ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

செவ்வாய், 29 அக்டோபர், 2019

'இஸ்ரேல் மற்றும் அரேபிய' நபிகளை மட்டும் ஏன் குர்‍ஆன் குறிப்பிடுகின்றது? இரகசியம் என்ன?

உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் தன் இறைத்தூதர்களை அனுப்பியதாக அல்லாஹ் குர்‍ஆனில் சுட்டிக்காட்டுகின்றான். ஒரு நாட்டு மக்களின் தீய வாழ்க்கையினால், அந்த நாட்டை அழிப்பதற்கு முன்பாக, தன் இறைத்தூதரை அனுப்பி அவர்களை முதலாவது எச்சரிப்பதாக அல்லாஹ் கூறுகின்றான்.

குர்‍ஆன் வசனங்களை படிக்கவும்:  

10:47. ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாமனுப்பிய இறை) தூதர் உண்டு; அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும் - அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.

16:36. மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், "அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்" என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள்.

17:15. எவன் நேர்வழியில் செல்கின்றானோ, அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேர் வழியில் செல்கிறான்; எவன் வழி கேட்டில் செல்கின்றானோ, அவன் தனக்கே கேடு செய்து கொண்டான்; (நிச்சயமாக) ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்கமாட்டான்; (நம்) தூதரை அனுப்பாத வரையில் (எவரையும்) நாம் வேதனை செய்வதில்லை.

 

ஆனால், சிலருடைய வரலாற்றை மட்டுமே முஹம்மதுவிற்கு குர்‍ஆனில் வெளிப்படுத்தியதாக அல்லாஹ் கீழ்கண்ட  வசனத்தில் கூறுகின்றான்:

40:78. திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம்; அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம்; இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர்; (இவ்விருசாராரில்) எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அத்தாட்சியையும் கொண்டு வருவதற்கு (அதிகாரமும்) இல்லை; ஆகவே அல்லாஹ்வுடைய கட்டளைவரும் போது, (அனைவருக்கும்) நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும்; அன்றியும், அந்த இடத்தில் பொய்யர்கள் தாம் நஷ்டமடைவார்கள். 

முஹம்மதுவிற்கு சில நபிகளின் வரலாறுகளை மட்டுமே அல்லாஹ் வெளிப்படுத்தியதில் தவறேதுமில்லை. ஆனால், அந்த சிலர் ஏன் ஒரு நாட்டுக்கு சம்மந்தப்பட்டு மட்டுமே இருக்கிறார்கள் என்பது தான் கேள்வி.

ஏன் இஸ்ரேல் நபிகள் பற்றி மட்டுமே குர்‍ஆன் சொல்கிறது?

குர்‍ஆனில் 25 நபிகள் (தீர்க்கதரிசிகள்) பற்றி சொல்லப்பட்டுள்ளது. இதில் முஹம்மதுவும் ஒருவராவார். ஒவ்வொரு நாட்டுக்கும்  அவரவர் மொழிகளில் பேசும் நபியை அல்லாஹ் அனுப்பியிருந்தால், உலகம் உண்டானது முதல் (ஆதாம் முதல்), பல ஆயிர நபிகளை அனுப்பியிருக்கவேண்டும். 

சில முஸ்லிம் அறிஞர்களின் கூற்றுப்படி அல்லாஹ் 1,24,000 நபிகளை அனுப்பியிருக்கின்றானாம். இவர்களில் கடைசியாக வந்தவர் முஹம்மது ஆவார்.

நாம் கேட்கும் கேள்வி மிகவும் சுலபமானது, ஆனால் சுவையானது. ஏன் அல்லாஹ் இஸ்ரேல் நாட்டுக்கு அனுப்பிய நபிகள் பற்றி மட்டுமே குர்‍ஆனில் சொல்கின்றான்?

கீழ்கண்ட படத்தை பார்க்கவும்.

மேலே உள்ள படத்தில்  இஸ்ரேல் நாடு உள்ள இடத்திலேயும், அரேபிய தீபகர்பம் உள்ள இடத்திலேயும் இரண்டு வட்டமிட்டுள்ளேன். இஸ்ரேல் நாட்டுக்காக அனுப்பிய அனேக நபிகளை குர்‍ஆனில் அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான், அதே போல அரேபியாவிற்கு அனுப்பிய நபிகள் இருவரை மட்டுமே குறிப்பிடுகின்றான். சாலிஹ் என்பவர் முஹம்மதுவிற்கு முன்பு தமூத்(ஸமூத்) மக்களுக்காக அனுப்பப்பட்டவர் என்று முஸ்லிம்கள் கருதுகிறார்கள். இது பெட்ரா என்ற பகுதியை குறிக்கும். ஜோர்டான் நிலப்பரப்பில் உள்ளவர்களுக்காக சாலிஹ் அனுப்பப்பட்டார் என்று சொல்லப்படுகின்றது.

முஹம்மது வருவதற்கு முன்பாகவே (கி.பி. 610) அதாவது ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பாகவே பல நாடுகள் இருந்துள்ளன‌. 

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இருந்த நாடுகளின் பட்டியல்: https://en.wikipedia.org/wiki/List_of_political_entities_in_the_7th_century

கி.மு. ஏழாம் நூற்றாண்டில் இருந்த நாடுகளின் பட்டியல்: https://en.wikipedia.org/wiki/List_of_political_entities_in_the_7th_century_BC

ஏழாம்(கி.மு & கி.பி) நூற்றாண்டில் இருந்த நாடுகளின் பட்டியலை நான் இங்கு  கொடுத்துள்ளேன். கவனிக்கவும்:  கி.பி. 7ம் நூற்றாண்டிலேயே 100க்கும் அதிகமான நாடுகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மேலே கொடுக்கப்பட்ட விக்கிபீடியா  தொடுப்பில் சென்று ஒவ்வொரு நூற்றாண்டிலும் இருந்த நாடுகள் பற்றியும் இன்னும் அதிகமாக அறிந்துக்கொள்ளலாம்.

 முஸ்லிம்களுக்கு சில கேள்விகள்:

1) குர்‍ஆனில் வெறும் 25 நபிமார்களின் பெயர்களை மட்டும் அல்லாஹ் சொல்வதற்கான காரணம் என்ன?

2) இது  அல்லாஹ்வின் விருப்பம் தான், ஆனால், சில சிக்கல்கள் இந்த விவரங்களில் தெரிகின்றது, அதற்காகத் தான் இந்த கேள்வி?

3) ஆசிய நாடுகளான இஸ்ரேல் அரேபியா விடுத்து ஐரோப்பா, ஆசியா, ஆஃப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள நாடுகளுக்கு  அனுப்பிய ஒரு நபியின் பெயரையாவது குர்‍ஆன் குறிப்பிடாதது ஏன்?

4) முக்கியமாக சைனா, இந்திய நிலப்பரப்பு, மற்றும் ஆஃப்ரிக்கா கண்டங்களில் மக்கள் கி.மு. காலத்திலிருந்தே வாழ்ந்து வந்தனர். இந்த கண்டங்களில் இருந்த  நூற்றுக்கணக்கான நாடுகளுக்கும், இனங்களுக்கும், மொழிகளுக்கும் அனுப்பிய நபிகளில், ஒரு நபியின் பெயரையும் குறிப்பிடாமல் விட்டது, சந்தேகத்தை கிளப்புகிறதல்லவா?

5) இந்தியாவிலிருந்தும், சைனாவிலிருந்தும் ஒரு சிலரின் பெயர்களை குர்‍ஆனில் குறிப்பிட்டு இருந்திருந்தால், இன்று அதனை சரிப்பார்த்து, உண்மையாகவே அப்படிப்பட்ட நபியை அல்லாஹ் அனுப்பியது  உண்மை என்று ஆராய்ச்சி செய்து அறியும் மக்களுக்கு அல்லாஹ்வின் மீது  நம்பிக்கை வரும்.

6) இஸ்ரேல் நபிகள் பற்றி மட்டும் ஏன் அல்லாஹ் இவ்வளவு அக்கரைக்கொண்டான்? கிட்டத்தட்ட 23 நபிகள் இஸ்ரேல் நாடு அல்லது மத்திய கிழக்கு நாடுகளின் நபிகள் பற்றி மட்டுமே குர்‍ஆன் சொல்கிறது என்று எண்ணும் போது, ஏதோ ஒரு  பிரச்சனை குர்‍ஆன் ஆக்கியோனுக்கு உள்ளது என்பதை அறியமுடிகின்றது.

7) ஆதாம் முதற்கொண்டு, ஆபிரகாம் வரைக்கும் இஸ்ரேல் நாட்டு நபிகள் அல்ல என்று முஸ்லிம்கள் சொல்லக்கூடும். உண்மை தான், ஆனால், பைபிளில் சொல்லப்பட்ட இவர்கள் பற்றி மட்டுமே அல்லாஹ் ஏன் சொல்லவேண்டும்? பைபிளுக்கு வெளியே உள்ள நபிகள் பற்றி சொல்லாதது ஏன்? என்பது தான் மிகப்பெரிய சவால்?

 காரணம் இது தான்: முஹம்மதுவிற்கு எது தெரியுமோ, அது தான் அல்லாஹ்விற்கும் தெரியும்!

8) கல்விக் கற்றவர்கள் இதைப் பற்றி சிறிது சிந்தித்துப் பாருங்கள். முஹம்மது மத்திய கிழக்கு நாடுகளில் வியாபாரத்திற்காக பயணம் செய்தார். அதாவது அரேபியாவின் மேற்பகுதி நாடுகளாகிய இஸ்ரேல், பெட்ரா, ஜோர்டான், சிரியா மற்றும் எகிப்து போன்ற நாடுகளில் பயணம் செய்தார். இந்த பகுதியில் தான் கற்ற விவரங்கள் (நபிகள்) பற்றி மட்டுமே குர்‍ஆன் சொல்கிறது! இதன் அர்த்தமென்ன? முஹம்மதுவிற்கு தெரிந்த நபிகள் பற்றி மட்டுமே குர்‍ஆன் குறிப்பிடுகின்றது. குர்‍ஆன் ஆக்கியோன் அல்லாஹ்வாக இருந்திருந்தால், மற்ற நாடுகளுக்கு தான் அனுப்பிய நபிகள் பற்றி சில விவரங்களையாவது கொடுத்திருந்திருப்பான் அல்லவா?

9) ஒருவேளை முஹம்மது இந்திய நாடுகளில் வியாபாரத்திற்காக பல மாதங்கள் தங்கி இருந்திருந்தால், இங்கு வாய்வழியாக சொல்லப்படும் கதைகளை, இலக்கியங்களை (இராமாயணம், மஹாபாரதம், தமிழ் இலக்கியங்கள், திருக்குறள் . . .) கற்றுக்கொண்டு சென்று இருந்திருப்பார். அதன் பிறகு குர்‍ஆனில் வசனங்களை இறக்கும் போது, நிச்சயம் ஒரு  சில  இந்திய ஆன்மீகவாதிகளின் பெயர்கள் குர்‍ஆனில் இறக்குமதியாகியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதில் முதலிடத்தை திருக்குறளும், திருவள்ளுவரும் பெற்று இருப்பார்.

10) உண்மையாகவே, அல்லாஹ் தான் குர்‍ஆனின் ஆக்கியோன் என்றால், ஏன் முஹம்மது பயணிக்காத நாடுகளிலிருந்து ஒரு உதாரணத்தையும், நபியின் பெயரையும் குறிப்பிடவில்லை என்பது கேள்வி. அல்லாஹ்விற்கு அப்படி என்ன யூத கிறிஸ்தவ நபிகள் மீது அவ்வளவு அன்பு! அவர்களைப் பற்றி மட்டுமே குறிப்பிட காரணம் என்ன? 23 எங்கே 1,24,000 நபிகள் எங்கே?  யூத கிறிஸ்தவ நபிகள் இந்த 1,24,000 நபிகளில் சிறந்தவர்களோ! அவர்களிடத்தில்  அல்லாஹ் செய்த அற்புதங்கள், வேறு எங்கும் செய்யவில்லையோ!

11) முஹம்மது சைனாவிற்குச் சென்று வியாபாரம் செய்திருந்தால், அங்கு பல மாதங்கள் தங்கியிருந்தால், பல  சைன நபிகள் பற்றி இன்று குர்‍ஆனில் நாம் கண்டு இருந்திருப்போம்.

உண்மை என்ன?

12) ஒரு பாமர அரேபிய மனிதன், அக்கால படித்த உலக நாடுகளிடம் இருந்த நூல்களை சுயமாக படிக்காத மனிதன், எகிப்தின் பிரமிடுகள், மற்றும் அவர்கள் தங்கள் அரசர்களின் உடல்களை அடக்கம் செய்யும் முறைகள் (மம்மிகள்) பற்றிய பொதுவான அறிவை காதுவழியாக கேட்ட ஒரு சராசரி மனிதனுக்கு என்ன தெரியுமோ, அது தான் குர்‍ஆனில் பதியப்பட்டுள்ளது. அக்காலத்தில் விஞ்ஞானம் பற்றி, தன் நாட்டைச் சுற்றியுள்ள கதைகள் பற்றி, மற்ற மார்க்க கதைகள் பற்றி ஒரு சராசரி வியாபாரிக்கு எவ்வளவு தெரிந்திருக்க வாய்ப்பு இருக்குமோ, அதே அளவு தான் முஹம்மதுவிற்கும் தெரிந்திருக்கிறது என்பது தான் உண்மை. 

13) குர்‍ஆன் ஆக்கியோனுக்கு பைபிளின் நிகழ்ச்சிகள் காதுவழியாக கேட்ட அனுபவம் உண்டு, அக்கால பொது அறிவு கொஞ்சம் தெரியும், ஆகையால் தனக்கு தெரிந்த 25 நபிகள் பற்றி மட்டுமே குர்‍ஆனில் குறிப்பிட்டுள்ளான் என்பது தான் உண்மை.

14) உலக நாடுகள் ஒவ்வொன்றிற்கும், ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு காலத்துக்கும் நபிகளை அனுப்பினேன் என்று குர்‍ஆன் சொன்னாலும், பைபிளை ஒட்டியே, இஸ்ரேல் நாட்டை ஒட்டியே குர்‍ஆன் நகர்கிறது. குர்‍ஆனின் ஆணிவேர் பைபிளின் நிகழ்ச்சிகள் மீது தான் பெரும்பான்மையாக சார்ந்துள்ளது.  நபிகள் பற்றி அல்லாஹ்விற்கு எவ்வளவு தெரியும்? என்று கேள்வி கேட்டால், முஹம்மதுவிற்கு எவ்வளவு தெரியுமோ, அவ்வளவு தான் அல்லாஹ்விற்கும் தெரியும் என்பது தான் பதில்.

ஒரு சோதனை:

இன்று ஒரு கிராமத்தில் உள்ள 40 வயது நிரம்பிய ஒரு பாமர படிக்காத‌ மனிதனை எடுத்துக்கொள்ளுங்கள். அவனுக்கு தொலைக்காட்சியின் மூலமாக, சினிமா மூலமாக சில பொது அறிவு கிடைத்திருக்கும்.   அந்த மனிதன் பயணம் செய்த சில  பட்டணங்கள், ஊர்கள் பற்றிய அறிவு அவனுக்கு  இருக்கும். நிச்சயமாக அவனுக்கு சைனா பற்றியோ, அமேரிக்கா பற்றியோ, இதர ஐரோப்பிய நாடுகள் பற்றியோ, விஞ்ஞானம் பற்றியோ, பொருளாதாரம் பற்றிய ஆழ்ந்த ஆய்வு ஞானம் அவனுக்கு இருக்காது. இப்படிப்பட்டவர் ஒரு புத்தகத்தை பெரிய ஞானிபோல பாவணை காட்டிக்கொண்டு எழுதினால் எப்படி இருக்கும்? அதில் அவருக்கு தெரிந்த விவரங்கள் மட்டுமே இருக்குமில்லையா! இது போலத்தான், முஹம்மதுவிற்கு தெரிந்த விவரங்கள் மட்டுமே குர்‍ஆனில் இருக்கும்.

முஹம்மதுவிற்கு தெரிந்த 24 நபிகள் பற்றி மட்டுமே குர்‍ஆனில் இருக்கும்! இதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. 'அற்ப அறிவு அல்லற் கிடம்' என்ற பழமொழியை நீங்கள் கேட்டு இருக்கின்றீர்களா? முஹம்மது படிப்பறிவில்லாதவர், அவர் எப்படி விஞ்ஞானத்தை பேசமுடியும்? அவர் எப்படி எதிர்காலத்தில் வருவதை முன்னறிவிக்கமுடியும்? என்று முஸ்லிம்கள் சொல்வார்கள். கடந்த காலத்தை சரியாக சொல்லாத அல்லாஹ், எப்படி முஹம்மதுவிற்கு எதிர்காலத்தைப் பற்றி அறிவிக்கமுடியும்? கு‍ர்‍ஆனில் விஞ்ஞானம் உண்டு என்று சொல்வதெல்லாம், வெறும் வெத்துப்பேச்சு. குர்‍ஆனின் விஞ்ஞானம் பற்றி கேள்விகள் இருந்தால், என் மெயிலுக்கு கேள்விகளை அனுப்பவும்.


கி.பி 30 (இயேசு) முதல் கி.பி. 650 வரை (குர்‍ஆன் தொகுக்கப்படுதல் வரை) மைல்கல் பயணம்

இப்றாஹீம் முதல் முஹம்மதுவை காலவரிசை

கிறிஸ்தவ சகோதரர்களிடம் சிலரிடம் பேசும் போது, குர்‍ஆன் பைபிளுக்கு முந்தையது என்று அவர்கள் சொல்வதை கேட்டிருக்கிறேன். உங்களுக்கு யார் இப்படி சொன்னது என்று கேட்டபோது, தங்களுடைய முஸ்லிம் நண்பர்கள் சொன்னார்கள் என்று பதில் அளித்தார்கள். உண்மையில் கால வரிசை விவரங்கள் தெரியாதவர்களிடம் முஸ்லிம்கள் இப்படிப்பட்ட பொய்களை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

இயேசு முதல் முஹம்மதுவரை ஒரு கால வரிசை படத்தை இங்கு கொடுத்துள்ளேன். இந்த காலக்கட்டத்தில்  நடந்த  முக்கியமான நிகழ்ச்சிகளை சுருக்கமாக கொடுத்துள்ளேன்.

 

இந்த வரைபடத்தை கொஞ்சம் பின்னுக்கு கொண்டுச்சென்றால், இன்னும் தெளிவாக காலவரிசை புரியும். எனவே ஆபிரகாம் முதல் முஹம்மது காலம் வரை கீழ்கண்ட  வரைபடத்தில் காணலாம். ஆண்டுகள் ரவுண்ட் செய்யப்பட்டுள்ளது.

இனி முஸ்லிம்களிடம் பேசும் போது, இந்த காலவரிசை ஆண்டுகளை மனதில் வைத்துக்கொண்டு பேசலாம்.


இதர படமும் பாடமும்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: https://www.answering-islam.org/tamil/images_lessons/ad30_to_ad650.html

சனி, 26 அக்டோபர், 2019

இஸ்லாம் வினாடி வினா - 4 - இஸ்லாம் அறிமுகம் Islam Quiz 4 - (Basics of Islam)

இஸ்லாமை அறிவோம் வாருங்கள்


இந்த வினாடி வினாவில் 10 கேள்விகள் கொடுக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள் கொடுக்கப்பட்டு இருக்கும் (A, B, C, D). அனைத்து கேள்விகளுக்கும் உங்கள் பதிலை தெரிவு செய்து (A or B or C or Dஐ க்ளிக் செய்து), சப்மிட் பட்டனை அழுத்தவும். நீங்கள் கொடுத்த பதில்களை சரிபார்த்து, முடிவுகள் இப்பக்கத்தின் கடைசியில் கொடுக்கப்படும்.

1) இஸ்லாமில் இரத்துசெய்தல்(Abrogation) என்றால் என்ன?




2) பனி இஸ்ராயீல் (Bani Israel) என்பதில் பொருள் என்ன?




3) கீழகண்ட நான்கு பெண்களில் முஹம்மதுவின் மகள் யார்?




4) கீழ்கண்ட அறிஞர்களில் ஒருவர் நம் தமிழ் நாட்டு “இஸ்லாமிய அறிஞர்” ஆவார், அவர் யார்? (கவனிக்கவும்: கிறிஸ்தவ இஸ்லாமிய அறிஞர் அல்ல)




5) குர்‍ஆன் என்ற வார்த்தையின் அர்த்தமென்ன?





6) குர்‍ஆன் ஒரு விஷயத்தில் பைபிளோடு முரண்படுமானால், அந்த விஷயத்தை நிருபிக்கும் கடமை யாருக்கு இருக்கிறது?




7) குர்‍ஆன் 9:40ன் படி, மக்காவிலிருந்து மதினாவிற்கு ஹிஜ்ரா செய்யும் போது, குகையில் முஹம்மதுவோடு இருந்ததாகச் சொல்லப்படும் அந்த தோழர் யார்? (இந்த வசனத்தை கீழே படிக்கவும்)

குர்‍ஆன் 9:40. (நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யா விட்டால், (அவருக்கு யாதொரு இழப்புமில்லை;) நிராகரிப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றியபோது நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான்; குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது, (நம் தூதர்) தம் தோழரிடம், “கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார். அப்போது அவர் மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைத்தான்; மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான்; நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான்; ஏனெனில் அல்லாஹ்வின் வாக்குத்தான் (எப்போதும்) மேலோங்கும் - அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)




8) குர்‍ஆன் 2:98ம் வசனத்தில், பைபிளில் வரும் இரண்டு தேவதூதர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது, அவர்கள் யார்? (இந்த வசனத்தை கீழே படிக்கவும்)

குர்‍ஆன் 2:98. எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)




9) இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் சம்மந்தப்பட்ட கீழ்கண்ட மொழிகளில் ஒரு மொழி வித்தியாசமாக உள்ளது, அது எது?




10) கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் குர்‍ஆனை வைத்திருப்பது, படிப்பது தவறா?





இந்த வினாடி வினாவை மறுபடியும் எழுத, கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.


இஸ்லாம் வினாடி வினா - 3 - இஸ்லாம் அறிமுகம் Islam Quiz 3 - (Basics of Islam)

இஸ்லாமை அறிவோம் வாருங்கள்

இந்த வினாடி வினாவில் 10 கேள்விகள் கொடுக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள் கொடுக்கப்பட்டு இருக்கும் (A, B, C, D). அனைத்து கேள்விகளுக்கும் உங்கள் பதிலை தெரிவு செய்து (A or B or C or Dஐ க்ளிக் செய்து), சப்மிட் பட்டனை அழுத்தவும். நீங்கள் கொடுத்த பதில்களை சரிபார்த்து, முடிவுகள் இப்பக்கத்தின் கடைசியில் கொடுக்கப்படும்.

1) குர்‍ஆனில் எந்த நபியின்(தீர்க்கதரிசியின்) நிகழ்ச்சிகள் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது?




2) அரபி மொழி தெய்வ/இறை மொழியா?


3) பத்ரூ, உஹூத் என்பவைகள் என்ன?




4) குர்‍ஆனில் வரும் “இன்ஜில், ஜபூர் மற்றும் தோறா” என்ற நூல்கள் வரிசைப்படி பைபிளிலிருந்து குறிப்பிடவேண்டுமென்றால் அவைகள்:




5) கீழ்கண்டவைகளில் தவறான விவரத்தை அடையாளப்படுத்தவும்.





6) மக்காவில் முதல் 12 ஆண்டுகள் முஹம்மதுவும் முஸ்லிம்களும் எந்த நகரத்தை நோக்கி (கிப்லா) தொழுதார்கள்?




7) முஹம்மது ஆபிரகாமின் மகனாகிய இஸ்மாயீலின்(இஸ்மவேலின்) சந்ததியா?


8) முஹம்மது மக்காவில் வாழ்ந்தவர்களில் எந்த சமுதாயத்திலிருந்து வந்தார்?




9) குர்‍ஆனில் வரும் "இயேசு கலிமண் பறவைக்கு உயிர் கொடுக்கும் அற்புதம்" பைபிளில் இல்லை! ஏன்?




10) இஸ்லாமின் படி அல்லாஹ்விற்காக கட்டப்பட்ட முதலாவது மஸ்ஜித்(மசூதி, வணக்கஸ்தலம்) எது?





இந்த வினாடி வினாவை மறுபடியும் எழுத, கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.


வெள்ளி, 25 அக்டோபர், 2019

இஸ்லாம் வினாடி வினா - 2 - இஸ்லாம் அறிமுகம் - Islam Quiz 2 - (Basics of Islam)

இஸ்லாமை அறிவோம் வாருங்கள்

இந்த வினாடி வினாவில் 10 கேள்விகள் கொடுக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள் கொடுக்கப்பட்டு இருக்கும் (A, B, C, D). அனைத்து கேள்விகளுக்கும் உங்கள் பதிலை தெரிவு செய்து (A or B or C or Dஐ க்ளிக் செய்து), சப்மிட் பட்டனை அழுத்தவும். நீங்கள் கொடுத்த பதில்களை சரிபார்த்து, முடிவுகள் இப்பக்கத்தின் கடைசியில் கொடுக்கப்படும்.

1) ஹராம் மற்றும் ஹலால் என்றால் என்ன?




2) அஸ்ஸலாமு அலைக்கும் என்பதில் பொருள் என்ன?




3) இஸ்லாமின் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது புனித நகரங்கள் வரிசைப்படி எவை?




4) பைபிளின் படி முஹம்மது யார்?




5) பைபிளின் தேவன் யெகோவாவும், குர்‍ஆனின் இறைவன் அல்லாஹ்வையும் ஒப்பிட்டால்?


6) இஸ்லாமின் படி வஹி (Wahi) என்றால் என்ன?




7) இஸ்லாமின் படி, "குர்‍ஆன் மற்றும் ஹதீஸ்கள்" இவ்விரண்டிற்கும் வித்தியாசம் என்ன?




8) பைபிளின் படி கிறிஸ்தவர்கள் முஹம்மதுவை ஒரு நபி என்று நம்பலாமா?




9) "லா யிலாஹா இல்லல்லாஹ்" என்றால் அர்த்தமென்ன?




10) முஸ்லிம்களும் இயேசுவை விசுவாசிக்கிறார்களே, அதனால் அவர்களும் இரட்சிக்கப்பட்டவர்களா?





இந்த வினாடி வினாவை மறுபடியும் எழுத, கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.


இஸ்லாம் வினாடி வினா - 1 - இஸ்லாம் அறிமுகம் Islam Quiz 1 (Basics of Islam)

இஸ்லாமை அறிவோம் வாருங்கள்

இந்த வினாடி வினாவில் 10 கேள்விகள் கொடுக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள் கொடுக்கப்பட்டு இருக்கும் (A, B, C, D). அனைத்து கேள்விகளுக்கும் உங்கள் பதிலை தெரிவு செய்து (A or B or C or Dஐ க்ளிக் செய்து), சப்மிட் பட்டனை அழுத்தவும். நீங்கள் கொடுத்த பதில்களை சரிபார்த்து, முடிவுகள் இப்பக்கத்தின் கடைசியில் கொடுக்கப்படும்.

1) இஸ்லாமிய நபி முஹம்மது அவர்கள் பிறந்த ஊர் எது?




2) ஹிஜ்ரி என்ற சொல், எந்த நிகழ்ச்சியை குறிக்கிறது?




3) குர்‍ஆனில் பெயர் குறிப்பிடப்பட்ட ஒரே பெண்மணி யார்?




4) "அல்லாஹு அக்பர்" என்றால் என்ன பொருள்?




5) கி.பி. 610, கி.பி. 570 கி.பி 632 - இவ்வருடங்களில் நடந்த நிகழ்ச்சிகளை அடையாளப்படுத்துக‌?




6) "அல் ஃபாத்திஹா" - இது குர்‍ஆனின் எத்தனையாவது அத்தியாயம் (ஸூரா)?




7) இஸ்லாமின் படி, குர்‍ஆனின் முதல் வெளிப்பாடு எந்த குகையில் முஹம்மதுவிற்கு வந்தது?




8) முஹம்மது எந்த வயதில் நபியாக நியமிக்கப்பட்டார் என்று இஸ்லாம் சொல்கிறது?




9) குர்‍ஆனில் அதிகமான வசனங்கள் கொண்ட பெரிய அத்தியாயம் எது?




10) இஸ்லாமின் தூண்கள் (கடமைகள்) எத்தனை?





இந்த வினாடி வினாவை மறுபடியும் எழுத, கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.

வியாழன், 24 அக்டோபர், 2019

கோபால் அல்லாஹ்வின் நபியா? இந்த 40 கேள்விகளுக்கு அவர் பதில் அளிப்பாரா?

நேற்று ஒரு வீடியோவை நான் யுடியூபில் பார்த்தேன். அதில் கோபால் என்ற பெயரில் ஒருவர் முஸ்லிம்கள் மீது கோபத்தை கொட்டியிருந்ததை பார்த்தேன்.

அந்த வீடியோ இது தான்: https://www.youtube.com/watch?v=qTMrcMnIYdY 

(கோபால் நபி (அலை ) அவர்களின் ஆவேச பேச்சு!!!?? காப்பி பேஸ்ட் புத்தகம் குர்ஆன்)

உடனே இன்னொரு வீடியோவை தேடிப்பார்த்தேன், அதுவும் கிடைத்தது. அதாவது இந்த கோபால் என்பவர் எப்படி இஸ்லாமை தழுவினார் என்ற வீடியோவை தேடி அதையும் பார்த்தேன்.

அதன் தொடுப்பு இது தான்: https://www.youtube.com/watch?v=0QOlsA0ujG4 

(இஸ்லாத்தை ஏற்ற பாதிரியாருக்கு கலிமா சொல்லிக்கொடுக்கும் பீஜே)

இவர் ஒரு முன்னாள் கிறிஸ்தவர், இவரிடம் நான் கிறிஸ்தவம் சம்மந்தப்பட்ட கேள்விகளை கேட்கப்போவதில்லை. இதற்காக வேறு ஒரு நாள் முகூர்த்தம் வைத்துக்கொள்ளலாம்.

இவர் தற்போது தன்னை முஸ்லிம் என்று அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார், மேலும் முஸ்லிம்களை திட்டுகின்றார், முஹம்மதுவை அவன்/இவன் என்று பேசுகின்றார், குர்‍ஆன் இறைச்செய்தி அல்ல என்றும், முஹம்மதுவையும், குர்‍ஆனையும் பின்பற்றினால் 'முஸ்லிம்களே நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள்' என்கிறார். 

நான் இவரை 21ம் நூற்றாண்டு முஹம்மது போன்று காண்கின்றேன். அதாவது முஹம்மது எப்படி தம்மை நபி என்றுச் சொல்லிக்கொண்டாரோ, அதே பாணியில் இவரும் தன்னை நபி என்றுச் சொல்லியுள்ளார்.  அல்லாஹ்வின் இறைச்செய்தியைச் சொல்கிறேன் என்று ஒருவர் சொல்வாரானால், அவர் குர்‍ஆனிலிருந்தோ, ஹதீஸ்களிலிருந்தோ (முஹம்மது கூறியதாக) சொல்லவேண்டும், ஆனால், இவ்விரண்டும் அதாவது குர்‍ஆனும் முஹம்மதுவும் முஸ்லிம்களை நரகத்திற்கு அனுப்புவார்கள் என்று சொன்னால், இவர் தன்னை இன்னொரு நபி என்று கருதுகின்றார் என்று தானே அர்த்தம்!

எனவே, இஸ்லாம் சம்மந்தப்பட்டு, இவரிடம் சில கேள்விகளை கேட்டு பதில்களை பெறலாம் என்று விரும்புகிறேன்.

எனக்கு என்ன லாபம்? - நோக்கம்?

1) முதலாவதாக, தான் ஏற்றுக்கொண்ட அல்லாஹ்விற்கே இவர் அல்வா கொடுக்க முயலுகின்றார் என்று நினைக்கும் போது வேதனையாக உள்ளது. மேலும் இஸ்லாம் பற்றிய சில முரண்பட்ட விவரங்களை இவர் தருகின்றார். இவருக்கு அதனை முதலாவது தெளிவு படுத்தவேண்டும். 

2) இரண்டாவதாக, முஹம்மது தம்முடைய நபித்துவத்தை நிருபிக்க தவறிய அதே பிழைகள் இவரும் செய்துள்ளதாக நான் கருதுகிறேன். முஸ்லிம்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாவிட்டாலும், முஸ்லிமல்லாதவர்கள் இவரை எப்படி காண்பது என்ற கேள்விக்கு இவர் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளார். மனிதனின் நித்தியத்தைப் பற்றி இவர் பேசுவதினால், இவரை உரசிப்பார்த்து இவர் சுத்த தங்கமா? அல்லது தகரமா? என்பதை அறிந்துக்கொள்வது மிகவும் முக்கியமானதாகும். ஏழாம் நூற்றாண்டிலே ஒரு யூதப்பெண் விஷம் வைக்கப்பட்ட உணவை கொடுத்து முஹம்மதுவின் நபித்துவத்தை சோதித்தாள். இதே போல இவருக்கு செய்யமுடியாதே என்பதால், வெறும் கேள்வி விஷப்பரிட்சை இவருக்கு.

3) மூன்றாவதாக, இவரிடம் கேள்விகள் கேட்கும் போது, அவைகள் நியாயமானவைகளாக முஸ்லிம்களுக்கு பட்டால் (இவர் கோபால் என்பதால்), அதே கேள்விகளை முஸ்லிம்கள் முஹம்மதுவிற்கும் பொருந்தும் என்று எண்ணி், பதில்களைத் தேடி தெளிவு பெறுவார்கள் என்பது என்னுடைய‌ கடைசி நோக்கம்.


இப்போது திரு கோபால் அவர்களுக்கு முஸ்லிமல்லாதவர்களிடமிருந்து சில நபித்துவம், இஸ்லாம் பற்றிய கேள்விகள்:

(நபி என்று தன்னை சொல்லிகொண்டவருக்கு, உமர் (ஈஸா குர்‍ஆன் உமர் - நான் தான்) 'திரு' என்றோ 'அவர்கள்' என்றோ அடைமொழிகள் போட்டு எழுதினால், அடுத்த அந்த 'திருவிற்கு' என்ன நடக்கவிருக்கும், எப்படிப்பட்ட கேள்விகள் கேட்கப்படும் என்று இப்போதைக்கு முஸ்லிம்களில் அனேகருக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.)

திரு கோபால் அவர்கள் சுருக்கமான பதில்களையும் தரலாம் (ஓரிரு வார்த்தைகளால்), அல்லது நீண்ட பதில்களையும் தரலாம்.

1) திரு கோபால் அவர்களே! நீங்கள் சொல்வது இறைச்செய்தி என்றுச் சொல்கிறீர்களே, அப்படியானால் நீங்கள் அல்லாஹ் அனுப்பிய (அ) நியமித்த நபியா (தீர்க்கதரிசியா)?

2) ஆம், நான் அல்லாஹ்வின் நபி தான் என்று நீங்கள் சொல்வதாக இருந்தால், எப்படி உங்கள் நபித்துவத்தை நிருபிப்பீர்கள்?

3) 'நீங்கள் முஹம்மதுவிடம் நபித்துவம் பற்றிய சான்றுகளை கேட்டீர்களா? என்னிடம் மட்டும் ஏன் சான்றுகளை கேட்கிறீர்கள்?' என்று முஸ்லிம்களிடம் கேட்டீர்கள். ஆனால் முஸ்லிமல்லாதவர்களுக்கு மட்டும் நீங்கள் பதில் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறீர்கள்? நாங்கள் முஹம்மதுவை நபி என்று நம்புவதில்லை, எனவே எங்களுக்கு மட்டும் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

4) நீங்கள் அல்லாஹ்வின் நபி என்று உங்களுக்கு எப்படி தெரிந்தது?  நீங்கள் அல்லாஹ்வின் நபி என்று ஜிப்ரீல் தூதன் சொன்னானா? கனவு கண்டீர்களா? தரிசனம் கண்டீர்களா? எப்படி உங்களுக்குத் தெரியும்?

5) ஒருவேளை மூஸா நபியோடு நேரடியாக அல்லாஹ் பேசியது போல, நீங்களும் அல்லாஹ்வின் மெல்லிய சத்தத்தை கேட்டீர்களா?

6) நீங்கள் நபி என்று உங்களுக்கு எந்த வயதில் தெரிந்தது? அதாவது பிறந்ததிலிருந்து நீங்கள் நபியா? அல்லது இஸ்லாமை ஏற்பதற்கு முன்பு தான் நபியாக மாறினீர்களா? அல்லது இஸ்லாமை தழுவிய பிறகு தான் அல்லாஹ்வின் நபியாக நியமிக்கப்பட்டீர்களா?

7) மூஸாவையும், ஈஸாவையும் அற்புத அடையாளங்களோடு அல்லாஹ் அனுப்பினான் அல்லவா? முஹம்மதுவின் அற்புதம் குர்‍ஆன் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். உங்களின் அற்புதம் எது? அற்புதங்களா? புத்தகமா? அல்லது வெறும் வாயில் கூழ் காய்ச்சுவதோடு நின்றுவிட்டானா அல்லாஹ்?

8) அல்லாஹ்வின் தரம் சிறிது சிறிதாக குறைந்துக்கொண்டே வருகிறது. அதாவது ஈஸா வரைக்கும் அற்புதங்களை வாரி வழங்கியவன், முஹம்மது வந்தபோது ஒரு அற்புதமும் செய்யவில்லை. இப்போது உங்களை அனுப்பியுள்ளான், இனி அல்லாஹ்விற்கு என்ன நடக்குமோ, காலம் தான் பதில் சொல்லவேண்டும் (சொல்லும்).  இதைப் பற்றி ஏதாவது சொல்லமுடியுமா?

9) உங்களை நியமித்தது அல்லாஹ் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? அல்லாஹ் என்ற பெயரை உங்களுக்கு சொன்னது யார்? குர்‍ஆனா? வேறு ஏதாவது தூதனா? ஒரு வேளை இப்லீஸ் உங்களிடம் வந்து 'நான் அல்லாஹ் இந்த இறைச்செய்தியை முஸ்லிம்களுக்குச் சொல்' என்று சொல்லியிருந்தால், இதனை எப்படி சரி பார்ப்பீர்கள? உங்களுக்கு வந்த இறைச்செய்தி எந்த மூலத்திலிருந்து (அல்லாஹ் அல்லது இப்லீஸ்) வந்தது என்று எப்படி கண்டுபிடிப்பது? கிறிஸ்தவர்களுக்கு எப்படி ஒரு இறைச்செய்தியை, நபியை சோதிப்பது சரிபார்ப்பது என்று நன்றாகத் தெரியும்! முஸ்லிம்களுக்கு தெரியாதே! அதை அவர்கள் 7ம் நூற்றாண்டிலும் செய்யவில்லையே! உங்களுக்காவது தெரியுமா?

10) குர்‍ஆனையும் முஹம்மதுவையும்  பின்பற்றுபவர்கள் ஏமாற்றப்பட்டவர்கள் என்று 1400 ஆண்டுகளுக்கு பிறகு வந்து சொல்கிறீர்களே! இத்தனை ஆண்டுகளாக ஏன் அல்லாஹ் சும்மா இருந்துவிட்டான்?

11) முஹம்மதுவின் காலத்திலிருந்து  இன்றுவரை கோடிக்கணக்கான முஸ்லிம்கள் நரகத்துக்கு செல்வதற்கு காரணம் அல்லாஹ் தான் என்று நான் குற்றம் சாட்டுகின்றேன், ஏனென்றால் கோபால் என்ற நபியை அனுப்புவதற்கு இத்தனை நூற்றாண்டுகள் ஏன் அல்லாஹ் தாமதித்தான்?

12) முஹம்மது தொடங்கி இன்றுள்ள இஸ்லாமிய ஆட்சி புரியும் நாடுகளில் ஷரியா சட்டத்தினால் அவதிப்படும், கொடுமைப்படுத்தப்படும் ஒவ்வொரு மனிதனின் துன்பத்திற்கு அல்லாஹ் தான் காரணம். கோபால் நபியை முன்னமே ஏன் அல்லாஹ் அனுப்பவில்லை? 

13) குறைந்தபட்சம் முஹம்மதுவிற்கு பதிலாக கோபால் நபியை அல்லாஹ் அனுப்பியிருக்கலாமே! முஹம்மது பற்றிய உங்களுடைய கருத்து என்ன? அவர் நபியா? அல்லது கள்ள நபியா?

14) குர்‍ஆனையும் முஹம்மதுவையும் பின்பற்றினால் நரகம் தான் செல்வீர்கள் என்று நீங்கள் சொல்வதினால், முஹம்மது ஒரு கள்ள நபி என்று சொல்ல வருகிறீர்களா? அல்லது அவர் அல்லாஹ்வின் நபி தான், ஆனால் அவரை தேவையில்லாமல் அல்லாஹ்விற்கு சமமாக உயர்த்தி பிடித்துள்ளார்கள் முஸ்லிம்கள் என்றுச் சொல்கிறீர்களா?

15) ஒருவேளை முஹம்மது அல்லாஹ்வின் நபி என்று நீங்கள் (திரு கோபால் அவர்கள்) ஒப்புக்கொண்டால், அவர் மூலமாக கொடுக்கப்பட்ட குர்‍ஆன் வேதமில்லாமல் போய்விடுமா?

16) ஒரு வார்த்தையில் பதில் சொல்லுங்கள்: குர்‍ஆன் அல்லாஹ்வின் இறைவேதமா? இல்லையா? (ஆம் அல்லது இல்லை என்று மட்டுமே சொல்லவேண்டும்)

17) ஒரு வார்த்தையில் பதில் சொல்லுங்கள்: முஹம்மது ஒரு நபியா? அல்லது பொய் நபியா? (ஆம் அல்லது இல்லை என்று மட்டுமே சொல்லவேண்டும்)

18) ஒரு வார்த்தையில் பதில் சொல்லுங்கள்: கோபால் ஒரு நல்ல நபியா அல்லது கள்ள நபியா? (ஆம் அல்லது இல்லை என்று மட்டுமே சொல்லவேண்டும்)

19) நீங்கள் ஷஹதத் (இஸ்லாமிய விசுவாச அறிக்கை, கலிமா, ஷஹாதாசொல்லி முஸ்லிமான நாளுக்கு முன்பிலிருந்தே நபியா? அப்படியானால் அன்று ஷஹதத்தில் முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்று சொன்னது என்னவானது? பொய் தானே! வஞ்சகம் தானே! (பிஜேவே எல்லாருக்கும் அல்வா கொடுப்பார், நீங்கள் அவருக்கே அல்வா கொடுத்திட்டீங்களே கோபாலு... கோபாலு...)

20) ஷஹதத் சொன்ன நாள் அன்று அல்லது அதற்கு முன்பு உங்களுக்கு இறைச்செய்தி வராமல், அதன் பிறகு வந்திருந்தால், ஏன் இப்படி செய்தாய் என்று அல்லாஹ்விடம் கேட்டு இருக்கிறீர்களா?

21) ஒரு கள்ள நபி (முஹம்மது) மீது ஷஹதத் சொல்ல, ஒரு உண்மையான நபி(கோபால்)யை நியமிப்பது என்பது அல்லாஹ்விற்கே இது அடுக்குமா? அடுத்த முறை உங்களுக்கு வஹி வரும் போது இந்த கேள்வியை கேட்பீர்களா அல்லாஹ்விடம்?

22) கேட்க மறந்துவிட்டேன், வஹி என்றதும் ஞாபகத்திற்கு வந்தது. உங்களுக்கு அல்லாஹ்வின் வஹி, இறைச்செய்தி அடுத்த 23 ஆண்டுகள் தொடருமா? 

23) உங்களுக்கு ஒரு வேதம் அல்லாஹ் கொடுத்திருப்பானே அல்லது கொடுப்பானே! அதனை, ஒரே முறை இறக்கப்போகின்றானா? அல்லது கொஞ்ம் கொஞ்சமாக உங்கள் வசதிக்காக தேவைப்படும் போது இறக்குவானா?

24) கோபாலுக்கு இறக்கப்போகும் இறைச்செய்தி எப்படி இருக்கும்? குர்‍ஆன் போல தொடர்ச்சி இல்லாமல் பின்னணி நிகழ்ச்சிகளின் விவரங்கள் இல்லாமல் இருக்குமா? அல்லது பைபிளைப்போல தொடர்ச்சியாக இருக்குமா?

25) முஹம்மதுவின் சொல்லும் செயலும்  முஸ்லிம்களுக்கு 'சுன்னா (Sunnah)' ஆனது போல, கோபாலின் சொல்லும் செயலும் சுன்னா(Sunnah) ஆகுமா? (கோபாலின் சுன்னா யாருக்கு? என்ற கேள்விக்கு காலம் பதில் சொல்லும், அதை இப்போதைக்கு நோண்ட வேண்டாம்).

26) முக்கியமான கேள்வி, உங்களுக்கு திருமணமாகிவிட்டதா? திருமணம் பற்றி உங்கள் கருத்து (சாரி அல்லாஹ்வின் கருத்து) என்ன? இறைச்செய்தியின் ஆரம்பத்திலேயே இதைப் பற்றி சொல்லிவிட்டால், கோபாலை நம்பலாமா இல்லையா? என்று முடிவு எடுக்க தற்கால முஸ்லிம்களுக்கு சௌகரியமாக  இருக்கும். ஏன் இந்த கேள்வி என்றால், ஆரம்பத்தில் ஒரு மனைவியோடு 15 ஆண்டுகள் வாழுவீர்கள், அப்போது கோபாலின் தோழர்கள் கூட ஒரு மனைவியோடு வாழவேண்டும். அதன் பிறகு நான்கு என்று வஹி இறங்கும், பிறகு அடிமைகளை வைத்துக்கொள்வது பற்றி வஹி இறங்கும். திருமணம் பற்றி ஆரம்பத்திலேயே ஒரு சரியான தெளிவு இருந்தால், முஸ்லிம்களுக்கு வசதியாக இருக்கும்.

27) கிறிஸ்தவன் முறையில் ஒரு கேள்வி. உங்கள் பேச்சில் பைபிள் இறைவேதம் தான், அதில் சில மாற்றங்கள் மட்டும்செய்தார்கள் என்றுச் சொன்னீர்களே! அது என்ன மாற்றம் என்று சொல்லமுடியுமா? யார் செய்தார்கள்?  முஹம்மதுவிற்கு முன்பா? பின்பா? என்று சொல்லமுடியுமா? ஒரு இறைநபி என்றுச் சொன்னால், ஒரு தெளிவு வேண்டுமல்லவா! ஏதோ காற்றில் சிலப்பம் அடிப்பதினால் என்ன லாபம் சொல்லுங்கள்?

28) முஹம்மதுவின் பெயர் பைபிளில் முன்னறிவிக்கப்பட்டுள்ளது என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள். இதே போல கோபால் என்ற பெயரையும் பைபிளில் காணமுடியுமா? கோபால் என்பது ஒரு இந்து தெய்வத்தின் பெயரல்லவா? இதே பெயரில் முன்னறிவிக்கப்பட்டு இருக்குமா? அல்லது உங்களுக்கு வேறு பெயர் ஏதாவது உண்டா?

29) இது ஒரு முக்கியமான கேள்விஅடுத்த 1 ஆண்டு மற்றும் 5 ஆண்டுகளில் உங்கள் மூலமாக (அல்லது உங்களுக்கு) நடக்கவிருக்கும் விவரங்களை இறைச்செய்திகளாக, முன்னறிவிப்புக்களாக‌ சொல்லமுடியுமா? ஏனென்றால், இவைகள் உங்கள் நபித்துவத்துக்கு நிருபங்களாக‌ அப்போது மக்கள் எடுத்துக்கொள்வதற்கு வசதியாக இருக்கும். 

30) நீங்கள் இஸ்லாமிய ஈஸாவைப்போன்று ஆன்மீகத் தலைவரா? அல்லது முஹம்மதுவைப் போன்று ஆன்மீக மற்றும் நாட்டுத்தலைவருமா? சுருக்கமாகச் சொல்வதானால், எதிர்ப்பவர்களிடம் சண்டை போடுவீர்களா?

31) நீங்கள் அல்லாஹ்வின் இறைச்செய்தியாளராக மாறிய பிறகு குர்‍ஆனை படிக்கின்றீர்களா? மேலும் [முந்தைய] முந்தைய வேதங்களை (பைபிளை) படிக்கின்றீர்களா?

32) நபியா? தோழரா? பிரதரா? உங்களை நாங்கள் எப்படி அழைப்பது? (இவ்வளவு எழுதிவிட்டு, இப்போதா! இந்த கேள்வியை கேட்கிறாய்! என்று கேட்காதீர்கள்?)

33) ஐந்து வேளை தொழுகின்ற முஸ்லிம்களே என் முன்னே வந்து விவாதம் செய்யுங்கள் என்று சவால் விட்டீர்களே! முஸ்லிம்கள் ஐந்து வேளை தொழவேண்டும் என்று எங்கே படித்தீர்கள்? குர்‍ஆனிலா ஹதீஸ்களிலா? ஐந்து என்பது சரியான தொழுகை எண்ணிக்கையென்று நீங்கள் நம்புகிறீர்களா?

34) ஒருவேளை உங்கள் இறைச்செய்தியை நம்பும் முஸ்லிம் என்ன செய்யவேண்டும்? மறுபடியும் ஷஹதத்தை மாற்றிச் சொல்லவேண்டுமா? 'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை, கோபால் அல்லாஹ்வின் இறைத்தூதர்' என்று சொல்லவேண்டுமா? உங்கள் கருத்து என்ன?

35) எனக்கு இன்னொரு சந்தேகமும் கேள்வியும் உள்ளது. ஒரு வேளை, விளையாட்டுக்காக இஸ்லாமைத்தழுவி, முஸ்லிமைப்போல சில நாட்கள் நடித்து, மறுபடியும் கிறிஸ்தவராக மாறுகின்ற பிளான் ஏதாவது உண்டா என்ன? வேண்டாம் சாமி, மறுபடியும் வரவேண்டாம், கிறிஸ்தவர்கள் தாங்கமாட்டார்கள்.

36) கதை இப்படியாக இருக்குமோ! முஸ்லிம்களுக்கு அவர்களின் தவறை புரியவைப்பதற்கு, முஸ்லிமைப்போல நடித்து அவர்களுக்கு சத்தியத்தைச் சொல்ல முயலுகின்றீர்களா? இது உண்மையானால், இது ரொம்ப தவறு, இயேசுவே இதனை அங்கீகரிக்கமாட்டார்.

37) இஸ்லாமின் புனித நகரங்களாகிய மக்காவும், மதினாவும் உண்மையாகவே அல்லாஹ்வின் புனித நகரங்களா? அல்லாஹ்வின் இறைச்செய்தியாக கேட்டுச் சொல்லமுடியுமா? ஆம் என்பது உங்கள் பதிலானால், எப்படி என்றுச் சொல்லுங்கள். இல்லை என்பது உங்கள் பதிலானால் ஏன் என்று விளக்குங்கள், பிளீஸ்.

38) அல்லாஹ் அனுப்பிய நபி நான் என்று முஹம்மதுவின் காலத்திலும், அதற்கு பிறகும் வந்தவர்களுக்கு என்ன ஆனது என்று ஒரு முறை கூகுள் செய்து பார்க்கமுடியுமா கோபால் அவர்களே! (முஹம்மதுவிற்கு பிறகு தான் ஒரு  இஸ்லாமிய நபி என்றுச் சொன்னவன் நல்லா வாழ்ந்ததாக‌. . . உயிரோடு விட்டுவைக்கப்பட்டதாக‌ . . .).

39) உண்மையான இறைச்செய்தியாளராகிய நபிக்கு கூகுள் தேவையில்லை, அல்லாஹ்வே  சொல்லிவிடுவானே!

40)உங்கள் பிளான் என்ன? அல்லாஹ் கொடுத்த கொடுத்துக்கொண்டு இருக்கின்ற கொடுக்கப்போகின்ற இறைச்செய்தியை மக்களிடம் எப்படி கொண்டுச் செல்லப்போகிறீர்கள்? வெறும் வீடியோக்கள் மூலமாக பேஸ்புக், ட்விட்டர், யுடியூப் போன்ற தளங்களை பயன்படுத்தி பரப்பப்போகின்றீர்களா? அல்லது வேறு ஏதாவது திட்டமிருக்கின்றதா?


இந்த கேள்விகளை எப்படியாவது திரு கோபால் அவர்களிடம் சேர்க்கும் படி முக்கியமாக முஸ்லிம்களிடம் கேட்டுக்கொள்கிறேன். கண்டிப்பாக நீங்கள் சேர்ப்பீர்கள் என்று எனக்குத் தெரியும், அதே கையோடு, இந்த கேள்விகளில் பலவற்றிற்கு உங்கள் இறைத்தூதர் முஹம்மது அவர்கள் என்ன பதில் சொல்வார் என்று சிந்தித்துப் பார்ப்பீர்களா?

திரு கோபால் அவர்களே, இந்த கேள்விகளுக்கு நீங்கள் பதில்களைக் கொடுத்தால், அடுத்த கட்ட கேள்விகளாக கிறிஸ்தவம் பற்றி கேட்கலாம் என்று விரும்புகிறேன். ஏனென்றால், பைபிளையும் உங்கள் அல்லாஹ் தானே இறக்கினான், எனவே, அடுத்த கட்ட கேள்விகளுக்கும் நீங்கள் பதில் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறீர்கள். 

கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுக்கொள்கிறேன், உங்கள் உயிருக்கு ஆபத்து வாசல்படியில் காத்துக்கொண்டு இருக்கிறது. சில முஸ்லிம்களிடமிருந்து உங்களை காக்கும் படி அல்லாஹ்விடம் கேட்டுக்கொள்ளுங்கள்.

உங்களைப் பற்றி நான் ஏற்கனவே கீழ்கண்ட கட்டுரைகளில் முன்னறிவித்துள்ளேன், கொஞ்சம் அந்த தொடுப்பை சொடுக்க படித்து தான் பாருங்களேன், திரு கோபால்.

நாளைக்கு ஒருவன் வருவான், தன்னை நபி என்றுச் சொல்லுவான், ஒரு புதிய மதத்தை உருவாக்குவான், எல்லா இஸ்லாமியர்களும் தன் மார்க்கத்திற்கு வரவேண்டும் என்று கூறுவான், மாறவில்லையானால் மரண தண்டனை என்பான். அவனை பின்பற்ற ஒரு கூட்ட மக்களை சேர்த்துக்கொள்வான், பலவீனமாக மக்களை தாக்குவான், இதனை தன் இறைவன் செய்யும் படிச் சொன்னார் என்பான். இந்த சூழ்நிலையில் இஸ்லாமியர்கள் என்ன செய்வார்கள்? இந்த புதிய நபியை ஏற்றுக்கொள்வார்களா? அல்லது அவரிடம் தன் நபித்துவத்திற்கு அத்தாட்சி என்னவென்று கேட்பார்களா? ( மூலம் )

மேலும் இதனையும் படியுங்கள், திரு கோபால் அவர்கள் என்ன சொல்லிக்கொண்டு இருக்கிறாரோ, அதை ஒரு உதாரணத்தோடு கூறியுள்ளேன்:  முதலில் வந்தது எது? பைபிளா அல்லது குர்‍ஆனா?