ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

புதன், 22 ஆகஸ்ட், 2018

2018 பக்ரீத் சிறப்பு கட்டுரை – ச்சே. . . பீஜேவின் குர்ஆன் தமிழாக்கத்தை படிக்க விருப்பமேயில்லை – அல்லாஹ்வின் கள்ளத்தராசு

[பக்ரீத் பெருநாள் இன்று நல்லபடியாக நடந்தேறியது. பெருநாள் தொழுகை முடிந்து, குர்பானி கொடுத்து, சொந்தங்களுக்கும் மற்றவர்களுக்கும் குர்பானி கறி பகிர்ந்துகொடுக்கப்பட்டது. பிரியாணி வாசனை கமகமக்க அருமையாக சமைத்து, அனைவரும் உண்டு மகிழ்ந்தார்கள். கிராமங்களிலிருந்து சொந்தங்கள் பெரிய அண்ணாவின் விட்டிற்கு, அதாவது சென்னைக்கு வந்திருந்தார்கள். உமரும் தான் வேலை செய்யும் ஊரிலிருந்து சென்னைக்கு வந்திருந்தான். மதியம் சாப்பிட்டதும் சொந்தங்கள் அனைவரும் மெரினா பீச்சுக்கும், ஷாப்பிங்கிற்கும் போய்விட்டார்கள். சிலர் மட்டும் வீட்டிலேயே தங்கிவிட்டார்கள். மணி மாலை 4 இருக்கும், மொட்டை மாடியில் உமர் உலாவிக்கொண்டு இருந்தான். அங்கு வந்து சேர்ந்தான், பெரியண்ணாவின் மகன் அப்துல்லாஹ்.]

அப்துல்லாஹ்: சித்தப்பா, மாடியில் தனியாக என்ன செய்துக்கொண்டு இருக்கீங்க?

உமர்: சும்மா காத்து வாங்கிக்கொண்டு இருக்கிறேன். நீ மெரினாவிற்கு போகவில்லை! கலைஞரின் சமாதியை கூட பார்த்துவிட்டு வந்திருக்கலாம் இல்லையா?

அப்துல்லாஹ்: இல்லே சித்தப்பா, நான் போகவில்லை. அப்பாவும், அம்மாவும் போகலே, நானும் அவர்களோடு இருந்துட்டேன்.

உமர்: ம்ம்ம்… சரி

அப்துல்லாஹ்: நீங்க நாளை ஊருக்கு கிளம்புறீங்க தானே!

உமர்: ஆமாம், வேலை இருக்கே! போகணுமே!

அப்துல்லாஹ்: உங்களோடு சில நிமிஷங்கள் பேசலாம் என்றுச்சொல்லி தான் நான் வெளியே கூட இன்னிக்கு போகலை.

உமர்: இது தான் காரணமா? அதனால் தான் நீ போகலையா. சரி சொல்லு என்ன பேசணும். ஏதாவது காதல் கத்தரிக்கான்னு பிரச்சனை இருக்கா?

அப்துல்லாஹ்: அதெல்லாம் ஒன்னும் இல்ல சித்தப்பா. ஒரு முக்கியமான கேள்வி கேட்கணும் அவ்வளவுதான்.

உமர்: சரி சொல்லு.

அப்துல்லாஹ்: உங்களுக்கு தெரியாதது இல்ல. கடந்த சில மாதங்களாக பீஜே  பற்றி வரும் செய்திகளை நீங்க கேள்விபட்டு இருப்பீங்க. நான் ரொம்ப வருஷமா அவருடைய குர்ஆன் மொழியாக்கத்தை படித்துக் கொண்டு வருகிறேன், ஆனா இப்போது அதை எடுத்து படித்தாலே போதும், அவர் செய்த காரியம் ஞாபகம் வருகிறது. அதனால அவருடைய மொழியாக்கத்தை படிக்கவே விருப்பமில்லை. ஒரு பெரிய மார்க்க அறிஞராக இருந்துக்கொண்டு இப்படியெல்லாம் செய்வது நியாயமா.? இது அவருக்கே அழகா இருக்கா? நீங்க என்ன சொல்றீங்க? 

உமர்: இதை ஏன் என்னிடம் கேட்கிறாய்? நானும் உன்னைப் போல, உன் மனநிலையோடு தான் இருக்கிறேன்.

அப்துல்லாஹ்: நீங்கள் எங்களுக்கு தேவையான ஆலோசனைகளை பலமுறை கொடுத்து இருக்கீறீர்கள்.  உங்களுடைய அபிப்பிராயம் என்னவென்று தெரிந்துக்கொள்ளலாம் என்று உங்களைப்பற்றி எங்களுக்கு ஒன்றுமே தெரியாத மாதிரி பேசுறீங்களே!  நீங்க பைபிள் படிப்பது எங்களுக்குத் தெரியும்? சர்சுக்கு போவது பற்றியும் தெரியும். அதனால் தான் நீங்கள் எங்களையெல்லாம் விட்டுவிட்டு தூரமாகச் சென்று வேலை செய்கிறீர்கள் என்பதும் தெரியும். நீங்க சர்சுக்கு போற விஷயமா பல மாதங்களுக்கு முன்பு, உங்களுக்கும் அப்பாவுக்கும் இடையே நடந்த சண்டை கூட எங்களுக்கு தெரியும். 

உமர்: என்னைப் பற்றி பெரியவர்களுக்கு மட்டும் தெரியும் என்று நினைத்தேன் ஆனால் எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சா.

அப்துல்லாஹ்: என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் நான் பிஜே குர்ஆன் தமிழாக்கத்தை படிப்பதை விட்டு விடப் போகிறேன் ஏனென்றால் அதை எடுத்தவுடனே பிஜே உடைய இந்த தீய செயல் தான் ஞாபகம் வருகிறது. முஹம்மது ஜான் குர்ஆன் தமிழாக்கத்தை படிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீங்க? இத்தனை வருஷமா இவங்க தான் உண்மையான இஸ்லாமை சொல்றவங்க என்று நினைச்சிட்டு இருந்தோம். 

நீங்களும் ஆரம்பத்திலே முஹம்மது ஜான் தமிழாக்கத்தை படித்துக்கொண்டு இருந்தீர்கள். பீஜேவின் தமிழாக்கம் வந்தவுடன், நீங்கள் தான அதனை நம் வீட்டில் . முதன்முதலில் அறிமுகம் செய்து, அதைப் பற்றி ஆஹா ஓஹோ என்று புகழாரம் சூட்டினீர்கள். அதன் பிறகு நாம் அனைவரும் அதை அடிக்க ஆரம்பித்தோம். ஆனால், இப்போது பீஜேவின் விசயம் வேறுமாதிரியான வழியில் செல்வதால், உங்களிடமே இதற்கான தீர்வை கேட்கலாம் என்று நினைத்து நான் கேட்கிறேன்.

உமர்: இந்த கேள்வியை அப்பாவிடம் கேட்டு இருந்திருக்கலாம் அல்லவா! 

அப்துல்லாஹ்: நான் கேட்டேன் ஆனால் அப்பா "நீ மார்க்க விஷயங்களில் தலையிடாதே! உன் வேலையை பார்" என்று சொல்லிவிட்டார். சரி நீங்க பக்ரீத்துக்கு இங்கே வரும் போது கேட்கலாம் என்பதற்காக நான் அமைதியாக இருந்துவிட்டேன். 

உமர்: நீ எந்த குர்ஆன் தமிழாக்கத்தையும் படிக்கலாம் பிரச்சினையில்லை. ஆனால் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் அது என்னவென்றால், பிஜே செய்த காரியம் கண்டனத்திற்கு உரியது அதற்கான தண்டனையை ஜமாத் கொடுத்தாக வேண்டும் அதே நேரத்தில் சட்டமும் இப்படிப்பட்ட காரியங்கள் செய்பவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக பிஜே எழுதிய புத்தகங்கள் மற்றும் அவருடைய குர்ஆன் தமிழாக்கம் என்பது அவருடைய திறமையின் மூலமாக கிடைத்தவைகள் அல்லவா? அவைகளை ஏன் புறக்கணிக்கவேண்டும்?

நடத்தையும் திறமையும்:

நன்றாக கவனி, திறமை வேறு நடத்தை வேறு. பிஜேயின் நடத்தை சரி இல்லை என்பது உண்மை தான், ஆனால் அவர் ஒரு நல்ல திறமைசாலி என்பதை மறக்கக் கூடாது. அவர் நடத்தை கெட்டவர் என்பது நிருபணமான ஒன்று.  ஆனால் அவர் இதுவரை எழுதிய புத்தகங்களை நாம் தூக்கி வீசிட முடியாதல்லவா?

உன்னுடைய கேள்வி நியாயமானதுதான் ஒருவருடைய திறமையை பாராட்டுவதற்கு முன்பு அவர் நல்ல நடத்தை உள்ளவராகவும் இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதில் தவறில்லை. முக்கியமாக மார்க்க விஷயங்களில் திறமைகளை காட்டிலும் நல்ல நடத்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். 

அப்துல்லாஹ்: ஆமாம், இதைத்தான் நானும் யோசித்தேன். மார்க்க விசயங்களில் திறமையுள்ளவனை விட நல்ல நடத்தை உள்ளவன் தான் நமக்கு தேவை.

உமர்: ஒரு பெரிய திறமைசாலி ஒரு நல்ல மனிதனாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை அதேபோல ஒரு நல்லவன் ஒரு பெரிய திறமைசாலியாக இருப்பான் என்று எதிர்பார்க்கவும் முடியாது.

நீ சொன்னது போல இனிமேல் பிஜே தமிழாக்கத்தை படிப்பதை விட்டுவிட்டு வேறு ஒரு மொழியாக்கத்திற்கு நீ மாறிவிடலாம். ஏனென்றால் குறைந்தபட்சம் குர்ஆனை கையில் எடுக்கும் போதாவது பிஜே பற்றி நினைக்காமல் இருக்கலாம், அல்லவா!

அப்துல்லாஹ்: ரொம்ப நன்றி சித்தப்பா. ஆனால் எனக்குப் புரியாத புதிர் என்னவென்றால் இவ்வளவு பெரிய மார்க்க அறிஞர் இப்படிப்பட்ட சின்ன வேலைகளை செய்வாரா என்பது தான்!

உமர்: இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை அப்துல்லாஹ். 

பிஜேவுடைய இந்த செயல்களுக்கும் இஸ்லாமிய இறையியல் கோட்பாடுகளுக்கும் சம்மந்தம் இருக்கிறது. உண்மையைச் சொல்லப்போனால் இஸ்லாமின் அடிப்படைக் கோட்பாடுகள் தான், பெரிய மார்க்க அறிஞர்கள், இப்படிப்பட்ட காரியங்களை செய்ய உற்சாகப்படுத்துகிறது.

அப்துல்லாஹ்: நீங்க என்ன சொல்றீங்க சித்தப்பா? பிஜேவுடைய இப்படிப்பட்ட கெட்ட செயல்களுக்கு இஸ்லாமிய கோட்பாடுகள் காரணமா? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே? கொஞ்சம் விளக்குங்களேன்?

உமர்:

சரி நான் சொல்வதை கவனமாக கேள். நீ அமல்கள் பற்றி, நன்மைகள் பற்றி கேள்விப்பட்டிருப்பாய் அல்லவா? உதாரணத்திற்கு

அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள்கிடைக்கும்.

லுஹாவுடைய இரண்டு ரக்அத்துகளை தொழுதால் 360 தர்மங்களைசெய்த நன்மையைப் பெற்றுக் கொள்வார்.

100 தடவை 'ஸுப்ஹானல்லாஹ்' என்று கூறினால் அவருக்கு 1000 நன்மைகள் எழுதப்படும். அல்லது 1000 பாவங்கள் மன்னிக்கப்படும்.

ஐந்து வேளை தொழுகையை ஜமாத்தோடு தொழுதால் 27 நன்மைகள்கிடைக்கும்.

நாம் அஸ்ஸலாமு அலைக்கும் என்று பதில் ஸ்லாம் சொன்னால் அதற்கு 10 நன்மைகளை அல்லாஹ் தருகின்றான்.

நாம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் என்று பதில் ஸ்லாம் சொன்னால் அதற்கு 20 நன்மைகளை அல்லாஹ் தருகின்றான்.

நாம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு என்று பதில் ஸ்லாம் சொன்னால் 30 நன்மைகளை அல்லாஹ் தருகின்றான்.

எவர் அல்லாஹ்வின் வழியில் ஏதாவது ஒன்றை செலவிடுவாரோ அவருக்கு எழு நூறு மடங்கு நன்மைகளை அல்லது அதைவிடவும் அதிகமாக நன்மைகளை அல்லாஹ் எழுதி விடுகின்றான்.

எவர் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து தொழுகையையும், நிரை வேற்றி, ஜனாஸாவை அடக்கும் வரை இருப்பாரோ அவர் இரண்டு கீராத் நன்மைகளை பெற்றவராக திரும்புவார். (கீராத் என்பது உஹத் மலைக்கு சமமாகும்).

ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து சென்று அதை அடக்கம் செய்வதற்கு முன் திரும்புவாரென்றால், அவர் ஒரு கீராத் அளவு நன்மைகளை பெற்று திரும்புகிறார்.

விரும்பிய தொழுகையை வீட்டில் தொழுதுவிட்டு பள்ளியை நோக்கி நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது அவரது கால்கள் தரையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு நன்மை கிடைக்கும்.

ஒரு முஸ்லிமை பொறுத்தவரையில், ஒரு நன்மைக்கு வழிகாட்டினால் அந்த நன்மையை உலகம் அழியும்வரை யார் செய்தாலும் அதிலும் இவருக்கு ஒருபங்கு நன்மை கிடைக்கும். 

"ஜும்ஆவுடைய நாளில் குளித்து விட்டு பள்ளிக்கு (நேரத்தோடு) செல்பவர் ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.

இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர்போன்றவர் ஆவார்.

மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.

நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைத் தர்மம் செய்தவர்போன்றவர் ஆவார்.

ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர்ஆவார். 

தொழுகைக்கான அழைப்பைக் கேட்கும்பொழுது அதற்காக பதில் கூறுகிறோம் அதற்கு நன்மை எழுதப்படுகிறது.

மனிதனின் ஒவ்வொரு அமலுக்கும் கூலி இரட்டிப்பாக வழங்கப்படுகிறது. ஒரு நன்மைக்கு பத்து நன்மைகள் முதல் எழுநூறு மடங்கு வரை கிடைக்கும்

அப்துல்லாஹ்:

ஆமாம் அவைகள் எல்லாம் எனக்கு தெரியுமே. நன்மைகளுக்காகத் தானே நாம் தொழுகைக்கு தவறாமல் செல்கிறோம் ஜமாத்தாக தொழுகிறோம், சலாம் கூறுகிறோம் இதில் என்ன தவறு இருக்கிறது. இவ்வுலகில் வாழும்வரை நம்மால் முடிந்த வரை அமல்கள் செய்து நன்மைகளை குவித்துக்கொள்ளவேண்டுமல்லவா? இதன் அடிப்படையில் தானே நமக்கு கியாமத் நாளில் அல்லாஹ் தீர்ப்பு வழங்குவான்.

உமர்: சரியாகச் சொன்னாய்,

இப்பொழுது நாம் பிஜேவின் விஷயத்திற்கு வருவோம். பிஜே அவர்கள் எத்தனை முறை குர்ஆனை அரபியில் படித்திருப்பார்? ஒவ்வொரு எழுத்திற்கும் அல்லாஹ் பத்து நன்மைகளை பிஜே அவர்களின் கணக்கிலே சேர்ப்பான் என்பது நம்பிக்கை அல்லவா. அப்படியானால் கூட்டி கழிச்சு பாரு, பல ஆண்டுகளாக அவர் படித்த குர்ஆன் எழுத்துக்களுக்கு எத்தனை இலட்சக்கணக்கான நன்மைகளை அவர் கணக்கில் அல்லாஹ் சேர்த்து இருந்திருப்பார். அதேபோல அவர் ஜமாத்தோடு தொழுவதற்காக எல்லோருக்கும் சலாம் சொன்னதற்காக இன்னும் எத்தனை இலட்சம் நன்மைகள் அவர் கணக்கில் சேர்க்கப்பட்டிருக்கும்.

இது மட்டுமல்ல அவர் குர்ஆன் மொழியாக்கம் செய்தபடியால் அவருக்கு அதிக நன்மையை அல்லாஹ் அவருடைய கணக்கில் சேர்த்துக் இருப்பான் இல்லையா?

அப்துல்லாஹ்: ஆமாம் இது உண்மைதான் கூட்டி கழிச்சு சொன்னால் பல கோடி நன்மைகள் அவருடைய பெயரில் அல்லாஹ் சேர்த்திருப்பான். ஒரு பேச்சுக்காக பிஜே அவர்களின் கணக்கில் இதுவரை 100 கோடி நன்மைகளைக் காட்டிலும் அதிகமாக அல்லாஹ் எழுதி இருப்பான் என்று வைத்துக் கொள்ளலாம் இல்லையா.

உமர்: சரியாகச் சொன்னாய் அப்துல்லாஹ். ஆக அல்லாஹ் அவருடைய கணக்கில் வரவில் 100 கோடி நன்மைகளை சேர்த்து இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். 

அதேபோல மனிதன் செய்யும் தீய செயல்களுக்கு அல்லது  தவறுகளுக்கு அவர்களின் கணக்கிலிருந்து சில நன்மைகளை அல்லாஹ் நீக்கிவிடுவான் அல்லவா?

அப்துல்லாஹ்: ஆமாம், நிச்சயமாக. உதாரணத்திற்கு, இந்த விவரங்களைச் சொல்லலாம்.

நாய் வைத்திருந்தால் நன்மைகள் அழிந்து போகும்: நாய் வைத்திருப்பவரின் நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் அளவிற்கு (அவற்றின் ஊதியம்) குறைந்து போய்விடும்; விவசாயப் பண்ணையையோ கால்நடைகளையோ (திருடு போய் விடாமல்) பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் நாய்களைத் தவிர. (ஸஹீஹுல் புஹாரி – 2322)

மது அருந்தியவனின் நாற்பது காலைகளின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது: யார் மது அருந்துகின்றானோ அவனுடைய நாற்பது காலைகளின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. (ஸுனன் திர்மிதி – 1862)

கடனாளியாக மரணித்தவரின் நன்மைகள் எடுக்கப்பட்டு அவரின் கடன் தீர்க்கப்படும்: ஒரு தீனார் ஒரு திர்ஹம் அளவு கடன் பட்ட நிலையில் யார் மரணித்தாரோ அவரின் நன்மைகளிலிருந்து அவரின் கடன் தீர்க்கப்படும் (ஸுனன் இப்னி மாஜஹ் – 2414)

அஸர் தொழுகையை விட்டால் நன்மைகள் அழிந்து விடும்: மேகம் சூழ்ந்த ஒரு நாளில் புரைதா(ரலி)வுடன் ஒரு போரில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். அப்போது அவர்கள் 'அஸர் தொழுகையை முன் வேளையில் நிறைவேற்றுங்கள். ஏனெனில் 'அஸர் தொழுகையைவிட்டு விடுகிறவரின் செயல்கள் நிச்சயமாக அழிந்து விடுகின்றன' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்' என்று குறிப்பிட்டார்கள். (ஸஹீஹுல் புஹாரி – 553)

ஒருவர் சோதிடனிடம் சென்று எதைப் பற்றியாவது கேட்டால் அவருடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது: ஒருவர் சோதிடனிடம் சென்று எதைப் பற்றியாவது கேட்டால் அ(வ்வாறு கேட்ட)வருடைய நாற்பது நாட்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை. இதை நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் சிலரிடமிருந்து ஸஃபிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் – 4488)

ஒருவர் இன்னொருவருக்கு ஏசியிருந்தால்? அவதூறு கூறியிருந்தால்………? அநியாயமாக ஒருவரின் சொத்தைப் புசித்திருந்தால்? ஒருவரின் இரத்தத்தைச் சிந்தியிருந்தால்?

திவாலாகிப்போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். மக்கள் யாரிடம் வெள்ளிக்காசோ (திர்ஹம்) பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்' என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'என் சமுதாயத்தாரில் திவாலாகிப்போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை நோன்பு ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர்மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்;இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்குமுன் நன்மைகள் தீர்ந்துவிட்டால் (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு இவர்மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப்போனவர்)' என்று கூறினார்கள். (முஸ்லிம் -5037)

உமர்:

சரியாகச் சொன்னாய். இதுதான் இஸ்லாம் சொல்லும் கோட்பாடு. மரிப்பதற்கு முன்பு நாம் நல்ல அமல்களை செய்து நன்மைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். கியாமத் நாளில் அல்லாஹ் தம்முடைய தராசின் ஒரு தட்டில் நன்மைகளை வைத்து நம்முடைய தீய செயல்களை இன்னொரு தட்டில் வைப்பான் தீயவைகளை காட்டிலும் நன்மைகள் அதிகமாக இருக்குமானால் நாம் ஜெயித்தோம், இல்லையென்றால் தோல்வி (நரகம்) தான்.

அப்துல்லாஹ்: சுருக்கமாகச் சொன்னால் இது தான் சரி. எனவே தான் நன்மைகளை அதிகமாக்கிக் கொள்ள நாம் முயலுகிறோம்.

உமர்: இந்த கோட்பாடுதான் பிஜே போன்றவர்கள் தவறுகள் செய்வதற்கு காரணமாக இருக்கிறது.

அப்துல்லாஹ்: இது எப்படி?  அமல்கள் செய்து நன்மைகளை பெருக்கிக்கொள்வதற்கும், பீஜே போன்றவர்கள் செய்யும் நடத்தைக்கெட்ட செயல்களுக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது?

உமர்: நான் இப்போது விளக்குகிறேன். நாம் பிஜேவின் கணக்கை எடுத்துக்கொள்வோம்.  அவருடைய கணக்கில் அல்லாஹ் 100 கோடி நன்மைகளை வைத்திருக்கிறான் என்று நினைத்துக்கொள்வோம்.

இந்த 100 கோடி என்ற கணக்கு அல்லது ஒரு அதிக அமல்கள் தன்னுடைய கணக்கில் இருக்கின்றது என்று பிஜே அவர்களுக்கும் தெரிந்து இருக்கும் இல்லையா. ஏனென்றால் இஸ்லாமை அதிகமாக படித்து ஆய்வு செய்து பல புத்தகங்களை எழுதியவருக்கு அரபியிலிருந்து தமிழில் குர்ஆனை மொழியாக்கம் செய்தவருக்கு இஸ்லாமுடைய இந்த அல்லாஹ்வின் நன்மை தீமை தராசு கணக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை

இப்போது பிஜே அவர்களும் ஒரு மனிதர் என்பதால் அவரும் சில சிறிய சிறிய தவறுகளை செய்யக்கூடும் அதனால் சில அமல்கள் அவருடைய கணக்கில் இருந்து அல்லாஹ் எடுத்துவிடுவான் இல்லையா! சில நேரத்தில் தேவையில்லாமல் அவர் கோபமாக பேசி இருக்கலாம். அதனால் சில அமல்கள் கழிக்கப்பட்டு விடும்.

ஆக பிஜே போன்ற அறிவாளிகள் தாங்கள் செய்யும் அமல்களின்  எண்ணிக்கை மீது ஒரு கணக்கு வைத்திருப்பார்கள். அதேபோல தாங்கள் செய்யும் தவறுகள் / தீய காரியங்கள் எப்படிப்பட்ட அமல்களை அழித்துவிடும் அல்லது தன்னுடைய கணக்கிலிருந்து நீக்கிவிடும் என்றும் அறிந்திருப்பார்கள் அல்லவா? 

நம்முடைய கணக்கு படி பிஜேவின் கணக்கில் 100 கோடி நல்ல செயல்கள் இருந்தால் அவர் செய்யும் சில தவறுகள் மூலமாக சில நூறு அல்லது ஆயிரம் நன்மைகள் அழிக்கப்பட்டிருக்கலாம். இது சரிதானே

அப்துல்லாஹ்: பிஜே மட்டுமல்ல ஒவ்வொரு முஸ்லிமும் இப்படித்தான் வாழ்கிறான் இதுதான் இஸ்லாமின் கோட்பாடு நன்மைகள் அதிகம் செய்ய வேண்டும் அமல்களைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் அமல்களை அழிக்கும் செயல்களை குறைத்துக் கொள்ள வேண்டும்.

உமர்:

இதன்படி பார்த்தால் பீஜேவின் "அந்த பலான" நடத்தை கெட்ட செயலுக்கு ஒருவேளை

  • அல்லாஹ் ஆயிரம் அமல்களை குறைத்துக் கொள்வான் அல்லவா? அல்லது
  • பத்தாயிரம் அமல்களை அவருடைய கணக்கில் இருந்து எடுத்து விடுவான் அல்லவா?
  • அல்லது ஒரு லட்சம் நல்ல அமல்கள் அழிக்கப்பட்டு விட்டது என்று வைத்துக் கொள்வோமா?

கடைசியாக அவர் செய்த தீய காரியங்களுக்கு 1 கோடி நன்மைகள் அல்லது அமல்கள் அழிக்கப்பட்டுவிட்டன  என்று  வைத்துக்கொண்டாலும் இன்னும் பிஜே கணக்கில் 99 கோடி நன்மைகள் மிஞ்சி இருக்குமல்லவா? இந்த கணக்கு சரியா?

அப்துல்லாஹ்: அவர் செய்தது சின்ன தவறு அல்ல மிகப் பெரிய தவறு

உமர்: சரி உன் கணக்கிற்கே வருகிறேன், அவர் செய்த அந்த தீய செயலுக்காக 99 கோடி அமல்கள் அழிக்கப்பட்டுவிட்டது என்று வைத்துக் கொள்வோம்.  இப்படி இருந்தும் அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தை கொடுப்பான் ஏனென்றால் அவரிடம் இன்னும் ஒரு கோடி நன்மை மிச்சமிருக்கிறது இது மாத்திரமல்ல அவர் இனிமேல் வாழும் நாட்களில் குர்ஆனைப் படிப்பார், ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மைகள் வீதம் அவருக்கு அல்லாஹ் கொடுப்பான். அவர் ஜமாஅத்தோடு தொழுதால் அதிக நன்மைகள் கிடைக்கும் இன்னும் பல வகைகளில் அவர் அமல்களைச் செய்து நன்மைகளை சம்பாதித்துக்கொள்வார். இது சரி தானே!

அப்துல்லாஹ்: இது குழப்பமாக இருக்கிறதே. அல்லாஹ் கியாமத் நாளில் தீர்ப்பு வழங்கும் போது, பூமியில் மனிதன் செய்த நன்மை தீமைகளை கணக்கில் வைத்துதான் நீதி செய்யமுடியும் அல்லவா? அப்படி இருக்கும்போது அதில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி மக்கள் தப்பிக்க முயல்வது ஆச்சரியமாக இருக்கிறதே. உங்க லாஜிக் எனக்கு சிறிது புரிய ஆரம்பித்துள்ளது,

உமர்: இதைத்தான் நான் குறிப்பிடுகிறேன், அல்லாஹ்வின் இறையியல் கோட்பாடுகள் தவறானவைகள் ஆகும்.  முக்கியமாக இந்த நன்மை தீமை கோட்பாடு மிகவும் தவறான ஒன்று.

அப்துல்லாஹ்: அப்படியானால் பிஜே இதையெல்லாம் கணக்குப் போட்டு தான் அந்த பாவத்தை செய்து இருந்திருப்பார் என்றுச் சொல்கிறீர்களா? 

உமர்:  அவர் கணக்குப்போட்டு செய்தாரோ, அல்லது பாவம் செய்துவிட்டு,  அதன் பிறகு கணக்கு போட்டுக்கொண்டாரோ, எனக்குத் தெரியாது.

ஒரு சராசரி முஸ்லிம் கூட ஒவ்வொரு நாளும் எப்படி தன் கணக்கில் நன்மைகளை அதிகபடியாக சேர்த்துக்கொள்ளலாம், எப்படி அந்த நன்மைகள் அழியாமல் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தபடி தானே நாட்களை கடத்துகிறான். அதிக அமல்களைச் செய்து நன்மைகளை பெருக்கிக்கொள்ளுங்கள் என்று தானே இஸ்லாம் சொல்கிறது.

சாதாரண மனிதனுக்கும் பிஜே போன்றவர்களுக்கும் இடையேஇருக்கும் வித்தியாசம் ஒன்று தான், அது நன்மைகளின் தீமைகளின் அளவு. அதாவது ஒரு சராசரி முஸ்லிம் தன் சக்திக்கு ஏற்ற அமல்களை செய்து குறைந்த அளவு தீயவைகளைச் செய்து எப்படியாவது அல்லாஹ்வின் தராசிலே நன்மைகள் அதிகமாக காணப்படும் படி செய்யவேண்டும் என்று நினைக்கிறான். அதேபோலத்தான் பீஜே போன்றவர்கள் அதிக நன்மைகள் செய்து இப்படிப்பட்ட சில தவறுகளினால் சில அமல்களை அல்லது பல அமல்களை இழக்கிறார்கள். இஸ்லாமின் கோட்பாடு சராசரி முஸ்லிமுக்கும், பீஜே போன்றவர்களுக்கும் ஒன்று தான். 

சராசரி முஸ்லிம் அல்லாஹ்வோடு செய்வது சிறுதொழில் வியாபாரம் போன்றது, பீஜே போன்றவர்கள் செய்வது ஏற்றுமதி இறக்குமதி போன்ற பிரமாண்ட வியாபாரம் போன்றது, ஆனால், அல்லாஹ்வின் கணக்கு வழக்கு எல்லாம் இருவருக்கும் சமமே. அதாவது வரவிலிருந்து (நன்மைகள்)  செலவை (தீய செயல்கள்) கழித்துவிட்ட பிறகும், ஏதாவது மீதமிருக்கவேண்டும் அவ்வளவு தான்.

எது எப்படியானாலும் இஸ்லாமின் கோட்பாட்டின்படி கூட்டல் கழித்தல் கணக்கு தான் வாழ்க்கை.  எத்தனை கூட்டப்படுகின்றன எத்தனை கழிக்கப்படுகின்றன என்பதில்  ஒரு முஸ்லிம் கண் வைத்து வாழ்ந்தால் போதும், கடைசியில் அல்லாஹ்வின் நியாயத்தீர்ப்பில் ஜெயித்துவிடலாம்,.

அப்துல்லாஹ்:

இதற்கு தீர்வு தான் என்ன? இந்தக் கோட்பாடு தவறு என்றால் சரியான கோட்பாடு எது?

உமர்: அல்லாஹ்வின் கணக்கு தவறானது. நீ சலாம் சொன்னால் உனக்கு பத்து நன்மைகள் கிடைக்கும் என்றுச் சொல்வதும், நீ இதைச் செய், உனக்கு இரண்டு மடங்கு நன்மைகள் கிடைக்கும் என்று அல்லாஹ் சொல்வதினால் தான் முஸ்லிம்கள் கணக்கு போட்டுக்கொண்டு வாழுகிறார்கள். முஸ்லிம்களை கணக்கு போட அல்லாஹ் கற்றுக்கொடுக்கின்றானே தவிர மனிதாபமானத்தோடு வாழும்படி கற்றுக்கொடுப்பதில்லை. அல்லாஹ் கணக்கு பார்க்கச் சொல்கிறானே தவிர, அதன் விளைவுகளை பாருங்கள் என்று சொல்ல தவறிவிட்டான்.

பிஜே போன்றவர்கள் பல கோடி நன்மைகளை செய்துவிட்டு அதன் பிறகு தெரிந்தே தீய செயல்கள் செய்வதற்கும் இந்தக் கோட்பாடுகள் உதவி புரிகின்றன. இறைவனுக்கு விருப்பமான வாழ்க்கையை ஒரு மனிதன் வாழ்கின்றானா இல்லையா? என்பதை பார்க்க வேண்டுமே தவிர அல்லாஹ் சொல்வது போல கணக்குப் போட்டு வாழக்கூடாது. நீ 35 மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்றாய், நீ 60 மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் வெற்றி பெற்றாய், நீ 99 மதிப்பெண்கள் பெற்று கல்லூரியில் முதல் இடத்தை பிடித்தாய் என்று இஸ்லாம் கற்றுக்கொடுப்பதினால் உண்டாகும் விளைவுகள் இவைகள்.  இப்படிப்பட்ட இஸ்லாமிய இறையியல் சரியான இறையியல் அல்ல.

இன்னும் சில முஸ்லிம்கள் தாங்கள் செய்யும் செயல்களுக்கு எவ்வளவு அமல்கள் சேர்க்கப்படுகின்றன என்பதை அறியாமல் பயந்து கொண்டே ஒவ்வொரு நாளும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த பயத்திற்கும் இஸ்லாமிய கோட்பாடு தான் காரணம் பீஜே போன்றவர்களின் செயல்களுக்கும் இதுவே காரணம்.

சரியான கோட்பாடு எதுவென்றால் இறைவனிடம் கணக்குப் போட்டு வாழ்வது அல்ல, அதற்கு பதிலாக முழுவதுமாக நம்மை நாம் இறைவனுக்கு அர்ப்பணித்து வாழ்வதாகும். எத்தனை நன்மைகளை நாம் செய்தோம் என்று கணக்கு போடாமல், எப்படி வாழ்ந்தோம் என்று பார்க்கச் சொல்லும் கோட்பாடு தான் சரியான கோட்பாடு. மேலும், தவறுகள் செய்யும்போது மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டு அதன் பிறகு அப்படிப்பட்ட தவறுகள் நடைபெறாமல் பார்த்துக் கொள்வதும் தான் சிறந்த கோட்பாடு. கூட்டி கழிச்சி பாரு கணக்கு எல்லாம் சரியாக இருக்கும் என்று சொன்னால், நம்முடைய நிலைமை பிஜேயின் நிலைமை போலவே இருக்கும். 

பிஜே தாம் செய்த செயல்களுக்கு அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டாரோ, இல்லையோ தெரியாது. இஸ்லாமை நன்கு அறிந்து வைத்திருக்கும் பீஜே, தான் செய்த தவறுக்காக இஸ்லாமின் கோட்பாட்டின்படி தம்முடைய அமல்களின் எண்ணிக்கையில் சிலவற்றை குறைத்துக்கொண்டு இருந்திருப்பார் அவ்வளவுதான்.

அப்துல்லாஹ்:

உங்களிடம் ஒரு கேள்வியை நான் கேட்கட்டுமா? நியாயத்தீர்ப்பு விஷயத்தில் இஸ்லாமிய கோட்பாடு தராசிலே நிறுத்தி கணக்குப் பார்த்து மனிதர்களை தீர்ப்பு செய்கிறது என்பதை புரிந்து கொண்டேன். இந்த விஷயத்தில் கிறிஸ்தவத்தின் நியாயத்தீர்ப்பு எப்படி இருக்கும்?

கிறிஸ்தவர்கள் செய்யும் நன்மைகள் எப்படி கணக்கிடப்படுகின்றன? கிறிஸ்தவர்களின் தீய செயல்கள் எப்படி கணக்கிடப்படுகின்றன? எதன் அடிப்படையில் அவர்கள் நியாயத்தீர்க்கப்படுகிறார்கள்?

உமர்:

நல்ல கேள்வியை கேட்டாய். 

கிறிஸ்துவத்தின் கோட்பாடு மிகவும் சுலபமானது. மனிதனுடைய நல்ல செயல்கள் பரிசுத்த தேவனுக்கு முன்பாக எடுபடாது. இறைவனுக்கு முன்பு நம்முடைய நீதியான செயல்கள் அனைத்தும் கந்தைத் துணிகள் போன்றவைகள் ஆகும். தேவன் எதிர்பார்க்கும் அளவிற்கு நம்மால் பரிசுத்தமாகவும் நீதியாகவும் வாழ முடியாது. இறைவனாக பார்த்து நம்மை மன்னித்து நமக்கு ஒரு புது வாழ்வு கொடுத்து, நான் உன் தீய காரியங்களை மன்னித்து இருக்கிறேன் இதுவரைக்கும் செய்தவைகளை மன்னித்து விட்டேன். இனி என் மீது நீ வைக்கும் விசுவாசமே அல்லது நம்பிக்கையே உன்னை என்னிடத்தில் சேர்க்கும். எனவே என்னை விசுவாசித்து நான் உனக்காக செய்தவைகளை நம்பி நீ வாழ வேண்டும். கூட்டல் கழித்தல் கணக்கு இனி உனக்கு இல்லை. 

[உமர் பேசிக்கொண்டே இருக்கும் போது, அவரது அண்ணன் மேலே மொட்டை மாடிக்கு வந்துவிட்டார்]

உமரின் அண்ணா: நீங்க இரண்டு பேரும் இங்கே இருக்கீங்களா? அப்துல்லாஹ், நீ கீழே போ. நான் கொஞ்ச நேரம் பேசிட்டு வரேன்.

அப்துல்லாஹ்: சரி சித்தப்பா, நான் கீழே போகிறேன், பிறகு பேசலாம்.

[அப்துல்லாஹ் மாடியிலிருந்து இறங்கி சென்றுவிட்டான்]

உமரின் அண்ணா: நீங்க ரெண்டு பேரும் என்ன பேசிக்கிட்டு இருந்தீங்க?

உமர்: சும்மா, ஏதோ பேசிக்கிட்டு இருந்தோம். 

உமரின் அண்ணா: தம்பி, ஒரு முக்கியமான விசயம் பற்றி உன்னோடு பேசவேண்டும்.

உமர்: என்ன சொல்லுங்க அண்ணா!

உமரின் அண்ணா: நாம் பேசறது இரகசியமாக இருக்கட்டும். பீஜேவுடைய குர்-ஆன் தமிழாக்கத்தை நீ தானே எங்களுக்கு அறிமுகம் செய்தாய்!

உமர்: ஆமாம், இப்போது என்ன அதுக்கு?

உமரின் அண்ணா: ச்சே பீஜே செய்த காரியத்தினால், அவரது தமிழாக்கத்தை படிக்கவே முடியலே! தமிழாக்கத்தை எடுத்தாலே போதும், அவர் செஞ்சது தான் ஞாபகம் வருகிறது. நீ என்ன நினைக்கிறாய்? அதை படிக்கலாமா? அல்லது வேறு தமிழாக்கத்தை படிக்கலாமா?

உமர்:? ? ? 

[உமர் மனதில் பேசிக்கொண்டான்… அடப்பாவமே… முழு தமிழ நாடும் இதே நிலையில் தான் இருக்கிறார்களா என்ன? ]

மறுபடியும் தொடர்ந்தான் உமர், 

இதுவரை அப்துல்லாஹ்விடம் சொன்ன விவரங்களை இரண்டாம் முறை சொல்ல ஆரம்பித்தான் உமர். . . .

தேதி: 22 ஆகஸ்ட் 2018


பிஜேவிற்கு கொடுத்த இதர மறுப்புக்கள்

உமரின் கட்டுரைகள் பக்கம்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/answerpj/pj_allah_judgement.html


சனி, 18 ஆகஸ்ட், 2018

குர்‍ஆனின் படி அல்லாஹ் மூஸாவோடு மட்டும் தான் நேரடியாக பேசினானா? இயேசுவோடு பேசவில்லையா?

தம்பி: உமரண்ணா உங்களோடு சில நிமிடங்கள் பேசலாமா?

உமர்: ஓ! பேசலாமே. என்ன திடீரென்று இந்த நேரத்தில்?

தம்பி: நேற்று நீங்கள் பேசும் போது, ஒரு விஷயத்தைச் சொன்னீர்கள், நான் அதை கவனிக்கவில்லை, நாம் பேசி முடித்த பிறகு தான் எனக்கு ஞாபகம் வந்தது. சரி, உங்களிடம் கேட்டுவிடலாம் என்று நினைத்து உங்களை போனில் அழைத்தேன்.

உமர்: சரி சொல்லு, அது என்ன விவரம்?

தம்பி: நேற்று நாம் வேறு ஒரு விவரம் பற்றி பேசும் போது அல்லாஹ் இயேசுவோடு நேரடியாக பேசியுள்ளார் என்றுச் சொன்னீர்கள். நான் இதனை கவனிக்கவில்லை, ஆனால், பிறகு சிந்திக்கும் போது தான் எனக்கு பொறி தட்டியது.

உமர்: ஓ, அந்த விஷயமா? சரி, உன் கேள்வி என்ன?

தம்பி: இஸ்லாமின் படி, அல்லாஹ் நேரடியாக பேசியது நபி மூஸாவோடு மட்டும் தான் (குர்‍ஆன் 4:164). வேறு எந்த ஒரு நபியோடும் அவர் நேரடியாக பேசியதில்லை. நீங்கள் சொன்னது போல, ஈஸாவோடு அல்லாஹ் நேரடியாக பேசியதில்லை. உங்களால் ஏதாவது ஒரு குர்‍ஆன் வசனத்தை இதற்கு ஆதாரமாக‌ காட்டமுடியுமா?

உமர்: உன்னுடைய சந்தேகம் இது தானா! சரி நான் பதில் தருகிறேன் கேள்.

முதலாவதாக, நீ மேற்கோள் காட்டிய வசனத்தில் அல்லாஹ் மூஸாவோடு மட்டும் தான் நேரடியாக பேசினான் என்று சொல்லப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வோம்.

குர்‍ஆன் 4:164ஐ நாம் நான்கு தமிழாக்கங்களில் படிப்போம், கடைசி வாக்கியத்தை கூர்ந்து கவனிக்கவும்:

4:164. (இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம்; இன்னும் (வேறு) தூதர்கள் (பலரையும் நாம் அனுப்பினோம்; ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை; இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்(முஹம்மது ஜான் தமிழாக்கம்)

4:164. (இவர்களைப் போல் இன்னும் வேறு) பல நபிமார்களையும் (நாம் அனுப்பி வைத்தோம்.) அவர்களுடைய சரித்திரங்களையும் இதற்கு முன்னர் நாம் உங்களுக்குக் கூறியிருக்கின்றோம். வேறு பல நபிமார்களையும் (நாம் அனுப்பியிருக்கின்றோம். எனினும்) அவர்களுடைய சரித்திரங்களை நாம் உங்களுக்குக் கூறவில்லை. மூஸாவு(க்கு வஹீ அறிவித்தது)டன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்(அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்)

4:164. மேலும், முன்னரே உம்மிடம் நாம் எந்த இறைத்தூதர்கள் பற்றி எடுத்துரைத்துள்ளோமோ அந்த இறைத்தூதர்களுக்கும் உம்மிடம் எடுத்துரைக்கப்படாத இறைத்தூதர்களுக்கும் (வஹி அறிவித்திருக்கின்றோம்). அல்லாஹ் மூஸாவிடம் நேரடியாகப் பேசியும் இருக்கின்றான்(இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்)

4:164. (முஹம்மதே!) இதற்கு முன் சில தூதர்களின் வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம். சில தூதர்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ் மூஸாவுடன் உண்மையாகவே பேசினான்(பீஜே தமிழாக்கம்)

தம்பி: ஆமாம், இந்த வசனத்தில் அல்லாஹ் மூஸாவோடு பேசியதாக வருகிறதே!

உமர்: நன்றாக படித்துப்பார், "அல்லாஹ் மூஸாவோடு மட்டுமே நேரடியாக பேசினார் என்று" உள்ளதா? அல்லது "அல்லாஹ் மூஸாவோடு பேசினார்" என்று உள்ளதா?

'மட்டும்' என்ற வார்த்தை உள்ளதா என்று கவனித்தாயா?

wakallama allahu mūsā taklīman

வகல்லம அல்லாஹூ மூஸா தக்லீமன்

தம்பி: "மட்டும்" என்ற வார்த்தை இவ்வசனத்தில் இல்லை.

உமர்: அப்படியென்றால், இதன் பொருள் என்ன?

  • "அல்லாஹ் மூஸாவோடு பேசினார்" என்று புரிந்துக் கொள்ள வேண்டுமே ஒழிய,
  • "மூஸாவை தவிர்த்து, அல்லாஹ் வேறு யாரோடும் எப்போதும் பேசவில்லை" என்று புரிந்துக் கொள்ளக்கூடாது. 

தம்பி: ம்ம்ம் ஒருவகையில் இது சரியான விளக்கம் தான். ஆனால், மற்றவர்களோடு அல்லாஹ் பேசியதாக எங்கும் சொல்லப்படவில்லையே! அதனால், மூஸாவோடு மட்டும் தான் அல்லாஹ் பேசினார் என்று எடுத்துக்கொள்வது தானே சரியான புரிதல்?

உமர்: முதலாவதாக, குர்‍ஆன் 4:164ன் உண்மையான பொருளை சரியாக புரிந்துக் கொள்ளவேண்டும். இரண்டாவதாக, மற்றவர்களோடு அல்லாஹ் பேசியதாக வேறு எங்கேயாவது சொல்லப்பட்டுள்ளதா என்று நாம் பார்க்கவேண்டும்.

தம்பி: நான் குர்‍ஆனை படித்துள்ளேன், வேறு எங்கும் அல்லாஹ் மற்றவர்களோடு பேசியதாக இல்லை. 

உமர்: நீ கொஞ்சம் கூர்ந்து குர்‍ஆனை படித்திருந்தால் அல்லாஹ் ஒரு நபரோடு (மூஸாவோடு) மட்டுமல்ல, மற்ற மனிதர்களிடமும் பேசியதாக சொல்லப்பட்டுள்ளதை  கவனித்து இருந்திருப்பாய்.

தம்பி: நீங்க என்ன சொல்கிறீர்கள்! வசன ஆதாரத்தைக் காட்டுங்கள் பார்க்கலாம்.

உமர்: தம்பி, குர்‍ஆன் 2:256ம் வசனத்தை படி:

2:253. அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்; அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்; தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்; அல்லாஹ் நாடியிருந்தால், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும், அத்தூதுவர்களுக்குப்பின் வந்த மக்கள் (தங்களுக்குள்) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அவர்கள் வேறுபாடுகள் கொண்டனர்; அவர்களில் ஈமான் கொண்டோரும் உள்ளனர்; அவர்களில் நிராகரித்தோரும் (காஃபிரானோரும்) உள்ளனர்; அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (இவ்வாறு) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

2:253. (நம்மால் அனுப்பப்பட்ட) அத்தூதர்கள் (அனைவரும் ஒரே பதவி உடையவர்களல்லர்.) அவர்களில் சிலரை, சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம். அவர்களில் சிலருடன் அல்லாஹ் (நேரடியாகப்) பேசியிருக்கின்றான். . . .(அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்)

2:253. (மனித குலத்தை நேர்வழிப்படுத்துவதற்காக) நாம் அனுப்பிய அந்தத் தூதர்களில் சிலரை, சிலரைவிடச் சிறப்புடையோராக்கினோம்.அல்லாஹ், நேரடியாகப் பேசிய சிலரும் இவர்களில் உண்டு.. . . (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்)

2:253. இத்தூதர்களில், சிலரை விடச் சிலரைச் சிறப்பித்திருக்கிறோம். அவர்களில் சிலரிடம் அல்லாஹ் பேசியுள்ளான்.. . . (பீஜே தமிழாக்கம்)

இவ்வசனத்தின் இரண்டாவது வாக்கியத்தை கவனி: 

  • அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்
  • அவர்களில் சிலருடன் அல்லாஹ் (நேரடியாகப்) பேசியிருக்கின்றான்.
  • அல்லாஹ், நேரடியாகப் பேசிய சிலரும் இவர்களில் உண்டு
  • அவர்களில் சிலரிடம் அல்லாஹ் பேசியுள்ளான்

தம்பி, "சிலர்" என்றால் எத்தனை பேரை குறிக்கலாம் என்று நீ நினைக்கிறாய்?

தம்பி: ஆமாம், இவ்வசனத்தின் படி அல்லாஹ் மூஸாவோடு மட்டுமல்ல, மற்ற நபிமார்களிடமும் பேசியுள்ளான். ஆனால், ஒரு சந்தேகம், அல்லாஹ் அந்த சிலருடன் ஜிப்ரீல் தூதன் மூலமாக பேசியிருக்கலாம் இல்லையா? ஏன் அல்லாஹ் நேரடியாக பேசினான் என்று எடுத்துக்கொள்ளவேண்டும்?

உமர்: இல்லை தம்பி, அல்லாஹ் ஜிப்ரீல் மூலமாக நபிகளோடு பேசுவது என்பது பொதுவாக அல்லாஹ்வின் வழிமுறை. எல்லோரிடமும் ஜிப்ரீல் மூலமாக அல்லாஹ்  பேசுகின்றான், ஆனால் சிறப்பித்து 'சிலர்' என்று குறிப்பிடுகின்றான் என்பதை கவனித்தால், நீ சொல்லும் பொருளில் எடுத்துக்கொள்ளமுடியாது.

ஒரு லட்சத்துக்கும் மேலாக (124000) நபிகளை அல்லாஹ் அனுப்பினான் என்று சொல்லப்படுகின்றது, இவர்களில் "சிலர்" என்று அல்லாஹ் சொல்கின்றான் என்றால், அது அல்லாஹ் நேரடியாக பேசும் விதமாகத்தான் இருக்கும்.

நான் கேட்ட கேள்விக்கு நீ இதுவரை பதில் சொல்லவில்லை. 

"சிலர்" என்ற சொல்லுக்கு எத்தனை பேர்? என்று நான் கேட்டேனே!

ஒருவரோடு மட்டுமே அல்லாஹ் நேரடியாக பேசியிருந்தால், அதை குறிப்பிடுவதற்கு "சிலர்" என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கமாட்டான். மொழிகளை படைத்த அல்லாஹ்விற்கு இலக்கணம் தெரியாமல் போகுமா?

தம்பி: சிலர் என்றால் இருவரை குறிப்பதாக இருக்கலாம் அல்லவா?

உமர்: இருவரோடு மட்டுமே அல்லாஹ் பேசியிருந்தால், அவ்விருவரை சிறப்பித்து கூறும் போது, "சிலர்" என்று அல்லாஹ் பயன்படுத்தமாட்டனே! 

தம்பி: ஒருவேளை மூன்று பேராக இருக்குமா?

உமர்: இல்லை தம்பி, மூன்று என்பதை கூட நாம் மூவர் என்று தான் பொதுவாக கூறுகிறோம், அதுவும் சிறப்பான ஒன்றைப்பற்றி பேசும் போது (அல்லாஹ் மனிதர்களோடு பேசுவது என்பது சிறப்பு தானே), ஐந்துக்குள் எண்ணிக்கை இருந்தால், எண்ணை குறிப்பிட்டே சொல்வோம்.

நிச்சயமாக, ஐந்துக்கும் மேலான நபர்களாகத்தான் அல்லாஹ் 'சிலர்' என்று குறிப்பிடுகின்றான் என்பது என் கருத்து.

தம்பி: அல்லாஹ் மூஸாவோடு மட்டுமே பேசினான் என்று நான் நம்பிக்கொண்டு இருந்தேன், இந்த நம்பிக்கை ஆட்டம் காணுகின்றதே!

உமர்: தம்பி, கவலைப்படாதே! நேற்று சரி என்று நம்பிய விவரத்திற்கு, இன்று ஆதாரங்கள் கிடைத்தால், அது தவறு என்று இன்று ஒப்புக்கொள்வது தான் அறிவுடமை. நாளை இன்னொரு விவரம் தான் சரி என்று சொல்லவேண்டியும் வரலாம். 

தம்பி: சரி, நம் விவாத பொருளுக்கு வருவோம். அல்லாஹ் மூஸா அல்லாத வேறு சில நபிகளோடு பேசினார் என்று குர்‍ஆன் சொல்கின்றதே தவிர, ஈஸாவோடு பேசினார் என்று சொல்லப்படவில்லையே! நீங்கள் எதை ஆதாரமாக வைத்துக்கொண்டு  ஈஸாவோடு அல்லாஹ் பேசினான் என்றுச் சொல்கிறீர்கள்?

உமர்: உன் லாஜிக்கிற்கே வருகிறேன். 'சிலர்' என்ற வார்த்தையில் ஏன் ஈஸா அடங்கக்கூடாது? குர்‍ஆன் 2:253 ஈஸாவோடு அல்லாஹ் பேசவில்லை என்று "வெளிப்படையாகச் சொல்கிறதா"? இல்லையே!

அல்லாஹ், சில நபிகளைக் காட்டிலும் சிலரை மேன்மையாக்கினான் என்று அவ்வசனம் சொல்கிறது. அதன் பிறகு, உடனே, ஈஸாவைப் பற்றி மேன்மையாக பேசுகின்றது அவ்வசனம். ஏன் நாம் இயேசுவோடு அல்லாஹ் நேரடியாக பேசினான் என்று கருதக்கூடாது. சிலர் என்ற சொல்லுக்குள், ஈஸா ஏன் இருக்கமுடியாது?

2:253. அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்; அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்; தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்; அல்லாஹ் நாடியிருந்தால், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும், அத்தூதுவர்களுக்குப்பின் வந்த மக்கள் (தங்களுக்குள்) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அவர்கள் வேறுபாடுகள் கொண்டனர்; அவர்களில் ஈமான் கொண்டோரும் உள்ளனர்; அவர்களில் நிராகரித்தோரும் (காஃபிரானோரும்) உள்ளனர்; அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (இவ்வாறு) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

தம்பி: நீங்களும் வசனம் கூறாத ஒன்றை கூறியதாகச் சொல்கிறீர்களே! குர்‍ஆனில் எந்த இடத்திலாவது, அல்லாஹ் ஈஸாவோடு பேசியதாக ஒரு ஆதாரத்தை காட்டமுடியுமா?

உமர்: நீ கேட்டால், ஆதாரம் கொடுக்காமல் இருக்கமுடியுமா என்ன? குர்‍ஆன் 3:55ஐ பார்:

3:55. "ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்" என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)! (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

3:55. (ஈஸாவை நோக்கி) அல்லாஹ் கூறியதை (அவர்களுக்கு) ஞாபகப்படுத்துங்கள்: "ஈஸாவே நிச்சயமாக நான் உங்களுக்கு (உங்களுடைய) ஆயுளை முழுமைபடுத்துவேன். . . .(அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்)

3:55. (அத்தகையதோர் திட்டத்தை நிறைவேற்றவே) அவன் கூறினான்:"ஈஸாவே! நிச்சயமாக நான் இப்போது உம்மைத் திரும்ப அழைத்துக் கொள்வேன். . . . (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்)

3:55 "ஈஸாவே! நான் உம்மைக் கைப்பற்றுபவனாகவும், என்னளவில் உம்மை உயர்த்துபவனாகவும்,. . . . அவர்களுக்கு எந்த உதவியாளரும் இருக்க மாட்டார்.'' என்று அல்லாஹ் கூறியதை நினைவூட்டுவீராக!(பீஜே தமிழாக்கம்)

இந்த வசனத்தில் அல்லாஹ் நேரடியாக ஈஸாவோடு பேசுவதாக வருகிறது என்பதை கவனித்தாயா?

தம்பி: ஜிப்ரீல் தூதன் மூலமாக ஈஸாவுடன் அல்லாஹ் பேசியிருக்கலாம் அல்லவா?

உமர்: ஜிப்ரீல் மூலமாக அல்லாஹ் ஈஸாவோடு பேசினார் என்று இவ்வசனம் சொல்லவில்லையே தம்பி. "அல்லாஹ் கூறினான்" என்று தான் இவ்வசனம் தொடங்குகிறது.

idh qaala allahu yaa isaa

இத் கால அல்லாஹு யா ஈஸா...

மேலும், இன்னொரு வசனத்தை கவனி: குர்‍ஆன் 5:114, 115

5:114. மர்யமுடைய மகன் ஈஸா, "அல்லாஹ்வே! வானத்திலிருந்து எங்கள் மீது ஓர் உணவு மரவையை இறக்குவாயாக; அது எங்களுக்கு - எங்களில் முன்னவர்களுக்கும், எங்களில் பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும்; இன்னும் எங்களுக்கு உணவுப் பொருட்களை அளிப்பாயாக; நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய்" என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.

5:115. அதற்கு அல்லாஹ், "நிச்சயமாக நான் அதை உங்களுக்கு இறக்கிவைக்கிறேன்; ஆனால், அதன்பின் உங்களில் எவரேனும் ஒருவர் நிராகரித்தால், உலகத்தாரில் எந்த ஒருவருக்கும் செய்திராத வேதனையைக் கொண்டு அவரை வேதனைப்படுத்துவேன்" என்று கூறினான்.

115ம் வசனத்தில் அல்லாஹ் நேரடியாக பேசுவதை காணமுடியும். குர்‍ஆனின் படி, ஈஸா வேண்டுகின்றார், அல்லாஹ் பதில் அளிக்கின்றான், இடையில் ஜிப்ரீல் வந்து அல்லாஹ்வின் பதிலை கொண்டு வந்து ஈஸாவிடம் கொடுத்தார் என்று சொல்லப்படவில்லை. ஜிப்ரீல் இந்த இடத்தில் வரவில்லை, ஜிப்ரீல் இருந்திருந்தால், அதை அல்லாஹ் நிச்சயம் சொல்லியிருப்பான். 

உதாரணத்திற்கு, கீழ்கண்ட ஜகரியா மற்றும் மரியாள் நிகழ்ச்சியின் போது, தூதன் பேசுவதை குர்‍ஆன் தெளிவாக சொல்கிறது.

3:38. அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார் "இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்."

3:39. அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து: "நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்; அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்" எனக் கூறினர்.

3:42. (நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள்; மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்; உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான்; இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்" (என்றும்),

3:43. "மர்யமே! உம் இறைவனுக்கு ஸுஜுது செய்தும், ருகூஃ செய்வோருடன் ருகூஃ செய்தும் வணக்கம் செய்வீராக" (என்றும்) கூறினர்.

3:45. மலக்குகள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;

ஈஸாவோடு அல்லாஹ் பேசும் போது,  இப்படி மலக்குகள் வந்து அழைத்து பேசினார்கள் என்று சொல்லப்படவில்லை என்பதை கவனிக்கவும்.

இதைப்பற்றி உன் கருத்தென்ன தம்பி?

தம்பி: ம்ம்ம் என்ன சொல்வது, அல்லாஹ் மூஸாவோடு மட்டுமல்ல, இதர நபிகளோடும் நேரடியாக பேசியுள்ளார் என்பது தான் உண்மை போல இருக்கிறது.

உமர்: இன்னொரு விவரத்தையும் சொன்னால் நீ ஆச்சரியப்படுவாய். 

தம்பி: அது என்ன?

உமர்: குர்‍ஆனின் படி, ஈஸாவோடு மட்டுமல்ல, ஆதாமோடும், ஏவாளோடும் அல்லாஹ் நேரடியாக பேசியுள்ளான். ஏதோன் தோட்டத்தில், ஜிப்ரீல் மூலமாகவோ அல்லது வேறு தூதன் மூலமாகவோ அல்லாஹ் ஆதாமோடு பேசியதாக ஏதாவது ஒரு ஆதாரத்தை நீ காட்டமுடியுமா?

குர்‍ஆன் 4:164ல் வரும் 'சிலர்' என்பவர்களில் ஈஸாவும், ஆதாமும் அடங்குவார் என்று உனக்குத் தெரியுமா?

தம்பி: ஆதாம் நபியா? இவ்வசனம் நபிகளிடம் அல்லாஹ் நேரடியாக பேசியதாகத் தானே சொல்கிறது?

உமர்: தம்பி, இஸ்லாமின் படி ஆதாம் கூட நபி தான்.

ஒன்றை சரியாக புரிந்துக்கொள், முஹம்மதுவிடம் ஜிப்ரீல் மூலமாக அல்லாஹ் பேசியதால், எல்லா நபிகளிடமும் (மூஸா தவிர) இப்படித் தான் அல்லாஹ் பேசினான் என்றுச் சொல்வது சரியானதல்ல.

கடைசியாக, இன்னொரு விவரத்தையும் சொல்கிறேன், இஸ்லாமின் படி, முஹம்மது கூட அல்லாஹ்வோடு பேசியுள்ளார், அதுவும் ஜிப்ரீலின் உதவியில்லாமல் பேசியுள்ளார்.

தம்பி: இல்லையே! எல்லா குர்‍ஆன் வசனங்களையும் ஜிப்ரீல் தானே கொண்டு வந்து சேர்த்தார்.

உமர்: ஒரு நாள் இரவு, முஹம்மது ஏழு வானங்களுக்கு மேலே பயணம் செய்து நபிகளைச் சந்தித்து, அதன் பிறகு ஐந்து வேளை தொழுகையை அல்லாஹ்விடமிருந்து பெற்று வந்த ஹதீஸை படித்திருப்பாய் என்று நினைக்கிறேன்.

இந்த ஹதீஸின் படி, முஹம்மது அல்லாஹ்விடம் சென்று, தொழுகை எண்ணிக்கையை குறைக்கச் சொல்லி, 50 லிருந்து 5 வரை எண்ணிக்கையை குறைத்துக்கொண்டு வருகிறார். முஹம்மது அல்லாஹ்வோடு பேசும் அந்த நிகழ்ச்சியில் ஜிப்ரீல் முஹம்மதுவிற்கும் அல்லாஹ்விற்கும் இடையே இடைத்தரகராக செயல்படவில்லை. முஹம்மதுவே நேரடியாகச் சென்று பேசுவதாக வருகிறது.

புகாரி நூல் எண் 349

. . . 'அல்லாஹ் என்னுடைய உம்மத்தின் மீது ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான். (அதை ஏற்று) திரும்பி வந்து கொண்டிருந்தபோது, மூஸா(அலை) அவர்களின் பக்கமாகச் நான் சென்றபோது 'உங்கள் சமுதாயத்திற்கு அல்லாஹ் எதைக் கடமையாக்கினான்?' என அவர்கள் கேட்டார்கள். ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான் என்றேன். 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் சமூகம் அதற்கு சக்தி பெறாது' என மூஸா(அலை) கூறினார்கள். நான் திரும்பச் சென்றபோது அதில் கொஞ்சத்தை அல்லாஹ் குறைத்தான். (அதை ஏற்றுக் கொண்டு) நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்து கொஞ்சம் குறைத்துள்ளான் என்றேன். 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் சமூகம் அதற்கு(ம்) சக்தி பெறாது' என்றார்கள். நான் திரும்பிச் சென்றேன். அதில் (இன்னும்) கொஞ்சம் குறைத்தான். நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்தேன். (இன்னும் கொஞ்சம் குறைத்தான் என்றேன்). 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்களின் சமூகம் அதற்கு சக்தி பெறாது' என்றார்கள். நாம் திரும்பச் சென்றபோது 'ஐந்து நேரத் தொழுகையைக் கடமையாக்குகிறேன். அது ஐம்பதிற்கு சமம்; என்னுடைய சொல்லில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை' என்று அல்லாஹ் கூறினான். நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்தபோது 'உங்களுடைய இறைவனிடம் சென்று இதையும் குறைக்குமாறு கூறுங்கள்' என்றார்கள். இனிமேல் என்னுடைய இறைவனிடம் (குறைத்துக் கேட்பதற்கு) வெட்கப்படுகிறேன் என்று கூறினேன்.. . .

தம்பி: ஆமாம், இதையும் நான் கவனிக்கவில்லையே!

உமர்: தம்பி, உன் சந்தேகம் தீர்ந்ததா?

முதலாவதாக, மூஸாவோடு அல்லாஹ் பேசுவதாக வரும் வசனம், மூஸாவோடு மட்டுமே அல்லாஹ் பேசியதாக சொல்லப்படவில்லை, நீங்களாகவே கற்பனை செய்துக்கொண்ட வியாக்கீனம் அது. (4:164)

இரண்டாவதாக, சில நபிகளோடு அல்லாஹ் நேரடியாக பேசியும் உள்ளான் (குர்‍ஆன் 2:253)

மூன்றாவதாக, ஈஸாவோடு அல்லாஹ் நேரடியாக பேசியதாக குர்‍ஆன் வசனம் சொல்கிறது (3:55, 5:114, 115)

அல்லாஹ் ஆதாமோடும், ஏவாளோடும் நேரடியாக பேசியுள்ளான். அவ்வளவு ஏன் இப்லீஸிடமும் அல்லாஹ் நேரடியாக பேசியுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக, புகாரி ஹதீஸின் படி, முஹம்மதுவும், அல்லாஹ் பேசியுள்ளான்.

தம்பி: ரொம்ப நன்றி அண்ணா, நாம் பிறகு பேசுவோம், குட் நைட்

உமர்: குட் நைட் தம்பி.

கிறிஸ்தவர்கள் கவனத்திற்கு:

பைபிளின் படி, அல்லாஹ் மெய்யான தேவனில்லை, மேலும் முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசியாவார்.  குர்‍ஆன் என்பது நம்முடைய பரிசுத்த வேதாகமத்தின் தேவன் கொடுத்த வெளிப்பாடு அல்ல. குர்‍ஆனில் இயேசுவோடு அல்லாஹ் பேசுவதாக வரும் வசனங்கள் அனைத்தும் பொய்யாகும், அவைகள் சரித்திரத்தில் நடக்கவில்லை. மேலும், முஹம்மது செய்த வின்வெளிப் பயணம், மற்றும் அவர் அல்லாஹ்விடம் பேசியதெல்லாம் கட்டுக்கதையாகும். முஸ்லிம்கள் தங்கள் வேதத்தையும் சரியாக படித்து புரிந்துக்கொள்வதில்லை என்பதை அவர்களுக்கு விளக்கவே இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. எந்த வசனமாக இருந்தாலும், அது என்ன சொல்கிறது? அது என்ன சொல்லவில்லை என்பதை? முஸ்லிம்கள் புரிந்துக்கொண்டு படிக்கவேண்டும் என்பதற்காக இச்சிறிய கட்டுரை எழுதப்பட்டுள்ளது.


உமரின் கட்டுரைகள் பக்கம்

குர்-ஆன் ஆய்வு கட்டுரைகள் பக்கம்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/arabic_quran/allah_spoke_directly.html