ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

சனி, 28 செப்டம்பர், 2019

சலீமுடைய குர்‍ஆன் எங்கே?

"முஸ்லிம்கள் குர்‍ஆனை கற்க" தகுதியான மற்றும் சிறந்த‌ நான்கு தோழர்களின் பெயர்களை முஹம்மது முன்மொழிந்தார். இந்த நான்கு பேர்களில் சலீம் என்பவர் ஒருவர் ஆவார்.

உண்மையில், முஹம்மதுவின் தோழர்களில் முதன் முதலில் குர்‍ஆனை எழுத்து வடியில் சேகரித்து எழுதி வைத்திருந்தவர் 'சலீம்' ஆவார். (சுயூதி, அல்இத்கான், பக்கம் 135 - As Suyuti, Al-Itqan fii `Ulum al-Qur'an, Vol.1 p.135).

சலீம் தனது பணியில் மிகவும் அர்ப்பணிப்புடனும் உண்மையுடனும் இருந்தார். சலீமின் இந்த குர்ஆன் எவ்வளவு விலைமதிப்பற்ற, வரலாற்று மதிப்புமிக்க புத்தகமாக இருந்திருக்க வேண்டும்!

துரதிர்ஷ்டவசமாக, யமாமா போரில் சலீம் இறந்தார், ஆனால் அவர் எதிர்காலத்தில் வரவிருக்கும் அனைத்து முஸ்லிம் தலைமுறையினருக்கும் குர்ஆனின் விலைமதிப்பற்ற பொக்கிஷத்தை கொடுத்துச் சென்றார் - அது தான் அவர் தொகுத்திருந்த குர்‍ஆன் கையெழுத்து பிரதி.

முஹம்மது அறிவுரை கூறியது போன்று இன்றைய முஸ்லிம்களும் சலீமிடமிருந்து  அல்லது அவரது குர்‍ஆன் பிரதியிலிருந்து கற்றுக்கொள்ள முடியுமா?

துரதிர்ஷ்டவசமாக, இல்லை. 

சலீமின் கையெழுத்துப் பிரதி எரிக்கப்பட வேண்டும் என்று  உஸ்மான் கட்டளையிட்டார்! ஏன்? அவர் சலீமின் குர்ஆனைப் பற்றி பொறாமைப்பட்டாரா மற்றும் தன் பெயர் தாங்கிய குர்‍ஆன் பிரதியை முஸ்லிம்கள் பயன்படுத்தவேண்டும் என்று விரும்பினாரா?

முஹம்மதுவின் கட்டளையின்படி முஸ்லிம்கள் இன்று சலீமிடமிருந்து கற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லை. இந்த வாய்ப்பை முஸ்லிம்கள் இழப்பதற்கு காரணம் மூன்றாம் கலிஃபா உஸ்மான் அவர்கள் தான். இதற்கு உஸ்மானுக்கு முஸ்லிம்கள் நன்றி சொல்லவேண்டும்!

முஹம்மதுவின் கட்டளையை உஸ்மான் ஏன் மீறினார்?

முஹம்மது அங்கீகரித்த சலீமின் குர்‍ஆன் தொகுப்பு எரிந்து சாம்பளாகிவிட்டது.  இன்று முஸ்லிம்கள் யார் தொகுத்த குர்‍ஆனை பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்? 

முஹம்மதுவின் தொழர்கள் அனைவரும் குர்‍ஆனை முழுவதுமாக மனப்பாடம் செய்திருந்ததால், சலீம் தொகுத்த குர்‍ஆன் அழிக்கப்பட்டதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று முஸ்லிம்களில் சிலர் கூறுகின்றனர்.

அப்படியானால், சலீமின் குர்‍ஆன் கையெழுத்துப் பிரதி ஏன் அழிக்கப்பட்டது? அவர் அதை சரியாக மனப்பாடம் செய்யவில்லையா? குர்ஆனை ஒரு புத்தகமாக முதலில் சேகரித்தவர் அவர். இன்றைய குர்ஆனில் இல்லாத ஒன்று அதில் உள்ளதா? சலீமின் குர்‍ஆனில் உஸ்மானுக்கு ஒத்துவராத விவரம் இல்லாமல் இருந்தால், ஏன் அவர் அந்த குர்‍ஆனை அழிக்க முயன்றார்? உஸ்மானுக்கு சலீமின் குர்‍ஆனை அழிக்க ஏதாவது ஒரு காரணம் கிடைத்ததா?

உஸ்மானின் கட்டளைப்படி அழிக்கப்பட்டது வெறும் சலீமின் குர்‍ஆன் கையெழுத்து பிரதி மட்டுமல்ல, முஹம்மதுவினால் நியமிக்கப்பட்ட இதர சிறந்த குர்‍ஆன் அறிஞர்களின் கையெழுத்துப் பிரதிகளும் அழிக்கப்பட்டன. முஹம்மதுவினால் சிறந்த குர்‍ஆன் ஓதுபவர்கள் என்று சொல்லப்பட்டவர்களில் அப்துல்லாஹ் இப்னு மஸூத் மற்றும் உபய் பின் காப் போன்றவர்களும் இருந்தார்கள். இவர்களின் குர்‍ஆன் கையெழுத்துப்பிரதிகள் கூட அழிக்கப்பட்டது ஏன்?

இவர்களின் குர்‍ஆன் ஓதுதலும், கையெழுத்துப் பிரதிகளும் பிழையாக இருக்கும் என்று கூட சொல்லமுடியாது, ஏனென்றால், இவர்களிடத்தில் தவறு இருந்திருந்தால், இவர்களிடம் குர்‍ஆனை கற்றுக்கொள்ளுங்கள் என்று ஏன் முஹம்மது சொல்லுவார்? இவர்கள் சிறந்த குர்‍ஆன் ஓதும் அறிஞர்கள் என்று முஹம்மது முடிவு செய்தது தவறு என்று சொல்லமுடியுமா?  சிறந்த குர்ஆன் ஆசிரியர்களை அடையாளம் காண்பதில் முஹம்மது தவறு செய்தாரா?  இதுமட்டுமல்ல, இவர்களில் உபய் பின் காப் என்பவர் சிறந்த குர்‍ஆன் ஓதுபவர் என்று சஹீஹ் புகாரியிலும் சொல்லப்பட்டுள்ளது. இப்படி இருந்தும், இவருடைய குர்‍ஆன் கையெழுத்துப் பிரதி  கூட அழிக்கப்பட்டது.

முஹம்மதுவின் தோழர்கள் அனைவரும் குர்ஆனை முழுமையாக தவறில்லாமல் மனப்பாடம் செய்திருந்தால் அவர்களின் ஓதுதல், கையெழுத்துப் பிரதிகள் ஏன் தவறாக இருக்கும்? ஒருவேளை ஒவ்வொருவரும் குர்‍ஆன் முழுவதையும் மனப்பாடம் செய்யாமல், ஒவ்வொருவரும் குர்‍ஆனின் வெவ்வேறு பகுதிகளை மனப்பாடம் செய்தார்களா? முஹம்மதுவின் தோழர் சலீம் எப்படி குர்‍ஆனை மனப்பாடம் செய்தாரோ, எப்படி அவர் குர்‍ஆனை ஓதினாரோ அதே போல நீங்களும் இன்று ஓதுகிறீர்கள் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? அவரது குர்‍ஆன் அழிக்கப்பட்டுவிட்டதால், இதனை எப்படி நீங்கள் அறிந்துக்கொள்வீர்கள்?

ஆங்கில மூலம்: http://www.faithbrowser.com/where-is-salims-quran/


ஃபெயித் ப்ரவுசர் தள இதர கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள் பக்கம்

Source; https://www.answering-islam.org/tamil/authors/umar/faith_browser/where-is-salims-quran.html


முஸ்லிம்களே, இயேசுவைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்?

முஸ்லிம்கள் இயேசுவை நேசிக்கிறார்கள், மதிக்கிறார்கள், அவருடைய போதனைகளைப் பின்பற்றுகிறார்கள் என்று சொல்வதை பலமுறை நான் கேட்டிருக்கிறேன். இது உண்மையான கூற்றா?

முஸ்லிம்களுக்கு எனது கேள்வி என்னவென்றால், நீங்கள் உண்மையில் இயேசுவை அறிவீர்களா?  அவரைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்?

அவர் எங்கு பிறந்தார்? அவர் எங்கே வளர்ந்தார்? அவருக்கு சகோதர சகோதரிகள் இருந்தார்களா? அவர்களின் பெயர்கள் என்ன? அவருடைய நெருங்கிய‌ நண்பர்கள் யார்? தம்முடைய சீடர்களுக்கு அவர் எவைகளை போதித்தார்?  ஜெபத்தைப் பற்றி அவர் என்ன கற்பித்தார்? நோன்பு என்ற உபவாசம் பற்றி அவர் என்ன கற்பித்தார்? அவர் செய்த அற்புதங்கள் என்ன? மூஸா  மற்றும் இப்றாஹீம் மற்றும் இதர தீர்க்கதரிசிகள் பற்றி அவர் என்ன சொன்னார்?

முந்தைய‌ வேதங்களைப் பற்றி அவர் என்ன சொன்னார்? சொர்க்கம் மற்றும் நரகத்தைப் பற்றி அவர் என்ன கற்பித்தார்? எதிர்காலத்தைப் பற்றி அவர் என்ன சொன்னார்? அன்பைப் பற்றி அவர் என்ன கற்பித்தார்? பணத்தைப் பற்றி? குடும்பத்தைப் பற்றி? மரணம் பற்றி? இப்படி பல தலைப்புக்கள் பற்றி அவர் பேசியுள்ளாரே, அவைகளை நீங்கள் அறிவீர்களா?

முஸ்லிம் நண்பர்களே! இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி உங்களுக்குத் தெரியாத பல விஷயங்கள் உள்ளன. அவைகளை அறிந்துக்கொள்ளாமலேயே அவர் "எங்கள் தூதர் மற்றும் எங்கள் தீர்க்கதரிசி" என்று நீங்கள் கூறுகிறீர்கள். உங்கள் கூற்றில் நீங்கள் உண்மையுள்ளவராக இருந்தால், இயேசுவின் வாழ்க்கையையும் அவருடைய வார்த்தைகளையும் அவருடைய செயல்களையும் பற்றி மேலும் நீங்கள் அறிந்துக்கொள்ளவேண்டும்.

இயேசுவின் நெருங்கிய சீடர்கள் எழுதிய அவரது வாழ்க்கை வரலாறை படியுங்கள்.  நீங்கள் ஒரு உண்மையான முஸ்லீமாக இருந்தால், இயேசு ஒரு நபி என்று நம்பி, அவரை மதிக்கிறீர்கள், நேசிக்கிறீர்கள் என்றால், இன்ஜீலில் இருந்து இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி படிக்க நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் படிக்கும் சுவிசேஷத்தை நீங்கள் படிக்க மறுக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால் நற்செய்தி என்று அழைக்கப்படும் இன்ஜிலை இயேசுவை கண்ட சாட்சிகள் அதாவது அவரது சீடர்கள் எழுதினார்கள், எனவே அவரைப் பற்றிய விவரங்களை நீங்கள் அங்கே காணமுடியும்.

உதாரணமாக, இயேசு எங்கு பிறந்தார் என்று உங்களுக்குத் தெரியுமா? இன்ஜிலில் இதனை பார்க்கலாம். குர்ஆனில் இதனை நீங்கள் கண்டுபிடிக்க முடியாது.  இன்னொரு முக்கியமான விவரம் என்னவென்றால், இயேசு பிறந்த ஊரின் பெயர், ஹதீஸில் உள்ளது என்று சொன்னால், உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். நஸயீ ஹதீஸ் தொகுப்பு, அத்தியாயம் 5, ஹதீஸ் எண்: 451 ல் இதனை காணலாம் (https://ahadith.co.uk/permalink.php?id=7731).

 "மத்தேயு அல்லது மாற்கு அல்லது லூக்கா" நற்செய்தி நூல்களில் இயேசுவின் முழு வாழ்க்கையையும் ஏன் நீங்கள் படிக்கக்கூடாது? 

தமிழில் இன்ஜிலை படிக்க கீழ்கண்ட தொடுப்புக்களை சொடுக்கவும்:

உங்களிடம் ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால், அதை எழுதுங்கள். மேற்கண்ட இன்ஜிலை ஒருமுறையாவது முழுவதுமாக படித்துப் பாருங்கள்.

இயேசு என்ன சொன்னார்? வித்தியாசமான வினாடி வினா கேள்வி பதில்கள்

ஒரு வித்தியாசமான விளையாட்டை விளையாடுவோம் வாருங்கள். இந்த விளையாட்டின் பெயர் "இயேசு என்ன சொன்னார்" என்பதாகும். முக்கியமாக இந்த வினாடி வினாக்கள் முஸ்லிம்களுக்காக உருவாக்கப்பட்டது.

இந்த விளையாட்டில் 10 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கேள்விக்கும், இரண்டு தெரிவுகள் கொடுக்கப்பட்டு இருக்கும், அதாவது (A) மற்றும் (B). இவைகளில் நீங்கள் சரியான பதிலை தெரிவு செய்யவேண்டும். அந்த கேள்விக்கு உண்மையில் இயேசு என்ன பதில்  சொன்னார் என்பதை நீங்கள் தெரிவு செய்யவேண்டும்.  

எல்லா கேள்விகளும் இயேசு மக்களிடம் பேசிய‌ உரையாடல்களை அடிப்படையாகக் கொண்டவை. ஒவ்வொரு கேள்விக்கும் நீங்கள் சரியான பதிலை தெரிவு செய்தால், உங்களுக்கு 10 மதிப்பெண்கள் கிடைக்கும். அனைத்து கேள்விகளுக்கும் நீங்கள் சரியான‌ பதில் சொன்னால், உங்களுக்கு  100 மதிப்பெண்கள் கிடைக்கும்.   நீங்கள் 10 கேள்விகளுக்கும் சரியான பதிலைக் கொடுத்தால், உங்களுக்கு இயேசு பற்றி 100% தெரியும் என்று பொருள். ஒருவேளை சில  கேள்விகளுக்கு  தவறான பதில் கொடுத்திருந்தால், நீங்கள் இன்னும் இயேசு பற்றி கற்கவேண்டும் என்று பொருள்.

சரி வாருங்கள் கேள்விகளுக்குச் செல்லலாம்:

கேள்வி 1: தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதன் இயேசுவை அணுகி அவர் முன் மண்டியிட்டு,  கீழ்கண்டவாறு கூறுகின்றான். 

மனிதன்: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான்

இதற்கு இயேசு கீழ்கண்ட பதில்களில் ஒரு பதிலைச் சொன்னார்:

A) இல்லை, இது என் சித்தம் அல்ல. இது தேவனின் விருப்பத்தைப் பொருத்தது. தேவன் விரும்பினால், உன்னை அவர் சுகமாக்குவார், உன் தொழுநோய் நீங்கும், அவர் விரும்பவில்லையென்றால், உன்னை சுகமாக்க என்னால் முடியாது.

B) இயேசு தமது கையை நீட்டி அவனைத்தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார் (உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்)

----*----

கேள்வி 2:  ஒரு ரோம அரசு அதிகாரி இயேசுவிடம் உதவிக்காக வந்தான்.

ரோம அரசு அதிகாரி: ஆண்டவரே! என் வேலைக்காரன் வீட்டிலே திமிர்வாதமாய்க் கிடந்து கொடிய வேதனைப்படுகிறான் 

இயேசு அந்த அதிகாரியிடம்:

A) நீ வேறு மருந்துகளை அல்லது ஒட்டகத்தின் சிறுநீரை பயன்படுத்திப் பார்த்தயா? என்றார்

B) இயேசு: நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன் என்றார்

----*----

கேள்வி 3:  இயேசுவும் அவருடைய சீஷர்களும் ஒரு படகில் பயணம் செய்துக்கொண்டு இருந்தார்கள். அப்போது கடுமையான புயல் மற்றும் கடல் கொந்தளிப்பு வருகிறது. 

சீடர்கள்: "ஆண்டவரே, எங்களைக் காப்பாற்றுங்கள்! நாங்கள் மூழ்கப் போகிறோம்! " என்றார்கள்.

இயேசு சொன்னார்:

A) நாம் அனைவரும் ஜெபிப்போம். ஒருவேளை தேவன் நம்முடைய ஜெபத்தைக் கேட்டு, நம்மை இந்த கடும் புயலிலிருந்து காப்பாற்றக்கூடும். தேவன் மட்டும் தான் இயற்கையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். 

B) அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, இயேசு காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே, மிகுந்த அமைதலுண்டாயிற்று.

----*----

கேள்வி 4: அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் பிரேதக்கல்லறைகளிலிருந்து இயேசுவிற்கு எதிராக வந்தான். அவன் இயேசுவைத் தூரத்திலே கண்டபோது, ஓடிவந்து, அவரைப் பணிந்துகொண்டு, இயேசுவிடம்: 

அசுத்த ஆவிபிடித்த மனிதன்: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை ஏன் வேதனைப்படுத்த வந்தீர்? என்னை வேதனைப்படுத்தாதபடிக்குத் தேவன்பேரில் உமக்கு ஆணையென்றுச் சொன்னான். என்னை தொந்தரவு செய்யாதீர் என்றான்.

அவனுக்கு இயேசு:

A) பாரப்பா, நான் என் வேலையை பார்க்கிறேன், உன்னை துரத்த நான் வரவில்லை என்று இயேசு சொன்னார்.

B) அசுத்த ஆவியே, இந்த மனுஷனை விட்டுப் புறப்பட்டுப் போ என்று இயேசு சொன்னார்.

----*----

கேள்வி 5: பக்கவாதம் நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதன் இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்.

இயேசு: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்

அங்கு இருந்த‌ மத தலைவர்கள்: இது தேவதூஷணம் ஆகும், பாவங்களை மன்னிக்க இறைவனால் மட்டுமே முடியும் (என்று சொன்னார்கள்).

இதற்கு இயேசு கீழ்கண்டவாறு கூறினார்:

A) நீங்கள் சொல்வது உண்மை தான். இறைவன் மட்டும் தான் பாவங்களை மன்னிக்கமுடியும், என்னால் மன்னிக்க முடியாது.

B) பாவங்களை மன்னிக்க எனக்கு அதிகாரமுண்டு என்பதை இப்போது நிருபிக்கிறேன் பாருங்கள் என்றுச் சொல்லி அந்த மனிதனை குணமாக்கி அனுப்பினார்.

----*----

கேள்வி 6: ஜெபஆலயத்தலைவனாகிய யவீரு என்பவன் இயேசுவிடம் ஒரு உதவிக்காக வந்தான்.

யவீரு இயேசுவிடம்: என் மகள் மரண அவஸ்தை படுகிறாள்; ஆகிலும், நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான்

இயேசு யவீருவிடம் இப்படி கூறினார்: 

A) காலதாமதம் ஆகிவிட்டது, அவளை காப்பாற்ற என்னால் முடியாது, இனி தேவன் தான் அவளை காப்பாற்ற முடியும்.

B) பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார். (மரித்த அந்த சிறுமியை இயேசு உயிரோடு எழுப்பினார்)

----*----

கேள்வி 7: இயேசு தம்முடைய சீடர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்.

இயேசு: மக்களை என்னை யார் என்று கூறுகிறார்கள்?

சீமோன் (பேதுரு) என்ற சீடர்: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்

இதற்கு இயேசு இவ்விதமாக கூறினார்:

A) இல்லை, நான் தேவகுமாரன் இல்லை. நான் வெறும் ஒரு நபி/தீர்க்கதரிசி மட்டும் தான்

B) யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.

----*----

கேள்வி 8: ஒரு முறை சில பெற்றோர்கள் தங்கள் சிறு பிள்ளைகளை இயேசுவிடம் கொண்டு வந்தார்கள். குழந்தைகளின் தலை மீது இயேசு கரங்களை வைத்து ஆசீர்வதிப்பார் என்று எதிர்ப்பார்ப்போடு வந்தார்கள்.

இயேசுவின் சீடர்கள்: இங்கேயிருந்து சென்றுவிடுங்கள். இயேசுவிற்கு இதற்கெல்லாம் இப்போது நேரமில்லை என்றனர்.

இயேசு சீடர்களிடம் இவ்விதமாக கூறினார்:

A) சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள். நான் திருமணம் செய்யும் படி சிறுமிகளில் யாராவது இருப்பார்களா என்று நான் பார்க்கட்டும்.

B) சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி, அவர்கள் மேல் கைகளை வைத்து ஆசீர்வதித்தார்.

----*----

கேள்வி 9: பத்து குஷ்டரோகிகளை இயேசு குணமாக்கினார். அவர்களில் ஒருவன் மட்டும் இயேசுவிற்கு நன்றி சொல்ல, அவரிடம் வந்தார்.

குணமாக்கப்பட்ட மனிதன்: உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி, அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்.

அவனுக்கு இயேசு இவ்விதமாக கூறினார்:

A) இப்படி எனக்கு நீ நன்றி சொல்லக்கூடாது. நான் ஒரு ஊழியக்காரன் மட்டும்தான். நான் உன்னை சுகமாக்க வில்லை, தேவன் தான் உன்னை சுகமாக்கினார், அவருக்கு நீ நன்றி செலுத்து.

B) சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே? தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்றார்.

----*----

கேள்வி 10: இயேசு மரித்ததிலிருந்து உயிரோடு எழுந்திருந்து, தம்முடைய சீடர்களுக்கு காணப்பட்டார்.

தோமா என்ற சீடர் இயேசுவிடம்: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்

அப்பொழுது இயேசு அந்த சீடரிடம்:

A) கடைசியாகச் சொல்கிறேன் தோமா! இனி இப்படி சொல்லாதே! நிறுத்து. என்னை ஆண்டவர் என்றோ, தேவன் என்றோ சொல்லக்கூடாது என்று எத்தனை முறை உனக்குச் சொல்வது.

B) தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.

----*----

[மேற்கண்ட கேள்விகள் பைபிளின் புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூல்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன, இந்த அத்தியாயங்களை முழுவதுமாக படிக்க, கொடுக்கப்பட்ட தொடுப்புக்களை சொடுக்கவும்:  

ஆங்கில மூலம்: http://www.faithbrowser.com/what-did-jesus-say-quiz/


ஃபெயித் ப்ரவுசர் தள இதர கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள் பக்கம்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/faith_browser/what-did-jesus-say-quiz.html


ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

அல்லாஹ்வும் இயேசுவும் கடவுள்களா? முஸ்லிம்கள் ஏன் குர்‍ஆன் 9:31ஐ தவறாக மொழியாக்கம் செய்கிறார்கள்?

முன்னுரை: 

குர்‍ஆனின் 9வது அத்தியாயத்தின் 31வது வசனத்தை இந்த கட்டுரையில் ஆய்வு செய்வோம்.  இந்த வசனத்தை மொழியாக்கம் செய்தவர்கள் உண்மையை மறைத்து மொழியாக்கம் செய்துள்ளார்கள்.  அல்லாஹ் சொன்னதை மறைத்து தங்கள் சொந்த கற்பனையை  சொல்லியுள்ளார்கள். இந்த சிறிய கட்டுரையில், தமிழ், ஆங்கிலம் மற்றும் அரபி மூலங்களில் இந்த ஒரு வசனத்தை ஆய்வு செய்துப் பார்ப்போம். 

உப தலைப்புக்கள்:

  1. குர்‍ஆன் 9:31 - ஐந்து தமிழாக்கங்கள்
  2. குர்‍ஆன் 9:31 - நான்கு ஆங்கில மொழியாக்கங்கள்
  3. குர்‍ஆன் 9:31 - அரபி மூலமும் ஒலியாக்கமும்
  4. இஸ்லாமிய அறிஞர்களின் வஞ்சகம்
  5. இஸ்லாமின் அடித்தளத்தை தகர்க்கும் வசனம் 9:31
  6. குர்‍ஆன் 9:30 & 9:31 - இயேசுவை அல்லாஹ்வின் மகன் என்றுச் சொல்லாதீர்கள், கடவுள் என்றே சொல்லுங்கள்
  7. முடிவுரை

1) குர்‍ஆன் 9:31 ஐந்து தமிழாக்கங்கள் 

குர்‍ஆன் 9:31ஐ ஐந்து தமிழ் மொழியாக்கங்களில் படிப்போம். இந்த வசனத்தின் முதல் வாக்கியத்தை நாம் ஆய்வு செய்யப் போகிறோம். யூதர்களும் கிறிஸ்தவர்களும் அல்லாஹ்வை விட்டுவிட்டு தங்கள் ரபீக்களையும் சந்நியாசிகளையும் மற்றும் இயேசுவையும் தெய்வங்களாக ஆக்கிக் கொண்டார்கள் என்று இந்த வாக்கியம் சொல்வதாக முஸ்லிம் அறிஞர்கள் மொழியாக்கம் செய்துள்ளார்கள். இதன் உண்மை நிலை என்ன என்பதை ஆய்வு செய்வதுதான் இந்த கட்டுரையின் நோக்கம்.

டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

9:31. அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை - அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்.

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்

9:31. இவர்கள் அல்லாஹ்வையன்றி தங்கள் பாதிரிகளையும், சந்நியாசிகளையும், மர்யமுடைய மகன் மஸீஹையும், (தங்கள்) கடவுள்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர். எனினும், வணக்கத்திற்குரிய ஒரே இறைவனைத் தவிர மற்றெவரையும் வணங்கக் கூடாதென்றே இவர்கள் அனைவரும் ஏவப்பட்டு இருக்கின்றனர். வணக்கத்திற்குரிய இறைவன் அவனையன்றி (வேறெவனும்) இல்லை. அவர்கள் இணை வைக்கும் இவைகளை விட்டு அவன் மிகவும் பரிசுத்தமானவன்.

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்

9:31. அவர்கள் அல்லாஹ்வை விடுத்து மார்க்க மேதைகளையும், துறவிகளையும் தங்களின் ரப் கடவுளராக்கிக் கொண்டார்கள். மேலும் (இதே போன்று) மர்யத்தின் குமாரர் மஸீஹையும் (இறைவனாக்கிக் கொண்டனர்). உண்மை யாதெனில், ஒரே இறைவனைத் தவிர வேறெவரையும் வணங்க அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டதில்லை. வணக்கத்திற்குரிய இறைவன் அவனையன்றி யாரும் இல்லை. அவர்கள் செய்யும் இணைவைப்புச் செயல்களிலிருந்து அவன் தூய்மையானவன்.

மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்

9:31. (இவ்வாறே) அவர்கள் அல்லாஹ்வையன்றித் தங்கள் பாதிரிகளையும், தங்கள் சந்நியாசிகளையும் மர்யமுடைய குமாரர் மஸீஹையும் தங்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டனர். இன்னும், ஒரே ஒரு இரட்சகனையே வணங்க வேணடுமென்றல்லாது (வேறு எதனையும்) அவர்கள் கட்டளையிடப்படவில்லை, அவனையன்றி வணக்கத்திற்குரியவன் (வேறெவரும்) இல்லை, அவர்கள் இணைவைப்பவற்றைவிட்டும் அவன் மிகவும் பரிசுத்தமானவன்.

பி ஜைனுல் ஆபிதீன் தமிழாக்கம்

9:31. அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன்  மஸீஹையும் கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறுதான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன்.

2) குர்‍ஆன் 9:31 - நான்கு ஆங்கில மொழியாக்கங்கள்

இப்பொழுது இதே குர்‍ஆன் 9:31ம் வசனத்தை நான்கு ஆங்கில மொழியாக்கங்களில் படிப்போம். முதல் வாக்கியத்தை கூர்ந்து கவனிக்கவும்.

Yusuf Ali

They take their priests and their anchorites to be their lords in derogation of Allah, and (they take as their Lord) Christ the son of Mary; yet they were commanded to worship but One Allah: there is no god but He. Praise and glory to Him: (Far is He) from having the partners they associate (with Him). (9:31)

PICKTHALL

They have taken as lords beside Allah their rabbis and their monks and the Messiah son of Mary, when they were bidden to worship only One Allah. There is no Allah save Him. Be He Glorified from all that they ascribe as partner (unto Him)!

SAHIH INTERNATIONAL

They have taken their scholars and monks as lords besides Allah, and [also] the Messiah, the son of Mary. And they were not commanded except to worship one God; there is no deity except Him. Exalted is He above whatever they associate with Him.

SHAKIR

They have taken their doctors of law and their monks for lords besides Allah, and (also) the Messiah son of Marium and they were enjoined that they should serve one Allah only, there is no god but He; far from His glory be what they set up (with Him).

3) குர்‍ஆன் 9:31 அரபி மூலமும் ஒலியாக்கமும்

9:31ம் வசனத்தை அரபியில் படிப்போம், 

ஆங்கில ஒலியாக்கம் (Transliteration):

Ittakhathoo ahbarahum waruhbanahum arbaban min dooni Allahi waalmaseeha ibna maryama wama omiroo illa liyaAAbudoo ilahan wahidan la ilaha illa huwa subhanahu AAamma yushrikoona

முதல் வாக்கியத்தின் ஒவ்வொரு அரபி வார்த்தையின் பொருளை காண்போம்.

மேலே கண்ட ஒரு வாக்கியத்தில் இரண்டு பிரிவுகள் உள்ளதைக் காணலாம். அதாவது "அவர்கள் யாரை விட்டுவிட்டு, வேறு யாரை தெய்வங்களாக ஏற்றுக்கொண்டார்கள்"? என்ற கேள்விக்கு, அரபி மூலத்திலிருந்து அறிவது என்னவென்றால், "அவர்கள் அல்லாஹ்வையும், கிறிஸ்துவையும் தெய்வங்களாக ஏற்றுக்கொள்வதை விட்டுவிட்டு, ரபீக்களையும், சந்நியாசிகளையும் தெய்வங்களாக ஏற்றுக்கொண்டார்கள்" என்பதாகும். இரண்டு பேரை (அல்லாஹ்வை, கிறிஸ்துவை) புறக்கணித்து, வெறு இரண்டு பேர்களை (ரபீக்களை, சந்நியாசிகளை) தெய்வங்களாக ஏற்றுக்கொண்டார்கள் என்பதாகும்.

அரபியில் "மின் தூனி" என்ற இரண்டு சொற்களுக்கு "தவிர, விட்டு விட்டு, பதிலாக‌" என்பது பொருள்.  இந்த சொற்களுக்கு அடுத்ததாக "அல்லாஹி வல் மஸீஹா" என்று வருகிறது. இதன் பொருள் "அல்லாஹ்வையும் மற்றும் கிறிஸ்துவையும்" என்பதாகும்.  

அரபியில் "அல்லாஹ்வை மற்றும் கிறிஸ்துவையும் தெய்வங்களாக ஏற்றுக்கொள்வதை விட்டுவிட்டு, ரபீக்களையும், சந்நியாசிகளையும் அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்" என்று தெளிவாக சொல்லியிருக்கும் போது, இவ்வசனத்தை மொழியாக்கம் செய்தவர்கள் தில்லுமுல்லு செய்துள்ளார்கள். அதனை இப்போது காண்போம்.

4) இஸ்லாமிய அறிஞர்களின் வஞ்சகம்

இதுவரை குர்‍ஆன் 9:31ஐ தமிழ், ஆங்கிலம் மற்றும் அரபியில் கண்டோம். முஸ்லிம் அறிஞர்கள் அரபியில் உள்ளது போல தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ மொழியாக்கம் செய்துள்ளார்களா என்று கவனித்தால், அவர்கள் அரபிக்கு எதிராக மொழியாக்கம் செய்துள்ளார்கள் என்று தெரியவருகிறது. அரபி மூலத்திற்கு எதிராக செயல்படுவது என்பது  அல்லாஹ்விற்கு எதிராக செயல்படுவதாக அர்த்தமாகின்றதல்லவா?  அல்லாஹ்விற்கு தெரியாத இலக்கணம், மொழியின் ஆழம், முஸ்லிம் அறிஞர்களுக்கு வந்துவிட்டது! என்று இவர்கள் எண்ணிக் கொண்டுள்ளார்கள்.

 இவர்கள் என்ன செய்தார்கள் என்பதை சுருக்கமாக காணலாம்.

அரபி மூலத்தில் இந்த வசனம் நான்கு வாக்கியங்களைக் கொண்டுள்ளது.

வாக்கியம்-1அவர்கள் அல்லாஹ்வையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்.
வாக்கியம்-2ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்;
வாக்கியம்-3வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை
வாக்கியம்-4அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்

அல்லாஹ் மிக்க ஞானமிக்கவன், அவனுடைய ஞானத்திற்கு ஈடு இணை இல்லை என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். ஆனால், முதல் வாக்கியத்தை அரபி மூலத்தில் பார்க்கும் போது, "யூதர்களும் கிறிஸ்தவர்களும் அல்லாஹ்வையும் கிறிஸ்துவையும் தெய்வங்களாக ஏற்றுக்கொள்வதை விட்டுவிட்டு, ரபீக்களையும், துறவிகளையும் தெய்வங்களாக்கிக் கொண்டார்கள்" என்று அல்லாஹ் 9:31ல் சொல்கிறான்.

அரபி மூலத்தின் படி "இடம் சுட்டி பொருள் விளக்கம்" கொடுத்தால்:

  • இந்த வசனத்தில் வரும் "அவர்கள்" யார்? யூதர்களும் கிறிஸ்தவர்களும்
  • "யாரை" அவர்கள் தெய்வங்களாக கருதாமல்  விட்டு விட்டார்கள்? அல்லாஹ்வையும் மஸீஹ்வையும் (கிறிஸ்துவை)
  • "யாரை" தெய்வங்களாக்கிக் கொண்டார்கள்? ரபீக்களையும் சந்நியாசிகளையும்

ஆனால், முஸ்லிம் அறிஞர்கள், அல்லாஹ் தன் குர்‍ஆன் வசனத்தில் தவறு செய்துள்ளான் என்றுச்  சொல்லி, மஸீஹ் என்ற பெயரை ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றி பொருள் கூறுகிறார்கள். 

முஸ்லிம் அறிஞர்கள் மொழியாக்கத்தில் செய்த வஞ்சகத்தைப்  பாருங்கள்:

டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்;

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்

இவர்கள் அல்லாஹ்வையன்றி தங்கள் பாதிரிகளையும், சந்நியாசிகளையும், மர்யமுடைய மகன் மஸீஹையும், (தங்கள்) கடவுள்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்

அவர்கள் அல்லாஹ்வை விடுத்து மார்க்க மேதைகளையும், துறவிகளையும் தங்களின் ரப் கடவுளராக்கிக் கொண்டார்கள். மேலும் (இதே போன்று) மர்யத்தின் குமாரர் மஸீஹையும் (இறைவனாக்கிக் கொண்டனர்).

மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்

(இவ்வாறே) அவர்கள் அல்லாஹ்வையன்றித் தங்கள் பாதிரிகளையும், தங்கள் சந்நியாசிகளையும் மர்யமுடைய குமாரர் மஸீஹையும் தங்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டனர்.

பி ஜைனுல் ஆபிதீன் தமிழாக்கம்

அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன்  மஸீஹையும் கடவுள்களாக்கினர்

5) இஸ்லாமின் அடித்தளத்தை தகர்க்கும் வசனம் 9:31

இவ்வசனத்தின் அரபி மூலம், இஸ்லாமின் அஸ்திபாரத்தை ஆட்டம் காணவைக்கிறது என்பதை மொழியாக்கம் செய்தவர்கள் கவனித்தார்கள். எனவே, மஸீஹ் என்ற வார்த்தையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்துள்ளர்கள்.

IFT மொழியாக்கம் செய்தவர்கள்,  "(இதே போன்று)" மற்றும் "(இறைவனாக்கிக் கொண்டனர்)"  என்ற சொற்றொடர்களை அடைப்பிற்குள் போட்டு, அல்லாஹ்வின் ஞான குறைப்பாட்டை சரி செய்துவிட்டதாக நினைத்துள்ளார்கள்.

இவ்வசனத்தை அரபியில் உள்ளது போல மொழியாக்கம் செய்தால் என்ன தீமை உண்டாகும்?

  • இஸ்லாமின் அஸ்திபாரம் ஆட்டம் காணும்
  • இயேசு அல்லாஹ்விற்கு சமமான இறைவன் என்று அவர்கள் ஏற்கவேண்டி வரும்.
  • இஸ்லாமின் இறையியலுக்கு எதிராக இந்த வசனம் உள்ளது, எனவே அல்லாஹ் இதனை எப்படி இறக்கியிருக்கமுடியும்? என்ற சந்தேகம் வரும். 
  • குர்‍ஆனின் அரபி மூலத்தில் மனிதர்களின் கைகள் பட்டு, இந்த வசனம் மாற்றப்பட்டுள்ளது என்று எண்ணவேண்டி வருமே!
  • இது உண்மையானால், குர்‍ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று முஸ்லிம்கள் ஏற்கவேண்டி வரும். அல்லாஹ் தன் வேதத்தை காக்கவில்லை என்று முஸ்லிம்கள் நம்பவேண்டி வரும்.

