ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

ஞாயிறு, 25 ஜூலை, 2021

Answering PJ: ஆயிரத்தில் ஒருவன் அல்லாஹ்(அஹத்) - 5: அஹத் ஓர் இலக்கணப்பிழை

முந்தைய கட்டுரைகளும் பதில்களும்:

  1. நம் கேள்வி: அல்லாஹ்வும் அஹத் வார்த்தையும் (112:1) - அல்லாஹ் "ஒருவனா?" (அ) "ஆயிரத்தில் ஒருவனா?"
  2. பீஜே அவர்களின் பதில்: கிருஸ்துவர்களின் அஹத் ஒரு ஆய்வு கட்டுரைக்கு பிஜே யின் பதில் | நேரலை | 05/07/2021 | PJ
  3. பீஜே அவர்களுக்கு நம்முடைய பரிசு: Answering PJ: ஆயிரத்தில் ஒருவன் அல்லாஹ்(அஹத்) - 2: பீஜே அவர்களின் ஒரு வீடியோ பதிலுக்கு ஒரு ஆயிரம் பரிசு
  4. பீஜே அவர்களுக்கு முதல் பதில்: Answering PJ: ஆயிரத்தில் ஒருவன் அல்லாஹ்(அஹத்) - 3: அஹதுக்கு எண்களும், பன்மையும், பெண்மையும் உண்டு!
  5. Answering PJ: ஆயிரத்தில் ஒருவன் அல்லாஹ்(அஹத்) - 4: இலக்கண பிழையையே அரபியின் சிறப்பம்சம் என்றுச் சொல்வது அல்லாஹ்விற்கே அடுக்காது 

குர்‍ஆன் 112:1ல் வரும் "அஹத்" என்ற வார்த்தைப் பற்றிய நம்முடைய முந்தைய ஆய்வுக் கட்டுரைக்கு பீஜே அவர்கள் கொடுத்த பதில்களுக்கு மறுப்புக்களைக்  கொடுத்துக்கொண்டு இருக்கிறோம்.  இந்த தொடரில் அவரது மீதமுள்ள விவரங்களை ஆய்வு செய்வோம்.

பீஜே அவர்களின் பதில்: 

1. பிலால் நிகழ்ச்சி ஒரு உதாரணம் ஆகும்,  அவர் துன்புறுத்தப்படும் போது "அஹதுன் அஹத்" என்றார்,  வாஹிது என்றுச் சொல்லவில்லை. அன்று பிலால் இதே அர்த்த‌த்தில் சொன்னார், மற்றவர்களும் அதே அர்த்தத்தில் புரிந்துக்கொண்டார்கள்.

நம்முடைய முந்தைய பதிலில், அஹத் என்ற வார்த்தை குர்‍ஆன் 112:1ல் வந்திருப்பது, அரபி மொழி இலக்கண பிழை என்பதை சான்றுகளோடு நிருபித்தோம்.  குர்‍ஆனின்  இந்த 112வது  அத்தியாயத்திற்கு முன்பு, அரபி மொழி வழக்கத்தில் உடன்பாட்டு வாக்கிய அமைப்பில் இந்த அஹத் வார்த்தையை யாருமே பயன்படுத்தவில்லை. முதன் முதலில் ஒரு இலக்கண பிழையை குர்‍ஆன் செய்துள்ளது என்பதை காட்டினோம்.

முஸ்லிம் அறிஞர்களின் கூற்றுப்படி, குர்‍ஆனின் 112 வது அத்தியாயம், மக்காவில் இறங்கியதாக சில ஹதிஸ்கள் உள்ளன, அதே போன்று மதினாவில் இறங்கியதாகவும் சில ஹதீஸ்கள் உள்ளன. 

ஒருவேளை மதினாவில் தான் இந்த 112வது அத்தியாயம் உண்மையாக இறங்கியிருந்தால், பிலாலின் மேற்கண்ட விவரத்தின் படி, பிலால் செய்த பிழையைத் தான் அல்லாஹ் குர்‍ஆனில் புகுத்திவிட்டான் என்று சொல்ல வாய்ப்பு இருக்கின்றதல்லவா?

ஒருவேளை மக்காவில் இந்த அத்தியாயம் இறக்கப்பட்டு இருந்தது என்று வைத்துக்கொண்டாலும்,  இந்த அத்தியாயத்தை பிலால் நன்கு அறிந்திருக்கிறார் என்று வைத்துக்கொண்டாலும், அவரை மக்கா மக்கள் துன்புறுத்தும் போது, பிலால் எப்படி உச்சரித்தாலும் அது யாரையே குறிக்கும்? அல்லாஹ்வைத் தானே!

பிலால் "அஹதுன் அஹதுன்" என்று சொல்வதற்கு பதிலாக, "வாஹித், வாஹித்" என்று கத்தியிருந்தாலும் அது யாரைத் தான் குறிக்கும்? அல்லாஹ்வைத் தானே!

இதே போன்று, பிலால் "இலா இலா" என்று அரபியில் எல்லா சாமிகளுக்கும் பயன்படுத்தும் பொதுவான‌ வார்த்தையை  உச்சரித்திருந்தாலும், அது யாரை குறித்து இருந்திருக்கும்? காபாவில் இருந்த 360 விக்கிரகங்களை குறித்திருக்குமா? இல்லையல்லவா? எந்த இறைவனுக்காக அவர் துன்புறுத்தப்படுகிறாரோ அவரைத் தானே அது குறிக்கும்?

சரி போகட்டும்,  பிலால் "வாஹித் வாஹித் "என்று சொல்லியிருந்தால், அது அல்லாஹ்வை குறிக்காதா? அல்லாஹ்விற்கு இருக்கும் 99 பெயர்களில் "அல் வாஹித்" என்றும் ஒரு பெயர் இருக்கின்றதல்லவா? 

ஏற்கனவே குர்‍ஆன் ஒரு இலக்கண பிழையை செய்துள்ளது என்பதை நாம் விளக்கிவிட்டோம், அதை சரி என்று நம்பி பிலால் சொல்லியிருந்திருக்கலாம் அல்லவா? மேலும், பெரும்பான்மையான மக்கா மக்கள் படிப்பறிவில்லாதவர்கள் என்பதை அறிவோம். இதன் படி பார்த்தால், ஒரு மனிதனை துன்புறுத்தப்படும் போது (Torture) , அவன் குய்யோ முறையோ என்று கத்தும் போது, யாராவது இலக்கண பிழைகளை பார்ப்பார்களா? நீ ஏன் இங்கு பெயர்ச்சொல்லை பயன்படுத்தாமல், உரிச்சொல்லை பயன்படுத்தினாய்? இந்த இடத்தில், இந்த வார்த்தை இப்படி வரக்கூடாது, இது இலக்கணப்பிழையாகும் என்று சொல்லுவார்களா?

சரி, இந்த வரிகளை வாசிக்கின்ற நீங்கள் குறைந்தபட்சம் 10வது வரையாவது படித்திருந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்களால் பெயர்ச்சொல், உரிச்சொல், வினைச்சொல், " வல்லினம் மிகும் இடங்கள்" "வல்லினம் மிகா இடங்கள்"  போன்றவைகள் பற்றிய தமிழ் இலக்கண விதிகளை, வாக்கிய  அமைப்பு விதிகளை சரியாக ஞாபகப்படுத்திச் சொல்லமுடியுமா? 

இலக்கணம் என்று வரும்  போது, ஓரளவு படிப்பறிவுள்ள நமக்கே சில வேளைகளில் தலை சுற்றுகிறதே, மக்காவின் படிப்பறிவில்லாதவர்கள் "எப்படி" பிலால் "அஹதுன் அஹதுன்" என்று கத்தும் போது, இலக்கண விதிகளை தேடிக்கொண்டு இருப்பார்கள்?

பீஜே அவர்களின் பதில்: 

2. ஒரு மொழியின் அர்த்தம் அந்த மொழிக்காரர்கள் எப்படி புரிந்துக் கொண்டுள்ளார்களோ, அதை வைத்து தான் பார்க்கவேண்டும். அக்கால மக்கள் அஹது என்ற வார்த்தையை எதற்கு பயன்படுத்தினார்கள் என்பதை பார்க்கவேண்டும். 

3. முஹம்மது அஹது என்று அல்லாஹ்வைப் பற்றி சொன்ன போது, "அல்லாஹ் பலரில் ஒருவர்" என்று இவர் சொல்கிறாரே என்று புரிந்துக்கொண்டு ஏன் அவரை ஆதரிக்கவில்லை? அம்மக்கள் ஏன் அவரை எதிர்த்தார்கள்?

உண்மை தான், ஒரு மொழியில் உள்ள‌ சில வார்த்தைகளின் சரியான அர்த்தம் அம்மொழி பேசும் மக்கள் தான் சரியாக அறியமுடியும். ஆனால், படிப்பறிவில்லாத சமுதாயம் எப்படி மொழியின் உண்மை பொருளை அறிவார்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்?

தமிழை தாய்மொழியாக கொண்டுள்ள நம்மில் எத்தனை பேருக்கு, 'திருக்குறளை' விளக்கவுரையில்லாமல் பொருள் கூறமுடியும் சொல்லுங்கள் பார்க்கலாம்? நம்மில் எத்தனை பேருக்கு அகநானூறு, புறநானூறு, கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற செய்யுள்கள் விளக்கவுரை இல்லாமல் புரியும்?

ஆக, அரபிக்கு வரும்  போது கூட இதே நிலை தான், அனேக நேரங்கள் சஹாபாக்களுக்கே சில வார்த்தைகளின் பொருள் புரிவதில்லை, உடனே முஹம்மதுவிடம் கேட்பார்கள். இவர்களின் தாய்மொழி அரபி தானே! ஒவ்வொருவரும் 40+ ஆண்டுகள் கடந்துள்ளவர்களும் இருந்தார்களே! ஏன் இவர்களுக்கு குர்‍ஆனில் வரும் அனேக வார்த்தைகள் புரியவில்லை?

இது மட்டுமல்லாமல், இந்த "அஹத்" என்ற வார்த்தையின் பயன்பாடு குர்‍ஆனில் ஒரு இலக்கணப்பிழையாகும், இதனை எல்லா அறிஞர்களும், பீஜே உட்பட ஒப்புக்கொண்டுள்ளார்கள். இதனால் தான் "குர்‍ஆனில் இவ்வார்த்தையின் பயன்பாடு ஒரு இலக்கணப்பிழை" என்று நேரடியான பதிலை கொடுக்காமல், பீஜே அவர்கள் அங்கும் இங்கும் சுற்றி பதில் கொடுத்துள்ளார், மன்னிக்கவும் பதில் கொடுக்க முயன்றுள்ளார்.

இந்த அத்தியாயம் மதினாவில் இறங்கியதாக இருந்திருந்தால், மக்கா மக்கள் இந்த அஹது வார்த்தைப் பற்றி முஹம்மதுவிடம் கேள்வி கேட்கவேண்டிய‌ அவசியம் இருந்திருக்காது. 

பீஜே அவர்களின் பதில்: 

4. கிறிஸ்தவர்கள் எடுத்துக்காட்டும் வசனங்களில், அஹத் வார்த்தையோடு சேர்த்து வேறு வார்த்தையும் சொல்வார்கள். அப்போது தான் வாஹித் அர்த்தம் வரும், இது ஒருவகை.  அஹது வார்த்தைகளின் வாக்கிய அமைப்பில் எதிர்மறையாக இருப்பது இன்னொரு வகையாகும். மேலும்  அஹது கேள்வியாகவும் வரும் (இன்னொரு வகை).

அரபி இலக்கணத்தின் படி, அஹத் வார்த்தையோடு வேறு வார்த்தைகள் சேர்க்கப்பட்டு பொருள் தரப்படுகின்றது. ஆனால், குர்‍ஆன் செய்த பிழை என்னவென்றால், அஹத் வார்த்தை தனியாக உடன்பாடு வாக்கிய அமைப்பில் இறக்கியதாகும் . இதைத் தான் முஸ்லிம் அறிஞர்கள், 'குர்‍ஆனுக்கு முந்தைய காலத்தில் இந்த அஹத் வார்த்தையை குர்‍ஆன் 112:1ல் வருவது போன்று யாரும் பயன்படுத்தமாட்டார்கள், இது இலக்கணத்தின் படி சரியானதல்ல‌' என்று சொல்கிறார்கள். குர்‍ஆனில் கூட, 112:1ம் வசனத்தைத் தவிர்த்து மீதமுள்ள அஹத் வார்த்தையுள்ள வசனங்கள் சரியான வாக்கிய அமைப்பில் இலக்கண விதிகளின் படி உள்ளதைத் தான் மேற்கோள் காட்டினோம்.

ஆக, இங்கு பிரச்சனை அஹத் வார்த்தை வரும்  குர்‍ஆனின் மற்ற வசனங்கள் அல்ல, குர்‍ஆனின் 112:1வது வசனம் தான். எல்லா இடங்களில் சரியான வாக்கிய அமைப்பில் அஹத் வார்த்தையை கொடுத்துவிட்டு, இந்த ஒரு இடத்தில்  மட்டும் இலக்கணப்பிழையை குர்‍ஆனில் செய்தது யார் என்பது தான் கேள்வி?

பீஜே அவர்களின் பதில்:

5. கேள்வி: கிறிஸ்தவர்கள் 112:1 மாதிரி உள்ள வசனத்தை உதாரணம் காட்டவேண்டும், ஆனால் அவர்களால் காட்டமுடியாது. 

