ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

முஹம்மது ஒரு பாவியா? பாகம் 2: ஹதீஸ்களின் சாட்சி

முஹம்மது ஒரு பாவியா? பாகம் 2: ஹதீஸ்களின் சாட்சி

("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)

WAS MUHAMMAD A SINNER - PART 2

ஆசிரியர்: சைலஸ்

முஹம்மது ஒரு பாவி தான் என்று குர்‍ஆன் சொல்லும் சாட்சியை இங்கு முதல் பாகத்தை சொடுக்கி படிக்கவும்.

ஹதீஸ்களிலிருந்து ஆதாரங்கள்: 

புகாரி ஹதீஸ்களில் உள்ள முஹம்மதுவின் வேண்டுதல்களின் சுருக்கத்தை இந்த கட்டுரையின் முதல் பாகத்தின் ஆரம்பத்தில் நான் கொடுத்து இருந்தேன். இப்போது, அந்த நான்கு ஹதீஸ்களை முழுவதுமாக இங்கு படிப்போம்.

பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6306 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

'அல்லாஹும்ம! அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கல்க்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து. அபூ உ லக்க பி நிஅமத்திக்க அலய்ய, வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துன}ப இல்லா அன்த்த' என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரலாகும். 

(பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட் கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக்கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.) …. 

என ஷத்தாத் இப்னு அவ்ஸ்(ரலி) அறிவித்தார் 

பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6368 

ஆயிஷா(ரலி) அறிவித்தார். 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' … 

(பொருள்: இறைவா! உன்னிடம் நான் சோம்பலிலிருந்தும், தள்ளாமையிலிருந்தும் பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும், மண்ணறையின் சோதனையிலிருந்தும், அதன் வேதனையிலிருந்தும், நரகத்தின் சோதனையிலிருந்தும், அதன் வேதனையிலிருந்தும், செல்வத்தின் தீமைகளிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், நான் உன்னிடம் வறுமையின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். (பெருங்குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளை என்னிலிருந்து கழுவுவாயாக! மேலும், அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப் படுத்துவதைப் போன்று தவறுகளிலிருந்து என் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நீ ஏற்படுத்திய இடைவெளியைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ இடைவெளியை ஏற்படுத்துவாயாக

பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6398

அபூ மூஸா(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம்: ரப்பிஃக்ஃபிர் லீ கத்தீஅத்தீ, வ ஜஹ்லீ, வ இஸ்ராஃபி ஃபீ அம்ரீ குல்லிஹி, வமா அன்த்த அஉலமு பிஹி மின்னீ, அல்லாஹும்மஃக்ஃபிர்லீ கத்தாயாய, வ அம்தீ, வ ஜஹ்லீ, வ ஜத்தீ வ குல்லு தாலிக்க இந்தீ. அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ மா கத்தகித்து, வ மா அஉலன்த்து, அன்த்தல் முகத்திமு, வ அன்த்தல் முஅக்கிரு, வ அன்த்த அலா குல்லி ஷையின் கதீர். 

(பொருள்: என் இறைவா! என் குற்றங்களையும், என் அறியாமையையும், என் செயல்கள் அனைத்திலும் நான் மேற்கொண்ட விரயத்தையும் மன்னித்திடுவாயாக. மேலும், என்னை விட நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னித்திடுவாயாக. இறைவா! நான் தவறுதலாகச் செய்ததையும், வேண்டுமென்றே செய்ததையும், அறியாமல் செய்ததையும், அறிந்து செய்ததையும் மன்னித்திடுவாயாக. இவை யாவும் என்னிடம் இல்லாமலில்லை. இறைவா! நான் முன்னால் செய்ததையும், பின்னால் செய்ததையும், இரகசியமாகச் செய்ததையும் பம்ரங்கமாகச் செய்ததையும் மன்னித்திடுவாயாக. நீயே முன்னேற்றம் அடையச் செய்பவன். பின்னடைவு ஏற்படச் செய்பவனும் நீயே! நீ அனைத்தின் மீதும் ஆற்றல் பெற்றவன். 

பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6399 

அபூ மூஸா அல் அஷ்அரீ(ரஹ்) அவர்கள்கூறினார்: 

நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்தித்துவந்தார்கள். அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ கத்தீஅத்தீ, வ ஜஹ்லீ, வ இஸ்ராஃபீ ஃபீ அம்ரீ, வமா அன்த்த அஉலமு பிஹி மின்னீ, அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ ஹஸ்லீ, வ ஜித்தீ, வ கத்தயீ, வ அம்தீ, வ குல்லு தாலிக்க இந்தீ.

(பொருள்: இறைவா! என் குற்றங்களையும் என் அறியாமையையும், என் செயல்களில் நான் மேற்கண்ட விரயத்iயும், மேலும், என்னை விட நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னித்திடுவாயாக! இறைவா! நான் விளையாட்டாகச் செய்ததையும், வினையாகச் செய்ததையும், தவறுதலாகச் செய்ததையும், வேண்டுமென்றேச் செய்ததையும் மன்னித்திடுவாயாக! இவை யாவும் என்னிடம் இல்லாமலில்லை.)

இந்த பாவமன்னிப்பின் ஜெபத்தில் அவர் "பாவம்" என்பதற்கு வேறு ஒரு வார்த்தையை பயன்படுத்துகிறார். அவர் "தன்ப்" என்ற வார்த்தைக்கு பதிலாக"க்ஹடிய – khati'a" என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். 

இஸ்லாமிய கலைக் களஞ்சியம் (The Encyclopedia of Islam [9]) "க்ஹடிய – khati'a" என்ற வார்த்தையின் பொருளை கீழ்கண்டவாறு விவரிக்கிறது:

"Moral lapse, sin, a synonym of dhanb. The root means "to fail, stumble", "make a mistake", "of an archer whose arrow misses the target". 

"நற்குண குறைபாடுபாவம்'தன்ப்' என்ற வார்த்தைக்கு சுமமானது". இதன் மூல வார்த்தையின் பொருள் "தவறுவது, தடுமாறுவது", "தவறு செய்வது", "குறி தவறிய அம்பை எய்தவன்" என்பவைகளாகும்.

முஹம்மது தன்னுடைய விண்ணப்பத்தில் (ஜெபத்தில்), பாவத்தின் அனைத்து விதங்களையும் அங்கீகரிக்கிறார்:

அதாவது: 

• தீய செயல்கள், 

• தவறுகள், 

• தெரியாமல் செய்த தவறுகள், 

• பிழைகள், 

• தற்செயலாக செய்த பிழைகள், 

• வேண்டுமென்றே தெரிந்தே செய்த பாவங்கள், 

• கடந்த கால பாவங்கள், 

• எதிர்கால பாவங்கள் மற்றும் 

• பெரிய பாவங்கள் 

என்று அனைத்து விதமான பாவங்கள் பற்றியும் கூறுகிறார். இந்த செயல்கள் அனைத்தும் வெறும் சிறிய "தவறுகள்" அல்ல, அதற்கு பதிலாக இவைகள் அனைத்தும் "தண்டனைக்கு உகந்த பாவங்கள்" ஆகும், இதனை முஹம்மதுவின் விண்ணப்பத்தை கவனித்தால் புரிந்துக்கொள்ளலாம். 

முஹம்மது ஒரு பாவி என்று அவரே அங்கீகரித்து விட்டார். அவர் செய்த பாவ மன்னிப்பின் விண்ணமானது, அவர் தன்னுடைய பாவத்தின் தீவிரத்தை அறிந்திருக்கிறார் என்பதை நமக்கு காட்டவில்லையா? அல்லாஹ் பாவங்கள் செய்யும் மனிதர்களை தண்டிக்கிறார் என்பதை அறிந்திருந்தார், அதனால் தான் அவர் பாவமன்னிப்பிற்காக அல்லாஹ்விடம் வேண்டினார். தன்னுடைய குற்றங்களுக்காக நரகத்தில் எரிய முஹம்மது விரும்பவில்லை. 

கடைசியாக, தான் தண்டிக்கப்பட்டு வேதனையை அனுபவிக்கவேண்டி வரும் என்ற பயம் முஹம்மதுவிற்கு இருந்துக்கொண்டே இருந்தது.

சஹீ முஸ்லிம், [10], தொகுப்பு 4, எண் 1212 

ஆயிஷா அறிவித்ததாவது: 

ஒரு யூத பெண் என்னோடு இருக்கும் போது, இறைத்தூதர் என் வீட்டிற்குள் நுழைந்தார். அப்போது அந்த யூதப்பெண் இறைத்தூதரிடம்: "நீங்கள் கல்லரையில் இருக்கும் போது, உங்களுக்கு சித்திரவதை உண்டு என்பதை அறிவீர்களா?" என்று கேட்டாள். இதைக் கேட்டவுடன் அல்லாஹ்வின் தூதர் நடுங்கிவிட்டார் மற்றும் சித்தரவதையை அனுபவிப்பது யூதர்களாவார்கள் என்று கூறினார். ஆயிஷா அறிவித்ததாவது: சில இரவுகளை நாம் கழித்தோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் கூறினார், "அல்லாஹ் எனக்கு என்ன வெளிப்படுத்தினார் என்று உனக்குத் தெரியுமா? ' நீ கல்லரையில் இருக்கும் போது உனக்கு சித்திரவதை உண்டு' என்று எனக்கு வெளிப்படுத்தினார்" என்றார். இதன் பிறகு கல்லரையில் கொடுக்கப்பட இருக்கும் சித்திரவதையிலிருந்து பாதுகாப்பிற்காக அல்லாஹ்வின் தூதர் வேண்டிக்கொள்வதை நான் கேட்டேன். 

Sahih Muslim, [10], Book 4, Number 1212:

Narrated Aisha:

"The Prophet entered my house when a Jewess was with me and she was saying: Do you know that you would be put to trial in the grave? The Messenger of Allah trembled (on hearing this) and said: It is the Jews only who would be put to trial. Aisha said: We passed some nights and then the Messenger of Allah said: Do you know that it has been revealed to me: "You would be put to trial in the grave"? Aisha said: I heard the Messenger of Allah seeking refuge from the torment of the grave after this."

கல்லரைக்குள் முஹம்மதுவிற்கு வேதனை உண்டு என்று அல்லாஹ் அவருக்கு "வெளிப்படுத்தினார்". இதனால், தனக்கு வரவிருக்கும் இந்த கல்லரையின் வேதனையிலிருந்து விடுதலை ஆகவேண்டுமென்று முஹம்மது தொடர்ச்சியாக இறைவனிடம் வேண்டிக்கொண்டார். முஹம்மது ஒரு சிறு குற்றமும் இல்லாத பரிசுத்தராகவும், தூய்மையானவராகவும் இருந்திருந்தால், கல்லரையில் ஏன் அல்லாஹ் அவருக்கு வேதனையை கொடுப்பேன் என்று சொல்லப்போகிறார்? முஹம்மது தன் பாவங்களைப் பற்றி அறிந்திருந்தார், அதனால் அவர் இறைவனிடம் பாவமன்னிப்பிற்காக வேண்டிக்கொண்டு இருந்தார். 

முஹம்மது என்னென்ன பாவங்களை செய்துள்ளார்? அவரது செயல்களை நீங்களே கவனித்து, சோதித்துப் பார்த்து, ஒரு முடிவிற்கு வாருங்கள். நான் இஸ்லாமிய நூல்களை ஆதாரங்களை வாசித்த போது, அதாவது குர்ஆன், ஹதீஸ்கள், மற்றும் சீரா என்று சொல்லக்கூடிய அவரது வாழ்க்கை சரித்திரத்தை படித்த போது அதிர்ச்சியூட்டும் சில செயல்களை அவர் செய்ததாக கண்டேன். சில இஸ்லாமியர்கள் முஹம்மதுவின் இந்த செயல்கள் அனைத்தையும் அறிவார்கள். இவைகள் அனைத்தும் இஸ்லாமிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நூல்களை எழுதியவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் மீது மிகவும் பக்தியுள்ள தீவிர இஸ்லாமியர்களே, இவர்கள் தங்கள் திறமைக்கு ஏற்றவாறு உண்மையை உலகிற்கு சொல்லியுள்ளார்கள்.

முஹம்மது செய்த சில பாவங்களின் பட்டியல்:

முஹம்மது செய்த சில பாவங்களின் விவரங்களை இங்கே காணலாம்.

1) அற்ப பணத்தை பெறுவதற்காக ஒரு மனிதனை கொடுமைப்படுத்தி, கொலை செய்தவர் முஹம்மது.

2) பெண் அடிமைகள் கற்பழிக்கப்பட அனுமதி அளித்தவர் முஹம்மது.

3) தன்னை "எதிர்த்தாள்" என்ற ஒரே காரணத்திற்காக ஒரு பெண்ணை கொலை செய்ய வைத்தவர் முஹம்மது.

4) தன்னை "பரியாசம் செய்தாள்" என்ற காரணத்திற்காக ஒரு அடிமைப் பெண்ணை கொலை செய்தவர் முஹம்மது.

5) சாத்தானின் (இப்லீஷ்) வார்த்தைகளை இறைவனின் வார்த்தைகளாக கூறியவர் முஹம்மது.

மேலே உள்ள அனைத்து பாவங்களையும் செய்தவர் முஹம்மது ஆவார். இப்படிப்பட்டவர் தனக்கு பாவமன்னிப்பு வேண்டும் என்று விண்ணப்பம் செய்ததில் என்ன ஆச்சரியம் இருக்கப் போகிறது? தான் ஒரு பாவி என்ற உண்மை அவரது உள்ளத்தின் ஆழத்தில் வேறூன்றி இருந்தது. 

இரண்டாம் பாகத்தின் முடிவுரை: முஹம்மது ஒரு பாவியாக இருந்தார் என்பதாகும்

முஹம்மது தான் ஒரு பாவியாக இருக்கிறார் என்பதை ஒப்புக்கொண்டார்.தன்னுடைய பாவங்களை அவர் "தீய செயல்கள்" என்று அழைக்கிறார். ஆனால், பிறகு வந்த இஸ்லாமியர்கள், "இஸ்லாமுக்கு எதிரான ஒருகோட்பாட்டை சொல்கிறார்கள்", அதாவது முஹம்மது ஒரு பாவி அல்ல என்று கூறுகிறார்கள். இவர்கள் இப்படி கூறுவதற்கு காரணம், அவர்கள் முஹம்மதுவை இயேசுவிற்கு நிகராக காட்ட முயற்சி எடுக்கிறார்கள். 

முஹம்மதுவின் கூற்றுகளின் படியே முஹம்மது ஒரு பாவி தான். முஹம்மது கொண்டு வந்த கோட்பாடுகளின் படி பார்த்தால், அவர் மன்னிக்கப்படாவிட்டால், நிச்சயமாக அவருக்கு இறை தண்டனை உண்டு. 

முஹம்மது ஒரு பாவியா என்ற கட்டுரையின் இரண்டாம் பாகம் முற்றுப்பெற்றது. இதன் தொடர்ச்சியாக மூன்றாம் பாகத்தில் இயேசு எப்படி பரிசுத்தராக இருந்தார் என்பதை இஸ்லாமிய ஆதாரங்களின் படி நாம் காண்போம்.

ஆதார நூற்ப்பட்டியல்

[1] "Sahih Bukhari", translated into English by Dr. Muhammad Muhsin Khan, at the Islamic University in Medina, published by Kitab Bhavan, New Delhi, India. 

[2] "Muhammad and the Religion of Islam", by John Gilchrist, page 273, published by Jesus to the Muslims, Durban, South Africa. It can be found on the web at: http://answering-islam.org/Gilchrist/Vol1/ 

[3] "The Koran", by N. J. Dawood, published by Penguin, London England 

[4] "The Meaning of the Glorious Koran", by M. Pickthall. published by Mentor, NY, NY. 

[5] "The Koran", by A. J. Arberry, published by Oxford University Press, Oxford, England. 

[6] "The Koran", by J. M. Rodwell, published by Everyman, London, England. 

[7] "The Holy Quran", by Yusef Ali, published by Amana, Beltsville, Maryland. 

[8] The Hughes Encyclopedic Dictionary of Islam" 

[9] "Ency. of Islam", pub. by Brill, Netherlands. 

[10] "Sahih Muslim", translated by A. Siddiqi, published by International Islamic Publishing House, Riyadh, KSA. 

[11] இக்கட்டுரையின் அனைத்து குர்‍ஆன் வசனங்களும் முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியிட்ட தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. வேறு மொழியாக்கம் பயன்படுத்தப்பட்டால், அம்மொழியாக்கத்தின் பெயர் அவ்வசனங்களின் கடைசியில் குறிப்பிடப்பட்டிருக்கும். 

mo-sinner.htm
Rev A: 4/26/00

ஆங்கில மூலம்: WAS MUHAMMAD A SINNER? 

இதர கட்டுரைகள்:

இஸ்லாமும், நபிகளின் பாவங்களும் பாகம் 1 

முஹம்மதுவின் பாவங்கள் - சூரா முஹம்மது (47:19) 

முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல் (திய வான் கோவின் கொலை) 

முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்

சைலஸ் அவர்களின் இதர கட்டுரைகள்

tamil/authors/green/torture.html




குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?

குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம்

சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?

சாம் ஷமான்

குர்‍ஆன் ஒரு குறிப்பிட்ட இரவில் மொத்தமாக இறங்கியது என்று அனேக இடங்களில் குர்‍ஆன் சொல்கிறது:

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;. எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;. அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்) (குர்‍ஆன் 2:185) 

ஹா, மீம். தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம். அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது. அக்கட்டளை நம்மிடமிருந்து வந்ததாகும்; நாம் நிச்சயமாக (தூதர்களை) அனுப்புபவர்களாக இருந்தோம். (அது) உம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள ரஹ்மத்தாகும்; நிச்சயமாக, அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன். நீங்கள் உறுதியுடையவர்களாயிருப்பின், வானங்கள், பூமி, இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவை ஆகியவற்றிற்கு அவனே இறைவன் (என்பதைக் காண்பீர்கள்). (குர்‍ஆன் 44:1-7) 

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (குர்‍ஆன் 97:1-5)

நாம் மேலே படித்த வசனங்கள், இஸ்லாமிய வேதமாகிய குர்‍ஆன் முழுவதும் அந்த ஒரு இரவில் இறங்கியதாக சொல்கிறது. மேலே கண்ட வசனங்கள், சிறிது சிறிதாக குர்‍ஆன் இறங்கியது என்றுச் சொல்லவில்லை. அதற்கு பதிலாக ரமலான் மாதத்தில் அந்த குறிப்பிட்ட இரவில் குர்‍ஆன் இறங்கியதாக சொல்கிறது. இந்த குர்‍ஆன் வசனமாகிய 97:1ம் வசனம் பற்றி விரிவுரையாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இப்போது நாம் காண்போம். இப்படி விரிவிரையாளர்களின் விளக்கங்களை நாம் பார்க்கவில்லையானால், வசனங்களின் பொருளை மாற்றி இவர்கள் சொல்கிறார்கள் என்று நம்மீது இஸ்லாமியர்கள் குற்றம் சுமத்துவார்கள்.

இதோ! நாம் அதை வெளிப்படுத்தினோம், குர்‍ஆனை முழுவதுமாகபாதுகாக்கப்பட்ட பலகைகளிலிருந்து வானத்திலிருந்து இறக்கினோம், கன்னியமிக்க இரவில், சிறப்புமிக்க இரவில் இறக்கினோம். (த‌ஃப்ஸீர் அல் ஜலலைன்) 

Lo! We revealed it, that is, the Qur'an, IN ITS ENTIRETY, [sending it down] from the Preserved Tablet to the heaven of this world, on the Night of Ordainment, that is, [the Night] of great eminence. (Tafsir al-Jalalayn; source; capital emphasis ours)

இப்படி இருந்தும், கீழ்கண்ட குர்‍ஆன் வசனங்களுக்கு மேலே கண்ட குர்‍ஆன் வசனங்கள் முரண்படுகின்றன:

இன்னும், முற்றிலும் சத்தியத்தைக் கொண்டே நாம் இதனை (குர்ஆனை) இறக்கிவைத்தோம்; முற்றிலும் சத்தியத்தைக் கொண்டே இது இறங்கியது மேலும், (நபியே!) நாம் உம்மை நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமேயன்றி அனுப்பவில்லை. இன்னும், மக்களுக்கு நீர் சிறிது சிறிதாக ஓதிக் காண்பிப்பதற்காகவே இந்த குர்ஆனை நாம் பகுதி, பகுதியாகப் பிரித்தோம்; இன்னும் நாம் அதனைப் படிப்படியாக இறக்கிவைத்தோம். (குர்‍ஆன் 17:105-106) 

இன்னும்; "இவருக்கு இந்த குர்ஆன் (மொத்தமாக) ஏன் ஒரே தடவையில் முழுதும் இறக்கப்படவில்லை?" என்று நிராகரிப்போர் கேட்கிறார்கள்; இதைக் கொண்டு உம் இதயத்தை உறுதிப்படுத்துவதற்காக இதனை படிப்படியாக நாம் இறக்கினோம். (குர்‍ஆன் 25:32) 

And those who disbelieve say: "Why is not the Qur'an revealed (nuzzila) to him all at once?" Thus (it is sent down in parts), that We may strengthen your heart thereby. And We have revealed it to you gradually, in stages. (It was revealed to the Prophet in 23 years.). S. 25:32 Hilali-Khan

இந்த முரண்பட்ட நேரெதிர் வசனங்கள், இஸ்லாமிய அறிஞர்களை ஒரு சாதகமான விளக்கத்தை கொடுக்கும்படி செய்துள்ளது. இவர்களின் கூற்றுப்படி, முழு குர்‍ஆனும் ஒரே முறை அல்லாஹ்வினால் கீழ் வானத்திற்கு கொண்டுவரப்பட்டது, அங்கு அது இருந்தது. அதன் பிறகு காபிரியேல் (ஜிப்ராயீல்) தூதன் மூலமாக சிறிது சிறிதாக முஹம்மதுவிற்கு அல்லாஹ் குர்‍ஆனை இறக்கினான், அதாவது 23 ஆண்டுகள் முழு குர்‍ஆனும் சிறிது சிறிதாக இறக்கப்பட்டது என்று பொருள் கூறுகிறார்கள். 

நவீன காலத்தின் சலபி இஸ்லாமிய அறிஞராகிய டாக்டர் அபூ அமீனா பிலால் பிலிப்ஸ், இதைப் பற்றி கீழ்கண்டவாறு விளக்குகிறார்:

அல்லாஹ்வின் வேதத்தில் கூறியிருக்கிறபடி, குர்‍ஆன் இரண்டு தனிப்பட்ட விதங்களில் இறக்கப்பட்டது. குர்‍ஆனின் வெளிப்பாடு குறித்து குர்‍ஆனில் மற்றும் ஹதீஸ்களிலும் சொல்லப்பட்ட விவரங்களில் உள்ள முரண்பாட்டை சரி செய்வதற்கு, இந்த இரண்டு வகையாக குர்‍ஆன் இறக்கப்பட்ட முறையை சரியாக புரிந்துக்கொள்ளவேண்டும். அதாவது முதல் வகையில் பார்த்தால், முழு குர்‍ஆனும் ரமலான் மாதத்தில் இறக்கப்பட்டது அல்லது லைலத்துல் கதிர், என் கன்னியமிக்க இரவில் இறக்கப்பட்டது. இரண்டாவது வகையில் பார்த்தால், குர்‍ஆன் சிறிது சிறிதாக இறைத்தூதர் மரிக்கும் வரையில் இறக்கப்பட்டது.

முதல் வெளிப்பாடு: 

பாதுகாக்கப்பட்ட பலகைகளிலிருந்த (அல் லாஹ் அல் மஹ்பூத்) குர்‍ஆனை அல்லாஹ் இறங்கச் செய்தான், கீழ் வானத்தில் இந்த குர்‍ஆன் இறக்கப்பட்டது. இந்த முதல் வெளிப்பாட்டில், முழு குர்‍ஆனும் ஒரே முறை கீழ்வானத்தில் இறக்கப்பட்டது, இந்த இடத்திற்கு "பைத் அல் இஜ்ஜாஹ்" என்று அழைப்பார்கள்(கன்னியம் மற்றும் வல்லமையுள்ள வீடு என அழைக்கப்படுகிறது). குர்‍ஆன் இறக்கப்பட்ட அந்த பாக்கியமான இரவை "லைலத்துல் கதிர் (The Night of Decree)" என்று அழைப்பார்கள். இது ரமலான் மாதத்தில் கடைசி பத்து நாட்களில் வரும் ஒரு ஒற்றைப்படை எண் கொண்ட நாளாகும். இந்த முதல் வெளிப்பாட்டை அல்லாஹ் கீழ்கண்ட வசனங்களில் குறிப்பிடுகின்றான் (மேற்கோள்கள் : குர்‍ஆன் 44:1-3, 97:1, 2:185) 

இந்த வசனங்கள் குர்‍ஆன் இறக்கப்பட்ட முதல் வெளிப்பாட்டைப் பற்றிச் சொல்கின்றன, ஏனென்றால், குர்‍ஆன் முழுவதும் ஒரே முறை ரமலான் மாதத்தின் ஒரே இரவில் முஹம்மது நபிக்கு இறக்கப்படவில்லை என்பது எல்லாருக்கும் தெரிந்த விவரமாகும்.

இபின் அப்பாஸ் கூறுகையில், குர்‍ஆன் மேல் வானத்திலிருந்து எடுக்கப்பட்டு கீழ்வானமாகிய பைத் அல் இஜ்ஜாஹ் என்ற இடத்தில் இறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி ரமலான் மாதத்தின் லைலத்துல் கதிர் என்ற இரவில் (The Night of Decree) இறக்கப்பட்டது என்று ஒரு தொகுப்புச் சொல்கிறது. அல்லாஹ் விரும்பியிருந்தால், முழு குர்‍ஆனையும் ஒரே இரவில் ஒரே முறை வெளிப்படுத்தியிருப்பான். இந்த வகையில் தான் முந்தைய வேதங்கள் அனைத்தும் இறக்கப்பட்டது. ஆனால், அல்லாஹ் தன் வெளிப்பாட்ட இரண்டு வகையாக பிரித்தான். முதலாவதாக, மேல் வானங்களிலிருந்து குர்‍ஆன் தன் கடைசி தூதருக்கு இறக்கப்படுகிறது என்ற விவரத்தை "மேல் வானங்களில்" இருப்பவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. (Philips, Usool at-Tafseer, 6. The Revelations of the Qur'aan, pp. 94-96; sources 12; comments within brackets and underline emphasis ours)

இன்னொரு இஸ்லாமிய மூலம் கீழ்கண்ட விதமாக கூறுகிறது:

ரமலான் மாதத்தில் தான் குர்‍ஆன் வெளிப்பட்டது, அதாவது ஜிப்ராயீல் தூதன் முழு குர்‍ஆனையும் முதல் வானத்திற்கு கொண்டு வந்தார், தேவதூதர்களில் எழுதுபவர்களுக்கு குர்‍ஆன் ஓதி காண்பிக்கப்பட்டது மற்றும் முஹம்மதுவிற்கு ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக இறக்கப்பட்டது. சில நேரங்களில் ஒன்று, இரண்டு அல்லது மூன்று வசனங்கள் மட்டும் இறங்கின, சில நேரங்களில் ஒரு முழு அதிகாரமும் இறக்கப்பட்டது. … (Tanwîr al-Miqbâs min Tafsîr Ibn 'Abbâs; source; capital and underline emphasis ours)

மற்றும் இன்னொரு இஸ்லாமிய விரிவுரை கீழ்கண்ட விதமாக கூறுகிறது:

இபின் அப்பாஸ் அவர்களின் அதிகாரபூர்வமான அறிப்பு கூறுகிறது: "இதோ நாம் இதனை வெளிப்படுத்தினோம்" என்பதைக் குறித்து அறிவித்ததாவது: "நாம் இதனை வெளிப்படுத்தினோம்" என்று கூறினார். இதில் அவர் சொல்லவருவது என்னவென்றால் "நாம் முழு குர்‍ஆனோடு ஜிப்ராயீலை கீழ் வானத்திற்கு அனுப்பினோம் (அது வல்லமையின் இரவாகும்) அது நியாயத்தீர்ப்பின் சட்டத்தின் இரவாகும். அந்த இரவு மன்னிப்பு மற்றும் பாக்கியம் பொருந்திய இரவாகும். அதன் பிறகு அந்த குர்‍ஆன் பகுதி பகுதியாக நபி(அவர் மீது சாந்தி உண்டாகட்டும்)க்கு இறக்கப்பட்டது. (Tanwîr al-Miqbâs min Tafsîr Ibn 'Abbâs; source)

இஸ்லாமியர்கள் கொடுக்கும் விளக்கத்தில் உள்ள பிரச்சனையை வாசகர்கள் உடனே கண்டுக்கொள்ளலாம். இரண்டு வகைகளில் குர்‍ஆன் இறக்கப்பட்டதாக குர்‍ஆன் எங்கும் சொல்வதில்லை. அதாவது, முதலாவதாக‌ ஒரு முறை முழு குர்‍ஆனும் கீழ் வானம் வரைக்கும் இறக்கப்பட்டது என்றும், இரண்டாவதாக, பகுதி பகுதியாக முஹம்மதுவிற்கு இறக்கப்பட்டதென்றும் குர்‍ஆன் சொல்வதில்லை. இஸ்லாமியர்கள் கொடுக்கும் இந்த விளக்கங்களெல்லாம் தங்கள் வேதத்தில் உள்ள பெரிய தவறை சரி செய்ய கொடுக்கப்படும் விளக்கங்களே. அதாவது ஒரு குறிப்பிட்ட இரவில் முழு குர்‍ஆனும் இறங்கியதாக குர்‍ஆன் சொல்வது, பிறகு அதற்கு முரண்பட்ட விதத்தில் முஹம்மதுவிற்கு பகுதி பகுதியாக வெளிப்பாடு வந்தது என்று அதே குர்‍ஆன் சொல்வதும் முரண்பட்ட விவரமாகும். 

உண்மையில் சொல்லப்போனால், மனித இனத்திற்கு வழிகாட்டியாக ரமலான் மாதத்தில் குர்‍ஆன் இறங்கியதாக ஒரு குர்‍ஆன் வசனம் சொல்கிறது:

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது....(குர்‍ஆன் 2:185)

ரமளான் மாதத்தில் தேவதூதர்களுக்கு கீழ்வானத்தில் குர்‍ஆன் கொடுக்கப்பட்டது என்று இந்த வசனம் சொல்லாமல், இந்த புத்தகம் மனித இனத்திற்கு வழிகாட்டியாக அனுப்பப்பட்டது என்றுச் சொல்கிறது. இந்த வசனத்தின் மூலம் அறிவது என்னவென்றால், மனித இனத்திற்கு வழிகாட்டியாக ரமளான் மாதத்தில் இறக்கப்பட்டது என்பதாகும், இது இஸ்லாமிய அறிஞர்கள் உருவாக்கியிருக்கும் சொந்த கருத்திற்கு விளக்கத்திற்கு முரண்பட்ட நிலையில் உள்ளது. 

மேற்கொண்டு படிக்க:

இந்த விவரங்கள் பற்றி குர்‍ஆனில் உள்ள சில வசனங்கள் மறைமுகமாக பிரச்சனையை உருவாக்கின்றன. இந்த வசனங்கள் குர்‍ஆன் இறக்கப்பட்ட விதத்தைப் பற்றி பேசவில்லையானாலும், குர்‍ஆன் 23 ஆண்டுகள் சிறிது சிறிதாக இறக்கப்பட்டது என்று நாம் கருதினால், அது இவ்வசனங்களுக்கு ஒவ்வாத முரண்பட்ட விவரங்களாக உள்ளன. இவ்வசனங்கள் நமக்கு எதை சொல்கின்றன என்று கவனித்தால், குர்‍ஆன் ஒரே முறை முழுவதுமாக முஹம்மதுவிற்கு இறக்கப்பட்டது என்ற தோரணையில் அவைகள் விளக்கமளிக்கின்றன. இந்த விவரங்கள் ஆங்கிய இந்த விவாத மறுப்புக் கட்டுரையை படிக்கவும்: குறைந்த பட்சம் குர்‍ஆனில் பாதியாவது தெளிவாக உள்ளதா? 

இன்னொரு வகையில் பார்த்தால், குர்‍ஆன் ஒரு முழு புத்தகமாக ஒரே முறை இறக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு குர்‍ஆன் வசனங்கள் காணப்படுகின்றன. இந்த விவரங்கள் அடங்கிய கட்டுரையை படிக்கவும்: குர்‍ஆன் இறக்கப்பட்ட விதத்தில் உள்ள பிரச்சனைகள் பற்றிய ஆய்வு

இப்போது நாம் படித்துக்கொண்டு இருக்கும் கட்டுரையைப் பற்றி ஒரு இஸ்லாமிய விவாதம் புரிபவர் கொடுத்த பதிலுக்கு மறுப்பை சாம் ஷமான் கொடுத்துள்ளார். அதனை இங்கு படிக்கவும்: குர்‍ஆன் இறக்கப்பட்ட விதம் பற்றிய மறு ஆய்வு - ஒரே முறை இறங்கியதா அல்லது சிறிது சிறிதாக இறங்கியதா? 

ஆங்கில மூலம்: Quran Contradiction: The descent of the Quran Piecemeal or all at once? 

இதர குர்‍ஆன் முரண்பாடுகளை இங்கு படிக்கலாம்





சனி, 21 ஆகஸ்ட், 2010

இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்

இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள்

The 45 Bonus Questions for Muslims

இஸ்லாமியர்கள் தெரிந்துக்கொள்ளக்கூடாது என்று முஹம்மது விரும்பிய கேள்விகள் மற்றும் அதற்கான பதில்களை நாம் கீழே கொடுத்துள்ளோம். அதாவது பல தெய்வ வழிபாடுகள் செய்யும் மக்கள் வணங்கிக்கொண்டு இருந்த சந்திர கடவுள் பற்றிய விவரங்களை சிறிது மாற்றி தன்னுடைய இராணுவ பள்ளிக்கூடத்தில் அறிமுகம் செய்தார் முஹம்ம்து.

கேள்வி 1: அல்லாஹ் என்ற வார்த்தையை குர்‍ஆன் வரையறுக்கின்றதா?

பதில்: இல்லை.

கேள்வி 2: "அல்லாஹ்" என்ற வார்த்தை முதன் முதலில் குர்‍ஆனில் மட்டும் காணப்பட்டதா?

பதில்: இல்லை.

கேள்வி 3: குர்‍ஆன், தன்னை வாசிக்கும் வாசகர்களுக்கு ஏற்கனவே "அல்லாஹ்" பற்றிய அறிவு உண்டு என்பதை கருதியுள்ளதா?

பதில்: ஆம். குர்‍ஆனை படிப்பவர்களுக்கு அல்லாஹ் என்ற பெயர் பற்றி தெரியும் என்று குர்‍ஆன் நம்புகிறது.

கேள்வி 4: முஹம்மதுவின் காலத்திற்கு முன்பு, இஸ்லாமுக்கு முன்பு இருந்த அரேபிய சரித்திரத்தில் அல்லாஹ் பற்றி நாம் படிக்கவோ,தெரிந்துக்கொள்ளவோ முடியுமா?

பதில்: ஆம், முடியும்.

கேள்வி 5: இஸ்லாமிய சரித்திரத்தின்படி, முஹம்மது ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் அல்லது வம்சத்தில் பிறந்தாரா?

பதில்: இல்லை.

கேள்வி 6: முஹம்மது ஒரு யூத குடும்பத்தில் அல்லது யூத வம்சத்தில் பிறந்தாரா?

பதில்: இல்லை.

கேள்வி 7: முஹம்மதுவின் குடும்பம் மற்றும் வம்சத்தினர் பின்பற்றிய மதம் எது?

பதில்: பல தெய்வ வழிப்பாடு (பேகன் - Pagan)

கேள்வி 8: பல தெய்வங்களை வணங்கிய முஹம்மதுவின் தந்தையின் பெயர் என்ன?

பதில்: அப்துல்லாஹ் (அப்த் + அல்லாஹ்) = அல்லாஹ்வின் அடிமை

கேள்வி 9: மக்காவின் பல தெய்வ வழிபாடு விழாக்களில் நிகழ்ச்சிகளில் முஹம்மது பங்கு பெற்றாரா?

பதில்: ஆம், பங்கு பெற்றார்.

கேள்வி 10: இஸ்லாமுக்கு முந்தைய காலத்தில் அரபியர்கள் 360 தெய்வங்களை வணங்கினார்களா?

பதில்: ஆம்

கேள்வி 11: பேகன் (பழங்குடி) அரபியர்கள் சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை வணங்குபவர்களாக இருந்தார்களா?

பதில்: ஆம்.

கேள்வி 12: அந்த அரபியர்கள் சந்திர கடவுளுக்கு ஆலயத்தை கட்டினார்களா?

பதில்: ஆம்.

கேள்வி 13: பல்வேறு வகையான அரபியர்கள் அந்த சந்திர கடவுளுக்கு பலவகையான பெயர்களை கொடுத்திருந்தார்களா?

பதில்: ஆம்.

கேள்வி 14: அவர்கள் வைத்திருந்த அந்த பெயர்கள் என்னென்ன?

பதில்: சின், ஹபுல், இலும்காஹ், அல்-இலாஹ் (Sin, Hubul, Ilumquh, Al-ilah)

கேள்வி 15: அல்லாஹ் என்ற பெயர் சந்திர கடவுளுக்கு கொடுக்கப்பட்டு இருந்ததா?

பதில்: ஆம்.

கேள்வி 16: அல்லாஹ் என்ற வார்த்தை "அல் இலாஹ்" என்பதிலிருந்து வந்ததா?

பதில்: ஆம்.

கேள்வி 17: பழங்குடி அரபியர்கள் "அல்லாஹ்வை" மற்ற எல்லா சிலைகளை விட உயர்வாக எண்ணினார்களா?

பதில்: ஆம்.

கேள்வி 18: இந்த அல்லாஹ் என்ற சந்திர கடவுளை காபாவில் அவர்கள் தொழுதுக்கொண்டார்களா?

பதில்: ஆம்.

கேள்வி 19: அல்லாஹ் என்பது மக்கா அரபியர்கள் வணங்கும் அனேக கடவுள்களில் இதுவும் ஒன்றா?

பதில்: ஆம்.

கேள்வி 20: காபாவின் மேலே ஹுபுல் என்ற சிலையை அவர்கள் வைத்திருந்தார்களா?

பதில்: ஆம்.

கேள்வி 21: அந்த சமயத்தில் ஹுபுல் என்ற சிலையை சந்திர கடவுளாக கருதினார்களா?

பதில்: ஆம்

கேள்வி 22: ஆக, காபா என்பது சந்திர கடவுளின் வீடா அல்லது ஆலயமா?

பதில்: ஆம்.

கேள்வி 23: காலப்போக்கில், ஹுபுல் விக்கிரத்திற்கு பதிலாக, அல்லாஹ் என்ற பெயர் சந்திர கடவுளாக வணங்கப்பட்டதா?

பதில்: ஆம்.

கேள்வி 24: அம்மக்கள் காபாவை "அல்லாஹ்வின் வீடு" என அழைத்தார்களா?

பதில்: ஆம்.

கேள்வி 25: அந்த பழங்குடி மக்கள் தங்கள் தெய்வங்களுக்காக அனேக சடங்குகளை உருவாக்கி வைத்திருந்தார்களா?

பதில்: ஆம்.

கேள்வி 26: சிலைகளை வணங்கிக்கொண்டு இருந்த அந்த பழங்குடி அரபியர்கள், கீழ்கண்ட சடங்காச்சாரங்களை/பழக்கங்களை கொண்டு இருந்தார்களா? அதாவது: புனித யாத்திரைச் செல்லுதல், ரமளான் மாதத்தில் நோம்பு இருந்தல், காபாவைச் சுற்றி ஏழுமுறை சுற்றிவருதல், அதிலுள்ள கருப்புக் கல்லை முத்தமிடுதல், தலையை சிறைத்துக்கொள்ளுதல், மிருகங்களை பலியிடுதல், இரண்டு மலைகளுக்கும் இடையே ஓடிச் செல்லுதல் அல்லது நடத்தல், சத்தான் மீது கல்லை எரிதல், மூக்கிற்குள் தண்ணிரை விட்டு, பிறகு அதனை வெளியே எடுத்து மூக்கை சுத்தப்படுத்துதல், ஒரு நாளுக்கு பலமுறை மக்காவை/காபாவை நோக்கி தொழுகை நடத்துதல், தான தர்மங்கள் செய்தல், மற்றும் வெள்ளிக்கிழமையன்று சிறப்பு தொழுகை செய்தல் போன்றவைகளை செய்துக்கொண்டு இருந்தார்களா?

பதில்: ஆம்.

கேள்வி 27: அந்த பழங்குடி அரபியர்கள் காபாவையும் மக்காவையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த காலங்களிலேயே, முஹம்மது தன்னை பின்பற்றுகிறவர்கள், நாம் மேலே கண்ட சடங்குகளை செய்யும் படி கட்டளையிட்டு இருந்தாரா?

பதில்: ஆம். (யூசுப் அலி பின் குறிப்பு 214, பக்கம் 78)

கேள்வி 28: விக்கிரங்களை வணங்கும் அரபியர்கள் வகுத்து இருந்த இந்த வழக்கங்களை இஸ்லாம் தன் வழக்கமாக ஆக்கிக்கொண்டதா?

பதில்: ஆம் (பார்க்க யூசுப் அலி: பின்குறிப்பு 223, பக்கம் 80).

கேள்வி 29: அல்-லத், அல்-உஜ்ஜா மற்றும் மனத் என்ற தெய்வங்கள், "அல்லாஹ்வின் மகள்கள்" என்று அழைக்கப்பட்டு இருந்தார்களா?

பதில்: ஆம்.

கேள்வி 30: ஒரு சமயத்தில் குர்‍ஆன் அல்-லத், அல்-உஜ்ஜா மற்றும் மனத் என்ற தெய்வங்களை வணங்குங்கள் என்றுச் சொல்லியதா?

பதில்: ஆம் (பார்க்க குர்‍ஆன் 53:19-20)

கேள்வி 31: தற்கால குர்‍ஆன்களின் அந்த வசனங்கள் நீக்கப்பட்டு (இரத்துச் செய்யப்பட்டு) விட்டதா?

பதில்: ஆம்.

கேள்வி 32: அந்த குறிப்பிட்ட வசனங்கள் என்னவென்று அழைக்கப்படுகின்றன?

பதில்: சாத்தானின் வசனங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

கேள்வி 33: அக்காலத்திலே, பழங்குடி மக்களிடையே "சந்திர கடவுளை" குறிக்கும் ஒரு சின்னமாக "பிறை நிலா" கருதப்பட்டு இருந்ததா?

பதில்: ஆம்.

கேள்வி 34: அரேபியாவில் சந்திர கடவுளின் மதச் சின்னமாக "பிறை" இருந்ததா?

பதில்: ஆம்.

கேள்வி 35: இதே போல, அல்லாஹ்வின் மகள்களைக் குறிக்க நட்சத்திரங்கள் சின்னமாக பயன்படுத்தப்பட்டு இருந்ததா?

பதில்: ஆம்.

கேள்வி 36: அக்காலத்தில் அரேபியாவில் வாழ்ந்த யூதர்களானாலும், கிறிஸ்தவர்களானாலும் "ஒரு பிறை, அதன் பக்கத்தில் நட்சத்திரங்களைக் கொண்ட சின்னத்தை" தங்கள் மத நம்பிக்கையின் சின்னமாக பயன்படுத்தினார்களா?

பதில்: இல்லை.

கேள்வி 37: சிலைகளை வணங்கும் பழங்குடி மக்களின் பிறைச் சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை இஸ்லாம் தன்னுடைய மத சின்னமாக எடுத்துக்கொண்டதா?

பதில்: ஆம்.

கேள்வி 38: பல நூற்றாண்டுகளாக இஸ்லாம் சிலை வணக்கத்தின் (பேகன்-Pagan) பெயர்களையும், சின்னங்களையும், மத சடங்குகளையும், கோவில்களையும் தன்னுடமையாக்கிக் கொண்டதா?

பதில்: ஆம்.

கேள்வி 39: பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் தாங்கள் பின்பற்றும் சடங்குகள், சின்னங்கள் போன்றவைகளின் பின்னணி தெரியாமல் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்களா?

பதில்: ஆம்.

கேள்வி 40: இந்த இஸ்லாமியர்கள் தங்களின் சடங்குகள், மற்றும் மத காரியங்களின் பின்னணி சிலைகளை வணங்கும் மதங்களிலிருந்து வந்தது என்பதை அறியும் போது அதிர்ச்சிக்குள்ளாகிறார்களா?

பதில்: ஆம்.

கேள்வி 41: சிலைகளை வணங்கும் மதங்களிலிருந்து வந்த இஸ்லாம், ஆபிரகாமின் மார்க்கமாக இருக்கமுடியுமா?

பதில்: இல்லை.

கேள்வி 42: அப்படியானால், இஸ்லாம் என்றால் என்ன?

பதில்: புராதன காலத்தில் பழங்குடி மக்கள் வணங்கிக்கொண்டு இருந்த சிலைகளை வணங்கிக்கொண்டு இருந்த மதத்தின், இன்னொரு பெயர் தான் இஸ்லாம்.

கேள்வி 43: குர்‍ஆன் அல்லாஹ் என்பவர், கிறிஸ்தவர்களின் பிதாவாகிய தேவனா? குமாரனா அல்லது பரிசுத்த ஆவியானவரா?

பதில்: இல்லை

கேள்வி 44: முஸ்லிம்களின் "அல்லாஹ்" தான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று யூதர்கள் நம்புகிறார்களா, சொல்கிறார்களா?

பதில்: இல்லை.

கேள்வி 45: அப்படியானால், அல்லாஹ் யாருடைய இறைவன்?

பதில்: பேகன் என்றுச் சொல்லக்கூடிய சிலைகளை வணங்கும் மக்களின் இறைவன் தான் அல்லாஹ்.

ஆங்கில மூலம்: The 45 Bonus Questions for Muslims: (Part2)

ஆசிரியர்: ராபர்ட் முர்ரே 

சனி, 7 ஆகஸ்ட், 2010

பீஜேயின் அறியாமை: இயேசு பயப்பட்டு வரி செலுத்தினாரா?

"இயேசு இறைமகனா?" புத்தகத்திற்கு மறுப்பு

பீஜேயின் அறியாமை: இயேசு பயப்பட்டு வரி செலுத்தினாரா?

முன்னுரை: பீஜே அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சில மறுப்புக்களை கீழ்கண்ட கட்டுரைகளில் படிக்கலாம்.

1) விபச்சார பாவமும் பீஜே அவர்களும்: திருத்தல் மன்னர் இவர் தானோ!

2) பீஜே ஆராய்ச்சி: சிகப்பு சேலை கட்டியவள் தான் என் மனைவி, கூட்டத்தில் தேடிப்பாருங்கள்.

3) இயேசு "மனிதன்" என நிருபிக்க நினைத்து "இறைவன்" என நிருபித்த பீஜே.

இந்த கட்டுரையில், பீஜே அவர்களின் இன்னொரு அறியாமையை (அ) வேண்டுமென்றே திருத்திக் கூறும் அவரின் யுக்தியை பார்க்கப்போகிறோம். "இயேசு அரசாங்கத்திற்கு பயப்பட்டு வரி செலுத்தினார், அவர் அஞ்சியிருக்கிறார், இப்படி இறைவன் அஞ்சி வரி செலுத்தமாட்டார்" என்று பீஜே எழுதியுள்ளார்.

இப்போது, பீஜே அவர்கள் எழுதியவைகளைக் காண்போம்:

17. கடவுளுக்கு அச்சமில்லை

கடவுள் அச்சத்திற்கு அப்பாற்பட்டவர்; யாருக்கும், எதற்கும் அஞ்சத் தேவையற்றவர். ஆனால் இயேசு அச்சமுற்று வரிப்பணம் வசூலிக்கிறவர்களிடம் வரி செலுத்தக் கூறியிருக்கிறார்.

அவன் வீட்டிற்குள் வந்த போது, அவன் பேசுவதற்கு முன்னமே இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் தீர்வையும் வரியையும் தங்கள் பிள்ளைகளிடத்திலோ, அந்நியரிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள்? என்று கேட்டார். அதற்குப் பேதுரு அந்நியரிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனை நோக்கி, அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்த வேண்டுவதில்லையே. ஆகிலும், நாம் அவர்களுக்கு இடறலாயிராதபடிக்கு, நீ கடலுக்குப் போய், தூண்டில் போட்டு முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்து பார்; ஒரு வெள்ளிப் பணத்தைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும், உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு என்றார்.

(மத்தேயு 17:25-27)

அந்நியரிடத்தில் தான் வரி வாங்க வேண்டும் என்று அந்தக் காலத்தில் இருந்த நியதிக்கு மாறாக குடிமகன்களிடமே அன்று வரி வாங்கியுள்ளனர். அதைத் தவறு என்று கண்டிக்கும் இயேசு வரி செலுத்தாவிட்டால் அதனால் இடைஞ்சல் ஏற்படும் என அஞ்சி வரி செலுத்த ஏற்பாடு செய்கிறார்.

தவறாக வரி வசூலித்தால் அந்த வரியைச் செலுத்த முடியாது எனக் கூறி அதனால் ஏற்படும் விளைவுகளைச் சந்திக்க அவர் அஞ்சியிருக்கிறார்.

பீஜே அவர்கள் கூறியவைகளின் சுருக்கம் இதுதான்:

1) அந்நியர்களிடம் தான் வரி வசூல் செய்யவேண்டும், குடிமக்களிடம் வசூல் செய்யக்கூடாது என்று இயேசு வாழ்ந்த காலத்தில் சட்டம் இருந்ததாம்.

2) இதை தவறு என்று கண்டிக்கும் இயேசு, அதிகாரிகளுக்கு அஞ்சி வரியை செலுத்தினாராம்.

3) வரியை நான் செலுத்தமாட்டேன் என்று இயேசு சொல்லியிருந்தால், விளைவுகளை சந்திக்கவேண்டி வருமே என்று பயப்பட்டு இயேசு வரியை செலுத்திவிட்டாராம்.

4) ஆக, இயேசு பயப்பட்டு வரியை செலுத்தியபடியால், அவர் இறைவன் அல்ல என்பது பீஜே அவர்களின் வாதம்.

பீஜே அவர்களுக்கு பைபிளை படித்து புரிந்துகொள்ள தெரியவில்லை என்பது இந்த மறுப்பை படித்த பிறகு எல்லாருக்கும் தெரிந்துவிடும். அதாவது, அவர் எடுத்துவைத்த ஆரம்ப விவரங்களே தவறு, அவர் புரிந்துக்கொண்டதே தவறு, சிறிதளவாவது ஆராய்ச்சி செய்து எழுதியிருந்தால், இந்த பிரச்சனைகள் வராது.

சரி, இனி மறுப்புக்குச் செல்வோம்.

1) பீஜே அவர்கள் செய்த முதல் தவறு: வசனம் கூறுவது அரசாங்க வரியா / தேவாலய வரியா

மாற்று மார்க்கத்தவர்களின் வசனங்களுக்கு பொருள் கூறுவதற்கு முன்பு,

அவ்வசனங்கள் சொல்வது என்ன?
அவைகளுக்கு நான் சொல்லப்போகும் பொருள் சரியானதா?
இந்த வசனங்கள் குறித்த சரித்திர பின்னனி என்ன?
பைபிள் விரிவுரை என்ன சொல்கிறது?

போன்றவைகளை தெரிந்துக்கொள்ளாமல், ஆராயாமல், சொந்தமாக அடித்துவிட்டு இருக்கிறார் பீஜே அவர்கள்.

ஏன் நான் இப்படி எழுதுகின்றேன் என்றுச் சொன்னால்:

முதலாவதாக, இவ்வசனங்களில் சொல்லப்பட்ட‌ வரியை இயேசு அரசாங்கத்திற்கு கட்டினார் என்று பீஜே அவர்கள் தவறாக புரிந்துக்கொண்டுள்ளார்.
இரண்டாவதாக‌, இயேசு சொன்ன எடுத்துக்காட்டின் பொருளை பீஜே அவர்கள் தவறாக புரிந்துக்கொண்டுள்ளார்.

மத்தேயு 17:24 லிருந்து 27 வரையில் உள்ள விவரங்கள் அரசாங்க வரியைப் பற்றி கூறவில்லை, அது தேவாலய வரியைப் பற்றி கூறுகின்றது, இதனை பீஜே அவர்கள் புரிந்துக்கொள்ள மேலே நான் சொன்னது போல கொஞ்சம் ஆராய்ச்சி செய்து இருக்கவேண்டும்.

20 வயதை அடைந்த ஒவ்வொரு யூதனின் கடமை:

யூத கணக்கெடுப்பில் வரும் இருபது வயதை அடைந்த ஒவ்வொரு ஆணும் தேவாலயத்தின் (பரிசுத்த ஸ்தலத்தின்) பராமரிப்பு செலவுகளுக்காக ஆண்டு ஒன்றுக்கு அரைசேக்கல் காணிக்கை தேவாலயத்திற்கு கொடுக்கவேண்டும். இதனை வசூலித்து ஆலயத்தின் செலவுகள் செய்யப்படும். இந்த கட்டளை மோசே மூலமாக தேவன் யூதர்களுக்கு கொடுத்து இருந்தார். இதனை யூதர்கள் கடைபிடித்தனர், அவர்கள் இஸ்ரவேலில் இருந்தாலும் சரி, வேறு நாட்டில் வாழ்பவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் செலுத்தி வந்தனர். இந்த விவரங்களை யாத்திராகமத்தில் படிக்கலாம்:

எண்ணப்படுகிறவர்களின் தொகையிலே சேருகிற ஒவ்வொருவனும் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படி அரைச்சேக்கல் கொடுக்கவேண்டும்; ஒரு சேக்கலுக்கு இருபது கேரா; கர்த்தருக்குச் செலுத்தப்படுவது அரைச்சேக்கல்.

எண்ணப்படுகிறவர்களின் தொகையிலே சேருகிற இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஒவ்வொருவனும் அதைக் கர்த்தருக்குச் செலுத்தவேண்டும். (யாத்திராகமம் 30:13-14, இன்னும் பார்க்க யாத்திராகமம் 38:26)

தேவாலயத்திற்கு செலுத்தும் வரியைப் பற்றி தெரிந்துக்கொள்ளாமலேயே தன் வியாக்கீனத்தைக் கொடுக்கிறார் பீஜே.

மத்தேயு 17:24ம் வசனம் - ஆங்கில மொழியாக்கம்:

பீஜே அவர்கள் ஆங்கில மொழியாக்கத்தில் இவ்வசனங்களை படித்து இருக்கமாட்டார் என்று நினைக்கிறேன். ஒருவேளை படிந்து இருந்திருந்தாலும், தேவாலய வரியைப் பற்றித் தான் இவ்வசனம் பேசுகின்றது என்று புரிந்து இருந்திருந்தாலும், தான் சுமத்தவேண்டும் என்று நினைத்த குற்றச்சாட்டை சுமத்தவேண்டும் என்பதற்காக‌ மறைத்து இருந்திருப்பார். ஏன் இப்படி சொல்கின்றேன் என்றுச் சொன்னால், பீஜே அவர்கள் மத்தேயு 17ம் அதிகாரம் 25 லிருந்து 27 வரையுள்ள வசனங்களை மேற்கோள் காட்டினார், ஆனால், மத்தேயு 17:24ம் வசனத்தை மேற்கோள் காட்டவில்லை, இந்த வசனத்தில் தான் வரியைப் பற்றிய விவரம் வருகிறது.

இப்போது மத்தேயு 17:24ம் வச
த்தை நாம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் படிப்போம்:

அவர்கள் கப்பர்நகூமில் வந்தபோது, வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள்; செலுத்துகிறார் என்றான். (மத்தேயு 17:24)

Matthew 17:24 (New International Version)

The Temple Tax

24 After Jesus and his disciples arrived in Capernaum, the collectors of the two-drachma tax came to Peter and asked, "Doesn't your teacher pay the temple tax[a]?"

Footnotes:

a. Matthew 17:24 Greek the two drachmas

Link: http://www.biblegateway.com/passage/?search=mat%2017:24&version=NIV

மேலேயுள்ள வசனத்தில் ஆங்கில மொழியாக்கத்தில் "இரண்டு திராக்மா" பணம் இயேசு செலுத்துவதில்லையா? என்று வரியை வசூலிப்பவர் கேட்கிறார். இந்த இரண்டு திராக்மா என்பது கிரேக்க நாணயமாகும். இந்திய பணத்தை "ரூபாய்" என்றுச் சொல்வது போல, கிரேக்க பணத்தை திராக்மா என்று அழைப்பார்கள். (கிரேக்க வார்த்தை: "டிட்ரக்மோன்" - δίδραχμον – didrachmon - did'-rakh-mon)

இந்த வரியானது ஆலயத்திற்கு கொடுக்கவேண்டும் என்று மோசே கட்டளையிட்ட அரைசேக்கல் காணிக்கையாகும், இதனை கிரேக்க நாணயத்தில் இரண்டு திராக்மா என்று சொல்வார்கள். (கிரேக்க திராக்மா பற்றி அறிய படிக்கவும்: http://en.wikipedia.org/wiki/Greek_drachma)

மீனின் வயிற்றில் வெள்ளி நாணயம்:

பேதுரு இயேசுவிடம் இந்த ஆலய வரிப்பணம் பற்றி கேட்பதற்கு முன்பாகவே, இயேசு பேதுருவிடம் அதைப் பற்றி பேசி, ஒரு மீனைப்பிடித்து முதலில் பிடிக்கும் மீனின் வாயில் இருக்கும் ஒரு வெள்ளி நாணயத்தை "உனக்காகவும் எனக்காகவும்" (இரண்டு பேருக்காக) ஆலய வரியை செலுத்து என்று கூறுகிறார்.

இந்த வெள்ளிப்பணமானது, நான்கு திராக்மாவிற்கு சமமானது, எனவே இது இரண்டு நபர்களுக்கு ஆலய வரியை செலுத்த போதுமானது. (இந்த வார்த்தை கிரேக்கத்தில் ஸ்தாத்தேர் என்பதாகும் : στατήρ, statēr - stat-air' - கிரேக்க எபிரேய அகராதி - http://www.bibletools.org/index.cfm/fuseaction/Lexicon.show/ID/G4715/stater.htm)

இதுவரை நாம் மேலே கண்ட விவரங்கள் மூலம் அறிவது என்னவென்றால், பைபிள் வசனங்கள் ஆலய வரியைப் பற்றி பேசும் போது, அதை அரசாங்க வரி என்று நினைத்து எழுதி பீஜே அவர்கள் தவறு செய்துள்ளார்.

2) பீஜே அவர்கள் செய்த இரண்டாம் தவறு: இயேசு சொன்ன எடுத்துக்காட்டின் பொருளை அறியாமல் எழுதிய பீஜே:

முதலாவது, பீஜே அவர்கள் தேவாலய பணிக்காக வசூலிக்கப்படும் வரியைப் பற்றி புரிந்துக்கொள்ளாமல், அதை அரசாங்க வரி என்று நினைத்து முதல் தவறைச் செய்தார். இரண்டாவதாக, அவர் இயேசு சொன்ன வார்த்தைகளின் பொருளையும் புரிந்துக்கொள்ளாமல் இரண்டாம் தவறையும் புரிந்துள்ளார்.

இயேசு என்ன கூறினார் என்பதை இப்போது படிப்போம்:

மத்தேயு 17:25-26

அவன் வீட்டிற்குள் வந்தபோது, அவன் பேசுகிறதற்கு முன்னமே இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் தீர்வையையும் வரியையும் தங்கள் பிள்ளைகளிடத்திலோ, அந்நியரிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார்.

அதற்குப் பேதுரு: அந்நியரிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனை நோக்கி: அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்தவேண்டுவதில்லையே.

இந்த வசனங்களை எப்படி பீஜே புரிந்துக்கொண்டார் என்பதை கீழே படியுங்கள்:

பீஜே அவர்கள் எழுதியது:

அந்நியரிடத்தில் தான் வரி வாங்க வேண்டும் என்று அந்தக் காலத்தில் இருந்த நியதிக்கு மாறாக குடிமகன்களிடமே அன்று வரி வாங்கியுள்ளனர். அதைத் தவறு என்று கண்டிக்கும் இயேசு வரி செலுத்தாவிட்டால் அதனால் இடைஞ்சல் ஏற்படும் என அஞ்சி வரி செலுத்த ஏற்பாடு செய்கிறார்.

அந்நியர்களிடம் தான் வரி வாங்க வேண்டும், குடிமக்களிடம் வாங்கக்கூடாதாம், இப்படி ஒரு சட்டம் இருந்ததாக இயேசு கூறினாராம். மேலே உள்ள இரண்டு வசனங்களை படித்து, இஸ்லாமிய அறிஞர் புரிந்துக்கொண்டதைப் பார்த்தால், ஆச்சரியமாக உள்ளது.

பீஜே அவர்களே, இரண்டு வசனங்களை படித்து புரிந்துக்கொள்ளத் தெரியாத நீங்கள் எல்லாம் எப்படி புத்தகம் எழுத வந்துவிட்டீர்கள்?

சரி, இப்போது இயேசு சொன்ன வார்த்தைகளின் பொருளை பார்ப்போம்.

ஒரு அரசர் புதிய வரியை சுமத்தும்போது, அதை யாரிடம் வாங்குவார்?

தன் குடும்ப நபர்களிடம் வாங்குவாரா? அதாவது இளவரசர்களிடம், இளவரசிகளிடம் வாங்குவாரா? - தன் சொந்த மகன்/மகளிடம் வாங்குவாரா?

அல்லது

தன் நாட்டு மக்களிடம் வாங்குவாரா?

இந்த கேள்விக்கு பீஜே அவர்கள் என்ன பதில் சொல்லுவார்? அரசர் நாட்டு மக்களிடம் வாங்குவார், தன் சொந்த மகனிடமோ, மகளிடமோ வாங்கமாட்டார் என்று தான் பதில் சொல்வார் என்று நினைக்கிறேன். இதே பதிலைத் தான் பேதுருவும் சொன்னார்.


"அந்நியர்" என்று இயேசு சொன்னது, குடிமக்களைத் தானே தவிர, வேறு நாட்டு மக்களை அல்ல. ஆனால், பீஜேவிற்கு அந்நியர் என்று இயேசு சொன்னது, வேறு நாட்டு மக்களைப் பற்றி என்று புரிந்துள்ளது. பீஜே அவர்களே, உங்களுடைய லாஜிக் எல்லாம் கிறிஸ்தவர்களிடமும், பைபிளிடமும் பளிக்காது.

ஆக, இயேசு சொன்ன வசனங்களில் "அந்நியர்" என்றுச் சொன்னது, அந்த அரசனின் நாட்டு மக்களை குறிக்கும், இந்த சாதாரண விஷயத்தையும் பீஜேவிற்கு விளக்கவேண்டும் என்ற நிலையில் பீஜே இருக்கிறார்.

இயேசு அந்த நாட்டு அரசனின் மகனாக இருந்தாரா, இளவரசராக இருந்தாரா?

இயேசு பிள்ளைகள் வரியை கட்டவேண்டியதில்லை என்றுச் சொன்னதினால், தன்னை பிள்ளை என்றுச் சொல்லிக்கொண்டார். அப்படியானால், "இயேசு அந்த நாட்டு அரசனின் மகனாக இருந்தாரா, இளவரசராக இருந்தாரா?" என்ற கேள்வி எழும். இயேசு அந்த நாட்டு அரசனின் மகன் அல்ல, அப்படியிருக்கும் போது பிள்ளைகள் வரியை செலுத்த வேண்டியதில்லையே என்று ஏன் கூறினார்?

இந்த இடத்தில் உள்ள விவரத்தை சரியாக புரிந்துக்கொள்ளாததினால் தான் பீஜே அவர்கள் தவறுகளுக்கு மேல் தவறுகளை செய்து இருக்கிறார்.

இயேசு சொன்ன உதாரணத்தின் பொருள்

எருசலேமில் இருக்கும் தேவாலயம் பிதாவாகிய தேவனின் அரசசபையாகும், தேவன் அதன் அரசராவார், இயேசுக் கிறிஸ்து அவரது பிள்ளை, அதாவது இளவரசர். அப்படியிருக்கும் போது, தேவாலய வரி என்பது, அரசனாகிய தேவன் விதிக்கும் வரி. இந்த வரியை யாரிடம் வாங்கவேண்டும்? அந்நியர்களிடம் வாங்கவேண்டுமே அதாவது குடிமக்களிடம் வாங்கவேண்டுமே ஒழிய, தேவனின் குமாரனாகிய இயேசுவிடம் (இளவரசரிடம்) வாங்கக்கூடாது. இதைத் தான் இயேசு ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கினார்.

அரசன், அரச சபை = தேவன், தேவாலயம்

இளவரசன் = தேவனின் குமாரனாகிய இயேசுக் கிறிஸ்து.

அரச சபை பராமரிப்பிற்கு வாங்கப்படும் வரி = நாட்டு குடிமக்களிடம் பலவகையான வரிகளாக‌ வாங்கவேண்டும்

இதைத் தான் இயேசு மேற்கண்ட வசனங்களில், பிள்ளைகள் (இயேசு) வரியை செலுத்தவேண்டுவதில்லை என்று கூறினார்.

இதனை புரிந்துக்கொள்ளாமல், பீஜே அவர்கள் அந்நியர்கள் என்றுச் சொன்னால், வேறு நாட்டு மக்களிடம் என்று நினைத்துக் கொண்டார். எந்த அரசனாவது தான் ஆட்சி செய்யாத நாட்டு மக்கள் தன் அரச சபை / நாட்டு பராமறிப்பிற்கு தேவையான பணத்திற்காக வரியை வேறு நாட்டு மக்களிடம் வாங்கமுடியுமா? கெட்கத்தான் முடியுமா? இந்த சிறிய விஷயத்தையும் பீஜே புரிந்துக்கொள்ளவில்லை என்பது கவலையைத் தருகிறது. பீஜே அவர்கள், இப்படி தவறாக புரிந்துக்கொண்டு, அதை அக்காலத்தில் ஒரு வழக்கம் /சட்டம் இருந்தது என்று இயேசு சொன்னதாக கதை விடுகிறார்.

ஆக, பீஜே அவர்கள் இந்த ஓவரிலும் ஒரு விக்கட்டையும் எடுக்கவில்லை, அதற்கு பதிலாக ஒவ்வொரு ப‌ந்தும் தமிழ் கிறிஸ்தவர்களால் பவுண்டிரிக்கு துரத்தப்பட்டது என்பது தெளிவாக புரிகின்றது.

இயேசு பயந்து தான் வரியை செலுத்தினாரா?

இப்போது பீஜே அவர்கள் போட்ட அடுத்த ஓவருக்குச் செல்வோம் (இது இந்த கட்டுரையின் கடைசி ஓவரும் கூட‌)

பீஜே அவர்கள் எழுதியது:

அந்நியரிடத்தில் தான் வரி வாங்க வேண்டும் என்று அந்தக் காலத்தில் இருந்த நியதிக்கு மாறாக குடிமகன்களிடமே அன்று வரி வாங்கியுள்ளனர். அதைத் தவறு என்று கண்டிக்கும் இயேசு வரி செலுத்தாவிட்டால் அதனால் இடைஞ்சல் ஏற்படும் என அஞ்சி வரி செலுத்த ஏற்பாடு செய்கிறார்.

தவறாக வரி வசூலித்தால் அந்த வரியைச் செலுத்த முடியாது எனக் கூறி அதனால் ஏற்படும் விளைவுகளைச் சந்திக்க அவர் அஞ்சியிருக்கிறார்.

இப்போது தான் இந்த கட்டுரை எழுதுவதற்கு என்னைத் தூண்டிய, பீஜே அவர்களின் வரிகளை நாம் அலசப்போகிறோம்.

பீஜே அவர்கள் செய்த முதல் தவறு: எந்த வரி என்று புரிந்துக்கொள்ளாமையாகும்.

இரண்டாம் தவறு: இயேசுவின் வார்த்தைகளை புரிந்துக் கொள்ளாமையாகும்.

மூன்றாம் தவறு: மேற்கண்ட இரண்டு தவறுகளால் ஏற்பட்ட மூன்றாம் தவறாகும். அதாவது இயேசு அநீதிக்கு எதிராக அவர் குரல் கொடுக்கவில்லை, அநீதியை எதிர்க்கவில்லை என்று பொருள் படவேண்டும் என்பதற்காக, "இயேசு பயப்பட்டுத் தான் வரியை செலுத்தினார்" என்று தன் முடிவைச் சொல்லியுள்ளார்.

முதலாவதாக, இந்த வசனங்களில் அரசாங்கத்தின் இடையூறு இல்லை என்பதை நாம் மேலே விளக்கினோம். அதாவது இது தேவாலய வரியைப் பற்றிச் சொல்கிறது, அரசாங்கத்தின் வரியைப் பற்றி அல்ல.

இரண்டாவதாக, இயேசு பேசும் போது முக்கியமான ஒரு வாக்கியத்தைச் சொல்லியுள்ளார், இது போதும், இயேசு பயப்பட்டு வரி செலுத்தவில்லை என்பதற்கு, அதனை பீஜே அவர்கள் மேற்கோள் காட்டிய வசனங்களிலேயே படிப்போம்.

மத்தேயு 17: 26-27

அதற்குப் பேதுரு: அந்நியரிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனை நோக்கி: அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்தவேண்டுவதில்லையே.

ஆகிலும், நாம் அவர்களுக்கு இடறலாயிராதபடிக்கு, நீ கடலுக்குப் போய், தூண்டில்போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்துபார்; ஒரு வெள்ளிப்பணத்தைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு என்றார்.

எருசலேம் தேவாலயத்தைவிட பெரியவராக இருந்தவராகிய இயேசுக் கிறிஸ்து, தேவாலய வரியை செலுத்த வேண்டியதில்லை காரணம்,அவர் தேவகுமாரன். இருந்தபோதிலும் நாம் வரியை செலுத்துவோம் என்று இயேசு கூறியுள்ளார்.

மட்டுமல்ல, நியாயமானபடி நாம் தேவாலய வரியை செலுத்த வேண்டிய அவசியமில்லை என்றாலும் , "அவர்களுக்கு ஒரு இடறலாக, ஒரு தடங்களாக இல்லாதபடிக்கு" நாம் வரியை செலுத்துவோம் என்று இயேசு கூறினார்.

யாருக்கும் தடங்கலாக இருக்ககூடாது என்று இயேசு விரும்பினார், முக்கியமாக தேவாலயத்தின் பராமரிப்பிற்காக, ஒழுங்கிற்காக செலுத்தப்படவேண்டிய வரியை செலுத்த வேண்டும் என்று விரும்பினார்.

நற்செயல்கள் பற்றி போதிக்கும் இயேசுக்கிறிஸ்து, தேவாலயத்தில் நடக்கும் அட்டூழியங்களை சகித்துக்கொள்ளாமல் கண்டித்த இயேசுக்கிறிஸ்து, அதே தேவாலயத்திற்கு செலுத்தவேண்டிய வரியை செலுத்தவில்லை என்று மக்கள் அறிந்தால், அதனை ஒரு வாய்ப்பாக எண்ணி சிலர் வரியை செலுத்த மறுப்பார்கள். இதனால், வரி வசூல் செய்யும் தேவாலய ஊழியர்களுக்கு அனேக பிரச்சனைகள் உண்டாகும். இதனை தடுக்க‌ இயேசு வரியைச் செலுத்தினார்.

ஆக,பீஜே அவர்களுக்கு நான் தெளிவாக்க விரும்புவது என்னவென்றால், "இயேசு பயப்பட்டு வரியை செலுத்தவில்லை, இயேசு அவர்களுக்கு தடங்கலாக இருக்கவேண்டாம்" என்ற காரணத்திற்காகவே வரியை செலுத்தும்படி பேதுருவிடம் கூறினார்.

எனவே, பீஜே அவர்களே, உங்களின் ஆராய்ச்சியை சிறிது நிதானமாகவும், ஆழமாகவும் செய்யும் படி கேட்டுக்கொள்கிறேன். நான் மாறமாட்டேன், இப்படித் தான் செய்வேன், எழுதுவேன் என்று மறுபடியும் அடம்பிடித்தால், ஒவ்வொரு தமிழ் கிறிஸ்தவனும் உங்கள் முகத்திற்கு நேராக விரலை நீட்டி, உங்களின் இந்த வரிகளுக்கு என்ன பொருள் என்று கேட்பான். இன்று நான் கேட்கும் இதே கேள்விகளை தமிழ் நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் உங்களிடம் கேட்பார்கள் என்பதை மட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவும்.

விடுபட்ட ஒரு சில விவரங்கள்: இந்த நிகழ்ச்சியின்போது, வரி கேட்பவர்கள் பேதுருவிடம் கேட்கும் கேள்வி "உங்கள் போதகர் தேவாலய‌ வரியை செலுத்துவதில்லையா?" என்பதாகும். அதற்கு பேதுரு செலுத்துகிறார் என்றுச் சொன்னார், நான் இயேசுவிடம் கேட்டுச் சொல்கிறேன் என்றுச் சொல்லவில்லை. ஆக, ஒவ்வொரு ஆண்டும் (கிட்டத்தட்ட‌ மூன்றரை ஆண்டுகள் பேதுரு இயேசுவுடன் இருந்தார்) இயேசு ஆலய வரி செலுத்துவது பேதுருவிற்கு தெரிந்துஇருக்கும், அதனால் தான் "செலுத்துகிறார்" என்று பதில் அளித்தார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம், இயேசு சர்வ வியாபி, சர்வ வல்லமையுள்ளவர் மற்றும் சர்வ ஞானி என்பதை நிருபித்துள்ளார். ஒரு மீனின் வயிற்றில் இருக்கும் நாணயம் அவருக்கு தெரிந்து இருக்கிறது, மற்றும் அந்த மீன் சரியாக பேதுரு போடும் தூண்டிலில் வந்து விழவேண்டும் என்றுச் சொல்லி அவர் அற்புதம் செய்துள்ளார். ஆக, பீஜே அவர்களே, இந்த நிகழ்ச்சிப் பற்றி எழுதி, இந்த விவரங்களை எழுத உதவி செய்தபடியால் உங்களுக்கு என் நன்றிகள் உரித்தாகுக.

அரசாங்க வரியைக் குறித்து இயேசுக் கிறிஸ்து:

தேவாலய வரியைப் பற்றி நாம் இதுவரைக் கண்டோம், அரசாங்க வரி பற்றி இயேசு என்ன கூறுகின்றார் என்பதை அறிய மத்தேயு 22:15-22 வரை படிக்கவும். அரசனுக்கு செலுத்தும் வரியை அரசனுக்கும், ஆண்டவருக்கு செலுத்தவேண்டிய வரியை ஆண்டவருக்கும் செலுத்தும்படி இயேசு கூறினார்.

இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். (மத்தேயு 22:21)

கிறிஸ்தவர்களுக்கு ஒரு வேண்டுகோள், இயேசு காட்டிய வழியில் நடக்கின்றோம் என்றுச் சொல்லுகின்ற நாம், அரசாங்கத்திற்கு செலுத்தவேண்டிய வரியை சரியாக கட்டுகின்றோமா? திருச்சபையின் பராமறிப்பிற்கும், இதர செலவுகளுக்கும் தேவையானவற்றை செலுத்துகின்றோமா? அரசாங்கத்தை ஏமாற்றி சரியான வரியை கட்டத்தவறும் கிறிஸ்தவன், கிறிஸ்துவை உடையவன் அல்ல. இயேசு தேவாலய வரியை செலுத்த வேண்டிய அவசியம் இல்லாதவராக இருந்தாலும், அந்த‌ வரியை செலுத்தினார். இயேசுவே தேவாலய வரியை செலுத்தவில்லை நாம் ஏன் செலுத்தவேண்டும் என்று மக்கள் சொல்லக்கூடாது என்பதற்காகவும், யூத அதிகாரிகளுக்கு ஆலய பராமரிப்பு செய்வவற்கு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காகவும், இயேசு வரியை செலுத்தினார். நாம் இராயனுடையதை இராயனுக்கும் தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துகின்றோமா? சிந்திக்க வேண்டுகின்றேன்.

முடிவுரை: அருமை இஸ்லாமிய அறிஞர் பீஜே அவர்களே, உங்களின் ஆய்வு தவறானது, வியாக்கீனங்கள் தவறானது. நான் உங்கள் முழு புத்தகத்திற்கும் பதில்கள் தரும் வரை அடுத்த பதிப்பை பதிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், பெரும்பான்மையான விவரங்களை நீங்கள் உங்கள் புத்தகத்தில் மாற்றவோ, நீக்கவோ வேண்டி வரும்.

இப்படி தவறாகவும், வேண்டுமென்று திருத்தியும் கூறுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். நியாயமான கேள்விகள், விவரங்களை எழுதினால், பதில்கள் தருவதற்கு நன்றாக இருக்கும். அதை விட்டுவிட்டு, சொந்தமாக பொய்களை எழுதி, யார் கேட்பார்கள் என்ற எண்ணத்துடன் எழுதுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.

கடைசியாக தெரிவித்துக்கொள்வது என்னவென்றால், இயேசு பயந்து வரியை செலுத்தவில்லை, அவர்களுக்கு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காகவும், தேவாலத்தின் செலவுகளுக்காக கேட்கப்படும் வரி நியாயமானது என்பது மக்களும் உணர்ந்து கொடுக்கவேண்டுமென்பதற்காகவும் செலுத்தினாரே தவிர பயந்து அல்ல.

கடவுளுக்கு அச்சமில்லை என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய அடுத்த வரிகளுக்கு பதிலை அடுத்த கட்டுரையில் தருகிறேன்.

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

விபச்சார பாவமும் பீஜே அவர்களும்: திருத்தல் மன்னர் இவர் தானோ!

விபச்சார பாவமும் பீஜே அவர்களும்: திருத்தல் மன்னர் இவர் தானோ!

இயேசு இறைமகனா புத்தகத்திற்கு மறுப்பு


இயேசு இறைமகனா என்ற பீஜே அவர்களின் புத்தகத்திற்கு மறுப்புக்கள் கொடுத்துக்கொணடு இருக்கிறோம். பீஜே அவர்கள் "கடவுள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்" என்ற தலைப்பில் தங்கள் திருத்தல் வேலையை அரங்கேற்றியுள்ளார். இந்த மறுப்புக் கட்டுரை பீஜே அவர்களின் திருத்தல் வேலையை உலகிற்கு வெளிச்சம் காட்டும். பைபிள் சொல்லாத ஒன்றை தானாகவே கற்பனை செய்துக்கொண்டு தன் புத்தகத்தில் எழுதியுள்ளார். இதனை இக்கட்டுரையை படிக்கும் இஸ்லாமியர்களும் புரிந்துக் கொள்ளலாம்.

பீஜே எழுதியவைகளின் சுருக்கம்:


1) விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை தண்டிக்க, விபச்சாரம் செய்யாதவன் எவனோ அவன் தண்டிக்கட்டும் என்று இயேசு கூறினாராம்.

2) யூத சமுதாயத்தில் எவருமே விபச்சாரம் செய்யாமல் இருக்கவில்லையாம். (பீஜேவின் கண்டுபிடிப்பு 1)

3) இயேசுவின் சீடர்களும் விபச்சாரம் செய்துள்ளார்களாம்! (பீஜேவின் கண்டுபிடிப்பு 2)

4) இயேசுவும் விபச்சாரம் செய்தார் என்று பைபிள் மறைமுகமாகச் சொல்கிறதாம் (பீஜேவின் கண்டுபிடிப்பு 3).

5) இது தான் கடவுளின் இலக்கணமா? என்று கேள்வியை பீஜே எழுப்புகிறார்.

6) இயேசு விபச்சாரம் செய்யவில்லையானால், ஏன் அவளை அப்போதே தண்டிக்கவில்லை என்று இரண்டாவது கேள்வியை எழுப்புகிறார்

இதனை படிக்கும் நீங்கள் கிறிஸ்தவராக இருந்தால், இப்படியெல்லாம் நாங்கள் பைபிளில் படிக்கவில்லையே என்று எண்ணுவீர்கள். உங்கள் சந்தேகம் உண்மை தான், ஆனால், பீஜே அவர்கள் மிகப்பெரிய ஆய்வு செய்து இதனை கண்டுபிடித்து இருக்கிறார்கள். இக்கட்டுரையில் அவைகளுக்கு நாம் பதிலைக் காண்போம்.

இக்கட்டுரையின் தலைப்புக்கள்:

1) பைபிள் மீது பீஜே அவர்கள் சுமத்தும் குற்றச்சாட்டிற்கு மறுப்பு

2) மோசே சொன்னது போல, விபச்சாரத்தில் பிடிப்பட்ட பெண்ணை இயேசு ஏன் தண்டிக்கவில்லை?

---------
1) பைபிள் மீது பீஜே அவர்கள் சுமத்தும் குற்றச்சாட்டிற்கு மறுப்பு

பீஜே அவர்கள், இயேசு இறைமகனா புத்தகத்தில் கீழ்கண்டவாறு எழுதுகிறார்:

12. கடவுள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்

விபச்சாரம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்கிறது பைபிள்.

(நீதிமொழிகள் 6:29)

ஒரு பெண் விபச்சாரம் செய்த போது விபச்சாரம் செய்யாதவன் எவனோ அவன் அவளைத் தண்டிக்கட்டும் என்று இயேசு கூறியதாகவும் பைபிள் கூறுகிறது.

(யோவான் 8:3-11)

அந்தச் சமுதாயத்தில் எவருமே விபச்சாரம் செய்யாமல் இருக்கவில்லை. இயேசுவின் சீடர்களும் கூட அதைச் செய்துள்ளனர். ஏன் இயேசுவும் கூட அதில் ஈடுபட்டதாக அந்த வசனம் மறைமுகமாகக் கூறுகிறது. (நாம் அவ்வாறு நம்பவில்லை)

இது தான் கடவுளின் குமாரனுக்குரிய இலக்கணமா? இயேசு அந்தப் பாவத்தைச் செய்திருக்கவில்லையானால் கடவுளின் கட்டளைப் படி அவராவது தண்டனையை நிறைவேற்றியிருக்க வேண்டுமல்லவா?

கிறித்தவர்கள் விசுவாசிக்கின்ற பைபிளே அவரை இவ்வாறு அறிமுகம் செய்யும் போது அவரைக் கடவுள் என்று எவ்வாறு கருதுகிறார்கள்?

இன்னொரு முறை அவர் எழுதியவைகளின் சுருக்கத்தை இங்கே தருகிறேன்:

1) விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை தண்டிக்க, விபச்சாரம் செய்யாதவன் எவனோ அவன் தண்டிக்கட்டும் என்று இயேசு கூறினாராம்.

2) யூத சமுதாயத்தில் எவருமே விபச்சாரம் செய்யாமல் இருக்கவில்லையாம்.

3) இயேசுவின் சீடர்களும் விபச்சாரம் செய்துள்ளார்களாம்?

4) இயேசுவும் விபச்சாரம் செய்தார் என்று பைபிள் மறைமுகமாகச் சொல்கிறதாம் (இதனை பீஜே எப்படியோ கண்டுபிடித்து இருக்கிறார்).

5) இது தான் கடவுளின் இலக்கணமா? என்று கேள்வியை பீஜே எழுப்புகிறார்

6) இயேசு விபச்சாரம் செய்யவில்லையானால், ஏன் அவளை அப்போதே தண்டிக்கவில்லை என்று இரண்டாவது கேள்வியை எழுப்புகிறார்.

பீஜே அவர்களின் வரிகளுக்கு செல்வதற்கு முன்பாக, அவர் மேற்கோள் காட்டிய நிகழ்ச்சி பற்றி சுருக்கமாக நாம் பார்ப்போம்.

இயேசுவிடம் குற்றம் கண்டுபிடிக்கவேண்டும் என்ற எண்ணத்தில், அக்கால யூதகுருக்கள் விபச்சாரத்தில் பிடிப்பட்ட ஒரு பெண்ணை கொண்டு வந்து, மோசேயின் சட்டத்தின்படி இப்பெண் கல்லெரிந்து கொல்லப்படவேண்டும், நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று இயேசுவிடம் கேட்டார்கள்.

இது சாதாரண கேள்வி அல்ல, இதில் அனேக பிரச்சனைகள் உள்ளது. அதாவது, அக்காலத்தில் ரோமர்கள் இஸ்ரவேலை ஆண்டுக்கொண்டு இருந்தார்கள், ரோம சட்டம் அமுலில் இருந்தது.

மோசேயின் சட்டத்தை ஆதரித்து, ரோம சட்டத்தை மீறலாமா அல்லது ரோம சட்டத்திற்கு கீழ்படிந்து மோசேயின் சட்டத்தை மீறலாமா? (இதில் எதை இயேசு செய்வார் என்று அவர்கள் காத்திருந்தார், ஆனால்,இயேசு வேறு ஒன்றை செய்தார்).

மோசேயின் சட்டத்தை ஆதரிக்கலாமா:

ஆம், மோசேயின் சட்டத்தின் படி, இப்பெண் கல்லெரிந்து கொல்லப்படவேண்டும் என்று இயேசு சொன்னால், உடனே யூத தலைவர்கள், இவர் "ரோம சட்டத்தை மீறிவிட்டார்" என்றுச் சொல்லி, அரசாங்கத்திடம் இயேசுவை சிக்கவைத்துவிடுவார்கள். ஏனென்றால், ரோமர்களின் ஆட்சியில், மரண தண்டனை விதிக்கும் உரிமை ரோம அரசாங்கத்திற்கே தவிர, தனி மனிதனுக்கு இல்லை. எனவே இயேசு, மக்களிடத்தில் கலகத்தை உண்டாக்கி, சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டார் என்று ரோம அரசாங்கத்திடம் சொல்லிவிடலாம் என்று அவர்கள் நினைத்தார்கள்.

ரோம சட்டத்தை ஆதரிக்கலாமா:

ஒருவேளை, இவளுக்கு மோசேயின் சட்டத்தின்படி தண்டனை இல்லை என்றுச் சொல்லிவிட்டால், பொது மக்களிடம் இயேசுவிற்கு இருக்கும் செல்வாக்கை அல்லது நற்பெயரை கெடுப்பதற்கு இந்த பதில் யூத குருக்களுக்கு உதவியாக இருக்கும். அதாவது, நம்முடைய மோசேயின் சட்டத்தை இவர் மீறிவிட்டார், அல்லது அதனை அவமதித்துவிட்டார் என்றுச் சொல்லி, மக்களிடையே இயேசு பற்றி சொல்லலாம் என்று யூதகுருக்கள் நினைத்தனர்.

இந்த இரண்டு தெரிவுகளையும், இயேசு செய்யாமல், கீழ்கண்டவாறு கூறினார், யூத குருக்கள் தோல்வி அடைந்தார்கள், (இதே போல, பீஜே அவர்களும் தோல்வி அடைந்துவிட்டார்).

யோவான் 8:4 லிருந்து 11 வசனங்கள் வரை:

போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள். இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள். அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள். இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார். அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக் கொண்டிருக்கையில்,

அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி,

அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார். அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள்.

இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார். அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள்.

இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.

இந்த வரிகளை படித்துவிட்டுத் தான் பீஜே அவர்கள் மேலே நாம் படித்தது போல எழுதியுள்ளார்.

மேலேயுள்ள வசனங்களை படித்த நீங்கள், பீஜே அவர்கள் சொன்னதை ஒப்பிட்டுப் பாருங்கள்.

பீஜே அவர்கள் எழுதியவைகளை ஒரு முறை படிப்பது நல்லது

ஒரு பெண் விபச்சாரம் செய்த போது விபச்சாரம் செய்யாதவன் எவனோ அவன் அவளைத் தண்டிக்கட்டும் என்று இயேசு கூறியதாகவும் பைபிள் கூறுகிறது.

(யோவான் 8:3-11)

பீஜே அவர்களுக்கு கேள்விகள்:

1) ஆய்வு செய்து புத்தகம் எழுதிய பீஜே அவர்களே, "விபச்சாரம்" செய்யாதவன் எவனோ அவன் முதலாவது கல்லெரியக்கடவன் என்று இயேசு சொன்னாரா? அல்லது "பாவம் செய்யாதவன் எவனோ அவன் முதலாவது கல்லெரியக்கடவன்" என்றுச் சொன்னாரா?

2) "பாவம்" என்ற வார்த்தை உங்களுக்கு எப்படி "விபச்சாரம்" என்று தெரிந்தது?

3) உங்களுக்கு ஏன் இந்த திருத்திச் சொல்லும் வேலை? உள்ளதை அப்படியே சொல்லி உங்கள் வாதங்களை முன்வைக்கலாம் அல்லவா?

4) "பாவம்" என்ற வார்த்தை பொதுவான வார்த்தை, எல்லா வித தீய செயல்களை குறிக்க பொதுவாக "பாவம்" என்று பயன்படுத்தலாம். அதாவது பொய் சொல்லுதல், ஏமாற்றுதல், திருடுதல், கொலை செய்தல், விபச்சாரம் செய்தல், தீவிரவாத செயல்களில் ஈடுபடுதல் என்று அனேக தீய செயல்களை நாம் பொதுவாக பாவம் என்று அழைக்கிறோம். இந்த சாதாரண விஷயம் கூடவா உங்களுக்கு தெரியவில்லை? அல்லது வேண்டுமென்றே பைபிள் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் உங்கள் வெறுப்புணர்ச்சியை வெளிக்காட்டும் செயலா? எது எப்படியோ உங்கள் திருத்தல் வேலை உலகிற்கு காட்டப்பட்டுவிட்டது, சாயம் வெளுத்துவிட்டது.

விபச்சாரம் செய்யாதவன் கல்லெரியவேண்டும் என்று இயேசு கூறவில்லை, "பாவம்" செய்யாதவன் கல்லெரியட்டும் என்று தான் கூறினார், இதனை தெரிந்துக்கொள்ளுங்கள்.

"பாவம்" என்று இயேசு சொன்னதை ஏன் நாம் "விபச்சாரம்" என்று எடுத்துக்கொள்ளக்கூடாது என்று சில இஸ்லாமியர்கள் கேட்பார்கள்:

இந்த கேள்விக்கு இடமே இல்லை, காரணங்களை கீழே படிக்கவும்:

அ) பாவம் என்ற வார்த்தை பைபிள் முழுவதும் "விபச்சாரத்திற்கு" மட்டும் பயன்படுத்தப்படவில்லை, எல்லா வித தீய செயல்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. (குர்‍ஆனிலும் இதே நிலைதான், யாராவது மறுக்க தயாரா?)

ஆ) உங்களில் பாவம் இல்லாதவன் முதலாவது கல்லை எறியட்டும் என்று இயேசு சொன்னதை, அந்த பெண்ணை கொண்டு வந்த எல்லாருக்கும் புரிந்தது (பீஜேவிற்கு மட்டும் புரியாது). நான் எப்படி இதை அவ்வளவு நிச்சயமாக சொல்லமுடியும்? அதாவது, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஒவ்வொருவராக ஒன்றும் செய்யாமல் சென்றுவிட்டனர், அதாவது பெரியவர்கள் மட்டுமல்ல, அவர்களோடு வந்திருந்த சிறியவர்கள் கூட சென்று விட்டனர். பீஜேவின் கூற்றுப்படி சிறியவர்கள் கூட விபச்சாரம் செய்ததாக நாம் அர்த்தம் கொள்ளவேண்டும், இது சாத்தியமில்லையல்லவா? ஆனால், சிறுவர்கள் பொய் சொல்வார்கள், இதர சிறிய சிறிய தவறுகளைச் செய்வார்கள், இது சாத்தியம்.

இ) சிறியவர்களும் சென்றுவிட்டார்கள் என்றுச் சொல்வதினால், இயேசு கூறியது, சிறிய சிறிய தவறுகளாகிய பெற்றோர்களிடம் பொய் சொல்லுதல், இன்னும் பல தீய செயல்களை செய்தலை கூட‌ குறிக்கும் என்பதை அங்குள்ளவர்கள் புரிந்துக்கொண்டதினால், அவர்கள் சென்றுவிட்டனர்.

ஈ) சரி, இயேசு சொன்னது "பொதுவான தீய செயல்களைக் குறிக்கும் பாவம்" என்பதாக இருந்தாலும், ஏன் ஒரு யூத குருவும், அல்லது பெரியவர்களும், அல்லது சிறியவர்களும் கல்லெரியவில்லை?

பாவமில்லாதவன் ஒருவனுமில்லை, ஏதோ ஒரு சிறிய பாவத்தையாவது செய்து இருப்பார்கள், பொய் சொல்லியிருக்கலாம், பெற்றோருக்கு கீழ்படியாமல் இருந்திருக்கலாம், கெட்ட வார்த்தைகளை கோபத்தில் சொல்லியிருக்கலாம், ஒரு சிலர் விபச்சாரமும் செய்து இருக்கலாம் அல்லது வேறு ஏதாவது செய்து இருக்கலாம். ஆனால், யாருக்கு தெரியப்போகுது? ஒரு கல்லை எடுத்து அந்த பெண்ணின் மீது வீசிவிட்டால் போதுமே என்று ஏன் யாருமே நினைக்கவில்லை? இதற்கும் வாய்ப்பு இல்லை.

சாதாரண பாவம் செய்து இருந்தாலும் அதனை மறைத்து, அப்பெண்ணின் மீது கல்லெரிய யாருக்கும் தைரியமில்லை ஏன்? ஏனென்றால், அங்கு உட்கார்ந்து தரையில் எழுதிக்கொண்டு இருப்பவர் யார் தெரியுமா? ஏதோ, நான் தான் நபி என்னை நம்புங்கள் என்றுச் சொல்லுகின்ற பொய் தீர்க்கதரிசி அல்ல, தேவைப்படும் போது, தனக்கு வெளிப்பாடு வந்தது என்றுச் சொல்லி அல்லாஹ்விடமிருந்து வசன பொட்டலங்களை வாங்கித் தருபவர் அல்ல.

இயேசு மிகப்பெரிய அற்புதங்களை அடையாளங்களைச் செய்துள்ளார், யூத தலைவர்களின் மடங்கடிக்கும் கேள்விகளுக்கு தக்க பதில் சொல்லியுள்ளார், அவர்கள் உள்ளத்தில் நினைப்பதையும் அப்படியே சொல்லியுள்ளார். எனவே, யாராவது உண்மையாகவே, தான் பாவம் செய்யவில்லை என்றுச் சொல்லி, இயேசுவை ஏமாற்றலாம் என்று நினைத்து ஒரு கல்லை எரிந்து இருந்தால், உடனே, இயேசு அந்த கல்லை எரிந்தவனிடம், நீ இந்த நாள் இந்த நாழிகையில் இந்த பாவத்தைச் செய்தாயே என்றுச் சொல்லிவிட்டால் என்ன செய்வது? இருக்கும் கொஞ்ச நஞ்ச பெயரும் கெட்டுவிடுமே, ஊரே சிரிக்குமே! நமக்கு ஏன் வம்பு என்று தலையை தொங்க போட்டுக்கொண்டு மூச்சு விடாமல் சென்றுவிட்டனர். எனவே, யாரும் ஏமாற்றமுடியாது, தான் ஒரு சிறிய பாவமும் செய்யவில்லை என்றுச் சொல்லி கல்லை எடுக்கமுடியாது. ஏன் அவர்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்த வேண்டும் என்றுச் சொல்லி, இயேசு தலை குனிந்து இருந்தார். இது தான் வாய்ப்பு என்று முகத்தில் அசடு வழிந்தவர்களாக‌ ஒவ்வொருவராக சென்றுவிட்டனர்.

ஆக, இயேசு சொன்னது "சிறிய பெரிய பாவங்களை,தவறுகளை உள்ளடக்கிய" பாவம் என்ற வார்த்தையே தவிர, குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய "விபச்சார பாவத்தை" அல்ல. இனியும்,ஏதாவது விளக்கம் தேவையா?

சரி, இனி பீஜே அவர்களின் அடுத்தடுத்துள்ள வரிகளுக்குச் செல்வோம்:

பீஜே எழுதுகிறார்:

அந்தச் சமுதாயத்தில் எவருமே விபச்சாரம் செய்யாமல் இருக்கவில்லை.

பீஜ அவர்களே, நீங்கள் முதலாவது கொடுத்த விளக்கமே தவறு, அதாவது "எந்த ஒரு சிறு பாவமும் செய்யாமல் இருப்பவன் கல்லெரியவேண்டும்" என்று இயேசு சொன்னதை, நீங்கள் திருத்தி "விபச்சாரம் செய்யாதவன்" என்று பொருள் கொடுத்து இருக்கிறீர்கள்.

இரண்டாவதாக, அந்த பெண்ணை கொண்டு வந்த கூட்டமக்கள், இயேசு சொன்னதின் பொருளை அறிந்தவர்களாக திரும்பிச் சென்றுவிட்டனர். இயேசு மீது குற்றம் சுமத்தவேண்டும் என்ற எண்ணத்தோடு வந்த கூட்டத்தினர் திரும்பிச்சென்று இருக்கும் போது, "அந்த சமுதாயமே" விபச்சாரம் செய்தவர்கள் என்று எப்படி சொல்கிறீர்கள் நீங்கள்?

எருசலேமில் இருக்கும் எல்லா யூதர்களும் ஒன்று கூடி வரவில்லை பீஜே அவர்களே, இயேசு மீது குற்றம் சுமத்தவேண்டும் என்று எண்ணம் கொண்டவர்கள் மட்டுமே வந்தார்கள். ஏன் இப்படி ஒரு சமுதாயமே அப்படி செய்தது என்றுச் சொல்கிறீர்கள்? உலகத்தில் ஒரு கூட்ட இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக இருக்கிறார்கள், பெண்களை கற்பழிப்பவர்களாக இருக்கிறார்கள், மனைவிகளை கொடுமைபடுத்துபவர்களாக இருக்கிறார்கள், இதனால், உலகில் இருக்கும் எல்லா இஸ்லாமியர்களும் அதே போல இருக்கிறார்கள் என்றுச் சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களோ?

எனவே, உங்களின் இப்படிப்பட்ட திருத்தல் வேலை இனி தமிழ் கிறிஸ்தவர்களிடம் பலிக்காது, இனியாவது இப்படி சொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள், நிறுத்தமாட்டேன் என்றுச் சொல்வீர்களானால், இப்படி மாட்டிக்கொண்டு முழிக்கவேண்டி வரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனவே, மேலே நீங்கள் சொன்னது மிகப்பெரிய இஸ்லாமிய பொய்யாகும்.

பீஜே எழுதுகிறார்:

இயேசுவின் சீடர்களும் கூட அதைச் செய்துள்ளனர்.

பீஜே அவர்களே, இந்த நிகழ்ச்சியின் போது, இயேசுவின் சீடர்கள் அவ்விடத்தில் இருந்தார்கள் என்று நீங்கள் படித்த வசனங்களில் உள்ளதா? பீஜே அவர்களே வேண்டாம், உங்களைப்போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் இப்படியெல்லாம் கீழ்தரமாக பொய்யைச் சொல்வது தகுதியாக இருக்காது, இது உங்களுக்கு அடுக்காதும் கூட.

ஒரு வேளை சீடர்கள் அங்கு இருந்திருந்தாலும்:

அந்த இடத்தில் இயேசுவின் சீடர்கள் அப்போது அங்கே இருந்தார்களா இல்லையா என்று வசனங்கள் சொல்லவில்லை. உங்கள் பேச்சுக்கே வருகிறேன், ஒரு வேளை, சீடர்கள் அங்கு இருப்பதாகவே எடுத்துக்கொள்வோம். அப்படி அவர்கள் இருந்திருந்தாலும், இயேசுவிடம் கேள்வி கேட்டவர்கள் யூத மத தலைவர்கள் மற்றும் அவர்களோடு வந்தவர்களாவார்கள். ஆக, இயேசு சொன்னது தன் மீதுகுற்றம் சுமத்த வந்தவர்களிடமே தவிர, தன் சீடர்களிடமில்லை. இது கூடவா உங்களுக்கு புரியவில்லை. நிச்சயமாக உங்களுக்கு புரிந்து இருக்கும், இருந்தாலும் என்ன செய்வது இஸ்லாமிய அறிஞராயிற்றே, மற்ற மார்க்கங்களின் மீது பொய்யை சொல்லியாவது இஸ்லாமை காப்பாற்றவேண்டுமே. பீஜே அவர்களே, மறுபடியும் சொல்லிக்கொள்கிறேன், எச்சரிக்கையாக எழுதுங்கள்.

எனவே, உங்க லாஜிக் வார்த்தைகளையெல்லாம் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்ற மேடைப்பேச்சில் வைத்துக்கொள்ளுங்கள், கிறிஸ்தவர்களிடம் வேண்டாம்.

பீஜே எழுதுகிறார்:

ஏன் இயேசுவும் கூட அதில் ஈடுபட்டதாக அந்த வசனம் மறைமுகமாகக் கூறுகிறது. (நாம் அவ்வாறு நம்பவில்லை)

இது தான் கடவுளின் குமாரனுக்குரிய இலக்கணமா? இயேசு அந்தப் பாவத்தைச் செய்திருக்கவில்லையானால் கடவுளின் கட்டளைப் படி அவராவது தண்டனையை நிறைவேற்றியிருக்க வேண்டுமல்லவா?

கிறித்தவர்கள் விசுவாசிக்கின்ற பைபிளே அவரை இவ்வாறு அறிமுகம் செய்யும் போது அவரைக் கடவுள் என்று எவ்வாறு கருதுகிறார்கள்?

ஒரு சமுதாயமே விபச்சாரம் செய்தது என்றுச் சொன்னீர்கள், பிறகு இயேசுவின் சீடர்கள் கூட விபச்சாரம் செய்தார்கள் என்று சொன்னீர்கள் (என்னவோ, அவர்கள் விபச்சாரம் புரியும் போது பக்கத்தில் இருந்து பார்த்தது போல எழுதுகிறார் பீஜே அவர்கள்).

கடைசியாக, இயேசுவும் விபச்சாரம் செய்தார் என்று மறைமுகமாக பைபிள் சொல்கிறது என்று சொன்னதால் பீஜே அவர்கள் "திருத்திச் சொல்வதில் மன்னர்" என்ற பட்டத்தை பெற்றுவிட்டார் என்றுச் சொல்லத்தோன்றுகிறது.

ஆனால், பீஜே அவர்களே, உங்கள் இஸ்லாமிய நபி முஹம்மது விபச்சாரம் செய்தார், கற்பழித்தார், இது உண்மை - இல்லை என்று மறுப்பவர்கள் எப்படி என்று என்னிடம் கேளுங்கள், நான் பதில் தருகிறேன், உங்கள் இஸ்லாமிய நூல்களாகிய குர்‍ஆன், ஹதீஸ்கள், அவரது வாழ்க்கை வரலாறு, இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கவுரைகள் இவைகளைக் கொண்டே நான் நிருபிக்கிறேன்.

இயேசு விபச்சாரம் செய்தார் என்று பைபிள் மறைமுகமாகச் சொல்கிறதா? எங்கே கண்டுபிடித்தீர்கள்? எப்படி கண்டுபிடித்தீர்கள்?

இயேசு முஹம்மதுவைப் போல ஒரு பாவி அல்ல, அவர் ஒரு பரிசுத்தர்:

முஹம்மது ஒரு பாவியாவார், அவர் பாவ மன்னிப்பு கோரியுள்ளார், அவர் பாவ மன்னிப்பு கேட்கும்படி அல்லாஹ் குர்‍ஆனில் சொல்லியுள்ளார், முஹம்மது நம்மைப்போல ஒரு பாவம் செய்யும் மனிதர் தான் என்பதை குர்‍ஆனிலிருந்து விளக்கியுள்ள கீழ்கண்ட கட்டுரையை படிக்கவும்:

பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி

ஆனால், இயேசு பரிசுத்தர், அவர் பாவம் செய்யவில்லை, "என்னில் பாவமுண்டு என்று உங்களில் யார் கூறமுடியும்?" என்று அவர் யூதர்களிடம் கேட்டபோது ஒருவரும் அவருக்கு எதிராக விரலை நீட்டவில்லை. சரி, இதைப் பற்றி வேறு ஒரு கட்டுரையில் காணலாம். இப்போது நான் பீஜே அவர்களிடம் கேட்க விரும்புவது, நானும் உன்னை தண்டிப்பதில்லை என்று இயேசு சொன்னது, அவரும் விபச்சாரம் செய்துள்ளார் என்று அவருக்கு தெரிந்ததினால் தான் இப்படி சொன்னார் என்று பொருள் கொள்வீர்களா பீஜே அவர்களே?

இதுவரையில் பைபிளை படிக்கும் யாருக்கும் வராத ஒரு எண்ணம் உங்களுக்கு வந்துள்ளது, இது போற்றத்தக்கது பீஜே அவர்களே. ஆனால்,

முஹம்மது செய்த விபச்சாரம்,

வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்துக்கொள்ளுதல்,

பேத்தி வயதில் இருக்கும் ஆறு வயது சிறுமியை திருமணம் செய்ய பேசிவிட்டு, 9 வயதில் அந்த சிறுமியை (தாத்தா வயதில்) திருமணம் செய்துக்கொண்டது,

மற்றும், போரில் பிடிபட்ட பெண்ணை அன்றே கற்பழித்தது,

கல் நெஞ்சத்துடன் பெண்ணென்றும் பார்க்காமல் கொலை செய்ய கட்டளை பிறப்பித்தது,


இவைகள் எல்லாம் உங்கள் பார்வையில் எப்படி தெரிகின்றது பீஜே அவர்களே!

இந்த விவரங்கள் எல்லாம் இஸ்லாமிய நூல்களில் மறைமுகமாக அல்ல, நேரடியாகவே சொல்லியுள்ளது பீஜே அவர்களே, இவைகள் எல்லாம் முஹம்மது செய்துவிட்டபோதிலும், அவரே உலக மக்கள் பின்பற்றக்கூடிய நல்ல எடுத்துக்காட்டு, வழிகாட்டி என்றுச் சொல்கிறீர்கள்.

நான் உங்களுக்கு சவால் விடுகின்றேன், முஹம்மதுவின் வாழ்க்கை அனைத்தையும் அறிந்த நீங்கள், இயேசுவின் வாழ்க்கை முழுவதும் படித்துப் பார்த்து, எந்த சூழ்நிலையில் இயேசுவை விட முஹம்மது நல்லவராக நடந்துக்கொண்டுள்ளார் என்று கண்டுபிடியுங்கள்.

ஒரு தந்தை தன் மகன் செய்த தவறை மன்னித்துவிட்டு, இனி இப்படியெல்லாம் செய்யாதே என்று சொன்னால், உடனே "அந்த தந்தையும் அதே தவறை செய்துள்ளதால், தான் தண்டிக்கவில்லை" என்று முடிவு செய்துவிடுவீர்களோ!

இயேசு மனிதர்களை குணமாக்கிவிட்டு, கடைசியாக சொல்லும் வார்த்தை எவைகள் என்று உங்களுக்குத் தெரியுமா? "இனி பாவம் செய்யாதே..." என்பதாகும். அதைத் தான் இந்த நிகழ்ச்சியிலும் அவர் செய்தார்.

உங்களுக்கு தெளிவாக புரியும் படி சொல்கிறேன், பைபிள் மறைமுகமாக இயேசு விபச்சாரம் செய்தார் என்றுச் சொல்லவில்லை நேரடியாகவே அவர் பரிசுத்தர் என்றே சொல்கிறது. உங்கள் இஸ்லாமிய அறிவு தான் அப்படி விளக்கமளிக்கிறது.

அப்படியானால், மோசேயின் சட்டத்தின்படி இயேசு ஏன் அப்பெண்ணை தண்டிக்கவில்லை:

பீஜே அவர்கள் கேட்கிறார்கள்: "இயேசு அந்தப் பாவத்தைச் செய்திருக்கவில்லையானால் கடவுளின் கட்டளைப் படி அவராவது தண்டனையை நிறைவேற்றியிருக்க வேண்டுமல்லவா?".

இந்த கேள்வியை கேட்டதிலிருந்து, இரண்டு விஷயங்கள் தெளிவாக புரிகின்றது:

முதலாவதாக, பீஜே அவர்களுக்கு முழு பைபிள் பற்றிய அறிவு இல்லை, அல்லது அவருக்கு பைபிளைப் பற்றி முழுவதுமாக தெரியவில்லை.

இரண்டாவதாக, இயேசு பிறந்ததின் நோக்கத்தைப் பற்றி புதிய ஏற்பாடு சொல்வதை பீஜே அறிந்துக்கொள்ளவில்லை, அல்லது அவர் வேண்டுமென்றே, தெரிந்துக்கொண்டே இப்படி பொய்யை அவிழ்த்து விட்டுள்ளார் என்பதாகும்.

இயேசு இரட்சிக்க வந்தார், தண்டிக்க அல்ல:

பீஜே அவர்களே, உங்களுக்கு சில விவரங்களை தெளிவாக்க விரும்புகிறேன். இயேசுவின் முதல் வருகை மனிதர்களை தண்டிக்க அல்ல, அவர்களை இரட்சிக்க வந்தார். அவர்களுக்காக தன் உயிரை கொடுக்க வந்தார், எனவே தான் அவர் மனிதர்களை குணமாக்கி "இனி பாவம் செய்யாதே" என்று சொல்லி, அவர்கள் தீய வழியை விட்டுவிட்டு, நல்ல வழியில் நடக்கும் படி அறிவுறுத்தினார்.

இதனை புரிந்துக்கொள்ள பெரிய பட்டங்கள் தேவையில்லை பீஜே அவர்களே, புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு நற்செய்தி நூல்களில் ஏதாவது ஒன்றை படித்தாலும் போதும் புரிந்துக்கொள்ளலாம்.

இந்த விவரத்திற்கு அனேக வசனங்களை நான் கொடுக்கவிரும்பவில்லை, ஒரே வசனம் போதும்:

இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார். லூக்கா 19:10

பீஜே அவர்களே, இயேசு தொலைந்துபோனதை தேடவும், பாவிகளை இரட்சிக்கவுமே வந்தாரே தவிர, கற்களை எடுத்துக்கொண்டு பாவிகள் மீது வீசுவதற்கு அல்ல.

இயேசு அந்த பெண்ணை மன்னித்தது போல, உங்களையும் மன்னிக்க விரும்புகிறார், அவரிடம் உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, உமக்காக இனி நீதிமானாக வாழ்வேன் என்று வாக்குறுதி கொடுத்து, இயேசு தரும் சமாதானம் சந்தேஷத்தை பெற்றுக்கொள்ளும்படி உங்களுக்கு இன்று நான் அழைப்பு விடுகிறேன்.

முஹம்மது இஸ்லாமுக்கு வரும்படி கொடுத்த அழைப்பைபோல, இஸ்லாமை ஏற்றுக்கொள், நீ பாதுகாப்பாக இருப்பாய் இல்லையானால், என் இராணுவம் உங்கள் நாட்டை வந்தடையும் என்பது போல அல்லாமல், இயேசு உங்களை நேசிக்கிறார், அவரின் மீது நம்பிக்கை கொண்டு இறைவனின் குமாரனாக மாற உங்களுக்கு ஒரு வாய்ப்பு இந்த வரிகளை படிக்கும்போது தரப்படுகின்றது. பிறகு இந்த வாய்ப்பு தரப்படுமோ தெரியாது, பயன்படுத்திக்கொள்ளவும்.

இப்போது ஒரு கேள்வியை நான் கேட்கட்டும், இயேசுவிடம் அப்பெண்ணை கொண்டு அந்த பரிசேயர்கள் வேதபாரகர்களாகிய யூத மத தலைவர்கள் அப்பெண்ணை தாங்களாகவே கல்லெரிந்து கொல்லவில்லை, அதற்கு பதிலாக ஏன் இயேசுவிடம் கொண்டு வந்தார்கள்?

காரணம், ரோம அரசாங்கத்தின்படி, யாரையும் கொல்ல யூதர்களுக்கு அதிகாரமில்லை, யாரும் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளமுடியாது, எனவே, இயேசுவின் மீது குற்றம் சுமரவேண்டும் என்று நினைத்து அவர்கள் அந்த பெண்ணை கொண்டு வந்தார்கள்.

இயேசு மறுபடியும் வருவார், மன்னிக்க அல்ல, சிட்சிக்க:

இயேசு இன்னொரு முறை வானத்தில் வருவார், அன்று அவர் மன்னிக்கமாட்டார், தண்டிப்பார், நியாயந்தீர்ப்பார். அப்போது பீஜே அவர்களாகிய நீங்களும், நானும் அவருக்கு முன்பாக நிற்போம், அப்போது அவர் மன்னிக்கின்றவராக அல்ல, சிட்சிக்கின்றவராக நீதியாக நியாயந்தீர்ப்பார். அதுவரை, மக்களுக்கு வாய்ப்பு தரப்படுகின்றது, இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வதும், கொள்ளாததும் தனி மனிதனுக்கு இயேசு கொடுத்த உரிமை.

பீஜே அவர்களே, இயேசு ஏன் அப்பெண்ணை தண்டிக்கவில்லை என்று கேள்வி கேட்டு இருக்கிறீர்கள், அவர் இரட்சிக்க வந்தபடியால் அவர் தண்டிக்கவில்லை, இயேசு (ஜீசஸ்) என்பதின் அர்த்தம் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளவும்.

முடிவுரை:

பீஜே அவர்களே, உங்களின் வரிகளில் உள்ள தாறுமாறுகளை நான் சொல்லியுள்ளேன், தெளிவுபடுத்தியுள்ளேன். இனியாவது ஏதோ குற்றம்பிடிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் எழுதவேண்டாம். இனியும், தமிழ் கிறிஸ்தவர்கள் சும்மா உட்கார்ந்துக்கொண்டு, "ஸ்தோத்திரம்" சொல்லிக்கொண்டு இருக்கமாட்டார்கள்.

கற்பனையை அதிகமாக பயன்படுத்தவேண்டுமானால், நல்ல விஷயத்தில் பயன்படுத்தவும், இப்படி குறுக்குவழி வேண்டாம் என்று உங்களை தாழ்மையாக எச்சரிக்கிறேன்.

இயேசுவையும், அவரது சீடர்கள் பற்றியும் பொய்யாக எழுதியதற்காக நான் பதில் கொடுத்துவிட்டேன், ஆனால், முஹம்மது பற்றி இனி நான் சொல்லப் போகும் உண்மைகளுக்கு (கட்டுரைகளுக்கு) பதிலை தயாராக வைத்துக் கொள்ளவும்.

உங்களின் "இயேசு இறைமகனா" என்ற புத்தகத்திற்கு பதில்கள் தொடரும்....