ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

சனி, 4 ஆகஸ்ட், 2012

ரமளான் நாள் 16 - இயேசுவின் சீடர்களை அல்லாஹ் ஏமாற்றலாமா?

அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதங்கள்: கடிதம் 1, கடிதம் 2கடிதம் 3கடிதம் 4கடிதம் 5கடிதம் 6கடிதம் 7கடிதம் 8 , கடிதம் 9, கடிதம் 10, கடிதம் 11, கடிதம் 12கடிதம் 13கடிதம் 14கடிதம் 15 ]

அன்புள்ள தம்பிக்கு,

உனக்கு சமாதானம் உண்டாவதாக

நீ  எழுதிய கடிதத்தில் "இயேசு சிலுவையில் அறையப்படவில்லை, அல்லாஹ் இயேசுவை அப்படியே எடுத்துக்கொண்டார், இயேசுவின் இடத்தில் இன்னொரு நபரை வைத்துவிட்டார், அங்கு இருந்தவர்கள் அனைவரும், இயேசு தான் சிலுவையில் மரித்ததாக நினைக்கும்படி அல்லாஹ் செய்துவிட்டார்" என்று எழுதியிருந்தாய்.  இதற்கு என்னுடைய பதில் என்ன என்று கேட்டு இருந்தாய்.  இந்த கேள்விகளுக்கு முதல் பதிலை நான் நேற்று அனுப்பினேன், இப்போது இரண்டாவது பதிலை பார்க்கலாம்.

அல்லாஹ் செய்த மிகப்பெரிய தவறு இது தான் என்று நான் சொல்லுவேன்.

நீ உன் கடிதத்தில் ஏன் நீங்கள் இஸ்லாமை தழுவக்கூடாது என்று அடிக்கடி கேட்கிறாய், ஆனால், இப்போது நீ கடிதத்தில்  எழுதிய படி, அல்லாஹ் அனேக தவறுகள் செய்து இருப்பதினால் அவரை இறைவன் என்று நம்ப முடிவதில்லை. அப்படி என்ன அல்லாஹ் தவறு செய்துவிட்டார்? என்று நீ கேட்கலாம், அதற்கு இப்போது நான் பதிலை கீழ்கண்ட தலைப்புகளில் தருகிறேன்.

• இயேசுவின் தாய், உலக பெண்களில் சிறந்தவர் - அல்லாஹ்வின் சாட்சி
• இயேசுவின் சீடர்கள் நல்லடியார்கள் - அல்லாஹ்வின் சாட்சி
• யூதர்களின் சூழ்ச்சி மற்றும் அல்லாஹ்வின் சூழ்ச்சி
• அல்லாஹ்வின் சூழ்ச்சியின் விளைவு?
---------------------------------------------------------------------

1) இயேசுவின் தாய், உலக பெண்களில் சிறந்தவர் - அல்லாஹ்வின் சாட்சி

இயேசுவின் தாயாகிய மரியாள் பற்றி குர்ஆன்கூறும் போது, அவர் "அல்லாஹ்வினால் தெரிந்தெடுக்கப்பட்டவர்", "அல்லாஹ் தூய்மையாக்கியுள்ளான்", மற்றும் "உலக பெண்கள் யாவரையும்விட மேன்மையாக தெரிந்தெடுத்துள்ளான்" என்று சாட்சி பகருகிறது. இதனை குர்ஆன் 3:42ல் காணலாம்:

(நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள்; மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்;. உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான்; இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்" (என்றும்). (குர்ஆன்  3:42)

குர்ஆன் 5:75ல், மரியாள் உண்மையுள்ளவர் என்றும் குர்ஆன் கூறுகிறது.

2) இயேசுவின் சீடர்கள் நல்லடியார்கள் - அல்லாஹ்வின் சாட்சி

இயேசுவின் சீடர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு இருந்தார்கள் என்றும்,  அவர்கள் முஸ்லிம்களாக இருந்தார்கள் என்றும் அவர்களுக்கு பகைவர்கள் மீது அல்லாஹ் உதவி அளித்தான் என்றும் குர்ஆன் சாட்சி பகருகிறது.

அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது, "அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?" என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்; "நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்;. திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லீம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்" எனக் கூறினர்.  (குர்ஆன் 3:52)

ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, "அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?" எனக் கேட்க, சீடர்கள், "நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்" என்று கூறியதுபோல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் - எனினும், இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது, பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது, ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் - அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள்.  (குர்ஆன்  61:14)

3) யூதர்களின் சூழ்ச்சி மற்றும் அல்லாஹ்வின் சூழ்ச்சி

இயேசுவை கொலை செய்ய யூதர்கள் சதி செய்ததாகவும்,அதனை முறியடிக்க அல்லாஹ்வும் சதி செய்ததாக குர்ஆன் கூறுகிறது.

(ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள். அல்லாஹ்வும் சதி செய்தான்;. தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.  (குர்ஆன்  3:54)

மேலும், இயேசுவை சிலுவையில் அறையப்பட்ட பிறகோ, அல்லது அதற்கு முன்பாகவோ அல்லாஹ் இயேசுவை எடுத்துக்கொண்டாராம். ஆனால், யாருக்கும் தெரியா வண்ணம், இயேசுவின் இடத்தில் இன்னொருவன் ஒப்பாக்கப்பட்டானாம். அல்லாஹ் செய்த இந்த சூழ்ச்சி யாருக்கும் தெரியவில்லை, எல்லாரும் "இயேசு தான் சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்" என்று எண்ணிக்கொண்டனர்.

இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. (குர்ஆன்  4:175)

4) அல்லாஹ்வின் சூழ்ச்சியின் விளைவு?

தம்பி இதுவரை உனக்கு வசனங்களை மேற்கோள் காட்டினேன். இப்போது அல்லாஹ் செய்த சூழ்ச்சி எவ்வளவு பெரிய தவறாக மாறியுள்ளது என்பதை உனக்கு விளக்குகிறேன்.

இயேசுவை சிலுவைக்கு அழைத்துக்கொண்டு செல்லும் போது, அல்லாஹ்  ஆள்மாறாட்டம் செய்து, எல்லாருடைய கண்களில் மண்ணை வாரிப்போட்டு (அதாவது ஏமாற்றி) வேறு ஒரு நபரை சிலுவையில் அறையும் படி செய்துவிட்டார். இதனை பார்த்துக்கொண்டு இருந்த மக்கள் அனைவரும் இயேசு சிலுவையில் அறையுண்டு மரித்துவிட்டார் என்று நினைத்துக்கொண்டனர். ஆனால், 600 ஆண்டுகளுக்கு பின்பு அரேபிய பாலைவனத்தில் எழும்பிய முஹம்மது மூலமாக "இல்லை... இல்லை... மரித்தது இயேசு அல்ல, அவர் வேறு ஒரு நபர், அல்லாஹ் சதி செய்து, யூதர்களின் சதியை முறியடித்துவிட்டார்" என்று குர்ஆனில் எழுதிவிட்டார். கிட்டத்தட்ட எல்லா இஸ்லாமிய அறிஞர்களும் சிலுவை மரணம் பற்றிச் சொல்லும் சுருக்கம் இது தான்.

இப்படி சதி செய்த அல்லாஹ், ஐந்து வகையான மக்களை ஏமாற்றியுள்ளார்:

1) இயேசுவின் சீடர்கள்
2) இயேசுவின் தாய்
3) யூத மத தலைவர்கள்
4) ரோம அரசின் சேவகர்கள்
5) எருசலேமில் வாழ்ந்த பொதுமக்கள்.

யூத மத தலைவர்களையும், ரோம அரசின் சேவர்களையும் அல்லாஹ் ஏமாற்றினார், அதாவது தாங்கள் கொன்றது இயேசுவை என்று அவர்கள் நினைத்துக்கொள்ளும் அளவிற்கு ஏதோ மாயம் செய்து சதி செய்தார். எதிரிகளின் சதியை முறியடிப்பது சரியே.

ஆனால், இயேசுவின் சீடர்களையும், இயேசுவும் தாயையும் ஏமாற்றியது எந்த விதத்தில் நியாயமானது?

நாங்கள் உன் வேதத்தையும், தூதரையும் நம்புகிறோம், எங்களை சத்தியத்திற்கு சாட்சி சொல்பவர்களாக செய்வாயாக என்று சீடர்கள் அல்லாஹ்விடம் வேண்டினார்கள்:

"எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்;. எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!" (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்.)  (குர்ஆன் 3:53)

ஆனால் அல்லாஹ் செய்தது என்ன? சீடர்களை அல்லாஹ் ஏமாற்றினார், இயேசு தான் சிலுவையில் மரித்தார் என்று சீடர்கள் நினைத்தார்கள். இயேசு சிலுவையில் அறையப்படும் போது பார்த்துக்கொண்டு இருந்த பொதுமக்களையும் அல்லாஹ் ஏமாற்றியுள்ளார்.

சரி, இப்படி அனைத்து மக்களையும் ஏமாற்றிய அல்லாஹ் வெற்றி பெற்றாரா என்று பார்த்தால், அதுவும் இல்லை, இன்று உலகின் பெரிய மார்க்கமாக கிறிஸ்தவம் திகழ்கிறது.  அல்லாஹ் செய்த தவறினால் கிறிஸ்தவம் உருவானது என்றுச் சொல்லலாம் அல்லவா?

யெகோவா தேவனின் வெற்றி, அல்லாஹ்வின் தோல்வி:

குறைந்தபட்சம், இயேசுவின் தாய் மற்றும் சீடர்களுக்கு அல்லாஹ் தன் திட்டத்தை அறிவித்து இருந்திருந்தால், சீடர்கள் தங்கள் வேலையை பார்த்து சென்று இருப்பார்கள். சீடர்களிடம் மறைத்தபடியால், அவர்கள் இயேசு மரித்ததாக நினைக்க,  மறுபடியும் இயேசு மூன்றாம் நாள் உயிரோடு எழுந்ததாகவும், சீடர்களிடம் பேசியதாகவும் பைபிள் கூறுகிறது, இதோ இன்று மிகப்பெரிய மார்க்கமாக கிறிஸ்தவம் திகழ்கிறது. கிறிஸ்தவத்திற்கு அடித்தளம் அமைத்து எது? அல்லாஹ்வின் அறியாமையாகும்.

எதிர் காலத்தில் என்ன நடக்கும் என்று அல்லாஹ்விற்கு தெரிந்து இருந்தால், சீடர்களுக்கு அன்றே உண்மையை கூறியிருப்பார், ஆனால், அல்லாஹ்விற்கு எதிர்காலம் தெரியவில்லை, ஆகையால் சும்மா இருந்தார், 600 ஆண்டுகள் சும்மா இருந்தார். இயேசு சிலுவையில் அறையப்பட்டு 50வது நாளிலிருந்து சீடர்கள் இயேசுவின் சுவிசேஷத்தை பரப்ப ஆரம்பித்துவிட்டார், அல்லாஹ்வின் சதி, மிகப்பெரிய கெடுதியாக இஸ்லாமுக்கு மாறிவிட்டது.

தம்பி, இப்படிப்பட்ட அல்லாஹ்வை எப்படி நம்புவது?

• நாங்கள் முஸ்லிம்கள் என்றும், நல்வழிகாட்டு என்றும் வேண்டிக்கொண்ட சீடர்களையே அல்லாஹ் ஏமாற்றினால், உன்னை இன்று அல்லாஹ் ஏமாற்றமாட்டார் என்று என்ன நிச்சயம்?

•  உலக பெண்களில் சிறந்த பெண்மணி என்று இயேசுவின் தாயைப்பற்றி கூறிவிட்டு, அவரையும் ஏமாற்றிவிட்டார், தன் மகனை அல்லாஹ் தன்னிடம் எடுத்துக்கொண்டார் என்று ஏன் அவரிடம் கூறவில்லை? கூறியிருந்தால், அவர் சீடர்களை தடுத்து இருந்திருப்பார்களே?

• குர்ஆனின் படி முதலாம் நூற்றாண்டு முஸ்லிம்களை (இயேசுவின் சீடர்கள், மரியாள் இன்னும் நம்பிக்கை கொண்ட இதர மக்கள்) அல்லாஹ் வஞ்சித்தார்.  அப்படியானால், 21ம் நூற்றாண்டில் வாழும் உன்னை அல்லாஹ் ஏமாற்றமாட்டார் என்று என்ன நிச்சயம் தம்பி?

இதுவரை நான் மேலே கூறிய விவரங்கள், பிரச்சனைகள் அனைத்தும் குர்ஆன் சொல்வது உண்மை என்று நினைத்துக்கொண்டால் வரும் பிரச்சனையாகும். ஆனால் பைபிளின் படி பார்த்தால் யெகோவா தேவன் தன் திட்டத்தில் முழுவதுமாக வெற்றிப் பெற்றார், அல்லாஹ் தோற்றுப்போனார்.

கொஞ்சம் அதிகமாகவே எழுதிவிட்டேன், அடுத்த கடிதத்தில் உன்னை சந்திக்கிறேன், உன் கேள்விகள் எதுவாக இருந்தாலும் எனக்கு எழுத மறக்காதே

இப்படிக்கு, உன் சகோதரன்
தமிழ் கிறிஸ்தவன்.

கருத்துகள் இல்லை: