ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

புதன், 26 பிப்ரவரி, 2014

TNTJ (கோவை யூசுப்) விற்கு பதில் 1 - ”முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி” என்று கிறிஸ்தவர்கள் கருதலாம் என்று அனுமதி அளித்த TNTJ

TNTJ (கோவை யூசுப்) விற்கு பதில் 1


"முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி" என்று கிறிஸ்தவர்கள் கருதலாம் என்று அனுமதி அளித்த TNTJ


முன்னுரை: நான்  "101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?" என்ற பெயரில் ஒரு கட்டுரையை (10 பாகங்களாக) பதித்து இருந்தேன்.  இந்த கட்டுரையைப் படித்த TNTJ  இஸ்லாமிய அமைப்பு, நான் முன்வைத்த  101 காரணங்களுக்கு பதில் சொல்லாமல்,  தங்களுடைய பாணியில் ஒரு கேள்வியை என்னிடம் கேட்டு ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள்.  இப்போது அவர்கள் வெளியிட்ட வீடியோ பற்றியும், அவர்கள் கேட்ட கேள்விக்கான பதிலையும் காண்போம்:


முஹம்மதுவை கள்ளத்தீர்க்கதரிசியாக கருத கிறிஸ்தவர்களுக்கு அனுமதி அளித்த கோவை யூசுஃப் அவர்கள்

1)   கோவை யூசுஃப் அவர்களின் வீடியோ விமர்சனம்

என் கட்டுரையை படித்த "தமிழ் நாடு தௌஹித் ஜமாத்" என்ற இஸ்லாமிய அமைப்பு ஒரு வீடியோவை வெளியிட்டது. அதில் கோவை யூசுஃப் என்ற இஸ்லாமிய சகோதரர் பேசியிருந்தார்.  நான் முன் வைத்த 101 காரணங்களுக்கு அவர் பதில் அளித்து இருப்பார் என்று எதிர்ப்பார்த்து ஆவலாக அந்த வீடியோவை பார்த்தேன். ஆனால்,  நான் முன்வைத்த 101 காரணங்களில் ஒரு காரணத்திற்கும் அவர் பதில் அளிக்கவில்லை. இதற்கு பதிலாக, என்னிடம் ஒரு கேள்வியை கேட்டு இருந்தார். இதே கட்டுரையின் பிற்பகுதில்  அவர் கேட்ட கேள்விக்கு நான் பதிலை கொடுத்துள்ளேன்.  இப்போது இந்த வீடியோவில் அவர் பேசிய சில விவரங்கள் பற்றி சுருக்கமாக காண்போம்.


அ) TNTJயின் கப்பல் நடுக்கடலில் மூழ்கிவிட்டதா?


கோவை யூசுஃப் அவர்கள் பேசிய இந்த வீடியோவை வாசகர்கள் பார்க்கவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் : https://www.facebook.com/photo.php?v=600861996670708&set=vb.100002407408653&type=2&theater


இந்த வீடியோவின் ஆரம்பமுதலே, யூசுஃப்பின் முகத்தில் ஒரு சோக ரேகை படர்ந்து இருந்ததை நாம் காணமுடியும்.  பொதுவாக இஸ்லாமியர்கள் "இஸ்லாம் அபார வளர்ச்சி அடைந்துள்ளது, இதை நாம் கண்கூடாக காண்கிறோம்" என்று இஸ்லாமை பலவாறு புகழ்ந்து பேசுவார்கள், அப்படி பேசும் போது, அவர்களின் முகத்தில் ஒரு மகிழ்ச்சியை காணமுடியும். ஆனால், இந்த வீடியோவில் பேசிய யூசுஃப் அவர்களின் முகத்தில் ஒரு துக்கம் காணப்பட்டது, தாங்க முடியாத ஏதோ ஒரு வேதனை உள்ளத்தின் ஆழத்தில் அமைதியாக அவரை வாட்டுவதை காணமுடிந்தது. தங்கள் முஹம்மதுவின் உண்மை நிலையை மக்களின் முன்பு தகுந்த ஆதாரங்களோடு இந்த கட்டுரை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டதே என்ற வேதனையாக அது இருக்குமோ!


ஆ) மிரட்டுவதை விட்டுவிட்டு, முஹம்மதுவை மீட்க வழியை தேடுங்கள் TNTJ அமைப்பினரே


நாம் இஸ்லாமிய அறிஞர்களின்  வீடியோக்களை பார்க்கும் போது, அவர்கள் நன்றாக நடிப்பதை பார்க்கமுடியும்.  முக்கியமாக இதர மார்க்க மக்கள் பார்க்கும் வீடியோக்களாக இருந்தால், அவைகளில் முஸ்லிம்கள் மென்மையானவர்களாக தங்களை காட்டிக்கொள்வார்கள், அன்பானவர்கள் போல காட்டிக்கொள்வார்கள்.  ஆனால் இந்த வீடியோவில் நாம் பார்க்கும் போது, "எவ்வளவு தான் அவர் நடித்தாலும்,  அவரின் உள்ளத்தின் ஆழத்தில் இருக்கும் அந்த மிரட்டும் தன்மை, அவரை அறியாமலேயே வெளிப்பட்டுவிட்டது". அவர் ஐந்தாவது நிமிடத்திற்கு பிறகு பேசியதை பார்த்தால், அவர் கீழ்கண்ட விதமாக மிரட்டுவதை காணமுடியும்:


"ஒன்னு இப்ப நான் சொன்ன இந்த வீடியோக்களுக்கு பதில் தரனும், அப்படியில்லே என்றுச் சொன்னா, ... நீங்க சொல்லியிருக்கீங்க இல்லே.. வேதாகமத்திற்கு முரண்படுபவர் எப்படி இறைத்தூதராக இருக்கமுடியும் என்ற இந்த பதிவை நீக்கனும்.  நீக்கவில்லை என்றுச் சொன்னா, இன்னும் வந்து பயங்கரமா அடிவாங்கி.. இருக்கக்கூடிய கொஞ்ச நஞ்ச கிறிஸ்தவர்கள் கூட என்னடா இப்படி இருக்கு என்றுச் சொல்லி,  இஸ்லாமிய மார்க்கத்தை தழுவக்கூடிய ஒரு நிலமை ஏற்படும்"

 

மேற்கண்ட வார்த்தைகளைச் சொல்லி அவர் கிறிஸ்தவர்களை மிரட்டியுள்ளார். இவர்களின் இந்த மிரட்டும் குணம் என்பது இவர்கள் முஹம்மதுவிடமிருந்து கற்றுக்கொண்டது. முஹம்மதுவும் அப்படித்தான், இதர அரசர்களுக்கு மிரட்டல் கடிதங்கள் எழுதுவார் (பார்க்க:  ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (تسلم أسلم))


அருமையான TNTJ பெருமக்களே, மற்றவர்களை மிரட்டுவதை கைவிட்டுவிட்டு, முஹம்மதுவை எப்படி மீட்பது என்பது பற்றி சிந்தியுங்கள்.  முஹம்மதுப் பற்றி குர்-ஆன் மற்றும் ஹதீஸ்களின் ஆதாரங்களின் படி, அனேக குற்றச்சாட்டுக்கள் கிறிஸ்தவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளதே! இதற்கு பதில் எப்படிச் சொல்லலாம், முஹம்மதுவை எப்படி காப்பாற்றலாம் என்று சிந்தியுங்கள். இதர மார்க்கத்தாரை மிரட்டுவது உங்களுக்கு பயனளிக்காது.

 

எங்கள் உயிரினும் மேலான இயேசுவை நீங்கள் விமர்சிக்கிறீர்கள், பைபிள் வசனங்களுக்கு  உங்கள் சொந்த விளக்கங்களை கொடுக்கிறீர்கள்.  உடனே உங்கள் பதிவுகளை நீக்குங்கள் என்று நாங்கள் மிரட்டுகின்றோமா? உங்களை மிரட்டுவதினால் என்ன பயன் சொல்லுங்கள்! எனவே, உங்கள் கேள்விகளுக்கு நாங்கள் பதில்களைச் சொல்கிறோம். உங்கள் விளக்கத்தையும் எங்கள் விளக்கத்தையும் படிக்கும் வாசகர்களுக்கு உண்மை விளங்கும் போது, அது நல்ல பயனைத் தரும். எனவே, பதிவுகளை நீக்குங்கள் என்று  உங்களைப்போல் நாங்கள் மிரட்டுவதில்லை. ஆனால், இஸ்லாம் பற்றி தவறான விளக்கங்களைக் கொடுத்து இன்னும் இஸ்லாமுக்கு தலைவலியாக மாறாதீர்கள் என்று உங்களை எச்சரிக்கிறோம்.

 

இந்த வீடியோவில்  அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார், வீடியோவின் கடைசியில் இன்னொரு முறை தோன்றி கீழ்கண்டவாறு கூறுகிறார்:


 "அதாவது வேதாகமத்திற்கு, நாங்கள் வந்து அதை இறைவேதம் என்று எடுத்துகுல, முஸ்லிம்களை பொருத்தவரைக்கும் யாரும் எடுத்துக்குல.  அதற்கு முரண்பட்டார் என்றுச் சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளலே என்று கூட நீங்க சொல்லலாம். … இந்த வேதாகமத்திற்கு நம்பாத நாங்க முரண்படுவதில் பெரிய விஷயம் கிடையாது."

என்றுச் சொல்கிறார்.

 

TNTJ யின் இந்த வீடியோவின் படி, கிறிஸ்தவர்களின் வேதத்தை முஸ்லிம்கள் நம்புவதில்லையாம், எனவே அந்த வேதத்திற்கு முஹம்மது முரண்படுவதில் ஆச்சரியமில்லை   என்றுச் சொல்கிறார்கள். அதாவது, நான் எழுதிய அந்த கட்டுரையில் "பைபிளுக்கு எதிராக முஹம்மது நடந்துக்கொண்டார் என்று எழுதியது சரியானது தான்" என்று அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளார்கள். இதைத் தான் அந்த கட்டுரையின் ஒரு பகுதி சொல்கிறது (சில காரணங்கள் சொல்கிறது). ஆனால் அதே கட்டுரையில் இன்னும் அனேக காரணங்களையும் முன்வைத்துள்ளோம். அவைகள் பற்றியும் TNTJ தங்கள் கருத்தை கிறிஸ்தவர்களுக்கு சாதகமாக சொல்வார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம்.

 

இ) முஹம்மதுவின் பெருமைக்கு பெருமை சேர்க்க உங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது


கிறிஸ்தவர்களை விமர்சித்து, அவர்களை மிரட்டி, உங்கள் பதிவுகளை நீக்குங்கள் என்றுச் சொல்வதை விட்டுவிட்டு, நாங்கள் முன்வைத்த 101 காரணங்களுக்கு தகுந்த விளக்கத்தைக் கொடுத்து, முஹம்மதுவின் பெருமைக்கு இன்னும் பெருமையை  சேர்க்க முயற்சி எடுங்கள்.


உங்களுக்கு நாங்கள் ஒரு அருமையான வாய்ப்பை கொடுத்து இருக்கிறோம். கோர்வையாக 101 காரணங்களை கொடுத்துள்ளோம், பட்டியலிட்டு இருக்கிறோம். இவைகளுக்கு ஆதாரமாக குர்-ஆன் வசனங்கள், ஹதீஸ்கள்,  முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திர ஆதாரங்கள், பைபிள் வசனங்கள் என்று அனேக ஆதாரங்களை கொடுத்துள்ளோம். எனவே, இவைகளை அடிப்படையாகக் கொண்டு, நீங்கள், ஒவ்வொரு காரணத்திற்கும் உங்கள் பதிலை கொடுத்து, எதிர் வரும்  ஆபத்திலிருந்து முஹம்மதுவை காத்துக்கொள்ளுங்கள். வேறு வகையில் சொல்லவேண்டுமென்றால், ஏற்கனவே புகழப்பட்டவராக இருக்கும் உங்கள் இறைத்துதருக்கு மேன்மேலும் பெருமையை சேர்க்கும் வேலையைச் செய்யுங்கள்.

எங்கள் கட்டுரையையும், உங்கள் பதில்களையும் படிக்கும் கிறிஸ்தவர்கள் சிந்திப்பார்கள். மேலும், உங்கள் பதிலுக்கு மேலதிக பதில்களாக நாங்கள் தரும் விவரங்களையும் மக்கள் சரிப்பார்த்து, ஒரு நல்ல முடிவிற்கு வருவார்கள்.  ஆக, உங்கள் கைகளில் கொடுக்கப்பட்ட அருமையான இந்த வாய்ப்பை நழுவவிடாதீர்கள். இஸ்லாமுக்கு உபயோகமானதைச் செய்யாமல், கிறிஸ்தவர்களை இப்படி மிரட்டிக்கொண்டு இருந்தால் உங்களுக்கு எந்த பயனுமில்லை என்பதை மிகவும் தாழ்மையோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

 

ஈ) மக்களை திசைத் திருப்பும் TNTJ


இந்த வீடியோவை கவனமாக பார்த்தால்,  "முஹம்மது பைபிளுக்கு எதிராக நடந்துக்கொண்டார், ஆகையால் அவர் இறைத்தூதர் இல்லை" என்று மட்டும் நான் சொன்னதாக அவர் கூறுகிறார்.  இது தவறு, முஹம்மதுவை கிறிஸ்தவர்கள் ஒரு கள்ள நபி என்று கருதுவதற்கு 101 காரணங்களை ஆரம்ப பதிவாக முன்வைத்துள்ளேன். அவைகளில் அனேக பிரிவுகள் உள்ளன, உதாரணத்திற்கு கீழ்கண்ட பிரிவுகளைச் சொல்லலாம்:

  •  முஹம்மது பைபிளுக்கு முரண்படுபவர்
  • முஹம்மது மோசேயின் 10 கட்டளைகளை மீறி நடந்தவர் (காரணங்கள் 59 லிருந்து 68 வரை)
  •  பைபிளின் ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரையுள்ள அனைத்து புத்தகங்களின்படியும் முஹம்மது கள்ள நபியாவார் (காரணங்கள் 91 லிருந்து 101 வரை)
  • இது மட்டுமல்லாமல், முஹம்மதுவின் தனிப்பட்ட வாழ்க்கை, அவரின் போதனைகள், குர்-ஆன் வசனங்கள், அவரின் போதனைகளில் உள்ள விஞ்ஞான பிழைகள், அடிப்படையற்ற கட்டுக்கதைகள், உளரல்கள் என்று அனேக தலைப்புகளில் அனேக காரணங்களை கொடுத்து இருக்கிறோம்.

ஆக, கோவை யூசுஃப் அவர்கள் வெறும் முதல் காரணத்தை எடுத்துக்கொண்டு பேசியிருக்கிறார். குறைந்தபட்சம் அவர் சொல்லிய அந்த முதலாவது காரணத்திற்காவது பதிலைக் கொடுத்தாரா என்று பார்த்தால் அதுவும் இல்லை.

 

101 கேள்விகளை அவருக்கு முன்பாக கிறிஸ்தவர்கள் வைத்தால், அதற்கு பதில் சொல்வதை விட்டுவிட்டு, நம்மிடம் ஒரு கேள்வியைக் கேட்டு, "இந்த ஒரு கேள்விக்கு  பதில் சொல்லவில்லையானால்,  உங்கள் கட்டுரையை நீங்குங்கள்" என்று எங்களை மிரட்டுவது அறிவுடமையாக உள்ளதா? நம்முடைய கட்டுரையும், இவரது வீடியோவையும் பார்க்கும் வாசகர்கள் "என்ன இவர் மடத்தனமாக பேசுகிறார்? கிறிஸ்தவர்கள்  101 கேள்வியைக் கேட்டால், இவர் அவைகளுக்கு பதில் சொல்லாமல், ஒரே ஒரு கேள்வியை கேட்டுவிட்டு, உடனே அவர்களை மிரட்டுகிறாரே" என்று நினைக்கமாட்டார்களா?  

 

எனவே, TNTJ குழுவே, உங்களுக்கு அறிவித்துக்கொள்வது என்னவென்றால் "எங்கள் கட்டுரையை நாங்கள் நீக்கமுடியாது", உங்கள் கைகளில் கொடுத்துள்ள அருமையான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  உங்கள் பிரதிநிதி கோவை யூசுஃப் அவர்கள் சொல்லியது போல,  "இருக்கும் கொஞ்ச நஞ்ச கிறிஸ்தவர்கள் கூட, உங்கள் இந்த ஒரு வீடியோவை பார்த்து  இஸ்லாமை தழுவினால் அது உங்களுக்கு நல்லது தானே!". எனவே, உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்.  


(ஆனால் உண்மையில் விஷயம் வேறு மாதிரியாக உள்ளது, நாங்கள் முன்வைத்த 101 காரணங்களை முஸ்லிம்கள் படித்து, முஹம்மதுவின் நபித்துவத்தின் மீது சந்தேகம் கொண்டு, இஸ்லாமை புறக்கணித்துவிடுவார்களோ   என்ற பயத்தினால், அவர் விஷயத்தை அப்படியே திருப்பிச் சொல்கிறார். இந்த வீடியோவை கூர்ந்து பார்ப்பவர்கள் இதனை அறிந்துக்கொள்ளலாம்).

 

உ) எங்கள் கட்டுரையின் பெயரையும், தளத்தையும் உச்சரிக்க பயப்படும் TNTJ


TNTJயின் பிரதி நிதி கோவை யூசுஃப் அவர்களின் முழு வீடியோவை பார்த்தால்,  அவர் மொட்டையாக பேசுவதை காணமுடியும். அதாவது

  •     அவர் குறிப்பிடும் கட்டுரையின் பெயர் என்ன? அவர் முழு பெயரைச் சொல்லவில்லை.
  •      அவர் எங்கள் கட்டுரையை எந்த தளத்தில் படித்தார்?
  •     பேஸ்புக்கில் படித்தாரா? அப்படியானால் அவர் படித்த அந்த பக்கம் எது?
  •    அல்லது ஈஸா குர்-ஆன் தளத்தில் படித்தாரா?
  •    ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் படித்தாரா?

போன்ற விவரங்களை அவர் குறிப்பிட பயப்படுகிறார். ஏன் இந்த பயம்? விலாசம் இல்லாமல் எழுதுகிறார்கள் என்றுச் சொல்லும் இவர்கள், குறைந்தபட்சம் கட்டுரையைப் படித்த விலாசத்தையும் தெளிவாக குறிப்பிடப் பயப்படுவது ஏன்?


ஒருவேளை, இந்த கட்டுரையைப் படித்து முஸ்லிம்கள் இஸ்லாமை விட்டுவெளியேறிவிடுவார்கள் என்ற பயம் TNTJவிற்கு வந்துவிட்டதோ! காரணம் எதுவாக இருந்தாலும், இஸ்லாமின் அஸ்திபாரம் அசைக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது என்பது தெளிவாக புரிகின்றது.


இதுவரை ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் சில ஆயிரத்திற்கும் மேலான கட்டுரைகள், விவாதங்கள், மறுப்புக்கள், இஸ்லாம் சம்மந்தப்பட்ட புத்தகங்கள் ஆங்கிலத்திலும், இதர மொழிகளிலும் பதியப்பட்டுள்ளது. TNTJகுழுவில் ஆங்கிலம் தெரிந்தவர்கள் இருந்தால், அவைகளுக்கு பதிலைத் தரலாம். அப்படி அவர்களால் பதில் தரமுடியவில்லையென்றால், TNTJவின் தள கட்டுரைகளை நீக்குங்கள் என்று நாங்கள் மிரட்டுவதில்லை.  அவர்களின் கட்டுரைகளையும், எங்களின் கட்டுரைகளையும்  படிப்பவர்கள் உண்மையை தானாகவே அறிந்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. ஆனால், இதே நம்பிக்கை அவர்களுக்கு இல்லை, ஆகையால் தான் கட்டுரையை நீக்குங்கள் என்று மிரட்டுகிறார்கள், அந்தோ பரிதாபம்.

 

குறைந்தபட்சம், என்னுடைய தமிழ் தளத்தில், 400க்கும் அதிகமாக தமிழ் கட்டுரைகள் பதியப்பட்டு இருக்கின்றன.  அவைகளை ஒவ்வொன்றாக படித்து இவர்கள் மறுப்பு எழுதலாம். இதையாவது இவர்கள் செய்வார்களா?

 

ஆக, இதுவரை, தமிழ் நாடு தௌஹித் ஜமாத்தின் பிரதிநிதி திரு கோவை யூசுஃப் அவர்கள் பேசிய வீடியோவின் உண்மை முகத்தைக் கண்டோம்.  அடுத்தபடியாக, அவர்கள் எங்களுக்கு முன்பாக வைத்த "கேள்விக்கு பதிலைக் காண்போம்.


(கட்டுரை மிகவும் நீண்டுவிடுகின்றது என்பதற்காக, இந்த கேள்விக்கான பதிலை தனிக்கட்டுரையாக  இரண்டாம் பாகமாக வெளியிடலாம் என்று நினைத்தேன். ஆனால், இதன் முதல் பாகத்தைக் கண்டுவிட்டு, மறுபடியும் தேவையில்லாமல், இன்னொரு வீடியோவை இவர்கள் வெளியிடுவார்கள். அவர்களின் பொன்னான நேரத்தை ஏன் வீணடிக்கவேண்டும் என்ற எண்ணத்தில், கட்டுரை நீண்டதாக இருந்தாலும் சரி, இதே கட்டுரையில் பதிவது என்று முடிவுசெய்து பதிக்கிறேன், பொறுமையோடு படியுங்கள். பொறுமையுள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் இஸ்லாமின் உண்மை முகத்தைக் காண்பார்கள்.)


2) ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தைக் காட்டச் சொன்ன இயேசு ஏன் தன் மறு கன்னத்தைக் காட்டவில்லை?


இப்போது இயேசுப் பற்றி கோவை யூசுஃப் அவர்கள்  கேட்ட கேள்விக்கு பதிலைக் காண்போம்.  அவர் கேட்ட கேள்வி இது தான்: ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தைக் காட்டச் சொல்லி இயேசு போதித்தார். ஆனால், அதனை அவரே பின்பற்றவில்லை ஏன்? தன் போதனையை தானே பின்பற்றாதபடியினால் அவரை தேவக்குமாரன் என்று எப்படி கிறிஸ்தவர்கள் ஏற்கிறீர்கள்?


நம்முடைய பதில்: கோவை யூசுஃப் அவர்கள் கீழ்கண்ட வசனங்களை மேற்கோள் காட்டி கேள்வி எழுப்பினார்:

லூக்கா 6:29 

உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் கொடு; உன் அங்கியை எடுத்துக்கொள்ளுகிறவனுக்கு உன் வஸ்திரத்தையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே.

யோவான் 18:22, 23

இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான். இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.

இயேசு தன்னுடைய மலைப்பிரசங்கத்திலும் இதே விஷயத்தை போதித்துள்ளார். அதனை நாம் மத்தேயு 5ம் அத்தியாயத்தில் காணலாம்.

மத்தேயு 5:39

நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.

இப்போது நாம் இதற்கான பதிலை கீழ்கண்ட தலைப்புகளில் காண்போம், அப்போது தான் இயேசு ஏன் கேள்வி கேட்டார் என்பது புரியும்:

1)   இயேசு போதித்த "மறு கன்னத்தைக் காட்டு" என்பதின் அர்த்தம் என்ன?

2)   ஒரு கிறிஸ்தவன் தன்னை தீமையிலிருந்து தற்காத்துக்கொள்ளாமல், தொடர்ந்து மற்றவர்களால் அடிவாங்கிக்கொண்டே இருக்கவேண்டுமா? இதையா இயேசு போதித்தார்?

இயேசு சொன்னவைகளின் உண்மையான அர்த்தத்தை அறியாததினால் தான் கோவை யூசுஃப் போன்ற இஸ்லாமியர்கள் தவறான விளக்கங்கள் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

1)   இயேசு போதித்த "மறு கன்னத்தைக் காட்டு" என்பதின் அர்த்தம் என்ன?

இயேசு சொன்ன வசனங்களில் ஒரு வசனத்தை மட்டும் தனியாக எடுத்து விளக்கம் தரக்கூடாது. அதைச் சுற்றியுள்ள இதர வசனங்களையும் நாம் பார்க்கவேண்டும். முக்கியமாக இயேசு மலைப்பிரசங்கத்தில் எப்படி இந்த வசனங்களை ஆரம்பிக்கிறார் என்பதை படிப்போம்:

மத்தேயு 5:38 லிருந்து 42ம் வசனங்கள் வரைக்கும்:

38 கண்ணுக்குக் கண், பல்லுக்கு பல் என்று உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

39 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.

40 உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக் கொள்ளவேண்டு மென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு.

41 ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.

42 உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.

இந்த மேற்கண்ட வசனங்களைத் தனிப்பிரிவாக பாவித்து இயேசு பேசுகின்றார். மத்தேயு 5:38ம் வசனத்தில் மோசேயின் மூலமாக கொடுக்கப்பட்ட அரசு சார்ந்த பழைய ஏற்பாட்டு சட்டத்தை இயேசு குறிப்பிட்டுவிட்டு, அதன் பிறகு 4 விஷயங்களை ஒவ்வொன்றாக கூறுகின்றார்.

·         ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டு

·         வழக்காடி வஸ்திரத்தை எடுத்துக்கொள்ள விரும்புவனுக்கு, உன் அங்கியையும் கொடுத்துவிடு

·         ஒரு மைல் தூரம் வர பலந்தம் செய்தால், இரண்டு மைல் தூரம் போ

·         கேட்கிறவனுக்கு கொடு, கடன் கேட்பவனுக்கு கொடுக்க தயங்காதே

"கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்" என்பது அரசாங்கத்திற்கு மோசே மூலமாக தரப்பட்ட சட்டம். ஆனால், மக்கள் இதனை துர்பிரயோகம் செய்து, தனிப்பட்ட முறையில் பழிக்கு பழி வாங்க  பயன்படுத்திக்கொள்கிறார்கள். எனவே இயேசு முதலாவது அதை குறிப்பிட்டுவிட்டு, மேற்கண்ட நான்கு விஷயங்களை போதிக்கிறார்.

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டு

உன்னை ஒருவன் ஒரு கன்னத்தில் அறைந்தால், உடனே திருப்பி அவனை அறைந்துவிடாதே, பழிக்கு பழி வாங்கிவிடாதே என்ற அர்த்தத்தில் தான் இயேசு இதனை போதித்தாரே தவிர, கிறிஸ்தவர்கள் எப்போதும் நீதிக்காக, நியாயத்திற்காக குரல் கொடுக்காமல், அடி வாங்கிக்கொண்டே இருக்கவேண்டும் என்பதற்கல்ல.

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்றுச் சொன்னால், நீ எப்போதும் உன்னை தாழ்வாக எண்ணிக்கொண்டு, உன்னை அடிப்பவனின் கையில் முழுவதுமாக ஒப்புக்கொடுத்துவிட்டு, அடிவாங்கிக்கொண்டு இரு என்று பொருள் அல்ல. தனிப்பட்ட விதத்தில் நீ பழிக்கு பழி வாங்கவேண்டாம் என்பது தான் அதன் பொருள்.

தீயவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கும் படி இயேசு வேறு ஒரு இடத்தில் கீழ்கண்டவிதமாக கூறுகிறார்:

மத்தேயு 10:16

16 ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களாயும் புறாக்களைப்போல கபடற்றவர்களுமாய் இருங்கள்.

மேற்கண்ட வசனத்தில் எப்படிப்பட்ட ஆபத்து நமக்கு உண்டு, மேலும் நாம் எப்படி இருக்கவேண்டும் என்று இயேசு எச்சரிக்கின்றார். மறுகன்னத்தைக் காட்டு என்ற கட்டளைக்கு முஸ்லிம்கள் கருதும் பொருள் இருக்குமானால், மேற்கண்ட வசனத்தை இயேசு  கீழ்கண்டவாறு சொல்லியிருப்பார்.

"ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல இதோ நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், நீங்கள் ஓநாய்களுக்கு பலியாகிவிடுங்கள்"

ஆனால், இயேசு எச்சரிக்கையாக இருக்கும்படியாகச் சொல்கிறார். அதே நேரத்தில் பழிக்கு பழி வாங்காமல் கபடமற்றவர்களாகவும் இருங்கள் என்கிறார்.

எனவே, தங்களை தற்காத்துக்கொள்வது கிறிஸ்தவர்களின் கடமையாகும். இதன்படி பார்த்தால் மறுகன்னத்தைக் காட்டச் சொன்ன வசனத்தின் பொருள் புரிய ஆரம்பிக்கும். மேலும், தன்னை அறைந்தவனிடம் நியாயத்தின்படி நடந்துக்கொள் என்று இயேசு சொன்னவைகளில் எந்த தவறும் இல்லை. இயேசு தனக்குத் தானே முரண்படவும் இல்லை என்பது தெளிவாகும்.

வழக்காடி வஸ்திரத்தை எடுத்துக்கொள்ள விரும்புவனுக்கு, உன் அங்கியையும் கொடுத்துவிடு

நீதிமன்றத்திற்கு வெளியே வழக்கை சரி செய்துக்கொள்ள கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை:

ஒரு கிறிஸ்தவன் இன்னொருவனுக்கு  எதிராக தவறு செய்யும் போது, நீதிமன்றத்திற்கு வெளியே அந்த மனிதனோடு சமாதானம் செய்துக்கொள்வது சிறந்தது என்று இயேசு கூறுகிறார். இதே மத்தேயு 5ம் அதிகாரத்தின் வசனங்கள் 25, 26ல் இயேசு இதனை கூறுகிறார்:

மத்தேயு 5:25, 26

25 எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடாமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடாமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து.

26 பொருந்தாவிட்டால், நீ ஒரு காசும் குறைவின்றிக் கொடுத்துத் தீர்க்குமட்டும் அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.

மேற்கண்ட வசனத்தில் தவறு செய்யும் கிறிஸ்தவன் எப்படி நீதிமன்றத்திற்கு செல்வதற்கு முன்பு தன் எதிராளியோடு சமாதானம் அடையவேண்டும் என்று இயேசு சொல்கிறார். இதே போல, ஒரு கிறிஸ்தவனுக்கு எதிராக ஒருவன் வழக்கு தொடர்ந்தால், அதுவும் ஒரு சிறிய விஷயத்திற்காக (வஸ்திரத்திற்காக) வழக்கு தொடரும் போது,  அது பொய்யான வழக்காக இருந்தாலும் சரி, நீதிமன்றத்திற்குச் செல்லாமல், தன் அங்கியையும் கொடுத்துவிடு என்று இயேசு கூறுகிறார் (மத்தேயு 5:40).  இந்த வசனத்தின் படி  கிறிஸ்தவனின் தவறு இல்லையானாலும், பழிக்கு பழி வாங்காமல், அங்கியையும் கொடுத்துவிடு என்று இயேசு கூறுகின்றார்.

அதாவது ஒரு கிறிஸ்தவன் பெரும்பான்மையான நீதிமன்ற வழக்கு பிரச்சனைகளை நீதிமன்றத்திற்கு வெளியேயே தீர்த்துக்கொள்வது நல்லது என்பதை இங்கு இயேசு குறிப்பிடுகிறார்.   கூடுமானவரை எல்லாரோடும் சமாதானமாக வாழ்வது எப்படி என்பதை தெரிவிக்கிறார். நீதிமன்றத்திற்குச் செல்வது தவறு இல்லை, ஆனால் சின்ன விஷயங்களுக்காக நீதிமன்றம் செல்வது சரியானது அல்ல என்பது தான் இங்கு கவனிக்கவேண்டியது. பொய்யாக தன் மீது வழக்கு தொடர்ந்த எதிரியை நண்பனாக்க முயற்சி செய்யவேண்டும், அதற்காக சிறிய நஷ்டத்தை நாம் (கிறிஸ்தவர்கள்) ஏற்கலாம் என்பது தான் இதன் அர்த்தம். எதிராளிக்கு எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு, நடுத்தெருவில் நிற்கவேண்டும் என்பது இதன் அர்த்தமல்ல. ஒரு கிறிஸ்தவன், இயேசுவின் போதனையின் படி, மற்றவர்களைக் காட்டிலும் நன்மைச் செய்வதில் ஒரு படி மேலேயே இருக்கவேண்டும் என்பதாகும்.

நாம் அநீதியாக நடத்தப்படும் போது போராடக்கூடாது என்று இதனை நாம் புரிந்துக்கொள்ளக்கூடாது, இதற்கு பதிலாக, நம்மை அநீதியாக நடத்துபவரோடு முதலாவது சமாதானம் அடைய முயற்சிக்கவேண்டும், முடியாவிட்டால் நீதி கேட்டு நீதிமன்றத்திற்குச் செல்லலாம்.

மனிதனின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்படியாகத் தான் இயேசு இந்த போதனைகளைச் செய்கிறார்.  

ஒரு மைல் தூரம் வர பலந்தம் செய்தால், இரண்டு மைல் தூரம் போ

ஒருவன் ஒரு மைல் தூரம் வர பலவந்தம் செய்தால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ என்று இயேசு சொன்னதின் அர்த்தமும் இது தான். ரோம இராணுவ வீரர்கள் யூதர்களை கட்டாயப்படுத்தி சுமை சுமந்துக்கொண்டு ஒரு மைல் தூரம் வரும்படி அழைப்பார்கள், அப்போது பற்களை கடித்துக்கொண்டு, வேண்டா வெறுப்போடும், கோபத்துடனும் மக்கள் அதனைச் செய்வார்கள். ஆனால், இயேசு இந்த இடத்தில், அவர்களுக்கு அறிவுரைக் கூறுகின்றார். அந்த இராணுவ வீரர்கள் உங்களின் நல்ல குணத்தைக் கண்டு வெட்கப்படும்படி, இரண்டு மைல் தூரம் செல்ல தயாராகிவிடுங்கள் என்றுச் சொல்கிறார். உண்மையாகவே, இந்த போதனையை மக்கள் கேட்டு, இரண்டு மைல்தூரம் செல்லாவிட்டாலும், மனதில் கோபம் கொள்ளாமல், அந்த ஒரு மைல் தூரம் முறுமுறுப்பில்லாமல் செல்வார்கள்.  எப்படிப் பார்த்தாலும், நம்மை துன்பப்படுத்துவர்களுக்கு எதிராக போரை தொடுக்காமல், பழிக்கு பழி வாங்காமல் நண்பர்களாக மாற்ற முயற்சிப்பது முதலாவது சிறந்த செயலாகும்.  சட்டத்தின் படி அவர்களை சந்திப்பது இரண்டாவது சிறந்த செயலாகும்.

கேட்கிறவனுக்கு கொடு, கடன் கேட்பவனுக்கு கொடுக்க தயங்காதே

கடைசியாக, தாழ்மை அடைந்து நம்மிடம் வந்து உதவி கேட்பவர்களுக்கு மறுக்காமல் கொடுங்கள் என்று இயேசு போதிக்கின்றார்.

ஆக, "மறு கன்னத்தைக் காட்டுங்கள்" என்ற போதனையானது, பழிக்கு பழி வாங்காதீர்கள் என்பதை சுட்டிக்காட்டுகின்றது. அதைத் தொடர்ந்து இதர நல்ல காரியங்களை இயேசு போதித்தார்.

கிறிஸ்தவன் தன்னை தற்காத்துக்கொள்வது சரியா?

ஒவ்வொரு கட்டளைக்கும் ஒரு எல்லையுண்டு. மேற்கண்ட விவரங்களை சரியான விதத்தில் பயன்படுத்த வேண்டும். மேற்கண்ட "மறு கன்னத்தைக் காட்டுங்கள்" என்ற கட்டளையை இயேசு ஒரு அரசாங்கத்திற்கு தரவில்லை. தனிப்பட்ட மனிதனுக்குக் கொடுத்தார், ஒரு புதிய வாழ்வை வாழும் படியாக, ஒரு மேன்மையான வாழ்க்கையை வாழும்படியாக  இயேசு கற்றுக் கொடுத்தார். மக்கள் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் பழிவாங்கிக்கொண்டு இருந்தால்,  அந்த சமுதாயத்தில் சட்டஒழுங்கு சீர்கெட்டுப்போகும்.  

விஷயம் இப்படி இருப்பதினால், கிறிஸ்தவர்கள் எப்போதும் விட்டுக்கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்றும் இயேசு சொல்லவில்லை. சட்டத்தின் உதவியோடு பிரச்சனைகளை சமாளிக்கவேண்டும். உதாரணத்திற்கு சொல்லவேண்டுமென்றால், நம் வீட்டை வேறு ஒருவன் வந்து தன்னுடையது என்றுச் சொல்லி சண்டையிட்டால், சட்டத்தின் உதவியோடு, நீதிமன்றத்தின் உதவியோடு பிரச்சனைக்கு முடிவை காணவேண்டும். இப்படி செய்வதை விட்டுவிட்டு, சொந்தமாக நான்கு ரௌடிகளை வேலைக்கு அமர்த்தி அவனை தாக்கக்கூடாது, வன்முறையில் இறங்கக்கூடாது. மேலும் நாம் அநியாயமாக மற்றவர்களால் தாக்கப்படும் போது, உயிருக்கு ஆபத்து வரும் என்று நாம் அறியும் போது, முதலாவது அந்த ஆபத்திலிருந்து தப்பிக்க முயற்சி எடுக்கவேண்டும், அதன் பிறகு நிச்சயமாக சட்டத்தை அணுகவேண்டும், நாமே பழிக்கு பழி வாங்கக்கூடாது. ஆபத்தான சமயத்தில் அந்த இடத்திலிருந்து தப்பிக்க வழி பார்க்கவேண்டும், நம் எதிராளியைத் தாக்கினால் தான் நாம் தப்பிக்கமுடியும் என்று நிலை இருந்தால், அவனை தாக்கத்தான் வேண்டும்.  நம் உயிரை எடுக்க எவனுக்கும் இடம் தரக்கூடாது, சரீர பிரகாரமாக தாக்கப்பட இடம் தரக்கூடாது, தற்காப்பிற்காக சண்டையிடுவதில் தவறில்லை.

உன் பட்டயத்தை அதன் உறையில் போடு

இயேசுவை பிடிக்க சேவகர்கள் வருகிறார்கள், உடனே தன்னிடமுள்ள பட்டயத்தை எடுத்து பேதுரு (இயேசுவின் சீடர்) ஒரு வேலைக்காரனின் காதை வெட்டி விடுகின்றார். உடனே இயேசு அவனை சுகப்படுத்தி பேதுருவிடம், கீழ்கண்டவாறு கூறுகின்றார்:

மத்தேயு 26: 51-53

51 அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கைநீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான்.

52 அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தை திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்.

53 நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா?

என்னை காக்கும்படி  நீங்கள் முயற்சி எடுக்கவேண்டாம், நான் வேண்டிக்கொண்டால், ஆயிரக்கணக்கான தேவதூதர்களை இறக்கி, இவர்களை அழிக்கமுடியும் என்று இயேசு சொல்கிறார். ஆனால், கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், அந்த கெத்சமனே தோட்டத்திற்கு வருவதற்கு முன்பு தான் இயேசு பட்டயம் இல்லாதவன் பட்டயத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறினார். அதாவது இனி நான் உங்களை விட்டு செல்லப்போகிறேன், எனவே, உங்களை தற்காத்துக்கொள்ள தேவையானவற்றை எடுத்துக்கொள்ளுங்கள் என்று இயேசு கூறுகின்றார். மேலும், அந்த காலகட்டத்தில் ஒரு தனி மனிதன் பிரயாணப்பட்டுச் செல்லும் போது, மிருகங்களினால் ஆபத்து வரும், வழிப்பறி திருடர்களினால் ஆபத்து வரும், எனவே பட்டயத்தை சுய பாதுகாப்பிற்காக வைத்திருப்பதில் தவறு இல்லை.

மேலும், ஒருவனின் காதை வெட்டிய அந்த சீடனைப் பார்த்து, இயேசு " உன் பட்டயத்தை திரும்ப அதின் உறையிலே போடு" என்கிறார். அதாவது இந்த பட்டயத்தை வீசி எறிந்துவிடும், தூரமாக போட்டுவிடு என்றுச் சொல்லாமல், அதன் உறையில் போடு என்றுச் சொல்கிறார், உன் சுய பாதுகாப்பிற்கு அது உதவும். காதை வெட்டிய பிறகும், அந்த சீடனிடம் அந்த பட்டயம் இருக்கும்படி இயேசு பார்த்துக்கொள்கிறார்.  இதன் மூலம் அறிவது என்ன? சுயபாதுக்காப்பிற்காக ஆயுதத்தை வைத்திருத்தல் தவறான ஒன்று அல்ல என்பதாகும். ஆனால், வன்முறையினால் பட்டயத்தை எடுப்பவன், அதே பட்டயத்தால் மடிவான் என்பதையும் அவர் சொல்ல மறக்கவில்லை.

ஒரு கிறிஸ்தவன் எதிரிகளால் தனக்கு ஆபத்துவரும் என்று அறிந்தால், தற்காலத்தில் அரசாங்கத்திடம் அனுமதி கேட்டு, துப்பாக்கியை சட்டத்தின் அனுமதியோடு வைத்திருத்தல், எந்த வகையிலும் பைபிளுக்கு எதிரான ஒன்றல்ல. உண்மையாக தன் உயிருக்கு, தன் குடும்பத்தின் பாதுகாப்பிர்கு ஆபத்து வரும் போது, அந்த துப்பாக்கியை பயன்படுத்துவதில் தவறில்லை.

எனவே:

·         மறுகன்னத்தைக் காட்டு என்று இயேசு சொன்னது, சுயமாக பழிக்கு பழி வாங்கவேண்டாம் என்பதற்காகவாகும். முந்தைய வசனத்தை படித்தால், இதனை அறிந்துக்கொள்ளலாம்.

·         இயேசு தன்னை அறைந்தவனிடம் கேள்வி கேட்டது சரியானதுதான்.

·         கிறிஸ்தவன் தன்னை தற்காத்துக்கொள்வது சரியானது தான்.

·         நீதி நியாயத்திற்காக போராடுவதும், பேசுவதும், வழக்குகளை போடுவதும் சரியானது தான்.

·         அதே நேரத்தில் முடிந்தவரை மற்றவர்களோடு சமாதானமாக  வாழவும், நடந்துக்கொள்ளவும் முயற்சி எடுக்கவேண்டும், பழிக்கு பழி வாங்கக்கூடாது.

·         தான் சொல்வதை மற்றவர்கள் கேட்கவில்லை என்பதற்காக, அவர்களை சபிக்கவோ, ஆட்களை வைத்து அடிக்கவோ கூடாது. ஊழியத்திற்கு சீடர்களை அனுப்பும் போது, மக்கள் உங்களை ஏற்காவிட்டால், அவர்களின் ஊரைவிட்டு வந்துவிடுங்கள், உங்கள் கால்களில் படிந்த தூசியையும் உதறி தள்ளிவிட்டு வந்துவிடுங்கள் என்று இயேசு கூறுகின்றார்.

இதுவரை கண்ட விவரங்களின் படி பார்த்தால், இயேசு தான் போதித்த போதனையை தானே மீறி நடக்கவில்லை. தன்னை விசாரிக்கும் போது, காரணமில்லாமல் அடித்தவனைப் பார்த்து இயேசு "ஏன் அடித்தாய்?"  என்று கேள்வி கேட்டது சரியானதே ஆகும்.

இதோடு இந்த பதிலை முடிக்கிறேன். கோவை யூசுஃப் அவர்கள் அதிக விளக்கத்தை கேட்கும் பட்சத்தில், இன்னும் அதிகமாக இந்த தலைப்பு பற்றி எழுத நான் ஆவலாக உள்ளேன்.

இஸ்லாமியர்களே, நான் முன்வைத்த 101 காரணங்களுக்கு தெளிவான விளக்கத்தை தர முயற்சி எடுங்கள். 

இப்படிக்கு,

உங்கள் சகோதரன் – உமர்

வியாழன், 13 பிப்ரவரி, 2014

என் இஸ்லாமிய தாயாரின் கல்லறையை காணச்சென்ற போது வழியில் ஓட்டுனரிடம் புரிந்த உரையாடல்

என் இஸ்லாமிய தாயாரின் கல்லறையை காணச்சென்ற போது வழியில் ஓட்டுனரிடம் புரிந்த உரையாடல்


என் இஸ்லாமிய தாய் மரித்து சில நாட்கள் ஆனது. அவரது கல்லறையைக் காண நான் முதல்  முறையாகச் சென்றேன். என்னோடு ராதி என்ற என் நண்பரும் வந்தார். நாங்கள் ஒரு காரை வாடகைக்கு வைத்துக்கொண்டுச் சென்றோம். அந்த காரின் ஓட்டுனர், எங்களோடு அரசியல் பற்றி பேசிக்கொண்டே வந்தார்.

இந்த கார் ஓட்டுனர் படித்தவர் என்பதை நான் அறிந்துக்கொண்டேன். ஒரு பள்ளியில் தான் ஒரு சமூக சேவகனாக வேலை பார்ப்பதாகவும், தன்னுடைய வருமானம் போதுமானதாக இல்லாத காரணத்தால் பகுதி நேரமாக இப்படி கார் ஓட்டுனராக வேலை செய்வதாகவும் அவர் கூறினார். 

நான் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பு (PhD) படிக்க ஆரம்பித்த நாளிலிருந்து என் நண்பர் "ராதி" என்னை "டாக்டர்" என்றே அழைப்பார். இவர் என்னுடைய இன்னொரு நண்பரிடம் வேலை பார்க்கிறார். இவரைப் பற்றி அதிகம் அறியவேண்டும் என்று இந்த ஓட்டுனர் மிகவும் ஆர்வமாக இருந்தார். என்னிடம் இந்த ஓட்டுனர் தொடர்ச்சியாக கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தார். நான் சுருக்கமாக மட்டும் பதில் அளித்துக்கொண்டு இருந்தேன்.

நான் ஒரு தத்துவயியல் மாணவனாக இருந்தபடியால், இந்த ஓட்டுனர், சாக்ரடீஸ், பளாடோ மற்றும் அரிஸ்டாடில் பற்றி தவறாக குறிப்பிடும் போது அவரை சரி செய்யாமல் என்னால் இருக்கமுடியவில்லை. இவர்களை அந்த ஓட்டுனர், ஒரு சமூக விஞ்ஞானிகள் (social scientists) என்று குறிப்பிட்டார். நான் அவரிடம் "இல்லை, இவர்கள் தத்துவஞானிகள் (philosophers)" என்றுச் சொன்னேன்.  இவர்கள் எமில் மற்றும் தர்கீம் போன்றவர்கள் போல இல்லை என்றுச் சொன்னேன், இவர்கள் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியவில்லை.

நான் "மதத்தை" பாடமாக எடுத்துக்கொண்டு என்னுடைய டாக்டரேட் செய்துக்கொண்டு இருக்கிறேன் என்பதை அவர் அறிந்தவுடன் அவருக்கு உற்சாகம் மேலோங்கியது. இஸ்லாம் தான் உண்மையான மதம் என்று தெரிவிக்க அவர் அதிக ஆர்வம் கொண்டார். 

நாங்கள் முஸ்லிம் கல்லறையை நோக்கிச் சென்றுக்கொண்டு இருந்தபடியினால், நாங்களும்  முஸ்லிம்கள் என்று அவர் நினைத்துக்கொண்டார். அவர் 1980களில், அஹமத் தீதத் மற்றும் ஜிம்மி ஸ்வாகத் என்பவர்களின் மத்தியில் நடைப்பெற்ற விவாதத்தை வீடியோவில் பார்த்தார் என்று மகிழ்ச்சியாக என்னிடம் கூறினார். நானும் அந்த வீடியோவை கண்டேன் என்றுச் சொன்னேன். நானும் இந்த கார் ஓட்டுனரும் ஒரே வயதுடையவர்களாக இருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன்.

அவர் என்னிடம் "உங்களுக்கு சொர்க்கத்தின் மதங்கள் பற்றிய அனைத்து விவரங்களும் தெரியுமா?" என்று கேட்டார். நான் மதம் பற்றிய படத்தை என் டாக்டரேட் பட்டப்படிப்பிற்காக தெரிந்தெடுத்து இருப்பதினால், இப்படி கேட்டார். அவரைப் பொறுத்தவரையில் யூத மதம், கிறிஸ்தவம், மற்றும் இஸ்லாம் தான் அந்த மூன்று சொர்க்கத்தின் மதங்கள். நான் அவரிடம் "எனக்கு கொஞ்சம் தெரியும், ஆனால், எல்லாம் தெரியாது" என்றுச் சொன்னேன். மேலும், இந்த மதங்களை "சொர்க்கத்தின் மதங்கள்" என்றுச் சொல்வதைக் காட்டிலும், "ஆபிரகாமிய மதங்கள்" என்றுச் சொல்வது தான் சரியானது என்றுச் சொன்னேன். ஏன்னெறால், இந்து மதம்  கூட தன்னை "சொர்க்கத்தின் மதம்" என்றே சொல்லிக்கொள்கிறது என்றுச் சொன்னேன்.

இதனை அவர் மறுத்தார். மேலும், நான் "உண்மையான சொர்க்க மதங்கள் (ஆபிரகாமிய மதங்கள்) பற்றிச் சொல்கிறேன் என்றுச் சொன்னார்". நான் அவரிடம் "அப்படியானல் ஆபிரகாமிய மதங்கள் மூன்று அல்ல, அனேகம் உள்ளது. குறைந்த பட்சம் நான்கு மதங்களை நாம் ஆபிரகாமிய மதங்கள் என்றுச் சொல்லமுடியும்" என்றுச் சொன்னபோது அவர் ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டார். "பஹாய் " என்ற ஒரு மதமும் ஆபிரகாமிய மதமாக நாம் கருதவேண்டும் என்றுச் சொன்னேன்.

இதனையும் அவர் மறுத்தார், மேலும், "பஹாய்" என்பது புதிதாக தோன்றிய மதமாகும், இதற்கு முந்தையை மதங்கள் (இஸ்லாம், கிறிஸ்தவம், யூத மார்க்கம்) இதனை அங்கீகரிக்கவில்லை என்றுச் சொன்னார். உடனே நான் அவரிடம் இவ்விதமாக கூறினேன்: "அப்படியானால், கிறிஸ்தவர்கள் கூட இப்படியாகச் சொல்கிறார்கள், அதாவது ஆபிரகாமிய மதம் இரண்டு தான், அதாவது சொர்க்கத்தின் மதங்கள் இரண்டு தான். இஸ்லாம் என்பது புதிதாக தோன்றிய மதம் ஆகும், அதனை கிறிஸ்தமும், யூத மதமும் அங்கீகரிக்கவில்லை, ஆகையால், இஸ்லாம்  என்பது உண்மையான மதம் அல்ல, அது மனிதன் உண்டாக்கிய மதம் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள்".  எப்படி கிறிஸ்தவர்கள் இஸ்லாமை காண்கிறார்களோ, அதே போலத்தான் நீங்களும் (ஓட்டுனர்) பஹாய் மதத்தை பார்க்கிறீர்கள் என்றுச் சொன்னேன். 

இந்த ஓட்டுனருக்கு மின்சாரம் தாக்கியதுபோல தூக்கிவாரிப்போட்டது.  உடனே இவர் "இஸ்லாம் ஒரு உண்மையான மதம்" என்பதை நிருபிக்க முயற்சித்தார். குர்-ஆன் 4:82ம் வசனத்தை அவர் எடுத்துக்காட்டினார்: 

"அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்." குர்-ஆன் (4:82).

நான் அவரிடம் "உங்களுடைய ஆதாரம் சரியானதல்ல, ஏனென்றால், கிறிஸ்தவர்கள் குர்-ஆனை ஒரு இறைவேதம் என்று நம்புவதில்லையே. இப்படியிருக்க, குர்-ஆனிலிருந்து ஒரு வசனத்தை நீங்கள் மேற்கொள் காட்டுவது கிறிஸ்தவர்களுக்கு அது ஆதாரபூர்வமற்ற ஒன்றாக இருக்கிறது" என்று கூறினேன். மேலும் அவரிடம் "பைபிள் திருத்தப்பட்டது" என்று நீங்கள் நம்புகிறீர்களா என்று கேட்டேன், உடனே அவர் "ஆம்" என்றுச் சொன்னார்.

உடனே நான் பைபிளிலிருந்து ஒரு இரண்டு வசனங்களை அவருக்கு மேற்கோள் காட்டினேன்: வெளிப்படுத்தின விசேஷம் 22:18-19ம் வசனங்களை நான் அவருக்கு படித்துக்காட்டினேன்:

22:18 இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.
22:19 ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.

நான் அவரிடம் "மேற்கண்ட வசனங்களின் படி, பைபிள் திருத்தப்படவில்லை" என்று ஆதார பூர்வமாக தெரிகின்றது அல்லவா என்று கேட்டேன். உடனே அவர் இதை நான் ஏற்கமாட்டேன் ஏனென்றால், பைபிள் ஒரு வேதமல்ல என்றுச் சொன்னார்.  இதற்கு உடனே நான் அவரிடம் "குர்-ஆனை நம்பாத ஒரு கிறிஸ்தவன் குர்-ஆனில் சொல்லப்பட்ட வசனத்தை அப்படியே நம்பவேண்டும் என்று நீங்கள் எப்படி எதிர்ப்பார்க்கலாம் என்று கேள்வி கேட்டேன்". கிறிஸ்தவர்கள் நம்பாத குர்-ஆனின் வசனம் கிறிஸ்தவர்களுக்கு எப்படி ஆதாரமாக, அதிகார்பூர்வமானதாக ஆகும் என்று கேட்டேன்.

இப்போது இந்த நபர், குர்-ஆனில் விஞ்ஞான அற்புதங்கள் உண்டு என்றுச் சொல்ல ஆரம்பித்துவிட்டார். உடனே நான் குர்-ஆனில் உள்ள விஞ்ஞான பிழைகளை எடுத்துச் சொல்ல ஆரம்பித்தேன்.  மறுபடியும் அவருக்கு மின்சாரத்தைத் தொட்டது போல் அதிர்ச்சியாகவும், அதே நேரத்தில் ஆச்சரியமாகவும் இருந்தது.  மறுபடியும் இவர் "குர்-ஆன் பன்றியின் இறைச்சியை சாப்பிடுவதை தடை செய்கின்றது, ஏனென்றால், தற்கால விஞ்ஞான கண்டுபிடிப்பின் படி பன்றியின் இறைச்சியினால் வியாதிகள் வருகின்றது" என்றுச் சொல்ல ஆரம்பித்தார். நான் அவரிடம் உலகம் முழுவதும், மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய நாடுகளில் பன்றியின் இறைச்சி உட்கொள்ளப்படுகின்றது, ஆனால், இதனால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் மக்கள் இருக்கிறார்கள் என்றுச் சொன்னேன். ஒரு வியாதிக்கொண்ட ஆட்டின் இறைச்சியை சாப்பிடும் போது நமக்கு வரும் வியாதியைப் போன்று, ஒரு வியாதிக்கொண்ட பன்றியின் இறைச்சியை சாப்பிடும் போதும் வியாதி வரும் என்றுச் சொன்னேன். இந்த இடத்தில் இயேசு சொன்ன ஒரு விஷயத்தை அவருக்கு மேற்கோள் காட்டினேன், மத்தேயு 15:11 "வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது; வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார். "

மேலும் அவர் விட்டுக்கொடுக்காமல், இஸ்லாமின் மேன்மையை எனக்கு தெரிவிப்பதற்கு, "இஸ்லாம் பொன் நகைகளை அணியவேண்டாம்" என்றுச் சொல்கின்றது. தற்கால விஞ்ஞான கண்டுபிடிப்பின் படி, தங்கம் அணிவதினால் நோய் வருகிறது, இதனை முன்பே இஸ்லாம் சொல்கிறது என்றுச் சொன்னார்.  உடனே நான் இந்த தற்கால விஞ்ஞான கண்டுபிடிப்பு பற்றி எனக்கு விவரங்களை கொடுங்கள், யார் இந்த கண்டுபிடிப்பை செய்தார்? எந்த நாட்டுக்காரர்? மேலும் இதர விவரங்களைத் தாருங்கள், இப்படிப்பட்ட ஆய்வுகள் நடைப்பெறவில்லை, இவைகள் பொய்யானவை என்றுச் சொன்னேன், அவரிடம் ஆதாரம் கேட்டேன். பொய் கண்டுபிடிப்புகள் பற்றி பேசுவதில் முஸ்லிம்கள் முன்னிலையில் இருப்பார்கள். மேலும் தங்கள் மதம் தான் சிறந்தது என்பதை நிலை நிறுத்த, அந்த பொய்களை முழு இருதயத்தோடும் நம்புவார்கள், அவைகளை உண்மை என்றுச் சொல்லி ஆர்வமாக பரப்புவார்கள். மேலும் உலக நாடுகளில் தங்கள் இஸ்லாமிய நாடுகள் தான் சிறந்தவைகள் என்றும் நம்புவார்கள். தாங்கள் தான் சிறந்த தலைவர்கள் என்று உறுதியாக நம்புவார்கள். உலகத்தில் காணப்படும் அதி நவீன கண்டுபிடிப்புக்கள் அனைத்தும் அவர்களுக்கே சொந்தமானது என்றுச் சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.

துரதிஷ்டவசமாக அவர் என்னிடம் "உலகத்தின் பெரும்பான்மையான விஞ்ஞானிகள் அனைவரும் முஸ்லிம்கள் தான்" என்றுச் சொன்னார். உடனே நான் அவரிடம் "உலகத்தில் எத்தனை முஸ்லிம்கள் நோபல் பரிசுகளைப் பெற்றார்கள்" என்று கேட்டேன். மேலும் உலகத்தில் 150 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள்  இருக்கிறார்கள், இவர்களில் எத்தனை பேருக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது என்று கேட்டேன்(http://en.wikipedia.org/wiki/List_of_Muslim_Nobel_laureates). அதே போல இரண்டு கோடி யூதர்கள் மட்டுமே உலகில் இருக்கிறார்கள், இவர்களில் எத்தனை பேருக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது என்று உங்களுக்கு தெரியுமா? என்றும் கேட்டேன் (http://en.wikipedia.org/wiki/List_of_Jewish_Nobel_laureates). அவரிடம் தெளிவாகச் சொன்னேன், ஒரு மதத்தை அடிப்படையாகக் கொண்டு போட்டி போட நீங்கள் ஆரம்பித்தால், யூதர்கள் தான் முதலிடம் பெறுவார்கள். எந்த மார்க்கத்தின் மக்கள் மூலமாக, உலகம் அதிக விஞ்ஞான நன்மைகளை அடைந்துள்ளது என்று நீங்கள் கணக்கிட்டால், யூதர்கள் தான் போட்டியின்றி ஜெயிப்பார்கள், முஸ்லிம்கள் அல்ல என்றுச் சொன்னேன்.

இவரால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. உடனே அவர் "இஸ்லாம் மது அருந்துவதை தடை செய்துள்ளது" என்றுச் சொல்ல ஆரம்பித்தார். இவரது வார்த்தைகளை கேட்டவுடன் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், முஹம்மது தன்னை நபியாக பிரகடனம் செய்துக்கொண்ட பிறகு கூட பல ஆண்டுகள் முஸ்லிம்கள் மதுவை அருந்திக்கொண்டே இருந்தார்கள் என்ற உண்மையை இவர் அறியாமல் இருக்கிறாரே.  இந்த விஷயத்தைப் பற்றி இவருக்கு குர்-ஆன் வசனத்தை காட்ட விரும்பினேன். ஆனால், இவருக்கு இந்த வசனம் இறங்கிய சூழ்நிலையே தெரியவில்லை: 

குர்-ஆன் 4:43 - நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்; ….. 
மேற்கண்ட வசனம், அடுத்த படியாக வந்த வசனத்தினால்(5:91) இரத்து செய்யப்பட்டது:

குர்-ஆன் 5:91 - நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி 
அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?. 

இந்த ஓட்டுனருக்கு குழப்பம் வந்துவிட்டது. உடனே அவர் "நீங்கள் இஸ்லாமில் நம்பிக்கை கொண்டு இருக்கிறீர்களா?" என்று கேட்டார். நான் "இல்லை, நான் இஸ்லாமை நம்புவதில்லை" என்று பதில் அளித்தேன். இதைக் கேட்டவுடன், அமைதியாக அவர் என்னை மேலும் கீழுமாக பார்த்துக்கொண்டு இருந்தார், அவரது காதுகளையும், கண்களையும் அவரால் நம்பமுடியவில்லை. அவரது வாழ்வில் "ஒரு முஸ்லிமாக இருந்து, இஸ்லாமை புறக்கணிக்கும் நபரை இதுவரை அவர் சந்திக்கவில்லை" என்பது தெளிவாக புரிந்தது. இது மாத்திரமல்ல, ஒரு படித்த நபர், அதுவும் மதங்கள் பற்றிய ஆய்வுகளை செய்யும் என்னைப்போல ஒரு நபர், இப்படி இஸ்லாமை புறக்கணிப்பார் என்று இவர் இதுவரை கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை. அவரின் கருத்துப்படி, ஒருவர் இஸ்லாமை ஆழ்ந்து கற்றால் அவர் இஸ்லாமியராக மாறாமல் இருக்கமாட்டார் என்பதாகும், ஆனால், உண்மை அவரது எண்ணங்களுக்கு எதிராக இருக்கின்றது.

நாங்கள் சென்றுக்கொண்டு இருக்கும் கல்லறை தோட்டத்தில் தான் என் தாயார் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள், அவர்கள் சில நாட்களுக்கு முன்பு தான் மரித்தார்கள் என்பதை அவர் அறிந்துக்கொண்டார். மேலும் நாங்கள் முதன் முதலாக அங்கு சென்றுக்கொண்டு இருக்கிறோம் என்பதையும் அவர் அறிந்துக்கொண்டார். நாங்கள் கல்லறை தோட்டத்தை அடைந்தோம், காரை விட்டு இறங்கினோம், அப்போது அவர் என்னிடம் "நீங்கள் அல் ஃபாத்திஹா" ஸூராவை உங்கள் தாயாருக்காக ஓதுவீர்களா?" என்று கேட்டார் (குர்-ஆனின் முதல் அத்தியாயம் அல் ஃபாத்திஹா ஆகும்). நான் முன்முறுவலுடன் தலை ஆட்டினேன். நான் என் தாயின் கல்லறையிடம் சென்று அஞ்சலி செலுத்தி வந்தேன். என் நண்பரும், கார் ஓட்டுனரும் என்னிடம் "நீங்கள் உங்கள் வாயை அசைத்து, உங்கள் தாயாரின் கல்லறையில் அமைதியோடு சில நிமிடங்கள் இருந்தீர்களே! நீங்கள் அல் ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதினீர்களா?" என்று கேட்டார்கள். நான் அவர்களிடம் "இல்லை, நான் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதவில்லை, நான் நம்பாத ஒன்றை எப்படி ஓதுவேன்?" என்று சிரித்துக்கொண்டுச் சொன்னேன்.

இந்த கார் ஓட்டுனருக்கு துக்கம் இன்னும் அதிகமானது. அவர் என்னிடம் "நீங்கள் மரித்தால், உங்களை எங்கு அடக்கம் செய்வார்கள்" என்று கேட்டார். நான் அவரிடம் "நான் மரித்தால், என்னை எங்கே புதைப்பார்கள் என்று நான் ஏன் கவலைப்படவேண்டும்? நான் மரித்துவிட்டபிறகு, என் சடலத்திற்கு என்ன ஆகும்? அது சில நாட்களிலேயே அழுகிவிடும், அதை எங்கே புதைத்தாலும் எனக்கு வித்தியாசம் ஒன்றுமில்லை. உங்களுக்கு தெரியுமா? உலக கடைசியில் நம் ஆத்துமா அல்ல, நம் சரீரம் உயிர்த்தெழும் என்று?" என்று கேட்டேன்.

இப்படியாக, எங்கள் உரையாடல் உயிர்த்தெழுதல், வாழ்வு, மரணம் என்ற தலைப்புகளை தொட்டுக்கொண்டு தொடர்ந்தது. அவரிடம் நான் "இஸ்லாம் எனக்கு இரட்சிப்பைத் தராது" என்று கூறினேன். அதாவது இஸ்லாமின் படி, அந்த நியாயத்தீர்ப்பு நாளிலே, ஒரு தராசில் எனது அனைத்து நன்மைகளை ஒரு தட்டில் வைத்து, இன்னொரு தட்டில் என்னுடைய தீய செயல்களை வைத்து, சரி பார்த்து, அதன் பிறகு எனது நித்தியம் நிர்ணயிக்கபடும் என்ற கோட்பாட்டை நான் நம்பமுடியாது என்றுச் சொன்னேன்.  நித்திய வாழ்வை நிர்ணயிக்கும் இந்த வகையான வழிமுறை சரியானது அல்ல என்றும் சொன்னேன்.

நான் அவரிடம் "உங்களுக்கு புகழ்பெற்ற பெல்லி டான்சர் பெண்ணைத் தெரியுமா? (இடுப்பை ஆட்டி நடனம் புரிபவர்) என்று கேட்டேன்". இஸ்லாமில் இந்த நடனம் தடை செய்யப்பட்ட ஒன்றாகும், ஏனென்றால், இந்த நடனத்தை பார்ப்பவர்கள் பாவத்தில் விழுவார்கள். இந்த நடனப்பெண்மணி 11 மாதங்கள் இப்படிப்பட்ட நடனத்தை ஆடிக்கொண்டு இருந்துவிட்டு, ரமளான் மாதம் வந்தவுடன், ஒரு முக்காட்டை போட்டுக்கொண்டு, தினமும் ஐந்து வேளை தொழுகை செய்து, மாதம் முழுவதும் நோன்பு இருந்து, தான தர்மங்களை அதிகமாக செய்து, மக்காவிற்கும் புனிதப்பயணம் செய்து வருகிறார். இதனை ஒவ்வொரு ஆண்டும் செய்கிறார். இப்படிப்பட்ட பெண் சொர்க்கத்திற்குச் செல்வாளா? என்று அவரிடம் கேட்டேன்.

இந்த ஓட்டுனர், இந்த இடுப்பு நடனக்காரியை நினைத்து சிரித்துவிட்டு, நிச்சயமாக இந்தப் பெண் சொர்க்கம் செல்லமாட்டாள் என்றுச் சொன்னார். நான் உடனே அவரிடம் திருப்பிக்கேட்டேன், "அந்தப் பெண் இஸ்லாம் சொல்வதைத் தானே செய்கிறாள், தன்னுடைய நல்ல காரியங்களை அதிகப்படுத்திக்கொள்கிறாள், ஏனென்றால், நியாயத்தீர்ப்பு நாளிலே தன்னுடைய தீய செயல்களைக் காட்டிலும், நல்ல செயல்கள் அதிகமாக இருக்கவேண்டும் என்பதற்காக அவள் இப்படியெல்லாம் செய்கிறாள் என்றுச் சொன்னேன். உடனே அவர், இல்லை இந்தப் பெண் செய்வது தவறானது, அவள் சொர்க்கம் செல்லமாட்டாள், நரகம் தான் செல்வாள் என்றுச் அடித்துச் சொன்னார்.

நான் அவரிடம், "நீங்கள் இந்த வாழ்வை விட, அடுத்துவரும் வாழ்வை முக்கியப்படுத்துபவராக இருந்தால், இஸ்லாமை விட கிறிஸ்தவம் தான் உண்மையானது, சிறந்தது" என்றுச் சொன்னேன். அவர் என்னிடம் "இது எப்படி?  என்று கேட்டார். நான் பதில் சொல்லும் வண்ணமாக, ஆதாம் பற்றிய ஒரு கேள்வியை அவரிடம் கேட்டேன்.: "ஆதாம் பாவம் செய்வதற்கு முன்பு, அவர் பரதேசில் (ஏதோனில்) இருக்கும்போது மரிக்கமுடியுமா?" என்று கேட்டேன். அவர் "இல்லை, ஆதாம் மரிக்கமுடியாது, அவர் மரணமில்லாதவர்" என்றுச் சொன்னார்.
அதன்பிறகு நான் அவரிடம் "அப்படியானால், ஆதாம் பாவம் செய்து, இறைவனுக்கு கீழ்படியாமல் போய், அந்த மரத்தின் கனியை புசித்து, பூமிக்கு தள்ளப்பட்டுவிட்ட பிறகு, மரணமில்லாதவராக வாழமுடியுமா?" என்று கேட்டேன். இதற்கு அவர் "இல்லை, இப்போது ஆதாம் நிரந்தரமாக மரணமில்லாதவராக வாழமுடியாது, அவர் மரணித்தே ஆகவேண்டும்" என்று பதில் சொன்னார். இப்போது நான் அவரிடம், "ஆக, ஆதாம் இறைவனுக்கு கீழ்படியாமல் போனதினால், மூன்று வித நஷ்டத்தை பெற்றார், முதலாவது அவர் பரதேசிலிருந்து வெளியே அனுப்பப்பட்டர், இரண்டாவதாக, இறைவனின் ஐக்கியத்தை இழந்தார், மூன்றாவதாக, தன் பாவத்தினால், "மரணம்" என்ற ஒன்றையும் பெற்றார்" என்றுச் சொன்னேன். அதாவது மரணம் என்ற தண்டனையை ஆதாம் தனது கீழ்படியாமையினால் பெற்றார் என்றேன். இதற்கு அவர் எந்த ஒரு பதிலையும் தரவில்லை. 

நான் என் கேள்விகளை தொடர்ந்தேன்: "ஒருவேளை ஆதாம் மரணமில்லாத  தன்மையோடு பரதேசில் இருந்த போது, நாம் அவருக்கு பிறந்து இருந்திருந்தால், நாமும் அவரைப்போல மரணமில்லாத தன்மையுடன் மகிழ்ச்சியாக பரதேசில் இருந்திருப்போம் அல்லவா?" என்று கேட்டேன். மேலும், இப்போது ஆதாமுக்கு நாம் பூமியில் பிறந்தபடியால், அவரைப்போல நாமும் மரணத்தை சந்தித்தே ஆகவேண்டும் என்ற நிலையில் இருக்கிறோம் அல்லவா? என்றும் கேட்டேன். அவர் பாவம் செய்து, மரணத்தை தண்டனையாக பெற்ற பிறகு நாம் அவருக்கு பிறந்தபடியினால், நமக்கும் "மரணம்" என்ற தண்டனை கிடைத்துள்ளது அல்லவா? என்று கேட்டேன். ஆதாமின் மரணத்தை நாம் பெற்றுக்கொண்டோம், அதே போல தண்டனையையும் பெற்றுக்கொண்டோம். இறைவன் பரிசுத்தமுள்ள நீதிபதியாக இருப்பதினால், உலகில் எந்த ஒரு மனிதனும் "நான் பரிசுத்தமான மனிதன், பாவம் செய்யாதவன்" என்றுச் சொல்லமுடியாது, முஹம்மதுவும் ஆதாம் மூலம் வந்த பாவத்தையும், தண்டனையையும் பெற்று இருப்பதினால், அவரும் இப்படியாகச் சொல்லமுடியாது.

முஹம்மதுவின் பாவங்கள் பற்றி நான் ஆழமாக அவரோடு உரையாட விரும்பவில்லை. அதற்கு பதிலாக, முஹம்மதுவின் பாவங்களை மன்னிப்பதாக அல்லாஹ் குர்-ஆனில் சொன்ன வசனத்தை அவருக்கு மேற்கோள் காட்ட விரும்பினேன். ஒரு பாவியான மனிதனைத் தான் மன்னிக்கமுடியும், ஒரு பாவமும் செய்யாதவர்களை எப்படி மன்னிப்பது? குர்-ஆனிலிருந்து வசனங்கள் 94:2-3 ஐ அவருக்கு எடுத்துக் காட்டினேன்:  குர்-ஆன் 94:2-3 - மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம். அது உம் முதுகை முறித்துக் கொண்டிருந்தது.
இந்த கார் ஓட்டுனரில் மனதிலும், என் நண்பரின் மனதிலும் அமைதியாக இருந்த வெடிகுண்டு வெடிக்கும் சமயம் வந்துவிட்டது என்பதை நான் அறிந்துக்கொண்டேன். அவர்களுக்கு ரோமர் 5:12ம் வசனத்தை மேற்கோள் காட்டினேன்: இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.

மேலும் அவரிடம் "ஒரு மனிதனின் நீதியுள்ள கீழ்படிதலின் காரணமாக, நாம் அனைவரும் மறுபடியும் நித்திய வாழ்வை திரும்பபெறமுடியுமா?" என்று கேட்டேன். 
அவருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை, அவர் குழப்பத்தில் இருந்தார். மேலும், அவர் அமைதியாக தலையை ஆட்டினார்.  அதன் பிறகு, "யார் ஆதாமைப் போல் இருப்பவர்?" என்று கேட்டேன். உங்களுடைய குர்-ஆன் 3:59 இப்படியாகச் சொல்கிறது என்று அவருக்கு எடுத்துக்காட்டினேன்: " அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் "குன்" (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.".

இயேசு ஒரு போதும் பாவம் செய்யவில்லை என்ற விஷயம் உங்களுக்குத் தெரியுமா?  இயேசு பாவம் செய்யாதவர் என்று இஸ்லாம் போதிக்கிறது என்பதை அறிவீர்களா? என்று கேட்டேன்.

இப்படி பேசிக்கொண்டு இருக்கும் போதே நாம் செல்லவேண்டிய இடத்தை அடைந்துவிட்டோம். நான் என் எண்ணங்களை அவரோடு பகிர்ந்துகொள்ளும்வரை இன்னும் சில நிமிடங்கள் நாங்கள் காரிலேயே உட்கார்ந்தோம். கடைசியாக அவர் என்னிடம் "இன்று உங்களை நான் விடப்போவதில்லை, மட்டுமல்ல, நான் இன்று வேலையும் செய்யப்போவதில்லை. நாம் ஒரு காஃபி கடைக்குச் செல்வோமா? மேலும் இதுவரை நீங்கள் சொன்ன விவரங்களை நான் ஜீரணித்துக்கொள்வதற்காக, நான் சிறிது புகைபிடித்துக் கொள்கிறேன் (Smoke Water Pipe)" என்றார்.
நாங்கள் ஒரு காஃபி கடைக்குச் சென்றோம். அங்கு துருக்கி காஃபியை குடித்தோம். மேலும் என் நண்பர் ராதியும், ஓட்டுனரும் புகைபிடித்தார்கள். அவர்களுக்கு இந்த வகையான புகைப்பிடித்தல் தேவை என்று அவர்கள் கருதினார்கள், ஏனென்றால், இதுவரை செய்த சூடுபறக்கும் உரையாடல்களினால் உண்டான சூட்டை தணிக்க இவர்கள் புகைப்பிடித்தார்கள்(Water Pipe). நான் சொன்ன விவரங்களை அவர்கள் ஜீரணித்துவிட்டார்கள் என்று நினைக்கும் போது, திடீரென்று இஸ்லாமிய பாங்கு சொல்லும் சப்தம் கேட்டது, அதாவது இஸ்லாமிய தொழுகைக்கான நேரம் வந்த உடன் அப்பகுதியில் இருக்கும் ஒரு மசூதியிலிருந்து தொழுகைக்கு அழைக்கும் சப்தம்  காற்றில் பறந்துவந்து எங்களை எட்டியது. நான் அவ்விருவரையும் பார்த்து, "நீங்கள் இப்போது தொழப்போவதில்லையா?" என்று கேட்டேன். அவர்கள் முகத்தில் காணப்பட்ட அந்த வெட்க உணர்வு, அவர்கள் தொழப்போவதில்லை என்பதை எனக்கு மௌனமாக சொல்லிவிட்டது.  கடைசியாக, அவர்களை சிந்திக்கும் படி ஒரு கேள்வியை கேட்டேன், "ஆக, நீங்கள் இப்போது அந்த இடுப்பு நடன நிகழ்ச்சியில் (Belly Dance Party) கலந்துக்கொள்ளப்போகிறீர்கள்" என்று நினைக்கிறேன். உங்களால் முடிந்த போது சில நல்ல காரியங்களைச் செய்து, நன்மைகளை சேர்த்துக்கொண்டு சொர்க்கத்தை அடைந்துவிடுவோம் என்று நினைக்கிறீர்களா? என்று கேட்டேன்.

நான் அவர்களிடம் "ஒரு முஸ்லிமின் நம்பிக்கை என்பது இருட்டில் குதிப்பதற்கு சமமாகும், எனவே இஸ்லாமை விட்டுவிட்டு மிகவும் பாதுகாப்பான உயரத்திலிருந்து குதிப்பதை தெரிவு செய்துக்கொள்ளுங்கள்" என்றுச் சொன்னேன். 

இதனை நான் எங்கள் உரையாடலில் கடைசியாகச் சொன்னேன் என்று நினைக்கிறேன். அதாவது நியாயத்தீர்ப்பு நாளில் அல்லாஹ்வின் அருள் மீது நம்பிக்கைக்கொண்டு இருப்பதும், மேலும் தராசின் இரண்டு தட்டுகளில் வைக்கப்பட்ட நல்ல தீய செயல்களின் அளவுகளின் மீது நம்பிக்கைக்கொண்டு இருப்பதையும் விட்டுவிட்டு, இவ்வுலகில் வாழும்போதே ஒரு நிச்சயத்தை அடையும் மார்க்கத்தை பின்பற்றுங்கள் என்றேன். அவர்களிடம் நான் "நீங்கள் நீதிபரராகிய இரண்டாம் ஆதாம் (இயேசுக் கிறிஸ்து) பற்றி சிறிது ஆய்வு செய்யுங்கள்" என்றுச் சொன்னேன். நீங்கள் இழந்துப்போன நித்திய வாழ்வை கொடுக்கும் இயேசுக் கிறிஸ்துவை நம்புங்கள். இவர் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே இருந்த பிளவை நீக்கி இருவரையும் ஒற்றுமையாக்கியுள்ளார் என்றும் சொன்னேன்.

நான் இதுவரை என்ன செய்தேன் என்றுச் சொன்னால், அசையாமல் ஒரே இடத்தில் தேங்கியிருந்த தண்ணீராகிய அவரது மனதில் ஒரு சிறிய கல்லை போட்டேன். அது அவரை சிந்திக்கவைக்கும். அவர் எங்கு மற்றும் ஏன் பிறந்தார்? அவருக்கு இதுவரை போதிக்கப்பட்டவைகள் எவைகள்? என்பவைகள் பற்றி அவர் இனி ஆய்வு செய்வார் என்று நம்புகிறேன். இது தான் அவருக்கு என்னால் செய்யமுடிந்த உதவி. அவர் நம்பிக்கொண்டு இருப்பவைகள் உண்மை தானா என்பதை அவர் இனி ஆய்வு செய்து முடிவு எடுப்பார். நான் ஒரு கிறிஸ்தவன் என்று நேரடியாகச் சொல்லி அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.  ஆனால், இரண்டாம் ஆதாமாகிய இயேசுவின் மூலமாக கிடைக்கும் நீதியையும், நம்பிக்கையையும் அவர்களுக்குச் சொல்லியுள்ளேன். அவர்களோடு நான் உரையாடும் போது, திரித்துவம் பற்றியும், தேவக்குமாரன் பற்றியும், பைபிளின் நம்பகத்தன்மைப் பற்றியும் முஸ்லிம்கள் பொதுவாக கேட்கும் கேள்விகளுக்கு பதில்களைத் தரவில்லை.

அந்த கார் ஓட்டுனர் கடந்துச் சென்றுவிட்டார். போகும் போது நான் இப்போது வீட்டிற்குச் செல்கிறேன், இதுவரை கேட்ட விவரங்களின் படி என் தலை பாரமாக இருக்கிறது என்றுச் சொன்னார். நான் காரின் வாடகைப் பணத்தை கொடுக்க முன்வரும் போது, அவர் அதனை ஏற்க மறுத்துவிட்டார்.  இதற்கு பதிலாக, நான் இதுவரை கேட்ட விவரங்களுக்காக நானே உங்களுக்கு பணம் தரவேண்டும் என்றுச் சொன்னார். இருந்தபோதிலும், நான் இரண்டு மடங்கு அவருக்கு வாடகை கொடுத்தேன், அவர் மறுத்த போதும் கட்டாயமாக அவருக்கு கொடுத்தேன். என்னோடு அவர் உரையாடியதால், அந்த நாளின் மீதமுள்ள வேலையைச் செய்யாமல், வருமானத்தை நஷ்டப்படுத்தியதற்காகவும், நாங்கள் பேசிய விவரங்களை தியானிக்கவும், இரண்டு மடங்கு வாடகையைக் கொடுத்தேன். 

பரிசுத்த ஆவியானவரின் வழி நடத்துதலுக்காக அவருக்கு நன்றி செலுத்துக்கிறேன். என் தாயை பிரிந்த வேதனையில், அவரது கல்லறையைக் காணச்சென்ற அந்த சமயத்தில் இப்படி நான் ஒருவருக்கு சுவிசேஷம் சொல்வேன் என்று நினைத்தும் பார்க்கவில்லை. என் வேதனையைப் பற்றியே சிந்தித்துக்கொண்டு இருந்த என்னை ஒரு புதிய அனுபவத்தில் கர்த்தர் நடத்திச் சென்றார். இதனை நான் கற்பனையும் செய்யமுடியாது. இதனை நான் திட்டமிடவுமில்லை. நாம் சக்தியற்று சோர்ந்துப்போய் இருக்கும் சமயத்திலும் கர்த்தர் நம்மை தம்முடைய சாட்சியாக மாற்றிக் கொள்கிறார். 

நீங்கள் தயவு செய்து, அந்த கார் ஓட்டுனருக்காகவும், என் நண்பர் ராதிக்காகவும் ஜெபியுங்கள். அந்த கார் ஒட்டுனர் என்னை விட்டு கடந்துச் சென்றுவிட்ட பிறகு தான் எனக்கு  ஞாபகம் வந்தது, அதாவது நான் அவரின் பெயரை கேட்கவே இல்லை. நான்கு மணி நேரம் நாங்கள் பேசினோம், ஆனால் பெயரை நான் கேட்கவில்லை. கர்த்தருக்கு அவரது பெயர் தெரியும். எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை நான் செய்தேன் அவ்வளவு தான். யாருக்கு நற்செய்தி சென்றடையவேண்டுமோ அவர்களுக்கு நான் அறிவித்துவிட்டேன்.  இனி மீதமுள்ள விவரங்கள் கர்த்தரின் கையில் உள்ளது. என்னை அனுப்பிய கர்த்தர் அவர்களை சந்தித்து, அவர்கள் மனதில் நற்செய்தியின் கிரியைச் செய்து, இரண்டாம் ஆதாமாகிய இயேசுவின் மூலம் கிடைக்கும் இரட்சிப்பை அவர்களுக்கு கொடுப்பார் என்று நம்புகிறேன்.

ரோமர் 5:19 - அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.



சனி, 8 பிப்ரவரி, 2014

பாகம் 10 - 101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

பாகம் 10

பாகம் 1பாகம் 2பாகம் 3பாகம் 4பாகம் 5பாகம் 6பாகம் 7பாகம் 8பாகம் 9ஐ படிக்க சொடுக்கவும். இந்த பத்தாம் பாகத்தில் 91வது காரணத்திலிருந்து 101வது காரணம் வரை காண்போம்.

91. தோராவின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்

பைபிளின் ஐந்தாகமங்களை அதாவது தோராவை அல்லாஹ் தான் இறக்கினான் என்று முஹம்மது குர்-ஆனில் கூறியுள்ளார். தோராவை உறுதிப்படுத்தவே குர்-ஆன் இறக்கப்பட்டது என்றும் குர்-ஆன் கூறுகின்றது. ஆனால், அதே தோராவை முஹம்மது அவமதித்துள்ளார், அதாவது தோராவின் கட்டளைகளை மீறி நடந்துள்ளார். மோசேயின் மூலமாக தேவன் கொடுத்த 10 கட்டளைகளையும், இன்னும் இதர கட்டளைகளையும் மீறியுள்ளார். உதாரணத்திற்கு, ஒட்டகத்தின் மாமிசத்தை சாப்பிடக்கூடாது என்று தோரா யூதர்களுக்கு கட்டளையிடுகிறது. அதே தோராவை பின்பற்றுகிறோம் என்றுச் சொல்லும் முஹம்மது ஒட்டகத்தின் மாமிசம் சாப்பிட அனுமதி கொடுத்துள்ளார். பெண் அடிமைகளை திருமணம் புரிந்து அவர்களை சட்டப்படி மனைவியாக்கிக் கொள்ள தோரா போதிக்கும்போது, அடிமைப்பெண்களை திருமணம் செய்துக்கொள்ளாமல், அவர்களோடு விபச்சாரம் புரிய முஹம்மது அனுமதித்தார். தோராவின் படி ஓய்வு நாள் சனிக்கிழமையாகும், இதனை மாற்றி முஹம்மது வெள்ளிக்கிழமை என்று மாற்றினார். இது போல தோராவின் கட்டளைகளை அவர் மீறி நடந்துள்ளார். எனவே, கிறிஸ்தவர்களின் பார்வையில், தோராவின் அடிப்படையில் முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசியாவார். [91]

92. வரலாறு புத்தகங்களின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்

பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்களுக்கு அடுத்தபடியாக பல சரித்திர புத்தகங்கள் வருகின்றன. இஸ்ரவேல் நாட்டின் வரலாறு கூறும் இந்நூல்களிலிருந்து அனேக விவரங்களை முஹம்மது எடுத்து, அவைகளை மாற்றி தன் குர்-ஆனிலும், ஹதீஸ்களிலும் கூறியுள்ளார். முக்கியமாக, தாவீது சாலொமோன் போன்றவர்கள் பற்றி அனேக விவரங்களை தாறுமாறாக மாற்றி கூறியுள்ளார். மேலும் சாலொமோன் பற்றி முஹம்மது கூறியுள்ள விவரங்கள் கண்டனத்திற்கு உரியது. சாலொமோன் ஜின்களிடம் வேலை வாங்கினார், எறும்புகள் பேசுவது அவருக்கு கேட்கும், என்று பல விஞ்ஞான தவறுகளைச் செய்துள்ளார். மொத்தத்தில், ஒரு கிறிஸ்தவர் குர்-ஆனையும், முஹம்மதுவின் போதனைகளையும் கூர்ந்து படிப்பாரானால், பழைய ஏற்பாட்டின் நூல்களை எப்படி முஹம்மது மீறியிருக்கிறார் என்பதை அறிந்துக்கொள்வார். ஏழாம் நூற்றாண்டில் வந்த முஹம்மது, கி.மு. காலத்தில் இருந்த விவரங்களை மாற்றிச் சொல்லியுள்ளார், இது கண்டனத்திற்கு  உரியது, எனவே, கிறிஸ்தவர்கள் இவரை குற்றவாளியாக தீர்ப்பார்களே தவிர, இவரை தீர்க்கதரிசி என்றுச் சொல்லி மிகப்பெரிய பாவத்திற்கு ஆளாகமாட்டார்கள் [92]

93. ஜபூர் (சங்கீதம்) அடிப்படையில் முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்

தாவீதுக்கு ஜபூர் என்ற வேதம் கொடுக்கப்பட்டதாக முஹம்மது குர்-ஆனில் கூறுகிறார். பழைய ஏற்பாட்டில் இருக்கும் சங்கீதம் என்ற புத்தகத்தைத் தான்  ஜபூர் என்று அழைக்கிறது குர்-ஆன். இந்த புத்தகம் முழுக்க முழுக்க ஒரு பாடல் புத்தகமாகும். பல இசைக்கருவிகளை இசைத்து கர்த்தரை துதித்து பாடப்பட்ட பாடல்கள் இதில் உண்டு, இன்னும் வெற்றிகளின் போதும், தோல்விகளின் போதும் துக்கத்தின் போதும் தாவீது பாடிய பாடல்களும் இதில் உண்டு. ஆனால், முஹம்மது இசைக் கருவிகளை இசைப்பது தடுக்கப்பட்டது, அல்லது பாவம் என்றுச் சொல்கிறார். பைபிளின் தேவன் இசையை பாவம் என்றுச் சொல்லவில்லை. இசையை நல்ல  காரியத்திற்காக பயன்படுத்துவதில் தவறில்லை.  இன்னும் பல விஷயங்களில் முஹம்மது ஜபூர் என்னும் சங்கீத நூலை மீறி நடந்துள்ளார். சங்கீதத்தில் 119ம் அதிகாரம், தேவனின் வேதம் பற்றி அனேக முக்கியமான விஷயங்களைக் கூறுகிறது, தேவனுடைய வார்த்தைகளை உயர்த்திப்பேசுகிறது. ஆனால்,முஹம்மது அவைகளைப் பின்பற்றாமல், இன்னொரு புதிய வேதம் என்றுச் சொல்லி, குர்-ஆனைக் கொண்டுவந்து ஜபூருக்கு எதிரான அனேக கருத்துக்களைக் கூறியுள்ளார். இவரை கிறிஸ்தவர்கள் எப்படி தீர்க்கதரிசி என்று நம்புவார்கள்? தேவன் திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன் என்றும் (சங்கீதம் 68:5), தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார் (சங்கீதம் 103:13) என்று ஜபூர் தேவனை தகப்பன் என்று கூறுகிறது. ஆனால், இறைவன் தகப்பன் ஆகமுடியாது என்று முஹம்மது கூறியுள்ளார். சங்கீத நூலுக்கு எதிராக போதித்த முஹம்மதுவை கிறிஸ்தவர்கள் தீர்க்கதரிசி என்று நம்பமுடியாது. [93]

94. தீர்க்கதரிசன புத்தகங்களின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்.

பழைய ஏற்பாட்டில் உள்ள அனேக தீர்க்கதரிசிகளின் பெயர்கள் குர்-ஆனில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. தீர்க்கதரிசிகளின் மத்தியில் நாங்கள் வித்தியாசத்தைக் காட்டக்கூடாது என்றும், முந்தைய தீர்க்கதரிசிகள் கூட முஹம்மது போதித்தையே போதித்தார்கள் என்றும் குர்-ஆன் சொல்கிறது. ஆனால், பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசன புத்தகங்களை நாம் காணும் போது, அவர்கள் இஸ்ரவேல் மக்களை தேவனிடத்திற்கு திருப்பினார்கள், தேவன் அவர்களோடு செய்து இருந்த உடன்படிக்கையின் பக்கம் அவர்களை திருப்பினார்கள். ஆனால் முஹம்மதுவோ, மக்களை ஒரு புதிய இறைவனின் பக்கம், அதுவும் மக்காவினர் வணங்கிய தெய்வமாகிய அல்லாஹ்வின்  பக்கம் திருப்பினார். முஹம்மது பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளைப் போல் மக்களை நடத்தவில்லை, போதிக்கவில்லை. மேலும்,  தீர்க்கதரிசன புத்தகங்கள் தேவனை தகப்பனாக சித்தரிக்கிறது, இஸ்ரவேல் மக்களை பிள்ளைகளாக சித்தரிக்கிறது. ஆனால், முஹம்மதுவோ தன் இறைவன் ஒரு எஜமானன் என்றும், மக்கள் அடிமைகள் என்றும் போதித்தார். பைபிளின் தீர்க்கதரிசன புத்தகங்களுக்கு எதிராக போதித்த, மக்களை வழிகெடுத்த முஹம்மதுவை எப்படி கிறிஸ்தவர்கள் தீர்க்கதரிசி என்று நம்புவார்கள்? இரண்டாவதாக, பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் தங்கள் போதனைக்கு கீழ்படியாத மக்கள் மீது கோபம் கொண்டு, ஒரு தனிப்படையை அமைத்துக்கொண்டு போர் தொடுக்கவில்லை. தனிப்பட்ட முறையில் பழி வாங்கவில்லை. ஆனால், முஹம்மதுவோ தன்னை எதிர்த்த தனிப்பட்ட மனிதர்களையும் விட்டுவைக்கவில்லை. இவர் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்பதற்கு இதைவிட வேறு ஒரு ஆதாரம் தேவையா?[94].

95. யோவான் ஸ்நானகனின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்

யோவான் ஸ்நானகனைப் பற்றி குர்-ஆன் விவரிக்கிறது, இவர் ஒரு தீர்க்கதரிசி என்றும் அங்கீகரிக்கிறது. அல்லாஹ்விடமிருந்து வந்த வார்த்தையை மெய்ப்பிப்பவராக யோவான் இருக்கிறார் என்று குர்-ஆன் சொல்கிறது. இதே யோவான் ஸ்நானகன் இயேசுவைப் பற்றி சாட்சி பகருகிறார். தன்னை விட மேன்மையுள்ளவர் இயேசு என்றும் சாட்சி கூறினார். இயேசுவைப் பற்றி யோவான் ஸ்நானகன் சொன்ன சாட்சிகளில் மிகவும் முக்கியமானது, இயேசுவைப் பார்த்து "இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி" என்று சாட்சி கூறினார். ஆனால் முஹம்மது இதனை மறுக்கிறார். முஹம்மது, யோவான் ஸ்நானகனுக்கு எதிராக போதித்தார். எனவே, யோவானின் சாட்சியின் படி முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசியாவார். கிறிஸ்தவர்கள் யோவானின் சாட்சியை நம்புகிறார்கள், முஹம்மதுவின் பொய் மூட்டைகளை நம்புவதில்லை. எனவே முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று முத்திரையிட்டு, இஸ்லாமை கிறிஸ்தவர்கள் புறக்கணிக்கிறார்கள். [95]

96. இயேசுவின் படி (இன்ஜிலின் படி) முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்

கிறிஸ்தவத்தின் ஆணிவேர் இயேசுக் கிறிஸ்து. இஸ்லாமின் அஸ்திபாரம் முஹம்மது. இயேசுவின் போதனையும், தன்னுடைய போதனையும் ஒன்று தான் என்று முஹம்மது கூறினார். இயேசுவும் இஸ்லாமைத் தான் போதித்தார் என்று இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால், இயேசுவின் போதனைகளை நாம் நற்செய்தி நூல்களில் காணும் போதும், அவைகளை குர்-ஆனின் போதனைகளோடும், முஹம்மதுவின் போதனைகளோடும் ஒப்பிடும் போதும் வானத்திற்கும் பூமிக்கும் இடையே இருக்கும் தூரத்தைப் போன்று மிகப்பெரிய வித்தியாசத்தை காணமுடியும். இயேசு போதித்த ஒவ்வொரு விஷயத்திலும் முஹம்மது வித்தியாசப்படுகிறார். இயேசுவின் தெய்வீகத்தன்மையை முஹம்மது மறுக்கிறார். மக்கள் உயர்ந்த தரத்தோடு வாழவேண்டும் என்று இயேசு வரையறைத்துச் சென்றார், ஆனால், முஹம்மது இயேசுவைப் பின்பற்றாமல்,  மக்களின் வாழ்க்கைத் தரத்தை தரைமட்டமாக்கிவிட்டார். அன்புடனும் சமாதானத்துடனும் மக்கள் வாழ இயேசு கற்றுக்கொடுத்தார், ஆனால், வெறுப்புணர்வுடனும் வெறியுடனும் மக்கள் வாழ முஹம்மது வழி காட்டினார். ஒரு பெண்ணை இச்சையோடு பார்ப்பதே விபச்சாரம் செய்த பாவத்திற்கு சமம் என்று இயேசு போதித்தார், ஆனால், முஹம்மதுவோ, அடிமைகளை கற்பழிக்க, அவர்களோடு விபச்சாரம் செய்ய அனுமதி அளித்தார். இப்படி இவ்விருவருக்கும் இடையே இருக்கும் வித்தியாசங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இயேசுவை தெய்வமாக தொழுதுக்கொள்ளும் கிறிஸ்தவர்கள், முஹம்மதுவை ஒரு போதும் நபி என்று ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். கிறிஸ்தவர்கள் இயேசுவை தெய்வமாக மட்டுமல்ல, உயிர் நண்பராகவும், சகோதரராகவும் நினைத்து நேசிக்கிறார்கள். கிறிஸ்து இல்லாதவன் ஜீவன் இல்லாதவன் என்பதை கிறிஸ்தவர்கள் அறிவார்கள். யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் முஹம்மது சபித்தார் மேலும் அவர்களை குற்றப்படுத்தினார். இயேசு அறிவித்தது போல, முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி தான் என்பதில் கிறிஸ்தவர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.[96]

97.  அப்போஸ்தலர் நடபடிகளின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்

புதிய ஏற்பாட்டின் அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகம், ஆதித் திருச்சபையின் ஆரம்பத்தையும், சபையின் வளர்ச்சியையும் அப்போஸ்தலர்களின் ஊழியத்தையும் தெளிவாக விவரிக்கிறது. பரிசுத்த ஆவியானவரின் நடபடிகள் என்றும் இப்புத்தகத்தைச் சொல்லலாம். இயேசு தன் அப்போஸ்தலர்களின் மூலமாக அற்புத அடையாளங்களை நடப்பித்து, தன் தெய்வீகத்தன்மையை நிருபித்தார். ஆனால், முஹம்மதுவோ, இவைகள் அனைத்தையும் மறுத்தார், இவைகள் பொய்யானவைகள் என்றுச் சொல்லி, ஒரு புதிய கள்ளப் போதனையை கொண்டுவந்தார். அப்போஸ்தலர் நடபடிகளின் படி முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி ஆவார், கிறிஸ்துவிற்கு எதிரியாவார். அப்போஸ்தலவர்களின் ஊழியத்தை மறுதலித்த இவரை கிறிஸ்தவர்கள் எப்படி ஒரு உண்மையான தீர்க்கதரிசியாக கருதமுடியும்? அப்போஸ்தலர் நடபடிகளின் முதல் அத்தியாயமே இஸ்லாம் ஒரு கள்ளபோதமுள்ள மார்க்கம் என்று முத்திரை போடுகின்றது, முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி என்று அடித்துச் சொல்கிறது. இயேசு உயிர்தெழுந்துவிட்டப் பின்பு, சீடர்களுக்கு ஊழிய கட்டளைகளைக் கொடுத்து, அதன் பின்பு சீடர்களின் கண்களுக்கு முன்பாக மறுபடியும் வானத்திற்குச் சென்றதை இந்த அத்தியாயத்தில் காணமுடியும். இந்த ஒரே அத்தியாயம் இஸ்லாமின் அஸ்திபாரத்தை இடித்து தரைமட்டமாக்குகிறது. முழு புத்தகத்தை படிக்கும் போது, பிதாவாகிய தேவன், குமாரனாகிய இயேசுக் கிறிஸ்து பரிசுத்த ஆவியானவர் எப்படி செயல்பட்டு திருச்சபையை நிறுவினார்கள் என்பதை காணமுடியும். எனவே, அப்போஸ்தலர் நடபடிகளின் படி, முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் திடநம்பிக்கையோடுச் சொல்வார்கள்.[97]

98. இயேசுவின் சீடர் போதுருவின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்

இயேசுவின் பிரதான சீடர் அப்போஸ்தலர் பேதுரு ஆவார். முன்றரை ஆண்டுகள் இயேசுவோடு இருந்து, அவருடைய உள்வட்ட முக்கிய சீடர்களில் ஒருவராக இருந்தவர் இவர். இவர் திருச்சபைக்கு கடிதங்கள் எழுதும் போது, இயேசுவின் தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக அனேக முக்கியமான விஷயங்களை எழுதியுள்ளார். இவரது இரண்டு கடிதங்களும் இஸ்லாமுக்கு மரண அடியை கொடுக்கிறது, முஹம்மது ஒரு கள்ள நபி என்று அடித்துச் சொல்கிறது. இஸ்லாமின் முகத்தில் கரியை பூசுகிறது 1 பேதுரு  மற்றும் 2 பேதுரு கடிதங்கள். பேதுரு தன் கடிதங்களில் "இயேசு மரித்தோரிலிருந்து எழுந்தார்" என்றும், "குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டோம்" என்றும் கூறுகிறார். மேலும் இயேசு "உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து" என்றுச் சொல்லி இயேசுவின் தெய்வீகத்தை பறைசாற்றுகிறார். பேதுரு "அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்;" என்றுச் சொல்லி, குர்-ஆனை மண்ணைக் கவ்வ வைத்தார். இன்னும் "தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது" என்று எழுதி, இயேசுவின் வல்லமையை வெளிப்படுத்தினார். முஹம்மதுவைப் போல கட்டுக்கதைகளை சொல்பவர்கள் நாங்கள் அல்ல என்பதை தெளிவாக விளக்குகிறார் பேதுரு. தேவனின் சத்தத்தை நாங்கள் கேட்டோம் என்று சாட்சி சொல்கிறார். முடிவாக, முஹம்மது போன்ற கள்ளத்தீர்க்கதரிசிகள் வருவார்கள், எனவே எச்சரிக்கையாக இருங்கள் என்றுச் சொல்லி எச்சரிக்கிறார். இப்படிப்பட்ட அப்போஸ்தலர்களின் போதனைகளை கேட்டு, அவைகளை பின் பற்றும் கிறிஸ்தவர்கள் ஒரு காலத்திலும் முஹம்மதுவை தீர்க்கதரிசி என்று நம்பமாட்டார்கள்.[98]

99. இயேசுவின் சீடர் யோவானின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்

இயேசுவின் முக்கிய சீடர்களில் யோவான் என்பவரும் ஒருவர். இவர் இயேசுவோடு இருந்தவர், அவரோடு மூன்றரை ஆண்டுகள் நெருங்கி வாழ்ந்தவர். இவரது கடிதங்களை நாம் பார்க்கும் போது, முஹம்மது ஒரு கள்ள நபி என்பது நிருபனமாகிவிடும். அதாவது முஹம்மது இயேசுவைப் பற்றி எவைகளையெல்லாம் மறுக்கிறாரோ, அவைகளையெல்லாம் இவர் தொட்டுப்பேசுகிறார். கடைசியாக, முஹம்மதுவைப்போல கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாக இருக்கும்படி சொல்கிறார். யோவான் இயேசுவை "ஆதிமுதல் இருந்தவர், ஜீவ வார்த்தை" என்று கூறுகிறார். தேவனை பிதா என்றும், இயேசுவை குமாரன் என்றும் அழைக்கிறார். மேலும் "அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்" என்றுச் சொல்லி சிலுவை மரணத்தை சுட்டிக்காட்டுகிறார். இந்த வார்த்தைகள் குர்-ஆனின் அஸ்திபாரத்தை தகர்த்துவிடுகின்றது. முஹம்மதுவின் போதனைகள் பொய் என்று அடித்துச் சொல்கிறது.  இயேசு "சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்" என்றுச் சொல்கிறார்.

மேலும், "இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து." என்று யோவான் சொல்வதைப் பார்த்தால், இது எதிர் காலத்தில் வரவிருக்கும் கள்ள  போதனைச் செய்த முஹம்மதுவைப் பற்றிய தீர்க்கதரிசனம் போல இருக்கிறது. இதுமட்டுமா, தீய ஆவிகளை அறிந்துக்கொள்ளுங்கள் என்றுச் சொல்கிறார், "உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்".  இதன் அடிப்படையில் நாம் முஹம்மதுவை சோதித்தால், அவருக்கு குர்-ஆனை போதித்த ஆவி, தேவனால் உண்டானது அல்ல என்பதை நாம் அறியலாம்.

உலக மக்கள் தேவனுடைய பிள்ளைகள் என்றுச் சொல்கிறார். இது முஹம்மதுவின் போதனைக்கு எதிரானதாகும்.  இன்னும் அனேக விஷயங்களை யோவான் கூறியிருக்கின்றார். இவைகளை படிக்கும் கிறிஸ்தவர்கள் முஹம்மதுவைப் பார்த்து, இவர் கள்ளத்தீர்க்கதரிசி என்றுச் சொல்வதில் எந்த தவறேதுமில்லை. முஹம்மதுவை மறுதலிப்பவன் தான் உண்மை கிறிஸ்தவன், குமாரனை உடையவனே ஜீவனை உடையவன்.[99]

100. அப்போஸ்தலர் பவுலடியாரின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்

யூதரல்லாத மக்களின் மத்தியில் கர்த்தரால் வல்லமையாய்  பயன்படுத்தப்பட்ட அப்போஸ்தலர்களில் பவுலடியாரும் ஒருவர். இவர் அனேக கடிதங்களை சபைகளுக்கு எழுதியுள்ளார். இயேசுவின் பாடுகள், சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் பற்றி, இயேசுவின் இதர சீடர்கள் கூறியது போன்று எழுதியுள்ளார். ஆதித்திருச்சபையின் தூண்களாக எண்ணப்பட்ட பேதுரு, யோவான் மற்றும் யாக்கோபு போன்ற அப்போஸ்தலர்களை சந்தித்து, யூதரல்லாத மக்களின் மத்தியில் ஊழியம் செய்து, அனேக சபைகளை ஸ்தாபித்தவர் இவர். பரிசுத்த ஆவியானவர் இவரைக் கொண்டு அனேக எழுதிய கடிதங்களை எழுதவைத்தார். அப்போஸ்தலர் பவுலடியாரின் கடிதங்களை படித்த ஒரு கிறிஸ்தவர் முஹம்மதுவை ஒரு கள்ளத் தீர்க்கதரிசி என்று கூறுவார்.. கிறிஸ்துவிற்கு எதிராகவும், பைபிளுக்கு எதிராகவும் போதித்த முஹம்மது எப்படி ஒரு உண்மையான தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்? பைபிளின் அனைத்து புத்தகங்களின் சாராம்சம் இயேசுக் கிறிஸ்து மூலமாக தேவன் கொடுத்த இரட்சிப்பு பற்றி பேசுகின்றது. இயேசுவின் தெய்வீகத்தன்மையை மறுக்கும் முஹம்மது கள்ள மார்க்கத்தை போதித்த, கள்ளத் தீர்க்கதரிசியாக தீர்க்கப்படுகின்றார். [100]

101. வெளிப்படுத்தின விசேஷத்தின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்.

பைபிளின் கடைசி புத்தகம் வெளிப்படுத்தின விசேஷம். இது பைபிளின் முத்திரையாக இருக்கிறது. இந்த புத்தகத்திற்கு பின்பு ஒரு புதிய வெளிப்பாடு தேவையில்லை, ஒரு புதிய தீர்க்கதரிசி தேவையில்லை. இந்த புத்தகம் இஸ்லாம் போன்ற கள்ள மார்க்கத்திற்கு சாவுமணி அடிக்கிறது. இயேசுவின் தெய்வீகத்தன்மையை மறுக்கும் அனைத்திற்கும் இது பதில் தருகிறது. இயேசு இராஜாதி இராஜாவாகவும், சர்வ வல்லமையுள்ளவராகவும், அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவராகவும், சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறவாராகவும், ஆதியும் அந்தமுமானவராகவும் இந்த புத்தகத்தில் காணப்படுகிறார். மேலும், உலக முடிவின் போது, எல்லா மக்களையும், முக்கியமாக முஹம்மதுவையும் நியாயந்தீர்க்கப்போகிறவராகவும் இயேசு காணப்படுகிறார். இந்த புத்தகத்தை படிக்கும் கிறிஸ்தவர் முஹம்மதுவை  ஒரு உண்மையான தீர்க்கதரிசி என்று ஏற்றுக்கொள்ளவே மாட்டார். இனி ஒரு புதிய மார்க்கத்தைக் கொண்டு வரும் தீர்க்கதரிசி தேவையில்லை என்று இப்புத்தகம் அடித்துச் சொல்கிறது. இஸ்லாமியர்கள் எவ்வளவு கூக்குரல் போட்டு, சத்தமாக முஹம்மதுவை நபி என்றுச் சொன்னாலும், இந்த ஒரு புத்தகம், அவர்களின் சத்தத்தை அமைதியாக்கி விடுகின்றது. ஒரு மனிதன் இந்த புத்தகத்தை படித்துவிட்டு, முஹம்மதுவை ஒரு தீர்கக்தரிசி என்றுச் சொல்லமாட்டான், அப்படி ஒருவன் சொல்வானானால், அவனுக்கு பைத்தியம் பிடித்து இருக்கிறது என்றுச் சொல்லி மருத்துவமனையில் சேர்க்கவேண்டும். இதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. எனவே, முஹம்மதுவை கிறிஸ்தவர்கள் கள்ளத் தீர்க்கத்தரிசி என்றுச் சொல்கிறார்கள், இது உண்மையும், எல்லா அங்கீகரிப்பிற்கு ஏற்றதுமாயிருக்கிறது. [101]

முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் நம்புவதற்கு இன்னும் அனேக காரணங்கள் உண்டு, அவைகளை அடுத்த பதிவில் காண்போம். இதோடு 101 காரணங்கள் முடிவடைகின்றது. 

அடிக்குறிப்புக்கள்:

அனைத்து குர்-ஆன் வசனங்கள் "முஹம்மது ஜான்" குர்-ஆன் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.

[91] லேவி 11:1-4, உபாகமம் 14:7, குர்-ஆன் 22:36, 6:144 & ஸஹீஹ் புகாரி 982, 1551 & 1712

லேவி 11:1 கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: 2 நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், 3 மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும் அசைபோடுகிறது மானவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம். 4 ஆனாலும் அசைபோடுகிறதும் விரிகுளம்புள்ளதுமானவைகளில் ஒட்டகமானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லாதபடியால், அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.

உபாகமம் 14:7 அசைபோடுகிறவைகளிலும், விரிகுளம்புள்ளவைகளிலும், நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: ஒட்டகமும், முசலும், குழிமுசலுமே; அவைகள் அசைபோட்டும் அவைகளுக்கு விரிகுளம்பில்லை; அவைகள் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.

குர்-ஆன் 22:36 & 6:144

22:36. இன்னும் (குர்பானிக்கான) ஒட்டகங்கள்; அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளங்களிலிருந்தும் நாம் ஆக்கியிருக்கிறோம்; உங்களுக்கு அவற்றில் மிக்க நன்மை உள்ளது; எனவே (அவை உரிய முறையில்) நிற்கும் போது அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குர்பான் செய்)வீர்களாக; பிறகு, அவை தங்கள் பக்கங்களின் மீது சாய்ந்து கீழே விழுந்(து உயிர் நீத்)த பின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், இறப்போருக்கும் உண்ணக் கொடுங்கள் - இவ்விதமாகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம்.

6:144. இன்னும், "ஒட்டகையில் (ஆண், பெண்) இரு வகை மாட்டிலும் (பசு, காளை) இரு வகையுண்டு - இவ்விரு வகைகளிலுள்ள ஆண்களையா அல்லது பெட்டைகளையா அல்லது இவ்விரு வகையிலுள்ள பெட்டைகளின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (இறைவன்) தடுத்திருக்கிறான். இவ்வாறு அல்லாஹ் கடடளையிட்ட(தாகக் கூறுகிறீர்களே, அச்)சமயம் நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா?" என்றும் (நபியே!) நீர் கேளும் - மக்களை வழி கெடுப்பதற்காக அறிவில்லாமல் அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அல்லாஹ் இத்தகைய அநியாயக் காரக் கூட்டத்தினருக்கு நேர்வழி காட்டமாட்டான்.

ஸஹீஹ் புகாரி 982, 1551 & 1712

982. இப்னு உமர்(ரலி) அறிவித்தார் 

நபி(ஸல்) அவர்கள் தொழும் திடலிலேயே ஆடு மாடுகளையும் ஒட்டகங்களையும் அறுப்பவர்களாக இருந்தனர். Volume :1 Book :13

1551. அனஸ்(ரலி) அறிவித்தார். 

நாங்கள் நபி(ஸல்) அவர்களோடு இருந்தோம். அவர்கள் மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹர் தொழுதார்கள். துல் ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் அஸர் தொழுதார்கள். பிறகு விடியும் வரை அங்கேயே தங்கிவிட்டு மீண்டும் வாகனத்தின் மீதமர்ந்து பைதா எனுமிடத்தில் வாகனம் நிலைக்கு வந்தபோது 'அல்ஹம்துலில்லாஹ், ஸுப்ஹானல்லாஹ், அல்லாஹு அக்பர்' எனக் கூறினார்கள். பிறகு ஹஜ், உம்ரா இரண்டிற்காகவும் இஹ்ராம் அணிந்து, தல்பியா கூறினார். நாங்கள் மக்கா வந்து (உம்ராவை முடித்த போது) இஹ்ராமிலிருந்து விடுபடும்படி மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். மக்கள் துல்ஹஜ் பிறை எட்டு அன்று ஹஜ்ஜுக்காக மீண்டும் இஹ்ராம் அணிந்தார்கள்.  நபி(ஸல்) அவர்கள் ஒட்டகங்களை நிற்கவைத்துத் தம் கைகளாலேயே அறுத்தார்கள். இன்னும் நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் பெருநாளில் இரண்டு கருப்பு நிறம் கலந்த வெள்ளை நிற ஆடுகளை அறுத்தார்கள். Volume :2 Book :25

1712. அனஸ்(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் ஏழு ஒட்டகங்களை நிற்க வைத்துத் தம் கையாலேயே அறுத்தார்கள். மேலும் அவர்கள் மதீனாவில், பெரிய கொம்புகளையுடைய, கருப்பு நிறம் கலந்த வெள்ளை நிற ஆடுகள் இரண்டையும் குர்பானி கொடுத்தார்கள். Volume :2 Book :25

[92] முக்கிய குர்-ஆன் வசனங்கள்:  21:79-82, 27:15-45, 34:10-19, 38:20-39

பழைய ஏற்பாட்டு நிகழ்வுகளை மாற்றி பதிவு செய்த குர்-அன் வசனங்கள்:

1. தாவீதும் வழக்காளிகளும்: 38:21-25

2. மலைகளை தாவீதுக்கு வசப்படுத்திக்கொடுக்கப்பட்டது 21:79

3. மலைகளையும், பறவைகளையும் அல்லாஹ்வை துதிக்க ஒன்று சேர்த்த தாவீது: 34:10, 38:18-19

4. பறவைகளின் மொழியையும், இதர எல்லாவற்றையும் அறிந்திருந்த சாலொமோன்:  27:16

5. காற்றுக்கு சாலொமோன் கட்டளைக் கொடுத்தல்: 21:81, 34:12, 38:36

6. சாத்தான்களை ஆண்டுக்கொண்ட சாலொமோன்:  21:82, 34:12-13, 38:37-39

7. சாலொமோன் காலத்தில் சோதிக்கப்பட்ட மலக்குகள் (தூதர்கள்):  2:102-103

8. பறவைகளை பரிசீலனை செய்த சாலொமோன்:  27:17,20-21

9. ஷேபா அரசியின் செய்தியை ஹூது ஹூது பறவை கொண்டு வந்து சேர்த்தல்:  27:22-26

10.  ஹூது ஹூது பறவையை சாலொமோன் தூதாக அனுப்புதல்:  27:27-28

11. எறும்புகளின் பேச்சும் சாலொமோனும்:  27:18-19

12. சாலொமோனின் மரணம்: 34:14

[93] குர்-ஆன் 4:163, 17:55, 21:105 & ஸஹீஹ் புகாரி எண் 5590

4:163. (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்றாஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர்(என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.

17:55. உம்முடைய இறைவன் வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்களைப் பற்றி நன்கு அறிவான்; நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத் திட்டமாக நாம் மேன்மையாக்கியிருக்கிறோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்) கொடுத்தோம்.

21:105. நிச்சயமாக நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி) நினைவூட்டிய பின்: "நிச்சயமாக பூமியை (ஸாலிஹான) என்னுடைய நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள் என்று எழுதியிருக்கிறோம்.

ஸஹீஹ் புகாரி எண் 5590

5590. அப்துர் ரஹ்மான் இப்னு ஃகன்கி அல்அஷ்அரீ(ரஹ்) கூறினார் 

'அபூ ஆமிர்(ரலி)' அல்லது 'அபூ மாலிக் அல்அஷ்அரீ(ரலி)' என்னிடம் கூறினார்கள் - அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை. (அவர்கள் கூறினார்)  நான் நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்: 

என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவி கேட்டுச்) செல்வான். அப்போது அவர்கள், 'நாளை எங்களிடம் வா' என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்களின் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்துவிடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றிவிடுவான். Volume :6 Book :74

[94] குர்-ஆன் 2:136, 3:3, 4:136 & ஸஹீஹ் முஸ்லிம் எண்: 3682

2:136. (முஃமின்களே!)"நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்" என்று கூறுவீர்களாக.

3:3. (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் (படிப்படியாக) அவன் தான் உம் மீது இறக்கி வைத்தான்; இது-இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான்.

4:136. முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும், இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெது தூரம் சென்றுவிட்டார்.

ஸஹீஹ் முஸ்லிம் எண்: 3682

பாடம் : 42 யூதர்களின் தலைவன் கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப்படுதல்.

3682. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கஅப் பின் அல்அஷ்ரஃபை வீழ்த்துவதற்கு (தயாராயிருப்பவர்) யார்? அவன் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்துவிட்டான்" என்று சொன்னார்கள்.

உடனே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நான் அவனைக் கொல்வதை தாங்கள் விரும்புகிறீர்களா?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆம்" என்று விடையளித்தார்கள்.

முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்பவைப்பதற்காக உங்களைக் குறை கூறிப்) பேச என்னை அனுமதியுங்கள்" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பேசு" என அனுமதியளித்தார்கள்.

முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் கஅப் பின் அல்அஷ்ரஃபிடம் சென்று, "இந்த மனிதர் (முஹம்மத் -ஸல்), எங்களிடம் (மக்களுக்குத் தருவதற்காக) தான தர்மத்தை விரும்புகிறார். எங்களுக்குக் கடும் சிரமம் தந்துவிட்டார்" என்று (நபி (ஸல்) அவர்களைக் குறை கூறி சலித்துக்கொள்ளும் விதத்தில்) கூறினார்கள். இதைக் கேட்ட கஅப் பின் அல்அஷ்ரஃப், "அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னும் அதிகமாக நீங்கள் அவரிடம் சலிப்படைவீர்கள்" என்று கூறினான்.

அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரை இப்போது பின்பற்றிவிட்டோம். அவரது விவகாரம் எதில் முடிவடைகிறது என்பதைப் பார்க்காமல் அவரைவிட்டு (விலகி)விட நாங்கள் விரும்பவில்லை. (அதனால்தான் அவருடன் இருந்துகொண்டிருக்கிறோம்)" என்று (சலிப்பாகப் பேசுவதைப் போன்று) கூறிவிட்டு, நீர் எனக்குச் சிறிதளவு கடன் தர வேண்டும் என நான் விரும்புகிறேன்" என்று கூறினார்கள்.

அதற்கு கஅப், "இதற்காக நீ எதை அடைமானம் வைக்கப்போகிறாய்?" என்று கேட்டான். அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நீ என்ன விரும்புகிறாய்?" என்று கேட்டார்கள். அதற்கு கஅப், "உங்கள் பெண்களை என்னிடம் அடைமானம் வையுங்கள்" என்று சொன்னான். முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நீர் அரபுகளிலேயே மிகவும் அழகானவர். எங்கள் பெண்களை அடைமானம் வைக்க வேண்டுமா? (அடைமானம் மூலம்தான் பெண்களை அடைய வேண்டிய அவசியம் உமக்கு இல்லை)" என்று சொன்னார்கள்.

"(அப்படியானால்) உங்கள் குழந்தைகளை என்னிடம் அடைமானம் வையுங்கள்" என்று கஅப் கேட்டான். அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "(எங்கள் குழந்தைகளை எப்படி அடைமானம் வைப்பது?) எங்கள் புதல்வர்களில் ஒருவர் ஏசப்பட்டால், அப்போது "இவன் இரண்டு "வஸ்க்" பேரீச்சம் பழங்களுக்காக அடைமானம் வைக்கப்பட்டவன்" என்றல்லவா ஏசப்படுவான்? (இது எங்களுக்கு அவமானமாயிற்றே?) எனவே, உன்னிடம் (எங்கள்) ஆயுதங்களை அடைமானம் வைக்கிறோம்" என்று கூறினார்கள். "அப்படியானால் சரி" என கஅப் (சம்மதம்) தெரிவித்தான்.

பிறகு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், ஹாரிஸ் பின் அவ்ஸ், அபூஅப்ஸ் பின் ஜப்ர், அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) ஆகியோருடன் பிறகு வருவதாக வாக்களித்துவிட்டுச் சென்றார்கள்.

அவ்வாறே அவர்கள் ஓரிரவில் வந்து அவனை அழைத்தார்கள். கஅப் (தனது கோட்டையிலிருந்து) அவர்களிடம் இறங்கிவந்தான்.

-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: எனக்கு இதை அறிவித்த அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் அல்லாத மற்றொருவரது அறிவிப்பில் "கஅபின் மனைவி அவனிடம், "நான் ஒரு சப்தத்தைக் கேட்கிறேன். அது இரத்தப் பலி கோருபவனின் குரலைப் போன்றுள்ளது" என்று கூறினாள்.

அதற்கு கஅப் "அவர் (வேறு யாருமல்லர்) முஹம்மத் பின் மஸ்லமாவும் அவருடைய பால்குடிச் சகோதரர் அபூநாயிலாவும் தாம். மேன்மக்களில் ஒருவன் ஈட்டி எறிய இரவு நேரத்தில் அழைக்கப்பட்டாலும் அவன் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவே செய்வான்" என்று கூறினான் என இடம்பெற்றுள்ளது.

அப்போது முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் (தம் சகாக்களிடம்), "கஅப் பின் அல் அஷ்ரஃப் வந்தால் நான் அவனது தலையை நோக்கி (அவனது தலையிலுள்ள நறுமணத்தை நுகருவதற்காக) எனது கையை நீட்டுவேன். அவனது தலையை எனது பிடிக்குள் நான் கொண்டு வந்துவிட்டதும் அவனைப் பிடித்து (வாளால் வெட்டி)விடுங்கள்" என்று கூறினார்கள்.

கஅப் பின் அல்அஷ்ரஃப் (தனது ஆடை அணிகலன்களை) அணிந்துகொண்டு நறுமணம் கமழ இறங்கிவந்தான். அப்போது முஹம்மத் பின் மஸ்லமாவும் சகாக்களும், "உம்மிடமிருந்து நல்ல நறுமணத்தை நாங்கள் நுகருகிறோம்" என்று கூறினர். அதற்கு கஅப் "ஆம்; என்னிடம் இன்ன பெண் (மனைவியாக) இருக்கிறாள். அவள் அரபுப் பெண்களிலேயே மிகவும் வாசனையுடைய நறுமணத்தைப் பாவிக்கக்கூடியவள்" என்று கூறினான்.

முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "உமது தலையிலுள்ள நறுமணத்தை நுகர எனக்கு அனுமதியளிப்பீரா?" என்று கேட்டார்கள். அதற்கு கஅப் "ஆம்; நுகர்ந்து கொள்" என அனுமதியளித்தான்.

அவ்வாறே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் அவனது தலையைப் பிடித்துக் கொண்டு நுகர்ந்தார்கள். பிறகு, "மீண்டும் ஒருமுறை நுகர என்னை அனுமதிப்பீரா?" என்று கேட்டார்கள். இவ்வாறு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் அவனைத் தம் வசம் கொண்டு வந்தபோது "பிடியுங்கள்" என்று கூறினார்கள். உடனே அவர்கள் அனைவரும் (சேர்ந்து) அவனைக் கொன்றுவிட்டனர்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. 

[95] குர்-ஆன் 3:39, யோவான் 1:6-8, 15, 29, 30

3:39. அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து: "நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்; அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்" எனக் கூறினர்.

யோவான்  1:6 தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான்.7 அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக் குறித்துச்சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான். 8 அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான். 15 யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான்.

29 மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. 30 எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர்தான்.

[96] மத்தேயு அத்தியாயங்கள் 5,6,7 & குர்-ஆன் 5:18 & ஸஹீஹ் முஸ்லிம் 4371 & ஸஹீஹ் புகாரி எண் 1330, 3462 & 5899

குர்ஆன் 5:18

யூதர்களும், கிறிஸதவர்களும் "நாங்கள் அல்லாஹ்வின் குமாரர்கள் என்றும்' அவனுடைய நேசர்கள்" என்றும் கூறுகிறார்கள்.அப்படியாயின் உங்கள் பாவங்களுக்காக உங்களை அவன் ஏன் வேதனைப் படுத்துகிறான். அப்படியல்ல! "நீங்கள் அவன் படைத்தவற்றைச் சேர்ந்த மனிதர்கள்தாம்" என்று (நபியே!) நீர் கூறும். தான் நாடியவர்களை அவன் மன்னிக்கிறான். தான் நாடியவர்களைத் தண்டிக்கவும் செய்கிறான். இன்னும் வானங்களிலும், பூமிலும், அவற்றிற்கிடையேயும் இருக்கும் எல்லாவற்றின் மீதுமுள்ள ஆட்சி அவனுக்கே உரியது. மேலும், அவன் பக்கமே (எல்லோரும்) மீள வேண்டியிருக்கின்றது.

ஸஹீஹ் முஸ்லிம் 4371

4371. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யூதர்கள் உங்களுக்கு முகமன் (சலாம்) கூறினால் அவர்களில் சிலர் "அஸ்ஸாமு அலைக்க" (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்றே கூறுவர். ஆகவே, (அவர்களுக்குப் பதிலாக) "அலைக்க" (நீ சொன்னது உனக்கு உண்டாகட்டும்) என்று கூறுவீராக.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. Book :39

ஸஹீஹ் புகாரி எண் 1330

1330. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்தபோது, 'யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிவிட்டனர்" என்று கூறினார்கள்.

பயம் மட்டும் இல்லையாயின் நபி(ஸல்) அவர்களின் கப்ரைத் திறந்த வெளியில் நபித் தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கஸ்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன். Volume :2 Book :23

ஸஹீஹ் புகாரி 3462 & 5899

3462. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. எனவே, நீங்கள் (அவற்றிற்குக் கருப்பு அல்லாத சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள். என அபூ ஹுரைரா(ரலி) கூறினார். Volume :4 Book :60

5899. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

யூதர்களும் கிறிஸ்தவர்களும் (முடிகளுக்குச்) சாயமிடுவதில்லை; எனவே, நீங்கள் (முடிகளுக்குச் சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்தார்கள்.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :6 Book :77

[97] அப் நடபடிகள் 1: 4-11 வசனங்கள்

அப் 1:4 அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.

5 ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.

6 அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள்.

7 அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.

8 பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

9 இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது.

10 அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டு பேர் அவர்களருகே நின்று:

11 கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.

[98] 1 பேதுரு 1:4, 18-20; 2:24-25; 3:22; 2 பேதுரு 1:16-18, 2:1,2

1 பேதுரு

4 அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்.

18 உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல்,

19 குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.

20 அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார்.

1 பேதுரு 2

2:24 நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.

2:25 சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தீர்கள்; இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள்

1 பேதுரு 3

22 அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.

2 பேதுரு 1

16 நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்.

17 இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது,

18 அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக்கேட்டோம்.

2 பேதுரு 2

1 கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.

2 அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள்நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்.

[99] 1 யோவான் 1:1-3, 7; 2:2, 22: 3:1; 4:1-3, 8-9, 14; & 2 யோவான் 1:7,10 

1 யோவான்

1:1 ஆதிமுதலாய் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டுப்பார்த்ததுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.

1:2 அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்தும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக்குறித்துச் சாட்சிக்கொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம்.

1:3 நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.

1:7 அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

2:2 நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.

2:22 இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.

3:1 நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.

4:1 பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.

4:2 தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது.

4:3 மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.

4:8 அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்.

4:9 தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.

4:14 பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம்.

2 யோவான்

1:7 மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.

1:10 ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக்கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்.

[100] ரோமர் 1:5; 5:8,9;6:23; 8:15,16; 14:9

ரோமர் 1:5 மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.

5:8 நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.

5:9 இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.

6:23 பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

8:15 அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.

8:16 நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்.

14: 9 கிறிஸ்துவும் மரித்தோர்மேலும் ஜீவனுள்ளோர்மேலும் ஆண்டவராயிருக்கும்பொருட்டு, மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறார்.

அடிக்குறிப்புக்கள் சுருக்கமாக இருக்கவேண்டும் என்பதற்காக, ரோமருக்கு எழுதிய நிருபத்திலிருந்து மட்டுமே ஒரு சில வசனங்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. 

[101] வெளிப்படுத்தின விசேஷம் 1:8, 3:14, 5:5, 5:6,7,8,13,14, 19:11-13, 22:13

இயேசு சர்வவல்லமையுள்ள கர்த்தர்:

1:8 இருக்கிறவரும் இருந்தவரும் இனிவருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.

இயேசு, சிருஷ்டிக்கு முந்தினவர்

3:14 லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;

இயேசு, பழைய ஏற்பாட்டில் முன்னுரைக்கப்பட்ட மேசியா

5: 5 அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.

இயேசு, அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி

5:6 அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்டவண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக்கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்.

5:7 அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார்.

5:13 அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்.

5:14 அதற்கு நான்கு ஜீவன்களும் ஆமென் என்று சொல்லின. இருபத்து நான்கு மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள்.

இயேசு, தொழுகைக்கு பாத்திரர்

5:8 அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து:

இயேசு, இராஜாதி இராஜா, கர்த்தாதி கர்த்தர்

19:11 பின்பு, பரலோகம் திறந்திருக்கக்கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.

19:12 அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப்போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது.

19:13 இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.

கிறிஸ்து, ஆரம்பமும் முடிவுமாக இருப்பவர்

22: 13 நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.

உமரின் இதர கட்டுரைகள்


© Answering Islam, 1999 - 2013. All rights reserved.