ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்

குர்ஆனின் இன்னொரு சரித்திர தவறு

குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்

The Quran, Moses and the Tablets of Stone

இறைவனின் உண்மையான வேதமும், இஸ்ரவேல் மக்களின் மிகவும் பழமையான சரித்திர விவரங்களும் அடங்கிய பரிசுத்த பைபிளில், இஸ்ரவேல் மக்கள் பின்பற்றவேண்டும் என்பதற்காக, கட்டளைகள் அடங்கிய இரண்டு கற்பலகைகளை தேவன் மோசேவிற்கு கொடுத்தார் என்று கூறப்பட்டுள்ளது.

சீனாய்மலையில் அவர் மோசேயோடே பேசி முடிந்தபின், தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார். (யாத்திராகமம் 31:18)

மோசே சாட்சிப் பலகைகள் இரண்டையும் தன் கையில் எடுத்துக்கொண்டு, சீனாய் மலையிலிருந்து இறங்குகிறபோது, தன்னோடே அவர் பேசினதினாலே தன் முகம் பிரகாசித்திருப்பதை அவன் அறியாதிருந்தான். (யாத்திராகமம் 34:29)

நீங்கள் கைக்கொள்ளவேண்டும் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிட்ட பத்துக் கற்பனைகளாகிய தம்முடைய உடன்படிக்கையை அவர் உங்களுக்கு அறிவித்து, அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதினார். (உபாகமம் 4:13)

இந்த வார்த்தைகளைக் கர்த்தர் மலையிலே அக்கினியிலும் மேகத்திலும் காரிருளிலும் இருந்து உங்கள் சபையார் எல்லாரோடும் மகா சத்தத்துடனே சொன்னார்; அவைகளோடு ஒன்றும் கூட்டாமல், அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதி, என்னிடத்தில் கொடுத்தார். (உபாகமம் 5:22)

அப்பொழுது தேவனுடைய விரலினால் எழுதியிருந்த இரண்டு கற்பலகைகளைக் கர்த்தர் என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்; சபை கூடியிருந்த நாளில் கர்த்தர் மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களுடனே பேசின வார்த்தைகளின்படியே அவைகளில் எழுதியிருந்தது. (உபாகமம் 9:10)

ஆனால், இஸ்ரவேல் மக்களின் சரித்திரம் சொல்வதற்கு முரணாக குர்ஆன் சொல்கிறது. அதாவது, மோசே இரண்டிற்கும் அதிகமான பலகைகளை பெற்றுக்கொண்டார் என்று குர்ஆன் சொல்கிறது.

மேலும் நாம் அவருக்கு பலகைகளில் (al-alwahi), ஒவ்வொரு விஷயம் பற்றிய நல்லுபதேசங்களையும், (கட்டளைகளையும்,) ஒவ்வொன்றைப் பற்றிய விளக்கங்களையும் எழுதி; "அவற்றை உறுதியாகப் பற்றிப் பிடிப்பீராக! இன்னும் உம்முடைய சமூகத்தாரை அவற்றில் அழகானவற்றை எடுத்துக் கொள்ளுமாறு கட்டளையிடுவீராக! அதிசீக்கிரம் பாவிகளின் தங்குமிடத்தை நான் உங்களுக்கு காட்டுவேன்" (என்று கூறினான்). (குர்ஆன் 7:145)

(இதனையறிந்த) மூஸா தன் சமூகத்தாரிடம் கோபத்துடன், விசனத்துடன் திரும்பி வந்த போது; (அவர்களை நோக்கி) "நான் இல்லாத சமயத்தில் நீங்கள் செய்த இக்காரியம் மிகவும் கெட்டது உங்கள் இறைவனுடைய கட்டளை (வேதனை)யைக் (கொண்டு வர) அவசரப்படுகிறீர்களா?" என்று கூறினார்; பின்னர் வேதம் வரையப் (பெற்றிருந்த) பலகைகளை (al-alwaha) எறிந்து விட்டு, தம் சதோதரர் (ஹாரூன்) உடைய தலை(முடி)யைப் பிடித்துத் தம் பக்கம் இழுத்தார். அப்போது (ஹாரூன்) "என் தாயின் மகனே! இந்த மக்கள் என்னை பலஹீனப்படுத்தி என்னை கொலை செய்யவும் முற்பட்டனர். ஆகவே (என்னுடைய) "பகைவர்களுக்கு என்மூலம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி விடாதீர்" இன்னும் என்னை அநியாயக் காரக் கூட்டத்தாருடன் சேர்த்துவிடாதீர்" என்று கூறினார். (குர்ஆன் 7:150)

மூஸாவை விட்டும் கோபம் தனிந்த போது, (அவர் எறிந்து விட்ட) பலகைகளை (al-alwaha) எடுத்துக் கொண்டார் - அவற்றில் வரையப்பெற்ற குறிப்புகளில் தம் இறைவனுக்குப் பயப்படுபவர்களுக்கு நேர் வழியும், (இறை) கிருபையும் இருந்தன.

குர்ஆனில் கற்பலகைகளுக்கு பயன்படுத்தப்பட்ட வார்த்தை "அல்வா" (alwah) என்பதாகும், இது பன்மையைக் குறிக்கும் வார்த்தையாகும். அரபி மொழியில் ஒருமை, பன்மை மட்டுமல்ல, 'இருமை'யும் உண்டு, அதாவது சரியாக இரண்டு எண்ணிக்கையை குறிக்க இந்த வார்த்தை பயன்படுத்தப்படும். அரபி மொழியில் மூன்று அல்லது அதற்கும் அதிகமான எண்ணிக்கையை குறிக்க "பன்மை" பயன்படுத்தப்படுகிறது. குர்ஆனின் ஆசிரியர் இரண்டு கற்பலகைகள் என்று கூற விரும்பியிருந்தால், அவர் "அல் வாய்ஹ்னி' (al-lawhayni) என்று மேற்கண்ட மூன்று வசனங்களிலும் சொல்லியிருக்கவேண்டும், ஆனால், அவர் அப்படி கூறவில்லை.

அரபி மொழியில் பன்மை என்பது மூன்று மற்றும் அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையை குறிக்கும் என்பதால், குர்ஆனின் மேற்கண்ட மூன்று வசனங்களின் படி, மோசே பெற்றுக்கொண்ட பலகைகள் குறைந்த பட்சம் மூன்று இருக்கும், அதிகபட்சமாக மூன்று கோடியாகவும் இருக்கலாம்! குர்ஆனின் வசனம் எத்தனை பலகைகளை மோசே பெற்றார் என்பதற்கு ஒரு வரயறையை வைக்காமல், பன்மையில் சொல்லியுள்ளது (மூன்று அல்லது அதற்கும் அதிகம்). இரண்டு பலகைகளுக்கும் அதிகம் என்றுச் சொல்லும்போது, அது தோராவிற்கு முரண்பட்ட எண்ணிக்கையை உடையதாக உள்ளது.

குர்ஆனின் சிறந்த விரிவுரையாளர்களில் ஒருவரான அல் ஜலாலைன் என்பவரின் தஃப்ஸீரின் படி, பலகைகளின் எண்ணிக்கை ஏழாகவோ அல்லது பத்தாகவோ இருக்கும் என்பதாகும். இப்படி விரிவுரை கூறினாலும், இது வெறும் யூகத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டது, திட்டமாக இத்தனை பலகைகள் என்று சொல்லப்பட்டதல்ல. இருந்தபோதிலும், இந்த விரிவுரை எங்களின் வாதத்திற்கு சாதகமாக உள்ளது,அதாவது

(அ) அரபி வசனம் இரண்டு பலகைகளுக்கும் அதிகமான எண்ணிக்கையைப் பற்றி கூறுகிறது.

(ஆ) இதனால், இஸ்லாமியர்கள் தங்கள் யூகங்களை ஓடவிட்டு, இத்தனை பலகைகள் இருக்கலாம் என்று தோராயமாக சொல்லவேண்டிய நிலையில் இருக்கிறார்கள் என்பதாகும்.

மேலும், இதே தஃப்ஸீர் (விரிவுரை), அந்த பலகைகள் சொர்க்கத்தின் கட்டைகளால் செய்யப்பட்டது, அல்லது அதில் முத்துக்கள் பதிக்கப்பட்டு இருந்தது என்று கூறுகிறது. இந்த விரிவுரை விவரமும், தோரா சொன்னதற்கு எதிராகச் சொல்கிறது, அதாவது தோராவின் படி, அந்த பலகைகள் கற்களினால் ஆனது.

இப்போது முஸ்லிம்கள் இவ்விதமாக சொல்வார்கள், மோசே முதலாவது பெற்றுக்கொண்ட பலகைகளை உடைத்துவிட்டார், இரண்டாம் முறை பெற்றுக்கொண்ட பலகைகள் பற்றி தான் குர்ஆன் கூறுகிறது என்று சொல்வார்கள் (மொத்தம் 4 பலகைகள்). இஸ்லாமியர்களின் இந்த வாதமும் செல்லுபடியாகாது, ஏனென்றால், குர்ஆன் 7:150ம் வசனத்தில் வரும் விவரம் மோசே தேவனிடத்திலிருந்து முதல் முறை பெற்றுக்கொண்ட பலகைகளைப் பற்றி கூறுகிறது. இதன் பிறகு தான் இஸ்ரவேல் மக்கள் காளைக் கன்றை வணங்குவதைக் கண்டு அவைகளை மோசே உடைத்துப்போட்டார். (பார்க்கவும் 7:148-154).

ஆக, ஒரு முஸ்லிம் பைபிளின் பக்கங்களை படித்து இத்தனை பலகைகளைத்தான் இறைவன் மோசேவிற்கு கொடுத்தார் என்றுச் சொல்லமுடியாது, அப்படி பைபிளைப் படித்து எங்களிடம் எண்ணிக்கையைச் சொன்னாலும், பைபிள் குர்‍ஆனின் பிழையை சுட்டிக்காட்டி, குர்ஆனை பொய்யாக்குகிறது என்பதாக அமைந்துவிடும், அதாவது பைபிள் தான் உண்மை, குர்ஆன் ஒரு பொய்யான வேதம் என்பது நிருபனமாகிவிடும். சரியான எண்ணிக்கையை கொடுப்பதற்கு பைபிளை படித்தாலும் இஸ்லாமியர்களுக்கு எந்த உபயோகமும் இருக்காது.

சாம் ஷமான்

ஆங்கில மூலம்: Another historical error in the Quran: The Quran, Moses and the Tablets of Stone

இதர குர்ஆன் முரண்பாடுகளை படிக்கவும்
சாம் ஷமான் அவர்களின் இதர கட்டுரைகள்

  


© Answering Islam, 1999 - 2010. All rights reserved.


முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்

முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும் - பாகம் 2

Muhammad And The Ten Meccans- 2

முன்னுரை: முஹம்மது மெக்காவை பிடித்த பிறகு, பத்து பேரை கொல்லும் படி கட்டளையிட்டார். அவர்களில் ஒருவர் அப்துல்லாஹ் என்பவராவார். குர்ஆன் வசனங்களை முஹம்மது சொல்ல அதனை எழுதுகின்றவராக இந்த அப்துல்லாஹ் இருந்தார். அப்துல்லாஹ் சுயமாக குர்‍ஆனில் ஏதாவது மாற்றம் செய்து, இதனை மாற்றி எழுதலாமா என்று கேட்டால், அதனை முஹம்மது அங்கீகரித்தார், அதனால், குர்ஆன் இறைவேதமாக இருக்கமுடியாது என்பதை அறிந்த இவர், இஸ்லாமை விட்டு வெளியேறி மெக்காவில் தஞ்சம் புகுந்தார். இவரை முஹம்மதுவிற்கு முன்பாக கொல்வதற்கு கொண்டு வந்தபோது, உத்மான் அப்துல்லாஹ்விற்கு ஆதரவாக பேசி, கொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார், இந்த நேரத்தில் முஹம்மது ஒன்றும் பேசாமல் இருந்தார், நீண்ட நேரம் சென்ற பிறகு, அப்துல்லாஹ்வை கொல்வதில்லை என்று முஹம்மது மன்னிப்பு அளித்தார்.

அவர்கள் சென்றுவிட்ட பிறகு தன்னை சுற்றியிருந்த தன் தோழர்களிடம் முஹம்மது, நான் நீண்ட நேரம் அமைதியாக இருந்தது எதற்காகவென்றால், அந்த நேரத்தில் உங்களில் ஒருவர் அப்துல்லாஹ்வின் தலையை துண்டித்துவிடுவீர்கள் என்று எதிர்ப்பார்த்தேன் என்றுச் சொன்னார்.

அதற்கு அவரின் தோழர்கள், நீங்கள் ஏன் சைகை காட்டவில்லை, அல்லது தெளிவாக எங்களுக்குச் சொல்லவில்லை என்றுச் சொன்னார்கள். நபி என்பவர் சைகை காட்டி கொல்லமாட்டார் என்ற ஒரு நொண்டிச் சாக்கு ஒன்றை கூறி சமாளித்தார் முஹம்மது.

ஆக, முஹம்மதுவின் மன ஓட்டத்தை புரிந்துக்கொள்ள அவரது சகாக்கள் தவறியதால், ஒருவரின் உயிர் தப்பியது. இந்த விவரங்கள் அனைத்தும் தகுந்த ஆதாரங்களோடு முதல் பாகத்தில் விளக்கப்பட்டுள்ளது. அதனை இங்கு படிக்கவும்:

முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும் - பாகம் 1 அப்துல்லாவின் அதிர்ஷ்டம் முஹம்மதுவின் துரதிஷ்டம்

இப்போது, முஹம்மது கொல்ல விரும்பிய மீதமுள்ள ஒன்பது பேரைக் குறித்து இந்த இரண்டாம் பாகத்தில் காண்போம்.

முதல் கொலை: அப்துல்லாஹ் கட்டல் (Abdullah Khatal)

இப்போது முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறாகிய, சீரத் ரஸூலல்லாஹ்விலிருந்து நான் விட்ட இடத்திலிருந்து தொடருகிறேன், பக்கம் 550:

[கொலை செய்யப்படுவதற்கு குறிக்கப்பட்ட] மற்றொருவர் அப்துல்லாஹ் கட்டல் ஆவார் (Abdullah Khatal of B. Taym b. Ghalib). அவர் ஒரு முஸ்லீமாக மாறியிருந்தார், இறைத்தூதர் அவரை ஒரு அன்சாரியோடு கூட ஏழை வரியை வசூலிப்பதற்காக அனுப்பியிருந்தார். அவருக்கு ஒரு விடுவிக்கப்பட்ட அடிமையிருந்தான் அவன் இவருக்கு சேவை செய்துக்கொண்டு இருந்தான் (அவனும் ஒரு முஸ்லீம் தான்). அவர்கள் ஒரு இடத்தில் தங்கின போது தன்னுடைய வேலைக்காரனிடத்தில் ஒரு ஆட்டை அடித்து தனக்கு உணவை ஆயத்தப் படுத்தும் படி சொல்லிவிட்டு தூங்க சென்றார். அவர் துயில் எழுந்தபோது அவன் ஒன்றும் செய்யாமலிருந்தான். எனவே அவர் அவனை தாக்கி கொன்று போட்டார் மற்றும் இஸ்லாமிலிருந்து அவர் வெளியேறி விட்டார். அவருக்கு பாட்டு பாடக்கூடிய இரண்டு அடிமைப் பெண்கள் இருந்தார்கள், இவர்களில் ஒரு பெண்ணின் பெயர் ஃபர்தானா என்பதாகும், மற்றும் இவளது இன்னொரு தோழியும் சேர்ந்து வழக்கமாக முஹம்மதுவைப் பற்றி கேலியான பாட்டுகளை பாடுவார்கள். எனவே அவர்கள் இருவரும் அவரோடு சேர்த்து கொல்லப்படுவதற்கு முஹம்மது கட்டளையிட்டார்.

இங்கே சற்று நிறுத்தி இந்த பத்தியை ஆய்வு செய்வோம். இஸ்லாமைவிட்டு வெளியேறிய ஒரு மனிதனையும், அவனுடைய இரண்டு அடிமை சிறுமிகளையும் கொல்ல முஹம்மது கட்டளையிட்டார். அப்துல்லாஹ் கட்டலுக்கு (Abdullah Khatal) மரண தண்டனை விதிக்கபட்டதற்கு அவர் ஒரு முஸ்லீமாக இருந்த தன்னுடைய அடிமையை கொலை செய்ததற்காக அல்ல மாறாக மதத்தை விட்டதற்காகத்தான். தன்னுடைய ஒரு அடிமையைக் கொன்றதற்காக ஒரு இஸ்லாமியருக்கு மரண தண்டனை விதிப்பதை இஸ்லாமிய சட்டம் அனுமதிப்பதில்லை. மேலும் கேலியான பாட்டுகளை பாடும் இரண்டு அடிமைச் சிறுமிகளையும் கொல்லுவதற்கு முஹம்மது கட்டளையிட்டார். அவர்கள் முஹம்மதுவைப் பற்றி சில வருடங்க்கு முன்பு தான் கேலியான பாடல்களை பாடினார்கள் என்பதை நினைவு கூறவும். இப்போது முஹம்மதுவின் பழிவாங்கும் நேரம் வந்துவிட்டது. இந்த அடிமை சிறுமிகள் இஸ்லாமுக்கோ அல்லது புதிய இஸ்லாமிய தேசத்திற்கோ அச்சுறுத்தலானவர்கள் இல்லை. அவர்கள் வெறும் அடிமைப் பெண்கள் தான் ஆனால் கொலை செய்யப்பட கட்டளையிடப்பட்டார்கள். ஏனென்றால் முஹம்மதுவைப் பற்றிய வேடிக்கையான பாடல்களைப் பாடினார்கள். இன்னும் அவைகளைப் பற்றி கீழுள்ள பத்திகளில் மேலதிக விவரங்களைக் காண்போம்.

இங்கே, இபின் சாத்தின் பட்டியலில், கட்டல் (Khatal) ஆறாவது நபராக இருப்பதை கவனிக்கவும்.

கட்டலைப் பற்றி இபின் சாத்தின் புத்தகத்தில் தொகுப்பு 2 பக்கம் 172 லிருந்து உள்ள செய்திகளை நான் இங்கு கொடுக்கிறேன். இங்கு, செய்தியை அறிவித்தவர்களின் சங்கிலித்தொடர்ச்சியான பெயர்களை குறிப்பிடவில்லை என்பதை கவனிக்கவும் (Chain of Narrators).

பக்கம் 172: 'அல்லாஹ்வின் தூதர் வெற்றி பெற்ற வருடத்தில் மெக்காவிற்குள் பிரேவேசித்தார், அவருடைய தலையில் ஒரு தலைக்கவசம் இருந்தது. பின்னர் அதை அவர் நீக்கினார்'. மான் மற்றும் மூஸா இபின் தாவுத் அறிவித்ததாவது: ஒரு மனிதன் அவரிடத்தில் வந்து, 'ஓ அல்லாஹ்வின் தூதரே! இபின் கட்டல் (Ibn Khatal) அல்-காபாவின் திரைகளை இறுகப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறினான். அதற்கு அல்லாஹ்வின் தூதர் 'அவனைக் கொல்லுங்கள்" என்று சொன்னார்.

பக்கம் 173: "..... நீங்கள் அவனை எங்கே கண்டாலும் கொல்லுங்கள்"

இப்போது கட்டலைப் (Khatal) பற்றி புகாரி ஹதீஸிலிருந்து, தொகுப்பு 5 எண் 582 கூறுவதைக் காண்போம்:

அனஸ் பின் மாலிக் கூறியதாவது: வெற்றியின் நாளில் மெக்காவிற்குள் தலையில் ஒரு தலைக்கவசம் அணிந்தவராக நபி பிரேவேசித்தார், அவர் அதை எடுத்தபோது, ஒரு மனிதன் வந்து, 'இபின் கட்டல் காபாவின் திரையோடு ஒட்டிக்கொண்டிருக்கிறார்' என்று கூறினான். நபி 'அவனை கொல்லுங்கள்' எனக் கூறினார்.

அப்துல்லாஹ்வைப் போன்று கட்டலுக்கு (Khatal) அதிர்ஷ்டம் இல்லை, இபின் சாத் பக்கம் 174 ல் கூறுகிறார்:

'நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் இபின் அபி சார், ஃபர்தானா இபின் அல் சிப்ரா மற்றும் இபின் கட்டலை வெற்றியின் நாளிலே கொல்லுவதற்கு (தன்னை பின்பற்றுபவர்களுக்கு) கட்டளை கொடுத்தார். அபூ பர்ஜாஹ் வந்து காபாவின் திரையை அவர் (இபின் கட்டல்) இறுக பிடித்துக் கொண்டிருப்பதை கண்டான். அவன் (அபூ பர்ஜாஹ்) அவருடைய வயிற்றை பிளந்து போட்டான்.

இஸ்லாமிலிருந்து விலகினதற்காக கொலை செய்யப்பட்ட மனிதனைப் பற்றி பார்த்தோம். அவன் மெக்காவில் இருக்கும் போது அல்ல மதீனாவிலிருக்கும் போது தான் இஸ்லாமிலிருந்து வெளியேறினான் என்பதை கவனிக்க.

நாம் இதுவரை கண்ட இரண்டு நபர்களில் ஒருவர் கொல்லப்பட்டார் (1 of 2).

இரண்டாம் கொலை: அடிமைப்பெண்

இப்போது அந்த இரண்டு அடிமைப் பெண்களின் கதையை நிறைவு செய்வதற்காக, நான் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறாகிய சீரத்தின் 551வது பக்கத்திற்கு தாவுகிறேன்.

"இபின் கட்டலின் இரண்டு பாடும் அடிமைப் பெண்களின் விஷயத்தில், ஒருவள் கொலை செய்யப்பட்டாள், இன்னொருவள் பொதுமன்னிப்புக்காக வேண்டி, முஹம்மது அதை அளிக்கும் வரைக்கும் தப்பி ஓடிப்போனாள்".

ஒரு பெண் கொலை செய்யப்பட்டாள், இன்னொருவள் தப்பி ஓடிப்போனாள். முஹம்மது கொஞ்சம் இளகியவுடன் அவள் மன்னிப்புக்காக கெஞ்சினாள் அவர் பொது மன்னிப்பு அளித்தார்.

ஆக, ஒரு அடிமைப் பெண் தப்பித்துக் கொண்டாள் ஆனால், மற்றொருவள் மரண தண்டனையை அனுபவித்தாள். பிறகு உயிரோடிருப்பவள் மன்னிப்புக்காக கெஞ்சுகிறாள், அவளுக்கு மன்னிப்பு வழங்கப்படுகிறது. மீண்டும் இங்கே முஹம்மதுவின் மரண தண்டனைக்கான உத்தரவு முஹம்மதுவின் விருப்பத்திற்கு ஏற்றபடி மாறுகிறவைகளாக இருப்பதைக் காட்டுகிறது. அவர்கள் அவரை கேலி செய்தார்கள். அதற்கு தண்டனையை அனுபவித்தர்கள் (ஒருவள் தன் உயிரையே கொடுக்க வேண்டியிருந்தது). பிறகு முஹம்மது அதிக பாதுகாப்பாக உணர்ந்தபோது உயிரோடிருந்த அடிமைப் பெண்ணுக்கு மன்னித்தார்.

நாம் இதுவரை கண்ட நான்கு நபர்களில் இருவர் கொல்லப்பட்டனர் (2 of 4).

மூன்றாம் கொலை: அல்-ஹுவாயிரித் (al-Huwayrith )

சீரத்தின் 551 பக்கத்திலிருந்து:

மற்றொருவர் மெக்காவில் அவரை நிந்தனை செய்பவர்களில் ஒருவரான அல்-ஹுவாயிரித் நுக்காயித் வஹாப் குசாயி (al-Huwayrith Nuqaydh Wahb Qusayy) .......... அல்-ஹுவாயிரித் அலியால் கொல்லப்பட்டார். (அலி முஹம்மதுவின் மருமகன் ஆவார்).

நீங்கள் இங்கே என்ன காண்கிறீர்கள்? இந்த மனிதன் முஹம்மதுவை கேலி செய்ததினால் கொலை செய்யப்பட்டார்! முஹம்மதுவின் இரண்டு குழந்தைகள் சவாரி செய்து கொண்டிருந்த ஒட்டகத்தை ஹுவாயிரித் முடுக்கிவிட்டார், அதன் விளைவாக வருடங்கள் கழிந்தபோது தன் உயிரைக் கொடுக்க வேண்டியாதாயிருந்தது என்று இபின் ஹிசாம்[804] குறிப்பிடுகிறார்.

நாம் இதுவரை கண்ட ஐந்து நபர்களின் மூன்று பேர் கொல்லப்பட்டனர் (5 of 3).

நான்காம் கொலை: மிக்யாஸ் ஹுபாபா

சீரத்தின் 551 பக்கத் தொடர்ச்சி:

"[கொலை செய்யப்படுவதற்கு கட்டளை கொடுக்கப்பட்ட] மற்றொருவர் மிக்யாஸ் ஹுபாபா (Miqyas Hubaba) என்பவராவார். இவர் தற்செயலாக தன்னுடைய சகோதரனை கொன்ற ஒரு அன்சாரியை கொலை செய்தார். பிறகு பல தெய்வ வழிபாட்டாளராக மாறி இஸ்லாமை விட்டு வெளியேறி குறைஷிகளிடம் திரும்பினார்."

பக்கம் 492 ல் இதற்கான ஒரு குறிப்பு உள்ளது:

"மிக்யாஸ் ஹுபாபா மெக்காவிலிருந்து ஒரு முஸ்லீமாக வந்தார், அவர் வந்து, 'ஒரு முஸ்லீமாக நான் உஙகளிடத்தில் வந்திருக்கிறேன். தவறுதலாக கொல்லப்பட்ட என்னுடைய சகோதரனுடைய ரத்தப்பழிக்காக பழிக்கு பழி வாங்க வந்திருக்கிறேன்" என்று கூறினார். இறைத்தூதர், அவர் தன்னுடைய சகோதரன் ஹிஷாமின் இரத்தப் பழியை வாங்கிக் கொள்ளட்டும் என்று உத்தரவிட்டார், சிறிது நேரம் அவர் இறைத்தூதரோடு இருந்துவிட்டு பின்னர் தன்னுடைய சகோதரனைக் கொன்றவரை கொலைசெய்து விட்டு மெக்காவுக்குத் இஸ்லாமை விட்டு வெளியேறி திரும்பிப்போனார்.

இந்த மனிதன் ஆதாரப்பூர்வமாக ஒரு முஸ்லீமாக மாறி தற்செயலாக தன்னுடைய சகோதரனைக் கொன்றவனை பழிவாங்குவதற்கு விரும்பியிருக்கிறான். முஹம்மது அவர் பழிவாங்குவதற்கு அனுமதி வழங்கியிருக்கிறார். பிறகு மிக்யாஸ் தன் சகோதரனைக் கொன்ற மற்ற முஸ்லீமைக் கொலை செய்தார். பின்னர் அவர் இஸ்லாமை விட்டு வெளியேறி மெக்காவிற்கு திரும்பினார். இஸ்லாமை விட்டதற்கு தண்டனையாக மரண தண்டனை இருப்பதால், முஹம்மது அவரை கொலை செய்தார்.

நாம் இதுவரை கண்ட ஆறு நபர்களின் நான்கு பேர் கொல்லப்பட்டனர் (4 of 6).

ஐந்தாம் கொலை: சாரா

சீரத்தின் 551 பக்கத் தொடர்ச்சி

'மேலும் அப்துல் முத்தாலிப்பின் (பழங்குடி) ஒரு விடுவிக்கப்பட்ட அடிமை சாரா மற்றும் இக்ரிமா அபூ ஜஹால் என்பவர்களாவார்கள். சாரா அவரை [முஹம்மதுவை] மெக்காவில் அவமானப்படுத்தியிருந்தாள். இக்ரிமா யமனுக்கு தப்பி ஓடியிருந்தார். அவருடைய மனைவி உம் ஹக்கீம் ஹரீத் ஹிஸாம் முஸ்லீமாக மாறி தன் கணவருக்கு பொதுமன்னிப்பு வழங்கும் படி வேண்டினார். இறைத்தூதர் பொது மன்னிப்பு அளித்தார். அவள் யமனுக்குச் சென்று தன்னுடைய கணவனை தேடிப்பிடித்து அவரை இறைத்தூதரிடம் கொண்டுவந்தாள் அவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டான்".

மற்றொரு பக்க குறிப்பு, இக்ரிமா கூறியதாக உள்ள ஹதீஸ், புகாரி தொகுப்பு 9 எண் 57:

'இக்ரிமா கூறியதாவது: சில நாத்திகர்கள் அலியினிடத்திற்கு [முஹம்மதுவின் மருமகன், நான்காவது கலிபா] கொண்டுவரப்ட்டார்கள். அலி அவர்களை எரித்து (கொன்று) போட்டார். இந்த சம்பவத்தின் செய்தி இப்னு அப்பாஸுக்கு எட்டிய போது அவர் கூறினார், "நான் அலியின் ஸ்தானத்தில் இருந்திருந்தால், அல்லாஹ்வின் தூதர் "அல்லாஹ்வின் தண்டனையால் (எரித்து) யாரையும் தண்டிக்காதே" என்று கூறி தடுத்திருப்பதைப் போல 'நான் அவர்களை எரித்திருக்க மாட்டேன். யாராவது தன்னுடைய இஸ்லாமிய மதத்தை மாற்றினால், அவனைக் கொல்லுங்கள் என்ற அல்லாஹ்வின் தூதரின் வாக்கியத்ததைப் போல நான் அவர்களைக் கொன்று போட்டிருப்பேன்."

நாம் இதுவரை கண்ட எட்டு நபர்களின் ஐந்து பேர் கொல்லப்பட்டனர் (5 of 8)

மதச் சுதந்திரத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இஸ்லாமை விட்டு விடுவதினால் ஜனங்கள் கொல்லப்பட வேண்டுமா? அவர்கள் கொலை செய்யப்பட வேண்டும் என்று முஹம்மது கூறியுள்ளார்.

ஆறாவது கொலை: ஹப்பர் இபின் அல்-அஸ்வத்

இபின் சாத்தின் பட்டியலில் இரண்டாவது இருப்பவர் புகாரி தொகுப்பு 5, எண் 662ல் கூறப்பட்டுள்ள மனிதன், அநேகமாக ஹப்பர் இபின் அல்-அஸ்வத் அல்-அன்சி ஆவார். அவர் யமனில் கொல்லப் பட்டார்.

நாம் இதுவரை கண்ட ஒன்பது நபர்களின் ஆறு பேர் கொல்லப்பட்டனர் (6 of 9).

உயிர் தப்பிய: ஹிந்த் பின்ட் உத்பாஹ்

இபின் சாத்தின் பட்டியலில் 7 வது நபர் ஹிந்த் பின்ட் உத்பாஹ் என்பவராவார். அவள் அபூ சுப்யானின் மனைவியாவாள். முஹம்மது ஏற்கனவே சுப்யானை கொல்லும்படி கட்டளையிட்டிருந்தார் என்று தஸ்தி (Dashti) குறிப்பிடுகிறார். சுப்யான் மெக்காவில் ஒரு பெரிய தலைவராக இருந்தார். சுப்யான் ஒரு யுத்தத்தில் முஹம்மதுவிற்கு எதிராக சண்டையிட்டு இருந்தார். முஹம்மது மெக்காவை பிடிப்பதற்கு முன்பாக சுப்யான் முஹம்மதுவிடம் சென்று இஸ்லாமை ஏற்றுக்கொண்டார், இல்லையானால் இவர் கொல்லப்பட்டு இருப்பார். சுப்யான் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு ஹிந்த் பின்ட் உத்பாஹ் இஸ்லாமை ஏற்றுக்கொண்டாள், அதனால் அவளது உயிர் தப்பியது. உஹூத் போருக்கு பிறகு மரித்த முஸ்லீம்களின் உடல்களின் முன்பாக ஹிந்த் அசுத்தப்படுத்தியிருந்தாள். அவள் ஒரு இறந்த முஸ்லீமுடைய கல்லீரலை வெட்டி, அதில் ஒரு கடி கடித்து, பின் துப்பினாள். அவள் முஹம்மதுவையும் மற்ற தோற்கடிக்கப்பட்ட முஸ்லீம்களையும் அவர்கள் யுத்த களத்தை விட்டு ஓடின போது பரிகசித்தாள்.

அவள் மன்னிப்பு கோரினாள், மன்னிப்பு வழங்கப்பட்டாள்.

நாம் இதுவரை கண்ட பத்து நபர்களில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். (6 of 10).

முடிவுரை: சில மக்கள் இங்கே கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் ஏனென்றால் அவர்கள் முஹம்மதுவை வெறுத்தும் அவரை அவமானப்படுத்தியிருந்தார்கள். மற்றவர்கள் கொல்லப்பட்டார்கள் ஏனென்றால் அவர்கள் தாங்களாகவே இஸ்லாமை விட்டு வெளியேறினார்கள். இவர்களில் அநேகர் முஹம்மது எதிராக ஆயுதம் கூட தூக்காதவர்கள். பல வருடங்களுக்கு பிறகு முஹம்மது தான் அனுபவித்த வேதனை நிந்தனைகளுக்காக அவர்களை பழி வாங்கினார். அவர்களை கொலை செய்தார்.

meccan10.htm
Rev A: 10-12-97

ஆங்கில மூலம்: Muhammad And The Ten Meccans

சைலஸ் அவர்களின் இதர கட்டுரைகள்
முஹம்மது பற்றிய கட்டுரைகள்

  


© Answering Islam, 1999 - 2010. All rights reserved.


செவ்வாய், 27 ஏப்ரல், 2010

குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?

குர்ஆன் முரண்பாடுகள்

மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?

Who Adopted Moses: Pharaoh's Daughter or Pharaoh's Wife?

எபிரேய ஆண் பிள்ளைகளை கொல்லும் படி பார்வோன் கட்டளையிட்டு இருக்கும்போது, பார்வோனின் மகள் மோசேயை தத்து எடுத்ததின் மூலமாக, தேவன் மோசேயை காப்பாற்றியதாக பரிசுத்த பைபிள் கூறுகிறது:

லேவியின் குடும்பத்தாரில் ஒருவன் லேவியின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணினான். அந்த ஸ்திரீ கர்ப்பவதியாகி, ஒரு ஆண்பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளது என்று கண்டு, அதை மூன்று மாதம் ஒளித்துவைத்தாள். அவள் அதை அப்புறம் ஒளித்துவைக்கக்கூடாமல், ஒரு நாணற்பெட்டியை எடுத்து, அதற்குப் பிசினும் கீலும் பூசி, அதிலே பிள்ளையை வளர்த்தி, நதியோரமாய் நாணலுக்குள்ளே வைத்தாள். அதற்கு என்ன சம்பவிக்கும் என்பதை அறியும்படி அதின் தமக்கை தூரத்திலே நின்றுகொண்டிருந்தாள். அப்பொழுது பார்வோனுடைய குமாரத்தி நதியில் ஸ்நானம்பண்ண வந்தாள்; அவளுடைய தாதிகள் நதியோரத்தில் உலாவினார்கள்; அவள் நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு, தன் தாதியை அனுப்பி அதைக் கொண்டுவரும்படி செய்தாள். அதைத் திறந்தபோது பிள்ளையைக் கண்டாள்; பிள்ளை அழுதது; அவள் அதின்மேல் இரக்கமுற்று, இது எபிரெயர் பிள்ளைகளில் ஒன்று என்றாள். அப்பொழுது அதின் தமக்கை பார்வோனின் குமாரத்தியை நோக்கி: உமக்கு இந்தப் பிள்ளையை வளர்க்கும்படி எபிரெய ஸ்திரீகளில் பால்கொடுக்கிற ஒருத்தியை நான் போய் உம்மிடத்தில் அழைத்துக்கொண்டு வரட்டுமா என்றாள். அதற்குப் பார்வோனுடைய குமாரத்தி: அழைத்துக்கொண்டுவா என்றாள். இந்தப் பெண் போய்ப் பிள்ளையின் தாயையே அழைத்துக்கொண்டு வந்தாள். பார்வோனுடைய குமாரத்தி அவளை நோக்கி: நீ இந்தப் பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை எனக்கு வளர்த்திடு, நான் உனக்குச் சம்பளம் கொடுக்கிறேன் என்றாள். அந்த ஸ்திரீ பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை வளர்த்தாள். பிள்ளை பெரிதானபோது, அவள் அதைப் பார்வோனுடைய குமாரத்தியினிடத்தில் கொண்டுபோய் விட்டாள். அவளுக்கு அவன் குமாரனானான். அவள்: அவனை ஜலத்தினின்று எடுத்தேன் என்று சொல்லி, அவனுக்கு மோசே என்று பேரிட்டாள். (யாத்திராகமம் 2:1-10)

அவன் வெளியே போட்டுவிடப்பட்டபோது, பார்வோனுடைய குமாரத்தி அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள். (அப்போஸ்தலர் நடபடிகள் 7:21)

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இரண்டாயிரம் வருடங்களுக்கு பிறகு வந்த குர்ஆன், இந்த சரித்திர விவரத்திற்கு முரண்பட்டு கூறுகிறது:

நாம் மூஸாவின் தாயாருக்கு; "அவருக்கு (உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக அவர் மீது (ஏதம் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால், அவரை ஆற்றில் எறிந்து விடு - அப்பால் (அவருக்காக) நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்; நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்" என்று வஹீ அறிவித்தோம். (நதியில் மிதந்து வந்த) அவரை ஃபிர்அவ்னுடைய குடும்பத்தினர் எடுத்துக் கொண்டார்கள்; (பிற்காலத்தில் அவர்) அவர்களுக்கு விரோதியாகவும் துக்கந்தருபவராகவும் ஆவதற்காக! நிச்சயமாக ஃபிர்அவ்னும், ஹாமானும், அவ்விருவரின் படைகளும் தவறிழைப்பவர்களாகவே இருந்தனர். இன்னும்; (குழந்தையைக் கண்ட) ஃபிர்அவ்னின் மனைவி ("இக்குழந்தை) எனக்கும் உங்களுக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கிறது - இதை நீங்கள் கொன்று விடாதீர்கள்; நமக்கு இவர் பயன் அளிக்கக்கூடும்; அல்லது நாம் இவரை நம் புதல்வராக்கிக் கொள்ளலாம்" என்று சொன்னார்; இன்னும் அவர்கள் (இதன் விளைவு என்னவாகும் என்பதை) உணர்ந்து கொள்ளவில்லை. (குர்‍ஆன் 28:7-9) 

பார்வோனின் மகள் அல்ல, பார்வோனின் மனைவி மோசேயை தத்து எடுத்ததாக குர்ஆன் கூறுகிறது. ஆனால், பைபிள் சொல்வது தான் சரியானது, எப்படியென்றால், எபிரேய பைபிளின் முதல் ஐந்து புத்தகங்களை (தோரா) எழுதியவர் மோசே என்பதால், தன்னை யார் தத்து எடுத்தார்கள் என்ற விவரம் அவரை விட வேறு யாருக்கு சரியாக தெரிந்து இருக்கும்?

இந்நிகழ்ச்சி நடைப்பெற்ற காலத்திற்கு சமீபமான காலத்தில் தான் எபிரேய பைபிள் எழுதப்பட்டது. இஸ்ரவேல் மக்களின் மதிப்பிற்குரிய இரட்சகராக மோசே இருக்கிறார். ஆகையால், முஹம்மது மற்றும் இஸ்லாமியர்களை விட யூதர்களுக்குத் தான் தங்கள் சரித்திரம் பற்றிய விவரம் அதிகமாகவும், சரியாகவும் தெரியும். இஸ்லாமியர்களுக்கு யூதர்களின் சரித்திரம் பற்றிய சந்தேகம் வந்தால், அவர்கள் பைபிளை படித்தும், யூதர்களிடம் சென்றும் விவரங்களை தெரிந்துக்கொள்ளவேண்டும் என்று குர்ஆன் இஸ்லாமியர்களுக்கு கட்டளையிடுகிறது. அதாவது குர்ஆன் சொல்வது சரியானதா என்ற சந்தேகம் வந்தால், இப்படி செய்யுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறார்.

(நபியே!) நாம் உம் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தில் சந்தேகம் கொளிவீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம் கேட்டுப் பார்ப்பீராக நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்திய (வேத)ம் வந்துள்ளது - எனவே சந்தேகம் கொள்பவர்களில் நீரும் ஒருவராகி விட வேண்டாம். (குர்ஆன் 10:94)

நிச்சயமாக நாம் மூஸாவுக்குத் தெளிவான ஒன்பது அத்தாட்சிகளை கொடுத்திருந்தோம்; அவர் அவர்களிடம் (அவற்றைக் கொண்டு) வந்தபோது (என்ன நடந்தது என்று) பனீ இஸ்ராயீல்களிடம் (நபியே!) நீர் கேளும். ஃபிர்அவ்ன் அவரை நோக்கி 'மூஸாவே! நிச்சயமாக நான் உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே எண்ணுகிறேன்' என்று கூறினான். (குர்ஆன் 17:101)

மேலும், இயேசு தன்னிடமுள்ள எபிரேய பைபிளை உறுதிப்படுத்தினார் என்று குர்ஆன் கூறுகிறது:

இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான் …. "எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும், உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன்…(குர்‍ஆன் 3:48,50) 

இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது. (குர்ஆன் 5:46)

ஆக, இயேசு உறுதிப்படுத்தின வேதம் தான் இப்போது நம்மிடம் உள்ள பைபிளாக இருப்பதால், குர்ஆன் ஒரு சரித்திர பிழை செய்துள்ளது என்பதை நாம் அறியலாம். குர்ஆனின் இந்த பிழையை பரிசுத்த பைபிள் சரிப்படுத்துகிறது என்ற முடிவிற்கு நாம் வரலாம்.

சாம் ஷமான்

குர்ஆனின் இந்த பிழையைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை: குர்ஆனின் இந்த பிழை முஹம்மது ஏதோ அறியாமையில் செய்த பிழை அல்ல, இது வேண்டுமென்றே தெரிந்தே செய்த மாற்றமாகும். இதனை விளக்கும் ஒரு ஆய்வு கட்டுரையை படிக்கவும்: Adoption by Adaption

ஆங்கில மூலம்: Qur'an Contradiction: Who Adopted Moses: Pharaoh's Daughter or Pharaoh's Wife?

இதர குர்‍ஆன் முரண்பாடுகளை படிக்கவும்
சாம் ஷமான் அவர்களின் இதர கட்டுரைகள்

குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?

குர்ஆனின் சரித்திர பிழை

யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?

Did Joseph's parents go to Egypt?

யோசேப்பின் இளைய சகோதரன் பென்யமீன் பிறந்த பிறகு, அவர்களின் தாய் ராகேல் மரித்துவிட்டதாக பைபிள் கூறுகிறது (ஆதியாகமம் 35: 16-18).

பின்பு, பெத்தேலை விட்டுப் பிரயாணம் புறப்பட்டார்கள். எப்பிராத்தாவுக்கு வர இன்னும் கொஞ்சம் தூரமிருக்கும்போது, ராகேல் பிள்ளைபெற்றாள்; பிரசவத்தில் அவளுக்குக் கடும்வேதனை உண்டாயிற்று. பிரசவிக்கும் போது, அவளுக்குக் கடும் வேதனையாயிருக்கையில், மருத்துவச்சி அவளைப் பார்த்து: பயப்படாதே, இந்த முறையும் புத்திரனைப் பெறுவாய் என்றாள். மரணகாலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது, அவள் அவனுக்கு பெனொனி என்று பேரிட்டாள்; அவன் தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று பேரிட்டான். (ஆதியாகமம் 35:16-18)

ஆனால், குர்ஆனின் ஆசிரியருக்கு இந்த விஷயம் தெரியவில்லை என்று தெரிகிறது. அதனால் தான் அவர் யாக்கோபின் குடும்பம் எகிப்திற்குச் சென்ற விஷயத்தை குர்ஆன் வசனமாக வெளிப்படுத்திய போது, கீழ் கண்டவாறு கூறுகிறார்.

(பின்னர் குடும்பத்துடன்) அவர்கள் யூஸுஃபிடம் வந்தபோது, அவர் தம் தாய் தந்தையரை (கண்ணியத்துடன் வரவேற்றுத்) தம்முடன் வைத்துக் கொண்டார்; இன்னும் "அல்லாஹ் நாடினால் நீங்கள் மிஸ்ருக்குள் அச்ச மற்றவர்களாகப் பிரவேசியுங்கள்" என்றும் குறினார். இன்னும், அவர் தம் தாய் தந்தையரை அரியாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார்; அவர்கள் (எல்லோரும்) அவருக்கு (மரியாதை செலுத்தியவர்களாகச்) சிரம் பணிந்து வீழ்ந்தனர்; அப்போது அவர் (தம் தந்தையை நோக்கி), "என் தந்தையே! இது தான் என்னுடைய முந்தைய கனவின் விளக்கமாகும்; அதனை என் இறைவன் உண்மையாக்கினான்; மேலும், அவன் என்னைச் சிறைச்சாலையிலிருந்து வெளியாக்கியதுடன் எனக்கும் என் சகோதரர்களுக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டு பண்ணி விட்ட பின்னர் உங்களை கிராமத்திலிருந்து கொண்டு வந்ததன் மூலம் அவன் நிச்சயமாக எனக்குப் பேருபகாரம் செய்துள்ளான்; நிச்சயமாக என் இறைவன், தான் நாடியவற்றை மிக நுட்பமாகச் செய்கிறவன், நிச்சயமாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; மிக்க ஞானமுள்ளவன்" என்று கூறினார். (குர்ஆன் 12:99-100)

குர்ஆனின் இந்த தவறை அறிந்த இரண்டு இஸ்லாமிய விரிவுரையாளர்கள், இந்த பிரச்சனையை சரி செய்ய முயற்சி எடுத்து, பின்குறிப்பு எழுதியுள்ளார்கள்.

"... அவரின் தாய் ராகேல் ஏற்கனவே மரித்து விட்டார்கள். ஆனால், யோசேப்பு தன் தாயின் சகோதரியாகிய லேயாளினால் வளர்க்கப்பட்டார். லேயாளையும் அவரது தந்தை திருமணம் செய்து இருந்தார். இதனால், இப்போது லேயாள் தான் யோசேப்பின் தாயாக உள்ளார். இவர்கள் யோசேப்போடு தங்கி இருந்தார்கள்". (அப்துல்லாஹ் யூசுப் அலி, த ஹோலி குர்ஆன், சௌதி பதிப்பு, பின்குறிப்பு 1777)

பைபிளில் கூறப்பட்டது போலவே, யோசேப்பின் தாய் ராகேல், மென்யமீனை பெற்ற போது மரித்துவிட்டார். இந்த விவரம் குர்ஆனுக்கு முரண்பட்ட விவரமல்ல. இந்த இடத்திலே "பெற்றோர்கள்" என்றுச் சொன்னால், அது யாக்கோபின் இதர மனைவிகளையும் குறிக்கும், அதாவது யோசேப்பையும், பென்யமீனையும் வளர்த்தவரை குறிக்கும். இது பழங்கால அரேபிய பழக்க வழக்கங்களுக்கு பொருந்துகிறது, அதாவது வளர்ப்பு தாயை ஒருவர் "தாய்" என்று அழைக்கலாம். (முஹம்மது அஸத், த மெஸேஜ் ஆப் த குர்ஆன், பக்கம் 352, பின்குறிப்பு: 96)

இந்த நிகழ்ச்சியைப் பொருத்தவரையில் அரேபிய பழக்கவழக்கங்கள் பற்றிய விவரம் சம்மந்தமில்லாதது, ஏனென்றால் யாக்கோபு ஒரு அரேபியர் அல்ல. இருந்தபோதிலும், யோசேப்பு மற்றும் பென்யமீனின் தாயாகிய ராகேல் மரித்துவிட்டபடியால் இவ்விருவரையும் லேயாளே தாயாக இருந்து வளர்த்தார் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். மேலும் யோசேப்பு லேயாளை தாய் என்று அழைத்து இருந்திருப்பார்.

ஆனாலும், மேற்கண்ட இரண்டு இஸ்லாமியர்களின் வாதங்கள் அல்லது விவரங்கள் குர்ஆனின் பிழையிலிருந்து அதனை காப்பாற்ற முடியவில்லை. ராகேலின் மரணத்தை மட்டும் பைபிள் கூறவில்லை, லேயாளின் மரணம் பற்றியும் கூறுகிறது, அதுவும் யாக்கோபும் தன் குடும்பத்தார் அனைவரும் எகிப்திற்கு செல்வதற்குமுன்பாக லேயாள் மரித்தார்.

அதற்குப்பின்பு, யாக்கோபு பெயெர்செபாவிலிருந்து பிரயாணம் புறப்பட்டான். இஸ்ரவேலின் குமாரர் தங்கள் தகப்பனாகிய யாக்கோபையும் தங்கள் குழந்தைகளையும் தங்கள் மனைவிகளையும் பார்வோன் அனுப்பின வண்டிகளின்மேல் ஏற்றிக்கொண்டு, தங்கள் ஆடுமாடுகளையும், தாங்கள் கானான் தேசத்தில் சம்பாதித்த தங்கள் பொருட்களையும் சேர்த்துக்கொண்டு, யாக்கோபும் அவன் சந்ததியார் யாவரும் எகிப்துக்குப் போனார்கள். அவன் தன் குமாரரையும் தன் குமாரரின் குமாரரையும் தன் குமாரத்திகளையும் தன் குமாரரின் குமாரத்திகளையும் தன் சந்ததியார் அனைவரையும் எகிப்துக்குத் தன்னோடே அழைத்துக்கொண்டுபோனான். (ஆதியாகமம் 46:5-7)

மேற்கண்ட வசனங்களில், பெயர் குறிப்பிடாமல் எல்லா பெண்களையும் சுருக்கமாக மொத்தமாகச் சொல்கிறது: "இஸ்ரவேலின் குமாரர் தங்கள் தகப்பனாகிய யாக்கோபையும் தங்கள் குழந்தைகளையும் தங்கள் மனைவிகளையும்" என்றுச் சொல்கிறது.

எகிப்திற்குச் சென்றவர்களின் பட்டியலில், யாக்கோபின் ஒரு மனைவியின் பெயரும் இடம் பெறவில்லை. ஒரு வேளை, யாகோபின் மகன்கள் தங்கள் தாய்மார்களை எகிப்திற்கு அழைத்துச் செல்ல மறந்துவிட்டார்கள் என்றுச் சொல்வது ஏற்கத்தகாத அவமானமாகும். அதே போல, யாக்கோபு தன் மனைவிகளை ஏன் அழைத்துச் செல்லவில்லை என்று தன் மகன்களுக்கு ஞாபகப்படுத்த மறந்துவிட்டார் என்றுச் சொல்வதும் ஏற்கத் தக்கது அல்ல. நாம் படித்த வசனங்களில், "இஸ்ரவேலின் குமாரர் தங்கள் தகப்பனாகிய யாக்கோபையும் ..." என்ற வாக்கியமானது, யாக்கோபு அதிக வயதானவராக இருக்கிறார் என்றும் அவர் பலவீனமாக இருக்கிறார் என்பதையும் காட்டுகிறது. ஆதியாகமம் 47:8-9 வரையிலுள்ள வசனங்களின் படி, யாக்கோபுக்கு அந்த நேரத்தில் 130 வயது ஆகும். யாக்கோபுக்கு இவ்வளவு வயது இருக்கின்ற இந்த சமயத்தில் அவரது மனைவிகள் உயிரோடு இருந்திருப்பார்களா என்பது சந்தேகம் தான்.

கடைசியாக, எகிப்து தேசத்திலே, தன்னுடைய மரணம் நெருங்கிவிட்டது என்று உணர்ந்த யாக்கோபு, தன்னுடைய அனைத்து மகன்களையும் அழைத்து கீழ்கண்டவாறு கூறுகிறார்:

பின்னும் அவன் அவர்களை நோக்கி: நான் என் ஜனத்தாரோடே சேர்க்கப்படப்போகிறேன்; ஏத்தியனான எப்பெரோனின் நிலத்திலுள்ள குகையிலே என்னை என் பிதாக்களண்டையிலே அடக்கம் பண்ணுங்கள் என்று கட்டளையிட்டு; அந்தக் குகை கானான் தேசத்திலே மம்ரேக்கு எதிராக மக்பேலா என்னப்பட்ட நிலத்தில் இருக்கிறது; அதை நமக்குச் சொந்தக் கல்லறைப் பூமியாயிருக்கும்படி, ஆபிரகாம் ஏத்தியனாகிய எப்பெரோன் கையில் அதற்குரிய நிலத்துடனே வாங்கினார். அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவியாகிய சாராளையும் அடக்கம்பண்ணினார்கள்; அங்கே ஈசாக்கையும் அவர் மனைவியாகிய ரெபெக்காளையும் அடக்கம்பண்ணினார்கள்; அங்கே லேயாளையும் அடக்கம்பண்ணினேன். அந்த நிலமும் அதில் இருக்கிற குகையும் ஏத்தின் புத்திரர் கையில் கொள்ளப்பட்டது என்றான். (ஆதியாகமம் 49:29-32)

யாக்கோபு தன் மனைவியாகிய லேயாளை கானான் தேசத்தில் அடக்கம் செய்தார் என்பதை மேற்கண்ட வசனங்கள் மிகவும் தெளிவாக நமக்கு கூறுகின்றன. அதிக வயதை அடைந்தவரும், மிகவும் பலவீனவருமான யாக்கோபு தன் மனைவி லேயாள் எகிப்திலே மரித்த பிறகு அவளை கானானுக்குக் கொண்டுச் சென்று அடக்கம் செய்தார் என்றுச் சொல்வது ஏற்கத்தக்கது இல்லை, இதற்கு யாக்கோபின் வயதும் பலவீனமான அவரது உடல்நிலையும் தாங்காது. ஆக, லேயாளை யாக்கோபு கானானில் அடக்கம் செய்தது, இவர்கள் கானானில் இருக்கும் காலத்தில் தானே தவிர, எகிப்திற்கு வந்துவிட்ட பிறகு அல்ல. ராகேல் எங்கே மரித்தாளோ அதே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது போல, லேயாளும் தான் மரித்த இடத்திலேயே (கானானில்) அடக்கம் செய்யப்பட்டாள் (ஆதியாகமம் 35:19-20).

முடிவுரை: யோசேப்பு எகிப்திற்கு வருவதற்கு முன், பல ஆண்டுகளுக்கு முன்பே அவரின் தாய் மரித்துவிட்டார். அதே போல, யாக்கோபும், அவரது குடும்பத்தாரும் எகிப்திற்கு வருவதற்கு முன்பாகவே, லேயாளும் மரித்துவிட்டார். யாக்கோபின் மனைவிகளில் ஒருவரும் எகிப்திற்கு யாக்கோபோடு செல்லவில்லை. பைபிள் கொடுக்கும் விவரம் மிகவும் சரியாக உள்ளது. யோசேப்பின் தாய் தந்தையர் (பெற்றோர்) எகிப்திற்கு வந்தார்கள் என்று குர்ஆன் சொல்லி மிகப்பெரிய தவறை செய்துள்ளது.

இதுமட்டுமல்ல, தன்னை பெற்றெடுத்த தாயை அல்லது தந்தையை மட்டுமே "தாய்" என்றும் "தந்தை" என்றும் அழைக்க வேண்டும் என்ற ஒரு கோட்பாட்டை குர்ஆன் சொல்கிறது. இதன்படி பார்த்தால், யூசுப் அலி மற்றும் முஹம்மது அஸத் என்ற இவ்விரு விரிவுரையாளர்களின் பதில்கள் குர்ஆனின் கோட்பாடுகளுக்கு எதிராக இருக்கிறது என்பதைக் காணலாம். இதைப் பற்றி இன்னும் அறிய, இக்கட்டுரையை "Can I call her mother?" படிக்கவும்.

ஜோசன் கட்ஜ்

ஆங்கில மூலம்: Qur'an Error: Did Joseph's parents go to Egypt?

இதர குர்ஆன் முரண்பாடுகளை படிக்கவும்

 

திங்கள், 26 ஏப்ரல், 2010

குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?

குர்ஆனும் விஞ்ஞானமும்


சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?

Qur'an & Science Problem:

Are Sun and Moon subject to mankind?

குர்‍ஆன் 14:33 கீழ்கண்டவாறு கூறுகின்றது:

(தவறாமல்), தம் வழிகளில் ஒழுங்காகச் செல்லுமாறு சூரியனையும் சந்திரனையும் அவனே உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். மேலும், அவனே இரவையும் பகலையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (குர்ஆன் 14:33)

And He has made subject to you the sun and the moon, both diligently persuing their courses; and the night and the day has He (also) made subject to you. (Sura 14:33)

இவ்விரண்டு கோள்களும் எனக்கு வசப்படவில்லை. நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவைகள் தங்கள் பாதையில் சுற்றிகொண்டே இருக்கும். எனக்கு மட்டுமல்ல, இக்கட்டுரையை படிக்கும் எந்த வாசகருக்கும் சரி, இவ்விரு கோள்கள் வசப்பட்டு இருக்காது என்பதை நான் அறிவேன். ஆனால், பல்வேறு வகைகளில், குர்‍ஆன் சொல்லும் வாக்கியத்திற்கு எதிராக, மனிதர்கள் இவ்விரு கோள்களுக்கு வசப்பட்டு இருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

சூரியனின் ஒளி பூமியின் மேல் இருப்பதும், அது இல்லாமல் இருப்பதும் (பகல் மற்றும் இரவு) நம்முடைய வாழ்க்கையில் அதிக மாற்றத்தை உண்டாக்குகிறது, அதாவது நாம் அதன் மேல் ஆதாரப்பட்டு (வசப்பட்டு) இருக்கிறோம். இதுமட்டுமல்ல, சந்திரனின் ஈர்ப்பு காரணமாக சமுத்திரங்களில் அலைகளின் தீவிரம் சில நேரங்களில் அதிகமாகவும், சில நேரங்களில் சாதாரண நிலையிலும் இருக்கும். கடலோரங்களில் வாழும் மக்கள் சந்திரனின் இவ்விதமான ஈர்ப்பினால் ஏற்படும் கடல் அலைகளுக்கு வசப்பட்டு வாழ்கிறார்கள். அவர்கள் இதனை மாற்றமுடியாது, அதற்கு பதிலாக, அவைகளுக்கு ஏற்றாற்போல அவர்கள் தங்கள் வாழ்வை மாற்றிகொள்கிறார்கள்.

மின் விளக்குகளின் (மின்சாரத்தின்) கண்டுபிடிப்பினால், சூரிய ஒளி இல்லாத நேரங்களில் (இரவு நேரங்களில்) மனிதன் ஓரளவிற்கு 'சூரிய ஒளிக்கு கட்டுப்பட்டு' இருக்கவில்லை என கூறலாம். இயற்கையாக உள்ள சூரிய ஒளிக்கு நிகராக ஓரளவிற்கு மனிதன் மின் விளக்குகளை கண்டுபிடித்துள்ளான் எனலாம். இப்படி இருந்தும், நாம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே மின் விளக்குகளைக் கொண்டு இரவை பகலாக்க முடியுமே தவிர, நம்முடைய தற்போதைய தொழில் நுட்பங்களின் உதவி கொண்டு உலகம் முழுவதும் வெளிச்சமாக்கவோ, அல்லது இரவாக்கவோ முடியாது. ஆக, இன்னும் சூரியனும், சந்திரனும் நம்முடைய கட்டுப்பாட்டில் (நமக்கு வசப்பட்டு) இல்லை. அவைகள் நாம் சொல்வது போல கேட்பதில்லை, நாம் தான் அவைகள் சொல்கிறபடி கேட்கிறோம், அல்லது அவைகளுக்கு ஏற்றாற் போல நம்முடைய வாழ்வை மாற்றிக்கொண்டு இருக்கிறோம்.

மனிதனின் நன்மைக்காக இறைவன் சூரியனையும், சந்திரனையும் வானத்தில் வைத்தார் என்றுச் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாமே தவிர, அவைகள் மனிதனுக்கு கட்டுப்பட்டு இருக்கின்றன, செல்கின்றன என்றுச் சொல்வது உண்மை அல்ல. நாம் எந்த வகையிலும் அவைகளை கட்டுப்படுத்துவதில்லை, அவைகள் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை. இதனால், குர்ஆன் சொல்வது விஞ்ஞானத்திற்கு ஏற்காத ஒரு கருத்தாக உள்ளது.

ஆங்கில மூலம்: Qur'an & Science Problem: Are Sun and Moon subject to mankind?

குர்‍ஆனின் இதர முரண்பாடுகளை படிக்கவும்

ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?

குர்ஆன் முரண்பாடுகள்

ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?

குர்ஆன் 76:5 மற்றும் 37:6-8 கீழ்கண்ட வாறு கூறுகிறது:

அன்றியும், திட்டமாக நாமே (பூமிக்குச்) சமீபமாக இருக்கும் வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கின்றோம்; இன்னும், அவற்றை ஷைத்தான்களை (வெருட்டும்) எறி கற்களாகவும் நாம் ஆக்கினோம்; அன்றியும் அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றோம். (குர்ஆன் 76:5)

நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் வானத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அழகுபடுத்தியிருக்கிறோம். (அதைத்) தீய ஷைத்தான்கள் அனைவருக்கும் தடையாகவும் (ஆக்கினோம்). (அதனால்) அவர்கள் மேலான கூட்டத்தார் (பேச்சை ஒளிந்து) கேட்க முடியாது இன்னும், அவர்கள் ஒவ்வோர் திசையிலிருந்தும் வீசி எறியப்படுகிறார்கள். (குர்ஆன் 37:6-8)

குர்ஆன் 15:16-18, 55:33-35ம் வசனங்களை நாம் பார்க்கும் போதும், இதைப்பற்றியே கூறுவதைப்போல் இருக்கின்றது.

அல்லாஹ் சாத்தானின் மீது எறிவதற்காகவா நட்சத்திரங்களை படைத்தார்? மேலானோர் கூட்டத்தின் பேச்சை சாத்தான் கேட்கக்கூடாது என்பதற்காகவா நட்சத்திரங்கள் படைக்கப்பட்டன? இது விஞ்ஞான உலகின் பார்வைக்கு முரண்பாடாக உள்ளது.

ஆங்கில மூலம்: Qur'an Contradiction: Throwing Stars at the Devils?

இதர குர்‍ஆன் முரண்பாடுகளை படிக்கவும்

 
 

குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?

அவர்கள் இருவரும் வாலிபர்களா?

Two young men?

யோசேப்பின் வாழ்க்கையைப் பற்றியும், அஜீஜ் என்பவரின் மனைவியினால் அவர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டது பற்றியும் குர்ஆன் கூறுகிறது.

அவருடன் இரண்டு வாலிபர்களும் சிறையில் புகுந்தனர்; அவ்விருவரில் ஒருவன், "நான் திராட்சை மது பிழிவதாக நிச்சயமாக ஒரு கனவு கண்டேன்" என்று கூறினான். மற்றவன், "நான் என் தலைமீது ரொட்டி சுமப்பதாகவும், அதிலிருந்து பறவைகள் தின்பதாகவும் கனவு கண்டேன்" என்று கூறினான். (பின் இருவரும் "யூஸுஃபே!) எங்களுக்கு இவற்றின் விளக்கத்தை அறிவிவப்பீராக மெய்யாக நாங்கள் உம்மை (ஞானமுள்ள முஹ்ஸின்களில்) - நன்மை செய்பவர்களில் ஒருவராகக் காண்கிறோன்" (என்று கூறினார்கள்). (குர்‍ஆன் 12:36)

And there entered with him two young men in the prison. One of them said: "Verily, I saw myself (in a dream) pressing wine." The other said: "Verily, I saw myself (in a dream) carrying bread on my head and birds were eating thereof." (They said): "Inform us of the interpretation of this. Verily, we think you are one of the Muhsinûn (doers of good)." [Hilali/Khan Translation] (Surah 12:36)

ஆதியாகமம் 40ம் அதிகாரத்தில் இந்த நிகழ்ச்சி விவரமாக கூறப்பட்டுள்ளது. அந்த இரண்டு நபர்களில் ஒருவர், பார்வோன் இராஜாவின் பானங்களை சுமப்பவர்களுக்கு தலைவராக இருப்பதாகவும், இன்னொருவர் பார்வோன் இராஜாவிற்கு உணவு தயாரிப்பவராக இருப்பதாகவும் நாம் காண்கிறோம்.

மேலே படித்த குர்ஆன் வசனத்தில் இரண்டு தவறுகள் உள்ளது. முதலாவதாக, குர்ஆன் தோராவிற்கு முரண்பட்டதாக உள்ளது, அதாவது ஆதியாகமம் 39:19 லிருந்து 40:3 வரையிலுள்ள வசனங்களின் படி, அந்த இரண்டு மனிதர்கள் யோசேப்பு அடைக்கப்பட்ட அதே சிறைச்சாலைக்கு வருவதற்கு முன்பதாகவே யோசேப்பு சிறைச்சாலையில் இருந்தார். இதற்கு முரண்பட்ட விதமாக, அவர்கள் இருவரும் யோசேப்போடு கூட ஒரே சமயத்தில் சிறைச்சாலையில் சென்றார்கள் என்று குர்ஆன் கூறுகிறது.

இரண்டாவதாக, அந்த இருவரின் வயது பைபிளில் குறிப்பிடவில்லையானாலும், பார்வோன் இராஜ்யத்தில் இந்த இரண்டு நபர்கள் அப்படிப்பட்ட உயர்ந்த பதவியில் இருக்கிறார்கள் (இராஜாவிற்கு பானங்களை சுமப்பவர்களின் தலைவராக, மற்றும் உணவு தயாரிப்பவர்களுக்கு தலைவராக இருக்கிறார்கள்) என்பதை கவனிக்கும் போது, குர்ஆன் சொல்வது போல இவர்கள் வாலிபர்களாக இருக்கமுடியாது என்பதை அறியலாம்.

ஆங்கில மூலம்: Two young men?

இதர குர்‍ஆன் முரண்பாடுகளை படிக்கவும்

ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?

ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?

Abraham's name

தோராவில், ஆதியாகமம் 17:1,3,5ம் வசனங்கள் கீழ்கண்டவாறு கூறுகின்றன:

ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு. ..... அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான். தேவன் அவனோடே பேசி: ........ இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும்.

When Abram was ninety-nine years old, the LORD appeared to him and said, "I am God Almighty, walk before me and be blameless. ... Abram fell facedown, and God said to him ... No longer will you be called Abram, your name will be Abraham for I have made you father of many nations."

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவரின் பெயர் "ஆபிரகாம்" என்றே பயன்படுத்தப்பட்டது. பைபிளின் பழைய ஏற்பாட்டில் குலத்தலைவராகிய இவரை எல்லாரும் இந்த பெயரிலேயே அறிவார்கள். சிலருக்கு அவருக்கு முன்பாக இருந்த உண்மையான பெயர் தெரியாது.

பைபிளைப் பற்றிய அறிவு இல்லாத அனேக மக்களுக்கு ஆபிரகாமின் உண்மைப் பெயர் என்னவென்று தெரியாமல் இருப்பதுபோல, முஹம்மதுவிற்கும் இந்த பெயர் தெரியாமல் இருந்திருக்கிறது. ஆபிராம் என்ற பெயரை தேவன் ஆபிரகாம் என்று மாற்றி மற்றும் அதே நேரத்தில் ஈசாக்கின் பிறப்பு பற்றிய வாக்குறுதியையும் கொடுத்தார், உடன்படிக்கையையும் உறுதிப்படுத்தினார். ஆனால், "ஆபிராம்" வாலிபராக இருக்கும் சமயத்தில் அவரை "ஆபிரகாம்" என்று அழைப்பதை நாம் குர்ஆனில் காண்கிறோம். உண்மையில் அவரது பெயர் அந்த நேரத்தில் "ஆபிராம்" என்பதாகும்.

அதற்கு (அவர்களில் சிலர்) "இளைஞர் ஒருவர் இவற்றைப் பற்றி (அவதூறாகக்) குறிப்பிட்டு வந்ததை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம், அவருக்கு இப்றாஹீம் என்று பெயர் சொல்லப்படுகிறது" என்று கூறினார்கள். (குர்ஆன் 21:60)

They said: "We heard of the youth talked of them: He is called Abraham." (Sura 21:60)

குர்ஆனின் அனேக சரித்திர தவறுகளில் இதுவும் ஒன்று. ஆபிராமுக்கு எண்பது அல்லது அதற்கும் குறைவான வயது இருக்கும் போது அவரை "ஆபிரகாம்" என்று குர்ஆன் அழைத்து சரித்திர பிழையை செய்துள்ளது. அப்போது அவருக்கு இருந்த பெயர் "ஆபிராம்" என்பதாகும். இது அல்லாஹ்விற்கு தெரியாமல் இருந்திருக்கிறது. இது ஒரு சிறிய தவறாக தெரியலாம், ஆனால், பைபிள் பற்றிய பொது அறிவு இல்லாமல், அல்லாஹ் மேலோட்டமாக செய்த தவறு சிறிய தவறு அல்ல‌.

ஆங்கில மூலம்: Abraham's name

குர்‍ஆன் பற்றிய கட்டுரைகளை படிக்கவும்

திங்கள், 19 ஏப்ரல், 2010

அப்துல்லாவின் அதிர்ஷ்டம் - முஹம்மதுவின் துரதிஷ்டம்: இஸ்லாமிய புனித பூமியில் கொலை

முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும் - பாகம் 1

அப்துல்லாவின் அதிர்ஷ்டம் முஹம்மதுவின் துரதிஷ்டம்

Muhammad And The Ten Meccans

சைலஸ்

கட்டுரைச் சுருக்கம்:

முஹம்மது மெக்காவை ஜெயித்துப் பிடித்த போது மெக்காவைச் சேர்ந்த பத்து பேரை கொன்று விடும்படி கட்டளையிட்டார். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் கொல்லப்பட்டார்கள். சிலர் பல்வேறு காரணங்களுக்காக கொல்லப்படாமல் தப்பினார்கள். இந்த கட்டுரையில் மரண தண்டனை அளிக்கப்பட்டவர்கள் யார் என்பதைப் பற்றியும், ஏன் அவர்கள் கொலை செய்யப்பட கட்டளையிடப்பட்டது என்பதைப் பற்றியும், முஹம்மதுவினால் மரண தண்டனை அளிக்கபப்ட்ட ஒவ்வொருவரின் முடிவு கடைசியில் எப்படி இருந்தது என்பதைப் பற்றியும் இக்கட்டுரையில் ஆராயப்போகிறோம்.

முன்னுரை:

முஹம்மதுவுக்கு பலம் பெருகின போது வன்முறையை பயன்படுத்தி தன்னுடைய விருப்பங்களை அடையத் தொடங்கினார். அநேகர் கொலை செய்யப்பட கட்டளையிட்டார். அவராக சென்று சுயமாக அந்த கொலைகளை செய்யவில்லை, அவருக்காக அந்த கொலைகளை செய்வதற்கு விருப்பமுடையவர்கள் (அடியார்கள்) அனேகர் அவருக்கு இருந்தார்கள்.

மெக்கா அமைதியான முறையில் சரணடைந்த பிறகு, முஹம்மது யார் யாரை கொலை செய்யப்படவேண்டும் என்று கட்டளையிட்டாரோ அவர்களைப் பற்றி நாம் ஆராய்வோம். முஹம்மது தம் வாழ்நாளில் அனேகரை கொன்றார். ஆனால், இந்த கட்டுரையில் அவர் மெக்காவை கைப்பற்றிய நாளில் கொல்ல கட்டளையிடப்பட்ட‌ 10 நபர்களைப் பற்றி காண்போம்.

முஹம்மது ஏறக்குறைய 10,000 போர்வீரர்களுடன் கூடிய படையோடு மெக்காவின் மீது அணிவகுத்துச் சென்றார். இந்த மனிதர்கள் உறுதியுள்ள‌ அர்ப்பணிப்புள்ள முஸ்லீம்களாக இருந்தார்கள். மெக்காவின் தலைவர்கள் முஹம்மதுவின் படைகளைத் தோற்கடிக்க அவர்களால் முடியும் என்று எண்ணவில்லை, இதற்கு பதிலாக அவர்கள் சரணடைந்துவிட்டார்கள். முஹம்மது மெக்காவை முழுவதுமாக அழித்துவிடவில்லை அல்லது அதன் குடிமக்கள் அனைவரையும் படுகொலை செய்யவில்லை மாறாக தன்னுடைய தனிப்பட்ட எதிரிகளை மாத்திரம் ஞாபகத்திற்கு கொண்டு வந்து, கண்டுபிடித்து அவர்களை கொல்லச் சொன்னார். முஹம்மது அந்த மனிதர்களை வெறுத்தார், இதற்கு காரணம் முந்தைய நாட்களில் இவர்கள் எல்லாரும் அவரை அவமானப்படுத்தி (கேலி செய்து) இருந்தார்கள்.

பின்னணி:

இந்த கட்டுரைக்காக நான் பயன்படுத்திய‌ முக்கியமான மூன்று பின்னணி ஆதாரங்களை நான் உங்களுக்கு கொடுக்க விரும்புகிறேன்.

1) "ஹதீஸ்கள்" (பாரம்பரியங்கள்) புகாரி, முஸ்லீம் மற்றும் அபு தாவுத்

2) "சீரத் ரஸூலல்லாஹ்" இப்னு இஷாக்கினால் எழுதப்பட்டது பின்னர் இப்னு ஹிஷாமினால் தொகுக்கப்பட்டு வழங்கப்பட்டது.

3) மற்றும் "கிதாப் அல்-தபாகத் அல்-கபிர்" இப்னு சாத் என்பவரால் எழுதப்பட்டது.

4) "23 வருடங்கள்-முஹம்மதுவின் நபித்துவ வாழ்க்கையைப் பற்றிய ஒரு ஆய்வு" இப்புத்தகம் அலி த‌ஸ்தியினால் எழுதப்பட்டது.

தஸ்தி ஒரு ஷியா முஸ்லீம் அறிஞர் ஆவார். அவர் 85 வயதாக இருக்கும் போது ஈரானை ஆண்ட‌ ஒரு முஸ்லீமால் கொல்லப்பட்டார். த‌ஸ்தி ஒரு சுன்னி (Sunni) பிரிவைச் சேர்ந்தவராக இல்லாவிட்டாலும், நான் இந்தக் கட்டுரையில் அறிமுகப்படுத்துகிற விஷயத்தை வெகு சிறப்பாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவரது பாண்டித்யம் மிகவும் சிறப்பாக இருப்பதை நான் காண்கிறேன்.

நான் பயன்படுத்தவும் அல்லது சரிபார்க்கவும், என்னிடம் இருக்கும் இஸ்லாமிய மூல ஆதாரங்களைக் காட்டிலும் அவரிடம் அதிகமாக ஆதாரங்கள் இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நான் ஒரு ஷியா இஸ்லாமிய அறிஞரின் மேற்கோள்கள் பயன்படுத்துவதை, சில சுன்னி இஸ்லாமியர்கள் எதிர்த்தாலும், மெக்காவில் நடந்த கொலைகளைப் பற்றிய அவருடைய கருத்துக்களை ஹதீஸ்கள், சீரத் மற்றும் தபாகத் போன்ற மூல நூல்களில் இருக்கும் விவரங்களோடு ஒத்திருக்கிறது என்பதை நாம் காணலாம். என்னுடைய குறிப்புகள் எந்த விதத்திலும் தஸ்தியினுடைய செயல்பாட்டின் மீது ஆதாரமில்லாததாக இருந்தாலும், அவருடைய கருத்துக்கள் என்னுடைய ஆராய்ச்சி மற்றும் முடிவுகளை உறுதிப்படுத்துகிறது.

இங்கே உள்ள எல்லா ஆதாரங்களின் எழுத்தாளர்கள் அனைவரும் முஸ்லீம்கள் ஆவார்கள். முதல் மூன்று படைப்புகளும் சுன்னி இஸ்லாமியப் பிரிவால் (Sunni branch of Islam) அங்கீகரிக்கப்படுகிறது. எனினும், இவைகளில் எதுவும் குர்‍ஆனுக்கு இணையாக அங்கீகரிக்கப்படுவது இல்லை. ஆதாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்டும் வரிசை 1) ஹதீஸ்கள் 2) சீரத் 3) தபாகத் என்று நான் கூறுவேன்.

முஹம்மதுவின் சொல் மற்றும் செயல் பற்றிய பாரம்பரிய தொகுப்பை ஹதீஸ்கள் என்கிறோம். சீரத் மற்றும் தபாகத் என்பது முஹம்மதுவின் சரிதைகளாகும் (வாழ்க்கை வரலாறு). இந்த இரு சரிதைகளும் ஹதீஸ்கள் தொகுப்பதற்கு முன்பாக எழுதப்பட்டது. இவ்விரு சரிதைகள், ஹதீஸ்கள் மற்றும் குர்‍ஆன் சொல்லும் பெரும்பான்மையான விவரங்களை உறுதிப்படுத்துகின்றன.

நான் இந்த விவரங்களை மூலத்திலிருந்து மேற்கோள் காட்டும் போது, சம்பவங்கள் உங்களுக்கு தெளிவாக விளங்கச் செய்வதற்காக‌ என்னுடைய அதிகபடியான விளக்கங்களை சிறு குறிப்புகளாக [அடைப்பு குறிக்குள் – Square brackets] கொடுப்பேன்.

இன்னொரு குறிப்பை கவனிக்கவும், மேற்கூறிய ஆதாரங்களின் ஆசிரியர்கள் தங்கள் குறிப்புக்களையும் (அடைப்பு குறிக்குள் – Paranthesis brackets ( ) ) கொடுத்துள்ளார்கள், அவைகளை அப்படியே தருகிறேன்.

சீரத் ரஸூலல்லாஹ்வைப் பற்றிய குறிப்பு (The Sirat Rasulallah):

சீரத் ஆங்கிலத்தில் குல்லேம் (A. Guillaume) என்பவரால் மொழியாக்கம் செய்யப்பட்டது. அவர் ஒரு இஸ்லாமிய அறிஞராக இருந்தார். அவர் இஸ்லாமைப் பற்றி அநேக புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் லண்டன் பல்கலைக் கழகத்தின் (University of London) அரபி பேராசியராகவும், டமாஸ்கஸ் அரபு அகாடமி மற்றும் பாக்தாத் ராயல் அகாடமியின் உறுப்பினராகவும் இருந்தார் (Arab Academy of Damascus, and Royal Academy of Baghdad). அவருடைய சீரத் மொழியாக்கத்தில் பல அரபு அறிஞர்கள் அவரோடு இணைந்து பணியாற்றியுள்ளனர். குல்லேம் முஹம்மதுவை எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிட முயற்சி எடுக்காமல் அவரை நல்ல வெளிச்சத்திலே காட்டவே முயற்சி செய்துள்ளார். ஒரு சிறப்பான மொழியாக்கத்தை படைக்க வேண்டும் என்பதே அவருடைய பேராவலாக இருந்தது. இன்னும், முஸ்லீம் மார்க்க அறிஞர்கள் (Muslim apologists) எழுதிய ஒரு புத்தகம் என்னிடம் இருக்கிறது, அதில் அவர்கள் அவருடைய இந்த சீரத் மொழியாக்கத்திலிருந்து பல குறிப்புகளை எடுத்தாண்டிருக்கிறார்கள்.

தபாகத் பற்றிய குறிப்பு (Kitab al-Tabaqat al-Kabir)

தபாகத் ஆங்கிலத்தில் மொய்னுள் ஹக் (Moinul Haq) என்ற பாகிஸ்தானியரால் மொழியாக்கம் செய்யப்பட்டது. இவருடைய‌ படைப்புக்கள் பாகிஸ்தானிய வரலாற்றுச் சங்கத்தால் (Pakistan Historical Society) பிரசுரிக்கப்பட்டுள்ளது. இவைகள் இரண்டு தொகுப்புக்களாக‌ பிரசுரிக்கப்பட்டது. அதன் தலைப்பு "பெரும் வகுப்புகளின் புத்தகம்" (Book of the Major Classes) இதுவும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்றை கூறும் புத்தகமாகும்.


முஹம்மதுவும் மெக்காவில் படுகொலைகளும் - விளக்கம்

முஹம்மது மெக்காவைப் பிடித்த போது 10 பேரை கொலை செய்யும் படி கட்டளையிட்டார். இங்கே இபின் சாத் அவர்களின் தபாகத்தில் (Tabaqat) காணப்படுகிற அந்த பத்து பெயர்கள் கொடுக்கப்படுகிறது.

தபாகத் தொகுப்பு 2, பக்கம் 168 லிருந்து மேற்கோள்

"அல்லாஹ்வின் தூதர் அதாக்கிர் வழியாக உள்ளே பிரேவேசித்தார், (மெக்காவுக்குள்) யுத்தத்தைத் தடைசெய்தார். அவர் கொலை செய்வதற்கு கட்டளைகொடுத்த ஆறு ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் யாரென்றால்

1) இக்ரிமா இபின் அபி ஜஹல் - Ikrimah Ibn Abi Jahl

2) ஹப்பர் இபின் அல் அஸ்வத் - Habbar Ibn al-Aswad

3) அப்துல்லாஹ் இபின் சாத் இபின் அபி சார்ஹ் - Abd Allah Ibn Sa'd Ibn Abi Sarh

4) மிக்யாஸ் இபின் சபாபஹ் அல் டாயத்தி - Miqyas Ibn Sababah al-Laythi

5) அல் ஹுவாயிரித் இபின் நுக்காயித் - al-Huwayrith Ibn Nuqaydh

6) அப்து அபாஹ் இபின் ஹிலால் இபின் கடல் அல் அட்ராமி - Abd Abbah Ibn Hilal Ibn Khatal al-Adrami

7) ஹிந்த் பின்ட் பின்ட் உத்பாஃ - Hind Bint Utbah

8) சாரா, அமர் இப்னு ஹசிமின் மவ்லத்(உரிமை பெண்)என்ற பெண் - Sarah, the mawlat (enfranchised girl) of Amr Ibn Hashim

9) பார்தானா மற்றும் - Fartana and

10) கரிபாஹ் - Qaribah.

அவ்வப்போது, சீரத்தும் தபாகத்தும் ஒரே நபருக்கு வேறு பெயர்களை உபயோகப்படுத்துகிறது. மேலே உள்ள பட்டியலில் வரிசை எண் 3ல் உள்ள பெயர் இந்த வகையைச் சார்ந்ததாகும். பெயர்களில் உள்ள வித்தியாசத்திற்கு காரணம் ஆண்களின் பெயர்களில் கொடுக்கப்பட்டிருக்கும் வம்சாவழியின் பட்டியலாகும் மற்றும் ஆங்கில மொழியாக்கமாகும்.

நாம் வரிசைப்பட்டியலின் வரிசை எண் 3 லிருந்து தொடங்குவோம். அநேக நேரங்களில் சீரத் தபாகத்தின் வரிசைப் பட்டியலை ஊர்ஜிதப்படுத்துகிறது. மேலும் வரிசை எண் 3 ஐப்பற்றிய அதிக விளக்கத்தையும் சீரத் கொடுக்கிறது, நீங்கள் அதை இறுதியில் காணலாம். இந்த மனிதனுக்கு தண்டனை ஏறக்குறைய நிறைவேற்றப்பட்டது எனலாம், ஆனால், இவர் அதிர்ஷ்டக்காரராயிருந்தார் ஏனென்றால் முஹம்மதுவின் அடியார்களுக்கு முஹம்மதுவின் மனதை முழுமையாக படிக்க தெரியவில்லை. இந்த நிகழ்ச்சி, முஹம்மதுவின் சிந்தனை எப்படி வேலை செய்தது என்பதைப் பற்றி நீங்கள் அறிந்துக்கொள்ள உதவியாக இருக்கும்.

சீரத் ரஹூலல்லாஹ்விலிருந்து மேற்கோள்: பக்கம் 550:

'மெக்காவில் நுழையும் நேரத்தில் அவர்களை எதிர்ப்பவர்களிடம் மட்டுமே போரிடவேண்டும் என்று இறைத்தூதர் தம்முடைய‌ படைத்தலைவர்களுக்கு கட்டளையிட்டார். ஆனால், சிலரைக் குறிப்பிட்டு இவர்கள் கட்டாயமாக கொல்லப்படவேண்டும் என்றார். இவர்களை ஒரு வேளை காபாவின் திரைகளுக்கு கீழே கண்டுபிடிக்கப்பட்டாலும் இவர்கள் கொல்லப்படவேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். இவர்களில் ஒருவர் தான் பி. அமிர் லாய் என்பவரின் சகோதரர் அப்துல்லாஹ் சாத் (Abdullah Sa'd, brother of the B. Amir Luayy). இவர் கொலை செய்யப்படுவதற்கு முஹம்மது கட்டளைக் கொடுக்க காரணம் என்னவென்றால், இவர் ஒரு முஸ்லீமாக இருந்தவர், முஹம்மதுவிற்கு வரும் குர்‍ஆன் வெளிப்பாடு வசனங்களை எழுதுகின்றவராக இருந்தார். பிறகு, இவர் இஸ்லாமை விட்டு வெளியேறி குரைஷிகளிடம் [மெக்காவிற்கு] வந்தார், அதன் பின்பு உத்மான் அஃபானிடம் (Uthman Affan) தஞ்சம் புகுந்தார். இந்த உத்மான் இவருக்கு சொந்தக்காரராக இருந்தார். மெக்காவில் நிலமை சீராகும் வரையில் உதுமான் அவரை ஒளித்து வைத்துப் பின் இறைத்தூதரிடம் கொண்டு வந்தார், அவரிடம் அப்துல்லாவிற்கு சட்டப்பாதுகாப்பு அளிக்கும் படி கோரினார். இப்படி அனுமதி உத்மான் கேட்டபோது இறைத்தூதர் நீண்ட நேரம் அமைதியாக எதையும் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. பிறகு இறுதியாக அவர் [நபி] சரி என்று கூறினார் [அப்துல்லாவிற்கு மரணதண்டனை நிறைவேற்றுவதிலிருந்து பாதுகாப்பு வழங்க ஒப்புக்கொண்டார்].

உத்மான் சென்றபிறகு அவர் [முஹம்மது] தன்னை சுற்றி அமர்ந்திருந்த தன்னுடைய தோழர்களைப் பார்த்து, "நான் நீண்ட நேரம் அமைதியாக இருந்தேன், இதற்கு காரணம் என்னவென்றால், உங்களில் யாராவது எழுந்து அவனுடைய தலையை வெட்டிப்போடுவீர்கள என்று எண்ணினேன்" என்றார். அப்போது அன்சாரிகளில் ஒருவன், "அப்படியானால் ஏன் எங்களுக்கு எந்த சைகையையும் காட்டவில்லை? இறைத்தூதரே" என்று கேட்டான். அதற்கு அவர் ஒரு நபி யாரையும் சைகை காட்டி கொலை செய்வதில்லை என்று பதிலளித்தார்.

இபின் சாத் இபின் இஷாக்கின் மேற்கண்ட நிகழ்ச்சியை ஊர்ஜீதப்படுத்தும் வகையில், பக்கம் 174ல் கீழ்கண்டவாறு கூறுகிறார்.

அல் அன்சாரைச் சேர்ந்த ஒரு மனிதன் இபின் அபி சார்ஹ் ஐ [ஏற்கனவே அப்துல்லாஹ் எனக் குறிப்பிடப்பட்டவர்] பார்த்தால் கொன்று விடுவதற்கான ஒரு பொருத்தனையை செய்திருந்தான். உத்மான் தன்னுடைய வளர்ப்பு சகோதரனுக்காக (இபின் அபி சார்ஹ்) முஹம்மதுவினிடத்தில் வந்து பரிந்து பேசினார். அன்சாரி அவரைக் கொல்லுவதற்கான முஹம்மதுவின் சைகைக்காக காத்துக் கொண்டிருந்தான். உத்மான் பரிந்து பேசினார் எனவே அவர் [முஹம்மது] அவனை போக விட்டு விட்டார்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் அன்சாரியிடம், 'நீ ஏன் உன் பொருத்தனையை நிறைவேற்றவில்லை" என்று கேட்டார். அதற்கு அவன், "ஓ அல்லாஹ்வின் தூதரே, என்னுடைய கை வாளுடைய பிடியின் மீது இருந்தது, அவனைக் கொல்வதற்கு நான் உங்களின் சைகைக்காக காத்துக் கொண்டிருந்தேன்" என்றான். "சைகை காட்டுவது என்பது நம்பிக்கையை உடைப்பது போல இருக்கும். ஒரு நபி சைகை காட்டுவதாக அமையக் கூடாது" என்றார்.

விவாதம்:

சரி வாருங்கள், நாம் இந்த நிகழ்ச்சியைப் பற்றி சிறிது அலசுவோம். அப்துல்லாஹ் சாத் முஹம்மதுவின் வெளிப்பாடுகளை எழுதக் கூடியவர், அதாவது குர்‍ஆனை எழுதக்கூடியவர். பிறகு அவர் இஸ்லாமை விட்டு வெளியேறி, மெக்காவிற்கு திரும்பிப் போனார். பின்னர் முஹம்மது மெக்காவை பிடித்த போது தான் கொலை செய்ய வேண்டும் என்று விரும்பிய‌ ஒரு சில குறிப்பிட்ட மக்களைத் தவிர மற்றவர்களுக்கு அவர் பொது மன்னிப்பு வழங்கினார். குறிக்கப்பட்டவர்களில் அப்துல்லாஹ் சாத் தான் முதன்மையானவர். அப்துல்லாஹ் கொல்லப்படவேண்டும் என்று முஹம்மது கட்டளையிட்டார்.

அலி தஸ்தி இதைப் பற்றி மேலதிக விவரங்களை தருகிறார். அலி தஸ்தியிடமிருந்த ஆதார விளக்கங்களைப் போல என்னிடம் அதிகமான ஆதார நூல்கள் இல்லை, இருந்தபோதிலும், இது உங்களுக்கு ஏன் முஹம்மது அப்துல்லாஹ்வைக் கொல்ல கட்டளையிட்டார் என்பதற்கான அவரின் உள்நோக்கத்தை படம் பிடித்துக்காட்டும்.

அலி தஸ்தியின் "23 வருடங்கள் - முஹம்மதுவின் நபித்துவத்துவத்தைப் பற்றிய ஒரு ஆய்வு" புத்தகத்திலிருந்து, பக்கம் 98:

'பெயர் குறிக்கப்பட்ட கடைசி மனிதன் [கொலை செய்யப்படுவதற்கான பட்டியலில்] மதினாவில் குர்‍ஆன் வெளிப்பாடுகளை எழுதும்படி நியமிக்கப்பட்டவராக இருந்தார். குர்‍ஆனில் பல இடங்களில் முஹம்மதுவின் சம்மதத்தோடு கூட இந்த மனிதர் வசனங்களின் முடிவு வார்த்தைகளை மாற்றியுள்ளார்.

உதாரணத்திற்கு, 'மேலும் இறைவன் வல்லமையும் ஞானமும் உள்ளவன்" என்று முஹம்மது சொன்னபோது, அப்துல்லாஹ் சார்ஹ், 'அறிபவனும் ஞானம் உள்ளவனும்" என்று மாற்றிச் சொல்லி அனுமதி கேட்டபோது, அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று நபி சொன்னார். இப்படிப்பட்ட அனேக மாற்றங்களை முஹம்மது அங்கீகரித்ததை அப்துல்லாஹ் கண்டபோது, வெளிப்பாடு ஒரு வேளை இறைவனிடமிருந்து வந்திருந்தால் தன்னைப் போன்ற எழுதுபவர்களின் தூண்டுதலால் அது மாற்றப்படக் கூடாததாக இருக்க வேண்டும். ஆனால், குர்‍ஆனின் நிலை இப்படி இல்லாமல் இருப்பதைக் கண்ட அப்துல்லாஹ் இஸ்லாமை விட்டு வெளியெறினார். இஸ்லாமை விட்டு வெளியேறிய பிறகு மெக்காவிற்கு சென்று அங்கிருந்த குறைஷிகளோடு சேர்ந்து கொண்டார்."

எனவே, அப்துல்லாஹ் கொலை செய்யப்படுவதற்கு கட்டளையிடப்படுவதற்கான பின்னனியை நீங்கள் பார்த்தீர்கள். அவர் குர்‍ஆனின் நம்பகத்தன்மைக்கு ஒரு அச்சுறுத்தலாக இருந்தார். அவர் ஒரு முஸ்லீமாக இருந்து, முஹம்மதுவுடன் குர்‍ஆனை எழுதுவதில் பணியாற்றி அவ்வப்போது சில சிறிய மாற்றத்தை செய்ய யோசனை கூறினவராக இருந்தார். இறுதியாக, குர்‍ஆன் ஒரு வேளை இறைவனிடமிருந்து உண்டாயிருக்குமென்றால் சாதாரண எழுத்தாளர் போன்ற எந்த மனிதனும் அதில் மாற்றங்களை கொண்டு வர முடியாது என அப்துல்லாஹ் உணர்ந்தார். எனவே இஸ்லாம் பொய்யானது என்று கண்டு அவர் திரும்ப மெக்காவுக்கு சென்றார். பிறகு முஹம்மது மெக்காவை பிடித்து, அவரை கொலை செய்ய கட்டளையிட்டபோது, அவர் உத்மான் என்ற முஹம்மதுவின் நெருங்கிய தோழரிடத்தில் ஒளிந்துக் கொண்டார். இறுதியாக அப்துல்லாஹ் பொதுமன்னிப்புக்காக முஹம்மதுவிடம் கெஞ்சினார். தன்னுடைய ஆட்களில் யாராவது ஒருவர் உடனடியாக அவரை கொல்ல வேண்டுமென்று முஹம்மது விரும்பினார், ஆனால் அவர்களுக்கு அது தெரியவில்லை ஏனென்றால் அவர்களால் முஹம்மதுவின் மனதை புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே இறுதியாக முஹம்மது அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கினார்.

இந்த இடத்தில் கவனிக்கவேண்டிய முக்கியமான விவரம் என்னவென்றால், அப்துல்லாஹ் மீண்டும் முஸ்லீமாக மாறி அரசியல் பதவி வகித்தார் என்று இப்னு ஹிசாம் குறிப்பிடுகிறார் [இபின் இஷாம் குறிப்பு எண் 803] . இது "எதிரியை தோற்கடிக்க முடியவில்லை என்றால் அவனோடு சேர்ந்து கொள்" என்ற பழமொழிக்கு ஏற்ற ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது.

முஸ்லீம்கள், "முஹம்மது அவரை கொலை செய்யக் கட்டளையிட்டார் உண்மை தான், ஆனால், மீண்டும் அந்த மனிதன் மனம் மாறினதை ஏற்றுக்கொண்டு அவரை கொல்லாமல் உயிரோடு விட்டுவிட்டார்" என்று சொல்லலாம். ஆனால், உண்மை அது அல்ல. முஹம்மது அவரை கொலை செய்ய வேண்டும் என்று விரும்பினார், ஆனால் முஹம்மது விரும்பிய படி அது நடக்கவில்லை அவ்வளவு தான்.

நானும் இங்கே என் கருத்துக்களை தெரிவிக்கிறேன். முஹம்மது சொன்ன காரணம் முட்டாள் தனமாமது. ஒரு மனிதனை கொலை செய்ய கட்டளையிடுகிறார் ஆனால் அதை நடத்துவதற்கு முஹம்மது தவறிவிடுகிறார். ஏனென்றால் அவர் கொலை செய்யப்படுவதற்கு தன்னுடைய கையால் சைகை செய்ய விரும்பவில்லை???? ஏன் முஹம்மது தானாகவே அவரைக் கொல்லவில்லை. அந்த மனிதன் மரணத்திற்கு ஏற்ற குற்றத்தை செய்திருந்தால், ஏன் மரண தண்டனை நிறைவேற்றப்படாததை முஹம்மது கண்டு கொள்ளவில்லை?

இது முஹம்மதுவின் கட்டளைகள் விருப்பத்திற்கு ஏற்றபடி அடிக்கடி மாற்றமடைகின்றன என்பதைக் காட்டுகின்றது. இந்த மனிதன் மரண தண்டனை பெறுவதற்கான எந்த குற்றத்தையும் செய்யவில்லை. தன்னுடைய தனிப்பட்ட விரோதத்திற்காக முஹம்மது அவரைக் கொல்ல விரும்பினார். முஹம்மதுவின் மனநிலையை பொருத்துத் தான் மக்கள் வாழ்ந்தும், மரித்தும் இருந்திருக்கிறார்கள்.

இதுவரை நாம் ஒரு மரண தண்டனைக்கான உத்தரவை ஆராய்ந்தோம். அப்துல்லாஹ் கொலை செய்யப்படவேண்டும் என்று முஹம்மது கட்டளையிட்டிருந்தார், ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்துல்லாஹ் தப்பிக்கொண்டார், ஏனென்றால், முஹம்மதுவின் தோழர்கள் அவரின் மனதின் ஓட்டத்தை புரிந்துக்கொள்ள தெரியாதவர்களாக இருந்தார்கள்.

முடிவுரை: இஸ்லாம் அமைதி மார்க்கம் என்பதைக் காட்டவும், முஹம்மது ஒரு சாதுவான மனிதர் என்று காட்டவும் இஸ்லாமியர்கள் "மெக்காவை முஹம்மது கைப்பற்றிய நிகழ்ச்சி" பற்றி பெருமையாக கூறுவார்கள். மெக்காவை பிடித்த பிறகு அவர் யாரையும் கொல்லவில்லை என்றுச் சொல்வார்கள். அப்துல்லாஹ் என்பவரைக் கொல்ல முஹம்மது எடுத்த முயற்சி தோல்வி அடைந்தது என்பதை நாம் இக்கட்டுரையில் கண்டோம். முஹம்மது கொல்ல விரும்பிய மீதமுள்ள ஒன்பது பேரின் நிலை என்ன? அவர்களின் பெண்களும் உள்ளனரே, இவர்களால் முஹம்மதுவிற்கு ஏதாவது ஆபத்து இருந்ததா? இந்த கேள்விகளுக்கு அடுத்த பாகத்தில் பதிலைக் காண்போம்.

 

இயேசுக் கிறிஸ்து

கேள்வி கேட்கப்படவேண்டிய‌ முஹம்மதுவின் நடத்தைகள்

 

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

Answering PJ - 3: இஸ்லாமை மண்ணை கவ்வ வைத்த அப். நடபடிகள் - பாகம் 1

Answering PJ - 3: இஸ்லாமை மண்ணை கவ்வ வைத்த அப். நடபடிகள் - பாகம் 1

பீஜே அவர்களின் "இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை" என்ற கட்டுரைக்கு ஈஸா குர்ஆன் அளித்த முந்தையை பதில்களை படிக்கவும்:

பீஜே அவர்களுக்கு பதில் - 2: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை: நற்செய்தி நூல்களில் இயேசுவின் இறைத்தன்மை - 1

பீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை

இதன் தொடர்ச்சியாக, அவரது அடுத்த குற்றச்சாட்டிற்கு (பொய்யிற்கு) இந்த கட்டுரையில் பதில் தரப்படுகிறது. இந்த முறை அவர் சுவிசேஷ நூல்களை விட்டுவிட்டு, புதிய ஏற்பாட்டின் "அப்போஸ்தலருடைய நடபடிகள்" என்ற புத்தகத்திற்கு தாவுகிறார்.

அவரது வரிகளை இப்போது காண்போம்:

கிறித்தவர்களுக்கு எதிரியாக இருந்து கிறித்தவர்களுக்குக் கொடுமைகள் பல இழைத்த சவுல் என்ற யூதர் பவுல் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டு கிறித்தவ மதத்தில் சேர்ந்து இயேசு போதித்த கொள்கைக்கு மாற்றமான கொள்கையை உருவாக்கினார். அதைத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து இயேசுவுக்கு எதிரான கொள்கையை கிறித்தவ மார்க்கமாக்கி விட்டார்.

இதை புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர் நடபடிகள் முதல் கடைசி வரை வாசிக்கும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளலாம்.

மூலம்: http://www.onlinepj.com/vimarsanangal/iyesuvuku_sammanthamillai/

ஈஸா குர்ஆனின் பதில்:

பீஜே அவர்கள் கூறுவது:

1) இயேசு போதித்ததற்கு எதிராக பவுல் போதித்தார், இதனையே கிறிஸ்தவ மார்க்கமாக்கி விட்டார்.

2) இதற்கு ஆதாரம் அப்போஸ்தலருடைய நடபடிகளின் புத்தகமாகும்.

3) அப். நடபடிகள் முதல், கடைசி வரை படித்தால் இதனை புரிந்துக்கொள்ளலாம்

இது தான் பீஜே அவர்கள் வரிகளின் சுருக்கம்.

பீஜே அவர்களின் இந்த விமர்சனத்திற்கு நான் இரண்டே வரிகளில் பதில் தரமுடியும், அதாவது இதற்கான பதில்
"பீஜே அவர்கள் அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தை படிக்கவில்லை, அல்லது படித்து புரிந்துக்கொண்டாலும், தங்கள் இஸ்லாமிய கோட்பாடுகளை நிலை நாட்டுவதற்கு இப்படிப்பட்ட பொய்யை அவிழ்த்து விட்டுள்ளார்" என்பதாகும்.

பீஜே அவர்கள் கூறுகிறார், பவுல் தான் இயேசுவின் போதனைகளை மாற்றிவிட்டாராம், இதனை அப்போஸ்தலர் நடபடிகள் ஆரம்பமுதல் கடைசி வரை படித்தால் தெரிந்துக் கொள்ளலாமாம். பீஜே அவர்கள் கூறியதைக் கேட்டு, எந்த இஸ்லாமியராவது அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தால், முதல் சில அதிகாரங்களை படிக்கும் போதே தெரிந்துக்கொள்ளலாம், பீஜே அவர்கள் சொன்னது "மிகப்பெரிய பொய்" என்பதை.

ஏன் இப்படி இஸ்லாமிய அறிஞர்கள் பொய்களை பயமில்லாமல் கூறுகிறார்கள்?

ஏன் இவர்கள் அறைகுறையாக மற்றவர்களின் வேதங்களை படித்து பொருள் கூறுகிறார்கள்?

முதலாவதாக இதற்கு காரணம், சராசரி இஸ்லாமியர்கள் இவர்களை கேள்வி கேட்கமாட்டார்கள், என்ற பயமின்மையாகும். இதில் சராசரி இஸ்லாமியரின் சுயநலமும் உள்ளது, இஸ்லாமின் பெயர் உயருவதற்கு, யார் எந்த பொய்யைச் சொன்னால் என்ன, இஸ்லாமுக்கு உபயோகமாக இருக்குமா? அது போதும் என்ற இஸ்லாமிய மனநிலை.

இரண்டாவதாக, நமக்கு எதற்கு வம்பு, பொய் சொல்வருக்கு தேவன் தண்டனையைக் கொடுப்பார் என்றுச் சொல்லி நழுவி விடும் சராசரி கிறிஸ்தவர்களே ஆவார்கள்.

இஸ்லாமிய அறிஞர்கள் பைபிள் மீது பொய்களை சொல்லும் போது, இயேசு சாட்டையை உண்டாக்கி, எருசலேம் ஆலயத்தை வியாபார இடமாக மாற்றியவர்களை துரத்தினாரே, அதுபோல செய்ய கிறிஸ்தவர்கள் (பதிலைக் கொடுக்க) தவறியதே இதற்கு இன்னொரு காரணம்.

ஆனால், இனி இஸ்லாமியர்களின் இந்த பொய் அதிக நாட்கள் நிலைத்து இருக்க வாய்ப்பு குறைவு.

இப்போது, அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தின் முதல் சில அதிகாரங்கள், அதாவது பவுலை இயேசு சந்திப்பதற்கு முன்பாக நடந்த நிகழ்ச்சிகள் எப்படி இஸ்லாமுடைய முகத்தில் அல்லது இஸ்லாமியர்களின் பொய்யான கோட்பாட்டின் முகத்தில் கரியை பூசுகின்றது என்பதைக் காண்போம்.

அப்போஸ்தலருடைய நடபடிகளின் முதல் எட்டு அதிகாரங்களின் சுருக்கம்:

1. உயிர்த்தெழுந்த இயேசு சீடர்களுக்கு காணப்படல், மற்றும் பரமேறுதல் (1:4-11)

2. தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியானவருக்காக சீடர்கள் எருசலேமில் காத்திருத்தல் (1:12-14)

எருசலேம் சபையின் ஆரம்பகால விசுவாசிகளின் நடபடிகள் (1:15 - 8:3)

1) யூதாசுக்கு பதிலாக மத்தியாஸை நியமித்தல் (1:15-26)

2) பெந்தேகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவரின் வருகை (2: 1-13)

3) எருசலேமில் பேதுருவின் முதல் பிரசங்கம், அனேகர் மனந்திரும்பினர் (2:14-41)

4) பேதுரு மற்றும் யோவான், ஒரு முடவனை சுகமாக்குதல் (3:1-10)

5) அற்புதத்திற்கு பிறகு பேதுரு செய்த இரண்டாம் பிரசங்கம் (3:11-26)

6) பேதுரு மற்றும் யோவானின் கைது, நீதிமன்றத்திற்கு முன்பு சாட்சி கொடுத்தல் (4:1-22)

7) பேதுரு யோவானின் விடுதலை, விசுவாசிகளின் கூட்டு ஜெபம் (4:23-31)

8) அப்போஸ்தலர்களின் அற்புதங்கள், சுகமாக்குதல் (5:12-16)

9) மறுபடியும் அப்போஸ்தலர்கள் கைது செய்யப்படல், நீதிமன்றத்திற்குமுன்பு சாட்சியிடல் ( 5:17-42)

10) ஸ்தேவான் கைது செய்யப்படல், பயமில்லாமல் அவர் செய்த பிரசங்கம் ( 6:8 - 7:53)

11) ஸ்தேவான் கல்லெறியப்பட்டு கொல்லப்படல், தன்னை கொன்றவர்களுக்காக வேண்டிக்கொள்ளுதல் (7:54 - 60)

12) சவுல் சபையை துன்புறுத்த ஆரம்பித்தல் (8:1-3)

பீஜே அவர்கள் அப். நடபடிகளின் முதல் ஏழு அதிகாரங்களை படித்தாரா?

பீஜே அவர்கள் அப்போஸ்தலர் நடபடிகளின் முதல் ஏழு அதிகாரங்களை படித்தாரா இல்லையா? என்று கேட்கத்தோன்றுகிறது. இந்த ஏழு அதிகாரங்களில் இயேசுவின் இறைத்தன்மை சீடர்களால் (பவுலினால் அல்ல) வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இயேசுவின் உள்வட்ட சீடர்களாகிய பேதுருவும், யோவானும் யாக்கோபும், எருசலேமின் சபையின் முக்கிய தலைவர்களாக செயல்படுகிறார்கள். பேதுரு தனது முதல் பிரசங்கத்திலும், இரண்டாம் பிரசங்கத்திலும், இன்னும் அவர் யூதர்களின் நீதி மன்றத்தில் பகிர்ந்துக்கொண்ட சாட்சியிலும், இயேசுவின் இறைத்தன்மையைக் குறித்து பேசி இருக்கிறார். ஸ்தேவான் தான் மரணிப்பதற்கு முன்பு இயேசுவின் இறைத்தன்மையை குறித்து சொன்னார். இவைகள் எல்லாம், பவுல் கிறிஸ்துவை சந்திப்பதற்கு முன்பாகவே நடந்துள்ளது. இது பீஜே அவர்களுக்கும், அவரது வார்த்தைகளை புடமிடாமல் அப்படியே தஞ்சாவூர் பொம்மைகள் போல தலையாட்டும், இதர இஸ்லாமியர்களுக்கும் புரியவில்லையா?

மேலேகண்ட ஒவ்வொரு விவரத்தின் வசனங்களைக் காட்டி நான் அதிகமாக விளக்கமுடியும், பீஜே அவர்கள் இந்த கட்டுரையைக் குறித்து ஏதாவது எழுதினால், அவைகளை நான் விளக்கி தனி கட்டுரையாக எழுதுவேன். மேலோட்டமாக இந்த ஏழு அதிகாரங்களை படித்தாலே பீஜே அவர்கள் சொன்னது "பொய்" என்பது தெள்ளத்தெளிவாக புரியும்.

எனவே, இதைக் குறித்து நான் சில கேள்விகளை பீஜே அவர்களிடம் கேட்க விரும்புகிறேன்:

1) ஏன் இயேசுவின் சீடர்களை யூதர்கள் கொல்லவும், தண்டிக்கவும் முற்பட்டார்கள்?

2) இயேசு வெறும் "தீர்க்கதரிசி தான்" என்று சீடர்கள் சொல்லியிருந்தால், இந்த தண்டனை, கொடுமைகள் சீடர்களுக்கு நடந்திருக்காதே?

3) இயேசு வெறும் நபியாக இருந்திருந்தால், அவரது பெயரைச் சொன்னால்,ஏன் அற்புதங்கள் சீடர்களின் கைகளின் மூலமாக நடக்கவேண்டும்?

4) ஸ்தேவானை ஏன் யூதர்கள் கல்லெரிந்துக் கொல்லவேண்டும், இந்த ஸ்தேவானை கொல்பவர்களின் உடைமைகளை பாதுகாக்கும் பணியை சவுல் செய்துக்கொண்டு இருந்தார் என்பதை கவனிக்கவும்

5) இயேசு பரமேறியதிலிருந்து பவுலை இயேசுவை தமஸ்கு வழியில் சந்திக்கும் வரைக்கும் கிடத்தட்ட 3 அல்லது 3.5 ஆண்டுகள் கால அவகாசம் இருக்கின்றது என்று கணக்கெடுத்து இருக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் அனேக ஆயிரமான மக்கள் கிறிஸ்தவர்களாக மாறினார்கள். பவுல் இல்லாமலேயே எருசலேம் சபை வளர்ந்தது. வேறு வகையில் சொல்லவேண்டுமானால், ஒட்டு மொத்த யூத எதிர்ப்பின் கொடுமைகளின் மத்தியிலும் சபை வளர்ந்தது.

இன்னும் அனேக விவரங்களை சொல்லமுடியும், இருந்தாலும் இதோடு முடிக்கிறேன்.

திரு பீஜே அவர்களே, எந்த பவுலைக் குறித்து நீங்கள் பொய்களை சொல்கிறீர்களோ, அவருக்கு இயேசு சொன்ன எச்சரிக்கை வார்த்தைகளை உங்களுக்கு இன்று நான் தாழ்மையுடன் சொல்கிறேன், "முள்ளில் உதைப்பது உங்களுக்குக் கடினமாம்". [அனேக இஸ்லாமியர்கள் எனக்கு அடிக்கடி மெயில் அனுப்புவார்கள், அல்லாஹ் உனக்கு நல்ல கூலி கொடுப்பான், நரகத்தில் தள்ளுவான் என்று திட்டுவார்கள், சபிப்பார்கள், ஆனால், நாங்கள் அப்படி செய்யமுடியாது, எனவே, உங்களை தாழ்மையுடன் எச்சரிக்கிறோம், உண்மையை நீங்கள் அறிய வேண்டுமென்று உங்களுக்காக வேண்டிக்கொள்வோம்]

நீங்கள் நேர்மையானவராக எழுத ஆரம்பியுங்கள், அது இஸ்லாமுக்கும், உங்களுக்கும் நல்லது. "மாட்டேன் என்று அடம்பிடித்து மறுபடியும் பொய்களை சொல்வீர்களானால்", சீக்கிரத்திலேயே சாயம் வெளுக்க ஆரம்பித்துவிடும், இனி காலம் செல்லாது.

இந்த கட்டுரையை படித்த பிறகாவது ஒருமுறை அப்போஸ்தலர் நடபடிகள் முதல் ஏழு அதிகாரங்களை தயவு செய்து படியுங்கள், இந்த வேண்டுதல், பீஜே அவர்களுக்கு மட்டுமல்ல, அவர் சொல்வதை அப்படியே நம்பும் சராசரி இஸ்லாமியர்களுக்கும் தான்.

அப்போஸ்தலர் நடபடிகளின் முதல் ஏழு அதிகாரங்களைக் குறித்து சொன்னீர்கள், மீதமுள்ள அதிகாரங்கள் பற்றி சொல்லவில்லையே என்று என்னிடம் கேட்க யாராவது விரும்பினால், அதற்கு நான் வாய்ப்பை தருகிறேன். முதலில் பீஜே அவர்கள் சொன்னது வடிகட்டிய பொய் என்பதை அங்கீகரித்து அல்லது இந்த ஏழு அதிகாரங்களுக்கு பதிலைக் கொடுத்துவிட்டு, மீதமுள்ள அதிகாரங்களைப் படித்து நீங்கள் கண்டுபிடித்த விவரங்களை எனக்கு தெரிவியுங்கள். நான் மீதமுள்ள அதிகாரங்கள் பற்றி ஒரு சுருக்கத்தை இக்கட்டுரையைப் போல எழுதி பதில் தருகிறேன்.

இப்போது பல்டி அடிப்பார்கள் சில இஸ்லாமியர்கள்:

அப்போஸ்தவர் நடபடிகள் பற்றி பீஜே அவர்களின் விமர்சனம் வெறும் சுத்தப் பொய் என்று தெளிவாக புரிந்த பிறகு, சில இஸ்லாமியர்கள் "அப். நடபடிகள் கிறிஸ்தவர்கள் எழுதியது தானே... அவர்கள் மாற்றிவிட்டார்கள்" என்று கூறலாம். இப்படி சொல்வீர்களானால், இஸ்லாமை நிலை நாட்ட ஏன் இஸ்லாமியர்கள் அப்போஸ்தலர் நடபடிகளை மேற்கோள் காட்டுகிறார்கள்? என்று நான் கேட்பேன்.

அப்போஸ்தலர் நடபடிகளை படித்து இஸ்லாமியர்கள் மட்டும் தான் முழுவதுமாக புரிந்துக்கொண்டது மாதிரியும், அதில் சொல்லப்பட்டதை தமிழில் படித்தும் தங்கள் தங்கள் தாய் மொழியில் படித்தும் கிறிஸ்தவர்கள் புரிந்துக்கொள்ளவே இல்லை என்பது மாதிரியும், ஏன் இஸ்லாமிய அறிஞர்கள் எழுதுகிறார்கள்?

மறுபடியும் நான் எச்சரிக்கிறேன், இஸ்லாமை நிலை நாட்ட உங்களுக்கு பைபிள் உதவாது, எனவே குர்ஆனை முன்வைத்து நிலை நாட்ட முதலில் முயற்சி எடுங்கள், முடிந்தால்.

முடிவுரை: பீஜே அவர்களே, பவுல் பற்றிய உங்கள் அடுத்த குற்றச்சாட்டிற்கு அளிக்கும் பதிலில் சந்திக்கிறேன். இனியாவது முழுவதுமாக படித்து விவரமாக எழுதுங்கள்.
 

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

கிறிஸ்தவர்களுக்கும் ஒரு பீஜே கிடைப்பாரா?

 

கிறிஸ்தவர்களுக்கும் ஒரு பீஜே கிடைப்பாரா?

 

பெரியார்தாசன் அவர்கள் இஸ்லாமியராக மாறியது நாம் அனைவரும் அறிந்ததே. அவருக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன என்றுச் சொல்லி, அவருக்கு ஆதரவு அளிப்பதாக, பாதுகாப்பு அளிப்பதாக‌ இஸ்லாமிய குழுக்கள் அவரைச் சந்தித்து, அவருக்கு ஆறுதல் அளித்து வருகின்றனர். பீஜே அவர்களும் அவரை பாதுகாப்பதாகவும் வாக்கு கொடுத்துள்ளார்.  இன்னும் ஒரு படி மேலே சென்று உயிரைக் கொடுத்தாவது காப்பதாக‌ கூறியுள்ளார்.  இது மிகவும் நல்ல விஷயம் தான்.

 

பீஜே அவர்கள் பேசிய வீடியோவை இங்கு காணலாம்.

 

LInk:  http://www.tntj.net/?p=13085

 

விளக்கம்: பி.ஜே

தலைப்பு: பெரியார்தாசன் பற்றிய தவ்ஹீத் ஜமாஅத் நிலை பாடு என்ன?

நேரம்: 6:00 min

அளவு: 5:0 MB

 

 

இந்த வீடியோவைக் கண்டவுடன் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதாவது, ஒருவர் இஸ்லாமியராக மாறினால் அவருக்கு சகல வித பாதுகாப்பும் அளிப்பதாக ஒட்டு மொத்த இஸ்லாமிய குழுக்கள் போட்டி போட்டுக்கொண்டு வாக்கு கொடுக்கின்றனர். இது நல்ல விஷயம் தான், இதற்காக நாம் இஸ்லாமியர்களை மெச்சிக் கொள்ளவேண்டும்.

 

ஒருவர் இஸ்லாமியராக மாறினால் தவறென்ன?

 

ஒரு நாத்தீகர் ஆராய்ச்சி செய்து, இஸ்லாம் தான் சரியானது என்று முடிவு செய்து, இஸ்லாமியராக மாறினால் தவறா? 

 

இஸ்லாமியர்களின் பதில்: இல்லை..இல்லைவே இல்லை.

 

ஒரு இந்து சகோதரர், இஸ்லாம் தான் நேர்வழி என்று நினைத்து, இஸ்லாமியராக மாறினால் தவறா? 

 

இஸ்லாமியர்களின் பதில்:  கண்டிப்பாக இல்லை.

 

ஒரு கிறிஸ்தவர், முஹம்மது தான் கடைசி நபி என்றும், இஸ்லாம் தான் சரியான வழி என்றும் நம்பி, இஸ்லாமியறாக மாறினால் தவறா?

 

இஸ்லாமியர்களின் பதில்:  தவறு இல்லை.

 

எனவே, ஒருவர் இஸ்லாமியராக மாறினால் அவருக்கு தீங்கு செய்ய நினைப்பவர்களிடமிருந்து பாதுகாப்பது அளிப்பது ஒவ்வொரு இஸ்லாமியரின் கடமையாகும்.  உயிரைக் கொடுத்தாவது அவரை நாம் காப்பாற்றுவோம், இது தான் இஸ்லாமியர்களின் ஒருமித்த கோஷம்.   

 

இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம், சக‌மனிதர்களை மனிதாபமானத்தோடு  பார்த்துக்கொள்ளும் மார்க்கம். இது இஸ்லாமியர்களின் இதயத்தில் பதிந்துவிட்ட வரிகள். இதை கேட்பதற்கும், படிப்பதற்கும் நன்றாக இருக்கிறது.

 

ஆனால்,

ஒரு இஸ்லாமியர், இறைவன் இல்லை, நாத்தீகம் தான் சரியானது, எனவே நான் நாத்தீகனாக மாறிவிடுகிறேன் என்றுச் சொல்லி, நாத்தீகராக மாறினால் தவறா?

 

இஸ்லாமியர்களின் பதில்:  அது எப்படி சரியாகும், இது தவறாகும்.

 

ஒரு கட்டுக்கோப்பான இஸ்லாமிய சூழ்நிலையில் வளர்ந்த ஒரு இஸ்லாமியர், இந்துத்துவம் தான் மனிதாபமான மார்க்கம், அதில் அடாவடி இல்லை என்று நம்பி, ஒரு இந்துவாக மாறினால் தவறா?

 

இஸ்லாமியர்களின் பதில்:  இது தவறாகும், இது மிகப்பெரிய குற்றமாகும்.

 

ஒரு இஸ்லாமியர், இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமன்று, இது ஒரு பொய்யான மார்க்கம், முஹம்மது ஒரு பொய்யான நபி என்றுச் சொல்லி, கிறிஸ்தவம் தான் சரியான மார்க்கம் என்று நம்பி, கிறிஸ்தவராக மாறினால் தவறா?

 

இஸ்லாமியர்களின் பதில்: இது தவறு தவறு தவறு... இது  மரண தண்டனைக்குரிய குற்றமாகும்.

 

ஏன் இந்த முரண்பாடு & இஸ்லாமியர்கள் இருவேஷம் போடுவது ஏன்?

 

இஸ்லாமிய சட்டம் அமுலில் இருக்கும் நாடுகளில் ஒரு இஸ்லாமியர் நாத்தீகராகவோ, கிறிஸ்தவராகவோ அல்லது இந்துவாகவோ மாறினால், அவனுக்கு மரண தண்டனை தருகிறார்கள்.  ஆனால், வேறு மதத்தவர் மட்டும் இஸ்லாமியராக மாறினால், "இது தவறு, உன் பழைய மதத்திற்குச் சென்றுவிடு" என்றுச் சொல்வதில்லை.

 

 

இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமிலிருந்து வெளியேறும் ஒவ்வொரு நபரும் அனுபவிக்கும் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல, இதை நான் சொல்லித் தான் தெரியவேண்டுவதில்லை. அப்படிப்பட்ட நபருக்கு தனிப்பட்ட முறையில் சக இஸ்லாமியர்களும், குடும்ப நபர்களும் தரும் தொல்லைகள், பயமுறுத்தல்கள் எண்ணிக்கையில் அடங்கா.

 

இந்தியா போன்ற நாடுகளில், இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமென்றுச் சொல்லி, மேடைகள் போட்டு காதுகிழிய பேசும் இஸ்லாமியர்கள், ஒரு மாற்று மதத்தவர் இஸ்லாமியராக மாறினால் அவருக்கு சகலவித பாதுகாப்பு அளிக்க முன்வரும் மனித நேய பிரியர்கள், வெளி நாடுகளில், முக்கியமாக இஸ்லாமிய சட்டம் நடைமுறையில் இருக்கும் நாடுகளில் இஸ்லாமிலிருந்து வெளியேறுகிறவர்களுக்கு விரோதமாக நடக்கும் கொடுமைகள், நிறைவேற்றப்படும் மரண தண்டனைகள் குறித்து ஒரு சிறிய சத்தத்தையும் இவர்கள் அந்நாடுகளுக்கு விரோதமாக எழுப்புவதில்லை.

 

முக்கியமாக நம் அருமை இஸ்லாமிய அறிஞர்  பீஜே அவர்கள், "இஸ்லாமிய நாடுகளில் செய்வது சரியல்ல, இஸ்லாம் தன்னை விட்டு வெளியேறுபவர்களை கொலைச் செய்ய சொல்லவில்லை, இது அமைதி மார்க்கம், அவர்களுக்கு மார்க்க அறிவு இல்லை, இது மிகப்பெரிய பாவம்" என்றுச் சொல்வாரா?

 

[இந்தியாவில் இஸ்லாம் அமைதி மார்க்கமென்று அறைகூவல் விடும் இஸ்லாமிய அறிஞர்கள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளில் இருப்பார்களானால், இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களை கொல்லும் நிகழ்ச்சியில் முதல் கல் வீசுபவர்களாக இவர்களாகத் தான் இருப்பார்கள்]

 

 

வேறு மதத்த்திலிருந்து இஸ்லாமுக்கு மாறுபவர்கள் கண்டிப்பாக பயமில்லாமல் வாழவேண்டும் என்று விரும்பும் நீங்கள், இஸ்லாமிலிருந்து வெளியேறுபவனும் பயமில்லாமல் வாழவேண்டும் என்று நினைப்பதில்லையே, அது ஏன்?

 

ஒருவனுக்கு மனிதாபமான ஆதாரவும், இன்னொருவனுக்கு மரண தண்டனையா?

 

பீஜே அவர்கள் நேர்மையானவராக‌ இதற்கு பதில் தருவாரா?

 

ஒரு இந்து இஸ்லாமியராக மாறுவது தவறில்லையானால், ஒரு இஸ்லாமியர் இந்துவாக மாறுவதும் தவறில்லையே?

 

இஸ்லாமியரல்லாதவர்களுக்கும் ஒரு பீஜே கிடைப்பாரா?

 

இஸ்லாமியராக இருந்து கிறிஸ்தவத்திற்கு மாறும் போது, இஸ்லாமிய ஆட்சியின் கையிலிருந்து, இஸ்லாமிய சட்டத்திலிருந்து காப்பாற்ற, உயிரைக் கொடுத்து காப்பாற்ற எங்களுக்கு ஒரு பீஜே கிடைப்பாரா?

 

இஸ்லாமியராக இருந்து, பிறகு வேறு மதத்திற்கு மாறி, தான் எடுத்த முடிவு சரியானது தான், இதற்காக நான் பெருமைக் கொள்கிறேன் என்றுச் சொல்லி, வெளிப்படையாக தன் முடிவை மக்கள் முன் வைத்து வாழ ஒருவனுக்கு இஸ்லாமிய நாடுகளில் உரிமை அளிக்கப்படுமா?  இஸ்லாம் இதற்கு அனுமதி அளிக்குமா? மனிதாபமானம் அதிமுள்ள இஸ்லாமிய அறிஞர்கள் அனுமதி கொடுப்பார்களா?

 

பெரியார்தாசனுக்கு ஒரு பீஜே கிடைத்தது போல, இஸ்லாமிய நாடுகளில் வாழும் பெயர் சொல்லமுடியாதவர்களுக்கும் ஒரு பீஜே கிடைப்பார்களா?

 

நல்லதோர் வீணை செய்தே, அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ....

 

 

Umar:  http://isakoran.blogspot.com  &  http://www.answering-islam.org/Tamil