எப்படி 112:1ம் வசனத்தில் உள்ளதின்படி வேறு வாக்கியத்தை காட்டமுடியும்? யார் இந்த வசனத்தில் உள்ளது போன்று இலக்கண பிழை செய்வார்கள்? யாருமே செய்யமாட்டார்கள் என்ற தைரியத்தில் தானே நீங்கள் எங்களிடம் உதாரணத்தைக் கேட்கிறீர்கள்? அல்லாஹ்வைப்போன்று யாராவது இலக்கண பிழையோடு அஹத் வார்த்தையை பயன்படுத்தியிருந்தால் தான் நாம் அப்படிப்பட்ட உதாரணத்தைக் காட்டமுடியும். 

அரபி இலக்கிய புத்தகங்களில், நூல்களில், பாடப்புத்தகங்களில் யாருமே இப்படி தவறாக பயன்படுத்தமாட்டார்கள், எனவே 'கிறிஸ்தவர்களிடம் இப்படி கேட்டுவைத்தால் அவர்களால் கண்டுபிடித்து கொடுக்கமுடியாது' என்ற தைரியத்தில் தானே இந்த கேள்வியை கேட்கிறீர்கள்.

பீஜே அவர்கள் கிறிஸ்தவர்களிடம் கேட்கும் கேள்வி எப்படியுள்ளதென்றால், 10வது வ‌குப்பு பாடங்களில், எல்லா பாடங்களிலும் 100க்கு 99 மதிப்பெண்கள், அல்லது 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றவர்களின் பட்டியல் தரமுடியுமா? என்று கேள்வி கேட்டால் அல்லது சவால் விட்டால், நிச்சயமாக நாம் தேடி கண்டுபிடித்துவிடலாம். ஒவ்வொரு ஆண்டும் இப்படி அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் மாணவிகள் இருக்கத்தான் செய்வார்கள். ஆனால், அனைத்து பாடங்களிலும் தோல்வி அடைந்த இரண்டு மாணவர்களை/மாணவிகளை கண்டுபிடியுங்கள், அதிலும், இவ்விருவரின் தாள்களைப் பார்த்தால், இவ்விருவரும் ஒரே மாதிரியாக தவறு செய்திருக்கவேண்டும், எல்லா பாடங்களிலும் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்திருக்கவேண்டும் என்று கேள்வி கேட்டால், இதனை எப்படி கண்டுபிடிப்பது?  

1) எல்லா பாடங்களிலும் 100க்கு 35 மதிப்பெண்கள் கூட எடுக்கமுடியாமல் தோல்வி அடைந்தவர்கள் இருப்பார்கள், இவர்களை கண்டுபிடிப்பது சுலபம்.

2) ஆனால், இவர்களில் இருவர் ஒரே மாதிரியான மதிப்பெண்களோடு தோல்வி அடைந்திருக்க வேண்டும், அதாவது இவ்விருவரும் தமிழ் பாடத்தில் 29 மதிப்பெண் எடுத்து தோல்வி அடைந்திருக்க வேண்டும், கணக்கு பாடத்தில் 17 மதிப்பெண்கள் எடுத்து  தோல்வி அடைந்திருக்க வேண்டும், அறிவியல் பாடத்தில் 21 மதிப்பெண்கள் எடுத்து இருந்திருக்கவேண்டும் என்று ஒவ்வொரு பாடத்திலும் ஒரே மதிப்பெண்களோடு தோல்வி அடைந்த இருவரை கொண்டு வந்து காட்டு என்று சவால் விட்டால் எப்படி இதனை  நாம் கண்டுபிடிக்கமுடியும்?

இதே போன்று  தான் அல்லாஹ் செய்த தவறு போன்று இன்னொருவரை கண்டுபிடித்து காட்டு என்று கேட்டால், எங்கே சென்று நாம் தேடமுடியும்? இவரைப்போன்று இலக்கணப்பிழை செய்பவரைத் தேடுவது கடினம் தான்.

பீஜே அவர்களே! உங்களின் எதிர்ப்பார்ப்பு சரியானது தான், எங்களால் "குர்‍ஆனில்  வரும் பிழை போன்றுள்ள வசனத்தை அல்லது வாக்கியத்தை வேறு அரபி நூல்களிலிருந்து காட்டமுடியாது, என்பதை ஒப்புக்கொள்கிறோம்'. இலக்கண பிழைகளைச் செய்வதில் அல்லாஹ்வைப்போன்று யார் இருக்கமுடியும்!  அரபி மொழியிலேயே மிகவும் சிறந்த இலக்கிய நூலாக குர்‍ஆன் இருக்கிறது என்ற உங்களின் வாதம் இப்படிப்பட்ட இலக்கண பிழைகளை கருத்தில் கொண்டு சொல்லப்பட்ட ஒன்றாக இருந்தால், நிச்சயம் இப்படிப்பட்ட நூலை யாருமே கொண்டுவரமுடியாது என்பது உண்மை. இப்படிப்பட்ட இலக்கண பிழைகளைச் செய்வதில் அல்லாஹ்விற்கு இணை அல்லாஹ் தான். அல்ஹம்துலில்லாஹ்! இந்த விஷயத்திலாவது முஸ்லிமல்லாதவர்கள் அல்லாஹ்வின் சிறப்பை அறிந்துக்கொண்டார்களே என்று இப்போது முஸ்லிம்கள் மகிழலாம்.

பீஜே அவர்களின் பதில்:

6. மக்கா மக்கள் கூட "லாத், உஸ்ஸா" போன்ற‌ தங்கள் 360 விக்கிர சாமிகளுக்கும் அஹது என்று சொல்லவில்லையே! ஏன்? அல்லாஹ் மட்டும் தான் "அஹத்".

நாம் ஏற்கனவே பார்த்த விவரங்களின் படி, அரபியர்கள் உடன்பாட்டு வாக்கியத்தில்  "அஹது என்ற வார்த்தையை" பயன்படுத்தமாட்டார்கள், இலக்கணத்தின் அது தவறு என்று அவர்களுக்கே தெரியும். இலக்கண விதிகளை சரியாக அறியாத பேதைகளாக அவர்கள் இருந்தாலும், பேச்சு வழக்கில் அப்படிப்பட்ட வாக்கியத்தை பயன்படுத்தாமல் இருந்தபடியினால், அவர்களால் 'லாத் அஹது, உஸ்ஸா அஹது' என்று சொல்லவில்லை.  அல்லாஹ் செய்த தவறை மற்றவர்களும் செய்யவேண்டும் என்று  எதிர்க்கக்கூடாது பீஜே அவர்களே!

இலக்கண விதிகளை சரியாக அறியாத குர்‍ஆனை கொடுத்தவன் தான் "அல்லாஹ் அஹதுன்" என்று தவறாக பயன்படுத்தினான்.

பீஜே அவர்களின் பதில்:

7. கேள்வி:  முஹம்மது "அல்லாஹ் பலரில் ஒருவர் என்ற போதனையில் இருந்தாரா?" என்று கிறிஸ்தவர்கள் விளக்கவேண்டும்? ஒரு வார்த்தையை எடுத்து பொருள் சொல்லக்கூடாது.

முஹம்மது "அல்லாஹ் பலரில் ஒருவன்" என்ற கோட்பாட்டில் இருந்தார் என்று நாம் சொல்லவில்லையே! நாம் சொன்னதெல்லாம், 'குர்‍ஆனில் 112:1ம் வசனத்தில் அஹத் என்ற வார்த்தையின் பயன்பாடு இலக்கண பிழையானது இது இஸ்லாமிய இறையியலோடு மோதுகின்றது' என்று நாம் சொன்னோம். ஒரு புறம் அல்லாஹ் ஒருவன் என்று குர்‍ஆன் போதிக்கிறது, ஆனால், இந்த வசனத்தில் அது தகர்த்துவிடும்படியாக பொருள் வருகிறது, இது இலக்கண பிழையென்றுச் சொன்னோம். 

பீஜே அவர்களே! நாம் கேட்காத கேள்வியை நம்மிடம் கேட்பது சரியான கேள்வியல்ல, கேள்வியை மாற்றிக்கேளுங்கள். நாங்கள் தெளிவாகத் தான் இருக்கிறோம். உங்களைப்போன்ற முஸ்லிம்களுக்குத் தான் குர்‍ஆன் பற்றிய மேலதிகத் தெளிவு தேவை.

பீஜே அவர்களின் பதில்:

8. கேள்வி: எபிரேய மொழியிலிருந்து முஹம்மது ஏகாத் வார்த்தையை காப்பி அடித்தார் என்ற குற்றச்சாட்டு தவறானது. ஏனென்றால், மக்காவில் அப்போது யாரும் யுதர்கள் இல்லை, ஒருவர் இருந்தார் அவரும் சீக்கிரமாக மரித்துவிட்டார். முஹம்மது மக்காவில் யூதர்களை அறிந்திருந்தார் என்பது சான்றுகள் இல்லாத வாதமாகும்.

9. குர்‍ஆன் ஒரு தெளிவான அரபி மொழியாகும், ஏகாத் வார்த்தையை எபிரேயத்திலிருந்து காப்பி அடித்திருந்தால், மக்கா மக்கள் கேள்வி கேட்டுயிருந்திருப்பார்கள்.

பீஜே அவர்களே! நீங்கள் சொல்வது எப்படியுள்ளதென்றால், முஹம்மது மக்காவை விட்டு வெளியே எங்குமே செல்லாமல் இருந்தார் என்றும், அவர் தம் வாழ்நாட்களில் ஒரு யூதரையும் கண்டு பேசவில்லையென்றும் சொல்கிறீர்கள். இது தவறு. 

கீழ்கண்ட விவரங்களை சிறிது கவனியுங்கள்.

1) யூதர்களும் கிறிஸ்தவர்களும் அரேபிய பகுதிகளில் முஹம்மதுவின் காலத்தில் வாழ்ந்துவந்தார்கள்.

2) யூதர்கள் பெரும் செல்வந்தர்களாகவும், படித்தவர்களாகவும் இருந்தார்கள்.

3) மதினாவில் கூட யூதர்கள் பல இனக்குழுக்களாக இருந்தார்கள், அவர்களையெல்லாம் முஹம்மது விரட்டியடித்தார்.

4) முஹம்மது ஒரு வியாபாரியாக, பல முறை மக்காவைவிட்டு சிரியாவிற்கு மற்றவர்களோடுச் சென்று வந்துள்ளார்.

5) அவர் செல்லும் வழிகளில் பல யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் சந்தித்துள்ளார், பேசியுள்ளார், இதற்கு இஸ்லாமிய சரித்திர நூல்களிலிருந்து சான்றுகள் உள்ளன.

6) எப்படி முஸ்லிம்களின் ஷஹதா உள்ளதோ, அதே போன்று, யூதர்களின் விசுவாச அறிக்கையும் மிகவும் புகழ் பெற்றது, இதனை யூதர்களோடு தொடர்பில் இருக்கும் நபர்கள் நன்கு அறிவார்கள்.

எனவே, யூதர்களோடு முஹம்மதுவிற்கு அறிமுகம் இல்லை, அவர் யாரையும் பார்க்கவில்லை பேசவில்லையென்றுச் சொல்வது 'பொய்யான வாதமாகும்'.

மேலும், முஹம்மது "ஏகாத்" என்ற வார்த்தையை அப்படியே காபி அடித்தார் என்று சொல்லவில்லையே! யூதர்களின் ஒருவரி விசுவாச அறிக்கையைப்போன்று, இவரும் சொல்ல விரும்பினார், மேலும், சுருக்கமான வார்த்தைகளைக் கொண்டு சொல்லவேண்டும் என்பதற்காக அஹத் என்ற வார்த்தையை தவறாக பயன்படுத்திவிட்டார் என்று தான் சொன்னோம். இது இலக்கண பிழைக்கு வழி வகுத்துவிட்டது என்பது தான் எங்கள் வாதம். 

குர்‍ஆன் என்பது ஒரு சுத்தமான அரபி மொழியில் உள்ள நூல் அல்ல, அதில் பல வேற்று மொழி வார்த்தைகள் உள்ளன. இன்னும் பல வார்த்தைகளுக்கு அரபியில் என்ன பொருள் என்று தெரியாமல் தலையை பீய்த்துக்கொள்ளும் அளவிற்கு வார்த்தைகளும் உள்ளன என்பது தான் உண்மை. இதைப் பற்றி இன்னொரு கட்டுரையில் தெளிவாக காண்போம்.

பீஜே அவர்களின் பதில்:

10. கேள்வி: "என்னை வாஹித்" என்றும்,"உன்னை வாஹித்" என்றும் சொல்லலாம், "அல்லாஹ்வை அஹத்" என்று மட்டும் தான் சொல்லமுடியும். 14 நூற்றாண்டுகளாக அஹதை அரபியர்கள் யாருக்காவது பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று கண்டுபிடித்துச் சொல்? அல்லாஹ்விற்கு மட்டும் தான், அது பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது தானே இலக்கண பிழை. யாரையுமே அஹத் என்று சொல்லக்கூடாது என்பது அரபி இலக்கணம். ஆனால், இலக்கணத்திற்கு மாறாக "அல்லாஹ் அஹத்" என்றுச் சொன்னது தவறு. இதனை முஸ்லிம் அறிஞர்கள் அங்கீகரித்துள்ளார்கள், நீங்களும் மறைமுகமாக அங்கீகரித்துள்ளீர்கள். நீங்கள் எங்களிடம் கேட்ட ஒவ்வொரு கேள்வியும், நீங்கள் குர்‍ஆனின் இலக்கண பிழையை அங்கீகரித்துவிட்டு, அதன் பிறகு கொடுத்த மழுப்பல் பதிலாகும் என்பது தான் நிதர்சணம்.

