒரு தலைவர் தானா என்றுச் சொல்லி, ஜோஸுவா கோபம் கொண்டு, எலியாவிடம் 'நீங்கள் செய்த அனைத்து செயல்களுக்கும் விளக்கம் தாருங்கள் என்று கேட்டார்'.

7) எலியா நான்கு செயல்களுக்கும் விளக்கம் அளித்தார். அந்த ஏழை தம்பதியர்களில், அந்த மூதாட்டி அன்று மரிக்கவேண்டி இருந்தது, எனவே, எலியா ஜெபம் செய்து, அப்பெண்மணிக்கு பதிலாக அவர்களின் மாடு மரிக்கும்படி ஜெபம் செய்தார், அப்பெண் பிழைத்துவிட்டார்.

8) இரண்டாவதாக, தங்களை உபசரிக்காமல் விரட்டியவருக்கு சொந்தமான சுவரை ஏன் பழுதுபார்த்தார் என்பதை எலியா விளக்கினார். அந்த சுவருக்கு அடியில் பொக்கிஷம் உள்ளது, அதனை அந்த கஞ்சனாகிய மனிதன் பெறக்கூடாது என்பதற்காக அச்சுவர் பழுதுபார்க்கப்பட்டது. எதிர்காலத்தில் அந்த பொக்கிஷம் மற்றவர்களுக்கு கிடைக்கும். 

9) மூன்றாவதாக, அனேக தலைவர்கள் உண்டானால், ஒருவரின் பேச்சை இன்னொருவர் கேட்காமல், அவர்கள் முழுவதுமாக அழிந்துப்போவார்கள். அதே போல, ஒரே ஒரு தலைவன் மட்டும் எழும்பினால், அவனது வழியில் அந்த ஏழை தேவாலயம் நன்றாக செழிக்கும். இது தான் எலியா சொன்ன பதில்.

இதுவரை பார்த்த விவரங்களிலிருந்து அறிவது என்ன? இஸ்லாமுக்கு முன்னால் நிலவிய யூத வட்டார கட்டுக்கதைகளையும், அலேக்சாண்டர் ரொமான்ஸ் புத்தகங்களில் உள்ள கதைகளையும் சிறிது மாற்றி, முஹம்மது குர்-ஆனில் புகுத்தியுள்ளார்.  இதனை சுலபமாக புரிந்துக்கொள்ள கீழ்கண்ட அட்டவணை உதவிபுரியும்.

குர்-ஆன் மற்றும் யூத கட்டுக்கதை ஒப்பீடு:

விவரம்குர்-ஆன் (18:60-82)யூத கட்டுக்கதை
ஞானியாக இருப்பவர்ஹில்றுஎலியா
கற்க வந்தவர்மோசே (மூஸா)ஜோஸுவா பென் லேவி 
நிகழ்ச்சி 1ஏழைகளின் கப்பலில் ஓட்டை போடப்பட்டதுஏழை தம்பதியினரின் மாடு சாகடிக்கப்பட்டது
நிகழ்ச்சி 2பையன் கொல்லப்படுகிறான்உபசரிக்காத செல்வந்தர் – சுவரை சரி செய்தல்
நிகழ்ச்சி 3இவர்களை உபசரிக்காத கிராமம் – சுவரை சரி செய்தல்செல்வ செழிப்பான் தேவாலயம்
நிகழ்ச்சி 4குர்-ஆனில் 4வது நிகழ்ச்சி இல்லைஏழை தேவாலயம்

குர்-ஆனின் மூன்றாம் நிகழ்ச்சியும், யூதகட்டுக்கதையின் இரண்டாம் நிகழ்ச்சியும் ஒரே மாதிரியானது - பழுதான சுவர் சரி செய்யப்பட்டது.

முடிவுரை:

மேற்கண்ட பட்டியலை கூர்ந்து கவனியுங்கள். குர்-ஆனில் (18:60-82) மூன்று நிகழ்ச்சிகள், யூத கட்டுக்கதைகளில் நான்கு கதைகள் இருக்கின்றன. ஆனால் ஒரே மாதிரியான நிகழ்ச்சி தான்.  யூத கதைகளை கொஞ்சம் மாற்றி குர்-ஆனில் புகுத்தப்பட்டுள்ளது. குர்-ஆனின் ஒவ்வொரு வார்த்தையும், உலகம் உண்டாவவதற்கு முன்பாக அல்லாஹ்வால் எழுதப்பட்டது என்று முஸ்லிம்கள் சொல்வதை எப்படி நம்பமுடியும்?

அடுத்த கட்டுரையில் பாரா அவர்களின் இதர அத்தியாயங்களில் உள்ள விவரங்களை ஆய்வு செய்வோம். தேவைப்பட்டால் துல்கர்னைன் பற்றிய இதர விவரங்களை தனி கட்டுரைகளாக காண்போம்.

அடிக்குறிப்புக்கள்:

[1] குர்-ஆன் 18:60-82 வசனங்கள்

18:60. இன்னும் மூஸா தம் பணியாளிடம், "இரு கடல்களும் சேரும் இடத்தை அடையும் வரை நீங்காது நடப்பேன்; அல்லது வருடக் கணக்கில் நான் போய்க்கொண்டிருப்பேன்" என்று கூறியதை நீர் நினைவு படுத்துவீராக.

18:61. அவர்கள் இருவரும் அவ்விரணடு (கடல்களு)க்கும் இடையே ஒன்று சேரும் இடத்தை அடைந்த போது; அவ்விருவருடைய மீனை அவ்விருவரும் மறந்து விட்டனர்; அது கடலில் தன்னுடைய வழியைச் சுரங்கம் போல் அமைத்துக்கொண்டு (நீந்திப் போய்) விட்டது.

18:62. அவ்விருவரும், அப்புறம் அந்த இடத்தைக் கடந்த போது, தம் பணியாளை நோக்கி, "நம்முடைய காலை ஆகாரத்தைக் கொண்டுவா; இந்த நம் பிரயாணத்தில் நிச்சயமாக நாம் களைப்பைச் சந்திக்கிறோம்" என்று (மூஸா) கூறினார்.

18:63. அதற்கு "அக்கற்பாறையில் நாம் தங்கிய சமயத்தில் நீங்கள் பார்த்தீர்களா? நிச்சயமாக நான் மீனை மறந்து விட்டேன்." மேலும், அதை (உங்களிடம்) சொல்வதை ஷைத்தானையன்றி (வேறு எவனும்) என்னை மறக்கடிக்கவில்லை; மேலும் அது கடலுக்குள் தன் வழியை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது!" என்று பணியாள் கூறினார்.

18:64. (அப்போது) மூஸா, "நாம் தேடிவந்த (இடம் அ)துதான்" என்று கூறி, இருவரும் தம் காலடிச் சுவடுகளைப் பின்பற்றி (வந்தவழியே) திரும்பிச் சென்றார்கள்.

18:65. (இவ்வாறு) அவ்விருவரும் நம் அடியார்களில் ஒருவரைக் கண்டார்கள்; நாம் அவருக்கு நம்மிடமிருந்து கிருபை அருளியிருந்தோம்; இன்னும் நாம் அவருக்கு நம்மிடமிருந்து கல்வி ஞானத்தையும் கற்றுக் கொடுத்திருந்தோம்.

18:66. "உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட நன்மையானவற்றை நீங்கள் எனக்குக் கற்பிக்கும் பொருட்டு, உங்களை நான் பின் தொடரட்டுமா? என்று அவரிடம் மூஸா கேட்டார்.

18:67. (அதற்கவர்,) "நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலமாட்டீர்!" என்று கூறினார்.

18:68. "(ஏனெனில்) எதைப் பற்றி உமக்கு முழுமையான ஞானம் இல்லையோ, அதில் நீர் எவ்வாறு பொறுமையாயிருப்பீர்!" (என்று கேட்டார்.)

18:69. (அதற்கு) மூஸா, "இன்ஷா அல்லாஹ்! நான் பொறுமையுள்ளவனாகவும், எவ்விஷயத்திலும் உமக்கு மாறு செய்யாதவனாகவும் நான் இருப்பதை நீங்கள் விரைவில் காண்பீர்கள்" என்று (மூஸா) சொன்னார்.

18:70. (அதற்கு அவர்) "நீர் என்னைப்பின் தொடர்வதாயின், எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் - நானாகவே அதைப்பற்றி உமக்கு அறிவிக்கும் வரை - நீர் என்னிடம் கேட்கக் கூடாது" என்று சொன்னார்.

18:71. பின்னர் இருவரும் ஒரு மரக்கலத்தில் ஏறும் வரையில் நடந்து சென்றனர், (மரக்கலம் கடலில் செல்லலானதும்;) அவர் அதில் ஓர் ஓட்டையைப் போட்டார்; "இதிலுள்ளவர்களை மூழ்கடிக்கவா நீங்கள் இதில் ஓர் ஓட்டையைப் போட்டீர்கள்? நிச்சயமாக நீங்கள் ஓர் (அபாயகரமான) பெருங் காரியத்தைச் செய்துவிட்டீர்கள்" என்று (மூஸா) கூறினார்.

18:72. (அதற்கு அவர்,) "நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையைக் கடைப்பிடிக்க முடியாது என்று உமக்கு நான் சொல்லவில்லையா? என்றார்.

18:73. "நான் மறந்து விட்டதைப் பற்றி நீங்கள் என்னை(க் குற்றம்) பிடிக்க வேண்டாம்; இன்னும் என் காரியத்தைச் சிரமமுடையதாக ஆக்கி விடாதீர்கள்" என்று (மூஸா) கூறினார்.

18:74. பின்னர் (மரக்கலத்திலிருந்து இறங்கி) இருவரும் வழி நடக்கலானார்கள்; (வழியில்) ஒரு பையனை அவ்விருவரும் சந்தித்த போது, அவர் அவனைக் கொன்று விட்டார். (உடனே மூஸா) "கொலைக்குற்றமின்றி, பரிசுத்தமான ஜீவனைக் கொன்றுவிட்டீர்களே? நிச்சயமாக நீங்கள் பெருத்தக் கேடான ஒருகாரியத்தையே செய்து விட்டீர்கள்!" என்று (மூஸா) கூறினார்.

18:75. (அதற்கு அவர்) "நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலாது என்று உமக்கு நாம் சொல்லவில்லையா?" என்று கூறினார்.

18:76. இதன் பின்னர் நான் எந்த விஷயத்தைப் பற்றியாவது உங்களிடம் கேட்பேனாயின் நீங்கள் உங்கள் தோழனாக வைத்துக் கொள்ள வேண்டாம் - நிச்சயமாக நீங்கள் என்னிடமிருந்து தக்க மன்னிப்புக் கோருதலைப் பெற்றுக் கொண்டீர்கள்" என்று கூறினார்.

18:77. பின்னர் அவ்விருவரும் வழி நடந்து, இருவரும் ஒரு கிராமத்தாரிடம் வந்து சேர்ந்தார்கள்; தங்களிருவருக்கும் உணவு தருமாறு அந்த கிராமத்தாரிடம் கேட்டார்கள்; ஆனால் அவ்விருவருக்கும் விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டார்கள்; அப்போது அங்கே இடிந்து அடியோடு விழும் நிலையிலிருந்த ஒரு சுவரை அவ்விருவரும் கண்டனர்; ஆகவே, அவர் (சரிசெய்து) நிமிர்த்து வைத்தார். (இதைக் கண்ட மூஸா) "நீங்கள் நாடியிருந்தால் இதற்கென ஒரு கூலியை பெற்றிருக்கலாமே" என்று (மூஸா) கூறினார்.

18:78. "இது தான் எனக்கும், உமக்குமிடையே பிரிவு(க்குரிய நேரம்) ஆகும்; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ, அதன் விளக்கத்தையும் (இப்பொழுதே) உமக்குத் திட்டமாக அறிவித்து விடுகிறேன்" என்று அவர் கூறினார்.

18:79. "அம்மரக்கலம் கடலில் வேலை செய்யும் ஏழைகள் சிலருக்குச் சொந்தமானது; எனவே நான் அதை (ஓட்டையிட்டு)ப் பழுதாக்க விரும்பினேன்; (ஏனெனில்) அவர்களுக்குப் பின்னால் (கொடுங்கோலனான) ஓர் அரசன் இருந்தான்; அவன் (பழுதில்லா) மரக்கலங்களையெல்லாம் பலவந்தமாக எடுத்துக் கொள்கிறான்.

18:80. "(அடுத்து) அந்த சிறுவனுடைய தாய், தந்தையர் இருவரும் முஃமின்களாக இருக்கிறார்கள்; அவன் (வாலிபனாகி) அவ்விருவரையும் வழிகேட்டிலும், குஃப்ரிலும் சேர்த்து விடுவான் என்று நாம் பயந்தோம்.

18:81. "இன்னும், அவ்விருவருக்கும், பரிசுத்தத்திலும் (பெற்றோரிடம்) அன்பு செலுத்துவதிலும் சிறந்திருக்க கூடிய (ஒரு மகனை) அவ்விருவருடைய இறைவன் (கொலையுண்டவனுக்குப்) பதிலாக கொடுப்பதை நாம் விரும்பினோம்.

18:82. "இனி: (நான் நிமிர்த்து வைத்த) அந்த சுவர் அந்தப் பட்டிணத்திலுள்ள அநாதைச் சிறுவர் இருவருக்குரியது; அதன் அடியில் அவ்விருவருக்கும் சொந்தமான புதையல் உள்ளது; அவ்விருவருடைய தந்தை (ஸாலிஹான) நல்ல மனிதராக இருந்தார்; எனவே, அவ்விருவரும் தக்க பிராயமடைந்த தம்மிருவரின் புதையலையும் வெளிப்படுத்தி (எடுத்துக்) கொள்ள வேண்டும் என உம்முடைய இறைவன் நாடினான். (இவையெல்லாம்) உம் இறைவனுடைய ரஹ்மத்தில் நின்றும் உள்ளவை; என் விருப்பு, வெறுப்பின்படி எந்தக் காரியத்தையும் செய்யவில்லை; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ அதன் விளக்கம் இது தான்" என்று கூறினார்.  (முஹம்மது ஜான் தமிழாக்கம்)


2016-2017 ரமளான் தொடர் கட்டுரைகள்

ரமளான் தொடர் கட்டுரைகள் (2012 - 2017)

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்

Source:  http://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2016ramalan/2017ramalan21.html

திங்கள், 29 மே, 2017

2017 ரமளான் (20) – நிலமெல்லாம் இரத்தம் – அலேக்சாண்டர் ரொமான்ஸும் குர்-ஆனும்

குர்-ஆனில் துல்கர்னைன் என்ற மகா அரசன் பற்றிய சரித்திரம்! பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பற்றிய முந்தைய கட்டுரைகளை படிக்க சொடுக்கவும்:

இரவல் வாங்கிய இறைவேதம் குர்-ஆன்:

குர்-ஆனில் பல நிகழ்ச்சிகள் இரவல் வாங்கி பதிக்கப்பட்டவைகளாகும். அந்த காலத்தில் புத்தகங்களுக்கு காபிரைட் உரிமைகள் (copyright)  இல்லை, எனவே, இஸ்லாமுக்கு முன்பு இருந்த பல கதைகள் குர்-ஆனில் காணலாம். குர்-ஆன் 18ம் அத்தியாயத்தில் வரும் துல்கர்னைன் நிகழ்ச்சி இரவல் வாங்கப்பட்ட நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி உண்மை சரித்திரமாக இருந்திருந்தால், பிரச்சனை இல்லை, ஆனால் அவைகள் கட்டுக்கதைகளாக இருப்பது தான் நம் முன் இருக்கும் கேள்வி.

துல்கர்னைன் கதை இரவல் வாங்கியது:

துல்கர்னைன் விஷயத்தில் குர்-ஆன் சரித்திர மற்றும் விஞ்ஞான பிழைகளைச் செய்துள்ளது. நடைமுறைக்கு ஏற்காத விவரங்களைச் சொல்கிறது. துல்கர்னைன் பற்றிய நிகழ்ச்சியை முழுவதுமாக அறிந்துக்கொள்ள மேலே கொடுக்கப்பட்ட முந்தைய மூன்று கட்டுரைகளை படித்துக்கொள்ளவும். உலகத்துக்கே வழிகாட்டியாக குர்-ஆன் இருக்கிறது என்று முஸ்லிம்கள் சொல்லும்  போது, அதில் துல்கர்னைன் போன்ற கட்டுக்கதைகள் எப்படி இடம் பிடிக்கமுடியும்? இதனை அறிந்துக்கொள்ள நாம் ஏழாம் நூற்றாண்டில் நிலவிய கட்டுக்கதைகள் பற்றி சுருக்கமாக அறிந்துக்கொள்ளவேண்டும். 

அலேக்சாண்ட ரொமன்ஸ் (Alexander Romance) புத்தகம்:

மகா அலேக்சாண்டரின் காலக்கட்டம் கி.மு. 356 லிருந்து கி.மு. 323 வரையாகும். இவர் அக்கால உலகம் முழுவதும் ஆளவேண்டும் என்ற ஆர்வத்தினால், கிழக்கே கிட்டத்தட்ட இந்தியா வரைக்கும் வந்துள்ளார்.  இவர் மரித்த கி.மு. 323ம் ஆண்டுக்கு பிறகு, இவர் மீது பல கட்டுக்கதைகள் பரவ ஆரம்பித்தன. இவர் செய்யாத பல சாதனைகளை செய்தது போல, கற்பனைக் கதைகள் எழுதப்பட்டன. இப்படி எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பை 'அலேக்சாண்டர் ரொமான்ஸ்' என்று அழைக்கிறார்கள்.

The Romance of Alexander is any of several collections of legends concerning the mythical exploits of Alexander the Great. The earliest version is in the Greek language, dating to the 3rd century. Several late manuscripts attribute the work to Alexander's court historian Callisthenes, but the historical person died before Alexander and could not have written a full account of his life. The unknown author is still sometimes known as Pseudo-Callisthenes.

The text was transformed into various versions between the 4th and the 16th centuries, in Medieval Greek, Latin, Armenian, Syriac, Hebrew and most medieval European vernaculars. (Source - https://en.wikipedia.org/wiki/Alexander_romance)

24 மொழிகளில், 80 வித்தியாசமான பதிப்புக்களில் எழுதப்பட்ட புத்தகம்:

கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இந்த கட்டுக்கதை புத்தகத்தை பலர் தங்கள் சொந்த விவரங்களைச் சேர்த்து எழுத ஆரம்பித்தனர், மொத்தம் 24 மொழிகளில், 80 வகையான வெவ்வேறு பதிப்புகளாக எழுதப்பட்டன.

The earliest Greek manuscripts of the Alexander romance, as they have survived, indicate that it was composed at Alexandria in the 3rd century. The original text was lost but was the source of some eighty different versions written in twenty-four different languages. (Source - en.wikipedia.org/wiki/Alexander_the_Great_in_the_Quran)

கிறிஸ்தவ யூத வட்டாரங்களில் – அலேக்சாண்டர் ரொமான்ஸ்:

யூத மற்றும் கிறிஸ்தவ வட்டாரங்களில் கூட அலேக்சாண்டர் பற்றிய கட்டுக்கதைகள் எழுதப்பட்டன. இவற்றில் அலேக்சாண்டர் ஒரு நல்ல அரசன் போல சித்தரிக்கப்பட்டார். 

Eventually Jewish writers would almost completely co-opt Alexander, depicting him as a righteous gentile or even a believing monotheist.[5]

The Christianized peoples of the Near East, inheritors of both the Hellenic as well as Judaic strands of the Alexander romance, further theologized Alexander until in some stories he was depicted as a saint. The Christian legends turned the ancient Greek conqueror Alexander III into Alexander "the Believing King", implying that he was a believer in monotheism. Eventually elements of the Alexander romance were combined with Biblical legends such as Gog and Magog. (Source - en.wikipedia.org/wiki/Alexander_the_Great_in_the_Quran)

மறுமலர்ச்சி காலம் (1300-1600 கி.பி) வரை – இந்த நிலை நீடித்தது:

அலேச்காண்டரின் உண்மையான சரித்திரம் மக்களுக்கு கிடைக்காத காரணத்தினால், அவர் பற்றி எழுதப்பட்ட கட்டுக்கதைகளை மக்கள் உண்மையென்று எண்ணி நம்பி வந்தனர். அலேக்சாண்டரின் உண்மை சரித்திரம் (The Anabasis of Alexander) கிறிஸ்தவ மறுமலர்ச்சி காலம் என்று சொல்லப்படும் கிபி. 1300-1600 காலக்கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. 

During the period of history during which the Alexander romance was written, little was known about the true historical Alexander the Great as most of the history of his conquests had been preserved in the form of folklore and legends. It was not until the Renaissance (1300–1600 AD) that the true history of Alexander III was rediscovered: (Source - en.wikipedia.org/wiki/Alexander_the_Great_in_the_Quran)

அரபி மொழியை தாக்கிய சீரியக் மொழியின் ரொமான்ஸ்:

சீரியக் மொழியிலும், இந்த அலேக்சாண்டர் ரொமான்ஸ் புழக்கத்தில் இருந்தது. மேலும், அரபி மொழியிலும் 'கிஸாஸ் துல்கர்னைன்' என்ற பெயரில் இந்த கட்டுக்கதைகள் எழுதப்படுவதற்கு, இந்த சீரியக் மொழியின் புத்தகம் வழிகாட்டியது.

இங்கு கவனிக்கவேண்டிய முக்கியமான விவரம் என்னவென்றால், குர்-ஆன் எழுதப்பட்டுக்கொண்டு இருந்த காலத்தில், இந்த சீரியக் மொழியின் ரொமான்ஸ் புழக்கத்தில் இருந்துள்ளது என்பதாகும்.

The Syriac legend was the source of an Arabic variant called the Qisas Dhul-Qarnayn (Tales of Dhul-Qarnayn)[10] and a Persian variant called the Iskandarnamah (Book of Alexander), as well as Armenian and Ethiopic translations.[11]

The version recorded in Syriac is of particular importance because it was current in the Middle East during the time of the Quran's writing and is regarded as being closely related to the literary and linguistic origins of the story of Dhul-Qarnayn in the Quran. The Syriac legend, as it has survived, consists of five distinct manuscripts, including a Syriac Christian religious legend concerning Alexander and a sermon about Alexander attributed to the Syriac poet-theologian Jacob of Serugh (451–521 AD, also called Mar Jacob). The Syriac Christian legend concentrates on Alexander's journey to the end of the World, where he constructs the Gates of Alexander to enclose the evil nations of Gog and Magog, while the sermon describes his journey to the Land of Darkness to discover the Water of Life (Fountain of Youth). These legends concerning Alexander are remarkably similar to the story of Dhul-Qarnayn found in the Quran.[12] (Source - en.wikipedia.org/wiki/Alexander_the_Great_in_the_Quran)

குர்-ஆனில்  துல்கர்னைன் பற்றி விவரங்கள்:

1) அவர் உலகின் கடைசி பாகம் வரை (மேற்கு கிழக்கு) பயணம் செய்தார்.

2) யஃஜூஜ்/மஃஜூஜ் மக்களை தடை செய்ய பெரிய தடுப்பு சுவரை எழுப்பினார்.

இவ்விரு விவரங்கள் அப்படியே, சீரியக் கட்டுக்கதைகளில் வருகிறது. இது குர்-ஆனுக்கு ஒத்து இருக்கிறது, மன்னிக்கவும் குர்-ஆன் இவைகளுக்கு ஒத்து இருக்கிறது.

இஸ்லாமுக்கு முன்பிலிருந்தே அரபியில் ரொமான்ஸ் இருந்தது:

தோல் சுருள்களை ஆய்வு செய்ததில், இஸ்லாம் தோன்றியதற்கு முன்பே அரபியில் அலேக்சாண்டர் ரொமான்ஸ் இருந்ததற்கான சாத்திய கூறுகள் தென்படுகின்றன. எத்தியோப்பிய மொழியில் ரொமான்ஸ் மொழியாக்கம் செய்வதற்கு சீரியக் மொழியாக்கம் பயன்பட்டது என்று சொல்லப்படுகின்றது. அதே நேரத்தில் இவ்விரு மொழியாக்கங்களுக்கு இடையில் அழிந்துவிட்ட அரபி மொழி ரொமான்ஸ் இருந்திருக்கிறது என்று ஆதாரங்கள் காட்டுகின்றன. மேலும், இஸ்லாமுக்கு முன்பு, பெர்சிய மொழியிலும் ரொமான்ஸ்  இருந்துள்ளது.

The manuscripts also contain evidence of lost texts. For example, there is some evidence of a lost pre-Islamic Arabic version of the translation that is thought to have been an intermediary between the Syriac Christian and the Ethiopic Christian translations.[15] There is also evidence that the Syriac translation was not directly based on the Greek recensions but was based on a lost Pahlavi (pre-Islamic Persian) intermediary.[8] (Source - en.wikipedia.org/wiki/Alexander_the_Great_in_the_Quran)

யூதர்கள், கிறிஸ்தவர்கள் எவ்வழியோ, அல்லாஹ்வும் அவ்வழியே:

இஸ்லாம் தோன்றிய காலத்துக்கு முன்பிலிருந்தே, யூத கிறிஸ்தவ வட்டாரங்களிலும், அலேக்சாண்டர் ரொமான்ஸ் கட்டுக்கதைகள் புழக்கத்தில் இருந்தன. அலேக்சாண்டரை ஒரு நல்ல மனிதர் என்று இம்மக்கள் நம்பியதினால், குர்-ஆனும் அலேக்சாண்டர் ஒரு நல்ல அல்லாஹ்வின் அடியார் என்று சொல்லிவிட்டது. ஆனால், ஒன்றை அல்லாஹ் மறந்துவிட்டான், அது என்னவென்றால், அலேக்சாண்டர் ரொமான்ஸ் என்பது யூத கிறிஸ்தவர்களின் வேதமல்ல, அது ஒரு கட்டுக்கதை புத்தகம். ஆனால், அல்லாஹ் அந்த கட்டுக்கதையை உண்மை என்று எண்ணி தன் வேதத்தில் சரித்திரம் என்றுச் சொல்லி புகுத்திவிட்டான். ஆனால், விதி விளையாடிவிட்டது, இஸ்லாம் உருவாகி 600 ஆண்டுகளுக்கு பிறகு, மகா அலேக்சாண்டரின் உண்மை சரித்திரத்தை கண்டுபிடித்துவிட்டார்கள்.  இனி முஸ்லிம்கள் என்ன செய்யமுடியும்? குர்-ஆனை மாற்றமுடியுமா? முடியாதே!

Theological controversy

The identity of Dhul-Qarnayn has been a matter of theological controversy amongst Muslim scholars for centuries. Dhul-Qarnayn was equated with Alexander by the majority of classical Islamic scholars during a period when Christians and Jews had themselves co-opted Alexander the Great as a religious figure. However, it is clear that the historical Alexander the Great was a Greek pagan (for example, Alexander's mother Olympias is said to have been a devout member of the orgiastic snake-worshiping cult of Dionysus, and may have slept with snakes[16]). Such historical facts about Alexander the Great became well known only after the Renaissance period (1300–1600 AD) when the Anabasis Alexandri of Arrian (AD 86–160) was rediscovered. In light of the modern view of Alexander the Great, his identity as Dhul-Qarnayn has become a matter of great controversy for Muslims. In reaction, alternative theories about the identity of Dhul-Qarnayn have been advanced by some Muslim scholars. For example, it has been suggested that Dhul-Qarnayn could be Cyrus the Great (see Cyrus the Great in the Quran). The Muslim sentiment against Alexander is reflected in Islamic textbooks (e.g. "Some [Muslim Scholars] say it was Alexander the Great, who lived from 356 BCE to 323 BCE, but that is highly unlikely, given that Alexander was an idol-worshipper."[17]), often with references to his polytheistic religious beliefs and (more recently) his personal relationships. (Source - en.wikipedia.org/wiki/Alexander_the_Great_in_the_Quran)

இதுவரை பார்த்த ஆதாரங்களின் படி, இஸ்லாமுக்கு முன்புலிருந்து உலா வந்த கட்டுக்கதைகள் குர்-ஆனிலும் புகுந்துவிட்டது. யூதர்கள் அந்த மூன்று கேள்விகளை முஹம்மதுவிடம் கேளுங்கள் என்று சொன்னபோதே, அல்லாஹ் சுதாரித்து இருந்திருக்கவேண்டும். அல்லாஹ் உண்மையான இறைவனாக இருந்திருந்தால், எது கட்டுக்கதை? எது சரித்திரம்? என்பதை அறிந்துக்கொண்டு இருந்திருப்பான். குறைஷிகள் கேள்வி கேட்ட போது, அல்லாஹ் 15 நாட்களை எடுத்துக்கொண்டும், கடைசியாக ஒரு கட்டுக்கதையை முஹம்மதுவிற்கு வஹியாக இறக்கிவிட்டார், அந்தோ பரிதாபம்.

மேலே மூல நூல்கள் பற்றிய விவரங்களை மட்டுமே கண்டோம். இப்போது, குர்-ஆனில் பதிக்கப்பட்ட விவரங்களும், அலேக்சாண்டர் ரொமான்ஸில் உள்ள விவரங்களும் எப்படி ஒத்துப்போகிறது என்பதை சுருக்கமாக காண்போம்.

1) சீரியக் ரொமான்ஸ் – இரண்டு கொம்புகளை உடையவன்

குர்-ஆனில் துல்கர்னைன் என்பது இரண்டு கொம்புகளுடையவன் என்று அர்த்தம். அந்த இரண்டு கொம்புகளை இறைவன் தான் தனக்கு கொடுத்தான், என்று அலேக்சாண்டர் ஜெபம் செய்வதாக, சீரியக் மொழியில் உள்ள ரொமான்ஸ் குறிப்பிடுகிறது:

The Christian Syriac version of the Alexander romance, in the sermon by Jacob of Serugh, describes Alexander as having been given two horns of iron by God. The legend describes Alexander (as a Christian king) bowing himself in prayer, saying:

O God ... I know in my mind that thou hast exalted me above all kings, and thou hast made me horns upon my head, wherewith I might thrust down the kingdoms of the world...I will magnify thy name, O Lord, forever ... And if the Messiah, who is the Son of God [Jesus], comes in my days, I and my troops will worship Him...[35] (Source - en.wikipedia.org/wiki/Alexander_the_Great_in_the_Quran)

2) பிரமாண்ட சுவர் கட்டியதாக  தன் தாய்க்கு கடிதம் எழுதினார் அலேக்சாண்டர் (குர்-ஆனுக்கு 300 ஆண்டுகளுக்கு முன்பே)

இந்த கட்டுக்கதையில் வரும் அலேக்சாண்டர், குர்-ஆனில் வருவது போல, ஒரு பிரமாண்டமான சுவரைக் கட்டி மக்களை காப்பாற்றியதாக தம் தாய்க்கு ஒரு கடிதம் எழுதுகிறார். இரண்டு மலைகளுக்கு இடையே அந்த சுவரை கட்டினார் என்று குறிப்பிடுகிறார்.  இந்த கடிதம், கி.பி. 4ம் நூற்றாண்டில் உலா வந்த 'அலேக்சாண்டர் ரொமான்ஸ்'ல் வருகிறது. அதாவது குர்-ஆன் எழுதப்படுவதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கதை வருகிறது. 

இதிலிருந்து அறிவது என்னவென்றால், யூதர்களும் குறைஷிகளும் ஒரு புகழ்பெற்ற கதையைப் பற்றித் தான் முஹம்மதுவிடம் கேட்டு இருக்கிறார்கள், ஆனால், அது ஒரு கட்டுக்கதையென்று, யூதர்களுக்கும், குறைஷிகளுக்கும் தெரியாமல் போனது ஆச்சரியமல்ல, அல்லாஹ்விற்கும் தெரியாமல் போனது தான் ஆச்சரியம்.

Alexander's Wall in Christian legends

Christian legends speak of the Caspian Gates (Gates of Alexander), also known as Alexander's wall, built by Alexander the Great in the Caucasus mountains. Several variations of the legend can be found. In the story, Alexander the Great built a gate of iron between two mountains, at the end of the Earth, to prevent the armies of Gog and Magog from ravaging the plains. The Christian legend was written in Syria shortly before the Quran's writing and closely parallels the story of Dhul-Qarnayn.[41] The legend describes an apocryphal letter from Alexander to his mother, wherein he writes:

I petitioned the exalted Deity, and he heard my prayer. And the exalted Deity commanded the two mountains and they moved and approached each other to a distance of twelve ells, and there I made ... copper gates 12 ells broad, and 60 ells high, and smeared them over within and without with copper ... so that neither fire nor iron, nor any other means should be able to loosen the copper; ... Within these gates, I made another construction of stones ... And having done this I finished the construction by putting mixed tin and lead over the stones, and smearing .... over the whole, so that no one might be able to do anything against the gates. I called them the Caspian Gates. Twenty and two Kings did I shut up therein.[42]

These pseudepigraphic letters from Alexander to his mother Olympias and his tutor Aristotle, describing his marvellous adventures at the end of the World, date back to the original Greek recension α written in the 4th century in Alexandria. The letters are "the literary expression of a living popular tradition" that had been evolving for at least three centuries before the Quran was written.[6] (Source - en.wikipedia.org/wiki/Alexander_the_Great_in_the_Quran)

3) கடைசி காலத்தில் தகர்ப்படும் – பிரமாண்ட தடுப்பு

கிறிஸ்தவ வட்டாரங்களில் உலாவந்த ரொமான்ஸில், அந்த தடுப்பு சுவரை இறைவன் கடைசி காலத்தில் தகர்ந்துப்போகும் படி செய்வார், அப்பொழுது மிகுந்த அழிவு உண்டாகும் என்றும் சொல்லப்பட்டது. இதேயே குர்-ஆனும் அப்படியே மொழிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பார்க்க குர்-ஆன் 18:98-99

18:98. "இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும், ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே" என்று கூறினார்.

18:99. இன்னும், அந்நாளில் அவர்களில் சிலரைச் சிலருடன் (கடல்) அலைகள் (மோதுவதைப் போல்) மோதுமாறு நாம் விட்டு விடுவோம்; பின்னர், ஸூர் (எக்காளம்) ஊதப்படும்; பிறகு நாம் அவர்களை ஒன்று சேர்ப்போம். (டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்)

Gog and Magog in Christian legends

In the Syriac Christian legends, Alexander the Great encloses the Gog and Magog horde behind a mighty gate between two mountains, preventing Gog and Magog from invading the Earth. In addition, it is written in the Christian legend that in the end times God will cause the Gate of Gog and Magog to be destroyed, allowing the Gog and Magog horde to ravage the Earth;

The Lord spake by the hand of the angel, [saying] ...The gate of the north shall be opened on the day of the end of the world, and on that day shall evil go forth on the wicked ... The earth shall quake and this door [gate] which thou [Alexander] hast made be opened ... and anger with fierce wrath shall rise up on mankind and the earth ... shall be laid waste ... And the nations that is within this gate shall be roused up, and also the host of Agog and the peoples of Magog [Gog and Magog] shall be gathered together. These peoples, the fiercest of all creatures.[42]

முடிவுரை:

இந்த கட்டுரையின் விவரங்களுக்காக நான் முழுவதுமாக விக்கீபீடியா ஆங்கில தொடுப்புக்களை பயன்படுத்தியுள்ளேன். தேவையான விவரங்களின் சுருக்கத்தை மட்டுமே இங்கு பதித்தேன். விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட தொடுப்புக்களை ஆங்கிலத்தில் படித்துக்கொள்ளலாம்.

இவைகளிலிருந்து அறிவதென்ன?

அ) குர்-ஆன் துல்கர்னைன் விஷயத்தில் சரித்திர, விஞ்ஞான பிழையை செய்துள்ளது.

ஆ) பல நூற்றாண்டுகளாக வாய்வழியாகவும், கட்டுக்கதை புத்தகங்களாகவும் உலாவிக்கொண்டு இருந்த அலேக்சாண்டர் ரொமான்ஸ் புத்தகத்தின் விவரங்களை சரித்திரம் என்று சொல்லி அல்லாஹ் மிகப்பெரிய தவறை செய்துள்ளான். 14 நூற்றாண்டுகளாக முஸ்லிம்களை ஏமாற்றிக்கொண்டு வந்துள்ளான்.

இ) அலேக்சாண்டரின் உண்மை சரித்திரம் மத்திய காலக்கட்டத்தில் (கி.பி. 1300-1600) கிடைத்தபோது, அந்த அலேக்சாண்டர் பல தெய்வ வழிப்பாட்டாளர் என்பதை அறிந்த இஸ்லாமிய உலகம் திகைத்துவிட்டது. இனி, முஸ்லிம்களால் என்ன செய்யமுடியும், "அந்த துல்கர்னைன் அலேக்சாண்டர் அல்ல" என்றுச் சொல்வதைத் தவிர!

ஈ) அலேக்சாண்டர் பற்றி உலகம் கட்டுக்கதைகளை நம்பிக்கொண்டு இருந்தால், அல்லாஹ்வும் அதேயே நம்பிவிட்டான். எது சரித்திரம் எது கட்டுக்கதை என்ற ஞானம் இறைவனுக்கு இருக்கவேண்டுமல்லவா?

அடுத்த கட்டுரையில், அதே குர்-ஆன் 18ம் அத்தியாயத்தில் உள்ள இன்னொரு விவரத்தை அதாவது கட்டுக்கதையை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதன் பிறகு பாரா அவர்களின் நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்தின் அடுத்தடுத்த அத்தியாயத்திற்கு தாவுவோம்.  பாரா அவர்கள் எழுதிய இரண்டு வரிகளுக்கு இப்படி நான்கு கட்டுரைகள் எழுதியதற்கு,  அவர் என்னை மன்னிக்கவேண்டும். என்ன செய்வது? குத்த குத்த இரத்தம் பீறிட்டுக்கொண்டு வருகிறது, அதனால் நிலமெல்லாம் இரத்தமயமாக மாறிவிட்டது. 


2016-2017 ரமளான் தொடர் கட்டுரைகள்

ரமளான் தொடர் கட்டுரைகள் (2012 - 2017)

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2016ramalan/2017ramalan20.html