ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

திங்கள், 26 அக்டோபர், 2020

குர்‍ஆன் 1:4 இது எந்த வகை வேதம்: மாலிகி, மலிகி, மாலிக, மல்கி, மில்கி, மிலிகி, மலக, மாலிக், மில்க, . . . தலை சுற்றுகிறதா?

குர்‍ஆனின் முதல் அத்தியாயம் நான்காம் வசனம், கீழ்கண்டவாறு உள்ளது:

1:4. (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).(முஹம்மது ஜான் தமிழாக்கம்)

1:4. (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி (சவூதி தமிழாக்கம்)

ஹ‌ஃப்ஸ் குர்‍ஆன் அரபி மூலத்தில்: மாலிகி யௌமித்தீன் (مٰلِكِ يَوْمِ الدِّيْنِؕ)

இன்று பெரும்பான்மை முஸ்லிம்கள் பயன்படுத்துவது, ஹஃப்ஸ் குர்‍ஆன் ஆகும். இது இமாம் ஹஃப்ஸ் என்பவர் மூலமாக கொடுக்கப்பட்ட குர்‍ஆன் (கிராத்) ஆகும். இதே போன்று, முஹம்மதுவின் காலம் தொடங்கி பல இமாம்கள், இஸ்லாமிய அறிஞர்கள் மூலமாக குர்‍ஆன் ஓதப்பட்டு, நம்மிடம் வந்து சேர்ந்துள்ளது. 

ஆக, இன்று நம்மிடம் 20க்கும் அதிகமான அரபி மூல கு‍ர்‍ஆன்கள் உள்ளன. அவைகளை குர்‍ஆன் கிராத்துக்கள் என்பார்கள். இவைகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இல்லை, ஒரே வார்த்தையை வெவ்வேறு விதமான வார்த்தைகளைக் கொண்டு ஓதியுள்ளார்கள் மற்றும் எழுதியுள்ளார்கள். இந்த அரபி மூலங்கள் அனைத்தும் நம்மிடம் உள்ளன.

குர்‍ஆன் ஏழுவட்டார மொழி வழக்கில் இறங்கியது என்று முஹம்மது கூறியுள்ளார், அதனை இஸ்லாமிய உலகம் அங்கீகரிக்கிறது. இந்த ஏழு வட்டார குர்‍ஆன்கள் தான் இன்னும் பெருகி இப்போது 20க்கும் அதிகமான குர்‍ஆன்களாக மாறியுள்ளது. இக்கட்டுரையின் கடைசியில் ஏழுவட்டார குர்‍ஆன் பற்றிய முந்தைய  கட்டுரைகளின் தொடுப்புக்களை கொடுத்துள்ளேன்.

இக்கட்டுரையின் ஆய்வு  குர்‍ஆன் 1:4ம் வசனத்தில் வரும் ஒரு வார்த்தையைப் பற்றியதாகும்.  கீழ்கண்ட அட்டவணையை பார்க்கவும். குர்‍ஆன் 1:4ல் வரும் வசனத்தை அக்கால இஸ்லாமிய அறிஞர்கள் எப்படி மாற்றி உச்சரித்து இருந்துள்ளார்கள் என்பதை அறியமுடியும்.

மேற்கண்ட அட்டவணையின் வண்ணங்களை கணக்கில் கொள்ளவேண்டாம், கிராத்துக்களை வேறுபடுத்திக் காட்ட பல வண்ணங்களை கொடுத்துள்ளேன், அவ்வளவு தான்.

இந்த அட்டவணையில் உள்ளவற்றை புரிந்துக்கொள்ள சில விளக்கங்களை இப்போது பார்ப்போம்:

1) மாலிகி (māliki):

மாலிகி என்ற வார்த்தையை பயன்படுத்தும் கிராத்துக்கள் (குர்‍ஆன்கள்) மற்றும் அறிஞர்கள் பற்றிய விவரம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்று உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்படும் குர்‍ஆன், 1924ம் ஆண்டு எகிப்து வெளியிட்ட 'ஹஃப்ஸ் கிராத்தில்' உள்ள குர்‍ஆன் ஆகும், இது தான் முதன் முதலில் பிரிண்ட் (அச்சு) செய்யப்பட்ட குர்‍ஆன் ஆகும்.  இதை "Print edition of the Quran" என்றும்  ஆஸிம் வழியாக, ஹஃப்ஸ் இமாம் மூலமாக  வந்த குர்‍ஆன் என்றும் கூறுவார்கள். இதில் மாலிகி என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. 

அடுத்ததாக, இப்னு முஜாஹித் என்ற இஸ்லாமிய அறிஞர், தம்முடைய " Kitāb al-sabʿa fī l-qirāʾāt" என்ற புத்தகத்தில் பல கிராத்துக்கள் பற்றி ஆய்வு செய்து எழுதியுள்ளார். இவர் குர்‍ஆனின் கிராத்துக்களில் ஆய்வு செய்த சிறந்த அறிஞர் ஆவார்.  இவர் தம் புத்தகத்தில், முஹம்மதுவும், ஆஸிம் என்பவரும் (இவர் தான் ஹஃப்ஸ் இமாமின் ஆசிரியர்), மேலும் அல் கிசாய் என்ற கிராத்திலும், இதே வார்த்தை அதாவது 'மாலிகி' என்பதை பயன்படுத்தியுள்ளார்கள் என்று கூறுகின்றார். (இவரைப் பற்றி மேலும் அறிய இங்கு சொடுக்கவும்).

அடுத்ததாக அபூ அமர் அத்தானி என்ற இஸ்லாமிய அறிஞர் பற்றியது, இவரும் குர்‍ஆனின் கிராத்துக்கள் மற்றும் ஹதீஸ்கள் பற்றிய ஆய்வுகள் செய்தவர் ஆவார். இவர் தமது " Kitāb at-Taisīr fī 'l-qirāʾāt as-sabʿ" என்ற புத்தகத்தில்,  ஆஸிமும், அல் கிசாயும் "மாலிகி" என்ற வார்த்தையை தங்கள் கிராத்துக்களில் பயன்படுத்தினார்கள் என்று கூறுகின்றார்.

மேற்கண்ட அட்டவணையில் "நஃபி(Nafi)" என்று இருப்பது தான் "வர்ஷ்" குர்‍ஆன் ஆகும்.

இப்போது உங்களுக்கு மேற்கண்ட அட்டவணையை எப்படி படித்து புரிந்துக்கொள்ளவேண்டும் என்று தெரிகின்றதா? இதே போன்று தான் 2 லிருந்து 20 வரை, பலர் பல வகையில் குர்‍ஆனை ஓதியுள்ளார்கள், முக்கியமாக குர்‍ஆன் 1:4ம் வசனத்தில் வரும் ஒரு வார்த்தையை 20க்கும் அதிகமான வகையில் ஓதியுள்ளார்கள்.

  1. māliki - மாலிகி
  2. maliki - மலிகி
  3. malki - மல்கி
  4. milki - மில்கி
  5. miliki  - மிலிகி
  6. mālika - மாலிக‌
  7. malaka - மலக‌
  8. malika - மலிக‌
  9. mālik - மாலிக்
  10. malka  - மல்கா
  11. malkī - மல்கீ
  12. milka - மில்க‌
  13. maliku - மலிகு
  14. malikan - மலிகன்
  15. mālikun - மாலிகுன்
  16. māliku - மாலிகு
  17. malīki - மலீகி
  18. mēliki - மேலிகி
  19. mæliki - மெயிலிகி
  20. mallāki - மல்லாகி

1924ம் ஆண்டு ஹஃப்ஸ் கிராத்தில் உள்ள குர்‍ஆனை பிரிண்ட் எடுத்ததால், இன்று பெரும்பான்மை முஸ்லிம்கள் "மாலிகி" என்று குர்‍ஆன் 1:4ஐ வாசிக்கிறார்கள். ஒரு வேளை, வர்ஷ் கிராத் குர்‍ஆனை பிரிண்ட் செய்து இருந்திருந்தால், முஸ்லிம்கள் "மலிகி" என்று இன்று வாசித்து இருந்திருப்பார்கள்.

கார்பஸ் கொரோனிகம் தளம்:

இந்த தளம் குர்‍ஆனின் ஆரம்பகால கையெழுத்துப் பிரதிகள், சுருள்கள் பற்றிய ஆய்வு, குர்‍ஆன் கிராத்துக்கள் பற்றிய ஆய்வுகளைச் செய்கிறது. குர்‍ஆனின் பழமையான பிரதிகளை படமெடுத்து வெளியிடுகிறது.  குர்‍ஆனின் ஆய்வுகளை செய்ய விரும்புபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள தளமாகும். இந்த தளத்திருந்து தான் தற்போது படித்துக் கொண்டு இருக்கும் கட்டுரையை நான் தொகுத்தேன்.

இந்த தளம் தன்னைப் பற்றிச் சொல்லும் விவரங்களை இங்கு படிக்கலாம்.

About the project: Corpus Coranicum – Textual documentation and historically critical commentary on the Qur'an

The project's goals: The project offers systematic access to early Qur'anic manuscripts with images and transliterated text. In parallel, a catalogue of variant readings included in the works of the Islamic scholarly tradition is produced. Based on textual history, the project creates a chronological commentary using methods of literary studies and refering to relevant texts from Antiquity and Late Antiquity. These source texts are accessible in the database 'Texts from the environment of the Qur'an' (TEQ). The development of the first Muslim community is reconstructed for the first time as the interaction between the Prophet and the first addressees in Mecca and Medina.

ஏழு வட்டார  மொழி வழக்க குர்‍ஆன்கள்  பற்றி அறிய கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்:

  1. 7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? இருக்கின்றது, இருக்கிறது, இருக்குது, இருக்கு, இக்குது, இக்கு & கீது
  2. குர்‍ஆனைப் போன்று ஏன் அல்லாஹ் முந்தைய வேதங்களை ஏழு வட்டாரமொழிகளில் (கிராத்துக்களில்) இறக்கவில்லை?
  3. முஹம்மது அல்லாஹ்விடமிருந்து பெற்ற 7 வட்டார மொழி குர்‍ஆன்களை ஏன் கலிஃபா உஸ்மான் எரித்தார்கள்?
  4. ஏழு வட்டார மொழிவழக்கில் குர்‍ஆன் - நடைமுறை சிக்கல்களும் தீர்வுகளும்
  5. 20+ குர்‍ஆன்கள் உண்டா? குர்‍ஆன் கிராத்துக்களை எங்கே வாங்கலாம்?

முடிவுரை:

உலகம் முழுவதும் உள்ள குர்‍ஆன்கள் அனைத்தும் ஒரே விதமாக எழுத்துக்கு எழுத்து, வார்த்தைக்கு வார்த்தை, வசனத்துக்கு வசனம் ஒரே மாதிரியாக இருக்கிறது என்று முஸ்லிம்கள் அறிஞர்கள் இன்று வரை சொல்லிக்கொண்டு வருகிறார்கள். இக்கூற்றுக்கள் பொய்யானவை என்பதற்கு, இன்று நாம் பார்த்த ஒரே ஒரு வார்த்தையின் ஆய்வு ஒர் சான்றாகும்.  

அல்லாஹ் முஹம்மதுவிற்கு குர்‍ஆனை இறக்கும் போது, எப்படி இறக்கினான்? முக்கியமாக 1:4ம் வசனத்தில் வரும் வார்த்தை எப்படி இருந்தது? மேற்கண்ட 20 வகைகளில் அவன் இறக்கினான் என்றுச் சொல்வது, முட்டாள்தனமான கூற்றாகும். அல்லாஹ் அதனை ஒருவகையில் தான் இறக்கியிருப்பான், ஆனால் காலப்போக்கில் அவைகள் 20க்கும் அதிகமான வகைகளாக‌ மாறியது. அல்லாஹ் குர்‍ஆனை பாதுகாத்தானா? இந்த கேள்வி இனி தேவையற்றது.

ஓசையிலேயே நாம் குர்‍ஆனை காப்போம் என்று அல்லாஹ் கருதியது முதல் குற்றம், குர்‍ஆனை எழுதி வைக்காமல் இருந்தது இரண்டாவது குற்றம். இதன் விளைவு? ஒரு வசனத்தின் ஒரு வார்த்தையை ஆய்வு செய்தாலே தலை சுற்றுகிறதே, குர்‍ஆனின் 6236 வசனங்களையும், குர்‍ஆன் கிராத்துக்களையும் ஆய்வு செய்தால், குர்‍ஆன் தாக்கு பிடிக்குமா? உண்மையை அறிய விரும்புகிறவர்கள் ஆய்வு செய்வார்களா?

தேதி:  26th Oct 2020


இதர குர்-ஆன் ஆய்வுக்கட்டுரைகள்

குர்-ஆன் பக்கம்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/arabic_quran/q1-4-maliki-qiraat.html

புதன், 21 அக்டோபர், 2020

ஏழு வட்டார மொழிவழக்கில் குர்‍ஆன் - நடைமுறை சிக்கல்களும் தீர்வுகளும்

முஹம்மதுவிற்கு அரபியர்கள் என்றால் உயிர்,  ஏனென்றால் இவரும் ஒரு அரபியர் தானே! இதனால் தான் அல்லாஹ் ஒரு குர்‍ஆனை அனுப்பும் போது, தம் அரபி முஸ்லிம்களுக்கு அது கடினமாக இருக்கிறதென்றுச் சொல்லி, முஹம்மது அல்லாஹ்விடம் வேண்டி, 7 வட்டார மொழிகளில் குர்‍ஆனை பெற்றுக்கொண்டார். இதைப் பற்றிய முந்தைய கட்டுரைகளை அடிக்குறிப்பில் கொடுத்துள்ளேன், அவைகளை படித்துக் கொள்ளவும்.

இந்த சிறிய கட்டுரையில், இந்த "ஏழு வட்டார மொழியில் குர்‍ஆன்" என்ற கோட்பாட்டில் உள்ள ஒரு மிகப்பெரிய சிக்கலை உங்கள் முன்பு வைக்கப்போகிறேன். சிக்கலை அவிழ்ப்பீர்களா? என்று என்னிடம் கேட்டால், இதனை அவிழ்க்கும் உரிமையும், பொறுப்பும் முஸ்லிம்களுக்குத் தான் உள்ளது, எனவே அவர்கள் தான் அவிழ்க்கவேண்டும்.

இதனை படிப்பவர்களில் முஸ்லிம்கள் இருந்தால், அவர் இந்த சிக்கலைத் தீர்த்து, அல்லாஹ்விற்கும், இஸ்லாமுக்கும் உதவி செய்யட்டும்.

சரி, வாருங்கள், அது என்ன சிக்கல் என்பதைப் பார்ப்போம். ஏழு வட்டார குர்‍ஆன் இறங்கியது பற்றி பேசும் ஹதீஸ்கள் இதோ:

புகாரி எண் 3129:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரேயொரு (வட்டார) மொழி வழக்குப்படி ஜிப்ரீல் (திருக்குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றுத் தந்தார். ஆனால், நான் அதை இன்னும் பல (வட்டார) மொழி வழக்குகளின் படி எனக்கு ஓதக் கற்றுத் தருமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். (நான் கேட்க, கேட்க அதிகப்படுத்தப்பட்டுக் கொண்டே வந்து,) இறுதியில் ஏழு (வட்டார) மொழி வழக்குகள் அளவிற்கு வந்து நின்றது. என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

இதே விவரத்தை இன்னொரு ஹதீஸில் மேலதிக  விவரங்களோடு காணலாம், அதன் சுருக்கத்தை இங்கு தருகிறேன்.

முஸ்லிம் எண்: 1491

உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

. . . அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் "உபை, "குர்ஆனை ஓர் ஓதல் முறைப்படி ஓதுவீராக" என எனக்கு (இறைவனிடமிருந்து) செய்தியறிவிக்கப்பட்டது. உடனே நான் என் சமுதாயத்தாருக்கு இன்னும் சுலபமாக்கும்படி (இறைவனிடம்) கோரினேன். அப்போது "குர்ஆனை இரண்டு ஓதல் முறைப்படி ஓதுவீராக!" என எனக்கு இரண்டாவது முறையாக இறைவன் அறிவித்தான். உடனே நான் இன்னும் என் சமுதாயத்தாருக்கு சுலபமாக்கும்படி கோரினேன். மூன்றாவது முறையில் குர்ஆனை ஏழு ஓதல் முறைகளின் படி ஓதும்படி எனக்கு இறைவன் அறிவித்தான். . . .

வட்டார வழக்கில் குர்‍ஆன் என்றால் என்ன? 

"வட்டார மொழி வழக்கில் குர்‍ஆன்" என்றால் என்ன என்பதை புரிந்துக்கொள்ள, தமிழ் மொழியின் வட்டார மொழி வழக்கை கவனிக்கவேண்டும்.  

கீழ்கண்ட இரண்டு பத்திகளில் சில உதாரணங்களை பார்க்கவும்:

தமிழ் வட்டார மொழி வழக்குகள்

ஒலிப்புமுறை

தமிழில் வட்டாரமொழி வழக்குகள், பெரும்பாலும் சொற்களை ஒலிப்பதிலேயே மாறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக, "இங்கே" என்ற சொல், தஞ்சாவூர் பகுதிகளில் "இங்க" என்றும், திருநெல்வேலி பகுதிகளில் "இங்கனெ" என்றும், இராமநாதபுரம் பகுதிகளில் "இங்குட்டு" என்றும், யாழ்ப்பாணப் பகுதிகளில் "இங்கை" என்றும், கன்னியாகுமரி மற்றும் மட்டக்களப்பில் சில பகுதிகளில் "இஞ்ஞ" என்றும் வழங்கப்படுகின்றது. 

சொற்கள்

. . .தமிழில் வழங்கப்படும் சில சொற்கள் சில வட்டாரங்களுக்கு சொந்தமானவை. எடுத்துக்காட்டுகள்:

  • மதுரை: எல அவிங்க எங்கிட்டு போனாய்ங்க?
  • திருநெல்வேலி: எல அவுக எங்க போனாக?
  • கன்னியாகுமரி: மக்கா அவாள் எங்கடே?
  • சென்னை: ஏய் அவனுவ எங்க போனானுவ?

இப்படியாக ஒலியும் சொற்களும் வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபடுகின்றன.

மதுரையில் பிறந்து வாழும் ஒரு நபருக்கு, சென்னையில் பேசும் வட்டார மொழி புரிந்தாலும், அதில் அவரால் சுலபமாக பேசமுடியாது, மனப்பாடம் செய்யமுடியாது. அவருக்கு மதுரையின்  வட்டார மொழியே அடிக்கடி வந்துவிடும்.

இதே போன்று ஒவ்வொருவருக்கும் அவரவரின் வட்டார மொழியே சுலபமானதாக இருக்கும். எழுதும் போது, தூயத்தமிழில் எழுதினாலும் (சிலர் எழுதும் போதும், வட்டார வழக்கத்தில் எழுதுவதும் உண்டு), பேசும் போது மட்டும் தங்களுக்கு எது பழக்கமாகிவிட்டதோ, அதையே பேசுவார்கள்.

இதே போன்று தான், குர்‍ஆனை முதன் முதலாக இறக்கும் போது, அல்லாஹ் மக்காவின் மக்களாகிய முஹம்மதுவின் இனத்தாரான குறைஷிகளின் அரபி வட்டார வழக்கப்படி இறக்கினார். 

அந்த குர்‍ஆன் குறைஷிகளுக்கு புரிந்தது, சுலபமாகவும் இருந்தது (மதுரைக்காரனுக்கு மதுரைத் தமிழ் மாதிரி), ஆனால் வேறு பகுதி அரபியர்களுக்கு கொஞ்சம் கடினமாகவே குர்‍ஆன் காணப்பட்டது, ஏனென்றால் அது தாங்கள் பேசும் வழக்கில் இல்லையே!

இதனை முஹம்மது கவனித்தார், மக்களின் வேதனை, அரசனின் வேதனையல்லவா? உடனே அல்லாஹ்விடம் வேண்டினார். அல்லாஹ்வும் முஹம்மதுவின் வேண்டுதலை ஒப்புக்கொண்டார், ஏழு வட்டார மொழி வழக்கத்தில் குர்‍ஆன் தொடர்ந்து வந்துக்கொண்டே இருந்தது முஹம்மதுவின் கடைசி மூச்சு வரைக்கும்.

குர்‍ஆனில் மொத்த வசனங்கள்:

இன்று நம்மிடம் இருக்கும் ஹஃப்ஸ் குர்‍ஆனில் 6236 வசனங்கள் உள்ளன. இரண்டாவது வட்டார வழக்கில் கூட முழு குர்‍ஆன் தேவை அல்லவா, எனவே, இரண்டாவது வட்டார வழக்க குர்‍ஆனில்  கூட 6236 வசனங்கள் இருக்கும். இதே போன்று ஒவ்வொரு வட்டார குர்‍ஆனிலும் 100% வசனங்கள் இறக்கப்பட்டன என்று கருதினால், மொத்தம் 43 ஆயிரம் வசனங்கள் வருகின்றது (7 x 6236).

ஒருவேளை, வெறும் 75% வசனங்கள் மட்டும் தான் இதர வட்டார வழக்கத்தில் தேவையாக இருந்தது, அவைகளைத் தான் அல்லாஹ் இறக்கினான் என்று முஸ்லிம்கள் சொன்னால் கூட, மொத்தமாக ஏழு வட்டார வழக்க குர்‍ஆனில் 34 ஆயிரம் வசனங்கள் வருகின்றன‌.   

இன்னும் சிறிது இறங்கி 50% வசனங்களைத் தான் இதர வட்டார மொழி வழக்கில் அல்லாஹ் இறக்கி இருந்திருக்கக்கூடும் என்று கருதினாலும் கூட‌, ஏழு வட்டார வழக்க குர்‍ஆனில் கிட்டத்தட்ட 25 ஆயிரம் வசனங்கள் வருகின்றன‌.  சரி, போகட்டும் 25% வசனங்கள் தான் வட்டார வழக்கில் தேவை என்று கணக்கிட்டாலும் மொத்தமாக‌ 15 ஆயிரம் வசனங்கள் வருகின்றது.

இதனை கீழ்கண்ட அட்டவணையில் கொடுத்துள்ளேன்.

ஏழு வட்டார வழக்கு குர்‍ஆன்களில் இருக்கும் சிக்கல்கள்

சிக்கல் 1: வட்டார மொழி வழக்க குர்‍ஆன் - நடைமுறை சாத்தியமா?

மேற்கண்ட அட்டவணையை கவனிக்கவும், அதில் உள்ள பிரச்சனை என்னவென்று புரிகின்றதா? அல்லாஹ் முஹம்மதுவிற்கு எத்தனை வசனங்களை இறக்கினான்? 6236 வசனங்களா? (அ) 43 ஆயிரம் வசனங்களா, (அ) 34 ஆயிரம் வசனங்களா, (அ) 24 ஆயிரம் அல்லது 15 ஆயிரமா? 

இப்படி ஒரு இறைவன் வட்டார மொழி வழக்கில் தன் வேதத்தை இறக்குவது 'நடைமுறையில் சாத்தியமா?' என்பதை சிந்தித்துப் பாருங்கள். "சாத்தியமா" என்ற கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும், "இப்படிப்பட்ட ஒன்று தேவையா?" என்பது தான் முக்கியமான கேள்வி.

ஏழு வகையான வட்டார வழக்கு வசனங்களை முஹம்மது தம் சஹாபாக்களுக்கு விளக்கினாரா? இதற்கு ஏதாவது ஹதீஸ் சான்றுகள் உள்ளதா? ஒவ்வொரு வட்டார வழக்கு வசன‌ங்களை மனப்பாடம் செய்து, மக்களுக்குச் சொல்லிக்கொடுக்க யாரை முஹம்மது நியமித்தார்? இதற்கு சான்றுகள் உண்டா?

"உபை, நீ குறைஷி வட்டார குர்‍ஆனை கற்றுக்கொண்டு, மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடு", "மஸூத்" நீங்கள் மதினா வட்டாரத்தை பார்த்துக்கொள்ளுங்கள், "இதோ பாரப்பா சலீம், நீ மூன்றாவது  வட்டார குர்‍ஆனை  கற்றுக்கொள். என்றுச் சொல்லி முஹம்மது கூறியுள்ளாரா? ஏழு நபர்களை நியமித்து இந்த வேலையை ஒப்புக்கொடுத்தாரா?

நான்கு பேர்களிடம் குர்‍ஆனை கற்றுக்கொள்ளுங்கள் என்று முஹம்மது கூறியுள்ளாரே தவிர, அந்த நான்கு பேரும் ஒவ்வொரு வட்டார குர்‍ஆனை மனனம் செய்தவர்கள் என்று முஹம்மது கூறவில்லை.

சிக்கல் 2: வட்டார மொழி வழக்க குர்‍ஆன் - அல்லாஹ்விற்கு அவதுறு அல்லவா?

கீழ்கண்ட வட்டார மொழி வழக்கத்தில் குர்‍ஆனின் வசனங்கள் இருந்தால், இது அல்லாஹ்வின் மேன்மையை உயர்த்துமா? அல்லது அவருக்கு அவதூறாக இருக்குமா? நீங்களே சிந்தியுங்கள்.

மதுரை: எல அவிங்க எங்கிட்டு போனாய்ங்க?

திருநெல்வேலி: எல அவுக எங்க போனாக?

கன்னியாகுமரி: மக்கா அவாள் எங்கடே?

சென்னை: ஏய் அவனுவ எங்க போனானுவ?

கீழ்கண்ட ஒரு வசனத்தை, மேற்கண்ட நான்கு ஊர்களின் வட்டாரத்தின் படி எழுதினால் எப்படி இருக்கும்?  இது அல்லாஹ்விற்கு அவதூறாக இருக்குமல்லவா?

குர்‍ஆன் 81:26 எனவே, (நேர்வழியை விட்டும்) நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்?

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வட்டார வழக்கு இருந்தாலும், எழுதும் போது தூயத்தமிழில் எழுதவேண்டும். இதே போன்று அரபி மொழியில் பல வட்டார வழக்கு இருந்தாலும், எழுதும் போது, அதுவும் வேதம் என்ற ஸ்தானத்தில் இருக்கின்ற புத்தகத்தை எழுதும் போது, யாராவது வட்டார மொழியில் எழுதுவார்களா? எழுத்து வழக்கில் தானே எழுதுவார்கள். இது ஏன் நம் முஸ்லிம்களுக்கு புரியவில்லை?

சிக்கல் 3: இவ்வளவு பெரிய விவரம், கலிஃபா உஸ்மானுக்கு தெரியாமல் போனது எப்படி? அவைகளை எப்படி அவர் எரிப்பார்?

முஹம்மது உயிரோடு இருந்த சமயத்தில், அவர் அல்லாஹ்விடம் வேண்டி, ஏழு வகையான மொழி வழக்க குர்‍ஆன்களை பெற்று, அவைகளை மக்களுக்கு போதித்த விவரம், அவரது நெருங்கிய உள்வட்ட தோழரும், மருமகனுமான உஸ்மான் அவர்களுக்கும், அலி அவர்களுக்கும், மிதமிருந்த சஹாபாக்களுக்கும் எப்படி தெரியாமல் போனது?

குறைஷி வட்டார குர்‍ஆனை மட்டுமே வைத்துக்கொண்டு, மீதமுள்ள 6 வட்டார மொழி வழக்க குர்‍ஆன்களை எப்படி உஸ்மான் எரிப்பார்?

முஹம்மது வேண்டிக்கொண்டது வீணாக போய்விட்டதல்லவா? அல்லாஹ் ஜிப்ரீல் தூதன் மூலமாக  மாங்கு மாங்கு என்று இறக்கிய வசனங்களும் வீணாக எரிந்துவிட்டன அல்லவா?

குர்‍ஆன் விஷயத்தில் ஏதோ தில்லுமுல்லு நடந்துள்ளது. குர்‍ஆன்களை எரிக்கின்ற மிகப்பெரிய காரியத்தை உஸ்மான் செய்தார் என்றுச் சொன்னால், ஏதோ ஒரு சிக்கல் இருந்துள்ளது, அல்லது முஹம்மதுவிற்கு ஏழு வட்டார மொழி வழக்க குர்‍ஆன்கள் இறக்கப்பட்டதென்றுச் சொல்கின்ற ஹதீஸ்கள் முஹம்மது மீது இட்டுக்கட்டப்பட்ட‌ பொய்யாகவே இருக்கவேண்டும்.

சிக்கல் 4: வட்டார மொழி வழக்க குர்‍ஆன்  - ஒரு பெரிய ஏமாற்றுவேலையா?

இந்த கட்டுரையில் நாம் ஆய்வு செய்தவைகளை விருப்பு வெறுப்பு இன்றி ஆராயும் போது, "ஏழு குர்‍ஆன்கள்" என்ற வாதமே ஒரு ஏமாற்றுவேலை என்பதை அறியமுடியும்.

கீழ்கண்டவாறு நடந்திருக்க வாய்ப்பு உள்ளது:

1) வசனங்களை எழுதி வைத்துக்கொள்ளாமல், மனப்பாடம் செய்து அதனை பல ஆண்டுகள் ஞாபகத்தில் வைத்திருப்பதில் முஹம்மதுவிற்கும் மற்றவர்களுக்கும் பிரச்சனை இருந்துள்ளது.

2) ஒரு முறை சொன்ன வசனத்தை, பல நாட்களுக்கு மறுபடியும் திருப்பிச் சொல்லும் போது, முஹம்மது மாற்றிச் சொல்லியுள்ளார். மக்களும் மாற்றிச் சொல்லியுள்ளார்கள். இந்த பிரச்சனை முஹம்மதுவிடம் வரும் போது, இரண்டும் சரி தான் என்று அவர் கூறியுள்ளார். தம்முடைய பலவீனத்தை மறைப்பதற்காக முஹம்மதுவின் சமாளிஃபிகேஷன் தான் இந்த ஏழு வகையான குர்‍ஆன்கள்.

3) முஹம்மது மரித்த பிறகு, இஸ்லாம் விஸ்தரித்த போது, குர்‍ஆன் சிரியா, ஈராக், ஈரான், எகிப்து என்று பல நாடுகளுக்குச் சென்ற போது, மனப்பாடம் மீதே நம்பிக்கை வைத்த முஸ்லிம்கள், ஒருவர் மாறி ஒருவராக குர்‍ஆனை கற்றுக்கொடுத்துள்ளார்கள்.

4) முஹம்மதுவிற்கு பிறகு 15 ஆண்டுகளில், ஏழு வட்டார வழக்கில் அல்ல, ஒவ்வொரு பிராந்தியத்திற்கும், நாட்டிற்கும் என்று பல வகைகளில் குர்‍ஆனின் வசனங்கள் மாற்றி மாற்றி ஓதப்பட்டுள்ளது. இது தான், உஸ்மான் எல்லாவற்றையும் எரித்து விட்டு, மக்காவின் குறைஷிகளில் அரபி வட்டார வழக்கில் இருக்கவேண்டும் என்று கட்டளையிட்டார், மற்ற குர்‍ஆன்களை எரித்தார்.

5) முஹம்மதுவிற்கு பிறகு 200 ஆண்டுகள் கழித்து, ஹதீஸ்கள் எழுத்து வடிவில் கொண்டு வரப்பட்டபோது, இந்த சிக்கல்களைக் கவனித்த அன்றைய முஸ்லிம்கள், முஹம்மது மீது பல ஹதீஸ்களை இட்டுக்கட்டிவிட்டு, இஸ்லாமுக்கு நல்லப்பெயர் கொண்டுவர முயன்றுள்ளனர். பொய்கள் எத்தனை நாட்கள் நிலைநிற்கும்? ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரத்தானே வேண்டும்.

வட்டார மொழி வழக்க குர்‍ஆன்   - தீர்வு உண்டா?

இந்த கட்டுரையை படித்த முஸ்லிம் வாசகர்கள் தான் தீர்வு பற்றி சிந்திக்கவேண்டும். ஏனென்றால், இங்கு எழுப்பப்பட்ட‌ குர்‍ஆன் மீதான‌ கேள்விகளுக்கு பதில்களை அவர்கள் தான் தேடிகண்டுபிடிக்க வேண்டும்.

முடிவுரை:

இதுவரை குர்‍ஆனின் ஏழு வட்டார மொழி வழக்க குர்‍ஆன் பற்றிய ஹதீஸ்களை ஆய்வு செய்தோம். இதனை படிக்கும் யாருக்காவது, இக்கட்டுரையில் சொல்லப்பட்ட விவரங்கள் பற்றி கேள்விகள் எழுந்தால் என் பிளாக்கரில் (http://isakoran.blogspot.com/) பின்னூட்டம் இடவும், பதில் சொல்ல நான் தயாராக இருக்கிறேன்.

அடிக்குறிப்புக்கள்:

  1. குர்‍ஆனைப் போன்று ஏன் அல்லாஹ் முந்தைய வேதங்களை ஏழு வட்டாரமொழிகளில் (கிராத்துக்களில்) இறக்கவில்லை?
  2. முஹம்மது அல்லாஹ்விடமிருந்து பெற்ற 7 வட்டார மொழி குர்‍ஆன்களை ஏன் கலிஃபா உஸ்மான் எரித்தார்கள்?

தேதி: 21 Oct 2020


இதர குர்-ஆன் ஆய்வுக்கட்டுரைகள்

குர்-ஆன் பக்கம்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/arabic_quran/qiraat7_feasibility.html


திங்கள், 19 அக்டோபர், 2020

முஹம்மது அல்லாஹ்விடமிருந்து பெற்ற 7 வட்டார மொழி குர்‍ஆன்களை ஏன் கலிஃபா உஸ்மான் எரித்தார்கள்?

உலகம் முழுவதும் ஒரே குர்‍ஆனைத் தான் நாங்கள் பயன்படுத்துகிறோம் என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள். ஆனால், முஹம்மது 7 குர்‍ஆன்களை, அல்லாஹ்விடமிருந்து பெற்றதாக இஸ்லாம் கூறுகிறது.

புகாரி எண் 3129:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரேயொரு (வட்டார) மொழி வழக்குப்படி ஜிப்ரீல் (திருக்குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றுத் தந்தார். ஆனால், நான் அதை இன்னும் பல (வட்டார) மொழி வழக்குகளின் படி எனக்கு ஓதக் கற்றுத் தருமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். (நான் கேட்க, கேட்க அதிகப்படுத்தப்பட்டுக் கொண்டே வந்து,) இறுதியில் ஏழு (வட்டார) மொழி வழக்குகள் அளவிற்கு வந்து நின்றது. என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

இதே விவரத்தை இன்னொரு ஹதீஸில் மேலதிக  விவரங்களோடு காணலாம், அதன் சுருக்கத்தை இங்கு தருகிறேன்.

முஸ்லிம் எண்: 1491

உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

. . . அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் "உபை, "குர்ஆனை ஓர் ஓதல் முறைப்படி ஓதுவீராக" என எனக்கு (இறைவனிடமிருந்து) செய்தியறிவிக்கப்பட்டது. உடனே நான் என் சமுதாயத்தாருக்கு இன்னும் சுலபமாக்கும்படி (இறைவனிடம்) கோரினேன். அப்போது "குர்ஆனை இரண்டு ஓதல் முறைப்படி ஓதுவீராக!" என எனக்கு இரண்டாவது முறையாக இறைவன் அறிவித்தான். உடனே நான் இன்னும் என் சமுதாயத்தாருக்கு சுலபமாக்கும்படி கோரினேன். மூன்றாவது முறையில் குர்ஆனை ஏழு ஓதல் முறைகளின் படி ஓதும்படி எனக்கு இறைவன் அறிவித்தான். . . .

மேற்கண்ட ஹதீஸில் சொல்லப்பட்ட நிகழ்ச்சி 'முஹம்மதுவிற்கும் அல்லாஹ்விற்கும்' இடையே நடைப்பெற்ற ஒன்றாகும். இங்கு முஹம்மது அல்லாஹ்வோடு நேரடியாக பேசவில்லை, ஆனால், ஜிப்ரீல்  மூலமாக  பேசினார் என்பதை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும். 

அல்லாஹ்: முஹம்மதுவே, "உபை பின் கஅப்" எப்படி குர்‍ஆனை ஓதுகின்றாரோ, அதன் படி குர்‍ஆனை ஓதுவீராக, மற்றவர்களுக்கும் கற்றுத்தருவீராக.

முஹம்மது: யா.. அல்லாஹ்! உபையின் குர்‍ஆன் ஓதுதல், முஸ்லிம்களுக்கு கடினமாக உள்ளது, இன்னொரு உச்சரிப்பில் அதாவது வட்டார மொழியில் குர்‍ஆனை இறக்கும்படி வேண்டுகிறேன்.

அல்லாஹ்: சரி ஆகட்டும், இதோ ஜிப்ரீலிடம் இரண்டாவது வட்டார மொழி வழக்கில் குர்‍ஆனை கொடுத்து அனுப்புகிறேன், அவரிடம் அதன் ஓதுதலை கற்றுக்கொள்ளுங்கள்.

முஹம்மது: யா.. அல்லாஹ்! இன்னொரு வேண்டுகோள், இரண்டு வட்டார வழக்கிலும் ஓதுவது உன் அடியார்களுக்கு கடினமாக இருக்கும். எனவே, இன்னொரு வட்டார மொழி வழக்கிலும், குர்‍ஆனை இறக்கவேண்டுமென்று மிகவும் தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

அல்லாஹ்: ம்ம்ம்... சரி, நான் மொத்தம் 7 வட்டார மொழி வழக்கில்  அரபியில் ஓதுவதற்கு பயன்படும்படி குர்‍ஆனை இறக்குகிறேன். இப்போது மகிழ்ச்சி தானே!

முஹம்மது: யா.. அல்லாஹ்! மிக்க மகிழ்ச்சி, உன்னை போல வாரிவழங்குபவர்கள் யார் இருக்கிறார்கள். அளவில்லாமல் வழங்குபவர்களில் நீயே சிறந்தவன்.

ஆக, அல்லாஹ்வும் இஸ்லாமின் இறைத்தூதரும் சேர்ந்து மக்களுக்கு  சுலபமாக புரியவேண்டுமென்பதற்காக ஏழு வகையில் குர்‍ஆனை ஓதும் படி (வட்டார வழக்கில்) ஏற்பாடு செய்திருந்தார்கள்.

முஹம்மது அல்லாஹ்விடமிருந்து பெற்ற 7 வட்டார மொழி குர்‍ஆன்களை ஏன் கலிஃபா உஸ்மான் எரித்தார்கள்?

முஹம்மது கி.பி. 632ல் மரித்தார், அதன் பிறகு அபூ பக்கர் அவர்கள் இரண்டாண்டுகள் இஸ்லாமிய ஆட்சி தலைவராக (கலிஃபாவாக‌) ஆட்சி செய்தார், அதன் பிறகு, உமர் அவர்கள் அடுத்த 10 ஆண்டுகள் கலிஃபாவாக ஆட்சி செய்தார்கள். 

மூன்றாவதாக, உஸ்மான் அவர்கள் கலிஃபாவாக ஆட்சிக்கு வந்தார். இவரது  ஆட்சி காலத்தில், அனைத்து குர்‍ஆன்களையும் எரித்துவிட்டு, ஒரே வகையான குர்‍ஆனை இவர் உருவாக்கினார். அதாவது குறைஷி மக்கள் அரபி வட்டார மொழி வழக்கில் உள்ள குர்‍ஆனை இவர் 'இஸ்லாமிய அதிகார பூர்வமான குர்‍ஆனாக" அறிவித்தார்.  மற்ற ஆறு வட்டார மொழி வழக்கில் உள்ள குர்‍ஆன்களை எரித்துவிடும்படி கட்டளையிட்டார். பல சஹாபாக்கள் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இவர் ஆட்சிப்  பொறுப்பில் இருந்தபடியால், தம் அதிகாரத்தை பயன்படுத்தி, மற்ற குர்‍ஆன் பிரதிகளை எரித்துவிட்டார். 

உஸ்மான் அவர்கள் தொகுத்த இந்த குர்‍ஆன் மற்ற இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாடுகளுக்கு அனுப்பி, இதைத் தான் மக்கள் இனி பயன்படுத்தவேண்டும், மற்ற குர்‍ஆன்களை எரித்துவிடுங்கள் என்று கட்டளையிட்டார்.

கேள்விகள்:

1) முஹம்மது அவர்கள் அல்லாஹ்விடமிருந்து பெற்ற ஏழு வட்டார மொழி குர்‍ஆன்கள் பற்றி உஸ்மான் அவர்களுக்கும் மற்ற சஹாபாக்களுக்கும் தெரியாதா?

2) ஏன் உஸ்மான் அவர்கள் மற்ற 6 வட்டார வழக்க குர்‍ஆன்களை எரித்தார்? இதற்கு இஸ்லாம் பதில் சொல்லுமா?

3) முஹம்மது உயிரோடு இருந்த போது, இந்த காரியத்தை முஹம்மது செய்திருந்தால், அவர் அல்லாஹ்விடமிருந்து வஹியைப் பெற்று செய்திருப்பார்! ஆனால், உஸ்மான் அவர்களுக்கு வஹி கொடுக்கப்படுவதில்லை என்பது தானே உண்மை? இதனை இவர் எப்படி செய்தார்?

4) ஏழு வட்டார மொழி வழக்க குர்‍ஆன், முஹம்மது மரித்த பிறகு இன்னும் பல வட்டார மொழி வழக்கில் ஓத முஸ்லிம்கள் ஆரம்பித்தார்கள், எனவே தான் உஸ்மான் இதனைச் செய்தார் என்று பதில் சொல்வோமானால், முஹம்மதுவிற்கு முதலில் இறக்கப்பட்ட ஏழு வட்டார மொழி வழக்க குர்‍ஆன்களை எழுத்துவடியில் மாற்றியிருந்தால், இந்த பிரச்சனை வந்திருக்குமா?

5) அல்லாஹ்வின் வார்த்தைகளை ஓசையில் பாதுகாத்தால், ஆது ஓசையில்லாமலேயே காற்றில் கலந்து கறைபட்டுவிடும் என்பதை ஏன் அல்லாஹ்வோ முஹம்மதுவோ அறியவில்லை?

6) முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு 15 ஆண்டுகள் கழித்துத் தான், இந்த ஞானம் இஸ்லாமிய சமுதாயத்திற்கு கிடைத்துள்ளது, என்பதை அறியும் போது, 'அல்லாஹ்வின் சர்வஞானம் மீது சந்தேகம் வருகிறதல்லவா'?

7) முதலில் அல்லாஹ் கொடுத்த ஒரு குர்‍ஆன் சரியானதா? அல்லது முஹம்மது வருந்தி பெற்றுக்கொண்ட ஏழு குர்‍ஆன்கள் சரியானவையா? அல்லது உஸ்மான் அவர்கள் தொகுத்த ஒரு குர்‍ஆன் சரியானதா?

8) பக்தியுள்ள முஸ்லில்கள் கண்டுபிடிக்கவேண்டிய ஒரு விஷயம் இன்னும் உள்ளது, அதாவது உஸ்மான்  தொகுத்த குர்‍ஆன், அல்லாஹ் முதலில் கொடுத்த குர்‍ஆனுக்கு சமமாக‌, ஒரே மாதிரியாக இருந்திருக்குமா? என்று கண்டுபிடிப்பது எப்படி? உஸ்மான் மற்ற குர்‍ஆன்கள் அனைத்தையும் எரிக்காமல் இருந்திருந்தால், இதனை இன்று நாம் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், அதற்கும் வாய்ப்பு இல்லை.

கட்டெறும்பு வளர்ந்து கழுதையானது எப்படி?

"கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல" என்ற பழமொழி தமிழில் உண்டு. ஆனால், இஸ்லாமில் பார்த்தால், "கட்டெறும்பு வளர்ந்து கழுதையானது" என்ற ஒரு புது பழமொழியைச் சொல்லலாம் போல் தோன்றுகிறது.

குர்‍ஆனின் பரிணாம வளர்ச்சியைத் தான் நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

  • ஒரு வட்டார குர்‍ஆன் ஏழு வட்டார குர்‍ஆன்களாக மாறியது
  • ஏழு வட்டார குர்‍ஆன்கள் மறுபடியும் ஒரு வட்டார குர்‍ஆனாக மாறியது
  • ஆனால், இந்த ஒரு வட்டார குர்‍ஆன் 20க்கும் அதிகமான குர்‍ஆன்களாக மாறியுள்ளது.

இன்று நாம் அரபி மூல மொழியில் உள்ள 20க்கும் அதிகமான குர்‍ஆன்களை வாங்கி படிக்கலாம். இதைப் பற்றி கீழ்கண்ட கட்டுரைகளில் படிக்கலாம்.

இதுவரை பார்த்த விவரங்களை படமாக கீழே கொடுத்துள்ளேன். 

இங்கு யார் சரி? யார் தவறு? 

  • அல்லஹ்வா (ஒரு குர்‍ஆன்)? 
  • முஹம்மதுவா (ஏழு குர்‍ஆன்கள்)? 
  • உஸ்மான் அவர்களா (ஒரு குர்‍ஆன்)?
  • இஸ்லாமா? (20+ குர்‍ஆன்கள்)?

 தேதி: 19 Oct 2020


இதர குர்-ஆன் ஆய்வுக்கட்டுரைகள்

குர்-ஆன் பக்கம்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/arabic_quran/why_usman_burnt_7_qiraats.html


ஞாயிறு, 18 அக்டோபர், 2020

குர்‍ஆனைப் போன்று ஏன் அல்லாஹ் முந்தைய வேதங்களை ஏழு வட்டாரமொழிகளில் (கிராத்துக்களில்) இறக்கவில்லை?

குர்‍ஆன் ஏழு வட்டார மொழிகளில் முஹம்மதுவிற்கு இறக்கப்பட்டதென்று இஸ்லாம் சொல்கிறது.

இதைப் பற்றி சன்னி முஸ்லிம் ஹதீஸ் தொகுப்புக்களில் அதிகார பூர்வமானதாக இருக்கும், புகாரி மற்றும் முஸ்லிம் ஹதீஸ்களிலிருந்து இரண்டு சான்றுகளைக் காண்போம்.

புகாரி எண் 3129:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரேயொரு (வட்டார) மொழி வழக்குப்படி ஜிப்ரீல் (திருக்குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றுத் தந்தார். ஆனால், நான் அதை இன்னும் பல (வட்டார) மொழி வழக்குகளின் படி எனக்கு ஓதக் கற்றுத் தருமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். (நான் கேட்க, கேட்க அதிகப்படுத்தப்பட்டுக் கொண்டே வந்து,) இறுதியில் ஏழு (வட்டார) மொழி வழக்குகள் அளவிற்கு வந்து நின்றது. என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

முஸ்லிம் எண்: 1491

உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நான் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு மனிதர் (பள்ளிவாசலுக்குள்) வந்து தொழலானார்; (தொழுகையில் குர்ஆன் வசனங்களை) ஒரு விதமாக ஓதினார். அதை நான் அறிந்திருக்கவில்லை. பிறகு மற்றொருவர் வந்து (அதே வசனங்களை) முதலாமவர் ஓதியதற்கு மாற்றமாக ஓதித் தொழலானார். தொழுகை முடிந்ததும் நாங்கள் அனைவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றோம். நான் "இவர் குர்ஆனை நான் அறிந்திராத (ஓதல்) முறையில் ஓதினார். பின்னர் மற்றவர் வந்து முதலாமவர் ஓதியதற்கு மாறாக (அதையே) வேறு முறையில் ஓதினார்" என்றேன். 

நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் ஓதிக் காட்டும்படி பணித்தார்கள். அவ்விருவரும் ஓதினர். நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரும் சரியாகவே ஓதினர் எனக் கூறினார்கள். (இதைக் கேட்டவுடன்) என் உள்ளத்தில் நபியவர்கள் பொய்யுரைக்கிறார்கள் என்ற எண்ணம் விழுந்தது. அறியாமைக் காலத்தில்கூட இத்தகைய எண்ணம் எனக்கு ஏற்பட்டதில்லை. என்னை ஆட்கொண்டிருந்த (அந்த எண்ணத்)தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டபோது என் நெஞ்சில் ஓர் அடி அடித்தார்கள். (அடி விழுந்ததும்) எனக்கு வியர்த்துக் கொட்டியது. அச்சத்தால் எனக்கு அல்லாஹ்வே காட்சியளிப்பதைப் போன்றிருந்தது. 

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் "உபை, "குர்ஆனை ஓர் ஓதல் முறைப்படி ஓதுவீராக" என எனக்கு (இறைவனிடமிருந்து) செய்தியறிவிக்கப்பட்டது. உடனே நான் என் சமுதாயத்தாருக்கு இன்னும் சுலபமாக்கும்படி (இறைவனிடம்) கோரினேன். அப்போது "குர்ஆனை இரண்டு ஓதல் முறைப்படி ஓதுவீராக!" என எனக்கு இரண்டாவது முறையாக இறைவன் அறிவித்தான். உடனே நான் இன்னும் என் சமுதாயத்தாருக்கு சுலபமாக்கும்படி கோரினேன். மூன்றாவது முறையில் குர்ஆனை ஏழு ஓதல் முறைகளின் படி ஓதும்படி எனக்கு இறைவன் அறிவித்தான். . . .

மேலும் பார்க்க: புகாரி எண்கள்:  4991, 4992, 2419 & முஸ்லிம் எண்:1490

அரபி முஸ்லிம்களுக்காக ஏழு வட்டார மொழி வகையில் குர்‍ஆனை வருந்தி கேட்டு வாங்கிய முஹம்மது:

முஹம்மதுவிற்கு ஜிப்ரீல் தூதன் குர்‍ஆனின் வசனங்களை ஓதிக்காட்டினார்.  ஆனால், அல்லாஹ் இறக்கிய‌ வசனங்களை ஓதுவது முஸ்லிம்களுக்கு  கடினமாக இருந்துள்ளது. எனவே முஹம்மது ஜிப்ரீல் தூதனிடம் வருந்தி கேட்டுக்கொண்டு, ஏழு வகையான வட்டார மொழி வழக்கத்தின் படி குர்‍ஆனை இறக்கும்படி கேட்டுக் கொண்டாராம். இதனால், அல்லாஹ்வும் அதன்படி செய்தானாம். இதன்படி மூல அரபிக் குர்‍ஆன்கள் ஏழு வகையாக இறக்கப்பட்டுள்ளது என்று முஹம்மது ஒப்புக்கொண்டுள்ளார். நாம் எழுப்பவிரும்பும் கேள்வி இதுவல்ல.

நம்முடைய கேள்வி இது தான்:

குர்‍ஆனைப் போன்று ஏன் அல்லாஹ் முந்தைய வேதங்களை ஏழு வட்டார மொழிகளில் கிராத்துக்களில் இறக்கவில்லை?

குர்‍ஆனுக்கு முன்பு, அல்லாஹ் பல வேதங்களை இறக்கியுள்ளானாம்.  பைபிளையும் இறக்கியது அல்லாஹ் என்று இஸ்லாம் சொல்கிறது (ஆனால், பைபிள் இதனை மறுக்கிறது).  

ஒரு பேச்சுக்காக, பைபிளின் நபிகளையும் அல்லாஹ் தான் அனுப்பினான் என்று கருதிக்கொள்வோம், அடுத்து என்ன நடந்தது என்பதை கவனிப்போம். முஹம்மதுவிற்கு முன்பு பல நபிகளை அல்லாஹ் யூதர்களிடமும் இதர மக்களிடமும் அனுப்பியுள்ளான். அவர்களும் அல்லாஹ்விடமிருந்து வேதத்தைப் பெற்று மக்களுக்கு கொடுத்துள்ளார்கள். முக்கியமாக, பைபிளில் 66 புத்தகங்கள் உள்ளன, அவைகளை 40க்கும் அதிகமான நபிமார்கள், சீடர்கள், பரிசுத்தவான்கள் அல்லாஹ்விடமிருந்து பெற்று கொடுத்துள்ளார்கள்.

பழைய ஏற்பாட்டில் 39 புத்தகங்கள் உள்ளன, புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்கள் உள்ளன. 

இப்றாஹீம், மூஸா, தாவீது, சாலொமோன், ஏசாயா, எரேமியா, போன்ற தீர்க்கதரிகள் ஒரு போதும் தங்களுக்கு இறக்கப்பட்ட வசனங்கள் மக்களால் ஓதமுடியவில்லை எனவே மாற்றிக் கொடுங்கள், அல்லது வேறு பல வட்டாரமொழி வழக்கத்தில் இறக்குங்கள் என்று ஒரு போதும் கேட்டதில்லை. 

பைபிளில் மொத்தம் 66 புத்தகங்கள், 31100க்கும் அதிகமான வசனங்கள், இப்படி இருந்தும் எந்த ஒரு தீர்க்கதரிசியும், "நீர் இறக்கிய வசனங்களை என் மக்கள் ஓதுவதற்கு கடினமாக உள்ளது, எனவே அவர்களுக்கு ஓதுவதற்கு சுலபமாக இருக்கும்வண்ணம், வேறு வகையில் இறக்குங்கள்" என்று இறைவனிடம் கேட்டதில்லை.

வசனங்களை ஓதுவது முக்கியமா? அவைகளுக்கு கீழ்படிவது முக்கியமா?

பைபிள் மிகவும் தெளிவாகச் சொல்கிறது, அதாவது வேத வசனங்களை வாசிக்கிறது  மட்டுமல்ல, கேட்பது மட்டுமல்ல, அவைகளுக்கு கீழ்படிகிறவர்களே பாக்கியவான்கள்.

வெளி 1:3. இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.

ஆனால், இஸ்லாமில் மட்டும் என்னவோ, ஓதுவதற்கு மட்டுமே அதிகமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும், அரபியில் படித்தால் தான் அதிக நன்மையை அல்லாஹ் தருவான் என்ற தவறான கோட்பாட்டை இஸ்லாம் முன்மொழிகின்றது.  எனவே தான், கீழ்படிவதற்கு பதிலாக ஓதுவதற்கு முக்கியத்தும் கொடுத்து, மக்களுக்கு சுலபமாக ஒதுவதற்கு வழி உண்டாகும் படி முஹம்மது அல்லாஹ்விடம் ஏழு வட்டாரமுறைகளில் கேட்டார். 

ஏன் முஹம்மது இப்படி நடந்துக்கொண்டார்? மற்ற முந்தைய பைபிளின் நபிமார்கள் இப்படி செய்யவில்லை ஏன்? என்று நாம் சிந்திக்கும் போது கீழ்கண்ட தெரிவுகள் மட்டும் தான் நமக்கு கிடைக்கின்றது.

1) பைபிளின் முந்தைய நபிமார்கள் தெளிவாக முதல் முறையிலேயே வசனங்களை சொன்னதாலேயா? முஹம்மதுவினால் இப்படி செய்யமுடியவில்லை என்பதாலேயா? அல்லது குர்‍ஆனின் வசன‌ அமைப்பு, அரபியை தாய்மொழியாக கொண்ட மக்களால் சுலபமாக ஓதும்படி இல்லாமல் இருந்ததாலேயா?

அல்லது

2) முந்தைய நபிமார்களின் மக்கள், முக்கியமாக யூதர்கள், முதல் முறையிலேயே வேத வசனங்களை தெளிவாக புரிந்துக்கொள்ளக்கூடிய அளவு அறிவு படைத்தவர்களாக இருந்தார்களா? அன்றைய அரபி பேசும் முஸ்லிம்க‌ள், அறிவில் குறைவுள்ளவர்களாக இருந்ததாலேயா? முஹம்மது அல்லாஹ்விடம் 7 வகையான மொழி வழக்கத்தில் கேட்டார்?

அல்லது

3) ஓதுவதைக் காட்டிலும் படித்து புரிந்துக்கொண்டு கீழ்படிவது தான் முக்கியம் என்று முந்தைய நபிமார்களின் இறைவன் (யெகோவா தேவன்) சொன்னதால், ஏழு வட்டார மொழிகளில் தங்களுக்கு வேத வசனங்கள் தேவையில்லை என்று பைபிளின் நபிமார்கள் கருதியதால் தானா?

அல்லது

4) குர்‍ஆனின் மூலமொழியாகிய‌ அரபியைப்போன்று அல்லாமல், பைபிளின் மூல மொழிகளாகிய எபிரேயம் கிரேக்க மொழிகளில் வேத வசனங்கள் ஒரே முறையில் தெளிவாக கருத்துக்களை சொன்னதால், ஏழுமுறை வேத வசனங்களை இறக்கவேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டதா?

அல்லது 

5) ஒலியின் வடிவில் தன் வேதத்தை மக்களின் மனதில் பாதுகாக்கவேண்டும் என்ற அல்லாஹ்வின் தவறான முடிவினால் உண்டான விளைவினால் தான், முஹம்மது ஏழு முறை கேட்டாரா?

அல்லது 

6) பைபிளின் தேவன் தன் வேதத்தை எழுத்துவடிவில் பாதுகாக்கவேண்டும் என்று எடுத்த ஞானமான முடிவினால், முந்தைய நபிமார்களுக்கு, மறுபடியும் இறைவனிடம் சென்று "ஒன்ஸ் மோர்(Once More)" என்று கேட்கவேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டதா?

அல்லது

7) மேற்கண்ட ஹதீஸின் படி முஹம்மதுவோடு இருந்த சஹாபா கருதியது போன்று முஹம்மது பொய் சொன்னாரா?

மக்கா மற்றும் மதினா என்ற இரண்டு ஊர்களில் இருந்த மக்கள் சுலபமாக குர்‍ஆன் ஓதவேண்டும் என்று விரும்பிய முஹம்மதுவிற்கு, அவருக்கு பிறகு அரபி தெரியாத கோடிக்கணக்கான மக்கள் புரியாமலேயே குர்‍ஆனை அரபியில் படிக்கவேண்டுமே, அவர்கள் புரியாமல் எப்படி கீழ்படிவார்கள் என்று சிந்திக்க தெரியாமல் போனதென்ன? முஹம்மதுவை விட்டு விடுங்கள் அவர் ஒரு மனிதர், ஆனால் அல்லாஹ்விற்கு எங்கே போனது ஞானம்? 

அரபி பேசும் முஸ்லிம்களுக்காக ஏழு வகையான வட்டார மொழியில் வசனங்களை இறக்கிய அல்லாஹ், அன்றிலிருந்து இன்றுவரை இதர மொழிகளை பேசும் கோடிக்கணக்கான உலக மக்களின் 'அரபியை புரிந்துக்கொள்ளக்கூடாத த‌ன்மையை' ஏன் புரிந்துக்கொள்ள முடியவில்லை? சிறிது சிந்திப்போமா?

முடிவுரை:

இதுவரை பார்த்த விவரங்களின் படி நமக்கு புரிவது என்னவென்றால், எழுத்துவடிவில் அல்லாமல், வெறும் ஓசை வடிவில் மனப்பாடம் செய்யும் போது, உண்டாகும் பிரச்சனையை சமாளிக்க 'முஹம்மது ஆடிய நாடகம் தான், ஏழு வகையான குர்‍ஆனை அல்லாஹ் இறக்கிய நிகழ்ச்சி'.

ஒரு சாதாரண மனிதராக இருந்த முஹம்மது, எத்தனை வசனங்களைத் தான் மனப்பாடம் செய்யமுடியும்? அது மட்டுமல்லாமல், சில மாதங்களுக்கு முன்பு அல்லாஹ் இறக்கியதாக தாம் சொன்ன வசனங்களை, மறுபடியும் சிலர் வெவ்வேறு வகையாக ஓதிக்காட்டும் போது, அதனை சரி பார்க்க முடியாமல் தவித்தபோது அவர் சொன்ன பொய் தான் 'ஏழு வகையான குர்‍ஆன் ஓதுதல் முறை', காது உள்ளவன் கேட்கக்கடவன், அறிவு உள்ளவன் சிந்திக்கக்கடவன்.

இஸ்லாமையும் கிறிஸ்தவைத்தையும் ஆய்வு செய்யும் போது, அல்லாஹ்வும் யெகோவா தேவனும் வெவ்வேறானவர்கள் என்பதற்கு 'இவ்விருவர்கள் தங்கள் வார்த்தைகளை எப்படி பாதுகாக்கவேண்டும்' என்று அவர்கள் கருதிய விதம் கூட வித்தியாசமானதே என்பதை அறியமுடியும்.

பைபிளின் தேவன் தன் வேதத்தை எப்படி பாதுகாத்தார்?

பைபிளின் தேவன் எத்தனை முறை தம் வசனங்களை எழுதும்படி (மனப்பாடம் செய்யும்படி அல்ல) கட்டளையிட்டுள்ளார் என்பதை கவனிக்கவும். மனப்பாடம் செய்வதற்கு பைபிள் எதிரியல்ல, ஆனால் வேதம் பாதுகாக்கப்படுவதற்கு மனப்பாடம் சிறந்த வழியல்ல‌ என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

உபாகமம் 31:19

19. இப்பொழுது நீங்கள் இந்தப் பாட்டை எழுதிக்கொண்டு, இதை இஸ்ரவேல் புத்திரருக்குப் படிப்பித்து, இந்தப் பாட்டு எனக்குச் சாட்சியாக இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே இருக்கும்படி இதை அவர்கள் வாயில் வழங்கப்பண்ணுங்கள்.

யாத்திராகமம் 34: 27

27. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த வார்த்தைகளை நீ எழுது; இந்த வார்த்தைகளின்படியே உன்னோடும் இஸ்ரவேலோடும் உடன்படிக்கைபண்ணினேன் என்றார்.

யாத்திராகமம் 17: 14

14. பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதை நினைவுகூரும்பொருட்டு, நீ ஒரு புஸ்தகத்தில் எழுதி, யோசுவாவின் செவி கேட்கும்படி வாசி

யாத்திராகமம் 24:4

4. மோசே கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் எழுதிவைத்து, அதிகாலமே எழுந்து, மலையின் அடியில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரவேலுடைய பன்னிரண்டு கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே பன்னிரண்டு தூண்களை நிறுத்தினான். 7. உடன்படிக்கையின் புஸ்தகத்தை எடுத்து, ஜனங்களின் காதுகேட்க வாசித்தான்; அவர்கள் கர்த்தர் சொன்னபடியெல்லாம் செய்து, கீழ்ப்படிந்து நடப்போம் என்றார்கள்.

யோசுவா 24:26

26. இந்த வார்த்தைகளை யோசுவா தேவனுடைய நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதி, . .

எரேமியா 26:2

2. நீ ஒரு புஸ்தகச்சுருளை எடுத்து, யோசியாவின் நாட்களிலே நான் உன்னுடனே பேசின நாள் முதற்கொண்டு இந்நாள்மட்டும் இஸ்ரவேலைக்குறித்தும், யூதாவைக்குறித்தும், சகல ஜாதிகளைக்குறித்தும் உன்னோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் அதிலே எழுது.

எபிரேய மொழியில் "கதப்" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது, இதன் பொருள் "எழுதுதல், உளியால் கற்களில் எழுதுதல்" என்பதாகும்.  இது 227 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

https://biblehub.com/hebrew/strongs_3789.htm

Strong's Hebrew: 3789. כָּתַב (kathab) — 227 Occurrences

முஹம்மதுவிற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பே யெகொவா தேவன் எழுதுவதற்கு கொடுத்திருக்கின்ற முக்கியத்துவதைப்  பார்த்தால், இவரும் அல்லாஹ்வும் வெவ்வேறானவர்கள் என்பதைத் தான் புரிந்துக் கொள்ள முடிகின்றது.

குர்‍ஆனின் ஏழு வட்டார மொழி வகைகள் பற்றி மேலும் அறிய படிக்கவும்:

சனி, 17 அக்டோபர், 2020

முஸ்லிம்களுக்கு பிடித்த ஆனால் தவறாக புரிந்துக்கொண்ட பைபிள் வசனங்கள்: 1 - எண்ணாகமம் 23:19

நான் முஸ்லிம்களுடன் உரையாடல்களில் அல்லது விவாதங்களில் ஈடுபடும்போது, ஒரு சில பைபிள் வசனங்களை முஸ்லிம்கள் தவறாக புரிந்துக்கொண்டு அவைகளை அடிக்கடி மேற்கோள் காட்டுவதை காணமுடிகின்றது. முஸ்லிம்கள் எந்த நாட்டிலிருந்து பேசினாலும் சரி, இதே தவறை அவர்கள் செய்கிறார்கள்.  அவர்களுக்கு இந்த வசனங்களை தவறாகக் மேற்கோள் காட்டுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. பைபிள் வசனங்களை மேற்கோள் காட்டுவதை தவறு என்று நான் சொல்லவில்லை. ஆனால், எந்த வசனத்தை மேற்கோள் காட்டினாலும் சரி, அதனை நேர்மையாக புரிந்துக்கொண்டு வியாக்கீனம் செய்யவேண்டும். 

உலக முஸ்லிம்களுக்கு மிகவும் பிடித்த முக்கியமான 10 பைபிள் வசனங்களையும், அவைகளின் உண்மை அர்தத்தையும் சுருக்கமாக காண்போம். இவைகளில் முதல் வசனத்தை இந்த கட்டுரையில் காண்போம்.

முஸ்லிம்களுக்கு பிடித்த வசனம் வசனம் 1: எண்ணாகமம் 23:19  . . தேவன் ஒரு மனிதன் அல்ல . . .

பழைய ஏற்பாட்டின் இந்த வசனம் இயேசுவின் தெய்வீகத்தன்மையை மறுக்கிறது என்று முஸ்லிம்கள் தவறாக கருதிக்கொண்டு இருக்கிறார்கள்.

முதலாவது கவனிக்கவேண்டியது என்னவென்றால், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக தங்கள் வாதங்களுக்கு சான்றாக‌  முழு வசனத்தையும் மேற்கோள் காட்டுவதில்லை. இவர்கள் வசனத்தின் ஒரு பகுதியை மட்டுமே மேற்கோள் காட்டுவார்கள். 

இது இஸ்லாமிய விசுவாச அறிக்கையின் (ஷஹதாவின்) ஒரு பகுதியை மேற்கோள் காட்டுவதற்கு சமமாகும். ஷஹதாவிலிருந்து "இறைவன் இல்லை" என்ற ஒரு பகுதியை எடுத்துக் காட்டினால், இதனை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்வார்களா? ஷஹதா இதைத் தான் போதிக்கின்றதா? இல்லையல்லவா?

முழு ஷஹதா என்ன சொல்கிறது: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை,  முஹம்மது அல்லாஹ்வின் இறைத்தூதர்

முஸ்லிம்களின் ஷஹதாவை முழுவதுமாக சொல்லாமல், "இறைவன் இல்லை" என்றுச் சொன்னால், ஷஹதாவின் முழு பொருள் புரியுமா?

அடுத்ததாக, முஸ்லிம்கள் தவறாக மேற்கோள் காட்டும் வசனத்தை முழுவதுமாக பார்ப்போம்.

எண்ணாகமம் 23:19. பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?

இந்த வசனத்தின் உண்மை பொருள் என்ன?  மனிதனைப் போல பொய் சொல்வதற்கு தேவன் மனிதன் இல்லை என்பதைத் தானே இது சொல்கிறது?

மனிதன் வாக்கு கொடுத்தும் வாக்கு தவறுபவன், பொய் சொல்பவன், அவனை நம்பமுடியாது, ஆனால், தேவன் மனிதனைப்போல அல்லாமல், அவர் வாக்கு கொடுத்தால் நிச்சயம் செய்வார் என்பதை மிகவும் அழகாகச் சொல்கிறது இந்த வசனம்.

இதே வசனத்தை பொது மொழியாக்கத்தில் படியுங்கள்:

எண்ணாகமம் 23:19

தேவன் ஒரு மனிதனல்ல; அவர் பொய்ச் சொல்லமாட்டார். அவர் மானிடன் அல்ல. அவரது முடிவு மாறாதது. கர்த்தர் ஒன்றைச் செய்வதாகக் கூறினால் அவர் அதனை நிச்சயம் செய்வார். கர்த்தர் ஒரு வாக்குறுதி தந்தால் அந்த வாக்குறுதியை நிச்சயம் காப்பாற்றுவார்.

இதே விஷயத்தை இன்னொரு வசனத்திலும் காணலாம்:

I சாமுவேல் 15:29. இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதும் இல்லை; தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை; மனம் மாற அவர் மனுஷன் அல்ல என்றான்.

சுருக்கமாகச் சொல்வதென்றால், மனிதனுக்கு இருக்கும் ஒரு குணம் "தேவைப்படும்போது பொய் சொல்வது", இது போன்ற ஒரு குணம் தேவனுக்கு இல்லை என்பது தான்.

முஸ்லிம்களின் தவறான புரிதல்: 

பொய் சொல்வதற்கு தேவன் மனிதனைப் போன்றவர் அல்ல என்று வசனம் சொல்லியிருக்கும்போது, "தேவன் மனிதனாக வரமாட்டார்" என்று முஸ்லிம்கள் பொருள் கூறுகிறார்கள். இது அறியாமையா? அல்லது வேண்டுமென்றே தெரிந்தே செய்யும் வஞ்சகமா? வசனம் சொல்லாத ஒன்றை சொன்னதாக முஸ்லிம்கள் கருதுகிறார்கள், இது தவறு.

அடுத்த கட்டுரையில் முஸ்லிம்கள் தவறாக பொருள் கூறும் இன்னொரு வசனத்தை ஆய்வு செய்வோம்.

ஞாயிறு, 4 அக்டோபர், 2020

கிறிஸ்தவம் மற்ற மதங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? இதன் தனிச்சிறப்பு என்ன?

(How Is Christianity Different From Other Religions?)

கிறிஸ்தவம் மற்ற மதங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?  கிறிஸ்தவம் தனிச்சிறப்பு வாய்ந்தது, அதாவது 'மனிதனுக்கு  இரட்சிப்பைத் தருவது, மனிதனை சொர்க்கத்தில் சேர்ப்பது போன்றவற்றை இறைவன் மீது சுமத்தியுள்ளது கிறிஸ்தவம், மனிதன் மீது அல்ல.  உலகில் உள்ள எல்லா மதங்களும் "பரலோகத்திற்கு வருவதற்கு மனிதன் என்ன என்ன செய்யவேண்டும்?" என்று சொல்லித்தருகிறது, ஆனால், கிறிஸ்தவம் மட்டும் தான் "மனிதனை பரலோகத்திற்கு  அழைத்துச் செல்வதற்கு, இறைவன் என்ன செய்தார்" என்றுச் சொல்கிறது.

உதாரணமாக, பரலோகத்திற்குச் செல்ல:

  1. யூத மதத்தில் நீங்கள் நீதியுள்ளவர்களாக இருக்க வேண்டும், மற்றவர்களிடமும் அன்பாக நடந்துக்கொள்ளவேண்டும், இதர சட்டங்களையும் பின்பற்ற வேண்டும்.
  2. புத்தமதத்தில் "நிர்வானா" என்ற நிலையை அடைய, மனிதன் 'எட்டு கோட்பாடுகளை/கட்டளைகளை பின்பற்றவேண்டும்'. 
  3. இஸ்லாத்தின் படி "சொர்க்கம் செல்லவேண்டுமென்றால், நீங்கள் இஸ்லாமின்  ஐந்து தூண்களை  பின்பற்றவேண்டும், மேலும் பிற நற்செயல்களைச் செய்ய வேண்டும், இதனால் உங்கள் நற்செயல்கள் இறுதித் தீர்ப்பில் உங்கள் கெட்ட செயல்களை விட அதிகமாக இருக்கும் படி பார்த்துக்கொள்ளவேண்டும் (இது சாத்தியமா என்பது வேறு கேள்வி).
  4. இந்து மதத்தில் மோக்ஷத்தை அடைய, மற்றும் இறப்பு, மறுபிறப்பு சுழற்சியில் இருந்து விடுபட, நீங்கள் இந்து மதத்தில் விவரிக்கப்பட்டுள்ள நல்ல செயல்களையும், பூஜைகளையும், இதர நிபந்தனைகளையும் பின்பற்றவேண்டும்.

இதுவரை பார்த்த உலக மதங்களின்படி, பரலோகம் செல்வதற்கான எல்லா கடமைகளையும் பொறுப்புக்களையும் நீங்கள்(மனிதன்) தான் செய்யவேண்டும். ஆனால், கிறிஸ்தவத்தில் மட்டும் தான், மனிதனை சொர்க்கத்தில் சேர்ப்பதற்கான தகுதியை (License - உரிமம்) தேவனே சம்பாதித்து கொடுத்துள்ளார்.  உண்மையில் சொல்லவேண்டுமென்றால், இறைவன் பரிபூரண பரிசுத்தராக இருக்கிறார், உலகில் பிறந்த எந்த ஒரு மனிதனாலும், இறைவன் எதிர்ப்பார்க்கும் அளவிற்கு பரிசுத்தமாக வாழமுடியாது. ஒரு நாள், ஒரு மாதம் ஒரு ஆண்டு அல்லது  சில ஆண்டுகள் வாழலாம், ஆனால் அவனது வாழ்நாள் முழுவதும் இப்படி வாழமுடியாது. நாம் பலவீனமானவர்களாக இருக்கிறோம், குறைவுள்ளவர்களாக இருக்கிறோம், ஒருவேளை நாம் சிறப்பாக நல்லவர்களாக இருக்கவேண்டுமென்று விரும்பி செயல்பட்டாலும், அதனை முழுவதுமாக எப்போதுமே செய்யமுடிவதில்லை. பரலோகம் செல்வதற்கான தகுதியை சுயமாக சம்பாதிக்க நாம் விரும்பினால், அது நம்மால் முடியாத காரியமாகவே இருக்கிறது.

மனிதனால் இது சாத்தியமில்லை என்பதால் தான், கடவுளே நமக்காக பரலோகத்திற்குச் செல்வதற்கான தகுதியை சம்பாதிக்க சுயமாக‌ அவரே வேலையில் இறங்கிவிட்டார். அவர் எதிர்பார்க்கும் அளவிற்கு நாம் பரிபூரண பரிசுத்தமாக வாழமுடியாது  என்பதை அவர் அறிந்திருந்தார். எனவே தாமே களத்தில் இறங்கிவிட்டார். அவர் மனித அவதாரம் எடுத்தார், இயேசு என்ற உருவில் மனிதனாக வந்தார். நாம் வாழமுடியாத பரிசுத்தமான வாழ்க்கையை அவர் வாழ்ந்துக் காட்டினார். இயேசு வாழ்ந்த  பரிசுத்தமும், நீதியும் நம் மீது பொழியப்பட்டது. இதனால் தேவன் எப்போதெல்லாம் நம்மை பார்ப்பாரோ, அப்போதெல்லாம் நம்முடைய சுயவாழ்க்கையின் அலங்கோலங்களை அவர் பார்க்காமல், இயேசுவின் நீதியான பரிசுத்த சாயலையே நம்மில் காண்கிறார். நித்திய ஜீவனுக்கு (மோட்ஷம், சொர்க்கம், பரலோகம்) செல்லுவதற்கான  தகுதியை தேவனே நமக்கு சம்பாதித்து கொடுத்துள்ளார். மனிதன் செய்யவேண்டியதெல்லாம், அவர் மீது விசுவாசம் வைக்கவேண்டும், அவர் கொடுக்கும் இலவசமான இரட்சிப்பை பெற்றுக்கொள்ளவேண்டும்.

இந்த முக்கியமான அடிப்படை விஷயத்தில் தான் கிறிஸ்தவம் மற்ற உலக மதங்களைவிட தனித்துவம் பெற்று விளங்குகிறது. மற்ற உலக மதங்களில் மனிதன் நல்ல செயல்களைச் செய்து, தன் இரட்சிப்பை (மோட்சத்தை, சொர்க்கத்தை) சம்பாதித்துக்கொள்ளவேண்டும். ஆனால், கிறிஸ்தவத்தில் தான் இறைவனே மனிதன் இரட்சிக்க இறங்கிவந்து, அந்த இரட்சிப்பை சம்பாதித்து கொடுத்துவிட்டுச் சென்றார். இதுவே கிறிஸ்தவத்தின் தனிச்சிறப்பு.

நம்மை படைத்த இறைவன் கொடுத்த இந்த இரட்சிப்பு என்ற பரிசை பெற்றுக்கொள்ள நீங்கள் ஆயத்தமா? அல்லது உங்கள் இரட்சிப்புக்காக உலக மதங்கள் சொல்வது போன்று, பாத யாத்திரைகள், பூஜைகள், சட்ட திட்டங்களை பின்பற்ற முயலப்போகிறீர்களா? 

இந்த இரட்சிப்பு உங்களுக்கு வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், இப்போது நீங்கள் எங்கே இருந்தாலும், 'என்னை படைத்த இறைவனே, இயேசு மூலமாக நீங்கள் கொடுத்த இரட்சிப்பை நான் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன்' என்று சொல்லிப்பாருங்கள், அதன் பிறகு ஒரு புதிய ஏற்பாட்டை வாங்கி அல்லது இணையத்தில் படித்துப் பாருங்கள் (http://www.tamil-bible.com/chapters.php?Type=Matthew).

மூலம்:https://www.str.org/w/how-is-christianity-different-from-other-religions-?inheritRedirect=true

தேதி: 4th Oct 2020

சனி, 3 அக்டோபர், 2020

இயேசு “மனுஷகுமாரன்” என்று முஸ்லிம்களிடம் அழுத்தமாகச் சொல்லுங்கள்!

(Tell Muslims Jesus Is the Son of Man)

அண்மையில் ஒரு மசூதிக்குச் சென்றபோது, ஒரு முஸ்லீம் இமாம், "நான் இறைவன் என்று உங்கள் இயேசு பைபிளில் எங்கே கூறுகிறார்?" என்று கேட்டார். இந்த கேள்விக்கு பல சிறந்த வழிகளில் பதில் அளிக்க எனக்குத் தெரியும். ஆனாலும் பின்வரும் வித்தியாசமான அணுகுமுறையில் பதில் சொல்வது, முஸ்லிம்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

இயேசு தம் தெய்வீகத்தன்மைக்கு சான்றாக, தமக்குத் தாமே சூட்டிக்கொண்ட பட்டப்பெயரை நான் இங்கு மேற்கோள்களாக முஸ்லிம்களுக்கு காட்ட விரும்புகிறேன்: அந்த பட்டப்பெயர் "மனுஷ குமாரன்" என்பதாகும். ஆம், பல இடங்களில் இயேசு தம்மை "மனுஷ குமாரன்" என்று அழைத்துகொண்டார்:

பார்க்க: மத்தேயு 12:40, மாற்கு 10:45, லூக்கா 18:31, யோவான் 9:35 இன்னும் பல வசனங்களை குறிப்பிடலாம்.

இயேசு தம்மை "மனுஷ குமாரன்" என்று அழைத்துக்கொண்டது எப்படி அவரது "தெய்வீகத்தன்மைக்கு" சான்றாக இருக்கும் என்று முஸ்லிம்கள் ஆச்சரியப்படலாம்.  என்னைப் பார்த்து, உனக்கு நீயே குழியை வெட்டிக் கொள்கிறாயா? என்று கேட்கலாம். இயேசு தம்மை "மனுஷ குமாரன்" என்று சொல்வதினால், அது அவரின் மனித தன்மையைத் தானே காட்டுகிறது, தெய்வீகத்தன்மையை எப்படி அது வெளிப்படுத்தும் என்ற சந்தேகம் முஸ்லிம்களுக்கு வரும். அந்த சந்தேகத்தைத் தான் இந்த சிறிய கட்டுரையில் தீர்க்கப்போகிறோம்.

முஸ்லிம்களின் மேற்கண்ட கேள்வி எனக்கு புரிகிறது. "மனுஷகுமாரன்" என்றுச் சொல்வது, தெய்வீகத்தன்மையை  வெளிப்படுத்தாமல், அதற்கு பதிலாக, நம்மைப்போல மனித பெற்றோரின் மூலமாக பிறந்தவர் என்பதைத் தான் அது குறிக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். அந்த வகையில், நான் "மனுஷ குமாரன்", நீங்களும் " மனுஷ குமாரன்", மற்றும் இந்த பூமியில் உள்ள அனைவரும் "மனுஷ குமாரன்" தான். இது போல "இயேசுவும் ஒரு மனுஷ குமாரன்" என்றுச் சொல்வது எந்த இறைத்தன்மையையும் அது நிருபிப்பதாக இல்லையே! என்ற சந்தேகம் நியாயமானது தான்.

"மனுஷகுமாரன்" என்ற வார்த்தை "தான் ஒரு மனிதன் என்று சொல்வது போன்று" தோன்றினாலும், அதற்கு ஒரு தெளிவான இரண்டாவது அர்த்தமும் உள்ளது, அதாவது "மனுஷ குமாரன்" என்ற வார்த்தையில் தெய்வீகமும் சேர்ந்துள்ளது. இயேசு தம் முழு தெய்வீக அடையாளத்தை வெளிப்படுத்த ஒரு திட்டத்தை வைத்திருந்தார். தம் தெய்வீகத்தின் வெளிப்பாடாகவும், தமக்கு மிகவும் பிடித்த பட்டப்பெயராகவும் "மனுஷகுமாரன்" என்று தம்மைத் தாமே அழைக்க தொடங்கினார்.

இயேசு தம்மை "மனுஷகுமாரன்" என்று அழைப்பதை ஆய்வு செய்தால், அது பழைய ஏற்பாட்டின் ஒரு முக்கியமான பட்டப்பெயர் என்பதை நாம் கவனிக்கமுடியும். தானியேல் 7:13-14 வசனங்களில் "மனுஷகுமாரன்" என்பவர் உன்னதமானவராக அடையாளப்படுத்தப்படுகிறார். அவர் "பரலோக மேகங்களுடன்" வருகிறார், உலகில் உள்ள அனைத்து இராஜ்ஜியங்களையும், வல்லமைகளையும், இராணுவங்களையும் ஆளும் சக்தி படைத்தவராக இந்த "மனுஷகுமாரன்" வர்ணிக்கப்படுகின்றார். மேலும், அவர் நித்திய நித்தியமாக இருப்பவராக காட்டப்படுகின்றார். உலக மக்கள் அனைவரும் இவரை வணங்குபவர்களாக காட்டப்படுகிறார்கள், இவர்  மனிதரல்ல ஒரு தெய்வீக  புருஷராக இருக்கிறார்.

பழைய ஏற்பாட்டில்  மனுஷகுமாரன்

தானியேல் 7:13-14

13. இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார்.

14. சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும், அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்.

அதனால்தான், இயேசு தம்மை "மனுஷகுமாரன்" என்று அழைத்துக்கொண்ட போது, பழைய ஏற்பாட்டின் மேற்கண்ட‌  வேதவசனங்களை அறிந்திருந்த யூத மத தலைவர்கள் அவரது கூற்றின் தெய்வீகத்தை, அதன் பொருளை சரியாக புரிந்துக்கொண்டார்கள்.

புதிய ஏற்பாட்டில் மனுஷகுமாரன்

மத்தேயு 26: 63. இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான்.

64. அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும் மனுஷகுமாரன் சர்வ வல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

பிரதான ஆசாரியன் இந்த பதிலைக் கேட்டபோது, அவர் தனது ஆடைகளைக் கிழித்து, இயேசு தேவதூஷணம் (தெய்வக்குற்றம்) செய்ததாக அறிவித்தார், இயேசு தம்மை தேவனுக்கு சமமாக ஆக்கிவிட்டார். இதனால், இயேசு பின்னர் சிலுவையில் அறையப்பட்டார். (மேலும் பார்க்க: யோவான் 5:18).

தானியேல் புத்தகத்தின் மேற்கண்ட வசனத்தின் படி 'மனுஷகுமாரனின் சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்", அவர் தான் சர்வவல்லவரான தேவன். இதே போன்று, இயேசு "மனுஷகுமாரன் சர்வ வல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் காண்பீர்கள்" என்றார்.  தானியேல் தீர்க்கதரிசி கண்ட தரிசனத்தில் காணப்பட்ட அந்த மனுஷகுமாரன் நான் தான் என்று இயேசு சொன்னவுடன், பிரதான ஆசாரியருக்கு விஷயம் புரிந்தது, உடனே அவர் மீது தேவதூஷண குற்றம் சாட்டினார்.

எனவே, மனுஷகுமாரன் என்று இன்று நாம் சொல்லும்போது, அது மனிதத்துவத்தை குறிக்கும், ஆனால், முதல் நூற்றாண்டில், யூதர்கள் மத்தியிலே மனுஷகுமாரன் என்றுச் சொன்னால், அது தெய்வத்துவத்தை குறிப்பதாக இருந்தது. இயேசுவை சிலுவையில் அறைய இந்த ஒரு காரணம் யூதர்களுக்கு போதுமானதாக இருந்தது.

இந்த அணுகுமுறையை நான் விரும்புவதற்கான ஒரு காரணம் உண்டு, அதாவது, " இயேசு மனுஷகுமாரன்" என்று தம்மை அழைத்துக்கொண்டார் என்று நாம் பேசும் போது, முஸ்லிம்கள் உடனே நம்முடன் உரையாட தொடங்குவார்கள். நாம் ஒரு பலவீனமான பாயிண்டை பேச ஆரம்பித்துள்ளோம் என்று அவர்கள் எண்ணுவார்கள். ஆனால், பலமுள்ள வாதம் என்பதை நாம் வேத வசனங்களை எடுத்துக்கூறி அவர்களுக்கு விளக்கமுடியும்.

பெரும்பாலான முஸ்லிம்கள், ஒருபோதும் இயேசுவைப் பற்றி படித்ததில்லை. இயேசு ஒரு தீர்க்கதரிசி என்று முஸ்லிம்களால் நம்பப்பட்டாலும், அவர்கள் ஒரு போதும்  மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் நற்செய்தி நூல்களை படித்து, இயேசுவைப் பற்றி என்ன சொல்லப்பட்டு இருக்கிறது என்று அறிய விரும்புவதில்லை. நற்செய்தி நூல்களை படித்த முஸ்லிம்களை காண்பது அரிது. உண்மையில், நான் பேசிக் கொண்டிருந்த இமாம் கூட நற்செய்தி நூல்களை படித்ததில்லை.

இந்த அணுகுமுறையின் மூலமாக, 'இயேசு ஒரு தீர்க்கதரிசி மட்டுமே' என்று  நம்பிக்கொண்டு இருக்கும் முஸ்லிம்களுக்கு, அவரைப் பற்றி மேலும் பல விவரங்களை சொல்லமுடியும். இதில் இன்னொரு பயனும் உள்ளது, அதாவது 'இயேசு தான் இறைவன் என்றால், அவர் ஏன் தம்மை மனுஷகுமாரன்' என்று அழைத்துக்கொண்டார் என்ற முஸ்லிம்களின் பொதுவான கேள்விக்கும் இதன் மூலம் பதில் சொல்லமுடியும். முடிவாக, இயேசு தம்மை மனுஷகுமாரன் என்றுச் சொல்லும் போது, தம்முடைய மனிதத் தன்மையையும், அதே நேரத்தில் பழைய ஏற்பாட்டிலிருந்து எதிர்ப்பார்த்துக்கொண்டு இருந்த, வரவிருக்கின்ற கர்த்தரும் தாம் என்பதையே குறிக்கிறார்.