முடிவுரை:

இதுவரை பீஜே அவர்கள் "அல்லாஹ்வும் அஹத் வார்த்தையும் (112:1) - அல்லாஹ் "ஒருவனா?" (அ) "ஆயிரத்தில் ஒருவனா?" என்ற எங்களுடைய கட்டுரைக்கு கொடுத்த ஒவ்வொரு வரிக்கும் நாங்கள் பதில் கொடுத்துள்ளோம். வாசகர்கள் எங்களுடைய பதில்கள் அனைத்தையும் படியுங்கள், ஆய்வு செய்யுங்கள், இன்னும் கேள்விகள் இருந்தால் எங்களிடம் கேளுங்கள், பதில் தரப்படும்.

இதுவரை 112:1ல் வரும் அஹத் என்ற வார்த்தையை ஆய்வு செய்தோம், அடுத்த கட்டுரையில், 112:2ல் வரும், ஸமத் என்ற வார்த்தையை ஆய்வு செய்வோம்.

என்னது ! அஹத் தான் பிரச்சனையென்றால், ஸமது என்ற வார்த்தையிலும் பிரச்சனை உள்ளதா? என்று வாசகர்கள் கேட்கவிரும்பினால், ஆமாம்.. வாருங்கள்.. அடுத்த கட்டுரையில்.. ஸமது வார்த்தையை சமத்தாக அமர்ந்து ஆய்வு செய்வோம்.

குர்‍ஆனின் இதர (இலக்கணப்)பிழைகளை அறிய கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்:

  1. குர்‍ஆனின் இன்னொரு இலக்கண பிழை: "நாங்கள் வெறும் இறைத்தூதர் தான்"
  2. குர்‍ஆன் 35:8 - அல்லாஹ்வின் பிழையை சரி செய்யும் பீஜே போன்ற இஸ்லாமியர்கள்
  3. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள்

தேதி: ஜூலை 25, 2021


பீஜே மறுப்புக் கட்டுரைகள்

உமரின் பக்கம்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/answerpj/allah_ahad_pj_5.html


புதன், 21 ஜூலை, 2021

முஸ்லிம்களின் பக்ரீத் பண்டிகையும் யூதர்களின் பஸ்கா பண்டிகையும்: அல்லாஹ் ஒரு மீட்பரா?

முஸ்லிம்களின்  மிக முக்கியமான பண்டிகை "ஈத் உல் அதா" என்று அழைக்கப்படக்கூடிய பக்ரீத் பண்டிகையாகும்.  இந்த பண்டிகையின் போது இறைவன் இப்ராஹீமிடம் தன் மகனை பலியிட கட்டளையிட்ட சோதனையான நிகழ்ச்சியை முஸ்லிம்கள் நினைவு கூறுகிறார்கள். இந்த பக்ரீத் பண்டியையோடு, யூதர்களின் பஸ்கா பண்டிகையை ஒப்பிட்டு, மூன்று ஒற்றுமைகளை குறிப்பிட நான் விரும்புகிறேன்.

1) இந்த இரண்டு பண்டிகைகளிலும், 'ஆடுகளை பலியிடப்படுவதை' காணமுடியும்.

2) இந்த இரண்டு பண்டிகைகளின் மூல நிகழ்ச்சிகளை பார்க்கும்போது, இரண்டிலும் குடும்பத்தின் மூத்த மகனின் உயிர் ஒரு ஆபத்தான நிலையில் இருந்ததை கவனிக்கமுடியும்.

3) இந்த இரண்டு தியாகபலிகளிலும் "ஒரு உயிருக்கு பதிலாக இன்னொரு உயிர் பகரமாக(Ransom) கொடுத்து மீட்கப்படுவதை காணமுடியும்".

பஸ்கா பண்டிகைப் பற்றி பரிசுத்த வேதம் கீழ்கண்டவிதமாக கூறுகின்றது:

"14. பிற்காலத்தில் உன் குமாரன்: இது என்ன என்று உன்னைக் கேட்டால்; நீ அவனை நோக்கி: கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார். 15. எங்களை விடாதபடிக்கு, பார்வோன் கடினப்பட்டிருக்கும் போது, கர்த்தர் எகிப்துதேசத்தில் மனிதரின் தலைப்பிள்ளைகள்முதல் மிருகஜீவன்களின் தலையீற்றுகள் வரைக்கும் உண்டாயிருந்த முதற்பேறுகள் யாவையும் கொன்றுபோட்டார்; ஆகையால், கர்ப்பந்திறந்து பிறக்கும் ஆணையெல்லாம் நான் கர்த்தருக்குப் பலியிட்டு என் பிள்ளைகளில் முதற்பேறனைத்தையும் மீட்டுக்கொள்ளுகிறேன். (யாத்திராகமம் 13:14-15). 

இப்ராஹீமின் பலி நிகழ்ச்சி பற்றி குர்‍ஆன் "ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம் (37:107)" என்று கூறுகின்றது.

மேலும், இரட்சிப்பதைப் பற்றி குர்‍ஆன் கூறும் போது, அல்லாஹ் " மூஸாவையும், இஸ்ரேல் மக்களையும் எகிப்திலிருந்தும் மற்றும் செங்கடலிலிருந்தும் காப்பாற்றினான்" என்று கூறுகின்றது.

இரட்சித்தல் (Saving) மற்றும் மீட்டுக்கொள்ளுதல் (Redeem) என்ற இவ்விரு வார்த்தைகளுக்கு இடையேயுள்ள ஒற்றுமையை சங்கீதம் 106:9-11வரையுள்ள வசனங்களில் காணலாம்: 

"அவர் சிவந்த சமுத்திரத்தை அதட்டினார், அது வற்றிப்போயிற்று; வெட்டாந்தரையில் நடக்கிறதுபோல அவர்களை ஆழங்களில் நடந்துபோகப்பண்ணினார். பகைஞன் கைக்கு அவர்களை விலக்கி இரட்சித்து, சத்துருவின் கைக்கு அவர்களை விலக்கி மீட்டார்.  அவர்கள் சத்துருக்களைத் தண்ணீர்கள் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனும் மீந்திருக்கவில்லை (சங்கீதம் 106: 9-11)".

இந்த வியத்தகு மீட்பு இஸ்ரேலியர்களின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகின்றது. இதைப் பற்றி மோசேயின் மாமனார் எத்திரோ கேள்விப்பட்டபோது, எகிப்தின் எல்லா கடவுள்களையும் விட இஸ்ரவேலின் இறைவன் பெரியவர் என்று அறிவித்தார் (யாத்திராகமம் 18: 8-11).  உண்மையில், இந்த இரட்சிப்பு மிகவும் முக்கியமானது, எனவே தான் கர்த்தர், 10 கட்டளைகளில் முதலாவதாக எகிப்திலிருந்து இரட்சித்ததையும் சேர்த்தார்.

2. உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே. 3. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம் (யாத்திராகமம் 20: 2-3)

மேலும், இந்த முக்கியமான நிகழ்வின் காரணமாகவே யூத மக்கள் தேவனை "இரட்சகராகவும் மீட்பராகவும்" ஏற்றுக்கொண்டு கொண்டாடினர். (ஓசியா 13: 4; ஏசாயா 60:16; 63: 8)

நாம் கூர்ந்து படிக்கவில்லையென்றால், கர்த்தர் கொடுத்த இந்த முக்கியமான‌ இரட்சிப்பின் நிகழ்ச்சியை க‌வனிக்காமல் விட்டிருப்போம். கர்த்தர் பல வாதைகளின் மூலம் அழுத்தத்தை கொடுத்தபோதிலும், எகிப்தின் பார்வோன் அரசன் தன் இதயத்தை அதிகமதிகமாய் கடினப்படுத்தினான்.  கடைசியாக, கர்த்தர் மிகவும் கடினமான தண்டனையை கட்டளையிட்டார்,  அதாவது பார்வோன் சிம்மாசனத்தின் வாரிசு உட்பட எகிப்தியரின் மூத்த மகன்கள் மரிக்கவேண்டும் என்பது தான் அந்த தீர்ப்பு. இந்த தண்டனை வந்த போது தான், பார்வோன் அரசனின் ஆணவம் அடங்கியது, அவன் இஸ்ரேல் மக்களை போக அனுமதித்தான், அடிமைகளை விடுவிக்க ஒப்புக்கொண்டான்.  

ஆனால் அந்த மரணத்தை கொண்டு வந்த தேவதூதனால் பாதிக்கப்பட்டவர்கள், எகிப்திய மக்களின் மூத்த குமாரர்கள் மட்டும் தான். அதே நேரத்தில் இஸ்ரேல் மக்கள் தங்கள் பிள்ளைகளின் உயிர் கூட ஆபத்தில் உள்ளது என்பதை நன்கு அறிந்திருந்தனர். எகிப்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அந்த மரணத்தூதன் நுழைவான் என்ற மோசேயின் எச்சரிப்பை இஸ்ரேல் மக்கள் அசட்டையாக எடுத்துக்கொள்ளவில்லை.  உண்மையில், இஸ்ரேல் மக்கள் அவர்கள் கேட்ட எச்சரிப்பின்படி செய்ய ஜாக்கிரதையாக இருந்தனர், மோசேயினால் கட்டளையிட்டதின்படி, ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு பஸ்கா ஆட்டை தெரிந்துக்கொண்டு, அதனை பலியிட்டு, அதன் இரத்தத்தை தங்கள் வீட்டு வாசற்படியின் நிலைகளில் பூசிவிட்டனர்.

இந்த விவரங்கள் ஒரு சிந்திக்கத்தூண்டும் கேள்வியை எழுப்புகிறது, அதாவது "கர்த்தர் ஏன் இஸ்ரேல் மக்களை அச்சுறுத்தினார்?" அவரது முதலாவது இலக்கு, பார்வோனின் ஆணவத்தை அதமாக்கி, இஸ்ரேல் மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதாகத் தானே இருந்தது!  அவர் பாரபட்சம் பார்க்காதவர் என்றும், அவரது வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர் என்று வேதம் சொல்கிறதல்லவா?(உபாகமம் 10:17, 32:4).  உண்மையில், தேவன் பாரபட்சமற்றவர், அவர் இஸ்ரேலை ஒரு மாதிரியாகவும், மற்றவர்களை வேறு மாதிரியாகவும் பார்க்கிறவர் அல்ல. கவனிக்கவும், அந்த மரண தேவதூதன் எகிப்து தேசத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் செல்லும் படி கட்டளையிடப்பட்டிருந்தார், அது எகிப்தியரின் வீடாக இருந்தாலும் சரி, இஸ்ரேல் வீடாக இருந்தாலும் சரி, அந்த தூதன் சென்று முதற்பேரான குமாரனை அதம் செய்வது தான், அவனுக்கு கொடுக்கப்பட்டிருந்த கட்டளை. ஆக, இஸ்ரேல் மக்களின் மூத்த குமாரன்கள் கூட மரிக்கக்கூடிய ஆபத்தில் இருந்தனர் என்பது தான் உண்மை. அப்படியானால், இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க என்ன வழி? மோசேவும், இஸ்ரேல் மக்களும் இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி தான் இருந்தது. அது என்னவென்றால், கர்த்தரின் கட்டளைக்கு கீழ்படிந்து, ஒவ்வொருவரும் ஒரு ஆட்டை பஸ்கா பலியாக கொடுத்து அதன் இரத்தத்தை தங்கள் வாசல் நிலைகளில் பூசவேண்டும்.

"மீட்பது (Redeem)" என்ற வார்த்தையின் பொருள் என்ன? இதற்கு ஒரு உதாரணத்தைக் காண்போம்.  ஒரு அடிமையை மீட்பது என்றால் இதன் அர்த்தம் என்ன? அந்த அடிமையை வைத்திருக்கும் நபரிடம் சென்று, ஒரு பெருந்தொகையைச் செலுத்தி, அந்த அடிமையை விடுதலைச் செய்வதாகும்.  இந்த செயலைச் செய்கிறவருக்கு "மீட்பர்" என்று பொருள். அவர் செலுத்திய அந்த பெருந்தொகையை "பகரமாக கொடுக்கப்பட்ட தொகை" என்று அழைப்பர்.  

இப்ராஹீமின் மகனுக்கு பகரமாக  ஒரு ஆட்டை இறைவன் வைத்திருந்தார். அதே போன்று, இஸ்ரேலர்களின் புதல்வர்களை மீட்க, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு ஆடு பகரமாக கொடுக்கப்பட்டது, அதாவது அது கொல்லப்பட்டு, அதன் இரத்தம் இஸ்ரேல் மக்களின் வீட்டு வாசல்களில் பூசப்பட்டது. யாருடைய  வீட்டின் வாசல் நிலைகளில்  பஸ்கா ஆட்டின் இரத்தம் பூசப்பட்டுள்ளதோ, அந்த வீட்டின் மூத்த புதல்வர்களின் உயிர் மீட்கப்பட்டுவிட்டது. அந்த மரணதூதன், அவ்வீட்டை விட்டு கடந்து சென்றுவிடுவான்.

கர்த்தரும்/அல்லாஹ்வும்  ஒரு மீட்பர் என்று அழைக்கப்படுவார்களானால், இந்த பஸ்கா ஆட்டு பலியினால் நாம் கற்றுக்கொள்ளும், அல்லது பின்பற்ற வேண்டிய பாடம் என்ன?  ஒரு கிறிஸ்தவனாக, அதே நேரத்தில் யூத நபிகளில் பிரதானமான நபியாகிய மோசேயை கனப்படுத்துகின்ற நான், முஸ்லிம்களிடம் கேட்கவிரும்பும் கேள்வி இது தான்:  "நம்முடைய முந்தைய நபிமார்கள் இறைவனை இரட்சகராகவும், மீட்பராகவும் கருதி கனப்படுத்தினர், ஒரு முஸ்லிமாக நீங்களும் இறைவனை ஒரு இரட்சகராகவும் மீட்பராகவும் கருதி கனப்படுத்துகிறீர்களா?", நம் இறைவன் இரட்சகர் மற்றும் மீட்பர் என்ற குணங்களை கொண்டுள்ளார் என்று நம்புகிறீர்களா? குர்‍ஆனை மேலோட்டமாக படித்தாலும் சரி, இதனை நீங்கள் மறுக்கமுடியாது. ஏனென்றால்,  முஹம்மது முந்தைய நபிமார்களின் செய்தியைத் தான் கொண்டுவந்தார் என்றும், அவர் சுயமாக ஒன்றும் கொண்டுவரவில்லையென்றும் குர்‍ஆன் சொல்கிறது.

இப்போது நாம் கட்டுரையின் கடைசிக்கு வந்திருக்கிறோம். நம் இறைவன் இரட்சகராகவும், மீட்பராகவும் இருக்கிறார் என்பதில் நமக்கு சந்தேகமில்லை. ஆனால், இந்த கேள்வியை கவனியுங்கள்: அல்லாஹ்விற்கு இருக்கும் 99 அழகான பெயர்களில் ஏன் மீட்பர் என்ற பெயர் மட்டும் அவருக்கு கொடுக்கப்படவில்லை?  இறைவனுக்கு இருந்த 'மீட்பர்' என்ற பெயர் எப்படி, அல்லாஹ்விடமிருந்து விடுபட்டுவிட்டது அல்லது மறைந்துவிட்டது? இந்த கேள்வியை சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா?

ஏதோ உங்களோடு வாதம் புரியவேண்டுமென்று இந்த கேள்வியை நான் கேட்டிருக்கிறேன் என்று நீங்கள் எண்ணவேண்டாம். நீங்கள் சுயமாக 'மீட்பர்' என்ற இறைகுணத்தைப் பற்றி சிந்திக்கவேண்டும் என்று இந்த கேள்வியை எழுப்பியுள்ளேன்.  முந்தைய நபிமார்கள் அனைவரும் முன்மொழிந்த "மீட்பர்" என்ற இறைகுணத்தை ஏன் இஸ்லாம் அல்லாஹ்விற்கு முன்மொழியவில்லை?

இந்த கட்டுரையில் சொல்லப்பட்ட விவரங்கள் பற்றி மேலும் நீங்கள் ஆய்வு செய்ய விரும்பினால், கீழ்கண்ட‌ கட்டுரையை ஒரு முறை படித்துப் பாருங்கள்: 

ஆசிரியர்: ரோலண்ட் கிளார்க்

தேதி: ஜூலை 21, 2021

ஆங்கில மூலம்:  https://www.answering-islam.org/authors/clarke/eid_passover.html


ரோலண்ட் கிளார்க் அவர்களின் இதர கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்

source: https://www.answering-islam.org/tamil/authors/rolandclarke/eid_passover.html


ஞாயிறு, 18 ஜூலை, 2021

குர்‍ஆன் 21:17 - அல்லாஹ்வின் மனைவியாக மாற ஹூருல் ஈன்கள் / மலக்குகள் அல்லாஹ்வின் இனமா?

இது ஒரு சிறிய குர்‍ஆன் ஆய்வுக் கட்டுரை.

குர்‍ஆன் 21:16,17ம் வசனங்களை வாசியுங்கள்:

1) உண்மையில் ஸூரா 21:17ன் பொருள் என்ன?

முஹம்மது ஜான் தமிழாக்கம்:

21:16. மேலும், வானையும், பூமியையும் அவற்றுக்கு இடையே இருப்பவற்றையும் விளையாட்டுக்கான நிலையில் நாம் படைக்கவில்லை.

21:17. வீண் விளையாட்டுக்கென (எதனையும்) நாம் எடுத்துக்கொள்ள நாடி, (அவ்வாறு) நாம் செய்வதாக இருந்தால் நம்மிடத்தி(ல் உள்ள நமக்கு தகுதியானவற்றி)லிருந்தே அதனை நாம் எடுத்திருப்போம்.

முஹம்மது ஜான் தமிழாக்கத்தின் 17வது வசனத்திலிருந்து ஏதாவது புரிகின்றதா? 100% புரியவில்லையல்லவா? மேலும் சில தமிழாக்கங்களை படிப்போம் (21:17):

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:

21:17. நாம் வீண் விளையாட்டுக்காரனாக இருந்து விளையாட வேண்டும் என்று நாம் கருதியும் இருந்தால் நம்மிடமுள்ள (நமக்குத் தகுதியான)தை நாம் எடுத்து (விளையாடி)க் கொண்டிருப்போம்.

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:

21:17. விளையாட்டிற்காக நாம் ஏதேனும் ஒன்றைச் செய்ய நாடியிருந்தால் அதை மட்டுமே நாம் செய்ய வேண்டும் என்றிருந்தால் நம் சார்பாகவே அதனைச் செய்துவிட்டிருப்போம்.

பீஜே தமிழாக்கம்:

21:17. வேடிக்கையை (விளையாட்டை) ஏற்படுத்திக் கொள்வதாக இருந்தால் நம்மிடமிருந்தே அதை ஏற்படுத்தியிருப்போம். நாம் (எதையும்) செய்வோரே. 

மேற்கண்ட 3 தமிழாக்கங்களை படித்த பிறகும், இன்னும் சரியாக புரியவில்லையல்லவா? எதனை அல்லாஹ் "விளையாட்டு" என்றுச் சொல்கிறான்? இதன் பொருள் என்ன? இன்னும் இரண்டு தமிழாக்கத்தை படிப்போம், இப்போது விஷயம் வெளிச்சத்திற்கு வரும்.

மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்:

21:17. (வீண்) விளையாட்டுக்கென (மனைவி, மக்கள் கொண்ட) எதனையும் ஆக்கிக்கொள்ள நாம் நாடி, (அதை) செய்வோராக நாம் இருந்திருப்பின் நம்மிடத்தில் உள்ளவற்றிலிருந்தே அதை நாம் எடுத்துக் கொண்டிருப்போம்.

முஹம்மது சிராஜுத்தீன் நூரி தமிழாக்கம்:

21:17 (மனைவி மக்கள் கொண்ட)  உல்லாசத்தை எடுத்துக் கொள்ள நாம் நாடி, (அதை) செய்வோராக நாம் இருந்திருப்பின், அதை நம்மிடத்தி(ல் உள்ளவற்றி)லிருந்தே நாம் எடுத்துக் கொண்டிருப்போம்.

இப்போது தான் புரிகின்றது, அல்லாஹ் "விளையாட்டு" "உல்லாசம்" என்றுச் சொன்னது, "மனைவி பிள்ளைகள் கொண்ட வாழ்க்கையை" என்று இப்போது சரியாக புரிகின்றது.

நமக்கு புரியும் வகையில் 21:17ம் வசனத்தை சொல்லவேண்டுமென்றால், 

"நான் குடும்பம் குட்டி (மனைவி பிள்ளைகள்) என்று வாழ விரும்பியிருந்தால், என் இனத்திலிருந்து மனைவியை எடுத்துக்கொண்டு (திருமணம் செய்துக்கொண்டு), பிள்ளைகளை பெற்று இருந்திருப்பேன்".

என்று தமிழாக்கம் செய்யவேண்டும்.

நாம் ஆறு தமிழாக்கங்களில் இந்த குர்‍ஆன் 21:17ம் வசனத்தை படித்திருக்கிறோம். சௌதி தமிழாக்கமும், சிராஜுத்தீன் நூரி அவர்களின் தமிழாக்கமும், (மனைவி மக்கள் என்று) சில விரிவுரை வார்த்தைகளை சேர்த்து எழுதியதால், இவ்வசனத்தின் உண்மை பொருள் புரிகிறது.  

ஆங்கிலத்திலும் சில மொழியாக்கங்களை பார்த்துவிட்டு, ஆய்வை தொடருவோம்.

Hilali & Khan

Had We intended to take a pastime (i.e. a wife or a son, etc.), We could surely have taken it from Us, if We were going to do (that).

Abdullah Yusuf Ali

If it had been Our wish to take (just) a pastime, We should surely have taken it from the things nearest to Us, if We would do (such a thing)!

Hasan al-Fatih  

Had We wished to take to Us an amusement We would have taken it to Us from Ours had We done so.

மேற்கண்ட ஆங்கில மொழியாக்கங்களிலும் நாம் மேலே கண்ட தமிழாக்கங்களில் உள்ளது போன்றே பொருள் வருகிறது.  

இதுவரை பார்த்தவைகள் வெறும் அறிமுகம் தான், இப்போது தான் ஆய்வின் மையத்திற்கு வந்திருக்கிறோம்.

2) அல்லாஹ்வின் இனம் எது?

அல்லாஹ்வின் படைப்புக்கள் பலவகை அவை:

a) ஜின்கள், மலக்குகள்: இவைகள் அல்லாஹ்வை புகழவும், அவரது பணியைச் செய்யவும் படைக்கப்பட்டன.

b) மனித இனம்: ஆதம் தொடங்கி இன்றுவரையுள்ள மனித வர்க்கம்.

c) மிருகங்கள் மச்சங்கள், நுண்ணுயிர்கள்: நிலத்தில் மற்றும் நீரில் வாழும் மிருகங்கள், பறவைகள் போன்றவை. மேலும் மனிதர்களின் கண்களுக்குத் தெரியாத நுண் கிருமிகள் போன்றவைகள்.

d) பூமி மற்றும் இதர கிரகங்கள்: மனிதன் வாழும் பூமி தொடங்கி, இதுவரை மனிதன் கண்டுபிடித்துள்ள கிரகங்கள், நட்சத்திரங்கள். இதிலேயே பூமியுள்ள  மரங்கள், மலைகள் கடல்கள் என்று அனைத்தும் இறைவனின் படைப்பே.

e) ஹூருல் ஈன்கள்: அல்லாஹ்வின் சொர்க்கத்தில் முஸ்லிம்களுக்காக படைக்கப்பட்ட சிறப்புமிக்க‌ பெண்கள்.

இவைகளை என் கணக்குப்படி நான் வகைப்படுத்தினேன், முஸ்லிம் அறிஞர்கள் வேறு விதங்களில் இவர்களை வகைப்படுத்தலாம். இக்கட்டுரயின் கேள்வி சரியாக புரியவேண்டுமென்பதற்காக இந்த விவரங்களை நான் கொடுத்தேன்.

இப்பொழுது, 21:17ம் ஆயத்தை இன்னொரு முறை படிப்போம்:

மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்:

21:17. (வீண்) விளையாட்டுக்கென (மனைவி, மக்கள் கொண்ட) எதனையும் ஆக்கிக்கொள்ள நாம் நாடி, (அதை) செய்வோராக நாம் இருந்திருப்பின் நம்மிடத்தில் உள்ளவற்றிலிருந்தே அதை நாம் எடுத்துக் கொண்டிருப்போம்.

முஹம்மது சிராஜுத்தீன் நூரி தமிழாக்கம்:

21:17 (மனைவி மக்கள் கொண்ட)  உல்லாசத்தை எடுத்துக் கொள்ள நாம் நாடி, (அதை) செய்வோராக நாம் இருந்திருப்பின், அதை நம்மிடத்தி(ல் உள்ளவற்றி)லிருந்தே நாம் எடுத்துக் கொண்டிருப்போம்.

Hilali & Khan

Had We intended to take a pastime (i.e. a wife or a son, etc.), We could surely have taken it from Us, if We were going to do (that).

இந்த மேற்கண்ட மூன்று மொழியாக்கங்களின் படி, அல்லாஹ் தனக்கு ஒரு குடும்பம் (மனைவி பிள்ளைகள்) தேவையென்று அவன் விரும்பியிருந்தால், தான் தன் இனத்திலிருந்து எடுத்துக்கொண்டு இருந்திருப்பான் என்று இவ்வசனம் சொல்கிறது.

