ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வியாழன், 4 ஏப்ரல், 2024

நாள் 8: ஜபூர் 23 – தாவூதின் வம்சத்தில் தாவூதே பிறந்து ஒரு பிரதான மேய்ப்பராக இருப்பார் என்ற முன்னறிவிப்பு!?! இது எப்படி சாத்தியம்?

(2024 ரமளான் - ஜபூர் காட்டும் ஸிராத்தல் முஸ்தகீம் )

ரமளான் தியான முந்தைய கட்டுரைகளை படிக்க கீழே சொடுக்கவும்.

  1. நாள் 1 - ஜபூர் காட்டும் ஸிராத்தல் முஸ்தகீம் : சங்கீதம் காட்டும் சத்திய வழி
  2. நாள் 2 - ஜபூர் காட்டும் ஸிராத்தல் முஸ்தகீம் : 'தவ்ராத்'ஐ முஸ்லிம்கள் படித்து பாக்கியமுள்ளவர்களாக மாற அல்லாஹ் அழைக்கிறான்
  3. நாள் 3 - சங்கீதம் 1ல் முஹம்மது இல்லை என்பதற்கான நான்கு காரணங்கள்?
  4. நாள் 4 - ஜபூர் 22 காட்டும் இறைவழி மஸீஹாவின் மரண துன்பங்கள்
  5. நாள் 5 - ஜபூர் காட்டும் ஸிராத்தல் முஸ்தகீம் - வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட ஓர் தங்கப்பழம் ஜபூர் 23
  6. நாள் 6 - ஜபூர் 23 - அல்லாஹ் என் மேய்ப்பன் என்று சொல்வது ஷிர்க்கா?
  7. நாள் 7- ஜபூர் 23 - முந்தைய வேதகாலத்தில் மேய்ப்பனாக இருந்த அல்லாஹ், குர்‍ஆன் காலத்தில் தன் பதவியை ராஜினாமா செய்தானா?

முந்தைய கட்டுரையில் எப்படி பரிசுத்த வேதாகமத்தின் இறைவன் தன் மக்களுக்கு ஒரு நல்ல மேய்ப்பனாக இருப்பார் என்பதை பார்த்தோம். இந்த கட்டுரையில், பழைய ஏற்பாட்டில், தேவன் 'தாவூது மறுபடியும் இஸ்ரேல் மக்களுக்கு ஒரு பிரதான மேய்ப்பனாக இருந்து அவர்களை ஒரு நல்ல விதமாக‌ இருந்து மேய்ப்பார் (ஆட்சி செய்வார்)' என்று சொல்லக்கூடிய ஒரு முன்னறிவிப்பை காண்போம். இது எப்படி சாத்தியமாகும்? ஒருவர் மரித்து பல நூறு ஆடுகளுக்கு பிறகு மறுபடியும் வருவாரா?

400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தாவீது எப்படி மறுபடியும் மேய்ப்பனாக வருவார்?

கீழ்கண்ட வசனங்களை படித்தால், தாவீது இஸ்ரவேல் மக்களுக்கு ஒரு மேய்ப்பனாக வருவார் என்று தேவன் சொல்கிறார். 

தாவீதின் காலக்கட்டம் கி.மு. 10ம் நூற்றாண்டு, மற்றும் எசேக்கியேல் பாபிலோனுக்கு அடிமையாக கொண்டு போகப்பட்டது, கி.மு. 6ம் நூற்றாண்டு ஆகும். இவ்விருவருக்கும் இடையே 400 ஆண்டுகள் உள்ளது. இப்படி இருக்கும் போது, தேவன் எப்படி தாவீது ஒரு மேய்ப்பானாக வருவார் என்று சொல்கிறார்?

எசேக்கியேல் 34:23-24

23. அவர்களை மேய்க்கும்படி என் தாசனாகிய தாவீது என்னும் ஒரே மேய்ப்பனை நான் அவர்கள்மேல் விசாரிப்பாயிருக்க ஏற்படுத்துவேன்; இவர் அவர்களை மேய்த்து, இவரே அவர்களுக்கு மேய்ப்பனாயிருப்பார்.

24. கர்த்தராகிய நான் அவர்களுக்குத் தேவனாக இருப்பேன், என் தாசனாகிய தாவீது அவர்கள் நடுவில் அதிபதியாயிருப்பார்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்.

அப்படியானால், இந்த தாவீது யார்? யூத அறிஞர்களின் படி, இந்த வசனத்தில் சொல்லப்பட்டவர், தாவீதின் வம்சாவழியில் வரப்போகிறவராக இருக்கும் மேசியா (மஸீஹா) ஆவார்.

2 சாமுவேல் 7ம் அத்தியாயத்தில், தாவீதின் சிங்காசனம் நிலைத்திருக்கும் என்று தேவன் வாக்கு கொடுத்தார், இதே விஷயத்தை 1 நாளாகமம் 17:11-14ம் வசனங்களிலும், 2 நாளாகமம் 6:16ம் வசனத்திலும் சொல்லப்பட்டுள்ளது.

2 நாளாகமம் 6:16

16. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியானை நோக்கி: நீ எனக்கு முன்பாக நடந்ததுபோல, உன் குமாரரும் என் நியாயப்பிரமாணத்தில் நடக்கும்படி தங்கள் வழியைக் காப்பார்களேயானால், இஸ்ரவேலின் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் புருஷன் எனக்கு முன்பாக உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்னதை இப்பொழுது அவனுக்கு நிறைவேற்றும்.

எரேமியா 33:17:

17. இஸ்ரவேல் வம்சத்தின் சிங்காசனத்தின்மேல் உட்காரத்தக்க புருஷன் தாவீதுக்கு இல்லாமற்போவதில்லை.

எரேமியா 23:5:

5. இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ராஜரிகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.

ஏசாயா 9:6-7:

6. நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

7. தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.

ஏசாயா 11:1

1. ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.

இவர் தாவீதின் வம்சத்தில் பிறக்கும் மேசியாவாக (மஸீஹாவாக) இருக்கிறவர் இயேசுக் கிறிஸ்து.  இயேசு தாவீதின் வம்சத்தில் பிறந்த மஸீஹாவாக இருக்கிறார்

லூக்கா 1:32

32. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.

இப்படி தாவீதின் வம்சத்தில் வரும் மேசியாவைத் தான், தேவன் எசேக்கியேல் தீர்க்கதரிசி மூலமாக முன்னறிவித்தார்.  இவரே பிரதான மேய்ப்பராக இருக்கிறார். இயேசு கூட தம்மை ஒரு நல்ல மேய்ப்பனாக பிரகடனப்படுத்தினார்.

யோவான் 10:11,14,15

11. நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். 14. நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், 15. நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.

முடிவுரை:

குர்‍ஆன் இயேசுவைய் மஸீஹா என்று அடிக்கடி அழைக்கிறது. அந்த மஸீஹா தான் பிரதான மேய்ப்பராக வெளிப்படுவார் என்று பழைய ஏற்பாடும் கூறியுள்ளது.

குர்‍ஆன் 3:45. மலக்குகள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;

மஸீஹா பற்றி ஏன் வேதத்தில் முன்னறிவிக்கப்படவேண்டும்? அவர் எப்படி தாவீதின் சிங்காசனத்தில் என்றென்றும் உட்கார்ந்து ஆட்சி செய்வார்? அப்படியென்றால், மஸீஹா நித்தியமானவர் என்றல்லவா பொருள்படுகிறது? ஒருவர் நித்தியமானவராக இருந்தால் அவர் இறைவன் தானே!

ஆய்வு செய்து உண்மையை அறியவேண்டும் என்று ஆர்வமுள்ள முஸ்லிம்களா நீங்கள்? அப்படியென்றால், மஸீஹா பற்றிய விவரங்களை படிப்பீர்களா?

ஆர்வமுள்ளவர்கள், மஸீஹா பற்றி பைபிளும், குர்‍ஆனும் என்ன சொல்கிறது என்பதை கீழ்கண்ட கட்டுரையில் படித்துப் பார்க்கவும்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2024ramalan/2024ramalan08.html

செவ்வாய், 26 மார்ச், 2024

2024 ரமளான் - ஜபூர் காட்டும் ஸிராத்தல் முஸ்தகீம் - நாள் 7: ஜபூர் 23 - முந்தைய வேதகாலத்தில் மேய்ப்பனாக இருந்த அல்லாஹ், குர்‍ஆன் காலத்தில் தன் பதவியை ராஜினாமா செய்தானா?

ரமளான் தியான முந்தைய கட்டுரைகளை படிக்க கீழே சொடுக்கவும்.

நாம் ஜபூர் புத்தகத்தின் 23வது அத்தியாயத்தை தியானித்துக்கொண்டு இருக்கிறோம்.

தாவூது நபி ஜபூர் வேதத்தில், இறைவன் என் மேய்ப்பனாக இருக்கிறான், இதனால் எனக்கு எந்த குறைவும் வராது என்று பாடுகின்றார். ஆனால், இஸ்லாமிய இறையியலை பார்க்கும்போது, சில இஸ்லாமியர்கள் 'அல்லாஹ் என் மேய்ப்பனாக இருக்கிறான்' என்றுச் சொல்லக்கூடாது, இது ஷிர்க் ஆகும் என்று சொல்கிறார்கள்.

இதைப் பற்றி அறிய மேற்கண்ட தொடர்களில் 5 மற்றும் 6வது தொடர்களை படிக்கவும். இப்போது இந்த கட்டுரையில், முந்தைய வேதங்களில், அதாவது பைபிளின் பழைய ஏற்பாட்டில் எப்படி, பைபிளை கொடுத்த இறைவன் தன்னை ஒரு மேய்ப்பனாகவும், மக்களை ஆடுகளாகவும் ஒப்பிட்டு பேசுகின்றார் என்பதை ஆய்வு செய்வோம்.

1) முந்தைய வேதங்களில் யெகோவா தேவன் மேய்ப்பனாக இருக்கிறார்

பழைய ஏற்பாட்டில் ஏசாயா தீர்க்கதரிசன புத்தகத்தில், கர்த்தர் தன் மக்களை ஒரு மேய்ப்பனைப்  போல மேய்ப்பதாக கூறுகின்றார். உலக மக்களுக்கு தாம் ஒரு மேய்ப்பனாக இருப்பதை அவர் ஒரு போதும் ஒரு வெட்கமான செயலாகவோ, அல்லது தம் இறை இலக்கணத்துக்கு இழுக்காகவோ எண்ணவில்லை.

ஏசாயா 40:10-11

10. இதோ, கர்த்தராகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக வருவார்; அவர் தமது புயத்தினால் அரசாளுவார்; இதோ, அவர் அளிக்கும் பலன் அவரோடேகூட வருகிறது; அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்துக்கு முன்பாகச் செல்லுகிறது.

11. மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.

மேலூம், ஜபூரை தாவூத் நபிக்கு கீழ்கண்ட வரிகளை வேதமாக இறைவன் இறக்கினான். மக்கள் தம்மை ஒரு மேய்ப்பனாக கருதவேண்டும், மேலும் அவர் தரும் நம்பிக்கையை  பிடித்துக்கொண்டு சமாதானத்தோடு வாழவேண்டும் என்று தாவூத் நபிக்கு இறக்கி, அதனை வேதமாக எழுதவைத்துவிட்டார். இன்றிலிருந்து தாவூத் நபியின் காலக்கட்டமாகிய கடந்த 3000 ஆண்டுகளாக யூதர்களும், கிறிஸ்தவர்களும் இந்த ஜபூர் 23ஐ படித்து, தியானித்து மன அமைதியையும் பாதுகாப்பையும், நம்பிக்கையும் பெற்றுக் கொண்டு வருகிறார்கள்.

ஜபூர் (சங்கீதம்) 23:1-6

1. கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். 2. அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்.  3. அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். 4. நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். 5. என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. 6. என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.

இதே போன்று, ஜபூர் 80வது அத்தியாயத்தில் கூட, யெகோவா தேவனை 'இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல் நடத்துகிறவரே' என்று அழைத்து, தங்கள் விண்ணங்களை வைப்பதை பார்க்கமுடியும்.

ஜபூர் (சங்கீதம்) 80:1-3

1. இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல் நடத்துகிறவரே, செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் வாசம்பண்ணுகிறவரே, பிரகாசியும்.

2. எப்பிராயீம் பென்யமீன் மனாசே என்பவர்களுக்கு முன்பாக, நீர் உமது வல்லமையை எழுப்பி, எங்களை இரட்சிக்க வந்தருளும்.

3. தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டு வாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.

கடைசியாக, இஸ்ரேல் ஜனங்களில் மேய்ப்பர்களாக (அரசு தலைவர்களாகவும், மத தலைவர்களாகவும்) இருப்பவர்கள் தங்கள் கடமையை சரியாக செய்யாததினால், தம் ஆடுகள் படும் துன்பங்களைப் பார்த்து, தேவன் துக்கப்பட்டு, தாமே ஆடுகளை மேய்ப்பதாக கூறுகிறார்.

எசேக்கியேல் 34:1-24 (சில வசன‌ங்களை இங்கு தருகிறேன்):

5. மேய்ப்பன் இல்லாததினால் அவைகள் சிதறுண்டுபோயின; சிதறுண்டுபோனவைகள் காட்டு மிருகங்களுக்கெல்லாம் இரையாயின.

6. என் ஆடுகள் சகல மலைகளிலும் உயரமான சகல மேடுகளிலும் அலைப்புண்டு, பூமியின்மீதெங்கும் என் ஆடுகள் சிதறித்திரிகிறது; விசாரிக்கிறவனுமில்லை, தேடுகிறவனுமில்லை. 7. ஆகையால் மேய்ப்பரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

8. கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; மேய்ப்பன் இல்லாததினால் என் ஆடுகள் சூறையாகி, என் ஆடுகள் காட்டுமிருகங்களுக்கெல்லாம் இரையாய்ப் போயின; என் மேய்ப்பர்கள் என் ஆடுகளை விசாரியாமற்போனார்கள், மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்தார்கள். 9. ஆகையால் மேய்ப்பரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

11. கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன்.

12. ஒரு மேய்ப்பன் சிதறுண்ட தன் ஆடுகளின் நடுவே இருக்கிற நாளில் தன் மந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறதுபோல, நான் என் ஆடுகளைத் தேடி, மப்பும் மந்தாரமுமான நாளிலே அவைகள் சிதறுண்டுபோன எல்லா இடங்களிலுமிருந்து அவைகளைத் தப்பி வரப்பண்ணி,

13. அவைகளை ஜனங்களிடத்திலிருந்து புறப்படவும் தேசங்களிலிருந்து சேரவும்பண்ணி, அவைகளுடைய சுயதேசத்திலே அவைகளைக் கொண்டுவந்து, இஸ்ரவேல் மலைகளின்மேலும் ஆறுகள் அண்டையிலும் தேசத்தின் சகல வாசஸ்தலங்களிலும் அவைகளை மேய்ப்பேன்.

14. அவைகளை நல்ல மேய்ச்சலிலே மேய்ப்பேன்; இஸ்ரவேலுடைய உயர்ந்த மலைகளில் அவைகளுடைய தொழுவம் இருக்கும்; அங்கே அவைகள் நல்ல தொழுவத்தில் படுத்துக்கொள்ளும்; இஸ்ரவேலின் மலைகளின்மேல் நல்ல மேய்ச்சலை மேயும்.

15. என் ஆடுகளை நான் மேய்த்து, அவைகளை நான் மடக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

முடிவுரை:

மேற்கண்ட வசனங்களை பார்க்கும் போது, பல இடங்களில் யெகோவா தேவன் தம்மை 'ஒரு மேய்ப்பராக' காட்டிக்கொள்வதை பார்க்கலாம். மேய்ப்பன் என்பது தம் மக்களை பாதுகாக்கும் ஒரு சிறந்த‌ வேலையாகவும் தேவன் பார்க்கிறார். இப்படி செய்வது தம் கடமையென்று பார்க்கிறார், இதனால் தம் அன்பை காட்டுகிறார். மக்களை படைத்தால் மட்டும் போதுமா, அவர்களை பராமரிக்கவேண்டாமா? பாதுகாக்க வேண்டாமா?

முஸ்லிம்களே, உங்கள் அல்லாஹ்வை நீங்கள் 'என் மேய்ப்பான்' என்று சொல்லமுடியுமா? முந்தைய வேதங்களை கொடுத்தது அல்லாஹ் என்று நீங்கள் நம்பினால், அந்த வேதங்களில் அல்லாஹ் தன்னை 'ஒரு மேய்ப்பனாக வெளிப்படுத்தியிருக்கும் போது' அதனை எப்படி நீங்கள் மறுக்கவோ, மறைக்கவோ முடியும்?

குர்‍ஆன் இறக்கிய போது (கி.பி. 610-632 வரை), அல்லாஹ் தன் மனதை மாற்றிக்கொண்டான் என்று சாக்குபோக்கு சொல்லப்‍போகிறீர்களா? இது அல்லாஹ்விற்கு ஒரு கெட்டப்பெயரை கொண்டுவரும் என்பதை மறக்காதீர்கள்.

அடுத்த கட்டுரையில், இயேசு கூட ஒரு மேய்ப்பராக தம்மை வெளிக்காட்டிய வசனங்களை சுருக்கமாக ஆய்வு செய்வோம்.

தேதி: 26th March 2024


ரமளான் 2024 கட்டுரைகள்

உமரின் பக்கம்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2024ramalan/2024ramalan07.html


வியாழன், 21 மார்ச், 2024

நாள் 6: ஜபூர் 23 - அல்லாஹ் என் மேய்ப்பன் என்று சொல்வது ஷிர்க்கா?

(2024 ரமளான் - ஜபூர் காட்டும் ஸிராத்தல் முஸ்தகீம்)

ரமளான் தியான முந்தைய கட்டுரைகளை படிக்க கீழே சொடுக்கவும்.

  1. நாள் 1 - ஜபூர் காட்டும் ஸிராத்தல் முஸ்தகீம் : (சங்கீதம் காட்டும் சத்திய வழி)
  2. நாள் 2 - ஜபூர் காட்டும் ஸிராத்தல் முஸ்தகீம் : 'தவ்ராத்'ஐ முஸ்லிம்கள் படித்து பாக்கியமுள்ளவர்களாக மாற அல்லாஹ் அழைக்கிறான்
  3. நாள் 3 - சங்கீதம் 1ல் முஹம்மது இல்லை என்பதற்கான நான்கு காரணங்கள்
  4. நாள் 4 - ஜபூர் 22 காட்டும் இறைவழி மஸீஹாவின் மரண துன்பங்கள்
  5. நாள் 5 - வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட ஓர் தங்கப்பழம் ஜபூர் 23

இந்த கட்டுரையில் அல்லாஹ் தன்னை 'ஒரு மேய்ப்பனாக' அடையாளம் காட்டினானா? இல்லையா? என்பதை சான்றுகளோடு காண்போம்.

சங்கீதம் - ஜபூர் 23:

சங்கீதம் - 23 அதிகாரம்சங்கீதம் – 23 - அரபியில்
1. கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.الرَّبُّ رَاعِيَّ فَلاَ يُعْوِزُنِي شَيْءٌ

இறைவன் என் மேய்ப்பன் என்று சங்கீதம் 23 சொல்கிறது. மக்கள் ஆடுகளைப் போலவும், இறைவன் அவர்களை மேய்க்கும் ஒரு நல்ல மேய்ப்பனாகவும் இருக்கிறார் என்றுச் சொல்கிறது.

ஷிர்க்:

'அல்லாஹ் என் மேய்ப்பனாக இருக்கிறான்' என்று சொல்வது, ஷிர்க் என்ற மன்னிக்கமுடியாத பாவம் என்று இஸ்லாமிய அறிஞர்களில் சிலர் கூறுகிறார்கள்.

குர்ஆனில் எந்த ஒரு இடத்திலும் 'அல்லாஹ் ஒரு மேய்ப்பனாக இருக்கிறான்' என்று  சொல்லப்படவில்லை. இதேபோன்று, அல்லாவுக்கு இருக்கும் 99 பெயர்களில் ஒரு பெயரும் 'மேய்ப்பன்' என்று சொல்லப்படவில்லை. மேலும். ஹதீஸ்களிலும் 'அல்லாஹ் ஒரு மேய்ப்பன்' என்று முஹம்மது கூறியதாக பதிவு செய்யப்படவில்லை.

ஜபூரோடு (சங்கீதங்களோடு) முரண்படும் குர்‍ஆன்:

இயேசுவுக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பு (கி.மு. 1000) ஜபூரை தாவூத் என்ற நபிக்கு அல்லாஹ் கொடுத்தான் என்று குர்‍ஆன் சொல்கிறது. இதனை கீழ்கண்ட குர்ஆன் வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன.

குர்‍ஆன் 4:163. (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.

குர்‍ஆன் 17:55. உம்முடைய இறைவன் வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்களைப் பற்றி நன்கு அறிவான்; நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத் திட்டமாக நாம் மேன்மையாக்கியிருக்கிறோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்) கொடுத்தோம்.

குர்‍ஆன் 21:105. நிச்சயமாக நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி) நினைவூட்டிய பின்: "நிச்சயமாக பூமியை (ஸாலிஹான) என்னுடைய நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள் என்று எழுதியிருக்கிறோம்.

(முஹம்மது ஜான் தமிழாக்கம்)

ஜபூரை அல்லாஹ் இறக்கியிருந்தால், குர்‍ஆனையும் அல்லாஹ் இறக்கியிருந்தால், இவைகளுக்கு இடையே ஏன் இந்த முரண்பாடு?

யூதர்கள் ஜபூரை திருத்திவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு:

எப்போதெல்லாம் குர்‍ஆனுக்கும் முந்தைய வேதங்களுக்கும் இடையே முரண்பாடு உள்ளது என்று சுட்டிக்காட்டப்படுமோ, உடனே முஸ்லிம்கள் வைக்கும் முதல் குற்றச்சாட்டு "யூதர்கள் திருத்திவிட்டார்கள்" என்பதாகும்.

இந்த குற்றச்சாட்டில் ஒரு சதவிகிதமாவது உண்மையுள்ளதா என்பதை பார்ப்போம். நம்முடைய கேள்வி என்னவென்றால் "முதலாவதாக, ஏன் யூதர்கள் ஜபூரில் கர்த்தர் என் மேய்ப்பராக இருக்கிறார்" என்று எழுதவேண்டும்?

  • கி.பி. 610ல் முஹம்மது என்ற நபர் வருகிறார், அல்லாஹ் என்ற இறைவனை, அதுவும் பைபிளோடு சம்மந்தப்படுத்தி அறிமுகம் செய்கிறார்.
  • ஆனால், இஸ்லாமுக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பு, ஜபூர் வந்தது, இதனை தாமே இறக்கினோம் என்று அல்லாஹ் சொல்கிறான் (தாவூதின் காலம் கி.மு. 1000).

முஹம்மதுவிற்கு முன்பு வாழ்ந்த யூதர்கள் தங்கள் ஜபூரை மாற்றி எழுதுவதற்கு அவர்களுக்கு என்ன அவசியம் வந்தது? 

முதலாவது ஜபூர் வந்தது, அதன் பிறகு 1500 ஆண்டுகளுக்கு பிறகு குர்‍ஆன் வந்தது மற்றும் முஹம்மதுவும் வந்தார். எப்போது யூதர்கள் இதனை மாற்றி எழுதினார்கள்? முஹம்மதுவிற்கு முன்பா? அப்படியானால், அல்லாஹ்வை விட யூதர்கள் சர்வஞானியாக இருக்கிறாரகள் என்று பொருள் படுகிறது. எதிர்காலத்தில் முஹம்மது என்ற ஒரு நபர் வருவார், தன்னை நபி என்று சொல்லிக்கொள்வார், அல்லாஹ் என்ற இறைவனை அறிமுகம் செய்வார். ஆனால், அல்லாஹ் என்பவன் மேய்ப்பனாக தன்னை காட்டிக்கொள்ளமாட்டான். எனவே, முஹம்மதுவிற்கு மாறு செய்வதற்கு, எதிர்ப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தங்கள் வேதத்தில் "கர்த்தர் என் மேய்ப்பராக இருக்கிறார்" என்று எழுதிக்கொள்வோம் என்று எண்ணி, அவர்கள் இப்படி செய்தார்கள் என்றுச் சொல்வது, ஒரு முட்டாள்தனமான வாதமாகும்.

எனவே யூதர்கள் ஜபூரை மாற்றி எழுதினார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு எந்த ஒரு சரியான சான்றும் இல்லாமல், இந்த வாதம் அடிபட்டுப்போகிறது.

கிறிஸ்தவர்கள் ஜபூரை திருத்திவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு:

அடுத்த படியாக, கிறிஸ்தவர்கள் மாற்றிவிட்டார்கள் என்று கூட முஸ்லிம்கள் கூறக்கூடும். இந்த வாதமும் நிலை நிறகாது.

இதற்கும் கீழ்கண்ட சான்றுகளைச் சொல்லலாம்.

1) இயேசுவிற்கு முன்பு அதாவது கி.பி. முதல் நூற்றாண்டுக்கு முன்பே, பழைய ஏற்பாடு மற்றும் அதிலுள்ள ஜபூர் புத்தகமும் எபிரேய மொழியில் நூற்றுக்கணக்கான பிரதிகள் எடுக்கப்பட்டு, அக்காலத்தில் பல நாடுகளில் பரவியிருந்த யூதர்கள் படித்துக்கொண்டு இருந்தார்கள்.

2) இதே போன்று, இயேசுவிற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே, எபிரேய மொழியிலிருந்து கிரேக்க மொழிக்கு பழைய ஏற்பாடு மொழியாக்கம் (செப்டாஜிண்ட்) செய்யப்பட்டு, கிரேக்கம் பேசும் யூதர்கள் அதனை பயன்படுத்திக்கொண்டு இருந்தார்கள்.

3) சவக்கடல் சுருள்கள் 1947 காலக்கட்டத்தில் கண்டெடுக்கப்பட்டன. இவைகளின் காலக்கட்டமும் இயேசுவிற்கு முன்பு பல ஆண்டுகள் பழையதாகும். இவைகளில் கிடைத்த எபிரேய சங்கீத புத்தகமும் மாற்றப்படாமல் அப்படியே கிடைத்துள்ளது.

குகை 1ல் கிடைத்த சுருள்கள் (சங்கீதம்/ஜபூர் கையெழுத்துப் பிரதிகள்):

எண்

சுருள் பெயர்

சுருள் விவரம் 

பைபிளின் புத்தகமா? (ஆம் / இல்லை)

10

1Q10

Psalms (சங்கீதம்)

ஆம்

11

1Q11

Psalms (சங்கீதம்)

ஆம்

12

1Q12

Psalms (சங்கீதம்)

ஆம்

16

1Q16

Pesher Psalms (சங்கீதம் புத்தகத்தின் விளக்கவுரை)

இது பைபிள் புத்தகத்தின் விளக்கவுரை

குகை 2ல் கிடைத்த சுருள்கள் (சங்கீதம்/ஜபூர் கையெழுத்துப் பிரதிகள்):

எண்

சுருள் பெயர்

சுருள் விவரம்

பைபிளின் புத்தகமா?(ஆம்/இல்லை)

14

2Q14

Psalms (சங்கீதம்)

ஆம்

குகை 3ல் கிடைத்த சுருள்கள் (சங்கீதம்/ஜபூர் கையெழுத்துப் பிரதிகள்):

எண்

சுருள் பெயர்

சுருள் விவரம்

பைபிளின் புத்தகமா?(ஆம்/இல்லை)

2

3Q2

Psalms (சங்கீதம்)

ஆம்

குகை 4ல் கிடைத்த சுருள்கள் (சங்கீதம்/ஜபூர் கையெழுத்துப் பிரதிகள்):

எண்

சுருள் பெயர்

சுருள் விவரம்

பைபிளின் புத்தகமா?(ஆம்/இல்லை)

18

4Q83-98

Psalms (சங்கீதம்)

ஆம்

41

4Q171

Pesher Psalms (எபிரேய மொழியில் சங்கீதம் புத்தகத்தின் விளக்கவுரை)

ஆம் 

42

4Q173

Pesher Psalms (எபிரேய மொழியில் சங்கீதம் புத்தகத்தின் விளக்கவுரை)

ஆம்  

 குகை 5ல் கிடைத்த சுருள்கள் (சங்கீதம்/ஜபூர் கையெழுத்துப் பிரதிகள்):

எண்

சுருள் பெயர்

சுருள் விவரம்

பைபிளின் புத்தகமா?(ஆம்/இல்லை)

5

5Q5

Psalms (சங்கீதம்)

ஆம்

குகை 8ல் கிடைத்த சுருள்கள் (சங்கீதம்/ஜபூர் கையெழுத்துப் பிரதிகள்):

எண்

சுருள் பெயர்

சுருள் விவரம்

பைபிளின் புத்தகமா?(ஆம்/இல்லை)

2

8Q2

Psalms (சங்கீதம்)

ஆம்

குகை 11ல் கிடைத்த சுருள்கள் (சங்கீதம்/ஜபூர் கையெழுத்துப் பிரதிகள்): 

எண்

சுருள் பெயர்

சுருள் விவரம்

பைபிளின் புத்தகமா?(ஆம்/இல்லை)

5

11Q4-9

Psalms (சங்கீதம்)

ஆம்

இப்படி பல்லாயிர பிரதிகள் உலகத்தில் எபிரேய மற்றும் கிரேக்க மொழிகளில் இருக்கும் போது, எப்படி கிறிஸ்தவர்கள் இதனை மாற்றமுடியும்? இதில் வேடிக்கை என்னவென்றால், 1947 காலத்திற்கு பிறகு தான் சவக்கடல் சுருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இப்படியிருக்கும் போது, எப்படி கிறிஸ்தவகர்கள், "உலகத்தில் உள்ள எல்லா ஜபூரை கண்டுபிடித்து, அவைகளை ஒன்று சேர்த்து, "கர்த்தர் என் மேய்ப்பராக" இருக்கிறார்" என்று மாற்றமுடியும்? இது நடைமுறை சாத்தியமற்ற கூற்றாகும். மேலும், யூதர்கள் தங்களிடம் உள்ள பிரதிகளில் மாற்றம் செய்ய எப்படி ஒப்புக்கொள்வார்கள்?

 ஆகையால், இந்த குற்றச்சாட்டும் அடிபட்டு போகிறது.

'ஜபூரில் அல்லாஹ் மேய்ப்பனாக தன்னை வெளிப்படுத்தினான், தாவூது நபியும் அதனை எழுதியும் வைத்துவிட்டார், ஆனால் குர்‍ஆனில் மட்டும் ஏன் அல்லாஹ் ஒரு மேய்ப்பனாக தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளவில்லை?' என்பதாகும்.

இந்த கேள்விக்கு இஸ்லாமிய அறிஞர்கள், இமாம்கள், கல்விமான்கள் பதில் சொல்வார்களா?

சிலர் ஒருவேளை இந்த பதிலை சொல்லக்கூடும், அதாவது "ஜபூரில் அல்லாஹ் தன்னை ஒரு மேய்ப்பன்' என்றுச் சொல்லி, தாவூத் நபிக்கு இறக்கியது உண்மை தான்", ஆனால், அதற்காக, குர்‍ஆனிலும், ஏதாவது ஒரு வசனத்தில் "தன்னை மேய்ப்பன்" என்று அல்லாஹ் அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற அவசியம் இல்லையே!?

இது ஒரு சரியான கூற்றாகும், இதனை நாம் அங்கீகரிக்கலாம். ஆனால், முஸ்லிம்களின் இந்த பதில் உண்மையாக இருந்தால், "அல்லாஹ் ஒரு மேய்ப்பன்" என்றுச் சொல்வது "ஷிர்க்" ஆகாது என்று முஸ்லிம்கள் ஒப்புக்கொள்ளவேண்டும்.

அல்லாஹ் என் மேய்ப்பானாக இருக்கிறான் என்ற ஃபத்வா

அல்லாஹ் என் மேய்ப்பானாக இருக்கிறான், அவன் என்னை நல்ல புல்லுள்ள இடத்தில் மேய்த்து, அமர்ந்த நீர் நிலைகளில் என் தாகத்தை தீர்த்து, எனக்கு பாக்கியத்தை அருளுகிறான் என்றுச் சொல்வது ஷிர்க் ஆகாது என்ற ஃபத்வாவை முஸ்லிம்கள் கொடுப்பார்களா?

அல்லாஹ்வின் 99 பெயர்களும் 23வது ஜபூரும் (சங்கீதமும்)

அல்லாஹ்வின் 99 பெயர்களில் வரும், கீழ்கண்ட பெயர்களின் விளக்கங்கள் சங்கீதம் 23ல் வரும் விளக்கங்கள் போல உள்ளதல்லவா?

  • 6. அல் முஃமின் -  المُؤْمِنُ - அபயமளிக்கிறவன்
  • 7. அல் முஹைமின் - المُهَيْمِنُ – கண்காணிப்பவன்
  • 16. அல் வஹ்ஹாப் - الْوَهَّابُ - கொடையாளன்
  • 17. அர் ரஜ்ஜாக் -  الرَّزَّاقُ – உணவளிப்பவன்
  • 23. அர் ராஃபிஃ - الرَّافِعُ – உயர்த்துவோன்
  • 27. அல் பஸீர் - الْبَصِيرُ – பார்ப்பவன்
  • 42. அல் கரீம் - الْكَرِيمُ - தயாளன்
  • 43. அர் ரகீப் -  الرَّقِيبُ – கண்காணிப்பவன்
  • 52. அல் வகீல் - الْوَكِيلُ – பொறுப்பேற்பவன்
  • 55. அல் வலிய்யு -  الْوَلِيُّ – பாதுகாவலன்
  • 69. அல் காதிர் - الْقَادِرُ - சக்தியுள்ளவன்
  • 70. அல் முக்ததிர் -  الْمُقْتَدِرُ – ஆற்றலுடையவன்
  • 77. அவ்வாலீ -  الْوَالِي – உதவியாளன்
  • 79. அல் பர்ரு - الْبَرُّ - நன்மை செய்கிறவன்
  • 92. அன் நாஃபிஃ -  النَّافِعُ - நற் பயனளிப்பவன்
  • 94. அல் ஹாதி - الْهَادِي - நேர்வழி காட்டுபவன்
  • 98. அர் ரஷீத் - الرَّشِيدُ -  நேர்வழி காட்டுவோன்

Source: அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் (தமிழ் அர்த்தம்) 99

மேற்கண்ட பெயர்களை, முந்தை கட்டுரயில் கொடுக்கப்பட்ட பட்டியலோடு, 23ம் சங்கிதத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.

சங்கீதம் 23:

  • 1. கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.
  • 2. அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்.
  • 3. அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
  • 4. நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
  • 5. என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
  • 6. என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.

முடிவுரை:

இதுவரை பார்த்த விவரங்களின் படி, "ஜபூரில் அல்லாஹ் தன்னை ஒரு மேய்ப்பனாக அடையாளப்படுத்தியுள்ளான் என்பதை முஸ்லிம்கள் அறியவேண்டும்". 

  • அல்லாஹ் ஜபூரை இறக்கவில்லை என்று முஸ்லிம்கள் சொன்னால்,  அல்லாஹ்வை மேய்ப்பன் என்றுச் சொல்வது ஷிர்க் என்று முஸ்லிம்கள் கூறிக்கொள்ளலாம்.
  • ஆனால், ஜபூரை அல்லாஹ் இறக்கினான் என்று குர்‍ஆன் சொல்வதினால், முஸ்லிம்கள் அதனை ஏற்பதினால், "அல்லாஹ் என் மேய்ப்பன்" என்றுச் சொல்வது "ஷிர்க்" இல்லை என்று முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

அடுத்த கட்டுரையில் ஜபூரில் மட்டுமல்ல, பழைய ஏற்பாட்டில் தேவன் தம்மை எப்படி மேய்ப்பராக வெளிப்படுத்தினார் என்பதை ஆய்வு செய்வோம்...

தேதி: 21st March 2024


ரமளான் 2024 கட்டுரைகள்

உமரின் பக்கம்

Source: 2024 ரமளான் - நாள் 6: ஜபூர் 23 - அல்லாஹ் என் மேய்ப்பன் என்று சொல்வது ஷிர்க்கா? (answering-islam.org)


திங்கள், 18 மார்ச், 2024

2024 ரமளான் - ஜபூர் காட்டும் ஸிராத்தல் முஸ்தகீம் - நாள் 4 - ஜபூர் 22 காட்டும் இறைவழி மஸீஹாவின் மரண துன்பங்கள்

ரமளான் தியான முந்தைய கட்டுரைகளை படிக்க கீழே சொடுக்கவும்.

ஜபூர் (சங்கீதம்) 22ல் உள்ள சில வசனங்களில் பொதிந்திருக்கும் முன்னறிவிப்புக்கள் பற்றி ஆய்வு செய்வோம்.

ஜபூரின் "இயேசுவின் சிலுவை மரணம்" பற்றிய முன்னறிவிப்பு

இயேசு சிலுவையில் அறையப்படவில்லையென்றும், அந்த இடத்தில் அறையப்பட்டவர் வேறு ஒரு நபர் என்றும், இந்த ஆள்மாறாட்டத்தை அல்லாஹ் செய்தான் என்றும் குர்‍ஆன் சொல்கிறது. 

இதே குர்‍ஆன் தான் "தாவூதுக்கு ஜபூரைக் கொடுத்தோம்" என்றும் சொல்கிறது.  தாவூதின் காலம் கி.மு. 1000 ஆகும், அதாவது இயேசுவிற்கு 1000 ஆண்டுகளுக்கு வாழ்ந்த தாவீதுக்கு அல்லாஹ் ஜபூரை கொடுத்தான். அந்த ஜபூரில் பல முன்னறிவிப்புக்கள் மேசியாவை (மஸீஹாவை)ப் பற்றி உள்ளது. அதில் மிகவும் முக்கியமான முன்னறிவிப்பு, மஸீஹாவின் மரணம் பற்றியதாகும். சரி, ஜபூர் இதைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை முதலில் படிப்போம்.

சங்கீதம் 22:1

என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?

இதே வார்த்தைகளைத் தான் இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது மகாசத்தமாய் கூப்பிட்டார்  என்று, ஜபூருக்கு 1000 ஆண்டுகளுக்கு பின்பு வந்த மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்தி நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • மத்தேயு 27:46 & மாற்கு 15:34: அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் (ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி)

இயேசு இந்த ஒரு முறை மட்டுமே "என் தேவனே! என் தேவனே!" என்று கூப்பிட்டுள்ளார், மற்ற நேரங்களில் எல்லாம் அவர்:

  • "என் பிதா" (மத்தேயு 26:42) என்றும், 
  • "பிதா" (யோவான் 12:28) என்றும், 
  • இன்னும் "பரமண்டலங்களில் இருக்கிற பிதா"(மத்தேயு 5:48,  லூக்கா 11:13) 

என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.

தம் எல்லா வாழ்நாட்களிலும், பிதா என்று அழைத்தவர், இந்த ஒரு முறை மட்டுமே, பிதா தம்மை விட்டு முகத்தை திருப்பிக்கொண்டதை உணர்ந்து, இயேசு "என் தேவனே" என்று கூப்பிட்டுள்ளார். ஏன் பல கோடி உலக மக்கள் இயேசுவை தெய்வமாக வணங்குகிறார்கள்? அப்படி என்ன விசேஷித்த செயலை இந்த சிலுவை மரணம் செய்தது? இந்த சிலுவை நிகழ்ச்சியின் விளைவுகள் உலகில் என்னென்ன நடந்துள்ளது என்பதை முஸ்லிம்கள் கவனிக்கவேண்டும், சிந்திக்கவேண்டும்.

இந்த 22ம் சங்கீதத்தின் அடுத்த முக்கிய வசனம் 8ம் வசனமாகும்.

சங்கீதம் 22:8

22:8. கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும்; இவன்மேல் பிரியமாயிருக்கிறாரே, இப்பொழுது இவனை மீட்டுவிடட்டும் என்கிறார்கள்.

மேசியாவிற்கு நடக்கவிருப்பதை தாவீது முன்னறிவிப்பாக ஜபூரில் சொல்லியுள்ளார். ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு, யூத தலைவர்கள், இயேசு சிலுவையில் தொங்குவதைக் கண்டு, தாங்கள் வெற்றிபெற்றதாக நினைத்து, ஜபூரில் தாவீது சொன்ன அதே வார்த்தைகளை தங்களை அறியாமலேயே சொல்லிவிட்டார்கள், மேசியா பற்றிய தீர்க்கதரிசன வசனங்கள்  அச்சயமத்தில் நிறைவேறிக்கொண்டு இருப்பதை அவர்கள் அறியவில்லை.

மத்தேயு 27:41-43

41. அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் பரியாசம்பண்ணி:

42. மற்றவர்களை ரட்சித்தான்; தன்னைத்தான் ரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம்.

43. தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள்.

அடுத்தபடியாக, தாவீது ஜபூரில் கூறும் போது:

சங்கீதம் 22:14-15

14. தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று.

15. என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூளிலே போடுகிறீர்.

இவ்வசனங்களை தம்மைப் பற்றித்தான் தாவீது கூறுகின்றார் என்று கூறுவதற்கில்லை.

தாவீதின் காலத்தில், சிலுவையில் அறைந்துக்கொல்லுதல் என்ற தண்டனையில்லை என்பதை நாம் அறியவேண்டும், மேலும், சிலுவையில் அறைப்பட்ட ஒரு மனிதன் படும் துன்பங்களைத் தான் தாவீது 1000 ஆண்டுகளுக்கு முன்பு ஜபூரில் முன்னறிவித்துள்ளார்.

மேலும் 16வது வசனத்தில் சொல்லப்பட்ட வரிகளை பார்த்தால், இயேசுவை சிலுவையில் அறையப்படும் போது, நேரடியாக பார்த்தவர் போல தாவீது ஜபூரில் பதிவு செய்துள்ளார், அதாவது "என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள்" என்று ஜபூர் பதிவு செய்கிறது.

சங்கீதம் 22:16

16. நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள்.

கடைசியாக, 18வது வசனத்தில்:

சங்கீதம் 22:18

18. என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் பேரில் சீட்டுப்போடுகிறார்கள்.

ஜபூரில் தாவீது பாடிய இந்த பாடலின், இந்த வரிகள் பற்றி 10 நூற்றாண்டுகளாக, யூத தலைவர்களால், இது யாரைக் குறித்து சொல்லப்படுகிறது என்று குழம்பியிருந்தார்கள். தாவீதைப் பற்றியோ, அல்லது இதர தீர்க்கதரிசிகள் பற்றியோ இது போல, ஒருவருடைய உடைகளுக்காக சீட்டு போட்டு, அவைகளை தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டதை யாரும் கேள்விப்படவில்லை. இப்படிப்பட்ட நிகழ்ச்சி எந்த ஒரு தீர்க்கதரிசிக்கும் நடக்கவில்லை.

இதற்கான பதில், மேசியாவை சிலுவையில் அறையப்படும் போது, ரோம இராணுவத்தினர் 'இயேசுவின் உடையின் மேல் சீட்டு போட்டு, அவரது அங்கியை தங்களுக்குள் பகிர்ந்துக்கொண்டாரகள்' என்ற நிகழ்ச்சி நடக்கும் போது தான், எல்லோருக்கும் தாவீதின் ஜபூர் 22:18ம் வசனம் புரிந்தது.

யோவான் 19:23-24

23. போர்ச்சேவகர் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய வஸ்திரங்களை எடுத்து, ஒவ்வொரு சேவகனுக்கு ஒவ்வொரு பங்காக நாலு பங்காக்கினார்கள்; அங்கியையும் எடுத்தார்கள், அந்த அங்கி, தையலில்லாமல் மேலே தொடங்கி முழுவதும் நெய்யப்பட்டதாயிருந்தது.

24. அவர்கள்: இதை நாம் கிழியாமல், யாருக்கு வருமோ என்று இதைக்குறித்துச் சீட்டுப்போடுவோம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்மேல் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகப் போர்ச்சேவகர் இப்படிச் செய்தார்கள்.

ரோம போர்ச்சேவகர், தங்கள் காலத்துக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரவேலின் ராஜாவாக இருந்த தாவீது மூலமாக இறைவன் ஜபூரில் சொன்ன தீர்க்கதரிசனங்களை "மேற்கண்ட வசனத்தில் நிறைவேற்றிக்கொண்டு இருந்தார்கள்". அவர்களை பொறுத்தமட்டில், ஒரு புதிய துணி(அங்கி) தங்களுக்கு கிடைத்தது, ஆனால், உலகத்துக்கோ, அந்த தருணம் இரட்சிப்பை கொடுக்கும் நுழைவாயிலாக இருந்தது.

இதுவரை பார்த்த சில வசனங்கள் மூலமாக அறிவதென்ன? ஜபூரின் 22ம் பாடல் சொல்லும் மஸீஹா பற்றிய முன்னறிப்பு என்ன? அவரை காயப்படுத்துவார்கள், கைகளிலேயும் கால்களிலும் உறுவகுத்துவார்கள், அவரது உடைகள் மீது சீட்டு போட்டு, பங்கிட்டுக்கொள்வார்கள் என்பதாகும்.

முஸ்லிம்களின் வாதம்: இயேசுவின் இடத்தில் இன்னொருவரை அல்லாஹ் மாற்றினான் என்று முஸ்லிம்கள் கூறுவார்கள். இந்த வாதம் எவ்வளவு பெரிய பாதிப்பை இஸ்லாமுக்கு கொடுக்கும் என்பதை அறிய கீழ்கண்ட கட்டுரையை படிக்கவும்:

முடிவுரை:

ஜபூரை அல்லாஹ் தாவூதுக்கு இறக்கியதாக குர்‍ஆன் சொல்கிறது. அந்த ஜபூரில் என்னவுள்ளது என்பதை அறிய முஸ்லிம்கள் விரும்புவதில்லை, தங்கள் இறைவன் கொண்டுவந்ததையே முஸ்லிம்கள் புறக்கணிக்கிறார்கள். 

இந்த கட்டுரையில், ஜபூர் 22வது அத்தியாயத்தில் உள்ள சில வசனங்களை நாம் பார்த்தோம்.

1000 ஆண்டுகளுக்கு பிறகு மஸீஹாவிற்கு நடக்கும் நிகழ்வுகள் பற்றி தாவூதுக்கு எப்படி தெரியும்? அவைகள் மேசியா பற்றிய தீர்க்கதரிசன வசனங்களே! அவைகள் இயேசுவின் வாழ்வில் துள்ளியமாக நிறைவேறியதை நாம் ஆய்வு செய்துள்ளோம்.

ஜபூரை படிக்க விருப்பமுள்ளவர்கள்: இந்த தொடுப்பை சொடுக்கவும்.

அடுத்த கட்டுரையில், ஜபூர் காட்டும் நேரான வழிகள் பற்றி மேலும் ஆய்வு செய்வோம்...

தேதி: 13th March 2024


ரமளான் 2024 கட்டுரைகள்

உமரின் பக்கம்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2024ramalan/2024ramalan04.html