ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வியாழன், 18 ஏப்ரல், 2019

பாகம் 5 - இயேசுவை காப்பாற்றி, கிறிஸ்துவை சிலுவையில் அறைய முயலும் செண்பகப்பெருமாள்!

 திரு செண்பகப்பெருமாள் அவர்களின் "யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்" என்ற புத்தகத்துக்கு கொடுத்த முந்தைய பதில்களை படிக்க இங்கு சொடுக்கவும்.

இவர் முகவுரையில் எழுதிய 2 - 5 வரையுள்ள  பத்திக‌ளுக்கு இந்த கட்டுரையில் பதிலைக் காண்போம்.

இவர் தன் புத்தகத்தை மூன்று பகுதிகளாக‌ பிரித்து தன் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்:

  1. பைபிளின் பழைய ஏற்பாடு
  2. பைபிளின் புதிய ஏற்பாடு
  3. பைபிளின் கருத்துக்கள் - ஓர் அலசல்

இவர் புதிய ஏற்பாடு மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கு, இவரது இரண்டாவது பாகத்தில் பதிலைத் தரலாம். ஆனால், முகவுரையிலேயே   புதிய ஏற்பாடு மீது  இவர் நேரடியாக‌ தன் குற்றச்சாட்டுகளை வைக்க  தொடங்கியதால், அவைகளுக்கு பதிலைச் சொல்லவேண்டியுள்ளது.

திரு செண்பகப்பெருமாள் அவர்கள் எழுதியவைகள்:
இவர் எழுதிய பத்திகளை அப்படியே மேற்கோள் காட்டாமல், அவைகளிலிருந்து முக்கிய விவரங்களை எடுத்து கீழே பாயிண்டுகளாக தருகிறேன்.

முகவுரை, பக்கம் 9 & 10 (யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்):

  • பவுல் மதம் என்னும் அந்தஸ்தில் இருந்த யூதத்தை அதிலிருந்து வேறோர் நிலைக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.
  • கி.பி. 49ல் பைபிளின் நடைமுறை கொள்கையில் மாற்றம் கொண்டு வர முயன்றார்
  • மதங்களை விட மாறுபட்ட ஒன்றை 'கிறிஸ்து (Christ)' என்ற ஒற்றைச் சொல்லை அறிமுகப்படுத்தினார்
  • இந்தச் சொல் மனிதர்களிடையே பேதம் காட்டுதல் கூடாது என்னும் பொருள் கொண்டதாக இருந்தது.
  • பவுலின் இக்கொள்கை  இஸ்ரேலிய யூத சமூகத்துக்கு புதிது
  • கிறிஸ்து என்ற சொல்லும், அதில் பொதிந்துள்ள பொருளும் பைபிள் மரபுக்கு உரியதல்ல.
  • கொலோசேயர் 1:25-27 யூதர்களிடம் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது இக்கொள்கை, புறஜாதியாரிடம் ஏற்கனவே நடைமுறையில் இருந்துவந்தது என்று பவுல் கூறியதாக குறிப்பிடுகிறார்.
  • பவுல் தம் புதிய ஏற்பாட்டு நூல்களில் மதம் சார்பற்ற கடவுளாக 'கிறிஸ்து' என்ற சொல்லைக்கொண்டு அறிமுகம் செய்கிறார்.
  • பிற்காலத்தில் பல மொழிகளில் மொழியாக்கம் செய்தவர்கள், 'இயேசு' என்ற பெயருக்கு முன்னாலும், பின்னாலும் 'கிறிஸ்து' என்பதை சேர்த்துக்கொண்டார்கள்.
  • இதனால், மேரியின் மகன் இயேசுவிற்கும், கிறிஸ்துவுக்கும் வேறுபாடு காட்ட‌முடியாமல் போகும் நிலை ஏற்பட்டது
  • பவுல் இயேசுவையும் கிறிஸ்துவையும் வேறுபடுத்திக்காட்டினார், ஆக, உயிரோடு இருந்த காலத்தில் இயேசு ஒரு மேசியா மட்டுமே, அவர் சிலுவையில் மரித்த பின்னர் தான் கடவுளின் ஆவி அவர் மீது இறங்கியது, அதனாலே அவர் உயிரோடு எழுப்பப்பட்டார், அதன் பின்பு தான் அவர் கிறிஸ்து என்னும் கடவுளின் மகன் ஆனார் (ரோமர் 1:2-5)

என்று முகவுரையின் இரண்டாவது பத்தியிலிருந்து பல குற்றச்சாட்டுகளை வைக்க தொடங்கியுள்ளார் திரு செண்பகப்பெருமாள். மேற்கண்ட கருத்துக்களில் பல அடிப்படையான தவறுகளை செண்பகப்பெருமாள் செய்துள்ளார். அவைகளின் உண்மை நிலையையும், செண்பகப்பெருமாளின் அறியாமையையும், பைபிளின் நம்பகத்தன்மையையும் இப்போது பதிலாக காண்போம்.


1)    அந்த மூன்று ஆண்டுகள்!


கிறிஸ்தவத்தை விமர்சிக்கும் செண்பகப் பெருமாள் போன்றவர்கள் பெரும்பான்மையாக செய்யும் தவறு என்னவென்றால், இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு நடந்த 3 ஆண்டு நிகழ்ச்சிகளை ஆய்வு செய்ய விட்டுவிடுவதுதான். கிபி 30ல் இயேசு மரணித்து உயிர்த்தெழுகிறார், அதன் பிறகு இயேசுவின் சீடர்கள் எருசலேம் நகரில் இருந்து கொண்டு இயேசு சொல்லியபடி ஊழியம் செய்து கொண்டிருந்தார்கள். யூதர்கள் இவர்களுக்கு எதிராக பல கட்டுப்பாடுகளை விதித்தார்கள், இயேசுவை பற்றி பிரசங்கம் செய்யக்கூடாது என்று கட்டளையிட்டார்கள். கிறிஸ்தவ சபையை துன்புறுத்தி, ஸ்டீபன் என்ற சீடரை யூதர்கள் கல்லெறிந்து கொன்றார்கள். இந்த கொலைக்கு உதவியாக சவுல் என்ற யூதரும் இருந்தார்.

மூன்றாண்டுகளுக்குப் பிறகு, அதாவது இயேசு மரித்து உயிர்த்தெழுந்த விட்ட பிறகு, மூன்றாண்டுகள் கழித்து சவுல் என்பவரை இயேசு சந்தித்து அவர் மனம் திரும்பும்படி செய்தார்.

கிறிஸ்துவத்தில் காணப்படும் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எல்லாம் சவுல் தான் காரணம் என்று திரு செண்பகம் பெருமாள் போன்றவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால் சவுலுக்கு/பவுலுக்கு முன்பு மூன்று ஆண்டுகள் இயேசுவின் சீடர்கள் எவைகளை போதித்துக் கொண்டிருந்தார்கள்? இந்த கேள்விக்கு செண்பகப் பெருமாள் போன்றவர்கள் பதில் சொல்ல முன்வருவதில்லை! ஏனென்றால் இவர்களுடைய எல்லா குற்றச்சாட்டுகளுக்கும், பவுல் மீது இவர்கள் வைக்கும் அனேக காரணமில்லாத குற்றச்சாட்டுகளுக்கும் இந்த மூன்று ஆண்டுகள் பதில் சொல்லிவிடும். இந்த மூன்று ஆண்டுகளை ஆய்வு செய்பவர், பவுலின் மீது குற்றம் சுமத்தமாட்டார்.

எனவே இந்த மூன்று ஆண்டுகளில் நடந்தவைகளை பேசாமல் அதற்குப் பின்பு நடந்தவைகளை மட்டுமே இப்படிப்பட்ட ஆய்வாளர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்களின் வஞ்சகத்தை படம் போட்டு காட்டுகிறது. முஸ்லிம் அறிஞர்கள் செய்வதும் இதே தவறைத்தான்.

இயேசுவிற்கு பிறகு சீடர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? தாங்கள் முன்பு செய்துக்கொண்டிருந்த மீன் பிடிக்கும் வேலைக்கு சீடர்கள் சென்றுவிட்டார்கள்! ஆனாலும் இயேசு அவர்களை சந்தித்து, மேசியாவாகிய தாம் இவ்வுலகத்தில் வந்த முழு நோக்கத்தையும், அவர் விட்டுச் சென்ற ஊழியத்தையும், எப்படி செய்யவேண்டும் என்று சீடர்களுக்கு விவரமாக சொல்லிவிட்டு சென்றார். பவுல் என்பவர் கிறிஸ்தவ‌ சரித்திரத்தில் ஒரு நல்ல‌ பாத்திரமாக மாறுவதற்கு முன்பு, அவர் ஒரு வில்லனாக இருந்தார். அவர் ஏன் வில்லனாக இருந்தார்? அவரை வில்லனாக மாற்றியது யார்? கிறிஸ்துவத்தின் எந்த‌ கோட்பாடு, அவர் கிறிஸ்தவர்களை கொலை செய்யத் தூண்டியது? போன்றவைகளை ஆய்வு செய்தால், செண்பகபெருமாளின் ஆய்வுகள் அனைத்தும், ஒன்றுமில்லாமல் போய்விடும். அவருக்கு நெஞ்சில் உறமிருந்தால், நேர்மையிருந்தால் மேற்கண்ட கேள்விகளுக்கு பதில்களை ஆய்வு செய்து கொடுக்கட்டும்!

கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் ஏன் யூதர்களை கோபப்படுத்தினது என்று? ஆய்வு செய்தாலே, செண்பக பெருமாளின்  புத்தகத்திற்கான பதில் கிடைத்து விடும். பவுலடியார் ஒரு நல்லடியாராக மாறி சொல்லியவைகளை குற்றப்படுத்தும் செண்பகப்பெருமாள், அதே பவுலடியார் ஒரு வில்லனாக இருந்தபோது நடத்திக்காட்டிய‌ அவரின் செயல்பாடுகளை ஆய்வு செய்து இருந்தால்  இப்படிப்பட்ட அரைகுறை புத்தகங்களை எழுத வேண்டிய அவசியம் அவருக்கு இருந்திருக்காது.

ஆக, கிறிஸ்தவத்தின் முதல் மூன்றாண்டுகளில் , கிறிஸ்துவத்தின் அஸ்திபாரங்கள் மிகவும் ஆழமாக போடப்பட்டன. இயேசுவின் நேரடி சீடர்களால், அவரை கண்டவர்களால், அவரைத் தொட்டு பேசியவர்களால்,  இயேசுவின் அற்புதங்களை கண்களால் கண்ட சீடர்களால் கிறிஸ்துவத்தின் அடிப்படை கோட்பாடுகள் முன்மொழியப்பட்டன.

  • இயேசுக் கிறிஸ்து யார்?
  • இயேசுவிற்கும் பழைய ஏற்பாட்டுக்கும் சம்மந்தம் என்ன?
  • கிறிஸ்தவ‌ சபை எப்போது ஆரம்பிக்கப்பட்டது? அதன் நோக்கமென்ன?
  • ஏன் சீடர்கள் இயேசுவுக்காக தங்கள் உயிரையும் தியாகம் செய்ய விரும்பினார்கள்?
  • போன்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் அந்த முதல் மூன்று ஆண்டுகளில் கிடைத்துவிடும். இந்த மூன்று ஆண்டுகளை ஆய்வு செய்யாதவர்கள், அடுத்த 30 ஆண்டுகள் பற்றி ஆய்வு செய்து என்ன பயன்?

செண்பகப்பெருமாள் செய்த முதல் தவறு, இயேசுவிற்கு பிறகு முதல் மூன்று ஆண்டுகளை, இயேசுவின் நேரடி சீடர்களை சரியாகப் புரிந்து கொள்ளாதது ஆகும். அதனால் தான் இப்படிப்பட்ட அரைகுறையான ஆய்வுகளை அவர் செய்து கொண்டு இருக்கிறார்.


கி.பி. 49 இல் பைபிளின் நடைமுறை கொள்கையில் மாற்றம் கொண்டுவர பவுல் விரும்பினார் என்று குற்றம் சாட்டுகிறார் திரு செண்பகப்பெருமாள். இவரிடம் நாம் கேட்க வேண்டிய கேள்விக‌ள்:

  • முதல் மூன்று ஆண்டுகளில் பைபிளின் நடைமுறை கொள்கை என்னவாக இருந்தது என்று உங்களால் விளக்க முடியுமா?
  • கி.பி. 49 காலகட்டத்தில் "பைபிளின் நடைமுறை கொள்கை" என்று நீங்கள் சொல்கிறீர்களே! இங்கு பைபிள் என்று எதனை குறிக்கிறீர்கள்? பழைய ஏற்பாட்டையா? பழைய ஏற்பாட்டின் நடைமுறை கொள்கை என்னவென்று உங்களுக்குத்தெரியுமா?
  • இயேசுவிற்கு பிறகு 19 ஆண்டுகளுக்கு பின்னால் நடந்தது என்ன என்று சொல்ல வந்துவிட்டீர்கள். முதல் மூன்று ஆண்டுகள் என்ன நடந்தது என்று உங்களால் சொல்ல முடியுமா?
  • கிறிஸ்தவம் என்ற இயக்கம் அல்லது மார்க்கம் ஏன் ஆரம்பிக்கப்பட்டது?
  • இயேசுவிற்கு பிறகு அந்த 11 சீடர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு இயக்கத்தை தொடங்க‌ வேண்டும் என்ற எண்ணம் எப்படி தோன்றியது?
  • அவர்கள் கிறிஸ்தவத்தை ஏதோ ஒரு லாபத்திற்காக தொடங்கியிருந்தால், அதற்காக ஏன் தங்கள் உயிர்களை அவர்கள் தியாகம் செய்தார்கள்?
  • ஏன் ஆதி கிறிஸ்தவர்கள், சீடர்கள் தங்கள் உயிர்களைக் காட்டிலும், தங்கள் கோட்பாடுதான் முக்கியம் என்று கருதினார்கள்? இயேசு தெய்வமில்லை என்று அவர்கள் நம்பியிருந்தால், ஏன் உயிரை இயேசுவிற்காக துச்சமாக மதித்தார்கள்?

போன்ற கேள்விகளுக்கு செண்பகப்பெருமாள் போன்றவர்களால் பதில் சொல்ல முடியாது. முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள், உண்மை புரியும், இவைகள் எல்லாம் பவுலடியார்  வில்லனாக இருந்த போது நடந்தவைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் என்னுடைய முதல் கட்டுரையில் சொன்னது போல, செண்பகப் பெருமாள் அவர்களுக்கு காலவரிசை குழப்பம் மிகவும் அதிகமாக உள்ளது. அவர் வேண்டுமென்றே காலங்களை வருடங்களைக் குழப்பி தன் குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டிருக்கிறார். இவருடைய இப்படிப்பட்ட வஞ்சகமான செயல்களை கிறிஸ்தவர்கள் சீக்கிரமாக கண்டு கொள்வார்கள்.

இவர் இன்னும் என்னவெல்லாம் எழுதி இருக்கிறார் என்பது குறித்து இப்போது பார்ப்போம்.

2) செண்பக பெருமாளின் ஆய்வை கிழித்தெறியும் கிறிஸ்து என்ற சொல்


மதம் என்ற அந்தஸ்தில் இருந்த யூதத்தை அதிலிருந்து வேறொரு நிலைக்கு மாற்றும் முயற்சியில் பவுல் ஈடுபட்டார் என்று இவர் குற்றம் சாட்டுகிறார். இவரது  வரியிலிருந்து நமக்கு புரிவது என்னவென்றால் இவருக்கு கிறிஸ்தவ சரித்திரம் தெரியவில்லை என்பதாகும். இயேசுவிற்கு பிறகு, சீடர்கள் யூத மதத்தை பின்பற்ற வில்லை, அப்படி அவர்கள் பின்பற்றி இருந்தால் அவர்களை ஏன் யூத மதத் தலைவர்கள் கொலை செய்வார்கள்? சீடர்களை ஏன் அவர்கள் ஊர் ஊராகத் துரத்துவார்கள்? பவுல் போன்றவர்கள் ஏன் ஒவ்வொரு திருச்சபையாக சென்று அவர்களைக் கொடுமைப் படுத்திக் கொண்டிருந்தார்கள்? இந்த அடிப்படை அறிவு அல்லது வித்தியாசத்தைக் கூட தெரிந்துக்கொள்ளக்கூடிய அளவிற்கு செண்பகப்பெருமாளின் மேதாவித்தனம் இடம்தரவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.


செண்பகப்பெருமாள் அவர்களே! தன் யூத‌மார்க்கத்தில் மிகவும் தீவிரமாக இருந்த சவுல் என்பவர், கிறிஸ்தவர்களும் அதே யூதமார்க்கத்தை பின்பற்றி இருந்திருந்தால், அவர்களை தன்  தலையில் வைத்துக் கொண்டாடி இருந்திருப்பாரே தவிர, அவர்களின் தலையை சீவ வாளை தூக்கி இருந்திருக்கமாட்டார்!

அதுவும் இயேசுவுக்கு பிறகு 19 ஆண்டுகள் கழித்து யூத மார்க்கத்தை வேறு ஒரு நிலைக்கு கொண்டுச் செல்ல முயன்றார் என்று நீங்கள் சொல்வது முட்டாள்தனமான வாதமாகும்.

கிறிஸ்து என்ற சொல்


அடுத்தபடியாக கிறிஸ்து என்ற சொல்லை குறித்து செண்பகப் பெருமாள் அவர்கள் வைத்த குற்றச்சாட்டுகளை காண்போம். இதனைக் குறித்து இன்னும் விவரமாக அவருடைய புத்தகத்தில் அவர் எழுதிய இரண்டாம் பாகத்திற்கான பதில்களில் காண்போம். ஆனால் இப்போது அதனை அவர் குறிப்பிட்டு இருக்கின்றபடியால், அது குறித்து ஒரு சுருக்கமான‌ பதிலைக் காண்போம்.


"மதங்களை விட மாறுபட்ட ஒன்றை கிறிஸ்து என்ற ஒரு சொல் மூலமாக பவுல் அறிமுகப்படுத்தினார்", என்று செண்பகப் பெருமாள் எழுதுவது அறியாமையின் உச்சக்கட்டம் ஆகும்.  இந்த சொல்லுக்கு மக்களிடையே பேதங்கள் காட்டக்கூடாது என்ற‌ பொருள் இருந்ததாம். இந்தக் கொள்கை அல்லது இந்த வார்த்தை இஸ்ரேலிய யூத சமூகத்துக்கு புதிதான வார்த்தையாம்.


இவைகள் எல்லாம் படிக்கும்போது, செண்பகப் பெருமாள் அவர்கள் மீது பரிதாபம் கொள்ளாமல் இருக்க முடியாது. ஏனென்றால் இவைகளெல்லாம் அவருடைய சொந்தக் கற்பனைகள், அவர் வேண்டுமென்றே சொல்லும் பொய்கள்.


எபிரேய‌ மொழிக்கும் கிரேக்க மொழிக்கும் வித்தியாசம் தெரியாத நபராக செண்பகப் பெருமாள் காணப்படுகிறார். எபிரேய மொழியில் "மேசியா" என்ற வார்த்தை கிரேக்க மொழியில் "கிறிஸ்து" என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த அடிப்படை அறிவு இல்லாத இவர் எப்படி இப்படிப்பட்ட விமர்சனங்களை முன் வைக்கிறார் என்று தெரியவில்லை.

மேசியா அல்லது கிறிஸ்து என்ற வார்த்தைக்கு அபிஷேகம் செய்யப்பட்டவர் என்று பொருள். இயேசுவின் காலத்திலேயே இவ்வார்த்தையின் பொருளை பல நூற்றாண்டுகளாக யூதர்கள் நன்றாக அறிந்திருந்தார்கள். ஆனால் செண்பகப் பெருமாள், தான் கி.மு. காலத்திலேயும் கி.பி. காலத்திலேயும் யூதர்களோடு இருந்தவர் போன்று எழுதிக் கொண்டிருக்கிறார், என்ன ஒரு முட்டாள்தனம்! என்ன ஒரு வஞ்சக மன‌தைரியம்!


இந்த வார்த்தை இஸ்ரேலிய யூத சமூகத்துக்கு புதிது? என்று எழுதிய இந்த வார்த்தைகளில் இருந்தே இவருடைய ஆய்வுகளின் இலட்சனம் வெளிப்பட்டு விட்டது! இயேசு வாழ்ந்த கி.பி. 30க்குள் ஒரு யூதனிடம் சென்று, உனக்கு கிறிஸ்து என்ற வார்த்தை தெரியாது என்று யாராவது சொன்னால், அவன் முகத்தின் மீது அந்த யூதன் உமிழ்வான்.

கிறிஸ்து என்ற வார்த்தை யூதர்களுக்கு புதிதல்ல

இயேசுவிற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே "மேசியா" என்ற வார்த்தையும், அதன் கிரேக்க மொழியாக்கமாகிய "கிறிஸ்தோஸ்" என்ற வார்த்தையும் யூதர்களுக்கு அறிமுகம் செய்தாகிவிட்டது. இரண்டாம் சங்கீதத்திலும், ஏசாயா புத்தகத்திலும், தானியேல் புத்தகத்திலும்  பயன்படுத்தப்பட்டுள்ளது. இயேசுவுக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே, எபிரேய மொழியிலிருந்து கிரேக்க மொழிக்கு பைபிளின் பழைய ஏற்பாட்டு நூல்கள் மொழியாக்கம் செய்யப்பட்டுவிட்டன‌. அந்த மொழியாக்கத்தை செப்டாஜிண்ட்(Septuagint) என்று கூறுவார்கள், அதில் மேசியா என்ற வார்த்தை, கிறிஸ்து என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.  இந்த விவரம் செண்பகப்பெருமாளின் ஆய்விற்கு மரண அடியாகும்.

கி.மு. 2ம் நூற்றாண்டில் செய்யப்பட்ட கிரேக்க மொழியாக்கத்திலிருந்து(செப்டாஜிண்ட்டின்) சில உதாரணங்கள்:

ஏசாயா 45:1


மூலம்: Septuagint - Isaiah 45:1 (Greek Transliteration in English)

மூலம்: Isaiah 45:1 – Septuagint - Greek (Transliteration)

தானியேல் 9:26

 

 

மூலம்: Daniel 9:26 – Septuagint - Greek

சங்கீதம் 2:2

மூலம்: Psalms 2:2 – Septuagint - Greek

விக்கிபீடியா கிறிஸ்தோஸ் கிரேக்க வார்த்தை

மூலம்: Wikipedia – Greek - Christos

கிரேக்க அகராதி

Greek Strong - studybible.info/strongs/G5547

கிறிஸ்து என்ற வார்த்தை இயேசுவிற்கு முன்பு இன்னும் சிலருக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் யூத மதத் தலைவர்கள், யோவான் ஸ்நானகனிடம் வந்து, "நீ மேசியாவா?" என்று கேட்டார்கள் அதாவது "நீ கிறிஸ்துவா?" என்று கேள்வி கேட்டார்கள். இதன்படி பார்த்தால் மேசியா அல்லது கிறிஸ்து என்ற வார்த்தை, யூதர்கள் நன்கு அறிந்த வார்த்தையாகும். செண்பகப் பெருமாள் சொல்வதெல்லாம் சுத்த பொய்யான குற்றச்சாட்டுக்கள் ஆகும்.

இன்னொரு கேள்வி: கிறிஸ்து என்ற வார்த்தை மதம் சாராத வார்த்தை என்று உங்களுக்கு சொன்னவர் யார்? எப்படி இதனை அறிந்துக்கொண்டீர்கள்?

"கிறிஸ்து" என்ற வார்த்தையை பவுல் தான் அறிமுகம் செய்தார், இது அதற்கு முன்பு யூதர்கள் அறியாத வார்த்தை என்று செண்பகப்பெருமாள் சொல்வது, படித்தறிந்த அறிஞர்களை ஏமாற்ற  முயலும் செயலாகும் என்பதை வாசகர்கள் அறியவேண்டும். இந்திய மக்களின் காதுகளில் பூ வைக்க செண்பகப்பெருமாள் போன்று அனேகர் கிளம்பி இருக்கிறார்கள்.


3) கிறிஸ்து என்ற வார்த்தை மொழியாக்கங்களில் மேலதிகமாக சேர்க்கப்பட்டதா?


பைபிள் மொழியாக்கம் செய்தவர்கள் கிறிஸ்து என்ற வார்த்தையை மேலதிகமாக சேர்த்தார்கள் என்று செண்பகப்பெருமாள் குற்றம் சாட்டுகின்றார்.


செண்பகப்பெருமாள் எழுதியவைகள்:
•    பிற்காலத்தில் பல மொழிகளில் மொழியாக்கம் செய்தவர்கள், 'இயேசு' என்ற பெயருக்கு முன்னாலும், பின்னாலும் 'கிறிஸ்து' என்பதை சேர்த்துக்கொண்டார்கள்.
•    இதனால், மேரியின் மகன் இயேசுவிற்கும், கிறிஸ்துவுக்கும் வேறுபாடு காட்ட‌முடியாமல் போகும் நிலை ஏற்பட்டது


இவர் எவ்வளவு பெரிய  வஞ்சகர் என்பதை துள்ளியமாக உணர்த்தும் விவரம் இது. அதாவது, புதிய ஏற்பாட்டை கிரேக்க மொழியிலிருந்து மற்ற மொழிகளில் மொழியாக்கம் செய்பவர்கள் மீது இந்த குற்றச்சாட்டை சொல்பவராகிய இவர் என்ன செய்திருக்கவேண்டும்?


தன் குற்றச்சாட்டை நிருபிக்கும் வண்ணமாக இவர் கீழ்கண்ட ஆதாரங்களை முன் வைத்திருக்கவேண்டும்:


1)    கிரேக்க மூல வசனங்களில் எங்கேயெல்லாம் "இயேசு" என்று மட்டும் வருகிறது என்பதை பட்டியலிடவேண்டும்.
2)    அடுத்த படியாக, எந்தெந்த மொழியாக்கங்களில் "கிறிஸ்து" என்ற வார்த்தை "இயேசு" என்ற வார்த்தையோடு தேவையில்லாமல், மொழியாக்கம் செய்தவர்கள் சேர்த்துள்ளார்கள் என்று பட்டியலிடவேண்டும்.


இவ்விரண்டையும் செண்பகபெருமாள் செய்யவில்லை.


இவர் தம்முடைய புத்தகத்தில் எந்த ஒரு இடத்திலும், மேற்கண்ட ஆதாரங்களை கொடுக்கவில்லை. ஒரே ஒரு வசனத்தை கூட இதற்காக இவர் மூல மொழியோடு சேர்த்து ஆதாரம் காட்டவில்லை. திரு செண்பகப்பெருமாள் அவர்களே, உங்கள் முகமூடி கொஞ்சம் கொஞ்சமாக கிழிக்கப்படுகிறது. இனியும் இப்படி ஆதாரமற்ற விவரங்களைச் சொல்லி பைபிளை குற்றப்படுத்த முயன்றால், அதைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க, கிறிஸ்தவர்கள் பாமர மக்கள் அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். (2007ம் ஆண்டிலிருந்து  தமிழ் கிறிஸ்தவர்கள் எப்படியெல்லாம் இஸ்லாமியர்களின் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு பதில்களை கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை தமிழ் நாட்டின் புகழ்பெற்ற முஸ்லிம் அறிஞர்களை கொஞ்சம் கேட்டுப்பாருங்கள், அப்போது உங்களுக்கு தமிழ் கிறிஸ்தவர்களின் பதில் சொல்லும் பாணியும், திறமையும் உங்களுக்கு புரியும்).


செண்பகபெருமாள் கேள்வி எழுப்பிய "கொலோசேயர் 1:25-27   & ரோமர் 1:2-5" வசனங்களுக்கு அடுத்தடுத்த பதில்களில் தேவையான இடத்தில் பதில்களைப் பார்ப்போம்.

முடிவுரை:


இதுவரை, செண்பகப்பெருமாள் அவர்கள் எழுதிய புத்தகத்தின்  முகவுரையின் சில பத்திகளுக்கு (2-5) பதில்களைக் கண்டோம். திரு செண்பகப்பெருமாள் ஒரு பொய்யார், மக்களை தன் வஞ்சகமான வார்த்தைகளால் ஏமாற்ற முயலும் ஒரு கள்ள உபதேசம் செய்பவர். "மதம் சாரா ஆன்மீகம்" என்ற பெயரில் கிறிஸ்தவத்தை குற்றப்படுத்த முயலும் ஒரு குழப்பவாதி. இவரது குற்றச்சாட்டுகளில் நேர்மையில்லை, இவர் ஒரு அரைகுறை ஆய்வாளர் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. இவரது பொய்யான  குற்றச்சாட்டுக்களுக்கு சரியான பதில்களைச் சொல்வது ஒரு கிறிஸ்தவனாக என்னுடைய கடமையாக உள்ளது.


நம்முடைய அடுத்த பதிலில், செண்பகப்பெருமாள் அவர்களுக்கு ஒரு ஆங்கில பத்தியை கூட சரியாக படித்து புரிந்துக்கொள்ளக்கூடிய அளவுக்கு அறிவு இல்லை என்பதை நிருபிக்கப்போகிறோம்.

கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவிற்கு மகிமையாக இத்தொடர் பதில்கள் அமையவும், மக்களின் அறியாமை அகலவும், செண்பகப்பெருமாள் போன்றவர்களின் வஞ்சக வலையில் மக்கள் விழாமல் இருக்கவும் வேண்டிக்கொள்கிறேன். சத்தியம் ஜெயிக்கும், பொய்கள் அழிந்துப்போகும்.


"செண்பகப்பெருமாளின் பொய்களும் இயேசுவின் வெற்றியும்" - தொடர் பதில்கள்

உமரின் மறுப்புக்கள்/கட்டுரைகள்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/answering_ssp/answer-ssp5.html


திங்கள், 1 ஏப்ரல், 2019

யார் முதலாவது வந்தார்கள்? ஜோசப் ஸ்மித்தா அல்லது முஹம்மதுவா?

19வது நூற்றாண்டில், ஜோசப் ஸ்மித் (Joseph Smith) என்ற பெயருடைய ஒரு நபர் ஒரு தரிசனத்தை காண்கிறார். ஒரு தேவதூதன் அவரை சந்தித்து, ஒரு புதிய மதத்தை உருவாக்கும் படி சொன்னான். ஏன் புதிய மதம்? ஏனென்றால் முந்தைய மதங்கள் அனைத்தும் கெடுக்கப்பட்டுவிட்டன‌, எனவே உலகத்துக்கு ஒரு புதிய மதம் தேவைப்படுகிறது என்று அந்த தூதன் கட்டளையிட்டான், என்று ஜோசப் ஸ்மித் கூறினார்.

இதோடு மட்டுமில்லாமல், அவருக்கு ஒரு புதிய புத்தகமும் அதாவது வேதமும் கொடுக்கப்பட்டது, அதன் பெயர் "Book of Mormon (மர்மொன் புத்தகம்)" என்பதாகும்.  இந்தப் புத்தகம், முந்தைய அனைத்து வேதங்களையும் தள்ளுபடி செய்கிறது என்று கூறினார்.

இந்த ஜோசப் ஸ்மித் என்பவர், மோசே மற்றும் எலியா போன்ற தீர்க்கதரிசிகளின் வழியாக வந்த கடைசி தீர்க்கதரிசி என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

இவர் உருவாக்கிய புதிய மதமாகிய "மர்மொன்" என்ற மதம், அமெரிக்காவில் அதிவேகமாக வளர்ந்து வரும் ஒரு மதமாக உள்ளது. 2014 ஆம் ஆண்டின் கணக்குப்படி, 1,60,00,000 மக்கள் இதனைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். 2080ல் இவர்களின் வளர்ச்சி 2,50, 00,000 ஆக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால், ஒரு நிமிடம் நில்லுங்கள்.
உலகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் ஜோசப் ஸ்மித்தின் மதத்தை கண்டு சிரிக்கிறார்கள். ஏன்?

ஏனென்றால், ஜோசப் ஸ்மித் என்பவருக்கு முன்பாகவே, இஸ்லாம் உலகில் வந்துவிட்டது, மேலும் இவர் செய்த அதே உரிமை பாராட்டலை, முஹம்மதுஏற்கனவே செய்துவிட்டார். முஹம்மதுவிற்கு  பின்பு ஜோசப் ஸ்மித் என்பவர் வந்ததால், இவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்றும், பொய்யர் என்றும் முஸ்லிம்கள் முத்திரை குத்துகிறார்கள்.

முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, முஹம்மது தீர்க்கதரிசிகளுக்கு முத்திரையாக இருக்கிறார், அதாவது அவர்தான் உலகத்தின் கடைசி தீர்க்கதரிசியாக இருக்கிறார்.  அதேபோல, குர்ஆன் தான் உலகத்தின் கடைசி வேதமாக இருக்கிறது, ஏனென்றால் முந்தைய வேதங்கள் அனைத்தும் கெடுக்கப்பட்டுவிட்டன‌. எனவே கடைசியாக குர்ஆன் வெளிப்பட்டது. ஆகையால் இஸ்லாம் தான் உண்மையான மதம் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.  ஒரு முக்கியமான விஷயம், மர்மொன் என்ற மதம் அமெரிக்காவிலே அதிவேகமாக வளருகிறது என்பதினால் அது உண்மையான மதமாக இருக்க முடியாது என முஸ்லிம்கள் கூறுகிறார்கள். ஆகையால் ஜோசப் ஸ்மித் என்பவர் ஒரு பொய்யர் என்று முஸ்லிம்கள் அவரை புறக்கணிக்கிறார்கள்.  

சரி, இருக்கட்டும் இதற்கு  என்ன பிரச்சனை இப்போது என்று கேட்கத்தோன்றுகிறதா? இன்னும் ஒரே நிமிடம், பொறுமையாக இருங்கள் விடை கிடைத்துவிடும்.

இயேசு கிறிஸ்து, ஒரு உவமையின் மூலம் "தாம் கடைசியாக வந்தவர்" என்று சொன்னார்.

  • "கடைசியிலே அவன் (தேவன்): என் குமாரனுக்கு அஞ்சுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை (இயேசுவை) அவர்களிடத்தில் அனுப்பினான்." (மத்தேயு 21:37)* அடைப்பிற்குள் இருப்பவைகளை நான் எழுதினேன்
  • அவரை(இயேசுவை) பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார்(யோவான் 6:27)
  • "நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்ததுண்டு." (மத்தேயு 11:13)
  • தேவனுடைய வருகைக்கு வழியை ஆயத்தம் செய்யும்படி யோவான் ஸ்நானகன் அனுப்பப்பட்டான் (மல்கியா  3:1 & மாற்கு  1:12).
  • "உலக மக்களுக்கு தேவனுடைய இராஜ்ஜியத்தின் நற்செய்தியை கொடுக்க  இயேசு உலகில்  வந்தார் "(யோவான் 5:39-40, 10:10).


உங்களுக்கு (இயேசுவிற்கு) பிறகு யாராவது வரவேண்டியுள்ளதா?  என்ற கேள்வி இயேசுவிடம் கேட்கப்பட்டடது.

  • "வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக்காத்திருக்கவேண்டுமா? என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான்."  (மத்தேயு 11:3)

இந்த கேள்விக்கு இயேசு பதில் அளிக்கும் போது, தாம் செய்துக்கொண்டு இருக்கும் அற்புதங்கள், மற்றும் அடையாளங்களை பட்டியலிடுகிறார், இதன் மூலமாக, தனக்கு பிறகு இன்னொருவர் வரவேண்டிய அவசியமில்லை என்று இயேசு சொல்கிறார்.

  • இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடத்தில் போய் அறிவியுங்கள்;  குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள்; தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது.  என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார். (மத்தேயு 11:4-6)

பைபிள் மாற்றப்பட்டுவிட்டது என்று முஸ்லிம்கள் சொல்கிறார்களே, இது பற்றி என்ன? அதே போல, ஜோசப் ஸ்மித் குர்‍ஆனும் முந்தைய  வேதங்களும் மாற்றப்பட்டுவிட்டது  என்கிறாரே இது பற்றி  என்ன?  ஜோசப் ஸ்மித்தின் இந்த வாதத்தை முஸ்லிம்களிடம் கூறினால், "இல்லை, இல்லை, குர்‍ஆன் மாற்றப்படவில்லை, ஏனென்றால், குர்‍ஆனை மாற்றமுடியாது என்று  குர்‍ஆனே சொல்கிறது" என்ற பதிலைச் சொல்வார்கள்.

  • ". . .அவனுடைய வார்த்தைகளை மாற்றுவோர் எவரும் இல்லை . . ." (குர்‍ஆன்  6:115)

ஓ.. அப்படியானால், பைபிளும் இதே போலச் சொல்கிறதே! இதற்கு முஸ்லிம்களின் பதில்  என்ன? 

  • . . . நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல்லென்று உரைத்தது. (ஏசாயா 40:8)

இயேசு தம்முடைய  வார்த்தைகள் பற்றி கூறும் போது:

  • வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. (மாற்கு 13:31)

கிறிஸ்தவம் தான் உண்மையான மார்க்கம் என்று பைபிள் கூறுகின்றதா?

மத்தேயு (13:24-29 & 36-43) வசனங்களின் படி, இயேசு ஒரு உவமையின் மூலமாக, இராஜ்ஜியத்தின் மக்களாகிய உண்மை கிறிஸ்தவர்கள், நல்ல விதைகளாக அவரால் உலகில் விதைக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறுகிறார்.

அதன் பிறகு, சாத்தான் வந்து கெட்ட விதைகளை நல்ல விதைகளுக்கு மத்தியில் விதைத்தான். (அவைகள் தான் மர்மொன் மற்றும் இஸ்லாம் போன்ற மதங்களாகிய களைகள் என்று இயேசு கூறுகிறார்).  இதில் என்ன ஆச்சரியம் என்றால், இந்த  களைகள் மிகவும் வேகமாக  வளருகின்றது என்று இயேசு சொல்கிறார். (அமெரிக்காவில் மர்மொன் வேகமாக வளரும் மதம், இஸ்லாம் உலகில் வேகமாக வளரும் மதமென்று சொல்கிறார்கள்).

கடைசியில், இயேசு திரும்ப வரும் போது, இந்த களைகள் பிடுங்கப்பட்டு அக்கினியில் போடப்படும் என்று இயேசு தன் உவமையை முடித்தார்.

  • மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து, அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன். (மத்தேயு 13:41-43)

கிறிஸ்தவத்திற்கு  பிறகு வரும் புத்தகங்கள் (குர்‍ஆன் & மர்மொன் புத்தகம்), தீர்க்கதரிசிகள் (முஹம்மது & ஜோசப் ஸ்மித்), மதங்களைப்  பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை கவனித்தீர்களா?

  • வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். (கலாத்தியர் 1: 7,8,9)

அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14:6)


மூலம: http://www.faithbrowser.com/whos-first/


ஃபெயித் ப்ரவுசர் தள  இதர கட்டுரைகள்
உமரின் கட்டுரைகள் பக்கம்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/faith_browser/whos-first.html


முதலில் வந்தது எது? பைபிளா அல்லது குர்‍ஆனா?

ஒருவேளை, நான்  நாளை காலை எழுந்தவுடன்:


"எனக்கு ஒரு தேவதூதன் காணப்பட்டான், ஒரு புத்தகத்தை எழுதும்படி சொன்னான், அந்த புத்தகத்தின் வசனங்களை தானே இறைவனிடமிருந்து கொண்டு வருவதாகச் சொன்னான்.  அது பரிசுத்த புத்தகமாகும். அது முழு உலகத்திற்கும் இறைவனால் அனுப்பப்பட்ட  கடைசி வேதம் ஆகும்"

என்று அந்த தேவதூதன் சொன்னான் என்று நான் ஒரு அறிக்கையை வெளியிட்டால் எப்படி இருக்கும்?  நான் சொல்வதை நீங்கள் நம்புவீர்களா?

நீங்கள் என்னை பார்த்து சிரிப்பீர்கள்! நான் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று பட்டம் கட்டி விடுவீர்கள். ஒருவேளை, நான் பிடிவாதமாக திரும்பத் திரும்ப அதையே சொல்லிக் கொண்டிருந்தால், நான் சொல்வதை நம்பும்படியாக ஏதாவது சான்றுகளை காட்டும்படி என்னிடம் கேட்பீர்கள்.   அதாவது  "நான் ஒரு தேவதூதனை சந்தித்தேன்" என்பதற்கு சான்றுகளை கேட்பீர்கள். 

"இப்படி சான்றுகளை கேட்க‌க் கூடாது, நான் ஒரு தேவதூதனை சந்தித்தேன் என்று சொல்லும்போது, அதனை நீங்கள் நம்ப‌வேண்டும்" என்று நான் சொன்னால், என்னை ஒரு பைத்தியக்காரன் என்று  முடிவு செய்துவிடுவீர்கள் அல்லவா?

ஒரு பேச்சுக்காக நான் சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உடனே நீங்கள் நான் எழுதிய புத்தகத்தைப் படித்து பார்ப்பீர்கள். அதனை படிக்கும்போது முஸ்லிம்களின் வேதமாகிய குர்ஆனுக்கு முரண்படும் அனேக விவரங்கள் அதில் சுட்டிக்காட்டுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். 

"என்னுடைய இந்த புத்தகத்தை மட்டுமே நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் நேர் வழி, இது தான் வேதம், உங்களின் முந்தைய வேதமாகிய குர்ஆனை நீங்கள் புறக்கணிக்க வேண்டும்முஸ்லிம்களுக்கும் மற்றுமுள்ள அனைத்து மக்களுக்கும் இது தான் வேதம்" என்று உங்களிடம் நான் சொன்னால், நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? நிச்சயமாக ஏற்றுக் கொள்ளமாட்டீர்கள் அல்லவா? ஏனென்றால் என்னுடைய புத்தகத்தில் சொன்ன விவரங்களுக்கு சான்றுகளை நான் காட்டினால் தான் என் கருத்துக்கள் உண்மையானவைகளாக கருதப்படும்.

உடனே நான், என் புத்தகத்தில் சொன்னவைகள் தான் உண்மையானவைகள். என் புத்தகத்தில் சொல்லப்பட்ட விவரங்கள் குர்ஆனுடன் முரண்படுகிறது என்றால், குர்‍ஆன் மாற்றப்பட்டுவிட்டது என்று பொருள், அதை முஸ்லிம்கள் மாற்றிவிட்டார்கள் அதனால் தான் அது என் புத்தகத்திற்கு மாறுபடுகிறது என்று நான் சொன்னால், இதை ஏற்றுக் கொள்வீர்களா நீங்கள்?  நிச்சயமாக ஏற்கமாட்டீர்கள்! மேலும் இது ஒரு மடமையான கருத்து என்பீர்கள் அல்லவா! அறிவுடையோர் யாரும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று சொல்வீர்கள் தானே!

அதாவது, நான் ஒரு புதிய வேதத்தைக் கொண்டு வந்தால், குர்ஆனுக்கு முரணாக சொல்லப்பட்ட ஒவ்வொரு கருத்துக்கும் சரியான சான்றுகளை நான் தயாராக வைத்துக் கொண்டிருக்க வேண்டுமே தவிர, குர்ஆனை நான் குற்றப்படுத்தக்கூடாது. இதனை யாருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நான் கொண்டு வந்த புத்தகம் உண்மையானது என்பதை நிரூபிப்பதற்கு இதற்கு முன்பாக வந்த குர்ஆன் மாற்றப்பட்டது என்று சொல்வது முட்டாள்தனமாகும்.

கடைசியாக வந்த என்னுடைய புத்தகத்தின் கருத்துக்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு, குர்ஆனை நியாயம் தீர்க்கக் கூடாது. இதற்கு பதிலாக, என்னுடைய புதிய புத்தகத்தை, இதற்கு முன்பு வந்த குர்ஆனின் கருத்துக்களின் அடிப்படையில் தான் நியாயம் தீர்க்க வேண்டும். ஒருவேளை, குர்ஆனுக்கு பின்பு வந்த என்னுடைய புத்தகமானது, குர்ஆனுக்கு முரண்படுமானால், என்னுடைய புத்தகம்தான் தவறானதாக கருதப்பட வேண்டுமே தவிர, குர்ஆன் தவறானது என்று சொல்லக்கூடாது. ஏனென்றால் முதலாவது குர்ஆன் வந்தது அதன் பிறகுதான் நான் ஒரு புதிய புத்தகத்தை அறிமுகம் செய்தேன். ஆகையால் குர்ஆனை அடிப்படையாகக் கொள்ள வேண்டும், என்னுடைய புது வேதத்தை குர்ஆனைக் கொண்டு சரிபார்க்க வேண்டும்.

சான்றுகளை யார் கொண்டு வர வேண்டும்? (The Burden Of Proof)

கிறிஸ்துவுக்குப் பின் ஏழாம் நூற்றாண்டில், குர்ஆன் எழுதப்பட்டது. மக்கா என்னும் பாலைவன நகரில் ஒரு மனிதர், தன்னை ஒரு தேவதூதன் சந்தித்தான் குர்ஆன் வசனங்களை இறக்கினான் என்று சொன்னார். இப்படி நடக்கவில்லை என்று நான் சொல்ல வரவில்லை, ஆனால், என்னுடைய கேள்வி என்னவென்றால் "ஒரு தூதன் முஹம்மதுவை சந்தித்தான், என்பதற்கு சான்று என்ன? இதனை யார் சரி பார்ப்பது? முஹம்மதுவை ஒரு தூதன் சந்தித்தான் என்பதை நாம் எப்படி அறிந்து கொள்வது"? ஒரு தூதன் முஹம்மதுவை சந்தித்தான் என்பதற்கு முஹம்மதுவை தவிர வேறு யாருமே கண்கண்ட சாட்சி இல்லையே! உண்மையாகவே, அப்படிப்பட்ட ஒரு சந்திப்பு நடந்ததா? என்பதற்கு எந்த ஒரு சான்றும் இல்லை. இது மட்டுமல்ல, தன்னுடைய வாதத்திற்கு ஆதாரமாக முஹம்மது எந்த ஒரு அற்புதத்தையும் செய்து காட்டவில்லை. உதாரணத்திற்கு முந்தைய தீர்க்கதரிசிகளாகிய‌ மோசேயும், எலியாவும் இன்னும் இதர தீர்க்கதரிசிகளும் செய்து காட்டியது போல அற்புதங்களை முஹம்மது செய்து காட்டவில்லை.

முஹம்மது எந்த ஒரு அற்புதத்தையும் செய்து காட்டாமலேயே, குர்ஆன் என்ற ஒரு புத்தகத்தை இறைவேதம் என்று சொல்லி அறிமுகம் செய்தார். அந்த குர்ஆனில் முந்தைய வேதங்களாகிய தோரா ஜபூர் மற்றும் இன்ஜிலுக்கு எதிரான கருத்துக்கள் உள்ளன. அதாவது பைபிளுக்கு முரணான அநேக கருத்துக்கள் குர்ஆனில் உள்ளன. பைபிள் எழுதப்பட்ட காலக்கட்டம், கி. மு. 1400 லிருந்து கி.பி. 95 வரைக்கும் ஆகும்.  மேலும் முஹம்மதுவுக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பே பரிசுத்த பைபிள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அக்காலத்தில் இருந்த அநேக நாடுகளில், பரவலாக பயன்படுத்தப்பட்டு கொண்டு இருந்தது. இருந்தபோதிலும் ஏழாம் நூற்றாண்டில் வந்த குர்ஆனை வைத்துக் கொண்டு, முஸ்லிம்கள் பைபிள் மாற்றப்பட்டு விட்டது என்று குற்றம்சாட்டி கொண்டிருக்கிறார்கள். இதற்கு பதிலாக முஸ்லிம்கள், குர்ஆன் சொல்வது தான் உண்மை என்று சான்றுகளை சேகரித்து கொடுத்திருக்கலாம். இது மட்டுமல்ல, முஹம்மது கூட முந்தைய வேதங்கள் திருத்தப்பட்டுவிட்டன என்று சொல்லவில்லை, முந்தைய வேதங்களில் உள்ளவைகள் தொலைந்து விட்டன என்றும் அவர் சொல்லவில்லை, அதற்கு பதிலாக குர்ஆனில் பல இடங்களில் முந்தைய வேதங்களை புகழ்ந்து தான் வசனங்கள் காணப்படுகின்றன. முந்தைய வேதங்கள் நேர்வழி என்றும், வெளிச்சம் என்றும் இறைவனின் சத்தியம் என்றும் குர்-ஆன் சொல்கிறது.

இதுவரை கண்ட விவரங்களின் படி, குர்ஆனைக் கொண்டு நீங்கள் பைபிளை சரி பார்க்க முடியாது அல்லது நியாயம் தீர்க்க முடியாது. அதற்கு பதிலாக, பைபிளைக் கொண்டு தான் நீங்கள் குர்ஆனின் நம்பகத்தன்மையையும் தெய்வீகத்தன்மையையும் சோதித்துப் பார்க்க வேண்டும்.  குர்‍ஆனின் நம்பகத்தன்மையை சரி பார்க்க‌, பைபிள் தான் அடிப்படையாக இருக்க வேண்டும்.


கிறிஸ்துவத்திற்கு பல நூற்றாண்டுகளுக்கு பிறகு இஸ்லாம் வந்தது. ஆகையால் சான்றுகளைக் கொண்டு வர வேண்டியது இஸ்லாமின் மீது விழுந்த கடமையாகும், முஸ்லிம்களின் மீது விழுந்த கடமையாகும். அது கிறிஸ்தவர்களின் மீது விழுந்த கடமை அல்ல. பைபிள் தான் குர்ஆனை பரிசோதிக்கிறது. குர்ஆன் உண்மையான வேதமா இல்லையா என்பதை பைபிளின் போதனைகள், கோட்பாடுகள் தான் முடிவு செய்யும். பைபிளும் மற்றும் குர்ஆனும் ஒன்றையொன்று முரண்படுமானால், முந்தைய வேதமாகிய பைபிளுக்கு தான் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். கடைசியாக குர்ஆன் வந்த படியினாலே, தன்னுடைய கருத்துக்களுக்கு சரியான ஆதாரங்களையும் சான்றுகளையும் கொண்டு வந்து தன்னுடைய நம்பகத்தன்மையை நிரூபித்துக்கொள்ளவேண்டியது குர்‍ஆனின் கடமையாகும்.  அப்படி குர்‍ஆன் கொண்டுவரவில்லையென்றால், அது ஒரு பொய்யான புத்தகம் என்று முடிவு செய்யப்படவேண்டும். 

மூலம்: http://www.faithbrowser.com/bible-or-quran/


ஃபெயித் ப்ரவுசர் தள  இதர கட்டுரைகள்
உமரின் கட்டுரைகள் பக்கம்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/faith_browser/bible-or-quran.html