கூர்ந்து  கவனிக்கவும்: "தன் இனத்திலிருந்து எடுத்துக்கொள்வான்"  என்று சொல்லும் போது, ஆங்கிலத்தில்:

a) We could surely have taken it from Us . . . (Hilali & Khan)

b) We would have taken it to Us from Ours . . . (Yusuf Ali)

c) We should surely have taken it from the things nearest to Us . . .(Qaribullah & Darwish)

என்று மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். இந்த இடத்தில், அல்லாஹ் தான் படைத்தவைகளிலிருந்து எடுத்துக் கொள்வதாகச் சொல்லவில்லை, தன் "இனத்திலிருந்து என்றும், தனக்கு அருகாமையில் உள்ளவைகளிலிருந்தும்" என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதனை தமிழாக்கங்களிலிருந்து பார்க்கும்போது:

  1. நம்மிடத்தி(ல் உள்ள நமக்கு தகுதியானவற்றி)லிருந்தே அதனை நாம் எடுத்திருப்போம்
  2. நம்மிடமுள்ள (நமக்குத் தகுதியான)தை நாம் எடுத்து (விளையாடி)க் கொண்டிருப்போம்'
  3. நம் சார்பாகவே அதனைச் செய்துவிட்டிருப்போம்
  4. நம்மிடமிருந்தே அதை ஏற்படுத்தியிருப்போம்
  5. நம்மிடத்தில் உள்ளவற்றிலிருந்தே அதை நாம் எடுத்துக் கொண்டிருப்போம்
  6. அதை நம்மிடத்தி(ல் உள்ளவற்றி)லிருந்தே நாம் எடுத்துக் கொண்டிருப்போம்

அடைப்பிற்குள் () எழுதப்பட்டவைகள் அனைத்தும் தமிழாக்கம் செய்தவர்களின் குறிப்புக்கள் ஆகும். அவைகளையெல்லாம் நீக்கிவிட்டு, மூல அரபியில் உள்ள பொருளைப் பார்த்தோமானால், "அல்லாஹ் தன்னிடமிருந்து" யாரையாவது எடுத்துக்கொண்டு மனைவியாக்கி இருந்திருப்பான் என்று பொருள் வருகின்றது.

கட்டுரையின் கடைசிக்கு வந்துவிட்டோம், சுருக்கமாக ஒரு உதாரணத்தைச் சொல்லிவிட்டு, முடிவுரைக்குச் சென்றுவிடுவோம்.

செல்வந்தரின் உதாரணம்: ஒரு மிகப்பெரிய செல்வந்தர், பிரம்மச்சாரியாக இருந்து நூற்றுக்கணக்கான அநாதை பிள்ளைகளை எடுத்து வளர்த்து வருகின்றார் என்று வைத்துக்கொள்வோம். ஒருமுறை அவரிடம் "உங்களுக்கு பிள்ளைகள் என்றால் விருப்பம் என்று தெரிகின்றது, ஏன் நீங்கள் திருமணம் செய்துக்கொள்ளக்கூடாது" என்று கேட்டால், அவர் "நான் நினைத்துயிருந்தால் என் (இனத்திலேயே) சொந்தத்திலேயே ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு பிள்ளைகள் பெற்று மகிழ்ச்சியாக இருந்திருப்பேன்,  எனக்கு பெண் கொடுக்கவும் சொந்தங்கள் இருக்கிறார்கள். ஆனால் அதை நான் செய்யாமல், அநாதை பிள்ளைகளை எடுத்து வளர்க்கிறேன், இதுவே அதிக மகிழ்ச்சியைத் தருகிறது" என்று பதில் சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.

இந்த செல்வந்தன் சொன்னதில் எந்த தவறும் இல்லை, இப்படி நற்காரியங்கள் செய்யும் பலபேரை நாம் கண்டும் இருந்திருப்போம்.

ஆனால், அல்லாஹ் இந்த செல்வந்தன் போல குர்‍ஆன் 21:17ல் சொன்னதில் தான் மிகப் பெரிய  தவறு உள்ளது.  அல்லாஹ்வின் இவ்வசனத்தை சரியாக புரிந்துக்கொண்டவர்கள், மொழியாக்கம் செய்யும் போது "மனைவி பிள்ளைகள்" என்று அடைப்பிற்குள் எழுதியுள்ளார்கள்.  அதனை புரிந்துக்கொண்டும், இவ்வசனத்தில் உள்ள பிரச்சனையையும் புரிந்துக்கொண்டவர்கள் "மனைவி பிள்ளைகள்" என்று வெளிப்படையாகச் சொல்லாமல், தங்களால் முடிந்த வரை வசனத்தை குழப்பமாக மொழியாக்கம் செய்ய முயன்றுள்ளார்கள்.

3) பிரச்சனை என்ன? அல்லாஹ்வின் படைப்புக்களில் 'எது அல்லாஹ்வின் இனம்'?

அல்லாஹ்வின் படைப்புக்களில் "மலக்குக்கள்/ஜின்கள் இனம்", "மனித இனம்", "மிருகங்களின் இனம்", "பூமி/கிரகங்கள்/மரம்/மலை" மற்றும் "ஹூருல் ஈன்கள்" என்று கண்டோம். இவைகளிலிருந்து எவைகளை அல்லாஹ் தன் மனைவியாக (ஆம், மனைவியாக) எடுத்துக்கொள்வான் (குர்‍ஆன் 21:17ன் படி) அவன் நினைத்திருந்தால்?

அல்லாஹ்விற்கு மனைவியாகும் தகுதி மனித இன பெண்களுக்கு இல்லை:

மனிதர்களில் ஒரு பெண்ணை அல்லாஹ் திருமணம் செய்யமுடியாது ஏனென்றால், நாம் அவனது அடிமைகள், அவனுக்கு மனைவியாகும் தகுதி மனித இனத்திற்கு இல்லை. இதனை சரியாக புரிந்துக்கொண்டதால் தான் தமிழாக்கம் செய்தவர்கள் "நம்மிடத்தி(ல் உள்ள நமக்கு தகுதியானவற்றி)லிருந்தே " என்றும், "நம்மிடமுள்ள (நமக்குத் தகுதியான)தை " என்றும், முஹம்மது ஜான் மற்றும் பாகவி தமிழாக்கங்கள் 'தகுதியுள்ளவர்களிடமிருந்தே" என்று குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள்.  [அடேங்கப்பா! குர்‍ஆனை மொழியாக்கம் செய்யும் போது, இவைகளையெல்லாம் கவனிக்கவேண்டுமே! இல்லையென்றால், மிகப்பெரிய பிரச்சனையாகிவிடுமே என்ற எண்ணம் வருகின்றதல்லவா! ஆமாம், மொழியாக்கம் என்றால் என்ன சும்மாவா? ஒவ்வொரு வசனத்தை தொடும் போது, ஒட்டுமொத்த குர்‍ஆனையும், இஸ்லாமிய இறையியலையும் மனதில் வைத்துக்கொண்டு தான் மொழியாக்கம் செய்யவேண்டும், இல்லையென்றால், இஸ்லாமிய அஸ்திபாரமே ஆட்டம் காணும். இவ்வளவு எச்சரிக்கையாக இருந்தும், அடிக்கடி குர்‍ஆன் தர்ம சங்கடங்களில், பிரச்சனைகளில் மாட்டிக்கொள்வது தான், குர்‍ஆனின் அழகான‌ சிறப்பம்சம்]

அல்லாஹ்விற்கு மனைவியாகும் தகுதி கிரகங்களுக்கும், மிருகங்களுக்கும் உண்டா?

மனிதர்களுக்கே தகுதி இல்லையென்று இருக்கும் போது, எப்படி கிரகங்களுக்கும், மிருகங்களுக்கும் தகுதி வந்துவிடும், எனவே இவைகளும் டெபாசிட்டை இழந்துவிடுவார்கள்.

அல்லாஹ்விற்கு மனைவியாகும் தகுதி மலக்குகள்/ஜின்களுக்கு உண்டா?

தேவதூதர்கள் (மலக்குகள்) ஆண்களா பெண்களா என்று எனக்குத் தெரியாது. மேலும் ஜின்களில் பெண்களும், ஆண்களும் உண்டு என்று கேள்விபட்டு இருக்கிறேன். ஆனால், அல்லாஹ் இவர்களில் யாரையாவது தன் மனைவியாக எடுத்துக்கொண்டு விளையாடுவானா? இவர்களை தம் இனமாக எடுத்துக்கொள்வானா?   இதற்கு முஸ்லிம் அறிஞர்கள் தான் பதில் சொல்லவேண்டும்.

அல்லாஹ்வின் மனைவியாகும் தகுதி ஹூருல் ஈன்களுக்கு உண்டா?

ஒருவழியாக நாம் வரவேண்டிய இலக்கிற்கு வந்துவிட்டேன் என்று  நினைக்கிறேன். இந்த இடத்திற்கு உங்களை அழைத்துவருவதற்குத் தான் இவ்வளவு நேரம் சுற்றி வளைத்து உங்களை அழைத்துவந்தேன். 

ஹூருல் ஈன்கள் என்றுச் சொன்னவுடன், முஸ்லிம் ஆண்களின், இமாம்களின், அறிஞர்களின் நாவில் எச்சில் ஊறும் (ஆம், நான் எச்சிலைத் தான் சொன்னேன், நீங்கள் வேறு ஏதாவது நினைத்துக்கொள்ளாதீர்கள்). சொர்க்கத்தில் முஸ்லிம் ஆண்களுக்குக் கிடைக்கும் ஹூருல் ஈன்கள் பற்றி பலவாறு இமாம்கள் விளக்கியிருப்பார்கள், இதனை வயதுக்கு வந்த ஒவ்வொரு முஸ்லிமும் அறிவான். ஹூருல் ஈன்கள் பற்றி குர்‍ஆனும் ஹதிஸ்களும் என்ன சொல்லியுள்ளார்கள் என்ற சிறு குறிப்பு இக்கட்டுரையின் அடிக்குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

த‌ஃப்ஸீர் ஜலலைன் : குர்‍ஆன் 21:17

ஜலலைன் என்ற இஸ்லாமிய அறிஞரை இஸ்லாமிய உலகம் நன்கு அறியும். அவர் குர்‍ஆன் 21:17வது வசனத்திற்கு கொடுத்த விளக்கத்தில் என்ன சொல்லியுள்ளார் என்பதை படிக்கவும்:

Tafsir jalalayn

Had We desired to find some diversion, that which provides diversion, in the way of a partner or a child, We would have found it with Ourselves, from among the beautiful-eyed houris or angels, were We to do [so]. But We did not do so, thus We never desired it.

அல்லாஹ் தனக்கு மனைவியோ பிள்ளையோ தேவையென்றால், "அழகான கண்களையுடைய‌ ஹூருல் ஈன்களிலிருந்தும் அல்லது தேவதூதர்களிலிருந்தும்" எடுத்துக்கொண்டு இருந்திருப்பானாம்.

குர்‍ஆன் 21:17ஐ பற்றிய நம்முடைய கேள்விகள்:

1) ஸூரா 21:17ல் ஒரு பிரச்சனை உள்ளது என்பதை முஸ்லிம்கள் அறிஞர்கள் நன்றாக புரிந்துக்கொண்டுள்ளார்கள் என்பதை மட்டும் காணமுடிகின்றது.

2) ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான மொழியாக்கம் செய்துள்ளார்கள்.

3) அல்லாஹ்விற்கு இணை வைப்பதற்கான எல்லா வகையான அடித்தளத்தை இவ்வசனம் முன்மொழிகின்றது.

4) இவ்வசனத்தை மொழியாக்கம் செய்ய முயலும் முஸ்லிம்களுகு அனேக கேள்விகள் எழுகின்றன. எப்படி அல்லாஹ் ஒரு மனிதனைப்போல 'நான் நினைத்திருந்தால் என் இனத்திலிருந்தே ஒரு மனைவியை/வாரிசை' எடுத்துக்கொள்ளமுடியும் என்று சொல்லமுடியும்?

5) அல்லாஹ் எதனை தன் இனம் என்றுச் சொல்கின்றான்? அல்லாஹ் தனித்தவன், அவனுக்கு இணை யாருமில்லையல்லவா? அவன் எப்படி தனக்கு ஒரு மனைவியை எடுத்துக்கொள்ளமுடியும்?

6) குறைந்தபட்சம் தான் படைத்த அனைத்தும் அல்லது மனித இனமாவது தன் பிள்ளைகள் என்று சொல்லியிருந்தால், இவ்வசனத்திற்கு 'இஸ்லாமிய இறையியலுக்கு முரணில்லாமல் பொருள்' கொடுத்துவிடலாம். ஆனால், மனித இனமே தன் பிள்ளைகள் ஆகமுடியாது, வெறும் அடிமைகள் தான் என்று இஸ்லாம் சொல்லும் போது, இவ்வசனத்திற்கு பொருள் கொடுப்பதில் மிகபெரிய  சிக்கல் உள்ளதல்லவா?

7) எனவே, சிலர் 'தனக்கு தகுதியானவைகளிலிருந்து' என்று மொழியாக்கம் செய்கிறார்கள். இதுவே ஒரு மிகபெரிய ஷிர்க் என்ற பெரும்பாவமாகும். எது அல்லாஹ்விற்கு தகுதியாக முடியும்? மலக்குகளும், ஜின்களும், மனித இனமும், ஹுருல் ஈன்கள் என்ற பெண்களும் எப்படி அல்லாஹ்விற்கு தகுதியானவர்களாக ஆகமுடியும்?

8) இஸ்லாமிய அறிஞர் ஜலலைன், மலக்குகள், ஹூருல் ஈன்கள் என்றுச் சொல்லி, "அல்லாஹ்விற்கு மனைவியை கற்பித்துவிட்டார்", அவர் என்ன செய்யமுடியும், அவ்வசனத்தை கவனித்தால் இப்படித் தான் அவரால் விளக்கம் அளிக்கமுடியும்!

9) இதுமட்டுமல்ல, ஒரு மனிதன் சொல்வது போன்று, அல்லாஹ் 'நான் நினைத்திருந்தால், இப்படி கல்யாணம் செய்து செட்டில் ஆகியிருப்பேன், பிள்ளைகளை பெற்று இருந்திருப்பேன், இருந்தாலும் நான் செய்யவில்லை' என்றுச் சொல்வது, குர்‍ஆனின் தெய்வீகத்தின் மீது சந்தேகம் வருகிறது. குறைந்தபட்சம் இந்த வசனத்தில் மனித கையோ வார்த்தைகளோ விளையாடிவிட்டதோ!

10) இதைத் தான் அல்லாஹ் 'நான் விளையாட நினைத்திருந்தால், டைம்பாஸுக்காக உலகை படைப்பதாக நினைந்திருந்தால், ஒரு வேடிக்கையாக நினைத்திருந்தால், என்னிடமுள்ள படைப்புக்களில் அதாவது மலக்குகள், ஹூருல் ஈன்களிலிருந்து ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து குடும்பம் நடத்தியிருந்திருப்பேன்' என்றுச் சொல்கிறான். இதுவா இறை வார்த்தை? முஸ்லிம்களே விளக்குங்கள்.

முடிவுரை:

இந்த ஆய்வில் நான் எந்த ஒரு முடிவுக்கும் வராமல், அதனை வாசகர்களிடம் கொடுக்கிறேன். தமிழிலும், ஆங்கிலத்திலும் பல மொழியாக்கங்களை கொடுத்து, ஒரு சிறிய ஆய்வைச் செய்து, இஸ்லாமிய விளக்கவுரையையும் மேற்கோள் காட்டி, முடிவை உங்களிடம் கொடுத்துள்ளேன்.

நான் செய்தது தவறான ஆய்வு என்று சொல்ல விரும்பும் முஸ்லிம்கள், அறிஞர்கள் கீழ்கண்ட சுருக்கமான கேள்விகளுக்கு பதில்களைத் தாருங்கள்.

1) ஸூரா 21:17 சொல்லும் விவரத்தை சுருக்கமாக விளக்குங்கள்.

2) அல்லாஹ்வின் இனம் எது?

3) அல்லாஹ்விற்கு தகுதியானவைகளிலிருந்து என்று தமிழாக்கம் செய்தவர்கள்  சொல்ல வருவது என்ன?

4) அல்லாஹ்விற்கு தகுதியானவர்கள் என்றுச் சொல்வதே மிகப்பெரிய ஷிர்க அல்லவா?

5) எல்லா தமிழாக்கங்களும் இந்த வசனத்திற்குச் சொன்ன விளக்கம் சரியானதா?

6) இஸ்லாமிய அறிஞர் ஜலலைன் குறிப்பிட்ட மலக்குகள், ஹூருல் ஈன்கள் அல்லாஹ்வை திருமணம் செய்துக்கொள்ள தகுதியானவர்களா? அல்லது அல்லாஹ்விற்கு பிள்ளைகளாவதற்கு தகுதியானவர்களா? முஸ்லிம்கள் விளக்கட்டும்.

பீஜே அவர்களுக்கு பரிசு: நான் பீஜே அவர்களுக்கு, ஆன்சரிங் இஸ்லாம் கட்டுரைகளுக்கு அவர் வீடியோ பதில் கொடுத்தால், பரிசு கொடுப்பதாக கூறியிருந்தேன் (இங்கு படிக்கவும்). இக்‌கட்டுரை, அவரது ஆய்வுப் பசிக்கு தீணி போடும் என்று நம்புகிறேன், பீஜே அவர்கள் இந்த கட்டுரைக்கு பதில் கொடுக்க முயலலாம்.

அடிக்குறிப்புக்கள்:

[1] ஹூருல் ஈன்கள்  - அல்லாஹ்வின் சொர்க்கத்தில் நுழைந்த முதல் நாள்  - www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/ramalan2012day8.html

[2] ஹூருல் ஈன்கள் பற்றி சில குறிப்புக்கள்: குர்-ஆன் 44:54, 55:70, 72, 52:20 & ஸஹீஹ் புகாரி எண் 2799

சொர்க்கவாசியான பெண் உலகத்தாரை எட்டிப்பார்த்தால், வானத்திற்கும் பூமிக்குமிடையே உள்ள அனைத்தையும் பிரகாசமாக்கி விடுவாள்

அல்லாஹ்விற்காக ஜிஹாத் போர் புரிந்து அதில் மரித்தால், அவர்களுக்கு அனேக பெண்கள் (72) தருவதாக முஸ்லிம்கள் நம்புகிறார்கள். இது தவிர சாதாரண நல்ல முஸ்லிம்களுக்கும் சொர்க்கத்தில் ஹூருல் ஈன்கள் என்ற பெண்கள் கிடைப்பார்கள் என்று குர்-ஆனும் சொல்கிறது.  இந்தப் பெண்களில் ஒருத்தி, உலகத்தாரை எட்டிப்பார்த்தால், வானத்திற்கும் பூமிக்கும் இடையே பிரகாசம் வந்துவிடுமாம். இவ்வளவு மேன்மை அந்த பெண்களின் கண்களில் இருக்கிறது என்று முஹம்மது கூறியுள்ளார்.

குர்-ஆன் 44:54, 55:70, 72, 52:20 & ஸஹீஹ் புகாரி எண் 2799 & 3254

44:54. இவ்வாறே (அங்கு நடைபெறும்); மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.

55:70. அவற்றில், அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர்.

55:72. ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்.

52:20. அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.

ஸஹீஹ் புகாரி எண் 2799

2796. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

இறைவழியில் காலையில் சிறிது நேரம் அல்லது, மாலையில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது உலகத்தையும் அதிலுள்ள பொருட்களையும் விடச் சிறந்தது. உங்களில் ஒருவரின் வில்லின் அளவுக்குச் சமமான, அல்லது ஒரு சாட்டையளவுக்குச் சமமான (ஒரு முழம்) இடம் கிடைப்பது உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்தது. சொர்க்கவாசிகளில் (ஹூருல் ஈன்களில்) ஒரு பெண், உலகத்தாரை எட்டிப் பார்த்தால் வானத்திற்கும் பூமிக்குமிடையே உள்ள அனைத்தையும் பிரகாசமாக்கி விடுவாள்; பூமியை நறுமணத்தால் நிரப்பி விடுவாள். அவளுடைய தலையிலுள்ள முக்காடோ உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாகும்.  என அனஸ்(ரலி) அறிவித்தார். Volume :3 Book :56

'ஹூருல் ஈன்' எனப்படும் பெண்களின் கால்களின் எலும்பு மஜ்ஜைகள் (காலின்) எலும்புக்கும் சதைக்கும் அப்பாலிருந்து வெளியே தெரியும்

மனிதர்கள் அதிக சிவப்பாக/வெள்ளையாக இருந்தால், அவர்களின் கைகளில், கால்களில் இருக்கும் நரம்புகளை நாம் ஓரளவிற்கு காணமுடியும். இது இயற்கை. ஒரு பெண்ணின் காலில் உள்ள  எலுப்புக்குள் இருக்கும் மஜ்ஜை கூட வெளியே தெரியும் அளவிற்கு அவள் வெள்ளை வெளேரென்று இருந்தால் எப்படி இருக்கும்?  இப்படிப்பட்ட பெண்களை அல்லாஹ் முஸ்லிம்களுக்கு சொர்க்கத்தில் தருவதாக, இஸ்லாமிய தீர்க்கதரிசி ஆசை வார்த்தைகள் சொல்லி முஸ்லிம்களை மயக்கியுள்ளார். இப்படிப்பட்ட வர்ணனையை சிறிய வயதிலிருந்து கேட்டுக் கேட்டு முஸ்லிம் ஆண்கள் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டு, சாகத்துணிந்து, செத்து, மற்றவர்களை சாகடித்து, இஸ்லாமிய சொர்க்கத்தில் நுழைய பயணச்சீட்டு வாங்க முயற்சி எடுக்கிறார்கள். இந்த போதனையைச் செய்யும் வேதமும், தீர்க்கதரிசியும் உண்மையான மார்க்கத்தை பின்பற்றுபவர்களாக இருக்கமுடியுமா? நிச்சயமாக இல்லை. 

ஸஹீஹ் புகாரி எண் 3254

3254. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

சொர்க்கத்தில் முதலாவதாக நுழையும் அணியினர் பெளர்ணமி இரவின் சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். (அடுத்து) அவர்களின் சுவடுகளைப் பின்தொடர்ந்து சொர்க்கத்தினுள் நுழைபவர்கள், வானத்தில் நன்கு ஒளி வீசிப் பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) இருப்பார்கள். அவர்களின் உள்ளங்கள் ஒரே மனிதரின் உள்ளத்தைப் போன்றிருக்கும். அவர்களுக்கிடையே பரஸ்பர வெறுப்போ, பொறாமையோ இருக்காது. ஒவ்வொரு மனிதருக்கும் 'ஹூருல் ஈன்' எனப்படும் அகன்ற (மான் போன்ற) விழிகளையுடைய மங்கையரிலிருந்து இரண்டு மனைவிமார்கள் இருப்பார்கள். அவர்களின் கால்களின் எலும்பு மஜ்ஜைகள் (காலின்) எலும்புக்கும் சதைக்கும் அப்பாலிருந்து வெளியே தெரியும்.  

வெள்ளி, 16 ஜூலை, 2021

Answering PJ: ஆயிரத்தில் ஒருவன் அல்லாஹ்(அஹத்) - 4: இலக்கண பிழையையே அரபியின் சிறப்பம்சம் என்றுச் சொல்வது அல்லாஹ்விற்கே அடுக்காது

இந்த தொடருக்கான முந்தைய கட்டுரைகளும் பதில்களும்:

  1. நம் கேள்வி: அல்லாஹ்வும் அஹத் வார்த்தையும் (112:1) - அல்லாஹ் "ஒருவனா?" (அ) "ஆயிரத்தில் ஒருவனா?"
  2. பீஜே அவர்களின் பதில்: கிருஸ்துவர்களின் அஹத் ஒரு ஆய்வு கட்டுரைக்கு பிஜே யின் பதில் | நேரலை | 05/07/2021 | PJ
  3. பீஜே அவர்களுக்கு நம்முடைய பரிசு: Answering PJ: ஆயிரத்தில் ஒருவன் அல்லாஹ்(அஹத்) - 2: பீஜே அவர்களின் ஒரு வீடியோ பதிலுக்கு ஒரு ஆயிரம் பரிசு
  4. பீஜே அவர்களுக்கு முதல் பதில்: Answering PJ: ஆயிரத்தில் ஒருவன் அல்லாஹ்(அஹத்) - 3: அஹதுக்கு எண்களும், பன்மையும், பெண்மையும் உண்டு!

இக்கட்டுரையின் பின்னணி: குர்‍ஆனின் 112:1வது வசனத்தில் "குல் ஹுவ அல்லாஹு அஹத் (துன்)" என்று வருகிறது. அஹது என்ற வார்த்தைக்கு "ஒன்று" என்று பொருள் அல்ல, "பலரில் ஒன்று" என்று பொருள் என குர்‍ஆன் வசனங்களின் உதவியோடு நிருபித்திருந்தோம்.  அதற்கு பீஜே அவர்கள் பதில்களைக் கொடுத்திருந்தார். நம்முடைய முதல் பதிலில், பீஜே அவர்கள் முன்வைத்த "அஹதுக்கு பன்மையில்லை, அது எண்களுக்கு பயன்படுத்தப்படவில்லை என்ற வாதங்களுக்கு" பதில்களைக் கண்டோம்.  இந்த கட்டுரையில், பீஜே அவர்கள் முன்வைத்த‌ மேலும் சில வாதங்களுக்கு பதில்களைக் காண்போம்.

கட்டுரையின் தலைப்புக்கள்:

  1. உலகத்தில் எது ஒன்று மட்டுமே உள்ளதோ, அதை அஹது என்று அழைத்தான் அரபியன் - அப்படியா! யார் அந்த அறிவாளி?
  2. அல்லாஹ் அனைத்து ஜீவன்களை ஜோடியாக படைத்தானா?? இது விஞ்ஞான முரண்
  3. பூமியை, தாஜ்மஹாலை, தஞ்சாவூர் பெரிய கோயிலை அஹத் என்று அழைக்கலாமா?
  4. இஸ்லாமிய அறிஞர் மௌதுதியின் விளக்கம்: அஹது வார்த்தையின் பயன்பாடு – ஓர் இலக்கணப் பிழை
  5. இலக்கணப்பிழையை காண்பித்து, இது அரபி மொழியின் சிறப்பு என்றுச் சொல்வது அல்லாஹ்விற்கே அடுக்காது

1) உலகத்தில் எது ஒன்று மட்டுமே உள்ளதோ, அதை அஹது என்று அழைத்தான் அரபியன் - அப்படியா! யார் அந்த அறிவாளி?

இது உண்மையா?

பீஜே அவர்களின் பதில்: 

1. அரபி மொழியில் அஹது வார்த்தையை வைத்திருக்கிறான் என்றால், எது மட்டும் உலகத்தில் ஒன்றே  ஒன்று இருக்கின்றதோ, அதற்கு மட்டும் தான் அஹது, அதனால் தான் அல்லாஹ்வைத் தவிர வேறு எதற்கும் அஹது வார்த்தையை அரபி மக்கள் பயன்படுத்தமாட்டார்கள்.

2. அரபி அகராதியில் 'எது ஒன்று மட்டும் தான் இருக்குமோ' அதற்கு தான் அஹது பயன்படுத்தவேண்டும் என்று உள்ளது.

அரேபியர்கள் அஹத் என்ற வார்த்தையை "எது ஒன்று மட்டும் உள்ளதோ அதற்கு மட்டும் பயன்படுத்தினார்கள் என்று"? பீஜே அவர்களுக்கு எப்படித் தெரியும்?

1. இஸ்லாமுக்கு முன்பாக, அரேபிய நூல்களில் "அஹது என்றால் அல்லாஹ்விற்கு மட்டும் தான் பயன்படுத்தியதாக அவரால் சான்றுகளை காட்டமுடியுமா"?

2. அரபி மொழி "குர்‍ஆன் வருவதற்கு முன்பாக" பல்லாண்டுகாலமாக இருந்துள்ளது, அதன் படி, யாராவது இஸ்லாமுக்கு முன்பாக, பீஜே அவர்கள் சொன்னது போன்று பயன்படுத்தியுள்ளதை காட்டமுடியுமா?

3. "அரபியர்கள்" என்றுச் சொல்லி பீஜே அவர்கள் வாசகர்களை ஏமாற்றப்பார்க்கிறார். குர்‍ஆன் வந்த பிறகு முஸ்லிம்களாக மாறிய அரபியர்கள் "பீஜே அவர்கள் சொன்னது போன்று நம்பலாம், அவர்களுக்கு வேறு வழியில்லை, குர்‍ஆன் செய்யும் இலக்கண பிழையையும் அவர்கள் ஏற்கத்தான் வேண்டும்". ஆனால், இஸ்லாமுக்கு முன்பாக இருந்த அரபியன் தன் நூல்களில் பேச்சு வழக்கத்தில் இப்படி பயன்படுத்தியதாக ஒரு சான்றை பீஜே அவர்களால் காட்டமுடியாது! இதனை சவாலாக அவர் ஏற்றுக்கொண்டு பதில் சொல்லட்டும்.

பீஜே அவர்களின் பதில்: 

3. அல்லாஹு அஹது என்று சொல்லலாம், இஸ்மாயில் அஹது, இப்ராஹிம் அஹது என்றுச் அரபியில் சொல்லமாட்டார்கள்.

அரபி மொழி நன்கு அறிந்தவன், அரபி இலக்கணத்தை நன்கு அறிந்தவன் ஏன் இப்படி சொல்லுவான்? அஹது என்றால் அனேகரில் ஒருவர் என்று பொருள் இருக்கும் போது, "இஸ்மாயில் அஹது, இப்ராஹீம் அஹது" என்று எப்படி சொல்லுவான்? குர்‍ஆனை இறக்கியவன் செய்த இலக்கண பிழையை எப்படி, மற்ற மனிதர்கள் செய்வார்கள்?  எது பிழையாக இருக்கிறதோ, அதையே திருப்பிப்போட்டு, "இப்படி மற்றவர்கள் கூறமுடியுமா?" என்று கெட்பது மடமையானது. அஹது என்ற வார்த்தையின் உண்மை பொருளை அறிந்த எவனும் இப்படி கூறமாட்டான், அது இலக்கண பிழையென்று அவனுக்குத் தெரியும்.

2) அல்லாஹ் அனைத்து ஜீவன்களை ஜோடியாக படைத்தானா? இது விஞ்ஞான முரண்

பீஜே அவர்களின் பதில்: 

4. அல்லாஹ் ஜோடியாக எல்லாவற்றையும் படைத்துவிட்டான், எது ஒன்று மட்டும் இருக்கிறதோ, அது தான் அஹது, இதனால் அல்லாஹ்விற்கு மட்டுமே அஹது பயன்படுத்த இயலும்.

அல்லாஹ் எல்லாவற்றையும் ஜோடியாக படைத்துவிட்டான் என்று பீஜே அவர்கள் சொன்னதே மிகப்பெரிய தவறு.  உலகில் ஆண் பெண் ஜோடியில்லாமல், உயிரினங்களில் இனப்பெருக்கம் நடந்துக்கொண்டு இருக்கின்றன, அனேக ஜீவராசிகள் ஆணாகவும் இல்லாமல் பெண்ணாகவும் இல்லாமல் தனிப்பட்ட விதமாக (ஜோடியில்லாமல்) உருவாக்கப்பட்டுள்ளன. கீழ்கண்ட தொடுப்பை பார்க்கவும். இது 10வது வகுப்பு படிக்கும் மாணவனுக்கும் தெரியும்.

கலவியற்ற இனப்பெருக்கம் (Asexual_reproduction)

கலவியற்ற இனப்பெருக்கம் (Asexual reproduction) அல்லது பால்சாரா இனப்பெருக்கம் என்பது ஒரு தனியனில் மட்டும் இருந்து அடுத்த தலைமுறை தனியன்கள் உருவாகும் ஒரு வகையான இனப்பெருக்க முறையாகும். குறிப்பிட்ட அந்த தனியனில் இருக்கும் மரபணுக்கள் மட்டுமே அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படும். இங்கே தாய், தந்தை என்ற இரு பெற்றோர் இருப்பதில்லை. . . . இதுவே ஆர்க்கீயா, பாக்டீரியா, அதிநுண்ணுயிரி போன்ற தனிக்கல உயிரினங்களில் உள்ள முதன்மையான இனப்பெருக்க முறையாகும். 

தமிழ்: https://ta.wikipedia.org/s/b8t 

ஆங்கிலம்: https://en.wikipedia.org/wiki/ 

இப்போது விஷயத்துக்கு வருவோம், அதாவது எது ஒன்று மட்டும் உள்ளதோ அதற்கு மட்டுமே அஹது என்று நாம் அழைக்கமுடியும் என்று பீஜே அவர்கள் சொல்வதினால், கீழ்கண்டவைகள் எத்தனை உள்ளது என்று சொல்லமுடியுமா? இவைகளை அஹது என்று அழைக்கலாம் அல்லவா?

3) பூமியை, தாஜ்மஹாலை, தஞ்சாவூர் பெரிய கோயிலை அஹத் என்று அழைக்கலாமா?

அ) பூமி:

அல்லாஹ் ஒரே ஒரு பூமியைத் தான் படைத்தான், ஆகையால் "பூமி அஹது" என்று சொல்லலாம் அல்லவா?  இறைநம்பிக்கையுள்ள எந்த மனிதனும், இரண்டு பூமிகளை இறைவன் படைத்தான் என்று சொல்லமாட்டான். மனிதன் வாழக்கூடிய வகையில் படைக்கப்பட்ட ஒரே கிரகம் பூமி தான். எனவே பூமி அஹது என்றுச் சொல்லலாமா? 

"இல்லை, அல்லாஹ் படைத்தவைகள்" இந்த கணக்கில் வராது என்று முஸ்லிம்கள் வீண் அடம் பிடிக்கக்கூடாது. ஏனென்றால், பீஜே அவர்கள் சொல்லும் போது "அல்லாஹ் ஜோடியாக எல்லாவற்றையும் படைத்துவிட்டான்" என்றுச் சொல்கிறார். எனவே படைக்கப்பட்டவைகளில் தனியாக எது ஒன்று உள்ளதோ, அதனை அஹது என்று அழைக்கமுடியும். பீஜே அவர்களின் லாஜிக்கின் படி, அல்லாஹ்வும் அஹது தான், பூமியும் அஹதுதான். சரி தானே!

ஆ) தாஜ்மஹால், ஈஃபிள் கோபுரம், தஞ்சாவூர் பெரிய கோயில் 

உலகில் எத்தனை தாஜ்மஹால்கள் உள்ளன? எத்தனை ஈஃபிள் கோபுரங்கள் உள்ளன? இன்னும் எத்தனை பெரிய புகழ்பெற்ற கோயில்கள் உள்ளன? தஞ்சாவூர் பெரிய கோயில், போன்று உலகில் எத்தனை உள்ளது? எனவே இவைகளையெல்லாம் "தாஜ்மஹால் அஹது, ஈஃபிள் அஹது" என்று சொல்லலாம் அல்லவா? 

முஸ்லிம்கள் மறுபடியும் பல்டி அடிக்கலாம், எங்க வீட்டிலும் தாஜ்மஹால் சிறிய அளவில் அழகு பொருளாக உள்ளதே என்று. இங்கு கேள்வி உண்மையான தாஜ்மஹால் எத்தனை உள்ளது என்பதுதான், ஒரே ஒன்று தான் உள்ளது. தஞ்சாவூர் கோயில் ஒரே ஒன்று தான் உள்ளது, அது போலவே வேறு ஒன்றை யாராவது கட்ட முயன்றாலும், அது இதற்கு இணையாக முடியாது.  ஏனென்றால், அந்த கோயில் இருக்கின்ற அதே இடத்தில், அதே கற்களைக்கொண்டு வேறு கோயில் கட்டமுடியாது. எனவே தஞ்சாவூர் கோயில் அஹது என்று கூறலாம்.

வாசகர்கள் ஒரே ஒரு நிமிடம் சிந்தித்தால், 10க்கும் அதிகமான "உலகில் ஒன்றே ஒன்று உள்ளவைகள்" ஞாபகத்தில் வரும்.

4) இஸ்லாமிய அறிஞர் மௌதுதியின் விளக்கம்: அஹது வார்த்தையின் பயன்பாடு ஒரு இலக்கணப் பிழை

பீஜே அவர்களின் பதில்: 

5. அரபி அகராதியில் 'எது ஒன்று மட்டும் தான் இருக்குமோ' அதற்கு தான் அஹது பயன்படுத்தவேண்டும் என்று உள்ளது.

அப்படியா? எந்த அகராதியில்?

இஸ்லாமுக்கு முன்பாக எந்த அகராதியிலிருந்தாவது, இலக்கண புத்தகத்திலிருந்தாவது மேற்கண்ட விவரத்திற்கான சான்றை காட்டமுடியுமா? ஆனால், பீஜே அவர்கள் பொய்யான விவரங்களைச் சொல்லி முஸ்லிம்களையும், மற்றவர்களையும் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார் என்பதை என்னால் நிருபிக்கமுடியும்.

இஸ்லாமுக்கு முன் அஹத் வார்த்தையை, இப்படி தப்பு தப்பாக யாருமே பயன்படுத்தியதில்லை:

இஸ்லாமிய அறிஞர் ஸையத் அபுல் அலா மௌதுதி அவர்களின் (1903 – 1979), தஃபிம் அல்குர்‍ஆன் என்ற விளக்கவுரையில், பீஜே அவர்கள் போன்றவர்கள் சொல்லும் பொய்களுக்கு நெத்தியடி விவரத்தை கொடுத்துள்ளார்.

குர்‍ஆன் 112:1ம் வசனத்திற்கும், அஹத் என்ற வார்த்தைக்கும் அவர் கொடுத்த விளக்கத்தை இங்கு தருகிறேன், அதன் தமிழ் சுருக்கத்தையும் தருகிறேன். இவரது விளக்கவுரையை கீழ்கண்ட தொடுப்பில் இணையத்தில் படிக்கலாம்.

இஸ்லாமிய அறிஞர் மௌதுதி அவர்கள் நெத்தியடி பதில்:

Sayyid Abul Ala Maududi - Tafhim al-Qur'an - The Meaning of the Qur'an

Here, the first thing to be understood is the unusual use of ahad in this sentence. Usually this word is either used in the possessive case as yaum ul-ahad (first day of the week), or to indicate total negative as Ma ja a a-ni ahad-un (No one has come to me), or in common questions like Hal `indaka ahad-un (Is there anyone with you?), or in conditional clauses like Inja'a-ka ahad-un (If someone comes to you), or in counting as ahad, ithnan, ahad ashar (one, two, eleven). Apart from these uses, there is no precedent in the pre-Qur'anic Arabic that the mere word ahad might have been used as an adjective for a person or thingAfter the revelation of the Qur'an this word has been used only for the Being of Allah, and for no one else. This extraordinary use by itself shows that being single, unique and matchless is a fundamental attribute of Allah; no one else in the world is qualified with this quality: He is One, He has no equal.

Abul Ala Maududi at Wikipedia - en.wikipedia.org/wiki/Abul_A%27la_Maududi

இவரைப் பற்றிய ஒரு தமிழ் கட்டுரை: www.meipporul.in/maulana-abul-ala-maudoodi-an-introduction/  - மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)

மௌதுதி அவர்களின் மேற்கண்ட விளக்கவுரையின் தமிழ் சுருக்கம்:

இந்த வாக்கியத்தில், "அஹத்" என்ற வார்த்தை வழக்கத்திற்கு மாறாக பயன்படுத்தப்பட்டுள்ளதை என்பதை புரிந்துக்கொள்ளவேண்டும். பொதுவாக, இந்த "அஹத்" என்ற வார்த்தை கீழ்கண்ட ஒருவகையில் பயன்படுத்தப்படும்:

1) உடைமை வாக்கியமாக "யௌம் அல் அஹத்" (வாரத்தின் முதல் நாள் - ஞாயிறு) என்று வரும்.

அல்லது

2) எதிர்மறை வாக்கியமாக வரும்: ம ஜ அனி அஹதுன் (என்னிடம் யாரும் வரவில்லை)

அல்லது

3) பொதுவான கேள்வியாக வரும்: ஹல் இந்தகா அஹதுன் (உன்னுடன் யாராவது இருக்கிறார்களா?)

அல்லது

4) நிபந்தனை கேள்வியாக வரும்: இன்ஜ அக அஹதுன் (யாராவது உன்னுடன் வந்தால்?)

அல்லது

5) எண்ணும் போது வரும்: அஹத், இத்னான், அஹத் அஷர் (ஒன்று, இரண்டு, பதினொன்று..)

மேற்கண்ட வகையில் அஹத் என்ற வார்த்தை வருமே தவிர, குர்‍ஆனுக்கு(pre-Qur'anic Arabic) முன்பான காலத்தில் அரேபிய மொழியில், குர்‍ஆன் 112:1ல் சொல்லப்பட்டது போன்று "அஹத்" என்ற வார்த்தை ஒரு நபருக்கோ, ஒரு பொருளுக்கோ உரிச்சொல்லாக வராது. குர்‍ஆன் வந்த பிறகு, இந்த வார்த்தை, அல்லாஹ்விற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது, வேறு யாருக்கும் பயன்படுத்தப்படுவதில்லை. குர்‍ஆனில் வந்த இந்த வழக்கத்திற்கு மாறான இவ்வார்த்தையின் பயன்பாடு, நமக்கு எதை காட்டுகிறதென்றால், அல்லாஹ் ஏகன், தனித்தவன் என்பதைக் காட்டுகிறது, மேலும், அவனுக்கு இணையாக உலகில் யாருமே இல்லை என்பதைக் காட்டுகிறது, அவர் ஒருவன், அவனுக்கு இணை யாருமே இல்லை.

குர்‍ஆனின் இலக்கணப் பிழை:

மௌதுதி அவர்களின் வரிகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் படியுங்கள். அவரது இந்த விளக்கவுரை உருது மொழியில் உள்ளது, அப்புத்தகம் உள்ளவர்கள் படித்துக்கொள்ளலாம். 

இப்போதாவது புரிகின்றதா? பீஜே அவர்கள் எவ்வளவு பெரிய பொய்யைச் சொல்லியுள்ளார் என்று? 

1. அஹத் வார்த்தை "எண்களுக்கு பயன்படுத்தமாட்டார்கள்" என்று பீஜே காரசாரமாக வாய்க்கு வந்தபடி அடித்துவிட்டார், ஆனால், மௌதுதி அவர்கள் பீஜேயின் முகத்தில் கரியை பூசிவிட்டார்.

2. அகராதிகளில் "அஹத்" என்ற வார்த்தை அல்லாஹ்விற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்று பொய் கூறினார் பீஜே,  ஆனால் மௌதுதியோ, இஸ்லாமுக்கு முன்பான காலத்தில் "இப்படி யாராவது பயன்படுத்தினால், அது இலக்கணத்தின்படி பிழை", இப்படிப்பட்ட பயன்பாடு இவ்வார்த்தைக்கு இருந்ததில்லை என்று நெத்தியடி அடித்தார்.

3. எந்த வார்த்தை இலக்கண பிழையாக குர்‍ஆனில் பயன்படுத்தப்பட்டு இருந்ததோ, வேறு வழியில்லாமல், அவ்வார்த்தையை அல்லாஹ்விற்கு பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் முஸ்லிம்கள். அல்லாஹ் குர்‍ஆனில் இறக்கியதில் இலக்கண பிழையுள்ளது என்றுச் சொல்லும் தைரியம் எந்த முஸ்லிமுக்கு உள்ளது? எனவே, இவ்வார்த்தையை அல்லாஹ்விற்கு மட்டுமே இனி பயன்படுத்துவோம் என்று ஒரு சப்பை கட்டை கட்டிவிட்டார்கள் முஸ்லிம்கள்.

4. இது மட்டுமல்லாமல், எது ஒன்று மட்டும் உள்ளதோ, அதற்கு அஹத் பயன்படுத்தலாம் என்று பீஜே அவர்கள் சொன்ன பொய்கள் அனைத்தும் இப்போது தவிடு பொடியாகிவிட்டது. ஒருவேளை உலகில் ஒன்றே ஒன்று இருக்கும் ஒரு பொருளுக்கு அஹத் வார்த்தையை பயன்படுத்தி ஒரு மாணவன் எழுதினால், 'இலக்கண பிழையாக' எழுதியுள்ளான் என்பதால் அரபி ஆசிரியர் அந்த பையனுக்கு மதிப்பெண் கொடுக்கமாட்டார்.

5. மௌதுதி போன்ற அறிஞர்கள் கூட ஒரு பக்கம், குர்‍ஆனில் உள்ள பிழையை "பிழை" என்று அழைக்காமல், "வழக்கத்திற்கு மாறாக இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது" என்று மறைமுகமாக குர்‍ஆனின் பிழையை உலகிற்கு எடுத்துக்காட்டுகிறார்கள். அதே நேரத்தில், குர்‍ஆனில் அவ்வார்த்தை தவறாக வந்துவிட்டதால், அதற்கு ஒரு சப்பைக் காட்டு கட்டி, இனி இவ்வார்த்தையை அல்லாஹ்விற்கு மட்டும் பயன்படுத்துவோம் என்று சொல்லிவிடுகின்றனர்.

6. குர்‍ஆனுக்கு முன்பான காலத்தில் "அஹத்" வார்த்தையை அரபியர்கள் இப்படி பயன்படுத்தவில்லை என்று பீஜே அவர்கள் சொல்லவில்லை (அவர் சொல்லமாட்டார்) மேலும், "அரபியர்கள்", "அகராதி" என்ற வார்த்தைகளை பொதுவாக‌ பயன்படுத்தி வாசகர்களை ஏமாற்றப்பார்த்தார். குர்‍ஆனுக்கு முன்பாக இவ்வார்த்தையின் இலக்கணம் இப்படி இருந்தது, குர்‍ஆன் வந்த பிறகு அரபி இலக்கணம் மாறிவிட்டது (எங்கள் வசதிக்காக மாற்றிக்கொண்டோம்!) என்று பீஜே அவர்கள் நேர்மையான முறையில் சொல்லியிருக்கவேண்டும். மௌதுதி போன்ற அறிஞர்களிடம் இருந்த நேர்மை இவரிடம் இல்லை. யார் இதனை சரி பார்க்கப்போகிறார்கள்? என்ற தைரியம் இவருக்கு! குர்‍ஆனையும் அல்லாஹ்வையும் உயர்த்திப்பேசிவிட்டால் போதும், முஸ்லிம்கள் "அல்ஹம்துலில்லாஹ்" என்றுச் சொல்லி மெய்மறந்துவிடுவார்கள், இவர் சொல்வதையெல்லாம் ஆய்வு செய்துக்கொண்டு இருக்கமாட்டார்கள்.  குர்‍ஆனில் அல்லாஹ் எத்தனை முறை "இவர்கள் சிந்திக்கமாட்டார்களா?" என்று கேள்வி எழுப்பினாலும், மற்றவர்கள் சிந்திக்கிறார்களே தவிர முஸ்லிம்கள் சிந்தித்து கேள்வி கேட்பதாக தெரியவில்லை. இதுவே பீஜே போன்ற முஸ்லிம் அறிஞர்களின் வலிமையாக மாறிவிட்டது. முஸ்லிம்களின் அறியாமையே முஸ்லிம் அறிஞர்களின் ஆயுதமாக மாறிவிட்டது.

இதுவரை பார்த்த விவரங்களின் படி, பீஜே அவர்கள் கட்டிய கற்பனை மாளிகை, மன்னிக்கவும், பொய் மாளிகை, இப்போது மாயமாகிவிட்டது.

இதனை முஸ்லிம் வாசகர்கள் அறிவார்களா? பீஜே போன்றவர்களை கண்மூடித்தனமாக பின்பற்றி "அல்ஹம்து லில்லாஹ்" என்றும், இஸ்லாம் வென்றுவிட்டதென்றும் பெருமை அடித்துக்கொள்கிறார்கள், முஸ்லிம்களே இஸ்லாம் வெல்லவில்லை, இஸ்லாம் வெந்துக்கொண்டு இருக்கிறது என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.

5) இலக்கணப்பிழையை காண்பித்து, இது அரபி மொழியின் சிறப்பு என்றுச் சொல்வது அல்லாஹ்விற்கே அடுக்காது

பீஜே அவர்களின் பதில்: 

6. எந்த புத்தகத்திலும், அரபியில் பேசும் போதும், ஒரு பொருளைக் காட்டி, உதாரணத்திற்கு கம்பியூட்டர் மௌஸைக் காட்டி, "வாஹிது மௌஸ்" (இது ஒரு மௌஸ்) என்று சொல்லலாம், ஆனால் "அஹது மௌஸ்" என்று சொல்லமுடியாது, இது தவறு. 

7. வாஹித், அஹது பற்றி அரபியர்கள்  விளங்கியும் வைத்திருந்தார்கள், இஸ்லாமிய வரலாற்றில் ஆதாரம் உள்ளது. 

பீஜே அவர்களே! இதைத் தான் அரபி இலக்கணமும் சொல்கிறது, கம்பியூட்டர் மௌஸுக்கு மட்டுமல்ல, உலகில் யாருக்கும் சரி, அஹதை பயன்படுத்தக்கூடாது. அல்லாஹ்விற்கும் பயன்படுத்தக்கூடாது என்று தான் இலக்கணம் சொல்கிறது, குர்‍ஆனில் இந்த பிழை வந்த பிறகு, முஸ்லிம்கள்  குர்‍ஆனை திருத்துவதை விட்டுவிட்டு, அரபி இலக்கணத்தை திருத்தி எழுதி வைத்துக்கொண்டார்கள். இது தான் இஸ்லாமில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை.

"இஸ்லாமிய வரலாற்றில் அதாவது கி.பி. 632க்குப் பிறகு" சான்றுகள்  இருக்கும் ஏனென்றால், குர்‍ஆனின் இலக்கண பிழைக்கு பிறகு "இஸ்லாமிய வரலாறு" எழுதப்பட்டதால், சான்றுகள் இருக்கலாம், ஆனால், அரபி மொழி உண்டான காலமுதல் அப்படி இல்லை. இஸ்லாமுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து அரபி மொழி இருந்துள்ளது என்பது தான் அரபி மொழி வரலாறு.

பீஜே அவர்களின் பதில்: 

8. அரபி மொழியில் அஹது வார்த்தையை உடன்பாடு சொல்லாக பயன்படுத்தவே மாட்டார்கள்.

பீஜே அவர்களே! நீங்கள் சொல்வது உண்மை தான். இதைத் தான் அரபு இலக்கணமும், முஸ்லிம் அறிஞர்களும் சொல்கிறார்கள். உண்மை இப்படி இருக்கும் போது, "இலக்கணத்திற்கு மாறாக ஏன் குர்‍ஆன் பிழை செய்துள்ளது"? என்பது தாம் நம்முடைய கேள்வி.

உங்களுடைய விளக்கம் தான் எங்களுடைய கேள்வி, அரபு இலக்கணத்தில் உடன்பாடாக வராத ஒரு வார்த்தையை ஏன் அல்லாஹ் குர்‍ஆனில் சொல்லியுள்ளான்?  இதன் படி பார்த்தால் குர்‍ஆனில் மனித கைகள் விலையாடியுள்ளன என்று சொல்லலாம் அல்லவா? ஒரு சிறந்த இலக்கிய நயமிக்க நூல் என்று பெருமைப்பாராட்டக்கூடிய புத்தகத்தில் எப்படி இலக்கண பிழைகள் வரும்?  மேலும் இந்த ஒரு பிழை மட்டுமல்ல, இன்னும் அனேக இலக்கண பிழைகள் குர்‍ஆனில்  உள்ளன, அவைகளை தேவைப்படும் போது கட்டுரைகளாக காண்போம்.

முடிவுரை:

இந்த கட்டுரையில் பீஜே அவர்களின் பதிலுக்கு மறுப்பைக் கண்டோம். அரபி மொழியின் இலக்கணத்திற்கு முரணாக இருந்த அஹத் என்ற வார்த்தையின் பிரயோகத்தை, அரபி மொழியின் ஒரு சிறப்பான அங்கம் என்ற வகையில் பொய்களை சொன்னார் பீஜே. இஸ்லாமிய அறிஞர் மௌதுதி போன்றவர்களின் மேற்கோள்களைக் கொண்டு பீஜே அவர்களின் பொய்யான கூற்று வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டது.

சுருக்கம்:

  1. குர்‍ஆன் 112:1ம் வசனத்தில் அஹத் வார்த்தை இலக்கண பிழையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
  2. இதனை முஸ்லிம் அறிஞர்கள் அங்கீகரித்துள்ளார்கள்.
  3. ஆனால், குர்‍ஆனின் பிழையை சரி செய்வதற்கு பதிலாக, அகராதிகளில் இதையும் ஒரு விதிவிளக்கு என்றுச் சொல்லி, இஸ்லாமுக்கு பிறகு சேர்த்துவிட்டார்கள்.

பீஜே அவர்களின் இதர கருத்துக்களுக்கு அடுத்த கட்டுரையில் பதில் காண்போம்.

குர்‍ஆனின் இதர (இலக்கணப்)பிழைகளை அறிய கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்: