ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வியாழன், 28 நவம்பர், 2019

குர்‍ஆனில் எத்தனை வசனங்களை அல்லாஹ் இரத்துசெய்துள்ளான்? இஸ்லாமிய அறிஞர் ஸுயுதியின் பட்டியல்

இரத்து செய்தல்(அரபியில்: நஸ்க்ஹ்) என்றால், அல்லாஹ் குர்‍ஆனில் இறக்கிய முந்தைய வசனங்களை வேறு புதிய வசனங்களைக் கொண்டு இரத்து செய்வதாகும்.

இதனை அல்லாஹ் கீழ்கண்டவாறு கூறுகின்றான்:

குர்‍ஆன் 2:106. ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா? 

குர்‍ஆன் 16:101. (நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) "நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்" என்று அவர்கள் கூறுகிறார்கள்: எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள்.

(முஹம்மது ஜான் குர்‍ஆன் தமிழாக்கம்)

குர்‍ஆன் வசனங்களை இரத்து செய்தல்  பற்றிய முந்தைய கட்டுரைகளை கீழ்கண்ட  தொடுப்புக்களில் படிக்கலாம்.

குர்‍ஆனில் இரத்து செய்யப்பட்ட வசனங்கள் எத்தனை உள்ளன? 

இந்த கேள்விக்கு முஸ்லிம் அறிஞர்கள் ஒருமித்த பதிலைச் சொல்வதில்லை. கீழ்கண்ட‌ பட்டியலைப் பாருங்கள், ஒவ்வொரு அறிஞரும் வெவ்வேறு விதமான எண்ணிக்கையை கொடுத்துள்ளார்கள்.

எண்

இஸ்லாமிய அறிஞர்கள்

இரத்து செய்யப்பட்ட குர்‍‍ஆன் வசனங்களின் எண்ணிக்கை

1ஸுயுதி (al-Suyuti)21
2ஜுஹ்ரி (al-Zuhri)42
3நஹஸ் (al-Nahhas)138
4இப்னு அதைய்கி (Ibn 'Ata'iqi)231
5இப்னு ஸலம (Ibn Salama)238
6ஃபர்ஸி (al-Farsi)

248

 

இப்னு அதைய்கி (Ibn 'Ata'iqi) என்ற அறிஞர் 231 வசனங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன என்று சொல்லிவிட்டு, இன்னும் 26 வசனங்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும்வகையில் உள்ளன என்கிறார்.

இஸ்லாமிய அறிஞர் ஸுயுதி குறிப்பிட்ட இரத்து செய்யப்பட்ட வசனங்கள்

இந்த கட்டுரையில் இஸ்லாமிய அறிஞர் ஸுயுதி அவர்கள் குறிப்பிட்ட அந்த 21 இரத்து செய்யப்பட்ட வசனங்களையும், அவைகளை இரத்து செய்த வசனங்களையும் ஒரு பட்டியலாக காண்போம்.

எண்

Abrogated (Mansūkh)

இரத்து செய்யப்பட்ட வசனங்கள்

Abrogator (Nāsikh)

இரத்து செய்த வசனங்கள்

1

2:115. கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்); நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்; எல்லாம் அறிந்தவன்.

2:144. (நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்; எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்; ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை.

2

2:180. உங்களில் எவருக்கு மரணம் நெருங்கி விடுகிறதோ அவர் ஏதேனும் பொருள் விட்டுச் செல்பவராக இருப்பின், அவர் (தம்) பெற்றோருக்கும், பந்துக்களுக்கும் முறைப்படி வஸிய்யத்து (மரண சாஸனம்)செய்வது விதியாக்கப்பட்டிருக்கிறது; (இதை நியாயமான முறையில் நிறைவேற்றுவது) முத்தகீன்கள்(பயபக்தியுடையோர்) மீது கடமையாகும்.

4:7. பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு; அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு - (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே; (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்.

3

2:183. ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்.

2:187. நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்; நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்; அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்; எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்; இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்-இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்; அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்; இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.

4

2:184. (இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்); ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்; எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்).

2:185. ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).

5

2:217. (நபியே!) புனிதமான (விலக்கப்பட்ட) மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: "அக்காலத்தில் போர் செய்வது பெருங் குற்றமாகும்; ஆனால், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதும், அவனை நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமுக்குள் (வரவிடாது) தடுப்பதும், அங்குள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும் (-ஆகியவையெல்லாம்) அதைவிடப் பெருங் குற்றங்களாகும்; ஃபித்னா (குழப்பம்) செய்வது, கொலையைவிடக் கொடியது; அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள்; உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி, காஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும்; இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்."

9:36. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

6

2:240. உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு இறக்கும் நிலையில் இருப்பார்களானால், தங்கள் மனைவியருக்கு ஓராண்டு வரை (உணவு, உடை போன்ற தேவைகளைக் கொடுத்து) ஆதரித்து, (வீட்டை விட்டு அவர்கள்) வெளியேற்றப்படாதபடி (வாரிசுகளுக்கு) அவர்கள் மரண சாசனம் கூறுதல் வேண்டும்; ஆனால், அப்பெண்கள் தாங்களே வெளியே சென்று முறைப்படி தங்கள் காரியங்களைச் செய்து கொண்டார்களானால், (அதில்) உங்கள் மீது குற்றமில்லை - மேலும் அல்லாஹ் வல்லமையுடையவனும், அறிவாற்றல் உடையோனும் ஆவான்.

2:234. உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் அம்மனைவியர் நான்கு மாதம் பத்து நாள் பொறுத்திருக்க வேண்டும்; (இந்த இத்தத்)தவணை பூர்த்தியானதும், அவர்கள் (தங்கள் நாட்டத்துக்கு ஒப்ப) தங்கள் காரியத்தில் ஒழுங்கான முறையில் எதுவும் செய்துகொள்வதில் உங்கள் மீது குற்றமில்லை; அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.

7

2:284. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கே உரியன; இன்னும், உங்கள் உள்ளங்களில் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்தாலும், அல்லாஹ் அதைப் பற்றி உங்களைக் கணக்கு கேட்பான் - இன்னும், தான் நாடியவரை மன்னிப்பான்; தான் நாடியவரை வேதனையும் செய்வான் - அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன்.

2:286. அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) "எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!"

8

3:102. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரணிக்காதீர்கள்.

64:16. ஆகவே, உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; (அவன் போதனைகளைச்) செவிதாழ்த்திக் கேளுங்கள்; அவனுக்கு வழிபடுங்கள்; (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்; (இது) உங்களுக்கே மேலான நன்மையாக இருக்கும்; அன்றியும்; எவர்கள் உலோபத்தனத்திலிருந்து காக்கப்படுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்.

9

4:15. உங்கள் பெண்களில் எவளேனும் மானக்கேடான செயல் செய்துவிட்(டதாகக் குற்றம் சுமத்தப்பட்)டால், அதை நிரூபிக்க உங்களிலிருந்து நான்கு பேர்களை அழையுங்கள்; அவர்கள் அதை (மெய்ப்படுத்தி) சாட்சி கூறிவிட்டால், (அப்பெண்களை) மரணம் கைப்பற்றும் வரையில் அல்லது அவர்களுக்கு அல்லாஹ் ஒரு வழியை உண்டாக்கும் வரையில் அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்.

24:2. விபசாரியும், விபசாரனும் - இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.

10

4:33. இன்னும், தாய் தந்தையரும், நெருங்கிய பந்துக்களும் விட்டுச் செல்கின்ற செல்வத்திலிருந்து (விகிதப்படி அதையடையும்) வாரிசுகளை நாம் குறிப்பாக்கியுள்ளோம்; அவ்வாறே நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டோருக்கும் அவர்களுடைய பாகத்தை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாளனாக இருக்கிறான்.

8:75. இதன் பின்னரும், எவர்கள் ஈமான் கொண்டு, தம் ஊரைத்துறந்து, உங்களுடன் சேர்ந்து (மார்க்கத்திற்காகப்) போர் புரிகின்றார்களோ, அவர்களும் உங்களை சேர்ந்தவர்களே. இன்னும் அல்லாஹ்வின் வேதவிதிப்படி உங்கள் உறவினர்களே; ஒருவர் மற்றொருவருக்கு மிக நெருக்கமுடையவர்களும் ஆவார்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

11

5:2. முஃமின்களே! (நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் சமயத்தில் உங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட) அல்லாஹ்வின மார்க்க அடையாளங்களையும், சிறப்பான மாதங்களையும், குர்பானிகளையும், குர்பானிக்காக அடையாளம் கட்டப்பெற்றவைற்றையும், தங்களுடைய இறைவனின் அருளையும் திருப்பொருத்தத்தையும் நாடி கண்ணியமான (அவனுடைய) ஆலயத்தை நாடிச் செல்வோரையும் (தாக்குவதையோ, அவமதிப்பதையோ) நீங்கள் ஆகுமாக்கிக் கொள்ளாதீர்கள்; நீங்கள் இஹ்ராமைக் களைந்து விட்டால் (அனுமதிக்கப்பட்டவற்றை) நீங்கள் வேட்டையாடலாம்; மேலும் புனித மஸ்ஜிதை (கஃபத்துல்லாஹ்வை) விட்டும் உங்களைத் தடுத்த கூட்டத்தினர் மீதுள்ள வெறுப்பானது, நீங்கள் வரம்பு மீறுமாறு உங்களைத் தூண்டி விட வேண்டாம்; இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்; அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.

9:36. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

12

5:42. அன்றியும், இவர்கள் பொய்யையே அதிகமாகக் கேட்போராகவும், விலக்கப்பட்ட பொருட்களையே விழுங்குவோராகவும் இருக்கின்றனர்; (நபியே!) இவர்கள் உம்மிடம் வந்தால், இவர்களுக்கிடையே தீர்ப்பு வழங்கும்; அல்லது இவர்களைப் புறக்கணித்து விடும்; அப்படி இவர்களை விடுவீராயினும், இவர்கள் உமக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது; ஆனால், நீர் (இவர்களிடையே) தீர்ப்பளிப்பீராயின் நியாயமாகவே அவர்களிடையில் தீர்ப்பளிப்பீராக; ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் நீதிமான்களையே நேசிக்கின்றான்.

5:49. இன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக; அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்; அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக; (உம் தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விடுவார்களானால், சில பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடிக்க நிச்சயமாக அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக; மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர்.

13

5:106. ஈமான் கொண்டவர்களே! உங்களில் யாருக்கேனும் மரணம் சமீபித்து (அவர் மரணசாஸனம் கூற விரும்பினால்) அச்சமயத்தில் உங்களுக்குள் நம்பிக்கைக்குரிய இரண்டு சாட்சிகள் இருக்கவேண்டும்; அல்லது உங்களில் எவரும் பூமியில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும்போது மரணம் சமீபித்தால் (அப்போது முஸ்லிம்களாக இரு சாட்சிகள் கிடையாவிடின்) உங்களையல்லாத வேறிருவர் சாட்சியாக இருக்கட்டும்; (இவர்கள் மீது) உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் இவ்விருவரையும் (அஸரு) தொழுகைக்குப் பின் தடுத்து வைத்துக் கொள்ளவும்; இவ்விருவரும் "நாங்கள் (சாட்சி) கூறியது கொண்டு யாதொரு பொருளையும் நாங்கள் அடைய விரும்பவில்லை; அவர்கள், எங்களுடைய பந்துக்களாயிருந்த போதிலும், நாங்கள் அல்லாஹ்வுக்காக சாட்சியங் கூறியதில் எதையும் மறைக்கவில்லை; அவ்வாறு செய்திருந்தால் நிச்சயமாக நாங்கள் பாவிகளாயிவிடுவோம்" என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறவேண்டும்.

65:2. ஆகவே, அவர்கள் தங்கள் (இத்தாவின்) தவணையை நெருங்கினால், அப்பொழுது முறைப்படி (மனைவியராக) அவர்களை நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; அல்லது முறைப்படி அவர்களைப் பிரித்து (விட்டு) விடுங்கள்; அன்றியும், உங்களில் நியாயமுடைய இருவரைச் சாட்சியாக வைத்துக் கொள்ளுங்கள்; மேலும், சாட்சியத்தை அல்லாஹ்வுக்காக (நேர்மையாக) நிலைப்படுத்துங்கள்; அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசம் கொண்டிருப்போருக்கு இந்த நற்போதனை செய்யப்படுகிறது - தவிர, எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான்.

14

8:65. நபியே! நீர் முஃமின்களை போருக்கு ஆர்வ மூட்டுவீராக; உங்களில் பொறுமையுடையவர்கள் இருபது பேர் இருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். இன்னும் உங்களில் நூறு பேர் இருந்தால் அவர்கள் காஃபிர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள்; ஏனெனில் (முஃமின்களை எதிர்ப்போர்) நிச்சயமாக அறிவில்லாத மக்களாக இருப்பது தான் (காரணம்).

8:66. நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கின்றது என்பதை அறிந்து, தற்சமயம் அல்லாஹ் (அதனை) உங்களுக்கு இலகுவாக்கி விட்டான் - எனவே உங்களில் பொறுமையும் (சகிப்புத் தன்மையும்) உடைய நூறு பேர் இருந்தால் அவர்கள் இருநூறு பேர் மீது வெற்றிக் கொள்வார்கள்; உங்களில் (இத்தகையோர்) ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் உத்திரவு கொண்டு அவர்களில் இரண்டாயிரம் பேர் மீது வெற்றிக் கொள்வார்கள் - (ஏனெனில்) அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.

15

9:41. நீங்கள் சொற்ப(மான போர்த் தளவாட)ங்களைக் கொண்டிருந்தாலும் சரி, நிறைய(ப் போர்த் தளவாடங்களைக்) கொண்டிருந்தாலும் சரி, நீங்கள் புறப்பட்டு, உங்கள் பொருட்களையும், உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியுங்கள் - நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு மிகவும் நல்லது.  

9:91. பலஹீனர்களும், நோயாளிகளும், (அல்லாஹ்வின் வழியில்) செலவு செய்ய வசதியில்லாதவர்களும், அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் உண்மையுடன் இருப்பார்களானால், (இத்தகைய) நல்லோர்கள் மீது எந்த குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; கிருபையுள்ளவன்.

9:122. முஃமின்கள் ஒட்டு மொத்தமாக புறப்பட்டுச் செல்லலாகாது. ஆனால் அவர்களில் ஒவ்வொரு வர்க்கத்தாரிலிருந்தும் ஒரு சிறிய கூட்டத்தார் சன்மார்க்க (ஞானத்தைக்) கற்று கொள்வதற்காகவும், (வெளியேறி சென்ற அவர்கள் பின்னே தங்கியவர்களிடம்) திரும்பி வந்தால் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும் புறப்பட வேண்டாமா? இதைக் கொண்டே அவர்கள் தங்களை(த் தீமையினின்றும்) பாதுகாத்துக் கொள்வார்கள்.

24:61. (முஃமின்களே! உங்களுடன் சேர்ந்து உணவருந்துவதில்) குருடர் மீதும் குற்றமில்லை; முடவர் மீதும் குற்றமில்லை, நோயாளியின் மீதும் குற்றமில்லை; உங்கள் மீதும் குற்றமில்லை; நீங்கள் உங்கள் சொந்த வீடுகளிலோ அல்லது உங்கள் தந்தைமார் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாய்மார் வீடுகளிலோ, அல்லது உங்கள் சகோதரர் வீடுகளிலோ, அல்லது உங்கள் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையின் சகோதரர் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையின் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயாரின் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது எ(ந்த வீட்டுடைய)தின் சாவிகள் உங்கள் வசம் இருக்கின்றதோ (அதிலும்) அல்லது உங்கள் தோழரின் வீடுகளிலோ, நீங்கள் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ புசிப்பது உங்கள் மீது குற்றமாகாது; ஆனால் நீங்கள் எந்த வீட்டில் பிரவேசித்தாலும் அல்லாஹ்விடமிருந்து உங்களுக்குக் கிடைத்திருக்கும் முபாரக்கான - பாக்கியம் மிக்க - பரிசுத்தமான ("அஸ்ஸலாமு அலைக்கும்" என்னும்) நல்வாக்கியத்தை நீங்கள் உங்களுக்குள் கூறிக்கொள்ளுங்கள் - நீங்கள் அறிந்து கொள்வதற்காக, இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு(த் தன்) வசனங்களை விவரிக்கிறான். 

 

16

24:3. விபசாரன், விபசாரியையோ அல்லது இணை வைத்து வணங்குபவளையோ அன்றி வேறு எந்தப் பெண்ணையும் விவாகம் செய்ய மாட்டான்; விபசாரி, விபசாரனையோ அல்லது இணை வைத்து வணங்குபவனையோ அன்றி (வேறுயாரையும்) விவாகம் செய்ய மாட்டாள் - இது முஃமின்களுக்கு விலக்கப்பட்டிருக்கிறது.

24:32. இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள்; அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்.

17

24:58. ஈமான் கொண்டவர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர் (அடிமை)களும், உங்களிலுள்ள பருவம் அடையாச் சிறுவர்களும் (உங்கள் முன் வர நினைத்தால்) மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதி கோர வேண்டும்; ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நீங்கள் (மேல் மிச்சமான உங்கள் உடைகளைக் களைந்திருக்கும் "ளுஹர்" நேரத்திலும், இஷாத் தொழுகைக்குப் பின்னரும்-ஆக இம்மூன்று நேரங்களும் உங்களுக்காக (அமையப் பெற்றுள்ள) மூன்று அந்தரங்க வேளைகளாகும் - இவற்றைத் தவிர (மற்ற நேரங்களில் மேல்கூறிய அடிமைகளும், குழந்தைகளும் அனுமதியின்றியே உங்கள் முன் வருவது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லை; இவர்கள் அடிக்கடி உங்களிடமும் உங்களில் ஒருவர் மற்றவரிடம் வரவேண்டியவர்கள் என்பதினால்; இவ்வாறு, அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.

இந்த வசனத்தை எந்த வசனம் இரத்து செய்தது என்று ஸுயுதி குறிப்பிடவில்லை.

18

33:52. இவர்களுக்குப் பின்னால் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் தவிர இதர பெண்கள் உமக்கு ஹலால் ஆகமாட்டார்கள்; இன்னும் இவர்களுடைய இடத்தில் வேறு மனைவியரை மாற்றிக் கொள்வதும்; அவர்களுடைய அழகு உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே - ஹலால் இல்லை - மேலும், அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் கண்காணிப்பவன்.  

33:50. நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்); இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்); மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.

19

58:12. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் (நம்) தூதருடன் இரகசியம் பேச நேரிட்டால் உங்கள் இரகசியத்திற்கு முன்னர் ஏதேனும் தான தர்மத்தை முற்படுத்துங்கள். இது உங்களுக்கு, நன்மையாகவும், (உள்ளத்திற்குத்) தூய்மையாகவும் இருக்கும், ஆனால் (தான தர்மம் செய்வதற்கு) நீங்கள் வசதிபெற்றிராவிடின் - நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.

58:13. நீங்கள் உங்கள் இரகசியப் பேச்சுக்கு முன்னால் தான தர்மங்கள் முற்படுத்திவைக்க வேண்டுமே என்று அஞ்சுகிறீர்களா? அப்படி நீங்கள் செய்ய (இயல)வில்லையெனின் (அதற்காக தவ்பா செய்யும்) உங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்; ஆகவே, தொழுகையை முறைப்படி நிலைநிறுத்துங்கள்; இன்னும், ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; மேலும் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் வழிப்படுங்கள்; அன்றியும் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கு அறிகிறான்.

20

60:10. ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்கள் ஹிஜ்ரத் செய்து (நாடு துறந்தவர்களாக) உங்களிடம் வந்தால், அவர்களை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள்; அல்லாஹ் அவர்கள் ஈமானை நன்கறிந்தவன்; எனவே அவர்கள் முஃமினான (பெண்கள்) என நீங்கள் அறிந்தால், காஃபிர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விடாதீர்கள்; ஏனெனில், அந்த பெண்கள் அந்த ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. அந்த ஆண்கள் இந்தப் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. (ஆனால், இப் பெண்களுக்காக) அவர்கள் செலவு செய்திருந்ததை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்; அன்றியும் நீங்கள் அப்பெண்களுக்குரிய மஹரை கொடுத்து அவர்களை விவாகம் செய்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை; மேலும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பெண்களின் விவாக பந்தத்தை நீங்கள் பற்றிப்பிடித்துக் கொள்ள வேண்டாம்; அன்றியும், நீங்கள் செலவு செய்திருந்ததை (அவர்கள் போய்ச் சேருவோரிடம்) கேளுங்கள்; (அவ்வாறே ஈமான் கொண்டு உங்களிடம் வந்து விட்டோருக்காகத்) தாங்கள் செலவு செய்ததை அவர்கள் (உங்களிடம்) கேட்கலாம் - இதுவே அல்லாஹ்வுடைய கட்டளையாகும்; உங்களிடையே அவன் (இவ்வாறே) தீர்ப்பு வழங்குகிறான் - மேலும், அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.

9:5. (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

21

73:2. இரவில் - சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக;

73:20. நிச்சயமாக நீரும், உம்முடன் இருப்போரில் ஒரு கூட்டத்தாரும் இரவில் மூன்றில் இரு பாகங்களுக்குச் சமீபமாகவோ, இன்னும் அதில் பாதியோ இன்னும் இதில் மூன்றில் ஒரு பாகத்திலோ (வணக்கத்திற்காக) நிற்கிறீர்கள் என்பதை உம்முடைய இறைவன் நிச்சயமாக அறிவான்; அல்லாஹ்வே இரவையும் பகலையும் அளவாகக் கணக்கிடுகின்றான்; அதை நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிகிறான்; ஆகவே, அவன் உங்களுக்கு மன்னிப்பு அளித்து விட்டான். எனவே, நீங்கள் குர்ஆனில் உங்களுக்குச் சுலபமான அளவு ஓதுங்கள். (ஏனெனில்) நோயாளிகளும்; அல்லாஹ்வின் அருளைத் தேடியவாறு பூமியில் செல்லும் வேறு சிலரும், அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் மற்றும் சிலரும், உங்களில் இருப்பார்கள் என்பதை அவன் அறிகிறான்; ஆகவே, அதிலிருந்து உங்களுக்குச் சுலபமான அளவே ஓதுங்கள்; தொழுகையை முறையாக நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; அன்றியும் (தேவைப்படுவோருக்கு) அல்லாஹ்வுக்காக அழகான கடனாக கடன் கொடுங்கள்; நன்மைகளில் எவற்றை நீங்கள் உங்கள் ஆத்மாக்களுக்காச் செய்து (மறுமைக்காக) முற்படுத்துகிறீர்களோ, அவற்றை நீங்கள் அல்லாஹ்விடம் மிகவும் மேலானதாகவும், நற்கூலியில் மகத்தானதாகவும் காண்பீர்கள்; அன்றியும் அல்லாஹ்விடமே மன்னிப்புக் கோருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.

மேற்கண்ட பட்டியலில் உள்ள வசனங்களை அல்லாஹ் ஏன் இரத்து செய்தான்? காரணமென்ன? போன்றவைகள் பற்றி தேவைப்பட்டால் தனி  கட்டுரைகளாக ஆய்வு செய்வோம்.

அடுத்த கட்டுரையில் இஸ்லாமிய அறிஞர் இப்னு ஸலமா அவர்கள் கொடுத்த இரத்து செய்யப்பட்ட  பட்டிலைக் காண்போம்.

இந்த கட்டுரைக்கு உதவிய தொடுப்புக்கள்:


இதர குர்-ஆன் ஆய்வுக்கட்டுரைகள்

குர்-ஆன் பக்கம்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/arabic_quran/abrogation_suyuti_list.html

ஞாயிறு, 24 நவம்பர், 2019

குர்‍ஆனின் வினோதமான இரத்து செய்தல் - குர்‍ஆன் 33:52: கரு உண்டாவதற்கு முன்பாகவே கருக்கலைப்பு செய்த அல்லாஹ்

முந்தைய கட்டுரையில், அல்லாஹ் ஒரு கட்டளையை குர்‍ஆனில் வசனமாக இறக்கி அதனை ஒரே மணி நேரத்தில் இரத்து செய்த விவரத்தை ஆய்வு செய்தோம். இன்று அதை விட வினோதமான இன்னொரு அல்லாஹ்வின் ஞானச் செயலைக் காண்போம்.

ஒரு கட்டளை பிறப்பதற்கு முன்பே அதை இரத்து செய்யும் கட்டளையை அல்லாஹ் இறக்கியுள்ளான். இதனை நீங்கள் அறிவீர்களா? ஒரு கரு கர்ப்பத்தில் உருவாவதற்கு முன்பாகவே, அதை கருக்கலைப்பு செய்ய ஒரு ஆண் முடிவு செய்தால் எப்படி இருக்கும்?

இந்திய பிரதமரும் 300 ரூபாய் நோட்டும்:

மேற்கண்ட அல்லாஹ்வின் செயல் எப்படி உள்ளதென்றால், திடீரென்று இன்று (நவம்பர் 24, 2019) இரவு இந்திய பிரதமர் தொலைக்காட்சியில் காணப்பட்டு,  அடுத்த மாதம், டிசம்பர் 1ம் தேதியிலிருந்து  300 ரூபாய் நோட்டுக்கள் செல்லுபடியாகாது (Demonetization - பண மதிப்பிழப்பு) என்று அறிவிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். 

இதனை கேட்கும் மக்கள், "என்ன ஆச்சு இவருக்கு!? இன்னும் 300 ரூபாய் நோட்டுக்களை அரசு அச்சிடவில்லை மக்களிடம் கொண்டுவரவில்லை, அதற்குள் அதை இரத்து செய்து அரசு கட்டளையிடுகின்றதே, இது என்ன பைத்தியக்காரத்தனம்!" என்று கேள்வி கேட்பார்கள் அல்லவா!

அடுத்த நாள் (நவம்பர் 25, 2019) இரவு மறுபடியும் தொலைக்காட்சியில் பிரதமர் தோன்றி, இந்திய அரசாங்கம் 300 ரூபாய் நோட்டுக்களை நாளை முதல் அறிமுகம் செய்கிறது, இனி எடிஎம்களில்  (ATM) 300 நோட்டுக்கள் வரும் என்று அறிவிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.

இப்போது மக்களின் மனநிலை எப்படி இருக்கும்?

  1. டிசம்பர் 1ம் தேதி முதல் 300 நோட்டுக்கள் செல்லுபடியாகாது என்று முதல் சட்டம் வருகிறது. அதுவும் நவம்பர் 24ம் தேதி வருகிறது.
  2. நவம்பர் 25ம் தேதி,  300 நோட்டுக்களை அரசாங்கம் முதன் முதலாக  மக்களிடம் கொண்டு வருகிறது.
  3. அரசு  வெளியிடும் நோட்டுக்கள் நவம்பர் 25 முதல் 30 வரை மட்டும் தான் செல்லுபடியாகும், டிசம்பர் 1ம் தேதியிலிருந்து அது செல்லுபடியாகாது.

முதலில் 300 ரூபாய் நோட்டுக்களை இரத்து செய்யும் கட்டளையை கொடுத்துவிட்டு, அதன் பிறகு அந்த ரூபாய் நோட்டுக்களை வெளியிடுவது ஒரு முட்டாள்தனமான செயல் அல்லவா என்று மக்கள் கருதுவார்கள். இந்த இரண்டு காரியங்களை தலைகீழாக செய்வதை விட்டுவிட்டு, பிரதமர் சும்மா இருந்திருந்தாலே மக்கள் நிம்மதியாக இருந்திருப்பார்களே!

இப்படித்தான் குர்‍ஆனில் அல்லாஹ் முதலாவது இரத்துசெய்யும் வசனத்தை கட்டளையை இறக்கிவிட்டு, அதன் பிறகு எந்த வசனம் இரத்து செய்யுமோ, அதை இரண்டாவதாக இறக்குகின்றான்.

இது விசித்திரமில்லையா! இது ஆச்சரியமில்லையா! அல்லாஹ் என்ற சர்வ ஞானி இப்படி முட்டாள்தனமாக செயல்படுவானா?

300 ரூபாயை முதலில் இரத்து செய்துவிட்டு, அதன் பிறகு அந்த நோட்டுக்களை மக்களிடம் கொண்டு வந்து 5 நாட்கள் புழக்கத்தில் விடுவது, முட்டாள்தனமாகத் தோன்றவில்லை!

அல்லாஹ்வின் இந்த செயலுக்கு ஆதாரமென்ன?

ஸுயுதி என்ற இஸ்லாமிய அறிஞர் இதனை தன் புத்தகத்தில் கூறுகின்றார்.

இப்படிப்பட்ட வசனங்கள் 2 உள்ளன என்று அவர் கூறுகின்றார், இதர அறிஞர்கள் இப்படிப்பட்ட வசனங்கள் 3 அல்லது 4 உள்ளது என்று சொல்வதாக இவரே சொல்கிறார்.

Suyuti quote:

Some scholars have said that in all cases except the following two the abrogating verse appears before the abrogated: these verses are the verse of the waiting period that appears in '1- Baqara, and the verse: "Unlawful to you are women. . ."(33:52) which was examined previously. Others have added a third: the 'spoils of war' verse in chapter '1-Hashr said to have been abrogated by the verse: "Know that whatever spoils of war you capture. . ."(8:41) Some have added a fourth: "Show clemency. . ."(7:199)that is, by taking only the surplus of their possessions. This is according to those who believe that it has been abrogated by the verse ordaining zakat.

மூலம்:  Al-Itqan fi Ulum al-Qur'an  by Jalaluddin Suyuti, English Translation by Muneer Fareed  

இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய தொடுப்பு:  Link

இஸ்லாமிய  அறிஞர் ஸுயுதி சொல்வது என்னவென்றால், குர்‍ஆன் 33:50 & 51ம் வசங்களை  முதலாவது அல்லாஹ் இறக்கி, முஹம்மதுவிற்கு (கணக்கில்லா) பெண்களை  திருமணம் செய்ய அனுமதிக்கிறான். ஆனால் அடுத்த‌ வசனத்தில் அதாவது குர்‍ஆன் 33:52ல், சில பெண்களை மட்டுமே திருமணம் செய்யவேண்டும் என்று முஹம்மதுவிற்கு கட்டளையிடுகின்றான். தன் விருப்பப்படி திருமணங்கள் செய்யக்கூடாது, ஒருவேளை வேறு பெண்களின் அழகு முஹம்மதுவை ஈர்த்தாலும் சரி, அவர் இப்படி செய்யக்கூடாது என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.

அல்லாஹ் ஞானமுள்ளவனாக இருந்திருந்தால், என்ன செய்து இருந்திருக்கவேண்டும்? முதலாவது 33:52ம் வசனத்தை இறக்கியிருக்கவேண்டும் (சில பெண்களை மட்டுமே திருமணம் செய்ய முஹம்மதுவிற்கு  கட்டுப்பாடு இடும் வசனம் 33:52). சில நாட்கள்/மாதங்கள் கழித்து 33:50 & 51ம் வசனங்களை இறக்கி, தான் விதித்த கட்டுப்பாட்டை நீக்கி இருக்கவேண்டும். 

ஆனால், இங்கு எப்படி உள்ளதென்றால், முதலாவது விதிவிளக்கு அளிக்கின்றான் அல்லாஹ்? எதிலிருந்து விதிவிளக்கு அளிக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினால், அதன் பிறகு தான் 52ம் வசனம் வருகிறது. இதற்கு  அவர் 52ம் வசனத்தை  இறக்காமல் இருந்திருந்தாலே சரியாக இருந்திருக்கும்.

இப்போது அந்த மூன்று வசனங்களையும் படிப்போம்:

விதிவிலக்கு அளிக்கும் வசனங்கள் (33:50-51):

33:50. நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்); இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்); மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.

33:51. அவர்களில் நீர் விரும்பிய வரை ஒதுக்கி வைக்கலாம். நீர் விரும்பியவரை உம்முடன் தங்கவைக்கலாம், நீர் ஒதுக்கி வைத்தவர்களில் நீர் நாடியவரை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். (இதில்) உம்மீது குற்றமில்லை; அவர்களுடைய கண்கள் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர்கள் விசனப்படாமல் இருப்பதற்கும் அவர்கள் ஒவ்வொருவரும் நீர் அவர்களுக்கு கொடுப்பதைக் கொண்டு திருப்தி அடைவதற்காகவும், இது சுலபமான வழியாகும். மேலும், அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் இருப்பதை நன்கறிகிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்; மிக்க பொறுமையாளன்.

குர்‍ஆன் 33:52 (இரத்து செய்யப்பட்ட வசனம்):

33:52. இவர்களுக்குப் பின்னால் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் தவிர இதர பெண்கள் உமக்கு ஹலால் ஆகமாட்டார்கள்; இன்னும் இவர்களுடைய இடத்தில் வேறு மனைவியரை மாற்றிக் கொள்வதும்; அவர்களுடைய அழகு உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே - ஹலால் இல்லை - மேலும், அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் கண்காணிப்பவன்.

(டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்)

இஸ்லாமிய அறிஞர்கள் இந்த விஷயத்தில் தவறாக இருந்திருக்கலாம் அல்லவா?

சில முஸ்லிம்கள் அல்லாஹ்வின் இந்த வினோதமான இரத்துசெய்தல் பிரச்சனையை சமாளிப்பதற்கு,  குர்‍ஆன் 33:50-52 வரையிலான வசனங்கள் சரியான வரிசையில் தான் உள்ளது என்று சொல்லலாம். அதாவது, குர்‍ஆன் 33:50-51 முதலாவது இறங்கியது, முஹம்மது தன் விரும்பிய படி பெண்களை திருமணம் செய்யலாம், விவாகரத்து செய்யலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு 52வது வசனத்தில் அந்த சலுகை நீக்கப்பட்டது என்று சொல்லக்கூடும்.

இது உண்மையென்றால், இந்த வசனம் 33:52 இறக்கப்பட்ட பிறகு முஹம்மது வேறு எந்த ஒரு பெண்ணையும் திருமணம் செய்து இருந்திருக்கக்கூடாது.

இந்த அத்தியாயம் (33) ஹிஜ்ரி 5ம் ஆண்டு இறக்கப்பட்டதாக முஸ்லிம் அறிஞர்கள் அறிவிக்கிறார்கள் (Link 1 & Link 2). 

முஹம்மது மக்காவிலிருந்து மதினாவிற்கு ஹிஜ்ரி செய்த ஆண்டு கி.பி. 622 ஆகும், இந்த ஆண்டோடு 5 ஆண்டுகள் கூட்டினால், 622 + 5 = 627ம் ஆண்டு ஆகிறது.  ஆக, 33ம் அத்தியாயம் 627ம் ஆண்டு இறக்கப்பட்டு இருந்திருக்கின்றது, மேலும் முஹம்மது மரித்த ஆண்டு, 632 ஆகும். இதன்படி கணக்கிட்டால், 33:52ம் வசனத்திற்கு பிறகு முஹம்மது குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் (627 லிருந்து 632 வரை) வாழ்ந்திருக்கின்றார்.  இஸ்லாமிய அறிஞர் ஸுயூதி குறிப்பிட்டது பொய் என்று கருதி, நம் முஸ்லிம்கள் சொல்வது மெய் என்று கருதினால், இந்த ஐந்து ஆண்டுகளில் முஹம்மது ஒரு பெண்ணையும் திருமணம் செய்து இருந்திருக்கக்கூடாது.

இந்த ஐந்து ஆண்டுகளில் முஹம்மது ஒரு திருமணத்தையும் செய்யவில்லை, திருமண ஒப்பந்தம் கூட செய்யவில்லை என்று முஸ்லிம்கள் நிருபிக்கமுடியுமா?

கீழ்கண்ட பக்கத்தில் முஹம்மதுவின் திருமணங்கள், விவாகரத்துக்கள், திருமணம் ஒப்பந்தங்கள் பற்றி ஆண்டுவாரியான பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

முஹம்மதுவின் மனைவிகள் மற்றும் வைப்பாட்டிகள் பட்டியல்:

Wives and Concubines

No. NameStatusDate
1Khadijah bint KhuwaylidMarriedJuly 595
2Sawda bint Zam'a  Married though with limited rightsMay 620
3Aisha bint Abi Bakr MarriedContracted May 620 but first consummated in April or May 623
4Hafsa bint UmarMarriedJanuary or February 625
5Zaynab bint KhuzaymaMarriedFebruary or March 625
6Hind (Umm Salama) bint Abi UmayyaMarriedApril 626
7Zaynab bint JahshMarriedMarch 627
8Rayhana bint Zayd ibn Amr Sexual slaveryMay 627
9Juwayriyah bint Al-HarithMarried January 628
10Ramlah (Umm Habiba) bint Abi SufyanMarriedJuly 628 (following a proxy wedding earlier in the year)
11Safiyah bint HuyayyMarried July 628
12Maymunah bint Al-HarithMarriedFebruary 629
13Mariyah bint Shamoon al-QuptiyaSexual slaveryc. June 629
14Mulayka bint KaabDivorcedJanuary 630
15Fatima al-Aliya bint Zabyan al-DahhakDivorcedFebruary or March 630
16Asma bint Al-Numan Divorced June or July 630
17Al-Jariya Sexual slaveryAfter 627
18Amra bint Yazid c.Divorced 631
19Tukana al-QuraziyaSexual slaveryUnknown, but probably in the last months of Muhammad's life.

இன்னும் முஹம்மது செய்த திருமண ஒப்பந்தங்கள் பட்டியலையும்இதர பெண்கள் பற்றிய விவரங்களையும் மேற்கண்ட தொடுப்பில் சென்று படிக்கலாம்இந்த விவரங்கள் எந்தெந்த‌ இஸ்லாமிய மூல நூல்களிலிருந்து எடுக்கப்பட்டது என்றும் இந்த தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கி.பி. 627ம் ஆண்டுக்கு பிறகு முஹம்மது எத்தனை திருமணங்களை புரிந்துள்ளார், விவாகரத்து புரிந்துள்ளார் என்பதை பாருங்கள்.

இதன்படி பார்த்தால், இஸ்லாமிய அறிஞர் ஸுயுதி சொல்வது தான் உண்மை என்று புரிகின்றது, அதாவது முதலாவது இரத்து செய்யும் வசனத்தை இறக்கிவிட்டு, அதன் பிறகு இரத்து செய்யப்பட்ட வசனத்தை அல்லாஹ் இறக்கியிருக்கின்றான் என்று நிருபனமாகின்றது.

முடிவுரை:

ஒரு இறைவன் இப்படி செய்யமுடியுமா? ஆறறிவு படைத்த மனிதன் இப்படி தலைகீழாக செய்தால், மக்கள் அவனைப் பார்த்து சிரிப்பார்கள், அவன் ஒரு பைத்தியக்காரன் என்று பட்டம் சூட்டுவார்கள். ஆனால், இங்கு அல்லாஹ்வே இப்படி செய்துள்ளான். முஸ்லிம்கள் அல்லாஹ்விற்கு என்ன பட்டத்தைச் சூட்டப்போகிறார்கள்?

அல்லாஹ்வின் இரத்து செய்யும் கோட்பாடு ஒரு பிழையான கோட்பாடு, முஸ்லிம்களே கேள்வி கேட்கவேண்டிய கோட்பாடு. இதில் அனேக பிழைகள் உள்ளது. இவைகள் பற்றி மேலதிக விவரங்களை இதர கட்டுரைகளில் ஆய்வு செய்வோம்.


இதர குர்-ஆன் ஆய்வுக்கட்டுரைகள்

குர்-ஆன் பக்கம்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/arabic_quran/abrogation-quran33-52.html  

செவ்வாய், 19 நவம்பர், 2019

வாட்ஸப் வலி: பாபர் மசூதி இழப்பு பற்றிய முன்னறிவிப்பு: குர்‍ஆன் 2:77

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி பற்றிய தீர்ப்பு நவம்பர் 9ம் 2019 அன்று வெளியானது. இந்த தீர்ப்பு சரியானதா அல்லது சரியில்லையா என்று ஆய்வு செய்வது என் நோக்கமல்ல. ஆனால், அந்த தீர்ப்பு நாளுக்குப் பிறகு ஒரு படத்தை வாட்ஸப்பில் முஸ்லிம்கள் பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். முஸ்லிம்களால் பரப்பப்படும் அந்த செய்தி அவர்களுக்கு தலைவலியாக இருக்கின்றதா? அல்லது முஸ்லிம்களுக்கு வழியாக  இருக்கின்றதா என்பதை மட்டும் இங்கு காண்போம்.

அவர்கள் அனுப்பிய படம் இதுதான்:

இந்த படம் தான் வாட்ஸப்பில் வந்தது. இது முஸ்லிம்களுக்கு வழியா அல்லது வலியா என்பதைக் காண்போம். முஸ்லிம்களிடமிருந்து அநீதி செய்யப்பட்ட நிலம் 2.77 நிலம் என்று அந்த படத்தில் போடப்பட்டு இருந்தது. அதன் கீழே குர்‍ஆன் 2:77ம் வசனமும் மேற்கோள் காட்டப்பட்டு இருந்தது.

குர்‍ஆன் 2:77. அவர்கள் மறைத்து வைப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்என்பதை அவர்கள் அறிய மாட்டார்களா? (டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்)

இந்த வாட்ஸப் படத்தை முதலில் தயாரித்து அனுப்பிய அந்த முஸ்லிம் யாரென்று நமக்குத் தெரியாது. 

  • இந்த வசனத்தை மேற்கோள் கட்டி அவர் என்ன சொல்ல வருகின்றார்? 
  • இப்படி பாபர் மசூதி முஸ்லிம்களிடமிருந்து சென்றுவிடும் என்று குர்‍ஆன் ஏற்கனவே முன்னறிவித்தது என்ற கருத்தில் இந்த படத்தை பரப்பிக்கொண்டு இருக்கின்றாரா? 
  • இந்த தீர்ப்பு கொடுத்த நீதிபதிகள் மறைத்து வைத்திருப்பதையும், வெளிப்படுத்துவதையும் (அல்லது தீர்ப்பு வழங்கியதையும்) அல்லாஹ் அறிந்திருக்கின்றான் என்ற விவரத்தை மட்டும் அவர் சொல்லியிருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால், அந்த பாபர் மசூதி இருந்த நிலத்தின் அளவு 2.77 ஏக்கர் ஆகும். குர்‍ஆனின் 2:77ம் வசனம் அந்த ஏக்கருக்கு பொருந்திவிடுகின்றது என்பதால், "அல்லாஹ் முன்னறிவித்த  நிகழ்ச்சி தான் இது" என்ற தோரணையில் அவர் இந்த செய்தியை பரப்பிக் கொண்டு வருகிறாரா?
  • அவர் எந்த எண்ணத்தில் இதை செய்துக்கொண்டு இருந்தாலும், குர்‍ஆன் வசன எண்களைக் கொண்டு ஆடும் விளையாட்டு ஆபத்தானது என்பதை அவர் அறியவேண்டுமென்பதற்காக இந்த எச்சரிக்கை மணி அடிக்கப்படுகின்றது.

குர்‍ஆன் வசன எண்களைக் கொண்டு ஆடும் விளையாட்டு ஆபத்தானது:

குர்‍ஆன் முன்னறிவித்த நிகழ்வு தான் அயோத்தியா பாபர் மசூதி தீர்ப்பு என்று அந்த முஸ்லிம் சகோதரர் நினைப்பார் என்றுச் சொன்னால், அதனால் தான் அவர் வாட்ஸப் வழியாக இந்த செய்தியை பரப்புகிறார் என்று கருதினால், இது ஒரு ஆபத்தான‌வாதம் என்பதை அவருக்கு புரியவைப்பதற்கு மட்டுமே இந்த பதிவு.

குர்‍ஆன் வசன எண்களைக் கொண்டு ஒரு தவறான செய்தியை மக்களுக்கு முன்பு கொண்டு வந்தால், அது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்த்தவே இந்த பதிவு. இது கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன். பைபிளின் வசன எண்களைக் கொண்டு யாராவது ஏதாவது ஓரு புதிய கோட்பாட்டை, பைபிளில் இல்லாத ஒரு புதிய கருத்தைச் சொன்னால், அது தவறாக மாறும் என்பதை சொல்லிக்கொள்கிறேன்.

சரி, இப்போது வாட்ஸப்பில் பரப்பப்பட்டுக்கொண்டு இருக்கும் செய்தியின் ஆபத்து என்னவென்பதை காண்போம்.

குர்‍ஆன் 2:77 வசனத்தில் வரும் அதே வார்த்தைகள் கொண்ட வசனங்களை பாருங்கள்.

வசனம்

எண்

அவர்கள் மறைத்து வைப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்என்பதை அவர்கள் அறிய மாட்டார்களா?

2:77

(இறைவன் கட்டளைகளை) எடுத்துக் கூறுவதே அன்றி இத்தூதர் மீது (வேறு கடமை) இல்லை; இன்னும் நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்து வைத்திருப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்.

5:99

அன்றியும், அல்லாஹ் நீங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நீங்கள் பகிரங்கப்படுத்துவதையும் அறிகிறான்.

16:19

சந்தேகமின்றி அல்லாஹ், அவர்கள் மறைத்து வைத்திருப்பதையும்; அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும்; நிச்சயமாக அறிவான்; (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பவர்களை அவன் நிச்சயமாக நேசிப்பதில்லை.

16:23

மேலும்: அவர்களின் இருதயங்கள் மறைத்து வைத்திருப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக உம் இறைவன் நன்கறிவான்.

27:74

மேலும், உம்முடைய இறைவன் அவர்களுடைய இருதயங்கள் மறைத்து வைப்பதையும் அவர்கள் வெளிப்படுத்துவதையும் நன்கறிகிறான்.

28:69

நீங்கள் ஒரு விஷயத்தை வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்து வைத்தாலும், நிச்சயமாக அல்லாஹ் எல்லா விஷயங்களையும் அறிபவனாக இருக்கின்றான்.

33:54
மொத்தம்:131.15

வாட்ஸப்பில் வந்த செய்தியின் லாஜிக்கின் படி பார்த்தால், மொத்தம் 131.15 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள மசூதிகள் மற்றவர்களால் ஆக்கிரமிக்கப்படும் என்று அல்லாஹ் முன்னமே அறிந்து குர்‍ஆனில் முன்னறிவித்துள்ளான் என்று பொருள் படுகின்றது.

இந்த மொத்த‌ 131.15 ஏக்கரில், பாபர் மசூதி 2.77 ஏக்கரை கழித்துவிட்டால் (கைவிட்டுப்போன நிலப்பரப்பு) மீதமுள்ளது 128.38 ஆகும். ஆக, வாட்ஸப்பில் செய்திய பரப்பிய முஸ்லிமின் கணக்குப்படி, எதிர்காலத்தில் இன்னும் 128.38 ஏக்கர் நிலப்பரப்புகளில் உள்ள மசூதிகள்  முஸ்லிமல்லாதவர்களின் கைகளுக்கு மாறப்போகிறது என்று பொருள்படுகின்றது. இது என் சொந்த கருத்து அல்ல, வாட்ஸப்பின் செய்தியின் கருத்து இது தான்.

விளையாட்டு எப்படி விபரீதமானது பார்த்தீர்களா?

2.77 நிலப்பரப்பு பாபர் மசூதி வழக்கில் இழந்ததால், உடனே குர்‍ஆன் 2:77ம் வசனத்தை அதற்கு ஒப்பிட்டு இப்படி அறியாமையில் செய்திகளை பரப்புவதினால், மற்ற குர்‍ஆன் வசனங்களில் மொத்தத்தையும் கூட்டினால், இன்னும் அனேக மசூதிகளை முஸ்லிம்கள் இழக்கப்போகிறார்கள் என்ற பொருள் வந்துவிடுகிறது. இது தவறு தானே!

எருசலேமின் அல் அக்ஸா மசூதி நிலப்பரப்பு எத்தனை ஏக்கர்?

என்னுடைய நண்பரிடம் இந்த விவரங்களைச் சொன்னவுடன், அவன் கேட்டான், கொஞ்சம் எருசலேமில் உள்ள அல் அக்ஸா மசூதி எத்தனை நிலப்பரப்பில் உள்ளது என்று கண்டுபிடித்துச் சொல்லமுடியுமா?

சரி தேடித்தான் பார்ப்போமே என்று எண்ணி, விக்கிபீடியாவில் தேடிப்பார்த்ததில் கீழ்கண்ட விவரம் கிடைத்தது.

Architecture

The rectangular al-Aqsa Mosque and its precincts cover 14.4 hectares (36 acres), although the mosque itself is about 12 acres (5 ha) in area and can hold up to 5,000 worshippers.[46] It is 83 m (272 ft) long, 56 m (184 ft) wide.[46] Unlike the Dome of the Rock, which reflects classical Byzantine architecture, the Al-Aqsa Mosque is characteristic of early Islamic architecture.[47]

அல் அக்ஸா மசூதி மொத்த பரப்பு 36 ஏக்கர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அல்லாஹ் குர்‍ஆனில் முன்னறிவித்ததின் படி, இன்னும் 128.38 ஏக்கர் நிலப்பரப்பு முஸ்லிம்கள் இழக்கவேண்டி இருப்பதால், அல் அக்ஸா மசூதி (36 ஏக்கர்) அதற்குள் வந்துவிடும்.  அல்லாஹ்வின் கணக்குப்படி, பாபர் மசூதி மற்றும் அல் அக்ஸாவின் மொத்த நிலப்பரப்புக்களை கழித்தாலும், இன்னும் பல ஏக்கர்கள் மீதமாக உள்ளது. அவைகளை எந்த மசூதிகளிலிருந்து கழிப்பது? அல்லாஹ் நோஸ் த பெஸ்ட்.

முடிவுரை: 

இதுவரை கண்ட விவரங்களின் படி கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் என்ன?

  • தேவையில்லாத விஷயங்களை குர்‍ஆனில் தேடுவதை முஸ்லிம்கள் நிறுத்தவேண்டும்.
  • குர்‍ஆனில் முன்னறிவிப்புக்களைத் தேடி சம்மந்தமில்லாதவைகளோடு முடிச்சு போடக்கூடாது. 

வாட்ஸப்பில் வந்த இந்த செய்தி முஸ்லிம்களுக்கு ஒரு தலைவலி என்பதை இதன் மூலம் அறியலாம். இனியாவது நம் முஸ்லிம் சகோதரர்கள் சிறிது எச்சரிக்கையாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.


இதர வாட்ஸப் வழி(வலி) கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/whatsapp/babar_mosque_q2_77.html


திங்கள், 11 நவம்பர், 2019

பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் மரித்த (ரத்து செய்யப்பட்ட) குர்ஆன் வசனம் 58:12 (முஹம்மதுவிடம் தனிமையில் பேச பணம் தர வேண்டுமா?)

முன்னுரை: 

முஹம்மதுவை சுற்றி எப்போதும் மக்கள் இருந்தார்கள். முஸ்லிம்கள் அவரிடம் அடிக்கடி வந்து தனிமையில் பேசினார்கள், தங்கள் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு பதில்கள் தரும் படி கேட்டார்கள்.  அவரும் அவர்களுக்கு பதில்களை கொடுத்துக்கொண்டிருந்தார். ஆனால் முஸ்லிம்களின் அன்புத் தொல்லை அவருக்கு அதிகமாகிவிட்டது.  முஸ்லிம்கள் தன்னிடம் வந்து அடிக்கடி பேசுவதை முஹம்மது விரும்பவில்லை. ஆனால், நேரடியாக அவர்களிடம் சொல்லவும் அவர் விரும்பவில்லை. தன்னுடைய சொந்த வேலைகளை செய்வதற்கும் அவருக்கு நேரம் இல்லாமல் போய்விட்டது. இந்த பிரச்சினையை தீர்ப்பது எப்படி? ஒரு இஸ்லாமிய ஆன்மீக குரு, திடீரென்று மக்கள் மீது கோபம் கொள்ள முடியுமா? முடியாதல்லவா? இதற்கு வழி என்ன என்று முஹம்மது யோசித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென்று அல்லாஹ் ஒரு வசனத்தை இறக்கினான். 

அந்த வசனம் தான் குர்ஆன் 58:12. இந்த வசனத்தை ஐந்து தமிழாக்கங்களில் படிப்போம்: 

டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்:

58:12. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் (நம்) தூதருடன் இரகசியம் பேச நேரிட்டால் உங்கள் இரகசியத்திற்கு முன்னர் ஏதேனும் தான தர்மத்தை முற்படுத்துங்கள். இது உங்களுக்கு, நன்மையாகவும், (உள்ளத்திற்குத்) தூய்மையாகவும் இருக்கும், ஆனால் (தான தர்மம் செய்வதற்கு) நீங்கள் வசதிபெற்றிராவிடின் - நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன். 

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:

58:12. நம்பிக்கையாளர்களே! நீங்கள் நம்முடைய தூதருடன் இரகசியம் பேச விரும்பினால், உங்கள் இரகசியத்திற்கு முன்னதாகவே (ஏழைகளுக்கு) ஏதும் தானம் செய்துவிடுங்கள். இது உங்களுக்கு நன்மையும் பரிசுத்தத் தன்மையும் ஆகும். (தானம் கொடுப்பதற்கு எதனையும்) நீங்கள் அடைந்திராவிட்டால், (அதைப்பற்றி உங்கள் மீது குற்றமில்லை.) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:

58:12. இறைநம்பிக்கைகொண்டவர்களே! நீங்கள் தூதருடன் தனிமையில் பேசுவதாயின் அவ்வாறு பேசுவதற்கு முன் சிறிது தானதர்மம் செய்யுங்கள். இது உங்களுக்கு நன்மையானதும் மிகத் தூய்மையானதுமாகும். ஆனால், தர்மம் செய்வதற்கு எதுவும் உங்களிடம் இல்லையென்றால் திண்ணமாக, அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனாகவும் கருணைமிக்கவனாகவும் இருக்கின்றான். 

மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்:

58:12. விசுவாசங்கொண்டோரே! நீங்கள் (நம்முடைய) தூதருடன் இரகசியம் பேசினால், உங்கள் இரகசியப்பேச்சிற்கு முன்னர் தர்மத்தை முற்படுத்துங்கள், இது உங்களுக்கு மிகச்சிறந்ததும், மிகப்பரிசுத்தமானதுமாகும், (தர்மம் கொடுப்பதற்கு எதனையும்) நீங்கள் பெற்றுக் கொள்ளவில்லையானால், (அது குற்றமல்ல,) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிகக்கிருபையுடைவன்.

பிஜே தமிழாக்கம்:

58:12. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் இத்தூதரிடம் (முஹம்மதிடம்) இரகசியமாகப் பேசினால் உங்கள் இரகசியத்துக்கு முன் தர்மத்தை முற்படுத்துங்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. தூய்மையானது. உங்களுக்கு (எதுவும்) கிடைக்காவிட்டால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

எப்படியாவது முஸ்லிம்களின் அன்பு தொல்லைகளிலிருந்து முஹம்மதுவை காப்பாற்ற வேண்டுமென்று சர்வஞானி அல்லாஹ் முடிவு செய்தான், குர்‍ஆன் 58:12 ஐ இறக்கினான்.

முஸ்லிம்கள் முஹம்மதுவிடம்  தனிமையில் பேசவேண்டும் என்று சொன்னால் அதற்கு முன்பு அவர்கள் தான தர்மம் செய்ய வேண்டும். வேறுவகையில் சொல்லவேண்டுமென்றால் கொஞ்சம் பணத்தை அவர்கள் செலவிடவேண்டும். அது ஏழைகளுக்கு தான் கொடுக்கவேண்டும் என்று குர்ஆன் சொல்லவில்லை. அப்துல் ஹமீது பாகவி குர்ஆன் தமிழாக்கத்தில் ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று அவர் அடைப்புக்குள் எழுதுகிறார். ஆனால் குர்ஆன் அப்படி சொல்லவில்லை. அந்தப் பணம் முஹம்மதுக்கு கொடுக்கப்பட வேண்டும்.  முஹம்மதுவிற்கு கொடுத்தாலும் அதனை அவர் ஏழைகளுக்காகத் தான் செலவிடுவார் என்று முஸ்லிம்கள் சொல்லக்கூடும். ஆனால், இங்கு பிரச்சனை வேறு ஒன்று உண்டு. தொடர்ந்து படியுங்கள்.

எவ்வளவு பணத்தை தானதர்மம் செய்வது? என்ற விஷயத்தை அல்லாஹ் குர்ஆனில் சொல்லவில்லை.

ஒரு மணி நேரத்திற்குள் இரத்து செய்யப்பட்ட வசனம்:

எவ்வளவு பணத்தை முஸ்லிம்களிடமிருந்து பெறலாம் என்று முஹம்மது கேட்டதாகவும், அலி அவர்கள் அதற்கு பதில் கொடுத்ததாகவும் ஹதீஸ்களில் வாசிக்கிறோம்.

மௌதூதி தஃப்ஸீர்:

முஹம்மது அலியிடம் கேட்டார்: எவ்வளவு பணத்தை வாங்குவது? ஒரு தினார் வாங்கலாமா? 

அலி பதில் அளித்தார்: இது மிகவும் அதிகம், மக்களால் இதனை கொடுக்கமுடியாது. 

மறுபடியும் முஹம்மது: அரை தினார் வாங்கலாமா? 

உடனே அலி: இல்லை இதுவும் அதிகம் தான் என்று பதில் அளித்தார்.  

முஹம்மது இதற்கு: சரி நீங்களே சொல்லுங்கள் எவ்வளவு வாங்கலாம்? 

அலி: ஒரு பார்லி விதை (அரிசி) அளவு தங்கம் வாங்கினால் போதுமல்லவா என்று சொன்னார். 

முஹம்மது: இல்லை இது மிகவும்  குறைவான அளவு ஆகும் என்றுச் சொன்னார்.  

வேறு ஒரு அறிவிப்பாளர் தொடரில், அலி அவர்கள் இவ்விதம் கூறியதாகச் சொல்லப்பட்டுள்ளது, அதாவது இந்த குர்‍ஆன் வசனம் (58:12) இறங்கிய போது நான் மட்டுமே அதனை நிறைவேற்றினேன். என்னைத் தவிர வேறு யாரும் அதனை நிறைவேற்றவில்லை. ஒரு குறிப்பிட்ட விவரம் பற்றி இறைத்தூதரிடம் தனிமையில் பேச நான் பணம் கொடுத்து பேசினேன். அதன் பிறகு  இந்த வசனம் இரத்து செய்யப்பட்டுவிட்டது என்றார்.

Hadrat 'Ali says when this was enjoined the Holy Prophet asked him, What should be the quantity of the charity? Should it be one dinar? I said: This is more than the people can afford. The Holy Prophet then asked: Should it be half a dinar? I said: This too is too much. Then he asked what it should be. I said. Gold equal to a barley grain. The Holy Prophet remarked: Your advice is for too little! " (Ibn Jarir, Tirmidhi, Musnad Abu ya'la). 

In another tradition Hadrat `Ali says: "This is a verse of the Qur'an which no one acted upon except me. As soon as it was enjoined, I offered the charity and consulted the Holy Prophet about a problem. " (Ibn Jarir, Hakim, lbn al-Mundhi, `Abd bin Humaid).

அதிகமாக வசூல்  செய்ய  முஹம்மது முயன்றுள்ளார். ஒரு தினார் என்ற பணத்தை வாங்கலாமா? அரை தினார் வாங்கலாமா? என்று முஹம்மது கேட்டபோது, அவரது மருமகனாகிய அலி அவர்கள், மக்கள் தாங்கமாட்டார்கள், இது அதிகம் என்றார்.  கடைசியாக ஒரு பார்லி விதை அளவிற்கு தங்கம் வாங்கலாம் என்று அலி  அவர்கள் தம் விருப்பத்தைச் சொன்னபோது, முஹம்மது 'இல்லை, இது மிகவும் குறைவு என்றார்'. 

இப்படியா ஒரு இறைத்தூதர் பணத்திற்கு ஆசைப்படுவார்?

இந்த உரையாடலை கவனித்தால், இந்த வசனத்தை அல்லாஹ் இறக்கியதாக தெரியவில்லை, முஹம்மதுவே சுயமாக தன் லாபத்திற்காக இறக்கிக்கொண்டதாகத் தெரிகின்றது. இது உண்மை என்பதற்கு இன்னும் ஆதாரங்கள் உள்ளன, தொடர்ந்து  படியுங்கள்.

குர்‍ஆன் 58:12ஐ இரத்து செய்து 58:13 வசனம் இறக்கப்பட்டது:

முஹம்மது எவ்வளவு வசூல் செய்தாரோ தெரியாது. ஆனால், இது மக்களுக்கு மிகப் பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. அந்த மக்களால் அல்லாஹ்  இறக்கிய தான தர்மத்தை கொடுக்க முடியவில்லை, எனவே அல்லாஹ் உடனே இன்னொரு வசனத்தை இறக்கி, 12ம் வசனத்தை  ரத்து செய்துவிட்டார். அந்த வசனம் தான் குர்ஆன் 58:13

டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்:

58:13. நீங்கள் உங்கள் இரகசியப் பேச்சுக்கு முன்னால் தான தர்மங்கள் முற்படுத்திவைக்க வேண்டுமே என்று அஞ்சுகிறீர்களா? அப்படி நீங்கள் செய்ய (இயல)வில்லையெனின் (அதற்காக தவ்பா செய்யும்) உங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்; ஆகவே, தொழுகையை முறைப்படி நிலைநிறுத்துங்கள்; இன்னும், ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; மேலும் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் வழிப்படுங்கள்; அன்றியும் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கு அறிகிறான்.

இப்னு கதீர் த‌ஃப்ஸீர்:

இதைப்பற்றி இப்னு கதீர் தம்முடைய விளக்க உரையில் கீழ்கண்டவாறு கூறுகின்றார்: 

Therefore, Allah abrogated the obligation of giving this charity. It was said that none has implemented this command before except its abrogation, `Ali bin Abi Talib. `Ali bin Abi Talhah reported from Ibn `Abbas: (spend something in charity before your private consultation.) "The Muslims kept asking Allah's Messenger questions until it became difficult on him. Allah wanted to lighten the burden from His Prophet, upon him be peace. So when He said this, many Muslims were afraid to pay this charity and stopped asking. Afterwards, Allah sent down this Ayah, (Are you afraid of spending in charity before your private consultation If then you do it not, and Allah has forgiven you, then perform Salah and give Zakah) Thus Allah made things easy and lenient for them.'' `Ikrimah and Al-Hasan Al-Basri commented on Allah's statement: (spend something in charity before your private consultation.) "This was abrogated by the next Ayah: (Are you afraid of spending in charity before your private consultation...).'' Sa`id bin Abi `Arubah reported from Qatadah and Muqatil bin Hayyan, "People kept questioning Allah's Messenger until they made things difficult for him. Allah provided a way to stop their behavior by this Ayah. One of them would need to speak to Allah's Prophet about a real matter, but could not do so until he gave in charity. This became hard on people and Allah sent down relief from this requirement afterwards, (But if you find not, then verily, Allah is Oft-Forgiving, Most Merciful).'' Ma`mar reported from Qatadah that the Ayah, (When you (want to) consult the Messenger in private, spend something in charity before your private consultation.) was abrogated after being in effect for only one hour of a day. `Abdur-Razzaq recorded that Mujahid said that `Ali said, "No one except me implemented this Ayah, until it was abrogated,'' and he was reported to have said that it remained in effect for merely an hour.

இப்னு கதீர் அவர்களும் தம்முடைய தஃப்ஸீரில் (கதாதா கூறிய ஹதீஸாக), குர்‍ஆன் 58:12ம் வசனம் ஒரு மணிநேரம் தான் இருந்தது ,  அலி மட்டும் தான் 58:12ம் வசனத்தை நிறைவேற்றினார் என்று கூறுகின்றார்.

இப்னு அப்பாஸ் த‌ஃப்ஸீர்:

அப்பாஸ் கூறும் போது, ஒரு தங்க காசை (துண்டை) வெள்ளிக்காசுகளாக மாற்றி முஹம்மதுவிடம் கொடுத்து, 10 வார்த்தைகள் அடங்கிய கேள்வியை அலி அவர்கள் கேட்டதாக கூறுகின்றார். Source: quranx.com/Tafsir/Abbas/58.13

த‌ஃப்ஸீர் வாஹிதி: 

இதே விவரத்தை வாஹிதியும் தம் விளக்கவுரையில் கூறுகின்றார்.

The Companions of the Prophet, Allah bless him and give him peace, found this tough and so a dispensation was revealed". 'Ali ibn Abi Talib, may Allah be well pleased with him, said: "There is one verse in the Book of Allah that no one has applied before me nor is there anyone who has applied it after me. [It is] (O ye who believe! When ye hold conference with the messenger…). I had a piece of gold which I exchanged for silver pieces and whenever I conferred with the Messenger I spent one silver piece in charity until I spent them all. Then the verse was abrogated with another verse (Fear ye to offer alms before your conference?... and they will fancy that they have some standing. Lo! is it not they who are the liars?) [58:13]".  Source: quranx.com/Tafsir/Wahidi/58.12

த‌ஃப்ஸீர் ஜலலைன்:

த‌ஃப்ஸீர் ஜலலைன் அவர்களும் கூட 58:13ம் வசனம் 12ம் வசனத்தை இரத்து செய்துவிட்டது என்கிறார்.

O you who believe, when you converse in secret with the Messenger, when you wish to converse with him privately, offer some voluntary alms before your secret talk. That is better for you and purer, for your sins. But if you find nothing, to offer as alms, then God is indeed Forgiving, of your secret conversation, Merciful, to you. In other words: nothing will be held against you for holding a secret conversation without having offered some voluntary alms [beforehand]. However, He [God] abrogated this later by saying:  Source: quranx.com/Tafsir/Jalal/58.12

முஸ்லிம்களுக்கு நம்முடைய கேள்விகள்:

இதுவரையில் குர்‍ஆன் 58:12 மற்றும் 13ம் வசனங்களை ஆய்வு செய்தோம். புகழ்பெற்ற  இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கவுரைகளையும் கண்டோம் (அவைகளின் தொடுப்புக்களும் கொடுத்துள்ளேன், வாசகர்கள் கொடுக்கப்பட்ட ஆங்கில தொடுப்புக்களை சொடுக்கி படித்துக்கொள்ளலாம்).

முஸ்லிம்கள் சிந்திப்பதற்கு கீழ்கண்ட கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன:

1) குர்‍ஆன் 58:12ஐ, அடுத்த வசனம் 13, இரத்து செய்துவிட்டது.

2) முஹம்மதுவின் மருமகனாகிய அலி சொல்கிறார் "இந்த வசனத்தை நான் மட்டுமே நிறைவேற்றினேன். அதன் பிறகு ஒரு மணிநேரத்திற்குள் அது இரத்து செய்யப்பட்டு விட்டது".

3) அல்லாஹ் சர்வ ஞானியாக இருந்திருந்தால் முஸ்லிம்களால் செய்யமுடியாத கட்டளைகளை ஏன் குர்‍ஆனில் இறக்கி, உடனே அது  முடியாது என்ற பட்சத்தில் இரத்து செய்கின்றான். 

4) இந்த செயலை எதிர்காலம் பற்றிய அறிவு இல்லாத மனிதன் செய்யலாம், அல்லாஹ் செய்யலாமா?

5) முஹம்மதுவிற்கு தனிமையில் ஓய்வு நேரம் தேவை என்று அல்லாஹ் எண்ணியிருந்தால், அதற்காக ஒரு நேரடி வசனத்தை கொடுத்தால் போதாதா? அதை விட்டுவிட்டு பணம் கொடுத்து தான் நீங்கள் பேசவேண்டும் என்ற கட்டளையை கொடுத்து பண ஆசையை முஹம்மதுவிற்கு ஊட்டுவது சரியா? 

6) அல்லாஹ் கட்டளையிட்டால் முஸ்லிம்கள் செய்யமாட்டார்களா என்ன? அதற்காக ஏன் பணத்தை ஒரு காரணியாக அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான்? இது அறிவுடமையா?

7) சரி குர்‍ஆன் 58:12ம் வசனத்தை இறக்கினாய்? உடனே 60 நிமிடங்களுக்குள் அதனை இரத்து செய்வாயா? இது தான் இறைவனுக்கு அழகா?

8) சிலர் சொல்கிறார்கள், அந்த கட்டளை ஒரு நாள் இருந்தது, இன்னும் சிலர் 10 நாட்கள் இருந்தது என்கிறார்கள். ஆனால் அனேக தஃப்ஸீர்களில் அது ஒரு மணி  நேரம் மட்டும் தான் உயிரோடு இருந்தது என்று சொல்லப்பட்டுள்ளது. அதிக பட்சமாக 10 நாட்களாக இருந்தது என்று எடுத்துக்கொண்டாலும், இது அல்லாஹ்வின் ஞானத்திற்கு தகுதியான ஒன்றாக இருக்குமா? அடுத்த மணி, அடுத்த நாள், அடுத்த 10 நாட்களில் நடப்பது பற்றி தெரியாத இறைவனா நித்தியம் பற்றி  பேசுவது?

9) ஒரு மணி நேரம் மட்டும் வாழும் வசனத்துக்காக, ஜிப்ரீல் தூதனை அனுப்பி முஹம்மதுவிற்கு இறக்கி, அதனை இரத்து செய்ய அடுத்த மணிக்குளே மறுபடியும் ஜிப்ரீலை அனுப்புவது  அறிவுடையவர்களுக்கு ஏற்றச் செயலாகத் தோன்றுகிறதா?  ஒரே மணி நேரத்தில், முன்பு இறக்கிய வசனத்தை இரத்து செய்யும் கூத்து எங்கேயாவது நடக்குமா? இஸ்லாமில் மட்டுமே இது சாத்தியம்.

10)  எந்த முந்தைய நபியாவது மக்கள்  தன்னிடம் பேசவேண்டுமென்றால் பணம் கொடுக்கவேண்டுமென்று சொல்லியிருக்கின்றாரா? முஸ்லிம்கள் சொல்லமுடியுமா?

11) பைபிளில் வரும் எந்த தீர்க்கதரிசியாவது முஹம்மதுவைப்போல ஒருகையில் பணம் கொடு, அப்போது தான் உன் பேச்சை நான் கேட்பேன் என்று சொல்லியுள்ளாரா?

12) இயேசு எத்தனை அற்புதங்களைச் செய்தார், எத்தனை பேரை சுகமாக்கினார். யாரிடமாவது பணத்தை கேட்டதாக பைபிளில் பார்க்கமுடியுமா?

13) அரசாங்கத்துக்கு வரிகட்ட பணமில்லாதபோது, தன் சீடரிடம் தூண்டில் போட்டு முதலாவது அகப்படுகின்ற மீனின் வாயில் இருக்கும் காசை வரியாக செலுத்து என்றுச் சொன்னார். மக்களிடம் சுகத்திற்கு பதிலாக பணத்தை கூலியாக இயேசு கேட்கவில்லை.