ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வெள்ளி, 14 ஜனவரி, 2022

சகோதரி சபரிமாலா அவர்களுக்கு இஸ்லாமிய பாடங்கள்: தினம் ஒரு நிமிடம் திருக்குர்‍ஆனுடன் - பாகம் 2 - குர்‍ஆன் 4:34

நாம் சகோதரி சபரிமாலா அவர்களுக்கு எழுதிய முந்தைய கட்டுரையை படிக்க கீழ்கண்ட தொடுப்பை சொடுக்கவும்: 

முந்தைய கட்டுரையில் "குர்‍ஆன் வசனம் 4:24 பற்றி சகோதரி அவர்களிடம் கேள்விகள் கேட்டுயிருந்தோம்", இந்த கட்டுரையில் இன்னொரு குர்‍ஆன் வசனத்தை சகோதரிக்கு அறிமுகம் செய்யவுள்ளோம். இவ்வசனத்தையும் சகோதரி அவர்கள் தம்முடைய "தினம் ஒரு நிமிடம் திருக்குர்‍ஆனுடன்" என்ற தலைப்பில் எடுத்து பேசி, விளக்கவேண்டும் என்று விரும்புகிறோம்.

தினம் ஒரு நிமிடம் திருக்குர்‍ஆனுடன் - குர்‍ஆன் 4:34 - பாகம் 2

குர்‍ஆனும் பெண்களும் 2: முஸ்லிம் ஆண்கள் தங்கள் மனைவிகளை அடிக்கலாம் என்று அனுமதியளித்த அல்லாஹ்

சகோதரி சபரிமாலா அவர்களே, இன்று இன்னொரு குர்‍ஆன் வசனத்தை நாம் சிந்திக்கவுள்ளோம். உங்களுடைய பெண் விடுதலை என்ற சமூகசேவை வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்கள்.  

இஸ்லாமை விட்டு வெளியே வந்தால் தான் பெண் விடுதலையடைய முடியும் என்பது என் கருத்து, குர்‍ஆன் படி நடந்தால் தான், பெண்ணுக்கு விடுதலை கிடைக்கும் என்பது உங்களின் நிலைப்பாடு (இப்படி நான் சொல்லவில்லையே, குர்‍ஆனை பின்பற்றினால் தான் பெண் விடுதலையடைவாள் என்று நான் (சபரிமாலா) சொல்லவில்லையே என்று நீங்கள் சொல்வீர்களானால், என்னுடைய மேற்கண்ட ஒருவரியை நான் திரும்ப பெற்றுக்கொள்கிறேன், என்னை மன்னிக்கவும்! அப்படியானால், குர்‍ஆனை பின்பற்றினாலும் பெண் விடுதலையடைய முடியாது என்பது உங்கள் நிலைப்பாடா? நீங்கள் தான் இந்த சந்தேகத்தை தீர்க்கவேண்டும்).

சரி, வாருங்கள் குர்‍ஆன் 4:34ஐ ஆய்வு செய்வோம், இவ்வசனத்தை நான்கு தமிழாக்கங்களில் படிக்கலாம். ஒரே தமிழாக்கத்தில் படித்தால், என் மீது நீங்கள் குற்றம் சாட்டலாம், எனவே இணையத்தில் கிடைக்கும் 5 தமிழாக்கங்களில் காண்போம்.

டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

4:34. (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்

4:34 . . . .எவளும் கணவனுக்கு மாறு செய்வாளென்று நீங்கள் அஞ்சினால் அவளுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். (அவள் திருந்தாவிடில்) படுக்கையில் இருந்து அவளை அப்புறப்படுத்தி வையுங்கள். (அதிலும் அவள் சீர்திருந்தாவிடில்) அவளை (இலேசாக) அடியுங்கள். அதனால் அவள் உங்களுக்கு கட்டுப்பட்டு விட்டால் அவள் மீது (வேறு குற்றங்களைச் சுமத்த) யாதொரு வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மேன்மையானவனும் மிகப் பெரியவனுமாக இருக்கின்றான்.

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்

4:34 . . . மேலும், எந்தப் பெண்கள் குறித்து அவர்கள் (தம் கணவருக்கு)மாறு செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சுகின்றீர்களோ அந்தப் பெண்களுக்கு நல்லறிவு புகட்டுங்கள்; படுக்கைகளிலிருந்தும் அவர்களை ஒதுக்கி வையுங்கள்! மேலும் அவர்களை அடியுங்கள்! ஆனால் அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்படிந்துவிட்டால், பிறகு அவர்களுக்கு எதிராகக் கை நீட்ட எந்த சாக்குபோக்குகளையும் தேடாதீர்கள்! திண்ணமாக நம்புங்கள்: அல்லாஹ் மேலே இருக்கின்றான்; அவன் உயர்வானவனும் பெரியோனுமாய் இருக்கின்றான்.

மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்

4:34 . . .இன்னும், (அப்பெண்களாகிய) அவர்களில் (தம் கணவனுக்கு) எவர்களின் மாறுபாட்டை அஞ்சுகிறீர்களோ, அப்போது அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள், (அவர்கள் திருந்தாவிடில்) படுக்கைகளிலும் அவர்களை வெறுத்து (ஒதுக்கி) விடுங்கள், (அதிலும் அவர்கள் சீர்திருந்தாவிடில்) அவர்களை (காயமேற்படாது) அடியுங்கள், அதனால் அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்பட்டுவிட்டால், அவர்கள் மீது (இதர குற்றங்களைச் சுமத்த) யாதொரு வழியையும் தேடாதீர்கள், நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்வானவனாக, மிகப் பெரியவனாக இருக்கின்றான்.

பிஜே தமிழாக்கம்

4:34.. . .பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் அவர்களை விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்!66 அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்.

முதலாவதாக, அரபி மூல மொழி வசனத்தில் 'இலேசாக அடியுங்கள் என்றோ, காயமேற்படாதவாறு அடியுங்கள் என்றோ இல்லை' என்பதை சகோதரி கவனிக்கவேண்டும். மொழியாக்கம் செய்தவர்கள், சுயமாக அடைப்பிற்குள் இப்படிப்பட்ட வாசகங்களை அதிகபடியாக சேர்த்துவிட்டு, குர்-ஆனை காப்பாற்ற முயலுகின்றார்கள். 

இவ்வசனத்தின்படி மனைவியை அடிக்கலாம் என்று அல்லாஹ் முஸ்லிம்களுக்கு அனுமதி அளிக்கிறான்.  சில முஸ்லிம்கள் மனைவியை மயில் இறகால் அடிக்கலாம், சின்ன குச்சிகளைக் கொண்டு அடிக்கலாம், வலிக்காதபடி அடிக்கலாம் என்று பலவகையாக சாக்குபோக்குச் சொல்வார்கள். ஆனால், குர்ஆன் இப்படி எதையும் சொல்லவில்லை. மனைவியை அடிக்கலாம் என்று இறைவனே சொல்லிவிட்டதால், தவறு செய்யும் ஆண்கள், தங்கள் மனைவிகளை பயமில்லாமல் அடிப்பார்கள்! 

இரண்டாவதாக, இந்த வசனத்தின்படி, ஒரு முஸ்லிம் கணவன் தன் மனைவி ஏதோ ஒரு விஷயத்தில் தனக்கு மாறுசெய்வாள் என்று அஞ்சினால் போதும், மேற்கண்ட காரியங்களைச் செய்யலாம். அதாவது, அந்த செயல் அல்லது அவள் ஏற்கனவே மாறு செய்துவிட்டால் அதன் பிறகு தான் கணவன்மார்கள் செயல்படவேண்டும் என்பதல்ல, ஆண்களுக்கு இவள் நமக்கு ஏதோ ஒரு மாறு செய்வாள் என்று சந்தேகம் வந்தாலே போதும், மேற்கண்ட காரியங்களைச் செய்யலாம், எவ்வளவு பெரிய கேடுகெட்ட கட்டளையாக இது இருக்கிறது என்று பாருங்கள்! நாம் அவ்வப்போது செய்திகளில் வாசிக்கிறோம் : "மனைவி மீது சந்தேகம் கொண்ட கணவன் மனைவியை அடிக்கும் போது மனைவி மரணம்",  இதே போன்று கணவன் மீது சந்தேகம் கொண்ட மனைவி, கணவனோடு சண்டை அல்லது விவாகரத்து போன்றவைகளை செய்திகளில் வாசிக்கிறோம்.

இப்படிப்பட்ட சூழலை அல்லாஹ் கணவன்மார்களுக்கு குர்‍ஆன் வசனத்தில் உருவாக்கித் தருகின்றான். இன்னும் ஆழமாக இவ்வசனத்தை ஆய்வு செய்தால், பெண் விடுதலைக்கு எதிரான பல கருத்துக்களை காணலாம். 

மூன்றாவதாக,  குர்‍ஆன் 4:34ன் படி, அல்லாஹ் ஆண்களை பெண்களை விட உயர்த்தி வைத்திருக்கின்றான், ஏன் என்று கேட்டால், இதே வசனத்தில் பதில் இருக்கிறது. அதாவது:

  1. ஆண்கள் "தங்கள் சொத்துக்களிலிருந்து" பெண்களுக்கு செலழிக்கிறார்கள்.
  2. ஆண்கள் தான் பெண்களை நிர்வாகிக்கிறார்கள், நிர்வாகிக்கவேண்டும்.
  3. எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். இப்படி நடக்காத பெண்கள் கெட்ட ஒழுக்கமுள்ள பெண்கள்.
  4. ஒழுக்கமுள்ள பெண்கள் கணவன் இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்.

இந்த 4வது பாயிண்டில் என்ன அல்லாஹ் சொல்கிறான் என்று புரிகின்றதா சகோதரி உங்களுக்கு? கணவன் இல்லாத நேரத்தில், பெண்கள் வேறு ஆண்களோடு கள்ளத்தொடர்பு அல்லது விபச்சாரம் செய்யாமல் இருக்கவேண்டும் என்றுச் சொல்கிறான் அல்லாஹ். இது சரியான ஒரு கோட்பாடு தான், இதனை நாம் ஆதரிக்கவேண்டும். ஆனால், இதே கட்டளை ஆண்களுக்கும் அல்லாஹ் கொடுத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?  உன் மனைவியை மட்டும் நீ நேசி, வேறு பெண்ணை தொடாதே! போரில் கிடைத்த அடிமைப்பெண்களோடு திருமணம் செய்யாமல், விபச்சாரம் செய்யாதே. ஆண்களே, பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று ஆண்களுக்கும் ஒரு வரியை அல்லாஹ் எழுதியிருந்தால், அல்லாஹ்வையும், குர்‍ஆனையும் தலையில் வைத்து உலக மக்கள் கொண்டாடியிருந்திருப்பார்களே! 

முஸ்லிம் அறிஞரக்ள் வஞ்சகமான மொழியாக்கங்கள்: குர்‍ஆனுக்கு எதிரான பொருள் கூறுதல்

வசனம் தெளிவாகச் சொல்கிறது, மனைவியை நீ அடிக்கலாம், அதுவும் எப்போது? உனக்கு மாறு செய்வாள் என்று நீ சந்தேகப்பட்டால் அவளை அடிக்கலாம், ஆனால் உடனே அடிக்காமல், கீழ்கண்ட வரிசையை பின்பற்ற வேண்டும்.

  • முதலாவது, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்
  • இரண்டாவது, அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்;
  • மூன்றாவதாக, மேற்கண்ட இரண்டுமே பயனளிக்கவில்லையென்றால், அவர்களை அடியுங்கள்.

முதல் இரண்டு யுக்திகளும் வேலை செய்யவில்லையானால், அடிக்கும் படி குர்‍ஆன் சொல்கிறது. மேற்கண்ட நிலையில் ஒரு முஸ்லிம் ஆணின் மனநிலை எப்படி இருக்கும்?  

மனைவி மாறுசெய்யப்போகிறாள் என சந்தேகித்தால், ஒரு முஸ்லிம் ஆண் குர்‍ஆன் சொல்வது போன்று, முதலாவது உபதேசம் செய்யவேண்டும்,  இங்கு தோல்வி அடைந்தால், படுக்கையிலிருந்து விலக்கவேண்டும், இதுவும் பயனளிக்கவில்லையென்றால், அடிக்கவேண்டும். இது தான் குர்‍ஆன் சொல்லும் வழி. முதல் இரண்டு வழிமுறைகளில் தோல்வி அடைந்த ஒரு ஆண், உச்ச கோபத்தில் இருப்பான், இந்த‌ நேரத்தில் "ஒரு சின்ன குச்சியை எடுத்து, லேசாக மனைவியை அடிக்கவேண்டும்" என்று தமிழ் குர்‍ஆன் மொழியாக்கம் செய்தவர்கள் எழுதுகிறார்கள். இது வேடிக்கையாக உள்ளதல்லவா? இது சாத்தியமா? இது நடைமுறைக்கு ஏற்புடையதாக இருக்குமா? என்று சிந்தித்துப் பாருங்கள்.  குர்‍ஆன் சொல்லாத ஒன்றை இவர்கள் எழுதுகிறார்கள், நடைமுறையில் சாத்தியமில்லாதவற்றை எழுதியுள்ளார்கள். உலகத்திலேயே மனைவியை அடிக்கச் சொல்கின்ற ஒரே வேத நூல் குர்‍ஆன் ஆகத்தான் இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

சகோதரி சபரிமாலா அவர்களுக்கு கேள்விகள்:

  1. பெண் விடுதலை, பெண்கள் பாதுகாப்பு என்ற நல்ல போராட்டத்தை தொடங்கியுள்ள சகோதரியே, இந்த வசனத்தின் படி, பெண்களை அடிக்க முஸ்லிம் ஆண்களுக்கு குர்‍ஆன் கொடுத்த இந்த சலுகையைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
  2. தினம் ஒரு நிமிடம் திருக்குர்‍ஆனுடன் என்ற தொடரில், குர்‍ஆன் 4:34ஐ நீங்கள் தொட்டு பேசுவீர்களா?
  3. இது பெண்கள் கள்ளத் தொடர்பு கொண்டால் தான் குர்‍ஆன் அடிக்கச் சொல்கிறது என்று நினைத்தாலும் (இவ்வசனத்தில் இதற்கு வாய்ப்பும் உள்ளது), முஸ்லிம் அறிஞர்கள் இதுவும் ஒரு காரணம் தான், மற்ற காரணத்திற்காகவும் அடிக்கலாம் என்று தான் விளக்கம் அளிக்கிறார்கள். சாதாரண விவரங்களுக்காக என்று நினைத்தாலும், கள்ளத்தொடர்பு காரணமாக நினைத்தாலும், பெண்களை அடிக்க அனுமதி கொடுப்பது சரியா? உங்கள் கருத்தென்ன சகோதரியே!
  4. சாதாரண காரணங்களுக்காக ஆண்கள் பெண்களை அடிப்பது பற்றி உங்கள் கருத்தென்ன? 
  5. பெண்களுக்கு பாதுகாப்பு சமுதாயத்தில் மட்டுமல்ல, குடும்பத்திலும் தேவை என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா? அப்படியென்றால், குர்‍ஆன் 4:34ன் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?
  6. கடைசியாக ஒரு கேள்வி, பெண்களை அடிக்கச் சொன்ன குர்‍ஆனை இனி நீங்கள் படிப்பீர்களா? அதனை தூக்கிப்பிடிப்பீர்களா? உங்கள் பெண் விடுதலை, பெண் பாதுகாப்பு வெறும் மற்ற பெண்களுக்கு மட்டும் தானா? முஸ்லிம் பெண்களுக்கில்லையா?

இவ்வசனம் பற்றி மேலதிக விளக்கம் தேவைப்பட்டால், இன்னொரு கட்டுரையில் விளக்குவேன்.

அடுத்த கட்டுரையில் பெண்கள் பற்றிய இன்னொரு குர்‍ஆன் வசனத்தை ஆய்வு செய்வோம்...

தேதி: 14th Jan 2022


சகோதரி சபரிமாலா அவர்களுக்கு இஸ்லாமிய பாடங்கள்

உமர் கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/sabarimala/sabarimala_quran_4_34.html


கருத்துகள் இல்லை: