ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

திங்கள், 25 மே, 2020

ரமலான் சிந்தனைகள் - 30: தியாகத்தைக் கொண்டாட ஒரு அழைப்பு

முஸ்லீம்களின் வருடந்தோறும் இரண்டு  முக்கியமான பண்டிகைகளை கொண்டாடுகின்றனர். முதலாவது, ரமலான் மாத முடிவில் அவர்கள் நோன்பை முடித்து "ஈகைத் திருநாள்" ஐக் (Festival of Breaking the Fast) கொண்டாடுகின்றனர். இரண்டாவது, ரமலான் முடிந்து இரு மாதங்கள் கழித்து, சுமார் 60 நாட்கள் கழித்து  "பக்ரீத் பண்டிகை" (Festival of the Sacrifice) ஐக் கொண்டாடுகின்றனர்.  "ஈகைத் திருநாள்" ஐ விட "பக்ரீத்" தான் பெரிய பண்டிகை என்றாலும், ஒரு மாத நோன்பின் (உபவாசத்தின்) முடிவில் கொண்டாடுவதால் முஸ்லீம்கள் "ஈகைத் திருநாள்" ஐ அதிகம் கொண்டாடுகின்றனர். முஸ்லீம்களின் புனிதப் பயணமான ஹஜ் செல்லுதலுடன் தொடர்புடையதாக இருப்பதால், "பக்ரீத்" பண்டிகை முஸ்லீம்களுக்கான முக்கியமான மற்றும் பெரிய பண்டிகை ஆகும். "பக்ரீத்" என்ற வார்த்தையின் பொருள்     "மிகப் பெரிய பண்டிகை" என்பதாகும். முஸ்லீம்களின் பக்ரீத் பண்டிகையானது இப்றாஹீமின் வாழ்க்கையுடன் நடந்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. இப்றாஹீம் தன் மகனை பலியிடச் சென்றபோது, அல்லாஹ் அவரை தடுத்து வேறொரு  "மகத்தான பலியை" கொடுத்து அச்சோதனையில் இருந்து இப்றாஹீமின் மகனைக் மீட்டதாக குர்-ஆன் 37:102-108ல் வாசிக்கிறோம். நான் முன்பு சொன்னது போல, எந்த மகன் என்று குர்-ஆன் குறிப்பிடவில்லை. ஆயினும், இப்றாஹீம் தன் மகனாகிய இஸ்மவேலைக் கூட்டிச் சென்றார் என முஸ்லீம்கள் நம்புகின்றனர்.  

அல்லாஹ் "மகத்தான பலியைக்" கொண்டு இப்றாஹீமின் மகனை மீட்டதைக் கொண்டாடும் முஸ்லீம்கள், ஒருவர் சுமையை இன்னொருவர் சுமக்க முடியாது என்றும் நம்புகின்றனர். குர்-ஆனில் இது பற்றி இருவேறு கருத்துக்கள் இருக்கின்றன. மேலும், இஸ்லாமிய பாரம்பரியத்தின் படி, காபாவில் உள்ள "கறுப்புக் கல்" முதன் முதலாக பூமியில் விழுந்த போது பளிங்கு போல வெள்ளைக் கல் ஆக இருந்ததாகவும், மனிதர்களின் பாவத்தினால் அந்தக் கல் கறுப்பாக மாறினதாகவும் சொல்லப்படுகிறது. முஸ்லீம்கள் ஹஜ் பயணத்தின் போது இந்தக் கல்லை முஹம்மதுவின் பெயரைச் சொல்லி முத்தமிடுவார்கள். ஒருவர் சுமையை மற்றொருவர் சுமக்க முடியாது என்றால், ஏன் வெள்ளைக் கல் கறுப்பாக மாறியது, ஏன் "தியாக பலி" என்ற இறையியல் கேள்வி-பதில் விளக்கம் இஸ்லாமில் இல்லை. இந்த முரண்பாடான கொள்கையானது மனிதர்களின் பாவங்களுக்காக இயேசு சிலுவையில் மரித்ததை நிராகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. முஸ்லீம்களைப் பொறுத்த வரையில், "ஈகைத் திருநாள்" இல் சகாத் காணிக்கை கொடுப்பதிலும், "பக்ரீத் திருநாள்" இல் ஒரு பெரிய விலங்கை பலியாகக் கொடுப்பதிலும் திருப்திப் பட்டுக் கொள்கிறார்கள். 

ஆபிரகாமை தேவன் சோதித்தார் என்றாலும், அவன் தன் மகனை பலியிட  அனுமதிக்கவில்லை. நாம் முதல் நாளில் பார்த்தபடி, ஈசாக்கை பலியிடுவதில் இருந்து காப்பாற்றின தேவன், கொல்கொதா என்ற வேறொரு மலையில் தேவன் தம் ஒரே பேறான மகனாகிய இயேசுவை சகல மனிதர்களின் பாவங்களையும் தீர்க்க பலியாக ஒப்புக் கொடுத்தார் என வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது. இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஒரு வரலாற்று உண்மை. அதுவே மனிதரின் இரட்சிப்புக்கும் ஆதாரமாக இருக்கிறது.  "எல்லாரையும் மீட்கும் பொருளாக" இயேசு தம்மையே கொடுத்தார் என வேதம் கூறுகிறது.   "வேறொரு இயேசு," "வேறொரு ஆவி," "வேறொரு சுவிசேஷம்" என்பதைப் பற்றி அப்போஸ்தலனாகிய பவுல் 2 கொரிந்தியர் 11ல் கூறுகிறார். இஸ்லாம் கூறுகிற ஈஸாவுக்கும் இதற்கும் என்ன தொடர்பு? "சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்" பற்றி அறிவிக்க வேண்டியது நம் கடமை ஆகும்.

முன்னமே சொன்னபடி, முஸ்லீம் நாடுகளில், சமுதாயங்களில் கிறிஸ்தவத்திற்கெதிரான உபத்திரவங்கள் அதிகம். அவைகளின் மத்தியிலும் இயேசுவை அறிவித்ததினால், இயேசுவை ஏற்றுக் கொண்டதினால் அனேக பாடுகளைப் பட்ட ஊழியர்கள், முஸ்லீமாக இருந்து இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்ட  கிறிஸ்தவர்கள் அனேகர் உண்டு. நாம் இயேசுவுக்காக என்ன தியாகம் செய்யப் போகிறோம். 

"இயேசுகிறிஸ்து தேவனாக இருந்தும் அவர் எனக்காக மரித்தது உண்மை எனில், நான் அவருக்காக செய்யும் எதுவும் பெரிய தியாகமாகி விட முடியாது" - சி. டி. ஸ்டட்

"அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரைப் பற்றி" (வெளிப்படுத்தல் 5, 7) பரலோகத்தில் பாடப் போகிற நாம், மனிதர் எல்லாரும் அந்த பாக்கியத்தைப் பெற ஜெபிப்போம், செயல்படுவோம். Because he lives...

- அற்புதராஜ் சாமுவேல்

தேதி: 23rd May 2020


ரமலான் சிந்தனைகள் 29: வேதத்தையுடையோரே...

யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் குறிக்கும் "வேதத்தை உடையவர்கள்" " (ahl al-kitab) என்ற வார்த்தை குர்-ஆனில் குறைந்தது 25 இடங்களில் வருகிறது.  வேதத்தை உடையவர்களில் நிராகரிப்பாளர்களை (குர்-ஆனை ஏற்றுக் கொள்ளாதவர்களை) பற்றிக் கூற ஸூரா 98 முழுமையும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அரேபியாவில் வாழ்ந்த மற்றவர்களைப் போலல்லாது, யூதர்களிடமும், கிறிஸ்தவர்களிடமும் இறைவனிடம் இருந்து வந்த வேதம் இருப்பதால் அவர்கள் வேதத்தை உடையவர்கள் என குர்-ஆன் கூறுகிறது. யூதர்களிடம் மோசேயின் மூலமாகக் கொடுக்கப்பட்ட தவ்ராத்தும், கிறிஸ்தவர்களிடம் ஈஸா மூலமாகக் கொடுக்கப்பட்ட இன்ஜீலும் இருந்ததாக குர்-ஆன் கூறுகிறது. குர்-ஆனும் அது போல இறைவனிடம் இருந்து வந்த ஒரு புத்தகம் என குர்-ஆன் 5:15ல் வாசிக்கிறோம். யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு சாதகமான ஒரு சில வசனங்கள் குர்-ஆனில் இருந்தாலும், இது முந்தைய வேதங்களை உறுதிப்படுத்தும் புத்தகம் என்று சொல்லும் குர்-ஆனில் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது குற்றச்சாட்டே பிரதானமான வைக்கப்படுகிறது. அல்லாஹ்வின் தூதரையும், குர்-ஆனையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தான் அவர்கள் மேல் வைக்கப்படும் பிரதானமான குற்றச்சாட்டு. அல்லாஹ்வின் இறைத்தூதர் மேல் கொண்ட எதிர்ப்பை நியாயப்படுத்துவதற்காக, வேண்டுமென்றே வேதங்களில் உள்ளவற்றை  "மறைத்து",  வேதத்தை "புரட்டி",  வசனங்களை இடம் மாற்றி வைத்து விட்டனர் என குர்-ஆன் 2:174; 4:46; 5:13, 41 யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது குற்றம் சாட்டுகிறது. "வேதத்தை உடையோர்கள்" என்று குறிப்பிடும் வசனங்களில் பெரும்பாலானவை, யூத மற்றும் கிறிஸ்தவ நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்குவதைக் காணலாம். குறிப்பாக, கிறிஸ்தவர்கள் மூன்று கடவுள்களை தொழுது பல தெய்வ வணக்கத்திற்குள் சென்று விட்டதாக குர்-ஆன் 4:171; 9:30,31 கூறுகிறது. ஆயினும், யூதர்கள், கிறிஸ்தவர்கள் என பொதுவாகக் குர்-ஆன் குறிப்பிட்டாலும், அவர்களைப் பற்றி, அவர்கள் என்ன வகையானவர்கள் என்பது பற்றிய் அறிய தெளிவான குறிப்புகள் எதுவும் இல்லை.

நாம் இதுவரை பார்த்தபடி, குர்-ஆனில் வருகிற வேதாகம நபர்களின் கதைகளைப் போன்றவை அனைத்தும் பரிசுத்த வேதாகமத்தில் உள்ளவை அல்ல, மாறாக பெரும்பாலும் தள்ளுபடியாகமங்களில் இருக்கும் சம்பவங்களுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன. மேலும், அரேபியாவில் வாழ்ந்து வந்த கிறிஸ்தவர்களைப் பற்றி நாம் ஆராயும்போது, அவர்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட பாரம்பரிய கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்தவர்கள் இல்லை என்றும், கள்ள உபதேசத்தை உடையவர்கள் என கருதப்படுகிற Monophysites, Nestorians, and Melkites என்ற பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என அறிஞர்கள் கூறுகின்றனர். இதுவரை, குர்-ஆன் சொல்கிற செய்தியும், அல்லாஹ்வும் வேதாகமம் சொல்வதற்கு முற்றிலும் எதிரானது என்று நாம் பார்த்தோம். குர்-ஆனில் வருகிற வேதாகம நபர்களை வைத்து என்ன செய்வது என்பதிலும், அதை கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ளப் பயன்படுத்துவதிலும் கிறிஸ்தவர்களிடையே பல முரணாக கருத்துக்கள் நிலவுகின்றன.  குர்-ஆனில் வேதாகமத்திற்கு ஒத்ததாகவும் முரணானதாகவும் காணப்படுகிற விஷயங்களை வைத்து முஸ்லீம்களுடனான உரையாடலை எளிதில் துவங்கி, வேதாகமம் கூறும் இயேசுவை நோக்கி அவர்களைக் கொண்டு வருவதுதான் நம் முன் இருக்கும் மிகப்பெரிய சவால்.  குர்-ஆனில் கிறிஸ்தவர்களைப் பற்றி வரும் வசனங்கள் இயேசுவின் தன்மை மற்றும் தெய்வீகத்தைக் கேள்விக்குள்ளாக்கி, கிறிஸ்தவர்களிடம் இருந்து (இஸ்லாமை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற ) ஒரு பதிலை எதிர்பார்ப்பதை நாம் காணலாம். சாத்தானுடனான சோதனையில் வேத வசனங்களைப் பயன்படுத்தின ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, தன்னிடம் சிக்கலான கேள்விகேட்டவர்களுக்கு சொன்ன பதில்கள்  பெரும்பாலும் கேள்விகளாகவே இருந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். விவாதத்தில் ஜெயிப்பது அல்ல நம் நோக்கம், முஸ்லீம்கள் கிறிஸ்துவின் அன்பைப் பற்றி தெரிந்து கொள்ள இயேசுவை அறிவிப்பதும், அறியச் செய்வதுமே நம் நோக்கமாக இருக்க வேண்டும்.

குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமான கர்த்தருடைய வேதமானது (சங்கீதம் 19:7), "இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும்" (எபிரேயர் 4:12) இருக்கிற படியால் நாம் தேவ அன்புடன் இயேசுவைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளும் நற்செய்தி கேட்கிறவர்களிடையே பெரிய மாற்றங்களை உண்டாக்கும் என்று விசுவாசிப்போம். இந்நற்செய்தியை பெரிய மேடையில் இருந்துதான் பேசவேண்டுமென்று இல்லை, உங்கள் அன்றாட வாழ்வில் காபி கடையிலும், காய்கறிக் கடையிலும் ஆரம்பிக்கும் உரையாடலில் இருந்தே நீங்கள் ஆரம்பிக்கலாம். அன்புடனும், ஜெபத்துடனும்  செய்ய தேவன் கிருபை செய்வாராக.

- அற்புதராஜ் சாமுவேல்

தேதி: 22nd May 2020

ரமலான் சிந்தனைகள் - 28: நமக்காக பரிந்து பேசி, தப்புவிக்க வல்லவர் யார்?

அல்லாஹ்வையும், இறுதி நாள் நியாயத்தீர்ப்பையும் நம்புபவர்களுக்கு, "நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது" என்று குர்-ஆன் 33:21 கூறுகிறது. முஸ்லீம்கள் கூடியமட்டும், அவர்களின் நபியான முஹம்மதுவைப் பின்பற்ற முயற்சிப்பதற்கு இது தான் காரணம். ஆயினும், இறுதி நாள் நியாயத்தீர்ப்பில், எவரும் தப்ப முடியாது என்றும், யாரும் யாருக்காகவும் சிபாரிசு பண்ண அல்லது பரிந்து பேச முடியாது என்றும் பல குர்-ஆன் வசனங்கள் கூறுகின்றன (குர்-ஆன் 2:48, 122,123, 254; 6:51, 70; 74:48). முஹம்மது அல்லது முஸ்லீம்களின் நபி ஒரு பரிந்து பேசுபவர் என குர்-ஆனில் எங்கும் சொல்லப்படவில்லை. மாறாக, அல்லாஹ்வின் தூதர் தன் பாவங்களுக்காக மன்னிப்புக் கேட்கவேண்டும் என குர்-ஆன் சொல்வதை குறைந்தது ஐந்து இடங்களில் காணலாம் (4:106; 40:55; 47:19; 48:2; 110:3). மேலும், அல்லாஹ்வின் தூதர் தன்னைப் பற்றிச் சொல்கையில், எனக்கோ என்னைப் பின்பற்றுபவர்களுக்கோ என்ன நடக்கும் என்று தெரியாது என்றும், தான் எச்சரிக்கை செய்பவர் மட்டுமே என்றும் சொல்வதை குர்-ஆன் 46:9ல் வாசிக்கிறோம். ஆயினும், இறுதி நாள் நியாயத்தீர்ப்பில் முஹம்மது தங்களுக்காக பரிந்து பேசுவார் என ஹதீஸ்களின் அடிப்படையில் முஸ்லீம்கள் நம்புகின்றனர். முஹம்மதுவின் பல வேண்டுதல்கள், குறிப்பாக அவருடைய வளர்ப்புத் தந்தை அபூ தாலிப், மற்றும் அவருடைய அன்னைக்காக பண்ணின வேண்டுதல்கள் கேட்கப்படவில்லை என்றே ஹதீஸ்கள் கூறுகிறது. மேலும், நரக அக்கினி பற்றி முஹம்மது மிகவும் பயந்தவராக இருந்ததாகவும், அதிலிருந்து தன்னைக் காப்பாற்றும்படி அல்லாஹ்விடம் வேண்டினதாகவும் ஹதீஸ்கள் கூறுகின்றன.

இயேசு பாவமற்றவர் என்பதைக் கூறும் பல வசனங்களை நாம் பரிசுத்த வேதாகமத்தில் வாசிக்கிறோம். "என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்?" என்று இயேசு பகிரங்கமாக தன்னை எதிர்த்த யூதர்களிடம் கேட்ட போதும், அவர்களால் எதுவும் சொல்ல முடியவில்லை. இயேசுவின் மேல் குற்றஞ்சாட்டினவர்களால், பல பொய் சாட்சிகளைக் கொண்டுவந்தும் எதையும் நிரூபிக்க முடியவில்லை (மத்தேயு 26:59,60). இயேசுவைப் கண்டதும், "உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி" என்று யோவான் ஸ்நானகன் சொன்னார். பாவமில்லாதவராயிருந்த இயேசு நமக்காக சிலுவையில் பலியானார் என்று நாம் வேதத்தில் வாசிக்கிறோம். அது மட்டுமல்ல, தம்மையே பலியாகக் கொடுத்த இயேசுவானவர் இப்பொழுதும் பாவமில்லாத பிரதான ஆசாரியராக நமக்காக பரிந்து பேசுகிறவராக பிதாவின் வலது பாரிசத்தில், பரலோகத்தில் இருக்கிறார் என வேதம் சொல்கிறது (எபிரேயர் 4:15; 7:25). மனத் தாழ்மையுடன் மற்றவர்களுக்கு ஊழியம் (சேவை) செய்யும்படி ஒரு நல்ல முன்மாதிரியை இயேசு நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார் என யோவான் 13:13-15; 1 பேதுரு 2:21 ல் வாசிக்கிறோம்.

இயேசுவின் வழியில் வாழ அழைக்கப்பட்டிருக்கிற மனிதர்களாகிய நாம், அதன்படி வாழவும், வாழ்ந்து மற்றவர்களுக்கு இயேசுவைக் காட்டவும் நம்மை ஒப்புக் கொடுப்போம். "நானே நல்ல மேய்ப்பன்" என்று சொன்ன இயேசுவைப் பின்பற்றுபவர்களின் கூட்டத்தில் இன்னமும் சேராதவர்களைக் கூட்டிச் சேர்க்கும் பொறுப்பை அவர் நம்மிடம் தான் கொடுத்திருக்கிறார். இம்மாபெரும் பணியில், நாம் செய்ய வேண்டியது என்ன என்று தேவன் நமக்கு வெளிப்படுத்தும்படி ஜெபிப்போம்.

- அற்புதராஜ் சாமுவேல்

தேதி: 21st May 2020


ரமலான் சிந்தனைகள் 27: இஸ்லாமிய சொர்க்கம் மற்றும் நரகம்

எல்லா மனிதர்களுமே நரகத்திற்கு வந்தாக வேண்டும் என்று குர்-ஆன் 19:71 சொல்வதை நாம் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக, குர்-ஆன் கூறும் சொர்க்கம் மற்றும் நரகம் பற்றி இன்று காணலாம். குர்-ஆனைப் பொறுத்வரையில், சொர்க்கத்தைப் பற்றி வரும் வசனங்களைப் பார்க்கிலும், நரகத்தைப் பற்றி குறிப்பிடும் வசனங்கள் மிக அதிகம். நரகத்தைக் குறிப்பிட குர்-ஆன் அதிகம் பயன்படுத்தும் பதம் "நெருப்பு" (an-Nar) ஆகும். நரகத்தின் நெருப்பானது, உலகத்தில் உள்ள அக்கினியைக் காட்டிலும் 70 மடங்கு அதிக வெப்பமானதாக இருக்கும் என இஸ்லாமிய பாரம்பரிய நூல்கள் கூறுகின்றன. குர்-ஆன் 15:44ன் படி, மனிதர்கள் செய்த குற்றங்களுக்குத் தக்கதாக அவ்ர்கள் செல்லும் வகையில் ஏழு வாசல்கள் அல்லது நிலைகள் நரகத்தில் இருப்பதாக முஸ்லீம்கள் நம்புகின்றனர். முதலாவது நிலையானது முஸ்லீம்களுக்கும், இரண்டாவது நிலையானது கிறிஸ்தவர்களுக்கும், மூன்றாவது நிலையானது யூதர்களுக்கும், நான்காவது நிலையானது பெர்சியர்களுக்கும் (அல்லது ஜோராஸ்ட்ரியர்கள்), ஐந்தாவது நிலையானது மந்திரவாதிகள் மற்றும் பல தெய்வங்களை வணங்குகிறவர்களும், ஆறாவது நிலையானது சிலை வணங்கிகளுக்கும், மற்றும் கடைசியும் மிகவும் பயங்கரமான ஏழாவது நிலையானது மாய்மாலக்காரர்களுக்கான மிகக் கொடூரமான தண்டனை வழங்கும் இடமாக இருக்கும் என இஸ்லாம் கூறுகிறது (குர்-ஆன் 70:15-18; 104:4-7; 4:10; 54:48; 74:42).

நரகத்தைப்ப் பற்றியும் நரகத்தில் மனிதனுக்குக் கொடுக்கப்படும் தண்டனைகள் பற்றியும் குர்-ஆன் கூறும் விவரங்கள் மிகவும் பயங்கரமான திகில் படத்தைக் காட்டிலும் கொடுமையானதாகவும், வாசிப்பவர் மனதில் ஒரு பயத்தை உண்டு பண்ணுவதாகவும் இருக்கிறதைக் காணலாம்.  பல நடைமுறைக் காரணங்களுக்காக நான் அவைகளை எல்லாம் விளக்காமல், இருப்பதிலேயே குறைந்த தண்டனை ஒன்றே ஒன்றை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன். நரக அக்கினியில் தோல் கருகி மனிதர்கள் வேதனைப் படும்போது, அவர்கள் தொடர்ந்து அந்த வேதனையை அனுபவித்துக் கொண்டே இருப்பதற்காக அவர்களுக்கு புதுத் தோல்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் என குர்-ஆன் 4:56 சொல்கிறது. தோல் இருக்கும் வரைதான் நீங்கள் தொடுதல் உணர்ச்சியையும், வலியையும் உணரமுடியும் என்பது அறிவியல். அல்லாஹ் அளிக்கும் நரக தண்டனை பற்றி அதிகம் அறிய விரும்பினால் பின்வரும் குர்-ஆன் வசனங்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள் (குர்-ஆன் 4:56; 14:17, 50; 22:19-22;25:14; 37:62-67; 56:42-44; 67:7,8; 69:30-32, 36; 78:25, 30). குர்-ஆன் கூறுவதை விட பலமடங்கு கொடிய நரக  தண்டனைகளை இஸ்லாமிய பாரம்பரிய நூல்கள் சொல்கின்றன. நரக தண்டனைக்குக் காரணம் அல்லாஹ் அனுப்பிய தூதரை நிராகரித்ததுதான் என குர்-ஆன் 35:37; 67:8-11 கூறுகிறது.

குர்-ஆனின் படி, முதல் நிலை நரகத்தில் இருக்கும் முஸ்லீம்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும்  அனைவரும் நரகத்திலேயே காலம் தள்ள வேண்டியது தான். முஸ்லீம்களுக்கு அல்லது அல்லாஹ் விரும்புபவர்களுக்குக் கொடுக்கும் இஸ்லாமிய சொர்க்கம் பற்றி நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  முஸ்லீம்கள் மட்டுமே செல்லக் கூடிய இஸ்லாமிய சொர்க்கத்திலும் எட்டு நிலைகள் இருப்பதாக குர்-ஆன் கூறுவதாக அறிஞர்கள் சொல்கின்றனர். இஸ்லாம் கூறும் நரகத்திற்கு நேர் எதிரானதாக இஸ்லாமிய சொர்க்கம் இருப்பதை குறிப்புகளில் இருந்து அறியலாம். குர்-ஆனின் படி, சொர்க்கம் என்பது குளிர்ந்த நீரோடைகளுடன் கூடிய பலவித வசதிகளுடன் கூடிய உல்லாசபுரி ஆகும் (வாசிக்க: குர்-ஆன் 47:15; 56:35-37; 55:72-75; 38:52; 56:22-23; 55:58; 78:33; 44:54). இஸ்லாம் கூறும் சொர்க்கமானது, வனாந்திர பூமியான அரேபியாவில் இருக்கும் ஒரு ஆண் அடைய விரும்பு சிற்றின்ப சுகங்களை அள்ளி வழங்கும் ஒரு இடமாக, முடிவிலாத சிற்றின்ப பரவசத்தைப் பெறுகிற இடமாக காட்டப்பட்டிருப்பதைக் காணலாம்.

 இஸ்லாமிய சொர்க்கம் மற்றும் நரகம் பற்றி வாசிக்கையில், அவை குர்-ஆன் சொல்லும் செய்தியைக் கேட்கிறவர்கள் மனதில் ஒரு பயங்கரத்தை உண்டு பண்ணி குர்-ஆனைக் கேட்பவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பயமுறுத்துவதை, அல்லது இனிவரும் வாழ்வில் அவர்கள் அடையப் போகிற உல்லாசங்களை நினைத்து இஸ்லாமை நாட வேண்டும் என்பதையும் குறிப்பதை நாம் அறிய முடியும். இஸ்லாமிய சொர்க்கம் என்பது சிற்றின்ப உலகமே அன்றி, அங்கே அல்லாஹ் இல்லை என்பதைக் கவனித்தீர்களா. பரிசுத்த்த வேதாகமத்தில், நாம் பரலோக ராஜ்ஜியத்தைப் பற்றி மிகவும் அதிகமாகவும் நரகத்தைச் பற்றி சில வசனங்களையும் நாம் வாசிக்கிறோம். ஆண்டவராகிய இயேசு தன் ஊழிய நாட்களில் பரலோக ராஜ்ஜியத்தைப் பற்றியே பேசினார் என்பதை நாம் நற்செய்தி நூல்களில் காண்கிறோம். பயத்துக்கு அல்ல, மனிதன் மேல் தேவன் காட்டும் அன்பு மட்டுமே பிரதானமாக சொல்லப்படுவதை நாம் வேதத்தில் காண்கிறோம். அது மட்டுமல்ல, பரலோகத்தின் மேன்மை, இன்பம் அல்லது சுகம் என்பது சிற்றின்பங்களை அனுபவிப்பது அல்ல, சர்வ வல்ல தேவனுக்கு முன்பாக நாம் நிற்பது என்பதை வெளிப்படுத்தல் 21, 22 அதிகாரங்களில் வாசிக்கிறோம். அதன் முன் சுவையை நாம் இந்த உலகத்திலேயே பெற்றனுபவிக்க தேவன் நமக்கு அருளியிருக்கிறார். உலக சிற்றின்பங்கள் நித்திய சந்தோசத்தைத் தர முடியாது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவை சலித்துப் போய்விடும். ஆனால், தேவனுடைய பிரசன்னமானது எவ்வளவு ஆச்சரியம்! அதை வார்த்தைகளால் விவரிக்கவும் முடியாது. தேவ சமூகத்தில் எப்பொழுதும் இருக்கும் தேவ தூதர்களே அதைக் கண்டு ஓயாமல் "பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்" என்று சொல்கிறார்களே! உண்மையில், தேவனுடைய பிரசன்னத்தை இழப்பது அல்லது தேவனுடைய சமூகத்தை விட்டு விலக்கப்பட்டு இருப்பது தான் நரக அனுபவமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். தேவன் இல்லாத இடத்தில் ஒரு மனிதன் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?

இஸ்லாமிய உலகம் பலவித பிரச்சனைகளை உள்ளேயும் வெளியேயும் சந்தித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் என்ன என்று நாம் அறிந்திருக்கிறோம். அவர்கள் சத்தியத்தை, சமாதான கர்த்தரை அறிந்து, உண்மையான மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெற நாம் ஜெபிப்போம். தேவனும் அதையே விரும்புகிறார்.

- அற்புதராஜ் சாமுவேல்

தேதி: 20th May 2020


2020 ரமலான் சிந்தனைகள் - 26: அல்லாஹ்வின் நியாயத்தீர்ப்பு நாள்

ரமலான் மாதத்தில் எல்லா நாட்களையுமே சிறப்பானதாக முஸ்லீம்கள் கருதினாலும், ஒரு நாளை மிகச் சிறப்பானதாக கருதி, இரவு முழுதும் விழித்திருந்து, இமாம்களின் பிரசங்கங்களைக் கேட்பதையும், குர்-ஆன் வசனங்களை ஓதுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். ரமலான் மாதத்தின் ஓரிரவில் குர்-ஆன் வெளிப்பட்டதாகக் கூறும் முஸ்லீம்களால், அது ரமலான் மாததின் எந்த நாள் என்பதை கூறமுடிவதில்லை. ஆயினும் பெரும்பாலான முஸ்லீம்கள் 26ம் நாள் இரவு நேரத்தை "Laylat al-Qadr" வல்லமையின் இரவாக ஆசரிக்கின்றனர். இது ஆயிரம் மாதங்களைப் பார்க்கிலும் மேலான அல்லது சிறந்த ஒரு இரவு என்று குர்-ஆன் 97:3 கூறுகிறது. மற்ற நாட்களில் செய்யப்படுவதை விட, இந்த இரவில் செய்யப்படும் செயல்கள் 1000 மடங்கு பலனைக் கொண்டு வரும் என்றும்,  அல்லாஹ் ஒவ்வொரு முஸ்லீமின் விதியை தீர்மானிக்கிற இரவாக இது இருப்பதாக முஸ்லீம்கள் நம்புவதால், இதை, "விதியை முடிவு செய்யும் இரவு" என்றும் அழைக்கின்றனர். ஆகவே ரமலான் மாதத்தில் மற்ற நாட்களில் நோன்பு இருக்காத அல்லது இருக்க முடியாதவர்களும் இந்த நாளில் நோன்பிருக்க உற்சாகப்படுத்தப்பட்டு, முழு இரவும் குர்-ஆன் வாசிப்பதிலும், மார்க்க நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்கள்.

 குர்-ஆனை தொடர்ந்து வாசிக்கையில், குர்-ஆனின் மிக முக்கியமான கருப்பொருள்கள் (themes of the Quran) திரும்பத் திரும்ப வருவதை நாம் காணலாம். அதில் முக்கியமானது, இறுதி நாளில் அல்லாஹ் மனிதர்களுக்கு அளிக்கும் நியாயத்தீர்ப்பைப் பற்றியது ஆகும். குர்-ஆனில் உள்ள மொத்த வசனங்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கு வசனங்கள் இறுதி நாள் நியாயத்தீர்ப்பு தொடர்பானது என அறிஞர்கள் கருதுகின்றனர். மனிதர்கள் அனைவரும் அல்லாஹ்வுக்கு முன் நியாயத்தீர்ப்பு நாளில் அவரவர் செய்த செயல்களுக்குத் தக்கதாக இஸ்லாமிய சொர்க்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ கொண்டு செல்லப்படுவர் என இஸ்லாம் கூறினாலும், எல்லா மனிதர்களும் நரகத்திற்குள் செல்வதை எவரும் தவிர்க்க முடியாது என குர்-ஆன் 19:71 கூறுகிறது. அல்லாஹ்வுக்காக போரில் (ஜிஹாத்) இறந்து போகிறவர்கள் மட்டுமே நேரடியாக இஸ்லாமிய சொர்க்கம் செல்ல முடியும். ஆக, ஒரு மனிதன் எவ்வளவுதான் நல்லது செய்திருந்தாலும் கூட, அவன் சொர்க்கம் போவானா அல்லது நரகம் போவானா என்பதை உறுதியாகக் கூற முடியாது. ஆகவே ஒரு முஸ்லீம் செய்ய வேண்டியதெல்லாம் என்னவெனில், இறுதி நாளைப் பற்ற பயத்துடன், தீமையை விட நற்காரியங்களை அதிகம் செய்ய வேண்டும் என்பதே. ஏனெனில், அல்லாஹ்வின் தராசில் ஒருவர் செய்த நற்காரியங்களை விட அவர் செய்த  தீமை ஒன்றே ஒன்று அதிகமாக இருந்தாலும் கூட, அளவற்ற அருளாளன், மன்னிப்பதில் சிறந்தவன் என்று அழைக்கப்படுகிற அல்லாஹ் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்.

இறுதி நாளைப் பற்றி இஸ்லாமில் சொல்லப்பட்டிருப்பவைகளில் பல விஷயங்கள் கிறிஸ்தவத்தில் சொல்லப்பட்டவைகளுக்கு ஒத்ததாகத் தோன்றினாலும், அடிப்படையில் பல முரண்களைக் காணலாம். முதலாவதாக, ஒருவரின் மறுமை வாழ்வை அவர் செய்கிற நன்மை தீமைகள் மட்டுமே தீர்மானிப்பதில்லை. மேலும், அன்பின் தேவன் நாம் நியாயத்தீர்ப்பு நாளில் தைரியத்துடன் இருக்கும் படி பண்ணி இருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, அனைவரும் நரகத்திற்குள் அல்ல, பரலோகத்திற்குள் வரவேண்டும் என்பதே தேவனுடைய விருப்பம். அதுமட்டுமல்ல, பரலோகத்திற்குச் செல்லும் வழி இயேசுவே என்பதையும் வேதம் தெளிவாகக் கூறுகிறது. குர்-ஆனை வாசிக்கும் முஸ்லீம்களில் பலர், குறிப்பாக ரமலான் மாதத்தில் வல்லமையின் இரவில், இயேசுவை தரிசனங்கள் மற்றும் சொப்பனத்தில் அநேக முஸ்லீம்கள் காண்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

சிலுவையில் அறையப்பட்டு, உயிர்த்தெழுந்த இயேசுவை இன்று இரவு அனேக முஸ்லீம்கள்  கண்டுகொள்ள நாம் ஜெபிப்போம்.

- அற்புதராஜ் சாமுவேல்

தேதி: 19th May 2020


ரமலான் சிந்தனைகள் - 25: அல்லாஹ் தரும் கூலி

"Thawab" என்ற அரபி வார்த்தை அல்லாஹ் ஒரு மனிதன் செய்யும் செயலுக்கு அளிக்கும் கூலி அல்லது வெகுமதியைக் குறிப்பிடப் பயன்படுத்துகிறது. குர்-ஆன் நெடுகிலும் வருகிற இவ்வார்த்தையானது, இவ்வுலகத்திலும், அதிலும் குறிப்பாக மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையிலும் அல்லாஹ் கொடுக்கும் வெகுமதி மற்றும் தண்டனை இரண்டையும் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், ஹிஜ்ரிக்குப் பின்பு வருகிற குர்-ஆன் அத்தியாயங்களில், இந்த வார்த்தை "தண்டனை" ஐக் குறிக்கிறதாக அறிஞர்கள் கருதுகின்றனர். குர்-ஆனில், பல தண்டனைக் கதைகள் இருப்பதை அறிவீர்களா! அவை, அல்லாஹ் உலகிற்கு அனுப்பினதாக குர்-ஆன் கூறும் நபிமார்களின் கதைகளுடன் தொடர்புடையவை. அல்லாஹ் 124000 நபிமார்களை உலகிற்கு அனுப்பினார் என இஸ்லாமிய பாரம்பரிய நூல்கள் சொன்னாலும், குர்-ஆனில் 28 நபிமார்களின் பெயர்களே இருக்கிறது. அதிலும், 25 பேர் பரிசுத்த வேதாகமத்தில்  வருகிற நபர்களைக் குறிப்பதாக வருகிறது எனப்படுகிறது. குர்-ஆனின் அத்தியாயம் 26ல் மட்டும் ஏழு "தண்டனைக் கதைகள்" வருகின்றன. அவை, மூஸா, இப்ராஹீம், நூஹ், ஹூத், லூத், ஸாலிஹ் மற்றும் ஷுஐப் ஆகியவர்களைப் பற்றிய கதைகளைக் கூறுகின்றன. இதுபோக, தண்டனைக் கதைகளை குர்-ஆனில் பல இடங்களில் காணலாம். அவற்றில் பெரும்பாலானவை ஏற்கனவே சொல்லப்பட்டதை அப்படியேவோ அல்லது சிறு மாற்றத்துடனோ திரும்பச் சுருக்கமாக சொல்வதாக இருக்கின்றன.

இத்தண்டனைக் கதைகளின் சாராம்சம் இதுதான்: அல்லாஹ் தன் நபியை மக்களிடையே அனுப்புகிறார். அந்நபி தன் மக்களை அல்லாஹ்வுக்கு அஞ்சும்படியும், கீழ்ப்படியவும் அழைக்கிறார். ஆனால், அந்நபியை நம்பாத மக்கள் அவரை நிராகரித்து அவமதிக்கின்றனர். உடனே, அல்லாஹ் அம்மக்களை அழித்து, தன் நபியைக் காப்பாற்றிவிடுகிறார். இதற்கு விதிவிலக்காக குர்-ஆனில் சொல்லப்பட்டிருப்பது, யூனுஸ் (வேதாகமத்தில், யோனா) கதை மட்டுமே. குர்-ஆன் 37:139-148ன்  படி, யூனுஸின் மக்கள் அவருடைய செய்தியை ஏற்றுக் கொண்டு தண்டனைக்கு தப்பிவிடுகிறார்கள். இத்தண்டனைக் கதைகள் மூலமாக, குர்-ஆன் ஓதுகிற, கேட்கிற, மற்றும் வாசிக்கிறவர்களுக்கு சொல்லப்படும் செய்தி என்னவெனில், முஹம்மது மூலமாக சொல்லப்படுவதற்கு செவிகொடுக்காத ஜனங்களுக்கும் "தண்டனைக் கதைகளில்" வரும் மக்களுக்கு என்ன நடந்ததோ அதுவே செய்யப்படும் என்பதே. இஸ்லாமிய மார்க்கத்தில் "பயம்" முக்கிய பங்கு வகிப்பதை நாம் முன்னமே வாசித்திருக்கிறோம்.

குர்-ஆன் மற்றும் பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிற தீர்க்கதரிசிகளைப் பற்றிய சம்பவங்களில் இருந்து நாம் பல காரியங்களையும், இரண்டிற்குமிடையேயான வித்தியாசங்களையும் விளங்கிக் கொள்ளலாம். வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிற படிப்படியான வெளிப்படுத்தல் என்பதற்கு முற்றிலும் எதிரிடையான ஒன்றை குர்-ஆனில் காண்கிறோம். அல்லாஹ்வின் செய்தியை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அழிக்கப்படுவதுடன் அக்கதை முடிந்து, முஹம்மது காலத்திலிருந்து அது வெறும் எச்சரிக்கையாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அத்துடன், மறைமுகமாக அல்லது நேரிடையாக இஸ்லாம் கூறும் செய்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரு மிரட்டல் அல்லது எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. ஏனெனில், இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் அல்லாஹ்வால் அனுப்பப்படும் நபிகள் "எச்சரிக்கை செய்பவர்களே." ஆனால், பரிசுத்த வேதாகமத்தில் மனிதர்கள் மீது தேவன் கொண்டிருக்கும் அன்பையும், மனிதனை இரட்சிக்கும் இறைத்திட்டத்தின் படிப்படியான நிறைவேறுதலையும் நாம் காண்கிறோம். வேதாகமம், தேவனை விட்டு விலகிச் சென்ற மனிதனுக்கு மீட்பையும், அம்மீட்பை இலவசமாக அருளுகின்ற மீட்பரையும் பற்றிச் சொல்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் சொல்வது போல, "பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்" (ரோமர் 6:23).

வேதாகமம் கூறும் நித்திய ஜீவ மார்க்கத்திற்கு  முஸ்லீம்கள் அனைவரும் வந்து சேர ஜெபிப்போம். "நித்திய ஜீவனை அளிப்பேன்" என்று வாக்குப்பண்ணின தேவனை பற்றி முஸ்லீம்கள் அறிந்து கொள்ள "திறந்த வாசல்" (வாய்ப்புகள்) உண்டாகவும் ஜெபிப்போம்.

- அற்புதராஜ் சாமுவேல்

தேதி: 18th May 2020

ரமலான் சிந்தனைகள் - 24: தக்பீர் - அல்லாஹு அக்பர். உண்மையா?

முஸ்லீம்கள் அதிகம் பயன்படுத்தும் பயன்படுத்தும் சொற்றொடர்களில் மிக முக்கியமானது (அனைத்தையும் விட) அல்லாஹ் மிகப் பெரியவன் என்ற பொருள் தரும் "அல்லாஹு அக்பர்" ஆகும். ஐந்துவேளைத் தொழுகைகள், மற்றும் எந்த நேரத்திலும், மகிழ்ச்சி, துக்கம் என எல்லாவித உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கும் முஸ்லீம்கள் "அல்லாஹு அக்பர்" என்று கூறுவர். "தக்பீர்" என்பது "அல்லாஹு அக்பர்" என்ற சொற்றொடரைக் குறிக்கும் அரபிச் சொல் ஆகும். குர்-ஆனில் இந்த சொற்றொடர் இல்லை என்றாலும், இதைச் சொல்லாத முஸ்லீமைக் காண்பதரிது. "அல்லாஹ் பெரியவன்" என்று முஸ்லீம்கள் நம்பினாலும், குர்-ஆனை வாசிக்கும்போது, அல்லாஹ் செய்யும் சத்தியங்களின் பட்டியல் அதன் உண்மைத்தன்மை பற்றி பல கேள்விகளை எழுப்புகிறது. உயிருள்ள, உயிரற்ற, அசையும், அசைவற்ற, விண்ணிலுள்ள, மண்ணிலுள்ள, பார்க்கக் கூடிய, மற்றும் பார்க்க முடியாத என பலவற்றின் மீதும் அல்லாஹ் செய்யும் சத்தியங்களைக் குறிப்பிடும் குர்-ஆன் வசனங்கள் அனைத்தையும் பற்றிச் சொல்ல இங்கு இடம் போதாது. ஆகவே, எனக்குத் தெரிந்த வரையில், அவற்றின் இருப்பிடம் மட்டும் இங்கே கொடுத்திருக்கிறேன் (குர்-ஆன்: 37:1-4; 43:2, 3; 44:2, 3; 51:1-4, 7, 8; 52:1-6; 53:1; 68:1; 69:38,39; 70:23, 32-34,70; 75:1-2; 77:1-5; 79:1-5; 81:15-18; 84:16-18; 85:1-3; 86:1,11,12; 89:1-4; 90:3; 91:1-7; 92:1-3; 93:1,2; 95:1-3; 100:1-5; 103;1).

குர்-ஆனில் காணும் சத்தியங்களின் பட்டியலைக் கண்டதும் நினைவுக்கு என்ன? வேதாகமத்தில் ஆணையிடுதல் அல்லது சத்தியம் செய்தல் பற்றி என்ன இருக்கிறது!  "என் பேரில்", "என் பரிசுத்தத்தின் பேரில்" "என்னைக் கொண்டு" (ஆதியாகமம் 22:18, சங்கீதம் 89:35; எரேமியா 49:13) என தேவன் தன் பேரிலேயே ஆணையிடுவதைக் காண்கிறோம். ஏன் அவ்வாறு செய்தார் என்று ஆராய்ந்து பார்க்கும்போது, "ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமது பேரிலே தானே ஆணையிட்டு" என்று எபிரேயர் 6:13ல் வாசிக்கிறோம். இவ்வேதபகுதியை தொடர்ந்து வாசிக்கும்போது, "தங்களிலும் பெரியவர்பேரில் ஆணையிடுவார்கள்" என்று வாசிக்கிறோம். அப்படியானால், இவ்வசனத்தின் வெளிச்சத்தில் குர்-ஆன் வசனங்களைப் பார்க்கும்போது என்னமாய் தோன்றுகிறது. எதன் மீதும் "சத்தியம்பண்ணவேண்டாம்" என்பதே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கொடுத்திருக்கும் மலைப்பிரசங்க போதனை. வேதாகமத்தில், இதெல்லாவற்றையும் விட மிகச் சிறப்பானதாக இருப்பது என்னவெனில், இம்மகா பெரிய தேவன், மரித்தோரின் தேவனாயிராமல், ஜீவனுள்ளோரின் தேவனாக இருக்கிறார் என்பதே! (மத்தேயு 22:32) நாம் அவரை உண்மையாய் சேவிக்கும் பட்சத்தில், நம்முடன் அவரை ".........ன் தேவன்" என்று அடையாளப்படுத்திக் கொள்ள தயங்குவதில்லை.

வானாதி வானங்களும் கொள்ளக் கூடாத பரலோகத்தின் தேவன், நம் இருதயத்திலும் வாசம் பண்ண விரும்புகிறார். நாமும் அவரைப் போல பரிசுத்தமானவராக மாற வேண்டும் என்பதே அவருடைய விருப்பம். இந்த அன்பும் பரிசுத்தமும் அனைவரும் பெற வேண்டும் என்பது அவர் விருப்பம். இதை இஸ்லாமியர்களும் அறிந்து கொள்ள நம் ஜெபத்தில் அறைகூவல் விடுப்போம்.

- அற்புதராஜ் சாமுவேல்

தேதி: 17th May 2020


ரமலான் சிந்தனைகள் - 23: உங்கள் தலைவிதியை அல்லாஹ் தீர்மானிப்பான் - இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்)...?

முஸ்லீம்கள் எல்லாமே அல்லாஹ்வின் சித்தத்தின் படி, அல்லாஹ் நாடினால் மட்டுமே நடக்கிறது என்று நம்புகிறார்கள். ஆகவேதான் அவர்கள் எந்த ஒரு வேலையையும் செய்யத்துவங்கும்போது, அல்லது அது பற்றி பேசும்போது இன்ஷா அல்லாஹ் என்று சொல்கிறார்கள். இதைச் சொல்லும் குர்-ஆன் வசனங்கள் பல உண்டு (3:73,74; 5:54; 14:27; 57:21; 62:4). மேலும், ஒருவரை சரியான வழியில் நடக்கச் செய்வதும், வழிதவறச் செய்வதும் (தவறான வழியில் நடத்துவதும்) கூட அல்லாஹ்தான் என்று குர்-ஆன் 6:39,125; 14:4; 16:93; 35:8 சொல்கிறது. அது மட்டுமல்ல, அல்லாஹ் தவறான வழியில் நடத்துபவர்களை வேறு எவரும் சரியான வழியில் நடத்த முடியாது என்றும், அல்லாஹ் சரியாக வழிநடத்துபவர்களை எவரும் தவறாக வழிநடத்த முடியாது என்று குர்-ஆன் 7:186; 13:33; 17:97; 18:17; 39:37 ஆகிய வசனங்கள் கூறுகிறது.

அல்லாஹ்வால் முன்குறிக்கப்படுதல் தொடர்பான இறையியல் பிரச்சனை பற்றியோ, மனிதனுடைய சுயாதீனத்தன்மை பற்றிய தத்துவார்த்த பிரச்சனை பற்றியோ குர்-ஆன் பேசுவதில்லை. குர்-ஆன் 37:96 சொல்வது போல, ""உங்களையும், நீங்கள் செய்த(இ)வற்றையும், அல்லாஹ்வே படைத்திருக்கின்றான்." நீங்கள் செய்யும் எல்லாவற்றிற்கும் காரணம் அல்லாஹ்தான். ஆயினும், அல்லாஹ்வை எவரும் கேள்வி கேட்க முடியாது. அல்லாஹ் எவருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை என்று முஸ்லீம்கள் நம்புகின்றனர். ஏனெனில், எல்லாவற்றையும் அல்லாஹ் முன்குறித்தே படைத்திருக்கின்றான் என குர்-ஆன் 54:49 கூறுகிறது. ஆகையால், குர்-ஆனின் கூற்றுப்படி ஒருவர் நல்லவராக இருப்பதும் கெட்டவராக இருப்பதும், நல்லதோ கெட்டதோ எதுவும் அல்லாஹ்வின் முன்குறித்தலின் படியேயன்றி, மனிதன் சுயமாக எதையும் செய்வதில்லை என முஸ்லீம்கள் நம்புகின்றனர். அல்லாஹ் நாடினால்... என்று சொல்லும் முஸ்லீம்கள், அல்லாஹ் என்ன நினைக்கிறார் என்பதையோ, அல்லாஹ்வுக்கு விருப்பமானதா என்றோ உறுதியாக எதையும் சொல்ல முடியாது. ஏனெனில், இஸ்லாமின்படி, மனிதனுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையேயான உறவு அன்பை அடிப்படையாகக் கொண்ட இருவழிப்பாதை அல்ல, மாறாக பயத்தை மையமாகக் கொண்ட ஒருவழிப்பாதை.

தேவனுடைய சித்தம் பற்றி பரிசுத்த வேதாகமம் சொல்வதற்கும், அல்லாஹ்வின் சித்தம் பற்றி குர்-ஆன் சொல்வதற்கும் எவ்வளவு வித்தியாசம் பாருங்கள். மனிதன் தன் சுயாதீனத்தை தவறாகப் பயன்படுத்தி தேவனை விட்டுவிலகிச் சென்றாலும், அன்பின் தேவன் திரும்பவும் மனிதனை மீட்டு உறவை புதுப்பித்துக் கொள்ள அவருக்கு உள்ள விருப்பததை நாம் வேதாகமத்தில் வாசிக்கிறோம். வாழ்க்கையில் அனுபவிக்கிறோம். துன்மார்க்கனின் மரணத்தைக் காட்டிலும், "அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம்" என்று தேவன் கூறுகிறார்.   "ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும்" நான் உனக்கு முன் வைக்கிறேன், நீ தெரிந்து கொள் என்று தேவன் சொல்வதை நாம் வேதத்தில் வாசிக்கிறோம் (யாத்திராகமம் 30:15,19).  வேதாகமத்தின் தேவன் எதையும் கட்டாயப்படுத்துவதில்லை. அவர் கண்ணியமானவர். தேவனுடைய கட்டளைகள் எல்லாம் "அன்பு செய்தல்" என்ற கற்பனையில் அடங்கியிருக்கிறது என்று இயேசு சொன்னார். மேலும்,  "நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்" என்று  யோவான் 14:15ல் இயேசு சொல்லி இருக்கிறார்.  ஆச்சரியமான அன்பு!

சர்வ சிருஷ்டிகளையும் படைத்த தேவனின் உண்மையான விருப்பம், பயத்துடன் வாழ்வது அல்ல, "அப்பா, பிதாவே!" என்று அன்புடனும் உரிமையுடனும் அவருடன் நெருங்கிய மகிழ்ச்சியான வாழ்வைப் பெறுவதுதான் என்பதை முஸ்லீம்கள் அறிந்துகொள்ளவும், அதை அவர்களிடம் எடுத்துச் சொல்ல வாய்ப்புகள் கிடைக்கவும் ஜெபிப்போம்.

ரமலான் சிந்தனைகள் - 22: குர்-ஆனில் அல்லாஹ்வின் அன்பு?

முஸ்லீம்கள் "அல்லாஹ் ஒருவனே" என்றும், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை" என்று நம்புகின்றனர் என்று பார்த்தோம். அல்லாஹ்வின் ஒருமைத்தன்மையைப் பற்றிய தங்கள் நம்பிக்கையை குறிப்பிட "தவ்ஹீத்" என்ற வார்த்தையை முஸ்லீம்கள் பயன்படுத்துகின்றனர். குர்-ஆனின் ஸூரா 112 இறைவனின் ஒருமைத் தன்மையைப் பற்றி குறிப்பிட்டு பேசுவதால், அதை ஸூரத்துல் தவ்ஹீத் என்றும் முஸ்லீம்கள் குறிப்பிடுவர். ஆயினும், குர்-ஆனில் "தவ்ஹீத்" என்ற வார்த்தை குர்-ஆனில் ஒரு இடத்தில் கூட இல்லை. இது பற்றி முஸ்லீம்களிடம் கேட்டால், "தவ்ஹீத்" என்ற வார்த்தை இல்லாவிட்டாலும், "தவ்ஹீத்" ஐ குறிப்பிடும் கருத்து அல்லது கொள்கை குர்-ஆனில் பல இடங்களில் இருக்கிறது என்று பதில் சொல்வர். தவ்ஹீத் பற்றி பேசும்போது, அல்லாஹ்வை தனி ஒருவன் என்று சொல்லும்போது, அவரை அன்புடையவர் என்று சொல்ல முடியாது, ஏனெனில் அன்பைக் காண்பிக்க அல்லது செயல்படுத்த வேறொரு பொருள் அல்லது நபர் தேவை.

குர்-ஆனில் "அல்லாஹ் ஒருவனே" என்று சொல்லும் இடங்களில் எல்லாம், அல்லாஹ் தொடர்புத்தன்மை மறுக்கப்படுவதை நாம் காணலாம் (குர்-ஆன் 112:3). அன்பைக் குறிக்கும் அரபிச் சொல் habb ஆகும். ஆனால் குர்-ஆனில், அல்லாஹ் மனிதர்களுடன் அன்புறவு கொள்ள விரும்புகிறான் என்பதைக் குறிக்கும் ஒரு வசனமும் கிடையாது. மாறாக, படைக்கப்பட்ட மனிதர்களுடன் அல்லாஹ்வுக்கு அன்புறவு கிடையாது என்றும், அவர்கள் இறைவனால் அன்புசெய்யப்படுபவர்கள் அல்ல என்றே குர்-ஆன் 5:18 கூறுகிறது. குர்-ஆன் கூறும் அல்லாஹ்வின் அன்பு நிபந்தனைக்க்குட்பட்டதாகும். நீங்கள் அல்லாஹ்வை நேசித்தால். கீழ்ப்படிந்தால், அவன் உங்களை நேசிப்பான். நீங்கள் நேசிக்காவிட்டால் அவனும் உங்களை நேசிக்கமாட்டான் என குர்-ஆன் 3:31,32 கூறுகிறது. மனிதர்களை அல்லாஹ்வை நேசிப்பது பற்றி கூறும் குர்-ஆன், அல்லாஹ் மனிதர்களை நேசிப்பது பற்றி கூறுவதில்லை. ஏனெனில் அல்லாஹ் மனிதர்களால் அறியமுடியாத, மனித அறிவுக்கு அப்பாற்பட்டவர் (Transcendence God).

திரித்துவம் பற்றி கேள்வி எழுப்பும் முஸ்லீம்களிடம், திரித்துவம் என்ற வார்த்தை பரிசுத்த வேதாகமத்தில் இல்லை என்றாலும், தேவனுடைய திரித்துவம் எப்படி பல இடங்களில் கூறப்பட்டிருக்கிறது என்பதை நாம் எளிதில் விளக்கிக் கூறமுடியும். அத்துடன், தேவனுக்கும் மனிதனுக்குமான அன்புறவுக்கு அது எப்படி ஆதாரமாக இருக்கிறது என்பதையும் நாம் சொல்ல வேண்டும். திரித்துவத்தை விளக்கும்போது, "தேவன் அன்பாகவே இருக்கிறார்" என்று வேதம் (1 யோவான் 4:16) சொல்வதை நாம் விளங்கிக் கொள்ள முடியும். அந்த அன்பின் தேவன், தம் அன்பினால் மனிதனை தமது சாயலாகப் படைத்து, அவருடைய அன்பை மனிதனும் தேவனுடைய அன்பை அனுபவித்து மகிழ அவர் அருள் செய்திருக்கிறார். மனிதன் தன் பாவத்தினால் அந்த அன்புறவில் இருந்து விழுந்து போனாலும், தேவன் தம் அன்பினால் திரும்பவும் உறவைப் புதுப்பிக்க வழிவகை செய்திருக்கிறார். "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" (யோவான் 3:16). "நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்" (ரோமர் 5:8). பரிசுத்த வேதாகமம் கூறும் தேவனுடைய அன்பு நிபந்தனையற்றது. எல்லோரும் அந்த அன்பில் இணைந்து வாழ தேவன் விரும்புகிறார்.

இயேசுகிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட முஸ்லீம்களில் பெரும்பாலானோர் தங்கள் நண்பர்கள் மூலமாக இயேசுவை, தேவ அன்பை அறிந்து கொண்டதாக முன்பு சொல்லி இருந்தேன். தேவன் நம்மேல் வைத்த அன்பு பெரிது. நாம் பார்க்கிற முஸ்லீம்களிடம் தேவ அன்பைக் காட்ட தீர்மானிப்போம். ஆயிரம் வார்த்தைகளை விட நீங்கள் காட்டும் அன்பு பெரிய மாற்றங்களை உண்டாக்கும். ஏனெனில் "அன்பே பெரியது."

- அற்புதராஜ் சாமுவேல்

தேதி: 15th May 2020

Source: http://arputhaa.blogspot.com/2020/05/22.html


2020 ரமலான் சிந்தனைகள் பக்கம்

சகோ. அற்புதராஜ் சாமுவேல் பக்கம்


2020 ரமலான் சிந்தனைகள் - 21: குர்-ஆனில் வரும் பல தெய்வங்கள்!

மனிதன் அல்லாஹ்வை அறிந்து கொள்ள முடியுமா என்பது பற்றியும், அல்லாஹ்வுக்கும் மனிதனுக்குமிடையேயான உறவு பற்றியும் முந்தைய பார்த்தோம். ஆனால், இஸ்லாமைப் பொறுத்தவரையில், அல்லாஹ்வைப் பற்றிய அவர்களின் வாய்மொழி அறிக்கை முஸ்லீம்களின் நம்பிக்கையில் முக்கியமானதாகவும், இஸ்லாத்தின் ஐந்து அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகவும் இருக்கிறது. அஷ்-ஷஹாதா اَلشَّهَادَةُ‎ (aš-šahādah) என்று அரபி மொழியில் சொல்லப்படும் இஸ்லாமிய விசுவாச அறிக்கை என்னவெனில், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை, முஹம்மது அல்லாஹ்வின் தூதர்" (lā ʾilāha ʾillā -llāh muḥammadun rasūlu -llāh). இதை ஒருவர் நம்பிக்கையுடன் சொன்னால் அவர் அதன் பின் முஸ்லீமாகிவிடுகிறார் என முஸ்லீம்கள் நம்புகின்றனர்.

முஸ்லீம்கள் அறிக்கை செய்யும் இந்த கலீமாவானது, அவர்கள் அறிக்கை செய்கிற அதே வடிவத்தில் குர்-ஆனில் அடுத்தடுத்து எங்கும் இல்லை. குர்-ஆனில், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை" என்ற சொற்றொடர் 40க்கும் அதிகமான முறை வருகிறது. இறைவன் ஒருவனே என்று சொல்லும் குர்-ஆன் வசனங்கள் பல உண்டு (37:4-5; 2:163; 6:19; 16:22; 112:1-4). இஸ்லாமின் அடிப்படை போதனையான இதை மீறுபவர் ஷிர்க் எனப்படும் அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் என்கிற பாவத்தை செய்தவராகிவிடுகிறார். அல்லாஹ் ஒருவனே என்றும், முஹம்மது பற்றியும் அறிக்கை செய்யும் முஸ்லீம்கள், அல்லாஹ்வுக்கு இணையாக முஹம்மதுவுக்கும் கீழ்ப்படியும்படி சொல்கிற பல வசனங்களை குர்-ஆனில் (5:93; 24:54; 64:12) காணலாம். அது மட்டுமல்ல, குர்-ஆன் 53:19,20 வசனங்களில் மூன்று அரேபிய பெண் தெய்வங்கள் பற்றி வாசிக்கிறோம்.

இறைவன் ஒருவனே என்று சொல்லும் குர்-ஆன் ஏன் அரேபியப் பெண் கடவுள்களைப் பற்றி குறிப்பிடவேண்டும்? இஸ்லாமிய ஆதார நூல்களை வாசிக்கும்போது, அவை சாத்தானின் வசனங்கள் என்றழைக்கப்படுகிற, முஸ்லீம்களின் தீர்க்கதரிசியான முஹம்மதுவின் வாழ்க்கையில் நடந்ததாகச் சொல்லப்படுகிற ஒரு சம்பவத்தை அவை குறிப்பிடுவதாக சொல்கின்றன. குர்-ஆன் கூறும் இறை நம்பிக்கையான தனி ஒருமை (absolute one) கொள்கையில் பிரச்சனை இருக்கிறது என்று முன்பு சொல்லி இருந்தேன். அது பற்றி நாளை எழுதுகிறேன். இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புவது என்னவெனில், இறைவன் ஒருவனே என்று போதித்த முஹம்மதுவே அல்லாஹ்வுக்கு இணைவைத்தார் என்று இஸ்லாமிய நூல்கள் சொல்கின்றன, மற்றும் அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிதலையும் முஹம்மதுவுக்கு கீழ்ப்படிதலையும் பிரித்துப் பார்க்க முடியாதபடி பல குர்-ஆன் வசனங்கள் சொல்வதன் பொருள் என்ன?

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஆவியானவரால் ஏவப்பட்டு நாற்பது நாள் வனாந்திரத்தில் உபவாசமிருந்து மிகவும் பசியாயிருந்தபோதும் கூட, "அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக" என்று சொல்லி பிசாசுக்கு எதிர்த்து நின்றதை நாம் மத்தேயு 4:1-11 ல் வாசிக்கிறோம். மிகவும் சோதனையான நேரத்திலும் கூட, "அப்பா பிதாவே,..ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது" என்று ஒப்புக் கொடுத்து ஜெபிப்பதை நாம் நற்செய்தி நூலில் வாசிக்கிறோம். அதுமட்டுமல்ல, பிதாவாகிய தேவனுக்கும் அவருக்கும் உள்ள உறவின் நெருக்கத்தையும் அறிகிறோம். அல்லாஹ் பற்றி குர்-ஆன் சொல்வது, சீனாய் மலையில் மோசேக்கு தேவன் கொடுத்த பத்து கற்பனைகளில் முதலாவதான, "என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்" என்பதற்கு ஒத்ததாக இருப்பது போல காணப்பட்டாலும், நாம் குர்-ஆன் கூறும் அல்லாஹ்வின் குணாதிசயங்களை பரிசுத்த வேதாகமத்தின் வெளிச்சத்தில் ஆராய்ந்து பார்க்கும்போது வித்தியாசம் என்ன என்பதை அறிந்து கொள்கிறோம். அதுமாத்திரமல்ல, வேதாகமத்தின்படி முஹம்மது யார் என்பதையும் பற்றி தெரிந்து கொள்கிறோம் (உபாகமம் 18). ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிசாசை ஜெயிப்பதற்கு மட்டுமல்ல, நித்திய வாழ்விற்கும் வழிகாட்டினார். " ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்" என்று இயேசு சொல்லி இருக்கிறார் (யோவான் 17:3).

உண்மை இன்னதென்று உணர்ந்து, ஒன்றான மெய் தேவனையும், அவரைச் சென்றடைவதற்கான வழியையும் முஸ்லீம்கள் கண்டு, ஏற்றுக் கொள்ள நாம் ஜெபிப்போம். நம் ஜெபங்கள் ஒரு போதும் வீணாவதில்லை.

ரமலான் சிந்தனைகள் 20: அல்லாஹ் யார்?

அல்லாஹ் (Allah) என்ற அரபிச் சொல் al என்ற  சுட்டுச் சொல்லுடன்  ilah என்ற பெயர்ச்சொல் சேர்ந்து வருவதாகும். அல்லாஹ் என்பது, கடவுளைக் குறிக்கும் ஒரு பொதுவான வார்த்தை, 2500க்கும் அதிகமான முறை குர்-ஆனில் வருகிறது. இஸ்லாம் வருவதற்கு முன்பு, முஹம்மதுவின் காலத்திற்கு முன்பே அல்லாஹ் ஒரு முக்கியமான கடவுளர்களில் ஒருவராக அரேபியர்களுக்கு இருந்திருக்கிறார். அல்லாஹ் என்பது பொதுவான ஒரு பெயராக இருந்தாலும்,  அல்லாஹ்வுக்கு இருப்பதிலேயே சிறந்த "அழகிய திருநாமங்கள்" (பெயர்கள்) இருப்பதாக குர்-ஆன் 7:180; 17:110; 20:8; 59:24 ஆகிய வசனங்களில் வாசிக்கிறோம். குர்- ஆன் மற்றும் இஸ்லாமிய பாரம்பரியங்களின் அடிப்படையில் முஸ்லீம்கள் அல்லாஹ்வின்  99 பெயர்கள் அல்லது நாமங்கள் என வரிசைப்படுத்தி, அவைகளை மனப்பாடம் செய்து, அவைகளைப் பற்றி சிந்திக்கின்றனர். அல்லாஹ்வுக்கு 99 பெயர்களை வைத்து, முஸ்லீம்கள்  தொழுகை செய்தாலும், இஸ்லாமிய நம்பிக்கையின் படி, அல்லாஹ்வுடன் எவரும் நேரடியாக  உறவோ அல்லது தொடர்போ வைத்துக் கொள்ள முடியாது. இஸ்லாமில் அது தடைசெய்யப்பட்டிருக்கிறது. முஹம்மது அவர்கள் அல்லாஹ்விடம் இருந்து இறைவேதம் பெற்றதாகவும், அவர் இறுதி இறைத் தூதர் ஆதலால் அவருக்குப் பின் அல்லாஹ்வுடன் எவரும் தொடர்பு கொள்ள முடியாது என்று முஸ்லீம்கள் நம்புகின்றனர். உண்மையைச் சொல்வதானால், குர்-ஆனின் படி,  மூஸாவைத் தவிர வேறு யாரும் ( முஹம்மது கூட) அல்லாஹ்வுடன் நேரடி தொடர்பில் இருக்க வில்லை. ஜிப்ராயில் என்ற இறைத்தூதர்தான் முஹம்மதுவை சந்தித்து, குர்-ஆன் வசனங்களை ஓதக் கற்றுக் கொடுத்ததாக இஸ்லாமிய பாரம்பரிய நூல்கள் சொல்கின்றன. சில நாட்களுக்கு முன்பு, முஸ்லீம்களின் எதிர்மறை இறையியல் பற்றி சொன்னது நினைவுக்கு வருகிறதா? இஸ்லாம் கூறும் அல்லாஹ் மனித அறிவுக்கு அப்பாற்ப்பட்டவர், மனிதர்களால் அறிய முடியாதவர் (Transcendence God).

பரிசுத்த வேதம் கூறும் தேவனோ, தன்னைப் பலவிதங்களில் வெளிப்படுத்துகிறார். கடைசியாக,  ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மூலமாக தம்மை வெளிப்படுத்தினார் என்றும், காணமுடியாத இறைவனை, இயேசுகிறிஸ்து வெளிப்படுத்தினார் என்றும் வேதத்தில் நாம் வாசிக்கிறோம் (எபிரேயர் 1:1,2' யோவான் 1:18' யோவான் 14:9). குர்-ஆனில் அல்லாஹ்வைப் பற்றி சொல்லி இருக்கும் பல காரியங்களில் சில வேதாகமத்தின் தேவனைப் பற்றி நாம் வாசிக்கிறவைகளுக்கு ஒத்தது போலத் தோன்றினாலும், அடிப்படைக் குணாதிசயங்களில் முற்றிலும் வேறுபட்ட ஒருவரை குர்-ஆனில் (அல்லாஹ்வில்) காண்கிறோம். "நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்" என்று இஸ்ரவேலர்களிடம் வாக்குப்பண்ணின தேவன் (லேவியராகமம் 26:12), இன்றும் பாவ-சுபாவ வாழ்க்கையை மாற்றும் ஒரு தெய்வீக அன்பின் உறவுக்கு மனிதனை அழைக்கிறார்.

முஸ்லீம்கள் ஜெபிப்பதைக் கேட்டிருக்கிறீர்களா? தங்கள் கஷ்ட காலங்களில், ஓ அல்லாஹ், என்று அவர்கள் மார்பில் அடித்து, அந்தந்த வேளைகளில் செய்ய வேண்டிய துஆக்களை (ஜெபங்களை) உடனடியாக ஓதுவார்கள். அவர்கள்  எவ்வளவுதான் ஊக்கமாக ஜெபித்தாலும், பதில் கிடைக்குமா என்பதை அறியார்கள். அவர்களுக்கு தேவனைப் பற்றி அறிவிப்பதற்காக தேவன் நம்மைத் தெரிந்தெடுத்திருக்கிறார் (1 பேதுரு 2:9). தேவனைப் பற்றிய அறியாமை இருள் முஸ்லீம்களிடையே இருந்து விலக ஜெபிப்போம். அவர்களுடன் தனிப்பட்ட உறவை வைத்துக்கொள்ள விரும்புகிற இயேசு கிறிஸ்து மூலமாக தன்னை வெளிப்படுத்தின தேவனை அவர்களும் அறிந்து கொள்ளச் செய்வோம்.

- அற்புதராஜ் சாமுவேல்

தேதி: 13th May 2020

Source: http://arputhaa.blogspot.com/2020/05/20.html


2020 ரமலான் சிந்தனைகள் பக்கம்

சகோ. அற்புதராஜ் சாமுவேல் பக்கம்

ரமலான் சிந்தனைகள் 19: ஈஸா - பெயரில் என்ன இருக்கிறது?

குர்-ஆனில், ஈஸா (عيسى)என்ற பெயர் 25 முறை வருகிறது. தூதர்கள் மர்யமிடம் வந்த போது,  "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்;. மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்" என்று சொல்லி பிறக்கப் போகிற குழந்தையின் பெயரைச் சொல்வதாக குர்-ஆன் 3:45 கூறுகிறது. ஈஸா என்ற பெயரை குறிப்பிடப்படாமல், வேறொரு இடத்தில் (19:16-21), ஜிப்ரயீல் மட்டும் போய் மர்யத்திடம் சென்று பிறப்பை அறிவிப்பதாக வருகிறது. பெயரிடப்படுவது குறித்தோ அல்லது ஏன் அந்தப் பெயர் என்றோ அங்கு எதுவும் இல்லை.  "ஈஸா" என்ற பெயர் எப்படி குர்-ஆனில் வந்தது என்பதை ஆராய்ந்த அறிஞர்கள் பல விளக்கங்களைக் கூறுகிறார்கள். இயேசு (கிரேக்கப் பெயர் Iesous, லத்தீன் மொழியில் Iesus ) என்பதைக் குறிக்கும் எபிரேயப் பெயர் Yeshua ஆகும். இந்த Yeshua என்ற வார்த்தையில் வரும் மெய்யெழுத்துக்களான y-sh-' என்ற மூன்று எழுத்துக்களையும் நேர்மாறாக பின்னோக்கி (தலைகீழாக) எழுதினால் வருவதுதான் அரபி மொழியில் ஈஸாவைக் குறிக்கும் '-s-y (ي-س-ع ) என்று சிலர் சொல்கிறார்கள். வேறு சிலர் சொல்வதென்னவெனில்,  ஈஸா என்ற பெயரைப் பயன்படுத்தும்படி யூதர்கள் முஹம்மதுவிடம் சொன்னதாகவும், அவர்கள் மேல் உள்ள நல் நம்பிக்கையில் முஹம்மது ஈஸா என்ற பெயரைப் பயன்படுத்தினார் என்றும், ஆனால் உண்மையில் அவர்கள் செய்ததென்னெவெனில், முஹம்மது மீது உள்ள வெறுப்பில், அவர் ஏசாவின் ஆவியை உடையவர் என்று சொல்லி  இயேசுவுக்குப் பதிலாக ஏசாவின் பெயரை சொல்லிவிட்டார்கள் என்பதாகும். அரபி மொழியில் ஏசா என்ற பெயர் ஈஸு என்று வருகிறபடியால், குர்-ஆனில் வருகிற (உதாரணமாக, மூஸா) மற்ற பெயர்களுக்கேற்றார்போல ஈஸா என்று வந்திருக்கலாம் என்றும் சிலர் கருதுகிறார்கள். ஆறாம் நூற்றாண்டில் 'Isaniyya என்ற பெயரில் சீரியா தேசத்தில் இயங்கி வந்த ஒரு துறவிகள் தங்கும் மடம் இருந்ததாகவும், அது ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் ஒரு கருத்து உண்டு. இங்கே குறிப்பிட்டிருக்கிற விளக்கங்கள் எல்லாம் சரி என்று நான் சொல்லவரவில்லை. மாறாக, ஈஸா என்ற பெயர் ஏன் என்பதற்கு ஒரு தெளிவான பதில் காணமுடியாத சூழ்நிலை இருப்பதைச் சுட்டிக் காட்டவே இவைகளை இங்கு குறிப்பிடுகிறேன். அரபி கிறிஸ்தவர்கள் ஈஸா என்ற பெயரைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, மூல எபிரேய வார்த்தைக்குப் பொருத்தமான Yasu' (yasua) என்ற பெயரைத்தான் காலங்காலமாக பயன்படுத்தி வருகிறார்கள்.  மேலும், முன்பு நாம் பார்த்தது போல, குர்-ஆனில் ஈஸா அவர்களுக்கு எவ்வளவுதான் உயர்வான பட்டங்களையும், நிலையையும் கொடுத்திருந்தாலும், அவர் ஒரு சாதாரண மனிதர் மட்டுமே என்றும், முஹம்மதுவுக்கு முன்னோடி அல்லது முஹம்மதுவின் வருகையை முன்னறிவித்த அல்லாஹ்வின் அடிமை/இறைதூதர் என்றே குர்-ஆன் கூறுவதையும் பார்க்கிறோம். குர்-ஆனில் வருகிற ஈஸாவைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பவைகள் எதுவும், வேதாகமத்தில் இல்லாதவை, தள்ளுபடியாகமக் கதைகள் என்பதையும் நாம் பார்த்தோம். இப்போது இயேசுவுக்கு வருவோம்.

மத்தேயு, மற்றும் லூக்கா எழுதிய நற்செய்தி நூலில் இயேசு பிறப்புச் செய்தியை அறிவித்த தேவதூதன் யோசேப்பு மற்றும் மரியாள் இருவரிடமும் பிறக்கப்போகிற குழந்தைக்கு இயேசு என்று பேரிடுவாயாக என்று சொல்லி, அதற்கான காரணத்தையும் சொல்வதைக் காண்கிறோம் (மத்தேயு 1:21, லூக்கா 1:31). அது மட்டுமல்ல, இயேசு என்ற பெயரின் மேன்மையையும், இயேசு என்ற பெயரைச் சொன்னால் நடக்கும் அற்புதங்களையும், இயேசுவின் பெயரைச் சொல்லி ஜெபிக்க வேண்டும், கூடி வரவேண்டும் என பல காரியங்களை நாம் புதிய ஏற்பாட்டில் வாசிக்கிறோம். இயேசு என்ற பெயரைச் சொல்லும்போது, அந்த பெயரின் பொருள்  "யேகோவா இரட்சிக்கிறார்/உதவுகிறார்" என்று சொல்வதன் நடைமுறை விளக்கத்தை நாம் நம் வாழ்வில் காண்கிறோம்.  இயேசுவின் பெயர், எல்லா பெயர்களைக் காட்டிலும், எல்லாவற்றிலும் மேலான பெயர் என்றும், உலகில் உள்ள மனிதர் அனைவரும் இயேசுவே கர்த்தர் என்று அறிக்கை பண்ணுவதற்காக தேவன் அந்த மேலான நாமத்தைக் கொடுத்தார் என பவுல் எழுதுகிறார் (பிலிப்பியர் 2:11).  "அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்" என்று யோவான் 1:12ல் வாசிக்கிறோம். இயேசுவைப் பற்றி எழுத ஆரம்பித்தால் இடம் போதாது என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன். கடந்த சில நாட்களாக ஈஸாவையும் இயேசுவையும் குறித்து நீங்கள் வாசித்த பதிவுகள் உங்களுக்குள் ஒரு புரிதலைக் கொடுத்திருக்கும் என்று நம்புகிறேன். நாம் குற்றம் சாட்டி, வாக்குவாதம் செய்ய வேண்டிய நேரமல்ல இது (இது பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன்). இவைகளைப் பற்றி ஆண்டவராகிய இயேசு முன்னமே நமக்குச் சொல்லிவிட்டார். நாம் சிந்தித்து வேண்டிய விஷயம் ஒன்று உண்டெனில், நீங்களும் நானும் இணைந்திருக்கிற தேவனுடைய குடும்பத்தில் சேராமல் அனேகர் இன்று இருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் செய்ய வேண்டியது என்ன? சிந்திப்போம் செயல்படுவோம்!

இயேசுவை அறியாத பல கோடி ஜனங்களில், முஸ்லீம்களே மிகப் பெரிய ஜனக்கூட்டமாக இருக்கின்றனர். அவர்கள் இயேசுவை அறிந்து கொள்ள, இயேசுவே கர்த்தர் என்று அறிக்கை பண்ண நாம் ஜெபிப்போம். இதில் நம் பங்கு என்ன என்று ஆண்டவர் நமக்கு வெளிப்படுத்தவும் அவரிடம் கேட்போம்.

- அற்புதராஜ் சாமுவேல்

தேதி: 12th May 2020

Source: http://arputhaa.blogspot.com/2020/05/19.html


2020 ரமலான் சிந்தனைகள் பக்கம்

சகோ. அற்புதராஜ் சாமுவேல் பக்கம்

ரமலான் சிந்தனைகள் 18: இஸ்லாமிய திரித்துவம் - அல்லாஹ், ஈஸா மற்றும் மர்யம்!

ஈஸாவை அல்லாஹ் என்று கூறுகிறவர்கள் இறைமறுப்பாளர்கள் என்று குர்-ஆன் 5:17, 72 கூறுவதாக முன்பு பார்த்தோம். அது போல, கிறிஸ்தவர்கள் ஈஸாவை அல்லாஹ்வின் மகன் என்றும், அல்லாஹ்வுடன், சந்நியாசிகளையும்,பாதிரிகளையும் மற்றும் ஈஸாவையும் தெய்வங்களாக்கிக்கொள்கிறார்கள் என்று குர்-ஆன் 9:30,31 கூறுகிறது. ஈஸா, மற்றா எல்லா நபிகளையும் போல, ஒரு சாதாரண மனிதர் மட்டுமே என்று குர்-ஆன் சொல்வதைப் பல இடங்களில் காணலாம். மேலும் திரித்துவத்திற்கு எதிராக குர்-ஆனில் சில வசனங்களைக் காணலாம். குர்-ஆன் 4:170 ல், மூன்று கடவுள்கள் என்று சொல்லாதிருக்க வேண்டும் என்றும்,  குர்-ஆன் 5:73ன் படி, "அல்லாஹ் மூவரில் மூன்றாமவன்" என்று சொல்லக் கூடாது என்றும், குர்-ஆன்5: 116ன் படி, "மர்யமுடைய மகன் ஈஸாவே, 'அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்' என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?" என்று அல்லாஹ்வே நேரடியாக ஈஸாவிடம் கேட்பதாகப் பார்க்கிறோம். இவ்வசனங்களை வாசிக்கும்போது, இஸ்லாமின் படி திரித்துவம் என்பது, அல்லாஹ், மரியம் மற்றும் அவருடைய மகன் ஈஸா ஆகிய மூன்று பேரை வணங்குவது ஆகும். மேலும், ஈஸாவும்,  உணவு சாப்பிட்டார், ஆகவே அவர் இறைவன் ஆக முடியாது என்று குர்-ஆன் 5:75ல் வாசிக்கிறோம்.

இதை வாசிக்கும் கிறிஸ்தவர்கள் எவரும் இஸ்லாம் கூறும் திரித்துவமானது கிறிஸ்தவ திரித்துவத்திற்கு முற்றிலும் எதிரானது என்பதையும், மூன்று கடவுள் தத்துவம் கிறிஸ்தவத்தில் கிடையாது என்பதையும் எளிதாகச் சொல்லிவிடுவார்கள். மேலும், இது தவறான உபதேசம் என்று கிறிஸ்தவம் தள்ளிவைத்த சில கள்ள உபதேசக் குழுக்களின் போதனைக்கு ஒத்ததாக இருக்கிறது. கிறிஸ்தவர்களாகிய நாம் "இறைவன் எப்படிப்பட்டவர்?" என்றும் அவர் நமக்கு "யாராக இருக்கிறார்?" என்றும் நாம் தியானிக்கிறோம், பரிசுத்த வேதாகமத்திலும் தேவன் தன்னை அப்படியே வெளிப்படுத்துகிறார். இஸ்லாமிய இறையியலில், "இறைவன் எப்படி எல்லாம் இருக்க மாட்டார்?" (உதாரணமாக, சாப்பிடமாட்டார்) என்று இறைவனைப் பற்றி சிந்திக்கிறார்கள். மேலும், இறைவன் ஒருவன் என்று சொல்லும்போது, ஒன்றே ஒன்று மட்டுமே (absolute one ) என்று சொல்கிறார்கள். இதில் நிறைய சிக்கல்கள் இருக்கிறது. அதைப் பின்பு விளக்குகிறேன். ஆனால், பரிசுத்த வேதாகமத்தில் ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தல் வரை, பிதா, குமாரன், மற்றும் பரிசுத்த ஆவி என தன்னை வெளிப்படுத்துகிற திரித்துவ தேவனை நாம் காண்கிறோம். துவக்கமுதலே வேதாகமத்தின் தேவன் மனிதனோடு கொண்ட உறவையும், மனிதன் தொலைத்த அந்த உறவை மீட்க அவர் காட்டின அன்பையும் காண்கிறோம்.  "தேவன் ஒருவரே" என்று பரிசுத்த வேதாகமம் சொல்கையில் பன்மையில் ஒருமையைக் (Uniplurality) குறிக்கும் வார்த்தை வேதாகமத்தின் மூல மொழியில் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். திரித்துவத்தை எளிதில் சொல்ல வேண்டுமானால், மூவரும் வெவ்வேறு  தனி நபர்களாக இருந்தாலும், தன்மை அல்லது இயல்பில் ஒருவராக இருக்கிறார்கள். இதெப்படி எனில், நாம் அனைவரும் தனித்தனியே வெவ்வேறு நபர்கள் என்றாலும், மனித தன்மையில் (Human nature & human being) நாமனைவரும் ஒன்றாக இருக்கிறோம்.

தேவன் எப்படிப் பட்டவர் என்பதையும், மனித மீட்புக்காக தேவன் செய்த அன்பின் செயல் என்ன என்பதையும் முஸ்லீம்கள் அறிந்து உணர்ந்து கொள்ள ஜெபிப்போம். வேதம் கூறும் இயேசுவைப் பற்றி அறிந்து கொள்கிற முஸ்லீம்கள் ஒவ்வொருவரும், "மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை" (1 யோவான் 4:2), அவரே கர்த்தர் என்று அறிக்கை பண்ணுவதற்கு (1 கொரி.12:3) தேவ ஆவியானவர் அவர்களுக்கு உதவும்படி நாம் ஜெபிப்போம்.

- அற்புதராஜ் சாமுவேல்

தேதி: 11th May 2020

Source: http://arputhaa.blogspot.com/2020/05/18.html


2020 ரமலான் சிந்தனைகள் பக்கம்

சகோ. அற்புதராஜ் சாமுவேல் பக்கம்

ரமலான் சிந்தனைகள் 17: குர்-ஆனில் சிலுவை மரணம் - அது ஈஸா இல்லை என்றால் வேறு யார்?

ஈஸா பற்றி குர்-ஆனில் குறிப்பிடப்பட்டிருப்பவைகளில், மற்றவைகளைப் பார்க்கிலும், அவருடைய மரணம் பற்றிக் கூறும் வசனங்கள் மிகக் குறைவானதாகவும், ஆனால் அதிக குழப்பம் விளைவிப்பதாகவும் இருக்கிறது. முஸ்லீம்கள் குர்-ஆன் 4:157 ஐக் காட்டி, "இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்" ஈஸா கொல்லப்படவே இல்லை என்றும்,  உண்மையில் நடந்தது என்னவெனில், ஈஸாவுக்குப் பதில் வேறு ஒருவர் கொலை செய்யப்பட்டார் என்று இஸ்லாமிய பாரம்பரியத்தின் அடிப்படையில் சொல்வர். ஈஸா கொல்லப்படாமல் யார் கொல்லப்பட்டார் எனக் கேட்டால், சீடர்களில் ஒருவர், யூதாஸ்காரியோத்து என பலவிதமான தெளிவற்ற பதில்கள் வரும். ஒருவேளை, அல்லாஹ் அப்படிச் செய்து மற்றவர்களை ஏமாற்றினார் என்றால், குர்-ஆன் விஷயத்திலும் அப்படி ஏமாற்றி இருக்க வாய்ப்பு இருக்கிறது அல்லவா என்று அல்-ராஜி (al-Razi  c.1200 AD) போன்ற இஸ்லாமிய அறிஞர்களில் சிலர் ஈஸா சிலுவையில் மரணமடைந்தது உண்மைதான் என சொன்னாலும், முஸ்லீம்களில் பெரும்பாலானோர் சிலுவை மரணம் நடக்கவில்லை என்றுதான் சொல்கின்றனர். ஆனால், குர்-ஆன் 3:54,55; 5:116,117 ஆகிய வசனங்களை வாசிக்கும்போது, நாம் tawaffa என்ற வார்த்தையைக் கவனிக்க வேண்டும்.  "உயர்த்திக் கொள்ளுதல்" என்ற பெயரில் இந்த வினைச்சொல் இந்த இரு இடங்களிலும் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், குர்-ஆனின் மற்ற இடங்களில் (25 இடங்களில், அதில் 3 முஹம்மது பற்றியது)  மரணத்தைக் குறிக்கிற சொல் ஆக இது இருப்பதைக் காண முடியும். குர்-ஆன் 3:54-55 ல், அல்லாஹ் ஈஸாவைப் பார்த்து உன்னை மரணமடையச் செய்வேன்  (cause you to die) என்று சொல்வதாகவும், 5:116, 117ல் அல்லாஹ்வைப் பார்த்து "நீ என்னை மரணிக்கச் செய்த பின்பு" என்று ஈஸா சொல்வதாக இவ்வார்த்தை பொருள் தருவதைக் காணலாம். ஆகவே, யூதர்கள் பெருமைப்பட்டுக் கொண்டபடி, ஈஸாவை அவர்கள் கொல்லவில்லை, அல்லாஹ் அவரை மரணிக்கச் செய்தான் என்று அறிஞர்கள் சிலர் கூறுகின்றனர். குர்-ஆன் 19:33ல், ஈஸா தன் மரணத்தைப் பற்றிப் பேசுவதைக் காணலாம், முஸ்லீம்கள் இதற்குப் பல விளக்கங்களைத் தந்தாலும், அதற்கு குர்-ஆனில் ஆதாரம் இல்லை. ஆகவே, குர்-ஆன் சிலுவை மரணம் பற்றிக் கூறும் எதிர்மறையான செய்தி, தெளிவைத் தருவதற்குப் பதிலாக, குர்-ஆன் வசனங்களுக்கே முரண்பாடானதாக இருப்பதைப் பார்க்கிறோம். மேலும் குர்-ஆன் கூறும் சிலுவை மரணச் செய்தி, Monophysites என்ற கிறிஸ்தவத்தில் இருந்து பிரிந்து சென்ற ஒரு பிரிவினரின் நம்பிக்கைக்கு ஒத்ததாக இருப்பதாக சிலர் சொல்கின்றன்ர்.

இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் போன்ற வரலாற்று உண்மையை, குர்-ஆனின் ஒரே ஒரு வசனம் மூலம் மூடி மறைக்க முடியாது. இயேசுவே உலக இரட்சகர் என்ற சத்தியத்தை, குர்-ஆன் நிராகரிக்கக் காரணமாக இரண்டு விஷயங்களைச் சொல்லலாம். முதலாவதாக, மனிதனின் பாவத்தை சொந்த கிரியைகள் மூலமாக, அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து அதிக நன்மைகளைச் செய்வதினால் ஒருவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதால் ஒரு இரட்சகர் தேவை இல்லை. இரண்டாவதாக, சிலுவையில் மனிதர்களின் பாவங்களுக்காக ஒருவர் மரித்தார் என்பதை இஸ்லாம் நிராகரிக்க காரணம் என்னவெனில்,  பலியிடுதல் பற்றிய புரிதல் இஸ்லாமில் கிடையாது. ஆனாலும், முஸ்லீம்களின் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றான "பக்ரீத்" பண்டிகையானது பலியுடன் தொடர்புடையது என்பது என்பது பல முஸ்லீம்களே புரிந்து கொள்ளத் தவறுகிற உண்மை.  இயேசுவைப் பார்த்த யோவான்ஸ்நானகன், "இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி" என்றார். இயேசு, தான் சொன்னபடியே சிலுவையில்  சகல மனிதரின் இரட்சிப்புக்காக தம்மைத்தாமே பலியாக ஒப்புக் கொடுத்தார். இயேசுவின் பரமேறுதலுக்குப் பின், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெற்ற இயேசுவின் சீடர்கள், "நீங்கள் அவரைக் கொலை செய்தீர்கள், தேவன் அவரை உயிரோடெழுப்பினார் என்பதற்கு நாங்கள் சாட்சிகள்" என்று  தைரியமாகப் பிரசங்கித்தனர். "மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்" என்று சொன்ன இயேசுவை பறைசாற்றுவது கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமை அல்லவா!

இயேசுவின் சிலுவை மரணம் பற்றிய வேதாகம மற்றும் வரலாற்று உண்மையை தைரியமாக அனைவருக்கும் சொல்லி புரியவைக்கும் கிருபையை கிறிஸ்தவர்கள் பெறவேண்டும் என்றும், சிலுவை மரணம் பற்றிய எல்லா தவறான நம்பிக்கைகளில் இருந்தும் விடுபட்டு, முஸ்லீம்கள் வேதத்தில் ஒளியில் உண்மை என்ன என்று கண்டு, இயேசுவின் மூலமாக வரும் இரட்சிப்பைக் கண்டு கொள்ளவும் நாம் ஜெபிப்போம்.

சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது (I கொரிந்தியர் 1:18).

- அற்புதராஜ் சாமுவேல்

தேதி: 10th May 2020

ரமலான் சிந்தனைகள் - 16: ஈஸாவின் வாழ்க்கையும், வார்த்தைகளும் (2)

ஈஸாவின் வாழ்க்கை மற்றும் அவர் செய்த போதனைகள் பற்றி அறிந்து கொள்ளும்படி குர்-ஆன் மிக மிகக் குறைவாக, சொல்லப்போனால் எந்த விவரங்களையும் தரவில்லை என்று நேற்று பார்த்தோம். ஈஸா அனேக அற்புதங்களைச் செய்தார் என்று குர்-ஆன் திரும்பத் திரும்ப கூறினாலும், அவர் செய்த ஒரே ஒரு அற்புத சம்பவத்தை மட்டுமே குர்-ஆன் விவரிக்கிறது. அது அவர் தன் தாயாருக்கு ஆதரவாக தொட்டில் குழந்தையாக இருக்கும்போது பேசியது ஆகும் (குர்-ஆன் 19:30-33). இக்கதை தள்ளுபடியாகமங்களில் ஒன்றான இயேசுவின் குழந்தைப் பருவத்தைப் பற்றிச் சொல்லும் யாக்கோபின் நற்செய்தி நூலில் (Infancy Gospel of James) உள்ளதை பிரதிபலிப்பதாக இருக்கிறது. களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தைச் செய்து, அதில் ஊதி உயிர்கொடுத்ததாக சொல்லப்படும் அற்புதம் பற்றி குர்-ஆன் 3:49; 5:110 ல் வாசிக்கிறோம். இறைவன் மனிதனை மண்ணிலிருந்து உருவாக்கியதற்கு ஒத்ததாக இக்கதை இருந்தாலும், இரண்டு விஷயங்களை நாம் இங்கு கவனிக்க வேண்டும். ஈஸா அவர்கள் (குழந்தையாயிருந்த போது) இன்ன விதமாக செய்வேன் என்று சொல்வதை 3:49ல் வாசிக்கிறோம். 5:110 ல் ஈஸா செய்ததாக அல்லாஹ் சொல்வதாக வருகிறது. எப்போது, எப்படி, யார் மத்தியில் அந்த அற்புதம் நடந்தது போன்ற விவரங்கள் குர்-ஆனில் இல்லை. மேலும், இக்கதையானது தள்ளுபடியாகமங்களில் ஒன்றான இயேசுவின் குழந்தைப் பருவத்தைப் பற்றிச் சொல்லும் தாமஸ் எழுதிய நற்செய்தி நூலில் (Infancy Gospel of Thomas) உள்ள விவரங்களுக்கு ஒத்ததாக இது இருக்கிறது. இதே போல, பிறவிக்குருடர்களை குணமாக்குவேன், குஷ்டரோகிகளை குணமாக்குவேன் என்று ஈஸா சொல்வதாக குர்-ஆன் 3:49 லும், ஈஸா அப்படி செய்ததாக அல்லாஹ் சொல்வதாக குர்-ஆன் 5:110 லும் வாசிக்கிறோம், ஆனால் அது பற்றிய விவரங்கள் எதுவும் குர்-ஆனில் இல்லை. வானத்திலிருந்து ஒரு உணவு தட்டு அல்லது உணவுகளடங்கிய மேஜையைப் பற்றிய அற்புதம் பற்றி குர்-ஆன் 5:112-115ல் வாசிக்கிறோம். சீடர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஒரு உணவுத் தட்டு அல்லது மேஜை (māidatan) ஐ தரும்படி  ஈஸா அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டதாகவும், அல்லாஹ் தருவேன் என்று சொல்வதையும் நாம் குர்-ஆனில் வாசிக்கிறோம். ஆனால், அது நடந்ததா, இல்லையா என்ற விவரம் குர்-ஆனில் இல்லை. குர்-ஆனில் இயேசுவின் அற்புதங்கள் பற்றியவை எதுவும் பரிசுத்த வேதாகமம் கூறும் நற்செய்தி நூல்களுக்கு ஒத்ததாக இல்லாமல், தள்ளுபடியாகமக் கதைகளுக்கு ஒத்ததாக இருப்பது கவனித்தீர்களா! மேலும், ஈஸாவின் அற்புதங்கள் ஒவ்வொன்றும்  "என் உத்தரவைக் கொண்டு" செய்தவை என அல்லாஹ்  சொல்வதன்  மூலம் (குர்-ஆன் 5:110), ஈஸா ஒரு சாதாரண மனிதன் மட்டுமே, அற்புதங்கள் செய்யும் சக்தி அவருக்கு இல்லை என்று குர்-ஆன் கூறுகிறது.

ஈஸாவின் வாழ்க்கை, வார்த்தை மற்றும் போதனைகள் பற்றி குர்-ஆன் தரும் விவரங்கள் எதுவும் வேதாகமத்தில் உள்ளவற்றுடன் ஒத்துப் போகவில்லை. ஈஸா பற்றி குர்-ஆன் கூறும் கதைக்கு ஒத்த ஒரே ஒரு கதையை நாம் நற்செய்தி நூலில் காண்கிறோம், அது, யோவான் பிறப்பிற்கு முன் சகரியாவை தேவதூதன் சந்தித்ததும், இயேசுவின் பிறப்பு பற்றி மரியாளுக்கு தேவதூதன் அறிவித்ததும் ஆகும். ஆனால் இவை இயேசுவின் பிறப்பு தவிர வேறு எதையும் பற்றி எதுவும் கூறவில்லை. ஈஸாவை அற்புதங்கள் செய்தவராகக் கூறும் குர்-ஆன், முஹம்மதுவை அற்புதம் செய்பவராகக் காட்டவில்லை. முஹம்மது செய்த ஒரே அற்புதம் குர்-ஆன் தான்  என்று இஸ்லாம் கூறுகிறது. ஈஸாவைப் பற்றி உயர்வாக குர்-ஆன் சொன்னாலும், நற்செய்தி நூல்களில் இல்லாத, தள்ளுபடியாகமச் சம்பவங்களை மட்டுமே கவனமாக பயன்படுத்தி இருப்பதன் மூலம், குர்-ஆன் 5:110ல் நாம் காண்பது போல, இஸ்லாம் கூறும் செய்திக்கு வசதியாக, மற்றவர்களில் ஒருவர் என்று துணை கதாபாத்திரமாக அவரைக் காண்பித்து, ஈஸாவின் எல்லையை வரையறுத்து, வெறும் மனிதனாக மட்டுமே காண்பித்து இருப்பதை அறியலாம்.

நற்செய்தி நூல்கள் இயேசுவின் பிறப்பைப் பற்றி மட்டும் அல்ல, அவருடைய ஊழிய துவக்க முதலாய் நடந்த பல காரியங்கள், அருளுரைகள், உவமைகள், உரையாடல்கள், அற்புதங்கள், தீர்க்கதரிசனங்கள், பாடு, மரணம், மற்றும் உயிர்த்தெழுதல் என அனேகக் காரியங்களைப்  பற்றி அவைகளைக் கண்ட, கேட்ட நேரடி சாட்சிகள் எழுதியவைகளை நாம் காண்கிறோம். அவை இயேசு இயேசுவின் வாழ்க்கை, போதனை, மற்றும் இயேசு மற்ற மனிதர்களிடம் எப்படி நடந்து கொண்டார் என்று காண்பிப்பதுடன், இயேசுவின் வாழ்க்கைக்கும் அவருடைய போதனைக்கும் மற்றும் தேவனுக்கும் அவருக்கும் இருந்த நெருக்கத்தையும் காண்பிக்கின்றன. குர்-ஆன் கூறும் ஈஸாவைப் போலல்லாது, இயேசு அதிகாரமுடையவராய் போதித்தார், அந்த அதிகாரத்தை தன் சீடர்களுக்குக் கொடுத்தனுப்பினார். பரிசுத்த வேதாகமம் கூறும் இயேசு மனிதர்களின் வாழ்க்கையில் பெரும்மாற்றத்தை உண்டாக்கினார், இன்றும் அம்மாற்றத்தை செய்து வருகிறார். பாவிகளின் சினேகிதர் என்று அழைக்கப்பட்ட இயேசு, இன்றும் மக்கள் தன்னிடம் வந்து இரட்சிப்படையவும், இலவசமாய் சமாதானமான வாழ்வைப் பெற்று தேவனுடன் தன் உறவைப் புதுப்பித்துக் கொள்ளவும் அழைப்பு விடுக்கிறார். அவருடைய அழைப்பை இயேசுவை அறியாத மற்றவர்களுக்கு அறிவிக்கும் பணி எவ்வளவு மகத்தானது!

முஸ்லீம் நாடுகளிலும், முஸ்லீம்கள் மத்தியிலும் இயேசுவை அறிவிக்கும் கிறிஸ்தவர்கள் வேதம் கூறும் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை சமரசமின்றி பகிர்ந்து கொள்ளவும், இயேசுவைப் பற்றி அவரை அறியாதவர்கள் மத்தியில் அறிவிக்க அர்ப்பணிப்புள்ள அனேக வேலையாட்கள் எழும்பவும்  (மத்தேயு 9:38, லூக்கா 10:2), இஸ்லாமியர் அனைவரும் இயேசுவைக் காணவும் நாம் ஜெபிப்போம்.

இயேசுவே,  உம்மை தியானித்தால் 

உள்ளம் கனியுமே; 

கண்ணார உம்மைக் காணுங்கால் 

பரமானந்தமே!

- அற்புதராஜ் சாமுவேல்

தேதி: 9th May 2020

Source: http://arputhaa.blogspot.com/2020/05/16.html


2020 ரமலான் சிந்தனைகள் பக்கம்

சகோ. அற்புதராஜ் சாமுவேல் பக்கம்

ரமலான் சிந்தனைகள் - 15: ஈஸாவின் வாழ்க்கையும், வார்த்தைகளும் (1)

குர்-ஆனில் அதிகமாக குறிப்பிடப்பட்டிருக்கும் நபர்களில் மூஸா மற்றும் இப்ராஹீமுக்கு அடுத்தபடியாக மூன்றாவதாக வரும் ஈஸா பற்றி நாம் தொடர்ந்து சிந்தித்து வருகிறோம்.  ஈஸாவின் இறைப்பணி  பற்றி சுமார் 15 வசனங்களும் , அவர் பேசிய வார்த்தைகள் பற்றி சுமார் 15 வசனங்கள் என அவரைப் குறிப்புகள் மிகவும் குறைவாகவே குர்-ஆனில் இருப்பது சற்று ஆச்சரியம்தான்.  நூஹ் (நோவா), இப்ராஹீம், மற்றும் மூஸா போன்றவர்களின் இறைப்பணி பற்றி விரிவாகக் கூறும் குர்-ஆன், நாம் முன்பு பார்த்தது போல, ஈஸாவின் பிறப்பு பற்றிய கதைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அவருடைய வாழ்க்கை, இறைப்பணி மற்றும் அவர் பேசிய வார்த்தைகளுக்குக் கொடுக்கவில்லை. ஈஸா பேசிய வார்த்தைகளை குர்-ஆன் 3:49-53; 5:111,112, 114, 116-118; 19:30-33; 61:6,14 ஆகிய பகுதிகளில் நாம் காணலாம். மேலே கொடுக்கப்பட்டிருக்கும் குர்-ஆன் பகுதிகளை வாசிக்கும்போது, குழந்தை ஈஸா தன் தாயாருக்கு ஆதரவாக தான் யார் (அல்லாஹ்வின் அடியார்) என்று பேசுவதையும், தான் செய்யப்போகிற அற்புதங்கள் பற்றி ஈஸா சொல்வதையும், தவ்ராத்தை உறுதிப்படுத்தியும் அஹமதுவின் வருகையை முன்அறிவிப்பதையும், தன் சீடர்களிடம் உதவி கேட்பதையும்,  தன் சீடர்களுக்கு வானத்தில் இருந்து உணவுப் பொருட்கள் அடங்கிய ஒரு மேஜையை இறக்குமாறு கேட்டதையும், மற்றும் அல்லாஹ்வையே வணங்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எதையும் போதிக்கவில்லை, அல்லாஹ்வின் இருதயத்தில் இருப்பதை தன்னால் அறியமுடியாது என்று ஒரு தற்காப்பு விளக்கத்தை அல்லாஹ்வுக்கு கொடுப்பதையும் பார்க்கிறோம். அல்லாஹ்வின் அடியாராக முந்தைய வேதங்களை உறுதிப்படுத்துகிறவராகவும், வரப்போகிற அஹமது பற்றி முன்னறிவிப்பவராகவும் தன்னைப்பற்றி சொல்வதால், குர்-ஆன் ஈஸாவைப் பற்றி எவ்வளவுதான் மிகையாகக் கூறினாலும், ஈஸாவின் வார்த்தைகள் அவ்ர் தன்னை எப்படிப்பட்ட ஒரு சாதாரண, வலுவற்றவராக கருதினார் என்பதையே காட்டுகிறது.

குர்-ஆன் சொல்வதற்கு நேர் எதிராக, பரிசுத்த வேதாகமம் இயேசுவைப் பற்றிய விவரமாக மற்றும் உயர்வாகக் குறிப்பிடுகிறது.  நற்செய்தி நூல்களில், இயேசுவின் பிறப்புச் சம்பவத்தை விட, அவருடைய ஊழியம் மற்றும் அவர் பேசிய வார்த்தைகளை மிக அதிகமாகக் காண்கிறோம். இயேசு பேசிய வார்த்தைகளைக் கேட்டவர்கள் ஆச்சரியமடைந்தனர் என்று வேதாகமத்தில் பல இடங்களில் வாசிக்கிறோம். ஆனால் குர்-ஆனில் அப்படி சொல்லக் கூடிய அளவுக்கு வசனங்களே இல்லை. குர்-ஆனில் உள்ள ஈஸாவைப் போல் அல்லாது, வேதாகமம் கூறும் இயேசு தன்னை எதிர்த்துக் கேள்வி கேட்டவர்களை கேள்விகளினாலேயே எதிர்கொண்டார், தற்காப்பு விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கவில்லை. மாறாக, அவரை எப்படியாவது தங்கள் வலைக்குள் விழ வைக்க வேண்டும் என்று முயற்சிசெய்தவர்கள் கூட அவருடைய கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினார்கள். மேலும் தான் யார் என்பதை தைரியமாக, "நானே..." என்று சொல்லி மக்களுக்குத் தன்னை வெளிப்படுத்தியதுடன், தன்னைப் பின்பற்றும் வழியையும் காட்டிக் கொடுத்தார். "நான் உங்களுக்குச் சொல்கிறேன்..." என்று சொல்லி புதிய பிரமாணத்தின் படி வாழும் வழிகாட்டினார். எல்லாவற்றிற்கும் மேலாக பிதாவாகிய தேவனுக்கும் தனக்கும் இருந்த உறவையும், உறவின் நெருக்கத்தை வெளிப்படுத்தினார் (யோவான் 17). அப்படிப்பட்ட ஒரு உறவை நாம் தேவனுடன் பெற வேண்டும் என்று அவர் ஜெபித்தார். அதற்காகவே தன்னை பலியாக ஒப்புக் கொடுக்கவும் செய்தார்.

இதை வாசிக்கும் நாம், இக்காலத்தில் குர்-ஆனை வாசிக்கும் முஸ்லீம்களுக்காகவும், அவர்கள் இயேசு பற்றி கேட்கும் கேள்விகளுக்கு கிறிஸ்தவர்கள் எப்பொழுதும் ஆயத்தமாக இருக்கவும் ஜெபிப்போம்  "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்" எம்று சொன்ன இயேசுவை முஸ்லீம்கள் அனைவரும்  கண்டு கொள்ளவும், சத்தியத்தை அறிகிற அறிவு அவர்களுக்கு உண்டாகவும் ஜெபிப்போம். 

- அற்புதராஜ் சாமுவேல்

தேதி: 8th May 2020

Source: http://arputhaa.blogspot.com/2020/05/15.html


2020 ரமலான் சிந்தனைகள் பக்கம்

சகோ. அற்புதராஜ் சாமுவேல் பக்கம்

ரமலான் சிந்தனைகள் - 14: அப்துல்லா ஈஸா இப்னு மரியம் - மரியமின் மகனாகிய ஈஸா அல்லாஹ்வின் அடிமை/அடியார்

ஈஸா பற்றி குர்-ஆன் சொல்லும் மிக முக்கியமான காரியங்களில் ஒன்று என்னவெனில், அவர் "அல்லாஹ்வின் அடிமை" என்பதாகும். ஈஸா பிறந்தவுடன் மர்யம் அவரை எடுத்துக் கொண்டு தன் ஜனத்தாரிடம் வந்த போது, ஜனங்கள் மரியமை இழிவாகப் பேசுவதாகவும், அப்போது, மர்யம் அவர்கள் குழந்தையிடமே கேட்டு உண்மை என்னவென்று தெரிந்து கொள்ளுமாறு சொல்கிறார். தொட்டில் குழந்தையிடம் எப்படிப் பேசுவது என்று அவர்கள் நினைக்கையில், குர்-ஆன் 19:30-33ல் உள்ளபடி, ஈஸா தன்னைப் பற்றி பேசத் துவங்குகிறார். அப்படிச் சொல்லும்போது, தான் அல்லாஹ்வின் அடிமை என்றும், தன்னை நபியாக அல்லாஹ் ஆக்கி இருக்கிறார் என்றும், உயிருள்ள நாளெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் செய்யும்படி அல்லாஹ் கட்டளையிட்டிருப்பதாக ஈஸா சொல்வதாக குர்-ஆன் சொல்கிறது. அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதை இழிவானதாக ஈஸா கருதவில்லை என்று குர்-ஆன் 4:172ல் பார்க்கிறோம். "(ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை" என்று அல்லாஹ் சொல்வதாக குர்-ஆன் 43:59ல் வாசிக்கிறோம். 'Abd என்றால் அரபி மொழியில் அடிமை என்று பொருள். ஒருவரிடம் அடிமையாக வேலை செய்பவரை 'Abd என்பார்கள். அப்துல்லா ('Abdullah) என்றால் அல்லாஹ்வின் அடிமை என்று பொருள். முஸ்லீம்கள் இறைவனைத் தவிர வேறு எந்த மனிதருக்கும் தாங்கள் அடிமை  'Abd என்று சொல்ல துணியார்கள்.  இஸ்லாமைப் பொறுத்தவரையில், அடிமைத்தனமெல்லாம் கிடையாது, அல்லாஹ்வை தொழுகை செய்வதற்கு முழுமையாக தம்மை ஒப்புக் கொடுப்பதைத்தான்  'Abd குறிக்கிறது என்று முஸ்லீம்கள் சொல்கிறார்கள். ஆயினும், குர்-ஆன் 4:172 ஐ வாசிக்கையில் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதை இழிவாகக் கருதுபவர்களுக்கு என்ன செய்யப்படும் என்று சொல்வதை நாம் வாசிக்கிறோம். அது மட்டுமல்ல, குர்-ஆனை நாம் வாசிக்கையில், எந்தக் கேள்வியும் கேட்காமல் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வுக்கு இணையாக முஸ்லீம்களின் தீர்க்கதரிசிக்கும் கீழ்ப்படிய வேண்டும் என்று சொல்லும் வசனங்கள் திரும்பத்திரும்ப வருவதை நாம் காணலாம்.

ஈஸா அவர்கள் அல்லாஹ்வின் அடியார் மட்டுமே என்று குர்-ஆன் சொல்வதன் பொருள் என்னவெனில், அவர் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு மனிதர் மட்டுமே,  அதைத் தவிர வேறு எதுவும் கிடையாது என்பதாகும். இது கிறிஸ்தவர்கள் இயேசுவின் தெய்வீகம் தொடர்பாக கொண்டிருக்கும் நம்பிக்கைக்கெதிராக குர்-ஆன் வைக்கும் வாதம் என அறிஞர்கள் கூறுகின்றனர். ஆயினும், இஸ்லாம் அரபி மொழியில் வரும்  'Abd என்ற பதமானது எபிரேய மொழியில் உள்ள ஊழியக்காரன் என்பதைக் குறிக்கும் 'ebed என்ற வார்த்தையுடன் தொடர்புடையதாகும். ஏசாயா தீர்க்கதரிசனப் புத்தகத்தில், தேவனுடைய தாசன் (ஊழியக்காரன்) 'ebed Yahweh பற்றி நாம் வாசிக்கிறோம். ஏசாயா புத்தகத்தில் பாடுபடுகிற ஊழியனைப் பற்றிய பாடல்கள் (Songs of the Suffering Servant) என்று சில வேதப் பகுதிகள் நினைவுகூரப்படுகிறது. அப்பாடல்களை ஏசாயா 42, 49, 50, 52. மற்றும் 53ம் அதிகாரங்களில் நாம் வாசிக்கிறோம். ஜனங்களை தன்னண்டைக்கு வழிநடத்தும்படி தேவன் அழைத்த அவருடைய தாசனை ஜனங்கள் துன்புறுத்துவதை சொல்லும் இப்பாடல்கள், மேசியாவாகிய இயேசுவைப் பற்றியவை என்றும் அவருடைய வாழ்வில் இவை நிறைவேறின என்றும் நாம் அறிந்திருக்கிறோம். வேதாகமக் கூறும் 'ebed Yahweh ஜனங்களின் மீட்புக்காக அமைதியாக தன்னை ஒப்புக்கொடுப்பதை நாம் காண்கிறோம். குர்-ஆனின் படி, அல்லாஹ்வின் அடிமை/அடியாராக இருக்கும் ஒரு நபர் கேள்வி கேட்காமல் கீழ்ப்படிந்து அல்லாஹ் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும். இரண்டுக்கும் இடையே எவ்வளவு வித்தியாசம்!

உலகளவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக உபத்திரவம் நடைபெறும் நாடுகளில் பெரும்பாலானவை இஸ்லாமிய நாடுகள் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. பாடுகளின் மத்தியில், தங்களை துன்புறுத்துபவர்களுக்காகவும் இயேசு சிலுவையில் மரித்தார் என்பதை சொல்ல உயிரைப் பணையம் வைத்து முஸ்லீம்கள் மத்தியில், முஸ்லீம்நாடுகளில் இயேசுவை அறிவிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் கிறிஸ்தவர்களுக்காக, ஊழியர்களுக்காக, ஊழிய நிறுவனங்களுக்காக ஜெபிப்போம். முஸ்லீம்களின் மத்தியில் அனேகர் இயேசுவை ஆண்டவராக இரட்சகராக ஏற்றுக் கொள்ள நம் பங்கு என்ன என்று சிந்திப்போம்.

-அற்புதராஜ் சாமுவேல்