ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

சனி, 9 பிப்ரவரி, 2013

"இயேசு தேவனாக இருக்கிறார்" என்பதற்கு இஸ்லாமியர்களின் எதிர்ப்பு

"இயேசு தேவனாக இருக்கிறார்" என்பதற்கு இஸ்லாமியர்களின் எதிர்ப்பு

அனேக கிறிஸ்தவர்கள் தங்கள் இஸ்லாமிய நண்பர்களுடன் வைராக்கியத்துடன் இயேசுவின் தனித்தன்மை மற்றும் தெய்வீக தன்மையைப் பகிர்ந்து கொள்ளும்போது இயேசு தேவனாக இருக்கிறார் என்று சீக்கிரத்தில் உரக்கக் கூறிவிடுகிறார்கள். ஆனால் அது இஸ்லாமியர்களுக்கு மிகப் பெரிய தடையாக ஆகிவிடுகிறதை அவர்கள் உணர்வதில்லை. இஸ்லாமானது ஏக இறைவனை – ஒரே இறைவனைக் கொண்ட மதம் ஆகும். ஒரே மெய்யான இறைவனுக்கு நிகராக வேறு யாரையாவது, எதையாவது கருதுவது இஸ்லாமியரைப் பொறுத்தவரையில் அவர்களின் மதத்தை மீறுகிற ஒரு செயலாகவும், பயங்கரமான பாவச் செயலாகவும் இருக்கிறது. ஆகவேதான் ஒன்றாகிய மெய்த்தெய்வத்தைத் தவிர இயேசுவும் ஒரு தெய்வமாக இருக்கிறார் என்ற இருகடவுள் கொள்கைக்கு எதிராக குர்-ஆன் தெளிவாக பின்வருமாறு கூறுகிறது:
"நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்" என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிடடார்கள்;. ஆனால் மஸீஹ் கூறினார்; "இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்" என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை. ஸூரத்துல் அல் மாயிதா (5):72
நாம் திரும்பவும் வைராக்கியமான கிறிஸ்தவரிடம் வருவோம். அவர் எப்பொழுதெல்லாம் இயேசு தேவனாக இருக்கிறார் என்று சொல்கிறாரோ, அப்பொழுது இஸ்லாமியர் தன் மனதுக்குள், " கிறிஸ்தவர் சொல்வது போல இயேசு தேவனாக இருக்கிறார் என்றால், இயேசு இறைவனை நோக்கி "பிதாவே" என்று ஜெபித்திருக்கிறார் எனில். குறைந்தது இரு கடவுள்களாவது இருக்கிறார்கள் என கிறிஸ்தவம் போதிக்கிறது" என நினைத்துக் கொள்கிறார். அதன் பின்னர் அந்த இஸ்லாமியர் மேற்கொண்டு கிறிஸ்தவ சாட்சிக்கு இடம் கொடுக்காமல் விலகிச் சென்றுவிடுகிறார்.

கிறிஸ்தவர்கள் தங்களிடமே கேட்டுக் கொள்ள வேண்டியது என்னவெனில், இஸ்லாமியர்கள் நினைப்பது போல உண்மையிலேயே இரு கடவுள்களை வணங்குகிறோமா அல்லது மாற்கு 12:29ல் இயேசுதாமே போதித்தபடி ஒரே மெய்தேவனை விசுவாசிக்கிறோமா என்பதாகும். ஒன்றுக்கு மேற்ப்பட்ட கடவுள்களை கிறிஸ்தவர்கள் வணங்குகிறார்கள் என்ற தவறான புரிதல் இஸ்லாமியருக்கு உண்டாக்காதபடி இருப்பது மிக முக்கியமானதாகும். அப்படிச் செய்வார்கள் எனில், இயேசு இரட்சகராக இந்த பூமிக்கு தேவனுடைய இரக்கத்தை வெளிப்படுத்தவும், விழுந்து போன மனுக்குலத்தை மீட்கவும் வந்தார் என்ற எளிமையான நற்செய்தியை கேட்பதில் இருந்து இஸ்லாமியரைத் தடுத்து அவர் இடறுவதற்கேதுவான கல்லாக கிறிஸ்தவர்கள் இருந்துவிடக் கூடும். ஆகவேதான் வேதாகம அறிவிப்பான "நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் " என்ற வசனம் பற்றி குழப்பம் வேண்டாம்.

வேதாகமத்தில் இயேசு தேவனாக இருக்கிறார் என்ற நேரடி வாசகம் இடம் பெறவைக்காமல் மாறாக இயேசுவின் தெய்வீகத்தன்மையைச் சுட்டிக்காட்டும் பின்வரும் குறிப்புகளை நாம் காண்கிறோம்:
தேவனுடைய வார்த்தை (வெளிப்படுத்தல்.19:13);
இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து…. (எபிரேயர் 1:3);
அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபம் ( கொலோசேயர் 1:15); மற்றும்
தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்து (2 கொரிந்தியர் 4:4).
இந்த குறிப்புகள் இயேசுவில் முழுமையாக வெளிப்படுத்தப்பட்ட ஒரே மெய்யான தேவனைக் குறித்து பேசுகின்றன. நாம் இப்படிப்பட்ட அணுகுமுறையில் வேதாகமத்தை பயன்படுத்தி, நம் வேத வசனப் பிரயோகங்களை பயன்படுத்துவோமாகில், நாம் ஒரே தேவனில் உள்ள நம் விசுவாசத்தை உறுதிப்படுத்த முடியும், அதேவேளையில் நம் இஸ்லாமிய நண்பரிடம் பைபிளும் குர்-ஆனும் இரண்டுமே இயேசுவை தேவனுடைய வார்த்தை என குறிப்பிடுகின்றன என்று நினைவுபடுத்துவதன் மூலம் இயேசுவின் தெய்வீகத் தன்மையில் உள்ள நம் விசுவாசத்தை மறுபடியும் உறுதிப்படுத்திக் கொள்கிறோம். இது மிகவும் முக்கியமானது. ஏனெனில் பெரும்பாலான முஸ்லீம்கள் தேவனுடைய வார்த்தையானது ஒருபோதும் உண்டாக்கப்பட்டிருக்க முடியாது, அது மரிக்கவும் முடியாது, அது தெய்வீகத்தன்மை வாய்ந்தது என்பதை ஏற்றுக் கொள்வார்கள். இவ்விதத்தில் நாம் இயேசுவின் தெய்வீகத்தன்மையை, ஜீவனுள்ள தேவ வார்த்தையைக் குறித்து நாம் பேச முடியும்.

இயேசுவின் தன்மையைப் பற்றி உள்ள இரகசியத்தை உங்கள் இஸ்லாமிய நண்பரிடம் கண்டிப்பாக விளக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். தெய்வீகத்திற்க்கடுத்த காரியங்களை சாதாரண மனிதர்களாகிய நம்மில் யார் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்! ஆனால் நற்செய்தியின் எளிமையை சிக்கலானதாக்கிவிடாதபடிக்கு எச்சரிக்கயாக இருங்கள். மேலும், மிகவும் சிக்கலான இறையியல் புரிதல் தேவைப்படுகிற காரியங்களைச் சொல்ல முயற்சிக்க வேண்டாம். இரட்சிப்பைப் பெறுவதற்கு இயேசுவின் தன்மையைப் பற்றிய முழு அறிவுக்கு நாம் வரவேண்டும் என்று புதிய ஏற்பாட்டில் சொல்லப்படவே இல்லை. இயேசுவின் தெய்வீகத்தைப் முழுமையாக விளக்கக் கூடிய திறமையின் அடிப்படையில் இரட்சிப்பு இல்லை, மாறாக, இயேசு தேவனால் அனுப்பப்பட்ட மனுக்குல இரட்சகர் என்றும் தேவனால் அனுப்பப்பட்ட இவர் மூலமாக மட்டுமே நமக்கு மீட்பும் பாவ மன்னிப்பும் உண்டாகிறது என்று ஏற்றுக் கொள்கிற இருதயத்தின் அடிப்படையிலேயே இரட்சிப்பு இருக்கின்றது. அதுவே நற்செய்தி ஆகும்.
ஆங்கில மூலம்: The Objection to the claim "Jesus is God"

இயேசு ஒரு தீர்க்கதரிசியே – அதற்கு மேற்ப்பட்டவர் அல்ல என்ற வாதம்

இயேசு ஒரு தீர்க்கதரிசியே – அதற்கு மேற்ப்பட்டவர் அல்ல என்ற வாதம்

குர்-ஆனில் காணப்படும் இயேசுவின் தனித்துவத்தை மறைக்க முயலுவதற்காக, அனேக முஸ்லிம்கள் பின்வரும் வசனத்தைக் காண்பிக்கின்றனர்:
மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை. இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் வந்து சென்றுவிட்டனர். ஸூரத்துல் மாயிதா (5):75
இயேசு தன் மனித தன்மையில், அவர் மற்ற எல்லா தீர்க்கதரிசிகளைப் போல ஒரு மனிதனாக இருந்தார் என்பது உண்மைதான். ஆனால், இந்த மாம்ச உடலில் தான் தெய்வீகத் தன்மையை உடைய "தேவ வார்த்தை" வாசம் பண்ணினார் என்று வேதாகமம் நமக்கு வெளிப்படுத்தும் போதனையை நாம் புறந்தள்ள முடியாது. (யோவான்.1:14, " அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்"). இயேசுவின் மனித மற்றும் தெய்வீக தன்மையின் இரகசியத்தை நாம் விவரிக்க இயலாது என்றாலும், அது உண்மைதான் என்று வேதாகமம் உறுதி செய்கிறது. குர்-ஆனும் கூட இயேசுவின் மனித மற்றும் தெய்வீகத் தன்மையைச் சுட்டிக் காட்டுகிறது. உதாரணமாக, குர்-ஆனில் பின்வருமாறு நாம் வாசிக்கிறோம்:
வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்;. நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா அல்மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்;. இன்னும் ("குன்" ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார். அதை அவன் மர்யமின்பால் போட்டான்;. (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான். ஸூரத்துல் அன்னிஸா (4):171
அந்நாட்களில் வாழ்ந்து வந்த கள்ள உபதேசக் கிறிஸ்தவர்களின் கூற்றை, அதாவது இயேசு தன் தாயாருடன் கூட மூன்று கடவுள்களில் ஒருவராக இருக்கிறார் என்பதை மறுப்பதற்காக குர்-ஆன் மேற்கண்டவாறு சொல்லி இருக்கிறது என்றாலும், இயேசுவை "அல்லாஹ்வின் வாக்காக இருக்கின்றார்…அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மாதான்" என்று சொல்வதன் மூலமாக குர்-ஆன் இயேசுவின் தனித்துவத்தையும் தெய்வீக மகிமையையும் பாதுகாத்திருக்கிறது என்பதை கவனமாகக் குறித்துக் கொள்ள வேண்டும்.

வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டுப் புத்தகம் இயேசுவை "தேவனுடைய வார்த்தை" (வெளி 19:13) என்று அழைக்கிறது. இந்த வார்த்தையைச் சாதாரணமானதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இறைவனுடைய வார்த்தை ஒருபோதும் உண்டாக்கப்படவில்லை என்றும் அது மரிக்க முடியாது என்றும் அது நித்திய காலங்காலமாக இருக்கக் கூடியது என்றும் பெரும்பாலான முஸ்லிம்கள் உடனே ஒத்துக் கொள்வர். அப்படிப்பட்ட வார்த்தை தெய்வீகத் தன்மையுடையதாக மட்டுமே இருக்க முடியும்.

" அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா" என்ற சொற்றொடரின் அரபி மூலத்தில் "ரூஹ்-உன் மின் ஹூ (ruh-un min hu)" என்பதாகும். இது குர்-ஆனில் மற்றொரு இடத்திலும் காணப்படுகிறது.
அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான், மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்டுத்தியிருக்கிறான். ஸூரத்துல் முஜாதலா (58):22
யூசுப் அலி என்பவரால் மொழிபெயர்க்கப்பட்ட விளக்கவுரையுடன் கூடிய குர்-ஆனில் எண் 5365 எனும் அடிக்குறிப்பு காணப்படுகிறது. அது அவனிடம் இருந்து வந்த ஆன்மா என்பதை தெய்வீக ஆன்மா, மனித மொழியில் சரியாகச் சொல்லவேண்டுமெனில் இறைவனின் தன்மை மற்றும் சக்தி என்றுச் சொல்வதே சரியாக இருக்கும் என்று குறிப்பிடுகிறது.

மேற்கண்ட குறிப்பில் இருந்து ஸூரத்துல் அன்னிஸா (4):171ல் இயேசுவைக் குறிப்பிட குர்-ஆன் பயன்படுத்துகிற அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா" என்ற சொற்றொடரானது ஒரு சாதாரண தீர்க்கதரிசியிலும் மேலான ஒருவரைப் பற்றிக் கூறுகிறது என்பது தெளிவு!

இயேசுவின் தனித்துவத்தை போதிக்கும் அனேக குர்-ஆன் வசனங்கள் உண்டு. அவைகளை நாம் கவனிக்காமல் விட்டுவிடக் கூடாது. அவை கீழே வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன:

1) அற்புத கன்னிபிறப்பு

அதற்கு அவர் (மர்யம்), "எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?" என்று கூறினார். "அவ்வாறேயாகும்; ´இது எனக்கு மிகவும் சுலபமானதே …. என்று உம் இறைவன் கூறுகிறான்" எனக் கூறினார். ஸூரத்துல் மர்யம் (19):20-21
ஆதாமுக்கு தகப்பன் இல்லாமல் இருந்தது போலவே இயேசுவும் இருக்கிறார், ஆகவே இவ்விசயத்தில் அவர் தனித்துவமானவர் என்று சொல்லக் கூடாது என முஸ்லிம்கள் கூறுகின்றனர். ஆதாமுக்கு மனித தகப்பன் இல்லை என்பது உண்மைதான் என்றாலும், அது நாம் எதிர்பார்க்கக் கூடியதே. முதன் முதலாக வந்த மனிதனுக்கு எப்படி இயற்கையான பெற்றோர்கள் இருக்கமுடியும்? ஆனால் இயேசுவைப் பொறுத்த வரையில் அது முற்றிலும் வேறுபட்டதாகும். ஆதாமுக்குப் பின் கோடிக்கணக்கான ஆண்களும் பெண்களும் பிறந்துள்ளனர், மற்ற தீர்க்கதரிசிகள் எப்படி பிறந்தார்களோ, இதே போல இவர்களில் யாராவது ஒரு பெற்றோர்களுக்கு இயேசு பிறந்திருக்கலாம் அல்லவா? ஆனால், இயேசுவின் அற்புதமான பிறப்பு மனுக்குலத்துக்கு ஒரு அடையாளமாக தரப்பட்டது. இயேசு பூமியில் உள்ள மனித வித்தில் இருந்து வரவில்லை, மாறாக பரத்தில் உள்ள இறைவனின் தெய்வீக தன்மையில் இருந்து வந்தார் என்பதை இந்த உலகம் அறிந்துகொள்ள வேண்டும் என்று இறைவன் விரும்பினார்.

2) பரிசுத்தமானதொரு வாழ்க்கையை வாழ்ந்தார்.

"நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்") என்று கூறினார். ஸூரத்துல் மர்யம் (19):19
இயேசு உண்மையிலேயே ஒரு பரிசுத்த பிள்ளையாக இருந்தார். மனித வித்தில் தோன்றாமல் இறைவனிடத்தில் இருந்து வந்ததினால், அவர் பிறக்கும்போது சாத்தானால் அவரின் வாழ்க்கை தொடப்படவில்லை. உண்மையாகவே, இயேசு தவறு செய்யாத ஒரு வாழ்க்கை வாழ்ந்தார். எல்லா தீர்க்கதரிசிகளும் குற்றமற்றவர்களே, ஆகவே இயேசுவுக்கு எவ்வித தனித்தன்மையும் இல்லை என்று அனேக இஸ்லாமியர் வாதிடுவர். ஆனால், நாம் குர்-ஆனைக் கவனமாக ஆராய்ந்தால் அது உண்மை அல்ல என்பதை நாம் கண்டு கொள்ளலாம். பெரிய தீர்க்கதரிசிகள் கூட இறைவனிடம் மன்னிப்பு கேட்டனர் என்பது சான்றாக இருக்கிறது. இயேசுவைப் போலல்லாமல், அவர்கள் எல்லாரும் மற்ற மனிதர்களைப் போல ஆதாமின் வித்தில் இருந்து பிறந்தவர்களே. பின்வரும் உதாரணங்களைக் கவனியுங்கள்:
ஆதாம் (மற்றும் ஏவாள்): அதற்கு அவர்கள்; "எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" என்று கூறினார்கள். ஸூரத்துல் அஃராஃப் (7):23

ஆபிரகாம்: "நியாயத் தீர்ப்பு நாளன்று, எனக்காக என் குற்றங்களை மன்னிப்பவன் அவனே என்று நான் ஆதரவு வைக்கின்றேன். ஸூரத்துஷ் ஷூஹாரா (26):82

மோசே: "என் இறைவா! நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன்; ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார் . ஸூரத்துல்-கஸஸ் (28):16

தாவீது: "நிச்சயமாக நாமே அவரைச் சோதித்து விட்டோம்" என்று தாவூது எண்ணித் தம்முடைய இறைவனிடம் மன்னிப்பு கோரிக்குனிந்து விழுந்தவராக இறைவனை நோக்கினார். ஸூரத்து ஸாத் (38):24

சாலமோன்: "என் இறைவனே! என்னை மன்னித்தருள்வாயாக! ஸூரத்து ஸாத் (38):35

யோனா: ஆகவே, (அவர்களுடைய) பழிப்புக்கிடமான நிலையில் (கடலில்) எறியப்பட வேண்டியவரானார் ஒரு மீன் விழுங்கிற்று. ஆனால் அவர் (மீன் வயிற்றினுள்) இறைவனைத் துதிசெய்து - தஸ்பீஹு செய்து - கொண்டிராவிட்டால் - (மறுமையில் அவர்) எழுப்பப்படும் நாள்வரை, அதன் வயிற்றிலேயே தங்கியிருந்திருப்பார். ஸூரத்து ஸாஃப்பாஃத் (37):142-144

முஹம்மது:

(நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம். உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும். ஸூரத்துல் ஃப்த்ஹ் (48):1-2

ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களாகன ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக . ஸூரத்து முஹம்மது (47):19
ஒருவர் குர்-ஆனைக் கவனமாகப் படிப்பார் எனில், இயேசு இறைவனிடம் மன்னிப்பு கேட்டதாக அவர் ஒரு இடத்தில் கூடக் காண மாட்டார். இதற்கான காரணம் இப்போது தெளிவாக இருக்கிறது. அவர் பரிசுத்தமானவராக இருந்தார், அவர் குற்றமற்றவராகவும் பரிபூரண பரிசுத்தமானவராகவும் இருந்தார். அவர் இந்த உலகத்தில் இருந்து வந்தவரல்ல, பரத்தில் இருந்து வந்தவர்.

3) பலத்த அற்புதங்களைச் செய்தார்

இஸ்ராயீலின் சந்ததியனருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்;) "நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்;. நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்;. அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்;. அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்;... ஸூரத்தில் ஆல் இம்ரான் (3):49
மாபெரும் அற்புதங்களையும், இறந்தோரை உயிர்ப்பித்தலை மட்டும் இயேசு செய்யவில்லை, அவருக்கு முன்பு அல்லது பின்னர் வந்த தீர்க்கதரிசிகளைப் போலல்லாமல், ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி, அதில் ஊதி, அதை உயிருள்ளதாக மாற்றினார் என குர்-ஆன் கூறுகிறது.

4) இறைவனிடம் திரும்பிச் சென்றார்

"ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்;. இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன். ஸூரத்துல் ஆல் இம்ரான் (3):55
மரித்து மண்ணுக்குத் திரும்பிய மற்ற தீர்க்கதரிசிகளைப் போல அல்லாமல், இயேசு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதோடு அல்லாமல், இறைவன் தன்னளவில் உயர்த்தி கொள்ளப்பட்ட நிலைக்குச் சென்றார் என்பது மிகவும் முக்கியமானதாகும். வேறெந்த தீர்க்கதரிசிக்கும் இப்படிப்பட்ட மேன்மையை குர்-ஆன் கொடுக்கவில்லை. இயேசு பரத்திலிருந்து, இறைவனிடத்தில் இருந்து வந்தபடியால், அவர் எங்கிருந்து வந்தாரோ அங்கேயே திரும்பிச் சென்றார் என்று குர்-ஆனின் படி குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது.

5) இந்த உலகத்திற்கு திரும்பவும் வருவார்

நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிக் காலத்திற்குரிய அத்தாட்சியாவார். ஸூரத்து அஸ்ஸுக்ருஃப்- (43):61
பரலோகத்தில் இருந்து இயேசு திரும்பிவருவதைக் குறித்து குர்-ஆன் விளக்கமாகக் கூறவில்லை என்றாலும் கூட, கடைசி நாட்களில் சாத்தானின் சேனையைத் தோற்கடித்து, உலகளாவிய அமைதியை உண்டாக்க இயேசு திரும்ப வருவார் எனும் இஸ்லாமிய பாரம்பரிய நம்பிக்கைக்கு ஆதரவாக இந்த வசனத்தை அனேக முஸ்லீம் அறிஞர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த வசனத்துக்கான அடிக்குறிப்பாக யூசுப் அலி அவர்கள் தன் குர்-ஆன் மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கவுரையில் குறிப்பிட்டிருப்பதாவது: இது உயிர்த்தெழுதலுக்கு முன் இயேசு வந்தது போல கடைசி நாட்களில் அவரின் இரண்டாவது வருகையைக் குறிக்கிறது என்று புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.

சுருக்கமாகச் சொல்வதானால், ஆதாமின் வழியில் தோன்றாமல் அற்புதமாகப் பிறந்தவரும், பாவமற்ற பரிசுத்த வாழ்க்கையை வாழ்ந்தவரும், அனேக அற்புதங்களையும் சிருஷ்டிப்பையும் கூடச் செய்தவரும், உயர்த்தப்பட்டு இறைவனிடம் அவருக்குச் சமமாக இருக்கிறவரும் மற்றும் உலகளாவிய அமைதிக்கு வழிவகுக்க திரும்பி வருவார் என எதிர்பார்க்கப்படுகிறவரே இயேசு என மேற்கண்ட குர்-ஆன் வசனங்கள் எடுத்துக் காட்டுகின்றன. எந்த மதப் புத்தகத்திலும் வேறெந்த தீர்க்கதரிசியைப் பற்றியும் இப்படிப்பட்ட குறிப்பு கிடையாது. சில இஸ்லாமியர்கள் சொல்வதைப் போலல்லாமல், இயேசு ஒரு சாதாரண தீர்க்கதரிசி அல்ல என்று குர்-ஆன் மிகவும் உரக்கக் கூறுகிறது!!!
ஆங்கில மூலம்: The Claim that Jesus was no more than a Prophet

இயேசு இஸ்ரவேலருக்கு மட்டுமே ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார் என்ற வாதம்

இயேசு இஸ்ரவேலருக்கு மட்டுமே ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார் என்ற வாதம்

இயேசுவின் ஊழியம் இஸ்ரவேலருக்கு மட்டுமே, கிறிஸ்தவர்கள் நினைப்பது போல அது எல்லா மனிதர்களுக்குமானது அல்ல என்று சில இஸ்லாமியர் வாதிடுகின்றனர். இந்த வாதத்தின் அடிப்படையில், முஹம்மது மட்டுமே எல்லா காலத்திற்கும், அனைத்து மக்களுக்குமான உலகளாவிய நபியாக வந்தார் என்று முஸ்லிம்கள் கூறுவதில், அவர்கள் கிறிஸ்தவர்களை முஹம்மதுவைப் பின்பற்றுபவர்களாக மாற்ற முயற்சிக்கின்றனர். தங்களின் கூற்றுக்கு ஆதரவாக, இந்த இஸ்லாமியர்கள் பின்வரும் புதிய ஏற்பாட்டு வசனங்களை உடனே எடுத்துக் காட்டுகின்றனர்:
இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள். மத்தேயு 10:5-6

அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார். மத்தேயு 15:24
ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு என்பவர்களின் வம்சத்தில் இயேசு பிறந்தார் என்பதை நாம் உணர்ந்து கொள்வது முக்கியமானது ஆகும். அனேக நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆபிரகாமுக்கு தேவன் அளித்த வாக்குத்தத்தத்தின் நிறைவேறுதலாக அவர் இருந்தார். தேவனுடைய சித்தத்துக்குக் கீழ்ப்படிதல் மற்றும் ஒப்புக் கொடுத்தலின் நிமித்தம் ஆபிரகாமுக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தமானது இரண்டு தன்மைகளை உடையதாக இருந்தது. முதலாவதாக, ஆபிரகாமின் சந்ததியான ஈசாக்கு, யாக்கோபு மற்றும் இஸ்ரவேலின் பிள்ளைகளை (சந்ததியினர்) ஆசீர்வதிப்பதாக வாக்களித்தார். இரண்டாவதாக, ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு எனும் அந்த வம்சத்தில் அனைத்து தேசத்தாருக்கும், அதாவது அனைத்து மக்களுக்குமான ஆசீர்வாதத்தை எழுப்புவேன் என்று வாக்களித்தார். (பார்க்க: அப்போஸ்தலர் 3:25-26 மற்றும் கலாத்தியர் 3:8,14).

ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தத்தில், இஸ்ரவேலரின் சந்ததியினரும், புறஜாதியாரும் (இஸ்ரவேலர் அல்லாதோர்) ஆகிய இருவரும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும். இது அனேக நூற்றாண்டுகளுக்குப் பின்பு இயேசு பிறந்தபோது உறுதிப் படுத்தப்பட்டது. குழந்தை இயேசுவை அர்ப்பணிப்பதற்காக ஆலயத்திற்கு எடுத்துச் சென்றபோது, அங்கே ஜெபித்துக் கொண்டிருந்த பக்தியுள்ள வயது சென்ற ஒரு மனிதர் தேவ ஆவியானவரால் ஏவப்பட்டு அங்கு வந்தார். அவர் தன் கைகளில் அந்தக் குழந்தையை ஏந்தி பின்வரும் வார்த்தைகளை தேவனிடம் ஜெபத்தில் சொன்னார்:
(1)புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், (2)உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான். லூக்கா 2:30-32
மேற்கண்ட வேதபகுதியில் இருந்து, இயேசுவின் ஊழியமும் இரண்டு தன்மையுடையது என்பதை நாம் அறிகிறோம். முதலாவது, அவர் இஸ்ரவலரிடத்தில் பிறந்தபடியால், இஸ்ரவேலரிடம் தன்னையும் தேவனையும் வெளிப்படுத்துவது அவருடைய முதல் ஊழியமாக இருந்தது. அவர்கள் தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்- ஆபிரகாம், ஈசாக்கும் மற்றும் யாக்கோபின் சந்ததியினர். குர்-ஆனும் இந்த வித்தியாசத்திற்கு சாட்சி பகருகிறது:
வலிமையும், சிந்தனையும் உடைய இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகிய நமது அடியார்களை நினைவூட்டுவீராக! மறு உலகை நினைப்பதற்காக அவர்களைச் சிறப்பாக நாம் தேர்வு செய்தோம். ஸூரத்துல் ஸாத் (38):45-46

இஸ்ராயீலின் மக்களே! உங்களுக்கு நான் வழங்கிய அருட்கொடையையும், உலக மக்கள் அனைவரையும் விட உங்களை நான் மேன்மைப்படுத்தியிருந்ததையும் எண்ணிப் பாருங்கள்! ஸூரத்துல் அல்-பகரா (2):47
மிகவும் வருந்தத்தக்கதாக, இடைப்பட்ட காலத்தில் இஸ்ரவேலர் தேவனைப் பற்றிய காரியங்களில் கடினப்பட்டவர்களாகவும் வேறுபட்டவர்களுமாக மாறியிருந்தனர். இதன் விளைவாக, நீண்ட காலமாக இஸ்ரவேலர்கள் எதிர்பார்த்திருந்த ஆசீர்வதிக்கப்பட்டவரும், தேவனால் தெரிந்தெடுக்கப்பட்ட இஸ்ரவேல் ஜனங்களை மீட்பதற்காக தேவனால் அபிசேகிக்கப்பட்டவருமான மேசியா, நானே என்று இஸ்ரவேலரிடம் உறுதிப்படுத்தும் படியாக, இயேசு அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் அவர்கள் மத்தியில் தனிப்பட்ட முறையில் ஊழியம் செய்வது அவசியமானதாக இருந்தது. இந்தக் காரணத்தினால் தான் அவருடைய தனிப்பட்ட ஊழிய காலத்தில், இயேசு தம் சீடர்களை இஸ்ரவேலரிடத்திற்கு மட்டுமே போகும்படி சொல்லி அனுப்பினார். அவர்கள் முதலாவது செய்தியைக் கேட்கவேண்டியதாயிருந்தது. அவர்கள் தேவ ஆசீர்வாதத்தைப் பற்றிய வாக்குத்தத்த உடன்படிக்கையின் மக்களாக இருந்த படியினால், இது அவர்களின் பாக்கியமாக இருந்தது. இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலைத் தொடர்ந்து, அவருடைய சீடர்களில் ஒருவர் இஸ்ரவேலரிடம் பின்வருமாறு பேசினார்:
நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்; உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம்முடைய முன்னோர்களோடே பண்ணின உடன்படிக்கைக்குப் புத்திரராயிருக்கிறீர்கள். அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான். அப்போஸ்தலர் 3:25-26
இயேசுவின் ஊழியத்தின் இரண்டாவது பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்வது மிக முக்கியமானது ஆகும். இந்த ஊழியமானது எல்லா மனிதரின் பாவங்களுக்கான பரிகார பலியாக அவர் தம் ஜீவனைக் கொடுப்பதாக இருந்தது. (1 தீமோத்தேயு 2:4-6). இது எல்லா தேசத்தவருக்குமான ஆசீர்வாதமாக இருந்தது. இயேசு சிலுவையில் பாடுபட்டு சிந்திய இரத்தத்தினாலே எல்லா மனிதரின் பாவங்களுக்கான தண்டனையைச் செலுத்தித் தீர்த்தார் என்ற நற்செய்தியே அந்த ஆசீர்வாதம் ஆகும். இந்த இரட்சிப்பின் ஆசீர்வாதத்தை ஏற்றுக் கொள்கிற எவருகுக்கும் தேவனுடன் நித்தியமான வாழ்வு உறுதியாக உண்டு எனச் சொல்லப்பட்டிருக்கிறது.
எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து (அல்-மஸீஹ்) பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது; அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகலதேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. லூக்கா 24:46-47
மேசியாவாகிய இயேசுவில் இந்த இரட்சிப்பு அனைவருக்கும், யூதருக்கும் மற்ற நாடுகளைச் சேர்ந்த அனைவருக்கும் இருக்கிறது என்பதை வேதவசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன. இயேசு பூமியில் ஊழியம் செய்த நாட்களில், தம் சீடர்களை இஸ்ரவேலரிடம் மட்டுமே போகும்படி சொன்னார் என்பதை நினைவில் கொள்க. ஆனால் அவருடைய ஊழியத்தின் இரண்டாவது பகுதியை செய்து முடித்த பின் (ஒப்புரவாக்குதலின் தியாக சிலுவை மரணத்திற்குப் பின்), அப்பொழுது அவர் சீடர்களிடத்தில் என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள்:
நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். அப்போஸ்தலர் 1:8

ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, ….. மத்தேயு.28:19
இந்த வார்த்தைகளை இயேசு அறிவித்தபோது, அவர்தாமே தம் உலகலாவிய தன்மையை உறுதிப்படுத்தினார்:
நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான். யோவான் 8:12
மீண்டுமாக இயேசு தன்னை அனைத்து மக்களுக்குமான இரக்கத்தில் சிறப்பான ஆசீர்வாதம் அல்லது வெளிப்பாடு என குறிப்பிடுகிறார். குர்-ஆனும் இதேபோல இயேசுவின் உலகளாவிய ஊழியத்தைப் பற்றிக் கூறுகிறது. அல்லாஹ் கூறுவதாக பின்வருமாறு வருகிறது:
'அப்படித் தான்' என்று (இறைவன்) கூறினான். 'இது எனக்கு எளிதானது. அவரை மக்களுக்குச் சான்றாகவும் (ஆயத்-அல் லின்னாசி), நம் அருளாகவும் ஆக்குவோம்.... ஸூரத்துல் மர்யம் (19):21
கவனியுங்கள், "இஸ்ரவேலருக்கு மட்டுமேயான அடையாளம்" என்று சில இஸ்லாமியர்கள் நம்புவது போல இங்கு இல்லை. உண்மையில் அரபியில் இந்த வார்த்தை "அனைத்து மக்களுக்குமான அடையாளம்" என்று வருகிறது.
ஆங்கில மூலம்: The Claim that Jesus was a Prophet Only to Israel