ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

சனி, 20 ஆகஸ்ட், 2011

கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1



கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின்

எழுந்திரு, இராத்திரியிலே முதற்சாமத்தில் கூப்பிடு; ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப்போல ஊற்றிவிடு; எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மூர்ச்சித்துப்போகிற உன் குழந்தைகளின் பிராணனுக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு. (புலம்பல் 2:19)

1) நடைமுறை எடுத்துக்காட்டுகள்

என் நண்பராக இருக்கும் ஒரு கிறிஸ்தவ போதகர் ஒரு நாள் என்னிடம் வந்து, "இஸ்லாம் பற்றி சிறிது விளக்கமுடியுமா?" என்று கேட்டார். அவரிடம் நான், "ஏன் இப்படி திடீரென்று கேட்கிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர், "என் சபையில் சில விசுவாசிகளுக்கு இஸ்லாமியர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள். இந்த இஸ்லாமியர்கள் கேட்கும் சில கேள்விகளை அப்படியே வந்து என்னிடம் விசுவாசிகள் கேட்கிறார்கள்". ஆகையால், இஸ்லாம் பற்றி தெரிந்து வைத்துக்கொண்டால் நல்லது என்று நினைத்து உங்களிடம் வந்தேன் என்று கூறினார்.

இன்னொரு முறை நானும் என் சபையில் இருக்கும் இன்னொரு சகோதரரும் ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தோம். அப்போது திடீரென்று அந்த சகோதரர், குர்‍ஆனின் அல்லாஹ்வும், நம்முடைய யெகோவா தேவனும் ஒன்று (இருவரும் ஒருவரே) என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள் இது உண்மையா? என்று என்னிடம் கேட்டார்.

எங்கள் சபையில் இருக்கும் ஒரு சகோதரி ஒரு கடைக்குச் சென்றார்கள், அந்த கடைக்காரர் ஒரு இஸ்லாமியர். இந்தச் சகோதரி ஒரு கிறிஸ்தவர் என்பதை அறிந்த அவர், அந்த சகோதரியிடம் சில நிமிடங்கள் பேசினார் மற்றும் சில இஸ்லாமிய புத்தகங்கள் கொடுத்தார். அந்த சகோதரி அந்த புத்தகங்கள் அனைத்தையும் கொண்டு வந்து என்னிடத்தில் கொடுத்துவிட்டார்கள்.

என் கிறிஸ்தவ நண்பர் மூலம் அறிந்த இன்னொரு விவரம் என்னவென்றால், கல்லூரிகளில் படிக்கும் கிறிஸ்தவ பெண் பிள்ளைகளிடம், அதே கல்லூரியில் படிக்கும் இஸ்லாமிய ஆண்கள் பேச்சு கொடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக அவர்களிடம் கிறிஸ்தவம் பற்றி பேசி, அவர்களை குழப்புகிறார்கள். இதனால் குழப்பமடைந்த அந்த சகோதரிகள், குடும்ப நபர்களிடம் அல்லது தாங்கள் செல்லும் சபை போதகர்களிடம் இஸ்லாம் பற்றியும், கிறிஸ்தவம் பற்றியும் கேள்விகளை கேட்கிறார்கள் என்பதை அறிந்தேன்.

ஆக, கிறிஸ்தவ பெற்றோர்கள் முக்கியமாக கிறிஸ்தவப் போதகர்கள் இஸ்லாம் பற்றி அறிந்துக்கொள்ளவேண்டிய கால கட்டத்தில் இருக்கிறார்கள்.

2) கிறிஸ்தவ போதகர்களும் ஞானமும்:

ஒரு கால கட்டத்தில் கிறிஸ்தவ மிஷனரிகளும், சபை போதகர்களும் புது மொழிகளை கற்று, பைபிளை அந்த மொழிகளில் மொழிப்பெயர்க்கும் பொறுப்பை ஏற்று அயராது உழைத்தார்கள். இரவு பகல் என்று பாராமல் பல ஆண்டுகள் உழைத்து புதிய மொழிகளில் பைபிளை மொழியாக்கம் செய்து மக்கள் தங்கள் சொந்த மொழியில் தேவனுடைய வார்த்தையை படிக்க உதவினார்கள். அவர்களின் உழைப்பினாலே, நூற்றுக்கணக்கான மொழிகளில் பைபிள் மொழியாக்கம் செய்யப்பட்டது.

ஆனால், இன்றுள்ள ஊழியர்களுக்கு உள்ள ஒரு பொறுப்பு என்னவென்றால், பைபிளை மட்டும் கற்று தங்கள் சபை அங்கத்தினர்களுக்கு பரலோக மன்னாவை கொடுப்பதோடு மட்டும் நின்று விடாமல், இஸ்லாம் போன்ற மதங்கள் பற்றி அறிந்துக்கொண்டு தங்களிடம் சபை விசுவாசிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில்களை தரவேண்டும் என்பது தான்.

ஒவ்வொரு கிறிஸ்தவ போதகரும் உலகத்தில் இரண்டாவது மிகப்பெரிய மதமாக உள்ள இஸ்லாம் பற்றி அறிந்துக்கொள்ள வேண்டும். இஸ்லாமியர்கள் தீர்க்கதரிசி என்று நம்பும் முஹம்மது பற்றி அறிந்துக்கொள்ளவேண்டும். இஸ்லாமியர்களின் வேதமாகிய "குர்‍ஆனை"ப் பற்றியும் அறிந்துக்கொள்ளவேண்டும்.

ஒரு போதகர் இஸ்லாம் பற்றி அறிந்துக்கொண்டால், அந்த சபையே இஸ்லாம் பற்றி அறிந்துக்கொண்டதற்கு சமமாகும். தற்காலத்தில் சபை போதர்களிடம் விசுவாசிகள் ஞானத்தை தேடுகிறார்கள். வேதமும் இதனை நமக்குச் சொல்லவில்லையா?

மல்கியா 2: 7 ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்கவேண்டும்; வேதத்தை அவன் வாயிலே தேடுவார்களே; அவன் சேனைகளுடைய கர்த்தரின் தூதன்.

நீதிமொழிகள் 24:14 அப்படியே ஞானத்தை அறிந்துகொள்வது உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்; அதைப் பெற்றுக்கொண்டால், அது முடிவில் உதவும், உன் நம்பிக்கை வீண்போகாது.

ஓசியா 4:6 என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய், ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்துவிடுவேன்; …..

தங்கள் சபை போதகருக்கு எல்லாமே தெரிந்து இருக்கவேண்டும் என்று விசுவாசிகள் எண்ணுகின்றார்கள். தங்கள் சபை போதகர் ஒரு நடமாடும் நூல்நிலையம் என்றும், ஒரு கலைக் களஞ்சியம் என்றும் எண்ணுகிறார்கள். (அனேக கிறிஸ்தவ போதகர்கள் நடமாடும் நூல் நிலையங்களாக திகழ்வதையும் நாம் காணமுடிகிறது.) இதனால் அனேக கேள்விகளைக் கொண்டு சபைப் போதகரை துளைத்துவிடுகிறார்கள்.

இதர உலக விவரங்கள் பற்றி தெரியாமல் இருந்தாலும் பரவாயில்லை, ஆனால், இஸ்லாம் பற்றி ஒவ்வொரு கிறிஸ்தவ போதகருக்கு ஓரளவாவது தெரிந்து இருக்கவேண்டும் என்பது என் கருத்து.

இந்த "கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின்" என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகள், கிறிஸ்தவ போதகர்களுக்கு இஸ்லாம் பற்றிய அடிப்படை அறிவை தரும் என்ற நோக்கில், கேள்வி பதில் கோணத்தில் எழுதப்படுகிறது.

தொடர்ச்சியாக நிறுத்தாமல் நூற்றுக்கணக்கான பத்திகள் மூலம் விவரங்களைச் சொல்லாமல், ஒரு கிறிஸ்தவ போதகரும், நானும் உரையாடியது போல இந்த கட்டுரைகள் வடிவமைக்கப்படுகிறது. இவைகள் கிறிஸ்தவ உலகிற்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.


கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் – பாகம் 1

(குர்‍ஆன் ஒரு சிறு குறிப்பு)

[ஒரு கிறிஸ்தவ போதகரின் சபையிலிருந்த ஒரு விசுவாசி சில நாட்களாக சபைக்கு வரவில்லை. என்ன ஆனது என்று தெரிந்துக்கொள்ள அந்த விசுவாசிக்கு போன் செய்து பேசும் போது, அந்த விசுவாசி அனேக இஸ்லாமிய கேள்விகளை கேட்பதாக தெரிந்தது. அந்த விசுவாசிக்கு யாரோ இஸ்லாம் பற்றிய அறிவை புகட்டியுள்ளார்கள் என்பது மட்டும் தெளிவாக புரிந்தது. அந்த போதகரிடம் இப்போது நாம் உரையாடுவோம்]

கிறிஸ்தவ போதகர்: பிரதர் வணக்கம்.

உமர்: வணக்கம் பாஸ்டர். எப்படி இருக்கீங்க?

கிறிஸ்தவ போதகர்: கர்த்தரின் கிருபையால் சுகமா இருக்கிறேன். நீங்க எப்படி இருக்கீங்க?

உமர்: நானும் கர்த்தரின் கிருபையால் சுகமாக இருக்கிறேன். திடீரென்று வந்திருக்கீங்க? என்ன விஷயம் சொல்லுங்க?

கிறிஸ்தவ போதகர்: "இஸ்லாம் பற்றிய ஒரு நாள் செமினார்" நடக்குது, வந்து பாருங்க என்று நீங்க ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்கீங்க. நான் தான் ஏதோ ஒரு காரணம் சொல்லி வராமல் இருந்தேன். ஆனால், இப்போ அதுக்கு நேரம் வந்திருக்கு. ஆதனால் தான் உங்ககிட்டே வந்து பேசிட்டு போகலாம் என்று வந்தேன்.

உமர்: அப்படியா! ரொம்ப சந்தோஷமான விஷயம் தான். ஆனால், இஸ்லாம் பற்றி அறிந்துக்கொள்ள இந்த‌ ஆர்வ‌ம் எப்ப‌டி திடீரென்று வ‌ந்துச்சு?

கிறிஸ்தவ போதகர்: எங்க சபை விசுவாசி ஒருத்தர், அனேக இஸ்லாம் பற்றிய கேள்வியை கேட்கிறார், முஹம்மது கடைசி தீர்க்கதரிசியா என்று கேட்கிறார்? இயேசு இறைவனா அல்லது ஒரு தீர்க்கதரிசியா? என்று கேட்கிறார். நமக்கு பைபிள் பற்றி மட்டுமே தெரியும், இஸ்லாம் பற்றி ஒன்றுமே தெரியாது மட்டுமல்ல, கிறிஸ்தவத்திற்கும் இஸ்லாமுக்கும் இடையே இருக்கும் அடிப்படை ஒற்றுமைகள்/வித்தியாசங்கள் கூட தெரியாது. இப்படி இருக்கும் போது எப்படி நான் பதில் சொல்றது? அதனால் தான் உங்ககிட்டே வந்தேன்.

உமர்: இப்போ எனக்கு புரியுது. உங்க‌ கேள்விக‌ள் என்ன‌ கேளுங்க‌?

கிறிஸ்தவ போதகர்: என்னுடைய முதல் கேள்வி, இஸ்லாம் பற்றி அறிந்துக்கொள்ள நான் எந்த புத்தகத்தை படிக்கவேண்டும்? முஸ்லிம்கள் தங்கள் வேதம் என்றுச் சொல்லும் "குர்‍ஆனை" படித்தால் போதுமா?

உமர்: நீங்க இஸ்லாமை அறிந்துக்கொள்ள உங்களுக்கு "குர்‍ஆன்" மட்டும் உதவாது. குர்‍ஆனை மட்டும் நீங்க படித்தால் குழப்பத்தைத் தவிர வேறு ஒன்றும் வராது. இஸ்லாமை பற்றி அறிந்துக்கொள்ள குர்‍ஆனை மட்டும் நாம் படித்தால், நாம் உயிரற்ற ஒரு சடலத்தோடு பேச முயற்சிப்பதற்கு சமமாகும். ஒரு சடலம் பார்ப்பதற்கு எந்த ஒரு குறையும் இல்லாமல், கண் காது மூக்கு என்று எல்லா பாகங்களை கொண்டாதாக‌ இருந்தாலும், உயிர் இல்லையானால் என்ன உபயோகம். அது போலத் தான் வெறும் குர்‍ஆனை படித்தால் நீங்கள் இஸ்லாமை முழுவதுமாக அறிந்துக்கொள்ள முடியாது.

கிறிஸ்தவ போதகர்: ஏன் அப்படி? கிறிஸ்தவம் பற்றி ஒருவர் அறிய, புதிய ஏற்பாட்டை தொடர்ச்சியாக படித்தால் போதுமே, பெரும்பான்மையான‌ எல்லா விவ‌ர‌ங்களையும் அறிந்துக்கொள்ளலாம். அது போல‌, குர்‍ஆனை ப‌டித்தால் இஸ்லாம் ப‌ற்றி அறிந்துக்கொள்ள‌முடியாதா?

உமர்: முடியாது. நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை தொழுதுக்கொள்கிறீங்கள் என்று ஒரு முஸ்லிமிடம் கேட்டுப்பாருங்க. அவர் ஐந்து முறை என்று பதில் சொல்லுவார். ஆனால், குர்‍ஆனில் இந்த ஐந்துமுறை தொழவேண்டும் என்று எங்கு சொல்லப்பட்டுள்ளது என்று கேளுங்க. அவரால் குர்‍ஆனைக் கொண்டு மட்டும் பதில் சொல்லமுடியாது. இப்படி அடிப்படை இஸ்லாமிய கோட்பாடுகள், இஸ்லாமிய சட்டங்கள், தொழுகை நடத்தவேண்டிய முறைகள் போன்ற விவரங்களை நாம் குர்‍ஆனில் காணமுடியாது.

கிறிஸ்தவ போதகர்: அப்படியானால், குர்‍ஆனை மட்டும் படித்தால் நாம் இஸ்லாம் பற்றி முழுவதுமாக அறிந்துக்கொள்ள முடியாது என்கிறீர்கள். ஏன் இந்த நிலை?

உமர்: நாம் பைபிளில் படிப்பது போல, நிகழ்ச்சிகள் கோர்வையாக குர்‍ஆனில் சொல்லப்படவில்லை.

குர்‍ஆனில்:

1) ஆங்காங்கே விவரங்கள் சொல்லப்பட்டுள்ளது.


2) ஒரு கோர்வையாக விவரங்கள் வரிசையாக சொல்லப்படவில்லை.


3) குர்‍ஆனில் பைபிளிலிருந்து சில நிகழ்ச்சிகளை குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ளது, அப்படி சொல்லப்பட்ட நிகழ்ச்சிகள் கூட முழுவதுமாக சொல்லப்படாமல் பாதி விவரங்கள் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது.


4) இந்த நிகழ்ச்சிகளை முழுவதுமாக அறிந்துக்கொள்ள பைபிளை படித்தால் மட்டுமே புரிந்துக்கொள்ளமுடியும்.


5) "குர்‍ஆன் வசனங்கள்" சொல்லப்பட்ட பின்னணி குர்‍ஆனில் சொல்லப்படவில்லை.


6) இஸ்லாமிய தீர்க்கதரிசியாகிய முஹம்மது பற்றிய‌ பற்றிய விவரங்களை கூட நாம் முழுவதுமாக குர்‍ஆனில் காணமுடியாது.


இப்ப‌டி சொல்லிகொண்டே போக‌லாம். ஆகையால், இஸ்லாம் பற்றிய 50 சதவிகித அறிவு கூட நமக்கு குர்‍ஆனை மட்டும் படித்தால் கிடைக்காது.

கிறிஸ்தவ போதகர்: அப்படியானால், இஸ்லாமை அறிந்துக்கொள்ள என்ன தான் வழி? வேறு ஏதாவது புத்தகம் உண்டா?

உமர்: உண்டு. குர்‍ஆனுக்கு உயிர் ஊட்டும் புத்தகங்கள் இஸ்லாமில் உண்டு. அவைகளை கீழ்கண்டவாறு பிரிக்கலாம்:

1) ஹதீஸ்கள் (முஹம்மது பேசியவைகளும், செய்தவைகளும்)


2) முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்


3) இஸ்லாமிய அறிஞர்கள் எழுதிய "குர்‍ஆன் விரிவுரைகள் (தப்ஸீர்கள்)".


இவைகள் அனைத்தையும் படித்தால் தான், நாம் ஓரளவிற்கு இஸ்லாம் பற்றி அறிந்துக்கொள்ள முடியும்.

கிறிஸ்தவ போதகர்: என்னது ஓரளவிற்கு தான் அறிந்துக்கொள்ள முடியுமா? முழுவதுமாக அறிந்துக்கொள்ள முடியாதா?

உமர்: இஸ்லாம் வந்து 1400 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது, இன்னும் இஸ்லாமியர்களே இஸ்லாமை முழுவதுமாக அறிந்துக்கொள்ளவில்லை, நீங்க அவ்வளவு சீக்கிரமாக அறிந்துக்கொள்ள முடியுமா என்ன?

தமிழ் நாட்டிலே பாருங்க. நாங்க தான் உண்மையான முஸ்லீம்கள் என்று ஒரு குழு சொல்லும், இன்னொரு குழு நாங்க தான் உண்மையான முஸ்லீம்கள் என்றுச் சொல்லும். இந்த ஹதீஸ் தவறு என்று ஒரு குழு சொல்லும், இல்லை இல்லை அது சரியான ஹதீஸ் என்று இன்னொரு குழு சொல்லும்.

ஆகவே, இஸ்லாம் பற்றி 100% அறிந்துக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தை மட்டும் விட்டுடுங்க. ஆனால், கிறிஸ்தவர்களாகிய நாம் இஸ்லாம் பற்றி தேவையான அளவிற்கு மட்டும் அறிந்துக்கொண்டால் போதும்.

கிறிஸ்தவ போதகர்: குர்‍ஆன், ஹதீஸ்கள், சரித்திர நூல்கள், குர்‍ஆன் விரிவுரைகள் என்று அனேக புத்தகங்களை படிப்பதைக் காட்டிலும், தற்காலத்தில் ஒரு சில இஸ்லாமியர்கள் எழுதிய புத்தகங்களை நாம் படித்தால் இஸ்லாம் பற்றி முழுவதுமாக அறிந்துக்கொள்ள முடியாதா?

உமர்: உங்களிடம் ஒரு நூறு ரூபாய் நோட்டு உள்ளதா? அந்த நோட்டில் ஒரு பக்கம் பிரிண்ட் உள்ளதா அல்லது இரண்டு பக்கமும் பிரிண்ட் உள்ளதா? இரண்டு பக்கமும் பிரிண்ட் இருந்தால் தான் அது செல்லுபடியாகும். ஒரு பக்கம் மட்டும் பிரிண்ட்டான ரூபாய் நோட்டுக்களை அரசாங்கம் "கள்ள நோட்டுக்கள்" என்றுச் சொல்லும், அது செல்லுபடியாகாது.

அதுபோல, இஸ்லாமியர்கள் எழுதும் புத்தகங்களை மட்டும் நீங்கள் படித்தால், நீங்கள் இஸ்லாமின் ஒரு பக்கத்தை மட்டுமே அறிய முடியும். இஸ்லாமின் இன்னொரு பக்கத்தை அறிய முடியாது. இஸ்லாமின் இரண்டு பக்கத்தையும் அறியவேண்டுமென்றால் குர்‍ஆன், ஹதீஸ்கள் இஸ்லாமிய சரித்திர நூல்கள் போன்ற மூல நூல்களை படிக்கவேண்டும். இஸ்லாமியர்கள் எழுதிய நூல்களையும், இஸ்லாமியரல்லாதவர்கள் எழுதிய இஸ்லாம் பற்றிய நூல்களையும் படிக்கவேண்டும். அப்போது தான் முழு இஸ்லாம் பற்றி அறிய முடியும்.

கிறிஸ்தவ போதகர்: ஓ.. அப்படியா. இன்றே நான் ஒரு குர்‍ஆனையும், ஹதீஸ்களையும், முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறையும் வாங்கி படிக்க ஆரம்பிக்கிறேன். ஆனால், முதலில் நான் எதனை படிப்பது? குர்‍ஆனை முதலாவது படிக்கவேண்டாம் என்றுச் சொல்கிறீர்கள். அப்படியானால், நான் ஹதீஸ்களை முதலாவது படிக்கட்டுமா?

உமர்: நான் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறேன். புதிய ஏற்பாட்டிலிருக்கும் "அப்போஸ்தலர் நடபடிகள்" புத்தகத்தையோ, அல்லது நம்முடைய நான்கு சுவிசேஷங்கள் அல்லாத இதர புத்தகங்களையோ முதன் முதலாக ஒரு நபர் படித்தால், கிறிஸ்தவம் பற்றி, இயேசுக் கிறிஸ்து பற்றி எவ்வளவு விவரங்களை அறிந்துக் கொள்வார்?

கிறிஸ்தவ போதகர்: புதிய ஏற்பாட்டிலிலுள்ள சுவிசேஷங்களை முதலாவது படிக்காமல், இயேசுப் பற்றியும், அவரது செய்திகளைப் பற்றியும் படிக்காமல் ஒரு புதிய நபர், இதர புத்தகங்களை படிப்பாரானால், அவரால் கிறிஸ்தவத்தை முழுவதுமாக அறிந்துக்கொள்ளமாட்டார், அதற்கு பதிலாக அதிகமாக குழம்பிப் போவார். ஏனென்றால், சுவிசேஷங்கள் இதர புத்தகங்களை படிப்பதற்கு, புரிந்துக்கொள்வதற்கு அஸ்திபாரங்களாக இருக்கின்றன. இதில் சிறிதும் சந்தேகமில்லை. ஆகையால், என்னை கேட்டால், முதலாவது ஒரு சுவிசேஷத்தையாவது படிக்கணும் பிறகு அப்போஸ்தலர் நடபடிகளை படிக்கணும், பிறகு தான் இதர கடிதங்களை/புத்தகங்களை படிக்கணும், அப்போது தான் கோர்வையாக எல்லாம் புரியும்.

உமர்: ரொம்ப சரியாகச் சொன்னீங்க. இயேசுவை முதலாவது அறிந்துக் கொள்ளாமல், இயேசுவின் வாழ்க்கை, அவரது வார்த்தைகளை அறிந்துக்கொள்ளாமல் கிறிஸ்தவத்தை அறிந்துக்கொள்ள முயற்சி எடுப்பது, சரியானது அல்ல.

கிறிஸ்தவ போதகர்: அதனால் தான் நாம் மற்றவர்களுக்கு நற்செய்தியை கூறும் போது சுவிசேஷ நூல்களை முதலாவது படிக்கக் கொடுக்கிறோம்.

உமர்: இதே போலத் தான், இஸ்லாம் பற்றி அறிய நாம் முதலாவது "முஹம்மதுவை" அறிய வேண்டும். முஹம்மது தான் இஸ்லாம், முஹம்மதுவின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள் தான் இஸ்லாமுக்கு அஸ்திபாரம். முஹம்மதுவின் வாழ்க்கை குர்‍ஆனின் விரிவுரையாக உள்ளது. (Muhammad's life is the commentary of the Quran).

• முஹம்மது எங்கே பிறந்தார்?


• எப்படி வளர்ந்தார்?


• அவர் தன்னை இஸ்லாமிய தீர்க்கதரிசி என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட காலத்திற்கு முன்பு எப்படி வாழ்ந்தார்?


• தான் ஒர் நபி (தீர்க்கதரிசி) என்று சொல்லிக்கொண்ட பிறகு அவரது வாழ்க்கை எப்படி இருந்தது?


• அவரது இஸ்லாமிய பிரச்சாரம் எப்படி இருந்தது?


• அவருடைய அன்றைய இஸ்லாமிய பிரச்சாரத்திற்கு எதிரிகளாக இருந்தவர்கள் என்ன செய்தார்கள்?


• அவர்கள் மூலமாக முஹம்மது சந்தித்த சவால்கள், பிரச்சனைகள் என்னென்ன?


• முஹம்மது ஏன் மக்காவை விட்டு மதினாவிற்கு இடம் பெயர்ந்தார்?


• நான் தான் இஸ்லாமிய நபி என்று அவர் சொல்லிக்கொண்ட பிறகு கூட, ஏன் அனேக ஆண்டுகள் இஸ்லாமியர்கள் எருசலேமை நோக்கி நமாஜ் செய்தார்கள்?


• பின்பு எந்த கால கட்டத்தில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் திசை (கிப்லா) , எருசலேமிலிருந்து மக்காவிற்கு மாறியது?


• மதினாவில் அவரது ஆரம்பகால வாழ்க்கை எப்படி இருந்தது?


• முஹம்மது எப்படி யுத்தங்கள் செய்தார்?


• அவர் யுத்தங்கள் செய்வதற்கான காரணங்கள் என்னென்ன?


• அவருக்கும் யூதர்களுக்கும்/கிறிஸ்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட உரையாடல்கள் என்னென்ன?


• ஆரம்ப காலத்தில் யூதர்கள்/கிறிஸ்தவர்கள் பற்றி அவர் கூறியவைகள் யாவை?


• கடைசி காலத்தில் இவர்களைப் பற்றிய அவரது நோக்கம் எப்படி மாறியது?


• அவரது கடைசி காலம் எப்படி இருந்தது?


• அவர் எப்போது மரித்தார் - எப்படி மரித்தார்?


போன்ற இந்த கேள்விகளுக்கான விடைகளை நாம் தெரிந்துக்கொண்டு அதன் பிறகு குர்‍ஆனையும், ஹதீஸ்களையும் படிக்கும் போது, நமக்கு இஸ்லாம் பற்றிய அறிவு சரியான முறையில் கிடைக்கும், மற்றும் குழப்பம் நீங்கும். முஹம்மதுவின் வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளுக்கும், குர்‍ஆனின் வசனங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எனவே, குர்‍ஆனை அறிவதற்கு முன்பு, நாம் முஹம்மதுவை அறிய வேண்டும்.

ஆகையால், முதலாவது முஹம்மதுவை அறிந்துக்கொள்ளுங்கள், இரண்டாவதாக, குர்‍ஆனையும் ஹதீஸ்களையும், இதர இஸ்லாமிய விரிவுரைகளையும், மற்றும் இஸ்லாமியர்கள் எழுதும் புத்தகங்களையும் படியுங்கள். அப்போது தான் சரியான முறைப்படி நாம் இஸ்லாமை அறிய முடியும். ஹதீஸ்களிலும் விவரங்கள் ஒரு கோர்வையாக சொல்லப்படவில்லை எனபது குறிப்பிடத்தக்கது. எனவே, முதலாவது முஹம்மதுவின் வாழ்க்கை சரிதையை படிக்கவேண்டும்.

கிறிஸ்தவ போதகர்: கிறிஸ்தவத்தின் மூலைக்கல் இயேசு, அது போல இஸ்லாமின் மூலைக்கல் முஹம்மது. எனவே, இவ்விரு மார்க்கங்களை கற்க முதலாவது அதன் ஸ்தாபகர்களைத் தெரிந்துக்கொள்ள வேண்டும். இப்போது எனக்கு புரியுது.

உமர்: இப்போது சரியாக நீங்க புரிஞ்சுக்கிட்டீங்க.

கிறிஸ்தவ போதகர்: நான் இப்போது ஒரு தனிப்பட்ட கேள்வியை கேட்பேன், கோபித்துக் கொள்ளமாட்டீங்களே!

உமர்: கேளுங்க, இதுல கோபித்துக் கொள்வதற்கு ஒன்றுமே இல்லை.

கிறிஸ்தவ போதகர்: நீங்க கடந்த சில ஆண்டுகளாக, இஸ்லாம் பற்றிய கட்டுரைகளை தமிழில் எழுதுவதாகவும், இதர கிறிஸ்தவர்களின் உதவியோடு ஆங்கில கட்டுரைகளை மொழிப்பெயர்த்து தமிழில் பதிப்பதாகவும் கேள்விப்பட்டேன். மட்டுமல்ல, ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் தமிழில் ஒரு பிரிவு இருப்பதாகவும் கேள்விப்பட்டேன். இப்போது என் கேள்வி என்னவென்றால், இஸ்லாம் பற்றி அறிய முதலாவது முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு, பிறகு குர்‍ஆன், ஹதீஸ்கள், குர்‍ஆன் விரிவுரைகள், மற்ற இஸ்லாமியர்களின் புத்தகங்களை படித்தால் போதும் என்றுச் சொன்னீங்க. அப்படியானால், நீங்கள் எழுதும் கட்டுரைகளை படிப்பதினால், இஸ்லாமைப் பற்றி வேறு எவைகளை நாம் அறிந்துக்கொள்ள முடியும். இஸ்லாமிய மூல நூல்களே நமக்கு இஸ்லாம் பற்றிச் சொல்லித் தரும் போது, நாங்கள் ஏன் உங்கள் கட்டுரைகளை படிக்கவேண்டும்?

உமர்: சரியான கேள்வியைத் தான் கேட்டு இருக்கீங்க. நான் ஏற்கனவே சொன்னது போல, இஸ்லாம் என்னும் ரூபாய் நோட்டுக்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. ஒரு பக்கத்தை அறிய இஸ்லாமியர்கள் எழுதும் நூல்கள் நமக்கு உதவும். இஸ்லாமில் உள்ள நல்ல விஷயங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் இஸ்லாமியர்கள் எழுதுவார்கள். எங்க மார்க்கம் இப்படி, எங்க மார்க்கம் அப்படி, எங்க நபி இப்படிப்பட்டவர், அப்படிப்பட்டவர் என்று சொல்லுவாங்க, மற்றும் எழுதுவாங்க. ஆனால், இஸ்லாமின் கொடூர முகத்தை அவர்கள் மறைத்துவிடுவார்கள். முஹம்மதுவின் வாழ்க்கையில் நடந்த சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் சில கீழ்தரமான நிகழ்ச்சிகள் பற்றி நம்மிடம் சொல்லவே மாட்டார்கள். அப்படி யாராவது கேட்டுவிட்டாலும், அதற்கு சப்பை கட்டு கட்டி, நம்மை குழப்பி அவைகளை மறுத்துவிடுவார்கள்.

எனவே, முதலாவதாக, எங்களுடைய அல்லது இஸ்லாமியரல்லாதவர்களுடைய கட்டுரைகள், "இஸ்லாமில் இருக்கும் கேள்விகள் கேட்கப்படவேண்டிய விவரங்கள்" பற்றிய அறிவைத் தருகின்றன. எனவே, இஸ்லாமிய நாணயத்தின் மறுபக்கத்தை அறிய நம்முடைய கட்டுரைகள் உதவும்.

உதாரணத்திற்கு:

முஹம்மதுவின் இராணுவ பலம் அதிகரித்த போது, மற்ற நாட்டு மன்னர்களுக்கு "இஸ்லாமை தழுவும் படி முஹம்மது கடிதங்கள்" எழுதினார். அதாவது, "இஸ்லாமை ஏற்கிறாயா அல்லது என் இராணுவத்தால் மடிந்து சாகிறாயா" என்று கேட்டு, பயப்படவைத்து இஸ்லாமுக்கு அழைத்தார்.

இந்த விவரங்களை நம்முடைய இஸ்லாமிய நண்பர்கள் அறிஞர்கள் நம்மிடம் கூற மாட்டார்கள், அப்படி கூறினாலும், உண்மையை மறைத்து பொய்யைச் சொல்வார்கள். இவைகளை மக்கள் அறியும்படி வெளியே கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்.

இன்னொரு உதாரணத்தைச் சொல்லட்டும்: பீஜே போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் இயேசு இறைமகனா என்ற ஒரு புத்தகத்தை எழுதினார். அதில் தனக்கு வந்த பாணியில் பைபிள் மீதும், இயேசு கிறிஸ்து மீதும் பொய்களை அள்ளி வீசினார். இவைகளை படிக்கும் கிறிஸ்தவர்கள் குழம்பிவிடுகின்றனர். எனவே, நாங்கள் அவருக்கு பைபிளின் துணைக்கொண்டு பதில்கள் மறுப்புக்கள் எழுதுகிறோம். அவர் மட்டும் எங்கள் கட்டுரைக்கு பதில் சொல்லாமல் இருக்கிறார்.

இப்படி இஸ்லாமியர்கள் இஸ்லாம் பற்றி, முஹம்மது பற்றி வெளியே சொல்ல வெட்கப்படும் விவரங்களை நாம் மக்களின் முன் வைக்கிறோம். கிறிஸ்தவம் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புக்களை கொடுக்கிறோம். சராசரி கிறிஸ்தவர்களிடம், அதிகம் அறியாதவர்களிடம் கேள்விகள் கேட்டு அவர்களை குழப்பும் இஸ்லாமியர்களுக்கு பதில்கள் மறுப்புக்கள் எழுதுகிறோம். இதனால் கிறிஸ்தவர்கள் இஸ்லாம் பற்றியும் அறிந்துக்கொள்வார்கள், அதே நேரத்தில் கிறிஸ்தவம் பற்றியும் அதிகமாக அறிந்துக்கொள்வார்கள்.

ஆக, எங்கள் கட்டுரைகள் இஸ்லாமின் இன்னொரு முகத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும். அப்போது தான் உண்மை இஸ்லாமை உங்களைப் போன்ற கிறிஸ்தவ போதகர்கள், விசுவாசிகள் அறிந்துக்கொள்ள முடியும். எவனை விழுங்கலாம் என்று பிசாசானவன் வகை தேடி சுற்றித் திரிகிறான். அவனுடைய வலையில் கிறிஸ்தவர்கள் விழக்கூடாது என்ற எண்ணத்தில் இதனை செய்கிறோம்.

எங்கள் கட்டுரைகள் மூலமாக உங்கள் நேரம் கூட மிச்சமாகும் .

கிறிஸ்தவ போதகர்: இப்போது எனக்கு நன்றாக புரிகிறது. ஆனால், எங்கள் நேரம் மிச்சமாகும் என்று சொல்கிறீர்களே, அது எப்படி?

உமர்: உங்கள் நேரம் எப்படி மிச்சமாகும் என்பதை இப்போது நான் விளக்குகிறேன். உங்க சபையில் இருக்கும் ஒரு விசுவாசிக்கு யாரோ இஸ்லாம் பற்றி கூறியதாகவும், அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில்கள் தேவை என்பதாலும் தான் நீங்கள் இப்போது என்னோடு உரையாடிக்கொண்டு இருக்கீங்க இல்லையா?

கிறிஸ்தவ போதகர்: ஆமாம்.

உமர்: எங்களைப்போல இஸ்லாம் பற்றி ஏற்கனவே அறிந்தவர்களிடம் வராமல், நீங்களாகவே இஸ்லாம் பற்றி ஆராய ஆரம்பித்தால், நீங்கள் அனேக புத்தகங்களை படிக்கனும், நூற்றுக்கணக்கான மணி நேரங்களை செலவிடனும், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் பற்றிய புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்று தேடி அலையனும். குர்‍ஆனையும், விரிவுரைகளையும், முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறையும் படித்து புரிந்துக்கொள்ளனும், இதற்கு பல ஆண்டுகள் ஆகும். இதற்கு இடையில் உங்கள் சொந்த வேலைகளையும் பார்க்கனும், சபையை கவனித்துக் கொள்ளனும்.

இன்னும் சொல்லவேண்டுமென்றால், அனேக இஸ்லாமிய நூல்கள் இன்னும் தமிழில் மொழிப்பெயர்க்கப் படவில்லை. அவைகளில் சில நூல்கள் ஆங்கிலத்தில் கிடைக்கின்றன, சில நூல்கள் இன்னும் அரபி மொழியிலேயே உள்ளது. இந்த நூல்கள் எங்கே கிடைக்கும் என்று நீங்கள் தேடனும். அரபி மொழி தெரியாமல் திகைக்கனும்.

இஸ்லாம் ஒரு கடல் போன்றது, அதில் இஸ்லாமிய அறிஞர்கள் மிகப்பெரிய திமிங்கிலங்கள் போல உலா வருகிறார்கள். ஏதாவது ஒரு சின்ன மீன் கிடைத்தால், உடனே அதனை விழுங்கிவிடுவார்கள்.

உங்கள் விசுவாசி கேட்கும் நான்கு கேள்விகளுக்கு பதிலை நீங்கள் தேடி கண்டுபிடித்து அவருக்கு சொல்வதற்கு உங்களுக்கு நான்கு ஆண்டுகளாகும்.

ஆனால், இஸ்லாமிய பின்னணியிலிருந்து வந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட‌ எங்களைப் போன்றவர்கள் பல ஆண்டுகளாக இஸ்லாமை கற்றுக்கொண்டு இருக்கிறோம், இன்றும் கூட ஒவ்வொரு நாளும் இஸ்லாமை தொடர்ந்து படித்துக்கொண்டு இருக்கிறோம். பல இஸ்லாமிய நூல்களை படிக்கிறோம், ஆங்கிலத்திலும் படிக்கிறோம். அரபியிலும் படிக்கிறோம் அல்லது அரபி தெரிந்த கிறிஸ்தவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்கிறோம். உலகத்தில் நடக்கின்ற "இஸ்லாம் கிறிஸ்தவ" விவாதங்களை பார்க்கிறோம், படிக்கிறோம். இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் நாடுகளாகிய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அனேக ஆண்டுகள் ஊழியம் செய்து அதன் மூலம் பெற்ற அறிவை புத்தகங்களாக நம்முடைய கரங்களில் கொடுத்துச் சென்ற அனேக கிறிஸ்தவ போதகர்கள், மிஷனரிகள் வாழ்க்கையை படிக்கிறோம். அவர்கள் சந்தித்த இஸ்லாமிய சவால்களை அறிந்துக்கொள்கிறோம்.

ஆகவே, ஆயிரக்கணக்கான மணி நேரங்கள் இனி நீங்கள் செலவிடவேண்டாம், அவைகளை நாங்கள் ஏற்கனவே செலவிட்டுவிட்டோம். ஆகையால், நாங்கள் கற்றுகொண்ட விவரங்களை உங்களுக்கு சொல்லிவிட்டால் போதும், உங்களின் பல ஆண்டுகள் மிச்சமாகும். ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்கள் ஒதுக்கி ஒரு மாதம் ஆராய்ச்சி செய்து கற்றுக்கொள்ள வேண்டிய இஸ்லாம் பற்றிய விவரங்களை, எங்கள் ஓரிரு கட்டுரைகளை படித்தால் நீங்கள் அறிந்துக்கொள்ளலாம். ஆகையால், உங்கள் நேரம் அதிகமாக மிச்சமாகும். மற்றும் மூல ஆதாரங்களை நாங்கள் தருவதினால், எங்கள் விவரங்களில் உள்ள நம்பகத்தன்மைய நீங்களே சரி பார்த்துக்கொள்ளலாம். நாங்கள் பதில்கள் எழுதும் போது, குர்‍ஆனில் இந்த அதிகாரம், இந்த வசனம் என்று எண்கள் குறிப்பிட்டு எழுதுகிறோம், ஹதீஸ்களின் எண்களை தருகிறோம், குர்‍ஆன் விரிவுரையாளர்களின் இணைய தள தொடுப்புக்களைத் தருகிறோம். இப்படி ஆதாரங்களை தருவதினால், நீங்கள் அவைகளை சரி பார்த்து தெரிந்துக்கொள்ள வாய்ப்பு உண்டாகும்.

கிறிஸ்தவ போதகர்: நீங்க சொல்வது உண்மை தான். இஸ்லாம் பற்றி அறிந்துக்கொள்ள மணிக்கணக்கில் என்னால் நூலகத்தில் உட்கார்ந்து படிக்கமுடியாது. என் சபையில் இருக்கிற 500க்கும் அதிகமான விசுவாசிகளின் தேவைகளை சந்திப்பதற்கும், இன்னும் கிளைச் சபைகளை கவனித்துக்கொள்வதற்குமே எனக்கு நேரம் போதவில்லை. இப்படி இருக்கும் போது, எப்படி நான் இஸ்லாமை முழுவதுமாக அறிய முடியும்?

உமர்: ஆகையால் தான் சொல்கிறேன், ஒரு கோர்வையாக மற்றும் முக்கியமான விவரங்களை மட்டும் நீங்கள் அறிந்துக்கொண்டால் போதும். உங்க சபையில் உள்ள ஆர்வமுள்ள 10 விசுவாசிகளுக்கு மட்டும் இஸ்லாம் பற்றி கற்றுக்கொடுத்தால் போதும், அவர்கள் உங்கள் முழு சபைக்குமே உதவியாக இருப்பார்கள். உங்களுக்கு விருப்பமிருந்தால் சொல்லுங்க, நாங்கள் மாதாமாதம் நடத்தும் "இஸ்லாமை அறிவோம்" வகுப்புகளில் உங்கள் விசிவாசிகளுக்கும் பயிற்சி அளிக்கிறோம், கற்றுக்கொடுக்கிறோம். பிறகு அவர்கள் உங்கள் சபையின் தேவையை பூர்த்தி செய்வார்கள்.

கிறிஸ்தவ போதகர்: ஓஹோ.. இது நல்ல ஆலோசனையாக இருக்கிறதே... நிச்சயமாக நான் எங்கள் சபை விசுவாசிகளுக்கு இதைப் பற்றிச் சொல்லி உங்கள் வகுப்புகளுக்கு அனுப்புகிறேன். இன்னும் முக்கியமாக, நீங்க ஒரு முறை எங்க சபைக்கு வரணும், ஒரு மணி நேரம் உங்களிடம் எங்க விசுவாசிகள் தங்கள் சந்தேகங்களை கேட்பாங்க. அப்போ நீங்க ஒரு முன்னுரையை கொடுத்தால் போதும் மிகவும் உதவியாக இருக்கும்.

உமர்: கண்டிப்பாக நாங்க வருகிறோம். என்னோடு கூட இன்னும் அனேக கிறிஸ்தவ போதகர்கள், நண்பர்கள் இருக்கிறார்கள். நாங்க குழுவாக வருவோம்.

கிறிஸ்தவ போதகர்: உங்களிடம் பேசியதிலே ரொம்ப மகிழ்ச்சி. இப்போது தான் இஸ்லாம் பற்றிய ஒரு மிகப்பெரிய பிக்சர் கிடைச்சுது. இனி தான் என் தனிப்பட்ட பயணத்தை நான் தொடரனும். எனக்கும் தனிப்பட்ட விதத்தில் இஸ்லாம் பற்றி அறியணும் என்ற ஆர்வம் வந்திருக்கு. உங்களை நான் அடுத்த வாரம் சந்திக்கிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நாம் விடைபெறுவதற்கு முன்பு ஒரு சின்ன ஜெபத்தை செய்வோமா?

உமர்: கண்டிப்பாக செய்வோம்.

[இருவரும் சில நிமிடங்கள் ஜெபித்து விட்டு, விடைப்பெற்றுக்கொண்டு சென்றார்கள்.]

இக்கட்டுரையின் அடுத்த பாகத்தில் ..."அந்த போதகரின் சபையில் ஒரு கூடுகை நடத்தப்படுகிறது.. அதில் விசுவாசிகள் கேட்கும் சில அடைப்படை கேள்விகளுக்கு பதில்கள் கொடுக்கப்படுகிறது"....

கர்த்தருக்கு சித்தமானால், அந்த கூடுகையில் என் நண்பர்களோடு உங்களை சந்திக்கிறேன்...

குர்‍ஆன் பற்றிய இதர தமிழ் கட்டுரைகள்:

1) வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்

2) ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?!

3) குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள்

4) குர்‍ஆன் பாதுகாக்கப்பட்டதா?

5) பல விதமான அரபி குர்‍ஆன்கள் (THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR'AN)

6) ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌

7) விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?

8) இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்

9) அரபி குர்‍ஆனின் தாறுமாறான மேற்கோள்கள்?

சமர்கண்ட் மூல குர்‍ஆன் (MSSவுடன்) இன்றைய குர்‍ஆன் (1924 எகிப்திய வெளியீடு) ஒப்பீடு

10) பின் இணைப்பு A - பாகம் 1 (Appendix A1)

11) பின் இணைப்பு A - பாகம் 2 (Appendix A2)

12) பின் இணைப்பு A - பாகம் 3 (Appendix A3)

13) பின் இணைப்பு A - பாகம் 4 (Appendix A4)

36 கருத்துகள்:

Mistnaya சொன்னது…

உரையாடல் தொடர்கிறது:

கிறிஸ்தவ போதகர்: இவ்வளவு எல்லாம் பேசும் நீங்கள் இது வரை முஸ்லிம்கள் விடுத்த நேரடி விவாத அழைப்பை ஏற்றுக்கொள்ள வில்லை என்றும், அதற்கான அறிவு உங்களுக்கு கிடையாது என்று நீங்களே ஒத்து கொண்டதாகவும் கேள்விப்பட்டேனே, அப்படி இருக்கையில் இஸ்லாமை பற்றி நீங்கள் எப்படி பயிற்சி வகுப்பு எடுப்பீர்கள்?

உமர்:இப்படி எல்லாம் குண்டக்க மண்டக்க கேள்வி கேட்க கூடாது, அப்புறம் நான் பிசின்னு சொல்லிட்டு 2,3 மாசம் தலை மறைவாயிடுவேன்.

கிறிஸ்தவ போதகர்:சரி சரி நோ டென்ஷன், அதே போல உங்களுடன் எழுத்து விவாதத்தில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்கள் பைபிளுடைய கிண்டி கிளறி எடுப்பதாகவும் அதை பற்றி நீங்கள் வாயே திறப்பதில்லை என்றும், ஆனால் ரவுண்ட் கட்டி அடிப்பேன், சதுரம் கட்டி அடிப்பேன் என்று வெறும் டகால்ட்டி உதார் மட்டும் காட்றதாகவும் கேள்வி பட்டேனே.

உமர்:நான் சொல்றத மட்டும்தான் கேட்கணும் எதிர் கேள்வி கேட்க கூடாது புரியுதா? யோவ் பாஸ்டரு எனக்கு தெரிஞ்சாதானே பதில் சொல்ல முடியும், நீயும் பாஸ்டர் தானே முடிஞ்சா முயற்சி பண்ணி பாரேன், முஸ்லிம்கள் பைபிளை பற்றி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லேன்.

கிறிஸ்தவ போதகர்:
அட நீங்க வேற, நானே ஏதோ பொழப்பை நடத்திக்கிட்டு இருக்கேன், என்னை போயி பைபிளை பத்தி கேள்விக்கு பதில் கொடுன்னு வேலைக்கு ஆகாத மேட்ட்ரைஎல்லாம் சொல்லிக்கிட்டு,
இதெல்லாம் எங்களுடைய நம்பிக்கை சொல்லி தப்பிசிக்க வேண்டியதுதானே, கும்பகோனத்தில பாக்கலியா?

உமர்: ஆமாம்,ஆமாம் நானும் ஒன்னும் கண்டுக்கிறது இல்லை, இஸ்லாமை பத்தி என்னால முடிஞ்ச பொய், புரட்டுகளை மட்டும் காப்பி அடிச்சு இன்டர் நெட்டுலே வெளியிட்டுகிட்டே இருப்பேன். வேறு என்னதான் செய்ய முடியும் என்னாலே.

கிறிஸ்தவ போதகர்: இஸ்லாமிய மூல நூல்களே நமக்கு இஸ்லாம் பற்றிச் சொல்லித் தரும் போது, நாங்கள் ஏன் உங்கள் கட்டுரைகளை படிக்கவேண்டும்?

உமர்:அப்பதானே நான் என்னுடைய கற்பனையையும் கை சரக்கையும் சேர்த்து கலந்து விட முடியும். சரி சரி வா ரொம்ப கேள்வி கேட்டுட்டே, உன் செலவுல ரெண்டு பெரும் டீ சாப்ட்டு வரலாம் வா.

Mistnaya சொன்னது…

கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1 (போதகரோடு உமர் உரையாடல்)

உரையாடல் தொடர்கிறது:

கிறிஸ்தவ போதகர்: இவ்வளவு எல்லாம் பேசும் நீங்கள் இது வரை முஸ்லிம்கள் விடுத்த நேரடி விவாத அழைப்பை ஏற்றுக்கொள்ள வில்லை என்றும், அதற்கான அறிவு உங்களுக்கு கிடையாது என்று நீங்களே ஒத்து கொண்டதாகவும் கேள்விப்பட்டேனே, அப்படி இருக்கையில் இஸ்லாமை பற்றி நீங்கள் எப்படி பயிற்சி வகுப்பு எடுப்பீர்கள்?

உமர்:இப்படி எல்லாம் குண்டக்க மண்டக்க கேள்வி கேட்க கூடாது, அப்புறம் நான் பிசின்னு சொல்லிட்டு 2,3 மாசம் தலை மறைவாயிடுவேன்.

கிறிஸ்தவ போதகர்:சரி சரி நோ டென்ஷன், அதே போல உங்களுடன் எழுத்து விவாதத்தில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்கள் பைபிளுடைய கிண்டி கிளறி எடுப்பதாகவும் அதை பற்றி நீங்கள் வாயே திறப்பதில்லை என்றும், ஆனால் ரவுண்ட் கட்டி அடிப்பேன், சதுரம் கட்டி அடிப்பேன் என்று வெறும் டகால்ட்டி உதார் மட்டும் காட்றதாகவும் கேள்வி பட்டேனே.

உமர்:நான் சொல்றத மட்டும்தான் கேட்கணும் எதிர் கேள்வி கேட்க கூடாது புரியுதா? யோவ் பாஸ்டரு எனக்கு தெரிஞ்சாதானே பதில் சொல்ல முடியும், நீயும் பாஸ்டர் தானே முடிஞ்சா முயற்சி பண்ணி பாரேன், முஸ்லிம்கள் பைபிளை பற்றி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லேன்.

கிறிஸ்தவ போதகர்:அட நீங்க வேற, நானே ஏதோ பொழப்பை நடத்திக்கிட்டு இருக்கேன், என்னை போயி பைபிளை பத்தி கேள்விக்கு பதில் கொடுன்னு வேலைக்கு ஆகாத மேட்ட்ரைஎல்லாம் சொல்லிக்கிட்டு, இதெல்லாம் எங்களுடைய நம்பிக்கை சொல்லி தப்பிசிக்க வேண்டியதுதானே, கும்பகோனத்தில பாக்கலியா?

உமர்: ஆமாம்,ஆமாம் நானும் ஒன்னும் கண்டுக்கிறது இல்லை, இஸ்லாமை பத்தி என்னால முடிஞ்ச பொய், புரட்டுகளை மட்டும் காப்பி அடிச்சு இன்டர் நெட்டுலே வெளியிட்டுகிட்டே இருப்பேன். வேறு என்னதான் செய்ய முடியும் என்னாலே.

கிறிஸ்தவ போதகர்: இஸ்லாமிய மூல நூல்களே நமக்கு இஸ்லாம் பற்றிச் சொல்லித் தரும் போது, நாங்கள் ஏன் உங்கள் கட்டுரைகளை படிக்கவேண்டும்?

உமர்:அப்பதானே நான் என்னுடைய கற்பனையையும் கை சரக்கையும் சேர்த்து கலந்து விட முடியும். சரி சரி வா ரொம்ப கேள்வி கேட்டுட்டே, உன் செலவுல ரெண்டு பெரும் டீ சாப்ட்டு வரலாம் வா.

Mist

Isa Koran சொன்னது…

அன்பான மிஸ்ட்நயா அவர்களுக்கு,

என்னுடைய "கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1" என்ற கட்டுரைக்கு நீங்கள் கொடுத்த பின்னூட்டத்தைக் கண்டேன். மிகவும் நகைச்சுவையாகவும், நக்கலாகவும் எழுதியுள்ளீர்கள். இந்த உரையாடல் கட்டுரையில் நான் முன் வைத்த விவரங்கள் உண்மையா இல்லையா என்று ஒரு நாகரீகமான முறையில் அலசி இஸ்லாமுக்கு நல்லபெயர் கொண்டு வருவதை விட்டுவிட்டு, சுயமாக எழுதியுள்ளீர்கள்.

சிறப்பு அனுமதி தேவை:


உங்களின் இந்த பின்னூட்டத்தை அனுமதித்து என் கட்டுரையில் பின்னூட்டமாக பதிக்க உங்களின் "அனுமதி" எனக்கு வேண்டும்.

ஏனென்றால், இந்த பின்னூட்டத்தை நான் அனுமதித்து பதித்தால், நானும் "முஹம்மதுவோடு உமரின் உரையாடல்" என்ற தலைப்பில் தொடர் கேள்வி பதில் உரையாடலை பதிக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். அதாவது, உங்கள் பின்னூட்டத்தில் இருந்தே அதே நகைச்சுவை மற்றும் நக்கல் என்னுடைய இந்த புதிய உரையாடல் கட்டுரையிலும் இடம் பெறும், இன்னும் அதிகமாகவும் இருக்கும். முஹம்மதுவின் குழந்தை பருவம் முதல், மரண படுக்கை வரை எல்லா விவரங்கள் பற்றியும் அந்த உரையாடலில் நகைச்சுவையோடு இடம் பெறும். இஸ்லாமியரல்லாத எந்த ஒரு வாசகர் அந்த உரையாடலை படித்தால், முஹம்மது பற்றிய உண்மைகளை நகைச்சுவையோடு தெரிந்துக்கொள்வார். ஆனால், இஸ்லாமியர்களுக்கு மட்டும் கண்ணீரல்ல, இரத்தக்கண்ணீர் வடியும்.

எனவே, இப்போது எனக்கு கீழ்கண்ட விவரங்களில் ஏதாவது ஒன்றை தெரிந்தெடுத்து பின்னூட்டமிடுங்கள்.

தெரிவு 1) "மிஸ்ட்நயா என்ற நான் என் பின்னூட்டத்தை வெளியிடும் படி உங்களிடம் (உமரிடம்) கேட்டுக்கொள்கிறேன், அதே நேரத்தில் நீங்கள் சொன்ன அந்த புதிய "முஹம்மதுவோடு உமர் உரையாடல்" என்ற கட்டுரைகளையும் பதியுங்கள், இதனால் எனக்கு பிரச்சனை இல்லை"

(அல்லது)


தெரிவு 2) "மிஸ்ட்நயா என்ற நான், என் பின்னூட்டத்தை வெளியிடவேண்டாம் என்று உமரிடம் கேட்டுக்கொள்கிறேன்". இதன் மூலமாக உங்கள் அந்த புதிய நகைச்சுவை/நக்கல் கட்டுரை வெளியிடப்படாது என்று நம்புகிறேன்.



மிஸ்ட்நயா அவர்களே, மேற்கண்ட எதனை நான் செய்யவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? முதல் தெரிவை நீங்கள் தெரிந்தெடுத்தால், உங்களின் பின்னூட்டம் வெளியிடப்படும், ஆனால், அதன் பிறகு நான் சொன்ன "முஹம்மதுவோடு உமரின் உரையாடல் கட்டுரைகளும் வெளியிடப்படும். இரண்டாவது தெரிவை நீங்கள் தெரிந்தெடுத்தால், நீங்கள் அனுப்பிய பின்னூட்டத்தை நான் வெளியிடமாட்டேன் (இது, இந்த ஒரு பின்னூட்டத்துக்கு மட்டுமே சம்மந்தப்பட்டது).

நான் உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன். மேற்கண்ட இரண்டு தெரிவுகளில் ஏதாவது ஒன்றை கண்டிப்பாக நீங்கள் தெரிந்தெடுத்து, எனக்கு பின்னூட்டமிடவேண்டும். இதற்கு பதில் அளிக்காமல் வேறு கட்டுரைக்கு நீங்கள் பின்னூட்டமிட்டால் அதனை நான் இது முதற்கொண்டு அனுமதிக்கவே மாட்டேன். ஏனென்றால், உங்களின் மேற்கண்ட நக்கல் பின்னூட்டம் பற்றி முதலாவது முடிவு செய்யவேண்டும்.

இப்போது முடிவு உங்கள் கையில், தெரிவு ஒன்றா அல்லது தெரிவு இரண்டா? முடிவு செய்து எனக்கு பின்னூட்டமிடுங்கள். இது தவிர வேறு எந்த ஒரு பின்னூட்டத்தையும் நான் அனுமதிக்கப்போவதில்லை.

உங்கள் முடிவை நீங்கள் சொல்லிவிட்டால், அதன் படி நான் செய்துவிடுவேன், அதன் பிறகு மற்ற கட்டுரைகளுக்கு நீங்கள் இடும் கட்டுரை சம்மந்தப்பட்ட பின்னூட்டங்களை நான் அனுமதிப்பேன்.

ஆக, " தெரிவு ஒன்றை" தெரிந்தெடுத்து, உங்கள் பின்னூட்டத்தை வாசகர்கள் படிக்க உதவப்போகிறீர்களா? அல்லது "தெரிவு இரண்டை" தெரிந்தெடுத்து, உங்கள் பின்னூட்டத்தை வாசகர்கள் படிக்காமல் இருக்க செய்யப்போகிறீர்களா?

உங்களிடமிருந்து எனக்கு தேவை கீழ்கண்ட இரண்டு வரிகளில் ஏதாவது ஒன்று:

1) "என் பின்னூட்டத்தை பதியுங்கள்"

அல்லது

2) "என் பின்னூட்டத்தை பதிக்காதீர்கள்"

பிளீஸ் சீக்கிரமாக உங்கள் பதிலை பின்னூட்டமிடவும்.

Mistnaya சொன்னது…

நான் பின்னூட்டமிட்டு இதுவரை ஒரு வாரத்திற்கு மேலாகியும் நீர் பிரசுரிக்காமல் இருப்பதே ஒரு வகையில் எனக்கு
கிடைத்த வெற்றிதான் .

உமரண்ணா இதுவரை என்னை கேட்டா நீர் கட்டுரை வடித்தீர்? முதலில் கூத்து கட்டி விளக்க போறேன் என்று கிளம்பினீர்கள், பிறகு படம் வரைந்து கதை சொல்ல போறேன் என்று உளறினீர்கள், இப்பொழுது உரையாடலில் விளக்க போவதுதான் மிச்சம்.

உமரண்ணா கொஞ்சமாவது உப்பு போட்டு சாப்பிடுவதாக இருந்தால் ஜியா-அப்சர் எடுத்து வைத்துள்ள பைபிள் குறைகளுக்கு உம்முடைய அறிவை கொண்டு பதில் இருந்தால் கொடு, வேறு எங்கிருந்தும் காப்பி அடிக்க கூடாது. இஸ்லாமில் இருந்து கிறித்துவனாக மாறிய நீர் பைபிளை புரிந்து கொள்ளாமலா மதம் மாறினீர்கள்? எனவே நீங்கள் புரிந்து கொண்டதை விளக்க வேண்டியதுதானே, இதையும் நீர் கண்டு கொள்ளாமல் இருந்தால் நீர் சத்தியத்திற்காக மதம் மாறவில்லை ஒன்று பணத்திற்காக அல்லது (F)பிகருக்காக, இல்லையென்றால் நீர் மதமெல்லாம் மாறவில்லை, உம்முடைய வழக்கமான பொய்தான் இது என்று எடுத்து கொள்ள வேண்டி வரும்.

உமரண்ணா என்னை நாகரீகமான முறையில் அலசி ஆராய சொல்லும் நீர் உம்முடைய எழுத்துக்களில் என்றாவது இதை பின் பற்றியதுண்டா? இப்படி ஊருக்கு மட்டும் உபதேசம் செய்வது நாகரீகமான செயலா?

இப்பொழுது நான் பிரீயாக உள்ளேன் isaakoran- க்கு பதில் தர போறேன் என்று தம் சொந்த கைகளால் எழுதிய நீர் அதை காப்பாற்றினீரா?

உமரண்ணா உம்முடைய பேடி தனத்தை பற்றி தமிழ் முஸ்லிம்கள் மட்டுமல்ல இப்பொழுது தமிழ் கிறிஸ்தவர்களுக்கே தெரிய ஆரம்பித்துள்ளது அதனால் நீர் என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்லக்கூடாது அது உம்முடைய இஷ்டம். ஆனால் எந்த நேரமும் நீர் மண்டையை போடலாம் அதனால் இறைவனுக்கு பயந்து எதையும் எழுது, நிரந்தர நரகத்துக்கு போவதற்கு அடம் பிடிக்க வேண்டாம். இயேசு தன்னை இரட்சகராக ஏற்றுகொண்டால்தான் சொர்க்கம் என்று எங்கேயும் நீங்கள் கையாடல் செய்து வைத்துள்ள பைபிளில் சொல்லவில்லை அதனால் ஒரே இறைவனுக்கு பயப்படு.

Al Quran:
அதுவே அவர்களுடைய கூலியாகும் - (அது தான்) நரகம் - ஏனென்றால் அவர்கள் (உண்மையை) நிராகரித்தார்கள்; என்னுடைய வசனங்களையும், என் தூதர்களையும் ஏளனமாகவே எடுத்துக் கொண்டார்கள். 18:106

அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்.89:23

Mist

Jawid சொன்னது…

உமர் அண்ணா, அன்பை போதிக்கிறோம் என்று பொய் சொல்லிக்கிட்டு தொடர்ந்து தீவிரவாதத்தை/வன்முறையை துண்டுறது உங்க வழக்கமா போச்சு. உங்க கட்டுரைக்கு யாராவது பின்னூட்டம் தந்தா, அதை வெளியிடுங்க, மறுப்பு தாங்க, இல்லை பைபிள் கேள்விக்கு வாய் மூடி இருக்குற மாறி சும்மா இருங்க, அதுக்கு பதிலா முகமது நபி பத்தி கிண்டல் செய்து எழுத்த போவதாக மிரடுரீங்க...

என்னமோ எல்லா பின்னோடதையும் வெளியிடுற உத்தமன் மாறி பேசுறிங்க, நீங்க வெளியிடாம விடத்தாலா உங்களுக்கு எதிர ஒரு ப்ளாக் http://isaakoran.blogspot.com/ பதில் சொல்லிட்டு இருக்கு மறந்துடிங்களா? நீங்க ஒழுங்கா வெளியிட்டு இருந்தா அது ஏன் உருவாகி இருக்க பொது?

என்னமோ வெறும் உண்மையை மட்டும் தான் இதுவரை எழுதுன மாறி சொல்றிங்க, நீங்க எழுதுன கட்டுரைகள்ளா நீங்க சொல்ற கருத்தை விவரிக்கிற தெளிவான ஆதாரம் எதாவது இதுவரை நீங்க வச்சு இருக்கீங்களா? கொஞ்சம் பொய் பாருங்க. பைபிள் கேள்விக்காவது பதில் சொல்லி இருக்கீங்களா? தயவு செஞ்சு பதில் சொல்லுங்க...

தெளிவான ஆதாரத்தை வச்சு எழுதுங்க, நீங்க சொல்ற கருத்தை அந்த ஆதாரம் சொல்ல வேண்டும், உங்க மனசுல இருக்குற விரசத்தை எல்லாம் நாங்க நம்ப வேண்டும்னு சொல்ல கூடாது...

சும்மா எங்கயாவது எடுத்துட்டு இதுதான் ஆதாரம்ன்னு சொல்ல கூடாது, இஸ்லாம் மார்கமாக ஏத்து கொல்ற நூல் ஆதாரம் தாங்க, இல்லை அதே மாறி பைபிள் இல்லாமா வேற ஆதாரத்தை நீங்க ஏத்து கொங்க. பதில் தாங்க, ஈஸாகொரன் கேக்குற மாறி கையெழுத்து போட்டு ஒப்பந்தத்தை வெளியிடுங்க, அப்பறம் கிண்டல் நக்கல் எல்லாம் செய்யலாம்.

பைபிள் ஆதாரத்தை தரேன் ஆதையும் சேர்த்து கிண்டல் நக்கல் செய்ய தயாரா?

அப்படி mist அண்ணா என்னதான் சொன்னாங்க? கண்டிப்பா நீங்க இதுவரை செஞ்சதை வீடா கேவலமான எதையும் செஞ்சு இருக்க மாடங்க என்று நம்புறேன்...

-ஜாவித்

Jawid சொன்னது…

உமர் அண்ணா, அன்பை போதிக்கிறோம் என்று பொய் சொல்லிக்கிட்டு தொடர்ந்து தீவிரவாதத்தை/வன்முறையை துண்டுறது உங்க வழக்கமா போச்சு. உங்க கட்டுரைக்கு யாராவது பின்னூட்டம் தந்தா, அதை வெளியிடுங்க, மறுப்பு தாங்க, இல்லை பைபிள் கேள்விக்கு வாய் மூடி இருக்குற மாறி சும்மா இருங்க, அதுக்கு பதிலா முகமது நபி பத்தி கிண்டல் செய்து எழுத்த போவதாக மிரடுரீங்க...

என்னமோ எல்லா பின்னோடதையும் வெளியிடுற உத்தமன் மாறி பேசுறிங்க, நீங்க வெளியிடாம விடத்தாலா உங்களுக்கு எதிர ஒரு ப்ளாக் http://isaakoran.blogspot.com/ பதில் சொல்லிட்டு இருக்கு மறந்துடிங்களா? நீங்க ஒழுங்கா வெளியிட்டு இருந்தா அது ஏன் உருவாகி இருக்க பொது?

என்னமோ வெறும் உண்மையை மட்டும் தான் இதுவரை எழுதுன மாறி சொல்றிங்க, நீங்க எழுதுன கட்டுரைகள்ளா நீங்க சொல்ற கருத்தை விவரிக்கிற தெளிவான ஆதாரம் எதாவது இதுவரை நீங்க வச்சு இருக்கீங்களா? கொஞ்சம் பொய் பாருங்க. பைபிள் கேள்விக்காவது பதில் சொல்லி இருக்கீங்களா? தயவு செஞ்சு பதில் சொல்லுங்க...

தெளிவான ஆதாரத்தை வச்சு எழுதுங்க, நீங்க சொல்ற கருத்தை அந்த ஆதாரம் சொல்ல வேண்டும், உங்க மனசுல இருக்குற விரசத்தை எல்லாம் நாங்க நம்ப வேண்டும்னு சொல்ல கூடாது...

சும்மா எங்கயாவது எடுத்துட்டு இதுதான் ஆதாரம்ன்னு சொல்ல கூடாது, இஸ்லாம் மார்கமாக ஏத்து கொல்ற நூல் ஆதாரம் தாங்க, இல்லை அதே மாறி பைபிள் இல்லாமா வேற ஆதாரத்தை நீங்க ஏத்து கொங்க. பதில் தாங்க, ஈஸாகொரன் கேக்குற மாறி கையெழுத்து போட்டு ஒப்பந்தத்தை வெளியிடுங்க, அப்பறம் கிண்டல் நக்கல் எல்லாம் செய்யலாம்.

பைபிள் ஆதாரத்தை தரேன் ஆதையும் சேர்த்து கிண்டல் நக்கல் செய்ய தயாரா?

அப்படி mist அண்ணா என்னதான் சொன்னாங்க? கண்டிப்பா நீங்க இதுவரை செஞ்சதை வீடா கேவலமான எதையும் செஞ்சு இருக்க மாடங்க என்று நம்புறேன்...

-ஜாவித்

Archies சொன்னது…

ஈசா குர் ஆன் தளத்தின் புதிய பார்வையாளன் Archies.

Isa Koran கூறியது...

//இஸ்லாமியரல்லாத எந்த ஒரு வாசகர் அந்த உரையாடலை படித்தால், முஹம்மது பற்றிய உண்மைகளை நகைச்சுவையோடு தெரிந்துக்கொள்வார்.//

ஈசா குர் ஆன் அவர்களே!

நீங்கள் கஷ்டப்பட்டு நகைச்சுவையாக எழுத வேண்டாம். ஏற்கனவே http://pagadu.blogspot.com ல ரெடிமேடாகவே இருக்கிறது.

Jawid கூறியது...

//உமர் அண்ணா, அன்பை போதிக்கிறோம் என்று பொய் சொல்லிக்கிட்டு தொடர்ந்து தீவிரவாதத்தை/வன்முறையை துண்டுறது உங்க வழக்கமா போச்சு.//

ஜாவித் அவர்களே! கிறிஸ்த்தவதில் யாருமே இஸ்லாமைப் பற்றியோ குரானைப் பற்றியோ குறை கூறாமல்தான் இருந்தார்கள்.

ஆரம்பித்து வைத்தது நீங்கள் தான். பைபிளில் ஆபாசம், பைபிளில் முரண்பாடுகள் என்று.

நீங்களே ஆரம்பித்து விட்டு இப்போ தீவிரவாதம்/வன்முறைன்னா என்ன அர்த்தம்.
ஈசா குரான் அனுமதித்தால் இன்னும் தொடரும்.

Jawid சொன்னது…

ஆர்சீஸ் அண்ணா, பைபிள் ஆபாசம், பைபிள் முரண்பாடு என்று சொல்றது தெளிவான பைபிள் வசனத்தை அறிவிச்சுட்டு சொல்றது, அதை மறுக்க நினைச்சா தெளிவான பைபிள் வசன ஆதாரத்தை வச்சு தானே மறுக்கனும், இதுக்கு பதிலா உங்கள்டா விட்ட கேள்விக்கு பதிலே சொல்லமா அதுக்கு பதிலா இஸ்லாமுக்கு எதிரா ஆதாரம் ஒன்னு சொல்ல நீங்க ஒன்னு சொல்லி அதை நம்பா சொல்றது எந்த விதத்துல நியாயம்??? இது தான் கிறிஸ்தவம் போதிக்கிற முறையா??? இல்லை ஏசு இதை தான் உங்களுக்கு சொல்லி குடுதாரா??

இஸ்லாம்ல குறை இருக்குன்னு சொல்லணும்னா அதை இஸ்லாமியர்கள் மார்கமாக கொண்டு இருக்குற தெளிவான ஆதாரத்தை வச்சு எழுதுங்க, எழுத்து விவாத அழைப்புகளை ஏத்துகொங்க, கையெழுத்து போட்டு வெளியிடுங்க, அதை வுட்டுட்டு எதோ ஒரு போலியான ஆதாரத்தை எடுத்து வச்சுக்கிட்டு (அப்படினா பைபிள் இல்லாத வேறு ஆதாரத்தை ஏத்துக்க நீங்க ஒத்துகொங்க) இப்படி செய்வேன் அப்படி செய்வேன்னு பயம் முறுத்த பாக்காதிங்க, இது தான் தீவிரவாதத்தை/வன்முறையை துண்டுறது நான் சொன்னது உங்களுக்கு புரியலையா? ஒருவேளை இப்படி செய்றத அன்பை போதிகிராதுன்னு நீங்க சொல்றிங்களா??

ஆர்சீஸ் அண்ணா, ஏன் நீங்கள் பைபிள் விபசாரத்துக்கு, பைபிள் முரண்பாடு கேள்விகளுக்கு பைபிள் வசனத்தை வச்சு பதில் எழுத்த கூடாது??? ஈசா குரான் அனுமதிக்க மாடாங்களா??? பெரும் பாலும் எங்க கருத்தை தான் அவங்க வெளியிட மடங்கன்னு நினைச்சேன், உங்க கருத்தையுமா???

-ஜாவித்

Jawid சொன்னது…

உமர் அண்ணா, உங்க கட்டுரைகளை பட்டியல் போட்டதுக்கு ரொம்ப நன்றி...

இதுல எத்தனை கட்டுரைல இஸ்லாமியர்கள் மார்கமாக கொண்டுள்ள தெளிவான ஆதாரத்தை வச்சு (உங்க சொந்த கருத்த நம்பா சொல்லமா) கட்டுரை எழுதுநிங்கனு சொல்ல முடியுமா? அந்த தலைப்புகளை பட்டியல் தர முடியுமா?

இதுல எத்தனை கட்டுரைக்கு இதுவரை இஸ்லாமியர்கள் பதில் எழுதி இருக்காங்க, அதுக்கு நீங்க என்ன மறுப்பு எழுதிநிங்கன்னு பட்டியல் வெளியிட முடியுமா?

இதுல எத்தனை நீங்க சொந்தம யோசிச்சு ஆராய்ந்து எழுதுனதுன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?

இதுல எத்தனை கட்டுரை உங்கள் நம்பிக்கையான பைபிள் அதுமேல இருக்கிற விபசாரம், வன்முறை, முரண்பாடு, போளிதுவம் போன்றவற்றை தெளிவான ஆதாரம் வச்சு விளக்குறதா இருக்குன்னு கொஞ்சம் பட்டியல் வெளியிட முடியுமா?

இதுல எத்தனை கட்டுரை உங்கள் கிறிஸ்தவ நண்பர்களே எதிர் கேள்வி கேட்டாங்கன்னு கொஞ்சம் பட்டியல் வெளியிட முடியுமா?

இப்படி ஒரு பட்டியலை நீங்க விரைவில் வெளியிடுன்விங்கனு நம்புறேன்... செயவிங்களா???

-ஜாவித்

Jawid சொன்னது…

உமர் அண்ணா, உங்க கட்டுரைகளை பட்டியல் போட்டதுக்கு ரொம்ப நன்றி...

இதுல எத்தனை கட்டுரைல இஸ்லாமியர்கள் மார்கமாக கொண்டுள்ள தெளிவான ஆதாரத்தை வச்சு (உங்க சொந்த கருத்த நம்பா சொல்லமா) கட்டுரை எழுதுநிங்கனு சொல்ல முடியுமா? அந்த தலைப்புகளை பட்டியல் தர முடியுமா?

இதுல எத்தனை கட்டுரைக்கு இதுவரை இஸ்லாமியர்கள் பதில் எழுதி இருக்காங்க, அதுக்கு நீங்க என்ன மறுப்பு எழுதிநிங்கன்னு பட்டியல் வெளியிட முடியுமா?

இதுல எத்தனை நீங்க சொந்தம யோசிச்சு ஆராய்ந்து எழுதுனதுன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?

இதுல எத்தனை கட்டுரை உங்கள் நம்பிக்கையான பைபிள் அதுமேல இருக்கிற விபசாரம், வன்முறை, முரண்பாடு, போளிதுவம் போன்றவற்றை தெளிவான ஆதாரம் வச்சு விளக்குறதா இருக்குன்னு கொஞ்சம் பட்டியல் வெளியிட முடியுமா?

இதுல எத்தனை கட்டுரை உங்கள் கிறிஸ்தவ நண்பர்களே எதிர் கேள்வி கேட்டாங்கன்னு கொஞ்சம் பட்டியல் வெளியிட முடியுமா?

இப்படி ஒரு பட்டியலை நீங்க விரைவில் வெளியிடுன்விங்கனு நம்புறேன்... செயவிங்களா???

-ஜாவித்

Archies சொன்னது…

ஜாவித் அவர்களே! உங்கள் இஸ்லாமிய புத்திய அப்படியே காட்டிட்டீங்களே. இது நியாயமா? ஆமா, உங்களுக்கு நியாயம்தான். ஏன்னா நீங்க படித்தது அப்படி. அப்படி என்னத்த படிச்சேன்னு கேட்கிறீங்களா?
இஸ்லாமியக்கல்விதான்.

தமிழையும், ஆங்கிலத்தையும் ஒழுங்கா படிச்சாலாவது படிக்கிறது என்னான்னு புரியும். அதாவது இடம் சுட்டிப்பொருள் விளக்கம் தருக. மற்றும் ஆங்கிலத்தில் Explain with reference to the context.

அதாவது நான் கேட்டது " நீங்களே ஆரம்பித்து விட்டு இப்போ தீவிரவாதம்/வன்முறைன்னா என்ன அர்த்தம்?." இதற்குப் பதில் சொல்லாம சங்கி மங்கி மந்தி மாதிரி வேற மேட்டருக்கு தாவுறீங்களே. நான் திருப்பியும் அதே கேள்வியைக் கேட்கிறேன்.

முதலில் தீவிரவாதத்தையும்/வன்முறையையும் தூண்டிவிட்டது யார்?
சரித்திர சம்பவத்தோடு இடம் சுட்டி பொருள் விளக்கம் தருக.

இதற்கு முடிவு கண்டபின் அடுத்த கேள்விக்கு செல்லலாம்.


மேலும் உங்களுக்கு ஓர் ஆலோசனை தருகிறேன். நீங்கள் முஃம்மீனாக இருந்தால் இஸ்லாமியரல்லாதவர்களை அண்ணா என்றோ, தம்பி என்றோ நண்பரே என்றோ கூறாதீர்கள். ஏனென்றால் அவர்கள் காஃபிர்கள். காபிர்கள் நிச்சயமாக இஸ்லாமியர்களுக்கு நண்பர்களாக முடியாது. நீங்கள் குரானை ஒழுங்காக படித்தால் இப்படியெல்லாம் பிறரை அண்ணா, தம்பி என்று கூறமாட்டீர்கள்.

இதிலிருந்து தெரிகிறது குரானை நீங்கள் சரியாக படிக்கவில்லையென்று.

Mistnaya சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
rameez சொன்னது…

உமர் அண்ணா,

முதலிலிருந்து என்றால் கி.பி முதலாம் நூற்றாண்டில் இருந்து ஆரம்பிக்கலாமா?

இதோ பைபிள் அறிவிக்கும் தீவிரவாதங்கள்

Isa Koran சொன்னது…

சகோதரர் மிஸ்ட் அவர்களின் பதிவை நான் நீக்கியுள்ளேன். ஏனென்றால், இந்த கட்டுரையின் முதல் பின்னூட்டத்தில் நான் கேட்ட இரண்டு பதில்களில் ஏதாவது ஒரு பதிலை மிஸ்ட் அவர்கள் முதலில் கூறவேண்டும். அத‌ன் பிற‌கு அவ‌ர‌து இத‌ர‌ க‌ட்டுரைக‌ளின் பின்னூட்ட‌த்தை ச‌ரி பார்த்து ப‌திக்க‌ அனும‌திய‌ளிப்பேன்.

என்னுடைய‌ முத‌ல் பின்னூட்ட‌த்தில் நான் அவ‌ரிட‌ம் கேட்ட‌ விவ‌ர‌ங்க‌ள்:

//நான் உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன். மேற்கண்ட இரண்டு தெரிவுகளில் ஏதாவது ஒன்றை கண்டிப்பாக நீங்கள் தெரிந்தெடுத்து, எனக்கு பின்னூட்டமிடவேண்டும். இதற்கு பதில் அளிக்காமல் வேறு கட்டுரைக்கு நீங்கள் பின்னூட்டமிட்டால் அதனை நான் இது முதற்கொண்டு அனுமதிக்கவே மாட்டேன். ஏனென்றால், உங்களின் மேற்கண்ட நக்கல் பின்னூட்டம் பற்றி முதலாவது முடிவு செய்யவேண்டும்.

இப்போது முடிவு உங்கள் கையில், தெரிவு ஒன்றா அல்லது தெரிவு இரண்டா? முடிவு செய்து எனக்கு பின்னூட்டமிடுங்கள். இது தவிர வேறு எந்த ஒரு பின்னூட்டத்தையும் நான் அனுமதிக்கப்போவதில்லை.

....

உங்களிடமிருந்து எனக்கு தேவை கீழ்கண்ட இரண்டு வரிகளில் ஏதாவது ஒன்று:

1) "என் பின்னூட்டத்தை பதியுங்கள்"

அல்லது

2) "என் பின்னூட்டத்தை பதிக்காதீர்கள்//

Jawid சொன்னது…

ஆர்சீஸ் அண்ணா, அது எப்படி நான் பின்னூட்டம் தந்தா வெளி வர வார கனகா, மாச கனகா கத்திருகோம், பல நேரங்களில் வெளிவருவதே இல்லா, ஆனா நீங்க, இல்ல உங்க கிறிஸ்தவங்க பின்னூட்டம் தந்தா உடனே உமர் அண்ணா வெளியிடுறாரு? உங்களுக்கு மட்டும் தனி கிரீன் சேனல் வச்சு இருக்கறா?

உமர் அண்ணாவுக்கு பல பதில்கள் தந்துட்டு அப்பறம் தான் நான் கேள்வி கேட்டேன், நான் முதல்லா கேள்வி கேட்டு இருக்கும் பொது அதுக்கு பதில் சொல்லிடு தானே நீங்க என்ன கேள்வி கேக்கணும். அது சரி பதில் தெரிஞ்ச தானே நீங்க சொல்விங்க, இப்ப தெரியுதா நீங்க கிறிஸ்தவ புத்திய காட்டுறது, பைபிள் கேள்வினா வாய் மூடி கொள்றது...

முதலில் தீவிரவாதத்தையும்/வன்முறையையும் தூண்டிவிட்டது யார் என்று கேள்வி கேக்குரிங்க, ஏன் நீங்கள் பைபிள் படிச்சது இல்லையா? அதுக்கு அப்புறம் மத்த கேள்விக்கு போகலாம்னு சொல்றிங்க, ஏன் என் கேள்விக்கு பதில் சொல்றேன்னு சொல்ல மறுக்குரிங்க? உங்கள் ஆர்வத்தை பாராட்ட
எனக்கு தெரிஞ்சு முதல் தற்கொலை படை தாக்குதலை நடத்தியது பைபிள் சாம்சன் (Judges 16:25-30), அப்பறம் அப்பாவி பொது மக்களை கொன்று குவிச்சது மோசேஸ், டேவிட இன்னும் பல ஏசுவின முன்னோர்கள். இவங்க யூதர் என்ற கிறிஸ்தவ வாதத்தை நிங்களும் சொல்லலாம்! இதை செய்ய சொன்னது உங்கள் பைபிள் இறைவன் இல்லையா? இவங்க ஏசு வோட முன்னோர்கள் இல்லையா? அப்பறம் எதற்காக அவங்க புத்தகத்த உங்க பைபிள்லா வச்சு இருக்கீங்க ???

சரி அவங்களா நம்பா மாட்டிங்க, உங்க ஏசுவா நம்புவிங்களா? எதுக்காக அவர் ஏலரையும் கத்தி வாங்கி வச்சுக சொன்னாரு (http://isaakoran.blogspot.com/2011/04/jesus-and-sword.html)? எதுக்காக தன்னை நம்பாதவங்களை கொண்டு வந்து கொன்று போடா சொன்னாரு? எதுக்காக ஒன்னும் அறிய வியாபாரிகளை அடிச்சு தொரதுனறு (http://isaakoran.blogspot.com/2011/04/love-of-jesus.html)? எதுக்காக சீசன் இல்லாத டைம் லா பழம் தராத மரத்தை அளிச்சாரு (http://isaakoran.blogspot.com/2011/04/jesus-cursed-fig-tree.html)? இது தீவிரவாதம் இல்லையா? அன்பை போதிக்கிற முறையா? அதையும் விடுங்க சிலுவை யுத்தம் என்ற பெயரில் லட்ச கனகா முஸ்லிம் அப்பாவிகளை கொன்று போடின்களே அதை மறந்துடின்களா (http://isaakoran.blogspot.com/2011/06/war-on-islam.html)?

அடுத்த மதத்தினரை அண்ணன் தம்பின்னு சொல்ல கூடாதுன்னு எங்க இருந்து படிச்சிங்க? பைபிள் தானே? அது சரி கூட பொறந்தவன் அடுத்த மதத்தை போய்ட சாகடிக்க சொல்ற மதத்தை வச்சு இருக்கிற நீங்க எங்களை வாழ விடுவிங்களா?

Suppose your own full brother, your son, your daughter, your beloved wife, or your closest friend should seduce you secretly and encourage you to go and serve other gods that neither you nor your ancestors have previously known, the gods of the surrounding people (whether near you or far from you, from one end of the earth to the other). You must not give in to him or even listen to him; do not feel sympathy for him or spare him or cover up for him. Instead, you must kill him without fail! Your own hand must be the first to strike him, and then the hands of the whole community. You must stone him to death because he tried to entice you away from the Lord your God, who delivered you from the land of Egypt, that place of slavery.Thus all Israel will hear and be afraid; no longer will they continue to do evil like this among you. (Deuteronomy 13:6 - 11)

இப்ப இதுக்கு பதில் சொல்வின்களா?

-ஜாவித்

Jawid சொன்னது…

ஆர்சீஸ் அண்ணா, அது எப்படி நான் பின்னூட்டம் தந்தா வெளி வர வார கனகா, மாச கனகா கத்திருகோம், பல நேரங்களில் வெளிவருவதே இல்லா, ஆனா நீங்க, இல்ல உங்க கிறிஸ்தவங்க பின்னூட்டம் தந்தா உடனே உமர் அண்ணா வெளியிடுறாரு? உங்களுக்கு மட்டும் தனி கிரீன் சேனல் வச்சு இருக்கறா?

உமர் அண்ணாவுக்கு பல பதில்கள் தந்துட்டு அப்பறம் தான் நான் கேள்வி கேட்டேன், நான் முதல்லா கேள்வி கேட்டு இருக்கும் பொது அதுக்கு பதில் சொல்லிடு தானே நீங்க என்ன கேள்வி கேக்கணும். அது சரி பதில் தெரிஞ்ச தானே நீங்க சொல்விங்க, இப்ப தெரியுதா நீங்க கிறிஸ்தவ புத்திய காட்டுறது, பைபிள் கேள்வினா வாய் மூடி கொள்றது...

முதலில் தீவிரவாதத்தையும்/வன்முறையையும் தூண்டிவிட்டது யார் என்று கேள்வி கேக்குரிங்க, ஏன் நீங்கள் பைபிள் படிச்சது இல்லையா? அதுக்கு அப்புறம் மத்த கேள்விக்கு போகலாம்னு சொல்றிங்க, ஏன் என் கேள்விக்கு பதில் சொல்றேன்னு சொல்ல மறுக்குரிங்க? உங்கள் ஆர்வத்தை பாராட்ட
எனக்கு தெரிஞ்சு முதல் தற்கொலை படை தாக்குதலை நடத்தியது பைபிள் சாம்சன் (Judges 16:25-30), அப்பறம் அப்பாவி பொது மக்களை கொன்று குவிச்சது மோசேஸ், டேவிட இன்னும் பல ஏசுவின முன்னோர்கள். இவங்க யூதர் என்ற கிறிஸ்தவ வாதத்தை நிங்களும் சொல்லலாம்! இதை செய்ய சொன்னது உங்கள் பைபிள் இறைவன் இல்லையா? இவங்க ஏசு வோட முன்னோர்கள் இல்லையா? அப்பறம் எதற்காக அவங்க புத்தகத்த உங்க பைபிள்லா வச்சு இருக்கீங்க ???

சரி அவங்களா நம்பா மாட்டிங்க, உங்க ஏசுவா நம்புவிங்களா? எதுக்காக அவர் ஏலரையும் கத்தி வாங்கி வச்சுக சொன்னாரு (http://isaakoran.blogspot.com/2011/04/jesus-and-sword.html)? எதுக்காக தன்னை நம்பாதவங்களை கொண்டு வந்து கொன்று போடா சொன்னாரு? எதுக்காக ஒன்னும் அறிய வியாபாரிகளை அடிச்சு தொரதுனறு (http://isaakoran.blogspot.com/2011/04/love-of-jesus.html)? எதுக்காக சீசன் இல்லாத டைம் லா பழம் தராத மரத்தை அளிச்சாரு (http://isaakoran.blogspot.com/2011/04/jesus-cursed-fig-tree.html)? இது தீவிரவாதம் இல்லையா? அன்பை போதிக்கிற முறையா? அதையும் விடுங்க சிலுவை யுத்தம் என்ற பெயரில் லட்ச கனகா முஸ்லிம் அப்பாவிகளை கொன்று போடின்களே அதை மறந்துடின்களா (http://isaakoran.blogspot.com/2011/06/war-on-islam.html)?

அடுத்த மதத்தினரை அண்ணன் தம்பின்னு சொல்ல கூடாதுன்னு எங்க இருந்து படிச்சிங்க? பைபிள் தானே? அது சரி கூட பொறந்தவன் அடுத்த மதத்தை போய்ட சாகடிக்க சொல்ற மதத்தை வச்சு இருக்கிற நீங்க எங்களை வாழ விடுவிங்களா?

Suppose your own full brother, your son, your daughter, your beloved wife, or your closest friend should seduce you secretly and encourage you to go and serve other gods that neither you nor your ancestors have previously known, the gods of the surrounding people (whether near you or far from you, from one end of the earth to the other). You must not give in to him or even listen to him; do not feel sympathy for him or spare him or cover up for him. Instead, you must kill him without fail! Your own hand must be the first to strike him, and then the hands of the whole community. You must stone him to death because he tried to entice you away from the Lord your God, who delivered you from the land of Egypt, that place of slavery.Thus all Israel will hear and be afraid; no longer will they continue to do evil like this among you. (Deuteronomy 13:6 - 11)

இப்ப இதுக்கு பதில் சொல்வின்களா?

-ஜாவித்

Archies சொன்னது…

Jawid Said:
//முதலில் தீவிரவாதத்தையும்/வன்முறையையும் தூண்டிவிட்டது யார் என்று கேள்வி கேக்குரிங்க, ஏன் நீங்கள் பைபிள் படிச்சது இல்லையா?//

Archies Said:
ஏன் நீங்க குரானையும், ஹதீஸையும் படிச்சதில்லையா?
ஷரியா யாருடையது?
ஜிஹாத் யாருடையது?
ஜிஸ்யா யாருடையது?
முழுப்பூசணிகாய் சோத்துல…. யப்பா இந்த பழமொழிய கேட்டு கேட்டு சலிச்சுப்போச்சி.

கேள்வி கேட்டா ஏன் பைபிளை முகத்துக்கு முன்னால வச்சி மூஞ்சிய மறைக்கிறீங்க?

இதற்கு ஆதாரம் வேற வேணுமா? இதோ…………

குரான் [8:39] முஃமின்களே! இவர்களுடைய) விஷமங்கள் முற்றிலும் நீங்கி, (அல்லாஹ்வின்) மார்க்கம் உலக முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகும்வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்; ஆனால் அவர்கள் (விஷமங்கள் செய்வதிலிருந்து) விலகிக் கொண்டால் - நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.
குரானில் 164 இடங்கள் ஜிஹாத்தை பற்றி உள்ளன:

002:178-179, 190-191, 193-194, 216-218, 244;
003:121-126, 140-143, 146, 152-158, 165-167,169, 172-173, 195;
004:071-072, 074-077, 084, 089-091, 094-095,100-104;
005:033, 035, 082;
008:001, 005, 007, 009-010, 012, 015-017, 039-048,057-060, 065-075;
009:005, 012-014, 016, 019-020, 024-026, 029,036, 038-039, 041, 044, 052, 073, 081,083,086, 088, 092, 111, 120, 122-123;
016:110;
022:039, 058, 078;
024:053, 055;
025:052;
029:006, 069;
033:015, 018, 020, 023, 025-027, 050;
042:039;
047:004, 020, 035;
048:015-024;
049:015;
059:002, 005-008, 014;
060:009;
061:004, 011- 013;
063:004;
064:014; 066:009; 073:020; 076:008
another evidence:from Al- Bukhari I have won all the wars by terror only. Bukhari:4.52.220

இதுல அண்ணன் தம்பி பாகுபாடே கிடையாது. எல்லா காஃபிரும் அடி வாங்க வேண்டியதுதான்.

இஸ்லாம் உண்மையான மார்க்கம். நீதியின் மார்க்கம், அமைதியான மார்க்கம், சுவனத்தைத் தருகிற மார்க்கம் அப்படீன்னு குரானையும், ஹதீசையும் வச்சு நிரூபியுங்க.
(யப்பா இந்த நாத்தம் புடிச்ச சுவனம் எனக்கு வேண்டாம். ஆபாசமே இந்த சுவனத்தின் எல்லை.)


//இவங்க ஏசு வோட முன்னோர்கள் இல்லையா? அப்பறம் எதற்காக அவங்க புத்தகத்த உங்க பைபிள்லா வச்சு இருக்கீங்க ???//


வெரி குட். உங்கள் புத்திசாலித்தனமான கேள்விக்கு. ஜாவித் அவர்களே,
இதற்கு ஈசாகுரான் ஏற்கனவே பதில் சொல்லியாச்சு. இன்னும் புரியல்லைன்னு அடுத்த பின்னூட்டம் போடுங்க. தெளிவா சொல்லித்தர்றேன்.
(ஈசாகுரானுடைய தமிழ் கட்டுரைகள் இஸ்லாமிய கல்வியாளர்களுக்கு சரியாக புரியவில்லை போலும்)


//எதுக்காக தன்னை நம்பாதவங்களை கொண்டு வந்து கொன்று போடா சொன்னாரு?//

இது பைபிள்ள எந்த வசனம்ன்னு எனக்குத்தெரியல்ல. ஆனா உங்க புனிதமான புத்தகத்துலதான் பார்த்திருக்கேன். இதோ..

2510. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். ஒரு முறை அல்லாஹ்வின் துதர்(ஸல்) அவர்கள், 'கஅபாவின் அஷ்ரஃபைக் கொல்வதற்கு யார் (தயாராக) இருக்கிறார்கள்? ஏனெனில், அல்லாஹ்வுக்கம் அவனுடைய தூதருக்கும் அவன் பொல்லாங்கு விளைவித்து (தொல்லை தந்து)விட்டான்" என்று கூறினார்கள். Volume :2 Book :48


தான் பெருச்சாளிய தூக்கி மடியில வச்சிட்டு நீ ஏன் சுண்டெலிய வச்சிருக்கிறன்னு அடுத்தவன்கிட்ட கேட்ட கதைதான் உங்க கதை.

Archies சொன்னது…

Jawid Said:
//அது சரி கூட பொறந்தவன் அடுத்த மதத்தை போய்ட சாகடிக்க சொல்ற மதத்தை வச்சு இருக்கிற நீங்க எங்களை வாழ விடுவிங்களா?//


Archies Said:
சாரி, ஆளு தெரியாம மாத்தி கேட்டுட்டீங்க. உங்க ஆளுகக்கிட்டயே கேளுங்க. இதுக்கும் ஆதாரம் வேணுமா? இதோ.........

டென்மார்க் மசூதியில் முஸ்லீம்களுக்கிடையேயான வாக்குவாதத்தில் ஒருவர் பலி
WEDNESDAY, AUGUST 31, 2011
பாகிஸ்தானில் ஷியா மசூதியில் கார் குண்டு வெடித்ததில் 11 பேர் பலியானார்கள்.
AUGUST 31, 2011
ஈராக் சுன்னி பிரிவினரின் மசூதியில் ஷியா பிரிவினர் தாக்கி 29 பேர் பலி
AUGUST 29, 2011
5 பௌத்தர்கள் முஸ்லீம் பயங்கரவாதிகளால் தாய்லாந்தில் படுகொலை
AUGUST 28, 2011
உலகம் தட்டை முஸ்லீம் கும்பல் ஐநா கட்டிடத்தை தாக்கியதில் 16 பேர் பலி
AUGUST 26, 2011
உலகம் தட்டை முஸ்லீம் கும்பல் மேலும் 32 பேரை அல்லாஹூ அக்பர் செய்ததுள்ளது
AUGUST 26, 2011
பாகிஸ்தானில் இந்து பெண்களை கடத்தி விபச்சார ஜிஹாத்
AUGUST 26, 2011
பாகிஸ்தானில் பள்ளிக்கூடத்தை அமைதி மார்க்கத்தினர் வெடிகுண்டு வைத்து தகர்ப்பு
AUGUST 25, 2011
பாகிஸ்தான் கராச்சியில் இந்த வாரம் இனவெறி கொலைகள் 101ஐ எட்டியது
AUGUST 23, 2011
பிலிப்பைன்ஸில் முஸ்லீம் பயங்கரவாதத்தால் இதுவரை 150,000 சாவு
AUGUST 23, 2011
ஸ்பெயின் குடிதண்ணீரில் விஷம் கலக்க முயன்ற முஸ்லீம் பயங்கரவாதி கைது
AUGUST 23, 2011
வட்டியில்லா கடன் வேண்டுமென்று இங்கிலாந்து முஸ்லீம்கள் கோரிக்கை
AUGUST 22, 2011
பஹ்ரைனில் ஷியா முஸ்லீம்களை அடக்கி ஒடுக்க பாகிஸ்தான் படைகள்
AUGUST 20, 2011
மொஹாஜிர் முஸ்லீம்களுக்கும் சிந்தி முஸ்லீம்களுக்கும் இடையே சண்டையில் இரண்டே நாளில் 52 பேர் பலி
AUGUST 19, 2011
பாகிஸ்தான் மசூதியில் முஸ்லீம்கள் தாக்குதல்: 47 பேர் பலி 250 பேர் படுகாயம்
AUGUST 19, 2011
டோரண்டோ இஸ்லாமிய இமாம் பாலுறவு பலாத்காரத்துகாக கைது
AUGUST 18, 2011
சேலம் தவ்ஹீத் கல்லூரியில் காட்டுமிராண்டி தாக்குதல்
AUGUST 17, 2011
போகோ ஹராம்( உலகம் தட்டை) முஸ்லீம் கும்பல் நைஜீரியாவிலிருந்து லகோஸ் நாட்டுக்கும் பரவியது
AUGUST 16, 2011
உலகம் தட்டை முஸ்லிம் கும்பலுக்காக நைஜீரியாவில் போராட வந்த 3185 வெளியேற்றம்
AUGUST 16, 2011
பாலி இந்துக்களை படுகொலை செய்த இந்தோனேஷிய இஸ்லாமிய பயங்கரவாதி பாகிஸ்தானில் பிச்சை
AUGUST 12, 2011
போபாலில் பெண்கள் தனியே ஷாப்பிங் செய்யக்கூடாது என்று ஷரியா கலவரம்
AUGUST 08, 2011
முஸ்லீம் பயங்கரவாதிகளால் இஸ்லாமிய முறையில் கழுத்து வெட்டப்பட்ட இந்திய ஜவான்கள்
AUGUST 07, 2011
ரம்ஜான் அன்று சாப்பிட்ட 25 பேருக்கு கடும் சிறைத்தண்டனை. பாகிஸ்தான்
AUGUST 06, 2011
முஸ்லீம் ஆண்கள் உதவியை தடுத்ததால், 29000 முஸ்லீம் குழந்தைகள் சாவு
AUGUST 04, 2011
பஞ்சத்திலடிபட்ட சோமாலியா முஸ்லீம்களுக்கு உதவியை தடுக்கும் அல்குவேதா
AUGUST 03, 2011
பாகிஸ்தானில் 11 ஷியா முஸ்லிம்கள் சுட்டுக் கொலை
AUGUST 02, 2011
சீனாவில் முஸ்லீம்கள் வெறியாட்டம்- 15 பேர் பலி
JULY 31, 2011


நானும் ஆளு மாத்தி சொல்லிப்புட்டேனோ?

Jawid சொன்னது…

ஆர்சிஸ் அண்ணா, புனை பெயர்லா கட்டுரை எழுத்தும் உமர் அண்ணா, அதே மாறி ஆர்சிஸ் என்ற பெயர்லா பதில் சொல்றாரா என்ற சந்தேகதுள்ளா என் பதில்கள் வெளிவர அனுமதிக்க நாள் எடுக்கும் உமர் அண்ணா எப்படி உங்க பதிலை உடனே அனுமதிக்கிறார் என்று கேட்டு இருந்தேன். இதுக்கு நீங்க பதில் சொல்லலா, அது மாறி இன்னொன்னு கேக்குறேன். நான் கிட்டதட்ட ஆறு மாசமா உமர் அண்ணா எல்லா கட்டுரையும் படிச்சுகிட்டு இருக்கேன், பதிலும் சொல்லிக்கிட்டு இருக்கேன், ஆனா இப்ப தான் போன மாசம் நீங்க “ஈசா குர் ஆன் தளத்தின் புதிய பார்வையாளன் Archies.” என்று சொல்லிக்கிட்டு வந்திங்க, அதுக்குள்ள நான் கேட்ட “இவங்க ஏசு வோட முன்னோர்கள் இல்லையா? அப்பறம் எதற்காக அவங்க புத்தகத்த உங்க பைபிள்லா வச்சு இருக்கீங்க ???” என்ற கேள்விக்கு “ஈசாகுரான் ஏற்கனவே பதில் சொல்லியாச்சு. இன்னும் புரியல்லைன்னு அடுத்த பின்னூட்டம் போடுங்க. தெளிவா சொல்லித்தர்றேன்.
(ஈசாகுரானுடைய தமிழ் கட்டுரைகள் இஸ்லாமிய கல்வியாளர்களுக்கு சரியாக புரியவில்லை போலும்)” என்று பதில் சொல்றிங்க? இந்த கட்டுரையை அவங்க தந்து எவ்வளவு நாள் ஆச்சு? ஆறு மாசமா என் கண்ணுல தென்படாத பதில் உங்க கண்ணுல மட்டிருச்சா? இல்ல நிங்களும் இந்த இணையதள ஆசிரியர்களில் ஒருவரா? தயவு செய்ஞ்சு பதில் சொல்லுங்க...

உங்க கேள்வி “முதலில் தீவிரவாதத்தையும்/வன்முறையையும் தூண்டிவிட்டது யார்” இதுக்கு பதிலா இஸ்லாமா காட்டுனா எப்படி?? அப்படினா இஸ்லாம் தான் முதல்லா வந்துச்சுன்னு அர்த்தமா? நான் போட்ட பைபிள் வசனம் முதலா வந்துச்சா? இல்ல நீங்க சொல்ற வசனம் முதல்லா வந்துச்சா? பைபிள் வசனத்துக்கு நீங்க ஒண்ணுமே பதில் சொல்லலையே ஏன்???

ஆர்சிஸ் அண்ணா, ஷரியா, ஜிஹாத், ஜிஸ்யா யாருடையது? என்று கேட்டிங்க, ஷரியா என்றால் இஸ்லாமிய சட்டம். ஜிஸ்யா என்றால் இஸ்லாமிய நாட்டில் வாழ குடுக்க வேண்டிய tax, ஜிஹாத் இறைவனுடைய பாதையில் சிரமங்களை சகித்து கொள்வது "striving in the way of God (al-jihad fi sabil Allah)", இது தான் முதலில் தீவிரவாதத்தையும்/வன்முறையையும் தூண்டிவிட்டது என்று சொல்றிங்களா? அப்பா பைபிள் சொல்ற கொலைகள் எதுக்கு நடந்துச்சு???


ஆர்சிஸ் அண்ணா, “எதுக்காக உங்க இயேசு தன்னை நம்பாதவங்களை கொண்டு வந்து கொன்று போடா சொன்னாரு?” கேட்டா இது பைபிள்ள எந்த வசனம்ன்னு எனக்குத்தெரியல்ல என்று பதில் சொல்றிங்க. எப்படி தெரியும் பைபிள் படிச்சா தானே, அடுத்தவனை கொறை சொல்ல எல்லா நேரத்தையும் செலவு பண்ணா இப்படி தான். கொஞ்சம் நம்மா மதத்தையும் அறிஞ்சுகனும் பிரதர்: Luke 19:27 But as for these enemies of mine who did not want me to be their king, bring them here and slaughter them in front of me!’”

அர்சிஸ் அண்ணா கூட பொறந்தவனை கொள்ள சொல்ற பைபிள் (Deuteronomy 13:6 - 11) தந்தா அதுக்கு பதிலா முகவரி இல்லாத செய்திகளை தர்ரிங்க? இந்த செய்திகளை எப்படி நம்புறது? அப்படியே இது நடந்து இருந்தாலும் இந்த கொலைகளுக்கு நீங்க சொல்ற காரணம் தான் சரின்னு எப்படி நம்புறது. நான் காட்டுனா ஆதாரம் இப்படி இல்ல, உங்க பைபிள் தெளிவ சொல்றா கூட பொறந்தவனா இருந்தாலும் வேற மதத்தை போய்டா கொல்லுனு, அதுக்கு பதில் சொல்லுங்க.

A couple in Paradise, California is charged with murder and torture for allegedly beating their adopted daughters, causing injuries so severe that one of the two died. The other remains in critical condition. The adoptive parents, Kevin and Elizabeth Schatz, subscribe to a Fundamentalist Christian philosophy of using “the rod” as a corrective tool. In this case, the rod is a quarter-inch thick plastic plumbing line.
http://www.secularnewsdaily.com/2010/02/16/christian-parents-biblically-beat-child-to-death-for-mispronouncing-word/

பெற்ற பிள்ளைகளிடம் கிறிஸ்தவத்தின் பெயரில் வன்முறையில் இறங்கிய கிறிஸ்தவர்கள்
http://www.secularnewsdaily.com/2010/07/02/oregon-faith-healing-parents-must-surrender-child/
http://www.thegaymanifesto.com/2010/11/15/study-shows-traditional-christian-couples-beat-their-children-lesbian-couples-dont/


Kill People Who Don't Listen to Priests
Anyone arrogant enough to reject the verdict of the judge or of the priest who represents the LORD your God must be put to death. Such evil must be purged from Israel.(Deuteronomy 17:12 NLT)

-ஜாவித் .

Jawid சொன்னது…

ஆர்சிஸ் அண்ணா, புனை பெயர்லா கட்டுரை எழுத்தும் உமர் அண்ணா, அதே மாறி ஆர்சிஸ் என்ற பெயர்லா பதில் சொல்றாரா என்ற சந்தேகதுள்ளா என் பதில்கள் வெளிவர அனுமதிக்க நாள் எடுக்கும் உமர் அண்ணா எப்படி உங்க பதிலை உடனே அனுமதிக்கிறார் என்று கேட்டு இருந்தேன். இதுக்கு நீங்க பதில் சொல்லலா, அது மாறி இன்னொன்னு கேக்குறேன். நான் கிட்டதட்ட ஆறு மாசமா உமர் அண்ணா எல்லா கட்டுரையும் படிச்சுகிட்டு இருக்கேன், பதிலும் சொல்லிக்கிட்டு இருக்கேன், ஆனா இப்ப தான் போன மாசம் நீங்க “ஈசா குர் ஆன் தளத்தின் புதிய பார்வையாளன் Archies.” என்று சொல்லிக்கிட்டு வந்திங்க, அதுக்குள்ள நான் கேட்ட “இவங்க ஏசு வோட முன்னோர்கள் இல்லையா? அப்பறம் எதற்காக அவங்க புத்தகத்த உங்க பைபிள்லா வச்சு இருக்கீங்க ???” என்ற கேள்விக்கு “ஈசாகுரான் ஏற்கனவே பதில் சொல்லியாச்சு. இன்னும் புரியல்லைன்னு அடுத்த பின்னூட்டம் போடுங்க. தெளிவா சொல்லித்தர்றேன்.
(ஈசாகுரானுடைய தமிழ் கட்டுரைகள் இஸ்லாமிய கல்வியாளர்களுக்கு சரியாக புரியவில்லை போலும்)” என்று பதில் சொல்றிங்க? இந்த கட்டுரையை அவங்க தந்து எவ்வளவு நாள் ஆச்சு? ஆறு மாசமா என் கண்ணுல தென்படாத பதில் உங்க கண்ணுல மட்டிருச்சா? இல்ல நிங்களும் இந்த இணையதள ஆசிரியர்களில் ஒருவரா? தயவு செய்ஞ்சு பதில் சொல்லுங்க...

உங்க கேள்வி “முதலில் தீவிரவாதத்தையும்/வன்முறையையும் தூண்டிவிட்டது யார்” இதுக்கு பதிலா இஸ்லாமா காட்டுனா எப்படி?? அப்படினா இஸ்லாம் தான் முதல்லா வந்துச்சுன்னு அர்த்தமா? நான் போட்ட பைபிள் வசனம் முதலா வந்துச்சா? இல்ல நீங்க சொல்ற வசனம் முதல்லா வந்துச்சா? பைபிள் வசனத்துக்கு நீங்க ஒண்ணுமே பதில் சொல்லலையே ஏன்???

ஆர்சிஸ் அண்ணா, ஷரியா, ஜிஹாத், ஜிஸ்யா யாருடையது? என்று கேட்டிங்க, ஷரியா என்றால் இஸ்லாமிய சட்டம். ஜிஸ்யா என்றால் இஸ்லாமிய நாட்டில் வாழ குடுக்க வேண்டிய tax, ஜிஹாத் இறைவனுடைய பாதையில் சிரமங்களை சகித்து கொள்வது "striving in the way of God (al-jihad fi sabil Allah)", இது தான் முதலில் தீவிரவாதத்தையும்/வன்முறையையும் தூண்டிவிட்டது என்று சொல்றிங்களா? அப்பா பைபிள் சொல்ற கொலைகள் எதுக்கு நடந்துச்சு???


ஆர்சிஸ் அண்ணா, “எதுக்காக உங்க இயேசு தன்னை நம்பாதவங்களை கொண்டு வந்து கொன்று போடா சொன்னாரு?” கேட்டா இது பைபிள்ள எந்த வசனம்ன்னு எனக்குத்தெரியல்ல என்று பதில் சொல்றிங்க. எப்படி தெரியும் பைபிள் படிச்சா தானே, அடுத்தவனை கொறை சொல்ல எல்லா நேரத்தையும் செலவு பண்ணா இப்படி தான். கொஞ்சம் நம்மா மதத்தையும் அறிஞ்சுகனும் பிரதர்: Luke 19:27 But as for these enemies of mine who did not want me to be their king, bring them here and slaughter them in front of me!’”

அர்சிஸ் அண்ணா கூட பொறந்தவனை கொள்ள சொல்ற பைபிள் (Deuteronomy 13:6 - 11) தந்தா அதுக்கு பதிலா முகவரி இல்லாத செய்திகளை தர்ரிங்க? இந்த செய்திகளை எப்படி நம்புறது? அப்படியே இது நடந்து இருந்தாலும் இந்த கொலைகளுக்கு நீங்க சொல்ற காரணம் தான் சரின்னு எப்படி நம்புறது. நான் காட்டுனா ஆதாரம் இப்படி இல்ல, உங்க பைபிள் தெளிவ சொல்றா கூட பொறந்தவனா இருந்தாலும் வேற மதத்தை போய்டா கொல்லுனு, அதுக்கு பதில் சொல்லுங்க.

A couple in Paradise, California is charged with murder and torture for allegedly beating their adopted daughters, causing injuries so severe that one of the two died. The other remains in critical condition. The adoptive parents, Kevin and Elizabeth Schatz, subscribe to a Fundamentalist Christian philosophy of using “the rod” as a corrective tool. In this case, the rod is a quarter-inch thick plastic plumbing line.
http://www.secularnewsdaily.com/2010/02/16/christian-parents-biblically-beat-child-to-death-for-mispronouncing-word/

பெற்ற பிள்ளைகளிடம் கிறிஸ்தவத்தின் பெயரில் வன்முறையில் இறங்கிய கிறிஸ்தவர்கள்
http://www.secularnewsdaily.com/2010/07/02/oregon-faith-healing-parents-must-surrender-child/
http://www.thegaymanifesto.com/2010/11/15/study-shows-traditional-christian-couples-beat-their-children-lesbian-couples-dont/


Kill People Who Don't Listen to Priests
Anyone arrogant enough to reject the verdict of the judge or of the priest who represents the LORD your God must be put to death. Such evil must be purged from Israel.(Deuteronomy 17:12 NLT)

-ஜாவித் .

Archies சொன்னது…

"//ஆர்சிஸ் அண்ணா, புனை பெயர்லா கட்டுரை எழுத்தும் உமர் அண்ணா, அதே மாறி ஆர்சிஸ் என்ற பெயர்லா பதில் சொல்றாரா என்ற சந்தேகதுள்ளா//"


உங்க ஆளுகள மாதிரி வேஷம் போட்டுட்டு எழுத வேண்டிய அவசியம் ஒன்றும் எனக்கில்லை. உங்க முகம்மதுவுக்க சக்களத்திகளைப்போல பொய் சொல்ல (Hadies 6972) வேண்டியதும் எனக்கில்லை.



"//என் பதில்கள் வெளிவர அனுமதிக்க நாள் எடுக்கும் உமர் அண்ணா எப்படி உங்க பதிலை உடனே அனுமதிக்கிறார் என்று கேட்டு இருந்தேன்.//"



இது என்னிடம் கேட்க வேண்டிய கேள்வியில்லை. அவரிடம் கேட்கவேண்டிய கேள்வி. இப்படி கேள்வி கேட்டு இவைகளைப் படிப்பவர்களைத் திசைதிருப்பி விடலாம் என்று நினைக்கிறீர்களா? உங்க பாச்சா பலிக்காது.



"//நான் கிட்டதட்ட ஆறு மாசமா உமர் அண்ணா எல்லா கட்டுரையும் படிச்சுகிட்டு இருக்கேன், .........................................கண்ணுல தென்படாத பதில் உங்க கண்ணுல மட்டிருச்சா? இல்ல நிங்களும் இந்த இணையதள ஆசிரியர்களில் ஒருவரா? தயவு செய்ஞ்சு பதில் சொல்லுங்க..//"



இது ஒரு உலக மகா ஜோக் ஜாவித் அவர்களே !!!! ஆறு மாசம் ஆகியும் உமர் அண்ணனுடைய எல்லா கட்டுரைகளும் இன்னும் உங்க கண்ணுல தென்படல்லையா? உமர் போடுகிற கட்டுரைகளெல்லாம் உங்க கணினிக்கு மட்டும் ரொம்ப லேட்டா வந்து சேருதுன்னு நினைக்கிறேன். ஏதுக்கும் பிளாக்கர்
நிர்வாகிகளை அணுகி உங்க கணினி ஐடி யைக் குடுத்து சீக்கிரம் சரி பண்ணுங்க.
நான் சொன்னாலும் உங்க தலைல ஏறாது. ஆனாலும் சொல்றேன்.



உமர் சொன்னது: http://isakoran.blogspot.com/2007/09/blog-post_20.html

‘’//ஒருவன் செய்த குற்றத்தை மற்றவர்களுக்கு தெரிவிப்பது... அதை அனுமதிப்பதாகுமா?

செய்தித்தாளில் ஒரு குறிப்பிட்ட வீட்டில் நகைகள் திருட்டுபோனது என்று செய்தி வருமானால், அந்த செய்தித் தாள் மக்களை திருடுங்கள் என்று அறிவுரை கூறுவதாகுமா?

பைபிளில் வரும் நபர்கள், தீர்க்கதரிசிகள் நம்மைப்போல பாவம் செய்யும் மனிதர்களே என்பதை பைபிள் தெரிவிக்கிறது. எவ்வளவு பெரிய மனுஷனாக இருந்தாலும் சரி முக தாட்சனியம் இல்லாமல் அவன் செய்த குற்றத்தை மக்களுக்கு தெரிவிக்கிறது.

உங்களைப்போல முஹம்மதுவை தலை மேலே வைத்துக்கொண்டு திரிவதுபோல, அவர் செய்த அனைத்து குற்றங்களுக்கும் தங்க முலாம் பூசி மறைப்பது போல, நாங்களோ அல்லது பைபிளோ செய்வதில்லை. எனவே, இது அனுமதி அளிப்பது அல்ல, எச்சரிக்கை செய்வது.

அனுமதி என்றால் எப்படி இருக்கும் தெரியுமா?

முஹம்மதுவை அப்பா என்றோ அல்லது மாமனார் என்றோ அழைத்து , மகள் என்ற ஸ்தானத்தில் இருந்த அவரது வளர்ப்பு மகனின் மனைவியை விட்டுவைக்காமல், திருமணம் செய்துக்கொண்டு, இந்த கீழ்தரமான செயலை அல்லாஹ் அனுமதிக்கிறார் என்றுச் சொல்லி குர்‍ஆனில் வசனத்தையும் சொல்லியுள்ளாரே உங்கள் முஹம்மது, இது தான் அனுமதி அளிப்பதாகும்.

மருமகளையும் விட்டுவைக்காமல், அனேக பெண்களை தன் விருப்பம் போல திருமணம் செய்துக்கொண்டு,அனேக பெண்களை கற்பழித்து அதாவது அடிமைப்பெண்களிடம் உடலுறவு கொண்டு, சிறுமி என்றும் பாராமால், திருமணம் செய்துக்கொண்டு உலக மனிதர்களிலேயே இப்படியும் ஒரு மனிதன் கீழ்தரமாக வாழமுடியுமா என்று மக்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு நடந்துக்கொண்டுள்ளார் உங்கள் நபி முஹம்மது.

அதற்கு அல்லாஹ்வின் அனுமதி வேறு.
அவரை நீங்கள் பின்பற்றுகிறீரக்ள்.

இதைத் தான் அனுமதி என்பார்களே தவிர, ஒரு நிகழ்ச்சி நடந்தது என்றுச் சொல்வது செய்வது போல ஆகாது.

மேற்கொண்டு நீங்கள் எழுதுவீர்களானால், தனி கட்டுரையாக உங்களுக்கு பதில் அளிப்பேன்.

முதலில், முஹம்மதுவை பின்பற்றுவதை நிறுத்துங்கள் அப்போதுதான் மனித நிலைக்கு வருவீர்கள் நீங்கள்.//”



பைபிள் இந்த சம்பவங்களை சுட்டிக்காண்பித்து இதைபோல செய்யாதீர்கள் என்று எச்சரிக்கிறது. ஆதாரம் இதோ………..



யூதா 1:7 => அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தார்களும், அவைகளை சூழ்ந்த பட்டணத்தார்களும், அவர்களைப்போல விபச்சாரம் பண்ணி, அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்து, நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்து திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

எபிரேயர் 12:16 => ஒருவனும் வேசிக்கள்ளனாகவும்…………………….. ஏசாவைப்போல சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாய் இருங்கள்.

நியாயாதிபதிகள் 16:20,21 => சிம்சோன் செய்த பாவத்திற்காக அவன் கண்கள் பிடுங்கப் பட்டது.

Archies சொன்னது…

“//ஷரியா என்றால் இஸ்லாமிய சட்டம். ஜிஸ்யா என்றால் இஸ்லாமிய நாட்டில் வாழ குடுக்க வேண்டிய tax, ஜிஹாத் இறைவனுடைய பாதையில் சிரமங்களை சகித்து கொள்வது "striving in the way of God (al-jihad fi sabil Allah)//”

தவறு செய்பவனுக்கு சாட்டையடி, மரண தண்டனை, கல்லெரிந்து கொல்லுதல், கைகள் கால்களை வெட்டி எடுத்துவிடுதல் தான் சட்டம்.

ஜிஹாத் இறைவனுடைய பாதையில் காபிர்களுடன் சண்டை போடுவது.

குர்ஆன் 9:29

வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள்
அல்லாஹ்வின் மீதும்,
இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும்,
அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும்,
உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ.
அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.


(01.10.2009) தினகரன் பத்திரிக்கையில் வந்த செய்தி. கேரளாவில் பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் துணை அமைப்பாக 'லவ் ஜிஹாத்' என்ற அமைப்பு செயல் படுகிறது. இவர்கள் வேலையே கல்லூரி மாணவிகளை காதலித்து அவர்களை மதம் மாற்றுவது.சமீபத்தில் இது போன்று கல்லூரி மாணவிகளை காதலித்து மதம் மாற்றிய இருவரை கைது செய்து அவர்களிடம் விசாரணையில் இந்த விஷயங்கள் தெரிய வந்துள்ளன. இப்போது பாப்புலர் பிரான்ட் அமைப்பை கண்காணிக்க கேரளா உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இது போலவே மும்பையிலும் கடந்த சில மாதங்களுக்கு முன் பல கல்லூரி பெண்கள் முஸ்லிம்களை திருமணம் செய்து உடனே அரபு தேசங்களுக்கு சென்று முஸ்லிமாக திரும்பி வந்த செய்தி பத்திரிக்கைகளில் வந்தது இது குறித்து விசாரிக்கவும் மராட்டிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.




"//அப்படினா இஸ்லாம் தான் முதல்லா வந்துச்சுன்னு அர்த்தமா? நான் போட்ட பைபிள் வசனம் முதலா வந்துச்சா?//''


உண்மையை ஒத்துக்கொண்டதிற்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நன்றி. பைபிள் வசனம் தான் முதலாவது வந்தது. பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்ட குரான் தான் ரெண்டாவது வந்துச்சி. இந்த உண்மையை தயவு செய்து எல்லாரிடமும் சொல்லுங்கள்.

“//எப்படி தெரியும் பைபிள் படிச்சா தானே, அடுத்தவனை கொறை சொல்ல எல்லா நேரத்தையும் செலவு பண்ணா இப்படி தான். கொஞ்சம் நம்மா மதத்தையும் அறிஞ்சுகனும் பிரதர்: Luke 19:27 But as for these enemies of mine who did not want me to be their king, bring them here and slaughter them in front of me!//”

காப்பி பேஸ்ட் பண்ண மட்டும் தான் தெரியும். அதப் படிச்சி அர்த்ததை புரிந்துகொள்ளத் தெரியாத இஸ்லாமியக் கல்வியாளரே! எல்லாத்தையும் தமிழ்ல எழுதிட்டு வசனத்த மட்டும் இங்லிபீஸுல போட்டா எப்புடி?.
லூக்கா 19:12 லிருந்து படிச்சீங்கனா தெரியும். சும்மா நாய்க்க வால பார்த்திட்டு அது குரங்குக்க வாலுன்னு சொல்லக்கூடாது;

இதுக்குதான் மொதல்லே சொன்னேன். இலக்கணத்த ஒழுங்கா படிக்கணும்னு. யார், யாருக்கிட்ட, எதைக்குறித்து எப்ப சொன்னாங்கன்னு பாத்தா தெரியும். சும்மா தேவையில்லாம எதாவது சொல்லி பெரிய புத்திசாலி மாதிரி காணிக்க வேண்டாம்.


“//உங்க பைபிள் தெளிவ சொல்றா கூட பொறந்தவனா இருந்தாலும் வேற மதத்தை போய்டா கொல்லுனு, அதுக்கு பதில் சொல்லுங்க//’’

இத உங்க மொம்மதுக்கிட்ட கேட்கவேண்டிய கேள்வி. நீங்கதான் இத செயல்படுத்திக்கொண்டு இருக்கிறீர்கள்.
ஹதீஸ் 6930 => ………………………..அவர்களை நீங்கள் எங்கு கண்டாலும் உயிரோடுவிடாதீர்கள்……………………….
இவ்வளவு வண்டவாளங்களையும் வச்சுக்கிட்டா கேள்வி கேட்கிறீங்க?
ஆனால் இயேசு பாவிகளை கொல்ல அல்ல, இரட்சிப்பதற்காக வந்தார்.


“//முகவரி இல்லாத செய்திகளை தர்ரிங்க? இந்த செய்திகளை எப்படி நம்புறது? அப்படியே இது நடந்து இருந்தாலும் இந்த கொலைகளுக்கு நீங்க சொல்ற காரணம் தான் சரின்னு எப்படி நம்புறது.//”

இஸ்லாமியர்கள் மட்டும் நம்புவார்கள் ஆனால் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இந்த சம்பவங்களெல்லாம் உலகறிந்த உண்மை.

Archies சொன்னது…

ஜாவித் அவர்களே!
நீங்க இரண்டு, மூன்று லின்க் போட்டிருக்கிறீர்கள். பதிலுக்கு நானும் கொஞ்சம் லின்க் தர்றேன். படியுங்க.
http://iraiyillaislam.blogspot.com
http://sheikyermami.com/
http://www.faithfreedom.org/
http://www.faithfreedom.org/articles/gallery/neqabi-woman-in-her-underware/ உங்க மொம்மதுவுக்கு இது ரொம்ப பிடிக்கும்.


காஃபிர்
Archies

Colvin சொன்னது…

திரு. ஜாவித் முழு அதிகாரத்தையும் வாசித்தீர்களா? இயேசுவா அல்லது அவர் கூறிய உவமையில் வரும் பிரபுவா கூறுகிறார். ஒன்று ஒழுங்காக வாசியுங்கள். தமிழிலேயே வாசிக்கலாமே.

மத்தேயு 26:52 அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தை திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்.

உங்களுக்கு எங்கே புரிய போகிறது.

Jawid சொன்னது…

ஆர்சிஸ் அண்ணா, 2007 வருஷம் உமர் அண்ணா சொன்னது போன மாசம் வந்த உங்களுக்கு தெரியுது ரொம்ப அதிசயம இருக்கு. ஒருத்தன் செயற தப்பை நாளிதாளில் போடுறது அதை அனுமதிக்கிறது என்று அர்த்தம் கிடையாதுன்னு எனக்கும் தெரியும், ஆனா எப்படி தப்பு செஞ்சான்னு அணு அணுவா சொல்றது அதை படிகிரவனுக்கு ஆசை உண்டு பண்ணதா? இதை படைத்த இறைவன் செய்வானா? உதாரணமா கிழே உள்ள பைபிள் வசனத்தை பாருங்க, விபச்சரம் செய்ய விரும்பாத பொன்னும் இதை படித்தால் கேட்டு போவாள். இப்படி விளக்கமா அனு அணுவா இறைவன் விளக்க அவசியம் தான்னா??

1. Thou hast played the whore also with the Assyrians, because thou wast unsatiable; yea, thou hast played the harlot with them, and yet couldest not be satisfied. [Ezekiel 16:28]
2.
3. And they committed whoredoms in Egypt; they committed whoredoms in their youth: there were their breasts pressed, and there they bruised the teats of their virginity. [Ezekiel 23:3]
4.
5. And Aholah played the harlot when she was mine; and she doted on her lovers, on the Assyrians her neighbours, Which were clothed with blue, captains and rulers, all of them desirable young men, horsemen riding upon horses. Thus she committed her whoredoms with them, with all them that were the chosen men of Assyria, and with all on whom she doted: with all their idols she defiled herself. Neither left she her whoredoms brought from Egypt: for in her youth they lay with her, and they bruised the breasts of her virginity, and poured their whoredom upon her. [Ezekiel 23:5-8]
6.
7. And when her sister Aholibah saw this, she was more corrupt in her inordinate love than she, and in her whoredoms more than her sister in her whoredoms. She doted upon the Assyrians her neighbours, captains and rulers clothed most gorgeously, horsemen riding upon horses, all of them desirable young men. Then I saw that she was defiled, that they took both one way, And that she increased her whoredoms: for when she saw men pourtrayed upon the wall, the images of the Chaldeans pourtrayed with vermilion, Girded with girdles upon their loins, exceeding in dyed attire upon their heads, all of them princes to look to, after the manner of the Babylonians of Chaldea, the land of their nativity: And as soon as she saw them with her eyes, she doted upon them, and sent messengers unto them into Chaldea. And the Babylonians came to her into the bed of love, and they defiled her with their whoredom, and she was polluted with them, and her mind was alienated from them. So she discovered her whoredoms, and discovered her nakedness: then my mind was alienated from her, like as my mind was alienated from her sister. Yet she multiplied her whoredoms, in calling to remembrance the days of her youth, wherein she had played the harlot in the land of Egypt. For she doted upon their paramours, whose flesh is as the flesh of asses, and whose issue is like the issue of horses. Thus thou calledst to remembrance the lewdness of thy youth, in bruising thy teats by the Egyptians for the paps of thy youth. [Ezekiel 23:11-21]


ஆர்சிஸ் அண்ணா, முஹம்மத் நபி அவங்க மருமகளை கல்யாணம் பண்ணிகிட்டாங்கன்னு சொல்றிங்க இஸ்லாம்லா வளர்ப்பு மகன் சொந்த மகன் ஆகா மாடன் என்கிறது உங்களுக்கு தெரியாதா? ஏன் உங்க ஜுதா சொந்த மருமகளோடு விபசாரம் செஞ்சார் அதை விளக்குங்களேன்? அவளை கொள்ள ஆணை குடுத்துட்டு குற்றவாளி தான் தான் என்று தெரிஞ்ச வுடனே சும்மா இருந்துடாரே அவருக்கு உங்க ஆண்டவன் என்ன தண்டனை கொடுத்தான் கொஞ்சம் சொல்லுங்க.

Jawid சொன்னது…

ஆர்சிஸ் அண்ணா, 2007 வருஷம் உமர் அண்ணா சொன்னது போன மாசம் வந்த உங்களுக்கு தெரியுது ரொம்ப அதிசயம இருக்கு. ஒருத்தன் செயற தப்பை நாளிதாளில் போடுறது அதை அனுமதிக்கிறது என்று அர்த்தம் கிடையாதுன்னு எனக்கும் தெரியும், ஆனா எப்படி தப்பு செஞ்சான்னு அணு அணுவா சொல்றது அதை படிகிரவனுக்கு ஆசை உண்டு பண்ணதா? இதை படைத்த இறைவன் செய்வானா? உதாரணமா கிழே உள்ள பைபிள் வசனத்தை பாருங்க, விபச்சரம் செய்ய விரும்பாத பொன்னும் இதை படித்தால் கேட்டு போவாள். இப்படி விளக்கமா அனு அணுவா இறைவன் விளக்க அவசியம் தான்னா??

1. Thou hast played the whore also with the Assyrians, because thou wast unsatiable; yea, thou hast played the harlot with them, and yet couldest not be satisfied. [Ezekiel 16:28]
2.
3. And they committed whoredoms in Egypt; they committed whoredoms in their youth: there were their breasts pressed, and there they bruised the teats of their virginity. [Ezekiel 23:3]
4.
5. And Aholah played the harlot when she was mine; and she doted on her lovers, on the Assyrians her neighbours, Which were clothed with blue, captains and rulers, all of them desirable young men, horsemen riding upon horses. Thus she committed her whoredoms with them, with all them that were the chosen men of Assyria, and with all on whom she doted: with all their idols she defiled herself. Neither left she her whoredoms brought from Egypt: for in her youth they lay with her, and they bruised the breasts of her virginity, and poured their whoredom upon her. [Ezekiel 23:5-8]
6.
7. And when her sister Aholibah saw this, she was more corrupt in her inordinate love than she, and in her whoredoms more than her sister in her whoredoms. She doted upon the Assyrians her neighbours, captains and rulers clothed most gorgeously, horsemen riding upon horses, all of them desirable young men. Then I saw that she was defiled, that they took both one way, And that she increased her whoredoms: for when she saw men pourtrayed upon the wall, the images of the Chaldeans pourtrayed with vermilion, Girded with girdles upon their loins, exceeding in dyed attire upon their heads, all of them princes to look to, after the manner of the Babylonians of Chaldea, the land of their nativity: And as soon as she saw them with her eyes, she doted upon them, and sent messengers unto them into Chaldea. And the Babylonians came to her into the bed of love, and they defiled her with their whoredom, and she was polluted with them, and her mind was alienated from them. So she discovered her whoredoms, and discovered her nakedness: then my mind was alienated from her, like as my mind was alienated from her sister. Yet she multiplied her whoredoms, in calling to remembrance the days of her youth, wherein she had played the harlot in the land of Egypt. For she doted upon their paramours, whose flesh is as the flesh of asses, and whose issue is like the issue of horses. Thus thou calledst to remembrance the lewdness of thy youth, in bruising thy teats by the Egyptians for the paps of thy youth. [Ezekiel 23:11-21]


ஆர்சிஸ் அண்ணா, முஹம்மத் நபி அவங்க மருமகளை கல்யாணம் பண்ணிகிட்டாங்கன்னு சொல்றிங்க இஸ்லாம்லா வளர்ப்பு மகன் சொந்த மகன் ஆகா மாடன் என்கிறது உங்களுக்கு தெரியாதா? ஏன் உங்க ஜுதா சொந்த மருமகளோடு விபசாரம் செஞ்சார் அதை விளக்குங்களேன்? அவளை கொள்ள ஆணை குடுத்துட்டு குற்றவாளி தான் தான் என்று தெரிஞ்ச வுடனே சும்மா இருந்துடாரே அவருக்கு உங்க ஆண்டவன் என்ன தண்டனை கொடுத்தான் கொஞ்சம் சொல்லுங்க.

Jawid சொன்னது…

ஜய்ணாப் முதலே விதவை, முஹம்மத் நபியோட முறை பொண்ணு, அவங்க நபியா கல்யாணம் பண்ணா முதல்ல விரும்புனங்க, நபி தான் சய்த்க்கு இரண்டாம் கல்யாணம் பண்ணி வச்சாங்க அது புடிக்காம அவங்க விவாகரத்து எடுத்து கொண்டாங்க, அப்பறம் தான் மறுபடியும் முஹம்மத் நபி கல்யாணம் பண்ணிகிட்டாங்க, உங்க பைபிள் மாறி விபசாரம் பண்ணாலா. ஜூதா என்ன செய்வாரு உங்க பைபிள் விவாகரத்து பண்ண பெண்ணை கல்யாணம் பண்ணா அது விபசாரம்ன்னு சொல்லுதே.

Zaynab bint Jahsh was Muhammad's cousin, being the daughter of one of his father's sisters.[10] In Medina, Muhammad arranged Zaynab's marriage, a widow, to Zayd ibn Harithah. Zaynab disapproved of the marriage and her brothers rejected it, because according to Ibn Sa'd, she was of aristocratic lineage and Zayd was a former slave and the adopted son of Muhammad.[32][33] Muhammad, however, was determined to establish the legitimacy and right to equal treatment of the adopted, Caesar E. Farah states.[34] Watt however states that it is not clear why Zaynab was unwilling to marry Zayd as Zayd was held in a high place in Muhammad's esteem. Watt discusses the following two possibilities: being an ambitious woman, she was already hoping to marry Muhammad; and the other she may have been wanting to marry someone of whom Muhammad disapproved for political reason. In any case, Watt says, it is almost certain that she was working for marriage with Muhammad before the end of 626.[35]
http://en.wikipedia.org/wiki/Muhammad's_wives



ஆர்சிஸ் அண்ணா, ஏன் கேள்வி “அப்படினா இஸ்லாம் தான் முதல்லா வந்துச்சுன்னு அர்த்தமா? நான் போட்ட பைபிள் வசனம் முதலா வந்துச்சா?” நீங்க சொல்ற பதில் பைபிள் மொதல்ல வந்துச்சு அப்புறம் குர்ஆன் வந்துச்சு. பைபிள் என்கையாது தன் பெயர் பைபிள்ன்னு சொலுதா? நீங்க வச்சு இருக்கிற வசனமும் யூதர்கள் இடம் இருந்து எடுத்தது அதாவது உங்க பாஷையில் காபி அடிச்சது அப்படினா நீங்க எப்படி எங்களை கொறை சொல்ல தகுதி யானவர்??

Jawid சொன்னது…

ஜய்ணாப் முதலே விதவை, முஹம்மத் நபியோட முறை பொண்ணு, அவங்க நபியா கல்யாணம் பண்ணா முதல்ல விரும்புனங்க, நபி தான் சய்த்க்கு இரண்டாம் கல்யாணம் பண்ணி வச்சாங்க அது புடிக்காம அவங்க விவாகரத்து எடுத்து கொண்டாங்க, அப்பறம் தான் மறுபடியும் முஹம்மத் நபி கல்யாணம் பண்ணிகிட்டாங்க, உங்க பைபிள் மாறி விபசாரம் பண்ணாலா. ஜூதா என்ன செய்வாரு உங்க பைபிள் விவாகரத்து பண்ண பெண்ணை கல்யாணம் பண்ணா அது விபசாரம்ன்னு சொல்லுதே.

Zaynab bint Jahsh was Muhammad's cousin, being the daughter of one of his father's sisters.[10] In Medina, Muhammad arranged Zaynab's marriage, a widow, to Zayd ibn Harithah. Zaynab disapproved of the marriage and her brothers rejected it, because according to Ibn Sa'd, she was of aristocratic lineage and Zayd was a former slave and the adopted son of Muhammad.[32][33] Muhammad, however, was determined to establish the legitimacy and right to equal treatment of the adopted, Caesar E. Farah states.[34] Watt however states that it is not clear why Zaynab was unwilling to marry Zayd as Zayd was held in a high place in Muhammad's esteem. Watt discusses the following two possibilities: being an ambitious woman, she was already hoping to marry Muhammad; and the other she may have been wanting to marry someone of whom Muhammad disapproved for political reason. In any case, Watt says, it is almost certain that she was working for marriage with Muhammad before the end of 626.[35]
http://en.wikipedia.org/wiki/Muhammad's_wives



ஆர்சிஸ் அண்ணா, ஏன் கேள்வி “அப்படினா இஸ்லாம் தான் முதல்லா வந்துச்சுன்னு அர்த்தமா? நான் போட்ட பைபிள் வசனம் முதலா வந்துச்சா?” நீங்க சொல்ற பதில் பைபிள் மொதல்ல வந்துச்சு அப்புறம் குர்ஆன் வந்துச்சு. பைபிள் என்கையாது தன் பெயர் பைபிள்ன்னு சொலுதா? நீங்க வச்சு இருக்கிற வசனமும் யூதர்கள் இடம் இருந்து எடுத்தது அதாவது உங்க பாஷையில் காபி அடிச்சது அப்படினா நீங்க எப்படி எங்களை கொறை சொல்ல தகுதி யானவர்??

Jawid சொன்னது…

ஆர்சிஸ் அண்ணா, நீங்க என்ன சொல்ல விரும்புரிங்க? ஜிஸுஸ் பைபிள்ளில் அவருக்கு சம்பந்தம் இல்லாத கதைகளை சொன்னருணா? ஜிஸுஸ் சொல்ற கதை எல்லாம் ஒரு உதாரணம், ஒன்னு அவரை குறிக்கும் அல்லது இறைவனை குறிக்கும் இல்லது ஒரு உதரணமாக இருக்கும் இந்த அடிப்படையில் பார்த்தா அவர் சொல்ற கதைல வர்ரா ராஜா அவர் தான் இல்லாட்டி அது இறைவன். அதனால் தான் அவர் இப்படி ஆரம்பிக்கிறார்:

11. அவர்கள் இவைகளைக் கேட்டுக் கொண்டிருக்கையில், அவர் எருசலேமுக்குச் சமீபித்திருந்தபடியினாலும், தேவனுடைய ராஜ்யம் சீக்கிரமாய் வெளிப்படுமென்று அவர்கள் நினைத்தபடியினாலும், அவர் ஒரு உவமையைச் சொன்னார்:
And as they heard these things, he added and spake a parable, because he was nigh to Jerusalem, and because they thought that the kingdom of God should immediately appear.....


25. அதற்கு அவர்கள்: ஆண்டவனே, அவனுக்குப் பத்துராத்தல் இருக்கிறதே என்றார்கள்.
(And they said unto him, Lord, he hath ten pounds.)

26. அதற்கு அவன்: உள்ளவன் எவனுக்குங் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
For I say unto you, That unto every one which hath shall be given; and from him that hath not, even that he hath shall be taken away from him.

27. அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய சத்துருக்களை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார்
But those mine enemies, which would not that I should reign over them, bring hither, and slay them before me.


எனவே இந்த உதாரணம் ஜிஸுஸ் தன்னை பற்றி அறிவிப்பது தானே? அப்படி இல்லையா? அப்பா இது யாரை பற்றிய உதாரணம்? மக்களை கொலபுவதர்க்கா?


ஆர்சிஸ் அண்ணா, பதில் சொல்ல வேண்டும் என்று எதையாவது சொல்ல கூடாது. நான் போட்ட லிங்க் செய்தி தாளில் கிறிஸ்தவ பெற்றோர்கள் கிறிஸ்தவத்தை பேணாத பிள்ளைகளை வதைத்தா கொன்ற செய்தி. நீங்கள் கொடுத்தது, கிறிஸ்தவர்கள் இஸ்லாமுக்கு எதிராக சொல்லும் பொய்கள். இன்னும் இலவச உள்ளாடையை விரும்பி கிறிஸ்தவ இங்கிலாந்து நாட்டில் 60000 அரை நிர்வான கிறிஸ்தவ பெண்கள் மத்தியில் ஒரு பெண் முகத்தை மறைத்து உள்ளாடையுடன் நின்ற புகைப்படம், நீங்கள் அவளை இஸ்லாமியர் என்று குரிபிடுகிறிர். ஏன் 59999 கிறிஸ்தவ பெண்கள் அறை நிர்வாணமாக நின்றது உங்கள் கண்களுக்கு தென்பட வில்லையா? உங்களை போல் நானும் நினைத்தாள் வருட வருடம் இங்கிலாந்து நாட்டில் நடக்கும் கிறிஸ்தவ பெண்கள் முழு நிர்வான புகைப்படம், விதிகளில் முழு நிர்வாணமாக நடக்க அனுமதி கூறி நடந்த கிறிஸ்தவ பெண்கள் முழு நிர்வான ஆர்ப்பாட்டம், இன்னும் கிறிஸ்தவ போதகர் கிறிஸ்தவ ஊழியம் செய்யும் பெண்ணை கற்பழித்த புகைப்படம் என்று பலவற்றை வெளியிடலாம். உங்களை போல் நான் வெட்கம் அற்றவன் இல்ல, அப்படி செய்ய.

-ஜாவித்

Jawid சொன்னது…

ஆர்சிஸ் அண்ணா, நீங்க என்ன சொல்ல விரும்புரிங்க? ஜிஸுஸ் பைபிள்ளில் அவருக்கு சம்பந்தம் இல்லாத கதைகளை சொன்னருணா? ஜிஸுஸ் சொல்ற கதை எல்லாம் ஒரு உதாரணம், ஒன்னு அவரை குறிக்கும் அல்லது இறைவனை குறிக்கும் இல்லது ஒரு உதரணமாக இருக்கும் இந்த அடிப்படையில் பார்த்தா அவர் சொல்ற கதைல வர்ரா ராஜா அவர் தான் இல்லாட்டி அது இறைவன். அதனால் தான் அவர் இப்படி ஆரம்பிக்கிறார்:

11. அவர்கள் இவைகளைக் கேட்டுக் கொண்டிருக்கையில், அவர் எருசலேமுக்குச் சமீபித்திருந்தபடியினாலும், தேவனுடைய ராஜ்யம் சீக்கிரமாய் வெளிப்படுமென்று அவர்கள் நினைத்தபடியினாலும், அவர் ஒரு உவமையைச் சொன்னார்:
And as they heard these things, he added and spake a parable, because he was nigh to Jerusalem, and because they thought that the kingdom of God should immediately appear.....


25. அதற்கு அவர்கள்: ஆண்டவனே, அவனுக்குப் பத்துராத்தல் இருக்கிறதே என்றார்கள்.
(And they said unto him, Lord, he hath ten pounds.)

26. அதற்கு அவன்: உள்ளவன் எவனுக்குங் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
For I say unto you, That unto every one which hath shall be given; and from him that hath not, even that he hath shall be taken away from him.

27. அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய சத்துருக்களை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார்
But those mine enemies, which would not that I should reign over them, bring hither, and slay them before me.


எனவே இந்த உதாரணம் ஜிஸுஸ் தன்னை பற்றி அறிவிப்பது தானே? அப்படி இல்லையா? அப்பா இது யாரை பற்றிய உதாரணம்? மக்களை கொலபுவதர்க்கா?


ஆர்சிஸ் அண்ணா, பதில் சொல்ல வேண்டும் என்று எதையாவது சொல்ல கூடாது. நான் போட்ட லிங்க் செய்தி தாளில் கிறிஸ்தவ பெற்றோர்கள் கிறிஸ்தவத்தை பேணாத பிள்ளைகளை வதைத்தா கொன்ற செய்தி. நீங்கள் கொடுத்தது, கிறிஸ்தவர்கள் இஸ்லாமுக்கு எதிராக சொல்லும் பொய்கள். இன்னும் இலவச உள்ளாடையை விரும்பி கிறிஸ்தவ இங்கிலாந்து நாட்டில் 60000 அரை நிர்வான கிறிஸ்தவ பெண்கள் மத்தியில் ஒரு பெண் முகத்தை மறைத்து உள்ளாடையுடன் நின்ற புகைப்படம், நீங்கள் அவளை இஸ்லாமியர் என்று குரிபிடுகிறிர். ஏன் 59999 கிறிஸ்தவ பெண்கள் அறை நிர்வாணமாக நின்றது உங்கள் கண்களுக்கு தென்பட வில்லையா? உங்களை போல் நானும் நினைத்தாள் வருட வருடம் இங்கிலாந்து நாட்டில் நடக்கும் கிறிஸ்தவ பெண்கள் முழு நிர்வான புகைப்படம், விதிகளில் முழு நிர்வாணமாக நடக்க அனுமதி கூறி நடந்த கிறிஸ்தவ பெண்கள் முழு நிர்வான ஆர்ப்பாட்டம், இன்னும் கிறிஸ்தவ போதகர் கிறிஸ்தவ ஊழியம் செய்யும் பெண்ணை கற்பழித்த புகைப்படம் என்று பலவற்றை வெளியிடலாம். உங்களை போல் நான் வெட்கம் அற்றவன் இல்ல, அப்படி செய்ய.

-ஜாவித்

Jawid சொன்னது…

கொல்வின் அண்ணா, கத்தி எடுப்பவன் கத்தியிலே சாவான் என்றால் எதுக்கு அண்ணா ஜிஸுஸ் ஏலரையும் கத்தி வாங்கி வச்சுக்கா சொன்னாரு?

http://isaakoran.blogspot.com/2011/04/jesus-and-sword.html

-ஜாவித்

Archies சொன்னது…

"//ஏன் உங்க ஜுதா சொந்த மருமகளோடு விபசாரம் செஞ்சார் அதை விளக்குங்களேன்? அவளை கொள்ள ஆணை குடுத்துட்டு குற்றவாளி தான் தான் என்று தெரிஞ்ச வுடனே சும்மா இருந்துடாரே அவருக்கு உங்க ஆண்டவன் என்ன தண்டனை கொடுத்தான் கொஞ்சம் சொல்லுங்க.//"


பாவம் செய்தவன் உண்மையாகவே தன் தவறை உணர்ந்து தன்னை மாற்றிக்கொண்டால் அவனுக்கு மன்னிப்பு உண்டு. - இது கிறிஸ்த்தவம்.



பாவம் செய்தவனுக்கு கசைய்டி, கை துண்டிக்கப்படுதல், கால் துண்டிக்கப்படுதல், ஆஸிட் முகத்தில் ஊற்றப்படுதல் etc....
இம்மையிலும் தண்டனை, ம்றுமையிலும் ந்ரகம் - இது இஸ்லாம்.

Archies சொன்னது…

Jawid said :
"//ஆர்சிஸ் அண்ணா, நீங்க என்ன சொல்ல விரும்புரிங்க? ......................... இந்த அடிப்படையில் பார்த்தா அவர் சொல்ற கதைல வர்ரா ராஜா அவர் தான் இல்லாட்டி அது இறைவன். அதனால் தான் அவர் இப்படி ஆரம்பிக்கிறார்://"


Archies:
இயேசு தன் சீஷர்கள் மூலமோ இல்லையென்றால் வேறு யார் மூலமாவதோ எத்தனை கொலை செய்தார் என்று குறைந்தது ஒரு சம்பவத்தை சொல்ல முடியுமா?


முகம்மதுவின் கொலைகளைப்பற்றி நான் ஒரு லிஸ்ட் தரவா?

Archies சொன்னது…

Jawid said:
"//ஆர்சிஸ் அண்ணா, 2007 வருஷம் உமர் அண்ணா சொன்னது போன மாசம் வந்த உங்களுக்கு தெரியுது ரொம்ப அதிசயம இருக்கு. //"

Archies:
போன மாசம் வந்த எனக்கு பழைய கட்டுரைகளை படிக்க எத்தனை நாட்கள் வேண்டும்? இதையெல்லாம் படித்து விட்டுதான் படிக்காத மாதிரி நடிக்கிறீர்களா?

Archies சொன்னது…

Jawid said:
"//விபச்சரம் செய்ய விரும்பாத பொன்னும் இதை படித்தால் கேட்டு போவாள். இப்படி விளக்கமா அனு அணுவா இறைவன் விளக்க அவசியம் தான்னா?//"


Archies:
உங்கள் விபச்சார சுவனத்தைப் பற்றி இப்பவே பர்தா போட்ட இஸ்லாமியப்பொண்ணுங்க 72 ஆண்களுக்காக ஏங்க ஆரம்பித்து விட்டார்கள்

Archies சொன்னது…

Jawid said
"//நீங்க வச்சு இருக்கிற வசனமும் யூதர்கள் இடம் இருந்து எடுத்தது அதாவது உங்க பாஷையில் காபி அடிச்சது அப்படினா நீங்க எப்படி எங்களை கொறை சொல்ல தகுதி யானவர்??//"



Archies:
கிறிஸ்த்தவர்கள் வைத்திருக்கிற வசனம் எங்கிருந்து காப்பியடிக்கப்பட்டது என்று சொன்னால் நானும் தெரிந்து கொள்வேன்.