ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வெள்ளி, 13 நவம்பர், 2015

மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?


முன்னுரை: "இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல" என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளை பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

முந்தையை கட்டுரைகளை படிக்க சொடுக்கவும்: மக்காவின் பிரச்சனைகள்:அறிமுகம்12345, & 6.

குர்-ஆனிக் ஜியோகிரஃபி (Quranic Geography) என்ற புத்தகத்தின் ஆசிரியர் கிப்சன் அவர்கள், இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல, அது பெட்ரா நகரமாகும் என்ற வாதத்தை முன்வைத்துள்ளார். இதற்காக அவர் பல ஆதாரங்களை கொடுத்துள்ளார், அவைகளில் சிலவற்றை மேற்கண்ட கட்டுரைகளில் படிக்கலாம். 

இக்கட்டுரையில் அவர் கூறும் இன்னொரு ஆதாரத்தைப் பார்ப்போம், அதாவது "இஸ்லாமின் புனித பூமி மக்கா அல்ல, ஏனென்றால், இவ்வளவு பெரிய ஜனக்கூட்டத்தை உருவாக்கும் சக்தி அதற்கு இல்லை" என்பது தான் அது. 

இஸ்லாமிய புனித நகரமும் அதன் ஜனத்தொகையும்:

ஏழாம் நூற்றாண்டின் இஸ்லாமிய புனித நகரம் பெரிய எண்ணிக்கையில் போர் வீரர்களையும், வியாபாரிகளையும் உருவாக்கியுள்ளது. அதாவது, புனித நகரத்திலிருந்து அதிக எண்ணிக்கையுள்ள மக்கள் போருக்காகவும், வியாபாரத்திற்காகவும் சென்று இருந்திருக்கிறார்கள். இதன் மூலம் அறிவது என்னவென்றால், புனித நகரில் அதிக அளவில் மக்கள் வாழ்ந்துள்ளார்கள், ஆனால், "7ம் நூற்றாண்டின் மக்காவில் இது சாத்தியமா?" என்பது தான் இக்கட்டுரையின் கருப்பொருள்.

சரித்திர ஆசிரியர் கிப்சன் அவர்கள், தம் புத்தகத்தின் 234ம் பக்கத்தில் ஒரு பட்டியலை கொடுத்துள்ளார். இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் தபரியின் "சரித்திர புத்தகத்திலிருந்து" இந்த ஆதாரங்களைக் கொடுத்துள்ளார், இவைகளை ஹதீஸ்களிலும் காணலாம். மக்காவினர் முஸ்லிம்களோடு புரிந்த போர்களில் கலந்துக்கொண்ட வீரர்களின் எண்ணிக்கை, மேலும் மக்காவினரின் வணிக கூட்டங்களில் பங்கு பெற்றவர்களின் எண்ணிக்கை, இவை இரண்டையும் சேர்த்துப் பார்த்தால், நமக்கு அக்கால புனித நகரின் ஜனத்தொகைக்கான அடிப்படை எண்ணிக்கை கிடைத்துவிடும்.

மூல நூல் ஹிஜ்ரி வருடம் / நிகழ்வுமக்கா இராணுவத்தின் / வணிக கூட்ட மக்களின் எண்ணிக்கை
தபரி, தொகுப்பு 7, பக்கம் 13ஹிஜ்ரி 1, அல் அப்வா என்ற இடத்தில் நடந்த சண்டை300 குதிரை வீரர்கள்
தபரி, தொகுப்பு 7, பக்கம் 15-16ஹிஜ்ரி 2, மக்கா வணிக கூட்டம் மீது வழிப்பறி100 நபர்கள் கொண்ட வணிக கூட்டம், 2500ஒட்டகங்கள்
தபரி தொகுப்பு 7, பக்கம் 33ஹிஜ்ரி 2, பத்ரு போர்மக்காவின் போர் வீரர்கள் 1000 பேர்
தபரி தொகுப்பு 7, பக்கம் 90ஹிஜ்ரி 2, சாவிக் (Sawiq) போர்மக்காவின் போர் வீரர்கள் 200 பேர்
தபரி தொகுப்பு 7, பக்கம் 98ஹிஜ்ரி 3, அல்கரதா என்ற இடம், மக்கா வணிக கூட்டம்மக்காவின் வணிக கூட்டத்திடமிருந்து 20,000திர்ஹம் கொள்ளையடிக்கப்பட்டது.
தபரி தொகுப்பு 7, பக்கம் 110ஹிஜ்ரி 3, உஹுத் போர்மக்காவின் போர் வீரர்கள் 3000 பேர், 200குதிரைப்படை வீரர்கள்
தபரி தொகுப்பு 8, பக்கம் 13ஹிஜ்ரி 5, அகழ்ப்போர், மக்காவினரும் இதர கூட்டங்களும்போர் வீரர்கள் மொத்தம் 10,000 பேர் (மக்காவின் காலாட்கள் மட்டும் 4000 பேர்) [1]

(மூலம்: Quranic Geography, பக்கம் 234) 

முஹம்மது மதினாவிற்கு இடம் பெயர்ந்த பிறகு மக்காவினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே பல சண்டைகள் நடந்தன. இந்த சண்டைகளில் மக்காவினரிலிருந்து அனேகர் மரித்துப் போயினர். இந்த நஷ்டத்திற்கு பிறகும், பல ஆயிர போர் வீரர்களையும், வியாபாரிகளையும் இஸ்லாமிய புனித பூமி ஒவ்வொரு ஆண்டும் உருவாக்கிக்கொண்டே இருந்துள்ளது.  மேலே உள்ள பட்டியலைப் பாருங்கள். ஒவ்வொரு போரின் போதும், இரண்டு தரப்பிலிருந்தும் மக்கள் மரித்தனர். இருந்தபோதிலும், மக்காவிலிருந்த குறைஷி மக்கள்  பல ஆயிர போர் வீரர்களைக் கொண்டு தொடர்ந்து சண்டையிட்டனர். 

உதாரணத்திற்கு, பத்ரு போரில் 1000 பேர், உஹுத் போரில் 3000 பேர், அகழ்ப்போரில் 4000 பேர் மக்காவின் சார்ப்பில் கலந்துக் கொண்டனர். 

இதுமட்டுமல்லாமல், இஸ்லாமிய ஆதாரங்களின் படி, இவர்களின் வியாபார கூட்டமும் மிகவும் பெரியது, இவர்களை முஸ்லிம்கள் தாக்கி பொருட்களை கொள்ளையிட்டனர். உதாரணத்திற்கு, மேற்கண்ட பட்டியலில் கொடுத்துள்ளதின் படி, ஹிஜ்ரி 3ம் ஆண்டில் அல்கரதா என்ற இடத்தில் மக்காவின் வணிக கூட்டத்தை முஸ்லிம்கள் வழிமறித்து அவர்களிடமிருந்து செல்வங்களை கொள்ளையடித்தனர், கொள்ளையடித்த பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கு முஹம்மதுவிற்கு சொந்தமானதாகும். இந்த ஒரு பங்கு மட்டும் 20,000 திர்ஹம் என்று கணக்கிடப்பட்டுள்ளது, அப்படியானால், அந்த வியாபார கூட்டம் எவ்வளவு பெரியதாக இருந்திருக்கும் என்று பாருங்கள். ஹிஜ்ரி 2ம் ஆண்டு நடந்த வழிப்பறிக் கொள்ளையின் போது, மக்காவினரின் வணிக கூட்டத்திடம் இருந்த ஒட்டகங்களின் எண்ணிக்கை 2500 ஆகும். அப்படியானால், வணிக கூட்டத்தின் சிறப்பைப் பாருங்கள். 

இதன் அடிப்படையில் பார்த்தால், இஸ்லாமிய புனித பூமி ஒரு பெரிய பட்டணமாக இருந்திருக்கவேண்டும், பல ஆயிர போர் வீரர்களையும், வியாபார கூட்ட மக்களையும் உருவாக்கும் அளவிற்கு விசாலமான பட்டணமாக இருந்திருக்கவேண்டும். ஆனால் தற்கால புனித பூமி என்று கருதப்படும் மக்காவைப் பற்றிய தொல்லியல் ஆதாரங்களின் படி மக்கா என்பது ஒரு வறண்ட இடமாகும். அதிக மக்கள் வாழ்வதற்கான எந்த ஒரு சாத்தியக்கூறும் மக்காவிற்கு இல்லை. இப்படிப்பட்ட இடத்திலிருந்து எப்படி இத்தனை போர் வீரர்கள் மற்றும் வியாபாரிகள் எழும்பமுடியும்?  இது தான் சரித்திர ஆசிரியர் கிப்சன் அவர்களின் மற்றொரு சந்தேகம். 

இஸ்லாமிய ஆதார நூல்கள் சொல்லும் விவரங்களின் படி பார்த்தால், இஸ்லாமிய புனித பூமி மக்கா அல்ல என்பது புரியும். 

இஸ்லாமியர்களின் படி, ஏழாம் நூற்றாண்டில்:

  • மக்கா ஒரு பெரிய நகரம்
  • குர்-ஆனின் படி நகரங்களின் தாய் (உம்முல் குர்ரா)
  • செல்வ செழிப்பான வியாபாரிகள் வாழ்ந்த நகரம்
  • பல ஆயிர போர் வீரர்களைப் பெற்றிருந்த நகரம்
  • சுற்றுப்புற நாடுகளிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் புனித யாத்திரை செல்லும் அளவிற்கு புகழ்பெற்ற நகரம்.

இப்படிப்பட்ட சிறப்புமிக்க நகரம் ஒரு சிறிய கிராமம் போல சில நூறு மக்களை மட்டும் கொண்ட கிராமமாக இருக்கமுடியாது. 

புனித நகரத்தின் ஜனத்தொகை கணக்கு - ஏறக்குறைய 48,000 பேர்

மக்காவின் ஜனத்தொகை எவ்வளவு இருக்குமென்று நம்மிடம் கணக்கெடுப்பு இல்லை. முஸ்லிம்களிடம் இந்த எண்ணிக்கை இருந்தால், எனக்கு தெரிவிக்கவும். மேற்கண்ட போர் வீரர்கள் மற்றும் வணிக கூட்ட மக்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்துக் கொண்டு நாம் புனித நகரின் ஜனத்தொகையை ஓரளவிற்கு கணக்கிடலாம். இது நூறு சதவிகிதம் சரியான கணக்கீடு என்று கருதமுடியாது, ஆனால்,  இந்த எண்ணிக்கையை விட அதிகமாகத் தான் புனித நகரில் ஜனத்தொகை இருந்திருக்கமுடியும் என்ற முடிவிற்கு நாம் நிச்சயமாக வரலாம்.

நான் (உமர்) எப்படி புனித நகரத்தின் ஜனத்தொகை எண்ணிக்கை 48,000 என்று கணக்கிட்டேன் என்ற விவரங்கள் இக்கட்டுரையின் கடைசியில் "அடிக்குறிப்புகள் & மேலதிக ஆய்வுகள்" என்ற பகுதியில் இரண்டாம் [2] எண்ணில் கொடுத்துள்ளேன், அதனை படித்துக் கொள்ளவும்.

மக்காவும் அதன் வேளாண்மையும்:

மக்காவின் 48,000 ஜனங்களுக்கு உணவுகளை கொடுக்கும் அளவிற்கு மக்காவில் வேளாண்மை இல்லை. 

இதற்கு சில காரணங்களை நாம் கொடுக்கமுடியும்:

1) ஆசிரியர் கிப்சன் அவர்கள் சொல்வதின் படி, மக்கா ஒரு நகரமாக இருந்ததற்கான எந்த ஒரு தொல்லியல் ஆதாரமும் கி.பி. 900க்குள் கிடைக்கவில்லை.   

பார்க்க கட்டுரைகள்: 

மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?

மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?

மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் "மக்காவின்" பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?

2) மக்காவில் திராட்சை, மாதுளை, அத்தி போன்ற கனிவகைகள் மற்றும் இதர காய்கறி, தானியங்கள் விளைவதற்கு ஏற்ற சூழல்  இல்லை. மக்கா ஒரு வறண்ட பிரதேசம், அங்கு வேளாண்மை நடப்பதற்கு ஏற்ற வசதிகள் இல்லை. பேரிச்சை தவிர வேறு வகையான வேளாண்மை அங்கு இல்லை. 

3) மக்காவின் மழையின் அளவு (பொழிவு) வருடத்திற்கு 11.1 cm or 4.4 inch ஆகும் [3]. இந்த அளவு மழையின் பொழிவுள்ள இடங்களில் எந்த ஒரு பயிர் வகையின் வேளாண்மையும் நடைப்பெறாது. காய்கறிகள், தானியங்கள் மற்றும் கனிவகைகள் போன்றவைகளின் விவசாயம் நடைப்பெறாது. மக்காவில் பேரிச்சைத் தவிர வேறு எந்த ஒரு வகையான விவசாயமும் நடைப்பெற வாய்ப்புக்கள் இல்லை.

ஆக, இதன் படி பார்த்தால், இஸ்லாமிய புனித பூமி மக்கா அல்ல அது வேறு ஒரு நகரமாக இருக்கவேண்டும் என்ற சந்தேகம் வருகிறது. சரித்திர ஆசிரியர் கிப்சன் அவர்கள், அந்த நகரம் பெட்ரா என்று கூறுகிறார்.

முடிவுரை:

இஸ்லாமின் புனித பூமி மக்கா அல்ல என்பதற்கு "இஸ்லாமிய நூல்கள் கொடுக்கும் அதன் ஜனத்தொகை விவரங்களும்" ஒரு காரணம் என்பதை இக்கட்டுரையில் கண்டோம். நம் கணக்கின் படி, குறைந்தபட்சம் 48,000 மக்களைக் கொண்ட நகரமாக புனித பூமி இருந்திருக்கவேண்டும். 

ஆனால், மக்காவின் தொல்லியல் விவரங்களின் படி, ஏழாம் நூற்றாண்டின் மக்கா, வறண்டதும் மக்கள் நடமாற்றமற்ற இடமாகவும் இருந்துள்ளது.  

இஸ்லாமிய நூல்கள் மக்காவின் ஜனத்தொகை 48,000 ஐ விட அதிகமாக இருந்திருக்கவேண்டும் என்றுச் சொல்கின்றன, ஆனால் தொல்லியல் விவரங்கள் இதற்கு சாத்தியமில்லை என்றுச் சொல்கின்றன.  அப்படியானால், இஸ்லாமிய புனித பூமி மக்கா அல்ல என்பது புலனாகிறது.

இரண்டாவதாக, மக்காவின் பொழிவு (வருடாந்திர சராசரி மழையின், ஈரப்பதத்தின் அளவு) 11 சென்டிமீட்டர் ஆகும். இது வேளாண்மைக்கு ஏற்ற சூழல் அல்ல. இப்படி இருக்க, இவ்வளவு பெரிய ஜனத்தொகைக்கு எப்படி உணவுகளை வழங்க மக்காவினால் முடிந்திருக்கும்? இது சாத்தியமில்லை. அக்காலத்தில் இத்தனை ஆயிர மக்களின் உணவுத் தெவையைப் பூர்த்திச் செய்ய, அதிகமாக வேளாண்மையுள்ள இடம் தான் தேவை, மக்காவைப் போல உள்ள ஒரு வறண்ட பூமியில் இது சாத்தியமில்லை.

குர்-ஆன், ஹதீஸ்கள் மற்றும் இதர நூல்கள் சொல்லும் புனித பூமி "இன்று புனித பூமி என்று முஸ்லிம்கள் கருதும் மக்கா அல்ல" என்பது தெளிவாக விளங்குகிறது. 

அடுத்த தொடர் கட்டுரையில் சந்திப்போம்.


அடிக்குறிப்புகள் & மேலதிய ஆய்வுகள்

The bulk of the Confederate armies were gathered by the pagan Quraysh of Makkah, led by Abu Sufyan, who fielded 4,000 foot soldiers, 300 horsemen, and 1,000-1,500 men on camels.[14]

[2] ஏழாம் நூற்றாண்டின் இஸ்லாமிய புனித பூமியின் ஜனத்தொகை எவ்வளவு இருக்கும்?

ஏழாம் நூற்றாண்டின் இஸ்லாமிய புனித நகரத்தின் ஜனத்தொகை எவ்வளவு என்ற விவரம் என்னிடம் இல்லாததால், அதனை நான் கணக்கிட முயன்றுள்ளேன். முஸ்லிம்களிடம் இந்த விவரம் இருந்தால் எனக்கு தெரிவிக்கவும்.

மேலே கொடுக்கப்பட்ட பட்டியலின் படி, அகழ்ப்போரில் தான் அதிகமான மக்காவினர் பங்கு பெற்றனர். எனவே, அதனையே நம் கணக்கிற்கு அடிப்படையாக எடுத்துக் கொள்வோம். ஒவ்வொரு போரில் ஈடுபட்டவர்களை நாம் கூட்டத்தேவையில்லை, காரணம் என்னவென்றால், ஒவ்வொரு போரிலும் புதியவர்களே ஈடுபட்டனர் என்றுச் சொல்லமுடியாது. அதே வேளையில், ஒவ்வொரு போரிலும் சில புதிய முகங்கள் பங்குபெற்று இருந்திருக்கலாம். நம் கணக்கெடுப்பில் அதிக எண்ணிக்கையில் போர்வீரர்கள் ஈடுபட்ட போரையே நாம் கருத்தில் கொள்ளலாம்.

அகழ்ப்போரில் 4000 காலாட்கள், 300 குதிரை வீரர்கள், 1,000 – 1500 வரை ஓட்டகத்தின் மீது வந்த வீரர்கள் கலந்துக் கொண்டார்கள்[1]. இதில் ஒட்டகத்தின் மீது வந்தவர்கள் 1000 லிருந்து 1500 வரை இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. இதில் நாம் மத்திய எண்ணை எடுத்துக் கொள்வோம், அதாவது 1250ஐ நம் கணக்கிற்கு எடுத்துக் கொள்வோம் (1000க்கும் 1500க்கும் இடையே இருக்கும் மத்திய எண் 1250 ஆகும்)

மக்காவிலிருந்து வந்த மொத்த வீரர்கள்: 5550 (4000+300+1250 = 5550). 

வியாபாரத்தில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கையை இதில் பாதியாக கருதலாம், அதாவது 2500 என்று எடுத்துக் கொள்ளலாம். ஒரு நகரத்தின் பொருளாதார வளர்ச்சி வியாபாரிகள் மீதும், விவசாயிகள் மீதும், வேலை செய்து பணம் சம்பாதிப்பவர்கள் மீதும்  சார்ந்திருக்கும். நகரத்தில் உள்ள அனைவரும் சண்டை போட்டுக் கொண்டு இருந்தால், வியாபாரம் செய்வது யார்? எனவே, வியாபார கூட்டத்தையும் நாம் கணக்கில் கொள்வோம். 

இவ்விரண்டையும் கூட்டினால் 8050 வருகிறது (5550 போர் வீரர்கள் + 2500 வியாபாரிகள்). இந்த எண்ணிக்கையை ரவுண்ட் செய்து 8000 என்று கணக்கிட்டுக் கொள்வோம் (50ஐ குறைத்துக் கொண்டோம்).

இந்த 8000 பேரில் ஆண்கள் மட்டுமே இருப்பதாக கருதுவோம். இப்போது இவர்களின் குடும்ப நபர்களையும் கணக்கில் கொண்டு, குறைந்த பட்சம் இஸ்லாமிய புனித நகரின் ஜனத்தொகையை கணக்கிடுவோம். 

உமராகிய நான் என் கட்டுரைக்காக, எண்களை வேண்டுமென்றே அதிகரித்து காட்டுகிறேன் என்று முஸ்லிம்கள் குற்றம் சாட்டக்கூடாது என்பதற்காக, சில அனுமானங்களை (Assumptions) நாம் விதித்துக் கொள்வோம், அதாவது சில விதிகளை தளர்த்திக் கொள்வோம். 

தளர்த்தப்படும் விதி 1: முஸ்லிம்களின் படி, இஸ்லாம் வருவதற்கு முன்பாக, மக்காவின் ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்ததாம். இஸ்லாம் வந்து "ஒரு ஆண் நான்கு பெண்களை மட்டும்" திருமணம் செய்யலாம் என்று கட்டுப்பாடு விதித்ததாம். மக்காவினர் இஸ்லாமை ஏற்காதவர்களாக இருந்தபடியினால், நான்கை விட அதிக திருமணங்கள் செய்தவர்களாக இருந்திருப்பார்கள். இருந்த போதிலும் மக்காவின் ஜனத்தொகை கணக்கிற்காக, நாம் ஒரு ஆணுக்கு ஒரு மனைவி என்பதையே கணக்கில் எடுத்துக் கொள்வோம்.

தளர்த்தப்படும் விதி 2: ஒரு ஆணுக்கு பல மனைவிகள் இருந்தால், ஒரு மனைவிக்கு ஒரு பிள்ளை என்று கணக்கிட்டாலும் எண்ணிக்கை எங்கேயோ சென்றுவிடும், இருந்தபோதிலும், நம் கணக்கில் ஒரு ஆணுக்கு இரண்டு பிள்ளைகள் (நாம் இருவர் நமக்கு இருவர்) என்றே எடுத்துக் கொள்வோம். 

தளர்த்தப்படும் விதி 3: ஒவ்வொரு போரின் போதும் அனேக மக்கா போர் வீரர்கள் மரித்தார்கள். இவர்களையும் இந்த கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளவேண்டும், அது தான் சரியானது. இருந்தபோதிலும், இவர்களையும் நான் என் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. 

ஏன் இந்த தளர்த்தும் விதிகள்:

இப்படி தளர்த்தும் விதிகளை நான் கொடுப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஒரு ஆணுக்கு பெற்றோர்கள் இருவர் (தாய் தந்தை) என்று நாம் கணக்கிடப்போகிறோம்.  பல நேரங்களில் ஒரே பெற்றோருக்கு இரண்டு/மூன்று/நான்கு ஆண் பிள்ளைகள் இருப்பார்கள். இந்த நான்கு பேரும் போரில் பங்கு பெற்று இருந்திருக்கலாம். இருந்த போதும், நாம் ஒவ்வொரு வீரருக்கும் பெற்றோர்கள் இருவர் என்று கணக்கிடப்போகிறோம். இது எப்படி சரியான எண்ணிக்கையாக இருக்கும்? என்ற கேள்வி எழும். நமக்கு இதைவிட்டால் வேறு வழியில்லை, புனித நகரில் எத்தனை ஆண்கள், பெண்கள் அப்போது இருந்தார்கள் என்ற கணக்கு நம்மிடம் இல்லை. எனவே, மேற்கண்ட தளர்த்தும் விதிகளை நான் கொடுத்துள்ளேன். ஒரு கணக்கில் தளர்த்துகிறோம், அடுத்த கணக்கில் சில அதிகபடியான எண்ணிக்கையை விட்டுவிடப்போகிறோம். நம்முடைய ஜனத்தொகை கணக்கெடுப்பு ஒரு பக்கமாக சார்ந்து வேண்டுமென்றே தவறாக கணக்கிடப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழக்கூடாது என்பதற்காக, சில தளர்த்தும் விதிகளை நாம் வைத்துள்ளோம். நமக்கு ஏழாம் நூற்றாண்டின் இஸ்லாமிய புனித நகரத்தின் ஜனத்தொகை எண்ணிக்கை தெரிந்திருந்தால், இந்த கணக்கை நாம் செய்யவேண்டிய அவசியமிருக்காது. 

மேற்கண்ட விவரங்களை மனதில் பதிய வைத்துக் கொண்டு, கீழ்கண்ட கணக்கெடுப்பை பார்க்கவும்.

நம்முடைய முந்தைய கணக்கின் படி, மொத்தம் 8000 ஆண்கள் (போர் வீரர்கள் + வியாபாரிகள்) என்று நாம் கணக்கிட்டோம். இந்த 8000 பேருக்கு குடும்பமும், பிள்ளைகளும், பெற்றோர்களும் இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு மனைவி, இரண்டு பிள்ளைகள், பெற்றோர்கள் இருவர் என்று கருதினால், சராசரியாக ஒவ்வொரு நபருக்கும் 5 பேர் குடும்ப நபர்கள் என்று வருகிறது. ஆக, 8000 பேர்களின் குடும்ப நபர்களை கணக்கிடும் போது = 8,000 X 5 = 40,000 என்று வருகிறது. 

  • ஆண்கள் 8000 பேர்
  • அவர்களின் குடும்ப நபர்கள் 40,000 பேர் 
  • மொத்தம் 48,000 என்று கணக்கு வருகிறது. 

ஆக, முஹம்மதுவின் காலத்தின் புனித பூமியில் குறைந்த பட்சம் 48,000 மக்கள் இருந்திருக்கவேண்டும் என்று நாம் கணக்கிடலாம். ஆனால், உண்மையில் இதைவிட அதிகமான மக்கள் புனித நகரத்தில் இருந்திருக்கவேண்டும். (யாராவது இந்த கணக்கெடுப்பை இன்னும் மேம்படுத்த விரும்பினால், வேறு ஒரு கணக்கை கொண்டுவந்தால், எனக்கு தெரிவிக்கவும்).

கருத்துகள் இல்லை: