ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

செவ்வாய், 29 டிசம்பர், 2020

சின்னஞ்சிறு கேள்வி பதில்கள்: முஹம்மது - 100 சரித்திர புருஷர்களில் முதலாவது இடம் பிடித்தவர் (491-500) - பாகம் 21

சின்னஞ்சிறு "இஸ்லாம் கிறிஸ்தவம்" தலைப்பின் முந்தைய 490 கேள்வி பதில்களை படிக்க இங்கு சொடுக்கவும். 

இந்த கட்டுரயில் "முஹம்மது என்ற தலைப்பில்" மேலதிக 10 கேள்விகளுக்கு பதில்களைக் காண்போம்.  இப்பொழுது பார்க்கப் போகும் பத்து கேள்விகளுக்கு ஒரு சிறப்பு உண்டு, அதாவது, மைக்கேல் ஹெச் ஹார்ட் (Michael H. Hart) என்பவர் எழுதிய  "The 100 - A Ranking of the Most Influential Persons in History" என்ற ஆங்கில புத்தகத்தில் முஹம்மதுவிற்கு முதலாவது இடம் கொடுக்கப்பட்ட விவரங்கள் பற்றிய  கேள்வி  பதில்களைப் பார்க்கப்போகிறோம்.

The 100 - A Ranking of the Most Influential Persons in History by Michael H. Hart

முஹம்மதுவையும் இஸ்லாமையும் புகழ்ந்து எழுதப்படும் புத்தகங்களை முஸ்லிம்கள் தூக்கிப் பிடிப்பார்கள். அப்புத்தகங்களை எழுதிய ஆசிரியர்களை வாழ்த்துவார்கள் கௌரவப்படுத்துவார்கள். ஆனால், இஸ்லாமையும் முஹம்மதுவையும் கேள்வி கேட்டு, விமர்சனம் செய்து எழுதப்படும் புத்தகங்களை முஸ்லிம்கள் தாக்கிப் பேசுவார்கள், முடிந்தால் சில‌ முஸ்லிம் தீவிரவாதிகள் அப்புத்தகங்களை எழுதிய ஆசிரியர்களை கொலை செய்வார்கள்.

இந்த வரிசையில் முஸ்லிம்களின் மனதை கொள்ளையிட்ட மைக்கேல் ஹார்ட் என்ற எழுத்தாளர் எழுதிய புத்தகம் பற்றிய விவரங்களை கேள்வி பதில்களாக நாம் காண்போம். 

(என் நண்பர் ஒருவர் என்னிடம் இந்த புத்தகம் பற்றி ஆய்வு செய்து, விளக்கும்படி கேட்டுக்கொண்டார். நானும் இந்த புத்தகத்தை படித்துப்  பார்க்கவேண்டுமென்று பல ஆண்டுகளாக (ஆம் பல ஆண்டுகளாக) நினைத்திருந்தேன், ஆனால் நேரம் வாய்க்கவில்லை. இந்த முறை கொரொனாவின் காரணத்தினால் களத்தில் இறங்கிவிடவேண்டியது தான் என்று முடிவு செய்துவிட்டேன். "கொரொனாவின் காரணம்" என்று நான் சொன்னது, "வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்ததால், தினமும் ஆபிஸுக்குச் சென்று வரும் நேரம் மிச்சமானது அல்லவா அதனால் தான்".)

முஸ்லிம்களின் அறியாமையும் அதன் விளைவுகளும் :

எப்பாடுபட்டாவது அறியாமையில் வாழ முஸ்லிம்கள் அதிகமாக விரும்புவார்கள்! இதற்கு உதவும் வண்ணமாக, அவர்களை  அறியாமையிலேயே வைத்திருக்கவேண்டுமென்று முஸ்லிம் அறிஞர்கள் பெரும்பாடுபடுகிறார்கள்.

இந்த தொடரில் நாம் பார்க்கப் போகும் கேள்வி பதில்கள் நிச்சயமாக‌ முஸ்லிம்களுக்கு அதிக நன்மை பயக்கும் என்று நான் நம்புகிறேன். கேள்வி கேட்காமல் கண்மூடித்தனமாக‌ எல்லாவற்றையும் நம்பும் முஸ்லிம்களின் கண்கள் திறக்கப்படும் என்று நான் விசுவாசிக்கிறேன்.  இந்த 10 கேள்வி பதில்களை படித்த பிறகு, "நாம் மதிக்கும் நம் முஸ்லிம் அறிஞர்களே சொன்னாலும் சரி, இனி நாம் கேள்வி கேட்காமல் நம்பக்கூடாது என்ற அறிவு நிச்சயம் முஸ்லிம்களுக்கு உண்டாகும்".

எந்த புத்தகத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு முஸ்லிம்கள் ஆடுகிறார்களோ, அப்புத்தகத்தை படித்து, அதன் ஆசிரியர் என்ன சொல்லி இருக்கிறார் என்பதை முஸ்லிம்களுக்கு புரியும்படி விளக்குவது தான் இக்கட்டுரையின் நோக்கம்.

இதை முஸ்லிம்கள் செய்யவில்லையா? என்று கேட்டால், ஆம், முஸ்லிம்கள் இதை செய்யவில்லையென்றுச் சொல்லலாம். சராசரி முஸ்லிம்கள் அரைகுறையாக தங்கள் அறிஞர்களிடமிருந்து கேள்வி பட்டவைகளை கண்மூடித்தனமாக‌ பரப்ப அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். 

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.

(அதிகாரம்:அறிவுடைமை குறள் எண்:423)

சரி வாருங்கள் அந்த பெய்ப்பொருள் என்னவென்பதை அறிந்துக்கொள்ளலாம். 


கேள்வி 491: மைக்கேல் ஹெச் ஹார்ட் (Michael H. Hart) என்பவர் யார்? அவரை ஏன் முஸ்லிம்கள் அதிகமாக கௌரவப்படுத்துகிறார்கள்?

பதில் 491: மைக்கேல் ஹெச் ஹார்ட் (Michael H. Hart) என்பவர் "The 100 - A Ranking of the Most Influential Persons in History" என்ற  புத்தகத்தை ஆங்கிலத்தில் 1978 ஆம் ஆண்டு எழுதினார். இப்புத்தகத்தின் இரண்டாம் பதிப்பு 1992 ஆம் ஆண்டு சில சிறிய மாற்றங்களோடு வெளியானது.

இப்புத்தகத்தின் சிறப்பு: 

சரித்திரத்தில் இன்றுவரை அதிகமாக தாக்கம் உண்டாக்கிய 100 மனிதர்களின் பட்டியலை இவர் கொடுத்து, அதில் இஸ்லாமை தோற்றுவித்த முஹம்மதுவிற்கு முதல் இடம் கொடுத்தது தான்.  இப்புத்தகத்தின் இன்னொரு சிறப்பு அல்லது முஸ்லிம்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு விபரம் என்னவென்றால், இயேசுக் கிறிஸ்துவின் பெயர் 3ம் இடத்தில் வருவது தான். 

முஸ்லிம்கள் ஒரு மனிதனை கௌரவப்படுத்த மேலே சொன்ன விவரங்களில் முதலாவது பாயிண்டே போதும் அவர்களுக்கு, ஆனால் பழம் நழுவி பாலில் விழுந்தது போன்று, இயேசு கிறிஸ்துவுக்கு மூன்றாம் இடம் கொடுத்தது, முஸ்லிம்களுக்கு இன்னும் குஷியாகிவிட்டது.  இதில் இன்னொரு போனஸ் மகிழ்ச்சி, இந்த விவரத்தை ஒரு மேற்கத்திய எழுத்தாளரே சொல்வது தான் (அதுவும் அமெரிக்கர் என்பது இன்னொரு சிக்ஸர்) அடேங்கப்பா, முஸ்லிம்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இப்பொழுது சொல்லுங்கள்? முஸ்லிம்கள் ஏன் மைக்கேல் ஹெச் ஹார்ட் என்ற எழுத்தாளரை விரும்பமாட்டார்கள்?!

தங்கள் உயிரினும் அதிகமாக நேசிக்கும் முகமதுவிற்கு, மேற்கத்திய ஆசிரியர் ஒருவர் உலக தலைவர்களின் பட்டியலில் முதலிடம் கொடுத்ததைப் பற்றி காலஞ்சென்ற இஸ்லாமிய அறிஞர், மேலும் திரு ஜாகிர் நாயக் (மலேசியாவில் தஞ்சம் புகுந்தவர்) அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த அஹமது தீதத் முதற்கொண்டு, இன்று பட்டிதொட்டிகளில் இஸ்லாமிய தாவா செய்யும் ஒவ்வொரு முஸ்லிமும், மேற்கோள் காட்டாமல் இருந்ததில்லை. முக்கியமாக முஸ்லிமல்லாத மக்கள் கூடி இருக்கின்ற அவையில், இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது, இந்தப் புத்தகம் பற்றியும், இந்த எழுத்தாளர் பற்றியும், இவர் முஹம்மது அவர்களுக்கு முதல் இடம் கொடுத்தது பற்றியும், இயேசுவிற்கு மூன்றாம் இடம் கொடுத்தது பற்றியும், பேசாமல் இருக்கவே மாட்டார்கள்.

மேலும் 1988 ஆம் ஆண்டில் எகிப்து நாட்டின் அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக், இந்த மைக்கேல் ஹெச் ஹார்ட் ஆசிரியரை அழைப்பித்து, கெய்ரோ நகரில் கௌரவபடுத்தினார்.

இந்த புத்தகத்தை அமேஜானில் வாங்கலாம், மற்றும் இணையத்திலும் இதன்  பிடிஎஃப் கிடைக்கிறது, பதிவிறக்கம் செய்துக்கொண்டு படிக்கலாம்.

கேள்வி 492: முஹம்மதுவிற்கு முதலாவது இடத்தைக் கொடுத்தது சரிதானா? மைக்கேல் ஹார்ட் சொன்னது தன் சொந்த கருத்து தானே, இதை ஏன் முஸ்லிம்கள் பெரிது படுத்துகிறார்கள்?

பதில் 492:  இந்த புத்தகம் வெளிவந்தவுடன் பல  விமர்சனங்கள் எழுந்தன. பல எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிக்கைகள் தங்கள் விமர்சனங்களை முன்வைத்தன.

இவருடைய 100 பேர் பட்டியலில் 3 ஆப்ரிக்கவர்கள், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு தென் அமெரிக்கர் மட்டுமே இடம் பெற்றுள்ளார் என்று "லாஸ் எஞ்ஜல்ஸ் டைம்ஸ்" பத்திரிக்கை விமர்சித்தது. "த சன்டே டைம்ஸ்" பத்திரிக்கையும் இவரது ஆய்வில் உள்ள குறைபாடுகளை குறிப்பிட்டு விமர்சித்தது. "த வாஷிங்க்டன் போஸ்ட்" என்ற பத்திரிக்கையும், இவரது 100 பேர் பட்டியலில் 10ம் நூற்றாண்டு மற்றும் 15ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட  காலத்திலிருந்து வெறும் மூன்று  நபர்கள் தான் இடம் பெருகிறார்கள், இதுவே இவரது ஆய்வில் உள்ள குறையை தெரிவிக்கிறது என்று விமர்சித்தது. இதைப் பற்றி விக்கிபீடியா தளத்தில் "Reviews (Postive Reviews and Negative Reviews)" என்ற தலைப்பில் உள்ள விவரங்களை படிக்கவும்.

யாராவது ஒரு  விவரத்தைச் சொல்லும் போது, அது நமக்கு எதிரான கருத்தாக இருந்தால், உடனே நாம் கோபம் கொள்ளக்கூடாது, ஆராயாமல் செயலில் இறங்கக்கூடாது, ஆனால் துக்கப்படலாம்.  இதே போன்று ஒருவர் நமக்கு சாதகமாக‌ ஏதாவது சொல்லும் போது, அவர் சொல்வதில் உண்மை இருக்கின்றதா? இல்லையா? என்பதை ஆராயாமல், உடனே கண்மூடித்தனமாக அதை நம்பி, மற்றவர்களிடம் பரப்பக்கூடாது.

மைக்கேல் ஹார்ட் சொன்னது அவரது சொந்த ஆய்வில் வெளிவந்த அவரது சொந்தக்கருத்து, அதில் பல தவறுகள் இருக்கலாம். ஆனால், முஸ்லிம்கள் இதனை ஒப்புக்கொள்ளமாட்டார்கள். ஒரு மேற்கத்தியர் சொல்லிவிட்டார், புத்தகம் எழுதிவிட்டார் எனவே அது உண்மையாக இருக்கும் என்று ஒரே போடு போடுகிறார்கள்.  

சரி, முஸ்லிம்களின் இந்த நிலைப்பாடு அடுத்த கேள்விக்கான பதிலிலும் இதே போன்று இருக்குமா என்று பார்ப்போம் வாருங்கள்.

(இன்னும் நான் மைக்கேல் ஹார்ட் அவர்களின் மேற்கோள்களை காட்டவில்லை, அடுத்தடுத்த கேள்விகளில் அவைகளைப் பார்ப்போம், அப்போது அறிவுள்ள முஸ்லிம்கள் நான் சொல்வது உண்மை என்று நிச்சயம் ஒப்புக்கொள்வார்கள்).

கேள்வி 493: ஹிட்லர், ஸ்டாலின் மற்றும் முஹம்மது: இவர்களில் முதலிடம் பெறும் கெட்டவர் யார்? என்ற புத்தகம் பற்றி முஸ்லிம்கள் என்ன சொல்வார்கள்?

பதில் 493:   டோவ் ஐவரி (Dov Ivry) என்ற கனடா  எழுத்தாளர் "Hitler, Stalin, Muhammad: Who ranks as the most evil human ever?" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். 

புத்தகம்:  Hitler, Stalin, Muhammad: Who ranks as the most evil human ever?

ஹிட்லர், ஸ்டாலின் மற்றும் முஹம்மது: இவர்களில் முதலிடம் பெறும் கெட்டவர் யார்?

  • Buy in Amazon: Link 

இவரது புத்தகத்திற்கு இவர் அமேஜானில் கொடுத்துள்ள  முன்னுரையைப் பாருங்கள்:

Here's how the book begins.

If you are asked who is the most evil man who ever lived, you might immediately nominate Hitler, Stalin, Genghis Khan, and Mao Tse-Tung, all of whom easily exceed double figures in the numbers of their murder victims, and to round out the top five you could throw in Leopold II of Belgium although he won't reach the finals.

May I have the envelope please? The winner is: None Of The Above.

The most evil man who ever lived is Muhammad.

That is my opinion and I shall endeavor to back it up with facts.

இவரது ஆய்வின் படி, "முஹம்மது தான் உலகிலேயே மிகவும் கெட்ட மனிதர்" என்றுச் சொல்கிறார், மேலும் இதற்கான சான்றுகளும் உள்ளன என்றும் கூறுகின்றார்.

இவர் இதுவரை 66 புத்தகங்களை எழுதியுள்ளார், அவைகளை அமேஜானில் கீழ்கண்ட தொடுப்பில் வாங்கலாம்.

சரி, இவரது புத்தகம் பற்றி முஸ்லிம்களின் கருத்து என்ன?

இது இவரது சொந்த ஆய்வின் கருத்து என்று சொல்ல வருகிறீர்கள் அல்லவா? இதே போன்று தான் மைக்கேல் ஹார்ட் என்பவரின் ஆய்வின் கருத்தைத் தான் அவர் சொல்லியுள்ளார். மேலும் மைக்கேல் ஹார்ட்டின் புத்தகத்தை முஸ்லிம்கள் படித்தால், நிச்சயம் அவரை புறக்கணிப்பார்கள், இதை அவர்களுக்கு ஞாபகப்படுத்தவே இந்த என் பதிவு, மேலும் படியுங்கள். 

சரி, மைக்கேல் ஹார்டின் மேற்கோள்களை பார்ப்பதற்கு முன்பாக, இன்னொரு புத்தகத்தைப் பற்றிச் சொல்லிவிடுகிறேன்.

கேள்வி 494: யார் பெரியவர்? இயேசு? நெபோலியன்? முஹம்மது? ஷேக்ஸ்பியர் அல்லது அப்ரஹாம் லிங்கன்? இந்த புத்தகம் பற்றிய சிறு குறிப்பு?

பதில் 494: இன்னொரு புத்தகமும் என் கண்களுக்குப் பட்டது, அது தான் " Who's Bigger?: Where Historical Figures Really Rank " என்ற புத்தகம். 

இந்த புத்தகத்தை கணினி விஞ்ஞானி ஸ்டீவன் ஸ்கீனா என்பவரும், கூகுள் பொறியாளர் "சார்லஸ் வார்ட்" என்பவரும் "விக்கிபீடியா மற்றும் கூகுள்" என்ற இரு பெரும் இணைய தள விவரங்களை வைத்து ஆய்வு செய்து எழுதியுள்ளார்கள்.

Who's Bigger?: Where Historical Figures Really Rank is a 2013 book by the computer scientist Steven Skiena and the Google engineer Charles Ward which ranks historical figures in order of significance.

The authors used the English Wikipedia as their primary data source, and ran the data through algorithms written into computer programs to arrive at a ranking of all historical figures. According to the authors, a higher ranking indicates greater historical significance.[2]

Skiena and Ward compared all English Wikipedia articles against five criteria: two that draw on Google PageRank, and three that draw on internal Wikipedia metrics: the number of times the page has been viewed, the number of edits to the page, and the size of the page. The concept is that these criteria measure the current fame of the subject. This is then manipulated by other algorithms to compensate for a skewing of data toward more recent subjects, arriving at true likely historical significance.[2] In addition to the main list, various sublists (such as figures of a given field of endeavor or country) are included.

அமேஜானில் இப்புத்தகத்தை வாங்க தொடுப்பு:  Who's Bigger?: Where Historical Figures Really Rank Kindle Edition

இந்த ஆய்வில் வெளிவந்த முடிவு என்ன தெரியுமா? யார் முதலாவது இடத்தில் இருக்கிறார்கள்? இயேசு முதலிடமும், முஹம்மது மூன்றாவது இடமும் வகிக்கிறார்.

The top five entries on the overall list are Jesus, Napoleon, Mohammed, William Shakespeare, and Abraham Lincoln.[2]

என் கருத்து: அது கீழ்கண்ட புத்தகங்களில் எந்த புத்தகமானாலும் சரி, அவைகள் எல்லாம் ஒரு வரையறைக்குள், ஒரு குறிப்பிட்ட விவரங்களின் அடிப்படையில் ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ளன‌. 

  1. The 100 - A Ranking of the Most Influential Persons in History - by Michael H. Hart
  2. Hitler, Stalin, Muhammad: Who ranks as the most evil human ever? - by Dov Ivry
  3. Who's Bigger?: Where Historical Figures Really Rank - by Steven Skiena and Charles Ward

இந்த மூன்றாவது புத்தகத்தில் இயேசு முதலிடம் வகிக்கிறார் என்றுச் சொல்லி நான் கூத்தாட விரும்புவதில்லை.  இதே போன்று முஹம்மது மூன்றாவது இடத்தில் இருக்கிறார் என்றுச் சொல்லி, கும்மாளம் போடமுடியாது.  இந்த புத்தகங்களைப் பார்ப்பதைக் காட்டிலும்,  பைபிளில் இயேசு எப்படி வெளிப்பட்டிருக்கிறார்? அவரை நான் வணங்கி, அவரை பின்பற்ற தொடங்கிய பிறகு என் வாழ்க்கையை அவர் மாற்றியுள்ளாரா? என்பது தான் எனக்கு முக்கியம்.

இயேசுவை பின்பற்றுகின்ற நான், ஒரு நல்ல மனிதனாக வாழுகின்றேனா? (அல்லது ஒரு நல்ல மனிதனாக வாழ மனதளவில் விருப்பமாவது கொள்கின்றேனா?) என்பது தான் கேள்வி.  பைபிளின் மூலமாகவும், இயேசுவின் மூலமாகவும் நடத்தப்படுகின்ற நான், மற்றவர்களை நேசிக்கின்றேனா? அல்லது வெறுக்கின்றேனா? என்னை அவர் மாற்றினாரா இல்லையா? என்பது தான் முக்கியமே தவிர, எந்த புத்தகத்தில் இயேசு முதலிடம் பெறுகின்றார் என்பது அவ்வளவு முக்கியமில்லை.

இதே போன்று, குர்‍ஆனையும், ஹதீஸ்களையும், முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தையும் படித்த எனக்கு, முஹம்மது யார் என்று நன்றாகத் தெரியும்.  இஸ்லாமின் அடித்தளமாகிய குர்‍ஆனும் ஹதீஸ்களும் முஹம்மது ஒரு நல்லவர் என்று சொல்லித் தராத போது, அவருக்கு முதலிடம் கொடுத்து எழுதப்படும் புத்தகங்கள் எப்படி என்னை கன்வின்ஸ் செய்யும்?

இப்பொழுது நாம் மைக்கேல் ஹார்ட் எழுதிய வரிகள் எப்படி இஸ்லாமுக்கும், முஸ்லிம்களுக்கும் தலைவலியாக மாறுகிறது என்பதையும், முஸ்லிம்கள் ஏன் மைக்கேல் புத்தகத்தை மேற்கோள் காட்டக்கூடாது என்பதற்கான காரணங்களைக் காண்போம்.

கேள்வி 495: முஹம்மதுவின் ஆக்கிரமிப்புக்கள், யுத்தங்கள் கருத்தில் கொள்ளப்பட்டது - இதனால் தான் அவருக்கு முதலிடம் - இப்படியா  மைக்கேல் எழுதினார்?

பதில் 495: மைக்கேல் ஹெச் ஹார்ட் எழுதிய புத்தகத்தில் 591 பக்கங்கள் உள்ளன. அவைகளில் அவர் குறிப்பிட்ட ஒவ்வொரு நபருக்காகவும் சில காரணங்களை அவர் விளக்கினார். அதன்  பிறகு 'அக்காரணங்களினால் நான் இவரை இன்ன இடத்தில் வைக்கிறேன்' என்று எழுதி தன் சான்றுகளையும் தருகின்றார்.

இப்படி இவர் எழுதும்  போது, முஹம்மதுவிற்கு முதலிடம் தருகிறார், இதற்காக இவர்  முன் வைக்கும் இரண்டு காரணங்களில் ஒன்று: முஹம்மதுவின் ஆக்கிரமிப்புக்களும், மற்ற நாடுகள்  மீது போர் செய்து அவைகளை கைப்பற்றியதும் தான் பிரதான காரணம்.

மைக்கேல் மேற்கோள்க‌ள்: 

a) முஹம்மது வெற்றியுள்ள அரசியல் தலைவர்:

முஹம்மது ஒரு சிறந்த அரசியல் தலைவர் என்று ஆசிரியர் மைக்கேல் எழுதுகின்றார்.

Of humble origins, Muhammad founded and promulgated one of the world's great religions, and became an immensely effective political leader. Today, thirteen centuries after his death, his influence is still powerful and pervasive. (பக்கம் 40 PDF புத்தகம், பிரிண்ட் புத்தகத்தில் பக்கம் 3)

மதினாவிற்குச் சென்று, அரசியல் பலத்தை பெருக்கிக்கொண்ட ஒரு சர்வாதிகாரி முஹம்மது:

This flight, called the Hegira, was the turning point of the Prophet's life. In Mecca, he had had few followers. In Medina, he had many more, and he soon acquired an influence that made him a virtual dictator. During the next few years, while Muhammad's following grew rapidly, a series of battles were fought between Medina and Mecca. This was ended in 630 with Muhammad's triumphant return to Mecca as conqueror. The remaining two and one-half years of his life witnessed the rapid conversion of the Arab tribes to the new religion. When Muhammad died, in 632, he was the effective ruler of all of southern Arabia. (பக்கம் 41 PDF புத்தகம், பிரிண்ட் புத்தகத்தில் பக்கம் 4)

மக்காவை கைப்பற்றிய அடுத்த இரண்டரை ஆண்டுகளில் பல அரபிய இனக்குழுக்கள் இஸ்லாமில் இணையும் படி செய்திருக்கின்றார் முஹம்மது, எப்படி? வாள் முனையில் தான்! இஸ்லாமின் மென்மையைக் கண்டு யாரும் அதில் சேரவில்லை, முஹம்மதுவின் வாளின் வன்மையைக் கண்டு தான் சேர்ந்தார்கள்.

அரேபியாவிலும், வெளியிலும் முஹம்மதுவின் ஆக்கிரமிப்புக்கள்: 

முஹம்மது அரேபியாவின் இனக்குழுக்களை ஒன்றுச் சேர்த்து ஆச்சரியப்படக்கூடிய மிகப்பெரிய யுத்தங்களைச் செய்தார் என்று மைக்கேல் சொல்கிறார் ("the most astonishing series of conquests in human history").

The Bedouin tribesmen of Arabia had a reputation as fierce warriors. But their number was small; and plagued by disunity and internecine warfare, they had been no match for the larger armies of the kingdoms in the settled agricultural areas to the north. However, unified by Muhammad for the first time in history, and inspired by their fervent belief in the one true God, these small Arab armies now embarked upon one of the most astonishing series of conquests in human history. To the northeast of Arabia lay the large Neo-Persian Empire of the Sassanids; to the northwest lay the Byzantine, or Eastern Roman Empire, centered in onstantinople. Numerically, the Arabs were no match for their opponents. On the field of battle, though, the inspired Arabs rapidly conquered all of Mesopotamia, Syria, and Palestine. By 642, Egypt had been wrested from the Byzantine Empire, while the Persian armies had been crushed at the key battles of Qadisiya in 637, and Nehavend in 642. (பக்கம் 42 PDF புத்தகம், பிரிண்ட் புத்தகத்தில் பக்கம் 5)

முஹம்மதுவின் சஹாபாக்களும் யுத்தங்களைத் தொடர்ந்தார்கள், நாடுகளை ஆக்கிரமித்தார்கள்:

முஹம்மதுவிற்கு பிறகும் அவரது சகாக்கள் பெரிய போர்களைச் செய்தார்கள், அதன் பிறகும் முஸ்லிம்கள் பல போர்களைச் செய்து ஸ்பெயின் வரை வலியச் சென்று ஆக்கிரமித்தார்கள்.

But even these enormous conquests-which were made under the leadership of Muhammad's close friends and immediate successors, Abu Bakr and 'Umar ibn al-Khattab -did not mark the end of the Arab advance. By 711, the Arab armies had swept completely across North Africa to the Atlantic Ocean There they turned north and, crossing the Strait of Gibraltar, overwhelmed the Visigothic kingdom in Spain. (பக்கம் 42 PDF புத்தகம், பிரிண்ட் புத்தகத்தில் பக்கம் 5)

b) வாள் முனையில் மக்கள் இஸ்லாமை ஏற்றார்கள்:

இந்தியாவரைக்கும் போர் செய்தார்கள் முஸ்லிம்கள், பெரிய அளவில் மதமாற்றம் நடந்தது: 

For a while, it must have seemed that the Moslems would overwhelm all of Christian Europe. However, in 732, at the famous Battle of Tours, a Moslem army, which had advanced into the center of France, was at last defeated by the Franks. Nevertheless, in a scant century of fighting, these Bedouin tribesmen, inspired by the word of the Prophet, had carved out an empire stretching from the borders of India to the Atlantic Ocean-the largest empire that the world had yet seen. And everywhere that the armies conquered, large-scale conversion to the new faith eventually followed.  (பக்கம் 42 PDF புத்தகம், பிரிண்ட் புத்தகத்தில் பக்கம் 5)

வாள் முனையில் மக்கள் இஸ்லாமை ஏற்றார்கள் என்பதை "முஸ்லிம்களின் ஹீரோ எழுத்தாளர்"  மைக்கேல் ஹார்ட் எப்படி சொல்கிறார் என்பதை பாருங்கள்:

  • And everywhere that the armies conquered, large-scale conversion to the new faith eventually followed.

எங்கேயெல்லாம் இஸ்லாம் ஆக்கிரமித்ததோ அங்கேயெல்லாம் மதமாற்றம் பெரிய அளவில் நடந்தது என்கிறார், இதைவிட இஸ்லாமுக்கு மிகப்பெரிய கேவலம் ஏதாவது உண்டா?

இதைத் தானே இன்றைய உலகமும் இஸ்லாம் மீது சுமத்தும் குற்றச்சாட்டாக உள்ளது, அதாவது வாள் முனையில் இஸ்லாமை முஹம்மது பரப்பினார் என்பது எவ்வளவு உண்மையாக உள்ளது பாருங்கள்.

இல்லை, இல்லை முஹம்மது அமைதியாக இஸ்லாமை பரப்பினார் என்று மார்தட்டுகின்ற முஸ்லிம்களின் தலையில் ஒரு கொட்டுவிட்டு "முஹம்மதுவும், சஹாபாக்களும், அதன் பிறகு வந்த இஸ்லாமிய தலைவர்களும், வாளால் தான் இஸ்லாமை பரப்பினார்கள்" என்று அடித்துச் சொல்கிறார் மைக்கேல் ஹார்ட். இப்போது தான் முஸ்லிம்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும்.

கிறிஸ்தவர்கள் சண்டையிட்டு (சிலுவைப்போர்கள்), முஸ்லிம்களின் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள், எகிப்தும் மெசபடோமியா (ஈரான் பகுதிகள்) மட்டும் முஸ்லிம் நாடுகளாக தொடர்ந்தன. 

இதனை சொல்லிவிட்டு, மைக்கேல் முஹம்மதும், முஸ்லிம்களும் ஆக்கிரமித்த வரைபடத்தைப் போட்டு, இஸ்லாமின் முகத்திரையை கிழிக்கிறார் (பக்கம் 6,7).

c) முதல் வரிசையில் குதிரையில் இருப்பது யார்? முஹம்மதுவா?

பக்கம் 8ல் முஸ்லிம்கள் போர் செய்வதாக ஒரு படத்தை போட்டு இருந்தார், அதில் முதல் வரிசையில் குதிரையில் இருப்பது முஹம்மதுவா? அடடே, முஸ்லிம்களுக்கு எரியுமே மனசு! முஹம்மதுவின் படத்தை மைக்கேல் ஹார்ட் எப்படி போடலாம்? முஸ்லிம்களின் இரத்தம் கொதிக்குமே!  இதையெல்லாம் தெரியாமலா, இத்தனை ஆண்டுகளாக இந்த புத்தகத்தை தூக்கி பிடித்துக்கொண்டு இருந்தோம்! அவமானம், வெட்கம்!

Muslem crusaders under Muhammad conquer in Allah's name

முஹம்மதுவின் தலைமையின் கீழ் முஸ்லிம் குருசேடர்கள் (ஜிஹாதிகள்) அல்லாஹ்வின் பெயரால் வெற்றி பெறுகிறார்கள்.

ஆனால், மைக்கேல் இந்த படத்தின் கீழே எழுதியுள்ள தலைப்பு என்ன தெரியுமா?

இது தான்: "Muslem crusaders under Muhammad conquer in Allah's name" - முஹம்மதுவின் தலைமையின் கீழ் முஸ்லிம் குருசேடர்கள் (ஜிஹாதிகள்) அல்லாஹ்வின் பெயரால் வெற்றி பெறுகிறார்கள்

இதன் படி பார்த்தால், முதல் வரிசையில் குதிரையில் இருப்பவர் முஹம்மது என்று கருதுவதற்கு வாய்ப்பு உள்ளது. 

இதுவரையில் பார்த்த விவரங்களின் படி, மைக்கேல் ஹார்ட் என்பவர் தன் ஆய்வில் எடுத்துக்கொண்ட விவரம் முஹம்மது சிறந்தவர் என்றோ, நல்லவர் என்றோ, தீர்க்கதரிசி என்றோ அல்ல, அவர் ஆரம்பித்த ஆக்கிரமிப்புக்களை, அவருக்கு பிறகு முஸ்லிம்கள் "பேஷாக" தொடர்ந்தார்கள், நாடுகளை பிடித்தார்கள், இதன் அடிப்படையில்  முஹம்மது முதலிடத்தில் இருக்கிறார்.

d) முஹம்மதுவின் முதலிடம் பற்றி "மைக்கேலின் இரத்தினச் சுருக்கமான வரிகள்" 

இந்த கேள்வியில் நான் குறிப்பிட்டது போன்று, முஹம்மது அரசியல் தலைவர்களில் முதலிடம் வகிக்கிறார், என்ன காரணம்? சண்டைகளும், யுத்தங்களும் இரத்தம் சிந்துதலும் தான் காரணம். அதனால் தான் முதலிடம் அவருக்கு. 

Furthermore, Muhammad (unlike Jesus) was a secular as well as a religious leader. In fact, as the driving force behind the Arab conquestshe may well rank as the most influential political leader of all time. (பக்கம் 46 PDF புத்தகம், பிரிண்ட் புத்தகத்தில் பக்கம் 9)

மேலும், முஹம்மது (இயேசுவைப் போலல்லாமல்) ஒரு அரசியல் தலைவராகவும் மற்றும் மதத் தலைவராக இருந்தார். உண்மையில், அரபியர்களின் ஆக்கிரமிப்புக்களுக்கு யுத்தங்களுக்கு உந்துசக்தியாக முஹம்மது இருந்தார், எனவே, அவர் எல்லா காலத்திலும் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவராக இருந்தார் (ஆகையால் முதலிடம்).

மேற்கண்ட ஒரே பத்தியைக் காட்டிவிட்டு, நான் இந்த கேள்வியை முடித்து இருந்திருக்கலாம், ஆனால், முஸ்லிம்கள் அறியாமையில் பொய் சொல்வதில் கைத்தேர்ந்தவர்கள், சாரி வாய்த்தேர்ந்தவர்கள், எனவே ஆசிரியரின் வேறு பல மேற்கொள்களைக் காட்டி இதுவரை விளக்கிக்கொண்டு வந்தேன்.  மேற்கண்ட வரிகளில் (unlike Jesus - இயேசுவைப் போலல்லாமல்) என்று அடைப்பிற்குள் எழுதியது கூட, மைக்கேல் ஹார்ட் ஆசிரியர் தான், நான் சொந்தமாக எழுதவில்லை. இயேசு வெறும் ஆன்மீகத்தலைவர், ஆனால் முஹம்மது அப்படி இல்லை, அவர் அரசியல் தலைவராகவும் இருந்தார், ஆன்மீகத் தலைவராகவும் இருந்தார் என்று சொல்லிவிட்டு, முஹம்மதுவிற்கு முதலிடத்திற்கு தகுதிபடுத்தியது, அவரது "அரசியல் தலைமைத்துவமேயன்று வெறு இல்லை" என்று ஆசிரியர் கூறுகின்றார். 

போர் செய்து யுத்தம் செய்வதில் முதலிடம் முஹம்மது வகித்ததால் தான், இன்றும் சண்டைகளும் சச்சரவுகளும், ஜிஹாத்களும் நடக்கின்றன! இல்லையென்றுச் சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்!

முஹம்மதுவிற்கு முதலிடம் கொடுத்து மைக்கேல் ஹார்ட் முஸ்லிம்களுக்கு உதவி செய்யவில்லை, அதற்கு பதிலாக, மறைமுகமாக, வாழைப்பழத்தில் ஊசி நுழைப்பது போன்று தன் காரியத்தை கச்சிதமாக முடித்துவிட்டார். இஸ்லாம் வாளால் தான் பரவியது என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார். இதனை புரிந்துக்கொள்ளாத முஸ்லிம்கள் அவரை கௌரவப்படுத்துகிறார்கள்.  தன்னை செருப்பால் அடித்தவனுக்கு கவுரப்பட்டம் கொடுத்து வாழ்த்தும் கூட்டம் ஒன்று உண்டு என்றுச் சொன்னால், அது முஸ்லிம்களாகத் தான் இருப்பார்கள்.  இதைத் தான் நான் ஆரம்பத்தில் சொன்னேன், முஸ்லிம்களுக்கு அறியாமை அதிகம், அதை தக்கவைத்துக்கொள்ள எந்த அளவிற்கு வேண்டுமானாலும் செல்வார்கள். 

முஹம்மதுவின் வாள் முனை தான் அவரை முதலிடத்திற்கு தள்ளியது என்று மைக்கேல் ஹார்ட் எழுதியதில் எந்த ஒரு தவறும் இல்லை என்பது தான் என் கருத்தும் கூட.

கேள்வி 496: மைக்கேலின் நெத்தியடி வரிகள்: குர்‍ஆனின் ஆசிரியர் முஹம்மது தான். முஹம்மதுவின் வார்த்தைகள் தான் குர்‍ஆன். இதனையும் முஸ்லிம்கள் ஏற்பார்களா?

பதில் 496: முஹம்மதுவிற்கு முதலிடம் கொடுத்ததற்கு காரணம், அவர் போர்களைச் செய்து நாடுகளை பிடித்தது தான் என்று மைக்கேல் கூறினார், இது முஸ்லிம்களுக்கு முதலாவது மிகப்பெரிய அதிர்ச்சித் தோல்வியாகும். 

இரண்டாவதாக, முஸ்லிம்களின் நம்பிக்கையில் பெரிய கல்லை எடுத்துப்போடுகின்றார் மைக்கேல், அதாவது குர்‍ஆனின் ஆசிரியர் முஹம்மது என்று நேரடியாகச் சொல்லியுள்ளார். மனுஷன் மறைமுகமாகவாவது சொல்லியிருக்கலாம் அல்லவா! இல்லை, நேரடியாகவே "முஸ்லிம்களின் வேதத்தின் ஆசிரியர் முஹம்மது என்றுச் சொல்கிறார்".

முஸ்லிம்கள் வேதமான குர்‍ஆனின் ஆசிரியர் முஹம்மது, இவரது வார்த்தைகள் தான் குர்‍ஆன்:

பக்கம் 9ல், முஸ்லிம்கள் கவுரவித்த மைக்கேல் ஹெச் ஹார்ட் கீழ்கண்ட முத்துக்களை உதிர்த்து உள்ளார்:

Muhammad, however, was responsible for both the theology of Islam and its main ethical and moral principles. In addition, he played the key role in proselytizing the new faith, and in establishing the religious practices of Islam. Moreover, he is the author of the Moslem holy scriptures, the Korana collection of certain of Muhammad's insights that he believed had been directly revealed to him by Allah. Most of these utterances were copied more or less faithfully during Muhammad's lifetime and were collected together in authoritative form not long after his death. The Koran therefore, closely represents Muhammad's ideas and teachings and to a considerable extent his exact words. (பக்கம் 46 PDF புத்தகம், பிரிண்ட் புத்தகத்தில் பக்கம் 9)

இதில் அவர் எழுதிய இரண்டு வரிகளைப் பாருங்கள்: 

1. Moreover, he is the author of the Moslem holy scriptures, the Koran, a collection of certain of Muhammad's insights that he believed had been directly revealed to him by Allah (மேலும், அவர்(முஹம்மது) முஸ்லீம்களின் புனித நூலான குர்‍ஆனின் ஆசிரியர் ஆவார். இந்த குர்‍ஆன் தொகுப்பை அல்லாஹ் தனக்கு நேரடியாக வெளிப்படுத்தப்பட்டதாக முஹம்மது நம்பினார்)

2. The Koran therefore, closely represents Muhammad's ideas and teachings and to a considerable extent his exact words (ஆகவே, குர்ஆன் முஹம்மதுவின் கருத்துக்களையும் போதனைகளையும் கொண்டுள்ளது. வேறு வகையாகச் சொல்லவேண்டுமென்றால், கிட்டத்தட்ட குர்‍ஆன் என்பது முஹம்மதுவின் சொந்த வார்த்தைகளே - Muhammad's exact words ஆகும்.)

இதை விட யார் குர்‍ஆனை அவமானப்படுத்திவிட முடியும்? முஸ்லிம்களே உங்களுக்குப் புரிகின்றதா? மைக்கேலின் படி "முஹம்மதுவின் போதனைகளும், கருத்துக்களும் அடங்கிய புத்தகம் தான் குர்‍ஆன், இதன் ஆசிரியர் முஹம்மது, மேலும் கிட்டத்தட்ட குர்‍ஆன் என்பது முஹம்மதுவின் சொந்த வார்த்தைகளே".

ஆக, மிச்சம் மீதியிருந்த இஸ்லாமின் மேன்மையையும் எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டார் மைக்கேல் ஹார்ட் என்ற மேற்கத்தியர்.

இதையெல்லாம் அறிந்த பிறகும் அஹமத் தீதத், ஜாகிர் நாயக் போன்ற முஸ்லிம் அறிஞர்கள் முஸ்லிம்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.  இப்பொழுது இந்த விவரங்களை இந்த கேள்வி பதில்கள் மூலம் முஸ்லிம்கள் அறிந்துக்கொண்டார்கள், இருந்த போதிலும் அவர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா? "எது எப்படி இருந்தாலும், எங்கள் கண்மணி நாயகம் முஹம்மது அவர்களை மைக்கேல் ஹார்ட் முதலாவது இடத்தில் வைத்தாரே" இது எங்களுக்கு போதும் என்பார்கள்.

அந்த மைக்கேல் என்பவர் "முஹம்மது போர்களைச் செய்து தான் இஸ்லாமைப் பரப்பினார், மேலும் குர்‍ஆனின் ஆசிரியர் முஹம்மது தான் என்றுச் சொல்லி", இஸ்லாமை அவமானப்படுத்திவிட்டார் என்று விளக்கிச் சொன்னாலும், "பரவாயில்லை, அதை பார்க்காதது போல நாங்கள் இருந்துவிடுகிறோம் என்று அறியாமையில் இருக்கும் சில அறிவு ஜீவி முஸ்லிம்கள்  கூறுவார்கள். 

செருப்பை 5000 ரூபாய் கொடுத்து வாங்கினாலும், செருப்பு செருப்பு தானே! காலில் தானே போடவேண்டும்! விலை உயர்ந்தது என்பதால் கழுத்திலா மாட்டிக்கொள்வீர்கள்? 

இஸ்லாமை விமர்சிப்பவர்களின் இரண்டு ஆயுதங்கள்:

இஸ்லாம் வாளால் பரவியது & குர்‍ஆன் முஹம்மதுவின் கைவேலை

பொதுவாக இஸ்லாமை விமர்சிப்பவர்கள், முக்கியமாக‌ இரண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைப்பார்கள். அவைகள்: இஸ்லாமை முஹம்மது வன்முறையை கையாண்டு பரப்பினார், மேலும், குர்‍ஆன் இறைவேதமில்லை, அது மனித வார்த்தைகள் முக்கியமாக முஹம்மது தன் வசதிக்காக உருவாக்கிக்கொண்டது என்பதாகும்.

இந்த இரண்டு குற்றச்சாட்டுக்களையும் மைக்கேல் ஹார்ட் முன்வைத்துவிட்டு, அதே நேரத்தில் முஸ்லிம்களிடமிருந்தும் "சபாஷ்'ஐயும் பெற்றுக்கொண்டார்  என்றுச் சொன்னால், அவருடைய சாதுரியமான அறிவை என்னவென்றுச் சொல்வது!

இப்போது நாம், மைக்கேலின் ஞானத்தை மெச்சிக்கொள்வதா? அல்லது முஸ்லிம்களின் அறியாமையை நொந்துக்கொள்வதா?

உங்களுக்கு ஏதாவது புரிகின்றதா!?!

கேள்வி 497: செங்கிஸ் கான் மற்றும் முஹம்மது சரியான ஒப்பீடா? மைக்கேலுக்கு ஒப்பிட யாருமே கிடைக்கவில்லையா? இருந்தாலும் முஹம்மதுவே இதிலும் முதலில் வந்தார்! 

பதில் 497:  முஹம்மதுவின் வாள் வலிமைக்கு நிகராக யாரை ஒப்பிடலாம் என்று முஸ்லிம்களின் ஹீரோவாகிய மைக்கேலிடம் கேட்டால், ஒரே ஒரு நபரோடு மட்டும் தான் ஒப்பிடமுடியும் என்று பதில் கூறுகின்றார்.  

அந்த நபர் யார்? முஹம்மதுவைப் போன்று ஒரு மத ஸ்தாபகரா? ஒரு நபியா? ஒரு துறவியா? இல்லை, இல்லை பல லட்ச மக்களை கொன்று குவித்த சர்வாதிகாரியாக செயல்பட்ட மங்கோலிய அரசன் செங்கிஸ்கான்.

இந்த ஒப்பிடுதலைப் பற்றி மைக்கேல் எழுதும் வரிகளை பாருங்கள்:

But this cannot be said of the Arab conquests The only comparable conquests in human history are those of the Mongols in the thirteenth century, which were primarily due to the influence of Genghis Khan. These conquests, however, though more extensive than those of the Arabs, did not prove permanent, and today the only areas occupied by the Mongols are those that they held prior to the time of Genghis Khan (பக்கம் 46 PDF புத்தகம், பிரிண்ட் புத்தகத்தில் பக்கம் 10)

முஹம்மதுவின்  ஆக்கிரமிப்புக்கள்  பற்றி வரலாற்றில் ஒப்பிட வேண்டுமென்றால், 13ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த செங்கிஸ்கான் என்ற அரசனின் ஆக்கிரமிப்புக்களோடு மட்டுமே ஒப்பிடமுடியுமாம். 

அப்படி ஒப்பிட்டாலும், இன்று சங்கிஸ்கானின் ஆக்கிரமிப்புக்கள் முழுவதும் அழிந்துவிட்டது, ஆனால் முஹம்மதுவின் ஆக்கிரமிப்புக்கள் இன்றும் பல நாடுகளை இஸ்லாமின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது, எனவே முஹம்மதுவின் வாள் வலிமை மற்றும் ஆக்கிரமிப்புக்களை யாருமே வெற்றிக்கொள்ள முடியாது, எனவே தான் முஹம்மதுவிற்கு முதலிடம் என்று மைக்கேல் கூறுகின்றார்.

இதன் பொருள் என்ன? இஸ்லாம் வாளால் பரவியது என்பதையும், அதன் தாக்கம் இன்றும் உலகில் உள்ளது என்றும் கூறுகின்றார்.

சரி இந்த செங்கிஸ்கான் யார்? என்பதைப் பற்றி சில விவரங்களைக் காண்போம்.

கோடிக்கணக்கில் இனபடுகொலை செய்த அரசன் செங்கிஸ் கான்:

The conquests and leadership of Genghis Khan included widespread devastation and mass murder, and he, along with the Mongols in general, perpetrated what has been called ethnocide and genocide. The targets of campaigns that refused to surrender would often be subject to reprisals in the form of enslavement and wholesale slaughter.  . . . A number of present-day Iranian historians, including Zabih Allah Safa, have likewise viewed the period initiated by Genghis Khan as a uniquely catastrophic era.[132] Steven R. Ward writes that the Mongol violence and depredations in the Iranian Plateau "killed up to three-fourths of the population... possibly 10 to 15 million people. Some historians have estimated that Iran's population did not again reach its pre-Mongol levels until the mid-20th century (மூலம்: https://en.wikipedia.org/wiki/Genghis_Khan)

மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக ஈரானில் செங்கிஸ் கான் கிட்டத்தட்ட அனைவராலும்  இனப்படுகொலை செய்த போர்த்தலைவராகக் கண்டிக்கப்படுகிறார். இந்தப் பகுதிகளின் மக்கள்தொகைக்கு பெரும் அழிவை ஏற்படுத்தியவராகக் கருதப்படுகிறார்.இசுதீவன் ஆர். வார்த் என்பவர் மங்கோலியப் படையெடுப்புகளைப் பற்றி எழுதியதாவது "ஒட்டுமொத்தமாக, மங்கோலிய வன்முறை மற்றும் அட்டூழியங்கள் ஈரானியப் பீடபூமியின் மக்கள்தொகையில் நான்கில் மூன்று பங்கு வரை கொன்றன, அதாவது 1 முதல் 1.5 கோடி மக்கள் வரை கொல்லப்பட்டார்கள். (மூலம்:  செங்கிஸ் கான்: https://ta.wikipedia.org/s/30y)

அக்கால உலகின் 11% மக்கள் செங்கின்ஸ் கான் அரசனாலும், அடுத்தடுத்த மங்கோலிய‌ அரசர்களாலும் கொல்லப்பட்டனர்:

Destruction under the Mongol Empire: 

The Mongol conquests of the 13th century resulted in widespread destruction that has been widely noted in scholarly literatureThe Mongol army conquered hundreds of cities and villages and also killed millions of men, women and children. It has been estimated that approximately 11% of the world's population was killed either during or immediately after the Turco-Mongol invasions.[1] If the calculations are accurate, the events would be the deadliest acts of mass killings in human history. (மூலம்: https://en.wikipedia.org/wiki/Destruction_under_the_Mongol_Empire)

முஹம்மதுவின் வாளின் வலிமை, "இனப்படுகொலை செய்து, 11% உலக மக்களைக் கொன்ற செங்கிஸ்கானையே" வென்றுவிட்டதென்றால், ஏன் முஹம்மதுவிற்கு முதலிடம் கிடைக்காது, இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?

ஆசிரியர் மைக்கேல் இந்த  இடத்தில்  முஹம்மதுவின் ஆக்கிரமிப்புக்கள், மற்றும் செங்கிஸ்கானின் ஆக்கிரமிப்புக்களை முதலாவது ஒப்பிட்டார் அதன் பிறகு, முஹம்மதுவின் ஆக்கிரமிப்புக்கள் நடந்த நாடுகளில் இன்றும் இஸ்லாம் இருப்பதினால், முதலிடம் முஹம்மதுவிற்கு கிடைத்தது. செங்கிஸ்கானின் ஆக்கிரமிப்புக்கள் நடந்த நாடுகளில் இன்று அவனது ஆட்சி இல்லை. இதற்கு இதற்கு இன்னொரு காரணம், முஹம்மது நாடுகளை பிடித்த பிறகு, அவர்களை முஸ்லிம்களாக மாற்றியது  தான், ஆனால் செங்கிஸ்கான் அதனைச் செய்யவில்லை, ஏனென்றால் அவன் ஒரு மத ஸ்தாபன் அல்லவே!

இப்போது முஹம்மதுவிற்கு முதலிடம் கொடுத்ததற்கு முஸ்லிம்கள் மைக்கேலை மெச்சிக்கொள்வதா? அல்லது செங்கிஸ்கான் போன்ற ஒரு கொடுங்கோல் அரசனோடு முஹம்மதுவை ஒப்பிட்டு எழுதியதால் துக்கப்படுவதா என்ற நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்படவேண்டும், தள்ளப்படுவார்களா? விஷயம் புரிந்தால் தள்ளப்படுவார்கள், புரியவில்லையென்றால் நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும்!

கேள்வி 498: முஹம்மதுவிற்கு முதலிடம் கொடுப்பதற்கு உதவியது எது? ஆன்மீக இஸ்லாமா? அல்லது அரசியல் இஸ்லாமா (Political Islam)?

பதில் 498: மைக்கேல் ஹார்ட் தனது புத்தகத்தின் 3வது பக்கத்திலிருந்து 10வது பக்கம் வரை, "ஏன் முஹம்மதுவிற்கு தான் உலகத்திலேயே முதலிடம் கொடுத்தார்? என்பதற்கான காரணத்தை விளக்கியுள்ளார்? 

மொத்தம் 8 பக்கங்கள் அவர் முஹம்மது பற்றி எழுதியுள்ளார்.

இந்த பக்கங்களில் அவர்:

  • முஹம்மது ஒரு நபி என்றுச் சொல்லவில்லை, நல்லவர் என்றுச் சொல்லவில்லை, 
  • அவரது ஆன்மீக கோட்பாடுகள் உலகத்திலேயே மிகவும் நல்ல கோட்பாடுகள் என்று கூறவில்லை, 
  • குர்‍ஆன் மிகவும் உயர்ந்த புத்தகம் என்று கூறவில்லை, 
  • மற்ற மதங்களைக் காட்டிலும் இஸ்லாம் சிறந்த மதம் என்று கூறவில்லை
  • முஹம்மது உலகம் பின்பற்றவேண்டிய ஒரு நல்ல  எடுத்துக்காட்டு என்று கூறவில்லை.
  • ஆனால் முஹம்மதுவின் யுத்தங்களை ஆக்கிரமிப்புக்களை, இஸ்லாமின்  முகத்தை எடுத்துக்காட்டிவிட்டார்.

முஹம்மது பற்றிய  தம்முடைய ஆய்வை முடிக்கும்போது கீழ்கணட  வரிகளை எழுதியுள்ளார்:

We see, then, that the Arab conquests of the seventh century have continued to play an important role in human history, down to the present day. It is this unparalleled combination of secular and religious influence which I feel entitles Muhammad to be considered the most influential single figure in human history. (பக்கம் 46 PDF புத்தகம், பிரிண்ட் புத்தகத்தில் பக்கம் 10)

முடிவாக‌, ஏழாம் நூற்றாண்டின் அரபு ஆக்கிரமிப்புக்கள் மனித வரலாற்றில் இன்றுவரை ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளன என்பதை நாம் காண்கிறோம். முஹம்மதுவின் அரசு செல்வாக்கு  மற்றும் மத செல்வாக்கின் இந்த இணையற்ற கலவையே முஹம்மதுவை மனித வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க நபராக நான் உணர்கிறேன்.

மேற்கண்ட ஆங்கில வரிகளில் "secular" என்ற வார்த்தை  முஹம்மதுவின் ஆட்சி, ஆக்கிரமிப்புக்களைக் குறிக்க ஆசிரியர் பயன்படுத்தியதாகும். Secular - இந்த வார்த்தை "மதசார்பற்ற" என்று  நாம் இன்று புரிந்துவைத்துக்கொண்டு இருக்கும் பொருளில் அவர் பயன்படுத்தவில்லை.

இந்த புத்தகத்தின் பிடிஎஃப் தொடுப்பை நான் கொடுத்துள்ளேன், அதனை பதிவிறக்கம் செய்துக்கொண்டு நான் கொடுத்த மேற்கோள்களை சரி பார்த்துக்கொள்ளவும். 

முஹம்மதுவின் 8 பக்க விவரங்களை மட்டும் ஒரு முஸ்லிம் கீழ்கண்ட தொடுப்பில் கொடுத்துள்ளார், அதனையும் சொடுக்கி நீங்கள் படித்துக்கொள்ளலாம்.

கேள்வி 499: முஹம்மது பலதெய்வ வழிபாடுகளைச் செய்தார், யூத கிறிஸ்தவர்களிடம் ஏக தெய்வம் பற்றி அறிந்துக்கொண்டார். இப்படி எழுதியது முஹம்மதுவிற்கு முதலிடம் கொடுத்த மைக்கேல் ஹெச் ஹார்ட். முஸ்லிம்கள் இதனை படிக்கவில்லையா? முஸ்லிம்கள் இதனை ஏற்பார்களா? 

பதில் 499:  முஸ்லிம்கள் கண்மூடித்தனமாக மைக்கேல் ஹெச் ஹார்ட் என்ற ஆசிரியரை தலையில் தூக்கிவைத்துக் கொண்டு நாட்டியம் ஆடினார்கள். ஆனால் ஒரு முறை கூட அவர் எழுதிய புத்தகத்தை படிக்கவில்லை. இஸ்லாமின் அடிப்படை கோட்பாடுகள் தகர்ந்துவிடும் படி அவர் கூறியவைகளை முஸ்லிம்கள் கவனிக்க தவறினார்கள்.

குர்‍ஆனில் இருப்பது முஹம்மதுவின் வார்த்தைகள் என்றார் இவர், முஸ்லிம்கள் படிக்கவில்லை. முஹம்மதுவின் ஆக்கிரமிப்புக்களும், வாள் வலிமையும் தான் அவரை இந்த‌ நிலைக்கு உயர்த்தியது என்றார், முஸ்லிம்கள் கவனிக்கவில்லை.  இயேசுவை விட முஹம்மது பெரியவர்  என்று நான் சொல்லவில்லை என்றார் இவர் (அடுத்த கேள்வியை படியுங்கள்), முஸ்லிம்கள் பார்த்தும் பாராதவர்கள் போல இருந்துவிட்டார்கள்.

இப்போது இன்னொரு விவரத்தையும் அவர் சொல்லியுள்ளார்:

Most Arabs at that time were pagans, who believed in many gods. There were, however, in Mecca, a small number of Jews and Christians; it was from them no doubt that Muhammad first learned of a single, omnipotent God who ruled the entire universe. When he was forty years old, Muhammad became convinced that this one true God (Allah) was speaking to him, and had chosen him to spread the true faith. (பக்கம் 41 PDF புத்தகம், பிரிண்ட் புத்தகத்தில் பக்கம் 4)

முஹம்மதுவின் காலத்தில் பெரும்பான்மையான  அரபியர்கள் பல தெய்வ வழிபாடுகளை செய்துக்கொண்டு  இருந்தார்கள். மக்காவில் ஒரு குறிப்பிட்ட சிறிய அளவு யூதர்களும் கிறிஸ்தவர்களும் வாழ்ந்துக்கொண்டு இருந்தார்கள். சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் முஹம்மது இவர்களிடமிருந்து தான்  உலகை ஆளும் சர்வல்லவரான ஒரே இறைவன் பற்றி கற்றுக்கொண்டு இருக்கவேண்டும். முஹம்மதுவிற்கு நாற்பது வயது ஆகும் போது, அந்த ஒரே மெய்யான இறைவன் (அல்லாஹ்) தான் தன்னோடு பேசி, உண்மை மார்க்கத்தை பரப்ப தம்மை தெரிவு செய்தார் என்று அவர் நம்பினார்.

ஆசிரியர் மைக்கேல் முஹம்மதுவின் இறைச்செய்திப் பற்றி எழுதும் போது, கீழ்கண்டவைகளை கூறியுள்ளார்.

  1. முஹம்மது,  பலதெய்வ வழிபாடு செய்கின்றவராக இருந்தார்.
  2. முஹம்மதுவின் குடும்பத்தார்களும், வம்சத்தார்களும் இதே போன்று வாழ்ந்துக்கொண்டு இருந்தார்கள்.
  3. மக்காவில் அன்று வாழ்ந்த யூத கிறிஸ்தவர்கள் ஒரே தெய்வத்தை வணங்குகிறவர்களாக இருந்தார்கள்.
  4. இவர்களிடமிருந்து தான் முஹம்மது 'ஏக இறைவன்' பற்றி கற்றுக்கொண்டார்.
  5. அதன் பிறகு, தன்னிடம் அந்த ஏக இறைவன் பேசியதாக முஹம்மது நம்பினார்

இந்த ஆசிரியரின் வரிகளின் படி, முஹம்மதுவிற்கு ஏக இறைவன் தோன்றி அவரை நபியாக்கவில்லை, அதற்கு பதிலாக, முஹம்மதுவிற்கு ஏக இறைவன் பற்றிய  அறிவு கிடைத்ததே யூத கிறிஸ்தவர்கள் மூலமாகத் தான்(ஆனால் இஸ்லாமின் படி, ஜிப்ரீல் தூதன் தான் அல்லாஹ் பற்றி முஹம்மதுவிற்கு அறிவிக்கின்றார்). அதன் பிறகு, அந்த யூத கிறிஸ்தவ ஏக இறைவன் தன்னை சந்தித்ததாக முஹம்மது நம்பினார். முஹம்மது ஒரு நபியில்லை, தம்மை அல்லாஹ் நபியாக்கினார் என்று முஹம்மது நம்பிவிட்டார்.

இஸ்லாமுக்கு இது எவ்வளவு பெரிய அடியாக இருக்கிறது என்பதைப் பாருங்கள்.  இதையெல்லாம் படிக்காமல், அல்லது படித்தாலும் வெளியே சொல்லாமல் மக்களை ஏமாற்றவேண்டுமென்பதற்காக முஸ்லிம் அறிஞர்கள் பொய்களைச் சொல்லிக்கொண்டு  இருக்கிறார்கள்.

இந்த புத்தகத்தில் சோல்லப்பட்ட விவரங்களை படிக்கும் நேர்மையான முஸ்லிம்கள் 'இப்புத்தகத்தையோ, அதன் ஆசிரியரையோ' புகழமாட்டார்கள், ஏனென்றால், இவரது புத்தகம் முஹம்மதுவிற்கு நன்மை செய்வதைவிட தீமையைத் தான் அதிகமாக செய்துள்ளது.

கேள்வி 500: முஹம்மது இயேசுவை விட பெரியவர், சிறந்தவர் என்று மைக்கேல் கூறவில்லை! இவரது பட்டியலில் கேடுகெட்ட தீயவர்களுக்கும் முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறாரா?

பதில் 500:  முஸ்லிம்களின் அறியாமைக்கு ஒரு அளவு என்பது இல்லை, அல்லது முஸ்லிம் அறிஞர்களின் வஞ்சக வேலைக்கு ஒரு அளவு இல்லை, இது தான் இஸ்லாம் இவர்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளது. முஸ்லிம் அறிஞர் அஹமத் தீதத் கூறும் போது, 'இயேசுவை விட முஹம்மதுவே சிறந்தவர், பெரியவர்' என்று  மைக்கேல் இந்த புத்தகத்தில் கூறுவதாக கூறுகின்றார், இதே போன்று பல முஸ்லிம்கள் அறிஞர்கள் கூறுகிறார்கள். இது எவ்வளவு பெரிய  ஏமாற்றுவேலையென்று பாருங்கள்.

முஹம்மது பற்றி எழுதப்பட்ட 8 பக்கங்களை சரியாக படித்து, உண்மையை உலகிற்குச் சொல்லத் தெரியாத இவர்கள் முஸ்லிம் அறிஞர்கள் என்ற பெயரை வைத்துக்கொண்டு இஸ்லாமிய தாவா செய்கிறார்கள், பாவம் முஸ்லிம் மக்கள், இப்படிப்பட்ட முஸ்லிம் அறிஞர்களின் வார்த்தைகளை உண்மையென்று நம்பி, தங்கள் நித்தியத்தை முஸ்லிம்கள் இழந்துக்கொண்டு இருக்கிறார்கள்.

என் பட்டியலில் நல்லவனைக் காட்டிலும், கெட்டவனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கும்

This book presents my own answer to that question, my list of 100 persons in history whom I believe to have been the most influential. I must emphasize that this is a list of  the most influential persons in history, not a list of greatest. For example, there is room in my list for an enormously influential, wicked, heartless man like Stalin, but no place at all for the saintly Mother Cabrini. (பக்கம் 25 PDF புத்தகம்)

அந்த கேள்விக்கு நான் கொடுக்கும் பதில் தான் இந்த புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சரித்திரத்தில் அதிகமாக செல்வாக்கு பெற்றுள்ள 100 பேர்களின் பட்டியலை நான் என் புத்தகத்தில் கொடுத்துள்ளேன். என்னுடைய இந்த பட்டியல் 'சரித்திரத்தில் அதிகமாக செல்வாக்கு பெற்றவர்கள் பற்றியது மட்டுமே, சரித்திரத்தில் பெரியவர்கள், சிறப்பானவர்கள் பற்றியது அல்ல' என்பதை கவனிக்கவும் (I must emphasize that this is a list of the most influential persons in history, not a list of the greatest). உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமென்றால், என்னுடைய பட்டியலில் அதிக செல்வாக்குமிக்க ஒருவரின் பெயர் இடம் பெறலாம், ஆனால், அவர் மிகவும் கொடுமைக்காரராகவும், இதயமில்லாதவராகவும் இருக்கலாம், ஸ்டாலினைப் போன்று.  ஆனால், இதே போன்று என்னுடைய பட்டியலில் மிகவும் நல்லவராக இருந்த அன்னை கேப்ரீனி இடம் பெறவில்லை, ஏனென்றால், இந்த அன்னை செல்வாக்கு இல்லாதவர்.

இந்த புத்தகத்தின் ஆசிரியருக்கு 'தாம் என்ன எழுதுகிறோம் என்று நன்றாக தெரிந்துள்ளது. இயேசுவின் வாழ்க்கையும் தெரியும், முஹம்மதுவின் வாழ்க்கையும் தெரியும். எனவே, தன் புத்தகத்தின் அறிமுகத்தில் மேற்கண்டவிதமாக எழுதியுள்ளார்.  இனபடுகொலை செய்த முஹம்மது, வலியச் சென்று நாடுகள் மீது போர் தொடுத்த முஹம்மது எங்கே, சமாதானப் பிரபுவாகிய இயேசு எங்கே!  இதை விளக்குவதற்குத் தான் அவர் 'என் பட்டியலில் ஸ்டாலின் போன்ற தீயவனுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டு இருக்கும், ஆனால் நல்லவர்கள் சிலர் பட்டியலிலேயே இல்லாமல் இருப்பார்கள்' என்று கூறுகின்றார்.

ஹிட்லருக்கும் அதிக முக்கியத்துவம் ஏன்? 

ஹிட்லர் நல்லவர் என்பதால் அல்ல, அவர் அதிகமாக மக்களை இன்ஃபுலியன்ஸ் செய்தார் என்பதால் தான்.

பக்கம் 26: 

In composing this list, I have not simply selected the most famous or prestigious figures in history. Neither fame, nor talent, nor nobility of character is the same thing as influence. Thus Benjamin Franklin, Martin Luther King, Jr., Babe Ruth, and even Leonardo da Vinci are omitted from this list – although some find a place among the Honorable Mentions that follow the One Hundred. On the other hand, influence is not always exerted benevolently; thus an evil genius such as  Hitler meets the criteria for inclusion.  (பக்கம் 26 PDF புத்தகம், பிரிண்ட் புத்தக எண்: 28 - xxviii)

இந்த பட்டியலில், வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற‌ அல்லது மதிப்புமிக்க நபர்களை நான் தேர்ந்தெடுக்கவில்லை. மேலும் ஒரு மனிதனின் புகழோ, திறமையோ, நற்குணங்களோ என்பவைகள் ஒரு பக்கம், "செல்வாக்கு(Influence)" என்பது இன்னொரு பக்கம். இவ்விரண்டும் வெவ்வேறானவையாகும். இதனால் பெஞ்சமின் பிராங்க்ளின், மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர், பேப் ரூத் மற்றும் லியோனார்டோ டா வின்சி போன்றவர்கள் கூட இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். எனினும், இவர்களை 'கவுரப் பட்டியலில் என் புத்தகத்தில் சேர்த்துள்ளேன்'. வேறு வகையில் சொல்லவேண்டுமென்றால், 'செல்வாக்கு' என்பது வேறு, 'நற்குணமுள்ளவர்கள் என்பது வேறு". இதனால் ஹிட்லர் போன்ற ஒரு கேடுகெட்ட தீயவன் கூட இந்த நிபந்தனையில் ஜெயித்து, பட்டியலில் இடம் பிடித்துவிட்டான்.

ஆசிரியரின் மேலேயுள்ள வரிகளையும் கவனியுங்கள். நல்லவர்களை இந்த ஆசிரியர் கருத்தில் கொள்ளவில்லையாம், யார் (அவன் நல்லவனோ, கெட்டவனோ) சரித்திரத்தில் அதிக பாதிப்பை (Influence) உண்டாக்கினானோ அவன் பட்டியலில் இடம் பெறுவானாம். இந்த வகையில் பார்த்தால், ஹிட்லருக்கும், ஸ்டாலினுக்கும் 'உலக சரித்திரத்தில் அதிக செல்வாக்கு (Influence) உடையவர்கள் பட்டியலில் இடம் கிடைத்தது, இவர்களில் முஹம்மதுவிற்கு முதலிடம் கிடைத்தது. இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?  பட்டியலில் முதலில் இருப்பதினால் அவர் நல்லவர் என்று அர்த்தமில்லையென்று ஆசிரியர் கூறுகின்றார்.

வாசகர்கள் ஒன்று செய்யலாம், ஹிட்லர், ஸ்டாலின் மற்றும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறுகளை படித்துப் பார்க்கலாம், அதன் பிறகு இவர்களுக்கிடையே  ஏதாவது ஒற்றுமை தெரிகின்றதா? என்பதைப் பார்த்து முடிவு செய்யலாம்.

முஹம்மது இயேசுவை விட பெரியவர் என்று நான் சொல்லவில்லை! 

ஆசிரியர் மைக்கேல் ஹெச் ஹார்ட் 27ம் பக்கத்தில் கூறியதை கவனிக்கவும்.  

I have tried to divide the credit for a given development in proportion to each participant's contribution. Individuals, therefore, are not ranked in the same order as  would be the important events or movements with which they are associated. Sometimes a person who is almost exclusively responsible for a significant event or movement has been ranked higher then one who played a less dominant role in a more important movement.

A striking example of this is my ranking Muhammad higher than Jesus, in large part because of my belief that Muhammad had a much greater personal influence on the formulation of the  Moslem religion than Jesus had on the formulation of the Christian religion. This does not imply, of course, that I think Muhammad was a greater man than Jesus. (பக்கம் 27 PDF புத்தகம்)

நான் என் பட்டியலில், ஒரு முக்கியமான இயக்கத்தை உருவாக்கியவருக்கும், அந்த இயக்கம் பரவுவதற்கு அவரது பங்களிப்பு என்ன என்பதையும் கணக்கில் கொண்டுள்ளேன். இயக்கங்களை(மதங்களை/கண்டுபிடிப்புக்களை) உருவாக்கிய நபர்களையும், அந்த இயக்கங்களையும் நான் வெவ்வேறாக பிரித்திருக்கிறேன்.  இதனால் தான் சில நேரங்களில், ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவருக்கு முதலிடம் கொடுத்திருந்திருப்பேன், ஆனால், அந்த இயக்கத்திற்கு முக்கிய காரண கர்த்தாவாக இருந்தாலும், குறைவான பங்கு வகித்தவருக்கு நான் குறைவான இடத்தை கொடுத்திருக்கிறேன்.

இதற்கு ஒரு உதாரணம் சொல்லவேண்டுமென்றால், இயேசு மற்றும் முஹம்மதுவின் உதாரணத்தைச் சொல்லலாம். அதாவது நான் முஹம்மதுவிற்கு இயேசுவைக் காட்டிலும் ஒரு படிமேலே இடம் கொடுத்ததற்கு இது ஒரு காரணமாகும். என் கருத்தின்படி சுருக்கமாக சொல்வதானால், 'இஸ்லாம் மதத்தை முழுவதுமாக உருவாக்குவதில் முஹம்மதுவின் தனிப்பட்ட பங்கு அதிகமாக உள்ளது. ஆனால், கிறிஸ்தவ மதத்தை முழுவதுமாக உருவாக்குவதில் இயேசுவின் செல்வாக்கோடு கூட மற்ற சீடர்களின் பங்கும் தேவையாக உள்ளது. இப்படி நான் சொல்வதினால் "முஹம்மது இயேசுவை விட பெரியவர் என்று நான் கருதுகிறேன்" என்று அர்த்தமில்லை. 

இங்கு மைக்கேல் என்ன சொல்கிறார்?

இந்த வரிகளில் மைக்கேல் "இயேசுவை விட முஹம்மது பெரியவர் என்று நான் சொல்லவில்லை" என்கிறார். ஆனால், முஸ்லிம் அறிஞர்கள் "முஹம்மது மற்றவர்களைக் காட்டிலும் சிறப்புமிக்கவர்(Greatest) என்று மைக்கேல் சொல்கிறார், அதனால் தான் முஹம்மதுவிற்கு முதலிடம் கொடுத்தார்" என்று பொய்களைச் சொல்கிறார்கள். 

ஆனால், "Influence" என்ற வார்த்தை "Greatest" என்ற வார்த்தைக்கு சமமல்ல என்பது தான் மைக்கேல் ஹார்ட்டின் கருத்து. 

உலகில் அதிக "Influence" உள்ள ஒரு நபர் ஸ்டாலினாகவும், ஹிட்லராகவும் முஹம்மதாகவும் இருக்கக்கூடும், ஆனால், அவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் "Greatest" ஆகமுடியாது என்று தம்முடைய அறிமுகத்தில் ஆசிரியர் எடுத்துக் காட்டிவிட்டுத்தான் தன் பட்டியலைத் தொடர்கிறார்.

ஆக, முஹம்மது தம்முடைய "அரசியல் இஸ்லாமினாலும், ஆக்கிரமிப்புக்களினாலும்" தான் அதிகமாக செல்வாக்கு (Influence) படைத்தவராக இருக்கிறார். இதனால் அவர் மற்றவர்களைக்  காட்டிலும் சிறந்தவர்(Greatest) ஆகமுடியாது என்று ஆசிரியர் ஆணித்தரமாக கூறுகின்றார்.  

முஸ்லிம்கள் தில்லுமுல்லு செய்து தம் வார்த்தைகளை மாற்றிச் சொல்லக்கூடும் என்பதை அறிந்ததாலோ என்னவோ, ஆசிரியர் "முஹம்மதுவையும், இயேசுவையும்" ஒரு உதாரணமாக எடுத்து எழுதி, பொய் சொல்பவர்களின் முகத்திரையை கிழித்துள்ளார்.

தேதி: 29th Dec 2020


சின்னஞ்சிறு 1000 கேள்வி பதில்கள் பொருளடக்கம்

உமரின் கட்டுரைகள் பக்கம்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2020ramalan/2020-ramalan-21.html


ஞாயிறு, 13 டிசம்பர், 2020

சின்னஞ்சிறு கேள்வி பதில்கள்: பைபிள், கேள்விகள் 481 லிருந்து 490 வரை - (பாகம் 20)

சின்னஞ்சிறு "இஸ்லாம் கிறிஸ்தவம்" தலைப்பின் முந்தைய 480 கேள்வி பதில்களை படிக்க இங்கு சொடுக்கவும். இந்த கட்டுரயில் "பைபிள்" பற்றி முஸ்லிம்கள் கேட்கும் மேலதிக 10 கேள்விகளுக்கு பதில்களைக் காண்போம்.


கேள்வி 481: இயேசு பழைய ஏற்பாட்டை அழிப்பதற்காக வரவில்லை என்று சொல்லியிருக்கும் போது (மத் 5:17), ஏன் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களைப் போன்று பழைய ஏற்பாட்டின் உணவு பற்றிய கட்டளைகளை (Old Testament dietary laws) பின்பற்றக்கூடாது?

பதில் 481: முஸ்லிம்கள் பழைய ஏற்பாட்டின் உணவு சம்மந்தப்பட்ட கட்டளைகளை பின்பற்றுகிறார்கள் என்றுச் சொல்வது சுத்தப்பொய்யாகும். பழைய ஏற்பாட்டை முழுவதுமாக பின்பற்றுகிறார்கள் என்பதை உலகிற்கு காட்ட இப்படி சொல்கிறார்கள், உண்மையில் மூஸாவின்  சட்டங்களில் ஒன்று "ஒட்டக கறியை உண்ணக்கூடாது" என்பதாகும், ஆனால் முஸ்லிம்கள் அதனை உண்கிறார்கள்.   

கீழ்கண்ட மூஸாவின் கட்டளைகளைப் பாருங்கள்

லேவியராகமம்  11:4. ஆனாலும், அசைபோடுகிறதும் விரிகுளம்புள்ளதுமானவைகளில் ஒட்டகமானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லாதபடியால், அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.

உபாகமம் 14:7. அசைபோடுகிறவைகளிலும், விரிகுளம்புள்ளவைகளிலும், நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: ஒட்டகமும், முசலும், குழிமுசலுமே; அவைகள் அசைபோட்டும் அவைகளுக்கு விரிகுளம்பில்லை; அவைகள் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.

இப்படி அவர்களே, மூஸாவின் கட்டளைகளை பின்பற்றாத போது, கிறிஸ்தவர்கள் ஏன் பின்பற்றுவதில்லை என்று கேட்பது வேடிக்கையானது.

சரி, இப்பொழுது மேற்கண்ட கேள்விக்கான பதிலைக் காண்போம்.

மத்தேயு 5:17

17. நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.

இயேசுவும் அவரது சீடர்களும் யூதர்களாக இருந்தபடியினால் அவர்கள் அனைவரும் 'பழைய ஏற்பாட்டின் உணவு கட்டுப்பாடுகள்' அனைத்தையும் பின்பற்றினார்கள்.  யூதரல்லாதவர்கள் இந்த உணவுக்கட்டுப்பாடுகளை பின்பற்றத்தேவையில்லை, இதனை மூஸா (மோசே) கட்டளையிடவும் இல்லை.

இந்த நிலை மேசியாவாகிய இயேசு சிலுவையில் மரித்து, உயிர்த்தெழுவதற்கு முன்பு வரை இருந்தது. இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, இது மாறியதை, இதனை நாம் புதிய ஏற்பாட்டில் காணலாம். மேசியாவின் தியாக பலியின் மூலமாக‌ பிதாவாகிய தேவன் 'இரண்டு வகையான மக்களையும், அதாவது யூதர்களையும் யூதரல்லாதவர்களையும் ஒரே வகையில் கொண்டுவந்தார்', இது தான் ஆதிமுதல் தேவனின் திட்டமாக இருந்தது.

கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டின் உணவு கட்டுப்பாட்டுக்குள் ஏன் வரமாட்டார்கள் என்பதற்கு கீழ்கண்ட சான்றுகளைச் சொல்லலாம்:

1) எல்லா உணவுகளையும் உண்ணலாம் என்று தேவன் கட்டளைகொடுத்தார்:

சீடர் பேதுருவிற்கு இயேசு ஒரு தரிசனம் கொடுக்கின்றார். அதில் உலகில் உள்ள எல்லா உணவுகளையும் "தேவன் சுத்தமாக்கியதாக" தரிசனத்தில் தெரிவிக்கின்றார்.

பார்க்க: அப்போஸ்தலர்: 10:9-16

இதில் முக்கியமாக கவனிக்கவேண்டிய வசனங்கள் 14,15,16 ஆகும்:

14. அதற்குப் பேதுரு: அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றையும் நான் ஒருக்காலும் புசித்ததில்லை என்றான். 15. அப்பொழுது: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே என்று இரண்டாந்தரமும் சத்தம் அவனுக்கு உண்டாயிற்று. 16. மூன்றாந்தரமும் அப்படியே உண்டாயிற்று. பின்பு அந்தக் கூடு திரும்ப வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இங்கு கவனிக்கும் போது, மூன்று முறை "தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே" என்று வருகிறது.

அதன்பிறகு ஒரு யூதனல்லாத ஒருவரின் வேண்டுதலுக்கு இணங்க பேதுரு சென்று அவருக்கு நற்செய்தியை அறிவிக்கிறார். இங்கு உணவு மீதுள்ள கட்டுப்பாடும் நீக்கப்படுகின்றது, மக்கள் மீதிருந்த‌ கட்டுப்பாடும் நீக்கப்படுகின்றது.

2) வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது

கிறிஸ்தவர்கள் இயேசுவின் கட்டளைகளை பின்பற்றவேண்டும் என்பது தான் எல்லோருடைய எதிர்ப்பார்ப்பும் கூட. உணவு பற்றி ஒரு சிறப்பான உண்மையை இயேசு இங்கு குறிப்பிடுகின்றார். வாய்க்குள் போகிறது மனிதனையும் இறைவனையும் வேறுபிரிக்காது, அவன் வாயிலிருந்து அதாவது அவனது இதயத்திலிருந்து புறப்படுகின்ற தீயவைகள் தான் இறைவனிடமிருந்து மனிதனை பிரிக்கும் என்கிறார்.

மத்தேயு 15:11. வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது; வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.

மத்தேயு 15:11. ஒருவன் வாய்க்குள்ளே போகிறது அவனை அசுத்தமாக்காது. மாறாக, ஒருவன் பேசும் சொற்களாலேயே அசுத்தமடைகிறான்" என்று சொன்னார். (பொது மொழியாக்கம்)

மாற்கு 7:18-23

18. அதற்கு அவர்: நீங்களும் இவ்வளவு உணர்வில்லாதவர்களா? புறம்பேயிருந்து மனுஷனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாதென்று நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா? 19. அது அவன் இருதயத்தில் போகாமல் வயிற்றிலே போகிறது; அதிலிருந்து எல்லாப் போஜனங்களின் அசுத்தங்களையும் கழிக்கிற ஆசனவழியாய் நீங்கிப்போகும். 20. மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். 21. எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், 22. களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். 23. பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.

இறைபக்தி என்று வரும் போது, 'வெளிப்படையான காரியங்கள், மற்றும் வயிற்றுக்கும் வாய்க்கும் சம்மந்தப்பட்ட உணவு காரியங்கள்' முக்கியமானவை அல்ல, உள்ளத்தின் ஆழத்திலிருந்து  அன்பு கூறி பக்தி செய்வது தான் உண்மையான 'ஆராதனை' என்பது தான் இயேசுவின் மற்றும் கிறிஸ்தவத்தின் போதனை.

புதிய ஏற்பாட்டில் கொரிந்தியர் புத்தகத்தில், ஒரு முக்கியமான விசயம் சொல்லப்பட்டுள்ளது

I கொரிந்தியர் 8:8. போஜனமானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது; என்னத்தினாலெனில், புசிப்பதினால் நமக்கு ஒரு மேன்மையுமில்லை, புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை.

இதன் பொருள் என்னவென்றால், நாம் ஒரு குறிப்பிட்ட உணவை உண்பதினால், நம்மிடம் தேவன் வந்து நம்மை மெச்சிக்கொண்டு, "சூப்பர், நீ இந்த உணவை உண்டதினால், உனக்கு இந்த நன்மை செய்வேன்" என்று சொல்லப்போவதில்லை. இதே போன்று, வேறு நபரிடம் வந்து "நீ இந்த குறிப்பிட்ட உணவை உண்ணாததினால், உனக்கு இந்த தீமை நடக்கும்" என்று சொல்லப்போவதில்லை.

பாருங்கள் எவ்வளவு அருமையான போதனை! இன்றைய மதங்கள் பொய்யான போதனைகளைச் செய்து, உணவு, காலம் நேரம் பார்ப்பது என்றுச் சொல்லி தேவையில்லாத காரணங்களைக் காட்டி மக்களை பயமுறுத்துகின்றன.

ரோமர் 14:17. தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.

மனிதன் வாழுவதற்கும், ஆரோக்கியமாக இருப்பதற்கும், வளருவதற்கும் உணவு வேண்டுமே ஒழிய, பக்திக்காக அல்ல.

கேள்வி 482: ஒரு விலையுயர்ந்த வாசனை தையலத்தை ஒரு பெண் இயேசுவின் பாதங்களில் ஊற்றும் போது, அந்த வீண் செலவு வேண்டாம் என்று இயேசு தடுக்கவில்லை ஏன் (பார்க்க‌ மத்தேயு 26:7-11)? (இந்த கேள்வியை அஹமத் தீதத் கேட்டார்) 

பதில் 482: இதே கேள்வியை நம் தமிழ் நாட்டின் இஸ்லாமிய அறிஞர் பி ஜைனுல் ஆபீதீன் அவர்கள் "இது  தான் பைபிள்" என்ற புத்தகத்தில் கேள்வியாக எழுப்பியிருந்தார். 2008ம் ஆண்டில் அவருக்கு கொடுத்த பதிலை இங்கு தருகிறேன்.

இயேசு கடவுள் என்றால் ஏன் அவர் நறுமணம் பூசிக்கொள்ள ஆசைப்பட்டார் ? என்பது தான் பிஜே அவர்கள் கேட்கும் கேள்வி. பிஜே அவர்கள் "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்தை பைபிளின் வசனங்களை சரியாக ஆராயாமல் மேலோட்டமாக படித்து எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் அவர் முன்வைக்கின்ற கேள்விகளுக்கு தொடர் கட்டுரைகளாக நான் பதில் எழுதிக்கொண்டு வருகிறேன். 

இந்த வரிசையில் இயேசு ஏன் நறுமணம் பூசிக்கொள்ள ஆசைப்பட்டார்? என்று பிஜே அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலை இக்கட்டுரையில் பார்க்கலாம். 

பிஜே அவர்கள் எழுதியது: 

27. கடவுள் நறுமணம் பூசிக்கொள்ள ஆசைப்படுவாரா?

ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற பரிமள தைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து, அவர் போஜனபந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள். அவருடைய சீஷர்கள் அதைக்கண்டு விசனமடைந்து: இந்த வீண் செலவு என்னத்திற்கு? இந்தத் தைலத்தை உயர்ந்த விலைக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்றார்கள். 

இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் இந்த ஸ்திரீயை ஏன் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள். (மத்தேயு 26:7-10 மூலம் : இயேசு இறைமகனா?

1. சில விவரங்களை வேண்டுமென்றே குறிப்பிடாமல் விட்டுவிடும் இஸ்லாமிய அறிஞர்கள் 

சாதாரணமாக பைபிளிலிருந்து ஒரு நிகழ்ச்சியை குறிப்பிடும் போது அந்த நிகழ்ச்சி சம்மந்தப்பட்ட எல்லா விவரங்களையும் பைபிள்  அதே இடத்தில் சொல்லிவிடும். ஆனால் குர்ஆன் அப்படி அல்ல, அல்லா சொன்ன வசனங்களை குர்ஆனில் பார்க்கவேண்டும், இவ்வசனங்கள் எந்த சூழ்நிலையில் சொல்லப்பட்டது என்று அறிய ஹதீஸ்களின் உதவியை நாடவேண்டும். ஹதீஸ்கள் இல்லாமல் குர்ஆனின் வசனங்களை புரிந்துக்கொள்வது மிகவும் கடினம். 

குர்ஆனை படிப்பது போல, புரிந்துக்கொள்வது போல பிஜே அவர்கள் பைபிளை புரிந்துக்கொண்டுள்ளார். அதாவது, ஒரு நிகழ்ச்சியை குறிப்பிடும் போது, அவருக்கு (பிஜே) தேவையான வசனங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு அந்நிகழ்ச்சியின் அடுத்தடுத்துள்ள வசனங்களை வேண்டுமென்றே, பைபிளுக்கு, இயேசுவிற்கும் விரோதமாக வித்தியாசமான பொருள் கொண்டுவரவேண்டும் என்று விட்டுவிட்டார் நம்முடைய இஸ்லாமிய அறிஞர், பல ஆண்டுகள் இஸ்லாமிய ஊழியம் செய்துகொண்டு வந்துக்கொண்டு இருக்கும் மதிப்பிற்குரிய பிஜே அவர்கள். 

பிஜே அவர்கள் எந்த வசனங்களை வேண்டுமென்றே குறிப்பிடாமல் விட்டுவிட்டார் என்பதை அறிய மேலும் படியுங்கள். 

2. பிஜே அவர்கள் சொல்வது உண்மையா?  

பிஜே அவர்கள் குறிப்பிட்ட வசனங்களை இன்னொரு முறை படியுங்கள். அவர் குறிப்பிட்ட வசன எண்கள்: மத்தேயு 26:7-10 இவைகள் ஆகும். 

ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற பரிமள தைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து, அவர் போஜனபந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள். அவருடைய சீஷர்கள் அதைக்கண்டு விசனமடைந்து: இந்த வீண் செலவு என்னத்திற்கு? இந்தத் தைலத்தை உயர்ந்த விலைக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்றார்கள். 

இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் இந்த ஸ்திரீயை ஏன் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள். (மத்தேயு 26:7-10)

  • இயேசு சீமோன் என்பவனுடைய வீட்டில் இருந்தார்.
  • அந்த சமயத்தில் ஒரு பெண் மிகவும் விலை உயர்ந்த தைலத்தை(நறுமணத்தை)  கொண்டு வந்து இயேசுவின் தலையிலே ஊற்றுகிறாள்.
  • இதைக்கண்டு இயேசுவின் சீடர்கள் இந்த வீண் செலவு எதற்கு, அந்த பணத்தை ஏழைகளுக்கு கொடுக்கலாம் அல்லவா? என்று கேட்கிறார்கள். 
  • இயேசு அப்போது அவர்களுக்கு பதில் தருகிறார்.

3. இயேசு பேசிய வசனங்களில் பாதியை மட்டும் குறிப்பிட்ட பிஜே அவர்கள் 

பிஜே அவர்கள் உண்மையில் நேர்மையாக பைபிள் வசனங்களுக்கு பொருள் கூறுவதாக இருந்தால், இந்த நிகழ்ச்சி நடக்கும் போது தன் சீடர்களுக்கு இயேசு என்ன பதில் சொன்னாரோ அதை முழுவதுமாக குறிப்பிட்டு இருக்கவேண்டும். ஆனால், பிஜே அவர்கள் இயேசு பேசிய நான்கு வசனங்களில் ஒரு வசனத்தை மட்டும் குறிப்பிட்டுள்ளார். இப்படி செய்வது ஏமாற்றுவேலை ஆகுமா? அல்லது நேர்மையாக நடந்துக்கொண்டு செயல்படுவது ஆகுமா? என்பதை இக்கட்டுரையை படிக்கும் நீங்களே முடிவு செய்யுங்கள். இப்படிப்பட்ட செயல்கள் ஒரு மிகப்பெரிய புகழ்பெற்ற இஸ்லாமிய ஊழியரிடம் மக்கள் எதிர்பார்க்கமாட்டார்கள். 

சரி பிஜே அவர்கள் குறிப்பிடாமல் விட்ட அந்த வசனங்கள் என்னவென்று பாருங்கள். 

மத்தேயு 26:10 இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் இந்த ஸ்திரீயை ஏன் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள். 

மத்தேயு 26:11 தரித்திரர் எப்போதும் உங்களிடத்திலிருக்கிறார்கள். நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன். 

மத்தேயு 26:12 இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின் மேல் ஊற்றினது என்னை அடக்கம் பண்ணுவதற்கு எத்தனமான செய்கையாயிருக்கிறது

மத்தேயு 26:13 இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்

இயேசு பேசிய நான்கு வசனங்களில் (மத்தேயு 26:10, 11, 12,13) ஒரு வசனத்தை (மத்தேயு 26:10) மட்டும் பிஜே குறிப்பிட்டார்கள். அதாவது, இயேசு பேசிய 100% ல், 25% மட்டும் குறிப்பிட்டு, மீதி 75% வேண்டுமென்றே மறைத்துள்ளார் பிஜே அவர்கள். 

4. சரி, பிஜே அவர்கள் மறைத்த வசனங்களில் இயேசு என்ன சொல்கின்றார்? 

முதலாவது நறுமணத்தைப் பற்றிய சில விவரங்களை அறிந்துக்கொள்ளலாம். 

அ) நறுமணத்தை எப்போது பயன்படுத்துவார்கள்? 

முக்கியமாக இயேசு வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் நறுமணத்தை கீழ் கண்ட காரணங்களுக்காக பயன்படுத்தினார்கள்:

1) தேவனுடைய வேலைக்காக ஒரு ஆசாரியனை அல்லது அரசனை பிரதிஷ்டை செய்ய பயன்படுத்துவார்கள் ( 1 சாமுவேல் 16:1 , 2 இராஜாக்கள் 9:6 சங்கீதம் 89:20)

2) மகிழ்ச்சியான நேரங்களில் பயன்படுத்துவார்கள் (நீதிமொழிகள் 27:9, ஏசாயா 61:3) 

3) அரசர்களை, பெரியவர்களை சந்திக்கப்போகும் பொது மரியாதைக்காக விலை உயர்ந்த தைலத்தை நறுமணங்களைக் கொண்டுச்செல்வார்கள் (ஆதியாகமம் 43:11, மத்தேயு 2:11)

4) இறைவனுடைய ஆலய வேலைகளில் நறுமணமுள்ள தைலத்தை பயன்படுத்துவார்கள் (யாத்திராகமம் 30:25-32). 

5) ஒருவர் மரித்துவிட்டால், அவரை அடக்கம் செய்யும் போது நறுமண தைலத்தை பூசி துணிகளால் சுற்றி அடக்கம் செய்வார்கள் (மத்தேயு 26:12, லூக்கா 23:55, 56, லூக்கா 24:1).

ஆ) தன் மரண அடக்க சடங்கிற்காக இயேசு இந்த நறுமணம் பூசப்பட்டது என்றார்

ஏன் பிஜே அவர்கள் இயேசு சொன்ன மற்ற வசனங்களை குறிப்பிடவில்லை? என்பது இப்போது புரிந்திருக்கும். அதாவது, அந்தப்பெண் தன் பாவங்களை இயேசு மன்னிக்கவேண்டும் என்பதற்காகவும், மதிப்பின் அடிப்படையிலும் அந்த தைலத்தை அவர் மீது ஊற்றினாலும், இயேசு அதை தன் மரணத்தின் பின்பு அடக்கத்தின் போது பயன்படுத்தும் நறுமணமாகவே எடுத்துக்கொண்டார் , அதையே அவர்கள் எல்லாருக்கும் முன்பாக அறிக்கையும் செய்தார். அதாவது இயேசு, தன் மீது ஊற்றப்பட்ட நறுமணத்தை கல்யாண வீட்டு சந்தோஷ நறுமணமாகக் கருதாமல், சாவு வீட்டில் வரும் நறுமணமாகவே அவர் கருதினார். ஆனால், பிஜே அவர்களுக்கு மட்டும், இயேசு அழகாக மேக் அப் (Make Up) செய்துக்கொண்டு, பணம் கொடுத்து நறுமணம் வாங்கி உடலெல்லாம் பூசிக்கொண்டது போல் இந்நிகழ்ச்சி தெரிந்து இருக்கிறது. எப்படி மற்றவர்களின் வேதங்களை இஸ்லாமிய அறிஞர்கள் வியாக்கீனம் செய்கிறார்கள் பார்த்தீர்களா? 

சாவு வீட்டில் கூட வாசனைக்கு சில நறுமணங்களை தெளிப்பார்கள், அது ஏன் என்று எல்லாருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். அதாவது இந்தியாவில் ஒரு பிணத்தின் மீது தெளிக்கும் ரோஸ் வாடர் (Rose Water) என்று சொல்லக்கூடிய நறுமணத்திற்கு நிகராக இயேசு பேசியுள்ளார். ஆனால், அதை மறைப்பதற்காக பிஜே அவர்கள் வசனத்தை மறைத்தார்கள். 

மத்தேயு 26:11-13 வசனங்களை தன் புத்தகத்தில் குறிப்பிட்டால், தான் சொன்னவந்த செய்திக்கு அது எதிராக இருக்கும் என்பதற்க்காகவே, பிஜே அவர்கள் அதை குறிப்பிடவில்லை என்பது இப்போது புரிந்திருக்கும். இப்படித்தான் இஸ்லாமிய அறிஞர்கள் தவறான விவரங்களை சொல்லிக்கொண்டு முஸ்லீம்களையும், மற்றவர்களையும் முட்டாள்களாக்கிக் கொண்டு வருகிறார்கள் . 

தன் மரணத்தைப் பற்றித் தான் இயேசு பேசினார் என்பதற்கு பிஜே அவர்கள் குறிப்பிட்ட அதே அதிகாரத்திலிருந்து(26) இன்னும் சில விவரங்கள் :

1. மத்தேயு 26ம் அதிகாரம் 1-2ம் வசனங்களில், தன்னை சிலுவையில் யூதர்கள் அறைவார்கள் என்று இயேசு முன்னுரைக்கிறார்.

2. அப்படியே ஆசாரியர்களும் இயேசுவை பிடித்துகொலை செய்ய திட்டம் தீட்டுகிறார்கள் (மத்தேயு 26:3-5). 

3. பிறகு தான் இந்த நறுமணம் பற்றிய நிகழ்ச்சி நடக்கிறது (மத்தேயு 26:7-13) இதில் வசனங்கள் 11லிருந்து 13 வரை பிஜே அவர்கள் வேண்டுமென்றே குறிப்பிடாமல் மறைத்தார்.

4. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இயேசு மறுபடியும் தன் மரணத்தைப்பற்றி முன்னுரைக்கிறார். ஏழைகள் உங்களிடத்தில் எப்போதும் இருப்பார்கள், ஆனால், நான் இருக்கமாட்டேன் என்று இயேசு சொல்கிறார். 

5. பிற்கு யூதாஸ் காரியோத்து என்ற சீடன் இயேசுவை காட்டிக்கொடுக்க யூதர்களிடம் பேசுகிறான் (மத்தேயு 26:14-16)

இப்படி ஆதாரங்களை அடுக்கிக்கொண்டுப் போகலாம். 

பிஜே அவர்களுக்கும் மற்ற அறிஞர்களுக்கும் சிந்திக்க சில கேள்விகள்: 

1. எந்த சூழ்நிலையிலாவது இயேசு சீடர்களை அனுப்பி நறுமணங்களை கொண்டுவரும்படிச் சொல்லி, தினமும் பூசிக்கொண்டார் என்று உங்களால் ஆதாரம் காட்டமுடியுமா? 

2. இயேசுவின் சீடர்கள் இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியில் "ஏன் இந்த வீண் செலவு ?" என்று விசனப்பட காரணமென்ன? காரணத்தை நான் சொல்கிறேன், இயேசு ஒரு முறை கூட இப்படி அதிக விலை உயர்ந்த தைலத்தை பணம் செலவு செய்து வாங்கிக்கொண்டு வரும்படி தன் சீடர்களுக்கு சொல்லவில்லை என்பதும், இயேசு இப்படி வீணான செலவுகள் அனைத்திற்கும் அப்பாற்பட்டவர் என்பதையும் சீடர்கள் அறிந்திருந்தனர். 

3. மட்டுமல்ல, இந்த சீடர்கள் அந்த பெண்ணின் மீது கோபப்பட்டார்களே தவிர இயேசுவின் மீதல்ல? காரணம் இயேசு அவராகவே ஏற்பாடு செய்துக்கொண்டு தைலத்தை தன் உடலில் பூசிக்கொள்ளவில்லை என்பதும், அந்தப்பெண் தானாகவே வந்து இப்படி செய்தாள் என்பதும் சீடர்கள் அறிந்திருந்தார்கள். எனவே தான் இயேசு அந்தப் பெண்ணின் மீது கோபப்படாதீர்கள், இது என் மரண சடலத்தின் மிது பூசப்படப்போகும் நறுமணம் என்று சீடர்களுக்குச் சொன்னார். 

4. எல்லாரும் இயேசுவோடு சாப்பிட உட்கார்ந்து இருக்கும் போது, மரணத்தைப் பற்றியும், அடக்க ஆராதனைப் பற்றியும் யாராவது பேசுவார்களா? பேசமாட்டார்கள். ஆனால், இயேசு பேசினார். காரணம் பிஜே அவர்கள் சொல்வது போல, இயேசு விரும்பி நறுமணங்களை பூசிக்கொள்ள ஆசைப்படவில்லை. எல்லா சூழ்நிலைகளையும் தன் மரணத்தைப்பற்றிப் பேச இயேசு பயன்படுத்திக்கொண்டார் என்பது தான் உணமை. 

5. அரசாங்கத்திற்கு வரி கட்ட, தூண்டில் போட்டு அதில் முதலாவது பிடிக்கும் மீனின் வயிற்றில் இருக்கும் நாணயத்தை எடுத்து கட்டும் படி இயேசு பேதுருவிடம் சொன்னார்(மத்தேயு 17:24-27). ஒருவேளை இயேசு அதிக விலையுள்ள நறுமணங்களை பூசிக்கொண்டு, பணத்தை வீண் செலவு செய்துக்கொண்டு இருந்து, ஆனால், அரசாங்கத்திற்கு வரிகட்ட மட்டும் பேதுருவிற்கு மீன்பிடித்து கட்டுங்கள் என்று சொல்லியிருந்தால், சீடர்கள் என்ன சொல்லியிருப்பார்கள் என்பதை நீங்களே சிந்தித்துக்கொள்ளுங்கள். "இவர் மட்டும் வீண்செலவு செய்துக்கொண்டு விலை உயர்ந்த நறுமணத்தை பூசிக்கொள்வார், ஆனால், வரி கட்ட மட்டும், நாங்கள் உழைத்து கட்டவேண்டுமா?" என்று கேட்டு இருப்பார்கள். அவரை யாரும் பின்பற்றி இருக்கமாட்டார்கள். 

முடிவாக பிஜே அவர்களே, முதலாவது நேர்மையான முறையில் எல்லா வசனங்களையும் படித்து கேள்வி கேளுங்கள். உண்மை பாதி பொய் பாதி என்பது உம்மைப்போன்ற மக்கள் மத்தியில் ஊழியம் செய்பவர்களுக்கு அழகல்ல என்பது என் கருத்து. 

நீங்கள் கேட்ட கேள்வி தவறானது, அதற்கு நீங்கள் காட்டிய வசனங்களும் முழுமையாக காட்டப்படவில்லை. உங்கள் அல்லா போல, பாதி விவரங்கள் குர்ஆனில் சொல்லிவிட்டு, மீதி விவரங்கள் ஹதீஸ்களில் சொல்வது போல பைபிள் இல்லை. எல்லா விவரங்களும் ஒரே இடத்தில் சொல்லப்பட்டிருக்கும், இந்த வசனத்திற்கு ஏற்ற ஹதீஸ் எது என்று மற்ற புத்தகங்களில் தேடி கண்டுபிடிக்க வேண்டிய கஷ்டம் இல்லை. எனவே, முழுவதுமாக படித்து கேள்விகள் கேளுங்கள். 

ஒரு வேளை இயேசு நறுமணம் விருப்பமாக பூசிக்கொண்டாலும் சரி, அது உங்கள் "அல்லா" உண்மையான இறைவன் என்பதையும், "குர்ஆன் " என்பது இறைவேதம் என்பதையும் நிருபிக்க உதவாது என்பதை சொல்லிக்கொள்கிறேன். 

எங்களுக்கு அல்லாவைப்பற்றியும், முகமதுவைப்பற்றியும் சொல்வதற்கு முன்பாக உங்களிடம் நாங்கள் எதிர்ப்பார்ப்பது நேர்மையும், உண்மையையும் தான் என்பதை முதலாவது புரிந்துக்கொள்ளுங்கள்.

உங்கள் மார்கத்திற்காக மற்றவர்களின் வேதங்களில் (நாங்கள் தினமும் படிக்கும், தியானிக்கும் வேதத்தில்) இல்லாததை கற்பனை செய்துக்கொண்டுச் சொல்லும் நீங்கள், உங்கள் வேதத்தைப் பற்றி(நாங்கள் தினமும் படிக்காத, தியானிக்காத குர்ஆன் பற்றி) எங்களுக்கு விவரிக்கும் போது எவ்வளவு பொய்யான தகவல்களை சொல்லுவீர்கள் என்பதை கற்பனை கூட செய்துப்பார்க்க முடியாது. 

ஈஸா குர்-ஆனில் இக்கட்டுரை வெளியிடப்பட்ட தேதி: புதன், 23 ஜனவரி, 2008

கேள்வி 483: சமாதான பிரபு என்று அழைக்கப்படும் இயேசு ஏன், பூமியில் சமாதானத்தை அல்ல, பிரிவினையை உண்டாக்க வந்தேன் என்று சொல்கிறார்? (லூக்கா 12:51) இந்த கேள்வியை அஹமத் தீதத் கேட்டார்.

பதில் 483:  முதலாவது கேள்வியில் கேட்கப்பட்ட வசனத்தை கவனிப்போம்.

லூக்கா 12:51. நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

இயேசு சமாதானத்தை உண்டாக்க வந்தார் என்பது உண்மையே. ஆனால் அவைகளை கீழ்கண்ட நான்கு பிரிவுகளில் நாம் பிரிக்கலாம். 

1) இயேசு நமக்கும் தேவனுக்கும் இடையே சமாதானத்தை உண்டாக்க வந்தார்.

நமக்கும் தேவனுக்கும் இடையே இருந்த மிகப்பெரிய பிளவை (பாவங்களை) நீக்கி, நம்மை தேவனோடு சமாதானம் அடைய உதவினார் இயேசு. ஆகையால் நமக்கு தேவனோடு சமாதானம் உண்டு.

இதனை தெளிவாக கீழ்கண்ட வசனங்கள் சொல்கின்றன:

எபேசியர் 2: 13-16

13. முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள். 14. எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, 15. சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி, 16. பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.

2) நம்முடைய மற்ற சகோதர/சகோதரிகளோடு நமக்கு சமாதானம் உண்டாக்கினார்

இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்கு முன்பு, யூதர்கள் என்றும் யூதரல்லாதவர்கள் என்று ஒரு வித்தியாசம் இருந்தது, ஆனால், இயேசுவின் உயிர்தெழுதலுக்கு பிறகு, அதாவது மேசியா வந்து தம்முடைய திட்டமிட்ட செயல்களைச் செய்துவிட்ட பிறகு, இரு மக்களுக்கும் இடையே சமாதானம் உண்டாக்கப்பட்டது.

எபேசியர் 2: 17-20

17. அல்லாமலும் அவர் வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாயிருந்த அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார். 18. அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர்மூலமாய்ப் பெற்றிருக்கிறோம். 19. ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து, 20. அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்;

மேற்கண்ட வசனங்கள் யூதர்கள் பற்றியும், யூதரல்லாத மற்ற கிறிஸ்தவர்கள் பற்றியும் சொல்லப்பட்டாலும், நாம் அனைவரும் அதாவது இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட அனைத்து உலக கிறிஸ்தவர்களும் ஒரே குடும்பத்தாராக மாறுவதற்கு இயேசு வழி செய்துள்ளார். ஆகையால், கிறிஸ்தவ சபைகளின் பெயர்கள் பலவாறாக இருந்தாலும், அனைவரும் இயேசு என்னும் ஒரே சரீரத்தில் அவயங்கள் தான், இந்த நினைவு மனதில் கொண்டு பல சபை கிறிஸ்தவர்கள் சமாதானத்துடன் வாழ பரிசுத்த ஆவியானவர் உதவி செய்கிறார். இது தான் இயேசு கொடுக்கும் இரண்டாவது சமாதானம்.

3) முடிந்த அளவு, எல்லா மனிதர்களுடன் சமாதானம்

மூன்றாவதாக, இயேசு கொடுக்கும் சமாதானம் என்னவென்றால், உலக மக்கள் அனைவரோடும் கிறிஸ்தவர்கள் கொண்டிருக்கவேண்டிய சமாதானம் ஆகும்.

இயேசுவின் மூலமாக, தேவனோடு சமாதானம் அடைந்த கிறிஸ்தவன், தன்னைப்போன்று நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களோடு சமாதானம் அடைந்த கிறிஸ்தவன், நிச்சயம் மற்ற மக்களோடும் சமாதானமாக வாழ முயலவேண்டும்.

ரோமர் 12:14-21

14. உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றி சபியாதிருங்கள். 15. சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள். 16. ஒருவரோடொருவர் ஏகசிந்தையுள்ளவர்களாயிருங்கள்; மேட்டிமையானவைகளைச் சிந்தியாமல், தாழ்மையானவர்களுக்கு இணங்குங்கள்; உங்களையே புத்திமான்களென்று எண்ணாதிருங்கள். 17. ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்குமுன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள். 18. கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். 19. பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள். 20. அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்கு போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய். 21. நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.

மேற்கண்ட வசனங்களை ஒரு முறை படித்துப் பாருங்கள், முக்கியமாக 18வது வசனம் சொல்வதை கவனியுங்கள்.

"கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்" இது தான் ஒரு கிறிஸ்தவன் செய்யவேண்டியது. முடிந்த அளவிற்கு நாம் சமாதானமாக இருக்கவே முயலவேண்டும். நம்மிடம் ஒருவர் தவறான நடந்துக்கொண்டால், முடிந்த அளவிற்கு அவரை மன்னிக்க முயலவேண்டும். 

நமக்கு சொந்தமான வீட்டை ஒருவர் எடுத்துக்கொண்டால் சட்டத்தின் படி, அவரிடம் சமாதானமாக நடந்துக்கொள்ளுங்கள். அவரது தவறை உணர்த்துங்கள், சண்டையில்லாமல் பிரச்சனை தீர்க்கமுடியுமா என்று பாருங்கள். அவர் அடங்காபிடாரியாக இருந்தால், கடைசியாக நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு தொடரலாம். ஒரு கிறிஸ்தவன் சமாதானம் செய்ய முயலும் போதும், மற்றவன் ஒப்புக்கொள்ளவில்லை என்றுச் சொன்னால் என்ன தான் செய்யமுடியும்? சட்டத்தின் உதவியை நாடவேண்டி வரும்.

ஆக, இயேசுவின் மூலமாக மற்றவர்களோடும் நாம் சமாதானமாக நடந்துக்கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம்.

4) சத்தியத்திற்கு எதிராக நடந்துக்கொள்வர்களோடு சமாதானமாக இருக்கமுடியாமல் போகட்டும்

இந்த கேள்வியில் குறிப்பிடப்பட்ட வசனத்திற்கு பதில் இந்த பாயிண்டில் தான் உள்ளது.

தேவனோடு சமாதானம், முடியும். மற்ற சகோதர/சகோதரிகளோடு (கிறிஸ்தவர்களோடு) சமாதானம், முடியும், மற்ற உலக மக்களோடு சமாதானம், முடிந்த அளவிற்கு கடைபிடிக்கவேண்டும்.

ஆனால், நம் நம்பிக்கைக்கு சத்தியத்திற்கு எதிராக ஒருவர் நடந்துக்கொண்டால், நாம் 'எப்படி நம் சத்தியத்தை' விட்டுக்கொடுக்கமுடியும். இந்த இடத்தில் தான் இயேசுவின் வார்த்தைகள் வருகின்றன. 51வது வசனத்தோடு கூட,அடுத்த இரண்டு வசனங்களையும் படித்துப் பாருங்கள்.

லூக்கா 12: 51. நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 52. எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள். 53. தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார்.

ஒரு குடும்பத்தில் ஒருவர் இயேசுவை பின்பற்ற முடிவு செய்தால், மற்றவர்கள் அதாவது அந்த குடும்பத்தின் மற்ற அங்கத்தினர்கள், நிச்சயமாக இதனை ஏற்கமாட்டார்கள். 

என் வாழ்க்கையையே உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

ஒரு முஸ்லிம் குடும்ப பின்னணியிலிருந்த நான், இயேசுவை என் தெய்வமாக ஏற்றுக்கொண்ட பிறகு என் குடும்பத்தார்கள், என் முடிவை எதிர்த்தார்கள். என் தகப்பனார் வீட்டை விட்டு வெளியே சென்றுவிடு என்றார். இயேசுவை பின்பற்றுவதை விட்டுவிடுகிறாயா? அல்லது வீட்டைவிட்டு வெளியே செல்கிறாயா? என்று கேட்டார்கள். 

எனக்கு இரண்டு அண்ணன்கள் இருந்தாலும் அவர்கள் தனியாக வாழ்ந்துக்கொண்டு இருந்தார்கள், என் பெற்றோர்களை அவர்கள் கவனித்துக்கொள்ளவில்லை.  என் குடும்பத்தில் நாங்கள் 6 பேர். என் சகோதரிகள் மூவரும் திருமணமாகி செட்டில்  ஆகிவிட்டார்கள். என் இரு அண்ணன்கள், தனிக்குடித்தனம் சென்றுவிட்டார்கள். என் வயதான பெற்றோர்களை நான் தான் பார்த்துக்கொண்டு அவர்களோடு இருந்தேன். இந்த நிலையில் என்னை வீட்டை விட்டு வெளியே சென்று விடு என்று அவர்கள் 'கோபத்தில்' சொன்னாலும், என்னால் எப்படி செல்லமுடியும்?  நான் சென்றுவிட்டால் இவர்களை பார்த்துக்கொள்வது யார்?

நான் மிகப்பெரிய தர்ம சங்கடத்தில் இருந்தேன். 

  • இயேசுவை புறக்கணித்துவிட்டு பெற்றோர்களுடன் இருப்பதா(சமாதானம் அடைந்துவிடுவதா)?

அல்லது 

  • பெற்றோர்களை புறக்கணித்துவிட்டு, வெளியே சென்றுவிட்டு இயேசுவை விட்டுக் கொடுக்காமல் வாழ்வதா?

நான் செய்த காரியம்,  ஒன்றும் பேசாமல், விவாதிக்கலாம், அமைதியாக திட்டுக்களை வாங்கிக்கொண்டு பெற்றோர்களுடனேயே இருந்தேன். அவர்களை கண்கலங்காமல் பார்த்துக்கொண்டேன். அவர்கள் பணத்திற்காக யாரிடமும் மதிப்பிழந்து கெஞ்சாமல், தலை நிமிர்ந்து வாழும்படி செய்தேன்.  இன்றைக்கு இதோ 25 ஆண்டுகள் ஆகிவிட்டது, அவர்கள் சொல்லும் சாட்சி "என் கடைசி மகன் இல்லையென்றால் நாங்கள் நடுத்தெருவில் விழுந்திருப்போம்" என்பது தான்.

என் சொந்தங்களும் சொல்லும் சாட்சி இது தான்: "அவனோடு நமக்கு அல்லாஹ் பற்றிய (நான் அல்லாஹ்வை வணங்காத) குறைபாடு இருந்தாலும், தன் பெற்றோர்களை, குடும்ப நபர்களை நன்கு கவனித்துக்கொண்டான்" என்பதாகும்.

நான் இயேசுவை விட்டுக்கொடுக்கவில்லை, அதே நேரத்தில் குடும்பத்தையும் விட்டுக்கொடுக்கவில்லை.

ஒரு வேளை, என் இரண்டு அண்ணன்கள், என் பெற்றோர்களோடு இருந்திருந்து, என்னை வீட்டைவிட்டு வெளியே பிடிவாதமாக தள்ளியிருந்தால், நான் என்ன செய்திருக்கமுடியும்? இயேசுவை விட்டுக்கொடுக்காமல், வெளியே சென்று இருந்திருக்கவேண்டும். 

இதைத் தான் இயேசு "இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள்." என்று கூறுகின்றார். இவர்கள் சத்தியத்திற்காக, இயேசுவிற்காக‌ பிரிந்திருப்பார்களே தவிர, மற்ற காரியங்களுகாக அல்ல. ஒருவேளை இயேசுவை பின்பற்றுவதினால் வீட்டைவிட்டு வெளியே துரத்தப்பட்டாலும், அவர்கள் குடும்பத்தோடு சமாதானமாக இருக்க வேண்டுமே தவிர, விரோதிக்கக்கூடாது. ஏனென்றால் நம் இயேசு ஏற்கனவே இப்படி நடக்கும் என்று சொல்லியுள்ளார்.  தன்னை விசுவாசிக்கும் நபர்கள் சத்தியத்தை விட்டுக்கொடுக்காதபடியினால், இந்த ஒரு காரியத்தில் மட்டுமே மற்றவர்களோடு சமாதானமாக அவர்களால் இருக்கமுடியாது, என்கிறார் இயேசு, இது தான் அவரது வார்த்தைகளின் பொருள்.

இயேசு சமாதானப் பிரபு தான். அவர் சமாதானத்தை உண்டாக்க வந்தவர் தான்.

மேற்கண்ட வசனத்தை சரியான வெளிச்சத்தில் விளக்கும் போது நமக்கு தெளிவு உண்டாகும்.

கேள்வி 484:  "மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை" என்று யோவான் 3:13 சொல்கிறது, அப்படியானால் எலியா மற்றும் ஏனோக்கு பற்றி என்ன? மேலும் பழைய ஏற்பாட்டின் பரிசுத்தவான்கள் பரலோகத்திற்குச் செல்லவில்லையா? அவர்கள் பரலோகில் இல்லையா? (இந்த கேள்வியை அஹ்மத் தீதத் அவர்கள் கேட்டார்கள்).

பதில் 484:  முதலாவது யோவான் 3:13வது வசனத்தை படிப்போம்.

பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. (யோவான் 3:13)

இந்த வசனம் இயேசுக் கிறிஸ்துவைப் பற்றிச் சொல்கிறது.  இந்த வசனத்தின் படி இயேசுவிற்கு முன்பாக பரலோகத்திற்கு ஏறினவர்கள் யாருமில்லை என்றுச் சொல்லப்படுகின்றது.  ஆனால், எலியா என்ற தீர்க்கதரிசியும், ஏனோக்கு என்பவரும் அப்படியே பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக பழைய ஏற்பாடு சொல்கிறது, அப்படியானால், இயேசுவிற்கு முன்பாக இருவர் பரலோகத்திற்கு மரணமில்லாமல் சென்று இருப்பதினால், ஏன் இயேசு மட்டும் தான் பரலோகத்திற்குச் சென்றார் என்று கேள்வி எழுப்பப்படுகின்றது.

எலியா:

II இராஜாக்கள் 2:11. அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகையில், இதோ, அக்கினிரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்.

ஏனோக்கு:

ஆதியாகமம் 5:24. ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.

மற்றவர்கள் பரலோகத்திற்குச் சென்றதற்கும், இயேசு பரலோகத்திற்கு சென்றார் என்று சொல்வதற்கும் மிகப்பெரிய வித்தையாசம் உள்ளது. அதனை சுருக்கமாக காண்போம்.

எலியா தம்முடைய சொந்த வல்லமையினாலே, தெய்வீகத்தன்மையாலே பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை, தேவன் அவரை எடுத்துக்கொண்டார். ஆனால் இயேசுவே சுயமாக பூமியிலிருந்து அவர் சென்றார், அதற்காக அதிகாரம் அவருக்கு உள்ளது. இதே போன்று ஏனோக்கு கூட தம் சுய சக்தியால் பரலோகத்திற்கு செல்லவில்லை, தேவன் அவரை எடுத்துக்கொண்டார்.

பரதீசு மற்றும் பரலோகம்:

இயேசு சிலுவையில் தொங்கும் போது கூட தம்மீது நம்பிக்கை வைத்த திருடனிடம், "இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்" என்றார், பரலோகத்தில் அல்ல. பரதீசு என்பது பரலோகத்திற்கு முன்பாக இருக்கின்ற  இன்னொரு இடமாகும்.

லூக்கா 23;43. இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

பழைய ஏற்பாட்டு நீதிமான்கள்/நபர்கள் அனைவரும் பரதீசுக்கு கொண்டுச் செல்லப்பட்டார்களே ஒழிய பரலோகத்திற்கு அல்ல.  மேலும் எலியா ஏனோக்கு கூட பரதீசுக்கு கொண்டுச் செல்லப்பட்டார்கள்.  இயேசு மரித்து உயிர்த்தெழுந்தவுடன் பரதீசுக்குச் சென்று, அங்கிருந்த பரிசுத்தவான்களை பரலோகத்திற்குச் அழைத்துச் சென்றார்.

இதைப் பற்றிய வேறு வசனங்கள் 

I பேதுரு 3:18-19

18. ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். 19. அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்.

எபேசியர் 4:8

8. ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார்.

மரித்தவர்கள் ஒரு தற்காலிய இடத்தில் இருப்பார்கள் (அதை சிறை) என்று அவர்கள் அழைத்தார்கள், அது நரகமல்ல.  அந்த இடத்திற்கு புதிய ஏற்பாட்டில் இயேசு பரதீசு என்று அழைக்கிறார், மேற்கண்ட வசனங்கள் பழைய ஏற்பாட்டின் முறையின் படி "சிறை" என்றுச் சொல்கின்றன.

இந்த நிகழ்ச்சியில் ஒரு முக்கியமான விவரமும் அடங்கியுள்ளது. இயேசு நிக்கொதேமு  என்ற யூத மத தலைவரிடம் பேசும் போது தான் 13ம் வசனத்தில் இப்படி கூறினார்.

உண்மையில் முதல் வசனத்திலிருந்து 13வது வசனம் வரை நாம் வாசித்தால், இயேசு சொல்வது எப்படி உள்ளதென்றால், "யூத ரபீக்களாகிய நீங்கள் பரலோகத்திற்குச் செல்லவில்லை, அப்படியானால், அங்குள்ளவைகள் பற்றி அவர்களுக்கு எப்படித் தெரியும். ஆனால், நான் அங்கிருந்து தான் வந்தேன், எனவே பரலோகத்தில் உள்ளதைப் பற்றி எனக்கு தான் அதிக அனுபவம் உள்ளது, எனவே நான் பூமிக்கு சம்மந்தப்பட்டவைகளைச் சொன்னாலும் சரி, பரலோகம் பற்றிச் சொன்னாலும் சரி, அதில் உண்மையிருக்கும் எனவே, நீ நம்பவேண்டும்" என்று இயேசு சொல்கிறார்.

யோவான் 3:11-13

11. மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் கண்டதைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறோம்; நீங்களோ எங்கள் சாட்சியை ஏற்றுகொள்ளுவதில்லை.

12. பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்?

13. பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.

ஆக, வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பரிசுத்தவான்கள் அனைவரும் "பரதீசுக்குத் தான்" சென்றார்கள், "பரலோகத்துக்கு அல்ல". மேலும அவர்கள் அனைவரும் தங்கள் சுயசக்தியினால் வானத்துக்குச் செல்லவில்லை, அவர்களை தேவன் எடுத்துக்கொண்டார். ஆனால், இயேசு மட்டுமே பரலோகத்துக்குச் சென்றவர்களில் முதலாமானவர் மேலும் அதனை தம் சுய தெய்வீகசக்தியால் செய்தார். இது போன்று மற்றவர்கள் செய்யமுடியாது.

கடைசியாக இந்த வசனங்களை கவனியுங்கள், தம் உயிரை கொடுக்கவும் அதனை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் தனக்கு அதிகாரம் உண்டென்று இயேசு சொல்கிறார்.  பொதுவாக மனிதர்களுக்கு ஒரு அதிகாரம் தான் இருக்கும் அதாவது "தற்கொலை செய்து தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளலாம், ஆனால் கொடுத்த உயிரை மறுபடியும் எடுத்துக்கொண்டு உயிரோடு வரமுடியாது".

யூதர்கள் தம் உயிரை எடுக்கவில்லை, தாமே அதனை விருப்பமுற்று கொடுக்கிறேன், அதனை மறுபடியும் பெற்றுக்கொள்ளவும்(உயிர்த்து எழுவும்) என்னால் முடியும் என்று இயேசு கூறுகின்றார்.

யோவான் 10:17-18

17. நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார்.

18. ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.

கேள்வி 485: இயேசு தெய்வமானால் அவர் ன் மற்றவர்களுக்காக அழுதார்? இறைவன் அழமுடியுமா? அவர் ஏன் தாகமாக இருந்தார்? உணவு உண்டார்? இறைவனுக்கு தாகமுண்டாகுமா? பார்க்க‌ யோவான் 11:35, 19:28. (இந்த கேள்வியை அஹமத் தீதத் அவர்கள் கேட்டார்கள்)

பதில் 485: இயேசு பூமியில் மனிதனாக வந்தார். அதே நேரத்தில் அவர் இறைவனாகவும் இருந்தார்.

மனிதன் என்ற முறையில், நம்மைப்போன்று இயற்கைக்கு உட்பட்டு தாகமடைதல், பசியடைதல் போன்றவற்றை அவரும் அனுபவித்தார். அதே போன்று தெய்வமாக பல இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதங்களையும் செய்தார்.

முதலாவதாக முஸ்லிம்கள் கவனிக்கவேண்டியது என்னவென்றால், இயேசு பூமியில் மனிதனாக வந்த பிறகு "அவர் தாகமாக இருக்கமாட்டார், உணவு உண்ணமாட்டார்" என்று பைபிள் சொல்லவில்லை.  மனிதனாக வந்த பிறகும், எந்த ஒரு மனித இயல்புக்கும் உட்படாமல் இயேசு வாழ்வார் என்று பைபிள் சொல்லவில்லை.  அதே போன்று, அவர் தெய்வமாகவும் இருப்பதினால், தம் நற்செய்தியை அறிவிப்பதற்கு சான்றாக அவர் பல அற்புதங்களைச் செய்தார். எனவே, இயேசு தாகமாக இருக்கலாமா? பசியாக இருக்கலாமா என்று கேட்பது அறியாமையாகும்.

அடுத்தபடியாக, "இயேசு கண்ணீர் விட்டார்" என்ற விஷயத்துக்கு வருவோம்.

இயேசு அன்புள்ளவர், அவர் தாம் உண்டாக்கிய மக்களை நேசிக்கிறார்.  

எருசலேம் மேசியாவின் வருகையை புரிந்துக்கொள்ளாததினால், அது அனுபவிக்கப்போகும் கொடுமைகளை நினைத்து, இயேசு கண்ணீர் விட்டார்.

லூக்கா 19: 41. 

41 அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது,

தம்முடைய நண்பன் லாசரு மரித்துவிட்டதினால், அவனுக்காக மற்றவர்கள் அழுவதைக் கண்டும் அவரும் அழுதார்.

யோவான் 11:33-36

33. அவள் அழுகிறதையும் அவளோடேகூட வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது ஆவியிலே கலங்கித் துயரமடைந்து: 34. அவனை எங்கே வைத்தீர்கள் என்றார். ஆண்டவரே, வந்து பாரும் என்றார்கள். 35. இயேசு கண்ணீர் விட்டார். 36. அப்பொழுது யூதர்கள்: இதோ, இவர் அவனை எவ்வளவாய்ச் சிநேகித்தார் என்றார்கள்!

இயேசு தெய்வமாகவும் இருந்தார், மனிதராகவும் இருந்தார், தாம் நேசிப்பவர்களுக்காக அவர் அழுதார், இதில் தவறேதுமில்லை.

கண்ணீர் விடுவது தெய்வத்தின் இலக்கணத்திற்கு தகாது என்று முஸ்லிம்கள் சொல்வார்களானால், கோபம் கொள்வதும் தெய்வத்துக்கு தகாது தானே!

ஒரு மனிதன் தம்மை விட்டு தூரமாகச் சென்றால், இயேசு கண்ணீர் விடுகின்றார், ஒரு மனிதன் தம்மைவிட்டு (இஸ்லாமைவிட்டு) தூரமாகச் சென்றால், அல்லாஹ் கோபம் கொள்கின்றான்.

கோபம் என்பது மனித குணமா? இறைவனது குணமா?  தவறு செய்பவர்கள் மீது அல்லாஹ் கோபம் கொள்கின்றான், இதே போன்று மனிதர்களும் கோபம் கொள்கிறார்கள். மனிதனின் ஒரு குணத்தை அல்லாஹ் பிரதிபலிப்பதினால் அதுவும் சொர்க்கத்தில் இருந்துக்கொண்டே கோபத்தை பிரதிபலிப்பதினால், அல்லாஹ் இறைவன் இல்லை என்று முஸ்லிம்கள் சொல்வார்களா?

குர்‍ஆன் 1:7. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.

குர்‍ஆன் 4:93. எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான்.

குர்‍ஆன் 5:80. .. . ஏனெனில் அல்லாஹ்வின் கோபம் அவர்கள் மீதுள்ளது; மேலும் வேதனையில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.

குர்‍ஆன் 16:106. எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) - அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர - (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் குஃப்ரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ - இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு.

குர்‍ஆன் 40:10. நிச்சயமாக நிராகரிப்பவர்களிடம்: "இன்று நீங்கள் உங்கள் ஆன்மாக்களைக் கோபித்துக் கொள்வதைவிட அல்லாஹ்வுடைய கோபம் மிகப் பெரியதாகும்; ஏனென்றால் நீங்கள் நம்பிக்கையின் பால் அழைக்கப்பட்ட போது (அதை) நிராகரித்து விட்டீர்களே" என்று அவர்களிடம் கூறப்படும்.

அல்லாஹ் "மனிதர்களை இஸ்லாமுக்கு அழைக்கும் போது" மனிதன் வராதபோது 'அல்லாஹ் கோபம் கொள்வது' ஒரு வகையான மனித குணம், இதே போன்று அந்த மனிதன் இஸ்லாமை ஏற்றால் 'அல்லாஹ் மகிழுவான் அல்லவா'? மகிழுவது கூட ஒரு குணம் தானே! இதுவும் மனித குணம் தானே!

அல்லாவிற்கு கோபம் கொள்வது, மகிழுவது, மெச்சிக்கொள்வது, வாழ்த்துவது  போன்ற குணங்கள் இல்லையென்று சொல்லமுடியுமா? 

இதே போன்று, இயேசு மாய்மாலக்காரர்களிடம் கோபம் கொண்டார், மக்களிடம் அன்பு செலுத்தினார், மகிழ்ந்தார், சிரித்தார் இவைகளெல்லாம்  அவர் செய்யக்கூடாது என்று நாம் எப்படி சொல்லமுடியும்? இறைவனாக இருந்தாலும் இவைகளை செய்ய அவருக்கு உரிமையுண்டு அல்லவா?  இதே போன்று தான் அல்லாஹ்விற்கும் உரிமையுண்டு.

எனவே, அன்பாகவே இருக்கும் இறைவனாகிய இயேசு கண்ணீர் விட்டதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை!

கேள்வி 486: ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு (எபே 4:4) என்று பைபிள் சொல்லும் போது, ஏன் பல பெயர்களில் திருச்சபைகள் உருவாகியுள்ளன?

பதில் 486: இயேசுவின் திருச்சபை ஒரே திருச்சபை தான், ஆனால் சிறிய வித்தியாசங்கள் மற்றும் கருத்து வேற்றுமைகளினால் பல பெயர்களில் திருச்சபைகள் இயங்குகின்றன.

முதலாவதாக, சில திருச்சபை தலைவர்கள் தங்கள் சொந்த விளக்கங்களுக்கு அதிக முக்கியத்துவம்  கொடுத்துவிடுகிறார்கள். இவர்களின் இந்த புதிய விளக்கங்களை கேள்வி கேட்பவர்களைவிட்டு தனியே சென்று திருச்சபை தொடங்கிவிடுகிறார்கள். எனவே புதிய திருச்சபைகள் உருவாகிவிடுகின்றன.  

பைபிளின் அடிப்படை கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டாலும், தங்கள் சொந்த மேலதிக விளக்கங்களை அந்த திருச்சபை பல ஆண்டுகளாக பின்பற்றுவதினால், அவைகள் சபை  பாரம்பரியங்களாக காலப்போக்கில் மாறிவிடுகின்றன.

இரண்டாவதாக, தற்காலத்தில் பல  கள்ள உபதேசங்கள் வந்துக்கொண்டு இருக்கின்றன. இவர்கள் பைபிளில் சொல்லப்பட்ட அடிப்படை கோட்பாடுகள் சிலவற்றை மறுப்பார்கள், இவர்களினாலும் திருச்சபைகள் பல பெயர்களில் உருவாகின்றன.

கருத்து வேறுபாடுகள் எல்லா மதங்களிலும் உண்டு, இதே போன்று பல பிரிவுகளாக அவர்கள் பிரிந்துள்ளார்கள். ஆனால், இந்த கருத்து வேறுபாட்டினால் ஒருவரை ஒருவர் சண்டையிட்டுக்கொண்டும், கொலை செய்துக்கொண்டும் இருக்கக்கூடாது. இந்த வகையில் கிறிஸ்தவ திருச்சபைகள் தற்காலத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்கிறார்கள் எனலாம்.  இந்த இடத்தில் "சபை பிரிவுகள் (Denominations) என்பது வேறு, மற்றும் பல பெயர்களில் திருச்சபைகள் இருப்பது வேறு" என்பதை புரிந்துக்கொள்ளவேண்டும். முதலாவதைப் பற்றி தான் நான் இங்கு குறிப்பிட்டேன்.  பல பெயர்களில் சபை இருப்பது பிரச்சனை இல்லை, ஆனால் டினாமினேஷன் என்றுச் சொல்லக்கூடிய சபை பிரிவு பற்றி தான் நான் மேலே விளக்கினேன்.

ஆனால், ஷியா சன்னி முஸ்லிம் பிரிவினர் ஒருவரை ஒருவர் கொலை செய்துக்கொண்டு இருக்கிறார்கள், இன்றும் இது தொடர்கிறது. என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

கேள்வி 487: யாக்கோபு 1:13ன் படி தேவன் யாரையும் சோதிப்பதில்லை, ஆனால் வேறு சில வசனங்களில் தேவன் சோதித்தார் என்று வருகிறதே? ஏன் இந்த முரண்பாடு? இந்த கேள்வியை அஹமத் தீதத் என்பவர் கேட்டார்

பதில் 487: முதலாவதாக, யாக்கோபு 1:13ம் வசனத்தை படிப்போம்.

யாக்கோபு 1:13 சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.

"சோதனை" என்ற வார்த்தை பல சூழ்நிலைகளில் பல பொருள்களில் பயன்படுத்தப்படுகின்றது. 

ஆங்கிலத்தில் "Tempting" and "Testing" என்றுச் சொல்கிறோம்,  இவ்விரண்டும் ஒன்றா என்று பார்த்தால், "இல்லை" என்பது தான் பதில்.

  • Tempt -"ஒருவர் ஒரு தீமையில் விழுந்துவிடும்படி இன்னொருவர் சோதித்தல், தடைகளை உண்டாக்குதல் அல்லது தவறு என்று தெரிந்தும் செய்ய விரும்புதல்" (இணையத்தில் கிடைத்த பொருள் - A feeling that you want to do something, even if you know that it is wrong. a thing that attracts you to do something wrong or silly).
  • Test - "ஒருவர் முன்னேறுவதற்கு வைக்கப்படும் பரிட்சை என்று பொருள்" (இணையத்தில் கிடைத்த பொருள் - To examine somebody's knowledge or skill in something).

தேவன் ஒரு போதும் "மனிதன் விழுந்து போகும்படி சோதிக்கிறவர் (Tempting) அல்ல" என்பதைத் தான் மேற்கண்ட வசனம் சொல்கிறது.

ஆனால், அதே தேவன் நாம் விசுவாசத்தில் முன்னேறும்படியாகவும், இதர காரியங்களில் சிறப்பாக விளங்கவேண்டும் என்பதற்காக "அவர் நம்மை Test செய்வார் அதாவது பரிட்சை வைப்பார்".

நாம் படிக்கும் போது, பரிட்சை எழுதுகிறோம், அது டெம்ட் கிடையாது, அது டெஸ்ட். 

பரிட்சைக்கு பிறகு  என்ன நடக்கும், நமக்கு ஒரு சான்றிதழ் கொடுக்கப்படும், நாம் முன்னேறுவதற்கு வேலை பெறுவதற்கு அது உதவும். எனவே தேவன் நமக்கு பரிட்சை வைப்பார் (நம்மை ஆசீர்வதிப்பதற்காக), ஆனால், சாத்தான் தான் நம்மை சோதிப்பான் (நாம் தவறு செய்யவேண்டுமென்பதற்காக).

எனவே, இதில் எந்த ஒரு முரண்பாடும் இல்லை.

கேள்வி 488: இயேசு தம் தாயை "ஸ்திரியே" என்று ஏன் அழைத்தார், மேலும் விபச்சாரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணையும் "ஸ்திரியே" என்று தான் இயேசு அழைத்தார், இது சரி தானா? பார்க்க யோவான் 2:4, 8:10. இந்த கேள்வியை அஹமத் தீதத் கேட்டார்

பதில் 488: இயேசு தம் தாயை ஸ்திரியே என்று அழைத்து அவமானப்படுத்திவிட்டார் என்று அஹமத் தீதத் என்ற முஸ்லிம் கருதிவிட்டார்.

இயேசு தம் தாயை அவமதிக்கவில்லை, முதல் நூற்றாண்டு அராமிக் பேசும் யூத கலாச்சாரத்தில், ஸ்திரியே என்று அழைத்தால், ஆங்கிலத்தில் இன்று நாம் "லேடி" என்றுச் சொல்லக்கூடிய வார்த்தை இருக்கிறதே, அதை விட மதிப்பு மிக்க வார்த்தையாகும்.

இயேசு யாரையும் அவமானப்படுத்தவில்லை, பெண்களை மிகவும் கேவலமாக பார்த்த  யூத மத தலைவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்து, அந்த விபச்சார குற்றத்தில் பிடிபட்ட பெண்ணுக்காக பரிந்து பேசினார்.

யோவான் 2:4. அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார்.

யோவான் 8:10. இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்.

இயேசுவோடு எப்பொழுதும் சமுதாயத்தின் அடிமட்ட நிலையில் இருக்கும் மக்கள், பெண்கள் உட்பட சூழ்ந்திருந்தார்கள். பாவிகள் என்று யூதர்கள் குற்றப்படுத்தப்பட்ட மக்களோடு இயேசு உலாவினார். இயேசு பெண்களை அவமதிக்கின்றவராக இருந்திருந்தால், சமாரியா ஊரிலிருந்து வந்த அந்த ஒரு பெண்ணோடு பேசமாட்டார், அப்பெண் தன் கடந்த கால வாழ்க்கையில் ஐந்து திருமணங்கள் புரிந்திருந்தாலும், அப்பெண்ணை அவர் கேவல‌ப்படுத்தவில்லை.  அப்பெண்ணின் கடந்த  கால வாழ்க்கையை தெரிந்திருந்தும், அப்பெண்ணின் மூலம் அவ்வூரில் நற்செய்தியை பரப்பினார்.

தீய‌ காரியங்களில் ஈடுபட்டிருந்த பெண்களும் ஆண்களும் நேர்வழியில் வரவேண்டும் என்று விரும்பிய இயேசு எப்படி தன்னை பெற்றெடுத்த தாயாரை (அவர் தான் மரியாளை தெரிந்துக்கொண்டார்) அவமானப்படுத்துவார்?

கானா ஊர் திருமணத்தில் தன் தாயை "ஸ்திரியே" என்று அழைத்தது தவறு என்று முஸ்லிம்கள் சொல்வார்களானால், தாம் சிலுவையில் அறையப்படும் போது கூட ஏன் அவர் "தம் தாயைப் பார்த்து ஸ்திரியே" என்று அழைத்தார்? அந்த நேரத்தில் இயேசு மரியாளின் மீது கோபமாக இருந்தாரா? இல்லையல்லவா?

பார்க்க: யோவான் 19:25-27

25. இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.

26. அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.

27. பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்.

ஆக, இயேசு தன் தாயை ஒருபோதும் அவமதிக்கவில்லை என்பது இதன் மூலம் அறியலாம்.

கேள்வி 489:  ஒரு கிறிஸ்தவன் முஸ்லிமாக மாறி சில ஆண்டுகள் கழித்து, மறுபடியும் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு வாழுவது சாத்தியமா? இதற்கு பைபிளில் சான்றுகள் உண்டா?

பதில் 489: ஆம், இது  சாத்தியமே. இப்படி அனேகரை நான் கண்டு இருக்கிறேன். என் நண்பர்கள் மூலமாகவும் அனேகரை இப்படி அறிந்திருக்கிறேன்.

உதாரணத்திற்கு சொல்லவேண்டுமென்றால், தற்காலத்திலும் முஸ்லிம்கள் பல கிறிஸ்தவர்களை சந்தித்து அவர்கள் மனதை குழப்பி, இயேசு தெய்வமில்லை, அவர் ஒரு தீர்க்கதரிசி மட்டும் தான் என்றுச் சொல்லி, வாலிப கிறிஸ்தவர்களை அல்லது அறியாமையில் இருப்பவர்களை முஸ்லிம்களாக மாற்றுகிறார்கள்.

பைபிள் பற்றியும், இயேசுவின் தெய்வீகத்தைப் பற்றியும் அறியாத கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் சொல்வதை நம்பிவிடுகிறார்கள்.  மேலும் முஸ்லிம்கள் சொல்வதை சரி பார்க்கும் அளவிற்கு இவர்களுக்கு பைபிளின் இறையியலும், குர்‍ஆனின் இறையியலும் தெரியாமல் இருப்பதினால், இவர்கள் இஸ்லாமை தழுவுகிறார்கள்.

ஆனால், நாட்கள் செல்லச்செல்ல, முஸ்லிம்கள் இஸ்லாம் பற்றிச் சொன்னவைகளையும், பைபிள் பற்றி சொன்னவைகளையும் ஆழமாக அறிய முற்படும் போது, இவர்களுக்கு உண்மை புரிய  ஆரம்பிக்கிறது. முஹம்மது உலகத்திலேயே மிகவும் நல்லவர் என்று முஸ்லிம்கள் ஆரம்பத்தில் சொல்லியிருப்பார்கள், ஆனால், குர்‍ஆனையும் ஹதீஸ்களையும் இவர்கள் இஸ்லாமுக்குள் இருந்துக்கொண்டு அறியும் போது, இது  பொய் என்பதை இவர்கள் உணர்ந்துக்கொள்கிறார்கள். 

முஹம்மது என்பவர் உண்மையாகவே ஒரு நபியாக இருக்கமுடியாது என்பதை அறிந்துக்கொள்கிறார்கள், இதே போன்று பைபிள் பற்றிய விவரங்களையும் அறியும் போது, எது சத்தியம் என்பதை இவர்கள் உணர்ந்துக்கொண்டு, கடைசியாக இஸ்லாமை விட்டு வெளியேறுகிறார்கள்.

இந்த நிலையை ஒரு ஆண் அடைந்தால், அவருக்கு  சிறிதாவது இஸ்லாமை விட்டு வெளியேற வாய்ப்பு கிடைக்கும். ஆனால், ஒரு பெண் இப்படி இஸ்லாமுக்குச் சென்று மறுபடியும் கிறிஸ்தவளாக வரவேண்டுமென்றால் கடினம் தான்.  அதிலும், ஒரு முஸ்லிமை திருமணம் செய்துக்கொண்டு இருந்தால், அவளால் தன் முஸ்லிம் கணவனையும், பிள்ளைகளையும் விட்டு வருவது கடினமே.

பைபிளில் இதற்கு சான்று உள்ளதா? என்று கேட்டால், உள்ளது என்பது தான் பதில். பைபிளின் அடிப்படை கோட்பாடே "மனந்திரும்புங்கள்" என்பது தான். மனிதன் ஒரு விஷயத்தை நம்புகிறான், அதையே பின்பற்றுகிறான். தனக்கு சத்தியம் தெரிந்தபிறகு திரும்பி வருகிறான், இதைத் தான் இயேசு யோவான் 8:32ல் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்:

யோவான்  8:32. சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.

இதனால் தான் "அறிவை உணர்த்தவும், சத்தியத்தை புரியவைக்கவும்" நான் இந்த கேள்வி பதில்களை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

கேள்வி 490: ஒரு கிறிஸ்தவர் முஸ்லிமாக மாறிவிட்டால், அவரை திருச்சபையில் தேவனை ஆராதிக்க அனுமதிப்பீர்களா?

பதில் 490: இந்த கேள்வியில் பல குழப்பங்கள் உள்ளன.

ஒருவர் இஸ்லாமை தழுவும் போது, அவர் "அல்லாஹ் தான் இறைவன்" என்றும் இயேசு தெய்வம் இல்லை என்றும்  அறிக்கை கொடுத்தபிறகு தான் முஸ்லிமாக மாறுகின்றார்.  இந்த நிலையில் அவர் கிறிஸ்தவ திருச்சபையில் என்ன செய்யப்போகிறார்? இயேசுவே தெய்வம் என்று பாடல் பாடமுடியுமா? இயேசுவை தொழுதுக்கொள்ளமுடியுமா? இல்லையல்லவா?   எனவே இந்த கேள்வி தவறான கேள்வியாகும்.

ஒருவேளை நான் "இயேசுவை ஆராதிக்கமாட்டேன்" வெறும் திருச்சபையில் உட்கார்ந்துக்கொள்கிறேன் என்று ஒரு முஸ்லிம் சொன்னால், இதையும் ஏற்கமுடியாது, ஏனென்றால், அவர் சும்மா இருக்கமாட்டார் அல்லவா?  திருச்சபை விசுவாசிகளை குழப்புவார் அல்லவா? தன் இஸ்லாமிய கோட்பாடுகளை நம்பிக்கைகளை, பைபிளுக்கு  எதிரான கோட்பாடுகளை பரப்ப ஆரம்பிப்பார் அல்லவா? எனவே, இவர்களை தூரமாக வைப்பது தான் சரியானது.

ஒரு திருச்சபையில் முதிர்ச்சி அடைந்த விசுவாசிகள் இருப்பார்கள், பைபிள் பற்றிய ஆழமான அறிவு இல்லாதவர்கள் இருப்பார்கள், இஸ்லாம் பற்றி ஒரு சதவிகித விவரங்களும் தெரியாதவர்கள் இருப்பார்கள், ஒரு முஸ்லிமை திருச்சபையில் அமர அனுமதித்தால், அவர் குழப்பம் தான் உண்டாக்குவார்.

இதே நிலை எனக்கும் தான். என்னை ஒரு மசூதியில் இருக்கும் மக்களோடு உரையாட அனுமதித்தால், நான் நிச்சயம் இயேசு பற்றித் தான் சொல்லுவேன், இஸ்லாமை நிச்சயம் விமர்சிப்பேன்.

எனவே, சாதாரண  விசுவாசிகளை, முஸ்லிம்களை முன்னாள் கிறிஸ்தவர் அல்லது முன்னாள் முஸ்லிமுக்கு தூரமாக வைப்பது நல்லது என்பது என் கருத்து.

தேதி: 13th Dec 2020


சின்னஞ்சிறு 1000 கேள்வி பதில்கள் பொருளடக்கம்

உமரின் கட்டுரைகள் பக்கம்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2020ramalan/2020-ramalan-20.html