ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

திங்கள், 31 ஜனவரி, 2022

திருக்குர்‍ஆன் களஞ்சியம் - குர்‍ஆன் அத்தியாயம் 1: அல்ஃபாத்திஹா ஆய்வு கட்டுரைகள்

(திருக்குர்‍ஆன் களஞ்சியம்)

அல்ஃபாத்திஹா ஆய்வு கட்டுரைகள்

  • 1.1 கிராத்துக்களில் அல் ஃபாத்திஹா ஆய்வு: குர்‍ஆன் 1:4 எந்த உச்சரிப்பு சரியானது? மாலிகி, மலிகி, மாலிக, மல்கி, மில்கி, மிலிகி, மலக, மாலிக், மில்க
  • 1.2 கர்த்தரின் ஜெபமும், அல் ஃபாத்திஹாவும் ஓர் ஒப்பீடு

1.1 கிராத்துக்களில் அல் ஃபாத்திஹா ஆய்வு: குர்‍ஆன் 1:4 எந்த உச்சரிப்பு சரியானது? மாலிகி, மலிகி, மாலிக, மல்கி, மில்கி, மிலிகி, மலக, மாலிக், மில்க

குர்‍ஆனின் முதல் அத்தியாயம் நான்காம் வசனம், கீழ்கண்டவாறு உள்ளது:

1:4. (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).(முஹம்மது ஜான் தமிழாக்கம்)

1:4. (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி (சவூதி தமிழாக்கம்)

ஹ‌ஃப்ஸ் குர்‍ஆன் அரபி மூலத்தில்: மாலிகி யௌமித்தீன் (مٰلِكِ يَوْمِ الدِّيْنِؕ)

இன்று பெரும்பான்மை முஸ்லிம்கள் பயன்படுத்துவது, ஹஃப்ஸ் குர்‍ஆன் ஆகும். இது இமாம் ஹஃப்ஸ் என்பவர் மூலமாக கொடுக்கப்பட்ட குர்‍ஆன் (கிராத்) ஆகும். இதே போன்று, முஹம்மதுவின் காலம் தொடங்கி பல இமாம்கள், இஸ்லாமிய அறிஞர்கள் மூலமாக குர்‍ஆன் ஓதப்பட்டு, நம்மிடம் வந்து சேர்ந்துள்ளது. 

ஆக, இன்று நம்மிடம் 20க்கும் அதிகமான அரபி மூல கு‍ர்‍ஆன்கள் உள்ளன. அவைகளை குர்‍ஆன் கிராத்துக்கள் என்பார்கள். இவைகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இல்லை, ஒரே வார்த்தையை வெவ்வேறு விதமான வார்த்தைகளைக் கொண்டு ஓதியுள்ளார்கள் மற்றும் எழுதியுள்ளார்கள். இந்த அரபி மூலங்கள் அனைத்தும் நம்மிடம் உள்ளன.

குர்‍ஆன் ஏழுவட்டார மொழி வழக்கில் இறங்கியது என்று முஹம்மது கூறியுள்ளார், அதனை இஸ்லாமிய உலகம் அங்கீகரிக்கிறது. இந்த ஏழு வட்டார குர்‍ஆன்கள் தான் இன்னும் பெருகி இப்போது 20க்கும் அதிகமான குர்‍ஆன்களாக மாறியுள்ளது. இக்கட்டுரையின் கடைசியில் ஏழுவட்டார குர்‍ஆன் பற்றிய முந்தைய  கட்டுரைகளின் தொடுப்புக்களை கொடுத்துள்ளேன்.

இக்கட்டுரையின் ஆய்வு  குர்‍ஆன் 1:4ம் வசனத்தில் வரும் ஒரு வார்த்தையைப் பற்றியதாகும்.  கீழ்கண்ட அட்டவணையை பார்க்கவும். குர்‍ஆன் 1:4ல் வரும் வசனத்தை அக்கால இஸ்லாமிய அறிஞர்கள் எப்படி மாற்றி உச்சரித்து இருந்துள்ளார்கள் என்பதை அறியமுடியும்.

மேற்கண்ட அட்டவணையின் வண்ணங்களை கணக்கில் கொள்ளவேண்டாம், கிராத்துக்களை வேறுபடுத்திக் காட்ட பல வண்ணங்களை கொடுத்துள்ளேன், அவ்வளவு தான்.

இந்த அட்டவணையில் உள்ளவற்றை புரிந்துக்கொள்ள சில விளக்கங்களை இப்போது பார்ப்போம்:

1) மாலிகி (māliki):

மாலிகி என்ற வார்த்தையை பயன்படுத்தும் கிராத்துக்கள் (குர்‍ஆன்கள்) மற்றும் அறிஞர்கள் பற்றிய விவரம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்று உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்படும் குர்‍ஆன், 1924ம் ஆண்டு எகிப்து வெளியிட்ட 'ஹஃப்ஸ் கிராத்தில்' உள்ள குர்‍ஆன் ஆகும், இது தான் முதன் முதலில் பிரிண்ட் (அச்சு) செய்யப்பட்ட குர்‍ஆன் ஆகும்.  இதை "Print edition of the Quran" என்றும்  ஆஸிம் வழியாக, ஹஃப்ஸ் இமாம் மூலமாக  வந்த குர்‍ஆன் என்றும் கூறுவார்கள். இதில் மாலிகி என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. 

அடுத்ததாக, இப்னு முஜாஹித் என்ற இஸ்லாமிய அறிஞர், தம்முடைய " Kitāb al-sabʿa fī l-qirāʾāt" என்ற புத்தகத்தில் பல கிராத்துக்கள் பற்றி ஆய்வு செய்து எழுதியுள்ளார். இவர் குர்‍ஆனின் கிராத்துக்களில் ஆய்வு செய்த சிறந்த அறிஞர் ஆவார்.  இவர் தம் புத்தகத்தில், முஹம்மதுவும், ஆஸிம் என்பவரும் (இவர் தான் ஹஃப்ஸ் இமாமின் ஆசிரியர்), மேலும் அல் கிசாய் என்ற கிராத்திலும், இதே வார்த்தை அதாவது 'மாலிகி' என்பதை பயன்படுத்தியுள்ளார்கள் என்று கூறுகின்றார். (இவரைப் பற்றி மேலும் அறிய இங்கு சொடுக்கவும்).

அடுத்ததாக அபூ அமர் அத்தானி என்ற இஸ்லாமிய அறிஞர் பற்றியது, இவரும் குர்‍ஆனின் கிராத்துக்கள் மற்றும் ஹதீஸ்கள் பற்றிய ஆய்வுகள் செய்தவர் ஆவார். இவர் தமது " Kitāb at-Taisīr fī 'l-qirāʾāt as-sabʿ" என்ற புத்தகத்தில்,  ஆஸிமும், அல் கிசாயும் "மாலிகி" என்ற வார்த்தையை தங்கள் கிராத்துக்களில் பயன்படுத்தினார்கள் என்று கூறுகின்றார்.

மேற்கண்ட அட்டவணையில் "நஃபி(Nafi)" என்று இருப்பது தான் "வர்ஷ்" குர்‍ஆன் ஆகும்.

இப்போது உங்களுக்கு மேற்கண்ட அட்டவணையை எப்படி படித்து புரிந்துக்கொள்ளவேண்டும் என்று தெரிகின்றதா? இதே போன்று தான் 2 லிருந்து 20 வரை, பலர் பல வகையில் குர்‍ஆனை ஓதியுள்ளார்கள், முக்கியமாக குர்‍ஆன் 1:4ம் வசனத்தில் வரும் ஒரு வார்த்தையை 20க்கும் அதிகமான வகையில் ஓதியுள்ளார்கள்.

  1. māliki - மாலிகி
  2. maliki - மலிகி
  3. malki - மல்கி
  4. milki - மில்கி
  5. miliki  - மிலிகி
  6. mālika - மாலிக‌
  7. malaka - மலக‌
  8. malika - மலிக‌
  9. mālik - மாலிக்
  10. malka  - மல்கா
  11. malkī - மல்கீ
  12. milka - மில்க‌
  13. maliku - மலிகு
  14. malikan - மலிகன்
  15. mālikun - மாலிகுன்
  16. māliku - மாலிகு
  17. malīki - மலீகி
  18. mēliki - மேலிகி
  19. mæliki - மெயிலிகி
  20. mallāki - மல்லாகி

1924ம் ஆண்டு ஹஃப்ஸ் கிராத்தில் உள்ள குர்‍ஆனை பிரிண்ட் எடுத்ததால், இன்று பெரும்பான்மை முஸ்லிம்கள் "மாலிகி" என்று குர்‍ஆன் 1:4ஐ வாசிக்கிறார்கள். ஒரு வேளை, வர்ஷ் கிராத் குர்‍ஆனை பிரிண்ட் செய்து இருந்திருந்தால், முஸ்லிம்கள் "மலிகி" என்று இன்று வாசித்து இருந்திருப்பார்கள்.

கார்பஸ் கொரோனிகம் தளம்

இந்த தளம் குர்‍ஆனின் ஆரம்பகால கையெழுத்துப் பிரதிகள், சுருள்கள் பற்றிய ஆய்வு, குர்‍ஆன் கிராத்துக்கள் பற்றிய ஆய்வுகளைச் செய்கிறது. குர்‍ஆனின் பழமையான பிரதிகளை படமெடுத்து வெளியிடுகிறது.  குர்‍ஆனின் ஆய்வுகளை செய்ய விரும்புபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள தளமாகும். இந்த தளத்திருந்து தான் தற்போது படித்துக் கொண்டு இருக்கும் கட்டுரையை நான் தொகுத்தேன்.

இந்த தளம் தன்னைப் பற்றிச் சொல்லும் விவரங்களை இங்கு படிக்கலாம்.

https://corpuscoranicum.de/about/index

About the project: Corpus Coranicum – Textual documentation and historically critical commentary on the Qur'an

The project's goals: The project offers systematic access to early Qur'anic manuscripts with images and transliterated text. In parallel, a catalogue of variant readings included in the works of the Islamic scholarly tradition is produced. Based on textual history, the project creates a chronological commentary using methods of literary studies and referring to relevant texts from Antiquity and Late Antiquity. These source texts are accessible in the database 'Texts from the environment of the Qur'an' (TEQ). The development of the first Muslim community is reconstructed for the first time as the interaction between the Prophet and the first addressees in Mecca and Medina.

1.2 கர்த்தரின் ஜெபமும், அல் ஃபாத்திஹாவும் ஓர் ஒப்பீடு

கிறிஸ்தவர்களுக்கு எப்படி கர்த்தரின் ஜெபம் இருக்கிறதோ அதே போன்று முஸ்லிம்களுக்கு அல் பாத்தியா அத்தியாயம் இருக்கிறது என்று சொல்லலாம்.  இந்த இரண்டு ஜெபங்களும் ஒன்றா? குர்‍ஆனின் பாத்தியா ஜெபத்தை ஒரு கிறிஸ்தவன் சொல்ல முடியுமா? அதேபோன்று கர்த்தரின் ஜெபத்தை ஒரு முஸ்லிம் சொல்ல முடியுமா? 

வாருங்கள் ஒரு சிறு ஒப்பீடு செய்யலாம்.

புதிய ஏற்பாட்டில் இந்த ஜெபம் இரண்டு இடங்களில் வருகிறது, மத்தேயு மற்றும் லூக்கா சுவிசேஷங்களில் இது வருகிறது.  மத்தேயுவில் நீண்ட ஜெபமாகவும்,  லூக்காவில் சுருக்கமான ஜெபமாகவும் வருகிறது.

குர்‍ஆன்

அல் ஃபாத்திஹா 1-7

இயேசு கற்றுக்கொடுத்த ஜெபம்

மத்தேயு 6:9-13

1:1 அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)

1:2 அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

1:3 (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.

1:4 (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).

1:5 (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

1:6 நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!

1:7 (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.

6:9. நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;

6:10. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.

6:11. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.

6:12. எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.

6:13. எங்களைச் சோதனைக் குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்,

 

கர்த்தரின் ஜெபம் அரபியில் மற்றும் அரபி ஒலிப்பெயர்ப்பில்:

ஆங்கிலம் மற்றும் தமிழில் ஒலிப்பெயர்ப்பு

அரபி மற்றும் ஒலிப்பெர்யர்ப்பு

Our Father, Who art in heaven,

அபானா அல்லதீ ஃபீ அஸ்ஸமாவாதி

أَبَانَا الذِي فِي السَّمَاوَاتِ

Abā-nā 'alladhī fī as-samāwāti,

Hallowed be thy name

லிய த கத்தஸ் இ ஸ்முக

لِيَتَقَدَّسَ اسْمُكَ

li-ya-ta-qaddas-i asm-u-ka

Thy kingdom come

லிய தி மலகூதுக‌

لِيَأْتِ مَلَكُوتُكَ

li-ya-'ti malakūt-u-ka,

Thy will be done on earth as in heaven.

லி தகும் மஷிஅதுக ஃபீ அலர்த் இ கமா ஃபீ அஸ்ஸமா

لِتَكُنْ مَشِيئَتُكَ فِي الأَرْضِ كَمَا فِي السَّمَاءِ

li-takun ma-shī'at-u-ka fī al-'ar-i kamā fī as-samā'.

Give us our daily bread

அதினா குப்ஸ் அனா அல் யௌமி

اعْطِنَا خُبْزَنَا اليَوْمِيَّ

'a-ʽṭi-nā khubz-a-nā al-yawm-ī,

And forgive our trespasses

அ ஃபினா மிம்மா இலய்னா

اعْفِنَا مِمَّا عَلَيْنَا

'a-fi-nā mi-mā 'ilay-nā

As we forgive those who trespass against us

ஃபகத் அஃபய்னா நஹ்னு அய்துன் மின் லனா அலய்ஹி

فَقَدْ أَعْفَيْنَا نَحْنُ أيَضاً مَنْ لَنَا عَلَيْهِ

faqad 'afay-nā nanu aydhun min la-nā 'alay-hī

And lead us not into temptation,

வலா துத் ஹில்னா ஃபில் தஜ்ரிபதின்

وَلاَ تُدْخِلْنَا فِي تَجْرِبَةٍ

Wala thud-hil-nā fī ta-jribat-in,

But deliver us from evil,

லகின் நஜ்ஜினா மினஷ் ஷிர்ரீரி

لَكِنْ نَجِّنَا مِنَ الشِّرِّيرِ

lakin najji-nā mina alsh-shirrīr

For thine is the kingdom, the power and the glory forever, Amen

லஅன்ன லக அல்முல்கு வஅல் கூவது வஅல் மஜ்த இலா அல் அபதி. ஆமீன்

لأَنَّ لَكَ الْمُلْكَ وَالْقُوَّةَ وَالْمَجْدَ إِلَى الأَبَدِآمِين

l'anna laka al-mulku wa-al-qūwatu wa-al-majda 'ilā al-'abadi. 'āmīn

பிள்ளைகளின் உரையாடல், அடிமைகளின் வேண்டுதல்:

முதலாவதாக, இயேசு கற்றுக்கொடுத்த ஜெபத்தில், மனிதனுக்கும் இறைவனுக்கு இடையே இருக்கும் மிகச்சிறந்த உறவுமுறையாகிய "எங்கள் பிதாவே" என்ற வார்த்தைகளோடு தொடங்க கற்றுக் கொடுக்கின்றார். ஆனால், குர்‍ஆனின் ஜெபத்தில் "அல்லாஹ்வின் பெயரில் தொடங்குகிறது", ஏனென்றால், எந்த காலத்திலும் முஸ்லிம்கள் அல்லாஹ்வின் பிள்ளைகள் ஆகமுடியாது, அவர்கள் அல்லாஹ்வின் அடிமைகளே ஆவார்கள். அல்லாஹ்வை ஒரு முஸ்லிம் "பிதாவே, என் தகப்பனே" என்று அழைப்பது மிகப்பெரிய பாவமாக கருதப்படுகிறது. 

இரண்டாவதாக, இவ்விரு விண்ணப்பங்களிலும், இறைவனை போற்றுவது இருக்கின்றது. மூன்றாவதாக, தங்கள் தேவைகளை, வேண்டுதல்களை இவ்விரு வேண்டுதல்களிலும் காணலாம். 

மன்னிப்பும், குற்றச்சாட்டும்:

குர்‍ஆனின் ஜெபத்தில் சொல்லிக்கொடுக்கப்படாத‌  ஒன்று, இயேசு கற்றுக்கொடுத்த ஜெபத்தில் முக்கியமாக வருவது என்னவென்றால் "மன்னிப்பு" என்ற ஒன்றாகும். இயேசு கற்றுக்கொடுத்த ஜெபத்தை செய்யும் ஒவ்வொரு கிறிஸ்தவரும் உச்சரிக்கும் ஒன்று, 'எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்' என்பதாகும். "மன்னிப்பு" என்பது பைபிளின் முதல் புத்தகம் ஆதியாகமம் தொடங்கி, வெளிப்படுத்தல் வரை தொடரும் ஒரு இறையியல் ஆகும். 

இதில் இன்னொரு அழகான விஷயம் என்னவென்றால், "தேவனிடம் மன்னிப்பு கோரும் நபர்கள், தாங்கள் முதலாவது மற்றவர்களை மன்னிக்கவேண்டும், அதன் பிறகு, தேவனிடம் மன்னைப்பை கேட்கவேண்டும்'.  நமக்கு எதிராக செயல்படுபவர்களை நாம் மன்னிக்காமல், இறைவனுக்கு எதிராக செயல்படும் நாம் எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவரிடம் மன்னிப்பு கேட்கமுடியும்?

இதையே சிறிது தெளிவாக மற்றி, இயேசு இன்னொரு இடத்தில் தம் சீடர்களுக்கு கற்றுக்கொடுக்கின்றார், பார்க்க: லூக்கா 11:4: 'எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்; நாங்களும் எங்களிடத்தில் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே'. நீ மன்னித்தால் தான் உனக்கு மன்னிப்பு உண்டு என்று பல இடங்களில் இயேசு போதித்தார், இதையே அனுதின ஜெபத்தில் நினைவு கூர்ந்து தேவனிடம் மன்னிப்பு கேட்கும் படி இயேசு கற்றுக்கொடுத்தார்.

குர்‍ஆனின் அல்ஃபாத்திஹாவில் இல்லாத ஒன்று இந்த மன்னிப்பு ஆகும்.

கடைசியாக, இன்னொரு வித்தியாசத்தை இங்கு சுட்டிக்காட்டவேண்டும். இயேசுவின் ஜெபத்திலும், குர்‍ஆனின் ஜெபத்திலும் மற்றவர்கள் வருகிறார்கள்.  கிறிஸ்தவனின் ஜெபத்தில், அந்த மற்றவர்களை நாங்கள் மன்னிக்கிறோம் என்று ஒரு கிறிஸ்தவன் அறிக்கையிட்டு, இறைவனிடம் மன்னிப்பு கேட்கிறான். ஆனால், ஒரு முஸ்லிமின் ஜெபத்தில், அந்த மற்றவன் செய்த செயலினால், அல்லாஹ் அவன் மீது கோபம் கொண்டான், எனவே அவனைப்போல என்னை ஆக்காதே, என்னை நேரான வழியில் நடத்து என்று வேண்டுதல் செய்ய முஸ்லிம் கற்றுக்கொடுக்கப்டுகின்றான்.

குர்‍ஆன் 1:7 (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.

இயேசு கற்றுக்கொடுத்த ஜெபத்தில், 'ஒரு மன்னிப்பு மேலோங்கி காணப்படுகிறது', அல்லாஹ் கற்றுகொடுக்கும் ஜெபத்தில், 'ஒரு தீயவனோடு ஒப்பிட்டு, அவனைப்போல என் மீது கோபம் கொள்ளாதே' என்று விண்ணப்பம் செய்யப்படுகின்றது.

குர்‍ஆனின் இந்த‌ வசனத்தை (1:7)  பார்க்கும் போது, இயேசு சொன்ன ஒரு உவமை நினைவிற்கு வருகிறது.

லூக்கா 18:9-14

9. அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்.

10. இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.

11. பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.

12. வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.

13. ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.

14. அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.

ஒருவன் விண்ணப்பம் செய்யும் போது, தான் ஒரு குற்றவாளி என்பதை உணர்ந்து, மன்னிப்பு கேட்கிறான், இன்னொருவனோ, மற்றனை ஒப்பிட்டுப் பார்த்து 'நான் அவனைப்போல கெட்டவன் அல்ல' என்று விண்ணப்பம் செய்கிறான்.  குர்‍ஆன் கற்றுக்கொடுக்கும் அல்ஃபாத்திஹாவில் இதைத் தான் நாம் கடைசி வசனத்தில் காண்கிறோம்: "உன் கோபத்திற்கு ஆளான யூதர்களைப்போல என்னை ஆக்காதே! உன் வழியை விட்டு விலகியவர்களாக உள்ள கிறிஸ்தவர்களைப் போல என்ன ஆக்காதே" என்று மற்றவர்களை ஒப்பிட்டுப் பார்த்து, அல்லாஹ்விடம் விண்ணப்பம் செய்ய குர்‍ஆன் சொல்லிக்கொடுக்கிறது.

கடைசியாக, இவ்விரு மார்க்கங்களின் ஜெபங்களை கவனிக்கும் போது நமக்கு தெரிவதென்ன? கிறிஸ்தவ ஜெபத்தில் மனிதனுக்கு இறைவனுக்கும் உள்ள 'தந்தை மகன்' என்ற உறவும், அதே போன்று "மற்றவர்களை மன்னித்தால் தான் நமக்கு மன்னிப்பு கிடைக்கும் என்ற அடிப்படை கிறிஸ்தவ இறையியலும் மேலோங்கி நிற்கிறது". ஆனால், குர்‍ஆனின் அல்ஃபாத்திஹாவை கவனித்தால், "அல்லாஹ் உன் எஜமான், நீ அவனுக்கு அடிமை என்ற உறவுமுறையும், அதே போன்று, மற்றவர்களுக்கு நேராக விரலை நீட்டி, அவனைக் குற்றப்படுத்தி, அவனைப்போல என்ன ஆக்காதே' என்ற குற்றம் கண்டு ஒதுங்கிச் செல்லும் மனப்பான்மையே மேலோங்கி நிற்கிறது".

அல்ஃபாத்திஹாவை ஒரு கிறிஸ்தவன் சொல்லமுடியுமா?

இதுவரை நாம் இரண்டு மார்க்கங்களின் பொதுவான ஜெபங்களை ஒப்பிட்டுள்ளோம். அல்ஃபாத்திஹாவை ஒரு கிறிஸ்தவன் ஜெபமாக சொல்லமுடியுமா? என்று கேட்டால், "இல்லை, அதனை முழுவதுமாக சொல்லமுடியாது" என்று கூறலாம். ஏனென்றால்:

1) அல்ஃபாத்திஹாவின் முதல் வசனத்தில் "அல்லாஹ்வின்" பெயர் வருகிறது, அந்நிய தெய்வத்தின் பெயரில், அல்லது அதனை நோக்கி எப்படி ஒரு கிறிஸ்தவன் ஜெபிக்கமுடியும்?

2) அல்ஃபாத்திஹாவின் கடைசி (7) வசனத்தில் மற்றவர்களை ஒப்பிட்டு ஜெபிக்கும் படி சொல்லியுள்ளதால், இதனையும் ஒரு கிறிஸ்தவன் ஜெபிக்கமுடியாது. இது மட்டுமல்ல, இந்த வசனத்தில் யூதர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானவர்கள் என்றும், கிறிஸ்தவர்கள் வழிவிலகிச் சென்றவர்கள் என்றும் வருவதினால், இந்த அல்ஃபாத்திஹா ஜெபத்தை கிறிஸ்தவர்கள் ஜெப்பிக்கமுடியாது.

கர்த்தரின் ஜெபத்தை முஸ்லிம்கள் ஜெபிக்கமுடியுமா?

இல்லை, முஸ்லிம்கள் கர்த்தரின் ஜெபத்தை செய்யமுடியாது. 

முதலாவதாக, கர்த்தர் சொல்லித் தந்த முதல் வாக்கியமே, இஸ்லாமின் அஸ்திபாரத்திற்கு எதிரான ஒன்றாகும். அதாவது "பரமண்டலங்களில் உள்ள எங்கள் பிதாவே" என்றுச் சொல்லி முஸ்லிம்கள் ஜெபம் செய்யமுடியாது, ஏனென்றால், முஸ்லிம்கள் ஆவிக்குரிய அனாதைகள், அவர்களுக்கு மேலே வானத்தில் இருப்பது அப்பா அல்ல, அவன் எஜமான். இவர்கள் அவனது பிள்ளைகள் அல்ல, அவனது அடிமைகள். அடிமைகளை அனாதைகள் என்றுச் சொல்வதைத் தவிர வேறு எப்படி அழைக்கமுடியும். அடிமைகளுக்கு எஜமான்கள் இருப்பார்கள், தூக்கி எடுத்து தோளில் சுமக்கும் தந்தை இருக்கமாட்டார். ஒரு வேளை எஜமான் அவர்களை பிள்ளையாக தத்து எடுத்துக்கொண்டால் இதற்கு சாத்தியமுண்டு. ஆனால், இஸ்லாமில் இதற்கும் சாத்தியமில்லை, மகனாக தத்து எடுத்தாலும், தந்து எடுத்த மனிதனைப் பார்த்து, "என் அப்பா" என்று அழைக்கமுடியாது. 

குர்‍ஆன் 33:5. (எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர் களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்; ஆனால் அவர்களுடைய தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர்; (முன்னர்) இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை; ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்); அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

எனவே, முஸ்லிம்கள் கர்த்தரின் ஜெபத்தை செய்யமுடியாது.   ஆனால்,, மற்ற வசனங்களைச் சொல்லி முஸ்லிம்கள் ஜெபம் சொல்லமுடியும். நான் மற்றவர்களை மன்னிக்கிறதுபோல, என்னையும் நீ மன்னிப்பாயா! என்றுச் சொல்லி ஒரு முஸ்லிம் ஜெபம் செய்வதற்கு ஏதாவது தடையுள்ளதா?

ழமையான குர்‍ஆன் கையெழுத்துப் பிரதிகளில் அல்‍ஃபாத்திஹா

1)   சமர்கண்ட் குர்‍ஆன் (Tashkent [Samarqand], Uzbekistan)

சமர்கண்ட் குர்‍ஆன் கையெழுத்துப் பிரதிகளில் அல்ஃபாத்திஹா அத்தியாயம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஸூரா 2:7ம் வசனம் தான் முதல் வசனமாக உள்ளது. [1]

2)   இஸ்தான்புல் குர்‍ஆன் (Topkapi Museum, Istanbul, Turkey)

இஸ்தான்புல் குர்‍ஆன் கையெழுத்துப் பிரதிகளில் "அல்ஃபாத்திஹா" அத்தியாயம் இருக்கிறது, ஆனால் அது பழுதடைந்த பிரதியாக (Fragmented) காணப்படுகிறது. [2]

3)   ஸனா குர்‍ஆன் (Sanaa Manuscripts, Great Mosque of Sana'a in Yemen)

      ஸனா கையெழுத்துப் பிரதிகளிலும் அல்ஃபாத்திஹா ஸூரா இல்லை. [3]\

[1] www.islamic-awareness.org/quran/text/mss/samarqand.html

[2] https://www.islamic-awareness.org/quran/text/mss/topkapi.html
[3] www.islamic-awareness.org/quran/text/mss/soth


திருக்குர்‍ஆன் களஞ்சியம் பொருளடக்கம்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/study_quran/qw_sura_1_articles.html


திருக்குர்‍ஆன் களஞ்சியம் - அத்தியாயம்: 1 அல் ஃபாத்திஹா (தோற்றுவாய்)

4. அத்தியாயம்: 1 அல் ஃபாத்திஹா (தோற்றுவாய்)

இவ்வத்தியாத்தில் பார்க்கவிருக்கும் தலைப்புக்கள்: 

  • 4.1 பாத்திஹா (ஃபாத்திஹா) அறிமுகம்
  • 4.2 பாத்திஹா விளக்கவுரை
  • 4.3 அரபி குர்‍ஆனை பார்த்தவுடன், அது ஹஃப்ஸ் குர்‍ஆனா, வர்ஷ் குர்‍ஆனா என்று எப்படி கண்டுபிடிப்பது?
  • 4.4 அல்ஃபாத்திஹாவின் முதல் வசனம் எது?
  • 4.5 ஹதீஸ்களில் அல்ஃபாத்திஹா

ஸூராவின் சுருக்கம்:

  • வசனம்:1 - துவக்கம்
  • வசனங்கள்: 2 – 5 - அல்லாஹ்வை புகழுதல்
  • வசனங்கள்: 6 – 7 - நேர் வழியில் நடத்தும்படி வேண்டுதல்
அல் ஃபாத்திஹா (தோற்றுவாய்)
மொத்த வசனங்கள்: 7

 

1:1 அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)

 

 

 

1:1 بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்

 

1:2 அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

 

 

 

1:2 اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ‏

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்

 

1:3 (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.

 

 

1:3 الرَّحْمٰنِ الرَّحِيْمِۙ‏

அர்ரஹ்மானிர்ரஹீம்

 

 

1:4 (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).

 

 

1:4 مٰلِكِ يَوْمِ الدِّيْنِؕ‏

மாலிகி யவ்மித்தீன்

 

 

1:5 (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

 

 

 

1:5 اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُؕ‏

இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தயீன்

 

1:6 நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!

 

 

1:6 اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ

இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம்

 

 

1:7 (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல

 

 

1:7 صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْۙ‏ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ

ஸிராதல்லஸீன அன் அம்த அலைஹிம் ஙைரில்மங்ளூபி அலைஹிம் வலள்ளால்லீன்

 

4.1 பாத்திஹா (ஃபாத்திஹா) அறிமுகம்

குர்ஆனின் முதல் அத்தியாயத்தின் பெயர் ஃபாத்திஹா என்பதாகும். இந்த அத்தியாயத்திற்கு அனேக பெயர்கள் உள்ளன, அதாவது:

  • 1. "தோற்றுவாய்" (அ) "ஃபதிஹதுல் கிதாப்" 
  • 2. வேதத்தின் ஆரம்பம், (அ) உம்மு அல் குர்ஆன் (குர்-ஆனின் தாய்). 

கிறிஸ்தவர்களுக்கு கர்த்தரின் ஜெபம் எப்படி உள்ளதோ அது போல, முஸ்லிம்களின் ஜெபம் என்று இதனைக் கூறலாம்.

முஸ்லிம்களின் தொழுகைகளில் இது முக்கிய பங்கு வகிக்கிறது, தனிப்பட்ட அல்லது பொதுவான நிகழ்ச்சிகளிலும் இதனை ஓதுவார்கள். இதனை ஓதாமல் முக்கியமான காரியங்கள் முழுமையடையாது. இந்த அத்தியாயம் வெளிப்பட்ட தேதி சரியாக தெரியவில்லை. ஆனால், இஸ்லாமின் ஆரம்ப கால முதலே இது அவர்களின் தொழுகையின் ஒரு அங்கமாக‌ அமைந்துள்ளது.  முஹம்மது தன்னை நபியாக சொல்லிக்கொண்ட காலத்திலிருந்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இது இறக்கப்பட்டு இருக்கலாம். இதனுடைய அறிமுகம் முதன் முதலாக எப்போது உண்டானது என்று தெரியவரவில்லை. மேலும் மக்காவில் முஸ்லிம்களாக மாறியவர்களின் எண்ணிக்கை சொற்பமாக இருந்தபடியினால், இதன் துவக்கம் தெரியவில்லை.

இந்த அத்தியாயத்திற்கு 'சபா அன் மின் அல் மதானி' (திரும்ப திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள்) என்றும் பெயர் உள்ளது. குர்ஆன் 15:87ம் வசனத்தில் குறிப்பிடப்படும் அத்தியாயம் இதுவாக இருக்கக்கூடும். இந்த வசனத்தில் "அல் ஃபாத்திஹா" என்ற பெயர் வராது, மொழிப்பெயர்ப்பாளர்கள் அடைப்பிற்குள் அதனை எழுதுகிறார்கள், கீழுள்ள வசனத்தை பார்க்கவும்:

முஹம்மது ஜான் தமிழாக்கம்: 

ஸூரா 15:87 (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு திரும்பத் திரும்ப ஓதக் கூடிய (ஸுரத்துல் ஃபாத்திஹாவின்) ஏழு வசனங்களையும், மகத்தான (இந்த) குர்ஆனையும் வழங்கியிருக்கின்றோம். 

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்: 

ஸூரா 15:87 (நபியே!) நிச்சயமாக நாம் உங்களுக்கு திரும்பத் திரும்ப ஓதக்கூடிய ஏழு வசனங்களை (உடைய "அல்ஹம்து" என்னும் அத்தியாயத்தை)யும், இந்த மகத்தான குர்ஆனையும் அளித்திருக்கிறோம்.

மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்: 

ஸூரா 15:87 (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு திரும்பத் திரும்ப ஓதக் கூடிய ஏழு வசனங்களை(யுடைய அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை)யும் இந்த மகத்தான குர் ஆனையும் தந்திருக்கிறோம்.

4.2 பாத்திஹா விளக்கவுரை

மனிதன் அல்லாஹ்விடம் வேண்டுதல்:

ஒரு மனிதன் இறைவனிடம் வேண்டும் வேண்டுதல் இந்த அத்தியாயத்தில், கொடுக்கப்பட்டுள்ளது. குர்‍ஆனின் தெய்வீக மூலத்திற்கு ஒரு சான்று "ஒவ்வொரு அத்தியாயத்திலும், அல்லாஹ்வே பேசுவதாக இருக்கும்" என்று முஸ்லிம்கள் சொல்வார்கள். ஆனால், இந்த அத்தியாயத்தில் ஒரு பிரச்சனை உள்ளது. முழுக்க முழுக்க ஒரு பாவியான மனிதன் இறைவனிடம் வேண்டுவதாக இந்த அத்தியாயம் அமைந்துள்ளது. "நபியே கூறுவீராக (குல்)" என்ற வார்த்தை முழு குர்‍ஆனிலும் ஆங்காங்கே காணப்படும், அல்லாஹ் தான் குர்‍ஆனின் வார்த்தைகள் என்பதற்கு இது தான் சான்று என்று சொல்வார்கள். ஆனால், இந்த அத்தியாயத்தில் அப்படி வராதது, ஒருவேளை இந்த அத்தியாயம் மனிதனிடமிருந்து வந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுவதற்கு வாய்ப்பளித்துவிட்டது.

முஸ்லிம் அறிஞர்களின் கருத்துப்படி, "கூறுவீராக (குல்)" என்ற வார்த்தை இவ்வத்தியாயத்தில் வரவில்லையென்றாலும், "தன்னிடம் இப்படி வேண்டுங்கள்" என்று அல்லாஹ் மனிதனுக்கு கற்றுக்கொடுத்தது தான் இங்கு வருகிறது, எனவே இதுவும் அல்லாஹ்வின் வார்த்தைகளே என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள். 

இப்போது வசனங்களின் விளக்கங்களைக் காண்போம்.

அல்லாஹ்வை நோக்குதல்: வசனம் 1

1:1 அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)

1:1 بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்

இந்த "பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்" என்ற வார்த்தைகள் 9வது அத்தியாயம் தவிர, குர்‍ஆனின் மற்ற எல்லா அத்தியாயங்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டுள்ளது.

ஹஃப்ஸ் குர்‍ஆனில் "பிஸ்மில்லா ஹிர்ரஹ் மானிர் ரஹீம்" என்று முதல் வசனம் தொடங்கும், வர்ஷ் குர்‍ஆனில் "அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்" என்பது முதல் வசனமாக இருக்கும். இதைப் பற்றி மேலும் அறிய "அல்ஃபாத்திஹாவின் முதல் வசனம் எது?" என்ற தலைப்பில் கொடுக்கப்பட்ட விவரங்களை படிக்கவும். ஹதீஸ்களின் படி, இந்த வசனம் முதல் வசனமாக இல்லாமல் இருந்தாலும், அல் ஃபாத்திஹா என்பது ஒரு முக்கியமான அத்தியாயமாக இருப்பதினால், இந்த வசனத்தை ஓதவேண்டும் என்றும் அபூ தாவூத் ஹதீஸ் தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது [1].

இவ்வசனத்தில் இஸ்லாமிய இறைவனின் பெயராகிய "அல்லாஹ்வும்", அவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள இரண்டு பட்டப்பெயர்களுமாகிய "அர்ரஹ்மான் - பேரருளாளன்" மற்றும் "அர்ரஹீம் - பேரன்பாளன்" வருகின்றன.  அல்லாஹ்விற்கு அழகான 99 பெயர்களை முஸ்லிம்கள் அடையாளப்படுத்துகிறார்கள், அவைகளில் இவ்விரு பட்டப் பெயர்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விரண்டு பட்டப்பெயர்களும், அல்லாஹ் அதிகமான அன்பு செலுத்துபவன், பெரிய கிருபையாளன் என்றும், ஒரு தாயைக் காட்டிலும் அதிக அன்பு செலுத்துபவன் அல்லாஹ் என்றும் முஹம்மது கூறியுள்ளார்.

ஸூரா 67:29. (நபியே!) நீர் கூறும்: (எங்களைக் காப்பவன்) அவனே - அர்ரஹ்மான்; அவன் மீதே நாங்கள் ஈமான் கொண்டோம்; மேலும் அவனையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம் - எனவே, வெகு சீக்கிரத்தில் பகிரங்கமான வழி கேட்டிலிருப்பவர் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள்!"

வசனங்கள்: 2 – 5 - அல்லாஹ்வை புகழுதல்

கீழ்கண்ட நான்கு வசனங்கள் ஒரு முஸ்லிம் அல்லாஹ்வை புகழுவது போன்று அமைக்கப்பட்டுள்ளன.

1:2 அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

1:2 اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ‏

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்

1:3 (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.

1:3 الرَّحْمٰنِ الرَّحِيْمِۙ‏

அர்ரஹ்மானிர்ரஹீம்

1:4 (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).

1:4 مٰلِكِ يَوْمِ الدِّيْنِؕ‏

மாலிகி யவ்மித்தீன்

1:5 (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

1:5 اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُؕ‏

இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தயீன்

இரண்டாவது வசனத்தில் வரும் "ரப்" என்ற வார்த்தையின் பொருள் "இறைவன், எஜமானன், அதிபதி" என்பதாகும். "ஆலமீன்" என்ற வார்த்தைக்கு "உலகம், அகிலம்" என்பதாகும். ரப்பில் ஆலமீன் என்று சொல்லும் போது, "உலகத்தின் இறைவன் அல்லது உலகத்தை படைத்தவன்" என்று பொருளாகும்.

குர்‍ஆனில் 900க்கும் அதிகமாக இடங்களில் இவ்வார்த்தை பல வடிவங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது (அரபி மூல எழுத்துக்கள்: ர ப ப ஆகும் - The triliteral root rā bā bā (ر ب ب)).

சில உதாரணங்களை இங்கு காணலாம்:

அவர்களுடைய இறைவன்

Their Lord

குர்‍ஆன் 2:5

رَبِّهِمْ

Rabbihim

ரப்பிஹிம்

எங்களுடைய இறைவன்

Our Lord

குர்‍ஆன் 2:128

رَبَّنَا

Rabbanā

ரப்பனா

உன்னுடைய/ உங்களுடைய‌ இறைவன்

Your Lord

குர்‍ஆன் 2:30

رَبُّكَ

Rabbuka

ரப்புகா

அவனுடைய இறைவன்

His Lord

குர்‍ஆன் 2:37

 

رَبِّهِ

Rabbihi

ரப்பிஹி

அவளுடைய இறைவன்

Her Lord

குர்‍ஆன் 3:37

رَبُّهَا

Rabbuhā

ரப்புஹா

என் இறைவன்

My Lord

குர்‍ஆன் 2:126

رَبِّ

Rabbi

ரப்பி

எபிரேய மொழியிலும் முதல் நூற்றாண்டு காலத்தில், யூத மத போதகர்களை, ஆசிரியர்களை "ரபி" என்று அழைத்தனர், இதன் பொருள் "என் எஜமான் (My Master), என் ஆசிரியர்" என்று பொருளாகும். 

பார்க்க: மத்தேயு 23:7, 23:8, 26:25, 26:49, மாற்கு 9:5

மத்தேயு 23:7 சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள்:

மத்தேயு 23:8 நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்.

மத்தேயு 26:25 அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரை நோக்கி: ரபீ, நானோ? என்றான்; அதற்கு அவர்: நீ சொன்னபடிதான் என்றார்.

மத்தேயு 26:49 உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான்.

மாற்கு 9:5 அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: ரபீ, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான்.

இன்றும் "ரபி" என்ற வார்த்தைகளை பல யூதர்களை பட்டப்பெயர்களாக வைத்திருப்பதை காணமுடியும்.

மூன்றாம் வசனத்தில் "ரஹ்மான்" மற்றும் "ரஹீம்" என்ற வார்த்தைகள் வருகின்றன.  இதே வார்த்தைகள் தான் முதல் வசனத்திலும் வந்துள்ளன, "அர்ரஹ்மான் என்றால் பேரருளாளன் என்றும்" மற்றும் "அர்ரஹீம் என்றால் பேரன்பாளன் என்றும்" பொருளாகும்.

"மாலிகி யவ்மித்தீன்" தீர்ப்பு நாளின் அதிபதி:

நான்காம் வசனத்தில் ஒரு முக்கியமான் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது: "மாலிகி யவ்மித்தீன்" தீர்ப்பு நாளின் அதிபதி என்று அல்லாஹ்வை புகழுகிறது இந்த வசனம். "மாலிக்" என்றால் எஜமானன், அதிபதி என்று பொருள், "யௌம்" என்றால் நாள் என்று பொருள்.  தீன் என்றால் இந்த இடத்தில் "தீர்ப்பு" என்று பொருள், ஆக, "மாலிகி யௌமித்தீன்" யார் என்று கேட்டால், முஸ்லிம்கள் 'அது அல்லாஹ்' என்று கூறுவார்கள்.

எபிரேய மொழியில் "யோம் ஹ தின்  - Yom ha-din" என்று நியாயத்தீர்ப்பு நாளை அழைப்பார்கள்.  அரபியும் எபிரேய மொழியும் செமெடிட் மொழியின் வழியில் வந்தபடியினால், இவ்விரு வார்த்தைகளும் ஒரே மாதிரி இருப்பதை காணமுடியும்.

கிறிஸ்தவத்தின் "மாலிகி யௌமித்தீன் - தீர்ப்பு நாளின் அதிபதி" இயேசுக் கிறிஸ்து ஆவார்:

இயேசுக் கிறிஸ்து தம்மை தீர்ப்பு நாளின் அதிபதி என்றும், தமக்கு முன்பாகவே இவ்வுலகம் தீர்ப்புக்காக நிற்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். 

மத்தேயு 16:27. மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.

யோவான் 5:22 அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.

யோவான் 5:27 அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்.

மத்தேயு  25:31:46

31. அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்.  32. அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாக பிரிக்கிறது போல அவர்களை அவர் பிரித்து,  33. செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார்.

மேலும் வெளிப்பத்தின விசேஷம் புத்தகத்தில் இயேசுவின் தீர்ப்புநாள் செயல்கள் பற்றி மேலதிக விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

தீர்ப்பு நாளின் அதிபதி யார்? 

குர்‍ஆனின் இவ்வசனத்தின் படி தீர்ப்பு நாளின் அதிபதி அல்லாஹ் ஆவான், ஆனால், பைபிளின் படி, இயேசு தான் தீர்ப்பு நாளின் அதிபதியாகவும், உலக மக்கள அனைவரையும் தீர்ப்பு செய்கிறவராகவும் இருக்கிறார்.

உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்: வசனம் 5

1:5 (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

1:5 اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُؕ‏

இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தயீன்

இந்த வசனத்தில் அல்லாஹ்விடம் ஒவ்வொரு முஸ்லிமும் உதவியை தேடவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

வசனங்கள்: 6 – 7 - நேர் வழியில் நடத்தும்படி வேண்டுதல்

ஆறாம் வசனத்தில் தங்களை நேரான வழியில் நடத்தும்படி வேண்டிக்கொள்ளும் படி வசனம் கூறுகின்றது.

1:6 நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!

1:6 اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ

இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம்

1:7 (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல

1:7 صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْۙ‏ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ

ஸிராதல்லஸீன அன் அம்த அலைஹிம் ஙைரில்மங்ளூபி அலைஹிம் வலள்ளால்லீன்

ஏழாம் வசனத்தில் குறிப்பிடப்படுபவர்கள் யூதர்களா? கிறிஸ்தவர்களா?

'அல் ஃபாத்திஹா' ஸூராவில், "எங்களை யூதர்கள் கிறிஸ்தவர்களை போல ஆக்காதே" என்றுச் சொல்லி முஸ்லிம்கள் ஒவ்வொரு நாளும் பல முறை அல்லாஹ்விடம் வேண்டிக்கொண்டு இருப்பதை எத்தனை முஸ்லிம்களுக்குத் தெரியும்? இப்படி முஸ்லிம்கள் ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிறார்கள் என்று கிறிஸ்தவர்களுக்காகவாவது தெரியுமா? 

கீழ்கண்ட ஆங்கில மொழியாக்கத்தில், இதனை அடைப்பிற்குள் எழுதி அடையாளப்படுத்தியுள்ளார்கள்.

ஹிலாலி மற்றும் கான் ஆங்கில மொழியாக்கம்:

The Way of those on whom You have bestowed Your Grace, not (the way) of those who earned Your Anger (such as the Jews), nor of those who went astray (such as the Christians). S. 1:7 Hilali-Khan

4.3 அரபி குர்‍ஆனை பார்த்தவுடன், அது ஹஃப்ஸ் குர்‍ஆனா, வர்ஷ் குர்‍ஆனா என்று எப்படி கண்டுபிடிப்பது?

இது மிகவும் சுலபம். இதனை கண்டுபிடிப்பது எப்படி என்பதைப் பற்றிய ஒரு தகவலை இங்கு தருகிறோம்.

குர்‍ஆனின் முதல் அத்தியாயம் முதல் வசனத்தை கவனியுங்கள். 

  • 1:1 பிஸ்மில்லா ஹிர்ரஹ் மானிர் ரஹீம் (அரபி)
  • 1:1. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்) (தமிழ்)

என்பது முதல் வசனமாக இருந்தால், அது "ஹஃப்ஸ்" குர்‍ஆன் என்று தெரிந்துக்கொள்ளலாம். 

இப்படியில்லாமல், மேலே சொன்ன சொற்றொடர் ஒரு தலைப்பாக கொடுத்துவிட்டு, முதலாவது வசமனாக 

  • 1:1 அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் (அரபி)
  • 1:1 அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். (தமிழ்)

என்று இருந்தால், அது "வர்ஷ்" குர்‍ஆன் என்று தெரிந்துக்கொள்ளலாம். 

ஹ‌ஃப்ஸ் மற்றும் வர்ஷ் குர்‍ஆனின் முதல் அத்தியாயம் முதல் வசனம்:

மூன் பப்ளிகேஷன்ஸ் குர்‍ஆன் தமிழாக்கம்: முதல் வசனம் வித்தியாசம்

 மூன் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட குர்‍ஆன் தமிழாக்கத்தில் வர்ஷ் குர்‍ஆனில் உள்ளது போன்று 'முதல் வசனமாக' அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்ற வசனம் இருக்கும். இவர்களின் குர்‍ஆன் தமிழாக்கம், ஹஃப்ஸ் குர்‍ஆனிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டது தான், ஆனால், இந்த வசனத்தை அவர்கள் 'வர்ஷ்' குர்‍ஆன் போன்று பதித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

4.4 அல்ஃபாத்திஹாவின் முதல் வசனம் எது?

நாம் மேலே பார்த்தது போன்று, ஹஃப்ஸ் குர்‍ஆனில் "பிஸ்மில்லா ஹிர்ரஹ் மானிர் ரஹீம்" என்று முதல் வசனம் தொடங்கும், வர்ஷ் குர்‍ஆனில் "அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்" என்பது முதல் வசனமாக இருக்கும். இதில் எது சரியானது என்று பார்க்கும் போது, நமக்கு ஹதீஸ்களிலிருந்து ஒரு விவரம் கிடைக்கும்.

கீழ்கண்ட ஹதீஸில் இந்த அத்தியாயத்தின் முதல் வசனம், "அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்" என்று தொடங்கும் என்று முஹம்மது கூறியுள்ளார். இதன்படி தான் வர்ஷ் குர்‍ஆனில் அமைக்கப்பட்டுள்ளது, ஆனால் இன்று நாம் பயன்படுத்தும் ஹஃப்ஸ் குர்‍ஆனில், இந்த ஹதீஸுக்கு முரணாக உள்ளது, அதாவது "பிஸ்மில்லாஹ்" என்று முதல் வசனம் தொடங்குகிறது.

ஸஹீஹ் புகாரி எண்: 4474  (மேலும் பார்க்க: 4647, 4703, 5006)

அபூசயீத் பின் அல்முஅல்லா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் தொழுதுகொண்டிருந்தேன். அப்போது என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். நான் அவர்களுக்குப் பதிலளிக்கவில்லை. ஆகவே, நான் (தொழுது முடித்தபின்), "அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள் அழைத்தபோது) நான் தொழுதுகொண்டிருந்தேன்" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், "உங்களுக்குப் புத்துயிர் அளிக்கும் வழிக்கு இறைத் தூதர் உங்களை அழைக்கும்போது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (விரைந்து) பதிலளியுங்கள்" என்று (8:24ஆவது வசனத்தில்) அல்லாஹ் கூறவில்லையா? என்று கேட்டார்கள்.7

பிறகு என்னிடம், "குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை நீர் பள்ளிவாசலிலிருந்து வெளியே செல்வதற்கு முன்னால் நான் உமக்குக் கற்றுத்தருகிறேன்" என்று சொன்னார்கள். பிறகு என் கையைப் பிடித்துக்கொண்டார்கள். அவர்கள் வெளியே செல்ல முற்பட்டபோது நான் அவர்களிடம், "நீங்கள் "குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை நான் உமக்குக் கற்றுத் தருகிறேன்' என்று சொல்லவில்லையா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அது "அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்' (என்று தொடங்கும் "அல்ஃபாத்திஹா' அத்தியாயம்)தான். அவை திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் (அஸ்ஸப்உல் மஸானீ) ஆகும்.8 எனக்கு அருளப்பட்டுள்ள மகத்துவம் பொருந்திய குர்ஆனும் ஆகும்" என்று சொன்னார்கள். அத்தியாயம் :65

நூல்: முஸ்லிம், எண்: 655

முஸ்லிம் ஹதீஸ் எண் 655ல், பதிவு செய்யப்பட்டதின் படியும், "முதல் வசனம்" அல்ஹம்துலில்லாஹ் என்று தொடங்கும் வசனம் தான் என்பது விளங்கும். இந்த ஹதீஸை "ஹதிஸ்களில் அல் ஃபாத்திஹா" என்ற தலைப்பில் படித்துக் கொள்ளலாம்.

இதன்படி பார்த்தால், "பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்" என்பது குர்‍ஆனின் ஒரு வசனம் அல்ல, அது அத்தியாயங்களை அடையாளம் காட்ட எழுதப்பட்ட தலைப்பு என்பதை அறியமுடிகின்றது.

4.5 ஹதீஸ்களில் அல்ஃபாத்திஹா:

ஹதீஸ்களில் பல சுவாரசியமான விவரங்கள் இந்த அத்தியாயம் பற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது.  அவைகளை தலைப்புவாரியாக காண்போம். இந்த ஸூரா அருளப்பட்டதற்கான பின்னணி காரணங்கள் சொல்லப்படவில்லையென்றாலும், இதன் சிறப்புக்கள் பற்றி அதிக விவரங்கள் சொல்லப்பட்டுள்ளன.

(1) முஹம்மது சில வசனங்களை சப்தமாக ஓதுவார்

அபூ கதாதா(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் லுஹர்த் தொழுகையிலும் அஸர்த் தொழுகையிலும் ஸுரத்துல் ஃபாத்திஹாவுடன் மற்றோர் அத்தியாயத்தையும் ஓதுபவர்களாக இருந்தனர். சில நேரங்களில் (சில வசனங்களை) எங்களுக்குக் கேட்கும் படி ஓதுவார்கள். (இரண்டாவது ரக்அத்தை விட) முதலாவது ரக்அத்தை நீளமாக்குவார்கள். (நூல்: புஹாரி, எண்: 778)

(2) இப்னு அப்பாஸ் ஜனாஸாத் தொழுகையில் சப்தமாக ஓதினார்

தல்ஹா அறிவித்தார். 

நான் இப்னு அப்பாஸ்(ரலி) பின்னால் நின்று ஜனாஸாத் தொழுதேன். அப்போது அவர் ஃபாத்திஹா அத்தியாயத்தை (சப்தமாக) ஓதினார். பிறகு 'நீங்கள் இதை நபிவழி என அறிந்து கொள்வதற்காகவே (சப்தமிட்டு ஓதினேன்)' என்றார். (நூல்: புஹாரி, எண்: 1335)

(3) குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவ மிக்க ஓர் அத்தியாயம்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

திரும்பத் திரும்ப (தொழுகையில்) ஓதப்படும் ஏழு வசனங்கள் ('அல்ஃபாத்திஹா' அத்தியாயம்) குர்ஆனின் அன்னையும் மகத்தான குர்ஆனும் ஆகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (நூல்: புஹாரி, எண்: 4704)

அபூ சயீத் பின் முஅல்லா (ரலி) அவர்கள் கூறியதாவது

நான் (மஸ்ஜிதுந் நபவி) பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தேன். அப்போது என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள. நான் அவர்களுக்கு பதிலளிக்கவில்லை. ஆகவே, நான் (தொழு.து முடித்த பின்), அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள் அழைத்தபோது) நான் தொழுது கொண்டிருந்தேன் என்று சொன்னேன், அதற்கு அவர்கள், உங்களுக்கு வாழ்வளிக்கக் கூடியதன் பக்கம், இறைத்ததூதர் உங்களை அழைக்கும்போது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதர் உங்களை அழைக்கும்போது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (விரைந்து) பதிலளியுங்கள் என்று (8-24ஆவது வசனத்தில்) அல்லாஹ் கூறவில்லையா என்று கேட்டார்கள்-(7). பிறகு என்னிடம், குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை நீ பள்ளிவாசலிலிருந்து வெளியே செல்வதற்கு முன்னால் நான் உனக்குக் கற்றுத் தருகிறேன் என்று சொன்னார்கள். பிறகு என் கையைப் பிடித்துக்கொண்டார்கள். அவர்கள் வெளியே செல்ல முனைந்தபோது நான் அவர்களிடம், நீங்கள் குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவ மிக்க ஓர் அத்தியாயத்தை நான் உனக்கு கற்றுத் தருகிறேன் என்று சொல்லவில்லையா என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அது அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் (என்று தொடங்கும் அலஃபாத்திஹா அத்தியாயம்)தான். அவை திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் (அஸ்ஸப்உல் மஸானீ) ஆகும்-(8). எனக்கு அருளப்பட்டுள்ள மகத்துவம் பொருந்திய குர்ஆன் ஆகும் என்று சொன்னார்கள். (நூல்: புஹாரி, எண்: 4474)

அபூ ஸயீத் இப்னு முஅல்லா(ரலி) அறிவித்தார். 

நான் ('மஸ்ஜிதுந் நபவீ' பள்ளிவாசலில்) தொழுது கொண்டிருந்தேன். அப்போது என்னைக் கடந்து சென்ற இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் தொழு(து முடிக்கு)ம்வரை அவர்களிடம் செல்லவில்லை. பிறகு நான்அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னிடம், 'நீங்கள் ஏன் என்னிடம் உடனே வரவில்லை? அல்லாஹ், 'இறைநம்பிக்கையாளர்களே! இறைத்தூதர் உங்களை அழைக்கும்போது அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரைந்து பதில் அளியுங்கள்' என்று கூறவில்லையா?' எனக் கேட்டார்கள். பிறகு, 'நான் (பள்ளிவாசலிலிருந்து) புறப்படுவதற்கு முன்பாக குர்ஆனில் மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை நான் உங்களுக்குக் கற்பிக்கிறேன்' என்று கூறினார்கள். பின்னர் நபி அவர்கள் (பள்ளிவாசலிலிருந்து) வெளியேறப் போனார்கள். அப்போது நான் அவர்களுக்கு (அவர்கள் வாக்களித்ததை) நினைவூட்டினேன். நபி(ஸல்) அவர்கள், 'அது அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்' எனும் (அல்ஃபாத்திஹா அத்தியாயத்தின்) திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் தாம்' என்று கூறினார்கள். இதே ஹதீஸை நபித்தோழர் அபூ ஸயீத் 'பின் முஅல்லா(ரலி) அவர்களிடமிருந்தே செவியுற்று வேறு அறிவிப்பாளர்களும் அறிவித்தார்கள். (நூல்: புஹாரி, எண்: 4647)

அபூ ஸயீத் இப்னு முஅல்லா(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் நான் தொழுது கொண்டிருக்கும் நிலையில் என்னைக் கடந்து சென்றார்கள். அப்போது என்னை அவர்கள் அழைத்தார்கள். நான் தொழுது முடிக்கும் வரை அவர்களிடம் செல்லவில்லை. (தொழுது முடித்த) பிறகு சென்றேன். அவர்கள், '(நான் அழைத்தவுடன்) நீ ஏன் என்னிடம் வரவில்லை?' என்று கேட்டார்கள். அதற்கு, 'நான் தொழுது கொண்டிருந்தேன்' என்று சொன்னேன். அப்போது அவர்கள், 'இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கும் இறைத்தூதருக்கும் நீங்கள் பதிலளியுங்கள்' என்று (திருக்குர்ஆன் 08:24 வது வசனத்தில்) அல்லாஹ் சொல்லவில்லையா?' என்று கேட்டார்கள். பிறகு, 'நீ பள்ளிவாசலிலிருந்து வெளியே செல்லும் முன்பாக குர்ஆனிலேயே மகத்தான அத்தியாயமொன்றை உனக்கு நான் கற்றுத் தர வேண்டாமா?' என்று கேட்டார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் (பள்ளிவாசலிலிருந்து) வெளியேறப் போனார்கள். நான் அவர்களுக்கு (அன்னார் சொன்னதை) நினைவுபடுத்தினேன். அவர்கள், 'அகிலத்தாரின் அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்' (என்று தொடங்கும் 'அல்ஃபாத்திஹா' அத்தியாயம் தான்) அது திரும்பத் திரும்ப (தொழுகையில்) ஓதப்படும் ஏழு வசனங்களும் எனக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த மகத்தான குர்ஆனுமாகும்' என்று கூறினார்கள். (நூல்: புஹாரி, எண்: 4703)

அபூ ஸயீத் இப்னு முஅல்லா(ரலி) அறிவித்தார் 

நான் (பள்ளிவாசலில்) தொழுது கொண்டிருந்தபோது என்னை நபி(ஸல்) அவர்கள் அழைத்தார்கள். (தொழுகையில் இருந்தமையால்) நான் அவர்களுக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை. (தொழுது முடித்த பிறகு) 'இறைத்தூதர் அவர்களே! நான் தொழுது கொண்டிருந்தேன். (எனவேதான் உடனடியாக தங்களுக்கு நான் பதிலளிக்கவில்லை)' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ், '(இறைநம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வும் (அவனுடைய) தூதரும் உங்களை அழைக்கும்போது அவர்களுக்கு பதிலளியுங்கள்' என்று (திருக்குர்ஆன் 08:24 வது வசனத்தில்) சொல்லவில்லையா?' என்று கேட்டார்கள். பிறகு, 'நீங்கள் பள்ளி வாசலிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக குர்ஆனிலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை உங்களுக்கு நான் கற்றுத் தரவேண்டாமா?' என்று வினவியபடி என்னுடைய கையைப் பிடித்தார்கள். நாங்கள் (பள்ளிவாசலிலிருந்து) வெளியேற முனைந்தபோது நான், (அவர்கள் வாக்களித்ததை நினைவூட்டி) 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் குர்ஆனிலேயே மகத்துவம் பொருந்தியதோர் அத்தியாயத்தை நான் உங்களுக்குக் கற்றுத்தர வேண்டாமா என்று கேட்டீர்களே!' என்று வினவினேன். நபி(ஸல்) அவர்கள் '(அது) அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் (என்று தொடங்கும் 'அல்ஃபாத்திஹா' அத்தியாயமே) ஆகும். அது திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்களும் எனக்கு வழங்கப் பெற்றுள்ள மேன்மை மிகு குர்ஆனுமாகும்' என்று கூறினார்கள்.(நூல்: புஹாரி, எண்: 5006)

(4) தேள் கடிக்கு இவ்வதிகாரத்தை ஓதி ஊதினால், விஷம் முறியும்

அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) கூறினார் 

நாங்கள் ஒரு பயணத்தில் சென்று கொண்டிருந்தபோது, (ஓய்வெடுப்பதற்காக) ஓரிடத்தில் இறங்கித் தங்கினோம். அப்போது ஓர் இளம் பெண் வந்து 'எங்கள் கூட்டத் தலைவரை தேள் கொட்டிவிட்டது. எங்கள் ஆட்கள் வெளியே சென்றுள்ளார்கள். அவருக்கு ஓதிப்பார்ப்பவர் உங்களில் எவரேனும் உண்டா?' என்று கேட்டாள். அவளுடன் எங்களில் ஒருவர் சென்றார். அவருக்கு ஓதிப்பார்க்கத் தெரியும் என்று நாங்கள் நினைத்தது கூட இல்லை. அவர் சென்று ஓதிப்பார்த்தார். உடனே, அந்தத் தலைவர் குணமடைந்துவிட்டார். எனவே, எங்களுக்கு முப்பது ஆடுகள் (அன்பளிப்பாக) வழங்குமாறு அவர்களின் தலைவர் உத்தரவிட்டதுடன் எங்களுக்குப் பாலும் கொடுத்தனுப்பினார். (ஓதிப்பார்க்கச் சென்ற) அந்த மனிதர் திரும்பி வந்தபோது, அவரிடம் 'உமக்கு நன்றாக ஓதிப்பார்க்கத் தெரியுமா?' அல்லது 'ஏற்கனவே, நீர் ஓதிப்பார்பவராக இருந்தீரா?' என்று கேட்டோம். அவர், 'இல்லை; குர்ஆனின் அன்னை' என்றழைக்கப்படும் ('அல்ஃபாத்திஹா') அத்தியாயத்தைத் தான் ஒதிப்பார்த்தேன்' என்று கூறினார். (இந்த முப்பது ஆடுகளையும்) நாம் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் 'செல்லும் வரையில்' அல்லது 'சென்று (விளக்கம்) கேட்கும் வரையில்' ஒன்றும் செய்துவிடாதீர்கள்' என்று (எங்களுக்கிடையே) பேசிக்கொண்டோம். நாங்கள் மதீனா வந்து சேர்ந்தபோது, இது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கூறினோம். 'இது ('அல் ஃபாத்திஹா' ) ஓதிப்பார்த்து நிவாரணம் பெறத்தக்கது என்று அவருக்கு எப்படித் தெரியும்? அந்த ஆடுகளைப் பங்கிட்டு அதில் ஒரு பங்கை எனக்கும் தாருங்கள்! என்று கூறினார்கள். 32 இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. Volume :5 Book :66(நூல்: புஹாரி, எண்: 5007)

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார் 

நபி(ஸல்) அவர்களின் தேழர்களில் சிலர் (ஒரு பயணத்தின் போது) ஓர் அரபுக் குலத்தாரிடம் சென்றார்கள். அவர்களுக்கு அக்குலத்தார் விருந்தளிக்க முன்வரவில்லை. இந்நிலையில் அக்குலத்தாரின் தலைவனுக்குத் தேள் கொட்டிவிட்டது. அப்போது அக்குலத்தார் (நபித் தோழர்களிடம் வந்து) 'உங்களிடம் (இதற்கு) மருந்து ஏதும் உள்ளதா? அல்லது ஓதிப்பார்ப்பவர் எவரும் இருக்கிறாரா?' என்று கேட்டனர். அதற்கு நபித்தோழர்கள், 'நீங்கள் எங்களுக்கு விருந்தளிக்க முன் வரவில்லை. எனவே, நீங்கள் எங்களுக்கு (ஒரு) குறிப்பிட்ட கூலியைத் தந்தாலே தவிர (வெறுமனே) உங்களுக்கு நாங்கள் ஓதிப் பார்க்கமாட்டோம்' என்று கூறினர். உடனே, நபித்தோழர்களுக்காக அக்குலத்தார் (முப்பது ஆடுகள் கொண்ட) ஓர் ஆட்டு மந்தையைக் கூலியாக நிர்ணயித்தார்கள். நபித்தோழர்களில் ஒருவர் (எழுந்து சென்று) 'குர்ஆனின் அன்னை' எனப்படும் 'அல்ஃபாத்திஹா' அத்தியாயத்தை ஓதித் தம் எச்சிலைக் கூட்டி (கடிபட்ட இடத்தில்) உமிழ்ந்தார். உடனே அவர் வலி நீங்கி குணமடைந்தார். (பேசியபடி) அவர்கள் ஆடுகளைக் கொண்டுவந்(து கொடுத்)தனர். நபித்தோழர்கள், 'நபி(ஸல்) அவர்களிடம் (அனுமதி) கேட்காதவரை இதை நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது' என்று (தமக்குள்) பேசிக்கொண்டு அவ்வாறே நபி(ஸல்) அவர்களிடம் (வந்து அனுமதி) கேட்டனர். நபி(ஸல்) அவர்கள் சிரித்துவிட்டு 'அல்ஃபாத்திஹா' ஓதிப்பார்க்கத் தகுந்தது என்று உமக்கு எப்படித் தெரியும்? அந்த ஆடுகளை எடுத்துக் கொள்ளுங்கள்; எனக்கும் அதில் ஒரு பங்கு கொடுங்கள்' என்று கூறினார்கள். (நூல்: புஹாரி, எண்: 5736)

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார் 

(ஒரு பயணத்தின்போது) நபித்தோழர்களில் சிலர் ஒரு நீர் நிலையைக் கடந்து சென்றார்கள். அங்கு தங்கியிருந்த மக்களிடையே (தேளின்) விஷக்கடிக்கு ஆளான ஒருவர் இருந்தார். அப்போது அந்த நீர் நிலையில் தங்கியிருந்தவர்களில் ஒருவர் நபித்தோழர்களிடம் வந்து, 'உங்களிடையே ஓதிப் பார்ப்பவர் எவரேனும் இருக்கிறாரா? இந்த நீர் நிலையில் தங்கியிருப்பவர்க(ளான எங்க)ளிடையே (தேளின்) விஷக்கடிக்கு ஆளான ஒருவர் இருக்கிறார்' என்று கூறினார். உடனே நபித்தோழர்களில் ஒருவர் சென்று குர்ஆனின் 'அல்ஃபாத்திஹா' அத்தியாயத்தைச் சில ஆடுகளை கூலியாகத் தரவேண்டுமென்ற நிபந்தனையின் பேரில் ஓதினார். உடனே விஷக்கடிக்கு ஆளானவர் குணமடைந்தார். ஓதிப்பார்த்தவர் அந்த ஆடுகளைத் தம் நண்பர்களிடம் கொண்டு வந்தார். அவர்கள் அதை (ஓதிப் பார்த்ததற்காகக் கூலி பெற்றதை) வெறுத்தார்கள். மேலும், 'அல்லாஹ்வின் வேதத்திற்காக நீர் கூலி வாங்கினீர்?' என்று கேட்டார்கள். இறுதியில் மதீனா சென்று, 'இறைத்தூதர் அவர்களே! இவர் அல்லாஹ்வின் வேதத்தை ஓதியதற்குக் கூலி வாங்கிக்கொண்டார்' என்று கூறினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'நீங்கள் ஊதியம் பெற்றிட மிகவும் தகுதி வாய்ந்தது அல்லாஹ்வின் வேதமேயாகும்' என்று கூறினார்கள். (நூல்: புஹாரி, எண்: 5737)

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் சிலர் ஒரு பயணத்தின் போது ஓர் அரபுக் குலத்தாரைக் கடந்துசென்றார்கள். அவர்கள் அக்குலத்தாரிடம் விருந்தளிக்குமாறு கோரியும் அவர்கள் விருந்தளிக்க முன்வரவில்லை. இந்நிலையில் (அக்குலத்தாரின் தலைவனுக்குத் தேள் கொட்டிவிட்டது). அப்போது அவர்கள் (நபித்தோழர்களிடம்) "உங்களிடையே ஓதிப்பார்ப்பவர் எவரும் இருக்கிறாரா? ஏனெனில், (எங்கள்) குலத்தின் தலைவர் தேள்கடிக்கு உள்ளாகி இருக்கிறார்" என்று கூறினர். அப்போது நபித்தோழர்களில் ஒருவர், "ஆம்" என்று கூறிவிட்டு, அவரிடம் சென்று அவருக்கு "அல்ஃபாத்திஹா" அத்தியாயத்தின் மூலம் ஓதிப்பார்த்தார். உடனே அவர் குணமடையவும் செய்தார். (ஓதிப்பார்த்த நபித்தோழருக்கு) ஓர் ஆட்டு மந்தை (சன்மானமாகக்) கொடுக்கப்பட்டது. அத்தோழர் அதை ஏற்க மறுத்துவிட்டார். நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றிக் கூ(றி அனுமதிபெ)றாத வரை (நான் ஏற்கமாட்டேன்)" என்று கூறிவிட்டார். அவ்வாறே அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தெரிவித்தார். "அல்லாஹவின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! "அல்ஃபாத்திஹா" மூலமாகத்தான் நான் ஓதிப்பார்த்தேன்" என்று கூறினார். அதைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். மேலும், "அது (அந்த அத்தியாயம்) ஓதிப்பார்க்கத் தகுந்தது என்பது உமக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டுவிட்டு, "அவர்களிடமிருந்து அ(ந்தச் சன்மானத்)தைப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்களுடன் எனக்கும் அதில் ஒரு பங்கு கொடுங்கள்" என்று சொன்னார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் அந்த நபித்தோழர் "குர்ஆனின் அன்னை" எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை ஊதித் தமது எச்சிலைக் கூட்டி (கடிபட்ட இடத்தில்) உமிழ்ந்தார். உடனே அந்த மனிதர் வலி நீங்கி குணமடைந்தார்" என்று அபூபிஷ்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.(நூல்: முஸ்லிம், எண்: 4428)

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: 

நாங்கள் (ஒரு பயணத்தில்) ஓரிடத்தில் இறங்கித் தங்கினோம். அப்போது ஒரு பெண் எங்களிடம் வந்து, "எங்கள் கூட்டத் தலைவரை தேள் கொட்டிவிட்டது. அவர் உடல் நலிவுற்றுள்ளார். ஓதிப் பார்ப்பவர் எவரேனும் உங்களிடையே இருக்கிறாரா?" என்று கேட்டாள். அவளுடன் எங்களில் ஒரு மனிதர் சென்றார். அவருக்கு ஓதிப்பார்க்கத் தெரியும் என்று நாங்கள் நினைத்துக்கூட ("நழுன்னுஹு") பார்த்ததில்லை. அவர் "அல்ஃபாத்திஹா" அத்தியாயத்தைக் கொண்டு ஓதிப்பார்க்க, அந்தத் தலைவர் குணமடைந்து விட்டார். ஆகவே, அவருக்குச் சில ஆடுகளை வழங்கியதோடு எங்களுக்குப் பருகுவதற்குப் பாலும் கொடுத்தனர். (அந்த நண்பர் திரும்பி வந்தபோது) அவரிடம், "உமக்கு நன்றாக ஓதிப்பார்க்கத் தெரியுமா?" என்று கேட்டோம். அவர், "அவருக்கு நான் "அல்ஃபாத்திஹா" அத்தியாயத்தைத்தான் ஓதிப் பார்த்தேன்" என்று சொன்னார். அவரிடம் நான், "நபி (ஸல்) அவர்களிடம் செல்லும்வரை இதை அசைத்துவிடாதீர்கள்" என்று சொன்னேன். நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்றபோது, அதைப் பற்றி அவர்களிடம் சொன்னோம். அப்போது அவர்கள் "அது (அல்ஃபாத்திஹா அத்தியாயம்) ஓதிப்பார்க்கத் தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்? அந்த ஆடுகளைப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்; அதில் ஒரு பங்கை எனக்கும் ஒதுக்குங்கள்" என்று சொன்னார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. 

ஆயினும் அதில், "அவளுடன் எங்களில் ஒரு மனிதர் எழுந்து சென்றார். அவருக்கு ஓதிப்பார்க்கத் தெரியும் என்று நாங்கள் நினைத்ததுகூட ("நஃபின்ஹு") இல்லை" என இடம் பெற்றுள்ளது.(நூல்: முஸ்லிம், எண்: 4429)

(5) அல்ஃபாத்திஹா (குர்ஆனின் அன்னை) அத்தியாயத்தை ஓதாதவருக்குத் தொழுகையே இல்லை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

குர்ஆனின் தோற்றுவாய் (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாதவருக்குத் தொழுகையே இல்லை. இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. Book :4 (நூல்: முஸ்லிம், எண்: 651)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனின் அன்னை (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாதவருக்குத் தொழுகையே இல்லை. இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. Book :4(நூல்: முஸ்லிம், எண்: 652)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனின் அன்னை (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாதவருக்குத் தொழுகையே இல்லை. இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என மஹ்மூத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள் கூறினார்கள். (மஹ்மூத் சிறுவராக இருந்தபோது) அவர்களது கிணற்றிலிருந்து தண்ணீர் அள்ளி (வாயில் செலுத்திய பின்) அவரது முகத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (செல்லமாக) உமிழ்ந்தார்கள்.(நூல்: முஸ்லிம், எண்: 653)

மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. 

அவற்றில் (குர்ஆனின் அன்னை எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தையும்) அதற்கு மேலாகவும் ஓதாதவருக்குத் தொழுகையே கிடையாது என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.(நூல்: முஸ்லிம், எண்: 654)

(6) குர்ஆனின் அன்னை (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாமல் தொழுதவரின் தொழுகை குறையுள்ள தொழுகையாகும்

அப்துர் ரஹ்மான் பின் யஅகூப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூஹுரைரா (ரலி) அவர்கள் குர்ஆனின் அன்னை (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாமல் தொழுதவரின் தொழுகை குறையுள்ள தொழுகையாகும்; நிறைவு பெறாததாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அறிவித்தார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் நாங்கள் இமாமக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கிறோம் (அப்போதுமா ஓத வேண்டும்)? என்று கேட்கப்பட்டது. அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்: அதை உங்களுடைய மனதில் ஓதிக்கொள்ளுங்கள். ஏனெனில், அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகை(யில் ஓதப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயம்)தனை எனக்கும் என் அடியானுக்குமிடையே (துதித்தல்,பிரார்த்தித்தல் ஆகிய) இரு பகுதிகளாகப் பிரித்துள்ளேன். என் அடியான் கேட்டது அவனுக்குக் கிடைக்கும். அடியான் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் (அனைத்துலகின் அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், என் அடியான் என்னைப் புகழ்ந்து விட்டான் என்று கூறுவான். அடியான் அர்ரஹ்மானிர் ரஹீம் (அவன் அளவிலா அருளாளன்; நிகரிலா அன்புடையோன்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், என் அடியான் என்னைத் துதித்துவிட்டான் என்று கூறுவான். அடியான் மாலிக்கி யவ்மித்தீன் (தீர்ப்பு நாளின் அதிபதி) என்று சொன்னால், அல்லாஹ், என் அடியான் என்னைக் கண்ணியப்படுத்திவிட்டான் என்று கூறுவான். (நபி (ஸல்) அவர்கள் சில வேளைகளில் என் அடியான் தன் காரியங்களை என்னிடம் ஒப்படைத்துவிட்டான் என்றும் கூறியுள்ளார்கள்.) 

மேலும், அடியான் இய்யாக்க நஅபுது வ இய்யாக்க நஸ்தஈன் (உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்) என்று சொன்னால், அல்லாஹ், இது எனக்கும் என் அடியானுக்கும் இடையே உள்ளது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும் என்று கூறுவான். அடியான் இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம். ஸிராத் தல்லதீன அன்அம்த்த அலைஹிம், ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன் (எங்களுக்கு நீ நேரான வழியைக் காட்டுவாயாக. அவ்வழி உன்னுடைய அருளைப் பெற்றவர்களின் வழி. உன்னுடைய கோபத்திற்கு ஆளானவர்கள் வழியுமல்ல; வழிதவறியோரின் வழியுமல்ல) என்று சொன்னால், அல்லாஹ் இது என் அடியானுக்கு உரியது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும் என்று கூறுவான். (அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 

இந்த ஹதீஸை அலாஉ பின் அப்திர் ரஹ்மான் பின் யஅகூப் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். அன்னார் தமது இல்லத்தில் நோயுற்றிருந்தபோது அவர்களைச் சந்திக்க நான் சென்றிருந்தேன். அப்போது நானே இந்த ஹதீஸ் குறித்து அன்னாரிடம் கேட்டேன். (நூல்: முஸ்லிம், எண்: 655)

மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

இவ்விரு அறிவிப்புகளிலும் தொழுகை(யில் ஓதப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயம்)தனை எனக்கும் என் அடியானுக்குமிடையே இரு பகுதிகளாகப் பிரித்திருக்கிறேன். அதில் ஒரு பகுதி எனக்கும் மற்றொரு பகுதி என் அடியானுக்கும் உரியதாகும் என்று அல்லாஹ் கூறினான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது. Book :4(நூல்: முஸ்லிம், எண்: 657)

அலாஉ பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை (அப்துர் ரஹ்மான் பின் யஅகூப்-ரஹ்) அவர்களும் அபுஸ்ஸாயிப் (ரஹ்) அவர்களும் அபூஹுரைரா (ரலி) அவர்களுடைய நண்பர்களாக இருந்தனர். அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாக அவ்விருவரும் கூறினர்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனின் தோற்றுவாய் (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாமல் தொழுதவரின் தொழுகை குறையுள்ளதாகும். இதை மூன்று முறை கூறினார்கள். (நூல்: முஸ்லிம், எண்: 658)

(7) அல்ஃபாத்திஹா ஓதி இமாம் ஆமீன் என்றுச் சொல்லும் போது, முஸ்லிம்களும் ஆமீன் என்றுச் சொல்லவேண்டும், அதே நேரத்தில் வானவர்கள் கூட ஆமீன் என்றுச் சொல்வார்கள். இவை இரண்டும் ஒன்று சேர்ந்தால், அந்த முஸ்லிமின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இமாம், (அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஓதி முடித்து) ஆமீன் கூறும்போது நீங்களும் ஆமீன் கூறுங்கள். ஏனெனில்,எவருடைய ஆமீன், வானவர்கள் கூறும் ஆமீனுடன் (நேரத்தால்) ஒத்து அமைந்துவிடுகிறதோ அவருடைய முந்தைய பாவங்கள் அவருக்காக மன்னிக்கப்படுகின்றன. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆமீன் கூறுபவர்களாக இருந்தார்கள்.(நூல்: முஸ்லிம், எண்: 689)

(8) அல்ஃபத்திஹா மற்றும் அல் பகரா அத்தியாயத்தின் கடைசி வசனங்களை ஓதி முஹம்மது எதைக் கேட்டாலும், நிச்சயமாக அல்லாஹ் தருவார். இது வேறு எந்த தீர்க்கதரிசிக்கும் தரப்படாத பாக்கியம் முஹம்மதுக்கு மட்டுமே தரப்பட்டது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் அமர்ந்திருந்தபோது தமக்கு மேலிருந்து ஒரு சப்தம் வருவதைக் கேட்டார் அவர். அப்போது வானத்தை அண்ணாந்து பார்த்த ஜிப்ரீல் (அலை) அவர்கள், "இதோ, வானில் இதுவரை திறக்கப்பட்டிராத ஒரு கதவு இப்போது திறக்கப்பட்டிருக்கிறது. (அதன் சப்தமே இப்போது கேட்டது.)" என்று கூறினார்கள். அந்தக் கதவு வழியாக ஒரு வானவர் இறங்கி (நபியவர்களிடம்) வந்தார். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் "இதோ இந்த வானவர் இப்போதுதான் பூமிக்கு இறங்கி வந்திருக்கிறார். இதற்கு முன் எப்போதும் அவர் பூமிக்கு இறங்கியதேயில்லை" என்று கூறினார்கள். அவ்வானவர் சலாம் கூறிவிட்டு, "உங்களுக்கு முன் எந்த இறைத்தூதருக்கும் வழங்கப் பெற்றிராத இரு ஒளிச்சுடர்கள் உங்களுக்கு வழங்கப்பெற்றுள்ள நற்செய்தியைப் பெறுங்கள். "அல்ஃபாத்திஹா" அத்தியாயமும் "அல்பகரா" அத்தியாயத்தின் இறுதி வசனங்களுமே அவை. அவற்றிலுள்ள (பிரார்த்தனை வரிகளில்) எதை நீங்கள் ஓதினாலும் அது உங்களுக்கு வழங்கப் பெறாமல் இருப்பதில்லை"என்று கூறினார். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. (நூல்: முஸ்லிம், எண்: 1472)


திருக்குர்‍ஆன் களஞ்சியம் பொருளடக்கம்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/study_quran/qw_sura_1.html