ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

புதன், 5 ஜூலை, 2023

குர்‍ஆனின்/முஹம்மதுவின் இன்னா நாற்பது - பாகம் 1 (1-4)

குர்‍ஆனின்/முஹம்மதுவின் இன்னா நாற்பது - பாகம் 1

நம்மில் அனேகருக்கு "இன்னா நாற்பது" என்ற தமிழ் நூல் பற்றி தெரிந்திருக்கும். இந்நூல் பற்றிய ஒரு சிறு குறிப்பை விக்கிபீடியாவிலிருந்து பார்ப்போம், அதன் பிறகு "குர்‍ஆன் மற்றும் முஹம்மதுவின் இன்னா நாற்பது" பற்றி ஆய்வு செய்வோம்.  

இன்னா நாற்பது விக்கிபீடியா அறிமுகம்:

இன்னா நாற்பது என்னும் நூல் கபிலர் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. நாற்பத்தொரு பாடல்களைக் கொண்ட இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூற்றொகுதியுள் அடங்குவது. உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றிக் கூறி நீதி உரைப்பது இந்நூல். இது கி. பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த நூலாகும்.

எடுத்துக்காட்டு

அறிவிற் சிறந்தவர்கள் வீற்றிருக்கின்ற சபையிலே அறிவில்லாத ஒருவன் புகுவது துன்பத்தைத் தரும். இருட்டிய பின்னர் வழியிற் செல்வது பெரிதும் துன்பம் விளைவிக்கும். விளையக் கூடிய துன்பங்களைத் தாங்கக் கூடிய ஆற்றல் இல்லாதவர்களுக்குத் தவம் துன்பம் தரும். தன்னைப் பெற்ற அன்னையைப் பேணிக் காப்பாற்றாமல் விடுவதும் துன்பமாகும் என்று மனித வாழ்வில் துன்பத்துக்குரிய நான்கு விடயங்களைக் கூறி நீதி புகட்டும் கீழ்க்காணும் பாடல் இந் நூலில் வருகிறது.

ஆன்றவித்த சான்றோருட் பேதை புகலின்னா

மான்றிருண்ட போழ்தின் வழங்கல் பெரிதின்னா

நோன்றவிந்து வாழாதார் நோன்பின்னா வாங்கின்னா

ஈன்றாளை யோம்பா விடல்.

குர்‍ஆனின்/முஹம்மதுவின் இன்னா நாற்பது - பாகம் 1 (1 to 4)

"இன்னா" என்றால், செய்யக்கூடாதவை அல்லது தீமை விளைவிக்ககூடிய தவறான செயல்கள் என்று பொருள். 

சமுதாயத்தின் பார்வையில் குர்‍ஆனின் கட்டளைகள் மற்றும் முஹம்மதுவின் செயல்கள் எப்படி 'இன்னா செயல்களாக, மக்களுக்கும், சமுதாயத்திற்கும் தீமை விளைவிக்கக்கூடிய செயல்களாக' இருக்கின்றன என்பதை இந்த தொடர் கட்டுரைகளில் காண்போம்.

  1. குர்‍ஆனின் இன்னா 1: குர்‍ஆனின் முபாஹலாயின்னா (சாபம் கொடுப்பது இன்னா)
  2. குர்‍ஆனின் இன்னா 2: மண‌முடித்த மனைவியை அடித்தலின்னா
  3. குர்‍ஆனின் இன்னா 3: திருடர்களின் கைகளை வெட்டுதலின்னா
  4. குர்‍ஆனின் இன்னா 4: கட்டளைகளை மீறியதால், குரங்குகளாக & பன்றிகளாக மாற்றுதல் இன்னா

குர்‍ஆனின் இன்னா 1: குர்‍ஆனின் முபாஹலாயின்னா (சாபம் கொடுப்பது இன்னா)

ஆசீர்வாதம் மற்றும் சாபம் இவ்விரண்டும் எதிர் துருவங்கள்.

"ஒருவர் நன்றாக இருக்கவேண்டும்" என்று இறைவனிடம் வேண்டிக்கொள்வதும், அல்லது நேரடியாக ஒரு நபரிடம் "நீங்கள் நன்றாக இருக்கவேண்டும்" என்று சொல்வதும் ஒரு நல்ல செயல் ஆகும். "ஒருவர் அழிந்துவிடவேண்டும், மரித்துவிடவேண்டும், அவருக்கு தீமை நடக்கவேண்டும்" என்று இறைவனிடம் வேண்டிக்கொள்வதும், அல்லது ஒருவரைப் பார்த்து 'நீ நன்றாக இருக்கமாட்டாய்' என்றுச் சொல்வதும்  ஒரு  தீயச்செயல் ஆகும்.  

முஹம்மதுவின் படி சபித்தல் ஹலால் செயலாகும்:

இஸ்லாமிய நபியாகிய முஹம்மதுவின் படியும், குர்‍ஆனின் படியும், மற்றவர்கள் மீது சாபம் கூறுவது, அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று பிரார்த்தனை செய்வது என்பது ஒரு ஹலால் (நல்ல) செயலாகும். அதாவது இஸ்லாமில் அனுமதிக்கப்பட்ட செயலாக "மற்றவர்களை சபித்தல்" உள்ளது.

முபாஹலா என்ற சாப பிரார்த்தனை:

அல்லாஹ் முஹம்மதுவிற்கு முபாஹலா செய்ய கட்டளையிடுகின்றான். பார்க்க குர்‍ஆன் 3:61

3:61. (நபியே!) இதுபற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும் எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால்: "வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும்; எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும்; எங்களையும் உங்களையும் அழைத்து (ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு) "பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்" என்று நாம் பிரார்த்திப்போம்!" என நீர் கூறும். (டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்)

3:61. (நபியே!) இதைப்பற்றி உங்களுக்கு உண்மையான விவரம் கிடைத்த பின்னரும், உங்களிடம் எவரும் தர்க்கித்தால் (அவர்களுக்கு) நீங்கள் கூறுங்கள்: "வாருங்கள் எங்களுடைய பிள்ளைகளையும், உங்களுடைய பிள்ளைகளையும், எங்களுடைய பெண்களையும், உங்களுடைய பெண்களையும், எங்களையும், உங்களையும் அழைத்து (ஒன்று சேர்த்து) வைத்துக்கொண்டு (ஒவ்வொருவரும் நாம் கூறுவதுதான் உண்மையென) சத்தியம் செய்து (இதற்கு மாறாகக் கூறும்) பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக! என பிரார்த்திப்போம்" (என்று கூறும்படி கட்டளையிட்டான். இவ்வாறு நபியவர்கள் அழைத்த சமயத்தில் ஒருவருமே இவ்வாறு சத்தியம் செய்ய முன்வரவில்லை.) (அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்)

இந்த இன்னா செயல்களை "முஸ்லிம்கள் தங்களுக்கு இடையேயும் செய்கிறார்கள்" என்பது வேதனைகுரிய செயலாகும். ஒருவரை சபிப்பது எப்படி இனிய செயலாக இருக்கும்? இது குர்‍ஆனின் "இன்னா செயலாகும்", சமுதாயத்திற்கு தீமை விளைவிக்கும் செயலாகும்.

குர்‍ஆனில் காணப்படும் இந்த "இன்னா" செயல் பற்றிய மேலதிக விவரங்களை அறிய கீழ்கண்ட கட்டுரையை படிக்கவும்.

குர்‍ஆனின் இன்னா 2: மண‌முடித்த மனைவியை அடித்தலின்னா

ஒரு முஸ்லிம் தன் மனைவியை அடிக்க குர்‍ஆன் ஆண்களுக்கு அனுமதி அளிக்கிறது. பொதுவாகவே ஞானமில்லாத பெரும்பான்மையான‌ ஆண்கள் பெண்கள் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள், அதிலும் தன் இறைவேதம் அதற்கு அனுமதி அளிக்கும் போது, சொல்லவா வேண்டும்?

குர்‍ஆன் 4:34. (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.

குர்‍ஆனின் இந்த "இன்னா செயலை" எப்படி முஹம்மதுவும் சஹாபாக்களும் பின்பற்றினார்கள் என்பதை அறிய கீழ்கண்ட கட்டுரையின் கேள்விகள்  287, 288, 289, 290 & 293 ஐ படிக்கவும்.

  • கேள்வி 287: முஹம்மது தம் மனைவியை அடித்துள்ளாரா?
  • கேள்வி 288: சஹாபாக்கள் தம் மனைவிகளை அடித்துள்ளார்களா? முஹம்மது இதற்கு அனுமதி அளித்தாரா?
  • கேள்வி 289: ஒரு முஸ்லிம் ஆணிடம் அவன் ஏன் தன் மனைவியை அடித்தான் என்று கேட்கக்கூடாது என்று முஹம்மது கூறியுள்ளாரா?
  • கேள்வி 290: மனைவியை முகத்தில் அறையக்கூடாது என்று ஆண்களுக்கு இஸ்லாம் கட்டளையிடுகிறது, மிகப்பெரிய வரப்பிரசாதம் அல்லவா? அல்லாஹ்வின் அருள் அல்லவா?
  • கேள்வி 293: மனைவியை அடிப்பதாக யோபு (பழைய ஏற்பாட்டு பக்தன்) அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தாரா?

எனவே, மனைவியை அடிக்க குர்‍ஆன் முஸ்லிம் ஆண்களுக்கு அனுமதி கொடுத்திருப்பது இன்னா செயலாகும், இது சமுதாயத்திற்கு முக்கியமாக பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயலாகும். இதனால் பல குடும்பங்கள் அழிந்து, குடும்ப நிம்மதி கெடும்.

எனக்குத் தெரிந்தவரை உலகத்தின் எந்த ஒரு மதத்தின் வேதத்திலும் சரி, 'மனைவியை அடிக்கச் சொல்லி இறைவன் கட்டளை கொடுத்திருப்பது குர்‍‍ஆனில் மட்டுமே' காணமுடியும், இது ஒரு சாதனையே!

குர்‍ஆனின் இன்னா 3: திருடர்களின் கைகளை வெட்டுதலின்னா

அல்லாஹ்வின் கட்டளையின் படி, திருடியவர்களுக்கு தண்டனையாக அவர்களின் கைகளை வெட்டிவிடவேண்டும்.

குர்‍ஆன் 5:38. திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்.

குர்‍ஆன் திருடனை சமுதாயத்திற்கு பாரமாக மாற்றுகிறது

திருடர்களின் கைகளை வெட்டிவிட்டால், அதன் பிறகு அவர்கள் வாழ்நாள் முழுவதும், ஊனமுற்றவர்களாக தன் குடும்பத்துக்கும், சமுதாயத்திற்கும் பாரமாக மாறிவிடுகிறார்கள். அவர்கள் மனந்திரும்பி, இனி திருடப்போவதில்லை என்று முடிவு எடுத்தாலும், அவர்களால் நல்ல மனிதர்களாக மாறி சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ள குடிமக்களாக‌ வாழ வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. 

இதற்கு யார் காரணம்? குர்‍ஆனும் அல்லாஹ்வின் கட்டளையும் தான்.

பொருட்சேதத்திற்கு சரீர உறுப்புகளை வெட்டுவது நியாயமற்ற செயலாகும்

பொதுவாக நீதி செலுத்துவதில், தண்டனை கொடுப்பதில் ஒரு 'நியாயம்' இருக்கவேண்டும். கொலை செய்வது என்பது வேறு, பொருட்களை திருடுவது என்பது வேறு. ஒருவரிடமிருந்து பொருட்களை/பணத்தை திருடினால், அதற்கு தண்டனையாக 'திருடிய அனைத்து பொருட்களையும் தரவேண்டும், அதோடு கூட கூடுதலாக இன்னும் அதிக பொருட்களை கொடுக்கவேண்டும்'.   

சிலவேளைகளில் திருடப்பட்ட பொருட்களின் அளவிற்கு ஏற்ப, சிறைச்சாலையிலும் சில மாதங்கள், சில ஆண்டுகள் அடைக்கலாம். ஆனால், பொருட்களை திருடியதற்கு தண்டனையாக 'தூக்கு தண்டனை கொடுப்பதும், கைகளை வெட்டுவதும்' மிகவும் அநியாயமான செயலாகும். மனந்திரும்பினாலும் வாழ்க்கையை இழந்துவிட்டதால், வாழ்நாள் முழுவதும் தண்டனை அனுபவிப்பது உண்மையான இறைவனின் செயல் அல்ல‌. மனிதன் அடிக்கடி மாறுபவன். நாம் எத்தனை முறை தவறுகள் செய்திருப்போம், அதன் பிறகு மனந்திரும்பி அந்த தவறுகளை செய்யாமல் இருந்திருப்போம். 

மனிதனுக்கு திருந்துவதற்கு வாய்ப்புக்கள் கொடுக்கப்படவேண்டும்

எத்தனை உண்மை நிகழ்ச்சிகளை நாம் கேட்டிருப்போம், ரௌடிகளாக ஒரு காலத்தில் இருந்தவர்கள், மனந்திருந்தி நல்ல மனிதர்களாக மாறி சமுதாயத்திற்கு நன்மைகளைச் செய்யும் செம்மல்களாக மாறியிருக்கிறார்கள். திருடர்களாக இருந்தவர்கள் சிறைச்சாலைக்கு சென்று வந்த பிறகு நல்லவர்களாக வாழ்ந்தவர்கள் உலகில் உண்டு. ஆனால் அல்லாஹ்வும் குர்‍ஆனும், திருடர்களின் கைகளை வெட்டிவிட்டு, அவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கிவிடுகிறார்கள்.

திருடர்களின் கைகளை வெட்டி, அவர்களை வாழ்நாள் முழுவதும் ஒரு ஊனமுற்றவர்களாக மாற்றுவது 'இன்னா செயலாகும்', இதனை இறைவேதம் என்றுச் சொல்லக்கூடிய குர்‍ஆன் கட்டளையிடுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய செயலாக இல்லை.

இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? என்பதை அறிய கீழ்கண்ட கட்டுரையை படிக்கவும்.

குர்‍ஆனின் இன்னா 4: கட்டளைகளை மீறியதால், குரங்குகளாக & பன்றிகளாக மாற்றுதலின்னா

நாட்டில் சட்டங்களை மற்றும் கட்டளைகளை மீறினால் தண்டனை கொடுப்பது சமுதாயத்திற்கு தேவையானதே! இதனால், நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்படும். இதே போன்று இறைவன் கூட மனிதர்கள் கட்டளைகளை மீறும் போது, தன் பாணியில் தண்டனை கொடுப்பான், மேலும் அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து திரும்பவும், நல்லவர்களாக மாற அவன் வாய்ப்புத் தருவான்.

ஆனால், கீழ்கண்ட மூன்று குர்‍ஆன் வசனங்களில், 'கட்டளைகளை மீறுபவர்களை குரங்குகளாகவும், பன்றிகளாகவும் அல்லாஹ் மாற்றியதாக' கூறப்பட்டுள்ளது.

குர்‍ஆன் 2:65. உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக் கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப் பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி "சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்" என்று கூறினோம்.

குர்‍ஆன் 5:60. "அல்லாஹ்விடமிருந்து இதைவிடக் கெட்ட பிரதிபலனை அடைந்தவர்களைப் பற்றி உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அவர்கள் யாரெனில்) எவரை அல்லாஹ் சபித்து, இன்னும் அவர்கள் மீது கோபமுங்கொண்டு, அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும், ஷைத்தானை வழிப்பட்டவர்களும் தான் - அவர்கள்தாம் மிகவும் தாழ்ந்த நிலையினர்; நேரான வழியிலிருந்தும் தவறியவர்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.

குர்‍ஆன் 7:166. தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறிவிடவே, "நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள்" என்று அவர்களுக்கு நாம் கூறினோம்.

தீய முஸ்லிம்களையும் குரங்கு பன்றிகளாக அல்லாஹ் ஆக்குவான்:

புகாரி நூல்:  5590. அப்துர் ரஹ்மான் இப்னு ஃகன்கி அல்அஷ்அரீ(ரஹ்) கூறினார். . . . நான் நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்:

என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவி கேட்டுச்) செல்வான். அப்போது அவர்கள், 'நாளை எங்களிடம் வா' என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்களின் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்துவிடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றிவிடுவான்.

கட்டளைகளை மீறியதால், குரங்குகளாக பன்றிகளாக மாற்றுதல் இன்னா:

தன் சாயலில் படைத்த மனித இனத்தை குரங்குகளாக, பன்றிகளாக மாற்றுவது, இறைவனின் இலக்கணத்திற்கு ஏற்றதல்ல, இது ஒரு 'இன்னா செயலாகும்', இது அல்லாஹ்விற்கே இழுக்காக கருதப்படும்.

குறிப்பு: சட்டங்களை மீறியவர்களை குரங்குகளாகவும், பன்றிகளாகவும் அல்லாஹ் மாற்றியதாக வரும் வசனங்கள் பொய்யானவையாகும். இவைகளை நம்புவதும் மூடநம்பிக்கையே! மக்களில் சிலருக்கு கோபம் வரும் போது, மற்றும் மற்றவர்களோடு சண்டை நடக்கும் போது, எதிர்த்து வாக்குவாதம் செய்பவர்களை அவமானப்படுத்த எண்ணினால், 'நாயே, குரங்கே, பன்றியே' என்றுச் சொல்லி திட்டுவார்கள். மனிதர்களிடமே நாம் இப்படிப்பட்ட கூற்றுகளை விரும்பாத போது, இறைவன் என்று முஸ்லிம்கள் கருதும் அல்லாஹ் இப்படிப்பட்ட வசனங்களை சொல்வதும், மக்களை குரங்குகளாக, பன்றிகளாக மாற்றினேன் என்றுச் சொல்வதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளதா?

இதுவரை 'இன்னா நாற்பது' தலைப்பில் "குர்‍ஆனின்/முஹம்மதுவின் இன்னா செயல்கள் நான்கை கண்டோம்". அடுத்த பாகத்தில், இன்னும் நான்கு இன்னா செயல்களை காண்போம்.

திங்கள், 3 ஜூலை, 2023

குர்‍ஆன் 37:125 - அல்லாஹ்வின் ஆதார் அட்டை எங்கே? அல்லாஹ்வும் ஹுபாலும் ஒருவர் தானா?

அல்லாஹ் யார்? என்று கேட்டால், நாம் அனைவரும் "முஸ்லிம்களின் இறைவன்" என்றுச் சொல்வோம். முஸ்லிம்களோ, 'உலகை படைத்த இறைவன் தான் அல்லாஹ்' என்று கூறுவார்கள். மேலும் அவர்கள் ஒரு படி மேலே சென்று, பைபிளின் இறைவன் (யெகோவா) தான் அல்லாஹ் என்றும் கூறுவார்கள்.

பைபிளின் யெகோவாவும், அல்லாஹ்வும் ஒருவரல்ல, இவ்விருவர்கள் வெவ்வேறானவர்கள் என்பதை அறிய கீழ்கண்ட தமிழ் கட்டுரைகளை படிக்கவும். 

அல்லாஹ் 'பைபிளின் தேவன் இல்லை' என்று மேற்கண்ட கட்டுரைகளினால் நிருபனமாகிவிட்டதால், உண்மையில் அல்லாஹ் யார்? இதற்கான பதிலை முஸ்லிம்களின் வேதமாகிய குர்‍ஆனிலிருந்தும், சரித்திர ஆய்வு நூல்களிலிருந்தும் நாம் அறிந்துக்கொள்ளலாம்.

அல்லாஹ்வின் ஆதார் அட்டை எங்கே?

இக்கட்டுரையின் தலைப்புக்கள்:

1) அல்லாஹ் என்பவன் பைபிளில் வரும் 'பாகால்' (Baal) என்றுச் சொல்லக்கூடிய விக்கிரக கடவுளா?

2) சரித்திர நூல்கள்  - மக்காவின் காபாவில் வைக்கப்பட்டிருந்த ஹுபால் (Hubal) என்ற கடவுள் யார்?

3) பழைய ஏற்பாட்டின் பாகால் தான், மக்காவின் "ஹுபால்"

4) அல்லாஹ் ஒரு தனிப்பெயரல்ல‌, அது ஒரு பொதுப்பெயர்/பட்டப்பெயர் (Allah – The Title, than a Name):

5) ஹுபாலும் அல்லாஹ்வும் வெவ்வேறு என்று குர்‍ஆன் 37:125 கூறுகின்றதா? அல்லது பாகாலும் யெகோவாவும் வெவ்வெறு என்று இவ்வசனம் சொல்கிறதா? 

6) முஹம்மதுவின் மீது மக்காவினரின் குற்றச்சாட்டு, எல்லா தெய்வங்களையும் ஒரே தெய்வமாக ஆக்கிவிட்டார்


1.அல்லாஹ் என்பவன் பைபிளில் வரும் 'பாகால்' (Baal) என்றுச் சொல்லக்கூடிய விக்கிரக கடவுளா?

இஸ்மவேலர்கள் யெகோவா தேவனை தொழவில்லை:

"இஸ்மவேல் யெகோவா தேவனை தொழுதார், எனவே மக்காவின் அரேபியர்கள் கூட அவரையே தொழுதனர், எனவே, அல்லாஹ் தான் யெகோவா"என்று முஸ்லிம்கள் கூறுவார்கள்.  ஆனால், பைபிளின் பழைய ஏற்பாட்டை படிக்கும் போது, இஸ்மவேலுக்கு பிறகு வந்த அவரது சந்ததிகள் (இஸ்மவேலர்கள்) யெகோவா தேவனை தொழவில்லை, அதற்கு பதிலாக, அவர்கள் பாகால் என்ற அப்பகுதியில் இருந்த விக்கிரக தெய்வ(த்தை)ங்களை தொழுதார்கள் என்று அறியமுடிகின்றது. இஸ்மவேல் மக்காவிற்குச் சென்று அங்கு வாழ்ந்தார் என்று இஸ்லாம் சொல்லும் விவரங்களுக்கு சான்றுகள் எதுவும் இல்லை.

இது மட்டுமல்ல இஸ்மவேலர்கள் யெகோவா தேவனுக்கு எதிரிகளாக இருந்தார்கள் என்றும் சங்கீதம் கூறுகிறது.

சங்கீதம் 83:1-18

1. தேவனே, மவுனமாயிராதேயும், பேசாமலிராதேயும்; தேவனே, சும்மாயிராதேயும். 

2. இதோ, உம்முடைய சத்துருக்கள் கொந்தளித்து, உம்முடைய பகைஞர் தலையெடுக்கிறார்கள். 

3. உமது ஜனத்துக்கு விரோதமாக உபாய தந்திரங்களை யோசித்து, உமது மறைவிலிருக்கிறவர்களுக்கு விரோதமாக ஆலோசனை பண்ணுகிறார்கள். 

4. அவர்கள் இனி ஒரு ஜாதியாராயிராமலும், இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அதம்பண்ணுவோம் வாருங்கள் என்கிறார்கள். 

5. இப்படி, ஏதோமின் கூடாரத்தாரும், இஸ்மவேலரும், மோவாபியரும், ஆகாரியரும், 

6. கேபாலரும், அம்மோனியரும், அமலேக்கியரும், தீருவின் குடிகளோடுகூடிய பெலிஸ்தரும்,

. . .

16. கர்த்தாவே, அவர்கள் உமது நாமத்தைத் தேடும்படிக்கு, அவர்கள் முகங்களை அவமானத்தாலே மூடும்.  

17. யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி

18. அவர்கள் என்றைக்கும் வெட்கிக் கலங்கி, நாணமடைந்து அழிந்து போவார்களாக.

யெகோவா தேவனை தொழுவதை விட்டுவிட்டு, பாகால் என்ற விக்கிரக தெய்வங்களை இஸ்ரவேலர்கள் தொழும் போது, தேவன் அவர்களை கடிந்துக்கொண்டார் என்றும் நியாயாதிபதிகள் புத்தகம் பதிவு செய்கிறது.

நியாயாதிபதிகள் 2:11-13, 3:7

11. அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, பாகால்களைச் சேவித்து,

12. தங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின அவர்களுடைய தேவனாகிய கர்த்தரை விட்டு, தங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்களுடைய தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றிப்போய், அவர்களைப் பணிந்துகொண்டு, கர்த்தருக்குக் கோபமூட்டினார்கள்.

13. அவர்கள் கர்த்தரை விட்டு, பாகாலையும் அஸ்தரோத்தையும் சேவித்தார்கள்.

நியாயாதிபதிகள் 3:7

இப்படி இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்து, பாகால்களையும் தோப்பு விக்கிரகங்களையும் சேவிக்கிறபோது,

பாகாலின் பலிபீடத்தை தகர்த்துப்போடு:

அக்கம் பக்கத்து அரசர்களால் இஸ்ரவேலர்களுக்கு பிரச்சனை வரும் போது, மறுபடியும் யெகோவா தேவனிடம் இஸ்ரவேலர்கள் காப்பாற்றும்படி மன்றாடினார்கள்.  அப்பொழுது தேவன் கிதியோன் போன்றவர்களை எழுப்பி, விடுதலை கொடுத்தார். இந்த நேரத்தில், கிதியோனிடம் யெகோவா தேவன் என்ன சொல்கிறார் என்பதை கவனியுங்கள்.

நியாயாதிபதிகள் 6:24-28

24. அங்கே கிதியோன் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம் என்று பேரிட்டான்; அது இந்நாள்வரைக்கும் அபியேஸ்ரியரின் ஊராகிய ஒப்ராவில் இருக்கிறது.

25. அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனை நோக்கி: நீ உன் தகப்பனுக்கு இருக்கிற காளைகளில் ஏழு வயதான இரண்டாம் காளையைக் கொண்டுபோய், உன் தகப்பனுக்கு இருக்கிற பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகேயிருக்கிற தோப்பை வெட்டிப்போட்டு,

26. இந்தக் கற்பாறை உச்சியிலே பாங்கான ஒரு இடத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அந்த இரண்டாம் காளையைக் கொண்டுவந்து, அதை நீ வெட்டிப்போட்ட தோப்பினுடைய கட்டை விறகுகளின்மேல் சர்வாங்க தகனமாகப் பலியிடக்கடவாய் என்றார்.

27. அப்பொழுது கிதியோன், தன் வேலையாட்களில் பத்துப்பேரைச் சேர்த்து, கர்த்தர் தனக்குச் சொன்னபடியே செய்தான்; அவன் தன் தகப்பன் குடும்பத்தாருக்கும் அந்த ஊர் மனுஷருக்கும் பயப்பட்டபடியினாலே, அதைப் பகலிலே செய்யாமல், இரவிலே செய்தான்.

28. அந்த ஊர் மனுஷர் காலமே எழுந்திருந்தபோது, இதோ, பாகாலின் பலிபீடம் தகர்க்கப்பட்டதும், அதின் அருகேயிருந்த தோப்பு வெட்டிப்போடப்பட்டதும், கட்டப்பட்டிருந்த பலிபீடத்தின்மேல் அந்த இரண்டாம் காளை பலியிடப்பட்டதுமாயிருக்க அவர்கள் கண்டு;

இஸ்ரவேலர்களுக்கு துன்பம் வரும் போது, மறுபடியும் கர்த்தரை தொழுதுக்கொண்டார்கள், மனந்திரும்பினார்கள்.

I சாமுவேல் 7:4, 12:10

I சாமுவேல் 7:4 அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் பாகால்களையும் அஸ்தரோத்தையும் விலக்கிவிட்டு, கர்த்தர் ஒருவருக்கே ஆராதனைசெய்தார்கள்.

I சாமுவேல் 12:10 ஆகையால் அவர்கள் கர்த்தரை நோக்கி முறையிட்டு: நாங்கள் கர்த்தரை விட்டுப் பாகால்களையும் அஸ்தரோத்தையும் சேவித்ததினாலே, பாவஞ்செய்தோம்; இப்பொழுது எங்கள் சத்துருக்களின் கைக்கு எங்களை நீங்கலாக்கி ரட்சியும்; இனி உம்மைச் சேவிப்போம் என்றார்கள்.

இந்த பாகால் விக்கிரக தெய்வங்கள் பற்றி பல எச்சரிக்கை வசனங்களை பழைய ஏற்பாட்டில் பரவலாக காணலாம்.

2) சரித்திர நூல்கள்  - மக்காவின் காபாவில் வைக்கப்பட்டிருந்த ஹுபால் (Hubal) என்ற கடவுள் யார்?

மக்காவினரின் உயர்ந்த தெய்வம் "ஹுபால்" என்று பல சரித்திர ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளார்கள்.

  • "... The great god of Mecca was Hubal, an idol of carnelian." (Maxime Rodinson, Muhammad [New Press, NY, May 2000 ISBN: 1565847520], p. 16)
  • "... The Ka'ba which may have initially been a shrine of Hubal alone, housed several idols ..." (Rodinson, p. 40; underlined emphasis ours)
  • "... The presiding deity was Hubal, a large carnelian kept inside the temple; 360 other idols were arranged outside ..." (Malise Ruthven, Islam in the World [Oxford University Press, Second edition 2000], p. 15; underlined emphasis ours)
  • "... At the time of Muhammad, the Ka'abah was OFFICIALLY DEDICATED to the god Hubal, a deity who had been imported into Arabia from the Nabateans in what is now Jordan. But the pre-eminence of the shrine as well as the common belief in Mecca seems to suggest that it may have been dedicated originally to al-Llah, the High God of the Arabs ..." (Karen Armstrong, Muhammad: A Biography of the Prophet [Harper San Francisco; ISBN: 0062508865; Reprint edition, October 1993], pp. 61-62; bold and capital emphasis ours)
  • Pre-Islamic Arabia also had its stone deities. They were stone statues of shapeless volcanic or meteoric stones found in the deserts and believed to have been sent by astral deities. The most prominent deities were Hubal, the male god of the Ka'ba, and the three sister goddesses al-Lat, al-Manat, and al-Uzza; Muhammad's tribe, the Quraysh, thought these three goddesses to be the daughters of Allah. Hubal was the chief god of the Ka'ba among 360 other deities. He was a man-like statue whose body was made of red precious stone and whose arms were of solid gold. (George W. Braswell, Jr., Islam Its Prophets, Peoples, Politics and Power [Broadman & Holman Publishers, Nashville, TN; July, 1996], p. 44; bold emphasis ours)
  • Hubal. An idol, God of the moon. It was set up in the Kabah and became the principle idol of the pagan Meccans. (Cyril Glassé, The Concise Encyclopedia of Islam [Harper & Row: San Francisco, 1989], p. 160; underline emphasis ours)  ... the principle gods at Mecca were Hubal (god of the moon) and the female goddesses. (Ibid., p. 179)

ஹுபால் தெய்வத்தை ஸிரியா நாட்டிலிருந்து கொண்டு வந்து மக்காவின் காபாவில் வைத்ததாக சரித்திரம் சொல்கிறது.

  • "... Legend had it that Qusayy had travelled in Syria and brought the three goddesses al-Lat, al-Uzza and Manat to the Hijaz and enthroned the Nabatean god Hubal in the Ka'abah ..." (Armstrong, p. 66; bold emphasis ours)

உஹுத் போரில் அபூ சுஃப்யானும் முஹம்மதுவும்:

உஹுத் போரின் போது, அபூ சுஃப்யானின் படை வெற்றி பெற்றபோது, "ஹுபால் தெய்வத்துக்கு புகழ் உண்டாகட்டும்" என்று அவர் கூறினார், உடனே முஹம்மது "அல்லாஹ் தான் உயர்ந்தவன்" என்று கூறினார்.  (Source: answering-islam.org/Books/Al-Kalbi/uzza.htm)

ஆக்ஸ்போர்டு இஸ்லாமிய அகராதி:

ஆக்ஸ்போர்டு இஸ்லாமிய அகராதியில், முஹம்மதுவின் குறைஷி வம்சாவழியின் குல தெய்வமாக "இந்த ஹுபால்" இருந்தது. இதனால் தான் அபூ சுஃப்யான் கூட மேற்கண்ட உஹுத் போரின் போது ஹுபாலை புகழ்ந்தார். 

  • Hubal A pre-Islamic deity represented by an idol in Kaaba that was destroyed by Muhammad when he conquered Mecca in 630. Patron of the Quraysh, leading tribe of Mecca. (The Oxford Dictionary of Islam (Oxford University Press, 2003) p. 117;)

3) பழைய ஏற்பாட்டின் பாகால் தான், மக்காவின் "ஹுபால்":

இஸ்லாமிய அறிஞர் மார்டின் லிங்க் கூறும் போது, ஸிரியாவிற்குச் சென்ற மக்காவினர் ஒரு தெய்வத்தை அங்கிருந்து கொண்டு வந்து காபாவில் வைத்தனர், அது தான் ஹுபால்.  இதுவே காபாவின் முதன்மையான தெய்வமாக மாறியது.

  • Islamicist Martin Ling, while commenting on the origin of paganism in Mecca, further supports this when he writes:

"Khuza 'ah thus shared the guilt of Jurhum. They were also to blame in other respects: a chieftain of theirs, on his way back from a journey to SYRIA, had asked the MOABITES to give him ONE OF THEIR IDOLSThey gave him HUBAL, which he brought back to the Sanctuary, setting it up within the Ka'bah itself; and it became THE CHIEF IDOL OF MECCA." (Muhammad: His Life Based on the Earliest Sources [Inner Traditions International, LTD. One Park Street, Rochestor Vermont 05767, 1983], p. 5; bold and capital emphasis ours)

இஸ்லாமிய விரிவுரையாளர் இப்னு கதீர் அவர்களின் விளக்கவுரை:

ஹுபால் தெய்வத்தை ஸிரியாவிலிருந்து கொண்டு வந்து மக்காவின் காபாவில் வைத்து தொழுதார்கள். 

  • Ibn Kathir noted: Ibn Hisham states that a learned man told him that 'Amr b. Luhayy once left Mecca for Syria 'Amr then asked them to give him an idol he could take to Arab lands where it could be worshipped, and they gave him one named Hubal. This he brought to Mecca and set on a pedestal and ordered the people to worship and venerate it. (The Life of the Prophet Muhammad (Al-Sira al-Nabawiyya), Volume I, translated by professor Trevor Le Gassick, reviewed by Dr. Ahmed Fareed [Garnet Publishing Limited, 8 Southern Court, south Street Reading RG1 4QS, UK; The Center for Muslim Contribution to Civilization, 1998], p. 42; bold emphasis ours)

முக்கியமாக, இப்னு கதீர் விரிவுரையாளரின் படி, முஹம்மதுவின் குடும்ப வம்ச குல தெய்வமாக ஹுபால் இருப்பதாகவும், மேலும் முஹம்மதுவின் தாத்தா, ஹுபால் சிலைக்கு முன்பாக நின்றுக்கொண்டு, அல்லாஹ்விடம் வேண்டியதாக குறிப்பிடுகிறார்.

பிலிஃப் கே ஹித்தி என்ற சரித்திர ஆசிரியர் கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றார். இந்த ஹுபால் என்ற தெய்வம் மோவாப் அல்லது மெசபதோமியா பகுதியிலிருந்து வந்த விக்கிரமாகும், மேலும் அராமிக் மொழியின் தாக்கம் அதன் பெயரிலும், இதர பழக்கங்களிலும் உள்ளது.

  • The following citations from Philip K. Hitti puts this all together quite nicely:
  • Hubal (from Aram. For vapour, spirit), evidently the chief deity of al-ka'bah, was represented in human form. Beside him stood ritual arrows used for divination by the soothsayers (kahin, from Aramaic) who drew lots by means of them. The tradition in ibn-Hisham, which makes 'Amr ibn-Luhayy the importer of this idol from Moab or Mesopotamia, may have a kernel of truth in so far as it retains a memory of the Aramaic origin of the deity. (History of the Arabs from the Earliest Times to the Present, revised tenth edition, new preface by Walid Khalidi [Palgrave Macmillan, 2002; ISBN: 0-333-63142-0 paperback], p. 100; underlined emphasis ours)

இதுவரை கண்டவைகளின் சுருக்கம்:

விரிவுரையாளர் இப்னு கதீரின் படி, முஹம்மதுவும் குடும்ப குல தெய்வமாக ஹுபால் உள்ளது, மேலும் குறைஷிகளின்  குல தெய்வமாக (முஹம்மதுவின் குலம்) ஹுபால் உள்ளது. சரித்திர ஆசிரியர் பிலிஃப் கெ ஹித்தியின் படியும், ஹுபால் என்ற தெய்வத்தைத் தான், அல்லாஹ் என்றும் அழைத்து தொழப்பட்டுள்ளது.

மூக்கூற்று வா முறைப்படி இதனை பார்த்தால்:

  1. ஹுபால் குறைஷிகளின்  குல தெய்வமாகும்.
  2. அல்லாஹ் குறைஷிகளின்  குல தெய்வமாகும்.
  3. எனவே, இஸ்லாமுக்கு முந்தைய காலத்தில், ஹுபாலை அல்லாஹ் என்றும் அழைத்தனர்.

இஸ்லாமுக்கு முந்தைய காலக்கட்டத்தில், மக்காவினரின் விக்கிரக தெய்வங்களை 'அல்லாஹ்' என்றே அழைத்தனர். இதனால் தான், 'அல்லாஹ்வாகிய ஹுபால்' என்றும் ஹுபாலை அழைத்தனர். இதனை பல சரித்திர ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளார்கள்.

  • That the term Allah was used in pre-Islamic times for any pagan deity, suggesting that it is quite possible that Allah was applied to Hubal, is a view held by many scholars and writers:
  • "... The name used for God was 'Allah', which was already in use for one of the local gods (it is now also used by Arabic-speaking Jews and Christians as the name of God) ..." (Albert Hourani, A History of Arab Peoples [Warner Books Edition, paperback 1992], p. 16; bold emphasis ours)
  • "Allah, the paramount deity of PAGAN Arabia, was the target of worship in varying degrees of intensity from the southernmost tip of Arabia to the Mediterranean. To the Babylonians he was "Il" (god); to the Canaanites, and later the Israelites, he was "El"; the South Arabians worshiped him as "Ilah," and the Bedouins as "al-Ilah" (the deity). With Muhammad he BECOMES Allah, God of the Worlds, of all believers, the one and only who admits of no associates or consorts in the worship of Him. Judaic and Christian concepts of God abetted the transformation of Allah FROM A PAGAN DEITY to the God of all monotheists. There is no reason, therefore, to accept the idea that "Allah" passed to the Muslims from Christians and Jews." (Caesar E. Farah, Ph.D., Islam [Barron's Educational Series, 2000, sixth edition paperback] p. 28; bold and capital emphasis ours)

ஹுபால் = பாகால்  (Hubal = the Baal)

அரபி மற்றும் எபிரேய மொழிகளில் உயிரெழுத்துக்கள் எழுதப்படாமல் இருப்பதினால், பாகால் என்று அழைக்கப்படும் பைபிளில் வரும் விக்கிரகத்துக்கும், ஹுபால் என்ற அரபி விக்கிரகத்துக்கும் ஒற்றுமையுள்ளது.

  • எபிரேய மொழி 'ஹ ப ல' (HA BAAL) = அரபியர்களின் 'ஹ ப ல' (HUBAAL)
  • பைபிளில் எண்ணாகமம் 25:3, ஓசியா 9:10, உபாகமம் 4:3, யோசுவா 22:17 & சங்கீதம் 106:28,29 வசனங்களில் பாகால் தெய்வம் பற்றி குறிப்பு வருகிறது.
  • எந்த பகுதியில் பாகால் தெய்வம் வணங்கப்பட்டது 'மோவாப் தேசம்'
  • ஹுபால் என்ற விக்கிரக தெய்வம் எங்கேயிருந்து கொண்டு வரப்பட்டு காபாவில் வைத்து வணங்கப்பட்டது, மோவாப்/மெசபதோமியா/ஸிரியா தேசத்திலிருந்து.

4) அல்லாஹ் ஒரு தனிப்பெயரல்ல‌அது ஒரு பொதுப்பெயர்/பட்டப்பெயர் (Allah – The Title, than a Name):

'அல்லாஹ்'  என்ற வார்த்தை  "அல் இலாஹ்" என்ற இருவார்த்தைகளின் கூட்டு ஆகும். இந்த கூட்டு வார்த்தைகளை இஸ்லாமுக்கு முந்தைய காலங்களில் ஒரு பட்டப்பெயராக பல விக்கிரக தெய்வங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலே நாம் பார்த்ததின் படிஹுபால் என்ற விக்கிரகத்தை அல்லாஹ் என்றும் அழைத்துள்ளார்கள். முஹம்மதுவின் தாத்தா கூடஹுபாலிடம் வேண்டிக்கொள்ளும் போதுஅதனை "அல்லாஹ்" என்று அழைத்துள்ளார்.

முஹம்மதுவிற்கு முன்பிலிருந்தேகாபாவின் இறைவனாக அல்லாஹ் பார்க்கப்பட்டான். மேலும் இதே காபாவில் தான் ஹுபால் என்ற சிலையும் வைக்கப்பட்டு வணங்கப்பட்டு வந்தது. இன்னும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால்எந்த விக்கிரகத்தையும் குறிக்க ஒரு பொதுப்பெயராக 'அல்லாஹ்என்ற வார்த்தை முஹம்மதுவிற்கு முந்தைய காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மக்காவின் அல்லாஹ் ஹுபால் என்று சொல்லலாமா? ஆம், வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஹுபல் மக்காவில் அல்லாஹ் என்று அழைக்கப்பட்டார், இதே போன்று தான் 'இஸ்ரவேலின் யெகோவா "எலோஹிம்" என்று அழைக்கப்பட்டார்'. ஹுபால் என்பது தனிப்பெயர், அல்லாஹ் என்பது பட்டப்பெயர், இதே போன்றுதான் "யெகோவா" என்பது தனிப்பெயர், எலோஹிம் என்பது பட்டப்பெயர் அல்லது பொதுப்பெயர்.

எனவே அல்லாஹ் என்ற பெயர் முதலில் ஒரு பட்டப்பெயராக இருந்திருக்க வேண்டும். "மக்காவின் ஒவ்வொரு பழங்குடியினரும் காபாவில் உள்ள தம் குலதெய்வத்தை அழைக்கும் போது, அதன் பெயரை குறிப்பிடாமல், "அல்லாஹ்" என்ற பொதுப்பெயரோடு அழைத்தனர். அப்படி அவர்கள் அழைத்தாலும், தங்கள் குலதெய்வத்தை தான் அவர்கள் உள்ளத்தில் கருதினர். அல்லாஹ் (அல் இலா = இறைவன்) என்ற பொதுப்பெயரை அனைவரும் தங்கள் தெய்வத்திற்கு பட்டப்பெயராக பயன்படுத்தினர்.

  • "It is presupposed by Muhammad and admitted by his opponents, that Allah is the Lord of the Ka'ba. Is perhaps the Allah of Mecca Hubal? In other words, was Hubal called Allah in Mecca as Jahweh was called Elohim in Israel?", asks J. Wellhausen (ibid p. 75). This becomes even more likely when we realize that the polytheists of Arabia recognized Allah as creator (Surahs 23:84-89; 29:61), and swore by him (Surah 6:109). So the name Allah must at first have been a title. "At first Allah was the title used within each individual tribe to address its tribal deity instead of its proper name. All said 'Allah', but each one had its own deity in mind. The expression 'the god' (al-ilah), which became the only usage, became the bridge to the concept of an identical god which all tribes had in common (J. Wellhausen, p. 218)". (Source: answering-islam.org/Nehls/tt1/tt5.html ; emphasis ours)

இதுவரை கண்டவைகளின் சுருக்கம் இதுதான்:

  1. பைபிளின் படி. இஸ்மவேல் சந்ததிகள்  யெகோவா தேவனைத் தொழுது கொள்ளவில்லை.
  2. அவர்கள் மற்ற இன குழுக்களோடு சம்பந்தம் கலந்து அவர்களின் விக்கிரக தெய்வமாகிய பாகால் என்ற விக்கிரகத்தை வணங்கி வந்தனர்.
  3. முஸ்லீம்கள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாத சரித்திர நூல்களிலிருந்து "காபாவின்" முக்கிய தெய்வம் ஹுபால் என்பதை அறியமுடிகின்றது.
  4. முஹம்மதுவின் தாத்தா ஹுபாலை வணங்கினார், மேலும் ஹுபாலின் சிலைக்கு முன்பு நின்றுக்கொண்டு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்.
  5. மோவாபியர்களின் செல்வாக்கு காரணமாக சிரியாவிலிருந்து ஹுபால் என்ற சிலை மக்காவிற்கு கொண்டு வரப்பட்டதாக முஸ்லீம் நூல்கள் சான்று பகருகின்றன.
  6. இந்த நாடுகள் பாகால் என்ற தெய்வத்தை வழிபட்டன, எபிரேய மொழியில் உள்ள "பாகால்" (Ha Baal ஹ பால்) என்ற தெய்வம் தான், அரபி மொழியில் ஹுபால் என்று ஆனது.

முடிவுரையாக சொல்லவேண்டுமென்றால், பாகால் என்ற பெயரில் இஸ்ரவேல் மற்றும் மோவாப்(ஸிரியா) நாடுகளில் வணங்கப்பட்ட விக்கிரக சிலை தெய்வம் தான், அரேபியாவிற்கு கொண்டு வரப்பட்டு காபாவில் வைக்கப்பட்டு ஹுபால் என்ற பெயரில் மக்காவினரால் வணங்கப்பட்டு வந்துள்ளது. அல்லாஹ் என்ற பெயர் ஒரு பட்டப்பெயராக காபாவில் இருந்த குலதெய்வங்கள் அழைக்கப்பட்டன, இதில் ஹுபாலும் அடங்கும். 

5) ஹுபாலும் அல்லாஹ்வும் வெவ்வேறு என்று குர்‍ஆன் 37:125 கூறுகின்றதா? அல்லது பாகாலும் யெகோவாவும் வெவ்வெறு என்று இவ்வசனம் சொல்கிறதா? 

குர்‍ஆன் 37:125,126 கீழ்கண்டவாறு கூறுகின்றது, அதாவது அல்லாஹ் வேறு, பாகால் வேறு, அப்படியானால் இதுவரை ஆய்வு செய்த விவரங்களுக்கு எதிராக அல்லவா இது இருக்கிறது?

  • 37:125. "நீங்கள் படைப்பவர்களில் மிகச் சிறப்பானவனை விட்டு விட்டு "பஃலு" (எனும் சிலையை) வணங்குகிறீர்களா? 
  • 37:126. "அல்லாஹ்தான் - உங்களுடைய இறைவனும், உங்களுடைய முன் சென்ற மூதாதையர்களின் இறைவனும் ஆவான்." (முஹம்மது ஜான் தமிழாக்கம்)
  • Quran 37:125-126 Do you call upon ˹the idol of˺ Ba'l and abandon the Best of Creators, Allah, your Lord and the Lord of your forefathers?

ஆமாம், இந்த வசனம் பாகால் என்ற சிலை வேறு அல்லாஹ் வேறு என்று தெளிவாகக் கூறுகின்றது என்று வாசகர்கள் நினைக்கலாம். ஆனால், இந்த வசனத்தை முஹம்மது தம் மக்களுக்குச் சொன்னதல்ல, கிட்டத்தட்ட முஹம்மதுவின் காலத்துக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பு (கி.மு. 900) வாழ்ந்த 'எலியா' என்ற பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசி சொன்னதாக, குர்‍ஆனில் மறுமதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வசனத்தின் பின்னணி வசனங்களை குர்‍ஆனிலிருந்தே பார்ப்போம்:

  • 37:123. மேலும், நிச்சயமாக இல்யாஸும் முர்ஸல்(களில் - தூதராக அனுப்பப்பட்டவர்)களில் ஒருவர் தாம்.
  • 37:124. அவர் தம் சமூகத்தவரிடம்: "நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?" என்று (போதித்துச்) சொல்லியதை (நினைவு கூர்வீராக).
  • 37:125. "நீங்கள் படைப்பவர்களில் மிகச் சிறப்பானவனை விட்டு விட்டு "பஃலு" (எனும் சிலையை) வணங்குகிறீர்களா?
  • 37:126. "அல்லாஹ்தான் - உங்களுடைய இறைவனும், உங்களுடைய முன் சென்ற மூதாதையர்களின் இறைவனும் ஆவான்."

'இல்யாஸ்' என்று குர்‍ஆன் கூறுவது, பைபிளின் 'எலியா' என்ற தீர்க்கதரிசியாவார். இவர் தான் பாகால் என்ற விக்கிரகத்தின் பொய்யான தீர்க்கதரிசிகளோடு சவால் விட்டு யெகோவா தேவனே மெய்யான தேவன் என்று நிருபிக்க ஜெபித்த போது, வானத்திலிருந்து நெருப்பு பலிபீடத்தில் வந்து இறங்கியது, இதனை I இராஜாக்கள் 18ம் அத்தியாயத்தில் காணலாம்.

I இராஜாக்கள் 18:7-46

  • 17. ஆகாப் எலியாவைக் கண்டபோது, ஆகாப் அவனை நோக்கி: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா என்றான்.
  • 18. அதற்கு அவன்: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நான் அல்ல; கர்த்தரின் கட்டளைகளை விட்டு பாகால்களைப் பின்பற்றினதினால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவர்கள்.
  • 19. இப்போதும் கர்மேல் பர்வதத்திலே இஸ்ரவேலனைத்தையும், பாகாலின் தீர்க்கதரிசிகள் நானூற்றைம்பதுபேரையும், யேசபேலின் பந்தியிலே சாப்பிடுகிற தோப்பு விக்கிரகத்தின் தீர்க்கதரிசிகள் நானூறுபேரையும் என்னிடத்தில் கூட்டிக்கொண்டுவர ஆட்களை அனுப்பும் என்றான்.

குர்‍ஆன் 37:125ல் வருவது பாகால் என்ற விக்கிரகம் ஆகும், இந்த வசனத்தை சொன்னது எலியா என்ற தீர்க்கதரிசி ஆவார். ஆனால், குர்‍ஆன் ஆக்கியோனுக்கு 'எலியா சொன்ன அந்த பொய்யான தெய்வமாகிய பாகால் தான், அரேபியாவில் வணங்கப்பட்ட "ஹுபால்" என்ற விக்கிரகம்' என்ற உண்மை தெரியவில்லை. மேலும் இந்த ஹுபாலின் பட்டப்பெயர் தான் அல்லாஹ் என்பதையும் குர்‍ஆன் ஆக்கியோன் அறியவில்லை. இதனால் தான் அறியாமையினால் "1500 ஆண்டுகளுக்கு முன்பு எலியா சொன்ன வசனத்தை, கி.பி. 7ம் நூற்றாண்டில் குர்‍ஆனில் புகுத்திவிட்டார்'. 

6) முஹம்மதுவின் மீது மக்காவினரின் குற்றச்சாட்டு, எல்லா தெய்வங்களையும் ஒரே தெய்வமாக ஆக்கிவிட்டார்

முஹம்மதுவின் வம்சத்திற்கு இருந்த குல தெய்வம், ஹுபால் என்ற விக்கிரமாகும், இதனையும் "அல்லாஹ்வாகிய ஹுபால், அதாவது தெய்வமாகிய ஹுபால்" என்று அழைத்தனர், அதே போன்று மற்ற குல தெய்வங்களையும், "அல்லாஹ்" என்ற பட்டப்பெயரோடு அழைத்து வந்தனர், அந்த மக்கள். 

ஆனால், திடீரென்று முஹம்மது வந்து "அல்லாஹ் என்ற பட்டப்பெயரை" பிடித்துக்கொண்டு, அது தான் உண்மையான படைப்பாளன் என்றுச் சொல்லிக்கொண்டு மற்ற குலதெய்வங்களை ஒதுக்கிவிட்டு, "அல்லாஹ்" தான் உண்மையான தெய்வம் என்று சொன்ன போது, மக்காவினர், கீழ்கண்டவாறு குற்றச்சாட்டு வைத்த்தாக குர்‍ஆன் சாட்சி பகருகின்றது.

குர்‍ஆன் 38:5-6, ஒரே நாயனாக ஆக்கிவிட்டாரா?

38:5. "இவர் (எல்லாத்) தெய்வங்களையும் ஒரே நாயனாக ஆக்கிவிட்டாரா? நிச்சயமாக இது ஓர் ஆச்சரியமான விஷயமே! (என்றும் கூறினர்).

38:6. "(இவரை விட்டும் விலகிச்) செல்லுங்கள். உங்கள் தெய்வங்களை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள். நிச்சயமாக இதில் (இவரது பிரச்சாரத்தில்) ஏதோ (சுயநலம்) நாடப்படுகிறது" என்று அவர்களின் தலைவர்கள் (கூறிச்) சென்றனர்.

இதனை எதற்கு ஒப்பிடலாம்? நம் இந்தியாவில் பல தெய்வங்களை வணங்குகிறார்கள், தெய்வமாகிய முருகன் (அல்லாஹ்வாகிய முருகன்), தெய்வமாகிய சிவன் (அல்லாஹ்வாகிய சிவன்), இப்படி கைநிறைய தெய்வங்களை (அல்லாஹ்க்களை) வணங்கிக்கொண்டு இருக்கும் போது, இவைகளை வணங்கிக்கொண்டு இருந்தவர்களில் ஒருவர் எழும்பி, "இவைகளை எல்லாம் விட்டுவிடுங்கள், ஒரே தெய்வத்தை வணங்குங்கள்" என்று சொன்னால் எப்படி இருக்கும்? இதுமட்டுமல்ல, அந்த ஒரு மெய்யான தெய்வத்தின் பெயர் "தெய்வம்" என்று என்றுச் சொன்னால், அந்த மக்களுக்கு எப்படி இருக்கும்?

இதைத் தான் முஹம்மதுவும் செய்தார்.  "தெய்வம்" என்பது ஒரு பெயரா? "அல் இலா(அல்லாஹ்)" என்பது ஒரு பெயரா? இது ஒரு பட்டப்பெயர் அல்லவா? அல்லது பொதுப்பெயர் அல்லவா? என்று மக்கள் ஆச்சரியப்பட்டார்கள் அன்று. இதனால் தான் "முஹம்மது எல்லா தெய்வங்களையும் ஒன்றாக்கிவிட்டார்" என்று குற்றச்சாட்டு வைத்தார்கள்.

முடிவுரை:

ஒரு பட்டப்பெயரை எடுத்துக்கொண்டு, அதுவே மெய்யான தெய்வத்தின் பெயர் என்றுச் சொல்லி, பைபிளின் இறைவன் "இவர் தான்" என்று ஒரு பெரிய பொய்யைச் சொல்லி, காலங்காலமாக வணங்கிக்கொண்டு இருந்த பல தெய்வங்களை ஒதுக்கிவிட்டு, அல்லது அவைகளை ஒன்றாக்கி, ஒரு பெரிய கலவையை உருவாக்கி நடத்தப்பட்ட ஒரு கூத்து தான் இஸ்லாமிய இறைவன் அல்லாஹ் என்ற பெயர்.

அல்லாஹ்வின் ஆதார் அட்டை கிடைத்ததா? 

இந்தியாவில் பிறக்காத ஒருவருக்கு இந்திய அரசு ஆதார் அட்டை கொடுத்தது போல உள்ளதல்லவா அல்லாஹ்வின் பெயர்க்காரணம்?

அல்லாஹ் என்பது முஹம்மது உருவாக்கிய ஒரு கற்பனைக் கதாபாத்திரம். இந்த கற்பனை கதாபாத்திரத்டினால் கடந்த‌ 14 நூற்றாண்டுகளாக உலகம் பட்டுக்கொண்டு இருக்கும் பாடுகள் எத்தனை?

அடிக்குறிப்புக்கள்

1) https://www.answering-islam.org/Shamoun/ishmael-baal.htm

2) Is Allah the pagan idol Baal? - YouTube 

3) answering-islam.org/Books/Al-Kalbi/uzza.htm 

4) answering-islam.org/Nehls/tt1/tt5.html

தேதி: 1st July 2023

குர்‍ஆன் ஆய்வுக் கட்டுரைகள்

உமர் கட்டுரைகள்

Source: குர்‍ஆன் 37:125 - அல்லாஹ்வின் ஆதார் அட்டை எங்கே? அல்லாஹ்வும் ஹுபாலும் ஒருவர் தானா? (answering-islam.org)