ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

சனி, 25 ஜூன், 2016

2016 ரமளான் (13) – நிலமெல்லாம் இரத்தம் – இஸ்லாமின் மையப்புள்ளியாக ஏன் அற்புதங்கள் இல்லை?

(15. அந்த மூன்று வினாக்கள்)

[நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்திற்கு கொடுக்கப்பட்ட முந்தைய பதில்களை இங்குசொடுக்கி படிக்கலாம்]

மதிப்பிற்குரிய பாரா அவர்களுக்கு, 

என்னுடைய முந்தைய பதிலில், முஹம்மது அற்புதம் செய்பவரல்ல என்று அல்லாஹ் ஆணித்தரமாகச் சொல்லும் குர்-ஆன் வசனங்களை மேற்கோள் காட்டினேன். குர்-ஆனுக்கு எதிராக ஹதீஸ்கள் போர்க்கொடி தூக்கியதையும் விளக்கினேன்.  இந்த கட்டுரையில் இஸ்லாத்தின் மையப்புள்ளி என்ன என்பதைப் பற்றி நீங்கள் எழுதியவைகளை ஆய்வு செய்யலாம் என்று விரும்புகின்றேன். 

பாரா அவர்கள் எழுதியவைகள்:

//ஆனால், சித்து வேலைகளையும் அற்புதம் நிகழ்த்துவதையும் முகம்மது நபி, இஸ்லாத்தின் மையப்புள்ளியாக ஒருபோதும் வைத்ததில்லை.//

அற்புதங்கள் நிகழ்த்துவதை எப்படி இஸ்லாத்தின் மையப்புள்ளியாக முஹம்மது வைக்கமுடியும்? முஹம்மதுவினால் ஒரு அற்புதமும் செய்யமுடியாது என்று அல்லாஹ் குர்-ஆனில் தெளிவாக சொல்லிவிட்ட பிறகு, எப்படி அற்புதங்களை இஸ்லாத்தின் மையப்புள்ளியாக முஹம்மது கருதமுடியும்? கடந்த கட்டுரையில், முஹம்மது செய்ததாகச் சொல்லும் 'சந்திரனை இரண்டாக பிளந்த' அற்புதம் என்பது குர்-ஆனின் அடிப்படையில் ஒரு பொய் என்பதை விளக்கினேன். பல சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு இறக்கப்பட்ட குர்-ஆன் வசனங்களில், முஹம்மது வெறும் எச்சரிக்கை செய்பவர் மட்டுமே என்று அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான்.  மக்காவில் இறக்கிய குர்-ஆன் வசனங்களிலும்,  மதினாவில் இறக்கிய வசனங்களிலும் சரி, இதனை அல்லாஹ் தெளிவாகச் சொல்லியுள்ளான்.  

முஹம்மது பல அற்புதங்களைச் செய்தார் என்றுச் சொல்லும் ஒவ்வொரு முஸ்லிமும், "குர்-ஆன் சொல்வது பொய்" என்று அடித்துச் சொல்கிறார் என்று அர்த்தம்.  முஹம்மதுவினால் முந்தைய நபிகளைப்போல அற்புதங்களைச் செய்யமுடியவில்லை என்பதால், "அற்புதங்கள் நிகழ்த்துவதை இஸ்லாத்தின் மையப்புள்ளியாக முஹம்மது வைத்ததில்லை" என்று சப்பைக் கட்டு கட்டுவார்கள் முஸ்லிம்கள். அதையே நீங்களும் எழுதியுள்ளீர்கள். 

பாரா அவர்கள் எழுதியவைகள்:

//இஸ்லாத்தின் மையம் என்பது குர்ஆன் தான்.//

இஸ்லாத்தின் மையம் குர்-ஆன் என்பதை 100% அங்கீகரிக்கமுடியாது.  எதனை மையமாக வைக்கமுடியும்? என்ற கேள்வி எழுப்பப்பட்டால், "எது முழுமையாக உள்ளதோ, எதைக்கொண்டு ஒரு மார்க்கம் முழுமை அடைகின்றதோ" அதைத் தான் மையமாக கொள்ளமுடியும். ஆனால், குர்-ஆனை ஒரு போதும் இஸ்லாமின் மையமாக கொள்ளமுடியாது. 

உங்களிடம் ஒரு தனிப்பட்ட கேள்வியைக் கேட்கிறேன். இஸ்லாமைத் தொட்டு, 100 தொடர்களைக் கொண்ட ஒரு புத்தகத்தை  நீங்கள் எழுதியுள்ளீர்கள்.  இந்த புத்தகத்தை எழுதுவதற்கு முன்பு, அல்லது கடைசி அத்தியாயத்தை முடிப்பதற்கு முன்பு, ஒரு முறையாவது குர்-ஆனை முழுவதுமாக நீங்கள் படித்தீர்களா? மேலும், குர்-ஆனின் அடிப்படைகளை அறிந்துக்கொள்வதற்கு நீங்கள் அதிகமாக படித்த புத்தகம் எது? குர்-ஆன் கண்டிப்பாக இருக்காது. குர்-ஆனை மட்டுமே படித்து, ஹதீஸ்களையும், இதர இஸ்லாமிய நூல்களையும் படிக்காமல் நீங்கள் நிலமெல்லாம் இரத்தம் எழுத ஆரம்பித்து இருந்திருந்தால், உங்களால் முஹம்மதுவைப் பற்றி ஒரு பக்கம் கூட எழுதியிருக்கமுடியுமா என்பது சந்தேகம் தான். 

இஸ்லாத்தின் மையப்புள்ளி என்று நீங்கள் சொல்லும் குர்-ஆனை மட்டுமே படித்து, ஒருவரால் ஒரு முஸ்லிமாக வாழமுடியாது. முஸ்லிமாக வாழ்வதை விடுங்கள், முதலாவது அவரால் முஸ்லிமாக மாறவே முடியாது. குர்-ஆனை மட்டும் படிப்பவனின் நிலை, கண்ணைக் கட்டி காட்டில் விட்டகதைத்தான்.  

இஸ்லாத்தின் மையப்புள்ளியாக குர்-ஆனை கருதுவதைவிட, ஹதீஸ்களை கருதினால் தான் ஓரளவிற்கு சரியாக இருக்கும்.  இஸ்லாத்திற்கு குர்-ஆன் முக்கியம், ஆனால், அது மட்டுமே போதுமானது அல்ல. 

பாரா அவர்கள் எழுதியவைகள்:

//"குன்" என்கிற ஒரு சொல்லை மரியத்தின் மணிவயிற்றில் வைத்துத்தான் முகம்மதுக்கு முந்தைய நபியான இயேசுவை இறைவன் படைத்தான் என்று இஸ்லாம் சொல்கிறது. அந்தச் சமயம், சொல்லிலிருந்து உதித்தவர், இறைத்தூதர். இம்முறை சொல்லிலிருந்து உதித்தது, குர்ஆன் என்கிற ஒரு வேதம். //

பாரா அவர்களே, உங்களின் மேற்கண்ட இரண்டு வாக்கியங்களை முஸ்லிம்கள் எப்படி புரிந்துக்கொண்டார்களோ, தெரியவில்லை. அவர்கள் அவைகளை சரியாக புரிந்துக்கொண்டு இருந்திருந்தால், உங்களுக்கு பிரச்சனையாக மாறியிருப்பார்கள். 

கிட்டத்தட்ட, மேற்கண்ட இரண்டு வாக்கியங்களில், இயேசுவின் தெய்வீகத்தன்மையை நீங்கள் மறைமுகமாக சொல்லிவிட்டதாக நான் கருதுகிறேன். இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே இருக்கும் மிகப்பெரிய பிளவு, 'இயேசு யார்' என்பதைப் பற்றியதாகும். பைபிளின் படி, இயேசு தேவனுடைய வார்த்தையாக இருக்கிறார். ஆனால், முஸ்லிம்கள் 'இயேசு அல்லாஹ்வின் வார்த்தை மூலமாக உண்டாக்கப்பட்டவர்' என்றுச் சொல்கிறார்கள்.  

உங்களுடைய வரிகளின் படி, 'குன்' என்ற வார்த்தையின் மூலமாக உண்டானவர் இயேசு அல்ல, 'குன்' என்ற வார்த்தையே இயேசுவாக இருக்கிறார். இதைத்தான்  கிறிஸ்தவர்களும் நம்புகிறார்கள்.

'"குன்" என்கிற ஒரு சொல்லை மரியத்தின் மணிவயிற்றில் வைத்துத்தான்' என்ற உங்களின் வரியின் படி, அல்லாஹ் 'குன் (உண்டாகுக)' என்ற வார்த்தையின் மூலமாக இயேசு பிறக்கவில்லை, 'குன்' என்ற வார்த்தையே இயேசுவாக வந்தார் என்பதை புரிந்துக்கொள்ளலாம். இதனை முஸ்லிம்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். ஆனால், குர்-ஆன் முஸ்லிம்களுக்கு எதிராகத் தான் சாட்சி சொல்கிறது. அதாவது இயேசு அல்லாஹ்வின் வார்த்தை என்று குர்-ஆன் சொல்கிறது. 

இயேசு அல்லாஹ்வின் 'குன்' என்ற வார்த்தையின் மூலமாக உண்டானவரா? அல்லது அல்லாஹ்வின் வார்த்தையே இயேசுவா? என்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட தமிழ் கட்டுரைகள் 
பதில் அளிக்கும். 

1) இயேசு இறைவனா? குர்‍ஆன் இறைவனா? (ஏன் உமர் தன் தளத்திற்கு ஈஸா குர்-ஆன் என்று பெயரை வைத்தார்?)

பாரா அவர்கள் எழுதியவைகள்:

//ஆக, குர்ஆன்தான் முக்கியமே தவிர, நிகழ்த்தப்படும் அற்புதங்களல்ல. நிகழ்த்துபவருமல்ல.இதை, மற்ற யாரையும்விட முகம்மது மிக நன்றாக உணர்ந்திருந்தார். தாம் இறைவனால் இஸ்லாத்தை விளக்கவும் பரப்பவும் நியமிக்கப்பட்டிருக்கும் ஒரு கருவி மட்டுமே என்பதைப் பரிபூரணமாக அறிந்திருந்தார். ஆகவே, தன் மூலமாக நிகழ்த்தப்படும் எதற்கும் தான் உரிமை கொள்வதற்கோ பெருமைப்படுவதற்கோ ஏதுமில்லை என்று மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டார் அவர்.//

பாரா அவர்களே, ஒரு முக்கியமான விவரத்தை மறந்து நீங்கள் எழுதுகிறீர்கள் அல்லது மறைத்து எழுதுகிறீர்கள். வேதம் என்பது எவ்வளவு முக்கியமோ, அதனை கொண்டு வந்தவரால் செய்யப்படும் அற்புதங்களும் முக்கியம்.  மதம் என்பது தவறான மனிதனின் கையில் அகப்பட்டுக்கொண்டால், அதிகமாக தீமைகள் நடக்கும் என்பதால், அற்புதங்கள் தேவைப்படுகின்றன. எப்படி என்பதை இப்போது சுருக்கமாக விளக்குகிறேன்.

அ) மோசேயை தேவன் நபியாக நியமித்து, எகிப்திலிருந்து இஸ்ரேல் மக்களை விடுவித்துக்கொண்டு வா? என்றுச் சொல்கிறார். 

ஆ) மோசே சென்று அழைக்கும் போது, உடனே பல இலட்சங்கள் இருக்கும் இஸ்ரேல் மக்கள் இவரின் பின்னால் கேள்வி கேட்காமல் வந்துவிடுவார்களா?

இ) எங்களை அழைப்பதற்கு உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? நீ உண்மையாகவே தேவன் அனுப்பிய நபியா இல்லையா என்பதை நாங்கள் எப்படி அறிந்துக்கொள்வது? என்று இஸ்ரேல் மக்கள் கேள்வி கேட்பார்கள் அல்லவா? இது நியாயமான கேள்வி தானே! எவனோ ஒரு பயித்தியக்காரன் வருவான், அவன் அழைத்தால் கேள்வி கேட்காமல், அவனது தகுதி என்னவென்று சரி பார்க்காமல் அவன் பின்னே போனால், தீமையல்லவா நடக்கும்?

ஈ) எனவே தான், தன் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் போது, மோசே தேவனிடம் கேட்ட முதலாவது கேள்வி – என்னை அவர்கள் நம்பவில்லையென்றுச் சொன்னால், நீங்கள் என்னை அனுப்பினீர்கள் என்று நான் எப்படி நிருபிப்பது? என்று கேட்டார். 

உ) 'அற்புதங்கள் செய்யமுடியாது' என்று தேவன் சொல்லாமல், பல அற்புதங்களோடு மோசேயை அனுப்பினார், பார்க்க யாத்திராகமம் 4: 1-9 .

ஊ) இதே போலத் தான் இயேசுவும் பல அற்புதங்கள் செய்து, தான் ஒரு மேசியா என்பதை நிருப்பித்தார்.  ஆகையால், முஹம்மது ஒரு நபி என்று சொல்லிக்கொண்டால், தன்னிடம் அற்புதம் கேட்பவர்களுக்காக சில அற்புதங்கள் செய்தே ஆகவேண்டும். ஆனால், குர்-ஆனின் படி, இப்படி நடக்கவில்லை, எனவே தான், முஹம்மது ஒரு கள்ள நபி என்று அன்றைய கிறிஸ்தவர்களும், யூதர்களும்  அவரை நம்பவில்லை. இன்றும் அதே நிலை தான். 

இதைப் பற்றி கீழ்கண்ட தமிழ் கட்டுரையில் நான் தெளிவாக விளக்கியுள்ளேன்: 

முடிவுரை:

பாரா அவர்களே, நீங்கள் இஸ்லாமை அறியும் விதத்தில் அறியவில்லை. கிறிஸ்தவத்தை புரிந்துக்கொள்ளும் விதத்தில் புரிந்துக்க்கொள்ளவில்லை. எனவே தான் உங்களின் ஒவ்வொரு இறையியல் வரிகளுக்கு பதில்கள் சொல்லவேண்டி இருக்கிறது. அரைகுறை அறிவு ஆபத்து என்றுச் சொல்வார்களே, அது போல, முஸ்லிம்கள் சொல்லும் இஸ்லாமை மட்டும்ம கற்றுக்கொண்டு தொடர்களை எழுதியுள்ளீர்கள். உண்மையான இஸ்லாமை அறியாமல் இருந்துவிட்டீர்கள். எனவே, நான்  எழுதிக்கொண்டு இருக்கும் இத்தொடர் கட்டுரைகளை படித்தால், நீங்கள் விட்டுவிட்ட சில இஸ்லாமிய விவரங்கள் உங்களுக்கு புரிய ஆரம்பிக்கும். இஸ்லாம் பற்றி எதிர்காலத்தில் எழுதப்போகும் புத்தகங்களுக்கு அடித்தளமாக இவ்விவரங்கள் உங்களுக்கு உதவும். இவைகளை மனதில் பதித்துக்கொண்டு நீங்கள் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் பற்றிய புத்தங்களை எழுதினால், எதிர்காலத்தில் என்னைப்போன்றவர்கள் உங்களுக்கு இப்படிப்பட்ட பதில்களை கொடுக்க வேண்டிய அவசியம் உண்டாகாது.
உங்களை அடித்த பதிலில் சந்திக்கிறேன்.


புதன், 22 ஜூன், 2016

2016 ரமளான் (12) – நிலமெல்லாம் இரத்தம் – குர்ஆனை பொய்யாக்கும் ஹதீஸ்கள் – முஹம்மது அற்புதங்கள் செய்தாரா?

(15. அந்த மூன்று வினாக்கள்)

[நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்திற்கு கொடுக்கப்பட்ட முந்தைய விமர்சனங்களை படிக்க இங்கு சொடுக்கவும்]

மதிப்பிற்குரிய பாரா அவர்களுக்கு,

உங்களுடைய தொடர்களை படிக்க படிக்க பல சந்தேகங்கள் எனக்கு எழுகின்றன. நீங்கள் எழுதியவைகள் அனைத்தும் உண்மையிலேயே சரித்திர விவரங்கள் என்று நீங்கள் அறிந்துக்கொண்டு புரிந்துக்கொண்டு எழுதினீர்களா? அல்லது கவிதைக்கு பொய்யழகு என்றுச் சொல்வார்களே, அது போல தொடர் கட்டுரைகளுக்கும் பொய்யழகு என்ற புதிய விவரத்தை உலகிற்கு தெரிவிப்பதற்காக எழுதினீர்களா? என்ற சந்தேகம் வருகின்றது. முஹம்மது செய்த ஒரு அற்புதம் பற்றி நீங்கள் எழுதியவைகளை இந்த கட்டுரையில் ஆய்வு செய்யப்போகிறோம். இதன் அடிப்படையில் பல கேள்விகளை முஸ்லிம்களிடமும் உங்களிடமும் கேட்கவேண்டியுள்ளது. 

பாரா அவர்கள் எழுதியவைகள்:

//ஒரு பவுர்ணமி தினத்தன்று முகம்மதுவிடம் சென்று, "உண்மையிலேயே நீங்கள் ஓர் இறைத்தூதர் என்று நாங்கள் எப்படி நம்புவது? உங்களால் இந்த முழுநிலவைப் பிளந்து காட்ட முடியுமா?" என்று சவால் விட்டார்கள். "பார், இந்த முகம்மது எப்படித் திண்டாடப்போகிறார்!" என்று தம் குலத்தின் இளவல்களைப் பார்த்துப் பெருமிதமாகப் புன்னகை புரிந்தார்கள்.ஆனால், முகம்மது கண் மூடி தியானித்த மறுகணம் அந்த அற்புதம் நடக்கத்தான் செய்தது. பவுர்ணமி நிலவு இரண்டாக இரு பிறைகளாகப் பிரிந்து காட்சியளித்தது! உடனே, முகம்மது ஒரு மந்திரவாதி, கண்கட்டு வித்தை செய்கிறார் என்று அலறத் தொடங்கிவிட்டார்கள் குறைஷிகள்.ஒன்றல்ல; இதைப்போல் வேறு பல சம்பவங்களும் முகம்மதின் வாழ்க்கையில் நடந்ததற்கான சரித்திரக் குறிப்புகள் இன்றும் வாசிக்கக் கிடைக்கின்றன. (நிலமெல்லாம் இரத்தம், 15. அந்த மூன்று வினாக்கள்) //

இன்னும் இப்படிப்பட்ட பல அதிசயங்கள் முஹம்மதுவின் வாழ்வில் நடந்ததாக 'சரித்திரக் குறிப்புக்கள்' சொல்கின்றன என்று எழுதியுள்ளீர்கள். "ஹதீஸ்கள்" என்பது சரித்திரம் என்று நினைக்கின்றீர்களா? ஹதீஸ்களில் முஹம்மது சொல்லாத பல கட்டுக்கதைகள் இன்னும் இருக்கின்றது என்பதை நீங்கள் அறியவில்லை, ஆனால் பல இலட்ச முஸ்லிம்கள் அதனை அறிந்துக்கொண்டு ஒவ்வொரு ஹதீஸையும் புறக்கணித்துக்கொண்டு வருகிறார்கள்.  சரி, விஷயத்துக்கு வருவோம். 

1) முஹம்மது சந்திரனை பிளந்துக்காட்டி அற்புதம் செய்து, தன் நபித்துவத்தை குறைஷிகளிடம் நிருபித்தது உண்மையா?

உங்களுடைய மேற்கண்ட வரிகளின்படி, முஹம்மது ஒரு பயங்கரமான அற்புதம் செய்துக்காட்டி, தான் அல்லாஹ்வின் இறைத்தூதர் என்று நிருபித்தார். இதற்கு ஆதாரமாக குர்-ஆன் வசனமும், ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸும் உள்ளது. குர்-ஆன் 54:1ம் வசனத்தை நான்கு குர்-ஆன் தமிழாக்கங்களில் காணலாம்.

54:1. (இறுதி) நேரம் நெருங்கி விட்டது; சந்திரனும் பிளந்து விட்டது. (டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்)

54:1. மறுமை நெருங்கிவிட்டது. (அதற்கு அத்தாட்சியாக) சந்திரனும் பிளந்து விட்டது. (அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்)

54:1. மறுமைக்கான நேரம் நெருங்கிவிட்டது. மேலும், சந்திரன் பிளந்து விட்டது. (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்)

54:1 அந்த நேரம்1 நெருங்கிவிட்டது, சந்திரமும் பிளந்துவிட்டது422 (பிஜே தமிழாக்கம்).

சந்திரன் பிளக்கப்பட்டதைப் பற்றி முஸ்லிம் ஹஹீஸில் பதிவுசெய்யப்பட்டுள்ள விவரங்கள்:

5395. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நான் இறைவனின் தூதர் என்பதற்கு) நீங்கள் சாட்சிகளாக இருங்கள்" என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. 

5396. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நாங்கள் (மக்காவிலுள்ள) "மினா" எனுமிடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. (பிளவுண்ட சந்திரனின்) ஒரு துண்டு (ஹிரா) மலைக்கு அப்பா(ல் மேற்பகுதியி)லும் மற்றொரு துண்டு மலைக்குக் கீழேயும் சென்றது.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், "(நான் இறைவனின் தூதர் என்பதற்கு) நீங்கள் சாட்சிகளாக இருங்கள்" என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. 

5397. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. அந்த (ஹிரா) மலை,சந்திரனின் ஒரு துண்டை மறைத்தது. மற்றொரு துண்டு, மலைக்கு மேலே இருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! நீயே சாட்சியாக இரு" என்று சொன்னார்கள்.

- இப்னு உமர் (ரலி) அவர்கள் வாயிலாகவும் மேற்கண்ட ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர் களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

ஆயினும் இப்னு அதீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நீங்கள் சாட்சிகளாக இருங்கள்; நீங்கள் சாட்சிகளாக இருங்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரண்டு முறை) கூறியதாக இடம்பெற்றுள்ளது. 

5398. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்காவாசிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஓர் அற்புதச் சான்றைக் காட்டும்படி கேட்டார்கள். ஆகவே,சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளப்பதை (தாம் இறைவனின் தூதர் என்பதற்குச் சான்றாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. 

5399. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அபூதாவூத் அத்தயாலிசீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சந்திரன் பிளந்தது" என்று இடம்பெற்றுள்ளது. 

5400. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சந்திரன் பிளந்தது. 

இப்படி குர்-ஆனும் ஹதீஸ்களும் சந்திரன்  பிளந்ததைப் பற்றி சாட்சி சொல்வதினால் தான், முஸ்லிம்களாகிய நாங்கள் இதனை நம்புகிறோம் என்று முஸ்லிம்கள் கூறலாம்.  அற்புதங்களை நம்புவதில் எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை, ஆனால், இந்த அற்புதம் முஹம்மதுவின் வாழ்வில் நடந்ததா? என்பது தான் என் கேள்வி.  இந்த அற்புதத்தை நம்புபவர்கள், குர்-ஆனை பொய்யாக்குபவர்களாக இருக்கிறார்கள் என்பது தான் என் கருத்து.  குர்-ஆன் பல இடங்களில் "முஹம்மது அற்புதங்கள் செய்யமாட்டார், அவரின் நபி என்பதற்கு ஆதாரம் குர்-ஆன் மட்டுமே" என்றுச் சொல்கிறது. 

2) முஹம்மது அற்புதங்கள் செய்யமாட்டார், அவர் எச்சரிக்கை செய்பவர் மட்டுமே என்று அடித்துச் சொல்லும் குர்-ஆன்:

முஸ்லிம்களின் நம்பிக்கைப்படி குர்-ஆன் பிழையற்ற வேதமாகும். அடுத்தபடியாகத் தான் ஹதீஸ்கள். இந்த ஹதீஸ்களில் சிலவற்றை இன்றும் முஸ்லிம்கள் மறுக்கிறார்கள் ஏனென்றால், அவைகளில் கட்டுக்கதைகளும், பொய்களும் அதிகமாக இருப்பதினால் தான்.  முஹம்மது தன் நபித்துவத்தை நிருபிக்க எப்போதாவது அற்புதம் செய்தாரா என்பதை குர்-ஆனிலிருந்து பார்ப்போம்.

அ) அற்புதங்கள் செய்யாமல் தட்டிக்கழிக்கும் அல்லாஹ்.

முஹம்மதுவிடம் குறைஷிகள் மற்றும் யூதர்கள் அற்புதங்களைக் கேட்டார்கள். நீங்கள் அற்புதங்களைச் செய்தால், உங்களை ஒரு நபி என்று நம்புவதற்கு வாய்ப்பு உண்டாகும் என்று அவர்கள் சொன்னார்கள். எத்தனை முறை இப்படி கேட்டாலும், அல்லாஹ் ஒரு அற்புதமும் செய்யாமல் எல்லா நேரங்களிலும் தட்டிக்கழித்தார். இதற்கு காரணங்களையும் சொன்னார், அதாவது, முந்தைய கால மக்களைப்போல, இவர்களும்  நம் அத்தாட்சிகளை ஏற்கமாட்டார்கள் எனவே, அவைகளைச் செய்வதினால் ஒரு நன்மையும் இல்லை. எனவே, முஹம்மதுவின் மூலமாக ஒரு அற்புதத்தையும் செய்வதில்லை என்று கராராக குர்-ஆனில் அல்லாஹ் சொல்லிக்காட்டுகின்றான்.   கீழ்கண்ட குர்-ஆன் வசனங்களில் அல்லாஹ் சொல்லும் காரணங்களைக் காணுங்கள். ஒரு பேச்சுக்காகவாவது ஒரே ஒரு அற்புதமும் கூட செய்துக் காட்ட அல்லாஹ் விரும்பவில்லை.  

(முஹம்மது ஜான் டிரஸ்ட் தமிழாக்கத்திலிருந்து வசனங்கள்)

2:118. இன்னும் அறியாதவர்கள் கூறுகிறார்கள்: "அல்லாஹ் ஏன் நம்மிடம் பேசவில்லை; மேலும், நமக்கு ஏன் அத்தாட்சி வரவில்லை?" என்று; இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இப்படியே - இவர்களின் சொற்களைப்போலவே - தான் கூறினார்கள். இவர்களின் இதயங்கள் அவர்களுடைய இதயங்களைப் போன்றவையே தான். ஈமானில் உறுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம்.

2:145. வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் நீர் எல்லாவிதமான அத்தாட்சிகளையும் கொண்டுவந்த போதிலும் அவர்கள் உம் கிப்லாவைப் பின்பற்ற மாட்டார்கள்;; நீரும் அவர்களுடைய கிப்லாவைப் பின்பற்றுபவர் அல்லர்; இன்னும் அவர்களில் சிலர் மற்றவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவர்களும் அல்லர்; எனவே (இதைப் பற்றிய) ஞானம் உமக்குக் கிடைத்த பின் நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றி நடப்பீராயின், நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராக இருப்பீர்.

6:37. (நமது விருப்பம் போல்) ஓர் அத்தாட்சி அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது இறக்கப்பட வேண்டாமா? என்று அவர்கள் கேட்கிறார்கள்; (நபியே!) நீர் கூறும்: "நிச்சயமாக அல்லாஹ் (அத்தகைய) ஓர் அத்தாட்சியை இறக்கி வைக்க வல்லமையுடையவனே; எனினும் அவர்களில் பெரும்பாலோர் அதை அறிந்து கொள்வதில்லை"

6:109. (நிராகரித்துக் கொண்டிருக்கும்) அவர்கள், அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து, தங்களுக்கு ஓர் அத்தாட்சி வந்துவிடுமானால் தாம் நிச்சயமாக அதைக் கொண்டு ஈமான் கொள்வதாக கூறுகிறார்கள். (நபியே!) அவர்களிடம்) நீர் கூறும்: அத்தாட்சிகள் யாவும் அல்லாஹ்விடமே இருக்கின்றன. அந்த அத்தாட்சிகள் வரும்பொழுது நிச்சயமாக அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள் என்பதை உங்களுக்கு எது அறிவித்தது?

முஹம்மது தம்மிடம் அற்புதம் எதிர்ப்பார்கும் மக்களிடம் என்ன சொல்லவேண்டும் என்று அல்லாஹ் முஹம்மதுவிற்கு இந்த பத்தாவது ஸூராவில் கட்டளையிடுகின்றான். அதாவது அற்புதங்கள் அல்லாஹ்விடம் உள்ளன, அவைகளுக்காக நீங்களும் காத்திருங்கள், நானும் காத்திருக்கிறேன் என்று முஹம்மது சொல்லவேண்டுமாம்.

10:20. "மேலும் அவர்கள், இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் கோரும் ஏதேனும்) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?" என்று கூறுகிறார்கள். அதற்கு "மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே (தெரியும்). நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்திருக்கிறேன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.

இரண்டாவது ஸூரா மதினாவில் இறங்கியதாகும் (மதனீ). சந்திரன் பிளந்த அற்புதம் உள்ளது என்றுச் சொல்லும் ஸூரா (54) மக்காவில் இறங்கியதாகும். மக்காவிலேயே ஆரம்ப காலத்தில் (முஹம்மது தம்மை நபியாக காண்பித்துக்கொண்ட நான்கு ஆண்டுகளுக்குள்), முஹம்மது இந்த ஒரு அற்புதம் செய்திருந்தால், ஏன் மதினாவில் இருக்கும் போது இறங்கிய இரண்டாவது ஸூராவில் அற்புதங்கள் எல்லாம் செய்யமுடியாது என்று அல்லாஹ் சொல்லப்போகிறான்? இதிலிருந்து நாம் எவைகளை அறிகிறோம்? முஹம்மது மக்காவில் இருக்கும் போது நடந்ததாகச் சொல்லும் அற்புதம் நடக்கவில்லை என்பதைத் தானே. மக்காவில் செய்த அற்புதத்தை அல்லாஹ் மறந்துவிட்டிருக்கலாம் அல்லவா? என்று முஸ்லிம்கள் சந்தேகப்படமாட்டார்கள் என்று நினைக்கிறேன். 

ஆ) முஹம்மது வெறும் எச்சரிக்கை செய்பவர், அற்புதங்கள் செய்பவர் அல்ல

குர்-ஆன் 13:7ஐ பாருங்கள், முஹம்மது வெறும் "அச்சமூட்டி எச்சரிப்பவர் மட்டுமே" என்றுச் சொல்கிறது. மக்கள் எவ்விதமான அத்தாட்சி, அற்புதங்கள் கேட்டாலும், அதை முஹம்மது மூலமாக செய்துக் காட்ட முடியாது என்று அல்லாஹ் சொல்லிவிடுகின்றான்.

13:7. இன்னும் (நபியே! உம்மைப்பற்றி இந் நிராகரிப்போர் "அவருக்கு அவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்பும்) அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?" என்று கூறுகிறார்கள்; நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரே ஆவீர், மேலும், ஒவ்வொரு சமூகத்தவருக்கும் ஒரு நேர்வழி காட்டியுண்டு.  

"முஹம்மதுவே, மக்கள் ஓயாமல் அற்புதங்கள் கேட்கிறார்கள், ஆனால், நான் செய்வதில்லை, இதற்காக நீர் துக்கப்படவேண்டாம். ஒன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும், உம்மை அற்புதம் செய்ய நான் அனுப்பவில்லை, வெறும் எச்சரிக்கை செய்யவே அனுப்பினேன் என்பதை மறக்கவேண்டாம்" என்று அல்லாஹ் முஹம்மதுவிடம் கூறி அவரை ஆறுதல்படுத்துகிறான், பார்க்க குர்-ஆன் 11:12.

11:12. (நபியே! நம் வசனங்களை அவர்கள் செவிமடுப்பதில்லையே எனச் சடைந்து) வஹீ மூலம் உமக்கு அறிவிக்கப்பட்டவற்றில் சிலவற்றை விட்டுவிட எண்ணவோ, "அவர் மீது ஒரு பொக்கிஷம் இறக்கப்பட வேண்டாமா? அல்லது அவருடன் ஒரு மலக்கு வர வேண்டாமா?" என்று அவர்கள் கூறுவதினால் உம் இதயம் (சஞ்சலத்தால்) இடுங்கியிருக்கவோ கூடும்; நிச்சயமாக நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறில்லை; அல்லாஹ் எல்லா பொருட்களின் மீதும் பொறுப்பாளனாக இருக்கிறான்.

உம்மிடம் அற்புதங்கள் கேட்பவர்களிடம், " நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிகெடச்செய்கிறான்; தன் பால் எவர் திரும்புகிறாரோ அத்தகையோருக்கு நேர் வழிகாட்டுகிறான்" என்றுச் சொல்லிவிடுங்கள் என்று அல்லாஹ் சொல்கின்றான், பார்க்க 13:27.

13:27. "இவருக்கு இவருடைய இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சி இறக்கி வைக்கப்படக் கூடாதா" என்று நிராகரிப்போர் கூறுகிறார்கள், (நபியே!) நீர் கூறும்: "நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிகெடச்செய்கிறான்; தன் பால் எவர் திரும்புகிறாரோ அத்தகையோருக்கு நேர் வழிகாட்டுகிறான்" என்று

இ) மக்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காவே  அன்றி நாம் (இத்தகைய) அத்தாட்சிகளை அனுப்புவதில்லை:

உம்முடைய நபித்துவத்தை நிருபிக்க நான் அத்தாட்சிகளை அனுப்பமாட்டேன். ஆனால், மக்களை பயமுறுத்தவும், எச்சரிக்கைச்  செய்யவுமே அற்புதங்களைச் செய்வேன் என்று தெளிவாக அல்லாஹ் சொல்கின்றான். பார்க்க குர்-ஆன் 17:59

17:59. (நம்முடைய அத்தாட்சிகளை இவர்களுக்கு) முந்தியவர்களும் பொய்ப்பித்ததைத் தவிர (வேறு எதுவும் இவர்கள் கோரும்) அத்தாட்சிகளை அனுப்ப நம்மைத் தடுக்கவில்லை; (இதற்கு முன்) நாம் "ஸமூது" கூட்டத்தாருக்கு ஒரு பெண் ஒட்டகத்தைக் கண்கூடான அத்தாட்சியாகக் கொடுத்திருந்தோம்; அவர்களோ (வரம்பு மீறி) அதற்கு அநியாயம் செய்தனர்; (மக்களை) அச்சமூட்டி எச்சரிப்பதற்காவே அன்றி நாம் (இத்தகைய) அத்தாட்சிகளை அனுப்புவதில்லை.

மக்கள் எத்தனை முறை கேட்டலும் சரி, அல்லாஹ் முஹம்மதுவின் நபித்துவத்தை நிருப்பிக்க அற்புதங்களைச் செய்வதாக இல்லை. இதனை மேற்கண்ட வசனங்கள் தெளிவாகச் சொல்கின்றன. இதனை எந்த ஒரு முஸ்லிமாவது மறுக்கமுடியுமா?

ஈ) குர்-ஆன் மட்டுமே அற்புதமாகும், இது போதாதா அவர்களுக்கு?

இன்னும் ஒரு இடத்தில் அல்லாஹ் மிகவும் தெளிவாக மறுப்பதைக் காணமுடியும். முஹம்மது வெறும் எச்சரிக்கை செய்பவர், அவர் மூலமாக நான் அற்புதங்கள் செய்யமாட்டேன், அதனால் பயனுமில்லை. ஆனால், குர்-ஆன் என்ற அற்புதத்தை அவர் மூலமாக கொடுத்து இருக்கிறேன். இந்த குர்-ஆன் அவர்களுக்கு போதாதா? என்று நச்சென்று அல்லாஹ் சொல்கிறான்.

29:50. "அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது அத்தாட்சிகள் ஏன் இறக்கப்படவில்லை?" என்றும் அவர்கள் கேட்கிறார்கள்; "அத்தாட்சிகளெல்லாம் அல்லாஹ்விடம் உள்ளன; ஏனெனில் நான் வெளிப்படையாக அச்ச மூட்டி எச்சரிக்கை செய்பவன் தான்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.

29:51. அவர்களுக்கு ஓதிக்காட்டப்படும் இவ்வேதத்தை நாம் உம் மீது இறக்கியிருக்கிறோம் என்பது அவர்களுக்குப் போதாதா? நிச்சயமாக அ(வ் வேதத்)தில் ரஹ்மத்தும், ஈமான் கொண்ட சமூகத்தாருக்கு (நினைவூட்டும்) நல்லுபதேசமும் இருக்கின்றன.  (முஹம்மது ஜான் டிரஸ்ட் தமிழாக்கம்)

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:

29:50. அன்றி ("தாங்கள் விரும்புகிறபடி) சில அத்தாட்சிகள் அவருடைய இறைவனால் அவருக்கு அளிக்கப்பட வேண்டாமா?" என்று இவ்வக்கிரமக்காரர்கள் கூறுகின்றனர். அதற்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "அத்தாட்சிகள் எல்லாம் அல்லாஹ்விடத்தில்தான் இருக்கின்றன. (என்னிடமில்லை.) நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவன் மட்டும்தான்."

29:51. (நபியே!) இவ்வேதத்தை மெய்யாகவே நாம் உங்கள் மீது இறக்கி வைத்திருக்கிறோம் என்பதற்கு அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படும் இவ்வேதமே போதுமான அத்தாட்சியல்லவா? ஏனென்றால், இதில் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக (இறைவனுடைய) அருளும் இருக்கின்றது; (பல) நல்லுபதேசங்களும் இருக்கின்றன.

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:

29:50. இவர்கள் கேட்கின்றார்கள், "இவருடைய இறைவனிடமிருந்து இவருக்கு ஏன் சான்றுகள் இறக்கியருளப்படவில்லை" என்று! அதற்கு நீர் கூறும்: "சான்றுகள் அல்லாஹ்விடம் உள்ளன. நானோ தெள்ளத்தெளிவாக எச்சரிக்கை செய்பவனாகவே இருக்கின்றேன்."

29:51. அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படுகின்ற வேதத்தை உம் மீது நாம் இறக்கியருளி இருப்பது அவர்களுக்குப் போதுமான சான்றாக இல்லையா? திண்ணமாக, நம்பிக்கை கொள்ளும் சமூகத்தினர்க்கு இதில் கருணையும் நல்லுரையும் இருக்கின்றன.

மேற்கண்ட வசனங்களில், இஸ்லாமை நம்பாதவர்கள் சொல்லும் குற்றச்சாட்டை அல்லாஹ் மறுக்காமல் அதனை ஏற்றுக்கொள்கின்றான். முஹம்மதுவினால் அற்புதங்கள் செய்யமுடியாதது உண்மை தான், ஏனென்றால் அவர் வெறும் எச்சரிக்கை செய்பவர் மட்டுமே, அற்புதங்கள் செய்பவர் அல்ல என்று அல்லாஹ் சொல்கின்றான். மேலும், இதனை அற்புதங்கள் கேட்கும் மக்களிடம் சொல்லும் படி முஹம்மதுவிற்கும் கட்டளையிடுகின்றான்.

3) முஹம்மது அற்புதங்கள் செய்பவரல்ல என்றுச் சொல்லும் இஸ்லாமிய அறிஞர் "முஹம்மது அஸத்"

முஹம்மது அஸத் என்பவர் எழுதிய விரிவுரையில், முஹம்மது கடைசி மற்றும் பெரிய நபியாக இருக்கலாம், ஆனால், முந்தைய காலத்தில் நபிகள் செய்தது போல அற்புதகங்கள் செய்பவர் அல்ல என்றுச் சொல்கிறார்.

குர்-ஆன் 17:59க்கு இவர் எழுதிய விளக்கவுரை:

Note 71 (Quran Ref: 17:59 )

This highly elliptic sentence has a fundamental bearing on the purport of the Qur'an as a whole. In many places the Qur'an stresses the fact that the Prophet Muhammad, despite his being the last and greatest of God's apostles, was not empowered to perform miracles similar to those with which the earlier prophets are said to have reinforced their verbal messages. His only miracle was and is the Qur'an itself - a message perfect in its lucidity and ethical comprehensiveness, destined for all times and all stages of human development, addressed not merely to the feelings but also to the minds of men, open to everyone, whatever his race or social environment, and bound to remain unchanged forever. Since the earlier prophets invariably appealed to their own community and their own time alone, their teachings were, of necessity, circumscribed by the social and intellectual conditions of that particular community and time; and since the people to whom they addressed themselves had not yet reached the stage of independent thinking, those prophets stood in need of symbolic portents or miracles (see surah 6, note 94) in order to make the people concerned realize the inner truth of their mission. The message of the Qur'an, on the other hand, was revealed at a time when mankind (and, in particular, that part of it which inhabited the regions marked by the earlier, Judaeo-Christian religious development) had reached a degree of maturity which henceforth enabled it to grasp an ideology as such without the aid of those persuasive portents and miraculous demonstrations which in the past, as the above verse points out, only too often gave rise to new, grave misconceptions.(Quran Ref: 17:59 )

மேலும் குர்-ஆன் 54:1ம் வசனத்துக்கு இவர் கொடுத்த விளக்கவுரையை படிக்கவும். சந்திரனின் பிளவு பற்றி குர்-ஆன் சொல்வது, எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்ச்சியாகும், அது முஹம்மது காலத்தின் அற்புதமல்ல என்றுச் சொல்கிறார்:

1 Most of the commentators see in this verse a reference to a phenomenon said to have been witnessed by several of the Prophet's contemporaries. As described in a number of reports going back to some companions, the moon appeared one night as if split into two distinct parts. While there is no reason to doubt the subjective veracity of these reports, it is possible that what actually happened was an unusual kind of partial lunar eclipse, which produced anequally unusual optical illusion. But whatever the nature of that phenomenon, it is practically certain that the above Qur'an-verse does not refer to it but, rather, to a future event: namely, to what will happen when the Last Hour approaches. (The Qur'an frequently employs the past tense to denote the future, and particularly so in passages which speak of the coming of the Last Hour and of Resurrection Day; this use of the past tense is meant to stress the certainty of the happening to which the verb relates.) Thus, Raghib regards it as fully justifiable to interpret the phrase inshaqqa 'l-qamar ("the moon. is split asunder") as bearing on the cosmic cataclysm - the end of the world as we know it - that will occur before the coming of Resurrection Day (see art. shaqq in the Mufradat). As mentioned by Zamakhshari, this interpretation has the support of some of the earlier commentators; and it is, to my mind, particularly convincing in view of the juxtaposition, in the above Qur'an-verse, of the moon's "splitting asunder" and the approach of the Last Hour. (In this connection we must bear in mind the fact that none of the Qur'anic allusions to the "nearness" of the Last Hour and the Day of Resurrection is based on the human concept of "time".)

4) குர்-ஆன் 54:1, சந்திரன் பிளந்ததைச் சொல்கின்றதா? (அ) சந்திரன் பிளக்கப்போவதைச் சொல்கின்றதா?

முஹம்மது வெறும் எச்சரிக்கை செய்பவர் மட்டுமே, அவர் முந்தைய நபிகளைப்போல அற்புதங்கள் செய்பவர் அல்ல என்று அல்லாஹ் பல முறை சொல்லிவிட்டான். அல்லாஹ் ஒருமுறை சொன்னால், நூறு முறை சொன்னது போல் ஆகாதா? ஆனால், குர்-ஆனில் ஒரு முறை அல்ல பல முறை சொல்லிவிட்டான். 

ஆனால், இந்த முஸ்லிம் ஹதீஸ் ஏன் அல்லாஹ் சொன்னதற்கு மாற்றமாகச் சொல்கிறது?  குர்-ஆனில் சொல்லப்பட்டதற்கு எதிராக ஹதீஸ் சொல்கிறது என்று வைத்துக்கொள்வோம். முஸ்லிம்கள் இப்போது என்ன செய்வார்கள்? குர்-ஆனின் பல வசனங்களை மறுப்பார்களா? அல்லது ஹதீஸை மறுப்பார்களா?

நபித்தோழர்கள் இப்படி முஹம்மது மீது இப்படி இட்டுக்கட்டுவார்களா? என்று முஸ்லிம்கள் கேள்வி கேட்டால், அதற்காக, அல்லாஹ் குர்-ஆனில் இட்டுக்கட்டினான் என்று சொல்வீர்களா? அல்லாஹ்வின் வார்த்தையை புறக்கணித்துவிடுவீர்களா?

முஸ்லிம்களிடம் கேட்கவேண்டிய கேள்விகள்: முஹம்மது அற்புதங்கள் செய்வாரா? என்று கேள்வி கேட்டால், "குர்-ஆன் அவர் செய்யமாட்டார் என்றுச் சொல்கிறது", "ஹதீஸ்கள் அவர் செய்வார்" என்றுச் சொல்கிறது. இதில் எதனை முஸ்லிம்கள் அங்கீகரிப்பார்கள்? குர்-ஆன் சொல்வதையா? அல்லது ஹதீஸ்கள் சொல்வதையா?

முஸ்லிம் ஹதீஸ் எப்போது தொகுக்கப்பட்டது? ஹிஜ்ரி 200க்கு பிறகு, அதாவது முஹம்மது மரித்த 200 ஆண்டுகளுக்கு பிறகு தொகுக்கப்படுகின்றது. இமாம் முஸ்லிம் ஹிஜ்ரி 204ல் பிறக்கிறார், 261ல் மரிக்கிறார்.[1]

முஹம்மதுவிற்கு பிறகு வந்தவர்கள், அவரை நேசிப்பவர்கள் பல கட்டுக்கதைகளை அவர் மீது சொல்லியிருக்கிறார்கள், குர்-ஆனின் 54:1ம் வசனம் சொல்வது எதிர்காலத்தில் நடக்கும் என்பதை அறியாமல், தாங்களாகவே இட்டுக்கட்டியுள்ளார்கள். இந்த கட்டுக்கதைகளுக்கு முஹம்மதுவின் தோழர்களின் பெயர்களையும் பயன்படுத்திக்கொண்டுள்ளார்கள். இப்படிப்பட்ட ஹதீஸ்களுக்கு சரியான சங்கிலித்தொடர் இருக்கத்தான் செய்யும், ஆனால், குர்-ஆனோடு மோதுகின்றது என்பதை முஸ்லிம்கள் கவனிக்கவேண்டாமா?  குர்-ஆனின் வசனங்களை கவனிக்கும்போது, முஹம்மது அல்லாஹ்விடம் வேண்டிக்கொண்டு சந்திரனை பிளந்தார் என்ற அற்புதமானது, ஒரு பொய்யான ஹதீஸாகும், குர்-ஆனோடு மோதும் ஹதீஸாகும். 

அடுத்தபடியாக, அந்த ஹதீஸ்களை மேலோட்டமாக படிக்கும் போதும், அவைகளில் தவறுகள் இருப்பதை காணமுடியும். இன்னொரு முறை அவ்வதீஸ்களை பதித்து, என் கேள்விகளை முன்வைக்கிறேன்.

5395. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நான் இறைவனின் தூதர் என்பதற்கு) நீங்கள் சாட்சிகளாக இருங்கள்" என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. மேலும் பார்க்க ஹதீஸ் எண்கள்: 5399 & 5400

கேள்விகள்: யாரிடம் முஹம்மது "(நான் இறைவனின் தூதர் என்பதற்கு) நீங்கள் சாட்சிகளாக இருங்கள்" என்று கூறினார்?  முஹம்மதுவின் தோழர்கள் ஏற்கனவே அவரை நபி என்று நம்பிவிட்டார்களே! அவர்களிடம் ஏன் மறுபடியும் நீங்கள் சாட்சிகளாக இருங்கள் என்று கேட்கிறார்?

5396. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நாங்கள் (மக்காவிலுள்ள) "மினா" எனுமிடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. (பிளவுண்ட சந்திரனின்) ஒரு துண்டு (ஹிரா) மலைக்கு அப்பா(ல் மேற்பகுதியி)லும் மற்றொரு துண்டு மலைக்குக் கீழேயும் சென்றது.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், "(நான் இறைவனின் தூதர் என்பதற்கு) நீங்கள் சாட்சிகளாக இருங்கள்" என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. 

5397. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. அந்த (ஹிரா) மலை,சந்திரனின் ஒரு துண்டை மறைத்தது. மற்றொரு துண்டு, மலைக்கு மேலே இருந்தது.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! நீயே சாட்சியாக இரு" என்று சொன்னார்கள்.

- இப்னு உமர் (ரலி) அவர்கள் வாயிலாகவும் மேற்கண்ட ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர் களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

ஆயினும் இப்னு அதீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நீங்கள் சாட்சிகளாக இருங்கள்; நீங்கள் சாட்சிகளாக இருங்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரண்டு முறை) கூறியதாக இடம்பெற்றுள்ளது. 

கேள்விகள்:

  • சந்திரனின் விட்டம் எவ்வளவு என்று இந்த ஹதீஸை அறிவித்த அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் என்பவருக்குத் தெரியுமா?
  • சந்திரன் இரண்டாக பிளந்து ஒரு துண்டு ஹிரா மலைக்கு மேற்பகுதியில் காணப்பட்டதாம், இன்னொரு துண்டு ஹிரா மலைக்கு கீழ்பகுதிக்கு சென்றதாம். 
  • பூமியில் அளவில் நான்கில் ஒரு பாகம் சந்திரனின் அளவு ஆகும் (27%).
  • சந்திரனின் விட்டம் 1737 கிலோ மீட்டராகும். [2]
  • பூமியில் நின்றுக்கொண்டு சந்திரனை பார்ப்பவர்கள் (அக்கால அரேபியர்கள்), சந்திரனின் அளவு நம் இரண்டு கைகளால் பிடிக்கக்கூடிய அளவிற்கு இருக்கும் ஒரு பந்து போல என்று நினைத்துக்கொண்டு மேற்கண்ட ஹதீஸை சொல்லியுள்ளார்கள். ஆனால், 1737 கிமீ விட்டம் கொண்ட  ஒரு பந்தை இரண்டாக பிளந்தால், அதன் பின்னால், ஹிரா மலையென்ன, அரேபியாவின் பாதி அப்படியே மறைந்துவிடும். 

மேற்கண்ட ஹதீஸ் ஒரு பொய்யான ஹதீஸ் என்பது இதிலிருந்து நமக்குத் தெரிகின்றது. ஒருவர் கனவு கண்டால், அதில் மேற்கண்ட விதமாக பார்த்தார் என்றுச் சொன்னால், அதனை ஏற்கலாம், ஏனென்றால் கனவில் (கற்பனைப்போன்று) எல்லாம் சாத்தியம். ஆனால், இங்கு நாம் ஆய்வு செய்துக்கொண்டு இருப்பது, உண்மையான நிலவு இரண்டாக பிளந்தது பற்றியதாகும். எனவே, முஹம்மது சந்திரனை பிளந்து அற்புதம் செய்தார் என்பது பொய்யான கூற்று மேலும், குர்-ஆனின் போதனைக்கு எதிராக ஒன்று.

5398. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்காவாசிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஓர் அற்புதச் சான்றைக் காட்டும்படி கேட்டார்கள். ஆகவே,சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளப்பதை (தாம் இறைவனின் தூதர் என்பதற்குச் சான்றாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. 

கேள்விகள்: மக்காவாசிகள் எந்த அற்புதங்களைக் கண்டாலும் நம்பமாட்டார்கள் என்று பல வசனங்களில் சொல்லிவிட்டு, மறுபடியும், அவர்களுக்கு எப்படி அற்புதம் செய்துக் காட்டினார்? அல்லாஹ் சர்வ ஞானி தானே! அவர்கள் நம்பமாட்டார்கள் என்று அல்லாஹ்விற்கு சந்திரனை பிளப்பதற்கு  முன்பு தெரியாதா? சரி, சந்திரனை பிளந்துவிட்ட பின்பு எத்தனை மக்காவாசிகள் முஹம்மது நபி என்று ஏற்றுக்கொண்டார்கள்?

முடிவுரை:

இதுவரை கண்ட விவரங்களின் படி:

1) முஹம்மது அற்புதங்கள் செய்பவரல்ல என்று குர்-ஆன் தெளிவாகச் சொல்கிறது. 

2) முஹம்மது மக்களை வெறும் எச்சரிக்கை செய்பவர் தான் என்றும் அல்லாஹ் அடித்துச் சொல்கிறான்.

3) பல முறை மக்காவாசிகளும், யூதர்களும் அற்புதங்களைக் கேட்டாலும் ஏதோ ஒரு காரணம் சொல்லி அல்லாஹ் தட்டிக்கழித்துள்ளான்.

4) குர்-ஆன் 54:1ல் சொல்லப்பட்டது, எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் ஒரு நிகழ்வாகும்.

5) முஹம்மதுவிற்கு, அவரது தோழர்களுக்கும் பிறகு வந்தவர்கள், இட்டுக்கட்டியது தான் "முஹம்மது சந்திரனை பிளந்த" அற்புதம்.

6) இந்த ஒரு அற்புதம் மட்டுமல்ல, ஹதீஸ்களில் காணப்படும் இதர அற்புதங்களும் மற்றவர்கள் இட்டிக்கட்டியவையே, ஏனென்றால், அவைகள் அனைத்தும் குர்-ஆனையும், அல்லாஹ்வையும் பொய்யாக்குகிறது. குர்-ஆனும் அல்லாஹ்வும் பொய்யென்றால், அற்புதங்கள் செய்தார் என்று நம்பப்படும் முஹம்மதும் பொய்யரே!

7) ஹதீஸ்களின் படி முஹம்மது அற்புதங்கள் செய்தார் என்றுச் சொல்பவர்கள், குர்-ஆனை புறக்கணித்தவர்களாகிறார்கள். குர்-ஆனை புறக்கணித்தவர்கள் குர்-ஆனின் படியே காஃபிர்களாக கருதப்படுவார்கள்.

பாரா அவர்களே! உங்களுக்கு நான் என்ன எழுதியிருக்கிறேன் என்று புரிகின்றதா? புரியவில்லையென்றால் கவலையை விடுங்கள், இன்னும் நிறைய இஸ்லாமிய விவரங்களை உங்களுக்கு சொல்லவேண்டி இருக்கிறது. 

பீஜே அவர்களுக்கு:

அருமை தமிழ் முஸ்லிம் அறிஞர் பீஜே அவர்களே! உங்களுடைய தள்ளுபடி ஹதீஸ்களில் மேற்கண்ட சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ்கள் உள்ளனவா? அப்படி இல்லையென்றால், எப்போது இவைகளை உங்கள் பட்டியலில் சேர்க்கப்போகிறீர்கள்? வாசகர்களே! இந்த தேதியை (22 ஜூன் 2016) குறித்துக்கொள்ளுங்கள். எதிர்காலத்தில் முஸ்லிம்கள் மேற்கண்ட ஹதீஸ்களை தள்ளிவிடும் நாள் வரும்போது, இந்த பத்தியை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். 

அடிக்குறிப்புக்கள்:

சனி, 18 ஜூன், 2016

2016 ரமளான் (11) – நிலமெல்லாம் இரத்தம் – யூதர்களுக்கு ஒரு பெரிய ‘ஓ’ போடுவோமா முஸ்லிம்களே!?!

[நிலமெல்லாம் இரத்தம் – முந்தைய விமர்சன கட்டுரைகளை படிக்க இங்குசொடுக்கவும்]

மதிப்பிற்குரிய பாரா அவர்களுக்கு,

நீங்கள் நபிகள் பற்றி கூறிய கருத்துக்களுக்கு என் கேள்விகளை முந்தைய விமர்சனத்தில் முன்வைத்தேன். அதைத் தொடர்ந்து இஸ்லாம் மற்றும் நபிகள் குறித்த ஒரு முக்கியமான விவரத்தை இந்த கட்டுரையில் எழுதிவிட்டு, உங்களின் இதர வரிகளுக்கு நாம் செல்வோம்.

நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்தில் நீங்கள் இஸ்லாம் பற்றி எழுதியவைகளை கூர்ந்து கவனித்தால், கிட்டத்தட்ட இஸ்லாம் சொல்வதை அப்படியே நீங்கள் அங்கீகரிப்பது போல காணப்படுகின்றது. எனவே தான், முஸ்லிம்களிடம் கேட்கவேண்டிய கேள்வியை உங்களிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.  (இன்னும் 50 ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது இந்த தற்கால சந்ததி மறைந்த பிறகு, "பாரா அவர்கள் முஸ்லிமாக மாறியிருந்தார், அவருடைய நிலமெல்லாம் புத்தகத்தை படித்தால் அவர் முஸ்லிம் என்பது புரியும்" என்று முஸ்லிம்கள் சொன்னாலும் சொல்லக்கூடும்).  

யூதர்களுக்கு ஒரு பெரிய 'ஓ' போடுவோமா முஸ்லிம்களே!?!

யூதர்களுக்கு நாம் ஏன் 'ஓ' போடவேண்டும்? அதாவது ஏன் அவர்களை மெச்சிக்கொள்ளவேண்டும்? அப்படி என்ன உலக மகா காரியத்தை அவர்கள் செய்துவிட்டார்கள்? போன்ற கேள்விகள் உங்களுக்கு எழலாம். அதற்கான பதிலைத் தான் இக்கட்டுரையில் எழுதப்போகிறேன். 

• பல நூறு ஆண்டுகள் சொந்த நாடு இல்லாமல் இருந்த யூதர்களுக்கு திடீரென்று நாடு கிடைத்ததே! அதற்காக ஓ போடவேண்டுமா? – இல்லை இதற்காக இல்லை.

• மத்திய கிழக்கு பகுதியில், பல இஸ்லாமிய நாடுகளுக்கு மத்தியிலே ஒரு சுண்டக்கா போல இருந்துக்கொண்டு, எந்த ஒரு பயமுறுத்தலுக்கும் அடிபணியாமல் இருக்கிறார்களே! இதற்காக ஓ போடவேண்டுமா? - இல்லை இதற்காக இல்லை.

• உலகில் கொஞ்ச ஜனத்தொகையாக இருந்தாலும், பல நோபல் பரிசுகளை அள்ளிச் சென்றுள்ளார்களே, பல விஞ்ஞான கண்டுபிடிப்புக்களை கண்டுபிடித்து இருக்கிறார்களே! அதற்காக ஓ போடவேண்டுமா? - இல்லை இதற்காக இல்லை.

மேற்கண்ட காரணங்களுக்காக இல்லையென்றால், வேறு எதற்காக நாம் யூதர்களுக்கு 'ஓ' போடவேண்டும்?

உலகில் முதல் மனிதன் ஆதாம் உண்டானது முதற்கொண்டு, எந்த ஒரு இனமும், எந்த ஒரு நாட்டு மக்களும் செய்யாத ஒரு காரியத்தை யூதர்கள் மட்டுமே செய்துள்ளார்கள். இஸ்லாமை நம்புகிறவர்கள், அல்லாஹ்வை நம்புகிறவர்கள் மட்டுமே யூதர்களுக்கு ஓ போட வேண்டும், அதாவது அவர்களுடைய மேன்மையை உலகம் அனைத்திலும் பரப்பவேண்டும்.  ஏன் என்று அறிந்துக்கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே தரப்பட்ட சில பத்திகளை படியுங்கள். 

1) அல்லாஹ் எல்லா நாடுகளுக்கும், இனங்களுக்கும், மொழிவாரியாக நபிகளை அனுப்பினான்

குர்-ஆனின் படி, உலகில் வந்த முதல் மனிதன் ஆதாம் முதற்கொண்டு அல்லாஹ் எல்லா நாடுகளுக்கும், எல்லா மொழி பேசும் மக்களை நல்வழிப்படுத்த பல ஆயிர நபிகளை அனுப்பியுள்ளான். அவன் நபிகளை அனுப்பாத சமுதாயமே இல்லை, எல்லா மக்களுக்கும் நல்வழிக்காட்ட அல்லாஹ்வின் இறைச்செய்தி அனுப்பப்படாத சமுதாயம் இல்லை (குர்-ஆன் 16:36, 40:78, 23:44, 28:59).

முஹம்மதுவின் காலத்துக்கு முன்பு வரை இப்படி அனுப்பிக்கொண்டே இருந்தான். கடைசியாக, கி.பி. 570-632 ஆண்டுகளில் முஹம்மது என்பவரை அனுப்பினான், இவர் தான் அல்லாஹ் அனுப்பிய கடைசி நபி என்று இஸ்லாம் சொல்கிறது.

உலகில் அல்லாஹ் அனுப்பிய அனைத்து நபிகளும் 'அல்லாஹ்' என்ற ஏக இறைவனை வணங்கும் படி போதித்தார்கள். ஒரே இன மக்களுக்கு பல நபிகளை ஒருவருக்கு பின்னாக இன்னொருவரை அனுப்பிக்கொண்டே இருந்தான்.  இந்த நபிகள் அல்லாஹ் தனக்கு கட்டளையிட்டவைகளைக் கொண்டு மக்களுக்கு போதித்தார்கள், நேர்வழி காட்டினார்கள். சில சமுதாய மக்கள் இவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், அல்லாஹ் சோர்ந்துப்போகவில்லை, முஹம்மதுவின் காலம் வரை (கி.பி. 570-632), சரமாரியாக அனுப்பிக்கொண்டே இருந்தான். அப்படியானால் எத்தனை நபிகளை அனுப்பியிருக்கவேண்டும் கற்பனை செய்துப்பாருங்கள்? கடைசியாக முஹம்மதுவை அனுப்பி, இவர் தான் கடைசி நபி, இனி நான் எந்த ஒரு நபியையும் அனுப்பப்போவதில்லை என்று அடித்துச் சொல்லிவிட்டான். இதுதான் இஸ்லாம் சொல்லும் நபிகள் பற்றிய இறையியல்.

குர்-ஆனில் 25 நபிகளின் பெயர்கள் மட்டுமே உள்ளது. மேலும், சில இஸ்லாமியர்களின் கணக்குப்படி 1,24,000 நபிகள் மற்றும் இறைத்தூதர்களை அல்லாஹ் உலகில் அனுப்பியுள்ளான். சில இஸ்லாமிய அறிஞர்கள் இந்த எண்ணிக்கை தவறு என்றுச் சொல்கிறார்கள். ஆனால், முஹம்மதுவின் காலம் வரைக்கும் நபிகளை/இறைத்தூதர்களை தொடர்ந்து உலகம் முழுவதும் அல்லாஹ் அனுப்பியது மட்டும் உண்மை என்று எல்லா முஸ்லிம்களும் நம்புகிறார்கள்.  இது பாயிண்ட் 1 (A). இதனை மனதில் வைக்கவும்.

2) இந்தியாவிற்கும், தமிழர்களுக்கும் அல்லாஹ் அனுப்பிய நபிகள்

இஸ்லாமின் மேற்கண்ட இறையியலின் படி பார்த்தால், இந்தியாவிற்கும் (ஆரம்பத்தில் இந்தியா பல சிறு நாடுகளாக பிரிந்திருந்தது) அல்லாஹ் நபிகளை அனுப்பியிருந்திருக்கின்றான், வேதங்களையும், இறைச்செய்திகளையும்  கொடுத்திருந்திருக்கின்றான்.

குறிப்பிட்டுச் சொல்வதானால், தமிழ் பேசும் தமிழர்களுக்கும், அல்லாஹ் இறைத்தூதர்களை அனுப்பியிருந்திருக்கின்றான். 

நம் தமிழ் மொழிப் பற்றிச் சொல்லும் போது, "கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி" என்றுச் சொல்லுவோம். அப்படியானால்,  முஹம்மதுவின் காலம் வரைக்கும் பல நூறு தூதர்களை அல்லாஹ் தமிழர்களுக்காகவே அனுப்பியிருக்கிறான். 

இந்த விவரத்தைப் பற்றி முஸ்லிம் அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கீழ்கண்ட தொடுப்புக்களில் படிக்கலாம்:

  1. Which prophets were sent to India? Is Ram, Krishna prophets? Dr Zakir Naik (இந்தியாவிற்கு எத்தனை நபிகள் அனுப்பப்பட்டார்கள்? ராமாவும் கிருஷ்ணாவும் நபிகளா? டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் அளித்த பதில் (ஆங்கிலம்) - யூடியுப் &ஃபேஸ்புக் தொடுப்புக்கள்.  
  2. The Honorable Lord Krishna: A Prophet Of Allah - கிருஷ்ணா - அல்லாஹ்வின் நபி
  3. Lost Prophets of India and Hinduism (தொலைந்துவிட்ட இந்திய மற்றும் இந்துயிஸத்தின் நபிகள்)  
  4. Wikipedia discussion page (Prophets in Islam)
  5. Indian Muslim cleric calls Hindu deity Shiva the first prophet of Allah (சிவன் அல்லாஹ் இந்தியாவிற்கு அனுப்பிய முதல் நபியாவார், ஒரு முஸ்லிம் அறிஞரின் ஒப்புதல்)
  6. Prophet foretold in Indian Scriptures (இந்திய வேதங்களில் முஹம்மது)

கிபி 7ம் நூற்றாண்டு வரை உலகில் இருந்த எல்லா நாடுகளுக்கும், இன மக்களுக்கும், காட்டுவாசிகள் வாழ்ந்த இடங்களுக்கும், பல மொழிகளை பேசும் மக்களிடத்திற்கும், அல்லாஹ் தொடர்ச்சியாக நபிகளை, இறைச்செய்திகளை அனுப்பிக்கொண்டே இருந்தான். இது பாயிண்ட் 2 (B), இதனையும் மனதில் பதித்துக்கொள்ளவும். 

3) பழைய நாடுகளின் எண்ணிக்கை

நான் மேற்கொண்டு சொல்லப்போகும் விவரங்களை புரிந்துக்கொள்வதற்கு, பண்டைய காலத்தில் தோராயமாக எத்தனை பெரிய நாடுகள், சிறிய நாடுகள், மாநிலங்கள் போன்ற அமைப்புக்கள்  இருந்தன என்ற கணக்கை அறிந்துக்கொள்வது நல்லது. இந்த எண்ணிக்கை தற்காலத்தில் செய்த அகழ்வாராய்ச்சி, மற்றும் இதர தொல்பொருள் ஆய்வுகளின்படி ஆகும். இன்னும் ஆய்வுகளில் அகப்படாத மக்கள் கூட்டம் பல இருந்திருக்கும். 

பெரிய நாடுகள் என்று கருதப்படும் நாடுகள் இவை என்று விக்கிபீடியா சொல்கிறது, மேலும் இந்நாடுகள் இருந்த காலக்கட்டமும் சொல்லப்பட்டுள்ளது.

  • மெசபடோமியா – கி.மு. 3700
  • எகிப்து – கி.மு. 3300 
  • இந்து சமவெளி – கி.மு. 2500 
  • இந்தியா – கி.மு. 1700
  • சைனா – கி.மு. 1600 

(The earliest known primary states appeared in Mesopatamia ca. 3700 B.C., in Egypt ca. 3300 B.C., in the Indus Valley ca. 2500 B.C., India ca 1700 B. C.,and in China ca. 1600 B.C. -https://en.wikipedia.org/wiki/List_of_sovereign_states_in_the_7th_century_BC

விக்கிபீடியாவின் படி, கி.மு. 7ம் நூற்றாண்டில் இருந்ததாக அறியப்பட்ட நாடுகளின் பெயர்கள் மற்றும் அவைகளின் காலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த பட்டியலை இங்கு மறுபதிவு செய்யாமல், இடத்தை மிச்சப்படுத்த விரும்புகிறேன். எனவே, இந்த தொடுப்பை சொடுக்கி, ஒவ்வொரு கண்டத்திலும் எத்தனை நாடுகள் இருந்தன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.  இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்ட அக்கால நாடுகள் (States) 140ஐ தாண்டுகின்றது. 

இவைகள் போக, கீழ்கண்ட காலங்களிலும்(Bronze Age, Iron Age etc..) இருந்த நாடுகள் பற்றிய கணக்கெடுப்பு கீழே உள்ள தொடுப்புக்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இவைகளை சொடுக்கி நாடுகளை எண்ணிக்கொள்ளுங்கள். 

ஆக, நூற்றுக்கணக்கான நாடுகளுக்கு, ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் ஆயிரக்கணக்கான நபிகள் மூலமாக, இறைவேதங்களை (அ) இறைச்செய்திகளை அல்லாஹ் அனுப்பிக்கொண்டே இருந்து, கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பிரேக் போட்டார், கடைசி நபியை (முஹம்மதுவை) அனுப்பினார், கடைசி வேதத்தை (குர்-ஆனை) அனுப்பினார். 

இதுதாங்க, நம்முடைய இக்கட்டுரையின் கருப்பொருளை தெளிவாக புரிந்துக்கொள்வதற்கான அறிமுக விவரங்கள். 

இந்த விவரங்களுக்கும், யூதர்களுக்கு ஓ போடுவதற்கு என்னடா சம்மந்தம் என்று கேட்கத்தோன்றுகிறதா? . . .இதோ வந்துட்டேனுங்கோ….

4) மூன்று வேதங்கள், 25 நபிகள் பற்றி மட்டுமே குர்-ஆன் சொல்கிறது ஏன்?

குர்-ஆன் முந்தைய வேதங்கள் என்றுச் சொல்லி மூன்றே வேதங்களை குறிப்பிடுகின்றது.  அவைகள் தோரா, ஸபூர், மற்றும் இஞ்ஜில் ஆகும். ஆபிரகாமின் சுருள்கள் என்றும் ஒரு வேதத்தைச் சொல்கிறது, ஆனால், அதன் பெயர் குறிப்பிடவில்லை. மோசேயின் சுருள்கள் என்றுச் சொல்வதை நாம் தோரா என்றும் கருதலாம்.  

மேலும் 25 நபிகளின் பெயர்களை குறிப்பிடுகின்றது.  இந்த 25 பேர்களில் 20-21 நபர்கள் பைபிளில் காணப்படுபவர்கள் (பழைய/புதிய ஏற்பாட்டில்). மீதமுள்ள நான்கு-ஐந்து நபிகள், அரேபியாவின் வடக்கு பகுதியில் வாழ்ந்த மக்களுக்காக அனுப்பப்பட்டவர்கள் என்று குர்-ஆன் சொல்கிறது (ஆது, தமுத், மீதியான் பகுதிகள்). முஹம்மது ஒட்டு மொத்த மனுக்குலத்துக்கும், ஜின்களுக்கும் நபியாக அனுப்பப்பட்டார் என்று குர்-ஆன் சொல்கிறது, பார்க்க - https://en.wikipedia.org/wiki/Prophets_and_messengers_in_Islam

5) ஏன் யூதர்களுக்கு ஒரு பெரிய 'ஓ' போடவேண்டும்?

நன்றாக கூர்ந்து கவனியுங்கள் (சாரி படியுங்கள்), நாம் கிளைமாக்ஸில் இருக்கிறோம். 

இதுவரை கண்ட விவரங்களின் படி, பல நூறு நாடுகள், பல ஆயிர நபிகள், பல வேதங்களை அல்லாஹ் அனுப்பியிருக்கிறான். இந்தியாவில் பேசப்பட்ட ஒவ்வொரு மொழி பேசும் மக்களுக்கும் தனித்தனி நபிகள், வேதங்கள் அல்லது இறைச்செய்திகள் கொடுக்கப்பட்டது. 

இப்படி, உலகம் அனைத்தும் பலப்பல வேதங்களை அல்லாஹ் அனுப்பியிருக்கும்போது, எல்லா மக்களும் தங்களுக்காக அல்லாஹ் அனுப்பிய வேதங்களை பாதுகாக்கவில்லை.  பல ஆயிர நபிகளை அல்லாஹ் அனுப்பி என்ன பயன்? பல வேதங்களை அனுப்பி என்ன பயன்? அந்த நபிகளும் தங்கள் வேதங்களை பாதுகாக்க வில்லை, அந்த மக்களும் அல்லாஹ் இறக்கிய செய்தியை தூயவடிவில் பாதுகாக்க வில்லை. என்ன கஷ்டகாலம் பாருங்கள். 

தமிழர்களாவது அல்லாஹ்வின் வார்த்தையை பாதுகாத்தார்களா?

திருக்குறள்:

கி.மு. 200 – 500 நூற்றாண்டுகளில் வாழ்ந்த திருவள்ளுவர் இயற்றிய நூலை பத்திரமாக பாதுகாத்த தமிழர்கள், அல்லாஹ்வின் இறைச்செய்தியை மட்டும் பாதுகாக்கவில்லை ஏன்? 

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. 

அடப்பாவமே, கி.மு. காலத்தில் 473 புலவர்கள் எழுதிய பாடல்களை, பல தெய்வ வழிப்பாட்டு நூல்களை பாதுகாத்த தமிழர்கள், ஏக இறைவன், உண்மை தெய்வம் அல்லாஹ் இறக்கிய ஒரு வேதத்தை பாதுகாக்கவில்லையே! இவர்களை என்னவென்றுச் சொல்வது?

ஆக, தமிழர்கள் அல்லாஹ்வின் இறைச்செய்தியை பாதுகாக்கவே இல்லை (இஸ்லாமின் படி). பல நபிகளை அல்லாஹ் அனுப்பியும் பயனில்லை, எத்தனை இறைச்செய்திகளை இறக்கியும் பயனில்லை, எல்லாம் கடலில் கரைந்த பெருங்காயம் போல காணாமல் போய்விட்டது. 

ரிக் வேதம்: இது முந்தைய வேதகாலம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் காலம் கி.மு 2200 முதல் கி.மு 1600 வரை ஆகும். ரிக் வேதத்தில் 10600 பாடல்கள் பாடப்பட்டுள்ளன. 

யசுர் வேதம்: இது பிந்தைய வேதங்களில் ஒன்று ஆகும். இதன் காலம் கி.மு 1400 முதல் கி.மு 1000 வரை ஆகும்.

சாம வேதம்: இது கி.மு 1500 க்கும், 500 க்கும் இடையில் எழுத்து வடிவில் உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது

அதர்வண வேதம்: இது கி.மு. 1200  - கி.மு. 1000 வரையிலான காலக்கட்டத்தில் எழுதப்பட்டு இருகலாம்.

சமஸ்கிருத வேதங்களை கி.மு. காலத்திலிருந்தே பாதுகாத்தவர்கள், அல்லாஹ்வின் வேதத்தை மட்டும் பாதுகாக்கவில்லையே!.

இதர நாடுகளில் உள்ளவர்களாவது பாதுகாத்தார்களா? சைனா, ஆப்ரிக்கா, எகிப்து என்று பல நாடுகளுக்கு அல்லாஹ் நபிகளை/செய்திகளை அனுப்பியிருந்தும்,  ஒரு பயனுமில்லை. அல்லாஹ்விற்கு துக்கம் தாங்க முடியவில்லை.  இவர்களுக்கு நபிகளை அனுப்பி என்ன பிரயோஜனம் என்று நொந்துக்கொண்டு இருந்தபோது, ஒரு இனம் மட்டும் உலகத்தில் எந்த இனமும், மக்களும், செய்யாத ஒன்றை செய்தது. அந்த "கல்தோன்றி மண் தோன்றா காலத்தே" என்று நாம் பெருமைப்பட்டுக்கொள்கிறோமே,  நாமும் செய்யாத ஒன்றை ஒரு இனம் செய்தது. 

அது எந்த இனம்? அது தான் யூத இனம்.

இந்த யூத இனம் மட்டுமே, தங்களுக்கு அல்லாஹ் கொடுத்த வேதத்தை கி.மு. 1500 லிருந்து பாதுகாத்துக்கொண்டு வந்து, கி.பி. ஏழாம் நூற்றாண்டில் முஹம்மதுவின் கையில் கொடுத்தது. கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் இந்த யூத இனம் தங்கள் வேதத்தை பாதுகாத்து வந்து, முஹம்மதுவிடம் கொடுத்தது. இந்த யூதர்களைப் போலவே  கிறிஸ்தவர்களும் தங்களுக்கு அல்லாஹ் கொடுத்த வேதத்தை (இஞ்ஜிலை) பாதுகாத்துக்கொண்டு வந்து முஹம்மதுவின் கையில் கொடுத்தார்கள். ஓ.. இந்த ஆரம்பகால கிறிஸ்தவர்களும் யூத இரத்தமாக இருந்தபடியினால், தங்கள் வேதத்தை காத்துக்கொண்டார்கள் என்று நினைக்கிறேன்.

பல ஆயிர நபிகளை வெவ்வேறு நாடுகளுக்கு அனுப்பி என்ன பயன்? பல வேதங்களை இறக்கி என்ன பயன்? இந்த யூதர்கள் மட்டும் தான் வேதங்களை பாதுகாத்தார்கள். இதனால் தான் குர்-ஆனில் அல்லாஹ் தோரா (மோசே), ஸபூர் (தாவீது) மற்றும் இஞ்ஜில் (இயேசு) பற்றி மட்டுமே பெயர் குறிப்பிட்டு எழுதியுள்ளார். இவைகளில் ஒளியும் நேர்வழியும் இருக்கிறது என்கிறார் (இருந்தது என்றல்ல). (பார்க்க: WHAT THE QUR'AN SAYS ABOUT THE BIBLE)

ஆபிரகாமுக்கு இறக்கிய சுருள் என்னவானது? ஆபிரகாமும், அவரது பிள்ளைகளும், அவர்கள் பிள்ளைகளும் எதற்கும் லாயக்கில்லை. தங்கள் தகப்பனுக்கு அல்லாஹ் கொடுத்த வேதத்தை தொலைத்துவிட்டார்கள். ஆனால், அதே ஆபிரகாமின் கொள்ளு, கொள்ளு, கொள்ளுப் பேரன்கள், அதாவது யாக்கோபுக்கு பிறந்த 12 சிங்கக்குட்டிகள், எகிப்தில் அடிமைகளாக இருந்தாலும், அவர்களை விடுவிக்க வந்த மோசேக்கு அல்லாஹ் இறக்கிய வேதத்தை கச்சிதமாக பாதுகாத்தார்கள். அதன் பிறகு தாவீதுக்கு அல்லாஹ் கொடுத்த ஸபூரையும் அதே யூதர்கள் பாதுகாத்தார்கள். அதே யூத ரத்தத்தில் வந்த இயேசுவிற்கு கொடுத்த இன்ஜிலையும் பாதுகாத்தார்கள் யூதர்கள். இயேசுவின் சீடர்களும் யூத இரத்தம் தானே.

எல்லோரும் யூதர்களுக்கு ஒரு பெரிய 'ஓ' போடுங்கள் பார்க்கலாம். போடமாட்டீர்களா? அப்படியானால், மேலே சொன்ன விவரங்கள் உங்களுக்கு புரியவில்லையென்று அர்த்தம், இன்னொரு முறை படித்துப் பாருங்கள், நிச்சயமாக நீங்க யூதர்களுக்கு ஓ போடுவீங்க. பாரா அவர்களே, உங்களுக்கு புரிந்து இருந்திருக்கவேண்டுமே!

அ) யூத நபிகளை தவிர்த்து, அரேபியாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்ந்த நபிகளைத் தவிர்த்து வேறு ஒரு நபியின் பெயரையும், வேதத்தையும் ஏன் குர்-ஆன் குறிப்பிடவில்லை?

ஆ) யூதர்கள் தவிர வேறு ஒருவரும் ஏன் அல்லாஹ்வின் வேதத்தை பாதுகாக்கவில்லை? 

இ) தமிழர்கள் சங்க கால இலக்கியங்கள் மற்றும் இதர இலக்கியங்கள் பலவற்றை பத்திரமாக பாதுகாத்தார்கள். ஆனால் தங்களுக்கு அல்லாஹ் கொடுத்த வேதத்தை ஏன் பாதுகாக்கவில்லை?

ஈ) சமஸ்கிருத மொழியில் இருக்கும் நான்கு வேதங்களையும், இதர புராணங்களையும் பத்திரமாக பாதுகாத்தவர்கள், அல்லாஹ்வின் வேதத்தை பாதுக்காக்கவில்லை ஏன்?

உ) இந்தியர்களை விடுங்கள், இதர நாட்டு மக்கள் பல நூல்களை பாதுகாத்தார்கள், ஏன் அல்லாஹ்வின் வேதத்தை பாதுகாக்கவில்லை.

ஊ) உலகமே கோட்டை விட்டபோது, யூதர்கள் மட்டும் எப்படி தோரா, ஸபூர், இன்ஜிலை  பாதுகாத்தார்கள்? இந்த மூன்றை மட்டுமே குர்-ஆன் பெயர் சொல்லி குறிப்பிடுவதிலிருந்து நமக்கு என்ன புரிகின்றது? 

முடிவுரை:

குர்-ஆன் சொல்வது உண்மையானால், உலக மக்கள் அனைவரும் கோட்டை விட்டதை யூதர்கள் பிடித்துக்கொண்டார்கள், அதாவது குர்-ஆனின் படி, முந்தைய வேதங்களை பாதுகாத்தார்கள். ஆக, முஸ்லிம்கள் அனைவரும்  யூதர்களுக்கு ஒரு பெரிய 'ஓ' போடத்தான் வேண்டும். அல்லாஹ்வின் ஆசையை நிறைவேற்றியவர்கள் யூதர்கள் தான்.

இக்கட்டுரையைப் பற்றி யாராவது கருத்து தெரிவித்தால், கேள்விகள் கேட்டால், பதில் சொல்ல நான் தயாராக இருக்கிறேன்.

யூதர்களின் இந்த சாதனையை பாராட்டி, பாரா அவர்களும், முஸ்லிம்களும் அவர்களை மெச்சிகொண்டே ஆகவேண்டும்.  இதனை முஸ்லிம்கள் அங்கீகரிக்கவில்லையென்றால், இதன் அர்த்தமென்ன? குர்-ஆன் சொல்லும் உலகளாவிய நபிகளை அனுப்பியது, எல்லாம் பொய்யும் பித்தலாட்டம் ஆகும் என்று அர்த்தம். 

பின் இணைப்பு:

1) ஒருவேளை "யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் வேதங்களை மாற்றிவிட்டார்கள் அல்லவா?" என்று முஸ்லிம்கள் கேட்கலாம். 

ஆனால், இதற்கு முஸ்லிம்களிடம் ஆதாரமில்லை. குர்-ஆனில் ஒரே ஒரு வசனத்தை, அதாவது "தோராவையும், ஸபூரையும், இன்ஜிலையும் யூத கிறிஸ்தவர்கள் மாற்றிவிட்டார்கள், ஓ முஹம்மதுவே, இனி அவைகளை பின்பற்றாதீர்கள்" என்று பெயர்கள் குறிப்பிட்டுச் சொல்வதை காட்டுங்கள். அது உங்களால் முடியாது. ஆனால், அதே குர்-ஆனில், இந்த மூன்று வேதங்களை புகழ்ந்துத் தள்ளிய வசனங்களை நான் காட்டமுடியும், இந்த தமிழ் கட்டுரையை பார்க்கவும்: பரிசுத்த பைபிளை உறுதிப்படுத்தும் குர்-ஆன்.

2) உலகில் அல்லாஹ் அனுப்பிய எல்லா வேதங்களின் பெயர்களையும் அல்லாஹ் குர்-ஆனில் குறிப்பிடவேண்டும் என்ற கட்டாயமில்லை.

உண்மை தான், ஆனால், தன்னுடைய கடைசி வேதமாகிய குர்-ஆனில் ஏன் வெறும் யூதர்களின் வேதங்களை மட்டுமே குறிப்பிடவேண்டும். உலகத்துக்கே குர்-ஆன் வழிகாட்டியென்றால், குறைந்த பட்சம் இந்தியாவிற்காக அனுப்பப்பட்ட நபிகளில் ஒருவரின் பெயர், ஒரு வேதத்தின் பெயரை குறிப்பிட்டு இருந்தால் எப்படி இருந்திருக்கும்? இதே போல, இதர நாடுகளுக்கு அனுப்பப்பட்ட நபிகளில் குறைந்தபட்சம் ஒருவரையாவது குறிப்பிட்டு இருந்திருக்கலாம்.  எப்போது பார்த்தாலும், ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்மாயீல், யாக்கோபு, மோசே, தாவீது, இயேசு என்று பாடிய பல்லவியையே என் பல முறை பாடவேண்டும். இந்தியாவிற்கு அனுப்பிய ராமசாமி, கோவிந்தசாமி, அரவிந்தசாமி (நடிகரை குறிப்பிடவில்லை), என்று சிலருடைய பெயரையாவது சொல்லியிருக்கவேண்டாமா? சைனா போன்ற நாடுகளுக்கு அனுப்பிய பெயர்களில் சில "சிங்சாங், கிளிங் கிளாங்" என்ற நபிகள் பற்றி எழுதியிருக்கலாம். இதிலிருந்து என்ன தெரிகின்றது? 

இதிலிருந்து எவைகளை அறிகிறோம், முஹம்மதுவிற்கு அல்லது குர்-ஆனின் ஆசிரியருக்கு, மத்திய கிழக்கு நாடுகள் பற்றி மட்டுமே தெரிந்துள்ளது, மேலும் கிபி ஏழாம் நூற்றாண்டில் வாழும் ஒரு நபருக்கு, பல இடங்களுக்குச் சென்று வியாபாரம் புரியும் வியாபாரிகள் போன்றவர்களுக்கு பொது அறிவு எவ்வளவு இருக்குமோ, அது மட்டுமே குர்-ஆனில் நாம் பார்க்கமுடியும். மேலும் ஆய்வு செய்யாத பொதுஅறிவு என்று எடுத்துக்கொண்டால், பல சரித்திர தவறுகள், விஞ்ஞான தவறுகள் அதில்  உள்ளடக்கிவிடுவது சகஜமே. இதைத் தான் நாம் குர்-ஆனில் பார்க்கமுடியும். 

ஆக, குர்-ஆன் ஆக்கியோன் ஒரு மனிதன் என்று நினைக்கவேண்டும், அல்லது யூதர்கள் தான் உலகிலேயே சிறந்தவர்கள் (நபிகளை, வேதங்களை காத்த விஷத்தில்) என்று முஸ்லிம்கள் அங்கீகரிக்கவேண்டும். பாரா அவர்களே, இதைப் பற்றி மேலும் அறிய விரும்பினால், தயவு செய்து என்னிடம் கேளுங்கள், நாம் எழுத்துவிவாதம் செய்வோம்.

3) இந்த கட்டுரையில் முக்கியமாக நீங்கள் இந்துக்களின் வேதங்களை வம்புக்கு இழுத்துள்ளீர்கள், இது கண்டிக்கப்படத்தக்கது

முதலாவதாக, நான் இந்துக்களின் வேதங்களை வம்புக்கு இழுக்கவில்லை. இஸ்லாமின் உலகளாவிய இறையியல் உண்மை என்று நம்பும் ஒவ்வொருவருக்கும் இக்கட்டுரையில் கேட்கப்பட்ட கேள்விகள் எழும். எத்தனை இந்துக்களுக்கு நான்கு வேதங்கள் இருப்பதுதெரியும்? சங்க இலக்கியங்களை எழுதிய புலவர்களின் எண்ணிக்கைத் தெரியும்? எந்த காலக்கட்டத்தில் அவைகள் எழுதப்பட்டது என்ற விவரம் தெரியும். ஆனால், அவைகளை இக்கட்டுரையில் சுருக்கமாக மேற்கோள் காட்டியிருக்கிறேன். இந்துக்கள் முதலாவது அவர்களின் வேதங்கள் பற்றிய அறிந்துக்கொள்ளவேண்டும், அவைகளை படிக்கவேண்டும், ஆய்வு செய்யவேண்டும். அதன் பிறகு அவைகளின் அருமை பெருமைகளை இதர மக்களுக்குச் சொல்லமுடியும்.  இப்படியெல்லாம் செய்யாமல் வெறுமனே, இந்துக்களின் வேதங்களை வம்புக்கு இழுத்தீர்களென்றுச் சொன்னால் யாருக்கு என்ன பயன்?

இரண்டாவதாக, பாரா போன்றவர்கள் இதர மக்களின் வேதங்களிலிருந்து விவரங்களை எடுத்து, அவைகளை மாற்றி எழுதுவதினால், அவருக்கு பதில் கொடுக்கவேண்டியது எங்கள் கடமையாகும். இப்படிப்பட்ட பதில் சொல்லப்படும் போது, இதர மக்களின் வேதங்களையும் தொடவேண்டிய அவசியம் உண்டாகும். நான் சொன்னதில் தவறு இருந்தால், இந்துக்கள் தங்கள் பதில்களைத் தரலாம். கருத்துச் சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. 

4) இஸ்லாமிய இறையியல் "உலகளாவிய நபி அனுப்பப்படுதல்" என்பதை ஏற்கிறது, இதனால், உலகில் வாழ்ந்த ஒவ்வொருவரையும் நேர்வழிப்படுத்த அல்லாஹ் வழி காட்டினான் என்று அறியமுடிகின்றது. ஆனால், யூத கிறிஸ்தவ கோட்பாட்டில் உலகளாவிய நபி அனுப்பப்படுதல் இல்லையே, அப்படியானால் உலக மக்கள் அனைவருக்கும் நேர் வழி காட்டவேண்டும் என்று ஏன் பைபிளின் இறைவன் (யெகோவா தேவன்) விரும்பவில்லை? இது சரியானதா? இயேசுவிற்கு முன்பு பல நாடுகளில் வாழ்ந்தவர்கள் பைபிளின் தேவனை அறியவில்லையே, அவர்களின் நிலை என்ன? இன்றும் பல கோடி பேர் இயேசு என்ற பெயரையும் அறியவில்லையே அவர்களின் நிலை என்ன?

இதற்கு தனியாக ஒரு கட்டுரையை எழுதுவேன். இக்கேள்விகு பதில் வேண்டுமென்று ஒரு முஸ்லிமாவது என்னிடம் கேட்டுக்கொண்டால் நான் எழுதுவேன். 

இந்த கட்டுரைக்கு, பின்னூட்டமிடவேண்டும் என்பவர்கள், ஈஸா குர்-ஆன் பிளாக்கரில் பின்னுட்டமிடலாம், அல்லது ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில், "தொடர்பு கொள்க" என்ற மெனுவை க்ளிக் செய்து பின்னூட்டமிடலாம். நான் பதில் எழுதுவேன்.

இக்கட்டுரையில் பயன்படுத்திய தொடுப்புக்கள்

[1] List of sovereign states in the 7th century BC 

[2] Which prophets were sent to India? Is Ram, Krishna prophets? Dr Zakir Naik (இந்தியாவிற்கு எத்தனை நபிகள் அனுப்பப்பட்டார்கள்? ராமாவும் கிருஷ்ணாவும் நபிகளா? டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் அளித்த பதில் (ஆங்கிலம்) - யூடியுப் & ஃபேஸ்புக் தொடுப்புக்கள்.  

[3] The Honorable Lord Krishna: A Prophet Of Allah - கிருஷ்ணா - அல்லாஹ்வின் நபி

[4] Lost Prophets of India and Hinduism (தொலைந்துவிட்ட இந்திய மற்றும் இந்துயிஸத்தின் நபிகள்)  

[5] Wikipedia discussion page (Prophets in Islam)

[6] Indian Muslim cleric calls Hindu deity Shiva the first prophet of Allah (சிவன் அல்லாஹ் இந்தியாவிற்கு அனுப்பிய முதல் நபியாவார், ஒரு முஸ்லிம் அறிஞரின் ஒப்புதல்)

[7] Prophet foretold in Indian Scriptures (இந்திய வேதங்களில் முஹம்மது)

[8] List of Bronze Age states (3300 - 1200 கி.மு)

[9] List of Iron Age states (1200 கி.மு. -  600 கி.மு.)

[10] List of Classical Age states (600 கி.மு. -  200 கி.பி)

[11] List of states during Antiquity (200 கி.பி -  700 கி.பி)

[12] Prophets and Messengers in Islam

[13] திருக்குறள் - விக்கிபீடியா

[14] சங்க இலக்கியம் - விக்கிபீடியா

[15]  சமஸ்கிருத வேதங்கள் - விக்கிபீடியா

[16] WHAT THE QUR'AN SAYS ABOUT THE BIBLE

[17] பரிசுத்த பைபிளை உறுதிப்படுத்தும் குர்-ஆன்


2016 ரமளான் - நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்திற்கு பதில்கள்

உமரின் இதர ரமளான் தொடர் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2016ramalan/2016_paragavan11.html