ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

திங்கள், 25 மார்ச், 2013

நச்சென்று நாலு கேள்விகள் – பாகம் 3: இயேசு அரசு நடத்தினால், குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பாரா?

நச்சென்று நாலு கேள்விகள் பாகம் 3

இயேசு அரசு நடத்தினால், குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பாரா?

உமருக்கும் அவரது தம்பிக்கும் இடையே நடைப்பெற்ற முந்தைய  உரையாடல்கள்:

1.      நச்சென்று நாலு கேள்விகள் – 1: இஸ்லாமை அதிகமாக அறிந்துக்கொண்டும் ஏன் அதனை அங்கீகரிக்க மறுக்கிறீர்கள்?

2.      நச்சென்று நாலு கேள்விகள் – 2: இயேசுவைப் போல் மன்னித்தால் நாடு உருப்படுமா? சட்ட ஒழுங்கு நிலைநிற்குமா?

மேற்கண்ட உரையாடல்களை படித்து இந்த தற்போதைய உரையாடலை படிக்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன்.

பாகம் 3: இயேசு அரசு நடத்தினால், குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பாரா?

அப்துல்லாஹ்: அண்ணே, நீங்க  இன்று மாலை ஃபிரியா இருப்பீங்களா? நாம் பேசலாம்.

உமர்: ஆம், நான் இன்று மாலை ஆறு மணிக்கு பிறகு ஃபிரியா இருப்பேன். நாம் பேசலாம்.

[மாலை ஆறுமணிக்கு உமரும் அவரது தம்பியும் தங்கள் வீட்டில் சந்தித்து பேசுகிறார்கள்]

அப்துல்லாஹ்: என்ன அண்ணே, நான் சொன்னது போல, சிந்தித்து வைத்தீங்களா? உங்களுக்கு ஏதாவது விவரம் கிடைத்ததா?

உமர்: ம்ம்ம்... நான் அதிகமாக அதைப் பற்றி சிந்திக்கவில்லை, இருந்தாலும் நாம் பேசலாம். சரி, ஒரு முறை உன்னுடைய கேள்விகளை சுருக்கமாகச் சொல்?

அப்துல்லாஹ்:   இயேசு நாடு பற்றிஅரசு பற்றி என்ன சொல்கிறார்.  இயேசு சொல்வதைப் போல குற்றவாளிகள் அனைவரையும் மன்னித்துவிட்டு, சிறைச்சாலைகளை காலி செய்துவிட்டால், அந்த குற்றவாளிகள் திருந்துவது எப்போது? சமுதாயம் அவர்களால் படும் அள்ளல்கள் அனேகம். இதற்கு உங்கள் பதில் என்ன?

உமர்:  தம்பி, ஒன்றை நான் சொல்லிக்கொள்கிறேன், பொதுவாக முஸ்லிம் அறிஞர்கள் இதர மார்க்க விஷயங்கள்  பற்றி அதிகமாக கற்பனை செய்வார்கள். இவர்களாகவே ஒரு கற்பனையை செய்துக்கொண்டு இதர மார்க்க மக்களிடம்  பேசிக்கொண்டு விவாதித்துக் கொண்டு இருப்பார்கள்.

 

அவர்களைப் போலவே நீயும் சொந்தமாக கற்பனைகளை செய்துக்கொண்டு கேள்விகேட்கிறாய், கொஞ்சம் ஆராய்ச்சி செய்து கேள்வி கேட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.

அப்துல்லாஹ்: இதிலென்ன கற்பனை இருக்கிறது? நான் புதிய ஏற்பாட்டை படித்துள்ளேன் என்று  உங்களுக்கே தெரியும்.  அதே போல, நான் இஸ்லாமையும் இப்போது சிறிது சிறிதாக கற்றுக்கொண்டு இருக்கிறேன்.  இந்த இரண்டனையும் ஓரளவிற்குக் படித்ததால்நான்  இயேசு  (ஸல்)  மற்றும் இறைத்தூதர் முஹம்மது (ஸல்), இருவரின் போதனைகளை ஒப்பிட்டு பார்த்ததில்நாடு பற்றி, அரசு பற்றி முஹம்மது (ஸல்) அவர்கள் சொன்னது போல, இயேசு (ஸல்) அவர்கள் சொல்லவில்லை. மன்னிப்பு, அன்பு என்று இயேசு (ஸல்) கூறுவதை நாம் புதிய ஏற்பாட்டின் சுவிசேஷங்களில் காணலாம், ஆகையால், இயேசு தன்னுடைய அரசை நிறுவினால், எப்படி தண்டனை கொடுப்பார்? இது தான்  என் கேள்வி.

உமர்:  ஒரு அரசாங்கம் எப்படி இருக்கவேண்டும், மக்கள் அரசாங்கத்திடம் எப்படி நடந்துக்கொள்ளவேண்டும், குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்கவேண்டுமா? இல்லையாபோன்றவைகள் பற்றி நீ புதிய ஏற்பாட்டில் படித்ததில்லையா? குறைந்தபட்சம் ஒரு சில விவரங்களையாவது நீ புதிய ஏற்பாட்டில்  மறைமுகமாக சொல்லப்பட்டு இருப்பதை படித்ததில்லையா?

அப்துல்லாஹ்: இல்லை, இல்லவே இல்லை.

உமர்: ம்ம்ம்... நான் சொன்னது போல, கொஞ்சம் கூர்ந்து நீ படித்திருந்தால், இயேசு குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பது பற்றி சொன்னவைகளை நீ கவனித்து இருக்கமுடியும்.  சரி, உனக்கு இப்போது வசன ஆதாரங்களோடு விளக்குகிறேன்.

இயேசுவின் முதல் வருகை அரசு அமைக்க அல்ல: 

இயேசுவின் முதல் வருகை  உலகத்தில் ஒரு அரசை நிறுவி அதன் மூலம் தன் செய்திகளை  உலகிற்கு பரப்புவதற்காக அல்ல. அதற்கு பதிலாக, மனிதர்களின் உள்ளங்களில் அரசு அமைப்பதற்காகவும், அவர்களின் குற்றங்களை தன் மீது சுமத்திக்கொண்டு, தான் தண்டனை அனுபவிப்பதற்காக இயேசு வந்தார்.  சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், அவர் ஒரு பரிசுத்தராக வந்து, நமக்காக குற்றவாளியாக மாறினார். நாம் செய்த குற்றங்களை தன் மீது ஏற்றுக்கொண்டார்.

எனவே, நாடு, அரசு மேலும் தண்டனைகள் பற்றி அவர் அதிகமாக சொல்லவில்லை, அவரது முக்கிய நோக்கம்  உலகத்தில் அரசு அமைப்பதல்ல, உள்ளத்தில் அரசு அமைப்பதாகும்.  இருந்தபோதிலும், அவரது போதனைகள், உவமைகளை நாம் கூர்ந்து கவனித்தால், குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பது பற்றி அவர் என்ன கருதுகிறார் என்பதை நம்மால் ஓரளவிற்கு கண்டுபிடிக்கமுடியும்.

இப்போது அவைகளைக் காண்போம்.

அப்துல்லாஹ்: ஒரு நிமிஷம் நில்லுங்க.

உமர்: ஏன் என்ன ஆச்சு?

அப்துல்லாஹ்: இப்போ எங்கிட்டே வசமா மாட்டிகிட்டீங்க?

ஆன்மீக தலைவர் VS  நாட்டின் அதிபதி (அரசு நடத்தும் தலைவர்)

முஹம்மது (ஸல்) அவர்கள் நாட்டை நடத்தும் ஒரு இறைத்தூதராகவும், அதே நேரத்தில் ஒரு ஆன்மீக வழிகாட்டியாகவும் இருந்தார் என்று முஸ்லிம்களாகிய நாங்கள் சொல்கிறோம். ஒரு நாட்டின் அதிபர் என்ற முறையில் அவர் சில செயல்கள் செய்து இருந்தால், உடனே நீங்கள் அவர் மீது குற்றம் சுமத்துகிறீர்கள். ஒரு ஆன்மீக தலைவர் இப்படி தண்டனை கொடுக்கலாமா? இது நியாயமா? என்று கேட்கிறீர்கள். ஆனால், உண்மையில் அவர் ஒரு அரசை நடத்தும் பொறுப்பை ஏற்று இருப்பதினால் தான் தண்டனை கொடுக்கிறார் என்று நாங்கள் விளக்கம் அளித்தால், அதனை நீங்கள் அங்கீகரிக்க மாட்டீர்கள்.

ஆனால், இயேசு அரசு பற்றி என்ன சொல்லியுள்ளார் என்று கேள்வி கேட்கும் போது, அவர் உலக அரசு நடத்த வரவில்லை, உள்ளத்தில் அரசு நடத்த வந்தார் என்றுச் சொல்லி, இயேசுவின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த, இரண்டு வகையாக அவரது ஊழியத்தை  பிரிக்கிறீர்கள், ஒன்று ஆன்மீக தலைவர் (முதல் வருகை), இன்னொன்று அரசு நடத்தும் தலைவர் (இரண்டாம் வருகை).

இதே போல, நாங்களும் எங்கள் இறைத்தூதர், இரண்டு நிலையில் ஊழியம் செய்தார், ஆன்மீக ஊழியம் மற்றும் அரசாங்க ஊழியம்  என்றுச் சொல்லும் போது, அவர் அரசாங்க நிலையில் செய்த செயல்களுக்கு ஒரு ஆன்மீக முலாம் பூசி அவரை பழிக்கிறீர்கள்? இது எந்த வகையில் நியாயம்

எங்கள் இறைத்தூதர் ஆன்மீக கட்டளைகள் கொடுத்தது போல, அரசாங்க கட்டளைகளையும் கொடுத்துள்ளார். ஆனால், நீங்கள் அவர் அரசு நிலையில் சொன்னதை ஆன்மீகத்தோடு சம்மந்தப்படுத்தி கேள்வி கேட்கிறீர்கள். இது நியாயமா? இது சரியானதா?

உமர்: முதலாவது, இந்த உன் கேள்விக்கு பதில் கொடுத்துவிட்டு, அதன் பிறகு இயேசுவும், குற்றவாளிகளுக்கு தண்டனைகளும் என்ற உன் முந்தைய கேள்விக்கு பதில் சொல்கிறேன்.

முஹம்மது பற்றி நாங்கள் (கிறிஸ்தவர்கள்) தெளிவாக புரிந்துக்கொண்டு இருக்கிறோம். அவர் முதலாவதாக "ஒரு ஆன்மீக தலைவர்" என்ற முறையிலும், இரண்டாவதாக "ஒரு நாட்டு அதிபர்" என்ற முறையிலும் செயல்பட்டு இருக்கிறார் என்றும் நாங்கள் அறிந்திருக்கிறோம்.

 

ஆனால், எங்கள் குற்றச்சாட்டு என்னவென்றால், "அவர் ஒரு நாட்டு அதிபராக இருக்கட்டும், தன்னுடன் இருக்கும் ஒரு கூட்ட மக்களை "இராணுவம்" என்று அழைத்துக் கொள்ளட்டும்எங்களுக்கு பிரச்சனை இல்லை. எங்கள் கேள்வி என்னவென்றால், உங்கள் இறைத்தூதர் நடந்துக்கொண்டது போல  தற்காலத்தில் ஒரு நாட்டு அதிபர் நடந்துக்கொண்டால், அவரை நீங்கள் (முஸ்லிம்கள்) ஏற்றுக்கொள்வீர்களா?

முஹம்மது ஒரு அரசு நடத்தும் தலைவராக செயல்பட்ட செயல்களில் சிலவற்றை கூறுகிறேன், அவைகளை தற்காலத்தில் ஒரு நாட்டு அதிபர்  செய்தால், அவைகள் நியாயமானவைகளாக நீங்கள் காண்பீர்களா? என்று பாருங்கள்.

1)     பணத்திற்காக கொடுமைப்படுத்தினார்

2)     வலியச் சென்று போர் புரிந்தார், போரில் பிடிப்பட்ட பெண்களை அடிமைகளாக கொண்டார். மேலும் அப்பெண்களை கற்பழித்தார், தன் சகாக்களும் கற்பழிக்க அனுமதித்தார். அடிமைப் பெண்களை திருமணம் செய்துக் கொள்ளாமல்  உடலுறவு கொள்ள அனுமதி அளித்தார்.   

3)     என்னை நபி என்று ஏற்றுக்கொண்டு, இஸ்லாமை தழுவுங்கள் அல்லது என் வாளுக்கு இறையாகுங்கள் என்று இதர நாட்டு அரசர்களுக்கு கடிதம் எழுதி, பயப்படவைத்தார்.

4)     தன்னை விமர்சித்தவர்களை கொன்றார்: அ) வியாபார வழிப் பிரயாணிகள் மீது திடீர் தாக்குதல், ஆ) வயது முதிர்ந்த ஒரு பெரியவரின் கொலை, இ) ஐந்து பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்டாள், ஈ) கடைவியாபாரியின் கொலை, உ) கஜானாவை அடையும் படி கொடுமைப்படுத்தி கொலை செய்த முஹம்மது.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

இவைகள் எல்லாம் இன்று ஒரு அரசாங்கம் செய்ய ஆரம்பித்தால், நீ எப்படி சகித்துக்கொள்வாய்? இந்த குற்றங்களை செய்பவர்கள் அரசு நடத்தும் தலைவர்களாக இருந்தாலும், மக்கள் அங்கீகரித்துக் கொள்ளமாட்டார்கள். இப்படிப்பட்டவர்களைத் தான் சரித்திரம், தீய சர்வாதிகாரிகள் என்று பட்டம் சூட்டுகிறது.

ஆக, ஒரு சாதாரண சர்வாதிகாரி மேற்கண்ட விவதமாக நடந்துக்கொண்டாலே ஏற்றுக்கொள்ளாத உலகம், ஒரு ஆன்மீக தலைவராக ஒரு வழிகாட்டியாக இருந்துக்கொண்டு, அதே நேரத்தில் ஒரு அரசு நடத்தும் தலைவர் செய்தால், அது நியாயமானதாக காணப்படுமா? சர்வாதிகாரிகளாக இருந்துக்கொண்டு தீய செயல்களில் ஈடுபடும் நபர்களை, சத்தாம் உசேனை தூக்கில் போட்டது போல போடவேண்டாமா? பின்லாடனை சுட்டுக்கொன்றது போல துப்பாக்கியால் துளைக்கவேண்டாமா? சொல் தம்பி சொல்.

 

ஒரு நல்ல அதிபரை மதிப்பதில் எங்களுக்கு எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை.  ஒரு அரசாங்கம் தீயவர்களுக்கு தண்டனை நியாயமாக கொடுப்பதில் எங்களுக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை.  ஆனால், வன்முறையையே தன் ஆயுதமாக கருதும் ஒரு நபரை எப்படி இறைவனின் அடியார் என்றும், நல்ல வழிகாட்டி என்றும் ஏற்றுக்கொள்ளமுடியும்?

இன்னும் உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், தீய அரசாங்கத்திற்கும், அதிகாரத்திற்கும் நாம் அடங்கியே இருக்கவேண்டும் என்று பைபிள் எங்களுக்கு போதிக்கின்றது.

எனவே, ஒரு கட்டளையை முஹம்மது கொடுத்தால், அது ஆன்மீக தலைவர் என்ற முறையில் கொடுத்தாரா? அல்லது அரசு தரப்பிலிருந்து நாட்டு தலைவராக இருந்து கொடுத்தாரா? என்பதை  சரியாக பகுத்தறிந்து தான் நாங்கள் பேசுகிறோம் அல்லது கேள்வி கேட்கிறோம்.

அப்துல்லாஹ்:  ம்ம்ம்.... இன்று இந்த தலைப்பு பற்றி நாம் அதிகம் பேசவேண்டாம். அடுத்த முறை இதைப் பற்றி பேசுவோம். உங்களின் குற்றச்சாட்டுகளுக்கு நான் பதிலை தெரிந்துக்கொண்டு வந்து பேசுகிறேன்.

இப்போது இயேசு அரசு அமைத்தால் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பாரா இல்லையா? என்பதைப் பற்றி புதிய ஏற்பாட்டிலிருந்து மட்டும் விளக்குங்கள், பார்க்கலாம். குறைந்தபட்சம் "தண்டனை" என்ற வார்த்தைக்கு இயேசுவின் விளக்கமென்ன?

உமர்: ம்ம்ம்…கொஞ்சம் முஹம்மதுவின் உண்மை சரித்திரத்தை வெளியே சொன்னால் பொதுமே, நீ நழுவிடுவியே!

சரி, இயேசுவின் போதனைகள், உவமைகளை நாம் கூர்ந்து கவனித்தால், குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பது பற்றி அவர் என்ன கருதுகிறார் என்பதை நம்மால் ஓரளவிற்கு கண்டுபிடிக்கமுடியும். இப்போது அவைகளைப் பற்றி உனக்கு விவரிக்கிறேன். இவைகளை நீ அறிந்துக்கொண்டால், அடடே புதிய ஏற்பாட்டில் இயேசுவின் போதனைகளை இந்த கோணத்திலும் பார்க்கமுடியுமா என்று ஆச்சரியப்படுவாய்!

அ) குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதில் இயேசுவிற்கு நிகர் இயேசுவே

இந்த தலைப்பை  படித்தவுடன் கிறிஸ்தவர்களே என்னை பகைத்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். அதாவது தண்டனை கொடுப்பதில் இயேசுவிற்கு நிகர் இயேசுவேயா? யார் சொன்னது? இயேசுவானவர் மன்னிக்கும் தெய்வம், சமாதான கர்த்தர் என்று கிறிஸ்தவர்கள் கூறுவார்கள்.

 

உண்மை தான்! இயேசு மன்னிக்கும் தெய்வம் தான், சமாதான கர்த்தர் தான், ஆனால், இப்போது கேள்வி என்னவென்றால் எப்போது இயேசு மன்னிக்கும் தெய்வம்? அவரது முதலாவது வருகையின் போதா? அல்லது இரண்டாவது வருகையில் அவர் நியாயந்தீர்ப்பு தரும்போதா? என்பது தான் முக்கியமான கேள்வி.

ம், அவரது முதலாவது வருகையில் அவர் ஒரு ஆட்டுக்குட்டியாக நமக்காக வந்தார், நம் தண்டனைகளை தாம் ஏற்றுக்கொண்டார்? நான் உன்னை மன்னித்தேன், இனி பாவம் செய்யாதே என்று அறிவுரை கூறினார். ஆனால், இரண்டாவது வருகையில் அவர் எப்படி இருப்பார் தெரியுமா? அவர் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுப்பார்? சரி, புதிய ஏற்பாட்டிலிருந்து ஒரு சில வசனங்களை மேற்கோள் காட்டுகிறேன். 

ஆ) நரக தண்டனை மற்றும் நித்திய தண்டனை

மத்தேயு 5:29-30 வரையுள்ள வசனங்களில், நரகத்தில் தள்ளப்படுவதைப் பற்றி இயேசு எச்சரிக்கிறார்.

மத்தேயு 25:31-46 வசனங்களில், தாம் நீதிபதியாக உட்காரும் போது என்ன நடக்கும் என்பதை விளக்குகிறார். மக்களை இரண்டு பிரிவாக பிரித்து, ஒரு பிரிவினர் இந்த உலகத்தில் செய்த நன்மைகளுக்கு அவர்களை மெச்சிக்கொள்கிறார், அவர்களை நித்திய மகிழ்ச்சிக்குள்ளாக செல்லும் படி சொல்கிறார். இரண்டாவது மக்களுக்கு நித்திய தண்டனையை தருகிறார்.

ஒரே ஒரு வசனத்தை பார்ப்போம்:

மத்தேயு 25:46 அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.

இந்த இடத்தில் தண்டனை என்பது ஒரு சில நாட்கள் இல்லை, இது நித்தியமானது.

ஆகையால் "குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதில் இயேசுவிற்கு நிகர் இயேசுவே" என்று கூறினேன்.

அப்துல்லாஹ்:  கொஞ்சம் நில்லுங்க. இயேசு தம்முடைய இரண்டாம் வருகையில் தண்டனை கொடுப்பார் என்றுச் சொல்கிறீர்கள், அதனை நான் அங்கீகரிக்கிறேன். ஏனென்றால், எல்லா மதங்களிலும், இஸ்லாமிலும், இறைவன் என்பவன் தண்டனைகளை கொடுப்பான். அது ஒரு புறம் இருக்கட்டும்.  

என் கேள்வி இது தான்: இந்த உலகத்தில் நடக்கும் அரசாங்கங்கள், எப்படி தண்டனைகளை தரவேண்டும், சட்டம் ஒழுங்கை எப்படி பேணிக்காக்க வேண்டும் என்று இயேசு சொல்லியுள்ளாரா?

நீங்க கழுவுற மீன்களில் நழுவுற மீன் என்று எனக்குத் தெரியும். இரண்டாம் வருகை, கடைசி காலம் பற்றி எனக்கு அக்கரையில்லை, இந்த உலகம் பற்றிய விஷயத்துக்கு வாங்க.

உமர்: அட அவசர புத்திக்காரனே! ஏன் அவசரப்படுகிறாய்! என்னை முதலாவது பேசவிடு?

அப்துல்லாஹ்: பேசுங்க பேசுங்க... எவ்வளவு பேசினாலும் ஒரு நாள் அமைதியாக வேண்டி வரும்.

உமர்: எதைச் சொல்லுகிறாய் நீ! ஒரு நாள் வரும் அன்று நான் இஸ்லாமின் உண்மையை உணர்ந்து இப்படி பேசுவதை நிறுத்துவேன் என்ற வகையில் சொல்கிறாயா? அல்லது ஒரு  நாள் நீயே என் வாயை மூடும்படி, ஏதாவது செய்யப் போகிறாயா? (வன்முறையில் ஈடுபடப்போகிறாயா?). முஸ்லிம்கள் ஏதாவது சொன்னால் அதனை செய்துமுடிப்பார்கள் என்று எனக்குத் தெரியும்.

அப்துல்லாஹ்: அடடே! நான் அப்படியெல்லாம்  செய்யமாட்டேன். நீங்க ரொம்பவும் பயந்து இருக்கீங்க போலிருக்கு?

உமர்: பயப்படாமல் என்ன செய்யமுடியும்? பாம்பை என்ன தான் பால் கொடுத்து வளத்தாலும், அன்பு காட்டினாலும், பாம்பு பாம்புதானே! ஜாக்கிரதையா இருக்கவேணுமில்லே, ஹி..ஹி...

அப்துல்லாஹ்: என்ன! நான் விஷப்பாம்பா? ஏன் இப்படி சொல்றீங்க!

உமர்: பாம்பு மீது எந்த குற்றமும் கிடையாது தம்பி, குற்றமெல்லாம், அது விஷமுள்ள பாம்பு இனத்தோடு சேர்ந்தது என்பதால் தான்? உன் மீது எனக்கு நம்பிக்கையுண்டு, ஆனால், நீ சார்ந்திருக்கின்ற மார்க்கம் மீது தான் எனக்கு சந்தேகம்.

சரி விஷயத்துக்கு வருவோம்.

இயேசு இவ்வுலக ஆட்சி, அரசு பற்றி, இவ்வுலக தண்டனை பற்றி என்ன கூறியுள்ளார் என்று கேட்டாய். இதோ ஒரு சில விவரங்களைச் சொல்கிறேன், கேள்.

இ) என் அரசு நடக்குமானால், என் சேகவர்கள் வந்து சண்டையிட்டு இருப்பார்கள்:

ஒரு அரசாங்கத்தின் தலைவரை மற்றவர்கள் கைது செய்யும் போது, அந்நாட்டு இராணுவம் சண்டையிட்டு மீட்டுக்கொள்ளும் என்று கூறுகிறார். அதாவது ஒரு இராணுவத்தின் கடமையை இங்கு சுட்டிக்காட்டுகிறார். இந்த இடத்தில் அவர் ஒரு உலக அரசாங்கத்தை கவனத்தில் கொண்டு பேசுகிறார்.

இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார்.  (யோவான் 18:36)

ஈ) கணக்கு போட்டு சண்டைக்குச் செல்லவேண்டிய அரசன்:

ஒரு உலக அரசன் எப்படி கணக்கு போடவேண்டும் என்பதை இயேசு இங்கு குறிப்பிடுகிறார். இங்கு ஒரு அரசங்கம் தன் பெலம் பலவீனம் போன்றவற்றை தெரிந்துக்கொண்டு முடிவுகளை எடுக்கவேண்டும் என்று கூறுகிறார்.

அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ்செய்யப் போகிறபோது, தன்மேல் இருபதினாயிரம் சேவகரோடே வருகிற அவனைத் தான் பதினாயிரம் சேவகரைக்கொண்டு எதிர்க்கக் கூடுமோ கூடாதோ என்று முன்பு உட்கார்ந்து ஆலோசனைபண்ணாமலிருப்பானோ?  கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, ஸ்தானாபதிகளை அனுப்பி, சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வானே. (லூக்கா 14:31-32)

 

உ) அநீதியான குத்தகைக்காரருக்கு தண்டனை (மத்தேயு 21:33-41)

 

இந்த உவமையை நீ ஏற்கனவே அறிந்திருப்பாய், குத்தகைக்காரர்கள் செய்த அநியாயத்திற்கு அவர்களை கொடுமையாக தண்டிக்கவேண்டும் என்று இயேசு ஒப்புக்கொள்கிறார். எனவே தண்டனை என்பது குற்றவாளிகளுக்கு அரசு அல்லது அதிகாரமுடையவர்கள் தரவேண்டும் என்பதில் இயேசுவிற்கு எந்த ஒரு ஆட்சேபமும் இல்லை.

 

அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் வரும்போது, அந்தத் தோட்டக்காரரை என்ன செய்வான் என்று கேட்டார்.  அதற்கு அவர்கள்: அந்தக் கொடியரைக் கொடுமையாய் அழித்து, ஏற்ற காலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கத்தக்க வேறே தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்தைக் குத்தகையாகக் கொடுப்பான் என்றார்கள். (மத்தேயு 21:40-41)

 

ஊ) நீதிமன்றத்திற்கு வெளியே உன்னால் முடிந்தால், விடுதலையாக முயற்சி எடு, இல்லையானால் தண்டனை நிச்சயம்:

 

மன்னிப்பு, அன்பு என்று அதிகமாக பேசிய இயேசு, இந்த இடத்தில் எதைச் சொல்கிறார்? ஏழு எழுபதுமுறை மன்னிப்பது பற்றி பேசுகிறாரா? இல்லை. அவர் நாட்டு நடப்பு பற்றி பேசுகிறார். உன்னிடம் தவறு இருந்தால், உன் எதிரியிடம் நீயே சென்று ஒப்புறவாகு, இல்லையானால், தண்டனை நிச்சயம் உனக்கு உண்டு, நீ கடைசி ரூபாயை கொடுக்கும் வரை உன்னை விடுதலை செய்யமாட்டார்கள்.

 

உனக்கு எதிராளியானவன் உன்னை அதிகாரியினிடத்திற்குக் கொண்டுபோகிறபோது, வழியிலேதானே அவனிடத்திலிருந்து விடுதலையாகும்படி பிரயாசப்படு, இல்லாவிட்டால், அவன் உன்னை நியாயாதிபதிக்கு முன்பாகக் கொண்டுபோவான், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடுப்பான், சேவகன் உன்னைச் சிறைச்சாலையில் போடுவான்.  நீ கடைசிக்காசைக் கொடுத்துத் தீர்க்குமட்டும், அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.  (லூக்கா 12:58,59)

 

ஆக, நீதி, சட்டம் போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படவேண்டும் நாட்டில். அதே குடும்பமாக இருந்தால், உன் சகோதரனை நீ மன்னித்துக்கொண்டே இருக்கலாம், ஆனால் குடும்பத்துக்கு வெளியே வந்துவிட்டால், நீதியும், நியாயமும் சட்டமும் தான் பேசும், சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்.

 

எ) பெற்றோரை கனம்பண்ணாதவன் கொல்லப்படவேண்டும்:

 

இயேசுவின் முதல் வருகை தண்டனை கொடுப்பதற்காக அல்ல என்றாலும், யூத மத தலைவர்களின் மாயமான வாழ்க்கையும், பாரம்பரியங்களும், அவர்களுக்கு பழைய ஏற்பாட்டின் மரண தண்டனை பற்றி இயேசு ஞாபகப்படுத்தவேண்டியதாக இருந்தது. 

 

இப்படி இயேசு எங்கேயும் பேசவில்லையே என்று நினைக்கிறாயா தம்பி? மத்தேயு 15:3-4 வசனங்களை படி:

 

அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?  உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே.  (மத்தேயு 15:3,4)

 

அதாவது, ஒரு மகன் தன் பெற்றோரை கனப்படுத்தவில்லையானால் கொல்லப்படவேண்டும் என்பது பழைய ஏற்பாட்டின் கட்டளை. இதனை இயேசு ஏன் இங்கு சுட்டிக்காட்டுகிறார்? யூத மத தலைவர்களுடைய பாரம்பரியங்கள் சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கிறது என்பதைக் கண்டு, அவர்களுக்கு அவர்களின் சட்டத்தை இயேசு ஞாபகப்படுத்துகிறார்.

 

ஆகவே, இயேசு எப்போது பார்த்தலும் நாடு சட்டம் போன்றவற்றை மறந்துவிட்டு, அன்பு, மன்னிப்பு என்பதை மட்டும் முக்கியப்படுத்தவில்லை. அன்பும் வேண்டும், அதே நேரத்தில் சட்டமும் ஒழுக்கமும் வேண்டும்.

 

ஏ) நாணயத்தின் இரு பக்கங்கள் – மனிதனின் இரண்டு பக்கங்கள்

 

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல, ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு வகையான சூழ்நிலைகள் இருக்கும்.

 

முதலாவது குடும்பம், உறவினர்கள், நண்பர்கள், அயலகத்தார்கள், திருச்சபையின் இதர அங்கத்தினர்கள் ஆவார்கள். இவர்கள் மத்தியிலே இயேசு கூறுவதுபோல மிகவும் அன்பாகவும், மன்னிக்கும் மனப்பான்மையுடன், பொறுமையுடன் நடந்துக்கொள்ளவேண்டும்.

 

இரண்டாவதாக, சமுதாயம், நாடு, சட்டம் போன்றவற்றோடு ஒட்டி வாழுகின்ற வாழ்க்கை. இந்த இடத்தில் அதிகமாக நாம் அன்புடன், மன்னிக்கும் மனப்பான்மையுடன் இருக்கமுடியாது. ஒருவன் நம்முடைய வீட்டை அநியாயமாக எடுத்துக்கொண்டால், சட்டத்தின் மூலமாக அதனை நியாயமான முறையில் மீட்கவேண்டும். குற்றம் புரிந்தவனுக்கு சமுதாயத்தில் தண்டனை கிடைக்கச் செய்யவேண்டும். 

 

  • ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டு என்றுச் சொன்ன அதே இயேசு, 
  • அவரை வாரினால் அடித்து சித்திரவதை செய்தபோது ஒன்றும் செய்யாமலிருந்த இயேசு,
  • இவர்களை மன்னியும் என்று தன்னை சித்திரவதை செய்தவர்களுக்காக வேண்டிக்கொண்ட இயேசு,
  • "பிரதான ஆசாரியரிடத்தில் இப்படியா பேசுகிறது" என்றுச் சொல்லி ஒரு சேவகன் தம்மை ஒரு அறை அறையும் போது, "நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப்  பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய்?" என்று கேள்வி எழுப்புகிறார் (யோவான் 18:22,23). இங்கு அவர் சட்டத்தை நியாயமாக கையாளுங்கள் என்று உரிமையோடு கேட்கிறார்.

 

குடும்பம் வேறு சட்டம் வேறு, குடும்பத்தில் நாம் நடந்துக்கொள்கிறது போல, சட்டத்தில் நடக்கமுடியாது. ஒரு கிறிஸ்தவன் அநியாயத்தை தட்டிக்கேட்கக்கூடாது என்று எங்கும் சொல்லப்படவில்லை, முடிந்த அளவிற்கு எல்லாரோடும் சமாதானமாக இருக்கவே நாம் கட்டளையிடப்பட்டு உள்ளோம். முடியவில்லையானால் என்ன செய்வது? சொந்த அண்ணன், அநியாயமாக நீதிமன்றத்திற்கு அழைக்கிறான், ஒற்றுமையாக போகவேண்டும் என்றுச் சொல்லி நாமும் முடிந்த அளவிற்கு பேசிப்பார்க்கிறோம், விட்டுக்கொடுத்துப் பார்க்கிறோம். ஆனால், அவன் விடமாட்டேன் என்கிறான், இந்த நிலையில் ஒரு நல்ல கிறிஸ்தவன் என்னவேண்டும்? சட்டம் என்ன சொல்கிறதோ அதைத் தான் செய்யவேண்டும்.

 

எனவே, கிறிஸ்தவர்களுக்கு எது குடும்பம்? எது சட்டம்? எங்கு கன்னத்தை திருப்பி காட்டவேண்டும்? எங்கு மற்றவன் கன்னத்தில் திருப்பி அறையவேண்டும் என்று நன்றாகத் தெரியும்.

 

ஆக, தம்பி, இயேசு சட்டத்திற்கு விரோதி அல்ல, இயேசு சட்ட ஒழுங்கிற்கு எதிரி அல்ல.  அவருடைய பெரும்பான்மையான போதனைகள், குடும்பம், சொந்தம் பந்தம், நட்பு போன்றவற்றைப் பற்றியே அதிகமாக இருந்தது. அதே நேரத்தில், இயேசு குற்றம் புரிபவர்களுக்கு தண்டனை தரக்கூடாது என்றுச் சொல்லவில்லை. அவரின் முதலாவது வருகையின்  நோக்கம் வித்தியாசமானதாக இருந்ததால், அவர் அதிகமாக அன்பு செலுத்தி, மன்னித்தார், பிதாவின் அன்பை வெளிப்படுத்தவே அவர் வந்தார், அந்த செயலை கச்சிதமாக முடித்தார். அடுத்த முறை அவரை நாம் காணும்போது, அவர் இராஜாதி இராஜாவாக, நீதிபதியாக வெளிப்படுவார்.

 

அப்துல்லாஹ், இது போதுமா? அல்லது இன்னும் வேணுமா?

 

அப்துல்லாஹ்: நீங்க ஏதோ ஒரு மாயம் செய்யறீங்க. எந்த கேள்வியை கேட்டாலும் எதோ ஒன்றைச் சொல்லி என்னை மயக்கிறீங்க.

 

உமர்: தம்பி அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நான் வசனங்களைச் சொல்லித் தானே உன்னோடு பேசிக்கொண்டு இருக்கிறேன். இயேசுவின் உவமைகள், போதனைகள் அனைத்தையும் கூர்ந்து கவனித்தால், அவர் நாட்டையும், சபையையும்  (மார்க்கத்தையும்) தனியாக பிரிப்பதை நாம் காணமுடியும். இன்னொரு உதாரணத்தைச் சொல்கிறேன்:

 

அரசாங்கத்திற்கு வரி செல்லுத்துவது சரியா? என்று கேட்டபோது, அவர் அரசாங்கத்திற்கு செலுத்தவேண்டியதை அரசாங்கத்துக்கு செலுத்துங்கள், தேவனுக்கு செலுத்தவேண்டியவைகளை தேவனுக்கு செலுத்துங்கள் என்றார். ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய வாழ்வில், தான் வாழும் நாட்டின் அரசாங்கம் ஒரு பக்கமும், தன் குடும்பம், மார்க்கம், திருச்சபை போன்றவை இன்னொரு பக்கமும் இருக்கவேண்டும்.

 

முடிவாகச் சொல்கிறேன், இயேசு நாட்டின் அரசியல் சட்டத்திற்கு எதிரி அல்ல, அதே நேரத்தில் இயேசு சொன்னது போல ஒவ்வொரு குடிமகனும்  வாழ்ந்தால், நாட்டின் ஒழுக்கம், சட்டம் நிச்சயம் சீர் பெறும், நாட்டில் குற்றங்கள் குறையும்.  ஆக, நாடாளுமன்றம் தன் வேலையை செய்யட்டும், திருச்சபை தன் வேலையைச் செய்யட்டும், இரண்டையும் ஒன்றுபடுத்தி குழப்பிக்கொள்ளவேண்டாம் என்பது இயேசுவின் கருத்து.  இன்று இஸ்லாமிய நாடுகளில் உள்ள மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், மார்க்க அறிஞர்கள் அரசை நடத்த முயற்சி செய்வது தான். அரசாங்க விஷயங்களில் இஸ்லாமிய அறிஞர்கள் மூக்கை நுழைத்து, செயல்படுவது அனேகருக்கு தொந்தரவாக இருக்கிறது.

 

அப்துல்லாஹ்: போதும் போதும். நீங்க எங்கள் இறைத்தூதரின் அரசாங்க செயல்கள் பற்றி சொன்ன விவரங்களுக்கு நான் பதிலை தெரிந்துக்கொண்டு வந்து உங்களோடு பேசுகிறேன். எங்கள் இறைத்தூதர் செய்த போர்கள், அவர்கள் கொடுத்த தண்டனைகள் அனைத்தும் நாட்டின் நன்மைக்காகவும், சட்ட ஒழுங்கை காப்பாற்றவேண்டும் என்ற நோக்கத்திற்காகவுமே செய்தார் என்பதை தகுந்த ஆதாரங்களோடு விவரிக்கிறேன்.

 

உமர்: உனக்கு என் வாழ்த்துக்கள். உனக்கு ஆட்சேபனை இல்லையானால், நம் வீட்டில் இருக்கும் என் சிறிய நூலகத்தை நீ பயன்படுத்திக் கொள்ளலாம்.  அந்த நூலகத்தில் புகாரி மற்றும் முஸ்லீம் ஹதீஸ் தொகுப்புக்கள்  அனைத்தும் உள்ளது, மேலும் அனேக தமிழ், மற்றும் ஆங்கில குர்-ஆன் மொழியாக்கங்கள் உள்ளன. முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரம் கூட உள்ளது, நீ தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

நம்முடைய இந்த உரையாடல், கனி தரும் உரையாடலாக மாறட்டும்.

ஞாயிறு, 24 மார்ச், 2013

கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் – பாகம் 5 - போதகரின் மகள் இமாமின் மகனை திருமணம் செய்தால்?

 [கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் பாகம் 1பாகம் 2பாகம் 3 மற்றும் பாகம் 4 ஐ படிக்க சொடுக்கவும்.]


முன்னுரை: உமரும் அவரது நண்பர் ஜான்சனும், சபை கூட்டம் முடிந்த்தும், போதகரோடும், அவரது குடும்பத்தோடும் ஒரு உணவு விடுதிக்குச் செல்கிறார்கள். போதகருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளும் உண்டு. மூத்தவனுக்கு திருமணமாகி சில ஆண்டுகள் ஆகிறது, மற்ற இருவரும் பொறியியல் பட்டப்படிப்பை படித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஹோட்டலில் உணவு சாப்பிடும் போது... போதகரின் மகள் திடீரென்று "உமரண்ணா... ஒரு கிறிஸ்தவ பெண்.. ஒரு இஸ்லாமியரை திருமணம் செய்துக்கொள்வது பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டாள்….இப்படிப்பட்ட கேள்வியை அதுவும் போதகரின் மகளின் வாயிலிருந்து அந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்கவில்லைபோதகரின் கண்கள் தன் மகளைப் பார்த்தது... உமருக்கும் ஜான்சனுக்கும் தலை சுற்றியது... போதகரின் மனைவியாகிய பாஸ்டரம்மாவிற்கோ..... தாங்க முடியாத அளவிற்கு சிரிப்பு வந்தது.]

இந்த பாகத்தில், போதகரின் பிள்ளைகள் மூவரும் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில்களைக் காண்போம். கிறிஸ்தவ பெண்கள் இஸ்லாமியர்களை திருமணம் செய்துக்கொள்ளுதல் பற்றி காண்போம்.

பாஸ்டரின் மகள்: உமரண்ணா, ஒரு கேள்வியை கேட்கட்டுமா?

உமர்: நாம் ஆர்டர் செய்த உணவு இன்னும் வரவில்லை, அதுவரைக்கும் நாம் பேசுவோம், சரி கேளுங்க.

பாஸ்டரின் மகள்: ஒரு கிறிஸ்தவ பெண் ஒரு இஸ்லாமியரை திருமணம் செய்துக் கொள்வது பற்றி உங்கள் கருத்து என்ன?

உமர்: ?!?.... என்னது? ஒரு முஸ்லிமை ஒரு கிறிஸ்தவ பெண் திருமணம் செய்வது பற்றியா?

பாஸ்டரின் மகள்: ஆமாம்.

[பாஸ்டர் ஒரு மாதிரியாக தன் மகளை பார்க்கிறார், அவளின் அண்ணன்கள் இருவரும், பாஸ்டரம்மாவும், ஒரு மாதிரியாக உமரை பார்த்தவண்ணம் உள்ளுக்குள் சிரித்துக் கொள்கிறார்கள்]

 

உமர்: என்னம்மா, அந்த கிறிஸ்தவ பெண்ணுக்கு கிறிஸ்தவ பையன் கிடைக்கவில்லையா? கிறிஸ்தவ வாலிபர்கள் பற்றாக்குறையாக இருக்கிறார்களா? முஸ்லிம் பையன் தான் கிடைச்சானா? நீ சொல்வது உன்னைப் பற்றியா அல்லது உனக்கு தெரிந்த வேறு யாராவது கேட்கச் சொன்னார்களா?

பாஸ்டரின் மகள்: அண்ணா, இந்த கேள்வி எனக்காக கேட்கிறேனோ, அல்லது மற்றவர்களுக்காக கேட்கிறேனோ, ஆனால் இது ரொம்பமும் முக்கியமான கேள்வியாக்கும்.

பாஸ்டரம்மா: பிரதர், நீங்கள் தப்பா நெனச்சிக்காதீங்க. உங்களிடம் இப்படிப்பட்ட கேள்வி கேட்கப்போவதா, ஏற்கனவே எங்களிடம் அவள் சொல்லிவிட்டாள்.  பாஸ்டருக்கு மட்டும் தான் தெரியாது.

பாஸ்டர்: ஓஹோ, எனக்குத் தெரியாம இது வெற நடக்குதா? அட்லீஸ்ட் கல்யாண தேதியையாவது எனக்கு சொல்லுவீங்களா? இல்லையா?

பாஸ்டரம்மா: நம்முடைய சபையில் இஸ்லாமிய கூட்டங்கள் நடக்கிறது என்று இவள் தன் தோழிகளிடம் சொன்னாளாம். அப்போது அவளுடைய தோழிகளில் ஒருத்தி இந்த கேள்வியை இவளிடம் கேட்டாளாம்.  சகோதரர் உமரிடம் கேட்டு சொல்வதாக இவள் சொல்லியிருக்கிறாள். காலையிலிருந்து நான் உமரண்ணாவிடம் பேசனும் என்று சொல்லிக்கிட்டே இருந்தாள், இது தான் விஷயம். நம்ம பொண்ணு பத்தி உங்களுக்குத் தெரியாதா?

பாஸ்டரின் முத்த மகன்: ஆமாம், என் தங்கச்சி பற்றி எனக்கு ரொம்ப நம்பிக்கை இருக்கு. காதலிச்சா ஒரு கிறிஸ்தவ பையனைத் தான் காதலிப்பாள். அப்படித்தானே!

பாஸ்டரம்மா: டேய், சும்மா ஏன் அவளை தொந்தரவு பண்றே, நீயே அவளுக்கு காதலிக்க சொல்லிக் கொடுப்பாய் போல் இருக்கிறதே!

பாஸ்டரின் மகள்: நீங்க எல்லாரும் சும்மா இருப்பீங்களா கொஞ்ச நேரம். டேய் பெரிய அண்ணா உன்னை நான் அப்பரம் பார்த்துக் கொள்கிறேன், அண்ணி கிட்டே உன்னை மாட்டிவிடுகிறேன் இரு.

உமரண்ணா நீங்க சொல்லுங்கள், காதலித்து திருமணம் செய்வதோ அல்லது பெற்றோர்களாக பார்த்து செய்வதோ அது வேறு விஷயம். ஒரு கிறிஸ்தவ  பெண் ஒரு முஸ்லிமை திருமணம் செய்துக் கொள்ளலாமா? இல்லையா?

உமர்: நான் வசமா மாட்டிக்கிட்டேன், இன்னும் சாப்பாடு வேறு வரவில்லை! சரி விஷயத்துக்கு வருகிறேன்.  தங்கச்சி இது ரொம்ப சீரியஸான விஷயம், கவனமாகக் கேள்.

 அவிசுவாசியோடு விசுவாசி திருமணம் செய்துக்கொள்ள பைபிள் அனுமதிப்பதில்லை:

கிறிஸ்தவர்களாகிய நாம் ஒன்றை சரியாக புரிந்துக்கொள்ளவேண்டும், அதாவதுஎக்காரணத்தைக் கொண்டும், ஒரு விசுவாசி ஒரு அவிசுவாசியை திருமணம் செய்துக் கொள்ளக்கூடாது.

பாஸ்டரின் இளைய மகன்: அண்ணா ஒரு கேள்வி, அவிசுவாசி என்றுச் சொன்னா? கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் மட்டுமேயா? அல்லது கிறிஸ்தவர்களாக கூட அவர்கள் இருக்கலாமா?

உமர்: இது ரொம்ப முக்கியமான சிந்தனை. அவிசுவாசி என்றால், கிறிஸ்தவர்கள் அல்லா(ஹ்)தவர்களாகிய முஸ்லிம்களை மட்டும் குறிப்பதில்லை.  அவிசுவாசி என்றால் (இரட்சிக்கப்படாத) பெயரளவு கிறிஸ்தவர்களாக கூட இருக்கலாம் அல்லது வேறு மார்க்கத்தார்களாக இருக்கலாம். எனவே, ஒரு விசுவாசி அவிசுவாசியோடு திருமண பந்தத்தில் இறங்குவது கர்த்தரின் சித்தமல்ல.

பாஸ்டரின் மகள்: இதற்கு ஆதாரமாக ஒரு வசனத்தை சொல்லுங்களேன், பிளீஸ்.

பாஸ்டர்:  2 கொரிந்தியர் 6:14,15 வசனங்கள் இதைப் பற்றி பேசுகின்றது.

அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது  (2 கொரிந்தியர் 6:14,15).

 [உணவு வந்துவிட்டது, சாப்பிட்டுக்கொண்டே உரையாடல் தொடர்கிறது]

பாஸ்டரின் மகள்: ஏன் ஒரு கிறிஸ்தவ பெண், ஒரு முஸ்லிமை திருமணம் செய்யக்கூடாது? அந்த பெண் பழைய படி தேவனை தொழுதுக் கொள்ளமுடியாது என்பதால் தான் தடை என்று நான் நினைக்கிறேன். ஒரு வேளை அந்த முஸ்லிம் உன் மார்க்கத்தை நீ தாராளமாக பின்பற்றலாம் என்று வாக்குறுதி கொடுத்தால், பிரச்சனை இல்லை அல்லவா?

உமர்: ஆம், முதலாவது காரணம், ஒரு பெண் ஒரு முஸ்லிமை திருமணம் செய்துக்கொண்டால், பழைய படி தேவனை தொழுதுக்கொள்ளவோ, வேதம் வாசிக்கவோ, ஆலயத்திற்கு செல்லவோ முடியாது என்பது தான். ஆனால், இன்னும் அனேக நடைமுறை பிரச்சனைகளும் உள்ளன.

இரண்டாவதாக, ஒரு முஸ்லிம் "உன் தேவனை நீ தொழுதுக்கொள்ள தாராளமாக நான் அனுமதிப்பேன்" என்று வாக்குறுதி கொடுக்கிறார் என்பதைப் பற்றி பார்ப்போம்.

ஒருவேளை ஒரு இஸ்லாமியர் மேற்கண்ட விதமாக சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம், ஆனால், நடைமுறையில் அது சாத்தியமற்றது. இதற்கு அனேக காரணங்கள் உள்ளது.

இஸ்லாமின் படி, ஒருவனின் மனைவி அல்லாஹ்வை தொழாமல் வேறு தெய்வத்தை தொழுதால் அவள் ஒரு காபிர் என் கருதப்படுவாள்:

உண்மையாகவே ஒரு முஸ்லிம், முழு மனதோடு தன் மனைவிக்கு அவள் தெய்வத்தை தொழுதுக்கொள்ள அனுமதி கொடுத்தால், இது மகிழவேண்டிய விஷயம். ஆனால், நடைமுறையில் இது சாத்தியமில்லாதது. சில நாட்கள், மாதங்கள் அல்லது ஒரு சில வருடங்கள் வேண்டுமானால், அந்த முஸ்லிம் கொடுத்த சுதந்திரம் அந்த பெண்ணுக்கு கிட்டும் (அவன் குடும்பத்தை, இஸ்லாமிய சமுதாயத்தை விட்டு, தூரமாக வாழ்ந்தால் சில காலம் இது சாத்தியம்), ஆனால், நிரந்தரமாக அந்த சுதந்திரத்தை அந்த சகோதரி அனுபவிக்க  முடியாது.

ஒருமுக்கியமான விஷயத்தை இங்கு நாம் கவனிக்கவேண்டும், ஒரு முஸ்லிம் நீ உன் தெய்வத்தை சுதந்திரமாக தொழுதுக்கொள் என்று சொல்லும் போது, அவன் மறைமுகமாக சில விஷயங்களை சொல்லிவிடுகின்றான் என்று அர்த்தம். 

அதாவது அவன்:

அ) ஒரு பெயரளவிற்கு முஸ்லிமாக இருக்கிறான்

ஆ) அவனுக்கு இஸ்லாமின் அடிப்படை கூட தெரியாது

இ) அவன் வாரம் ஒரு முறை அல்லது எப்போதாவது ஒரு முறை மசூதிக்கு தொழுகைக்குச் செல்பவன்  மற்றும் இதர இஸ்லாமிய மக்களோடு அதிகமாக தொடர்பு இல்லாதவன் ஆவான்.

ஈ) இஸ்லாமிய மார்க்க விஷயத்தில் பெரும்பான்மையாக விருப்பமில்லாதவன் ஆவான்.

பாஸ்டரின் மகள்: இப்படிப்பவன் கிடைத்தால் நல்லது தானே! ஒரு கிறிஸ்தவ பெண்ணுக்கு இப்படிப்பட்டவன் தான் ஏற்ற துணை. இவனால் எந்த பிரச்சனையும் உண்டாகாது இல்லையா?

உமர்: ஆம், ஒரு மதசார்ப்பற்ற மனிதனாக இவன் காணப்படுகிறான். இவனால் அதிக பிரச்சனை உண்டாகாது.

பாஸ்டரின் இளைய மகன்: அப்படியானால், ஒரு கிறிஸ்த பெண் இப்படிப்பட்ட  நபரை திருமணம் செய்துக்கொள்ளலாம் அல்லவா?

உமர்: இல்லை, திருமணம் செய்துக் கொள்ளக்கூடாது.

பாஸ்டரின் இளைய மகன்: ஏன்? இப்போது என்ன பிரச்சனை?

உமர்: பிரச்சனை அந்த நபர் அல்ல. திருமணம் ஆகும் வரையில் உள்ள காலகட்டத்தில் பிரச்சனை வராது. திருமணம் ஆன சில மாதங்களில் கூட சில நேரங்களில் வராது. உண்மை பிரச்சனை அதன் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக தலை தூக்கும்?

பாஸ்டரின் இளைய மகன்:  அது எப்படி?

உமர்: இந்த நபர் தன் வாழ்நாள் முழுவதும் இதே மன நிலையில்  இருப்பார் என்று என்ன நிச்சயம்இந்த நபர் சிறிது சிறிதாக இஸ்லாமில் அக்கரை காட்டமாட்டான் என்று என்ன நிச்சயம்? பெயரளவு முஸ்லிமிலிருந்து, இஸ்லாமை முழுவதுமாக பின்பற்றவேண்டும் என்ற ஆவலுள்ள உண்மை முஸ்லிமாக மாறமாட்டான் என்று என்ன நிச்சயம்?

பாஸ்டரின் முத்த மகன்: ஏன் நாம் இப்படி நினைக்கவேண்டும்? ஏன் ஒரு நபர் வாழ்நாள் முழுவதும் மதசார்ப்பற்ற முறையில் நடக்க வாய்ப்பு இல்லையா?

உமர்: ஒரு மனிதன் மதசார்ப்பற்றவனாக வாழ்நாள் முழுவதும் இருக்க, வாய்ப்பு உண்டு. ஆனால், இஸ்லாமியனுக்கு வாய்ப்பு மிகக்குறைவு. 

ஏனென்றால்:

அ) இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக கூட்டுக்குடும்பமாக வாழ்வார்கள்,

ஆ) அவர்களை அவர்களின் மசூதியும், உள்ளூர் இஸ்லாமிய அறிஞர்களும் அதிகமாக கட்டுப்படுத்துவார்கள்.

இ) இஸ்லாமிய சமுதாயத்தை விட்டு வெளியே, அதிக நாட்கள் ஒரு முஸ்லிமால் இருக்கமுடியாது. (அவன் வேறு நாட்டுக்குச் சென்று, தன்னை முஸ்லிம் என்று காட்டிக்கொள்ளாமல் வாழ்ந்தால் தவிர. வேறு நாடுகளில் அவன் முஸ்லிம் என்று அடையாளம் காட்டிக்கொண்டால், அந்த நாட்டின் இஸ்லாமிய சமுதாயம் இவரோடு தொடர்பு கொண்டு, அவரை கட்டுப்படுத்த ஆரம்பித்துவிடும்).

ஈ) ஒருவன் வாலிப நாட்களில் எவ்வளவு மதசார்ப்பற்ற அல்லது மத சகிப்புத் தன்மையுள்ள நபராக இருந்தாலும், திருமணம் ஆன பிறகு, மனைவி, பிள்ளைகள், வேலை, குடும்பம், பெற்றோர்களை போஷித்தல் போன்றவைகளில் அவன் ஈடுபடும் போது, அவனை அதிகமாக இஸ்லாமிய சமுதாயம் கட்டுப்படுத்த முயற்சி எடுக்கும். இந்த நேரத்தில் அவன் தன் குடும்பத்தில் உள்ள மூத்தவர்களின் பேச்சை கேட்கவேண்டும், இஸ்லாமிய அறிஞர்களின் பேச்சை கேட்கவேண்டும்இப்போது அவன் இஸ்லாமை முழுவதுமாக பின்பற்றும் முஸ்லிமாக மாறுவான். இது தான் பிரச்சனை.

பாஸ்டரின் மகள்: மாறட்டுமே, அவன் இஸ்லாமை முழுவதுமாக பின்பற்றட்டுமே, அவன் ஏற்கனவே தன் மனைவிக்கு வாக்கு கொடுத்துள்ளான் அல்லவா? எனவே, அவளை தொந்தரவு செய்யமாட்டான் அல்லவா?

 

உமர்: இங்கு தான் நாம் தவறு செய்கிறோம். ஒரு முஸ்லிம் இஸ்லாமிய சட்டமாகிய ஷரியா சட்டத்தை  தன் குடும்பத்தில் பின்பற்ற ஆரம்பித்தால், இந்த கிறிஸ்தவ சகோதரியின் உரிமை பரிக்கப்படும்.

பாஸ்டரின் முத்த மகன்: அது எப்படி பரிக்கப்படும், அவன் தான் வாக்குறுதி கொடுத்துள்ளானே!

உமர்: இதோ விளக்குகிறேன். ஒருவன் இஸ்லாமை முழுவதுமாக பின்பற்ற விரும்பினால்:

அ) தன் மனைவி அல்லாஹ்வைத் தவிர வேறு தெய்வத்தை வணங்க அனுமதி இல்லை. அவளுடைய மனைவி "காபிர்" எனப்படுவாள்.

ஆ) ஒரு முஸ்லிம் காபிரோடு வாழ்க்கை நடத்த அனுமதி இல்லை. ஒன்று அவளை முஸ்லிமாக மாற்றவேண்டும், அல்லது அவளை விவாகரத்து செய்துவிடவேண்டும்.

இ) இது ஒரு புறமிருக்கதன் முதல் மனைவியின் ஒப்புதல் இல்லாமல் இந்த மனிதன், இரண்டாவது, மூன்றாவது அல்லது நான்காவது திருமணம் செய்துக்கொள்ளும் உரிமை அவனுக்கு உண்டு.

ஈ) எனக்குத் தெரியாமல் என் கணவன் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார் என்றுச் சொல்லி, இந்த முதல் மனைவியாகிய கிறிஸ்தவப் பெண், அவன் மீது வழக்கு தொடரமுடியாது. இஸ்லாமில் அது செல்லுபடியாகாவது. 

உ) மேலும், இந்த கிறிஸ்தவ பெண்ணை அந்த நபர் தகுந்த காரணம் இல்லாமல் விவாகரத்து செய்யலாம்.

(தன் மனைவி ரொம்பவும் கிழவியாக இருக்கிறார் என்பதற்காக விவாகரத்து செய்ய விரும்பினார் இஸ்லாமிய நபியாகிய முஹம்மது, இதனால் பயந்துபோய் அந்த பெண் தன்னிடம் இவர் செலவிடும் நாளை விட்டுக்கொடுத்துவிட்டாள், குறைந்த பட்சம் முஹம்மதுவின் மனைவி என்ற நிலையிலெயே மரித்தால் நல்லது என நினைத்துக்கொண்டார்.)

 ஊ) திடீரென்று ஒரு நாள், தனக்கு 18 வயதில் மகள் இருக்கும் போது கூட, இந்த முஸ்லிம் ஒரு 9 வயது நிரம்பிய சிறுமியைக் கொண்டுவந்து, இவள் என் இரண்டாவது மனைவி (உன் சக்காளத்தி) என்று தன் மனைவியிடம் கூறினாலும், இந்த கிறிஸ்தவ பெண்ணால் ஒன்றுமே செய்ய முடியாது. என் கணவர் ஒரு சிறுமியை கொண்டு வந்தார், அவள் என் மனைவி என்கிறார் என்றுச் சொல்லி, அவர் மீது வழக்கு தொடர முடியாது.

எ) எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த முஸ்லிம் ஒரு வசதி படைத்த நபராக இருந்தால், ஒரு பெண்ணை வீட்டிக்கு கொண்டு வந்து, இவள் ஒரு அடிமை, நான் இவளை விலை கொடுத்து வாங்கினேன், இனி நம் வீட்டில் இவள் அடிமையாக வேலை செய்வாள் என்றுச் சொல்லி விட்டு, அன்று இரவே, அப்பெண்ணிடம் உடலுறவு கொள்ளச் சென்றாலும், இந்த கிறிஸ்தவ பெண் ஒன்றுமே செய்யமுடியாது.

ஏ) அதிக பட்சம் ஒரு நேரத்தில் நான்கு மனைவிகள் ஒரு முஸ்லிமுக்கு அனுமதி உண்டு என்று இஸ்லாம் சொன்னாலும், திருமணம் செய்துக்கொள்ளாமல் அடிமைப் பெண்களை வாங்கி வீட்டில் வைத்துக்கொண்டு, அவர்களிடம் உடலுறவு கொள்ள முஸ்லிம்களுக்கு அதிகாரமுண்டு. இதை தட்டிக்கேட்க மனைவிகளுக்கு உரிமை இல்லை.

ஐ) தன் மனைவி காபிராக இருப்பதினால், தான் கொடுத்த வாக்குறுதியை முறித்துக்கொள்ளவும் ஒரு முஸ்லிமுக்கு அதிகாரம் உண்டு. எனவே, தான் அறியாமையின் காலத்தில்  (இஸ்லாமிய பற்றில்லாமல் இருந்த காலத்தில்) கொடுத்த வாக்குறுதியை அல்லாஹ்விற்காகவும், இஸ்லாமுடைய நன்மைக்காகவும், அறிவு வந்த பிறகு (இஸ்லாமிய பற்று வந்த பிறகு) ஒரு முஸ்லிம் முறிக்கலாம், இதில் தவறில்லை.

ஒ) இன்னும் மனைவி கேள்விகள் கேட்டுக்கொண்டு, எனக்கு சுதந்திரம் வேண்டுமென்று சொல்லிக்கொண்டு இருந்தால், இதர விஷயங்களில் முக்கியமாக மார்க்க விஷயங்களில் கீழ்படியாமல் இருந்தால், மனைவியை அடிக்கவும் ஒரு முஸ்லிக்கு உரிமை உண்டு, யோபு தன் மனைவியை இத்தனை அடி அடிப்பேன் என்று அல்லாஹ்விடம் சத்தியம் செய்தது போல.

பாஸ்டர்: ஒரு நிமிஷம் நில்லுங்க. யோபு தன் மனைவியை அடிப்பேன் என்று சத்தியம் செய்தாரா? அப்படி ஒன்றும் நான் பைபிளில் படிக்கவில்லையே!

உமர்: பாஸ்டர், இவர் இஸ்லாமிய யோபு, பைபிளின் யோபு அல்ல. இஸ்லாமிய யோபுக்கு எல்லாம் சாத்தியம். குர்-ஆன்  38:44 வசனம் இப்படி சொல்கிறது:

 "ஒரு பிடி புல் (கற்றையை) உம்கையில் எடுத்து, அதைக் கொண்டு (உம் மனைவியை) அடிப்பீராக; நீர் (உம்) சத்தியத்தை முறிக்கவும் வேண்டாம்" (என்று கூறினோம்). நிச்சயமாக நாம் அவரைப் பொறுமையுடையவராகக் கண்டோம்; அவர் சிறந்த நல்லடியார் - நிச்சயமாக அவர் (எதிலும் நம்மை) நோக்கியவராகவே இருந்தார். (குர்-ஆன் 38:44 - முஹம்மது ஜான் டிரஸ்ட்)

"ஒரு பிடி (புல்) கத்தையை எடுத்து, அதனைக் கொண்டு (உங்களது மனைவியை) அடியுங்கள். நீங்கள் உங்களுடைய சத்தியத்தை முறிக்க வேண்டியதில்லை" என்று கூறினோம். நிச்சயமாக நாம், அவரை மிக்க பொறுமை உடையவராகவே கண்டோம். அவர் மிக்க நல்லடியார். நிச்சயமாக அவர் (ஒவ்வொரு விஷயத்திலும் நம்மை) நோக்கினவராகவே இருந்தார். (குர்-ஆன்  38:44 - அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்)

பாஸ்டர்: இது வேடிக்கையாக இருக்கிறதே! புல் எடுத்து அடிக்கவேண்டுமா? ஏன்?

உமர்: இதைப் பற்றி நாம் இன்னொறு முறை தியானிப்போம். அங்கு அல்லாஹ் சொன்னது புல்லா அல்லது தடியா? அடிக்கவேண்டியதை யாரை? தன்னைத்தானே அடித்துக்கொள்ளவேண்டுமா (பீஜே அவர்களின் விளக்கம்)? தன் மனைவியை  அடிக்கவேண்டுமா (இதர இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கம்)? மேலும் இதைப் பற்றி இஸ்லாமிய விரிவுரையாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பிறகு பார்ப்போம்.

 பாஸ்டரின் மகள்: ஓ... எனக்கு தலை சுத்துது.

உமர்: ஆம், இஸ்லாமில் பெண்கள் படும் பாடுகள் இருக்கிறதே! அதை விவரிக்க முடியாது. தனக்கே தெரியாமல், தன்னை விவாகரத்து செய்த நிகழ்ச்சிகள் எல்லாம் உண்டு (India: Divorce by text messaging and e-mail on the riseamong Muslim men).

முஹம்மதுவின் மனைவிகளை பார்த்து, "உங்களுக்கு உலக பொருட்கள் வேண்டுமானால், அவைகளை அழகான முறையில் அதிகமாக கொடுத்து உங்களை அனுப்பிவிடுகிறேன் (உங்களை முஹம்மது விவாகரத்து செய்யச் சொல்லிவிடுகிறேன்), அதன் பிறகு உங்களை விட நல்லபெண்களை அவருக்கு நான் மனைவிகளாக தருவேன்" என்று அல்லாஹ்வே கூறுகிறார். அதாவது முஹம்மது தன் மனைவிகளை விவாகரத்து செய்துவிடுவார் என்று பயப்பட வைக்கிறது குர்-ஆன்.

பாஸ்டரின் மகள்: ஓ… மிகவும் பரிதாபம் தான். ஆனால், தனக்கு தன் கணவர் வாக்கு கொடுத்தார், ஆனால் இப்போது அதை மறுக்கிறார் என்று இஸ்லாமிய அறிஞர்களிடமே அந்த கிறிஸ்தவ மனைவி நியாயம் கேட்டால்?

உமர்: இஸ்லாமில் ஒரு ஆணுக்கு எதிராக பெண்கள் எடுக்கும் முடிவுகள், வழக்குகள் பெரும்பான்மையாக இஸ்லாமிய அறிஞர்களிடம் செல்லுபடியாகாது. ஒரு முஸ்லிம் அறியாமையின் காலத்தில் செய்த சத்தியத்தை, முறித்துக் கொள்ளலாம், முக்கியமாக இஸ்லாமுக்கு பங்கம் விளைவிக்கும் எந்த காரியத்திலும், நாம் வெற்றி பெற முடியாது.

பாஸ்டரின் மகள்: இது இஸ்லாமுக்கு எங்கே பங்கம் விளைவிக்கிறது? கணவன் முஸ்லிமாக இருக்கட்டும், மனைவி கிறிஸ்தவளாக இருக்கட்டுமே? இதில் என்ன பிரச்சனை?

உமர்: இது தான் பிரச்சனை. இஸ்லாமிய குடும்பத்தில் கணவன் முஸ்லிமாக இருந்து மனைவி இதர மார்க்கத்தை பின்பற்றினால், இஸ்லாம் இதனை அவமானம் என கருதுகிறது. ஒன்று அந்த பெண்ணை  முஸ்லிமாக மாற்று அல்லது அவளை விவாகரத்து செய்துவிடு. இதில் ஏதாவது ஒன்றை தெரிந்தெடுக்கவேண்டும். நீதி நியாயம், சமத்துவம், பெண்களின் உரிமை இவைகள் எல்லாம் இங்கு வேலை செய்யாது. முதலாவது இஸ்லாம், அதன் பிறகு மற்றவையெல்லாம்.

பாஸ்டரின் மகள்: இதற்கு மேல் தாங்கும் சக்தி இப்போது எனக்கு இல்லை. போதும்.. போதும். அடுத்தமுறை தேவைப்பட்டால் பேசலாம். என் தொழியிடம் முதலாவது இந்த விவரங்களை நான் தெரிவிக்கவேண்டும்.

உமர்: ஆமாம், முதலாவது உன் தோழியிடம் விவரங்களை கூறிவிடு. மேலும் அதிகமாக விவரங்கள் தேவையென்றால், பாஸ்டரின் மூலமாக என்னை தொடர்பு கொள் என்றுச் சொல். முக்கியமாக, உண்மையாக உன்  தோழி ஒரு முஸ்லிமை நேசிப்பதினால் தான் இந்த கேள்வியை உன்னிடம் கேட்டால் என்று உனக்கு தெரிந்தால், முதலாவது அவளின் பெற்றோர்களிடம் இந்த விஷயத்தை சொல்லவேண்டியது உன் முதலாவது கடமையாகும். தேவைப்பட்டால், உன் தோழியோடும், அவளின் பெற்றோர்களோடும் நாம் பேசினால் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நல்லது, நாம் பேசிக்கொண்டே சாப்பிட்டும் விட்டோம். கிளம்புவோமா?

பாஸ்டரம்மா: சரி, நானும் இவளும் காரியில் உங்களுக்காக வெயிட்பண்றோம், நீங்க பில் கட்டிட்டு வாங்க.

[பாஸ்டரம்மாவும், அவரது மகளும் கிளம்பிவிட்டார்கள், பில்லுக்காக மற்றவர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள், அப்போது பாஸ்டரின் இளைய மகன் ஒரு கேள்வியை கேட்டான்]

பாஸ்டரின் இளைய மகன்: உமரண்ணா எனக்கு ஒரு கேள்வி உண்டு, கேட்கலாமா?

உமர்: உன் கேள்வி என்ன?

பாஸ்டரின் இளைய மகன்: இதுவரை ஒரு பக்கமாகவே நாம் பேசிக்கொண்டு இருந்தோம், அதாவது ஒரு கிறிஸ்த பெண் ஒரு முஸ்லிம் ஆணை திருமணம் செய்வது பற்றி பேசினோம். என் கேள்வி என்னவென்றால், ஒரு கிறிஸ்தவ ஆண், ஒரு இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்ய முதலாவது என்ன செய்யவேண்டும்?

உமர்: முதலாவது, கத்னா செய்யவேண்டும்?

பாஸ்டரின் இளைய மகன்: கத்னா என்றால் என்ன?

உமர்: கத்னா என்றால் ஒன்றுமில்லை, ஒரு சின்ன 5 நிமிஷ ஆபரேஷன், நாலு தையல் சில வாரங்கள் வரை அருமையான ஓய்வு, அவ்வளவு தான். அதன் பிறகு தான் திருமணம்? எப்படி வசதி? 

பாஸ்டரின் இளைய மகன்: எனக்கு ஒன்னுமே புரியலையே!

உமர்: எல்லா விஷயங்கள் பற்றி பிறகு நாம் பேசலாம். இப்போதைக்கு கத்னா என்றால் என்ன அர்த்தம் என்பதை மட்டும் புரிந்துக்கொள், கத்னா என்றால்  விருத்தசேதனம் என்று அர்த்தம்.

பாஸ்டர்: என்னடா இளையவனே! கத்னா செய்துக் கொள்கிறாயா?

பாஸ்டரின் இளைய மகன்: ஆள விடுங்க சாமி, உடம்புலே ஒரு சின்ன காயம் ஏற்பட்டாலே நான் துடிதுடித்து போய்விடுவேன், அப்படிப்பட்ட என்னிடம் வந்து கத்னா கித்னா என்று கேட்டுக்கிட்டு. நான் பழைய ஏற்பாட்டில் விருத்தசேதனம் பற்றி படிக்கும் போது, ஒரு மாதிரியாக இருக்கும். எப்படி தான் இவர்கள் செய்துக் கொண்டார்கள் என்று ஆச்சரியப்படுவேன், அதுவும் சின்ன வயசுலே இல்லாமே பெரிய ஆம்பளையா ஆகிவிட்ட பிறகும் விருத்தசெதனம் செய்துக்கிட்டாங்க என்று நினைத்தால், எனக்கு ஒரு வகையான பயமா இருக்கும்.

நான் எதோ இஸ்லாம் பற்றி கொஞ்சம் கத்துகலாம் என்று நினைச்சு கேட்டால், என்னை பிரயோஜனமில்லாதவனாக ஆக்கிவிடுவீங்க போல் இருக்கே!

பாஸ்டர்: நீ தானே கேட்டாய், ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்ய முதலாவது என்ன செய்யவேண்டுமென்று! இப்போ வேண்டாம் என்று சொல்லுகிறாய்!

உமர்: கத்னா செய்தால் பிரயோஜமில்லாதவனாக மாறுவாய் என்று உனக்கு யார் சொன்னார்கள்? இது தவறான விஷயம். கத்னாவினால் நன்மைகள் உண்டு. நானும் விருத்தசேதனம் செய்துக்கொண்டவன் தான். நீயும் செய்துக்கொண்டால் ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணத்துக்கு தேடலாம் அல்லவா?

பாஸ்டரின் இளைய மகன்: அய்யய்யோ.. என்னை விட்டுங்கப்பா!...தெரியாம கேட்டுட்டேன். நீங்களும், அப்பாவும் சேர்ந்து இந்த ஹோட்டலிலேயே எனக்கு கத்னா செய்துவிடுங்க போல இருக்கே! என்ன மன்னிச்சுடுங்க…. தெரியாம கேட்டுட்டேன்… நான் ஓடரேன், நான் கார்லே வெயிட்பண்றேன், நீங்க அப்பறம் வாங்க…

[காரை நோக்கி ஓடுகிறான் பாஸ்டரின் இளைய மகன், எல்லாரும் சிரிக்கிறார்கள்]

பாஸ்டர்: இந்த உரையாடல் எனக்கு ரொம்பவும் பிரயோஜனமாக இருக்கிறது. என் பையன் கேட்ட கேள்வி கூட யோசிக்கவேண்டிய விஷயம் தான் பிறகு ஒரு நாள் நாம் இதைப் பற்றி  பேசுவோம்.

உமர்: ஆமாம், நம்முடைய சபையில் உள்ள வாலிபர்களுக்கு நாம் இதைப் பற்றி சொல்லவேண்டும்.

பாஸ்டர்: நிச்சயமாக, சொல்லவேண்டும். மேலும் சகோதரிகள் கூட்டத்திலும் என் மகள் கேட்ட கேள்வி பற்றி, பாஸ்டரம்மா ஒரு சின்ன குறிப்பு சொல்லச் சொல்கிறேன்.

உமர்: நல்லது, அப்படியே செய்யுங்கள்.

என்ன ஜான்சன், ஒன்னுமே பேசாம இருக்கீங்களே!

ஜான்சன்: செவிக்கு உணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார். ஆனால், இங்கே செவிக்கும், வயிற்றும் அருமையான உணவு பரிமாறப்பட்டு இருந்தது. எனவே, இரண்டையும் என்ஜாய் செய்துக்கிட்டு இருந்தேன்.

உமர்: ஓ.. அப்படியா! 

[பில் கட்டிவிட்டு, எல்லாரும் ஹோட்டலிலிருந்து செல்கிறார்கள். அடுத்த பாகத்தில் ஒரு கிறிஸ்தவ ஆண், வேறு மார்க்க பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளலாமா? முக்கியமாக இஸ்லாமிய பெண்ணை திருமணம்/காதல் திருமணம் செய்துக்கொள்ளலாமா? இல்லையா? என்பவற்றைப் பற்றி உரையாடுவோம்]

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.