ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

ஞாயிறு, 26 மார்ச், 2017

பீஜே வாக்குமூலம் – உஸ்மான் தொகுத்த குர்-ஆன், எல்லா சஹாபாக்களின் ஒப்புதல் பெற்ற குர்-ஆன் அல்ல

முன்னுரை:

குர்-ஆன் பற்றி முஸ்லிம்கள் பெருமையாக பேசுவார்கள். குர்-ஆன் மாறாதது, குர்-ஆன் அல்லாஹ்வின் வார்த்தை, அதை அல்லாஹ் பாதுகாப்பான், முஹம்மது ஓதிய அதே குர்-ஆன் தான் நாம் இன்று பயன்படுத்துகிறோம். நம்மிடம் உள்ள குர்-ஆனுக்கும், முஹம்மதுவிற்கு இறங்கிய குர்-ஆனுக்கும் இடையே ஒரு வசனம் அல்லது ஒரு எழுத்து  கூட வித்தியாசம் இருக்காது என்று காலங்காலமாக சொல்லிக்கொண்டு வருகிறார்கள். ஆனால், பொய் கலந்த முஸ்லிம்களின் வெறும் நம்பிக்கைகள் மட்டுமே, இவைகளில் உண்மையில்லை. 

குர்-ஆனின் சரித்திரத்தை ஆய்வு செய்யும் எந்த ஒரு மனிதனுக்கும், முஸ்லிம்களின் மேற்கண்ட நம்பிக்கைகள் பொய்யானவை என்று நன்றாகத் தெரியும். இந்த ஆய்வை ஒரு முஸ்லிம் செய்தாலும், அவனும் இதே முடிவைத் தான் எடுப்பான். 

குர்-ஆன் முழுமையானதல்ல என்று பல ஆண்டுகளாக கிறிஸ்தவர்களும், இதர மக்களும் இணையத்தில் தங்கள் ஆய்வின் முடிவை எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். 

1) பீஜே போன்ற அறிஞர்களின் மாய்மாலப் பேச்சுக்கள்

பி. ஜைனுல் ஆபீதின் போன்ற முஸ்லிம் அறிஞர்களுக்கு, இந்த விஷயம் தெரிந்திருந்தாலும், முஸ்லிமல்லாதவர்களுக்காக பேசும் பேச்சுக்களில், அதாவது மேடை பேச்சுக்களில், விவாதங்களில் 'குர்-ஆனைப் பற்றி ஆஹா ஓஹோ' என்று பொய்களை அள்ளி அள்ளி வீசுவார்கள். ஆனால், இஸ்லாமுக்கு ஒரு தனித்தன்மை உள்ளது. இஸ்லாமின் இறையியல் விஷயங்கள் பற்றி 'முஸ்லிம்களே தங்களுக்குள் சண்டை போட்டுக்கொள்வது' முஸ்லிம் அறிஞர்கள் இடையே ஒரு தகுதியாக மாறிவிட்டது. 

நம் தமிழ் நாட்டில் ஒருவர் '(பெரிய) முஸ்லிம் அறிஞர்' என்று பெயர் பெறவேண்டுமென்றால், அதற்கான அடிப்படை தகுதி, "அவர் இன்னொரு முஸ்லிம் அறிஞரின் கருத்துக்களை மறுத்து மேடைகளில் பேசவேண்டும்". அப்போது தான் நம் தமிழ் முஸ்லிம்கள்,"அவரை முஸ்லிம் அறிஞர்" என்று ஏற்றுக்கொள்வார்கள். 

இந்த நிலையில் பார்க்கும் போது, பீஜே அவர்களின் பேச்சுக்களை கூர்ந்து கவனித்தால், முஸ்லிமல்லாத மக்கள் மேடைகளில் ஒரு பேச்சு, அவர்களுக்குள் விவாதித்துக்கொள்ளும் போது இன்னொரு பேச்சு.  ஒரு மேடையில் "உலகில் எங்கு போனாலும் ஒரே குர்-ஆன் தான் என்று வீர முழக்கவிடுவார்", இன்னொரு மேடையில், குர்-ஆனில் பல மூலங்கள் உண்டு என்று ஒப்புக்கொள்வார். நம் தமிழ் கிறிஸ்தவர்கள் கடந்த சில ஆண்டுகளாக தங்கள் சாப்பாட்டில் கொஞ்சம் அதிகமாகவே உப்பு போட்டு சாப்பிட ஆரம்பித்துள்ளார்கள் என்று தெரிகிறது[என்னையும் சேர்த்து தான்]. எனவே, இப்படிப்பட்ட முஸ்லிம்களின்  பேச்சுக்களில் உள்ள வித்தியாசங்களை கச்சிதமாக படம் பிடித்து பதித்துவிடுகிறார்கள். இந்த வகையில் தமிழ் கிறிஸ்தவர்கள் பீஜே அவர்களின் இரண்டு நிமிட பேச்சை வெட்டி எடுத்து பதித்துள்ளார்கள், அந்த விடியோ தான் இக்கட்டுரையின் கருப்பொருள். 

2) பீஜே அவர்களின் வாக்கு மூலம் - இப்னு மஸ்வூத் குர்ஆனில் 112 அத்தியாயங்களே இருந்தன

இந்த வீடியோவை பதித்த சகோதரருக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

யூடியூப் மூலம்: https://www.youtube.com/watch?v=buoNMeO5jv0

தலைப்பு: இப்னு மஸ்வூத் குர்ஆனில் 112 அத்தியாயங்களே இருந்தன - பீஜே

வீடியோ: 2:09 நிமிடங்கள்.

இவ்வீடியோவில் பீஜே அவர்கள் பேசியவைகளின் எழுத்துவடிவம் (பேச்சு வழக்கு வார்த்தைகளை மொழியாக்கம் செய்தது, படிப்பதற்கு சிறிது சிரமமாக இருக்கும், எனவே, பிஜே அவர்களின் இரண்டு நிமிட வீடியோவையும் பார்த்துக்கொள்ளுங்கள்). 

குர்-ஆனில் இல்லாத, ஹதீஸில் இல்லாத ஒரு விஷயத்தில், சஹாபாக்கள் அத்தனைப் பேரும் ஒருமித்த கருத்துக்கு வந்தார்கள் என்றுச் சொன்னால், அதுக்கு ஒரு உதாரணம் காட்ட இயலாது. காட்டராங்கன்னா, அந்த குர்-ஆனை "அவங்க தானே தொகுத்தாங்கன்னு காட்டுவாங்க" அதுவே தவறு.  என்ன தவறு? குர்-ஆன் "இஜ்மா" வாக ஏற்றுக் கொள்ளப்படவே கிடையாது. இப்போ, இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் குர்-ஆனை எழுதக்கூடிய எழுத்தாளர்களில் அவரும் ஒரு ஆள். அவருடைய குர்-ஆனில் 112 ஸூரா தான். இப்னு மஸ்வூத் ரலி தொகுத்த குர்-ஆனில் எத்தனை ஸூரா? 114 ஸூரா கிடையாது. கடைசி இரண்டு ஸூரா குர்-ஆனே கிடையாது என்று சொல்லிவிட்டார் அவர். கடைசி வரைக்கும், கடைசி வரைக்கும் என்ன பண்ணிட்டாரு? குல் அஊது பி ரப்பில் ஃபலக் வந்து குர்-ஆன் கிடையாது, குல் அஊது பி ரப்பின்னாஸ் குர்-ஆன் கிடையாது. குல் ஹுவல்லாஹு அஹத்வோடு முடிந்துவிட்டது குர்-ஆன் என்று சொல்லிவிடுவார். அப்ப, அவருடைய குர்-ஆன், குர்-ஆனில் எல்லாரும் ஏகமனதாக வந்தார்கள் என்றுச் சொன்னால், ஏக மனதாக வரவில்லையே. ஏகமனதாக வரவில்லை, அத நல்லா விளங்கிக்கொள்ளுங்கள். 

அதே மாதிரி வந்து, அலி (ரலி) அவருடைய குர்-ஆனை எடுத்துப் பார்த்தீங்க என்றுச் சொன்னால், இப்ப நீங்க வெச்சிக்கிட்டு இருக்கீங்களே, இந்த ஆர்டரில் இருக்காது, அவருடைய குர்-ஆனில் எப்படி இருக்கும்? அவர் முதல் ஸூரா இக்ரா தான் போட்டு வெச்சிருப்பாரு. குர்-ஆன் எந்த வரிசையில் வந்ததோ, அந்த வரிசையில் அவர் தொகுத்து இருப்பாரு. நம்ம குர்-ஆனில், நம்மலே விளங்கி வெச்சிருக்கிறோம், ஃபர்ஸ்ட் குர்-ஆனில் எது எறங்கிடுச்சி? இக்ரா ஸூரா எறங்கிடுச்சி என்று வெச்சிருக்கிறோம். அதை கொண்டு போய் 96வதில் வெச்சிருக்கிறோம். இக்ரா தான் முதல்லெ எறங்கிச்சுன்னா அது தானே மொதல்ல இருக்கணும். ஆனால், நம்ம குர்-ஆன் எங்கே இருக்கு அந்த இக்ரா ஸூரா? 96வது ஸூராவாக கொண்டு போய் வெச்சிருக்கிறோம், ஃபர்ஸ்ட் எறங்கின ஸூராவே, இல்லையா?! அப்படியெல்லாம் இருக்கும் போது, சஹாபாக்கள் கிட்டேயே 40க்கு மேற்பட்ட இது இருந்தது, குர்-ஆனுடைய விஷயங்கல்லே, மாறுபட்ட கருத்து வேறுபாடுகள் இருந்தது. 

உஸ்மான் (ரலி) அவர்கள் வந்து ஆட்சியிலே இருந்ததினாலே, அவங்க சட்டம் போட்டு, சில விஷயங்களே செஞ்சாங்க, அதை மக்கள் கிட்டே கொண்டு போனாங்க, கவர்மெண்ட் இருந்ததுனாலே. அதுனாலே நாம் என்ன விளங்கிக் கொள்ளக்கூடாது? சஹாபாக்கள் எல்லாம் குர்-ஆன் விஷயத்தில், ஒண்ணா, அப்படியெல்லாம் நாம் சொல்லுவது சரி கிடையாது, விளங்குதா! இஜ்மா என்பது எதிலேயும் ஏற்பட்டது கிடையாது. எந்த ஒரு விஷயத்துலேயுமே! இஜ்மா எடுத்துக்கிடது விட்டுவிடுவோம்,  ஒரு உதாரணம் சொல்லுங்க என்றுச் சொன்னால், சொல்லமாட்டேங்கிரீங்களே. எதை எடுத்துக்கிடறது என்றுச் சொல்றீங்க? இஜ்மா என்று ஒன்றை காட்டினால் தானே, நாம் எடுத்துக்கிற பேச்சே வரும். இஜ்மா என்பதே கிடையாது. எந்த ஒரு சஹாபாக்களும் ஏகமனதாக சேர்ந்து என்ன செய்யலே, எங்க எல்லாருக்கும் இது தான் கருத்து என்று ஒருத்தரும் சொன்னதே கிடையாது.

3) இந்த இரண்டு நிமிட பேச்சு சொல்லும் உண்மைகள் என்ன?

மேற்கண்ட வீடியோவை பார்த்து இருந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த இரண்டு நிமிட பேச்சு எவைகளை நமக்குச் சொல்கிறது? இவைகள் ஒரு சராசரி முஸ்லிமின் இஸ்லாமிய நம்பிக்கையை தகர்த்துவிடுகின்றதாக இருக்கிறது. இதற்கு பீஜே அவர்கள் பொறுப்பு என்று சொல்லக்கூடாது, ஏனென்றால், அவர் சொந்தமாக அவைகளைச் சொல்லவில்லை, இஸ்லாமிய சரித்திர நூல்களில், ஸஹீஹ் ஹதீஸ்களில் உள்ளவைகளைத் தான் அவர் சொல்லியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையை எத்தனை ஆண்டுகள் மறைத்தாலும், அது மறைந்தே இருக்கும் என்று எண்ணுவது முட்டாள்தனமாகும். 

சரி, விஷயத்துக்கு வருவோம், மேற்கண்ட பேச்சு நமக்கு கற்றுக்கொடுக்கும் விவரங்களும் இதர பின்னணிகளும். முஸ்லிம்கள் ஒரு பொய்யான விவரங்களை இதுவரை நம்பிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெளிவாக விளங்குகிறது.

1) முஹம்மது மரித்த போது, அவர் தன்னிடம் ஒரு முழு குர்-ஆனை வைத்திருக்கவில்லை. அதனை அவர் வைத்திருந்திருந்தால், அதனை சஹாபாக்கள் அனைவரும் அறிந்திருந்திருப்பார்கள். அவர் மரித்த பிறகு, தங்கள் பிரதிகளை, அவர் விட்டுச்சென்ற பிரதியோடு ஒப்பிட்டுக்கொண்டு தங்கள் பிரதிகளை திருத்திக்கொண்டு இருந்திருப்பார்கள். ஆனால், முஹம்மது தன்னிடம் ஒரு பிரதியை அதாவது 23 ஆண்டுகளாக ஜிப்ரீல் மூலமாக இறக்கப்பட்ட அல்லாஹ்வின் வசனங்கள் அடங்கிய ஒரு பிரதி அவரிடம் முழுவதுமாக, புத்தகமாக இருந்ததில்லை. முஹம்மது மரித்த போது அவரது உள்ளத்தில் அல்லாஹ் பாதுகாத்த குர்-ஆனும் அழிந்துவிட்டது.

2) முஹம்மது மரித்து 20 ஆண்டுகளில், உத்மான் குர்-ஆனை தொகுத்த போது, 40க்கும் அதிகமான குர்-ஆன்கள் சஹாபாக்களிடம் இருந்தன. கவனிக்கவும், இவைகள் மொழியாக்கங்கள் அல்ல, அரபி மூலங்கள். 

3) முஹம்மதுவின் நெருங்கிய தொழர்கள் தங்களுக்காக குர்-ஆனை தொகுத்து வைத்திருந்தார்கள். இப்னு மஸ்வூத் என்பவரிடம் குர்-ஆனின் 113, 114 அத்தியாயங்கள் இல்லை. (இன்னும் சிலர் அல் ஃபாத்திஹா என்ற அத்தியாயத்தையும் இவர் குர்-ஆனாக கருதவில்லை என்றுச் சொல்வார்கள்).

4) இந்த வீடியோவை பொருத்தமட்டில், இப்னு மஸ்வூத் என்பவரைப் பற்றி மட்டுமே பார்போம். "கடைசிவரை" என்று பீஜே அவர்கள் குறிப்பிடுவது எதனை என்றுச் சொன்னால், இப்னு மஸ்வூத் மரிக்கும் வரை என்று பொருள். உஸ்மான், இவரிடமிருந்த குர்-ஆனை பரித்து எறித்துவிடுங்கள் என்று ஆணையிட்ட பிறகும் இவர் கொடுக்கவில்லை. பாவம் இவர், தன்னிடமிருந்த குர்-ஆனுக்காக உயிரை தியாம் செய்தார்.

5) இவர்களிடமிருந்து குர்-ஆனை கற்றுக்கொள்ளுங்கள் என்று முஹம்மது குறிப்பிட்ட நான்கு நபர்களில், இந்த இப்னு மஸ்வூத் என்பவர் முதலாவது வருபவர்[1]. மேலும், முஹம்மதுவிடம் இவர் 70க்கும் அதிகமான அத்தியாயங்களை ஓதிக்காட்டியுள்ளாராம், அவ்வளவு முக்கியமானவர் இவர்.

6) மிகவும் வயது முதிர்ந்த பெரியவராக இருந்த இவரை அடித்து இவரது குர்-ஆனை பரித்துக் கொண்டதாக இஸ்லாமிய சரித்திரம் கூறுகின்றது. தன் குர்-ஆனை கொடுக்காததால் தாக்கப்பட்ட இவர், அதே காயங்களால் சில நாட்களில் மரித்தாராம்.

7) 40க்கும் அதிகமான குர்-ஆன்களை சஹாபாக்கள் வைத்திருந்தனர். அதாவது ஒவ்வொருவரிடம் இருக்கும் குர்-ஆன்கள் வசனத்துக்கு வசனம் ஒரே மாதிரியாக அப்போது இருந்ததில்லை. அத்தியாயங்களின் வரிசைகள், வசன எண்களைப் பற்றி இங்கு குறிப்பிடவில்லை.  

8) வசன எண்ணிக்கையில் வித்தியாசம், வார்த்தைகளில் வித்தியாசம், அத்தியாயங்களில் வித்தியாசங்கள் இருந்தன. இதனைத் தான் பீஜே அவர்கள் குறிப்பிட்டார்கள், "இப்னு மஸ்வூத்திடம் இரண்டு அத்தியாயங்கள் இல்லை".  இது மட்டுமல்ல இன்னொரு சஹாபாவிடம் இரண்டு ஸூராக்கள் அதிகமாக இருந்தன. 

9) "இந்த குர்-ஆனை சஹாபாக்களாகிய நாங்கள் ஒருமித்து ஏற்றுக்கொள்கிறோம்" என்ற கருத்து ஒருமித்து உருவானதில்லை. இது தான் இஸ்லாமிய சரித்திரம் சொல்லும் விவரம், இதனை பீஜே அவர்களும் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

10) உத்மான் அரசு பதவியில் இருந்தபடியினால் தான், இப்படிப்பட்ட குர்-ஆனை நாம் வைத்திருக்கிறோம், வேறு ஒரு நபர் ஆட்சியில் இருந்திருந்தால், இன்று நாம் வைத்திருக்கும் குர்-ஆன் வேறு ஒரு குர்-ஆனாக இருந்திருக்கும் என்று மறைமுகமாக பீஜே சொல்கிறார். ஒரு வேளை இப்னு மஸ்வூத் ஆட்சியில் இருந்திருந்தால்? இன்று நம்மிடம் இருக்கும் குர்-ஆனில் 112 அத்தியாயங்கள் மட்டுமே இருந்திருக்கும்.  [இதைத் தானே, நாங்களும் 10 ஆண்டுகளாக சொல்லிக்கொண்டு இருக்கிறோம், பீஜே அவர்களே, தமிழ் முஸ்லிம்களே].

முடிவுரை:

இவைகளை பார்க்கும் போது, ஒரு சின்ன திட்டம் கூட இல்லாமல் அல்லாஹ் தன் வேதத்தை உலகிற்கு அனுப்பியுள்ளான் என்று தெரிகின்றது. முஹம்மதுவின் உயிரை எடுத்துக்கொள்வதற்கு முன்பாக, ஒரு புத்தகமாக குர்-ஆனை தொகுத்துவிட்டு, அதனை சரி பார்த்து ஒரு அதிகார பூர்வமான தொகுப்பை அல்லாஹ் கொடுத்திருந்தால், இஸ்லாமிய சரித்திரம் வேறு மாதிரியாக இருந்திருக்கும், இப்னு மஸ்வூத் தம் உயிரை தியாகம் செய்திருக்கவேண்டிய அவசியம் இருந்திருக்காது. அவ்வளவு ஏன், ஷியா என்ற இஸ்லாமிய பிரிவு உருவாகியிருந்திருக்குமா? என்பது கூட சந்தேகமே. ஏன் அல்லாஹ் முஹம்மது உயிரோடு இருக்கும் போதே குர்-ஆனை தொகுக்கவில்லை? சரி, முஹம்மதுவிற்காகவாவது இந்த ஐடியா வந்ததா என்று பார்த்தால், அதுவும் இல்லை. கடைசியாக, சஹாபாக்களாவது முஹம்மதுவிற்கு சொல்லி இருக்கலாம் அல்லவா? முஹம்மதுவும் சஹாபாக்களும் குர்-ஆனை ஒரு புத்தகமாக தொகுப்பதைவிட இன்னொரு பெரிய வேலையில் பிஸீயாக இருந்திருக்கவேண்டும்.

  1. முஸ்லிம்களே, உங்கள் கைகளில் தவழுவது அல்லாஹ் இறக்கிய குர்-ஆனா? அல்லது உஸ்மான் அதிகாரத்தில் இருந்தபடியினால் தொகுத்த குர்-ஆனா?
  2. உஸ்மான் தொகுத்த குர்-ஆனை மஸ்வூத் ஏன் ஏற்க மறுத்தார்?
  3. மஸ்வூதின் குர்-ஆனை உஸ்மான் ஏன் ஏற்க மறுத்தார்? அதனை கொளுத்தவேண்டும் என்று ஏன் உஸ்மான் விடாப்பிடியாக இருந்தார்?
  4. மஸ்வூதுக்கு 113, 114 அத்தியாயங்கள் குர்-ஆனின் ஒரு பாகம் என்று தெரியாமல் போனது எப்படி?
  5. அரைகுறை விவரங்கள் அறிந்திருந்த மஸ்வூத்திடமா குர்-ஆனை கற்றுக்கொள்ளுங்கள் என்று முஹம்மது சொன்னார்? அரைகுறை குர்-ஆனையா மஸ்வூத் தன் பகுதியில் இருந்த முஸ்லிம்களுக்கு கற்றுக்கொடுத்துக் கொண்டு இருந்தார்?
  6. உஸ்மான் தொகுத்த குர்-ஆனைத்தான் அல்லாஹ் முஹம்மதுவிற்கு இறக்கியிருந்தான் என்பதற்கு என்ன கியாரண்டி?

பீஜே அவர்களே, தமிழ் முஸ்லிம்களே, இன்று நீங்கள் ஓதும் குர்-ஆனைத் தான் முஹம்மது ஓதினார் என்பதற்கு என்ன கியாரண்டி? சில அத்தியாயங்கள், வசனங்கள் உஸ்மானின் குர்-ஆன் தொகுப்பிலிருந்து விடப்பட்டுவிட்டன என்று இஸ்லாமிய சரித்திரம் சொல்லும்போது, எந்த நம்பிக்கையில் நீங்கள் குர்-ஆனை படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்? 

இவ்விவரங்கள் அனைத்தும் நமக்குச் சொல்லும் உண்மை: 'அல்லாஹ் தன் கடைசி வேதத்தை காக்க வல்லமையற்றவனாகிவிட்டானே' என்று நினைக்கும் போது மனதுக்கு வேதனையாக உள்ளது.

குர்-ஆன் ஆய்வு பற்றிய இதர தமிழ் கட்டுரைகள்

4. பல விதமான அரபி குர்‍ஆன்கள் (THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR'AN)

அடிக்குறிப்புக்கள்:

[1] யாரிடமிருந்து குர்-ஆனை கற்கவேண்டும்? - ஸஹீஹ் புகாரி எண் 3758

மஸ்ரூக்(ரஹ்) அறிவித்தார் 

அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களைப் பற்றிய பேச்சு வந்தது. அப்போது அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி), 'அவர் எத்தகைய மனிதரென்றால், இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம், உபை இப்னு கஅப், முஆத் இப்னு ஜபல் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள்" என்று சொல்லி அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களை முதலாவதாகக் குறிப்பிட்டதைக் கேட்ட பிறகு அவரை நிரந்தரமாக நான் நேசிக்கலானேன் " என்று கூறினார்கள். 

அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் இப்னு முர்ரா(ரஹ்), 'அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி), உபை இப்னு கஅப்(ரலி) அவர்களை முதலாவதாகச் சொன்னாரா, முஆத்(ரலி) அவர்களை முதலாவதாகச் சொன்னாரா (இவர்களிருவரில் யாரை முதலில் குறிப்பிட்டார்) என்று எனக்குத் தெரியாது" என்று கூறுகிறார்கள்.


பீஜே அவர்களுக்கு கொடுத்த இதர பதில்கள்/மறுப்புக்கள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/answerpj/quran_authority_doubt.html


இஸ்லாமை சரியான முறையில் யாரிடம் கற்றுக்கொள்வது? (Subjective Islam – Objective Islam)

ஒரு முஸ்லிமல்லாத நபரின் மூலமாக இஸ்லாமை கற்றுக்கொள்ள சிலர் விரும்புவதில்லை. அந்த நபர் ஒரு பேராசிரியராக இருந்தாலும், அவரிடம் ஆதாரபூர்வமான விவரங்கள் இருந்தாலும், சிலர் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்புவதில்லை. இஸ்லாமிய பட்டப்படிப்பு படிக்காதவன் எப்படி இஸ்லாமில் புலமை பெறமுடியும்?

யார் நமக்கு இஸ்லாம் பற்றிய உண்மையான விவரங்களைச் சொல்வார்கள்? என்பது தான் சரியான கேள்வி.  இந்த கேள்வியை முஸ்லிம்களிடம் கேட்டால், அவர்கள் இவ்விதமாக பதில் சொல்வார்கள், "உண்மையாக இஸ்லாமை பின்பற்றும் நாட்டில் வாழும், ஒரு சரியான முஸ்லிமை சந்தித்து அவரிடம் கற்றுக்கொண்டால், உங்களுக்கு சரியான இஸ்லாம் பற்றிய விவரம் கிடைக்கும். மேலும், நீங்கள் ஒரு தவறான முஸ்லிமிடம் (தீவிரவாதத்தை நம்பும் முஸ்லிமிடம்) கற்றுக்கொள்ள முயன்றால் உங்களுக்கு தவறான விவரங்கள் தான் கிடைக்கும், நீங்கள் அந்த விவரங்களை நிச்சயமாக விரும்பமாட்டீர்கள்".

இஸ்லாமை கற்றுக்கொள்ள சௌதி அரேபியா அல்லது துருக்கி சரியான நாடுகளாக இருக்குமா? ஒரு வஹாபி இமாமோ அல்லது இதர இஸ்லாமிய அறிஞர்களோ, நாம் இஸ்லாமைக் கற்றுக்கொள்ள சரியான நபர்களாக இருப்பார்களா? நாம் எந்த நபரிடமும் இஸ்லாம் பற்றி கேட்டாலும், அவர் தனக்குத் தெரிந்த, அல்லது தான் நம்புகின்ற விவரங்களை மட்டுமே கற்றுக்கொடுப்பார், மேலும் அது தான் உண்மையான இஸ்லாம் என்றும் சொல்லுவார். இதைத் தான் சப்ஜெக்டிவ் இஸ்லாம் (Subjective Islam) என்றுச் சொல்லுவோம். உனக்கு கற்றுக்கொடுக்கப்படும் விவரம், நீ யாரிடம் கேட்கிறாய் என்பதைச் சார்ந்து இருக்கும். இதோ! இந்த இஸ்லாமிய அறிஞரிடம் இந்த குறிப்பிட்ட கேள்வியைக் கேட்டால், நாம் விரும்பும் பதிலைச் சொல்வார், அதோ அந்த இஸ்லாமிய அறிஞரிடம் இதே கேள்வியைக் கேட்டால், பதில் வேறுவிதமாக வரும் என்பதை முஸ்லிம்கள் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர்.

ஆனால், உலகில் ஒரே ஒரு மூலம் உள்ளது, அதன் வாயிலாக நீங்கள் இஸ்லாமை அறிந்தால், அது விருப்பு வெறுப்பு இன்றி எதையும் மறைக்காமல் 'உண்மையான இஸ்லாமை' உங்களுக்கு கற்றுக்கொடுத்துவிடும். நீங்கள் முஸ்லிம்களிடம் கேட்டுப்பாருங்கள், இந்த ஒரு விஷயத்தைப் பற்றி உலகில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஒருமித்த கருத்தைச் சொல்வார்கள். அது என்னவென்றால், 'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை, முஹம்மது அல்லாஹ்வின் தூதர் ஆவார்' என்பதாகும். இஸ்லாமை அதன் தூயவடியில் அறியவேண்டுமென்றால், இந்த மேற்கண்ட வாசகம் தான் அதன் தொடக்கமாக இருக்கும், இதனை 100% முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.

குர்-ஆனில் அல்லாஹ்வை காணலாம். மேலும், நீங்கள் குர்-ஆனை படிக்கும் போது, முஸ்லிம்கள் தங்கள் நன்னடத்தைக்காக முஹம்மதுவையே நோக்கிப் பார்க்கவேண்டும், அவரை அவர்கள் அணுவணுவாக பின்பற்றவேண்டும் என்று குர்-ஆன் 91 வசனங்களில் கூறுவதை கவனிக்கலாம். முஹம்மது எப்படி நடந்துக்கொண்டார், அவர் எவைகளை போதித்தார் என்பதை நாம் அறிந்தால் தானே அவரை பின்பற்ற முடியும்? இவ்விவரங்களை இரண்டு நூல்களில் காணலாம், அவைகள் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு (சீரா) மற்றும் ஹதீஸ்களின் தொகுப்புக்கள் ஆகும். இம்மூன்றும் இஸ்லாமை அதன் தூய உண்மையான வடிவில் கற்றுக்கொள்ள பயன்படும் நூல்கள் ஆகும்:

1) குர்-ஆன்
2) சீரா
3) ஹதீஸ்கள்

உண்மையான இஸ்லாம்: ஒரு விவரம் குர்-ஆனில், சீராவில் மற்றும் ஹதீஸ்களில் இருந்தால், அது தான் இஸ்லாம். இஸ்லாம் என்றால் அல்லாஹ்வும் முஹம்மதுவும் தாம், இதற்கு எந்த வித விதிவிலக்கும் இல்லை. எனவே, தூய இஸ்லாமை அறிய, முஸ்லிம்களிடம் கேட்காதீர்கள், முஸ்லிம் நாடுகளுக்குச் செல்லாதீர்கள், இஸ்லாமிய அறிஞர்களிடம் கேட்காதீர்கள், இதற்கு பதிலாக அல்லாஹ்விடமும், முஹம்மதுவிடமும் கேளுங்கள். அல்லாஹ்விடமும், முஹம்மதுவிடமும் கேட்பது எப்படி என்று சந்தேகிக்கின்றீர்களா? நான் சொல்வது இது தான், குர்-ஆனைப் படியுங்கள், முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறை (சீராவை) படியுங்கள், ஹதீஸ்களைப் படியுங்கள். இவைகளை நீங்கள் படித்தால், அல்லாஹ்விடமிருந்தும், முஹம்மதுவிடமிருந்தும் நீங்கள் இஸ்லாமை கற்றுக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

யாரும் குர்-ஆனைப் படித்து இஸ்லாமை அறிந்துக்கொள்ளலாம் என்று விரும்புவதில்லை, காரணம், குர்-ஆன் படிப்பதற்கு கடினம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், இந்த தொல்லை தற்காலத்தில் இல்லை, பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. நான் டிரைலாஜி பிராஜக்ட் (Trilogy Project) என்ற வழிமுறையை உருவாக்கியுள்ளேன்,  இதன் மூலம் இஸ்லாமை இம்மூன்று மூல புத்தகங்களிலிருந்து சுலபமாக அறிந்துக்கொள்ளலாம். 

இந்த ஆய்வு இஸ்லாமை புரிந்துக்கொள்ளுதலை சுலபமாக்கியுள்ளது. அதாவது, குர்-ஆனை நாம் இரண்டு குர்-ஆன்களாக பகுக்கலாம், ஒன்று மக்காவின் குர்-ஆன், அடுத்தது மதினாவின் குர்-ஆன். இதே போல, இரண்டு முஹம்மதுக்களை நாம் கண்டுக்கொள்ளமுடியும். மக்காவில் வாழ்ந்தபோது ஒரு வகையான முஹம்மது, மதினாவிற்கு சென்ற பிறகு இன்னொரு வகையான முஹம்மது. மக்காவில் இருக்கும் போது குர்-ஆன் ஒரு ஆன்மீக புத்தகமாக மட்டுமே இருந்தது, அந்த காலக்கட்டத்தில் அதாவது மக்காவில் இஸ்லாமை ஆரம்பித்த 13 ஆண்டுகளில் கிட்டத்தட்ட (வெறும்) 150 முஸ்லிம்களை மட்டுமே இஸ்லாம் சம்பாதித்தது. ஆனால், மதினாவிற்கு வந்த பிறகு முஹம்மது அரசியல் தலைவராகிவிட்டார், ஒரு ஜிஹாதி போராளி ஆகிவிட்டார், இக்காலக்கட்டத்தில் தான் குர்-ஆனில் அரசியலும், ஜிஹாத் பற்றிய போதனைகளும் உட்புகுந்தது. 

உண்மையில் இஸ்லாமுக்கு இரண்டு முகங்கள் உள்ளன, இரண்டு வகையான இறையியல்கள் உள்ளன, ஒன்று மக்காவின் இறையியல், அடுத்தது மதினாவின் இறையியல். மக்காவில் நடந்த இஸ்லாமிய போதனைகள் கிட்டத்தட்ட ஒரு தோல்வியையே தழுவியது. ஆனால், மதினாவிற்கு ஹிஜ்ரா செய்த பிறகு, முஹம்மது தம்முடைய கடைசி 9 ஆண்டுகளில், ஆறு வாரத்திற்கு ஒரு ஜிஹாத் போர் புரிந்தார். அதாவது முஹம்மது மரிக்கும் போது அரேபியாவில் வாழ்ந்த ஒவ்வொரு அரேபியனும் 'முஸ்லிமாக' மாறியிருந்தான்.

எனவே, உங்களுக்கு ஒரு அமைதியான இஸ்லாமை அறியவேண்டுமென்றால் மக்காவிற்குச் செல்லுங்கள், அதாவது மக்காவின் குர்-ஆனை படியுங்கள், மக்காவின் முஹம்மதுவோடு உறவாடுங்கள், அப்போது உங்களுக்கு இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமாகத் தெரியும். உங்களுக்கு இஸ்லாமிய அரசியல் பற்றியும், வன்முறைகள் பற்றியும் அறியவேண்டுமென்றால், மதினாவிற்குச் செல்லுங்கள், மதினாவின் குர்-ஆனை படியுங்கள், மதினாவின் முஹம்மதுவோடு பேசிப்பாருங்கள். இஸ்லாம் இரட்டை வேடம் போட்டு இருக்கிறது, ஒரு பக்கம் அமைதியான வேஷம், இன்னொரு பக்கம் ஜிஹாத் வேஷம். இவ்விரண்டு கோட்பாடுகளை வைத்துக்கொண்டு தான், முஸ்லிம் அறிஞர்கள் தாங்கள் எதனை எப்போது சொல்லவேண்டுமோ அதனை எடுத்துச் சொல்கிறார்கள். இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமாக காட்டவேண்டுமா, இது மிகவும் சுலபம், மக்காவின் குர்-ஆனைலிருந்து வசனங்களை எடுத்துக் காட்டினால் போதும். தனிமையில், உள்வட்ட முஸ்லிம் வாலிபர்களோடு ஜிஹாத் பற்றி பேசவேண்டுமா, முஸ்லிம் அறிஞர்கள் மதினாவின் குர்-ஆனைத் தொட்டு பேசுவார்கள், மதினாவின் முஹம்மதுவை அவர்களுக்கு அறிமுகம் செய்வார்கள். 

எனவே, இஸ்லாம் பற்றி அறிய, நாம் நம்புவதற்கு தகுதி வாய்ந்தவர்கள் இரண்டு பேர் மட்டுமே உள்ளனர், அவர்கள் அல்லாஹ்வும் முஹம்மதுவும் ஆவார்கள். இவர்கள் உண்மையைத் தவிர வேறு எதையும் பேசமாட்டார்கள். இவர்கள் இருவரையும் நாம் இஸ்லாமிய நூல்களாகிய குர்-ஆன், சீரா மற்றும் ஹதீஸ்களில் காணலாம். ஆனால், முஸ்லிம் அறிஞர்கள் மற்றும் இமாம்கள் எழுதும் புத்தகங்களில் பெரும்பான்மையாக உண்மை இஸ்லாமை காணமுடியாது. எனவே, எந்த ஒரு முஸ்லிம் அறிஞன் முஹம்மதுவையும், அல்லாஹ்வையும் மேற்கோள் காட்டுகின்றானோ அவன் சொல்வதை மட்டுமே கேட்கவேண்டும். யாராவது உங்களுக்கு இஸ்லாமைப் பற்றிய ஒரு கோட்பாட்டை போதிக்கவந்தால், அந்த குறிப்பிட்ட விஷயம் பற்றி 'அல்லாஹ் குர்-ஆனில் என்ன சொல்கிறான், சீரா மற்றும் ஹதீஸ்களில் முஹம்மது என்ன சொல்லியுள்ளார்' என்று மட்டுமே மேற்கோள் காட்டுங்கள், இதர நபர்கள், இமாம்கள், தலைவர்களின் மேற்கோள்கள் நமக்குத் தேவையில்லை என்று திட்டவட்டமாகச் சொல்லிவிடுங்கள். இஸ்லாமை அல்லாஹ் விளக்கினால் தான், முஹம்மது விளக்கினால் தான் சரியாக இருக்கும்.

நீங்கள் செய்யவேண்டியது இது தான். குர்-ஆனையும், சீராவையும், ஹதீஸ்களையும் பொறுமை ஈழக்காமல் படியுங்கள். நீங்கள் யாரிடமாவது இஸ்லாம் பற்றி பேசினால், குர்-ஆனிலிருந்தும், சீராவிலிருந்தும் மற்றும்  ஹதீஸ்களிலிருந்தும் மட்டுமே மேற்கோள் காட்டுங்கள். இப்படி நீங்கள் செய்தால் உங்களுக்கு இஸ்லாமில் புலமை வந்துவிட்டது என்று அர்த்தம். உலகத்துக்கு இஸ்லாமை அதன் தூய வடிவில் கற்றுக்கொடுக்கும் நபராக நீங்கள் மாற என் வாழ்த்துதல்கள்.

ஆசிரியர்: பில் வார்னர் 

ஆங்கில கட்டுரை பதித்த தேதி: Jul 25 2013 

சனி, 18 மார்ச், 2017

சுய கற்று புரட்சிக்காரர்கள் – தங்களைத் தாங்களே செதுக்கிக்கொள்ளும் சிற்பிகள் (The Self-Taught Revolution)

ஜிஹாத் அமெரிக்காவை 9/11 அன்று உளுக்கிய‌ நேரத்தில் நமக்கு (அமெரிக்காவினருக்கு) இஸ்லாம் பற்றி ஒன்றும் தெரியாமல் இருந்தது. இஸ்லாம் மக்கா என்ற நகரில் தோன்றியது என்ற புவியியல் விவரம் தவிர,  நம் பேராசிரியர்களுக்கும், சட்ட நிபுனர்களுக்கும், ஊடகத்திற்கும் மற்றும் இராணுவத்துக்கும் இஸ்லாமிய கோட்பாடுகள் பற்றி அடிப்படை அறிவு அப்போது இல்லாமல் இருந்தது.

நம்முடைய நாட்டின் மற்றும் நாகரீகத்தின் படித்த தூண்கள் என்று கருதப்பட்ட, பேராசிரியர்கள் மற்றும் படித்த மேன்மக்கள் நம்மிடம் "இஸ்லாம் ஒரு அமைதியான மார்க்கம், பிரச்சனையெல்லாம் நம்மிடம் தான் உள்ளது" என்று  கூறினார்கள்.  நம்முடைய பழமையவாய்ந்த ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர்கள் அனைவரும் ஒருவகையாக இஸ்லாமுக்காக தாவா பணியைச் செய்தவர்கள் தான், தங்களை அறியாமலேயே இஸ்லாமுக்காக வக்காளத்து வாங்கியவர்கள் தான்.

அந்த 9/11 நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு புரட்சி வெடித்தது. சுயமாக படித்து இஸ்லாமிய அறிவில் உயர்த்திக்கொண்டவர்கள் எழுந்து நிற்க ஆரம்பித்தார்கள், புத்தகங்களையும், இணைய தளங்களிலும் எழுத ஆரம்பித்தார்கள். இப்படிப்பட்டவர்கள் செய்த ஒரு சுவாரசியாமான புரட்சி என்ன தெரியுமா? சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள சாதாரண மனிதனுக்கும் புரியும் வகையில் இவர்கள் புத்தகங்களை எழுத ஆரம்பித்தது தான். இதற்கு முன்பு அறிஞர்களால் எழுதப்பட்ட‌ இஸ்லாமிய புத்தகங்கள், நன்கு படித்த மற்ற அறிஞர்களுக்கு மட்டுமே புரியும் படி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சுய கற்றுப் புரட்சிக்காரகள் இன்னொரு புதிய சாதனையும் புரிந்தார்கள். அதாவது குர்‍ஆன் மற்றும் முஹம்மதுவின்  வாழ்க்கையின் (சுன்னாவின்) அடிப்படையில் இஸ்லாமின் அஸ்திபாரத்தை தோண்டி எடுத்தார்கள், புத்தகங்களாகவும், இணைய தளங்களிலும் பதித்தார்கள்.  இஸ்லாம் பற்றி தொன்று தொட்டு ஆய்வு செய்யும் அறிஞர்கள், பல குழப்பமான விவரங்களை பல இஸ்லாமிய  மேதாவிகளின் கருத்துக்களிலிருந்து சேகரித்து 'இது தான் இஸ்லாம்' என்றுச் சொல்லி, புத்தகங்கள் எழுதினார்கள். இப்புத்தகங்களைப் படித்து, இவர்கள் சொல்லும் இஸ்லாமை புரிந்துக்கொள்ள முடியாமல் சாதாரண மனிதன் குழம்பினான், மேலும் அவனுக்கு அவ்விவரங்கள் படிப்பதற்கு சுவாரசியாமாகவும் இருந்ததில்லை.

இந்த‌ சுய கற்று புரட்சியாளர்களின் சாதனை, முந்தைய கால சுய கற்று புரட்சியாளர்களை ஞாபகப்படுத்தியது, அதாவது இயற்பியல் மற்றும் வேதியியல் துறைகளில் சாதனைகளைப் புரிந்த‌ முந்தைய விஞ்ஞானிகளின் முயற்சிகளுக்கு ஒத்ததாக இருந்தது. நியூட்டன் என்ற விஞ்ஞானி 'கால்குலஸ் (calculus)' மற்றும் 'க்ளாசிகல் மெகானிக்ஸ் (classical mechanics)' போன்றவற்றை பள்ளிக்கூடங்களில் படித்து கற்றுக்கொள்ளவில்லை. அவர் சுயமாக இக்கோட்பாடுகளை உருவாக்கினார். அவர் ஒரு 'சுய கற்று புரட்சிக்காரராக இருந்தார்'. கடந்த காலத்தை திரும்பி பார்க்கும் போது,  கண்டுபிடிப்புக்கள் அனைத்தும், புதியவைகளை கற்றுக்கொண்டு சுயமாக  கண்டுபிடிக்கப்பட்டவைகளாகவே இருக்கும். பென்சமின் பிராங்கிளிங் என்ற விஞ்ஞானிக்கு 'மின்னல்'  என்பது ஒரு 'மின்சாரம்' என்று  யாரும் சொல்லிக்கொடுக்கவில்லை. பல ஆய்வுகளைச் செய்து  அவராகவே அதனை கண்டுபிடித்தார், இவரும் ஒரு சுய கற்று புரட்சியாளராக திகழ்ந்தார்.

இதுபோலவே, இஸ்லாமின் இன்னொரு பக்கமாகிய 'அரசியல் இஸ்லாம்' பற்றி அறிந்துக்கொள்ளும் விருப்பம் எனக்கு வந்தது கூட சுயமாக வந்தது தான், இவைகளை எந்த ஒரு இஸ்லாமிய பேராசியரின்  மூலமாக கற்றதில்லை. இந்த சுய கற்று புரட்சியாளர்களை இன்னொரு வகையில் ஒப்பிடவேண்டுமென்றால், அவர்கள் படித்த கொரில்லா போராளிகள் என்றுச் சொல்லலாம்.

இன்று டொனால்ட் டிரம்ப் ஷரியாவிற்கு எதிராக நடந்துக்கொண்டு இருக்கும் சுய கற்று புரட்சியை சரியாக‌ புரிந்துக்கொள்வாரானால்,  முஸ்லிம் பிரதர்ஹுட் என்றுச் சொல்லக்கூடிய தீவிரவாதத்தை எதிர்ப்பவர்களுக்கு உதவி செய்வார். இதனை சிறிது சிந்தித்துப்பாருங்கள். ஒருவேளை ராபர்ட் ஸ்பென்சர், மற்றும் இதர இஸ்லாமிய சுய கற்று புரட்சியாளர்களுக்கு, அரசாங்கத்தின் புள்ளிவிவரங்கள், இராணுவ மற்றும் இதர பாதுகாப்பு அமைச்சகம் கண்டுபிடித்த இஸ்லாமிய தீவிரவாத புள்ளிவிவரங்களை ஆய்வு செய்வதற்கு வாய்ப்பு கொடுத்தால்? தீவிரவாதங்களின் நிலைமை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துப்பாருங்கள், மெய் சிலிர்த்துவிடும், பொய் சிந்தைந்துவிடும்.

ஆசிரியர்: பில் வார்னர் (Bill Warner)

மூலம்: https://www.politicalislam.com/self-taught-revolution/

இஸ்லாமை பயன்படுத்தி முஸ்லிம்களை சிந்திக்கச் செய்வது எப்படி? (Using Islam to vet Muslims)

முஸ்லிம்களை சிந்திக்கச் செய்ய இஸ்லாம் பற்றி அவர்களிடம் பேசாதீர்கள், அதற்கு பதிலாக இஸ்லாமின் கனிகள் பற்றி பேசுங்கள். உதாரணத்திற்கு, 'மனைவியை அடித்தல்' பற்றி என்னை நினைக்கிறீர்கள் என்று கேட்கலாம். இஸ்லாமுக்காக பேசும் எந்த ஒரு அறிஞனும் மனைவிகளை அடிப்பதை அங்கீகரிக்கமாட்டான். ஆனால், குர்‍ஆனிலும் ஹதீஸ்களிலும் மனைவிகளை அடிக்கலாம் என்ற போதனை காணப்படுகின்றது.

குர்‍ஆன் 4:34. (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். . . . எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - . . .

Dawood #2142 Umar reported the prophet as saying: "A man will not be asked as to why he beats his wife".

அபூ தாவுத் எண் 2142 (ஆங்கில எண்): 

உமர் அறிவித்ததாவது: இறைத்தூதர் அவர்கள் "ஒரு ஆண் தன் மனைவியை அடித்தால், ஏன் அடித்தாய் என்று அந்த ஆணை கேள்வி கேட்கக்கூடாது" என்று கூறினார்கள்.

மனைவியை அடிக்கும் இந்த கோட்பாட்டை நான் எதிர்க்கிறேன். இந்த நாட்டில் (அமெரிக்காவிற்கு) இடம் பெயர்ந்து வந்தவர்கள் அல்லது இங்கு வாழும் முஸ்லிம்கள் மனைவிகளை அடிப்பவர்களாக இருந்தால், இப்படிப்பட்டவர்கள் என்னுடைய பக்கத்து வீட்டுக்காரர்களாக இருக்க நான் விரும்பமாட்டேன்.

இஸ்லாமிய கோட்பாடுகள் கீழ்கண்டவைகளை ஆதரிக்கின்றது: 

  • அடிமைகளை வைத்திருப்பது, 
  • கொடுமைப்படுத்துவது, 
  • ஷரியா சட்டத்திற்கு உட்பட்டு காஃபிர்கள் இருக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது,
  • மனைவியை அடிப்பது, 
  • பெண்கள் தாழ்வானவர்கள் என்று கருதுவது, 
  • ஆட்சி அதிகாரத்தை ஆதாரமாக காட்டி பல படுகொலைகள் புரிவது 

இவைகள் அனைத்தையும் நான் புறக்கணிக்கிறேன். நான் முஸ்லிம்களை புறக்கணிக்கிறேன் என்றுச் சொல்லவில்லை என்பதை கவனிக்கவும். மேற்கண்ட தீய பழக்கங்களை மட்டுமே நான் புறக்கணிக்கிறேன்.

எனவே, உங்களிடம் தாவா செய்யும் முஸ்லிமிடம்:  நீங்கள் மனைவியை அடிப்பதை ஆதரிக்கிறீர்களா? கொலை செய்வதையும், இஸ்லாமை விட்டு வெளியேறியவர்களை கொல்லுவதையும் ஆதரிக்கின்றீர்களா? என்று கேட்டுப்பாருங்கள்

அவர் ஒன்றும் பேசாமல் இருந்தால், 'உங்களிடம் குர்‍ஆனின் ஹதீஸ்களிலிருந்து மேற்கோள் காட்டுவதற்கு விவரங்கள் ஞாபத்துக்கு வரவில்லையென்றால், கூகுள் இமாமை கேட்டுப்பாருங்கள்' என்றுச் சொல்லுங்கள். நான் மேலே குறிப்பிட்ட குர்‍ஆன் மற்றும் ஹதீஸ் விவரங்கள் எனக்கு கூகுளில் சில வார்த்தைகளை தேடும் போது கிடைத்துவிட்டது.  இதற்கு முன்பு, இப்படிப்பட்ட விவரங்கள் புத்தகங்களில் தேடவேண்டுமென்றால், நமக்கு அதிக நேரம் பிடிக்கும். ஆனால், குர்-ஆனிலிருந்தும், ஹதீஸ்களிலிருந்தும் தற்காலத்தில் மேற்கோள்கள்களை தேடுவது சுலபமாகிவிட்டது.

மனைவியை அடிப்பதை ஆதரிக்கின்ற, காஃபிர்களை மிகவும் கேவலமான மனிதர்களாக பார்க்கின்றன, கொலைகள் செய்வதை ஆதரிக்கின்றவர்களை ஏன் நம் நாட்டில் அனுமதிக்கவேண்டும்?

எனவே, தாவா செய்பவர்களிடம் முஸ்லிம்களிடம் இஸ்லாமின் கனிகள் பற்றி பேசுங்கள். உங்கள் முஸ்லிம் அறிஞர்களிடம், மனைவிகளை அடிக்கும் இந்த தீய பழக்கம் சரியானது என்று ஒப்புக்கொள்கிறீர்களா என்று கேட்டுப்பாருங்கள். பேசும் போது குர்‍ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரங்களுடன் பேசுங்கள், இஸ்லாமின் கனிகள் பற்றி மட்டுமே பேசுங்கள்.

இப்படிப்பட்ட தீய கோட்பாடுகளை நீங்கள் ஆதரிக்கின்றீர்களா? என்று முஸ்லிம்களிடம் கேட்பது நியாயமானதாக இருக்குமா?  நியாயமாக இருக்காது என்றுச் சொன்னால், முஸ்லிம்கள் அவ்விதமான கோட்பாடுகள் தீயவை என்று ஒப்புக்கொள்வார்களா?  

ஆசிரியர்: பில் வார்னர் (Bill Warner)

ஆசிரியர் இந்த தலைப்பு பற்றி பேசும் வீடியோவை இங்கு காணலாம் (ஆங்கிலம்  - 4:49 நிமிடங்கள்): https://www.youtube.com/watch?v=5ew8PspLhZQ


ஆசிரியர் பில் வார்னர் அவர்களின் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/bill_warner/vet_muslims.html

புதன், 8 மார்ச், 2017

உலக மகளிர் தினத்தை முஸ்லிம் பெண்கள் கொண்டாடமுடியுமா? (March 8 2017)

"இஸ்லாமில் ஒவ்வொரு நாளும் மகளிர் தினம் தான்" என்ற பெயரில் ஒரு ஆங்கில கட்டுரையைப் படித்தேன் [1]. புதிய விஷயம் ஏதாவது சொல்லப்பட்டு இருக்கும் என்று எதிர்ப்பார்த்து அதை ஆர்வத்துடன் படித்தேன்.  மகளிர் தினம் என்றுச் சொல்லி கொண்டாடுகிறார்கள் ஆனால், அப்பெண்களுக்கு உரிமைகளையும், மதிப்பையும் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டோடு அக்கட்டுரை தொடங்கப்பட்டு இருந்தது.

இஸ்லாமுக்கு முன்பு அரேபிய சமுதாயத்தில் பெண்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்று பட்டியலிடப்பட்டு இருந்தது. அதன் பிறகு இந்தியா, சைனா, (அக்கால) கிரேக்க, ரோம சாம்ராஜ்ஜியங்களில் மற்றும் யூத கிறிஸ்தவ சமுதாயங்களில் பெண்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்று மேலோட்டமாக சில வரிகள் எழுதப்பட்டு இருந்தது. அக்கட்டுரையை எழுதிய 'உம் மர்யம்' என்பவருக்கு சரித்திரமும், இதர மார்க்கங்களும் சரியாக தெரியாமல் இருந்திருக்கவேண்டும் என்பதை அந்த சில பத்திகளை படிக்கும் போது புரிந்துக்கொள்ளலாம். கடைசி இரண்டு பத்திகளில் இஸ்லாம் எப்படி பெண்களை உயர்த்திப்பிடித்துள்ளது என்பதை சொல்லியிருந்தார்.

அந்த இரண்டு பத்திகளில் சொல்லப்பட்டவைகள் உண்மையா? அல்லது பொய்யானவையா? என்பதை சுருக்கமாக காண்போம். மேலும், முஸ்லிம் பெண்களால் எப்போது மகளிர் தினம் கொண்டாடமுடியும்? என்பதை இக்கட்டுரையின் கடைசியில் எழுதியுள்ளேன்.

மேற்கோள்:

"In Islam every day is women's day; women are considered gifts of Allah and are always cherished." 

பெண்கள் அல்லாஹ்வின் பரிசுகள் என்பது உண்மையானால், ஏன் இஸ்லாமிய பெண்கள் தங்கள் இஸ்லாமிய சமுதாயங்களில் அதிகமான கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள்?

முஹம்மதுவின் மனைவி ஆயிஷா அவர்கள் "'இறைத்தூதர் அவர்களே!) நான் (ஆயிஷா) இறைநம்பிக்கையுடைய பெண்கள் சந்திக்கும் துன்பத்தைப் போன்று எங்கும் பார்த்ததில்லை. இவருடைய மேனி (இவருடைய கணவர் அப்துர் ரஹ்மான் அடித்ததால் கன்றிப்போய்) இவரின் (பச்சை நிற முகத்திரைத்) துணியைவிடக் கடுமையான பச்சை நிறமுடையதாக உள்ளது'" என்று கூறியுள்ளார்கள். 

புகாரி 5825. இக்ரிமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். 

ரிஃபாஆ அல்குறழீ(ரலி) அவர்கள் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட, அந்தப் பெண்ணை அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர் அல்குறழீ(ரலி) அவர்கள் மணந்தார்கள். (பிறகு நடந்தவற்றை) ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: 

 (ஒரு முறை) அந்தப் பெண்மணி பச்சை நிற முகத்திரை அணிந்துகொண்டு என்னிடம் (வந்து தம் கணவர் அப்துர் ரஹ்மான் தம்மை துன்புறுத்துவதாக) முறையிட்டார். தம் கணவர் தம்மை அடித்ததால் தம் மேனியில் (கன்றியிருந்த) பச்சை நிற அடையாளத்தை எனக்குக் காட்டினார். 

-(இக்ரிமா கூறுகிறார்:) பெண்கள் ஒருவருக்கொருவர் உதவுவது வழக்கம் தானே?) அந்த வழக்கப்படி 

(நபி(ஸல்) அவர்கள் வந்தபோது, 'இறைத்தூதர் அவர்களே!) நான் (ஆயிஷா) இறைநம்பிக்கையுடைய பெண்கள் சந்திக்கும் துன்பத்தைப் போன்று எங்கும் பார்த்ததில்லை. இவருடைய மேனி (இவருடைய கணவர் அப்துர் ரஹ்மான் அடித்ததால் கன்றிப்போய்) இவரின் (பச்சை நிற முகத்திரைத்) துணியைவிடக் கடுமையான பச்சை நிறமுடையதாக உள்ளது' என்று சொன்னேன். (இதற்கிடையில்) அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர்(ரலி) அவர்கள் தம் மனைவி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று தம்மைப் பற்றி முறையிட்டார் என்று கேள்விப்பட்டார். எனவே, மற்றொரு மனைவியின் மூலமாகத் தமக்குப் பிறந்த இரண்டு மகன்களைத் தம்முடன் அழைத்து வந்தார். . . . 

இதுவா இஸ்லாமின் மகளிர் தின கொண்டாட்டம்? அல்லாஹ்வின் பரிசுகளாகிய பெண்களை முஸ்லிம்கள் நடத்தும் விதம் இது தானா? 

மேற்கோள்:

Islam gives woman the rights and status she deserves as it is the religion of nature people are born with.

பெண்களுக்கு தேவையான அல்லது அவர்களுக்கு சேரவேண்டிய உரிமைகளையும், அந்தஸ்தையும், மரியாதையும் இஸ்லாம் தருகிறது என்பது உண்மையானால்,உலக மக்கள், முஸ்லிம் பெண்கள் மீது பரிதாப்படும் அளவிற்கு அவர்களின் வாழ்க்கையுள்ளதே இதற்கு என்ன பதில்? முஸ்லிம்கள் சில மணித்துளிகளை ஒதுக்கி, முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை படித்து, அதன் பிறகு அவர்கள் அபிப்பிராயங்களை வைக்கட்டும்.

முஹம்மதுவின் காலத்திலேயேயும் பெண்களுக்கு என்ன மதிப்பு கொடுக்கப்பட்டு இருந்தது? எவ்விதமான உரிமைகள் கொடுக்கப்பட்டு இருந்தது?

ஆறு வயது சிறுமியை தனக்கு 50 வயது ஆகும் போது திருமணம் நிச்சயம் செய்துக்கொண்டார் முஹம்மது. ஒரு கிழவனுக்கு ஒரு சிறுமியை திருமணம் செய்ய அனுமதிக்கும் இஸ்லாமில் எங்கே பெண்களுக்கான உரிமையும், மரியாதையும் கிடைக்கும்? யாராவது சிறுமி ஆயிஷாவிடம் 'நீ திருமணம் செய்துக்கொள்கிறாயா?' என்று கேட்டார்களா? அப்படி கேட்டாலும் அவரால் தன்னுடைய ஆறு வயதில்  சரியான பதில் சொல்லியிருக்கமுடியுமா? அன்று இஸ்லாம் செய்த இப்படிப்பட்ட தீய செயல்களால் இன்று இஸ்லாமிய நாடுகளில் இலட்சக்கணக்கான சிறுமிகள் அவதிப்படுகிறார்கள். இதுவா மகளிர் தினம் கொண்டாடும் இலட்சணம்?

மேற்கோள்:

Islam has been programmed into our very being and a woman who follows it completely will be at peace with herself and the world. Islam treats women with dignity and honour. Islam treats women equally in all spheres of life: Equality in Basic Humanity, Religious Obligations, Rewards and Punishments, Ownership and Financial Transactions, Honour and Nobility, Education, Social Responsibilities. Women are given the best rights in terms of motherhood.

இது மிகப்பெரிய பொய். இந்த தொடுப்பில் கொடுக்கப்பட்ட கொடுமைகளை படித்துப் பார்க்கவும்  https://wikiislam.net/wiki/Wife_Beating_in_Islam

  • மனைவிகளை அடிக்க முஸ்லிம் ஆண்களுக்கு அனுமதி உண்டு.
  • மனைவியின் அனுமதியின்றி இரண்டாம், மூன்றாம் நான்காம் திருமணம் செய்ய ஆண்களுக்கு அனுமதி உண்டு.
  • சின்னச் சின்ன காரணங்களுக்காக மனைவிகளை விவாகரத்து செய்ய முஸ்லிம் ஆண்களுக்கு அனுமதி உண்டு.
  • முஹம்மதுவின் மனைவிகளை குர்‍ஆனின் வசனங்கள் கொண்டு 'தலாக்; மிரட்டல் விடுகின்றார் அல்லாஹ் (இக்கட்டுரையை படிக்கவும் -  தலாக் 3 – முஸ்லிம்களின் அன்னையர்களை மிரட்டிய (blackmail) அல்லாஹ்

இதுவா மகளிர் தினத்தை கொண்டாடும் விதம்?

மேற்கோள்:

The Qur'ān specifically denounces the killing of daughters and the Holy Prophet (peace and blessings of Allah be to him) has shown through his example how to treat daughters in the best possible manner.

கௌரவக்கொலை என்றப் பெயரில் எத்தனை ஆயிர முஸ்லிம் பெண்கள் ஒவ்வொரு ஆண்டும், இஸ்லாமிய நாடுகளில் கொலை செய்யப்படுகிறார்கள் என்பதை கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி படியுங்கள் (https://wikiislam.net/wiki/Muslim_Statistics_-_Honor_Violence). முஸ்லிம்கள், ஒரே பொய்யை ஏன் பல ஆயிர முறை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது ஒரு புரியாத புதிராக உள்ளது. 

பெண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் குர்-ஆனின் இரு வசனங்கள்:

குர்-ஆனில் இவ்விரு வசனங்கள் இருக்கும் வரை முஸ்லிம் பெண்களால் மகளிர் தினம் கொண்டா முடியாது.

1) குர்-ஆன் 4:34 – மனைவியை அடிக்க ஆண்களுக்கு அதிகாரம் உண்டு

(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்;. எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான். (முஹம்மது ஜான் தமிழாக்கம்).

மேற்கண்ட குர்-ஆன் வசனம் இருக்கும் வரை, முஸ்லிம் பெண்கள் எப்படி மகளிர் தினத்தை கொண்டாடமுடியும்? 

2) குர்-ஆன் 4:3 – நான்கு மனைவிகள் மற்றும் வைப்பாட்டிகள்

குர்-ஆன் 4:3

அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.

தன் கணவன் எந்த நேரத்தில் என்ன செய்வான் என்று தெரியாமல் ஒரு முஸ்லிம் பெண் துக்கப்பட்டுக்கொண்டு இருந்தால், எப்படி ஒவ்வொரு நாளும் சந்தோஷமாக வாழமுடியும்? எந்த நேரத்திலும் ஒரு முஸ்லிம் ஆண் ஒரு புதிய பெண்ணை வீட்டுக்கு கொண்டுவந்து 'இவள் தான் உன் சக்களத்தி' என்று அறிமுகம் செய்வானோ என்று பயத்துடம் பெண்கள் முஸ்லிம் நாடுகளில் வாழுகிறார்கள். மக்காவிலும், சௌதி அரேபியாவிலும் அதிக அளவில் விவாகரத்துக்கள் நடப்பதற்கு காரணம் 'முஸ்லிம் ஆண்களின் பலதாரமணம்' என்று தெரியவந்துள்ளது,  பார்க்க: தலாக் 10 – சௌதி அரேபியா மற்றும் மக்காவின் தலாக் புள்ளிவிவரங்கள் நம்மை பிரமிக்கச்செய்யாது ஏன்?

எந்த நாள் இவ்விரு வசனங்களையும் நாங்கள் பின்பற்றமாட்டோம் என்று முஸ்லிம் ஆண்கள் சொல்வார்களோ, அன்று தான் முஸ்லிம் பெண்கள் 'மகளிர் தினம்' கொண்டாடுவதற்கான அடித்தளம் அமைக்கப்படும். 

பெண்களுக்கு இஸ்லாம் உரிமைகள் தருகின்றது என்று சும்மா சொல்லிக்கொள்ளலாமே தவிர, முஸ்லிம்கள் நாடுகளில் வாழும் முஸ்லிம் பெண்களை கேட்டுப்பார்த்தால் தான் உண்மை புரியும்.

முஸ்லிம் பெண்கள் விவாகரத்து என்ற ஒரு விஷயத்தில் படும் துன்பங்களை/பிரச்சனைகளை அறிய கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்:

அடிக்குறிப்புக்கள்:

சனி, 4 மார்ச், 2017

தலாக் 10 – சௌதி அரேபியா மற்றும் மக்காவின் தலாக் புள்ளிவிவரங்கள் நம்மை பிரமிக்கச்செய்யாது ஏன்?

இதுவரை குர்-ஆன் மற்றும் ஹதீஸ்களில் தலாக் பற்றி சொல்லியவைகளில் சிலவற்றை ஆய்வு செய்துள்ளோம். தலாக் தொடரின் முந்தைய கட்டுரைகளை படிக்க இங்கு சொடுக்கவும். 

இந்திய முஸ்லிம் பெண்களின் தலாக் பற்றி ஆய்வு செய்கிறேன் என்றுச் சொல்லி ஆரம்பித்த இத்தொடர் கட்டுரைகள், இந்தியாவைத் தொடாமல், ஏன் இஸ்லாமின் ஆரம்ப காலத்தைப் பற்றி மட்டுமே கட்டுரைகள் எழுதப்படுகின்றன என்ற கேள்வி அனேகருக்கு எழுந்திருக்கும். இந்தியாவில் காணும் பிரச்சனையை ஆய்வு செய்வதற்கு முன்பாக, நாம் மூலத்தை ஆய்வு செய்யவேண்டும். அதாவது:

  அ) குர்-ஆன் ஹதீஸ்களில் வரும் தலாக் பற்றி அறியவேண்டும்.

  ஆ) முஹம்மது எப்படி மற்றும் ஏன் தலாக் கொடுத்தார் என்பதை அறியவேண்டும்.

  இ) இஸ்லாமின் ஆரம்பகால தலாக் விவரங்களை அறியவேண்டும்.

  ஈ) இஸ்லாமிய நாடுகளில் நடக்கும் தலாக் பற்றி அறியவேண்டும்.

  உ) கடைசியாக, இந்தியா போன்ற சிறும்பான்மை முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் நடப்பவைகளை ஆய்வு செய்யவேண்டும்.

எனவே, மேற்கண்ட பாயிண்டுகளில், 'ஈ' வரைக்கும் இப்போது வந்திருக்கிறோம். இவைகளை ஆய்வு செய்துவிட்ட பிறகு, இந்தியாவிற்கு வருவேன்.

இந்த கட்டுரையில் இஸ்லாமின் பிறப்பிடமாகிய சௌதி அரேபியாவில் இன்று  தலாக்கின் நிலை என்ன என்பதை புள்ளிவிவரங்களோடு காண்போம். முக்கியமாக தலாக் பற்றி சிந்திக்கும் போது, உலகிலேயே மக்காவில் குறைவான விவாகரத்துக்கள் நடக்கவேண்டும் என்று நாம் எதிர்ப்பார்க்கிறோம். ஏனென்றால், உலக முஸ்லிம்களுக்கு மக்கா ஒரு புனித நகரம். ஒவ்வொரு ஆண்டும் பல இலட்ச முஸ்லிம்கள் புனித ஹஜ் பயணம் செய்கிறார்கள். ஒவ்வொரு நாளும் தொழும் போது, மக்காவில் உள்ள காபாவை நோக்கியே தொழுகிறார்கள். ஆக, மக்காவில் தலாக்குக்கள் குறைவாக இருக்கவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது தவறல்ல. மேலும் குர்-ஆனையும் ஹதீஸ்களையும் முழுவதுமாக பின்பற்றக்கூடிய நாடாக அல்லது நகரமாக மக்கா இருக்கவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது? உலக நாடுகளுக்கு குர்-ஆனை பிரிண்ட் செய்து இலவசமாக கொடுக்கும் சௌதி அரேபியா அந்த குர்-ஆனை பின்பற்றாதா, என்ன?

1) குர்-ஆன் மற்றும் முஹம்மதுவின் வழிகாட்டுதலும், முஸ்லிம்களின் நிலையும்

முஸ்லிம்களின் நம்பிக்கைகளின் படி, 'இஸ்லாமை பின்பற்றும் முஸ்லிம்கள் தான் நல்லவர்கள்' மற்றவர்கள் அனைவரும் கெட்டவர்கள். இதற்கு கீழ்கண்டவைகளை காரணங்களாகச் சொல்வார்கள்.

அ) உலகில் இருக்கும் வேதங்களில் எல்லாம், மத புத்தகங்களில் எல்லாம், குர்-ஆன் தான் சிறந்தது.

ஆ) குர்-ஆனில் சொல்லப்பட்ட கட்டளைகள் உயர்ந்த தரமுள்ளவைகள். இவைகளுக்கு இணையாக வேறு எந்த ஒரு மத புத்தகத்தையும், கட்டளைகளையும் சொல்லமுடியாது.

இ) குர்-ஆனின் கட்டளைகளின் படி வாழும் முஸ்லிம் தான் உலகிலேயே சிறந்த நல்ல மனிதன்.

ஈ) குர்-ஆனுக்கு அடுத்தபடியாக, முஹம்மது வாழ்ந்த வாழ்க்கை, அவரது செயல்கள் அனைத்தும் சிறந்த எடுத்துக்காட்டுக்கள். அவைகளை பின்பற்றும் முஸ்லிம்கள் சிறந்தவர்கள்.

உ) குர்-ஆனையும், முஹம்மதுவின் வாழ்வையும் ஒரு மனிதன் அல்லது முஸ்லிம் பின்பற்றினால், அவனை விட நல்லவனை உலகத்தில் எங்கும் காணமுடியாது.

ஊ) இதர மதங்களை (இந்துத்துவம், கிறிஸ்தவம், யூதம், புத்தமதம்…) பின்பற்றுபவர்கள் காஃபிர்கள் ஆவார்கள். அவர்களால ஒரு நல்ல சிறந்த வாழ்க்கையை வாழமுடியாது, காரணம் அவர்கள் குர்-ஆனையும், முஹம்மதுவையும் பின்பற்றுவதில்லை.

இவைகள் தான் முஸ்லிம்களின் நம்பிக்கை. சுருக்கமாகச் சொல்வதென்றால், முஸ்லிம் நல்லவன் மற்றவன் கெட்டவன், முஹம்மதுவைப் போல நல்லவர் உலகில் இதுவரை வாழவில்லை பிறக்கவில்லை, இனியும் பிறக்கப் போவதில்லை. இவைகளை படிக்கும் இதர மத வாசகர்களுக்கு, நாத்திகர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். மேற்கண்டவைகள் உண்மையென்றால், உலகின் நல்ல மக்கள் முஸ்லிம்கள் தான். இப்படிப்பட்ட நல்ல முஸ்லிம்கள் இருக்கும் நாடு தான் நல்ல நாடு. அதாவது எந்த ஒரு தீய காரியங்களும் நடக்காமல் இருக்கும் நாடு.

இதே அளவு கோளில் நாம் தலாக் (விவாகரத்து) பற்றி பார்த்தால், முஸ்லிம்களிடையே மற்றும் முஸ்லிம் நாடுகளில் மிகவும் குறைந்த அளவிற்கு விவாகரத்துக்கள் நடைபெறவேண்டும். முக்கியமாக, சௌதி அரேபியாவை எடுத்துக்கொண்டால், மக்காவை எடுத்துக்கொண்டால், நிச்சயமாக விவாகரத்தின் சதவிகிதம், உலக நாடுகளைக் காட்டிலும் குறைவாக இருக்கவேண்டும். 

இதுவரை கண்டவைகளின் சுருக்கம்:

a) குர்-ஆனையும், முஹம்மதுவையும் பின்பற்றும் மக்கள் நல்லவர்கள்.

b) முஸ்லிம்கள் குர்-ஆனையும் முஹம்மதுவையும் பின்பற்றுகிறார்கள்.

c) எனவே, முஸ்லிம்கள் நல்லவர்கள் மேலும் அவர்களிடையே விவாகரத்து மற்ற மக்களைக் காட்டிலும் குறைவாக இருக்கும்.

2) தலாக்கில் முதலிடம் வகிக்கும் சௌதியும் மக்காவும்

நான் இந்த கட்டுரைக்கான புள்ளிவிவரங்களை பெரும்பான்மையாக அரப்நியூஸ் (www.arabnews.com) என்ற தளத்திலிருந்து மட்டுமே எடுத்துள்ளேன். இந்த தளத்தில் 2002ம் ஆண்டிலிருந்து வெளியான சில கட்டுரைகளை இங்கு சுருக்கமாக மேற்கோள் காட்டப்போகிறேன்.

ஆண்டு 2002 – தலாக்குகள் அதிமாகின்றன என்று எச்சரித்த வழக்கறிஞர்கள் 

கடந்த ஆண்டு 18000 திருமணங்கள் தலாக்கில் முடிந்தன என்ற புள்ளிவிவரத்தைச் சொல்லி ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 2000-2001ம் ஆண்டுகளில் 16725 விவாகரத்துக்கள் நடந்துள்ளன, 81,576 திருமணங்கள் நடந்துள்ளன. இது 20.5% சதவிகிதம் ஆகும்.  அதாவது 100 திருமணங்களில் 20.5 திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன, இது சமுதாயத்துக்கு கேடு.  பலதாரமணம் தான் 55.6% சதவிகித விவாகரத்துக்கு காரணமாகும், குடும்பத்தின் பொருளாதார / ஏழ்மை நிலை அல்ல. கிங் அப்துல் அஜீஜ் பல்கலைக்கழகம் நடத்திய கணக்கெடுப்பில், இந்த தலாக்குகளுக்கு காரணம், பெண்களை கீழ்தரமாக நடத்துவதும், அவர்கள் மீது வன்முறையை பயன்படுத்துவதும் ஆகும் என்று தெரிய வந்துள்ளது.

Top lawyer warns against growing divorce cases

Author: By M. Ghazanfar Ali Khan, Arab News Staff

Publication Date: Sun, 2002-08-18

RIYADH, 18 August — A prominent Saudi lawyer has warned against the growing number of divorce cases in the Kingdom, where more than 18,000 weddings ended in separation last year.

The divorce rate is showing an alarming trend although the Islamic legislation applied in Saudi Arabia imposes strict and precise conditions for seeking separation besides identifying situations for divorce.  

. . .

The Saudi attorney quoted Qur'anic verses to substantiate his arguments about divorce and family life In the Kingdom, a total of 16,725 weddings out of 81,576 ended in divorce between March 2000-2001. This represent 20.5 percent of all marriages solemnized and finally broke up in Saudi Arabia, indicating a threat to society. Polygamy, not economic factors, is responsible for 55 percent of divorces taking place in the country, according to a report published recently.

. . . 

A major study conducted by King Abdul Aziz University found that the main causes of women breaking away from their husbands were illtreatment, violence and hot temper.

ஆண்டு 2003 - ஆபத்தை எட்டும் தலாக்குகள்; உடனே சரி செய்யவேண்டும் – உலகில் இரண்டாம் இடம் 

சௌதி விவாகரத்து சதவிகிதத்தில் உலகின் இரண்டாம் இடத்தை பிடித்துவிட்டது. இதனை சீக்கிரமாக சரி செய்யவேண்டும்.  ஒவ்வொரு நாளும் 40 திருமணங்கள் நடக்கின்றன, 20 விவாகரத்துக்கள் நடக்கின்றன. இதனால் உண்டாகும் விளைவுகள் பிள்ளைகளை அதிகம் பாதிக்கின்றன. பிள்ளைகள் அதிக மன அழுத்தத்திற்கு  ஆளாகிறார்கள், பல தீய பழக்கங்களுக்கு அடிமைகளாகிறார்கள் மேலும் படிப்பில் சரியான கவனம் செலுத்தமுடிவதில்லை.

கிங் அல் அஜீஜ் பல்கலைகழக ஆய்வின் படி, பெண்கள் கேவலமாக நடத்தப்படுவதும், அவர்களுக்கு எதிராக வன்முறை அதிகரிப்பதும் தான் தலாக்கிற்கு முக்கிய காரணங்களாகும். இதனால் திருமணமான மூன்றாம் ஆண்டுக்குள் விவாகரத்து நடந்துவிடுகிறது. 55% சதவிகித தலாக்கிற்கு பலதாரமணம் காரணமாக உள்ளது என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 38% தலாக்கிற்கு கணவன் தவறான கள்ள உறவுகளை வைத்திருப்பது காரணமாக உள்ளது என்று ஆய்வு தெரிவிக்கிறது.

சௌதி திட்டக்குழிவின்  கணக்குப்படி கடந்த ஆண்டு 70,000 திருமணங்கள் மற்றும் 13,000 தலாக்குக்கள் நடந்துள்ளது.

மக்காவில் தான் அதிக அளவு விவாகரத்து நடந்துள்ளது, 3,96,248 தலாக்குக்கள் மக்காவில் நடந்துள்ளது. மக்காவிற்கு அடுத்த படியாக, ரியாத்தில் 3,27,427, கிழக்கு பகுதியில் 2,28,093 மற்றும் அசீர் பகுதியில் 1,30,812 என்று தலாக்கில் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. இந்த நிலை இப்படியே தொடர்ந்தால், 2010ம் ஆண்டுக்குள், எண்பது இலட்சம் (எட்டு மில்லியன்) பெண்கள், விவாகரத்து பெண்களாக  இருப்பார்கள்.

Alarming Divorce Rate, Must Be Addressed Urgently

Author: Somayya Jabarti, Arab News Staff

Publication Date: Fri, 2003-10-24

JEDDAH, 24 October 2003 — Given the enormous rise in the divorce rate in the Kingdom — the second-highest in the world — the head of Jeddah's marriage court, Sheikh Saleh Ahmad Habad, has called for urgent steps to address the issue.

The court registers 40 marriages and 20 divorces a day.

Sheikh Saleh stressed the high price children pay when their parents divorce, including behavioral disorders, depression, addiction and low school performance.

 . . . 

A study conducted by Dr. Ebtisam Halawani at King Abdul Aziz University revealed that the main reason most women left their spouses was ill-treatment and violence. Most divorces occur during the first three years of marriage, the study said.

Polygamy, according to Abdullah Al-Fawzan, a professor and sociologist at King Saud University in Riyadh, is responsible for up to 55 percent of divorces. He added that the loss of trust, sincerity, compassion and cooperation were also factors in the failure of marriages.

According to the Ministry of Planning, 70,000 marriages and 13, 000 divorces were recorded last year. In Riyadh, there were 3, 000 divorces out of 8,500 marriages that took place in 2002.

Makkah had the largest number of divorcees (396, 248), followed by Riyadh (327, 427), the Eastern Province (228, 093), and Asir (130, 812).

If the trend continues, there will be eight million single women in the Kingdom by the end of the decade, according to Dr. Ebtisam Halawani's study.

ஆண்டு 2010 – சௌதியில் அதிகரிக்கும் தலாக்குக்கள்

மதினாவில் உள்ள ஒரு கல்யாண மணடபத்தின் நிர்வாகிகள், கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த மண்டபத்தில் நடந்துமுடிந்த திருமணங்களை கணக்கெடுத்து, அந்த தம்பதிகளை அழைத்து ஒரு விழா கொண்டாடலாம் என்று விரும்பினார்கள். ஆனால், அந்த மண்டபத்தில் நடந்த திருமணங்களில் சரி பாதி திருமணங்கள், விவாகரத்தில் முடிந்து இருந்தது என்பதை அறிந்து ஆச்சரிய துக்கமடைந்தார்கள். 

ஒரு ஆய்வின் படி தெரியவந்தது என்னவென்றால், அனேக திருமணங்கள் முதலாவது ஆண்டுக்குள்ளாகவே விவாகரத்தில் முடிந்துள்ளது என்பதாகும். அதாவது சில மாதங்களே அந்த திருமணங்கள் நிலைத்திருந்தன.

சௌதியில் 2008ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் படி, கடந்த 20 ஆண்டுகளில் தலாக்குகளின் சதவிகிதம் 25% லிருந்து 60% ஆக உயர்ந்துள்ளது. 100 திருமணங்கள் நடந்தால், அவைகளில் 60 விவாகரத்துக்கள் நடந்துள்ளன. வருடத்திற்கு 70,000  திருமணங்கள், 13,000 விவாகரத்துக்கள் நடக்கின்றன. முக்கியமாக இளவயது தம்பதிகளுக்கு இடையே தலாக்குக்கள் அதிகரித்துள்ளன.

பெண்கள் விவாகரத்து கேட்டும் வருகிறார்கள் இதற்கு "குலா" என்றுச் சொல்வார்கள். ஒரு நாளுக்கு 78 குலா விவாகரத்துகள் நீதிமன்றத்துக்கு வருகிறது. உலகத்தில் சௌதி அரேபியாவின் தலாக் சதவிகிதம் அதிகமாக உள்ளது.

Divorce on the rise in the Kingdom

Author: Laura Bashraheel | Arab News

Publication Date:  Sun, 2010-02-07

JEDDAH: Nowadays divorce is seen the only solution to marital problems among couples who never understood the responsibilities of marriage in the first place.

With the alarming rise in divorce rates, it is time for a better understanding of the sacredness and meaning of marriage. According to a report published last week in a local daily, a wedding hall in Madinah wanted to have a party to celebrate the weddings that had taken place in the hall over the previous two years. What they discovered was that half of the weddings had already ended in divorce.

The report also said that some of the divorces had taken place during the first year which apparently means the marriage lasted only a few months. A poll taken in 2008 showed that in the past 20 years, the divorce rate in Saudi Arabia rose from 25 to 60 percent.

While courts and marriage officials register around 70,000 marriage contracts annually, they also process more than 13,000 official divorce papers, said the Ministry of Economy and Planning. The number of divorced young people is definitely increasing. Some are getting divorced after one or two years of marriage and the wedding hall story is just one of the few stories people hear about.

Hassan H. went to court to validate his marriage and he found himself standing in line with another man; the divorce section, on the other hand, had about 35 men waiting to have their documents processed.

The Ministry of Social Affairs has considered a proposal to invite couples to attend training courses for young men and women about how to achieve and maintain family stability and continuity, in an effort to reduce the number of divorces.

The proposal, which was made in 2008, followed the Ministry of Justice report on divorce rates, the dissolution of marriage contracts and "Khula'a" cases — divorces initiated by women — which amounted at that time to about 28,560 with an average of 78 per day. Although two years have now passed since the proposal, nothing has been done to solve the problem. Also, no other statistics have been issued regarding divorce and marriage rates in the Kingdom in the past two years.

. . . 

"Saudi Arabia having one of the highest divorce rates in the world is alarming. Whether it's marrying at an early age or through arranged marriage, those who wish to get married should be responsible and independent. Also, they should take marriage more seriously as a life commitment and not as an experience that might work out," he said.

. . .

ஆண்டு 2014 – தலாக் அதிகமாவதினால் சௌதி கண்ணிகள் படிப்பை திருமணம் செய்துக்கொள்கிறார்கள்!

சௌதியில் தலாக் சதவிகிதம் அதிகரிப்பதினால், வாலிபப்பெண்கள், சீக்கிரமாக திருமணம் செய்வதை விரும்பாமல், மேற்படிப்பிற்கு செல்கிறார்கள்.

2012ம் ஆண்டிலிருந்து 30,000க்கும் அதிகமான தலாக்குகள் நடக்கின்றன, ஒரு நாளுக்கு 82 மற்றும் ஒரு மணி நேரத்திற்கு மூன்று தலக்குக்கள் நடக்கின்றன.

சீக்கிரமாக திருமணம் செய்துக்கொண்டு பிரச்சனையில் சிக்குவதைக் காட்டிலும் நன்றாக படித்து தயாராக இருத்தல் நல்லது என்று வாலிபப்பெண்கள் கூறுகிறார்கள். அனேகர் பயத்தின் காரணமாக திருமணம் செய்யாமல், மேற்படிப்பை முடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஜிசிசி நாடுகளில் (GCC - Gulf CoOperation Council) பஹ்ரனுக்கு அடுத்தபடியாக அதிக விவாகரத்துக்கள் நடப்பது சௌதி அரேபியாவில் தான்.

Wary of high divorce rates, Saudi girls wed education!

 Published — Tuesday 28 January 2014

The Kingdom's soaring divorce rates have forced young Saudi girls to opt for pursuing higher education rather than getting married at an early age.

Divorce cases increased to more than 30,000 in 2012, averaging 82 divorces per day, or three divorces an hour.

The study, conducted by the economic research unit at Al-Eqtisadiah newspaper, showed that there are 2.5 divorce cases for every 1,000 men above 15.

"Divorce rates in the Kingdom are alarmingly high. To put an end to that, young couples must attend marriage counseling sessions before getting married," says 

Dr. Aliyah Hani Hashim, a Jeddah-based marriage counselor.

. . . 

The study also showed that the Kingdom ranked second among GCC countries for the highest divorce rates after Bahrain, where the rate stands at 2.7 cases for every 1,000 people.

The same study showed an upward trend in divorce cases in 2012 compared with 2010, when divorce cases amounted to 75 a day.

ஆண்டு 2015 – தலாக்குகளின் உயர்வு பெரும் பிரச்சனையாக உள்ளது

2014ம் ஆண்டுலிருந்து 2,40,000 தம்பதிகள் விவாகரத்து பெற்றுள்ளார்கள். மொத்த திருமணங்களில் இது 20% ஆகும்.  நீதித்துறை தம்பதிகளுக்கு அறிவுரைகள் வழங்கும் வகுப்புக்கள் நடத்த முடிவு செய்துள்ளது. நீதித்துறை தெரிவித்த விவரமாவது:

2014ம் ஆண்டில் மட்டும் 33,954 விவாகரத்துக்கள் நடந்துள்ளன, அவைகளில் 434 விவாகரத்துக்களை பெண்களே வழக்கு போட்டு பெற்றுக்கொண்டவைகளாகும். ஆனால், இதே ஆண்டு, வெறும் 11,871 திருமணங்கள் மட்டுமே நடந்துள்ளன. இதுமட்டுமல்ல, மக்காவில் தான் அதிகமான விவாகரத்துக்கள் பதிவாகியுள்ளன அதாவது 2326 விவாகரத்துக்கள் மக்கா நகரில் மட்டும் கொடுக்கப்பட்டது. அடுத்த இடத்தை தையிஃப் வகிக்கிறது ( விவாகரத்து எண்ணிக்கை 1459).

High divorce rate sparks concern

ARAB NEWS | Published — Tuesday 18 August 2015

RIYADH: The Ministry of Justice has revealed that around 240,000 couples have divorced since 2014, which is 20 percent of the gross marriage contracts in the same period, triggering concern.

As a result of the high rate of divorce, the ministry called on couples awaiting marriage to enroll in workshops on married life. The workshops will be held periodically free of charge, he was quoted as saying by local media on Monday.

A source from the ministry claimed that the workshop should prove instrumental in bringing down the alarmingly high divorce rate in the country. He further stated the common reasons for divorces include the false representation of married life portrayed through television.

The ministry's statistics portray 33,954 divorces in 2014, which include 434 demanded by wives. In comparison, only 11,871 marriages were registered in the same year, Makkah has proven to be have the most divorce cases at 2,326 followed by Taif at 1,459.

ஆண்டு 2016 – தலாக் அபாய எச்சரிக்கை: பெண்கள் இதனை கட்டுப்படுத்த உதவலாமே?

சௌதி அரேபியாவின் தலாக் சதவிகிதம், அனேக நாடுகளைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. ஐந்து திருமணங்களில் ஒரு திருமணம் தலாக்கில் முடிகிறது. மேலும் இவர்களில் 80% பேர், திருமணமான முதலாமாண்டு முடிவதற்குள் தலாக் பெற்றுவிடுகிறார்கள். 

வீட்டில் இருக்கும் தாய்மார்கள், தங்கள் மகன்களுக்கு பெண்களை எப்படி மதிக்கவேண்டும் என்று கற்றுக்கொடுப்பதின் மூலமாக, இப்படிப்பட்ட விவாகரத்துக்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

அறிஞர்களும் ஆய்வாளர்களும் தலாக்கின் நிலையைக் கண்டு அஞ்சுகிறார்கள்.

Divorce alarm: Women 'can help bring graph down'

Published — Monday 7 March 2016

RIYADH: Women can play a leading role in curbing divorce cases which are increasing at an alarming rate in the Kingdom, says a family consultant.

"The increasing divorce rate is a disaster as many women and families suffer from it," said Zahra Al-Moabi.

Saudi Arabia has the dubious distinction of being among countries with the highest divorce rate. On average, one in five marriages ends up in divorce, 80 percent of them before the first wedding anniversary.

"Women can majorly control this phenomenon because they have authority at home. As mothers, they can teach the boys to treat women with respect," said Al-Moabi.

She also stressed the need for educating women on how to handle the new life after marriage.

Al-Moabi said a campaign has been launched to make women aware of their potentiality and strength in order to be an effective member of the community. "This is being done as an effort to reduce the divorce rate."

In 2014, out of a population of 21 million Saudis and nine million expats, 34,000 weddings were annulled in Saudi Arabia, three times more compared to the previous year, according to data released by the Justice Ministry.

Experts are increasingly worried about this phenomenon in Saudi society, and have been campaigning to educate both men and women, through various platforms, on the importance of marriage.

3) சௌதியின் இந்த புள்ளிவிவரம் தெரிவிக்கும் கசப்பான உண்மை என்ன?

தமிழ் முஸ்லிம்கள் நான் மேலே கொடுத்த தொடுப்புக்களை சொடுக்கி விவரங்களை சரி பார்க்கலாம். 

நான் இக்கட்டுரையை ஆரம்பிக்கும் போது, முஸ்லிம்கள் தங்களைப் பற்றியும், குர்-ஆன் மற்றும் முஹம்மதுவின் போதனைகள் பற்றியும் எப்படி நம்பிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை விளக்கினேன். குர்-ஆனின் போதனைகளின் மீது முஸ்லிம்களுக்கு இருக்கும் ஆழ்ந்த நம்பிக்கையைப் பற்றி குறிப்பிட்டேன். ஆனால், இஸ்லாமின் பிறப்பிடமான சௌதி மற்றும் மக்காவின் நிலையை இதுவரை நாம் கண்டோம். இது முஸ்லிம்களின் நம்பிக்கைக்கு எதிராக உள்ளது. 

இதுவரை நாம் கண்டவைகளின் சுருக்கம் இது தான்.

அ) குர்-ஆன் மற்றும் முஹம்மதுவின் போதனை மக்களை நல்லவர்களாக சிறந்தவர்களாக மாற்றாது.

ஆ) குர்-ஆனினால் நல்ல ஆண்களை உருவாக்கமுடியாது.

இ) குர்-ஆனினால் பெண்களை கவுரவிக்கும் ஆண்களை உருவாக்கமுடியாது.

ஈ) இஸ்லாமிய போதனைகளை சிறுவயது முதல் கேட்கும் ஆண்கள், அதிக அளவில் விவாகரத்து செய்கிறார்கள்.

உ) பெண்கள் விவாகரத்துக்கு போவதற்கு முக்கிய காரணம், 'அவர்களை மனிதர்களாக மதிக்காத முஸ்லிம் ஆண்கள்' மற்றும் 'அவர்களை கொடுமைப்படுத்துகின்ற முஸ்லிம் ஆண்கள்'.

ஊ) திருமணமான ஒரு வருடத்துக்குள் விவாகரத்து பெறுவது சௌதியிலும், மக்காவிலும் அதிகமாக உள்ளது. 

எ) சௌதியில் திருமணம் செய்ய பெண் பிள்ளைகள் பயப்படுகிறார்கள், எனவே படிப்பு என்ற காரணம் காட்டி திருமணத்தை தள்ளிப்போடுகிறார்கள்.

ஏ) 55% சதவிகித தலாக்கிற்கு காரணம், குர்-ஆன் அனுமதித்த பலதாரமணம் ஆகும். ஒரு முஸ்லிம் நான்கு பெண்களை திருமணம் செய்யலாம் என்ற கோட்பாடு தான் இந்த அநாச்சாரங்களுக்கெல்லாம் காரணம் (55%).

ஐ) தாய்மார்கள் தங்கள் மகன்களுக்கு பெண்களை பதிக்க கற்றுக்கொடுக்கவேண்டும் என்று அறிஞர்கள் மேதாவிகள் தாய்மார்களுக்கு அறிவுரைச் சொல்கிறார்கள்.

முடிவுரை:

குர்-ஆனின் போதனைகள் மீது முஸ்லிம்களின்  நம்பிக்கை என்பது தியரி ஆகும். ஆனால், நடைமுறையில் நடப்பது தான் உண்மை. 

இந்த தொடர் கட்டுரைகளில் நான் குர்-ஆன் மற்றும் ஹதீஸ்களிலிருந்து பல விவரங்களை விளக்கினேன். அதாவது, 

  • குடும்ப செலவிற்கு பணம் அதிகமாக கேட்டால் தலாக்.
  • ஒரு இரகசியத்தை காக்கவில்லையென்றால் தலாக்.
  • மனைவிக்கு அழகு குறைந்துவிட்டால் தலாக். 
  • மனைவிக்கு வயது கூடிவிட்டால் தலாக்.
  • இதர மனைவிகளோடு போட்டிபோட முடியாது என்று கணவன் நினைத்தால் தலாக்.
  • மாமனாருக்கு விருப்பமில்லையென்றால் தலாக்.
  • குடும்பம் கஷடத்தில் உள்ளது என்று உண்மையை பேசினால் தலாக்.

மேற்கண்ட போதனைகளை குர்-ஆன், ஹதீஸ்களிலிருந்து படித்தும், மசூதிகளில் பயான்களை கேட்டும்,  தங்கள் மனதில் பதித்துக் கொள்ளும் ஆண்கள் எப்படி பெண்களை கவுரவிக்கமுடியும்? இதனால் சௌதியில் தலாக்குக்கள் அதிகம். இதே போல, பணமும் படிப்பும் பெற்றிருக்கும் ஒரு பெண்ணை அவளின் கணவன் அவமதித்தால், அடித்தால், துன்புறுத்தினால், அவள் எப்படி சும்மா இருப்பாள்?  சௌதியின் பெண் பிள்ளை, நம் ஹைதராபாத்தில் பல நூறு ரியால்களுக்கு விற்கப்படும் அடிமைப் பெண்களா என்ன? கணவன் அடித்தால் வாங்கிக்கொண்டு சும்மா இருப்பதற்கு?  படிப்பும் பணமும் எப்போது ஒரு பெண்ணுக்கு கிடைக்குமோ, அப்போது சுயமரியாதையும், கண்ணியமும் அவளுக்கு கொடுக்கப்படவேண்டும். இவ்விரண்டும் கிடைக்காத பட்சத்தில் பெண்கள் சும்மா இருக்கமாட்டார்கள், சௌதியின் நீதிமன்ற கதவுகள் உடையும் அளவிற்கு தட்டிவிடுவார்கள் என்பதற்கு மேலே நாம் படித்த புள்ளிவிவரங்கள் சாட்சி பகருகின்றன. 

இஸ்லாம் உருவான பூமியிலேயே ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்க முடியாத பட்சத்தில், இஸ்லாம் எப்படி இதர நாடுகளில் நல்ல குடுங்களை உருவாக்கிவிடும்?

காஃபிர்களின் நிழல் கூட படாத மக்காவில் விவாகரத்துக்கள் அதிக அளவு செய்யப்படும் என்ற கணக்கு வரும்போது, மக்காவின் புனிதம் யாரால் கறைபடுத்தப்படுகின்றது என்பது புரிகின்றதா?

சௌதியின் மற்றும் மக்காவின் அதிக அளவு தலாக் எண்ணிக்கைகளுக்கு பெண்கள் தான் காரணம் என்றுச் சொன்னால், அப்பெண்களை சரியான வழியில் நடத்த குர்-ஆன் தவறிவிட்டது என்று எடுத்துக்கொள்ளலாமா? 

இல்லை, ஆண்கள் தான் இதற்கு காரணம் என்றால், இப்போது யாரை குற்றப்படுத்தலாம்? குர்-ஆனையா? அல்லது முஹம்மதுவின் வழியையா?  

பெண்களை கவுரப்படுத்த குர்-ஆன் கற்றுக்கொடுக்காதது ஏன்? குர்-ஆன் அனுமதித்த பலதாரமணத்தில் பெண்களுக்கு கவுரவம் எங்கே இருக்கிறது? முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டு வீட்டிற்கு வரும் கணவனை எப்படி கவுரவிப்பாள் முதல் மனைவி?

விடுதலையை விரும்பும் பெண்களுக்கும், பெண்கள் விடுதலை அடைய வேண்டும் என்று விரும்பும் ஆண்களுக்கும் இந்த தொடர் கட்டுரைகள் சமர்ப்பணம்.

உலக மகளிர் தினத்தின் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்… 

அடுத்த தொடரில் சந்திப்போம்…