ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

புதன், 30 ஜூன், 2021

தொழுநோயாளிகளை குணப்படுத்தும் இறைவன் யார்? “இயேசு இறைவனா?” என்ற கேள்விக்கு பதில்

இயேசு பத்து தொழு நோயாளிகளை  குணப்படுத்திய நிகழ்ச்சியை உங்களில் அனேகர் படித்திருப்பீர்கள்? இதனை நாம் லூக்கா 17:11 - 17வரையுள்ள வசனங்களில் படிக்கலாம்.

அந்த 10 நபர்களும் குணமடைந்த பிறகு, ஒருவர் மட்டுமே இயேசுவிடம் நன்றி தெரிவிக்க வருகிறார், மீதமுள்ள 9 பேர்களும் தேவாலயத்திற்கு ஆசாரியரிடம் காட்ட சென்றுவிட்டனர்.

அந்த குணமடைந்த மனிதன் என்ன சொன்னான் மற்றும் என்ன செய்தான் என்பதை நீங்கள் கூர்ந்து கவனிக்கவேண்டும்.

லூக்கா 17:15-19:

15. அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி,

16. அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான்.

17. அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே?

18. தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி,

19. அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.

அந்த மனிதன் இயேசுவிடம் வந்து, அவருக்கு முன்பு முகங்குப்புற விழுந்து, இயேசுவை கனப்படுத்தி, தன்னை சுகமாக்கியதற்காக‌ நன்றிச் சொன்னான்.

இதற்கு இயேசு என்ன பதில் கொடுக்கிறார் என்பதைப் பாருங்கள்?

"தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே"

நன்றாக கூர்ந்து படியுங்கள் "தேவனை/இறைவனை/கடவுளை மகிமைப்படுத்துவதற்கு" என்று இயேசு கூறுகின்றார், அதாவது இயேசு தம்மை தேவன்/இறைவன் என்றுச் சொல்கிறார் என்று புரிகின்றதா?

  • எனக்கு முன்பாக ஸஜ்தா/முகங்குப்புற விழாதே என்று இயேசு அவனை அதட்டவில்லை.
  • எனக்கு நன்றி சொல்லாதே, தேவனுக்கு நன்றி சொல்லு என்று இயேசு சொல்லவில்லை.
  • தேவனை மட்டுமே மகிமைப்படுத்து, எனக்கு அல்ல என்று இயேசு சொல்லவில்லை.
  • தேவாலயத்திற்குச் சென்று அங்கு தேவனை மகிமைப்படுத்தவேண்டியது தானே, ஏன் திரும்பி வந்தாய்? என்று இயேசு சொல்லவில்லை.
  • நான் ஒரு தீர்க்கதரிசி மட்டும் தான், தேவனுக்கு கொடுக்கவேண்டிய  கனத்தை மகிமையை மனிதனுக்கு கொடுக்காதே என்று இயேசு சொல்லவில்லை.

உண்மையாக இயேசு ஒரு தீர்க்கதரிசியாகவோ, யெகோவா தேவனின் ஊழியக்காரராகவோ, இருந்திருந்தால், இப்படித் தான் சொல்லியிருப்பார். ஆனால், இயேசு அப்படி சொல்லவில்லை. ஏனென்றால், இயேசு தான் இறைவன் எனவே தான் "அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே? தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே " என்று திரும்பி அந்த மனிதனிடம் கேள்வி கேட்டார்.

ஆக, இயேசு இறைவன் என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலமாகவும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

தேதி: 30 ஜூன் 2021

ஆங்கில மூலம்: https://www.faithbrowser.com/who-is-the-god-who-heals-lepers/


ஃபெயித் ப்ரவுசர் (Faith Browser) கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/faith_browser/god-who-heals-lepers.html


எருசலேமில் முஹம்மது தம் வாழ்நாளில் ஒரு முறையாவது கால் வைத்துள்ளாரா?

கேள்வி 528: எருசலேமில் முஹம்மது தம் வாழ்நாளில் ஒரு முறையாவது கால் வைத்துள்ளாரா?

பதில் 528: முதலாவதாக‌, முஹம்மது எருசலேமுக்குச் சென்றார் என்று எந்த ஒரு சரித்திர ஆதாரமும் நம்மிடம் இல்லை. முஹம்மது தம்மை நபியாக பிரகடனம் செய்த ஆண்டுக்கு (கி.பி 610)  முன்பு, அவர் பல முறை வியாபாரத்திற்காக மக்காவிலிருந்து சிரியாவிற்கும் இதர பல நாடுகளுக்கும் சென்றுள்ளார். ஆனால், வரும் வழியில் அவர் எருசலேமுக்குச் சென்றார், குறைந்தபட்சம் வியாபாரத்திற்காகவாவது  சென்றார் என்ற விவரத்தை இஸ்லாம் எங்கும் கூறவில்லை.

ஆக, முஹம்மது தம் வாழ்நாளில் ஒரு முறையும் எருசலேமில் கால்வைக்கவில்லை என்பது தான் உண்மை.   ஒருவேளை அவர் நபித்துவத்திற்கு முன்பு சென்றுயிருந்தால், அவர் நபியாகிவிட்ட பிறகு , அவர் யூத கிறிஸ்தவர்களிடம் பேசும் போதும் விவாதம் புரியும் போதும் பல முறை சில உதாரணங்களை, நிகழ்ச்சிகளை விளக்கியிருந்திருப்பார், ஆனால் இதைப் பற்றி ஹதீஸ்களில் நாம் ஒன்றையும் காண்பதில்லை.

இரண்டாவதாக, எருசலேம் என்ற வார்த்தை குர்‍ஆனில் ஒரு முறையும் வருவதில்லை. ஆனால், குர்‍ஆனின் 17வது ஸூராவில் 'அல்லாஹ் முஹம்மதுவை ஒரு வித்தியாசமான குதிரையில் (புராக்) ஏற்றிக்கொண்டு, தூரமாக உள்ள மசூதிக்கு அழைத்துச் சென்றதாக, அதன் பிறகு அங்கிலிருந்து சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றதாக' சொல்லப்பட்டுள்ளது.

குர்‍ஆன் 17:1. (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.

இந்த வசனத்திலும் குர்‍ஆன் "எருசலேமில் உள்ள மசூதி" என்றுச் சொல்லாமல், "மஸ்ஜிதுல் அக்ஸா" என்று குறிப்பிடுகின்றது, இத பொருள் "தூரத்திலுள்ள மசூதி" என்று பொருள்.

பல முஸ்லிம் அறிஞர்கள், இந்த மசூதி எருசலேமில் இருந்த மசூதி என்று கூறுகிறார்கள், இதனால் தான் இன்று முஸ்லிம்கள் எருசலேமை சொந்தம் கொண்டாட முயலுகிறார்கள். ஆனால், முஹம்மதுவின் காலத்தில், யூதர்களின் இரண்டாம் ஆலயம் அந்த இடத்தில் இல்லை என்பது சரித்திரம் சொல்லும் சத்தியமாகும், அதாவது கி.பி. 70 ஆண்டில், முஹம்மதுவிற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு, அந்த ஆலயம் ரோமர்களால் அழிக்கப்பட்டுவிட்டது. சரித்திரம் இப்படி சொல்லும்  போது, எப்படி முஹம்மது அங்கு சென்றுயிருந்திருக்கமுடியும்?

மஸ்ஜிதுல் அக்ஸா என்பது எருசலேம் ஆலயம் அல்ல:

இன்னும் சில அறிஞர்களின் கருத்துப்படி, தூரத்திலுள்ள மசூதி என்பது (சௌதி) அரேபியாவில் உள்ள இன்னொரு மசூதியைத் தான் குறிக்கும், எருசலேமில் உள்ள ஆலயத்தை அல்ல என்கிறார்கள். 

மேலும், ஹதீஸ்கள் அனைத்தும் முஹம்மதுவின்  காலத்திற்கு 150 ஆண்டுகளுக்கு பின்பு எழுதப்பட்டன என்பதாலும், கி.பி. 691ல் (முஹம்மது மரித்த 60 ஆண்டுகளுக்கு பிறகு) எருசலேமில் அப்துல் மாலிக் இப்னு மர்வான் என்ற கலிஃபா 'இன்று நாம் காணும் டோம் ஆஃப் ராக்' மசூதியை கட்டியதால், எருசலேமை சொந்தம் கொண்டாட முஸ்லிம்கள் செய்த தில்லுமுல்லு அல்லது பொய்கள் தான், அந்த புராக் என்ற குதிரையில் முஹம்மது எருசலேமுக்குச் சென்றதும், அங்கிருந்து சொர்க்கத்துச் சென்ற ஹதீஸ்கள். இதன் படி பார்த்தால், முஹம்மது எருசலேமுக்கு செல்லவில்லை என்று சொல்லலாம்.

மீரஜ் என்பது கனவா? தரிசனமா?

குர்‍ஆன் சொல்லும் மீரஜ் என்ற பயணம் நிச்சயமாக அது 'முஹம்மதுவிற்கு வந்த ஒரு கனவாக, அல்லது தரிசனமாக இருக்கமுடியுமே தவிர, அது உண்மையாக இருக்கமுடியாது'.

கீழ்கண்ட படத்தை பாருங்கள். முஹம்மது மீரஜ் பயணம் மேற்கொண்டதாகச் சொல்லப்படும் காலத்தில், யூதர்களின் ஆலயமும் இல்லை (கி.பி. 70 அழிக்கப்பட்டுவிட்டது), அதே நேரத்தில், இன்று காணும் டோம் ஆஃப் ராக் மசூதியும் இல்லை, அது முஹம்மது மரித்து 60 ஆண்டுகள் கழித்து கட்டப்பட்டது? அப்படியானால், அந்த பயணம் என்பது ஒரு கட்டுக்கதையே அல்லாமல்  அல்லது கனவேயல்லாமல் வேறு என்னவாக இருக்கமுடியும்?

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2020ramalan/2020-ramalan-24.html

எருசலேம் முஸ்லிம்களுக்கு மூன்றாவது புனித ஸ்தலமாக மாறியது எப்போது?

கேள்வி 517: எருசலேம் முஸ்லிம்களுக்கு மூன்றாவது புனித ஸ்தலமாக மாறியது எப்போது?

பதில் 517:  

முஸ்லிம்களின் முதலாவது புனித நகரம் மக்கா ஆகும், இரண்டாவது புனித நகரம் மதினா ஆகும். இந்த நகரங்களிலும் அல்லாஹ்வுக்காக கட்டுப்பட்ட மசூதிகள் இருக்கும் இடம் தான் புனித ஸ்தலமாக கருதப்படுகிறது.

முஸ்லிம்களின் மூன்றாவது புனித நகரமாக எருசலேம் உள்ளது, அதிலும் முக்கியமாக மசூதி உள்ள இடம் தான் மூன்றாவது புனித ஸ்தலமாக உள்ளது.  முஹம்மது உயிரோடு இருக்கும்போது எருசலேமில் உள்ள மசூதியை  (Dome of Rock) அவர் கட்டினாரா?  என்று கேட்டால், "இல்லை, முஹம்மது மரித்த பிறகு 60 ஆண்டுகள் கழித்து" தான் மசூதி கட்டப்பட்டது.  அப்படியானால், எப்படி எருசலேம் நகரமும் மற்றும் மசூதி இடமும் புனிதமாக மாறியது?

இந்த மசூதி இருந்த இடத்திலிருந்து  தான் கடந்த மே மாத சண்டைகள் தொடங்கின.

முஸ்லிம்களின் 3வது புனித ஸ்தலம் பற்றி சில விவரங்களை சுருக்கமாக காண்போம்.

1) முந்தைய நபிகளை சொந்தம் கொண்டாடிய குர்‍ஆன்:

முந்தைய  வேதமான பைபிளின் நபிமார்களை குர்‍ஆன் எடுத்துக்கொண்டது, அவர்களை குர்‍ஆனின் இறைவனாகிய அல்லாஹ் தான் அனுப்பினான் என்று சொந்தம் கொண்டாடியது. 

2) முந்தைய வேதங்களை சொந்தம் கொண்டாடிய குர்‍ஆன்:

முந்தைய நபிமார்களை சொந்தம் கொண்டாடியது போன்று குர்ஆன் முந்தைய வேதங்களையும் அல்லாஹ் தான் அனுப்பினான் என்று சொல்லி அவைகளையும் சொந்தம் கொண்டாடியது. உதாரணத்திற்கு, பைபிளின் ஐந்து ஆகமங்கள், சங்கீதப் புத்தகம், மற்றும் நற்செய்தி நூல்கள், இவைகள் அனைத்தையும் அல்லா தான் கொடுத்தான் என்று சொந்தம் கொண்டாடியது.

3) முந்தைய வேதகால இடத்தையும் சொந்தம் கொண்டாடிய குர்‍ஆன்:

முந்தைய நபிமார்களை எடுத்துக்கொண்டது, வேதங்கள் எடுத்துக்கொண்டது, கடைசியாக முந்தைய வேதமாகிய பைபிள் கொடுக்கப்பட்ட இடத்தையும் எடுத்துக்கொள்ள குர்ஆன் முயன்றுள்ளது.

இஸ்லாமின் முதல் புனித ஸ்தலம் (எருசலேம்) எப்படி மூன்றாவது புனித ஸ்தலமானது?

இது உண்மையா? ஆமாம் இது உண்மை தான். முஹம்மது  முதன்முதலாக அல்லாஹ்வை தொழுதுக்கொள்ளும் போது, எருசலேமை தொழுகையின் திசையாக (கிப்லாவாக) வைத்துக்கொண்டுதான் தொழுகை நடத்தினார். இதையே முஸ்லிம்களும் பின்பற்றினார்கள். கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் மக்காவில் முஹம்மது  இஸ்லாமை பரப்பும் போது, முஸ்லிம் சமுதாயம் முழுவதும் தினமும் ஐந்து வேளை எருசலேமை நோக்கி தொழுதனர். இது அல்லாஹ்வின் கட்டளையின் படியே நடைபெற்றது. இந்த தொழுகையை மக்காவில் இருந்து கொண்டே, கஅபா என்ற அல்லாவின் முதல் வீடு இருக்கும் ஊரிலிருந்தே, கஅபாவுக்கு புறமுதுகு காட்டி, எருசலேமே கிப்லாவாக மாற்றி ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் எருசலேமை நோக்கி தொழுது கொண்டது.

இது உண்மை என்றால், முஸ்லிம்களின் முதலாவது புனித ஸ்தலம் எருசலேம் என்பது தானே உண்மை?  மக்காவில் பன்னிரண்டு ஆண்டுகள் இஸ்லாமிய தாவா பணியை செய்தபிறகு, மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்தார் முஹம்மது . அங்கு சென்ற பிறகும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வரை, எருசலேமை நோக்கியே முஸ்லிம்கள் தொழுதார்கள்.

யூதர்கள் தம்மை நபி என்று ஒப்புக்கொள்வார்கள் என்று முஹம்மது கனவு கண்டார், யூதர்கள் தங்கள் பிடியை விட்டுக் கொடுப்பதாக இல்லை, தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று அடம் பிடித்தனர், கிறிஸ்தவர்களும் இயேசுவை விட்டுக் கொடுப்பதாக இல்லை. என்ன செய்ய வேண்டும்? என்று சிந்தித்த முஹம்மது அல்லது அல்லாஹ், மதினாவில் இருக்கும்போது, தொழுகையின் திசையை எருசலேமிலிருந்து, முன்னூறுக்கும் அதிகமான விக்கிரக‌ கற்சிலைகள் கொண்ட காபாவின் பக்கம் திருப்பப்பட்டது.

இதன் பிறகுதான், மக்காவும் அதில் உள்ள காபா ஆலயமும் இஸ்லாமின் முதல் புனித ஸ்தலமாக மாறியது. இப்படி நடந்து பிறகு, அடுத்த ஒன்பது/பத்தாண்டுகள் விக்ரகங்கள் இருக்கின்ற கஅபாவை நோக்கி முஹம்மதுவும் முஸ்லிம்களும் அல்லாவை தொழுதனர். என்னது முஹம்மதுவும் முஸ்லிம்களும் விக்கிர சிலைகள் இருந்த ஆலயத்தை நோக்கியா தொழுதார்கள்? என்ற சந்தேகம் வருகிறதா? உங்கள் இமாம்களை கேட்டுப்பாருங்கள், அல்லது சரித்திர பக்கங்களை சிறிது நேரமெடுத்து புரட்டிப்பாருங்கள்.

ஸூரா 2:144. (நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்; எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்; ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை.

இப்பொழுது எருசலேம் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை காண்போம்.

அல் அக்ஸா மசூதி என்பது எருசலேம் ஆலயத்தை குறிக்குமா?

கீழ்கண்ட குர்ஆன் வசனத்தில், முஹம்மதுவை அல்லாஹ் மக்காவிலிருந்து அல் அக்ஸா மஸ்ஜித் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அந்த அல் அக்ஸா மஸ்ஜித் எருசலேமை தான் குறிக்கும் என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள். ஆனால் குர்ஆனில், எருசலேமில் தான் "அல் அக்ஸா மஸ்ஜித்" உள்ளது என்று சொல்லப்படவில்லை என்பதை கவனிக்கவும்.

குர்‍ஆன் 17:1   (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.

மூன்றாவது புனித ஸ்தலமாக எருசலேம் மாறிவிட்டது:

கீழ்கண்ட புகாரி ஹதீஸ்களை கவனியுங்கள்:

1189. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மக்காவில் உள்ள) மஸ்ஜிதுல் ஹராம், (மதீனாவில் உள்ள) மஸ்ஜிதுந் நபவீ, (பைத்துல் மக்திசில் உள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களுக்குத் தவிர வேறெந்தப் பள்ளிவாசலுக் கும் (அதிக நன்மையை எதிர்பார்த்துப்) புனிதப் பயணம் மேற்கொள்ளப்படாது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (மேலும் பார்க்க புகாரி: 1197 & 1864)

குர்‍ஆனின் இன்னொரு சரித்திர பிழை என்னவென்றால், 'எருசலேமின் அல் அக்ஸா மஸ்ஜித் அதாவது யூதர்களின் இரண்டாவது ஆலயம், கி.பி 70 ரோமர்களால் அழிக்கப்பட்டது', முஹம்மது வாழ்ந்த காலத்தில் (கிபி 570 - 632), அந்த ஆலயம் அங்கு இல்லை. இருந்த போதிலும், இல்லாத ஆலயத்திற்கு புனித யாத்திரை செல்லலாம் என்று முஹம்மது சொன்னது வேடிக்கையின் உச்சக்கட்டம் என்றுச் சொல்லலாம்.

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2020ramalan/2020-ramalan-23-html.html

எருசலேம் கடந்த 3000 ஆண்டுகளாக யார் யார் கைகளுக்கு மாறியது?

கேள்வி 513: எருசலேம் கடந்த 3000 ஆண்டுகளாக யார் யார் கைகளுக்கு மாறியது?

பதில் 513:  யூதர்களானாலும் சரி முஸ்லிம்களானாலும் சரி, இன்னும் யாராக(கிறிஸ்தவர்களாக) இருந்தாலும் சரி "ஜெருசலேம் எங்களுக்குத் தான் சொந்தம்" என்றுச் சொல்வதைப் பார்த்தால், என்ன தோன்றுகிறதென்றால்? கடந்த 4000 ஆயிரம் ஆண்டுகளாக, இவர்கள் மட்டுமே ஜெருசலேமை இடைவிடாமல் ஆண்டுக்கொண்டு இருப்பதாகவும், மற்றவர்கள் திடீரென்று இன்று வந்து இவர்களை துரத்திவிட்டு, கைப்பற்றிக்கொண்டதாகவும், "அதனால் தான் இந்த அங்கலாய்ப்பும் சண்டையும்" என்று சொல்வதைப்போன்று தெரிகின்றது.  இது வேடிக்கையாக இருக்கிறது.

உண்மையில் சரித்திரம் என்ன சொல்கிறது? கொஞ்சம் திரும்பிப் பார்ப்போமா?

எருசலேமை அதிக ஆண்டுகள் ஆண்டது யார்?

  1. யூதர்கள் மொத்தம் 591 (518+73) ஆண்டுகள் எருசலேமை ஆண்டு இருக்கிறார்கள்.
  2. கிறிஸ்தவர்கள் 417 ஆண்டுகள் எருசலேமை ஆண்டு இருக்கிறார்கள்.
  3. முஸ்லிம்கள் மொத்தம் 1191 (461+730) ஆண்டுகள் எருசலேமை ஆண்டு இருக்கிறார்கள். 

எருசலேமை கடந்த காலங்களில் யார் ஆண்டார்கள் என்ற பட்டியலை கிழ்கண்ட இரண்டு தொடுப்புக்கள் தெளிவாக விவரிக்கின்றன, இவைகளை சொடுக்கி படித்துக்கொள்ளுங்கள். முக்கியமாக விக்கிபீடியா தளத்தின் தொடுப்பில் இதைப் பற்றிய ஒரு கால வரைபடம் உள்ளது, அதில் இன்னும் தெளிவாக இவ்விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

எருசலேமை அதிக ஆண்டுகள் ஆண்டது யார்? சரித்திரத்தின் படி முஸ்லிம்கள்  தானே! ஆம் முஸ்லிம் அரசாட்சி தான் 1191 ஆண்டுகள் ஆண்டது. இது  எதனை நிருபிக்கின்றது? இது எதையும் நிருபிக்கவில்லை, வலிமையுள்ளவர்களே வெல்வார்கள் என்பது தான் உலகத்தில் காணப்படும் நிலை. அதிக ஆண்டுகள் முஸ்லிம் அரசர்கள் எருசலேமை ஆண்டதால், இன்று எருசலேம் அவர்களுக்கு சொந்தமாகுமா?

தாவீது ராஜாவாக இருந்தாலும் சரி, இரண்டாம் கலிஃபா உமர் அவர்களானாலும் சரி, அதே போன்று மற்ற கிறிஸ்தவ ஆட்சியாளர்களாக இருந்தாலும் சரி, இவர்கள் அனைவரும் "போர் முனையில் ஆட்சியை பிடித்து மக்களை கொன்று எருசலேமை கைப்பற்றியவர்கள் தானே!, இதில் யாருமே இந்த விஷயத்தில் உயர்ந்தவர்களோ, தாழ்ந்தவர்களோ அல்ல.

போர் புரிந்து, மக்களைக் கொன்று ஆட்சி செய்தவர்கள் சிறந்தவர்கள் என்று கருதினால், உலக சரித்திரத்தில் பாபிலோனியர்கள், ரோமர்கள், கிரேக்கர்கள் (மகா அலேக்சாண்டர்), மற்றும் ஆங்கிலேயர்கள் தான் சிறந்தவர்கள் என்று நாம் ஓட்டு போடவேண்டியிருக்கும், இதனை தற்காலத்தில் யாராவது ஒப்புக்கொள்வார்களா?

கி.மு. 1000 அல்லது 1004ம் ஆண்டில், தாவீது ராஜா எருசலேமை கைப்பற்றிய விவரத்தை கீழ்கண்ட வசனத்தில் காணலாம்:

II சாமுவேல் 5:6-7

6. தேசத்திலே குடியிருக்கிற எபூசியர்மேல் யுத்தம்பண்ண ராஜாவானவன் தன் மனுஷரோடேகூட எருசலேமுக்குப் போனான். அவர்கள்: இதிலே பிரவேசிக்க தாவீதினால் கூடாது என்று எண்ணி, தாவீதை நோக்கி: நீ இதற்குள் பிரவேசிப்பதில்லை; குருடரும் சப்பாணிகளும் உன்னைத் தடுப்பார்கள் என்று சொன்னார்கள். 7. ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமாயிற்று.

கலிஃபா உமர் எப்படி எருசலேமை கைப்பற்றினார்? இந்த தமிழ் கட்டுரையை படிங்கள்.

தாவீது ராஜாவானலும் சரி, கலிஃபா உமரானாலும் சரி யாரும் சமாதான புறாக்கள் அல்ல. எனவே யார் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள் என்ற விவரம், எந்த நியாயமான முடிவு எடுக்கவும் பயன்படாது.

சரித்திரத்தை திரும்பிப்பார்த்தால், எருசலேம் 52 முறை தாக்கப்பட்டுள்ளது, 44 முறை ஆக்கிரமிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டு மறுபடியும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது,  23 முறை முற்றுகையிடப்பட்டுள்ளது மற்றும் கடைசியாக இரண்டு முறை அழிக்கப்பட்டுள்ளது. மேலும் கிமு 4000 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நகரில் மக்கள் வாழ்ந்துள்ளார்கள், இதனால் உலகின் பழைய நகரங்களில் எருசலேமும் ஒன்றாகும்(https://en.wikipedia.org/wiki/Kingdom_of_Jerusalem).

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2020ramalan/2020-ramalan-23-html.html

ஞாயிறு, 20 ஜூன், 2021

சின்னஞ்சிறு கேள்வி பதில்கள்: தலைப்பு எருசலேம், கேள்விகள் 521 லிருந்து 530 வரை - (பாகம் 24)

சின்னஞ்சிறு "இஸ்லாம் கிறிஸ்தவம்" தலைப்பின் முந்தைய 520 கேள்வி பதில்களை படிக்க இங்கு சொடுக்கவும். முந்தைய கட்டுரையில் "எருசலேம்" சம்மந்தப்பட்ட 10 கேள்வி பதில்களைக் கண்டோம், இந்த கட்டுரையில் அதே தலைப்பில் மேலும் 10 கேள்வி பதில்களைக் காண்போம்.


கேள்வி 521: கி.பி. 638ல் எருசலேம் தலைவர்கள், "தங்களை ஆளும்படி கலிஃபா உமர் அவர்களிடம் வலியச்சென்று கேட்டுக்கொண்டார்கள்" என்கிறார்களே, இது உண்மையா?

பதில் 521: சினிமாவில் தான் இது சாத்தியம், நிஜத்தில் யாரை நாம் ஹீரோ என்று நினைத்து பேசிக்கொண்டு இருப்போமோ, அவரே வில்லனாக இருப்பார், புரியவில்லையா? இஸ்லாமிய இரண்டாம் கலிஃபா உமர் அவர்கள் தான் போர் புரிந்து மக்களை தும்சம் செய்து, இரத்தவெள்ளம் ஓடச் செய்து எருசலேமையும் இதர நாடுகளையும் பிடித்தார்.

சிறு பிள்ளைகளிடம் சென்று, "நிலாவில் வடைசுடும் ஆயா பற்றி உனக்குத் தெரியுமா?" என்று கேட்டால் "தெரியாதே, நீங்களே சொல்லுங்களேன்" என்று கேட்பார்கள்.  இதே போன்று தான் சரித்திரமும், இஸ்லாமிய வரலாறுகளும் தெரியாவர்களிடம் சென்று பொய்களை அழகாகச் சொல்லி அவர்களை நம்பவைத்துவிடலாம். ஆனால், நீல் ஆம்ஸ்ட்ராங்கிடம் சென்று, நிலாவில் வடைசுடும் ஆயா பற்றி பேசினால், அவர் நம்மைப் பார்த்து ஏளனமாக சிரிப்பார்.

எப்படி எருசலேம் உமரிடம் சரணடைந்தது என்பதை சுருக்கமாக இங்கு தருகிறேன்: எழுத்தாளர் பா. ராகவன் அவர்களுக்கு கொடுத்த ஒரு மறுப்பு கட்டுரையிலிருந்து ஒரு பகுதி இங்கு, முழு கட்டுரையை படிக்க இங்கு சொடுக்கவும்.

ஜெருசலேம் முற்றுகை (637)

பைசாந்தியப் பேரரசிற்கும் ராசிதீன் கலீபாக்களுக்கும் இடையில் இடம் பெற்ற படை முரண்பாட்டின் ஒரு பகுதியாக 637 இல் இடம்பெற்றது. இது ராசிதீன் படை 636 நவம்பரில் எருசலேமை சூழ்ந்து கொண்டதுடன் ஆரம்பமாகியது. ஆறு மாதங்களுக்குப் பின், நகரத் தலைவர் சரணடைய உடன்பட்டார். 637 ஏப்ரல், கலிப்பா உமர் எருசலேமிற்கு பயணம் சென்று, நகரின் சரணடைவை ஏற்றுக் கொண்டார். நகரத் தலைவர் உமரிடம் சரணடைந்தார். மூலம்

உண்மையில் என்ன நடந்தது என்பதை சுருக்கமாக பார்ப்போம்.

1) முஹம்மது மரித்த பிறகு (632), அபூ பக்கர் அவரது ஸ்தானத்தில் முதல் கலிஃபாவாக மதினாவில்  பதவியில் உட்காருகிறார்.

2) அபூ பக்கர் இரண்டாண்டுகள் ரித்த போர்கள் புரிந்து, அதன் பிறகு மரித்துவிடுகிறார்.

3) இரண்டாம் கலிஃபாவாக, பதவியில் அமருகிறார் உமர். இவரும் இஸ்லாமிய பாணியில் அரேபியாவிற்கு சுற்றியுள்ள நாடுகளை தாக்கி அவைகளை பிடிக்கிறார். இதனை பாரா அவர்கள் அழகாக, "உமரின் காலத்தில் இஸ்லாம் அரேபியாவிற்கு வெளியே வெகு வேகமாக பரவியது" என்று எழுதி இருக்கிறார். இதைப் பற்றி என் முந்தைய கட்டுரையில் எழுதினேன்.

4) ஏற்கனவே முஸ்லிம்களிடம் இழந்த தன் இராஜ்ஜியங்களை திரும்ப பிடிக்க, பைசாந்திய அரசர் ஹெரகுலிஸ் யர்முக் என்ற இடத்தில் முஸ்லிம்களின் இராணுவத்தை சந்திக்கிறார், ஆனால் படுதோல்வி அடைகிறார். இது நடந்தது ஆகஸ்ட் 636ம் ஆண்டு.

5) இந்த யர்முக் போரில் இஸ்லாமிய இராணுவத்துக்கு தளபதியாக இருந்த அபூ உபைதா, அக்டோபரில் இனி எந்த பட்டணத்தை பிடிக்கலாம் என்று ஆலோசிக்கிறார். செசரியா பட்டணமா? ஜெருசலேம் பட்டணமா? என்ற முடிவை எடுக்கமுடியாமல், மதினாவில் இருந்த இஸ்லாமிய இரண்டாம் கலிஃபா உமருக்கு கடிதம் எழுதி கேட்கும் போது, முதலாவது ஜெருசலேம் என்று உமர் பதில் தருகிறார்.

6) இஸ்லாமிய இராணுவம், தளபதி அபூ உபைதாவின் தலைமையில் ஜெருசலேம் நகரை நவம்பர் 636ல் முற்றுகையிட்டது. ஜெருசலேம் மக்கள் நகரைவிட்டு வெளியே வராமல் திகைத்தார்கள். இதற்கு முன்பாகவே, பெர்சியாவிடமிருந்து ஜெருசலேமை கைப்பற்றியிருந்த ஹெரகுலிஸ் நகரைச் சுற்றி பலத்த சுவரைக் கட்டி அதிகமாக பாதுகாத்து வைத்திருந்தார்.

7) ஜெருசலேமுக்குள் இருக்கும் மக்களின் உணவுப்பண்டங்கள் குறையத்தொடங்கின. இது ஒரு போர் யுக்தியாகும். ஒரு நகரைச் சுற்றி முற்றுகையிட்டால், பல நாட்கள் அந்நகர மக்கள் உணவு பற்றாக்குறையில் வாடி, கடைசியாக சரணடைந்துவிடுவார்கள். நகருக்குள் வெளியேயிருந்து உணவுப் பண்டங்கள் இதர பொருட்கள் செல்லாமல் தடுத்துவிடுவது, ஒரு போர் யுக்தி.

8) முஸ்லிம்களின் இந்த முற்றுகை ஆறு மாதங்கள் தொடர்ந்தது.  யாராவது இறங்கிவந்தால் தவிர,  இப்படிப்பட்ட முற்றுகை ஒரு முடிவுக்கு வராது.

9) கடைசியாக, ஜெருசலேமில் இருந்த ஆர்ச் பிஷப், அதாவது நகரத்தின் தலைவர், சரணடைவது என்று முடிவுக்கு வந்தார். இவர் இப்படிப்பட்ட முடிவு எடுக்கவில்லையென்றால், நகர மக்கள் பசியாலேயே செத்து மடிந்து இருந்திருப்பார்கள்.

10) ஜெருசலேம் நகர தலைவர், இஸ்லாமிய இராணுவத்தோடு பேசினார். நாங்கள் சரணடைகிறோம், ஜிஸ்யா வரி கட்டுகிறோம் ஆனால், உங்கள் தலைவர் உமர் வரவேண்டும், அவர் எங்களோடு ஒரு ஒப்பந்தம் செய்யவேண்டும், அவரிடம் தான் நாங்கள் சரணடைவோம் என்று நிபந்தனை விதித்தார்.

11) உமர் மதினாவிலிருந்து வரவேண்டுமென்றால் நாட்கள் செல்லும், எனவே, கலித் இப்னு வலித் என்பவரை காட்டி, இவர் தான் 'உமர்' என்றுச் சொல்லுவோம் என்று இஸ்லாமிய இராணுவத்தில் ஆலோசனை கூறப்பட்டது. ஆனால், கலித் இப்னு வலித் என்பவர் சிரியாவில் ரொம்ப பிரபலமானவர், எனவே கிறிஸ்தவர்கள் அவரை அறிந்திருப்பார்கள் என்பதால், இந்த ஆலோசனை கைவிடப்பட்டது.

12) எனவே, தளபதி அபூ உபைதா, உமருக்கு கடிதம் எழுத, மதினாவிலிருந்து உமர் ஜெருசலேமுக்கு வர ஒப்புக்கொண்டார். 

13) ஜெருசலேம் முற்றுகையிட்டு ஆறுமாதம் கழித்து, ஏப்ரில் மாதம் 637ம் ஆண்டு, உமர் ஜெருசலேமுக்கு வந்தார். ஜெருசலேமின் ஆர்ச் பிஷப்பும் உமரும் உடன்படிக்கை செய்தார்கள், ஜெருசலேம் சரணடைகிறது என்று ஆர்ச் பிஷப் அறிவித்தார் (அவரால் வேறு என்ன முடியும், சரணடையத்தான் முடியும்). உமருக்கு ஊரெல்லாம் சுற்றிக்காண்பித்தார்.

14) ஒரு வேடிக்கையான நிகழ்வை இங்கு குறிப்பிடவேண்டும். ஊரை சுற்றிக்காண்பிக்கும் போது, ஆர்ச் பிஷம் உமரிடம் உங்களுடைய மதிய தொழுகையை இதோ இந்த புதுப்பித்துள்ள சர்சில் செய்யுங்கள் என்று அழைப்பு விடுத்தார். இதனை உமர் மறுத்தார். இதற்கு என்ன காரணம் என்று கேட்ட போது. இது கிறிஸ்தவர்களின் சர்ச், இங்கு நான் தொழுகை நடத்தினால், எங்கள் முஸ்லிம்கள் நான் போட்ட உடன்படிக்கையை தள்ளிவிட்டு, 'எங்கள் தலைவர் தொழுகை நடத்திய இடம், மசூதி ஆகும், சர்ச் அல்ல என்றுச் சொல்லி, சர்சை மசூதியாக மாற்றிவிடுவார்கள்'. எனவே, நான் இங்கு தொழுகை செய்யமாட்டேன் என்று மறுத்துவிட்டார். எப்படிப்பட்ட தலைவர், எப்படிப்பட்ட மார்க்கம் பாருங்கள். காலம் உருண்டோடிய போது அது தான் நடந்தது.

15) ஜெருசலேமில் 10 நாட்கள் இருந்து, உமர் மதினா சென்றார். இது தான் ஜெருசலேம் பிடிக்கப்பட்ட சரித்திரம். அதன் பிறகு செக்சரியா பட்டணம் பக்கம் இஸ்லாமிய இராணுவம் சென்றது. மூலம்

எருசலேமின் தலைவர்கள் உமரிடம் சரணடைந்தது உண்மை தான், அதனை ஏன் செய்தார்கள்? அவர்களுக்கு வந்த நிர்பந்தம் என்னவென்பதை கவனிக்கவேண்டும். இது எப்படி உள்ளதென்றால், ' பணம் படைத்த, அதிகாரம் படைத்த‌ ஒரு கெட்டவன், ஒரு குடும்பத்தின் தலைவனை கொன்றுவிட்டு, அவன் மனைவியிடம்  நீ என்னை திருமணம் செய்துக்கொள், இல்லையென்றால், உன் கணவனை கொன்றது போலவே உன் பிள்ளைகளையும் கொன்றுவிடுவேன்' என்று மிரட்டினால் எப்படி இருக்கும்?அந்தப் பெண் தன் பிள்ளைகளின் உயிரைக் காக்க அந்த கொலைக்காரனை திருமணம் செய்துக்கொள்கிறாள் என்று வைத்துக்கொள்வோம்.

இப்போது, அந்த தீயவனைப் பற்றியும், அந்த பெண்ணைப் பற்றியும் என்ன சொல்லுவோம்?  "பார்த்தீர்களா, தன் கணவனை கொன்றவனையே அந்த பெண் திருமணம் செய்துக்கொண்டாள், இதனால் அந்த நபர் நல்லவன்' என்று சொல்லுவோமா? இல்லையல்லவா? இது  போலத்தான், கலிஃபா உமர் அவர்களிடம் 'எருசலேம் தலைவர்கள்' நகரத்தை ஆளுங்கள் என்று கேட்டுக்கொண்டது உள்ளது.

கேள்வி 522: கிறிஸ்தவர்கள் எருசலேமுக்காக போர் செய்யவில்லை என்பது பொய் தானே! சிலுவைப்போர்கள் எருசலேமை முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றத்தானே செய்யப்பட்டன?

பதில் 522:  சிலுவைப் போர்கள் (குருசேட்ஸ்), கி.பி. 11வது நூற்றாண்டின் கடைசியிலிருந்து, 13வது நூற்றாண்டு வரை ஐரோப்பிய கிறிஸ்தவர்களால் நடத்தப்பட்ட போர்களாகும்.  புனித நகரமாக கருதப்பட்ட  எருசலேம் நகரையும், இதர புனித இடங்களையும் முஸ்லிம் ஆட்சியாளர்களிடமிருந்து மீட்டுக்கொள்ளவும், முஸ்லிம் ஆக்கிரமிப்புக்களுக்கு தடை போடவும் இந்த போர்கள் நடத்தப்பட்டன‌.

சிலுவைப் போர்கள் ஏன் தொடங்கப்பட்டன?

சிலுவைப்போர்கள் என்றுச் சொன்னாலே, முஸ்லிம்கள் கோபம் கொள்வார்கள்.  கிறிஸ்தவர்கள் செய்தது தவறு என்பார்கள். முஹம்மது மரித்த பிறகு, முஸ்லிம்கள் உலகம் அனைத்திற்கும் சென்று அமைதியான முறையில் இஸ்லாமை பரப்பியது போல நினைத்து இன்றுள்ள முஸ்லிம்கள் பேசுகிறார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் புரிந்த போர்கள், செய்த கொலைகள், சிந்திய இரத்தம், அழித்த தேவாலயங்கள் போன்றவற்றிற்கு அளவே இல்லை.  

கத்தோலிக்க போப் முதன் முதலாக சிலுவைப்போர் பற்றி அறிவிப்பு கொடுப்பதற்கு முன்பு என்ன நடந்தது?  சிலுவைப்போர்களின்  ஆணிவேர் எது? என்று சரித்திர ஏடுகளை படிக்கும் போது, முஸ்லிம்களின் மண்ணாசையும், பொருளாசையும் தான் காரணம் என்பதை அறிய முடியும். 

ஏன் சிலுவைப்போர்கள் தொடங்கப்பட்டன என்ற கேள்விக்கு பதில் எங்கு கிடைக்கும்? முஹம்மது மரித்த ஆண்டிலிருந்து முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் ஆட்சி புரிந்துக்கொண்டு இருந்த நாடுகளில் புரிந்த போர்களைப் ஆய்வு செய்தால் பதில் கிடைக்கும். ஒரு வரியில் பதில் சொல்வதானால், 400 ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம்களால் கைப்பற்றப்பட்டிருந்த கிறிஸ்தவ நாடுகள், மிகவும் காலதாமதமாக‌ தொடுத்த எதிர் போர் தான் சிலுவைப்போர்கள்.

சிலுவைப்போர்கள் மனிதன் எடுத்த முடிவுகளாகும். பைபிளின் படி திருச்சபை ஒருபோதும் போர்களை துவக்கக்கூடாது.  திருச்சபையும் அரசாங்கமும் வெற்வேறானவைகளாகும்.  இவ்விரண்டையும் ஒன்று படுத்தும் போது, சிலுவைப்போர்கள் போன்ற விளைவுகள் உண்டாகும்.

சிலுவைப்போர்கள் பற்றிய காரணங்களையும், இதர சரித்திர விவரங்களையும் அறிய கீழ்கண்ட தொடுப்பில் உள்ள ஆய்வுக் கட்டுரைகளை படிக்கவும்.

2019 கிறிஸ்துமஸ் தொடர் கட்டுரைகள்: ஜிஹாதின் அடிச்சுவடுகளில் சிலுவைப்போர் – ஓர் ஆய்வு

  1. ஜிஹாதின் அடிச்சுவடுகளில் சிலுவைப்போர் – ஓர் ஆய்வு
  2. சிலுவைப்போர் என்றால் என்ன? அவைகள் தொடங்கப்பட காரணங்கள் யாவை? - பாகம் 2
  3. முஹம்மது முதல் சிலுவைப்போர் வரை - வரைபடங்கள் மற்றும் விளக்கங்கள்: பாகம் 3
  4. முதல் சிலுவைப்போரை நிஜமாக்கியவர்கள் யார்? செல்ஜுக் துருக்கி முஸ்லிம்களும் & அர்பன் II போப்பும் (பாகம் 4)
  5. சிலுவைப்போர்கள் பற்றிய தவறான 6 கேள்விகளும் அவைகளுக்கான பதில்களும் (பாகம் 5)
  6. சிலுவைப்போர் – சின்னஞ்சிறு 25 கேள்வி பதில்கள் (பாகம் 6)

சிலுவைப்போர்கள் இயேசுவின் போதனைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட செயல்களாகும் என்பதை மட்டும் இங்கு மறுபடியும் தெரிவித்துக்கொள்கிறேன். அன்று வாழ்ந்த கிறிஸ்தவர்கள் செய்த தவறை இன்றுள்ள கிறிஸ்தவர்கள் செய்வதில்லை, அதாவது எருசலேமுக்காக போர்கள் செய்வதில்லை என்பதை மட்டும் பதிவு செய்ய விரும்புகிறேன்.

கேள்வி 523: "எருசலேமுக்கும் முஸ்லிம்கள் புனித (ஹஜ்) பயணம் மேற்கொள்ளலாமா?

பதில் 523: முஸ்லிம்கள் மக்கா மற்றும் மதினாவிற்கு புனித பயணம் செல்வது போன்று, எருசலேமுக்கும் புனித பயணம் செய்யலாம் என்று முஹம்மது கூறியதாக ஹதீஸ்களில் வருகின்றது. பல நாடுகளிலிருந்து இன்றும் முஸ்லிம்கள் எருசலேமுக்குச் சென்று, அங்குள்ள மசூதியை பார்த்து வருகிறார்கள். ஆனால், மக்காவில், மதினாவில் செய்வது போலவே ஹஜ் சம்மந்தப்பட்ட சட்டதிட்டங்களை கடைபிடிப்பதில்லை.

புகாரி எண் 1995:

1995. நபி (ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு போர்களில் கலந்துகொண்ட அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான்கு செய்திகளைச் செவியுற்றேன். அவை என்னைக் கவர்ந்தன. அவை: ஒரு பெண் தன் கணவன் அல்லது மணமுடிக்கத் தகாத நெருங்கிய உறவினர் (மஹ்ரம்) ஒருவர் தம்முடன் இருக்கும் நிலையில் தவிர, (மற்ற நிலைகளில்) இரண்டு நாட்கள் தொலைவுள்ள பயணத்தை மேற்கொள்ளக் கூடாது; நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் (ஈதுல் ஃபித்ர், ஈதுல் அள்ஹா) ஆகிய இரு நாட்களில் நோன்பு நோற்கக் கூடாது; சுப்ஹுக்குப் பிறகு சூரியன் உதிக்கும் வரையும் அஸ்ருக்குப் பிறகு சூரியன் மறையும் வரையும் தொழக் கூடாது. (அதிக நன்மையைப் பெற நாடி) மஸ்ஜிதுல் ஹராம் (மக்கா), பைத்துல் முகத்தஸ் (ஜெருசலேம்), எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல் ஆகிய மூன்று பள்ளிவாசல்களுக்குத் தவிர வேறெங்கும் (புனிதப்) பயணம் மேற்கொள்ளக் கூடாது.

கேள்வி 524: யூதர்கள் இயேசுவை நம்பவில்லை, இன்றும் நம்புவதில்லை, இருந்தபோதிலும் ஏன் கிறிஸ்தவர்கள்(சில  நாடுகள்) யூதரகளை/இஸ்ரேல் நாட்டை இன்றும் ஆதரிக்கின்றனர்?

பதில் 524: 

முதலாவதாக, யூதர்கள் இயேசுவை நம்பவில்லை என்பது உண்மை தான், அவரை சிலுவையில் அறைய காரணமாக இருந்தவர்களும் இவர்கள் தான், ஆனால், அன்றே இயேசு அதாவது 2000 ஆண்டுகளுக்கு முன்பே, 'ரோமர்களையும், யூதர்களையும் மன்னித்துவிட்டாரே' இப்படி இருக்கும் போது, நாம் ஏன் அவர்களை மன்னிக்கக்கூடாது? 

இரண்டாவதாக, இயேசுவின் போதனைகளின் படி, யாரையும் கிறிஸ்தவர்கள் தேவையில்லாமல் வெறுக்கக்கூடாது. 

மூன்றாவதாக, கிறிஸ்தவர்களுக்கும் பழைய ஏற்பாட்டிற்கும் சம்மந்தமிருப்பதினால், அவர்கள் மீது ஒருவகையான விவரிக்கமுடியாத ஒரு அன்பு கிறிஸ்தவர்களுக்கு உண்டு. நாங்கள் கொண்டாடும் பழைய ஏற்பாட்டு நபிகளும், கதாநாயகன்களும், கதாநாயகிகளும் யூதர்களின் மூதாதையர்கள் என்பதால், அவர்களை நேசித்து, இவர்களை வெறுக்கமுடியாதே!

நான்காவதாக‌, யூதர்கள் 1948ம் ஆண்டு இஸ்ரேல் நாட்டில் மறுபடியும் ஒன்று சேர்க்கப்பட்டதை கிறிஸ்தவர்கள் யெகோவா தேவனின் செயலாக, தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதலாக பார்க்கிறார்கள். எனவே, எங்கள் இரட்சகரை சிலுவையில் அறைந்து கொன்றவர்களாக அவர்கள் இருந்தாலும், அவர்கள் பற்றி அவர் அக்கரை கொண்டு இருப்பதினால், அவருடைய கையிலேயே அவர்களை விட்டுவிட்டார்கள்.  யூதர்களை வெறுக்கவோ, சபிக்கவோ கிறிஸ்தவர்கள் செய்வதில்லை, இந்த விஷயத்திற்கு வந்தால், கிறிஸ்தவர்கள் யாரையும்  அதாவது  முஸ்லிம்களையும் சேர்த்து வெறுக்கவோ சபிக்கவோ கூடாது.

கடைசியாக, நியாயம் யார் பக்கம் இருக்கிறதோ அவர்கள் பக்கம் கிறிஸ்தவர்கள் இருக்கவேண்டும் என்று போதிக்கப்பட்டு இருப்பதினால், கிறிஸ்தவர்கள் இஸ்ரேல் நாட்டின் நியாயமான செயல்களுக்கு ஆதராவாக இருக்கிறார்கள் என்பது என் கருத்து. ஒரு வேளை இஸ்ரேல் நாடு அநியாயமாக நடந்துக்கொண்டால்? நிச்சயம் கிறிஸ்தவர்கள் அவர்களை அந்த காரியங்களில் ஆதரிக்கமாட்டார்கள்.

கேள்வி 525: கலிஃபா "அப்துல் மாலிக் இப்னு மர்வான்" என்பவருக்கும் எருசலேமுக்கும் என்ன சம்மந்தம்?

பதில் 525: எருசலேமில் இன்று முஸ்லிம்களின் மசூதி என்று அழைக்கப்படும் Dome of Rock (பாறை குவிமாடம்) ஐ கட்டியவர் தான் கலிஃபா அப்துல் மாலிக் இப்னு மர்வான். இவர் கி.பி. 685 லிருந்து 705 வரை உம்மையத் வம்சத்தின் ஐந்தாவது கலிஃபாவாக இருந்தார்.

முஹம்மது 632ல் மரிக்கிறார், இரண்டாவது கலிஃபா உமர் அவர்களால் எருசலேம் 638ல் ஆக்கிரமிக்கப்படுகிறது.  முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு 60 ஆண்டுகள் கழித்து தான் இன்று சண்டைகளின் பிறப்பிடமாக திகழுகின்ற‌ அந்த டோம் ஆஃப் ராக் (Dome of Rock) கி.பி. 691ல் கட்டப்படுகின்றது.

இப்போது நாம் காண்கின்ற எருசலேமின் மசூதி, முஹம்மதுவின் காலத்தில் கட்டப்படவில்லை. அந்த இடத்தில் முந்தைய யூத தேவாலயம் இருந்தது, அது கி.பி. 70 அழிக்கப்பட்டது, அதன் பிறகு தான், அதே இடத்தில் இன்றுள்ள மசூதி கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது.

கேள்வி 526: மேற்குச்சுவர்(Western Wall), அழுகைச் சுவர் என்றால் என்ன?

பதில் 526: இன்று  எருசலேமில் பார்க்கும் போது, டோம் ஆஃப் ராக் மசூதி இருக்கும் பகுதியில் ஒரு  பெரிய சுவர் காணப்படும் அந்த இடத்தில் யூதர்கள் நின்று அழுது ஜெபிப்பதை காணமுடியும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இரண்டாம் யூத தேவாலயத்தின் ஒரு பகுதி அல்லது சுவர் தான் மேற்குச் சுவர் என்று அழைக்கப்படுகின்றது. 

முதல் ஆலயத்தை சாலொமோன் அரசர் கட்டினார், அது பாபிலோனியர்களால் அழிக்கப்பட்டது. நெகேமியா எஸ்றா காலத்தில் இரண்டாம் ஆலயம் கட்டப்பட்டது, அதனை ஏரோது அரசர் புதுப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த ஆலயத்தில் தான் இயேசு உலாவினார், பிரசங்கித்தார். அந்த ஆலயம் அழிக்கப்படும் என்றும் அவர் முன்னறிவித்தார். கி.பி. 70ம் ஆண்டில் ரோமர்கள் அந்த ஆலயத்தை எரித்தார்கள், எருசலேமை கைப்பற்றினார்கள்.

அந்த ஆலயத்தின் ஒரு பகுதி அல்லது சுவர் தான் மேற்குச் சுவர் எனப்படுகின்றது.

கேள்வி 527: பழைய எருசலேம் நகரை எப்போது இஸ்ரேல் மறுபடியும் தன் கைவசப்படுத்தியது?ஆறு நாள் யுத்தம் என்றால் என்ன?

பதில் 527: ஆறு நாள் போர் என்பது ஜூன் போர் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்தப்போர் ஜூன் மாதம் 5 லிருந்து 10 வரை, இஸ்ரேல், ஜோர்டான், சிரியா  மற்றும் எகிப்திற்கு மத்தியில் நடந்தது.  இதில் இஸ்ரேல் ஆறு நாட்களில் வெற்றிப்பெற்றது. ஜோர்டான், சிரியா மற்றும் எகிப்து நாடுகள் ஒன்றாக சேர்ந்துக்கொண்டு, இஸ்ரேலுக்கு எதிராக சண்டையிட்டனர்.

எருசலேம் நாள் (Jerusalem Day, எபிரேய மொழியில்: Yom Yerushalayim) என்பது இஸ்ரேலின் தேசிய நாள் ஆகும். 1967ம் ஆண்டில் நடந்த ஆறு நாள் போரின் விளைவாக, எருசலேமின் பழைய நகர் பகுதி, மறுபடியும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதனை நினைவு கூறும் வண்ணமாகவும், அதே நேரத்தில் பல்லாண்டு காலமாக யூதர்களின் கட்டுப்பாட்டில் வராத ஜெருசலேம் (எருசலேம்) இந்த நாளில் யூதர்களின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்ததால், இந்த நாளை தேசிய நாளாக இஸ்ரேல் கொண்டாடுகிறது. இந்நாள் யூதர்கள் வெற்றிக்கொடி நாட்டிய நாள், 2000 ஆண்டுகளாக நடக்காத ஒன்று நடந்த நாள் (எருசலேம் யூதர்களின் கையில் வந்த நாள்).

1948 முதல் கிழக்கு எருசலேம் ஜோர்டான் நாட்டின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது, அதனை முழுவதுமாக இஸ்ரேல் கைப்பற்றியது இந்த போரின் மூலமாகத் தான்.

கேள்வி 528: எருசலேமில் முஹம்மது தம் வாழ்நாளில் ஒரு முறையாவது கால் வைத்துள்ளாரா?

பதில் 528: முதலாவதாக‌, முஹம்மது எருசலேமுக்குச் சென்றார் என்று எந்த ஒரு சரித்திர ஆதாரமும் நம்மிடம் இல்லை. முஹம்மது தம்மை நபியாக பிரகடனம் செய்த ஆண்டுக்கு (கி.பி 610)  முன்பு, அவர் பல முறை வியாபாரத்திற்காக மக்காவிலிருந்து சிரியாவிற்கும் இதர பல நாடுகளுக்கும் சென்றுள்ளார். ஆனால், வரும் வழியில் அவர் எருசலேமுக்குச் சென்றார், குறைந்தபட்சம் வியாபாரத்திற்காகவாவது  சென்றார் என்ற விவரத்தை இஸ்லாம் எங்கும் கூறவில்லை.

ஆக, முஹம்மது தம் வாழ்நாளில் ஒரு முறையும் எருசலேமில் கால்வைக்கவில்லை என்பது தான் உண்மை.   ஒருவேளை அவர் நபித்துவத்திற்கு முன்பு சென்றுயிருந்தால், அவர் நபியாகிவிட்ட பிறகு , அவர் யூத கிறிஸ்தவர்களிடம் பேசும் போதும் விவாதம் புரியும் போதும் பல முறை சில உதாரணங்களை, நிகழ்ச்சிகளை விளக்கியிருந்திருப்பார், ஆனால் இதைப் பற்றி ஹதீஸ்களில் நாம் ஒன்றையும் காண்பதில்லை.

இரண்டாவதாக, எருசலேம் என்ற வார்த்தை குர்‍ஆனில் ஒரு முறையும் வருவதில்லை. ஆனால், குர்‍ஆனின் 17வது ஸூராவில் 'அல்லாஹ் முஹம்மதுவை ஒரு வித்தியாசமான குதிரையில் (புராக்) ஏற்றிக்கொண்டு, தூரமாக உள்ள மசூதிக்கு அழைத்துச் சென்றதாக, அதன் பிறகு அங்கிலிருந்து சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றதாக' சொல்லப்பட்டுள்ளது.

குர்‍ஆன் 17:1. (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.

இந்த வசனத்திலும் குர்‍ஆன் "எருசலேமில் உள்ள மசூதி" என்றுச் சொல்லாமல், "மஸ்ஜிதுல் அக்ஸா" என்று குறிப்பிடுகின்றது, இத பொருள் "தூரத்திலுள்ள மசூதி" என்று பொருள்.

பல முஸ்லிம் அறிஞர்கள், இந்த மசூதி எருசலேமில் இருந்த மசூதி என்று கூறுகிறார்கள், இதனால் தான் இன்று முஸ்லிம்கள் எருசலேமை சொந்தம் கொண்டாட முயலுகிறார்கள். ஆனால், முஹம்மதுவின் காலத்தில், யூதர்களின் இரண்டாம் ஆலயம் அந்த இடத்தில் இல்லை என்பது சரித்திரம் சொல்லும் சத்தியமாகும், அதாவது கி.பி. 70 ஆண்டில், முஹம்மதுவிற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு, அந்த ஆலயம் ரோமர்களால் அழிக்கப்பட்டுவிட்டது. சரித்திரம் இப்படி சொல்லும்  போது, எப்படி முஹம்மது அங்கு சென்றுயிருந்திருக்கமுடியும்?

மஸ்ஜிதுல் அக்ஸா என்பது எருசலேம் ஆலயம் அல்ல:

இன்னும் சில அறிஞர்களின் கருத்துப்படி, தூரத்திலுள்ள மசூதி என்பது (சௌதி) அரேபியாவில் உள்ள இன்னொரு மசூதியைத் தான் குறிக்கும், எருசலேமில் உள்ள ஆலயத்தை அல்ல என்கிறார்கள். 

மேலும், ஹதீஸ்கள் அனைத்தும் முஹம்மதுவின்  காலத்திற்கு 150 ஆண்டுகளுக்கு பின்பு எழுதப்பட்டன என்பதாலும், கி.பி. 691ல் (முஹம்மது மரித்த 60 ஆண்டுகளுக்கு பிறகு) எருசலேமில் அப்துல் மாலிக் இப்னு மர்வான் என்ற கலிஃபா 'இன்று நாம் காணும் டோம் ஆஃப் ராக்' மசூதியை கட்டியதால், எருசலேமை சொந்தம் கொண்டாட முஸ்லிம்கள் செய்த தில்லுமுல்லு அல்லது பொய்கள் தான், அந்த புராக் என்ற குதிரையில் முஹம்மது எருசலேமுக்குச் சென்றதும், அங்கிருந்து சொர்க்கத்துச் சென்ற ஹதீஸ்கள். இதன் படி பார்த்தால், முஹம்மது எருசலேமுக்கு செல்லவில்லை என்று சொல்லலாம்.

மீரஜ் என்பது கனவா? தரிசனமா?

குர்‍ஆன் சொல்லும் மீரஜ் என்ற பயணம் நிச்சயமாக அது 'முஹம்மதுவிற்கு வந்த ஒரு கனவாக, அல்லது தரிசனமாக இருக்கமுடியுமே தவிர, அது உண்மையாக இருக்கமுடியாது'.

கீழ்கண்ட படத்தை பாருங்கள். முஹம்மது மீரஜ் பயணம் மேற்கொண்டதாகச் சொல்லப்படும் காலத்தில், யூதர்களின் ஆலயமும் இல்லை (கி.பி. 70 அழிக்கப்பட்டுவிட்டது), அதே நேரத்தில், இன்று காணும் டோம் ஆஃப் ராக் மசூதியும் இல்லை, அது முஹம்மது மரித்து 60 ஆண்டுகள் கழித்து கட்டப்பட்டது? அப்படியானால், அந்த பயணம் என்பது ஒரு கட்டுக்கதையே அல்லாமல்  அல்லது கனவேயல்லாமல் வேறு என்னவாக இருக்கமுடியும்?

கேள்வி 529: இன்றைய  எருசலேமிலுள்ள சிறப்புமிக்க விவரங்கள் என்ன?

பதில் 529: 

இன்று இஸ்ரேல் மியூசியம் என்ற அருங்காட்சியகத்தில், சவக்கடல் சுருள்கள் என்ற மிகவும் பழமையான பைபிளின் கையெழுத்துப் பிரதிகள் வைக்கப்பட்டுள்ளன.

3000 ஆண்டுகளாக "மௌண்ட் ஒஃப் ஆலிவ் (Mount of Olive)" என்ற கல்லறைத்தோட்டத்தில் சவஅடக்கம் செய்யப்பட்டுக் கொண்டு வருகிறது. இது தான் உலகத்திலேயே மிகவும் பழமைவாய்ந்த கல்லறைத்தோட்டமாகும். சாலொமோன் கட்டிய முதலாம் ஆலயம் காலம் தொடங்கி இங்கு இன்றுவரை சவஅடக்கம் செய்யப்பட்டுக்கொண்டு இருக்கிறது. இதில் 2,50,000 பேருக்கும் அதிகமாக அடக்கங்கள் செய்யப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது.

இன்று எருசலேம் நகரில் 50க்கும் அதிகமான கிறிஸ்தவ திருச்சபைகளும், 33 மசூதிகளும், 300+ யூத ஜெபஆலயங்களும் இயங்குகின்றன.

கேள்வி 530: எருசலேம் சின்ட்ரோம்(Jerusalem Syndrome) என்றால் என்ன?

பதில் 530: 

நல்ல ஆரோக்கியமான மனிதர்கள் கூட, எருசலேமுக்குச் சுற்றுலா சென்றால், அங்கு அவர்கள் தங்களை தாங்களே தீர்க்கதரிசிகள் என்று நம்பும்படியான ஒரு வகையான மனநோய்க்கு ஆளாவதாக கண்டுபிடித்துள்ளார்கள். அதாவது, 1980 லிருந்து 1993வரை கிட்டத்தட்ட 42 ஆரோக்கியமான சுற்றுலா பயணிகள், எருசலேமில் தங்கி சுற்றிப்பார்க்கும் போது, "தங்களை தீர்க்கதரிசிகள்" என்று கருதிக்கொண்ட ஒரு மன்நோய்க்கு ஆளாகியிருக்கிறார்கள். இதனை இஸ்ரேலிய மனநல மருத்துவர் யெய்ர் பார்‍எல் (psychiatrist Yair Bar-Eல்) மற்றும் இதர நிபுனர்கள் கூறுகிறார்கள். இந்த விவரத்தைக் கண்டு யாரும் பயப்படவேண்டாம்.

தேதி: 20th Jun 2021


சின்னஞ்சிறு 1000 கேள்வி பதில்கள் பொருளடக்கம்

உமரின் கட்டுரைகள் பக்கம்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2020ramalan/2020-ramalan-24.html


ஞாயிறு, 6 ஜூன், 2021

சின்னஞ்சிறு கேள்வி பதில்கள்: தலைப்பு எருசலேம், கேள்விகள் 511 - 520 வரை - (பாகம் 23)

சின்னஞ்சிறு "இஸ்லாம் கிறிஸ்தவம்" தலைப்பின் முந்தைய 510 கேள்வி பதில்களை படிக்க இங்கு சொடுக்கவும். 

இந்த கட்டுரையில் "எருசலேம்" என்ற தலைப்பில் மேலதிக 10 கேள்விகளுக்கு பதில்களைக் காண்போம். இப்போது, இந்த தலைப்பை தெரிவு செய்வதற்கு காரணம் உண்டு. மே மாதம், இஸ்ரேல் மற்றும் காசாவில் உள்ள  ஹமாஸ் குழுவினருக்கும் இடையே சண்டை மூண்டது. மே மாதம் 6ம் தேதியிலிருந்து 21ம் தேதிவரை (11 நாட்கள்) இது நடந்தது.  இந்த கேள்வி பதில்களில் நான் யாருக்கும் சாதகமாக எழுதப்போவதில்லை. எருசலேமிலுள்ள அந்த அக் அக்ஸா மசூதியிலிருந்து இந்த சண்டை தொடங்கியதால், எருசலேம் பற்றியும், அந்த பிரச்சனைக்குரிய இடம் பற்றியும் 10 கேள்வி பதில்களை எழுதப்போகிறேன். 


கேள்வி 511: எருசலேம் நாள் (Jerusalem Day) என்பது என்ன? ஏன் இந்த நாளில் "எருசலேம் காசா சண்டை இவ்வாண்டு(2021), மே மாதம்" தொடங்கியது?

பதில் 511: எருசலேம் நாள் (Jerusalem Day, எபிரேய மொழியில்: Yom Yerushalayim) என்பது இஸ்ரேலின் தேசிய நாள் ஆகும். 1967ம் ஆண்டில் நடந்த ஆறு நாள் போரின் விளைவாக, எருசலேமின் பழைய நகர் பகுதி, மறுபடியும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதனை நினைவு கூறும் வண்ணமாகவும், அதே நேரத்தில் பல்லாண்டு காலமாக யூதர்களின் கட்டுப்பாட்டில் வராத ஜெருசலேம் (எருசலேம்) இந்த நாளில் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்ததால், இந்த நாளை தேசிய நாளாக இஸ்ரேல் கொண்டாடுகிறது. இந்நாள் யூதர்கள் வெற்றிக்கொடி நாட்டிய நாள், 2000 ஆண்டுகளாக நடக்காத ஒன்று நடந்த நாள் (எருசலேம் யூதர்களின் கையில் வந்த  நாள்). யூதர்களின் எதிரிகள் இந்நாளை விரும்பாமல் இருப்பதற்கு வேறு காரணங்கள் தேவையா?

இதே நாளில் சண்டை நடந்ததற்கு இதைவிட வேறு காரணம் தேவையில்லை என்று நினைக்கிறேன். 

நம் இந்தியாவிலும் சுதந்திர மற்றும் ஜனநாயக நாட்களில் மட்டும் அதிகமாக தலைநகரில் பாதுகாப்பு கொடுப்பதற்கு காரணம், பயங்கரவாத செயல்களை நடத்த விரும்புகிற சக்திகள், இந்நாட்களை தெரிவு செய்யக்கூடும் என்பதற்காகத் தான்.

கேள்வி 512: எருசலேம் யூதருக்கு சொந்தமா? முஸ்லிம்களுக்கு சொந்தமா?

பதில் 512:  ஒரு சின்ன கேள்வி: டெல்லி யாருக்குச் சொந்தம்? சென்னை யாருக்குச் சொந்தம்?  இந்தியர்களுக்கா அல்லது ஆங்கிலேயர்களுக்கா? சுருக்கமாக பதில் சொல்வதாக இருந்தால், இப்போது யார் ஆட்சி செய்கிறார்களோ, அவர்களுக்குத் தான் சொந்தம்.  (சென்னை யாருக்குச் சொந்தம்? தமிழர்களுக்குச் சொந்தம் என்று சொல்லாமல், எப்படி நீ இந்தியர்களுக்குச் சொந்தம் என்று கேட்கலாம் என்று சிலர் என்னை திட்டுவது என் காதில் விழத்தான் செய்கிறது. தமிழர்களை நான் துக்கப்படுத்தினால் என்னை நான் துக்கப்படுத்துவதற்கு சமம், இருந்தபோதிலும் நான் வேறு கோணத்தில் எழுதுவதினால், என்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்)

இதே கேள்வியை, 1947க்கு முன் கேட்டுயிருந்தால், ஆங்கிலேயர்கள் என்ன சொல்லியிருப்பார்கள்? எங்களுக்குத் தான் சொந்தம் என்று சொல்லியிருப்பார்கள்.  இந்தியர்களிடம் கேட்டு இருந்தால் என்ன சொல்லியிருப்பார்கள்? எங்களுக்குத் தான் சொந்தம், ஆங்கிலேயர்களை விரட்டியடித்த பிறகு, நாம் சொந்தம் கொண்டாடுவோம் என்று சொல்லியிருப்பார்கள். அவர்களை விரட்டியடித்த பிறகு தான், நம் ம‌ண் நம் கையில் வந்தது.   எனவே இந்த கேள்வியை "யாரிடம் கேட்கிறோம், எந்த காலக்கட்டத்தில் கேட்கிறோம்" என்பதைப் பொருத்து, பதில்கள் பல வகைகளில் வரும்.

இதே கேள்வியை முகலாயர்கள் டெல்லியை ஆட்சி செய்த போது கேட்டுயிருந்தால் என்ன பதில் வந்திருக்கும்? அப்போதும் சரி, யாரிடம் கேட்கிறோம் என்பதைப் பொருத்து பதில் அமையும்.

இன்றிலிருந்து 2000 ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லியை ஆட்சி செய்த அரச குடும்ப நபர்களில் பலர் இன்று உயிரோடு இருந்து, "டெல்லி எங்கள் மூதாதையர்களுக்கு சொந்தமானது" என்று சொன்னால், இந்த வாதம் சரியாக இருக்குமா?

"நீங்களும் இந்தியர்கள், நாங்களும் இந்தியர்கள், இப்படி பிரித்து பேசுவது சரியாகுமா?" என்று  பல மாகாணங்களாக இருந்து ஒன்றிணைக்கப்பட்ட சுதந்திர இந்தியாவில் வாழும் நாம் கேட்போம் அல்லவா?

இதைப் பற்றி என்னுடைய கருத்தைக் கேட்டால், "டெல்லி" எங்களுக்குச் சொந்தம் என்று கேட்க, இந்த இந்தியர்களுக்கு (அரச குடும்ப வாரிசுகளுக்கு) அதிக‌ உரிமை இருக்குமே ஒழிய, முகலாயர்களுக்கோ, ஆங்கிலேயர்களுக்கோ இல்லை என்பேன். முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் வேறு நாடுகளிலிருந்து படையெடுத்து வந்து இங்கு ஆட்சி அமைத்தவர்கள், இவர்களோ, இந்த மண்ணுக்கு சொந்தமானவர், இவர்களுக்குத் தான் உரிமை அதிகம்.

ஆனாலும், இந்தியா ஒரு நாடாக ஒன்றுபட்டபோது, பல அரசர்கள் தங்கள் உரிமையை விட்டுக்கொடுக்கவேண்டி இருந்தது என்பதை நாம் மறக்கக்கூடாது.

சரி, எருசலேம் யாருக்குச் சொந்தம் என்று சொல்லவில்லையே என்று கேட்கத்தோன்றுகிறதா?  இதை அறிய எருசலேமின் சரித்திரம் படியுங்கள், யூதர்களின் மற்றும் முஸ்லிம்களின் சரித்திரம் படியுங்கள், அப்போது தான் குறைந்த பட்சம் "மத்திய கிழக்கு நாடுகளில் பெட்ரோல் ஊற்றாமலேயே அவ்வப்போது நாடுகள் ஏன் பற்றி எரிகின்றன?" என்பது விளங்கும். 

இந்த தற்போதைய கேள்வி பதில்களில் சில சரித்திர விவரங்களை மேலோட்டமாக நாம் பார்க்கப் போகிறோம், அப்போது மேற்கண்ட சண்டையின் சாராம்சம் சிறிதளவாவது புரியும். 

எருசலேம் யாருக்கு சொந்தம் என்று கேட்பதைவிட, யாரிடம் அது உள்ளது என்று கவனிப்பது நல்லது.

கேள்வி 513: எருசலேம் கடந்த 3000 ஆண்டுகளாக யார் யார் கைகளுக்கு மாறியது?

பதில் 513:  யூதர்களானாலும் சரி முஸ்லிம்களானாலும் சரி, இன்னும் யாராக(கிறிஸ்தவர்களாக) இருந்தாலும் சரி "ஜெருசலேம் எங்களுக்குத் தான் சொந்தம்" என்றுச் சொல்வதைப் பார்த்தால், என்ன தோன்றுகிறதென்றால்? கடந்த 4000 ஆயிரம் ஆண்டுகளாக, இவர்கள் மட்டுமே ஜெருசலேமை இடைவிடாமல் ஆண்டுக்கொண்டு இருப்பதாகவும், மற்றவர்கள் திடீரென்று இன்று வந்து இவர்களை துரத்திவிட்டு, கைப்பற்றிக்கொண்டதாகவும், "அதனால் தான் இந்த அங்கலாய்ப்பும் சண்டையும்" என்று சொல்வதைப்போன்று தெரிகின்றது.  இது வேடிக்கையாக இருக்கிறது.

உண்மையில் சரித்திரம் என்ன சொல்கிறது? கொஞ்சம் திரும்பிப் பார்ப்போமா?

எருசலேமை அதிக ஆண்டுகள் ஆண்டது யார்?

  1. யூதர்கள் மொத்தம் 591 (518+73) ஆண்டுகள் எருசலேமை ஆண்டு இருக்கிறார்கள்.
  2. கிறிஸ்தவர்கள் 417 ஆண்டுகள் எருசலேமை ஆண்டு இருக்கிறார்கள்.
  3. முஸ்லிம்கள் மொத்தம் 1191 (461+730) ஆண்டுகள் எருசலேமை ஆண்டு இருக்கிறார்கள். 

எருசலேமை கடந்த காலங்களில் யார் ஆண்டார்கள் என்ற பட்டியலை கிழ்கண்ட இரண்டு தொடுப்புக்கள் தெளிவாக விவரிக்கின்றன, இவைகளை சொடுக்கி படித்துக்கொள்ளுங்கள். முக்கியமாக விக்கிபீடியா தளத்தின் தொடுப்பில் இதைப் பற்றிய ஒரு கால வரைபடம் உள்ளது, அதில் இன்னும் தெளிவாக இவ்விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

எருசலேமை அதிக ஆண்டுகள் ஆண்டது யார்? சரித்திரத்தின் படி முஸ்லிம்கள்  தானே! ஆம் முஸ்லிம் அரசாட்சி தான் 1191 ஆண்டுகள் ஆண்டது. இது  எதனை நிருபிக்கின்றது? இது எதையும் நிருபிக்கவில்லை, வலிமையுள்ளவர்களே வெல்வார்கள் என்பது தான் உலகத்தில் காணப்படும் நிலை. அதிக ஆண்டுகள் முஸ்லிம் அரசர்கள் எருசலேமை ஆண்டதால், இன்று எருசலேம் அவர்களுக்கு சொந்தமாகுமா?

தாவீது ராஜாவாக இருந்தாலும் சரி, இரண்டாம் கலிஃபா உமர் அவர்களானாலும் சரி, அதே போன்று மற்ற கிறிஸ்தவ ஆட்சியாளர்களாக இருந்தாலும் சரி, இவர்கள் அனைவரும் "போர் முனையில் ஆட்சியை பிடித்து மக்களை கொன்று எருசலேமை கைப்பற்றியவர்கள் தானே!, இதில் யாருமே இந்த விஷயத்தில் உயர்ந்தவர்களோ, தாழ்ந்தவர்களோ அல்ல.

போர் புரிந்து, மக்களைக் கொன்று ஆட்சி செய்தவர்கள் சிறந்தவர்கள் என்று கருதினால், உலக சரித்திரத்தில் பாபிலோனியர்கள், ரோமர்கள், கிரேக்கர்கள் (மகா அலேக்சாண்டர்), மற்றும் ஆங்கிலேயர்கள் தான் சிறந்தவர்கள் என்று நாம் ஓட்டு போடவேண்டியிருக்கும், இதனை தற்காலத்தில் யாராவது ஒப்புக்கொள்வார்களா?

கி.மு. 1000 அல்லது 1004ம் ஆண்டில், தாவீது ராஜா எருசலேமை கைப்பற்றிய விவரத்தை கீழ்கண்ட வசனத்தில் காணலாம்:

II சாமுவேல் 5:6-7

6. தேசத்திலே குடியிருக்கிற எபூசியர்மேல் யுத்தம்பண்ண ராஜாவானவன் தன் மனுஷரோடேகூட எருசலேமுக்குப் போனான். அவர்கள்: இதிலே பிரவேசிக்க தாவீதினால் கூடாது என்று எண்ணி, தாவீதை நோக்கி: நீ இதற்குள் பிரவேசிப்பதில்லை; குருடரும் சப்பாணிகளும் உன்னைத் தடுப்பார்கள் என்று சொன்னார்கள். 7. ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமாயிற்று.

கலிஃபா உமர் எப்படி எருசலேமை கைப்பற்றினார்? இந்த தமிழ் கட்டுரையை படிங்கள்.

தாவீது ராஜாவானலும் சரி, கலிஃபா உமரானாலும் சரி யாரும் சமாதான புறாக்கள் அல்ல. எனவே யார் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள் என்ற விவரம், எந்த நியாயமான முடிவு எடுக்கவும் பயன்படாது.

சரித்திரத்தை திரும்பிப்பார்த்தால், எருசலேம் 52 முறை தாக்கப்பட்டுள்ளது, 44 முறை ஆக்கிரமிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டு மறுபடியும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது,  23 முறை முற்றுகையிடப்பட்டுள்ளது மற்றும் கடைசியாக இரண்டு முறை அழிக்கப்பட்டுள்ளது. மேலும் கிமு 4000 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நகரில் மக்கள் வாழ்ந்துள்ளார்கள், இதனால் உலகின் பழைய நகரங்களில் எருசலேமும் ஒன்றாகும்(https://en.wikipedia.org/wiki/Kingdom_of_Jerusalem).

கேள்வி 514: எருசலேமுக்காக இன்று சண்டை அவசியமா?

பதில் 514: ஒரு முறை முந்தைய கேள்வியின் பதிலை படித்துக்கொள்ளுங்கள். 

சௌதியில் உள்ள மக்கா நகருக்காக யூதர்கள் சண்டையிடவில்லை,  மேலும், எருசலேம் நகரம் முஸ்லிம்களின் ஆட்சியில் இருக்கும் போது, யூதர்கள் வலியச் சென்று சண்டையிடவில்லை. தங்கள் எல்லைக்குள் இருக்கும் தங்கள் நகரை பாதுகாக்க போராடுகிறார்கள்.

முந்தைய பதிலில் சொன்னது போல, இன்று யாரிடம் ஒரு நகரம் இருக்குமோ, அது அவர்களுக்குச் சொந்தம். அதை அவர்கள் எப்படி சம்பாதித்தார்கள் என்பதை வைத்து, அவர்களிடம் சண்டைபோடுவது நியாயமா? இல்லையா? என்பதை முடிவு செய்யலாம்.

எருசலேம் முதலாவது கானானியர்களிடம் இருந்தது, அதன் பிறகு இஸ்ரேல் கைக்கு (தாவீது ராஜா சண்டையிட்டு ஜெயித்தார்), அதன் பிறகு சிரியா ஆட்சியாளர்கள், பெர்சியர்கள், கிரேக்கர்கள், ரோமர்கள், பைசாந்தியர்கள், முஸ்லிம்கள் என்று பல அரசர்களின் கைக்கு மாறி, இன்று அது யூதர்களிடம் உள்ளது.

இஸ்லாம் எருசலேமில் பிறக்கவில்லை, முஹம்மது ஒன்றும் எருசலேம் மண்ணின் மைந்தர் அல்ல, கி.பி.638ல், இரண்டாம் கலிஃபாவாக இருந்த உமர் அவர்கள், மண்ணாசை, பொன்னாசையினால் போர்கள் புரிந்து நாடுகளை பிடித்தார், அந்த நேரத்தில் எருசலேமையும் பிடித்தார்.

எனவே எருசலேமின் சரித்திரம் பற்றி சிறிது தெரிந்துக்கொள்வது இந்த 'எருசலேம் சண்டை' பற்றி சரியான புரிதலுக்கு உதவும் என்பதால் தான் முந்தைய பதிலில் சுருக்கமாக சரித்திரத்தை ஒளிவு மறைவின்றி விவரங்களை கொடுத்தேன்.

இன்றைய நாடுகள் ஒன்றையொன்று சண்டையிட்டுக்கொண்டால், அது உலக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

"இரண்டு நாடுகள் தானே, சண்டையிட்டுக்கொள்ளட்டும்" என்று மற்ற உலக நாடுகள் ஒன்றும் செய்யாமல் அமைதியாக  இருக்கமுடியாது, இந்த சிறிய சண்டைகள், மூன்றாம் உலகப்போராகவும் உருமாற வாய்ப்புள்ளது.

யார் தீவிரவாதத்தின் மூலமாக சண்டையிடுகிறார்கள் என்பதைப் பார்த்து, அவர்களை அடக்கினால் நல்லது.

எருசலேம் என்பது முஹம்மதுவின் அப்பன் வீட்டு சொத்து அல்ல, முஸ்லிம்கள் உரிமை பாராட்டுவதற்கு, அதே போன்று யூதர்களுக்கும் எருசலேம் அப்பன் வீட்டு சொத்து அல்ல உரிமை கொண்டாடுவதற்கு (தாவீது ராஜா கூட போர் செய்து தானே எருசலேமை பிடித்தார்)! இவ்வரிகள் மூலமாக கிறிஸ்தவர்களில் சிலர் என் மீது கோபம் கொள்ளலாம், ஆனால், உண்மை இப்படித் தானே உள்ளது. இன்று எருசலேம் இஸ்ரேலின் எல்லைக்குள் இருப்பதால், எருசலேம் யூதர்களுக்குச் சொந்தம், இந்த ஒரு விஷயத்தில் நாம் தெளிவாக இருக்கவேண்டும். ஒரு வேளை முஸ்லிம்கள் வணங்கும் அல்லாஹ் முந்தைய காலத்தில் செய்ததாகச் சொல்லப்படும் அற்புதத்தை மறுபடியும் செய்து, அதாவது சூடான கற்களை பறவைகள் கொண்டு வந்து, இஸ்ரேல் இராணும் மீது வீசி, இஸ்ரேல் இராணுவத்தை தோற்கடித்து, முஸ்லிம்களின் கைகளில் எருசலேமை கொடுத்தால், இந்த அற்புதத்தை யாரும் மறுக்கமுடியாது - Survival of the Fittest (வலிமையுள்ளவர்களே வாழ்வார்கள்) என்றுச் சொல்லலாம்.

சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், எருசலேமுக்காக சண்டை தேவையற்றது என்பது தான் என் கருத்து.

கேள்வி 515: எருசலேமுக்காக யூதர்களும் முஸ்லிம்களும் சண்டையிட்டுக் கொள்வது போன்று, ஏன் கிறிஸ்தவர்கள் சண்டையிடுவதில்லை?

பதில் 515: இந்த கேள்வியில் சிறிய தவறு இருக்கிறது, அதாவது யூதர்கள் எருசலேமுக்காக இன்று சண்டையிடவில்லை, அதனை பாதுகாக்க சண்டையிடுகிறார்கள். 

முஸ்லிம்கள் எருசலேமுக்காக சண்டையிடுகிறார்களா? என்று கேட்டால் 'முஸ்லிம்களே ஆம்' என்று தான் பதில் அளிப்பார்கள். முஸ்லிம்களிடம் "எருசலேம் என்பது இஸ்லாமின் பிறப்பிடமா? முஹம்மதுவின் சொந்த ஊரா? அவரது மூதாதையர்களின் ஊரா? அல்லது குறைந்தபட்சம் முதல் நான்கு கலிஃபாக்களின் சொந்த ஊரா? போன்ற கேள்விகளைக் கேட்டுப்பாருங்கள்' என்ன பதில் வரும் என்பதை கவனித்து, ஆய்வு செய்துப் பாருங்கள்.

இப்பொழுது இக்கேள்வியின் பதிலுக்கு வருவோம். கிறிஸ்தவர்கள் ஏன் எருசலேமுக்காக சண்டையிடுவதில்லை?

இயேசுக் கிறிஸ்துவின் செய்தி, அன்பின் செய்தி ஆகும். அவர் மக்களின் உள்ளங்களில் ஆட்சி செய்ய விரும்புகிறார், நாடுகளில் ஆட்சி செய்ய விரும்புவதில்லை.

உலக நாடுகளை பிடித்து இஸ்லாமிய ஆட்சியின் கீழ் கொண்டுவரவேண்டும் என்பது இஸ்லாமிய கோட்பாடு, குர்‍ஆன் கற்றுக்கொடுத்த வழி, முஹம்மது வாழ்ந்துச் சென்று வழி. ஆனால், கிறிஸ்தவத்தில் இப்படி இல்லை, உலக மக்கள் அனைவரின் உள்ளங்களில் இயேசு ஆட்சி செய்ய விரும்புகிறார்.

எனவே பைபிளின் படி, உண்மையாக இயேசுவை பின்பற்றுகிற கிறிஸ்தவர்கள், நாடுகளை பிடிக்க சண்டையிடக்கூடாது. குர்‍ஆனின் படி, உண்மையான முஸ்லிம்கள், நாடுகளை பிடித்து, மக்களைக் கொன்றாவது இஸ்லாமை நிலைநாட்டவேண்டும். இதனை முஹம்மது செய்தார், நான்கு முதல் கலிஃபாக்கள் செய்தார்கள், அடுத்து வந்த அனைத்து கலிஃபாக்களும் நாடுகளை விஸ்தரிப்பதற்காகவே போர் புரிந்தார்கள்.

கேள்வி 516: மே மாதம் 2021 அன்று நடந்த இஸ்ரேல் காசா சண்டை - கிறிஸ்தவர்கள் யார் பக்கம்?

பதில் 516:  உங்கள் சொந்த வீட்டிற்குள் வெளியிலிருந்து ஒருவர் கல் வீசி தாக்கினால் என்ன செய்வீர்கள்?  கல் வீசியவர் மீது நடவடிக்கை எடுப்பீர்கள் அல்லவா?

2021ம் ஆண்டு,  மே மாதம் நடந்த தாக்குதல் பற்றி முஸ்லிம்கள் நடத்தும் ஊடகங்களின் செய்திகளை படியுங்கள், அதே போன்று யூத ஊடகங்களின் செய்திகளையும் படியுங்கள், கடைசியாக நடுநிலையாக செயல்படும் ஊடகங்களின் செய்திகளையும் படித்து, நீங்களே ஒரு நியாயமான நீதியான முடிவுக்கு வாருங்கள், இதே முடிவைத் தான் கிறிஸ்தவர்களும் எடுப்பார்கள் அல்லது எடுக்கவேண்டும்

கேள்வி 517: எருசலேம் முஸ்லிம்களுக்கு மூன்றாவது புனித ஸ்தலமாக மாறியது எப்போது?

பதில் 517:  

முஸ்லிம்களின் முதலாவது புனித நகரம் மக்கா ஆகும், இரண்டாவது புனித நகரம் மதினா ஆகும். இந்த நகரங்களிலும் அல்லாஹ்வுக்காக கட்டுப்பட்ட மசூதிகள் இருக்கும் இடம் தான் புனித ஸ்தலமாக கருதப்படுகிறது.

முஸ்லிம்களின் மூன்றாவது புனித நகரமாக எருசலேம் உள்ளது, அதிலும் முக்கியமாக மசூதி உள்ள இடம் தான் மூன்றாவது புனித ஸ்தலமாக உள்ளது.  முஹம்மது உயிரோடு இருக்கும்போது எருசலேமில் உள்ள மசூதியை  (Dome of Rock) அவர் கட்டினாரா?  என்று கேட்டால், "இல்லை, முஹம்மது மரித்த பிறகு 60 ஆண்டுகள் கழித்து" தான் மசூதி கட்டப்பட்டது.  அப்படியானால், எப்படி எருசலேம் நகரமும் மற்றும் மசூதி இடமும் புனிதமாக மாறியது?

இந்த மசூதி இருந்த இடத்திலிருந்து  தான் கடந்த மே மாத சண்டைகள் தொடங்கின.

முஸ்லிம்களின் 3வது புனித ஸ்தலம் பற்றி சில விவரங்களை சுருக்கமாக காண்போம்.

1) முந்தைய நபிகளை சொந்தம் கொண்டாடிய குர்‍ஆன்:

முந்தைய  வேதமான பைபிளின் நபிமார்களை குர்‍ஆன் எடுத்துக்கொண்டது, அவர்களை குர்‍ஆனின் இறைவனாகிய அல்லாஹ் தான் அனுப்பினான் என்று சொந்தம் கொண்டாடியது. 

2) முந்தைய வேதங்களை சொந்தம் கொண்டாடிய குர்‍ஆன்:

முந்தைய நபிமார்களை சொந்தம் கொண்டாடியது போன்று குர்ஆன் முந்தைய வேதங்களையும் அல்லாஹ் தான் அனுப்பினான் என்று சொல்லி அவைகளையும் சொந்தம் கொண்டாடியது. உதாரணத்திற்கு, பைபிளின் ஐந்து ஆகமங்கள், சங்கீதப் புத்தகம், மற்றும் நற்செய்தி நூல்கள், இவைகள் அனைத்தையும் அல்லா தான் கொடுத்தான் என்று சொந்தம் கொண்டாடியது.

3) முந்தைய வேதகால இடத்தையும் சொந்தம் கொண்டாடிய குர்‍ஆன்:

முந்தைய நபிமார்களை எடுத்துக்கொண்டது, வேதங்கள் எடுத்துக்கொண்டது, கடைசியாக முந்தைய வேதமாகிய பைபிள் கொடுக்கப்பட்ட இடத்தையும் எடுத்துக்கொள்ள குர்ஆன் முயன்றுள்ளது.

இஸ்லாமின் முதல் புனித ஸ்தலம் (எருசலேம்) எப்படி மூன்றாவது புனித ஸ்தலமானது?

இது உண்மையா? ஆமாம் இது உண்மை தான். முஹம்மது  முதன்முதலாக அல்லாஹ்வை தொழுதுக்கொள்ளும் போது, எருசலேமை தொழுகையின் திசையாக (கிப்லாவாக) வைத்துக்கொண்டுதான் தொழுகை நடத்தினார். இதையே முஸ்லிம்களும் பின்பற்றினார்கள். கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் மக்காவில் முஹம்மது  இஸ்லாமை பரப்பும் போது, முஸ்லிம் சமுதாயம் முழுவதும் தினமும் ஐந்து வேளை எருசலேமை நோக்கி தொழுதனர். இது அல்லாஹ்வின் கட்டளையின் படியே நடைபெற்றது. இந்த தொழுகையை மக்காவில் இருந்து கொண்டே, கஅபா என்ற அல்லாவின் முதல் வீடு இருக்கும் ஊரிலிருந்தே, கஅபாவுக்கு புறமுதுகு காட்டி, எருசலேமே கிப்லாவாக மாற்றி ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் எருசலேமை நோக்கி தொழுது கொண்டது.

இது உண்மை என்றால், முஸ்லிம்களின் முதலாவது புனித ஸ்தலம் எருசலேம் என்பது தானே உண்மை?  மக்காவில் பன்னிரண்டு ஆண்டுகள் இஸ்லாமிய தாவா பணியை செய்தபிறகு, மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்தார் முஹம்மது . அங்கு சென்ற பிறகும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வரை, எருசலேமை நோக்கியே முஸ்லிம்கள் தொழுதார்கள்.

யூதர்கள் தம்மை நபி என்று ஒப்புக்கொள்வார்கள் என்று முஹம்மது கனவு கண்டார், யூதர்கள் தங்கள் பிடியை விட்டுக் கொடுப்பதாக இல்லை, தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று அடம் பிடித்தனர், கிறிஸ்தவர்களும் இயேசுவை விட்டுக் கொடுப்பதாக இல்லை. என்ன செய்ய வேண்டும்? என்று சிந்தித்த முஹம்மது அல்லது அல்லாஹ், மதினாவில் இருக்கும்போது, தொழுகையின் திசையை எருசலேமிலிருந்து, முன்னூறுக்கும் அதிகமான விக்கிரக‌ கற்சிலைகள் கொண்ட காபாவின் பக்கம் திருப்பப்பட்டது.

இதன் பிறகுதான், மக்காவும் அதில் உள்ள காபா ஆலயமும் இஸ்லாமின் முதல் புனித ஸ்தலமாக மாறியது. இப்படி நடந்து பிறகு, அடுத்த ஒன்பது/பத்தாண்டுகள் விக்ரகங்கள் இருக்கின்ற கஅபாவை நோக்கி முஹம்மதுவும் முஸ்லிம்களும் அல்லாவை தொழுதனர். என்னது முஹம்மதுவும் முஸ்லிம்களும் விக்கிர சிலைகள் இருந்த ஆலயத்தை நோக்கியா தொழுதார்கள்? என்ற சந்தேகம் வருகிறதா? உங்கள் இமாம்களை கேட்டுப்பாருங்கள், அல்லது சரித்திர பக்கங்களை சிறிது நேரமெடுத்து புரட்டிப்பாருங்கள்.

ஸூரா 2:144. (நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்; எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்; ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை.

இப்பொழுது எருசலேம் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை காண்போம்.

அல் அக்ஸா மசூதி என்பது எருசலேம் ஆலயத்தை குறிக்குமா?

கீழ்கண்ட குர்ஆன் வசனத்தில், முஹம்மதுவை அல்லாஹ் மக்காவிலிருந்து அல் அக்ஸா மஸ்ஜித் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அந்த அல் அக்ஸா மஸ்ஜித் எருசலேமை தான் குறிக்கும் என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள். ஆனால் குர்ஆனில், எருசலேமில் தான் "அல் அக்ஸா மஸ்ஜித்" உள்ளது என்று சொல்லப்படவில்லை என்பதை கவனிக்கவும்.

குர்‍ஆன் 17:1   (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.

மூன்றாவது புனித ஸ்தலமாக எருசலேம் மாறிவிட்டது:

கீழ்கண்ட புகாரி ஹதீஸ்களை கவனியுங்கள்:

1189. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மக்காவில் உள்ள) மஸ்ஜிதுல் ஹராம், (மதீனாவில் உள்ள) மஸ்ஜிதுந் நபவீ, (பைத்துல் மக்திசில் உள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களுக்குத் தவிர வேறெந்தப் பள்ளிவாசலுக் கும் (அதிக நன்மையை எதிர்பார்த்துப்) புனிதப் பயணம் மேற்கொள்ளப்படாது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (மேலும் பார்க்க புகாரி: 1197 & 1864)

குர்‍ஆனின் இன்னொரு சரித்திர பிழை என்னவென்றால், 'எருசலேமின் அல் அக்ஸா மஸ்ஜித் அதாவது யூதர்களின் இரண்டாவது ஆலயம், கி.பி 70 ரோமர்களால் அழிக்கப்பட்டது', முஹம்மது வாழ்ந்த காலத்தில் (கிபி 570 - 632), அந்த ஆலயம் அங்கு இல்லை. இருந்த போதிலும், இல்லாத ஆலயத்திற்கு புனித யாத்திரை செல்லலாம் என்று முஹம்மது சொன்னது வேடிக்கையின் உச்சக்கட்டம் என்றுச் சொல்லலாம்.

கேள்வி 518: காபா மற்றும் எருசலேம் ஆலயத்திற்கு இடையே 40 ஆண்டுகள் இடைவெளியா?

பதில் 518: முஹம்மது ஒரு கள்ள நபி என்பதற்கும், குர்‍ஆன் இறைவேதமில்லை என்பதற்கும் இதுவும் ஒரு சான்றாகும்.

ஸஹீஹ் புகாரி பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3366 கீழ்கண்டவிதமாக கூறுகிறது:

அபூ தர்(ரலி) அறிவித்தார்

நான் (நபி(ஸல்) அவர்களிடம்),'இறைத்தூதர் அவர்களே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?' என்று கேட்டேன். அவர்கள்,'அல் மஸ்ஜிதுல் ஹராம் - மக்கா நகரிலுள்ள புனித (கஅபா அமைந்திருக்கும்) இறையில்லம்" என்று பதிலளித்தார்கள். நான்,'பிறகு எது?' என்று கேட்டேன். அவர்கள்,'ஜெரூஸத்தில் உள்ள) அல் மஸ்ஜிதுல் அக்ஸா" என்று பதிலளித்தார்கள். நான்,'அவ்விரண்டுக்கு மிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி) இருந்தது" என்று கேட்டேன். அவர்கள்,'நாற்பதாண்டுகள்' (மஸ்ஜிதுல் ஹராம் அமைக்கப்பட்டு நாற்பதாண்டுகள் கழித்து மஸ்ஜிதுல அக்ஸா அமைக்கப்பட்டது) பிறகு,'நீ தொழுகை நேரத்தை எங்கு அடைந்தாலும் உடனே, அதைத் தொழுதுவிடு. ஏனெனில், நேரப்படி தொழுகையை நிறைவேற்றுவதில் தான் சிறப்பு உள்ளது" என்று கூறினார்கள்.

மேலும் அதே ஸஹீஹ் புகாரி பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3425 என்ற ஹதீஸையும் படிக்கவும், இந்த ஹதீஸின் முடிவுரையில் சில மாற்றம் உண்டு, ஆனால், சரித்திர விவரம் ஒன்று போலவே உள்ளது:

பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3425

அபூ தர்(ரலி) அறிவித்தார்

நான் நபி(ஸல்) அவர்களிடம்), 'இறைத்தூதர் அவர்களே! முதலாவதாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல்மஸ்ஜிதுல் ஹராம் (மக்காவிலுள்ள புனித இறையில்லம்)" என்று பதிலளித்தார்கள். நான், 'பிறகு எது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'பிறகு 'அல் மஸ்ஜிதுல் அக்ஸா' (ஜெரூசலம் நகரிலுள்ள 'அல் அக்ஸா' பள்ளி வாசல்)" என்று பதிலளித்தார்கள். நான், 'அவ்விரண்டிற்குமிடையே எவ்வளவு காலம் (இடைவெளி) இருந்தது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'நாற்பதாண்டு காலம் (இடைவெளி) இருந்தது" என்று கூறினார்கள். பிறகு, 'உன்னைத் தொழுகை (நேரம்) எங்கே வந்தடைந்தாலும் நீ தொழுது கொள். ஏனெனில், பூமி முழுவதுமே உனக்கு ஸஜ்தா செய்யுமிடம் (இறைவனை வழிபடும் தலம்) ஆகும்" என்று கூறினார்கள்.

நாம் தோராயமாக கணக்கிட்டால், ஆபிரகாம் வாழ்ந்த காலகட்டம் கி.மு. 2000 ஆகும், சாலொமோன் வாழ்ந்த காலம் கி.பி. 950 ஆகும். முஹம்மதுவின் கூற்றுப்படி படி, ஆபிரகாம் காபாவை கட்டினார் (புகாரி - பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3365), அதன் அடித்தளத்தை "ஆபிரகாம் அமைத்தார்" (புகாரி - பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3368). ஆபிரகாம் மக்காவிற்குச் சென்றார் என்பது பைபிளுக்கு முரண்பட்ட கருத்தாகும். உண்மையாகவே ஆபிரகாம் மக்காவிற்குச் சென்றார் என்று ஆதாரத்தோடு நிருபியுங்கள் என்று கேட்டால், இதுவரை யாரும் இதற்கு சரியான பதிலை தரவில்லை. ஆபிரகாம் மக்காவிற்கு சென்றாரா இல்லையா என்பது முக்கியமல்ல, "ஆபிரகாம் மக்காவிற்குச் சென்றார் என்று முஹம்மது நம்பினார்" அதனால் அவர் அப்படி கூறியுள்ளார் என்பது மட்டும் தெரிகிறது. எருசலேமில் முதல் ஆலயத்தை கட்டியது சாலொமோன் ஆவார்.

ஆபிரகாமுக்கும், சாலொமோனுக்கும் இடையே இருப்பது 40 ஆண்டு கால இடைவெளி இல்லை, கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளுக்கும் அதிகமான இடைவெளியாகும். இந்த முரண்பாடு குர்‍ஆனின் முரண்பாடு இல்லை, இதை ஏன் நாம் தெரிந்துக்கொள்ளவேண்டுமென்றால், இது ஹதீஸில் காணப்படுகிறது. அதாவது முஹம்மதுவின் மூளை எதனை சரி என்று நம்பியதோ அதுதான் குர்‍ஆனிலும் உண்டு, ஹதீஸ்களிலும் உண்டு. குர்‍ஆனில் அனேக சரித்திர பிழைகள் உண்டு, அது போலவே, முஹம்மதுவின் சொல்லும் செயலும் அடங்கிய ஹதீஸிலும் அனேக சரித்திர தவறுகளை காணலாம்.

கேள்வி 519: எருசலேம் கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலமா?

பதில் 519: 

எருசலேம் கிறிஸ்தவர்களின் புனித நகரமல்ல, ஏனென்றால், கிறிஸ்தவர்களின் உள்ளம் தான் தேவன் தங்கும் ஆலயம் என்று பைபிள் சொல்கிறது. 

கிறிஸ்தவர்களுக்கு எருசலேம் புனித ஸ்தலமில்லை என்பதற்காக, நாம் அதனை வெறுக்கிறோம் என்று பொருள் அல்ல.

பைபிளின் பரிசுத்தவான்களும், தீர்க்கதரிசிகளும் வாழ்ந்த இடம் என்பதாலும், இயேசுவின் கால் பட்ட இடம் என்பதாலும், 'எங்களுக்கு மரியாதை உண்டு, ஆனால் புனிதமில்லை'. நாங்கள் இஸ்ரேல் நாட்டை பார்க்க விரும்புகிறோம், எருசலேமில் இயேசு நடந்த தெருக்களில், இடங்களில் நாங்களும் நடக்கவும், அவ்விடங்களை பார்த்து மகிழவும் விரும்புகிறோம். ஆனால் புனித பயணம் மேற்கொள்வது கிறிஸ்தவத்தில் கடமையில்லை.

கேள்வி 520: எருசலேம் என்ற பெயர் குர்‍ஆனிலும், பைபிளிலும் எத்தனை முறை வருகிறது?

பதில் 520: 

குர்‍ஆனில் எருசலேம்: 

எருசலேம்/ஜெருசலேம் என்ற வார்த்தை குர்‍ஆனில் ஒரு முறை கூட வருவதில்லை. பொதுவாக "அல் குத்ஸ் (Al-Quds)" என்று எருசலேமை அரபி முஸ்லிம்கள் அழைக்கிறார்கள், இது 9ம் நூற்றாண்டிலிருந்து பயன்பாட்டில் உள்ளது. இதன் பொருள் "பரிசுத்த நகரம்" அல்லது "பரிசுத்தம்" என்று பொருளாகும்.  இந்த வார்த்தை கூட எருசலேமுக்காக குர்‍ஆன் பயன்படுத்தவில்லை என்பது தான் உண்மை.

யூத வேதத்தில் எருசலேம்:

எருசலேம் என்பது பல பெயர்களில் பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இன்று எருசலேம் "Yerushalayim (Hebrew: יְרוּשָׁלַיִם‎)" என்று அழைக்கப்படுகின்றது. ஷலேம் என்றால் எபிரேய மொழியில் "சமாதானம்" என்று பொருள், ஆக, எருசலேம் என்றால் "சமாதானத்தின் நகரம்" என்று பொருள் (இன்று உலக சமாதானத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது இந்த நகரம்). 

ஆதியாகமம் 14:18ம் வசனத்தில் வரும் ஷாலேம் என்பது எருசலேம் ஆகும் என்பது அறிஞர்களின் கூற்றாகும்.

ஆதியாகமம் 14:18-19

18. அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து, 19. அவனை ஆசீர்வதித்து: வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக.

பைபிளில் எருசலேமுக்கு மேலும் பல பெயர்கள் உள்ளன. சீயோன் என்றும், தாவீதின் நகரம் என்றும், மகா ராஜாவின் நகரம், பரிசுத்த நகரம் என்றும் எருசலேம் அழைக்கப்பட்டுள்ளது.

தமிழில் பழைய ஏற்பாட்டில் தேடும் போது, எருசலேம் என்ற வார்த்தை 627 முறை வருகிறது. தமிழ் புதிய ஏற்பாட்டில் தேடும் போது, எனக்கு 143 முறை எருசலேம் என்ற வார்த்தை வருகிறது.

எபிரேய பைபிளில் இரண்டு வார்த்தைகள் இதற்கு உண்டு(H3389 & H3390), அவைகளின் எண்ணிக்கையை (643 + 26)  கீழே காணலாம்.

Strong's Number H3389 matches the Hebrew יְרוּשָׁלַם (Yᵊrûšālam), which occurs 643 times in 600 verses in the wlc Hebrew (source: https://www.blueletterbible.org/lexicon/h3389/kjv/wlc/0-1/ )

Strong's Number H3390 matches the Hebrew יְרוּשְׁלֵם (Yᵊrûšlēm), which occurs 26 times in 25 verses in the wlc Hebrew (https://www.blueletterbible.org/lexicon/h3390/kjv/wlc/0-1/ )

இதுவரை பார்த்த 10 பதில்களிலிருந்து எருசலேம் என்ற வார்த்தையை ஒரு யூதன் (அல்லது கிறிஸ்தவன்) செவியுற்றால், அவன் மனதில் ஓடும் எண்ணங்கள் என்னவென்று உங்களுக்கு ஓரளவிற்கு புரிந்திருக்கும். அதே நேரத்தில், ஒரு முஸ்லிம் இவ்வார்த்தையை செவியுற்றால் அவன் மனதில் ஓடும் எண்ணங்கள் என்னவென்றும் புரிந்திருக்கும். ஆனால், யார் மனதில் என்ன எண்ணங்கள் வந்தாலும், அவைகள் நியாயமானவைகளா இல்லையா என்பதை ஓரளவிற்கு சரி பார்க்க உங்களால் முடிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

இன்னும் அனேக கேள்விகள் எருசலேம் பற்றி உள்ளன, அவைகளை அடுத்த கட்டுரைகளில் காணலாம்.

தேதி: 6th Jun 2021


சின்னஞ்சிறு 1000 கேள்வி பதில்கள் பொருளடக்கம்

உமரின் கட்டுரைகள் பக்கம்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2020ramalan/2020-ramalan-23-html.html