எது எப்படியோ, அல்லாஹ் தன் முழூ குர்‍ஆனை பொய்யாக்கும் இந்த வசனத்தை தன்னை அறியாமல் குர்‍ஆனில் புகுத்தி விட்டான், அல்லது மனிதன் தன் கடைசி வேதத்தில் விளையாடியதை கண்டும் காணதவன் போல இருந்துவிட்டான். எனவே, மொழியாக்கம் செய்தவர்கள், அல்லாஹ்வின் இந்த அறியாமையை போக்க, தாங்கள் சுயமாக குர்‍ஆன் வசனத்தின் விளக்கத்தில் மாற்றம் செய்து, உலக மக்களை ஏமாற்ற முயன்றுள்ளார்கள் என்று தெரிகின்றது.

இஸ்லாமுக்கு வந்த இன்னொரு சிறிய சிக்கல்: 

6) குர்‍ஆன் 9:30 & 9:31: இயேசுவை அல்லாஹ்வின் மகன் என்றுச் சொல்லாதீர்கள், கடவுள் என்றே சொல்லுங்கள்:

இன்னொரு விஷயமும் இங்கு அடிபடுகிறது, நாம் ஆய்வு செய்த  வசனத்துக்கு முன்புள்ள வசனத்தை கவனித்தால், இன்னொரு முரண்பாடு பளிச்சிடுகின்றது.

குர்‍ஆன் 9:30ஐ படிப்போம்:

9:30. யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்?

இந்த வசனத்தில் "கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்" இது தவறு என்று அல்லாஹ் சொல்கின்றான். ஆனால், அடுத்த வசனத்திலேயே மஸீஹை (கிறிஸ்துவை) தனக்கு சமமான கடவுள் என்றுச் சொல்கிறான்.

அரபி மூலம் 9:31: அவர்கள் அல்லாஹ்வையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர். . .

இவ்விரண்டு வசனங்களை கவனிக்கும் போது, 30வது வசனத்தின் படி 'மஸீஹ் அல்லாஹ்வின் மகன்' என்றுச் சொல்லக்கூடாது, ஆனால் 31வது வசனத்தின் படி 'மஸீஹ் கடவுள்' என்றுச் சொல்லலாம்.

7. முடிவுரை:

இதுவரை குர்‍ஆனின் 9:31ம் வசனத்தையும், கடைசியில் 30வது வசனத்தையும் ஆய்வு செய்தோம்.

அல்லாஹ்வோ அல்லது முஹம்மதுவோ, யார் குர்‍ஆனை இறக்கியிருந்தாலும் சரி, குர்‍ஆன் 9:31வது வசனம், குர்‍ஆனின் மொத்த ஏகத்துவ கோட்பாட்டிற்கு சாவு மணி அடித்துள்ளது.  இதனை கவனித்த குர்‍ஆன் மொழியாக்க அறிஞர்கள், தில்லுமுல்லு செய்து, எப்படியாவது பொருள் மாறும் படி செய்துள்ளார்கள். மொழியாக்கம் செய்தவர்கள் தமிழாக்கத்தில் கை வைக்கமுடியும், அரபியில் கைவைக்க முடியுமா? 

இப்போது விடைகாணமுடியாத‌ கேள்வி எதுவென்றால், யூதர்களும் கிறிஸ்தவர்களும், அல்லாஹ்வையும் கிறிஸ்துவையும் கடவுளாக ஏற்காமல், ரபீக்களையும் சந்நியாசிகளையும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்று சொல்லும் குர்‍ஆன் 9:31 வது வசனத்தை முஸ்லிம்கள் என்ன செய்யப்போகிறார்கள்? இந்த வசனம் மக்காவில் இறக்கப்பட்டு இருந்திருந்தால், மதினாவின் வசனத்தினால் இது இரத்து செய்யப்பட்டுவிட்டது என்று முஸ்லிம்கள் சொல்ல வாய்ப்பு உண்டாகும். ஆனால், இந்த அத்தியாயம் குர்‍ஆனில் கடைசியாக இறக்கப்பட்ட அத்தியாயம் என்று முஸ்லிம்கள் சொல்கின்றபடியினால், அந்த ஒரு வாய்ப்பும் அவர்களுக்கு கிடைக்காமல் போய்விட்டது.

முஸ்லிம்கள் என்ன செய்யப்போகிறார்கள்? இந்த வசனத்தை இப்படி அரபியில் இறக்கியவனைப் பார்த்து, 'ஏன் இப்படி செய்தாய்?' என்று கேட்கலாம் அவ்வளவு தான். அல்லாஹ் சர்வ ஞானி இல்லை, அவனுக்கு அரபியில் ஒரு  சரியான வசனத்தை இறக்கத்தெரியவில்லை என்று முஸ்லிம்கள் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த குர்‍ஆன் ஆய்வுக்கட்டுரையில் சந்திப்போம்.


இதர குர்-ஆன் ஆய்வுக்கட்டுரைகள்

குர்-ஆன் பக்கம்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: