ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

செவ்வாய், 27 நவம்பர், 2007

பி.ஜைனுல் ஆபிதீனும் பரிசுத்த ஆவியும் : ஈஸா குர்‍ஆன் பதில்

பி.ஜைனுல் ஆபிதீனும் பரிசுத்த ஆவியும் : ஈஸா குர்‍ஆன் பதில்

பாகம் 1
பிஜே அவர்கள் "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்தில், "இயேசு பரிசுத்த ஆவியினால் நிறைந்திருப்பதால் கடவுளாக முடியுமா? " என்ற தலைப்பில், கீழ் கண்ட விவரங்களை அல்லது குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்:

1. ஒருவர் பரிசுத்த ஆவியினால் நிறைந்திருப்பதால், கடவுள் ஆக முடியாது, ஏனென்றால், பலர் பைபிளின் படி பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கிறார்கள்.

2. இயேசுவுக்குள் இருந்த பரிசுத்த ஆவி, பல சந்தர்ப்பங்களில் அவரை விட்டு விலகியிருக்கிறது.

3. இயேசு இறைவன் என்றால்? பின் ஏன் சோதிக்கப்பட்டார்?

4. இயேசு யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன் அவரிடம் பரிசுத்த ஆவி இருக்கவில்லை என்று தெரிகிறது.

5. இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதா, மூன்று தடவை இயேசுவை மறுத்த பேதுரு ஆகியோரும் கூட பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார்களா?
 Source:   http://www.onlinepj.com/book/mahana10.htm

நான் முதலில் மேலே உள்ள கேள்விகளுக்கு பதிலை கொடுத்துவிட்டு, பிறகு பிஜே அவர்கள் இத்தலைப்பில் எழுதிய மற்ற வரிகளுக்கு பதிலை இதே கட்டுரையின் கடைசியில் தருகிறேன்.


1. ஒருவர் பரிசுத்த ஆவியினால் நிறைந்திருப்பதால், கடவுள் ஆக முடியாது, ஏனென்றால், பலர் பைபிளின் படி பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கிறார்கள்.

பிஜே அவர்கள் இத்தலைப்பின் ஆரம்பத்தில் கீழ் கண்டவாறு எழுதுகிறார் :

இயேசு பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருதார் என்பதால் இயேசு கடவுளாகவும், கடவுளின் குமாரராகவும் கடவுளின் அம்சம் பெற்றவராகவும் ஆகிவிட்டார் என்பதும் கிறித்தவர்களின் வாதம் .

இது பலவீனமான வாதம்:

மதிப்பிற்குரிய பிஜே அவர்களே, நீங்கள் சொல்லும் இந்த வாதம் சரியான வாதம் கிடையாது. சில கிறிஸ்தவர்கள் அறியாமையினால் இந்த வாதத்தை உங்களுக்கு சொல்லியிருக்கலாம். ஆனால், உண்மையில் " இயேசு தேவகுமாரன் " என்பதற்கு இது சரியான வாதமாகாது.

இதைப் பற்றி சரியான வாதம் இப்படி இருக்கும், அதாவது, "இயேசு பரிசுத்த ஆவியை உடையவராக இருப்பதால் மட்டும் தேவகுமாரன் அல்ல, இயேசு பரிசுத்த ஆவியினால் பிறந்ததால், தான் அவர் தேவகுமாரன். " [இயேசு தேவகுமாரன் என்பதற்கு இன்னும் அனேக ஆதாரங்கள் உண்டு, அவைகளைப் பற்றி தனி பதிலில் காணலாம்]

பரிசுத்த ஆவியை பெற்ற பல நபர்களையும் வசனங்களையும் நீங்கள் பைபிளிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளீர்கள். உங்களால் முடிந்தால், இயேசு ("ஆண் பெண் இயற்கை உடலுறவு முறையில் இல்லாமல், பரிசுத்த ஆவியினால்") பிறந்தது போல இவ்வுலகத்தில் எத்தனை பேர் பிறந்துள்ளார்கள் என்று சொல்லமுடியுமா?

ஆதாம் தாயுமில்லாமல், தந்தையுமில்லாமல் பிறந்தான் என்றுச் சொல்லவேண்டாம், ஏனென்றால், ஆதாம் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான், தேவனின் ஆவியிலிருந்து பிறக்கவில்லை. நான் கேட்பது, தாயுமில்லாமல் தந்தையுமில்லாமல் பிறப்பதைப் பற்றி இல்லை, தேவனுடைய ஆவியினால் உலக முறையின்படி அல்லாமல், பிறந்தவர் யார் ?

நீங்கள் சொல்லும் வாதம் ஒரு சரியான வாதமாக இல்லை. ஒருவேளை இதை சில கிறிஸ்தவர்கள் தெரியாமல் சொல்லியிருந்தாலும் சரி. இதற்காக இயேசு பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படவில்லை என்று நான் சொல்லவரவில்லை. பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவது, இயேசு தேவகுமாரன் என்பதை நிருபிக்கும் சரியான‌ அளவுகோள் இல்லை என்றுச் சொல்கிறேன்.

இயேசு தேவகுமாரன் என்பதை முழுவதுமாக தெரிந்துக்கொள்ள, பிஜே அவர்களுக்கு நான் தரவிருக்கும் எல்லா பதில்களையும் படித்தால் தான் சரியாக புரியும் என்பது என் கருத்து. ஏனென்றால், இவர்(பிஜே அவர்கள்) பல விவரங்களை தனித்தனியாக பிரித்து இப்புத்தகத்தில்(அற்புதங்கள் செய்தால் கடவுள் ஆகமுடியுமா, தேவகுமாரன் என்று அழைக்கபட்டால் கடவுள் ஆகமுடியுமா, உயிர்த்தெழுந்தால் கடவுளா என்று தனித்தனியாக) எழுதியுள்ளார். எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால், தான் உண்மை விளங்கும், கர்த்தருக்கு சித்தமானால், எல்லா கேள்விகளுக்கும் பதில்களையும் பார்க்கலாம்.


2. இயேசுவுக்குள் இருந்த பரிசுத்த ஆவி, பல சந்தர்ப்பங்களில் அவரை விட்டு விலகியிருக்கிறது .

பி.ஜே அவர்கள் எழுதுகிறார் :

இயேசுவுக்குள் இருந்த பரிசுத்த ஆவி, பல சந்தர்பங்களில் அவரை விட்டு விலகியிருக்கிறது. பிசாசினால் அவர் சோதிக்கப்பட்டார். (ம‌த்தேயு 4:1-10)

இந்த சந்தர்பங்களில் பரிசுத்த ஆவி அவரை விட்டு விலகி விட்டது என்று தெரிகின்றது
.


அருமையான பிஜே அவர்களே, பரிசுத்த ஆவி இயேசுவை விட்டு விலகிவிட்டது என்று சொல்லும் ஒரு வசனத்தை உங்களால் காட்டமுடியுமா?

"விலகியிருக்கலாம்" அல்லது "விலகிவிட்டு இருக்கும் என்று தெரிகின்றது " என்று உங்களால் கற்பனை செய்துக்கொண்டு சொல்லமுடியுமே தவிர, இதற்கு ஆதாரம் காட்டமுடியாது.

ஆனால், இயேசு சோதிக்கப்படும் போது, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தார் என்று எங்களால் நிருப்பிக்க முடியும்.


2.1 ஞானஸ்நானமும் பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போல் இறங்குவதும் :

இயேசு ஞானஸ்நானம் பெற்று கரையேறும் போது, பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போல அவர் மேல் இறங்கினார். தேவன், இயேசுவைப் பற்றிய சாட்சியை இங்கு எல்லாருக்கும் முன்பாக தெரிவிக்கிறார்.

லூக்கா 3: 21. ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது;22. பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல் அவர்மேல் இறங்கினார் . வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி, நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது .

மேலே பார்த்த வசனத்தின் படி, இயேசு சோதிக்கப்பட போவதற்கு முன்பு பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தார் என்பதை அறிந்துக்கொள்ளலாம்.

2.2 இயேசு சோதிக்கப்பட பரிசுத்த ஆவியானவரே அழைத்துச் செல்கிறார் :

இங்கு பிஜே அவர்கள் பார்க்க தவறிய ஒரு வசனத்தைப் பற்றி சொல்லியாகவேண்டும். அதாவது, இயேசு சோதிக்கப்பட்டார் என்ற வசனத்தை பார்த்த பிஜே அவர்களுக்கு ஏன் இதற்கு முன் உள்ள வசனம் தெரியாமல் போனது என்று சந்தேகமாக உள்ளது.

மத்தேயு: 4:1. அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.

மாற்கு: 1:12. உடனே ஆவியானவர் அவரை வனாந்தரத்திற்குப் போகும்படி ஏவினார் .

லூக்கா 4:1. இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானைவிட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டு போகப்பட்டு,


இயேசு சோதிக்கப்பட்டதைப் பற்றி மூன்று சுவிசேஷங்கள் சொல்கின்றன, இந்த மூன்று நற்செய்தி நூல்களிலும், இயேசு ஆவியானவரினால் தான் சோதிக்கப்பட அழைத்து செல்லப்பட்டார் அல்லது ஆவியானவரின் ஏவுதலினால் இயேசு சென்றார் என்று மிகவும் தெளிவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை பிஜே அவர்கள் பார்க்கவில்லையோ? மட்டுமல்ல, பிஜே அவர்கள் மேற்கோள் காட்டிய‌ மத்தேயு அதிகாரம் 4 வசனங்கள் 1- 10 வரையுள்ள வசனங்களை படித்திருந்தாலே போதுமே, இயேசுவோடு அல்லது இயேசுவை வனாந்திரத்திற்கு அழைத்துச் சென்றது ஆவியானவர் என்று தெளிவாக புரிந்துவிடும். நீர் மேற்கோள் காட்டிய வசனங்களை நிதானமாக நீர் படித்திருந்தாலே போதும், உங்களுக்கு புரிந்திருக்கும்.

ஒருவேளை பிஜே அவர்கள் "நாம் நம் பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது, பள்ளிக்கூட வாசல் வரை சென்றுவிட்டு, அவர்களை உள்ளே அனுப்பிவிட்டு, டா டா சொல்லி, திரும்பி வீட்டிற்கு வந்துவிடுகிறோமே, அப்படி, ஆவியானவரும் வானாந்திரம் வரை இயேசுவை விட்டுவிட்டு, திரும்பி வந்துவிட்டார் என்று நினைத்தாரோ? பிஜே அவர்கள் தவறாக புரிந்துக்கொண்டு இருக்கிறார்கள் அல்லது இந்த வசனத்தை காண தவறிவிட்டார்கள்.

பிஜே அவர்கள் சொல்வது போல, இயேசுவை விட்டு பரிசுத்த ஆவியானவர் விலகிவிடவில்லை, விலகவேண்டிய அவசியமுமில்லை. ஏனென்றால், இயேசுவைப் பற்றி யோவான் ஸ்நானகன் என்ன சொல்கிறார் என்று பாருங்கள். இயேசு பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுக்கிறவர் என்றுச் சொல்கிறார்.

யோவான்: 1:33. நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னைஅனுப்பினவர்; ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ , அவரே பரிசுத்தஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவரென்று எனக்குச் சொல்லியிருந்தார்.34. அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்து வருகிறேன்என்றான் .

இயேசுவிற்கு தேவன் அளவில்லாமல் ஆவியானவரை கொடுத்துள்ளதாக யோவானே சொல்லியுள்ளார்[1]. தன் சிடர்களுக்கும் ஆவியானவரை கொடுப்பதாக இயேசு சொன்னார். அவர்களோடு எப்போதும் ஆவியானவர் இருப்பதாக இயேசு சொன்னார்.

யோவான் 3:34 தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார், தேவன் அவருக்குத் தமதுஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.

யோவான்: 15:26. பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்துபுறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச்சாட்சிகொடுப்பார்
.



2.3 சோதிக்கப்பட்ட பின்பு, பரிசுத்த ஆவியானவரின் வல்லமையோடு திரும்பி வருதல் :

சோதிக்கப்பட போகும் பொது மட்டுமல்ல , திரும்பி வரும்போதும் இயேசு பரிசுத்த ஆவியின் வல்லமையினால் நிறைந்தவராக வந்தார் என்று வசனம் சொல்கிறது.

லூக்கா 4:14. பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று.

Luke 4:14 Jesus returned to Galilee in the power of the Spirit, and news about him spread through the whole countryside

http://www.biblegateway.com/passage/?search=luke%204:14&version=31

இயேசுவை விட்டு ஆவியானவர் விலகியிருந்தால், சோதிக்கப்பட்ட பின்பு இயேசு பலவீனமாக அல்லவா இருந்திருப்பார், ஆனால், வசனம் சொல்கிறது, அவர் ஆவியானவரின் பலத்தினால் திரும்பிவந்தார் .



2.4 "சோதிக்கப்படுதல்" என்பதை தவறாக புரிந்துக்கொண்ட பிஜே அவர்கள்:

ஏன் பிஜே அவர்கள் பரிசுத்த ஆவியானவர் இயேசுவை விட்டு விலகிவிட்டார் என்று கருதுகிறார்? பைபிளில் சொல்லப்படாத விவரம் உள்ளது போல ஏன் இவர் கருதுகிறார்? என்று சிந்திக்கும் போது, ஒரு விவரம் தெரியவருகிறது.

அதாவது, "ஒருவர் சோதிக்கப்படுகிறார்" என்றுச் சொன்னால், அவரை விட்டு பரிசுத்த ஆவியானவர் விலகிவிட்டார் என்று பிஜே அவர்கள் நினைக்கிறார். வேறு வகையில் சொல்லவேண்டுமானால், "நாம் சோதிக்கப்படுகிறோம்" என்றுச் சொன்னால், நம்மை விட்டு ஆவியானவர் விலகிவிட்டார் என்று பொருள் என்று பிஜே அவர்கள் சொல்கிறார்.

இது தவறான கருத்தாகும். எப்படி என்று புரிந்துக்கொள்ள மேற்கொண்டு படியுங்கள்.



2.4.1 சோதிக்கப்படுதல் பாவமில்லை, சோதனையில் தோல்வியடைதல் தான் பாவம் :

பிஜே அவர்கள் கருத்துப்படி, "ஒருவர் சோதிக்கப்பட்டார்" என்று வைத்துக்கொண்டால், அவரை தீமையிலிருந்து காப்பாற்றும் சக்தி ( கிறிஸ்தவத்தை பொருத்தவரையில் பரிசுத்த ஆவியானவர்) அவரை விட்டு விலகிவிட்டது, அதனால், தான் தீமையினால்(பிசாசினால்) அவர் சோதிக்கப்படுகிறார் என்றுச் சொல்கிறார்.

இதை மனதில் வைத்துக்கொண்டு தான் இயேசுவை விட்டு பரிசுத்த ஆவியானவர் விலகியிருக்கிறார் என்றுச் சொல்கிறார். ஆனால், அப்படி விலகவில்லை என்பதை மேலேயே நான் விளக்கிவிட்டேன். இருந்தாலும், இவரது மனதில் உள்ளதையும், இவரது அறியாமையையும் இங்கு பரிசீலிக்கலாம்.

ஒரு மனிதன் சோதிக்கப்பட்டால் - அவன் பாவம் செய்ததாக அர்த்தம் அல்ல, ஆவியானவர் அவரைவிட்டு விலகிவிட்டார் என்று அர்த்தமல்ல .

ஆனால், ஒரு மனிதன் சோதிக்கப்படும் போது, அதில் விழுந்துவிட்டால், அதாவது தோல்வியடைந்து விட்டால் தான் அது பாவமாக கருதப்படும், இந்த நேரத்திலும் ஆவியானவர் அவனை விட்டு விலகமாட்டார். எப்படி என்பதை கீழே உள்ள உதாரணத்தை படிக்கவும் .


உதாரணம் :

ஒரு மனிதன் இயேசுவை தன் உள்ளத்தில் தெய்வம் என்று நம்பி ஏற்றுக்கொள்கிறான் என்று வைத்துக்கொள்வோம் (இதையே இரட்சிக்கபடுதல் என்று கிறிஸ்தவர்கள் சொல்கிறார்கள்).

ஒரு மனிதன், இயேசுவை தன் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளும் போது, அவனது உள்ளத்தில் ஆவியானவர் வந்து விடுகிறார். அவன் இனி நான் தவறுகள் செய்யமாட்டேன், என்று முடிவு செய்கிறான் (கவனிக்கவும் முடிவு மட்டும் செய்கிறான், ஆனால், மரணம் வரை அவன் அப்படி வாழவேண்டும் என்பது தான் முக்கியம்). அவன் பரிசுத்தமாக வாழ்வதற்கு, வாராவாரம் சபையில் அவன் கேட்கும் போதனைகளும், அவன் அனுதின பைபிள் வாசிப்பும், பரிசுத்த ஆவியின் எச்சரிப்பும், அவன் ஜெபமும், அவன் குடும்ப நபர்களின் உட்சாகமும் அவனுக்கு உதவி செய்கின்றன.

இவன் ஒரு அரசு ஊழியர் என்று வைத்துக்கொள்வோம், இவன் யாரிடமும் இலஞ்சம் வாங்குவதில்லை என்று முடிவும் செய்துள்ளான்.

ஒரு நாள், இவன் இலஞ்சம் வாங்குவதற்கு ஏற்ற சூழல் ஏற்படுகிறது, அதாவது, ஒரு பெரிய பணக்கார மனிதர் இவரிடம் வந்து, இவர் செய்யவேண்டிய வேலையை சீக்கிரமாக செய்தால், பல ஆயிரம் பணமும் தருவதாகச் சொல்கிறார். அதாவது, தன் கடமையை சீக்கிரமாக செய்தாலே பணம் தருவதாகச் சொல்கிறார். இந்த பணத்தை வாங்கிக்கொண்டு, இவர் மற்ற வேலையை பக்கத்தில் வைத்துவிட்டு, இந்த பணக்கார மனிதனுடைய வேலையை செய்துத் தரலாம். இதனால், ஒன்றும் பிரச்சனை இல்லை, இவர் மாட்டிக்கொள்ள வாய்ப்பும் இல்லை. இது ஒரு அருமையான வாய்ப்பு, அதாவது, பல ஆயிரங்கள் ஒரு நாளில் சம்பாதிப்பதற்கு.

இதைத் தான் நான் சோதனை என்றுச் சொல்வேன். இந்த மனிதனுக்கு சோதனை வந்தது, இது பாவமில்லை. இப்போது பரிசுத்த ஆவியானவர் இவரை விட்டு விலகவேண்டிய அவசியமுமில்லை, காரணம் சோதிக்கபடுவது பாவமல்ல். மனிதனாக பிறந்த எல்லாரும் சோதிக்கபடுகிறார்கள், அதாவது பரிட்சை எழுதுகிறார்கள். யாரொ ஒருவன் வந்து நாம் தவறு செய்ய நம்மை தூண்டுவான், அதற்கு நாம் காரணம் ஆகமுடியாது. இதனால் பரிசுத்த ஆவியானவரும் நம்மைவிட்டு விலகவேண்டிய அவசியமுமில்லை. இந்த சோதனையில் நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதை பொருத்து தான் ஆவியானவரின் செயல்பாடும் இருக்கும்.

இந்த உதாரணத்தில், இவன் வீட்டிற்குச் செல்கிறான், சிந்திக்கிறான், ஆவியானவர் மனசாட்சியோடு பேசுகிறார், நீ பணம் வாங்காதே, உன் கடமையை மட்டும் சரியாகச் செய் என்கிறார். பல பைபிள் வசனங்கள் மனதிலே வந்துச் செல்கிறது, தன் போதகர் சொன்ன அறிவுரைகள் மனதில் வந்துச் செல்கிறது.


பதில்: 1

மறு நாள், அலுவலகம் செல்கிறான், அந்த நபருக்குச் சொல்கிறான், உங்கள் பணம் எனக்கு வேண்டாம், ஆனால், என் கடமையைச் செய்ய எனக்கு சட்டப்படி இத்தனை நாட்கள் ஆகும், அது வரை நீங்கள் காத்திருக்கவேண்டும், இத்தனை நாட்கள் கழித்து வாருங்கள், உங்கள் வேலை முடிந்திருக்கும், என்றுச் சொல்கிறான் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

இவன் சோதிக்கப்பட்டான், ஆனால், அதில் ஜெயித்தான், பரிட்சை எழுதினான் ஆனால், வெற்றிப்பெற்றான் .

எனவே, என்னை பொருந்தவரையில், சோதிக்கபடுவது ஒரு பாவமில்லை, அதில் தோல்வி அடைதல் தான் பாவம் . இந்த எடுத்துக்காட்டில், இவனது இந்த செயலால், இவனுள் இருக்கும் ஆவியானவர், "சபாஷ் என் மகன் வெற்றிப் பெற்றான் " என்றுச் சொல்லி சந்தோஷப்படுவார்.



அல்லது

பதில்: 2

ஒருவேளை மறுநாள் சென்று, அந்த மனிதரிடம் பணம் பெற்றுக்கொண்டு,மற்ற நியாயமான வேலையை பக்கத்தில் வைத்து, இவரது வேலையை முடித்துக்கொடுக்கிறார் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது இந்த மனிதன் சோதிக்கப்பட்டான், அப்போது இவன் தவறு செய்தனாக கருதக்கூடாது, ஆனால், சோதனையில் விழுந்துவிட்டான், அதாவது தோல்வியடைந்தான், இது தான் பாவம். ஆவியானவர் துக்கமடைவார் .

இப்போது இவனை விட்டு ஆவியானவர் விலகுவாரா என்றால், இப்போதும் இல்லை. அதாவது நான் புரிந்துக்கொண்ட கிறிஸ்தவ கோட்பாடுகளின் படி:

இவன் செய்த குற்றத்தை நியாபகத்தில் கொண்டு வந்து ஆவியானவர் இவனை கடிந்துக்கொள்வார், மனசாட்சி இவனை குத்தும், சரியாக வேதம் வாசிக்கமுடியாது, மனசாட்சி சொல்லிக்கொண்டே இருக்கும், நீ ஒரு தவறு செய்தாய் என்று... இது எத்தனை நாட்கள் தொடரும் என்றால், ஒன்று இவன் மறுபடியும் மனம் திரும்பும் வரையில் தொடரும். இவன் திருந்திவிட்டால், பிறகு பரிசுத்தமாக வாழ்ந்தால், இப்படிப் பட்ட தவறுகள் மறுபடியும் செய்யாமல் இருந்தால், ஆவியானவர் இவனை விட்டு விலகமாட்டார்.

ஆனால், ஆவியானவர் சொல்வதையும், மனசாட்சியில் குத்தப்படுகிறதையும் பொருட்படுத்தாமல், இவன் இதை ஒரு வாடிக்கையாகக் கொண்டு மறுபடியும் செய்துக்கொண்டே இருந்தால், அப்போது ஆவியானவர் தானாகவே இவனை விட்டு விலகிவிடுவார், அதாவது, இவன் மனசாட்சி செத்துப்போகும். இனி எந்த பயமுமில்லாமல் குற்றங்கள் தவறுகள் செய்துக்கொண்டு இருப்பான்.

எனவே, ஆவியானவர் எப்போது ஒரு மனிதனை விட்டு விலகுவார் என்றால், அடிக்கடி கடிந்துக்கொள்ளப் பட்டும், தன்னை திருத்திக்கொள்ளாமல் தன் மனதை கடினப்படுத்துகிறவனை விட்டு ஆவியானவர் விட்டுவிலகுவார் , இதையே கிறிஸ்தவ முறையில், பின்மாற்றமடைதல் என்றுச் சொல்வார்கள்.


எபிரெயர்: 6: 4. ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,5. தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்,6. மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புகிறதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.7. எப்படியெனில, தன்மேல் அடிக்கடிபெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்.8. முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு .
முஸ்லீம்கள் கேட்கலாம், ஆவியானவர் ஒரு இரட்சிக்கப்பட்டவனின் உள்ளத்தில் வந்தால், ஏன் அவனை பாவம் செய்யாமல் தடுக்கமுடியவில்லை?

கிறிஸ்தவத்தைப் பற்றி ஒன்றை எல்லாரும் சரியாக புரிந்துக்கொள்ளவேண்டும், அது என்னவென்றால், தேவன் மனிதனுக்கு சுயமாக சிந்திக்கும், முடிவு எடுக்கும்( Free Will) திறமையை கொடுத்துள்ளார்.  எதையும் கட்டாயப்படுத்தமாட்டார், நல்ல வழி எது தீய வழி எது என்றுச் சொல்வார்,  தவறாக நடந்துக்கொண்டால், என்ன தண்டனை கிடைக்கும் என்றுச் சொல்வார், ஆனால், முடிவு எடுக்கும் உரிமையை மட்டும் அவனிடமே விட்டு விடுவார்.

எனவே, நாம் எடுக்கும் முடிவுகளின் படித்தான் நம் வாழ்க்கை அமையும். இயேசு கதவுக்கு வெளியே நிற்பார், தட்டுவார், தான் யார் என்றுச் சொல்வார், அதைக் கேட்டு கதவை திறந்தால், நம் உள்ளத்திலே வருவார். ஆனால், நாம் கதவை திறக்கவில்லையென்று கதவை உடைத்துக்கொண்டு உள்ளே கட்டாயத்தின் பேரில் வரமாட்டார்.

[இந்த விசயத்தில் இஸ்லாம் வேறுபடுகிறது, ஒருவன் முஸ்லீமாக மாறிய பிறகு, அதிலிருந்து வெளியே வருவேன் என்றுச் சொன்னால், அவனுக்கு மரண தண்டனை என்று இஸ்லாம் சொல்கிறது. அதனால், உயிருக்கு பயந்து இஸ்லாமிலேயே இருந்துவிடுகிறான், அதனால் என்ன பிரயோஜனம்? நாளைக்கு மரணம் வந்தபிறகு, அல்லா இவனைப் பார்த்து, என் ஊழியனே, உனக்காக சொர்க்கம் தயாராக உள்ளது என்றுச் சொன்னால், இவன் சிரிப்பான், உயிருக்கு பயந்து நான் இஸ்லாமியே இருந்தேன், உம்மில் பக்தியுள்ளவனாக நான் இத்தனை நாட்கள் வாழவில்லை என்றுச் சொல்வான்.

இப்போது முஸ்லீம்கள் சொல்வீர்கள், இப்படிப் பட்டவனுக்கு அல்லா சொர்க்கம் கொடுக்கமாட்டார் என்று, அப்படியானால், ஏன் அவனை இத்தனை ஆண்டுகள் இஸ்லாமில் நம்பிக்கை இல்லையானாலும், பயப்படவைத்து இஸ்லாமியே இருக்கச்செய்தீர்கள். அவன் இஸ்லாமை விட்டு வெளியே போகும் போது அனுப்பியிருந்தால், குறைந்த பட்சம், இந்த உலகத்திலாவது அவன் சந்தோஷமாக தான் நம்பும் நம்பிக்கைப்படி (இந்துவாகவோ, கிறிஸ்துவனாகவோ, நாத்தீகனாகவோ..) வாழ்ந்து இருப்பான் அல்லவா..? நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், இஸ்லாம் போல கிறிஸ்தவத்தில் கட்டாயம் இல்லை என்பதை சொல்லவருகிறேன். இதைப் பற்றி இன்னும் அதிகமாக தனி கட்டுரையில் சிந்திக்கலாம் ]

எனவே, சோதிக்கப்படுவது பாவமில்லை, ஆவியானவர் பிசாசினால் சோதிக்கபடுகின்ற மனிதனை விட்டு போகவும் மாட்டார், சோதிக்கப்படும்போது தோல்வி அடைந்தால் தான் தவறாகும். பரிட்சை எழுதினால் தானே, நம் திறமை வெளிப்படும்.

நம் திறமையை, பரிசுத்தத்தை, இறைவன் மீது நாம் வைத்துள்ள திடமான நம்பிக்கையை வெளிக்காட்ட நமக்கு வரும் சந்தர்ப்பம் தான் சோதிக்கப்படுவது என்பது .

[எகிப்திலே யோசேப்பிற்கு போத்திபாரின் மனைவி மூலம் சோதனை வந்ததால் தான், யோசேப்பு எப்படி தன் பரிசுத்தத்தை காத்துக்கொள்ள முயற்சி எடுத்தான் என்று நமக்கு தெரியவந்தது, அதுபோல]

இதை பிஜே அவர்கள் தவறாக புரிந்துக்கொண்டு இயேசுவை விட்டு ஆவியானவ‌ர் விலகிவிட்டார் என்று நினைத்துக்கொண்டார்.

கிறிஸ்தவ கோட்பாடுகளின்படி அல்ல, பொதுவாகவே, நாம் சோதிக்கப்படுவது தவறில்லை, ஆனால், ஜாக்கிரதையாக இருந்து அதில் வெற்றி பெற முயலவேண்டும். இது இஸ்லாமுக்கும் பொருந்தும், ஒரு முஸ்லீம் சோதிக்கபடுவது பாவமில்லை, அவன் அதில் விழுந்துவிட்டால் தான் அது பாவம் என்று நான் நினைக்கிறேன்.

ஒரு முஸ்லீம் வியாபாரம் செய்யும் போது, மற்றவர்களை ஏமாற்ற கிடைக்கும் வாய்ப்புக்கள் அது அவனுக்கு சோதனை தான், ஒரு நல்ல மாணவனுக்கு பரிட்சை எழுதும் போது, தனக்கு தெரியாத கேள்வியின் பதிலை மற்றவனை பார்த்து எழுத கிடைக்கும் வாய்ப்பு ஒரு சோதனை தான், தவறான வழியில் சம்பாதிக்க ஒரு முஸ்லீமுக்கு கிடைக்கும் வாய்ப்பு ஒரு சோதனை தான், ஆனால், இதில் வெற்றிப்பெற்றால், அது பாவமாகாது, அவனைப் பற்றி இறைவன் சந்தோஷப்படுவார்.

எனவே, பிஜே அவர்களே, ஆவியானவர் விலகிவிட்டார் எனவே, இயேசு சோதிக்கப்பட்டார் என்ற தோரனையில் நீங்கள் எழுதியது, ஒரு மிகப்பெரிய தவறான புரிந்துக்கொள்ளுதலாகும். ஆவியானவர் நம்முடனே இருக்கும் போது தான் நாம் சோதிக்கப்படுகிறோம், தோல்வியோ வெற்றியோ பெருகிறோம். அதன் பிறகு தான் நம்மோடு ஆவியானவர் இருக்கமுடியுமா? இல்லையா? என்பது நிர்ணயிக்கப்படும் .


3. இயேசு இறைவன் என்றால், பின் ஏன் சோதிக்கப்பட்டார்?

பிஜே அவர்கள் எழுதியது :

இன்னும் சொல்வதென்றால் பரிசுத்த‌ ஆவியினால் நிரம்பிய மற்றவர்களைக் கடவுள் என்று கூறினால் கூட இயேசுவைக் கடவுள் என்று கூற முடியாது. அதற்கு பைபிளிலேயே ஆதாரம் கிடைக்கின்றது.

சோதிக்கப்படுகிற எவனும் நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக. (யாக்கோபு 1:13)

கடவுள் என்பவர் தீமைகளால் சோதிக்கப்பட முடியாது என்பதை இவ்வசனம் அழுத்தமாகக் கூறுகின்றது.

ஆனால் இயேசுவோ பலமுறை பிசாசினால் - தீமைகளால் சோதிக்கப்பட்டதாகவும் பைபிள் கூறுகிறது. (மத்தேயு 4:1-10)

இயேசுவிடம் பரிசுத்த‌ ஆவி நிரம்பி வழிந்தாலும் அவர் பிசாசினால் சோதிக்கப்பட்டிருக்கிறார். இவ்வாறு சோதிக்கப்பட்டவர் கடவுளாக இருக்க முடியாது எனும் போது இயேசுவைக் கடவுளாக ஏற்பதில் கடுகளவாவது நியாயம் இருக்கிறதா என்று சிந்தித்துப் பாருங்கள்!


பிஜே அவர்களே, நீங்கள் மேற்கோள் காட்டிய வசனத்தின் (யாக்கோபு: 1:13 ) ஒரு பகுதியை மட்டுமே காட்டியுள்ளீர்கள், உங்களுக்கு பதில் அளிப்பதற்காக, முழு வசனத்தையும் நான் பதிக்கிறேன்.

யாக்கோபு: 1:13. சோதிக்கப்டுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல , ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.

James 1:13 (NIV) When tempted, no one should say, "God is tempting me." For God cannot be tempted by evil, nor does he tempt anyone;


இந்த வசனத்தில் இரண்டு விவரங்கள் அடங்கியுள்ளன.


1. ஒருவன் சோதிக்கப்பட்டால், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்றுச் சொல்லக்கூடாது, ஏனென்றால், தேவன் எவனையும் சோதிப்பதில்லை.

2. தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவருமல்ல ( God cannot be tempted by evil ). "கடவுள் தீமைகளால் சோதிக்கப்படமுடியாது" என்று நீர் சொல்வதற்கு பதில் இங்கு சொல்கிறேன்.


முதலாவதாக:

1. ஒருவன் சோதிக்கப்பட்டால், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்றுச் சொல்லக்கூடாது, ஏனென்றால், தேவன் எவனையும் சோதிப்பதில்லை.

பிசாசு சோதிப்பதற்கும், தேவன் சோதிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. தேவன் சோதித்தார்(Tempted) என்றுச் சொல்வதை விட "பரிட்சை வைத்தார்(Tested)" என்றுச் சொல்லலாம்.

ஒருவனை பிசாசு(இப்லீஷ்) சோதித்தால், அம்மனிதன் இறைவனுடைய கட்டளைகளை மீறக்கூடிய விதத்தில் அவன் சோதனை இருக்கும்.

உதாரணத்திற்கு:

திருடக்கூடாது, கொலை செய்யக்கூடாது என்பது இறைவனின் கட்டளை. ஆனால், பிசாசின் சோதனை எப்படி இருக்கும் என்றால், இறைவன் விதித்த இப்படிப்பட்ட கட்டளைகளை மனிதன் மீறும் வகையில் இருக்கும். மனிதர்களை திருடவோ, கொலை செய்யவோ, ஏமாற்றவோ செய்யும் படி பிசாசு சோதிப்பான்.

ஆனால், எந்த காலத்திலும் இறைவன், தான் விதித்த கட்டளைகளை மனிதர்களே மீறும்படி சோதிக்கமாட்டார். உதாரணத்திற்கு, மேலே சொன்னது போல, ஒரு மனிதன் இன்னொருவனை ஏமாற்றும்படியோ, கொலை செய்யும்படியோ ஒரு சோதனையை இறைவன் மனிதனுக்கு தரமாட்டார்.

அப்படி ஒரு மனிதன் இவ்விதமான சோதனையில் (இறைவன் விதித்த கட்டளைகளை மீறும்படியாக சூழ்நிலையில்) இருந்தால், அவன் "நான் இறைவனால் சோதிக்கப்படுகிறேன்" என்றுச் சொல்லக்கூடாது என்று தான் யாக்கோபு 1:13ம் வசனம் சொல்கிறது. ஏனென்றால், இறைவனே நல்ல கட்டளைகளை கொடுத்துவிட்டு, அதை மனிதன் மீறும் படி அவரே சோதனையை கொடுக்கமாட்டார் என்பதால்.

குர்‍ஆனிலும் பல இடங்களில் அல்லா மனிதர்களை சோதித்ததாக பல வசனங்கள் (7:49, 21:35, 29:2 89:15) வருகின்றன, இவைகள் அனைத்தும், அல்லா அம்மனிதர்களை நல்வழிப்படுத்தவே சோதிக்கிறார் என்று நான் நினைக்கிறேன். இந்த சோதனை அம்மனிதர்களை பாவம் செய்ய தூண்டக்கூடியதாக இருக்காது என்று நான் நினைக்கிறேன்.

எனவே, ஒரு மனிதன் தவறு செய்யப்படும் படி சோதிக்கப்பட்டால், தேவன் தான் என்னை சோதித்தார் என்று கூறக்கூடாது என்று இவ்வசனம் கூறுகிறது.


2. தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவருமல்ல (God cannot be tempted by evil).

இந்த வார்த்தைகள் தான் உங்களுடைய கேள்விக்கு காரணம். அதாவது, இறைவன் என்பவன் தீமைகளால் சோதிக்கப்படமுடியாது என்று பைபிள் சொல்கிறது, ஆனால், இயேசு பிசாசினால் சோதிக்கப்பட்டார்? அப்படியானால், இயேசு எப்படி இறைவன் ஆகமுடியும்?

இவ்வசனத்தை நீர் தவறாக புரிந்துக்கொண்டு இருக்கிறீர்கள், அதாவது, இறைவன் பிசாசினால் சோதிக்கப்படமுடியாது என்றுச் சொல்லவில்லை, அதற்கு பதிலாக, இறைவனை  பிசாசு தீமை செய்யும் படி, தீமைகளின் ஆசையைக் காட்டி சோதனைக்கு உட்படுத்தமுடியாது என்பது இவ்வசனத்தின் பொருள் .

வேறு வகையில் விவரிக்கிறேன், இறைவனை நாம் சோதிக்கலாம், பிசாசும் சோதிக்கலாம், ஆனால், அவர் நம் சோதனைக்கோ, பிசாசின் சோதனைக்கோ உட்படமாட்டார் என்பதாகும் .

உதாரணத்திற்கு, பிசாசு அல்லாவை கிழ் கண்ட கேள்விகள் மூலம் சோதிக்கிறான் என்று நினைத்துக்கொள்ளுங்கள்:


பிசாசு: அல்லாவே, உமக்கு நான் இந்த உலகமனைத்தையும் கொடுக்கிறேன், என் கால்களில் விழுந்து வணங்கு?

அல்லா: போடா முட்டாள், இந்த உலகம் அனைத்தும் எனக்கு சொந்தம் எனக்கு எதை கொடுத்து உன்னால், சோதிக்கமுடியும்? 

குறிப்பு: பிசாசு சோதித்தான், ஆனால், அல்லா உட்படவில்லை. சோதனையில் ஜெயித்தார்.

பிசாசு: அல்லாவே, எனக்கு முன்பாக நீர் வணங்கினால், நான் உனக்கு அழகான உலக அழகியை தருவேன்.

அல்லா: போடா பையித்தியக்காரா. நான் பெண் ஆசைகளுக்கு அப்பாற்பட்டவனடா, எனக்கு ஒன்று வேண்டும் என்றால், என்னால் அதை உருவாக்கிக்கொள்ள முடியும். உன்னிடம் நான் கேட்கமாட்டேன். அவ்வளவு ஏன், என் தாசர்கள் என்னிடம் வந்தால், அவர்களுக்கு அனேக பெண்களை கொடுப்பதற்க்கு நான் நிறைய பெண்களை தயாராக வைத்துள்ளேன்.

குறிப்பு: இந்த உதாரணத்திலும் அல்லாவை பிசாசு சோதித்தான், ஆனால், அவர் உட்படமாட்டார்.


ஆக, அல்லாவை பிசாசு சோதிக்கலாம், ஆனால், ஒன்றை மறந்துவிடக்கூடாது, அதாவது, எதை கொடுத்து இறைவனை பிசாசு சோதிக்கமுடியும்?

ஒரு மனிதனை சோதிக்கவேண்டுமானால், அம்மனிதனிடம் இல்லாத ஒரு பொருளின் ஆசைக்காட்டி பிசாசு சோதிப்பான். ஆனால், இறைவனிடம் இல்லாத பொருள் என்ன இருக்கப்போகிறது சொல்லுங்கள்?

ஒரு தளத்தில் கீழ் கண்டவாறு இதே கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டிருந்தது:


Q: In Jms 1:13, can God be tempted, since Ex 17:7; Num 14:22; Dt 6:16; and Ps 78:18,41,56; 95:6; 106:14 say people tempted God?

A: People in the Exodus and today can try to tempt God, if they wish, but God cannot be tempted. What are you going to give Him to tempt the Almighty? How are you going to fool the All-Knowing?


Source :http://www.biblequery.com/jms.htm






எனவே, இன்று நானும் அல்லாவை சோதிக்க முடியும்? ஆனால் எதை கொடுத்து அவரை நான் சோதிப்பது அது தான் கேள்வி? பிசாசும் அல்லாவை சோதிக்க முடியும். ஆனால், அவரிடம் இல்லாத ஒன்றை கொடுத்தல்லவா சோதிக்கமுடியும்? எனவே, அல்லாவும் சோதிக்கப்படுவார்? ஆனால், அவர் சோதனைக்குட்படமாட்டார்?

இதே போலத் தான் பிசாசும் இயேசுவை சோதித்தான், ஆனால், இயேசு சோதனைக்குட்படவில்லை? அதாவது சோதனையில் ஜெயித்தார்.

உலக இராஜ்ஜியம் அனைத்தும் உனக்கு தருகிறேன், என்னை வணங்கு என்றுச் சொல்லி பிசாசு சோதிக்கிறான், உலகம் அனைத்தும் தன்னுடையது என்று இயேசுவிற்குத் தெரியும், இயேசுவுக்கு சொந்தமானதை எடுத்து யார் அதை அவருக்கு தரமுடியும்? எனவே, தான் இயேசு தன் பதிலை பைபிள் வசனங்களாக கொடுத்தார்.

எனவே, இறைவன் என்றால் யாரும் சோதிக்க முயலமாட்டார்கள் என்று பொருள் அல்ல? ஆனால், இறைவன் அச்சோதனையில் தொல்வியை அடையமாட்டார் என்பது தான் உண்மை


இதைத் தான் "பொல்லாங்கினால் தேவன் சோதிக்கப்படுகிறவர் இல்லை " என்று வசனம் சொல்கிறது. இதன் பொருள், பிசாசினால் அல்லது மனிதனால் இறைவன் சோதிக்கப்பட மாட்டார் எனபதல்ல, சோதிக்கபடுவார் ஆனால், சோதனைக்குட்படமாட்டார் என்று பொருள்.

இதே போலத்தான் பிசாசு இயேசுவை சொதித்தான், ஆனால், அவன் சோதனையில் அவர் விழவில்லை, தோல்வி அடையவில்லை, அவன் சோதனைக்கு உட்படவில்லை. இது தான் வெற்றி.

சோதிக்கப்படுவது பாவமில்லை, ஆனால், சோதனையில் விழுந்துவிடுவது, தோல்வி அடைவது தான் பாவம். இறைவன் என்பவர் தொல்வி அடையாதவர், பாவம் செய்யாதவர், இயேசுவும் பாவம் செய்யவில்லை. ஆனால், முகமது பாவம் செய்ததாகவும், அல்லா மன்னித்ததாகவும் குர்‍ஆன் வசனங்கள் உண்டு. எனவே, இயேசு தான் இறைவன், உங்கள் அனைத்து வாதங்களும் வெறும் கற்பனையில் உதித்தவையே.


4. இயேசு யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன் அவரிடம் பரிசுத்த ஆவி இருக்கவில்லை என்று தெரிகிறது .

பிஜே அவர்கள் எவ்வளவு புத்திசாலித்தனமாக எழுதுகிறார் என்றுப் பாருங்கள். அதாவது, " தெரிகின்றது " என்ற வார்த்தையை பயன்படுத்தி சந்தேகம் என்னும் விதையை கிறிஸ்தவர்களின் மனதில் விதைக்க முயலுகிறார். [ஏதோன் தோட்டத்தில் சாத்தான் (இப்லீஷ்) "தேவன் ஏதாவது ஒரு மரத்தின் கனியை சாப்பிடக்கூடாது? என்றுச் சொன்னாரா?" என்று ஏவாளின் மனதில் சந்தேகத்தின் விதையை விதைத்தது போல]
பிஜே அவர்கள் எழுதுகிறார் :

அப்படியானால், ஞானஸ்நானம் பெறுவதற்கு முன் அவரிடம் பரிசுத்த ஆவி இருக்கவில்லை என்பது தெரிகின்றது. ஆனால் யோவான் தாயின் வயிற்றிலிருக்கும் போதே பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார்
.


இயேசு ஞானஸ்நானம் பெறும் போது ஆவியானவரின் வெளிப்பாடும் மற்றும் தேவனின் வார்த்தைகளும் யோவானுக்கும், மற்ற மக்களுக்கும், இயேசுவின் அதிகாரத்தை காட்ட தேவன் செய்த ஏற்பாடாகும்.

பிஜே அவர்களே, யோவான் தன் தாயின் வயிற்றில் இருக்கும் போது பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தார் அவவளவு தானே, ஆனால், இயேசு பரிசுத்த ஆவியால் பிறந்தார் என்பதை ஏன் உங்களுக்கு புரியவில்லை? [இஸ்லாமியர்கள் சொல்வது போல, தேவன் மரியாளோடு உடலுறவு முறையில் தான் இயேசு பிறந்தார் என்ற கீழ் தரமான மற்றும் தவறான பொருளை கொடுக்கமாட்டீர்கள் என்று எண்ணுகின்றேன்]

இயேசுவின் பிறப்பின் ஆரம்பமே ஆவியானவர் மூலமாக ஆரம்பிக்கிறது, ஆனால், இயேசு தனக்கு 30 வயதாகும் போது தான், தன் ஊழியத்தை ஆரம்பித்தார்.


யோவானுக்கும், மற்றவர்களுக்கும் சாட்சியாக இருக்க ஆவியானவர் இறங்கினார் :

யோவான் 1:33 நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னைஅனுப்பினவர்; ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்தஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவரென்று எனக்குச் சொல்லியிருந்தார் .
மேலே உள்ள வசனத்தில் யோவான் சொல்லும் சாட்சியை பாருங்கள், யோவானுக்கு இயேசு யார் என்பதை தெரிவிக்க, பரிசுத்த ஆவியானவர் இயேசு ஞானஸ்நானம் பெற்ற பொது, இறங்கினார். பரிசுத்த ஆவியானவர் இயேசுவோடு இடைபடும் நிகழ்ச்சி இது தான் முதல் முறை என்பது இதன் அர்த்தமல்ல.

இயேசுவிற்கு அதிகாரம் உண்டென்பதை ( மேசியா [மஸிஹா] என்பதை ) தெரிவிக்க :

மட்டுமல்ல, தேவன் "இவர் என் நேசகுமாரன் " என்றுச் சொன்னது கூட, இயேசு அதிகாரம் உள்ளவர் என்பதை யோவானுக்கும், மற்ற மக்களுக்கும் காட்டவே. மற்றவர்களுக்காகவே அந்த இடத்தில் பரிசுத்த ஆவியானவரும், தேவனும் ஒன்றாக செயல்படுவதை காணமுடிகிறது. இயேசுவிற்கு தான் யார் என்பதும், தேவனுக்கும் தனக்கும் இடையே உள்ள உறவு என்னவென்பதும் நன்றாகவே தெரியும். தனக்கு 12 வயதாகும் போதே, நான் என் பிதாவின் கிரியைகளில் இருக்க வேண்டியவன் என்பதை நீங்கள் அறியவில்லையா என்று மரியாளிடத்தில் சொன்னார்.

ஞானஸ்நானம் பெற்ற நாளிலிருந்து இயேசு, தான் வந்த நோக்கத்தை நிறைவேற்ற ஆரம்பித்தார். இயேசுவிற்கு 30 வயதாகும் வரை பிசாசு அவரை சோதித்ததாகவோ, இயேசு மற்ற அற்புதங்கள் செய்ததாகவோ நாம் வேதத்தில் காணமுடியாது.

எனவே, பரிசுத்த ஆவியானவர் இயேசுவோடு இல்லை என்பதற்கு ஒரு ஆதாரமும் காணமுடியாது, வேண்டுமானால், ஊகத்தின் பேரில் இப்படி இருக்கலாம் என்றுச் முஸ்லீம்கள் சொல்லலாமே தவிர, நிச்சயமாக இப்படி இருந்தது என்று ஆதாரம் காட்டமுடியாது. இயேசுவிற்கு 12 வயதாகும் போது, அவரைப் பற்றி வரும் வசனம் இது,

லூக்கா 2:52 இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார் .

தேவகிருபையில் இயேசு விருத்தி அடைந்தார், தேவகிருபையே இயேசுவோடு இருக்கும் போது, அவரிடம் எல்லாம் இருக்கிறது என்றல்லவா பொருள் கொள்ளவேண்டும். தேவகிருபை இருந்தது, ஆனால், ஆவியானவர் இல்லை என்றுச் சொல்வது சரியான வாதமாக இருக்காது.

5. இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதா, மூன்று தடவை இயேசுவை மறுத்த பேதுரு ஆகியோரும் கூட பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார்களா?

நான் இதன் விவரத்தை மேலே உள்ள 2.4 "சோதிக்கப்படுதல்" என்பதை தவறாக புரிந்துக்கொண்ட பிஜே அவர்கள் என்ற தலைப்பில் விவரித்துள்ளேன்.

அதாவது ஒவ்வொரு கிறிஸ்தவனும் பரிசுத்த ஆவியானவரை தன் உள்ளத்தில் பெற்று இருப்பான், தனக்கு உள்ள "சுயமாக முடிவு எடுக்கும் உரிமையை" பயன்படுத்துவதின் மூலம், அவன் பரிசுத்த ஆவியானவரை துக்கப்படுத்துவான், அல்லது தொடர்ந்து தவறுகள் செய்தால், பரிசுத்த ஆவியானவரை இழந்துவிடுவான்.

பேதுரு மூன்று முறை பொய் சொன்னபிறகு மனங்கசந்து அழுதான், இயேசுவிடம் மன்னிப்பை பெற்றுக்கொண்டான். ஆனால், யூதாஸ் மனம் வருந்தினான், ஆனால், இயேசுவிடம் மன்னிப்பை கேட்டு பெறவில்லை, தன் சுய புத்தியை பயன்படுத்தி தூக்கு போட்டுக்கொண்டு மரித்தான்.

எனவே, ஒருவன் பரிசுத்த ஆவியை பெற்றவுடன், அவன் ஒன்றும் இறைவன் போல, பரிசுத்தவானாக மாறிவிட்டான் என்று பொருளல்ல. அதற்கு பதிலாக அவன் சுத்தவானாக வாழ்வதற்கு தயாராகிவிட்டான் என்பது தான் பொருள் . தன் சுய நிர்ணயங்களின் பேரில் தன் வாழ்வை அவன் பரிசுத்தமாக‌ அமைத்துக்கொள்ளமுடியும். அதற்கு ஆவியானவர் உதவிசெய்வார், கடிந்துக்கொள்வார், புத்திசொல்வார், சத்தியத்திலே நடப்பதற்கு வழி காட்டுவார்.



பாகம் 2:


இனி, பிஜே அவர்களின் வரிகளை அப்படியே பதித்து, விடுபட்ட சில விவரங்களுக்கு என் பதிலை தருகிறேன்.

பிஜே அவர்கள் எழுதியது :



7. பரிசுத்த‌ ஆவி நிறைந்திருப்பதால் கடவுளாக முடியுமா?

இயேசு பரிசுத்த‌ ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார் என்பதால் இயேசு கடவுளாகவும் கடவுளின் குமாரராகவும் கடவுளின் அம்சம் பெற்றவராகவும் ஆகி விட்டார் என்பதும் கிறித்தவர்களின் வாதம்.

இயேசுவிடம் பரிசுத்த‌ ஆவி நிறைந்திருந்ததால் அவரைக் கடவுள் நிலைக்கு உயர்த்தும் கிறித்தவர்கள் இன்னும் எத்தனையோ பேரிடம் பரிசுத்த‌ ஆவி நிரம்பியிருந்ததாக பைபிள் கூறுவதை ஏன் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை?


ஈஸா குர்‍ஆன் பதில்:

இயேசு இறைமகன் என்பதற்கு பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுதல் என்பது மட்டும் சரியான வாதமாக இருக்காது என்பதை மேலே சொல்லியுள்ளேன்.

பைபிள் சொல்வதை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? பைபிளை முழுவதுமாக ஆராய்வோமா? அப்படியென்றால், பழைய ஏற்பாட்டில் மஸிஹா வைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறது என்று தேடிப்பாருங்கள். உங்களுக்கு பதில் கிடைக்கும்.

பிஜே அவர்கள் எழுதியது :

இதோ பைபிள் கூறுவதைக் கேளுங்கள்!

இயேசுவுக்கு ஞானஸ்நானம் தந்து அவருக்கு குருவாகத் திகழ்ந்தவர் யோவான். அவரைக் குறித்து பைபிள் பின் வருமாறு கூறுகிறது.

அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான். திராட்சை ரசமும், மதுவும் குடியான். தன் தாயின் வயிற்றிருக்கும் போதே பரிசுத்த‌ ஆவியால் நிரப்பப்பட்டிருப்பான். (லூக்கா 1:15)

அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த‌ ஆவியினாலே நிரப்பப்பட்ட தீர்க்கதரிசனமாக... (லூக்கா 1:67)

இவ்விரு வசனங்களும் சகரியா அவரது மகன் யோவான் ஆகியோர் பரிசுத்த‌ ஆவியினால் நிரப்பப்பட்டிருந்ததாகக் கூறுகின்றன. கிறித்தவர்கள் இவர்களைக் கடவுளர்களாக அல்லது கடவுளின் குமாரர்களாக நம்புவதில்லையே அது ஏன்?

எலிசபெத்து, மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்ட பொழுது அவளுடைய வயிற்றிருந்த பிள்ளை துள்ளிற்று. எலிசபெத்து பரிசுத்த‌ ஆவியினால் நிரப்பப்பட்டு... (லூக்கா 1:41)


ஈஸா குர்‍ஆன் பதில் :

நீங்கள் மேற்கோள் காட்டும் இவர்களில் யாராவது "பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுக்க" அதிகாரம் படைத்தவர்களாக இருந்தார்கள் என்று உங்களால் நிருபிக்கமுடியுமா? ஆனால், இயேசுவிற்கே அந்த அதிகாரம் உள்ளது என்று பைபிள் சொல்கிறது.

நீங்கள் சொல்லிய இவர்களில் யாராவது "உலகத்தில் பாவங்களை மன்னிக்க எனக்கு அதிகாரம் உண்டு" என்று இயேசு சொன்னது போல சொன்னதுண்டா?


பிஜே அவர்கள் எழுதியது :

யோவானும் பரிசுத்த‌ ஆவியினால் நிரப்பப்பட்டவர்

அவரது தந்தை சகரியாவும் ஆவியினால் நிரப்பப்பட்டவர்

அவரது தாய் எலிசபெத்தும் பரிசுத்த‌ ஆவியினால் நிரப்பப்பட்டவர்

என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.

இப்படிப் பாரம்பர்யமாகப் பரிசுத்த‌ ஆவியினால் நிரப்பப்பட்டவர்களை மறப்பதும் அவர்களிடம் ஓரவஞ்சனையாக நடப்பதும் நியாயம் தானா?

இயேசுவுக்குக் குருவாகவும் அவரை விட ஆறு மாதம் மூத்தவராகவும் இருந்த யோவானைக் கடவுளின் குமாரர் என்று கிறித்தவர்கள் கூறுவதில்லையே அது ஏன்?


ஈஸா குர்‍ஆன் பதில் :

இயேசு தேவகுமாரன் என்பதற்கு நீர் சொல்லும் வாதம் (இயேசு பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தார்) மட்டும் காரணம் என்று யாரும் கூறவில்லை, அப்படி சொன்னாலும் அது தவறு, இயேசு தேவகுமாரன் என்பதற்கு பலமான ஆதாரங்கள் காரணங்கள் இன்னும் அனேகம் உண்டு, வாய்ப்பு கிடைக்கும் போது, தகுந்த இடத்தில் சொல்கிறேன்.

யோவானை நாங்கள் தேவகுமாரன் என்று ஏன் அழைக்கவில்லை என்று எங்களை கேட்பதை விட்டுவிட்டு, யோவான் ஸ்நானகன் எந்த இடத்திலாவது "தான் ஒரு தேவ குமாரன்" என்று சொல்லியதாக பைபிளில் உங்களால் காணமுடியுமா? ஏதாவது ஆதாரம் உள்ளதா உங்களிடம்? [ஓர வஞ்சனையாக கேள்விகள் கேட்பது யார் என்பது இப்போது எல்லாருக்கும் புரிந்திருக்கும்]

முதலில் யோவான் தன்னை முதலாவது "தேவகுமாரன்" என்று சொல்லிக்கொள்ளட்டும், பிறகு நாம் அவரை அப்படி அழைக்கலாமா இல்லையா என்பதை பார்க்கலாம். சரி வேண்டாம், குறைந்தபட்சம், தேவனாவது " யோவானை குறிப்பிட்டு" எல்லாருக்கும் முன்பாக, "இவன் என் நேசகுமாரன் " என்று சொன்னதாக ஒரு வசனத்தை ஆதாரமாக உங்களால் காட்டமுடியுமா?

ஆனால், யோவான், இயேசுவை "தேவகுமாரன்" என்று சொன்னதாக எங்களால் ஆதாரம் காட்டமுடியும் பிஜே அவர்களே. எந்த யோவானை "தேவகுமாரன்" என்று நாங்கள் ஏன் அழைக்கவில்லை என்று சொல்கிறீரோ, அதே யோவான் இயேசுவை தேவகுமாரன் என்றும், உலகபாவங்களை சுமக்கும் தேவ ஆட்டுக்குட்டி என்றும் சொல்லியுள்ளார், இதற்கு உங்கள் பதில் என்ன?
யோவான்: 1:33. நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னைஅனுப்பினவர்; ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்தஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவரென்று எனக்குச் சொல்லியிருந்தார்.34. அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்து வருகிறேன்என்றான்


பிஜே அவர்கள் எழுதியது :

இயேசுவுக்குள் இருந்த பரிசுத்த‌ ஆவி, பல சந்தர்ப்பங்களில் அவரை விட்டு விலகியிருக்கிறது. பிசாசினால் அவர் சோதிக்கப்பட்டார் ( மத்தேயு 4:1-10)

இந்தச் சந்தர்ப்பத்தில் பரிசுத்த‌ ஆவி அவரை விட்டு விலகி விட்டது என்று தெரிகின்றது.

யோவானிடம் இயேசு வந்து ஞானஸ்நானம் பெற்ற பிறகு தேவ ஆவி அவர் மேல் இறங்கியதாகவும் மத்தேயு (3:16) கூறுகிறார்.

அப்படியானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன் அவடம் பரிசுத்த‌ ஆவி இருக்கவில்லை என்பது தெரிகின்றது. ஆனால் யோவான் தாயின் வயிற்றிலிருக்கும் போதே பரிசுத்த‌ ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார்.

இப்போது யாரைக் கடவுளின் குமாரர் என்று சொல்லப் போகிறார்கள்?


ஈஸா குர்‍ஆன் பதில்:

இதற்கு பதில் இக்கட்டுரையின் முதல் பாகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.


பிஜே அவர்கள் எழுதியது:

இன்னும் யாரிடமெல்லாம் பரிசுத்த‌ ஆவி குடி கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்!

பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல. உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர். (மத்தேயு 10:20)

பரிசுத்த‌ ஆவியால் பேசுகின்ற இயேசுவின் சீடர்களும் கடவுளர்களா?

இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதா, மூன்று தடவை இயேசுவை மறுத்த பேதுரு ஆகியோரும் கூட பரிசுத்த‌ ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார்களா?


ஈஸா குர்‍ஆன் பதில்:

நான் ஆரம்பத்திலேயே சொல்லியுள்ளேன், தேவ குமாரன் என்பதற்கு அளவு கோள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருத்தல் ஒன்று மட்டும் ஆதாரம் கிடையாது, இது ஒரு பலவீனமான வாதமாகும். பேதுருவைப் பற்றியும், யூதாஸைப் பற்றியும் நான் மேலே விவரித்துள்ளேன்.


பிஜே அவர்கள் எழுதியது :

அப்பொழுது சிமியோன் என்னும் பேர் கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான். அவன் நீதியும் தேவ பக்தியும் உள்ளவனாயும் இஸ்ரவேலின் ஆறுதல் வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான். அவன் மேல் பரிசுத்த ஆவி இருந்தார். (லூக்கா 2:25)

இந்தச் சங்கதிகளைக் குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம். தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி என்றார்கள். (அப்போஸ்தலர் 5:32)

அவன் நல்லவனும், பசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான். அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய் சேர்க்கப்பட்டார்கள். (அப்போஸ்தலர் 11:24)

இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூத மார்க்கத்தமைந்தவனான அந்தியோகிய பட்டணத்தானாகிய நிக்கோலாவையும் தெரிந்து கொண்டு... (அப்போஸ்தலர் 6:5)

உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம் பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக் கொள் (இரண்டாம் தீமோத்தேயு 1:14)

தீர்க்கதசனமானது ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை. தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு பேசினார்கள். (இரண்டாம் பேதுரு 1:21)

இவ்வாறு பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவர்கள் கணக்கு வழக்கில்லாமல் இருந்துள்ளதாக பைபிள் கூறும் போது இயேசுவை மட்டும் கடவுள் என்று கூறுவது என்ன நியாயம்?

பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுதல் என்பதன் பொருள் என்ன? கடவுள் தன்மை வந்து விட்டது என்பது தான் அதன் பொருளா? நிச்சயமாக இல்லை.

தேவனுக்குக் கட்டுப்பட்டு, அவனது அடிமைகளாகத் தங்களைக் கருதுவோர் தாம் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டவர்கள்.

மேலே எடுத்துக்காட்டப்பட்ட அப்போஸ்தலர் 5:32 வசனத்திருந்து இதை விளங்கலாம்.

இயேசுவைத் தவிர மற்றவர்களிடம் பரிசுத்த ஆவி இருப்பதாகக் கூறப்படும் போது அவர்கள் நல்ல மனிதர்களாக இருந்தார்கள் என்று விளங்கிக் கொள்ளும் கிறித்தவர்கள் இயேசுவுக்கு அந்த வார்த்தை பயன்படுத்தப்படும் போது மட்டும் அவர் கடவுள் தன்மை பெற்றவர் என்று பொருள் கொள்ள என்ன ஆதாரம் வைத்திருக்கிறார்கள்? விளக்குவார்களா?




ஈஸா குர்‍ஆன் பதில்:

நீர் முன்வைத்த வாதமே சரியானது அல்ல என்று நான் ஏற்கனவே விளக்கிவிட்டேன், இதற்கு மேல் எத்தனை வசனங்களை ஆதாரமாக காட்டினாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை. தேவைப்படுமானால், பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட இன்னும் சிலரைப் பற்றிய வசனங்களை நான் எடுத்துக்காட்டுவேன், அதனால் இக்கட்டுரைக்கு ஒரு நன்மையும் இல்லை. நீங்கள் எடுத்து காட்டிய இவர்களேல்லாம், பரிசுத்த ஆவியினால் பிறந்தவர்களா? அல்லது பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுக்க அதிகாரம் படைத்தவர்களா என்று விளக்குவீர்களா?


பிஜே அவர்கள் எழுதியது :

இன்னும் சொல்வதென்றால் பரிசுத்த ஆவியினால் நிரம்பிய மற்றவர்களைக் கடவுள் என்று கூறினால் கூட இயேசுவைக் கடவுள் என்று கூற முடியாது. அதற்கு பைபிளிலேயே ஆதாரம் கிடைக்கின்றது.

சோதிக்கப்படுகிற எவனும் நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக. (யாக்கோபு 1:13)

கடவுள் என்பவர் தீமைகளால் சோதிக்கப்பட முடியாது என்பதை இவ்வசனம் அழுத்தமாகக் கூறுகின்றது.

ஆனால் இயேசுவோ பலமுறை பிசாசினால் - தீமைகளால் சோதிக்கப்பட்டதாகவும் பைபிள் கூறுகிறது. (மத்தேயு 4:1-10)

இயேசுவிடம் பரிசுத்த ஆவி நிரம்பி வழிந்தாலும் அவர் பிசாசினால் சோதிக்கப்பட்டிருக்கிறார். இவ்வாறு சோதிக்கப்பட்டவர் கடவுளாக இருக்க முடியாது எனும் போது இயேசுவைக் கடவுளாக ஏற்பதில் கடுகளவாவது நியாயம் இருக்கிறதா என்று சிந்தித்துப் பாருங்கள்!


ஈஸா குர்‍ஆன் பதில் :

இதற்கான பதிலை நான் இக்கட்டுரையின் முதல் பாகத்தில் (3. இயேசு இறைவன் என்றால், பின் ஏன் சோதிக்கப்பட்டார் ) விவரித்துள்ளேன்.


பிஜே அவர்கள் எழுதியது :

தங்களுக்குச் சிறு வயது முதலே ஊட்டப்பட்டதை மறந்து விட்டு வேதமாக நம்புகின்ற பைபிளை நடுநிலையோடு ஆராய்ந்தால், "இயேசு நிச்சயமாகக் கடவுள் அல்லர்; கடவுளின் மகனுமல்லர்; அவர் ஒரு நல்ல மனிதர்'' என்ற முடிவைத் தவிர வேறு முடிவுக்கு எந்தக் கிறித்தவரும் வர முடியாது.


ஈஸா குர்‍ஆன் பதில் :

அருமையாக சொல்கிறீர்கள் பிஜே அவர்களே. நீங்கள் சொல்வதை அப்படியே நான் ஏற்றுக்கொள்கிறேன், "அதாவது, பைபிளை சிறு வயது முதல் ஊட்டப்பட்டதை மறந்துவிட்டு நடுநிலையோடு படித்தால், இயேசு ஒரு நல்ல மனிதர் தான் என்றும், இறைவன் இல்லை என்றும் கிறிஸ்தவர்கள் புரிந்துக்கொள்வார்கள்" என்றுச் சொல்கிறீர். அப்படியானால்:


1. ஏன் முஸ்லீம்கள் பைபிளை தொடவேண்டுமானால், பயப்படுகிறார்கள், உங்களைப் போன்றவர்கள் முஸ்லீம்களை ஏன் பயப்படுத்தி வைத்து இருக்கிறீர்கள்?

2. பைபிளை படிக்காதீர்கள் என்று ஏன் உங்கள் முஸ்லீம்களுக்கு நீங்கள் சொல்லிவருகிறீர்கள்?

3. பைபிளை படித்தால், இயேசு ஒரு மனிதர் தான் என்று புரியுமானால்! ஏன் இஸ்லாமியர்கள் எல்லாரும் அதை படிக்கக்கூடாது? அவர்கள் ஏற்கனவே நடுநிலையில் உள்ளவர்கள் தானே, சிறு வயது முதல், கிறிஸ்தவ போதனைகளால் ஊட்டப்படாதவர்கள் தானே? அப்படியானால், முஸ்லீம்கள் பைபிளை படித்தால் என்ன? ஒருவேளை இயேசுவின் அன்பின் போதனைகளால் இழுப்புண்டு, அல்லாவை மறுதலிப்பார்கள் என்ற பயமா?

4. நீங்கள் மேலே சொன்னது உண்மையானால், உங்களின் இயக்கத்தின் கீழ் உள்ள முஸ்லீம்களுக்காவது நீங்கள் சொல்லமுடியுமா? இனி எல்லாரும் பைபிள் படியுங்கள், பைபிளைப் பற்றி யாரும் பயப்படவேண்டியதில்லை, ஏனென்றால், அதில் இயேசு ஒரு மனிதர் என்று தான் சொல்லியுள்ளது, எனவே, நடுநிலையோடு பயமில்லாமல் படிக்கலாம் என்று சொல்லும் தைரியம் உங்களுக்கு உண்டா?

எங்களுக்கு ஊட்டப்பட்டதை நாங்கள் மறந்து பைபிளை படிக்கச்சொல்கிறீர், இது சிறிது கடினமே, சரி, நீங்கள் சொல்வது போல செய்ய முயற்சி செய்கிறேன். ஆனால், முஸ்லீம்களுக்கு நீங்கள் சரியாக சிறுவயதிலிருந்து ஊட்டியுள்ளீர்கள் அல்லவா? எனவே, முஸ்லீம்கள் பைபிளை நடுநிலையோடு படித்தால், இன்னும் அதிக சீக்கிரத்தில் இயேசு ஒரு மனிதர் என்பதை அறிந்துக்கொள்வார்கள், அப்படித்தானே?

நீர் சொல்வது உண்மையானால், எல்லா முஸ்லீம்களையும் பைபிளை படிக்கச் சொல்லுங்கள். ஆனால், எங்களுக்கு அந்த தைரியம் உள்ளது, நான் எல்லா கிறிஸ்தவர்களையும் வேண்டிக்கொள்கிறேன், நீங்கள் எல்லாரும் குர்‍ஆனை படியுங்கள், இயேசுவின் போதனையோடு, முகமதுவின் போதனையை, இயேசுவின் வாழ்க்கையோடு, முகமதுவின் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பாருங்கள், இயேசுவின் அன்பின் செய்தியோடு, குர்‍ஆனின் அல்லாவின் செய்தியை ஒப்பிட்டுப்பாருங்கள், அப்போது உண்மை என்னவென்று விளங்கும்.

பிஜே அவர்களே, நீங்கள் உங்கள் புத்தகத்தில் செய்த ஒரு புத்திசாலியான தந்திரம் என்னவென்றால், இயேசுவிடம் உள்ள அனைத்து குணங்களையும் தனித்தனியாக பிரித்து, மற்றவர்களோடு ஒப்பிட்டு, ஒரு மாயையான பொய்யான உருவத்தை உருவாக்கியுள்ளீர்கள். ஆனால், எத்தனை நாட்கள் உங்கள் தந்திரம் வேலை செய்யும் சொல்லுங்கள்.

இப்புத்தகத்தில், நீர் பின்பற்றிய முறை எப்படி உள்ளது என்றால், மகாத்மா காந்தி இப்படி இருப்பார் என்று ஒருவர் சொன்னால், உம்முடைய கேள்விகள் கீழ்கண்டவாறு உள்ளது:

தலையில் முடி இல்லையானால் காந்தி ஆகமுடியுமா? எத்தனையோ பேருக்கு தலையில் முடியில்லை, அவர்களை ஏன் காந்தி என்று அழைப்பதில்லை?

அஹிம்சையை பின்பற்றினால், காந்தி ஆகமுடியுமா? எத்தனையோ தலைவர்களும் அஹிம்சையை பின்பற்றுகிறார்கள், அவர்களை ஏன் காந்தி என்று அழைப்பதில்லை.

கையில் ஒரு தடி வைத்திருந்தால், காந்தி ஆகமுடியுமா? எத்தனையோ நபர்களின் கைகளில் தடி உள்ளது, அவர்களை காந்தி என்று ஏன் அழைப்பதில்லை?

சத்தியாகிரகத்தை அவர் நடத்தினால், காந்தி ஆகமுடியுமா? இப்படி பல பேர் பலவிதமான போராட்டத்தை நடத்தினார்கள், அவர்களை ஏன் காந்தி என்று அழைப்பதில்லை?

உடலில் குறைவான உடைகள் உடுத்தியிருந்தால், காந்தி ஆகமுடியுமா? பலபேர் உடையே அணிவதில்லை, அவர்களும் காந்தியா?

என்று பிரித்து சொல்கிறீர். ஆனால், இந்த எல்லா குணங்களையும் ஒன்று சேர்த்தால், தான் காந்தி. அது போல, நீர் பிரித்துச் சொல்கின்ற எல்லா குணங்கள் அனைத்தையும் உடையவரே கிறிஸ்து ஆவார்.

நீர் சொல்வது போல பிரித்து சொல்லவேண்டுமானால், என்னாலும் சொல்லமுடியும்?


யுத்தம் செய்தால் முகமது "நபி" ஆகிவிடுவாரா? உலகத்தில் நிறைய பேர் யுத்தம் செய்துள்ளார்கள்? அவர்களை ஏன் நபி என்று சொல்வதில்லை?

யுத்தத்தில் ஜெயித்தால் முகமது "நபி" ஆகிவிடுவாரா? நிறைய பேர் யுத்தங்களில் வெற்றி பெற்றுள்ளார்கள், அவரை ஏன் நபி என்று சொல்வதில்லை?

குர்‍ஆனில் விஞ்ஞானம் சொல்லப்பட்டிருந்தால், அது வேதம் ஆகிவிடுமா? உலகத்தில் விஞ்ஞானம் சொல்லும் எல்லா புத்தகமும் வேதம் என்றுச் சொல்கிறீர்களா?

நல்ல சில சட்டங்கள் குர்‍ஆன் சொன்னால், அது வேதம் ஆகிவிடுமா? நல்ல விசயங்கள் சொல்லும் புத்தகங்கள் நிறைய உள்ளன. அவைகளும் வேதங்களா?

ஒரு குறிப்பிட்ட மொழி நடையில் பாடல்கள் இருந்தால், அது வேதமா? இப்படி எந்த புத்தகமும் இல்லையா?

தன்னை ஒரு தூதன் சந்தித்தான், தான் "ஒரு நபி என்று தானே" சொல்லிக்கொண்டால், உண்மையில் நபியாகிவிடமுடியுமா? உலகத்தில் நிறைய பேர் இப்படி சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள், இன்றளவும் இப்படிப்பட்டவர்கள் எழும்புகிறார்கள், இவர்களும் நபிகளா?


போன்ற கேள்விகளையும் எல்லாரும் கேட்கலாம். இவைகளை உங்களுக்கு முன்பாக கேள்விகளாக நான் வைக்கவில்லை, நீர் பயன்படுத்திய விதம் இப்படி உள்ளது என்று ஒரு எடுத்துக்காட்டிற்காகச் சொன்னேன். நான் முதலாவது உம்முடைய கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன். அது தான் நல்லது.

=========================================================================
[1] "தனக்கு அளவில்லாமல் ஆவியானவரை கொடுக்கப்பட்டுள்ளதாக இயேசுவே சொல்லியுள்ளார். " என்ற வரிகளில் சிறிய திருத்தம் செய்யப்பட்டுள்ளது. யோவான் சொன்னதை இயேசு சொன்னதாக தவறுதலாக எழுதியிருந்தேன், அதை இப்பொது திருத்திக்கொண்டேன் - 03-12-2007.
=========================================================================


 

 

திங்கள், 19 நவம்பர், 2007

பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்

        
பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
 
(பிஜே அவர்களின் "இயேசு இறைமகனா?" புத்தகத்திற்கு மறுப்பு)

பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் "இயேசு இறைமகனா ?" என்ற புத்தகத்தில் நான்காவது பகுதியில், இயேசு சிலுவையில் அறையப்படவில்லை, அல்லா ஆள் மாறாட்டம் செய்து இயேசுவை எடுத்துக்கொண்டார் என்று எழுதுகிறார்.

இயேசு சிலுவையில் அறையப்பட்டார், மரித்தார், மறுபடியும் உயிரோடு எழுந்தார் என்று பைபிள் சொல்வதும், கிறிஸ்தவர்கள் நம்புவதும் தவறானதாகும், குர்‍ஆன் சொல்வது தான் சரியானது என்று சொல்கிறார். இதற்கு ஆதாரமாக குர்‍ஆன் 4:155 – 159 வசனங்களை ஆதாரமாக காட்டுகிறார்.

பிஜே அவர்கள் புத்தகத்திலிருந்து:

இயேசுவைப் பற்றி

அவரை (இயேசுவை) அவர்கள் கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது. இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை. மாறாக அவரை அல்லாஹ் (கர்த்தர்) தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் (கர்த்தர்) மிகைத்தவராகவும் ஞானமுடையோராகவும் இருக்கிறான். வேதமுடையோரில் ஒவ்வொருவரும் அவர் (இயேசு, மீண்டும் வந்து) மரணிப்பதற்கு முன் அவரை நம்பாமல் இருக்க மாட்டார்கள். கியாமத் நாளில் அவர் அவர்களுக்கு எதிரான சாட்சியாக இருப்பார். (அல்குர்ஆன் 4:155-159)

Source: http://www.onlinepj.com/book/mahana19.htm

குர்‍ஆன் சொல்லும் இந்நிகழ்ச்சியில் அனேக பிரச்சனைகள் உள்ளது. மட்டுமல்ல, இது குர்‍ஆனுக்கு ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக மாறுகிறது. இப்படி இயேசுவின் சிலுவை நிகழ்ச்சியை அல்லா மாற்றி சொல்வதினால், அல்லா எதிர் காலத்தைப் பற்றி ஞானமில்லாதவராக தென்படுகிறார், மற்றும் இயேசுவின் சீடர்களை ஏமாற்றியவராக மாறுகிறார். இதுவே, அவருக்கு ஒரு பெரிய பிரச்சனையாக மாறுகிறது. இது எப்படி சாத்தியம் என்று தெரிந்துக்கொள்ள கீழ் கண்ட கட்டுரையை படிக்கவும்.

பிஜே அவர்களின் இந்த வசனங்களுக்கு பதிலாக கீழ் கண்ட கட்டுரையை முன்வைக்கிறேன் .

"ஏமாற்றும் இறைவன் திறமையில்லா மஸீஹா"

ஆங்கிலத்தில் படிக்க:  (Deceptive God inCompetent Messiah – Allah Starts Christianity .... by Accident)

இந்த கட்டுரையின் ஆசிரியருக்கு நான் மெயில் அனுப்பி, அனுமதி பெற்று, அவரது ஆங்கில கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்து என் தளத்தில் பதிவு செய்துள்ளேன்.

பி.ஜே அவர்களுக்கு இக்கட்டுரையை நான் பதிலாக முன் வைப்பதால், இக்கட்டுரை சம்மந்தப்பட்ட பிஜே அவர்களது எல்லா கேள்விகளுக்கும் முடிந்த அளவிற்கு பதில் அளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.

பிஜே அவர்களுக்கு ஈஸா குர்‍ஆன் அளித்த இதர பதில்கள் :

1. பிஜே அவர்களும் திரித்துவமும்,பவுலும்.

 

முஸ்லீம்களுக்கு வேண்டுகோள் : என் அருமை தமிழ் முஸ்லீம்களே, நான் ஒரு பதில் எழுதினால், அது யாருக்காக எழுதப்படுமோ அவர்கள் தான் பதில் அளிக்கவேண்டும் என்பதில்லை. குர்‍ஆனை நம்பும் ஒவ்வொரு முஸ்லீமும் பதில் அளிக்கலாம், முடிந்தால்.

கிறிஸ்தவர்களுக்கு வேண்டுகோள் : என் அருமை கிறிஸ்தவர்களே, பிஜே அவர்கள் நடத்தும் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள், உங்களில் பலரும் அதில் பங்கு பெற்று கேள்விகள் கேட்டு இருப்பீர்கள். இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள், இக்கட்டுரையை குறைந்தது பத்து பேருக்காவது அனுப்புங்கள் . ஈஸா குர்‍ஆன் தளத்தையும், தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்தையும் அறிமுகம் செய்யுங்கள். ஒரு வேளை நீங்கள் பிஜே அவர்களிடம் கேள்விகள் கேட்டு, அவர் பதில் அளிந்து இருப்பாரானால், அதை (கேள்வியும், பிஜே அவர்கள் அளித்த பதிலும்) எனக்கு இந்த மெயில் விலாசத்திற்கு ( isa_koran@yahoo.co.in or isa.koran@gmail.com ) அனுப்புங்கள். நான் என் கருத்தை அல்லது பதிலை எழுத முயற்சி செய்வேன். இது கிறிஸ்தவர்கள் இஸ்லாமை இன்னும் நன்றாக தெரிந்துக்கொள்ள உதவியாக இருக்கும்.

ஈஸா குர்‍ஆனின் இதர இஸ்லாம் கட்டுரைகளையும், இது தான் இஸ்லாம் மற்றும் தமிழ் முஸ்லீம் தள கிறிஸ்தவ கட்டுரைகளுக்கு ஈஸா குர்‍ஆன் அளித்த பதில்களை(மறுப்புக்களை)யும் படிக்கவேண்டுமானால், கீழ் கண்ட தொடுப்புகளை க்ளிக் செய்யவும்.

1. http://www.geocities.com/isa_koran
2. http://www.tamilchristians.com
3.
http://isakoran.blogspot.com


Isa Koran Home Page Back - Answering PJ index Page
1
 
 

திங்கள், 12 நவம்பர், 2007

பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் குற்றச்சாட்டிற்கு, ஈஸா குர்‍ஆனின் பதில்

     
பி.ஜைனுல் ஆபிதீனும், திரித்துவமும் & பவுலும்: பதில்


(பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் குற்றச்சாட்டிற்கு, ஈஸா குர்‍ஆனின் பதில்)


முன்னுரை:

தமிழ் நாட்டில் மிகவும் புகழ் பெற்ற இஸ்லாமிய அறிஞர் பி.ஜைனுல் ஆபிதீன்(P.J. or பி.ஜே) அவர்கள்,  "இயேசு இறைமகனா?" என்ற புத்தகம் எழுதினார்கள். அதில் அவர் பைபிளைப் பற்றி பல கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள். இந்த புத்தகத்தில் அவர் " அப்போஸ்தலர் பவுலைப் பற்றி கீழ் கண்டவாறு " எழுதுகிறார்.


"பவுல் வாக்கு மூலம்

இயேசுவுக்குப் பின் முக்கடவுள் கொள்கையை உருவாக்கி கிறித்தவ மார்க்கத்தில் நுழைந்தவர் பவுலடிகள் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இயேசு கிறிஸ்துவின் தூய மார்க்கத்தைச் சுயமாக மாற்றியமைத்தவர் இவரே
.



கர்த்தருக்கு சித்தமானால், "இயேசு இறைமகனா" என்ற புத்தகத்தில் பி.ஜே அவர்களது எல்லா கிறிஸ்தவ சம்மந்தப்பட்ட கருத்துக்களுக்கும் பதில் அளிக்க முயற்சி செய்வேன். முதலாவதாக, பவுல் பற்றி பி.ஜே அவர்கள் சொல்லும் கருத்துக்கு என் பதிலை இக்கட்டுரையில் தருகிறேன்.

பி.ஜே அவர்கள் பவுல் மீது வைக்கும் குற்றச்சாட்டு :

"இயேசுவிற்கு பிறகு, முக்கடவுள் (Trinity – திரித்துவ) கொள்கையை உருவாக்கி கிறிஸ்தவத்தில் நுழைத்தவர் "


"திரித்துவ கொள்கையை உருவாக்கியது" பவுல் என்ற முஸ்லீம்களின் வாதம், தவறானது மற்றும் ஆதாரமற்றது .

இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே பல வித்தியாசங்கள் உண்டு. அடிப்படை கோட்பாடுகளிலேயே இவ்விரண்டும் வேறுபடுகின்றன.

ஆனால், இஸ்லாமியர்கள் கீழ் கண்ட கருத்தை உடையவர்களாக இருக்கிறார்கள்:

1. இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி மட்டுமே.

2. இயேசுவின் போதனைக்கும் முகமதுவின் போதனைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இருவரும் ஒரே செய்தியைத் தான் போதித்தார்கள்.

3. அப்போஸ்தலர் பவுல் கிறிஸ்தவத்தை கெடுக்க‌ இயேசு சொல்லாத‌, பைபிளில் இல்லாத "திரித்துவ கொள்கையை" உருவாக்கி கிறிஸ்தவத்தில் நுழைத்தார்.

இயேசுவின் போதனையும், முகமதுவின் போதனையும் ஒன்றல்ல என்பதை கீழ் கண்ட கட்டுரையை படிப்பவர்கள் அறிந்துக்கொள்ளலாம்.

இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி

திரித்துவ கொள்கை பைபிளின் உயிராகும், அது பவுலின் கற்பனை அல்ல‌

இக்கட்டுரையில் "திரித்துவ கொள்கை" என்றால் என்ன என்று நாம் பார்க்கப்போவதில்லை. புதிய ஏற்பாடு திரித்துவத்தைப் பற்றி என்ன சொல்கிறது, இயேசு என்ன சொன்னார், இயேசுவின் சீடர்கள் என்ன சொல்கிறார்கள், கடைசியாக பவுல் என்ன சொல்கிறார் என்று பார்க்கப்போகிறோம். பவுல் சொல்வதை நாம் ஏற்றுக் கொள்ளவில்லையானாலும், இயேசுவும், அவர் சீடர்களும் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்தாலே போதும், பி.ஜே அவர்கள்(இஸ்லாமும்) பவுலின் மீது சாற்றும் குற்றம் ஆதாரமற்றது என்பது விளங்கும் .

[பழைய ஏற்பாட்டில் திரித்துவம்: பழைய ஏற்பாடு திரித்துவத்தைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை தனி கட்டுரையில் காணலாம். இப்போதைக்கு, பழைய ஏற்பாட்டில் இதைப் பற்றி அறிய கீழ்கண்ட கட்டுரைகள் உதவும்.


An Explanation of the Trinity for Muslims

THE TRINITY - From Biblical Reason and from the Old Testament

Trinity in the Old Testament and Dialogue with Jews and Muslims

The Trinity – More than 50 Articles]

புதிய ஏற்பாட்டில் திரித்துவத்தைப் பற்றி மிகவும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது, இயேசுவும் ஆணித்தரமாக சொல்லியுள்ளார்.

1. புதிய ஏற்பாட்டில் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர்:

புதிய ஏற்பாட்டில் பிதா, குமாரன் மற்றும் பரித்தஆவியானவர் என்று பல வசனங்கள் வருவதை பார்க்கலாம். இயேசுவும் இதைப் பற்றி சொல்லியிருக்கிறார், இயேசுவின் சீடர்களும் இதைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். கடைசியாக பவுல் இதைப் பற்றி எழுதுகிறார்.

ஆனால், முஸ்லீம்கள், இயேசு சொல்வதையும், பவுல் அல்லாத மற்ற சீடர்கள் சொல்வதையும் காற்றிலே விட்டுவிட்டு, பவுல் தான் இக்கொள்கையை உருவாக்கி கிறிஸ்தவத்தில் நுழைத்தார் என்று தவறான மற்றும் ஆதாரமற்ற கருத்தையும் உடையவர்களாக இருக்கிறார்கள்.

1.1 நற்செய்தி நூல்களில் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் விவரங்கள்:

முஸ்லீம்களின் கருத்து தவறான கருத்தாகும். இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியது அப்போஸ்தலன் பவுல் அல்ல, அதை எழுதியவர்கள் இயேசுவின் சீடர்கள் ஆவார்கள்.

மூன்று நற்செய்தி நூல்களில் பிதாவும், குமாரனும், பரிசுத்த ஆவியானவரும் ஒரே இடத்தில் இடைபடும் நிகழ்ச்சி சொல்லப்பட்டுள்ளது. இயேசு ஞானஸ்நானம் பெற்று கரையிலிருந்து ஏறிவரும் போது பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போல அவர் மீது இறங்குகிறார், மற்றும் வானத்திலிருந்து பிதாவாகிய தேவன் "இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாக இருக்கிறேன்" என்றுச் சொல்லும் சத்தம் வானத்திலிருந்து வருகிறது.

இந்நிகழ்ச்சி மத்தேயு (3:16-17), மாற்கு(1:10-11) மற்றும் லூக்கா(3:21-22) என்ற நற்செய்தி நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. இவைகளை பவுல் எழுதவில்லை என்பதை முஸ்லீம்கள் நம்பவேண்டும். வேண்டுமானால், முஸ்லீம்களின் வழக்கமான பதிலாக சொல்லப்படும் " ஆரம்ப காலத்தில் இந்நிகழ்ச்சி நற்செய்தி நூல்களில் இல்லை, பின்னாட்களில் இந்நிகழ்ச்சியை கிறிஸ்தவர்கள் சேர்த்து எழுதினார்கள்" என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

மத்தேயு 3:16 இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.

மத்தேயு 3:17 அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.


1.2 இயேசுவின் வார்த்தைகளில் திரித்துவம் :

இயேசு பல முறை பிதா என்றும், பரிசுத்த ஆவியானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். தானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம் என்று சொல்லியுள்ளார்.

யோவான்: 14:8. பிலிப்பு அவரை நோக்கி, ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப்போதும் என்றான்.9. அதற்கு இயேசு, பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னைஅறியவில்லையா என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவைஎங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?

யோவான்: 10:30. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.


இயேசு சென்ற பிறகு பரிசுத்த ஆவியானவராகிய தேற்றரவாளனை அனுப்புவதாகவும் சொல்லியுள்ளார். கீழ் கண்ட வசனத்தில் இயேசு, பிதாவைப் பற்றியும், பரிசுத்த ஆவியானவரைப் பற்றியும் குறிப்பிடுவதை காணலாம்.

யோவான்: 14:16. நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அபொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூடஇருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத்தந்தருளுவார் .

இது போல பல சந்தர்பங்களில் இயேசு பிதா என்றும், ஆவியானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதை முதல் நான்கு நற்செய்தி நூல்களை படித்தால், தெரிந்துக்கொள்ளலாம்.

[ஒன்றுக்குள் ஒன்று(யோவான் 10:30) என்றால் கடவுள் எனப் பொருளா? என்ற பி.ஜே அவர்களின் கருத்திற்கு தனி கட்டுரையில் பதில் அளிக்கிறேன்]

1.3 இயேசுவின் கட்டளை: பிதா, குமாரன், ஆவியானவரின் பெயரில் ஞானஸ்நானம்

இயேசு தன் சீடர்களுக்கு கடைசியாக கொடுத்த கட்டளையில் மிகவும் அழகாக திரித்துவத்தின் மூன்று நபர்களை குறிப்பிடுகிறார். அதுவும், முஸ்லீம்கள் நம்புவது போல, குமாரனாகிய இயேசு ஒரு தீர்க்கதரிசி என்று மட்டும் தான் என்ற வாதம் ஆட்டம் காணும் அளவிற்கு குமாரன், பிதா மற்றும் பரிசுத்த ஆவியானவர் என்று மூவரையும் ஒரே நேர்க்கோட்டில் வைத்து பேசுகிறார்.


மத்தேயு 28:19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

மத்தேயு 28:20 நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார், ஆமென்.


இந்த கட்டளையை தங்கள் இதயங்கள் சுமந்தவாறு இயேசுவின் சீடர்கள் பல நாடுகளுக்குச் சென்று, இயேசுவின் மூலம் வரும் இரட்சிப்பை சொல்லி, எல்லா நாட்டு மக்களையும் சீடராக்கினார்கள்.

எனவே, இன்று நான் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களை அழைக்கிறேன், இயேசுவின் அன்பின் செய்தியை உங்கள் இதயத்தில் ஏற்று, பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானம் பெற்று, திருமண உறவுகள், உடலுறவுகள் இல்லாத, மதுபானம் இல்லாத பரலோகத்திற்கு உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

பவுல் எழுத்துக்களுக்கு முன்பாகவே, பல ஆண்டுகளுக்கு முன்பு இயேசு இக்கட்டளையை தம் சீடர்களுக்கு கொடுத்து சென்றுள்ளார் என்பதை முஸ்லீம்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

1.4 இயேசுவின் சீடன் போதுருவின் வார்த்தைகளில் திரித்துவம்:

இயேசுவோடு கூட இருந்தவர், இயேசுவின் பல முக்கிய அற்புதங்களில் அவரோடு கூடவே இருந்தவர் இந்த சீடர் பேதுரு. தனக்கு பிறகு தன் ஆடுகளை மேய்க்கும் பொறுப்பை இவரை நம்பி இவரிடம் கொடுத்தார், இவருக்கு தலைமை பொறுப்பு அதிகாரம் கொடுத்தார். இயேசுவை எனக்கு தெரியாது என்று மூன்று முறை மறுதலித்தாலும், இவரை இயேசு மறுபடியும் தன்னிடம் சேர்த்துக்கொண்டு, எருசலேமின் ஆரம்ப கால சபைக்கு தலைவராக இருக்கும்படி இவரை உட்சாகப்படுத்தினார்.

ஆரம்ப கால சபை விசுவாசிகள் பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டு பற்பல பாஷைகளை பேசும் போது, மக்களுக்கு ஒரு அருமையான பிரசங்கம் செய்து, 3000 பேரை தன் மந்தையில் சேர்த்தவர் இவரே. அவர் செய்த முதல் பிரசங்கத்திலேயே பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் என்றுச் சொல்லி, பழைய ஏற்பாட்டு வசனங்களை ஆதாரமாக காட்டி மக்களை நல்வழிப்படுத்தினார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:32. இந்த இயேசுவை தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்.33. அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார்.

இவர் எழுதிய ஒரு கடிதத்தில் "திரித்துவத்தைப் பற்றி" சொல்வதை கீழ் கண்ட வசனத்தில் காணலாம்.


1 பேதுரு: 1: 2. பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந் தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது, கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது .

மேலே உள்ள வசனத்தில் மூன்று வேலைகளைப்(நபர்களைப்) பற்றி சொல்கிறார், பிதா, இயேசு, பரிசுத்த ஆவியானவர்.


1. பிதாவின் முன்னறிவிப்பு

2. ஆவியானவரின் பரிசுத்த மாக்குதல்

3. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தெளிக்கப்படுதல்.



எனவே, பி.ஜே அவர்களும் மற்ற இஸ்லாமியர்களும் சொல்வது போல, திரித்துவ கொள்கையின் நாயகன் பவுல் அல்ல என்பது இப்போது விளங்கும்.

1.5 இயேசுவிற்கு பிரியமான சீடன் யோவான் வார்த்தைகளில் திரித்துவம் :

இயேசுவிற்கு பிரியமான‌ சீடன் யோவான் ஆவார். இவர் இயேசுவின் மார்ப்பில் சாய்ந்து இளைப்பாரும் அளவிற்கு இயேசு இவர் மீது அன்பாக இருந்தார். இவர் தான் புதிய ஏற்பாட்டில் நான்காவது நற்செய்தி நூலாகிய "யோவான் நற்செய்தி" நூலை எழுதியவர், மற்றும் புதிய ஏற்பாட்டில் கடைசி புத்தகமாகிய "வெளிப்படுத்தின விசேஷம்" எழுத இயேசு இவருக்கு தரிசனத்தின் மூலம் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் பல விவரங்களை வெளிப்படுத்தினார். இவர் சபைகளுக்கு மூன்று தனி கடிதங்களையும் எழுதியுள்ளார்.

இவரும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியைப் பற்றி என்ன சொல்கிறார் என்று கீழ் கண்ட வசனத்தில் காணலாம்.

1 யோவான்: 5: 7. பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;

இவ்வசனத்தில் வார்த்தை என்பது இயேசுவை குறிக்கும் என்று எல்லாருக்கும் தெரியும்.

இவருக்கு வெளிப்படுத்தப்பட்ட தரிசனத்தில் கூட பல முறை "ஆவியானவர் சபைகளுக்கு சொல்லுகிறதை, காதுள்ளவன் கேட்கக்கடவன்" என்று பல முறை எழுதுகிறார்.

வெளி 2:29 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது. (இதே போல இந்த வசங்களிலும், 2:7, 2:11, 2:17, 3:6, 3:13, 3:22)

மற்றும் சிங்காசனத்தில் தேவன் உட்கார்ந்துள்ளார், வலது பாரிசத்தில் ஆட்டுக்குட்டியானவர் இயேசுவும் உட்கார்ந்துள்ளார் என்று பல வசனங்கள் வருகின்றன.

வெளி 5:7 அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார்.

வெளி 5:13 அப்பொழுது, வானத்திலும் பூயிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்.

வெளி 7:10 அவர்கள் மகா சத்தமிட்டு, இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.

வெளி 21:23 நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது,
ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு.

இப்படி வசனங்களை சொல்லிக்கொண்டுப் போகலாம்.

1.6 கடைசியாக பவுலின் வார்த்தைகளில் திரித்துவம்:

இவைகள் பவுலின் வார்த்தைகள்.


2 கொரிந்தியர்: 13:14. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக.

1.7 சில கேள்விகள்:

நாம் இதுவரைக்கும் பவுலுக்கு முன்பாகவும், பவுல் அல்லாத மற்ற சீடர்களும், இயேசுக் கிறிஸ்துவும் திரித்துவ கொள்கையைப்பற்றி என்ன சொல்லியுள்ளார்கள் என்பதை கண்டோம். திரித்துவம் என்றால் என்ன? பைபிளில் எங்கெங்கே இதைப் பற்றி விவரங்கள் கிடக்கின்றன என்று நாம் பார்க்கவில்லை. அதைப் பற்றி தனி கட்டுரைகளில் பார்க்கலாம் .

பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் சொல்வது போல, பவுல் திரித்துவ கொள்கையை உருவாக்கவில்லை, அதை பயன்படுத்தி கிறிஸ்தவத்திற்குள் நுழையவும் இல்லை. இது இஸ்லாமியர்களின் கற்பனையே ஒழிய வேறில்லை .

இஸ்லாமியர்களின் இக்கூற்று ஆதாரமற்றது என்பதை தெரிந்துக்கொள்ள சில கேள்விகள் அல்லது விவரங்கள்:

1. பவுல் கிறிஸ்தவத்திற்கு வருவதற்கு முன்பே, எருசலேமில் பல ஆயிரபேர் பேதுருவின் பிரசங்கங்களினால் இயேசுவை ஏற்றுக்கொண்டு சபையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பேதுருவினாலும், யோவானாலும் மற்ற சீடர்களாலும் பல அற்புதங்கள் செய்யப்பட்டுள்ளது, அவர்களுக்கு பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரின் பெயரிலே ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நேரங்களில் பவுல் இயேசுவின் சீடர்களோடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .

2. விசுவாசிகள் அதிகமாகிறதினால், அனேகர் கைது செய்யப்பட்டு (தேவதூஷணம் குற்றத்திற்காக, இயேசு தேவகுமாரன் என்று சொன்னதற்காக)ஸ்தேவான் என்பவர் கல்லெரியப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சமயத்தில் கல்லெரிபவர்களின் கூட்டத்தில் இருந்தவர், இந்த பவுலே .

3. இயேசு தேவ குமாரன் அல்ல, அவர் ஒரு தீர்க்கதரிசி மட்டும் தான் அல்லது நல்லவர், அவர் மரிக்கவில்லை மறுபடியும் எழுந்திருக்கவில்லை என்று பேதுருவும், மற்ற சீடர்களும் சொல்லியிருப்பார்களானால், ஏன் யூத ஆசாரியர்களும், பவுலும் இவர்கள் மீது "தேவதூஷணம்" குற்றம் சுமத்தி, கொல்ல முயற்சி செய்வார்கள்? முஸ்லீம்கள் சிந்திக்கவேண்டும். ஒரு பொய்யைச் சொல்லி ஏன் இயேசுவின் சீடர்கள் தங்கள் உயிருக்கு ஆபத்தை வருவித்துக்கொள்ளப்போகிறார்கள் .

4. இயேசு பரமேறிச் சென்ற 40வது நாளிலேயே 3000 பேர், பேதுருவின் பிரசங்கம் கேட்டு சபையில் விசுவாசிகள் ஆனார்கள். இந்த 3000 பேருக்கு "பேதுரு" என்ன சொல்லியிருப்பார் என்று எண்ணுகிறீர்கள் நீங்கள் ?

5. இயேசு தேவன் கிடையாது, அவர் மரிக்கவில்லை, அவர் சிலுவையில் அறையப்படவில்லை, அல்லா தான் இறைவன் என்று சொல்லியிருப்பார்களா சீடர்கள்?

6. இப்படி சொல்லியிருந்தால், இவர்கள் ஏன் கொல்லப்படுவார்கள், ஏன் உலகமெல்லாம் சுற்றி நற்செய்தியை சொல்லி கஷ்டப்பட்டிருப்பார்கள் ?

7. இத்தனை ஆயிரம் பேர் இருக்கும் போது, திடீரென்று பவுல் வந்து "தேவன், இயேசு, பரிசுத்த ஆவியானவர்" இவர்கள் மூவரும் ஒரே இறைவன் தான் என்று சொல்லியிருந்தால், இத்தனை ஆயிரம் பேர் ஏற்றுக்கொள்வார்களா ?

8. ஒருவரை இருவரை ஏமாற்றலாம், அல்லது சிலரை ஏமாற்றலாம், இத்தனை ஆயிரம் பேரையா திடீரென்று ஏமாற்ற முடியும்? தங்கள் கொள்கைகளை விட்டு புது கொள்கைக்கு மாற்ற முடியும்?

இது இஸ்லாமியர்களின் கற்பனையே தவிர வேறில்லை.


முடிவுரை:

கிறிஸ்தவத்தின் அடிப்படை கோட்பாடுகள் அல்லது அஸ்திபாரம் போடுவதில், புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு நற்செய்தி நூல்களும், அப்போஸ்தலர் நடபடிகளும், மற்றும் கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்தின விசேஷம் ஆகிய 6 புத்தகங்கள் தான் முக்கியமான பங்கை வகிக்கின்றன. மற்றபடி பவுல் எழுதிய இதர கடிதங்கள் இந்த அஸ்திபாரத்தின் மீது கட்டப்பட்ட மாளிகைகளே தவிர வேறில்லை.

ஒரு உதாரணம்:

இயேசு போட்டது அஸ்திபாரம்: …. உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பவைகளையே என்றார்(மத்தேயு 19:19).

பவுல் கடிதங்களில் எழுதியது, இயேசு போட்ட அஸ்திபாரத்தின் மீது எழுப்பிய மாளிகை: ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்புருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்(ரோமர் 13:8).

அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது(1 கொரிந்தியர் 13:4).

இது ஒரு உதாரணம் தான், இயேசு சொன்னதற்கு முரணாக ஒரு கருத்தையும் நாம் பவுலுடைய எழுத்துக்களில் காணமுடியாது. ஏனென்றால், பவுல் ஒரு எழுத்தாணி மட்டும் தான், எழுதியது ஆவியானவர். எனவே, தான் எந்த முரண்பாடும் காணமுடியாது.

இயேசுவின் பிறப்பு, அற்புதங்கள், மரணம், உயிர்த்தெழுதல், இரண்டாம் வருகை இவை அனைத்தையும் விளங்கிக்கொள்ள, அல்லது இவைகள் பற்றி தெரிந்துக்கொள்ள நாம் தேடவேண்டியது, பவுல் எழுதிய கடிதங்களில் அல்ல, அதற்கு மாறாக நான் மேலே சொன்ன 6 புதிய ஏற்பாட்டு புத்தகங்களிலேயே. இந்த 6 புத்தகங்கள், கிறிஸ்தவத்திற்கு அஸ்திபாரம் போடுமானால், பவுலும், மற்றவர்களும் எழுதிய கடிதங்கள், சபை, விசுவாசிகள் சந்திக்கும் அன்றாட‌ பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள தேவையான பதிலைச் சொல்கின்றன. எனவே, புதிய ஏற்பாட்டின் இந்த இரண்டு வகையான புத்தகங்களும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள், இவைகளில் முரண்பாட்டை கண்டுபிடிக்க யாராலும் முடியாது.

பவுலை காரணம் கட்டி, கிறிஸ்தவர்களை வெளிச்சத்திலிருந்து இருட்டிற்கு திசை திருப்ப யாராலும் முடியாது.

கிறிஸ்தவர்களுக்கு சில வேத எச்சரிக்கைகள் :

நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்(பேதுரு 1:16 ).

இந்தச் சாட்சி உண்மையாயிருக்கிறது; இது முகாந்தரமாக, அவர்கள் யூதருடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தை விட்டு விலகுகிற மனுஷருடைய கற்பனைகளுக்கும் செவிகொடாமல், (தீத்து 1:13 )

வேற்றுமையான உபதேசங்களைப் போதியாதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல், தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கும், நீ சிலருக்குக் கட்டளையிடும்பொருட்டாக,( 1 தீமோத்தேயு 1:3 )

சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு(1 தீமோத்தேயு 4:7 ).

   email:   isa.koran@gmail.com   and  isa_koran@yahoo.co.in
 

வெள்ளி, 9 நவம்பர், 2007

கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு

    

நாடகம்: முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர்கள் பேதுரு, யோவான், லூக்கா மற்றும் பவுல் .



கற்பனை நாடகம்: இது ஒரு கற்பனை நாடகம் ஆகும். இயேசுவின் சீடர்களில் பலர் இதில் நடிப்பவர்களாக நான் கற்பனை செய்துள்ளேன். இந்நாடகம் நடக்கும் இடம் ஒரு "முஸ்லீம் நாடாகும்". முகமதுவின் காலத்திற்கு பின்பு பல நூற்றாண்டுகள் கழித்து இது நடக்கிறது என்று கற்பனை செய்யுங்கள். முகமதுவின் காலத்திற்கு பின்பு அவரது தோழர்கள் நாடுகளை ஆட்சி செய்தார்கள். அவர்களை "காலிஃபா" என்று அழைப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு காலிஃபாவின் ஆட்சி காலத்தில் இந்த உரையாடல் அல்லது நாடகம் நடப்பதாக நாம் கற்பனை செய்துக்கொள்ள வேண்டும்.

இந்த அரசர் ஆட்சி செய்யும் போது, அந்த நாட்டில் கீழ் கண்ட இயேசுவின் சீடர்கள் சுவிசேஷம் சொல்லும் போது, கைது செய்யப்படுகிறார்கள், காவலில் வைக்கப்பட்டார்கள். இயேசுவின் இந்த சீடர்கள் அக்காலத்தில் உயிரோடு இருப்பதாக கற்பனை செய்துக்கொள்ளுங்கள்.



1. பேதுரு (தனக்கு அடுத்து தன் ஆடுகளை மேய்க்க இயேசு நியமித்த மிக நம்பிக்கையான சீடர் .)

2. பவுல் (இயேசு இவரை சந்திக்கிறார், இவர் மூலமாக பலமான ஊழியம் நடைபெறுகிறது. இஸ்லாமியர்கள் இவர் மீது வைக்கும் குற்றங்களுக்கு இவர் பதில் அளிக்கப்போகிறார். )

3. யோவான் (இயேசுவிற்கு அன்பாக இருந்த சீடன், யோவான் சுவிசேஷம், வெளிப்படுத்தின விசேஷம் தரிசனம் பெற்றவர், 1,2,3 யோவான் புத்தகத்தை எழுதியவர். )

4. லூக்கா (லூக்கா சுவிசேஷம் மற்றும் அப்போஸ்தலர் நடபடிகள் என்ற இரண்டு புத்தகங்களை எழுதியவர். இவர் ஒரு மருத்துவர். )

முதலாவது, பேதுரு அரச சபைக்கு நியாயம் விசாரிக்க அழைக்கப்பட்டார். பேதுரு அரசருக்கும், மற்ற சபை அங்கத்தினர்களுக்கும் முன்பாக நிற்கிறார். இஸ்லாமிய அரசர் கேட்கும் கேள்விகளுக்கு பேதுரு பதில் அளிக்கிறார்.

இந்நாடகத்தின் அடுத்த பாகத்தில் பவுலை அழைத்து அவ்வரசர் கேள்வி கேட்கிறார். இப்படி மற்ற சீடர்களையும் அழைத்து பேசுவதை மற்ற பாகங்களில் பார்க்கலாம்.

பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு


இடம்: ஒரு இஸ்லாமிய அரச சபை

நபர்கள்(நடிகர்கள்) : ஒரு இஸ்லாமிய அரசர், சபை அங்கத்தினர்கள் மற்றும் இயேசுவின் சீடன் சீமோன் பேதுரு.

[சீமோன் பேதுரு சங்கிலிகளால் கட்டப்பட்டு அரச சபையின் நடுவில் நிற்கிறார், அரசரும் மற்றவர்களும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்துள்ளனர்]

அரசர்: நீங்கள் நான்கு பேரும் எங்கே இருந்து வருகிறீர்கள்? எங்கள் நாட்டில் என்ன செய்துக்கொண்டு இருக்கிறீர்கள்?

பேதுரு: நாங்கள் இஸ்ரவேல் நாட்டிலிருந்து வருகிறோம். நாங்கள் இயேசுவின் சீடர்கள். இயேசுவின் நற்செய்தியை உங்கள் நாட்டு மக்களுக்கு சொல்லும்படி நாங்கள் வந்தோம்.

அரசர்: ஓ, நீங்கள் தான் வேதம் கொடுக்கப்பட்டோர்களா?

பேதுரு: ஆம், நாங்கள் மாத்திரம் தான் வேதம் கொடுக்கப்ப்ட்டோர்கள்.

அரசர்: உனக்கு ஆணவமா? நாங்கள் மாத்திரம் தான் வேதம் கொடுக்கப்பட்டோர்கள் என்று பயமில்லாமல் சொல்கிறாய்.

பேதுரு: ஆணவம் இல்லை அரசே, அதிகாரம். இயேசு எங்களுக்கு கொடுத்த அதிகாரம்.

அரசர்: உங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பை நான் தர விரும்புகிறேன். குர்‍ஆன் சொல்கிறது, இயேசு(PBUH) தேவகுமாரன் அல்ல, அவர் ஒரு தீர்க்கதரிசி என்று மட்டும் தான். எனவே, கடைசி நபியாகிய முகமது(அவர் மீது சாந்தி உண்டாவதாக- PBUH) கொண்டு வந்த வேதத்தின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் நல்லோர்களில் ஒருவராக எண்ணப்படுவீர்கள். இயேசு(PBUH) தான் இறைவன் என்பதை பிரசங்கிப்பதை இனி விட்டுவிடுங்கள்.

பேதுரு: அருமை இராஜாவே, உங்கள் பரிவிற்காக நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால், இயேசு தான் இறைவன் என்று உலகமெங்கும் பிரசங்கிப்பதை எங்களால் நிறுத்தமுடியாது. ஏனென்றால், இயேசு தான் உண்மை தெய்வம். அவரே நமக்காக ஏன் உங்களுக்காகவும், உங்கள் நாட்டு மக்களுக்காகவும் மரித்தார், மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். மறுபடியும் வரப்போகிறார். எனவே, அவரை மட்டுமே நாங்கள் விசுவாசிக்க வேண்டும். எனவே, உங்கள் வழிகளை விட்டுவிட்டு இயேசுவை பின்பற்றும் படி உங்களை வேண்டிக்கொள்கிறேன்.

அரசர்: அப்படியா! முதலாவது என் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியுமானால் சொல். இயேசுவை(PBUH) அல்லா அப்படியே தன் அளவில் எடுத்துக்கொண்டார், அவர் சிலுவையில் மரிக்கவில்லை, மக்களுடைய கண்களை ஏமாற்றி, இயேசுவைப் (PBUH) போல "ஒரு நபரை" அல்லா காட்டினார். மக்கள் எல்லாரும், ஏன் அவருடைய தாயாரும் கூட சிலுவையில் அறையப்பட்டது இயேசு என்று நினைத்துக்கொண்டார்கள், நீங்களும் அப்படியே எண்ணிக்கொண்டு இருக்கிறீர்கள். அவ்வளவு தான். பின் ஏன் நீ இயேசு(PBUH) மரித்தார், உயிர்த்தெழுந்தார் என்று பொய் சொல்கிறாய்.

பேதுரு: அரசரே மறுபடியும் உங்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஒரு வேளை நீங்கள் சொல்வது உண்மை என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும், நீங்கள் சொல்லும் நிகழ்ச்சி நடந்ததாக ஒரு ஆதாரமும் இல்லை.

இயேசுவை அல்லா தன் அளவில் எடுத்துக்கொண்டார், அவருக்கு பதிலாக வேறு ஒரு நபரை சிலுவையில் காட்டினார் என்று யாருக்கு தெரியும்? அல்லா எங்களுக்குச் சொன்னாரா? அல்லது இயேசுவிற்கு முன்பே அதை தெரிவித்து எங்களுக்கு சொல்லும்படி சொன்னாரா? இல்லையே? மூன்று வருடங்களுக்கு அதிகமாக நாங்கள் அவரோடு இருந்தோமே! இதைப் பற்றி அல்லா இயேசு மூலமாக எங்களுக்குச் சொல்லியிருக்கலாம் அல்லவா? அல்லது எதிர் காலத்தில் இயேசுவை மரிக்கச்செய்யாமல் அல்லா எடுத்துக்கொள்ளப்போவது அல்லாவிற்கே தெரியாமல் போனதா?

எல்லாம் முடிந்த பிறகு, நாங்கள் உலகமெல்லாம் சுற்றி, பசியிலும், தாகத்திலும், வெயிலிலும், குளிரிலும் கஷ்டப்பட்டு, இயேசுவின் நற்செய்தியை சொல்லும் போது, 600 ஆண்டுகளுக்கு பின்பு வந்து, மரித்தது இயேசு அல்ல, அவரைப் போலவே வேறு ஒருவர் என்றுச் சொன்னால், இது அல்லாவிற்கு நியாயமாக படுகிறதா, சிந்தித்துப்பாருங்கள்.

நான் இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதை அறியாமல் என் தொழிலுக்கு திரும்பினேன், மீன் பிடிக்கச்சென்றேன். மற்ற இயேசுவின் சீடர்களும் மீன் பிடிக்க வந்தார்கள். ஆனால், இயேசு எங்களுக்கு தரிசனமாகி தன்னை உயிருள்ளவராக காண்பித்தார்(யோவான் 21:3‍-14).

இராஜாவே, நான் சொல்வதை கேளுங்கள், நீங்கள் சொல்வது உண்மையானால், எனக்கு தரிசனமானவர் யார்? எங்கள் கண்களுக்கு முன்பாக வானத்தில் உயர எடுத்துக்கொள்ளப்பட்டவர் யார்? இரண்டு தேவ தூதர்கள் இயேசு மறுபடியும் வருவார்கள் என்று சொன்னார்களே. 

அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டு பேர் அவர்களருகே நின்று,11. கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள் ( அப் 1: 10).

எனவே, நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுகுள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை(அப் 4: 12).

...நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்(அப் 2:38 )


இதர சபை அங்கத்தினர்கள் சத்தமாய்: யாரிடம் என்ன பேசுகிறாய் என்று உனக்கு தெரியுமா? நீ அரசருக்கு மதிப்பு கொடுக்கமாட்டாயா? அரசே, இவனை பேசவிடாதீர்கள்.

பேதுரு: அரசரே, நான் உங்களை அவமதிக்கவில்லை. நான் கண்டதையும் கேட்டதையும் சொல்லாமல் இருக்கக்கூடாதே. அது என் மேல் விழுந்த கடமை.

[அரச சபையில் அதிக சத்தம் எழுகிறது, அரசர் ஒரு முறை எல்லாரையும் பார்க்கிறார், உடனே சபையில் அமைதி நிலவுகிறது]

அரசர்: பேதுருவே, நீ சொல்வதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் அமைதியை அதிகமாக விரும்புவதால், உங்களுக்கு ஒரு வாய்ப்பை தருகிறேன். நீங்கள் எங்கள் நாட்டில் இருக்கலாம். ஆனால், இயேசு(PBUH) இறைமகன் என்று சொல்லக்கூடாது. ஏதாவது என் ஆட்சிக்கு விரோதமாக மக்களை கூட்டி, குழப்பம் செய்வீர்களா? அப்படி குழப்பம் செய்தால், தண்டனை மிகவும் கடினமாக இருக்கும்.

பேதுரு: அரசே, எங்களால் இயேசு இறைமகன் என்று சொல்லாமல் இருக்கமுடியாது. இன்னொறு விவரத்தை நான் சொல்ல எனக்கு அனுமதி கொடுங்கள். நாங்கள் இந்த உலக சொத்துக்களுக்கு, ஆசைகளுக்கு அடிமைப்பட்டவர்கள் இல்லை, நாங்கள் எந்த நாட்டில் இருந்தாலும், எங்களை ஆளுபவர்கள் கிறிஸ்தவரல்லாதவராக இருந்தாலும், அவரை எதிர்க்க மாட்டோம். வாழும் தாய் நாட்டிற்கோ அல்லது எங்களை வாழவிட்ட நாட்டிற்கோ நாங்கள் என்னாலும் கெடுதல் நினைக்கமாட்டோம். அப்படி செய்பவன் இயேசுவின் சீடன் கிடையாது. நாங்கள் அரசியல் பண்ண அழைக்கப்படவில்லை, தேவ அரசைப் பற்றி அறிவிக்க அழைக்கப்பட்டோம். ஆட்சியை கவிழ்த்து நாற்காலிக்கு ஆசைப்படுபவர்கள் நாங்கள் இல்லை.

அரசர்: என் நாட்டில் இருக்கவேண்டுமானால், ஒன்று நீங்கள் முஸ்லீமாக மாறவேண்டும், அல்லது ஜிஸ்யா என்னும் வரியை செலுத்தவேண்டும்.

பேதுரு: அரசே, நாங்கள் இந்நாட்டில் இருக்கும் நாட்கள் வரை, வரி கட்ட தயாராக இருக்கிறோம்.

[அரசர் சிறிது நேரம் அமைதியாக இருக்கிறார், அந்த நேரத்தில் அரச சபையின் பெரியவர்களில் ஒருவர், அரசரிடம் வந்து, எதோ அவரிடம் சொன்னார்]

அரசர்: இயேசுவின்(PBUH) சீடர்கள் அனைவருக்கும் நீ தான் தலைவராமே? உண்மையா? தலைவராவதற்கு உனக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?

பேதுரு: தலைவர் என்று தனியாக ஒரு பட்டத்தைச் சொல்லமுடியாது அரசே, ஆனால், இயேசு தன் ஆடுகளை மேய்க்கும்படிக்கும், பார்த்துக்கொள்ளும்படிக்கும் எனக்கு அதிகாரம் கொடுத்துள்ளார். என் அதிகாரம் வானத்தையும், பூமியையும் படைத்தவரிடமிருந்து வந்துள்ளது.

இயேசு என்னிடம் அன்பாக இருக்கிறாயா? என்று மூன்று முறை கேட்டார். நானும் அன்பாக இருக்கிறேன் என்றுச் சொன்னேன். அப்படியானால், என் ஆடுகளை மேய்ப்பாயாக என்று எனக்கு கட்டளையிட்டார்(யோவான் 21:15-17). எனவே தான் அரசே, என்னால் இயன்ற அளவிற்கு நான் இயேசுவின் நற்செய்தியை சொல்கிறேன். இயேசுவின் ஆடுகளில் நானும் ஒரு ஆடாக இருந்து மற்ற ஆடுகளை பார்த்துக்கொண்டு வந்துக்கொண்டு இருக்கிறேன்.

இயேசு எனக்கு பண ஆசை காட்டியோ, பெண் ஆசை காட்டியோ அல்லது மண் ஆசை காட்டியோ எனக்கு கட்டளையிட்டு இருந்தால், நான் இவ்வளவு கஷ்டப்பட்டு அவருக்கு ஊழியம் செய்து இருக்கமுடியாது, இவ்வளவு பாடுகளை சகித்து இருக்கமுடியாது. ஆனால், இயேசு தன் மீது அன்பு இருந்தால், என் ஊழியம் செய் என்றார். அவர் மீது வைத்த அன்பு மட்டும் தான் எங்களை இப்படி செய்ய ஊக்குவிக்கிறது அரசே.

அரசர்: இறைவனுடைய வழியை கெடுக்க வந்த "பவுலை" நீ ஆதரிக்கிறாயே! அவன் ஒரு எமாற்றுக்காரன் என்று உனக்கு தெரியாதா? பொய்யான உபதேசங்களைச் சொல்லி வரும் அவனை எதை ஆதாரமாக வைத்து உன்னோடு சேர்த்துக்கொண்டாய்?

பேதுரு: மன்னிக்கவேண்டும் அரசே, யார் உண்மை சொல்பவர்கள், யார் பொய் சொல்பவர்கள் என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும் அரசர் அவர்களே.

எங்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார், அவர் எல்லாவற்றையும் குறித்து தகுந்த நேரத்தில் எங்களுக்கு அறிவுரை கூறுவார். உங்களைப் போன்றவர்களுக்கு முன்பாக நாங்கள் கொண்டு போகப்படும்போது என்ன பேச வேண்டும், எப்படி பேசவேண்டும் என்றும் அவர் எங்களுக்கு சொல்லுவார்(மத்தேயு: 10:17-20). எனவே, நீங்கள் சொல்வது போல, சகோதரர், என் இயேசுவின் ஊழியக்காரர் பவுல் ஏமாற்றுக்காரர் அல்ல. இயேசுவின் கையில் அவர் ஒரு எழுத்தாணி.

தேவனுடைய வழியை கெடுக்க அவர் வந்திருப்பாரானால், எனக்கு அது தெரிந்திருக்கும், ஆவியானவரும் அதை எனக்கு உணர்த்தியிருப்பார். இயேசுவின் நற்செய்தி இஸ்ரவேல் மக்களுக்கு மட்டுமே நான் சொல்லவேண்டும் என்று நினைத்திருக்கும் போது, அப்படி இல்லை, உலகமனைத்திற்கும் இந்த நற்செய்தி சொந்தம் என்றுச் சொல்லி, ஆவியானவர் என்னை அன்னிய மக்களுக்கும் இயேசுவைப் பற்றி சொல்லும்படி வழி நடத்தினார்(அப்.நடபடிகள் 10ம் அதிகாரம்). எனவே, ஆவியானவர் எங்களோடு உள்ளார் எனவே, எங்களை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் தங்கள் துர் செய்திகள் மூலம் வழி விலகச்செய்யமுடியாது.

அரசர்: அப்படியா, பவுலுக்காக இப்படி பரிந்து பேசுகிறாயே, ஒரு முறை உனக்கு எதிர்த்து பவுல் பேசி எல்லாருக்கும் முன்பாக உன்னை அவமானப்படுத்தினானாமே? நீ இயேசுவோடு இருந்தவனா அல்லது பவுல் இருந்தவனா? உன்னை விடவா அவனுக்கு மார்க்க அறிவு அதிகமாக இருக்கப்போகிறது? உனக்கு கீழே இருக்கிறவன் எல்லாருக்கும் முன்பாக உன்னை கேவலப்படுத்தினானே, உனக்கு வெட்கமாக இல்லை?

பேதுரு: அரசே, நான் சொல்வதை சிறிது கவனமாக கேளுங்கள். கிறிஸ்தவத்தில் ஒருவன் உயர்ந்தவன், மற்றோருவன் தாழ்ந்தவன் என்று யாரும் எண்ணக்கூடாது. இதே போல, ஒரு முறை இயேசுவின் சீடர்களாகிய நாங்கள் பரலோகத்தில் யார் உயர்ந்தவர் என்று பேசிக்கொள்ளும் போது, இயேசு ஒரு சிறு பிள்ளையை எடுத்து எங்கள் நடுவில் நிறுத்தி "இந்த பிள்ளையை போல" மாறுங்கள் என்றுச் சொன்னார். பெரியவன் சிறியவன் போல பணிவிடை செய்யவேண்டும் என்றுச் சொன்னார்

நான் ஒரு தவறு செய்யும் போது சகோதரர் பவுல் அதை சுட்டிக்காட்டியது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஏனென்றால், அப்படி பவுல் சுட்டிக்காட்டவில்லையானால், சில பெரியவர்கள் தவறு செய்யும் போது சுட்டிக்காட்டக்கூடாது என்ற தவறான பழக்கம் எல்லாரிடமும் வளர்ந்து விடும். ஆனால், இப்படி பவுல் சொன்னதால், தேவனுடைய கட்டளைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், மனிதர்களுக்கு அல்ல என்பது தெளிவாக விளங்கும்.

எனவே, எங்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. இன்னொரு விவரத்தையும் சொல்லிவிடுகிறேன், அரசே. இயேசுவிடம் கூட நான் இருந்ததால், நான் ஒன்றும் அதிகம் கற்றவன் என்றோ, ஞானவான் என்றோ பொருள் இல்லை அரசே. உண்மையைச் சொல்லவேண்டுமானால், இயேசு யாருக்கு என்ன வேலை கொடுப்பார்? யார் மூலம் தம் சித்தத்தை நிறைவேற்றிக்கொள்வார் என்று அவர் சரியாக நிர்ணயம் எடுப்பார். யூதர்களுக்கு நற்செய்தி சொல்ல என்னை உருவாக்கிய அதே இயேசு தான், யூதர் அல்லாதவர்களுக்கு நற்செய்தி சொல்ல பவுலை ஏற்படுத்தினார். எனவே, நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மதித்து, உட்சாகப்படுத்தி, தேவைப்பட்டால் கடிந்துக்கொண்டு இயேசுவின் ஊழியத்தைச் செய்கிறோம் அவ்வளவு தான்.

அரசர்: அப்படியா! நாளை நான் பவுலிடமே பேசிக்கொள்கிறேன். நாளை சபைக்கு பவுலை அழைத்துவாருங்கள். பேதுரு, இன்று நீ போகலாம். தேவைப்பட்டால் நான் அழைத்தனுப்புகிறேன். நான் சொல்வதை நேரம் எடுத்து சரியாக சிந்தித்து உன் முடிவைச் சொல். நீ இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், கடைசி நபியாகிய முகமது(PBUH) விற்கு வெளிப்பட்ட வேதமாகிய குர்‍ஆன் வேதம் என்று நீ ஏற்றுக்கொள்வாயானால், உனக்கு பாதுகாப்பு கிடைக்கும். நீ சுதந்திரமாக இந்நாட்டில் நடமாடலாம். இல்லையானால், வரிகட்டவேண்டி வரும், இன்னும் பல இன்னல்களை சந்திக்கவேண்டி வரும். உனக்கு இரண்டு நாட்கள் அவகாசம் தருகிறேன், சிந்தித்து உன் முடிவைச் சொல். யாரங்கே? பேதுருவை அழைத்துச்செல்லுங்கள்.

பேதுரு: ஒரு நிமிடம் அரசே, என் முடிவைச் சொல்ல இரண்டு நாட்கள் எதற்கு, அது வீண். என் முடிவு மாறாது. வேண்டுமானால், நீங்கள் உங்கள் பொல்லாத வழியை விட்டுவிட்டு, இயேசுவின் மீது நம்பிக்கை வைத்து, தேவனின் நியாயத்தீர்ப்பு நாளில் பயமில்லாமல் தைரியமாக நிற்கவேண்டுமானால், இன்றே இயேசுவை உங்கள் உள்ளத்தில் வர அனுமதியுங்கள்.

[அரசரின் முகம் சிகப்பாக மாறுகிறது, காவலர்கள் பேதுருவை அழைத்துச்செல்கிறார்கள். மறுநாள் அரச சபைக்கு அப்போஸ்தலர் பவுல் அழைத்துவரப்படுகிறார், அவரிடம் அரசர் என்ன கேள்விகளை கேட்கிறார் என்றும், பவுல் எப்படி காரசாரமாக பதில் அளிக்கிறார் என்றும் இந்த உரையாடலின் அடுத்த பாகத்தில் பார்க்கலாம் கர்த்தருக்கு சித்தமானால்...]


Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Articles/MuslimKingPeter.htm

 

Isa Koran Home Page Back - Articles Index

1