ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

புதன், 24 அக்டோபர், 2018

குர்‍ஆன் 5:47ல் அல்லாஹ் சொன்னதை நான் பின்பற்ற முடியுமா?

முஸ்லிம்களே! குர்‍ஆனில் அல்லாஹ் சொன்னவைகளை நாம் நம்பவேண்டுமா? அல்லது நம்பவேண்டாமா? குர்‍ஆனில் சொல்லப்பட்டவைகளை நீங்கள் நம்புகிறீர்களா?

குர்‍ஆனின் கீழ்கண்ட வசனத்தின் காரணமாகத் தான் நான் இக்கேள்வியை கேட்கிறேன், மூன்று குர்‍ஆன் தமிழாக்கங்களில் இவ்வசனத்தை படிப்போம்:

5:47. (ஆதலால்) இன்ஜீலையுடையவர்கள், அதில் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பு வழங்கட்டும்; அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் தான் பாவிகளாவார்கள். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

5:47. ஆகவே, இன்ஜீலை உடையவர்கள் அதில் அல்லாஹ் அறிவித்து இருக்கும் (கட்டளைகளின்)படியே தீர்ப்பளிக்கவும். எவர்கள், அல்லாஹ் அறிவித்த (கட்டளைகளின்)படியே தீர்ப்பளிக்க வில்லையோ அவர்கள் நிச்சயமாக பாவிகள்தான். (அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்)

5:47. மேலும், இன்ஜீல் அருளப்பட்டவர்கள், அதில் எந்தச் சட்டத்தை அல்லாஹ் இறக்கி வைத்தானோ அந்தச் சட்டத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கட்டும் (என்பதே நம் கட்டளையாக இருந்தது)! மேலும், எவர்கள் அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கவில்லையோ, அவர்கள்தாம் ஃபாஸிக்கள் பாவிகளாவர்.(இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் தமிழாக்கம்)

கிறிஸ்தவர்கள் இன்ஜிலில் சொல்லப்பட்டதின் படியே தீர்ப்பு அளிக்கவேண்டுமாம். குர்‍ஆனின் இந்த வசனத்துக்கு கீழ்படிய என்னை அனுமதிப்பீர்களா?

இல்லை.. இல்லை, இன்ஜில் தொலைந்துவிட்டது அல்லது மாற்றப்பட்டுவிட்டது என்று முஸ்லிம்கள் நம்மிடம் கூறுவார்கள்.

இன்ஜில் தொலைந்து போய் இருந்தால், ஏன் அல்லாஹ், அதனைக் கொண்டு தீர்ப்பு அளியுங்கள் என்று கட்டளையிடுகின்றான்?

குர்‍ஆன் 5:47 என்ற வசனத்துக்கு நான் கீழ்படிவது எப்படி?

இவ்வசனத்தை இறக்கும் போது, இன்ஜில்  என்பது தொலைந்துவிட்டது அல்லது எதிர்காலத்தில் தொலையப்போகிறது என்ற விவரம் அல்லாஹ்விற்கு தெரியவில்லையா? சர்வ ஞானியான அல்லாஹ் இதனை அறிந்திருக்கவேண்டுமல்லவா?

அல்லாஹ் இவ்வசனத்தை இறக்கும் போது, சொல்லாத விஷயத்தை, முஸ்லிம்களே, நீங்கள் எப்படி அறிந்துக்கொண்டீர்கள்?

ஒருவேளை நீங்கள் (முஸ்லிம்கள்), குர்‍ஆன் இறக்கப்பட்ட பிற்பாடு தான் இன்ஜில் தொலைந்துவிட்டது என்று சொல்வீர்களானால், இன்னமும் நீங்கள் அல்லாஹ்வின் வார்த்தையை கனவீனப்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம். ஏனென்றால், உங்கள் கூற்றின்படி, அல்லாஹ்வின் 5:47 என்ற வசனமானது இனி உபயோகத்தில் இல்லை, அது செல்லுபடியாகாது என்று சொல்லவருகிறீர்கள். அல்லாஹ்வின் வசனங்கள் ஒரு காலத்தில் (7ம் நூற்றாண்டில்) செல்லுபடியாகும், எதிர்காலத்தில் அவைகளினால் உபயோகமில்லை, அவைகள் செல்லுபடியாகாது என்று நீங்கள் சொல்கிறீர்கள், அப்படித்தானே!

இதுமட்டுமல்ல, அல்லாஹ் தன்னுடைய இன்னொரு வசனத்தின் மூலமாக, தன்னைத் தானே தர்மசங்கடத்தில் தள்ளிக்கொள்கிறான்:

ஸூரா 5:68ஐ படிக்கவும்:

5:68. "வேதமுடையவர்களே! நீங்கள் தவ்ராத்தையும், இன்ஜீலையும், இன்னும் உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கப்பட்டவற்றையும் நீங்கள் கடைப்பிடித்து நடக்கும் வரையிலும் நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களாக இல்லை" என்று கூறும்; மேலும் உம் இறைவனால் உம்மீது இறக்கப்பட்ட (வேதமான)து அவர்களில் பெரும்பாலோருக்கு குஃப்ரை (நிராகரித்தலை)யும் வரம்பு மீறுதலையும் நிச்சயமாக அதிகப்படுத்துகிறது; ஆகவே நிராகரித்துக் கொண்டிருக்கும் கூட்டத்தாருக்காக நீர் கவலைப்பட வேண்டாம். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

முஸ்லிம்களே, ஸூரா 5:68 ஐ கிறிஸ்தவர்கள் பின்பற்ற அனுபதிப்பீர்களா?

குர்‍ஆன் 5:68ல் சொல்லப்பட்டதின்படி யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு வழிகாட்டுதல் கிடைக்காது ஏனென்றால் தோராவும், இன்ஜிலும் தொலைந்துவிட்டன என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள்.

ஆனால், இவ்வசனத்தில் அல்லாஹ் தோராவும், இன்ஜிலும் தொலைந்துவிட்டன என்று சொல்லவில்லையே! முஸ்லிம்கள் அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு எதிராக‌ பேசுகிறார்கள். நல்வழிகாட்டுதலை தோராவிலும், இன்ஜிலிலும் காணலாம் என்று அல்லாஹ் சொல்கிறான். அல்லாஹ் ஒருவகையாக சொல்கிறான், அதற்கு எதிராக முஸ்லிம்கள் சொல்வதினால். இப்போது நாம் என்ன செய்வது? 

குர்‍ஆன் சொல்வதை நாம் நம்பவேண்டுமா? இல்லையா?

குர்‍ஆன் 5:47 செல்லுபடியாகாது என்று நாம் மேலே கண்டோம், இப்போது அந்த பட்டியலில் குர்‍ஆன் 5:68ம் வசனமும் சேர்ந்துவிட்டது. முஸ்லிம்களே, குர்‍ஆனிலிருந்து இன்னும் எத்தனை வசனங்களை நீங்கள் இரத்து செய்யப்போகிறீர்கள்? அல்லாஹ் சொல்லாத ஒன்றை சொன்னதாக நீங்கள் கற்பனை செய்துக்கொண்டு இன்னும் எத்தனை ஸூராக்களை பொய்யாக்கப்போகிறீர்கள்?

அல்லாஹ் தன் வேதத்தை நித்தியத்தில் எழுதியதாக முஸ்லிம்கள் நம்புகிறார்கள், ஆனால், அதனை பாதுகாக்க அல்லாஹ் தவறியிருக்கின்றான் என்று அவர்களே சாட்சியிடுகிறார்கள். முஸ்லிம்களிடமிருந்து  இன்னும் எப்படிப்பட்ட‌ அவமானங்களை அல்லாஹ் சகிக்கவேண்டி இருக்குமோ தெரியவில்லை!

சிந்திக்க சில வரிகள்:

முஹம்மது வாழ்ந்த காலத்தில் இருந்த கையெழுத்துப் பைபிள் பிரதிகள், கீழ்கண்ட இரண்டு பிரதிகளாக இப்போதும் நம்மிடம் உள்ளது.

  1. கோடக்ஸ் வாடிகனஸ் - The Vatican (Codex Vaticanus)
  2. கோடக்ஸ் சினாடிகனஸ் - British Museum (Codex Sinaticus)

இயேசு உலக மக்களுக்காக மரித்து, உயிர்த்தெழுந்த விவரங்கள், மேலும் பல சாட்சிகளுக்கு முன்பாக அவர் ப‌ரமேரிய விவரங்கள் அனைத்தும் இந்த பிரதிகளில் உள்ளது. புதிய ஏற்பாடு, இவ்விரு கிரேக்க  கையெழுத்து பிரதிகளில் பத்திரமாக பாதுக்காக்கப்பட்டு இருக்கிறது. இவைகள் முஹம்மதுவிற்கு முன்பு 200 ஆண்டுகள் பழைய பிரதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்தவ பைபிள் முஹம்மதுவிற்கு முன்பு 575 ஆண்டுகள் முந்தையதாகும். அதே போல, யூதர்களின் தோரா (பைபிளின் முதல் ஐந்து நூல்கள்), முஹம்மதுவிற்கு முன்பு 1000 லிருந்து 3000 ஆண்டுகள் முந்தையதாகும்.  இவைகளில் வெளிச்சமும், நேரான வழிகாட்டுதலும் இருக்கிறது, எனவே முஸ்லிம்கள் இவைகளை படிக்கவேண்டும் என்று முஹம்மது குர்‍ஆனில் கட்டளையிட்டுள்ளார். இவைகள் மாற்றப்பட்டுவிட்டன என்று இஸ்லாம் சொல்லுமானால், முஹம்மது ஒரு பொய்யர் என்று இஸ்லாம் அவர் மீது முத்திரை குத்துகிறது என்று அர்த்தம், ஏனென்றால் அவர் தான் தோரா, இன்ஜில் மற்றும் ஜபூரை படிக்கச் சொன்னவர் - Steve Perez

முஸ்லிம் நண்பரே! அந்த புத்தகங்கள் எங்கே?

முஸ்லிம்: உங்கள் பைபிளில், எங்கள் இறைத்தூதர் முஹம்மது பற்றி பல வசனங்கள் உள்ளன என்று உங்களுக்குத் தெரியுமா?

கிறிஸ்தவர்: பைபிள் கறைபடுத்தப்பட்டுவிட்டது என்று முஸ்லிம்களாகிய நீங்கள் சொல்கிறீர்கள் அல்லவா?

முஸ்லிம்: ஆமாம், பைபிள் மாற்றப்பட்டுவிட்டது தான்..

கிறிஸ்தவர்: அப்படியானால், கறைபடுத்தப்பட்ட புத்தகத்தில் உங்கள் இறைத்தூதர் முஹம்மது பற்றிய வசனங்கள் உள்ளன என்று எப்படி நீங்கள் சொல்கிறீர்கள்? அல்லாஹ் தன் தூதர் முஹம்மதுவின் பெயர் உள்ள புத்தகத்தை பாதுகாத்து இருந்திருப்பான்?  என்பதை சிந்திக்கமாட்டீர்களா?

முஸ்லிம்: பைபிள் முழுவதும் கறைபடுத்தப்படவில்லை, சில விவரங்கள் மட்டுமே கறைபடுத்தப்பட்டது.

கிறிஸ்தவர்: அப்படியானால், அந்த சில விவரங்களை பாதுகாக்க அல்லாஹ்வினால் முடியவில்லை அப்படித்தானே? தன் வார்த்தைகளை தானே காப்பாற்ற முடியாத நிலையில் அல்லாஹ் இருக்கிறான் என்றுச் சொல்கிறீர்கள்!

முஸ்லிம்: அது அல்லாஹ்வின் தவறல்ல, அது மனிதனின் தவறு.

கிறிஸ்தவர்: ஆமாம், இதைத் தான் நானும் சொல்கிறேன். அல்லாஹ் தான் உண்டாக்கிய பலவீனமான படைப்பான மனிதன் தன் வார்த்தைகளை மாற்றும் போது, அவனை தடுக்க முடியாத அளவிற்கு அல்லாஹ் இருந்துள்ளான்..

முஸ்லிம்: இல்லை, இல்லை. சில வசனங்கள் மாற்றப்பட்டன, மீதமுள்ள விவரங்கள் அனைத்தும் மாற்றப்படாமல் இருக்கின்றன‌.

கிறிஸ்தவர்: எந்த வசனங்கள் மாற்றப்பட்டன? எவைகள் மாற்றப்படவில்லை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?

முஸ்லிம்: குர்‍ஆன் தான் சொல்கிறது. முந்தைய வேதங்கள் மாற்றப்பட்டன என்பதால் தான் கடைசியாக குர்‍ஆன் இறங்கியது.

கிறிஸ்தவர்: ஓ அப்படியா! ஆக, குர்‍ஆன் வருவதற்கு முன்பே பைபிள் மாற்றப்பட்டது என்பதால் தான் குர்‍ஆன் வந்தது என்றுச் சொல்கிறீர்கள்? அப்படித்தானே!

முஸ்லிம்: ஆமாம்.

கிறிஸ்தவர்: அப்படியானால், என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்:

1) முந்தைய வேதங்கள்  பற்றி ஏன் குர்‍ஆன் புகழ்ந்து பேசுகின்றது?

2) கிறிஸ்தவர்களின் வேதம் மாற்றப்பட்டு இருந்திருந்தால், ஏன் குர்‍ஆனில் அல்லாஹ், கிறிஸ்தவர்களைப் பார்த்து, உங்களுக்கு நான் இறக்கிய இன்ஜிலின் படி தீர்ப்பு வழங்குங்கள் என்றுச்சொல்கிறான்?

3) கிறிஸ்தவர்களைப் பார்த்து, ஏன் அல்லாஹ் 'வேதமுடையவர்கள்' என்று அழைக்கின்றான், அந்த வேதம் தான் மாற்றப்பட்டுவிட்டதே!

முஸ்லிம்: உண்மையில் குர்‍ஆன் தோரா, ஜபூர் மற்றும் இன்ஜில் பற்றி தான் பேசுகின்றது, பைபிளைப் பற்றி பேசவில்லை.

கிறிஸ்தவர்: அப்படியானால், ஏன் நீங்கள் முஹம்மதுவின் பெயரை பைபிளில் தேடிக்கொண்டு இருக்கிறீர்கள்?

முஸ்லிம்: . . .

கிறிஸ்தவர்: தோரா, ஜபூர் மற்றும் இன்ஜில் புத்தகங்கள் இப்போது எங்கே உள்ளன?

முஸ்லிம்: இந்த புத்தகங்கள் தொலைந்துவிட்டன.

கிறிஸ்தவர்: இந்த மூன்று புத்தகங்களும் தொலைந்துவிட்டன என்று அல்லாஹ், குர்‍ஆனில் எங்கேயாவது சொல்லியுள்ளானா? ஏதாவது வசன எண்ணை தரமுடியுமா?

முஸ்லிம்: ம்ம்ம். . .இல்லை வசன எண்களை கொடுக்கமுடியாது. குர்‍ஆன் இறங்கிய நேரத்தில், அப்புத்தகங்கள் தொலைக்கப்படாமல் இருந்தன.

கிறிஸ்தவர்: ஓ.. அப்படியானால், முஹம்மதுவின் வாழ்நாட்களில் இப்புத்தகங்கள் முழுவதுமாக இருந்தன, ஆனால், குர்‍ஆனுக்கு பிறகு அவைகள் தொலைந்துவிட்டன என்றுச் சொல்கிறீர்கள், சரி தானே!

முஸ்லிம்: ஆமாம்.

கிறிஸ்தவர்: ஒரு சின்ன சந்தேகம். இதற்கு முன்பு தானே நீங்கள் சொன்னீர்கள், "முந்தைய வேதங்கள் மாற்றப்பட்டுவிட்டன என்பதால் தான் குர்‍ஆனை அல்லாஹ் கடைசி வேதமாக இறக்கினான் என்று"? இப்பொழுது மாற்றி தலைகீழாகச் சொல்கிறீர்கள்?

முஸ்லிம்: பைபிளில் மாற்றப்பட்ட தோராவும், ஜபூரும், இன்ஜிலும் உள்ளன.

கிறிஸ்தவர்: குர்‍ஆனுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, பைபிள் முழுமை அடைந்துவிட்டது, மற்றும் உலகின் பல நாடுகளுக்கும் கண்டங்களுக்கும் பரவி விட்டுஇருந்தது. உங்களின் கூற்றுப்படி, பைபிளில் காணப்படும் தோரா, ஜபூர் மற்றும் இன்ஜில் மாற்றம் அடைந்துவிட்டது என்றுச் சொன்னால், ஆரம்ப காலத்தில் இருந்த கைப்பிரதி தோரா, ஜபூர் மற்றும் இன்ஜிலோடு நாம் ஒப்பிட்டுப்பார்த்து சரி பார்க்கலாம். குர்‍ஆனுக்கு பிறகு பைபிள் மாற்றப்பட்டுவிட்டது என்ற உங்கள் குற்றச்சாட்டுக்கு பதில், குர்‍ஆனுக்கு முன்பு இருந்த பைபிளோடு ஒப்பிட்டுப்பார்ப்பது தான்.  இன்று நம்மிடம் இவை இரண்டும் உள்ளன, முழு உலகமும் இதனை ஒப்பிட்டுப்பார்த்து தெரிந்துக்கொள்ளலாம். இதுவரை எந்த ஒரு முஸ்லிமும் இதனை செய்யவில்லை, ஆனால், முஸ்லிமல்லாத இதர அறிஞர்கள் அனைவரும் செய்தாகிவிட்டது.

குர்‍ஆனுக்கு முன்பு, குர்‍ஆனுக்கு பின்பு உள்ள பைபிளை ஒப்பிட்டுப்பார்த்து, முஹம்மதுவின் பெயர் இல்லாததைப் பார்த்து, இஸ்லாமிய கோட்பாடுகள் இல்லாததைப் பார்த்து அறிஞர்கள் அமைதியாகிவிட்டனர். ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு, பல நாடுகள் மற்றும் கண்டங்களுக்கு நெடிய பணம் செய்து, அனைத்து பைபிள்களையும் சேகரித்து வைத்துக்கொண்டு, எல்லாவற்றிலும் மாற்றம் செய்வது என்பது கற்பனையில் மட்டுமே நடக்கக்கூடிய ஒன்றாகும். இப்படிப்பட்ட ஒரு பெரிய எழுத்து ஊழல் நடந்ததாக சரித்திரம் சாட்சியிடவில்லை, இது சாத்தியமும் இல்லை. குர்‍ஆன் ஏழாம் நூற்றாண்டில் பிறந்த போது, முந்தைய வேதங்களில் இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடந்ததாக அது சொல்லவில்லை,  மேலும் தனக்கு பின்பாக நடக்கும் என்றும் குர்‍ஆன் சொல்லவில்லை. மாறாக, முந்தைய வேதங்களை உறுதிப்படுத்தவே தாம் வந்ததாக கூறுகிறது, முந்தைய வேதங்களை புகழ்ந்து பேசுகின்றது.

முஸ்லிம்: பவுல் என்பவர் தான் பைபிளை மாற்றிவிட்டார்.

கிறிஸ்தவர்: இந்த வாதம் அறிவுடையோர் சொல்லும் வாதமல்ல.. முஹம்மதுவிற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் பவுலடியார். பவுலடியார் என்பவர் தன் வேதங்களை இவ்விதமாக மாற்றிவிட்டார் என்று அல்லாஹ் முஹம்மதுவிற்கு குர்‍ஆனை இறக்கும் போது சொன்னதுண்டா? அபூ லஹப் செய்த செயலுக்கான‌ தண்டனையாக நரகத்தில் அவரை தள்ளுவேன் என்று சொன்ன அல்லாஹ், பவுலடியார் பற்றி ஏதாவது சொல்லியுள்ளானா? அவருக்கு ஏதாவது தண்டனை கொடுப்பேன் என்று பெயர் குறிப்பிட்டுச்  சொல்லியுள்ளானா அல்லாஹ்? முஸ்லிம்களின் படி, பவுலடியாரின் செயல்கள் அபூ லஹப்பின் செயலை விட பெரியது என்பதால், அல்லாஹ் ஏதாவது குர்‍ஆனில்  சொல்லியிருக்கக்கூடும் என்பதால் தான் இந்த கேள்வியைக் கேட்டேன்!

ஒரு  பலவீனமான  சாதாரண  மனிதனால், சர்வ வல்லவனாகிய அல்லாஹ்வின் வார்த்தைகளை அழிக்கமுடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? உங்களை பொறுத்தமட்டில், தன் வார்த்தைகளை காத்துக்கொள்ள திராணியில்லாத‌, வல்லமையற்ற ஒரு பலவீனமான இறைவனாக அல்லாஹ் காணப்படுகின்றானா?

இதுமட்டுமல்ல, ஒரு முக்கியமான விவரத்தை நீங்கள் மறைமுகமாகச் சொல்லவருகிறீர்கள். அதாவது, பலவீனமான மனிதன் மாற்றிய புத்தகங்கள் 2000 ஆண்டுகளாக மாற்றமடையாமல் இருக்கின்றன, ஆனால், அல்லாஹ்வின் புத்தகங்கள் தொலைந்துவிட்டன, அல்லது மற்றப்பட்டுவிட்டன என்று முஸ்லிம்களாகிய நீங்கள் கூறுகின்றீர்கள்.

அல்லாஹ்வின் புத்தகங்கள் எங்கே!

ஞாயிறு, 21 அக்டோபர், 2018

ஷைத்தானின் புண்ணியத்தினால் ஆயத்துல் குர்ஸியை முஸ்லிம்கள் (ஷைத்தானை துரத்த‌) ஓதிக்கொண்டு இருக்கிறார்கள்!

ஷைத்தானிடமிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக ஆயத்துல் குர்ஸி[1] என்ற ஒரு குர்ஆன் வசனத்தை முஸ்லிம்கள் ஓதுகிறார்கள்.

முஸ்லிம்களே! இந்த வசனத்தை ஓதினால் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு கிடைக்குமென்று உங்களுக்கு கற்றுக் கொடுத்தவன் யார் என்று சிந்தித்து பார்த்து இருக்கின்றீர்களா? சரி, இப்போதாவது அதனை அறிந்துக்கொள்வோம். 

ஆயத்துல் குர்ஸியை ஓதினால், ஷைத்தான் நெருங்கமாட்டான் என்று  கற்றுக்கொடுத்தவன் யார்?

அல்லாஹ் கற்றுக்கொடுத்தானா  - இல்லை!

முஹம்மது கற்றுக்கொடுத்தாரா  - இல்லை! 

அப்படியானால் இதனை கற்றுக் கொடுத்தவர் யார்?

இதனை கற்றுக் கொடுத்தவன் ஷைத்தான் ஆவான்! ஆம் அவன் தான் கற்றுக்கொடுத்தான்.  மேலும் முஹம்மது அதனை அங்கீகரித்தும் இருக்கிறார் என்பதை அறியும் போது, மனது உண்மையாகவே வலிக்கிறது.

சஹீஹ் புகாரி ஹதீஸ் தொகுப்பில் பதிவு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியை படித்துப் பாருங்கள், அப்போது தான் உண்மை உங்களுக்கே புரியும்.

நூல்: புகாரி ஹதீஸ், எண்: 5010

5010. முஹம்மத் இப்னு சீரீன்(ரஹ்) அறிவித்தார் 

அபூ ஹுரைரா(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ரமளானின் (ஃபித்ரா) ஸகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது யாரோ ஒருவன் என்னிடம் வந்து அந்த (ஸகாத்) உணவுப் பொருளை அள்ளலானான். உடனே அவனை நான் பிடித்து, 'உன்னை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்' என்று சொன்னேன்' என்று கூறிவிட்டு, - அந்த நிகழ்ச்சியை முழுமையாகக் குறிப்பிட்டார்கள். - (இறுதியில், திருட வந்த) அவன், 'நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது (ஆயத்துல் குர்ஸீ'யை ஓதுங்கள்! (அவ்வாறு செய்தால்,) விடியும்வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (உங்களைப் பாதுகாக்கின்ற) காவலர் (வானவர்) ஒருவர் இருந்துகொண்டேயிருப்பார்; எந்த ஷைத்தானும் உங்களை நெருங்கமாட்டான்' என்று கூறினான். (இதை நான் நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன்). அப்போது நபியவர்கள், 'அவன் பெரும் பொய்யானாயிருப்பினும அவன் உம்மிடம் உண்மையாகத்தான் சொல்லியிருக்கிறான்; (உம்மிடம் வந்த) அவன்தான் ஷைத்தான்' என்று கூறினார்கள் என்றும் கூறினார்கள். 35 

Volume :5 Book :66 (மேலும் பார்க்க புகாரி ஹதீஸ் எண்கள்: 2311 & 3275)

என்ன ஆச்சரியம்!

இந்த நிகழ்ச்சியை நீங்கள் கற்பனை செய்து பார்க்கமுடியுமா? 

ஷைத்தான், தன்னை எப்படி விரட்ட வேண்டும் என்று தானே முஸ்லிம்களுக்கு நேரடியாக‌ சொல்லிக் கொடுக்கின்றானா! இது எப்படி சாத்தியமாகும்? இதுவும் ஒரு உண்மையான நிகழ்ச்சி என்று நம்பும் அளவிற்கு  முஸ்லிம்கள் அறியாமையில் இருக்கிறார்களா?

ஒரு திருடனின் அறிவுரை:

இதனை கற்பனை செய்துப்பாருங்கள், அதாவது ஒரு  திருடன் அல்லது கொலைக்காரன், உங்களிடம் குழந்தைகள் விளையாடும் தண்ணீர் பாய்ச்சும் போலி துப்பாக்கியைக் கொடுத்து, என்னிடமிருந்து உங்களை காப்பாற்ற இந்த ஆயுதம் உதவும். இதனைக் கொண்டு என்னை சுட்டால், என்னால் உங்களை ஒன்றுமே செய்யமுடியாது. என்னை நம்புங்கள், நான் உண்மையைச் சொல்கிறேன். இதோ இந்த துப்பாக்கியை உங்கள் படுக்கையின் பக்கத்தில் வைத்துக்கொண்டு நீங்கள்  நிம்மதியாக தூங்கலாம். நான் வரும் போது, இதனைக் கொண்டு என்னை சுட்டால் போதும் என்று சொல்கிறான் என்று வைத்துக்கொள்வோம்.

ஒரு திருடன் இப்படி உங்களிடம் சொன்னால், எப்படி இருக்கும் உங்களுக்கு? அதனை  நீங்கள் நம்புவீர்களா?

இதுமட்டுமல்ல, தன்னை எப்படி விரட்டமுடியும் என்று ஷைத்தான் கொடுத்த  ஆலோசனையை  (அல்லது குறுக்குவழியை)  அல்லாஹ்வின் இறைத்தூதரான முஹம்மது அங்கீகரித்தும் விட்டார், என்னே ஆச்சரியம்!

இக்கேள்விகளை சிந்தித்துப்பாருங்கள்: 

  1. தன்னை விரட்டும் வழிமுறைகளை  முஸ்லிம்களுக்கு ஏன் ஷைத்தான் கற்றுக்கொடுப்பான்?
  2. ஷைத்தான் தனக்கு தானே குழி தோண்டிக்கொள்வான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
  3. இப்படி ஷைத்தான் சொன்னான் என்று நம்புவது அறிவுடமையாக இருக்கின்றதா?

சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே; அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? (இயேசு - மத்தேயு 12:26), 

முஹம்மது கூறிய விவரத்தில் உள்ள லாஜிக்கை பார்த்தீர்களா?

அப்போது நபியவர்கள், 'அவன் பெரும் பொய்யானாயிருப்பினும் 

அவன் உம்மிடம் உண்மையாகத்தான் சொல்லியிருக்கிறான்;' (புகாரி எண்: 5010)

இது என்ன ஆச்சர்யம்! ஒரு பெரும் பொய்யன், சொன்னது உண்மையா?

வேடிக்கையாக உள்ளதல்லவா? முஹம்மது அல்லாஹ்வின் இறைத்தூதராக இருப்பதோடு மட்டுமல்லாமல், ஷைத்தானுக்காக வழக்காடும் வழக்கறிஞராகவும் இருக்கிறாரா என்ன? என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா?

ஒருவனைப் பார்த்து, "நீ உலக மகா பொய்யன்" என்ற பட்டத்தை கொடுத்துவிட்ட பிறகு, "நீ சொன்னதும் உண்மையே" என்றுச் சொன்னால், இப்போது நாம் யாரை நொந்துக்கொள்வது? அந்த பொய்யனையா (ஷைத்தானையா) அல்லது அவனை அங்கீகரித்தவரையா (முஹம்மதுவையா)?

அடுத்ததாக, ஷைத்தான் கூறியதையும் கவனியுங்கள்:

அதற்கவன் 'என்னைவிட்டுவிடு! அல்லாஹ் உமக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன்!' என்றான். (நூல்: புகாரி ஹதீஸ், எண் 2311)

  1. அல்லாஹ் "இந்த‌  நன்மையைச் செய்வான்" என்ற முடிவு எடுக்க ஷைத்தானுக்கு அதிகாரம் கொடுத்தவன் யார்? 
  2. ஷைத்தான் சொல்லிவிட்டானே என்பதற்காக, அதன் படி செய்ய அல்லாஹ்வால் முடியுமா? அல்லாஹ் ஷைத்தானுக்கு ஏதாவது கடமைப்பட்டுள்ளானா? 
  3. அல்லது ஷைத்தான் அல்லாஹ்வோடு சேர்த்து செயல்படும் கூட்டாளியா?

இந்த ஹதீஸ் முழுவதையும் படித்தால், இன்னும் பல தர்மசங்கடமான  கேள்விகள் எழும்புகின்றன, ஆனால், இதோடு என் கேள்விகளை முடித்துக்கொள்கிறேன்.

முஸ்லிம்களே, அடுத்த முறை நீங்கள் ஆயத்துல் குர்ஸியை ஓதும் போது, இதனை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள், அது என்னவென்றால், இந்த  ஆயத்தை ஓதினால், ஷைத்தான் ஒன்றுமே உங்களை செய்யமுடியாது என்று உங்களுக்கு ஆலோசனை சொன்னவனே, அதே ஷைத்தான் தான். 

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், ஷைத்தான் உங்களை (முஸ்லிம்களை) தெளிவாக குழப்பி ஏமாற்றியுள்ளான். நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று அவன் விரும்பினானோ, அதனைத் தான் நீங்கள் பல நூற்றாண்டுகளாக செய்துக்கொண்டு இருக்கிறீர்கள், அல்ஹம்துலில்லாஹ்!

அடிக்குறிப்புக்கள்:

1) ஆயத்துல் குர்ஸி என்பது, குர்‍ஆனின் இரண்டாம் அத்தியாயத்தின் 255வது வசனமாகும்.

2:255. அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது; அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது; அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன். (முஹம்மது ஜான் டிரஸ்ட் தமிழாக்கம்).

2) இந்த நிகழ்ச்சி பற்றி பதிவு செய்யப்பட்ட  ஸஹீஹ் புகாரி ஹதீஸ்கள்:

2311. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் ரமளானுடைய (ஃபித்ரா) ஜகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள். அப்போது ஒருவர் வந்து உணவுப் பொருட்களை அள்ளலானார். அவரை நான் பிடித்து, 'உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்!' என்று கூறினேன். அதற்கவர், 'நான் ஓர் ஏழை!' எனக்குக் குடும்பம் இருக்கிறது. கடும் தேவையும் இருக்கிறது! என்று கூறினார். அவரை நான்விட்டு விட்டேன். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள், 'அபூ ஹுரைராவே! நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவர் என்ன செய்தான்? என்று கேட்டார்கள்.நான், 'இறைத்தூதர் அவர்களே! தாம் கடுமையான வறுமையில் இருப்பதாகவும் தமக்குக் குடும்பம் இருப்பதாகவும் அவர் முறையிட்டார். எனவே, இரக்கப்பட்டு அவரைவிட்டு விட்டேன்! என்றேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நிச்சயமாக அவன் பொய் சொல்லியிருக்கிறான்! மீண்டும் அவன் வருவான்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதால் அவன் மீண்டும் வருவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதால் அவன் மீண்டும் வருவான் என்று நம்பி அவனுக்காக(அவனைப் பிடிப்பதற்காக) காத்திருந்தேன். அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கியபோது அவனைப் பிடித்தேன். 'உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்! என்று கூறினேன். அதற்கவன், 'என்னைவிட்டுவிடு! நான் ஓர் ஏழை! எனக்குக் குடும்பமிருக்கிறது! இனிநான் வரமாட்டேன்! என்றான். அவன் மேல் இரக்கப்பட்டு அவனைவிட்டு விட்டேன். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் அபூ ஹுரைராவே! உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்! என்று கேட்டார்கள். நான் 'இறைத்தூதர் அவர்களே! அவன் (தனக்குக்) கடும் தேவையும் குடும்பமும் இருப்பதாக முறையிட்டான்; எனவே, அவன் மேல் இரக்கப்பட்டு அவனைவிட்டுவிட்டேன்! என்றேன். 'நிச்சயமாக அவன் உம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான். திரும்பவும் உம்மிடம் வருவான்! என்றார்கள். மூன்றாம் முறை அவனுக்காகக் காத்திருந்தபோது,அவன் வந்து உணவு பொருட்களை அள்ளத் தொடங்கினான். அவனைப் பிடித்து, 'உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்போகிறேன்! (ஒவ்வொரு முறையும்) 'இனிமேல் வரமாட்டேன்! என்று செல்லிவிட்டு, மூன்றாம் முறையாக நீ மீண்டும் வந்திருக்கிறாய்! என்று கூறினேன். அதற்கவன் 'என்னைவிட்டுவிடு! அல்லாஹ் உமக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன்!' என்றான். அதற்கு நான் 'அந்த வார்த்தைகள் என்ன? என்று கேட்டேன். 'நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸியை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஓதும்! அவ்வாறு செய்தால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான்!' என்றான். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் 'நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்? என்று கேட்டார்கள். 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருவதாக அவன் கூறினான்; அதனால் அவனைவிட்டு விட்டேன்!' என்றேன். 'அந்த வார்த்தைகள் என்ன? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்சியை ஆரம்பம் முதல் கடைசிவரை ஓதும்! அவ்வாறு ஓதினால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்) ஒருவர் இருந்துகொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான்! என்று என்னிடம் அவன் கூறினான்' எனத் தெரிவித்தேன். நபித்தோழர்கள் நன்மையான(தைக் கற்றுக் கொண்டு செயல் படுத்துவதில் அதிக ஆர்வமுடையவர்களாக இருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும் அவன் உம்மிடம் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறான்! மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசி வருகிறீர் என்று உமக்குத் தெரியுமா? என்று கேட்டனர். 'தெரியாது' என்றேன். 'அவன்தான் ஷைத்தான்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

Volume :2 Book :40

3275. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

ரமளானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாத்திடும் பொறுப்பை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது (இரவில்) ஒருவன் வந்து அந்த (ஸகாத்) உணவுப் பொருளை அள்ளலானான். உடனே, நான் அவனைப் பிடித்துக் கொண்டேன்; 'உன்னை அல்லாஹ்வின் தூதரிடம் இழுத்துச் சென்று முறையிடுவேன்' என்று கூறினேன். (அறிவிப்பாளர் முழு நிகழ்ச்சியையும் விபரமாகச் சொல்கிறார்..) இறுதியில் அவன், 'நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸீயை ஓதுங்கள். (அவ்வாறு ஓதினால்) உங்களுடன் பாதுகாவலர் (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரும் வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்' என்று என்னிடம் சொன்னான். (இதை நபி(ஸல்) அவர்களிடம் சொன்னபோது,) 'அவன் பொய்யனாயிருந்தும், உங்களிடம் உண்மை பேசியுள்ளான். அவன் ஷைத்தான் தான்' என்று கூறினார்கள். 

Volume :3 Book :59

5010. முஹம்மத் இப்னு சீரீன்(ரஹ்) அறிவித்தார் 

அபூ ஹுரைரா(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ரமளானின் (ஃபித்ரா) ஸகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது யாரோ ஒருவன் என்னிடம் வந்து அந்த (ஸகாத்) உணவுப் பொருளை அள்ளலானான். உடனே அவனை நான் பிடித்து, 'உன்னை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்' என்று சொன்னேன்' என்று கூறிவிட்டு, - அந்த நிகழ்ச்சியை முழுமையாகக் குறிப்பிட்டார்கள். - (இறுதியில், திருட வந்த) அவன், 'நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது (ஆயத்துல் குர்ஸீ'யை ஓதுங்கள்! (அவ்வாறு செய்தால்,) விடியும்வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (உங்களைப் பாதுகாக்கின்ற) காவலர் (வானவர்) ஒருவர் இருந்துகொண்டேயிருப்பார்; எந்த ஷைத்தானும் உங்களை நெருங்கமாட்டான்' என்று கூறினான். (இதை நான் நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன்). அப்போது நபியவர்கள், 'அவன் பெரும் பொய்யானாயிருப்பினும அவன் உம்மிடம் உண்மையாகத்தான் சொல்லியிருக்கிறான்; (உம்மிடம் வந்த) அவன்தான் ஷைத்தான்' என்று கூறினார்கள் என்றும் கூறினார்கள். 35 Volume :5 Book :66

இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் எங்கேயிருந்து வந்தன?

ஒரு நாளைக்கு ஐந்து வேளை தொழ‌வேண்டும் என்று ஆதாம், நூஹ், இப்ராஹிம், மூஸா, தாவூத்,  சுலைமான், யஹ்யா மற்றும் வேறு எந்த ஒரு தீர்க்கதரிசிக்கும் இறைவன் கட்டளை இடவில்லை.

இறைவனை தொழுதுக்கொள்ளும் போது, உளு (முஸ்லிம்கள் செய்வது  போல‌) செய்யுங்கள் என்று ஆதாம், நூஹ், இப்ராஹிம், மூஸா, தாவூத்,  சுலைமான், யஹ்யா மற்றும் வேறு எந்த ஒரு தீர்க்கதரிசிக்கும் இறைவன் கட்டளை இடவில்லை.  

நீங்கள் ஷஹதா சொல்லுங்கள் என்று ஆதாம், நூஹ், இப்ராஹிம், மூஸா, தாவூத்,  சுலைமான், யஹ்யா மற்றும் வேறு எந்த ஒரு தீர்க்கதரிசிக்கும் இறைவன் கட்டளை இடவில்லை.  

ரமளான் நோன்பு 30 நாட்கள்  கட்டாயம் கடைபிடிக்கவேண்டும் என்று ஆதாம், நூஹ், இப்ராஹிம், மூஸா, தாவூத்,  சுலைமான், யஹ்யா மற்றும் வேறு எந்த ஒரு தீர்க்கதரிசிக்கும் இறைவன் கட்டளை இடவில்லை.  

வெள்ளை ஆடையை அணிந்துக்கொண்டு ஒரு கருப்புக்கல்லை இத்தனை முறை சுற்றிவரவேண்டும் என்று ஆதாம், நூஹ், இப்ராஹிம், மூஸா, தாவூத்,  சுலைமான், யஹ்யா மற்றும் வேறு எந்த ஒரு தீர்க்கதரிசிக்கும்  இறைவன் கட்டளை இடவில்லை.  

இப்படி பல இஸ்லாமிய  வழிபாட்டு முறைகளை  பட்டியல் இடமுடியும். ஒன்றை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஒரு மிகப்பெரிய  நபி  என்று  முஸ்லிம்கள் நம்பும், இயேசுக் கிறிஸ்து கூட, இவைகளில் எந்த ஒரு முறையை கூட செய்யவேண்டும் என்று கற்றுக் கொடுத்ததில்லை மற்றும் போதித்ததில்லை.

இப்படி முந்தைய  தீர்க்கதரிசிகள் யாருமே செய்யாத இந்த வணக்க வழிபாடுகள் எங்கேயிருந்து வந்து, இஸ்லாமில் புகுந்து, சட்டமாக மாறிவிட்டன‌?

பதில்: ஸாபியீன்கள் என்பவர்களிடமிருந்து தான் இவைகள் வந்து, இஸ்லாமின் சட்டமாக மாறிவிட்டன‌.

யார் இந்த ஸாபியீன்கள்(Sabians):

ஸாபியீன்கள் என்பவர்கள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு காலகட்டத்திலிருந்து சந்திர கடவுளை வணங்கும் விக்கிர ஆராதனை செய்பவர்களாக‌ இருந்தார்கள். இவர்களின் வழிப்பாட்டு முறையினால் முஹம்மது அதிகமாக ஈர்க்கப்பட்டார், மேலும் குர்‍ஆனிலும் இவர்கள் பற்றிய குறிப்பு சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது குர்‍ஆன் 2:62ன் படி, இவர்களை அல்லாஹ் அங்கீகரித்துள்ளான்.

2:62. ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது; மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (முஹம்மது ஜான் தமிழாக்கம்).

டாக்டர் ரஃபர் அமரி(Dr Rafat Amari [1]) என்பவரின் "Occultism in the Family of Muhammad" என்ற ஆய்வுக் கட்டுரையின்படி, வராகா  என்பவர் இந்த ஸாபியீன்களின் தலைவர் ஆவார்.  ஆம், இந்த  வராகா (கதிஜாவின் உறவினர்) தான் முஹம்மது ஒரு நபி என்றுச் சொல்லி, அவரை சம்மதிக்கவைத்தவர். முஹம்மது ஆரம்பநாட்களில் யாரால் ஈர்க்கப்பட்டு இருந்தார் என்பதை இப்போது புரிந்திருக்கும்.

இப்னு அல்நதீம்(Ibn al-Nadim) தம்முடைய "அல் ஃபஹ்ரிஸிட் - al-Fahrisit" என்ற புத்தகத்தில், மத்திய கிழக்கு நாடுகளில் பல மத பிரிவுகள் அக்காலத்தில்  இருந்ததாக கூறுகிறார். அவரின் கூற்றின் படி, ஸாபியீன்கள் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் 30 நாட்கள் நோன்பு இருப்பார்கள். அவர்களது சந்திர கடவுளான "சின்"ஐ கனப்படுத்த இப்படி நோன்பு இருப்பார்கள்.

இந்த ஸாபியீன்கள் ஃபித்ர்(Fitr) என்ற பண்டிகையை அனுசரிப்பார்கள் மேலும் ஹிலல் என்ற புது பிறை நாளையும் அனுசரிப்பார்கள். இதனை அவர்கள் மக்காவின் இறைவீட்டை (காபா) கனப்படுத்த செய்வார்கள்.

டாக்டர் ரஃபர் அமரியின் படி, ஸாபியீன்கள் யெமன் நாட்டு திசையை நோக்கி (கிப்லா), தினமும் ஐந்து வேளை தொழுகை புரிகின்றனர். அக்காலத்தில் இதர மத பிரிவுகளில் காணப்பட்ட இப்படிப்பட்ட மத  சடங்காச்சாரங்களை தான் முஹம்மது புதிதாக உருவாக்கிய  மதத்தில் புகுத்திவிட்டார், இவைகள் அல்லாஹ்வினால் கட்டளையிடப்பட்டன என்று சொல்லிவிட்டார்.

அவ்வளவு ஏன், முஸ்லிம்கள் கூறும் விசுவாச அறிக்கையாகிய‌  ஷஹதா  கூட, ஸாபியீன்களிடமிருந்து எடுத்துக் கொண்டதுதான்.

இஸ்லாமிய  அறிஞர் அப்த் அல் ரஹ்மான் இப்னு ஜைத் (Abd al-Rahman Ibn Zayd) கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இப்படி எழுதுகிறார்: பல  தெய்வ பழிப்பாட்டு மக்கள், இறைத்தூதர் மற்றும் அவரது சஹாபாக்களைப் பார்த்து, "இவர்கள் ஸாபியீன்கள்" என்று கூறினார்கள், ஏனென்றால், ஈராக்கில் வாழ்ந்துக்கொண்டு இருந்த ஸாபியீன்கள் கூட "லா இலாஹா இலா அல்லாஹ்" என்றே கூறிக் கொண்டு இருந்தார்கள்.

இதர இஸ்லாமிய மத சட்டங்களான‌, உளூ செய்வது, மிஸ்வாக் பயன்படுத்துவது, கஜல் செய்து சுத்தம் செய்வது போன்றவை  ஜொராஷ்ட்ரியம் (Zoroastrianism) என்ற மத பிரிவிலிருந்து வந்தவைகளாகும்.

இஸ்லாமின் முக்கிய வணக்க வழிபாடுகள் எங்கேயிருந்து வந்தன என்பது இப்போது புரிந்திருக்கும்.

அடிக்குறிப்புக்கள்: