ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

செவ்வாய், 31 டிசம்பர், 2019

முஸ்லிம்களே, இஸ்லாமின் படி ஈஸா தம் அழைப்பு பணியில் படுதோல்வி அடைந்தாரா?

முஸ்லிம்களே, இதை சிந்தித்துப் பாருங்கள்.

1. ஈஸா ஒரு இஸ்லாமிய நபி என்றும் இஸ்லாமின் அழைப்புப்பணியை செய்ய வந்தார் என்றும் நீங்கள் நம்புகிறீர்கள். ஆனால், இவருடைய அழைப்பு பணியின் மூலமாக‌ ஒருவரும் இஸ்லாமை ஏற்கவில்லை. கி.பி 1 ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் வேரூன்றியதாக எந்த பதிவும் சரித்திரத்தில் இல்லை.

2. ஈஸாவிற்கு ஒரு புத்தகம் கொடுக்கப்பட்டதாக நீங்கள் நம்புகிறீர்கள். ஆனால், அந்த புத்தகம் இப்போது உலகில் இல்லை. அல்லாஹ் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட  அந்த புத்தகத்தை ஈஸா எப்படியோ தொலைத்துவிட்டார் அல்லது அதனை பாதுகாக்க தவறிவிட்டார். ஆச்சரியம் என்னவென்றால் அல்லாஹ் கொடுத்த அந்த புத்தகத்தின் ஒரு  அத்தியாயத்தையும் இன்று ஒரு நபரும் உலகில் அறியமாட்டார்கள்.

3. ஈஸாவை பின்பற்றியவர்கள் (சீடர்கள்) இஸ்லாமிய அழைப்புப்பணியை (தாவா) செய்யவில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் அல்லாஹ்வால் ஏமாற்றப்பட்டு, அல்லாஹ் சொல்லாத ஈஸா சொல்லாத மார்க்கத்தை பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்கள். ஒன்று மட்டும் இங்கு சொல்லவேண்டி உள்ளது, அதாவது அல்லாஹ் இறக்கிய புத்தகம் உலகில் இன்று பாதுகாக்கப்படவில்லை, ஆனால், இவர்கள் உருவாக்கிய புத்தகங்கள் இதுவரைக்கும் காக்கப்பட்டுள்ளது. அந்த புத்தகங்களை படித்தால் அல்லாஹ் சொல்லாத செய்திகள் தான் உள்ளது. மேலும் ஈஸா தான் இறைவன் என்று அந்த புத்தகங்கள் சொல்கின்றன. அதனை முஸ்லிம்கள் ஷிர்க் என்றுச் சொல்கிறார்கள். எப்படிப்பட்ட குழப்பத்தை அல்லாஹ் செய்திருக்கிறான் பாருங்கள்.

4. முஸ்லிம்களே, ஈஸா பற்றி இப்படியும் நம்புகிறீர்கள். எந்த மக்களுக்கு ஈஸா இஸ்லாமிய அழைப்புப்பணி (தாவா பணி) செய்ய வந்தாரோ, அந்த மக்களே அவரை கொலை செய்ய முயற்சித்தார்கள். அல்லாஹ் அனுப்பிய ஈஸா உதவியற்ற நிலையில் இருந்தார். ஆனால், அல்லாஹ் ஒரு கோழையைப்போல அவரை காப்பாற்றி, அவரது இடத்தில் வேறு ஒரு நபரை இறக்கிவிட்டான். இப்படி செய்து அல்லாஹ் உலக மக்கள் அனைவரையும் முட்டாள்களாக்கிவிட்டான்.

5. கடைசியாக, தான் செய்த குழப்பங்களை சரி செய்ய அல்லாஹ் ஒரு காரியத்தை கடைசியாகச் செய்தான். இதற்காக அல்லாஹ் தன்னுடைய கடைசி தீர்க்கதரிசியை அனுப்பி, முந்தைய வேதங்கள் தொலைந்துவிட்டன அல்லது கறைபடுத்தப்பட்டுவிட்டன என்றுச் சொல்லி, ஒரு புதிய வேதத்தை கொடுத்தான். அல்லாஹ் அனுப்பிய ஈஸா அடைந்த தோல்வியை சரி செய்ய, இந்த கடைசி நபி அனுப்பப்பட்டதாக நீங்கள் நம்புகிறீர்கள்.

முஸ்லிம்களே! இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். அல்லாஹ் அனுப்பிய ஈஸா எப்படிப்பட்ட நபியாக இருந்தார்? ஈஸா இஸ்லாமிய அழைப்புப்பணியில் ஒரு சதவிகிதம் (1%) கூட வெற்றிப்பெற்றதாகத் தெரியவில்லையே! இப்படி படுதொல்வி அடைந்த ஈஸாவை நீங்கள் கௌரவப்படுத்துகிறீர்கள், அன்பு செலுத்துகிறீர்கள் என்று ஒரு பக்கம் சொல்கிறீர்கள். ஆனால், இன்னொரு பக்கம், அவர் படுதோல்வி அடைந்ததாகச் குர்‍ஆனும் இஸ்லாமும் சொல்கிறது. இது அவருக்கு அவமானமில்லையா!

உமரின் முடிவுரை:

அல்லாஹ் அனுப்பிய ஈஸாவுடைய பிறப்பு விசேஷமானது என்று நம்புகிறீர்கள். ஆணின் துணையின்றி இயற்கைக்கு அப்பாற்பட்ட விதமாக அவர் பிறந்தார் என்று நம்புகிறீர்கள். வேறு எந்த ஒரு  அல்லாஹ்வின் நபியும் செய்யாத அற்புதங்கள் அவர் செய்ததாக நம்புகிறீர்கள், இருந்தபோதிலும் அவர் மிகப்பெரிய தோல்வி அடைந்தார் என்று இஸ்லாம் சொல்கிறது.

ஈஸா பற்றி குர்‍ஆன் சொல்லும் விவரங்கள் அனைத்தையும் சேர்த்து பார்க்கும் போது ஒரு படுதோல்வி அடைந்த நபியாக ஈஸா இருக்கிறார். இதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? இல்லை, ஈஸா தோல்வி அடையவில்லை! என்று சொல்வீர்களானால், கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்து இஸ்லாம் உலகில் இருந்திருக்கவேண்டுமே! அவருக்கு அல்லாஹ் கொடுத்த புத்தகம் உலகில் இருந்திருக்கவேண்டுமே! அல்லாஹ்வின் பெயர் தாங்கிய விளக்கவுரைகள், கடிதங்கள் இஸ்ரேல் நாட்டிலிருந்து எழுதப்பட்டிருக்கவேண்டுமே! ஆனால், உண்மையில் இப்படிப்பட்ட ஒன்றையும் சரித்திரம் பதிவு செய்துவைக்கவில்லையே!

  • முஸா நபிக்கு இறக்கப்பட்ட தவ்ராத், தாவூத் நபிக்கு (500+ ஆண்டுகள்) பாதுகாக்கப்பட்டு கிடைத்தது.
  • தாவூத் நபிக்கு கொடுக்கப்பட்ட ஜபூர், ஈஸா நபிக்கு (1000+ ஆண்டுகள்) பாதுகாக்கப்பட்டு கிடைத்தது.
  • ஆனால், ஈஸா நபிக்கு அல்லாஹ் கொடுத்த புத்தகம் முஹம்மதுவிற்கு, 600+ ஆண்டுகள்  பாதுகாக்கப்பட்டு கிடைத்திருக்கவேண்டுமல்லவா!

ஈஸாவிற்கு அல்லாஹ் கொடுத்த புத்தகம் பாதுகாக்கப்படவில்லை என்று முஸ்லிம்கள் சொல்கிறீர்கள், கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்து ஒரு முஸ்லிமும் வாழ்ந்ததாக, அல்லாஹ்வை தொழுததாக சரித்திரம் இல்லை, அப்படியானால் இஸ்லாமிய ஈஸா ஒரு படுதோல்வி அடைந்த அல்லாஹ்வின் நபி என்று சொல்லலாமா?

ஆங்கில மூலம்: www.faithbrowser.com/was-isa-pbuh-a-failure/


ஃபெயித் ப்ரவுசர் தள இதர கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள் பக்கம்

திங்கள், 30 டிசம்பர், 2019

2019 கிறிஸ்துமஸ்: முஹம்மது முதல் சிலுவைப்போர் வரை - வரைபடங்கள் மற்றும் விளக்கங்கள்: பாகம் 3

(ஜிஹாதின் அடிச்சுவடுகளில் சிலுவைப்போர் - தொடர் கட்டுரைகள்)

சிலுவைப்போர்கள் பற்றிய முந்தைய தொடர் கட்டுரைகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடுப்புக்களில் படிக்கலாம்.

மேற்கண்ட இரண்டாம் தொடரில் முஹம்மதுவின் மரணம் தொடங்கி, முதல் சிலுவைப்போர் தொடங்கும்வரையில் "கிறிஸ்தவ மற்றும் இதர நாடுகள் மீது" இஸ்லாமியர்கள் தொடுத்த போர்கள், அழித்த தேவாலயங்கள் போன்ற விவரங்களை ஆண்டு வரிசையில் கண்டோம். இந்த கட்டுரையில், அதே விவரங்களை இன்னும் தெளிவாக புரியும் வண்ணம் வரைபடங்கள் மற்றும் வீடியோக்கள் மூலமாக விளக்கவுள்ளோம். இஸ்லாமிய போர்களின் விவரங்களை படங்கள் மூலமாக சுலபமாக அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையில் பதியப்படும் படங்கள் உதவும்.

இதுமட்டுமல்லாமல், இக்கட்டுரையில்  எத்தனை சிலுவைப்போர்கள் நடந்தன? எந்தெந்த ஆண்டுகளில் அவைகள் நடந்தன, அவர்கள் கைப்பற்றிய நாடுகள் யாவை?  போன்றவைகளையும் படங்கள் மூலமாக காண்போம்.

தலைப்புக்கள்:

  1. மதினாவில் 10 ஆண்டுகளில் முஹம்மது கட்டளையிட்ட போர்கள்/வன்முறைகள் (622-632)
  2. முஹம்மதுவின் மரணம் தொடங்கி, முதல் நான்கு (ரஷீதுன்) கலீஃபாக்கள் நடத்திய போர்கள் மற்றும் கைப்பற்றிய நாடுகள் (632-660)
  3. ஐந்தாவது கலீஃபா தொடங்கி, சிலுவைப்போர் வரை இஸ்லாமிய அரசுகள்  நடத்திய போர்கள் மற்றும் கைப்பற்றிய நாடுகள் (660-1095)
  4. எத்தனை சிலுவைப்போர்கள் நடந்தன? எந்தெந்த ஆண்டுகளில் நடந்தன‌?

இஸ்லாமிய புள்ளிவிவரங்க‌ள்:

இக்கட்டுரையில்  பயன்படுத்தப்பட்ட விவரங்கள் இஸ்லாமிய சரித்திர நூல்களிலிருந்தும், குர்‍ஆன் மற்றும் ஹதீஸ்களிலிருந்தும், இஸ்லாமிய விளக்கவுரைகளிலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தும் இணையத்தில் முக்கியமாக விக்கிபீடியா கலைக்களஞ்சியத்தில் கிடைக்கின்றன. அவைகளின் தொடுப்புக்களும் கொடுக்கப்பட்டுள்ளன, வாசகர்கள் நாம் பதிக்கும் விவரங்களின் உண்மைத்தன்மையை சரி பார்த்துக்கொள்ளலாம். 

1) மதினாவில் 10 ஆண்டுகளில் முஹம்மது கட்டளையிட்ட போர்கள்/வன்முறைகள்  (622-632)

முஹம்மது 63 ஆண்டுகள் வாழ்ந்தார். தம்முடைய 40வது வயதில் "தான் ஒரு நபி (தீர்க்கதரிசி)" என்று பிரகடனப்படுத்தினார். அதன் பிறகு 12 லிருந்து 13 ஆண்டுகள் மக்காவில் வாழ்ந்தார். பிறகு மதினாவிற்கு இடம்பெயர்ந்து (ஹிஜ்ரி ஆண்டு தொடக்கம்) அதிக பட்சமாக 10 ஆண்டுகள் வாழ்ந்தார்.

மதினாவில் வாழ்ந்த அந்த 10 ஆண்டுகளில் அவர் போர்களிலும், வழிப்பறி கொள்ளைகளிலும், வன்முறை செயல்களிலும் ஈடுபட்டார். அவைகள் பற்றி இப்போது காண்போம். குர்‍ஆனின் அத்தியாயங்களும் மக்கீ மற்றும் மதனீ என்று பிரிக்கப்பட்டதும், முஹம்மதுவின் இருப்பிடத்தை (வாழ்ந்த ஊரினை) கருத்தில் கொண்டு தான் என்பது கவனிக்கத்தக்கது.

இந்த தொடர் கட்டுரைகளில் "முஹம்மதுவின் வன்முறைகள் என்று குறிப்பிடும் போது",  அது முஹம்மது செய்த கீழ்கண்ட காரியங்களை குறிக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

  • வியாபார கூட்டங்களை வழிமறித்து அவர்களின் உடைமைகளை கொள்ளையிட்டது (Raids)
  • இவரே  வலியச்சென்று போர் செய்தது (Offence)
  • எதிரிகள் இவர் மீது போர் தொடுக்கும் போது இவர் போரிட்டது (Defence)
  • தன்னை எதிர்த்து பேசியவர்களை ஆட்களை அனுப்பி கொலை செய்தது 

கீழ்கண்ட அட்டவணையைப் பார்க்கவும். முஹம்மது மதினாவில் வாழ்ந்த 10 ஆண்டுகளில் அவர் கட்டளையிட்ட‌ வன்முறைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. மொத்தம் 95 வன்முறைகள் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

10 ஆண்டுகளில், 95 வன்முறைகள் என்றால், ஒரு ஆண்டுக்கு 9.5 வன்முறைகள் என்று கணக்கு வருகின்றது. புரியும் படி சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், முஹம்மது மதினாவிற்கு வந்த பிறகு ஒவ்வொரு ஆறு வாரங்களுக்கு (ஒன்றரை மாதத்தில்) ஒரு வன்முறையில் ஈடுபட்டுள்ளார். 

கீழ்கண்ட விக்கிபீடியா  தொடுப்பில் முஹம்மதுவின் வன்முறைச் செயல்கள் 95ஐ வரிசைப் படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. அதனை நான் ஹிஜ்ரி ஆண்டு வரிசையில் தயாரித்துள்ளேன்.  கிழேயுள்ள அட்டவணையை காணவும்.

Source: List of expeditions of Muhammad – Wikipedia 

அட்டவணை 1: முஹம்மது 10 ஆண்டுகளில் பங்கு பெற்ற கட்டளையிட்ட போர்கள்/வன்முறைச் செயல்கள் ஹிஜ்ரி ஆண்டு வரிசையில்

முஹம்மது மட்டும் பங்கு பெற்ற வன்முறைகளை கூட்டினால், அது 28 வருகின்றது. அதாவது மதினாவில் வாழ்ந்த 10 ஆண்டுகளில், முஹம்மது பங்கு பெற்ற வன்முறைகள் 28 ஆகும். மீதமுள்ள 67 வன்முறைகளில் முஹம்மது பங்கு பெறவில்லை, தம்முடைய சஹாபாக்களின் தலைமையில் சண்டையிடும் படி கட்டளையிட்டார்.

புகாரி ஹதீஸின்படி 19 போர்களில் முஹம்மது பங்கு பெற்றார் என்பது தவறா?

புகாரி ஹதீஸ் எண்கள்: 3949, 4404 & 4471 ன்படி முஹம்மது பங்கு பெற்ற போர்கள் 19 என்று வருகிறதே, ஆனால் 28 என்று நாம் சொல்வது ஏன் என்ற கேள்வி சிலருக்கு  எழலாம். புகாரி சொல்லும் கணக்கு முஹம்மது போருக்குச் சென்று சண்டையிடுவதைப் பற்றித் தான். ஆனால், இஸ்லாமிய சரித்திரத்தின் படி முஹம்மது பங்கு பெற்ற வழிப்பறி கொள்ளைகள், பழிக்கு பழிவாங்கும் சண்டைகள், போர்கள் என்று அனைத்தையும் கூட்டும் போது 28 வருகின்றது (இந்த பட்டியலில் முஹம்மது பங்கு பெற்ற விவரங்களை சரி பார்க்கவும்: en.wikipedia.org/wiki/List_of_expeditions_of_Muhammad)

புகாரி ஹதீஸ்: 3949. அபூ இஸ்ஹாக்(ரஹ்) அறிவித்தார்

நான் ஸைத் இப்னு அர்கம்(ரலி) அவர்களுக்கும் அருகிலிருந்தபோது, 'நபி(ஸல்) அவர்கள் புரிந்த போர்கள் எத்தனை?' என்று அவர்களிடம் வினவப்பட்டது. 'பத்தொன்பது' என்று அவர்கள் பதிலளித்தார்கள். 'நபி(ஸல்) அவர்களுடன் நீங்களும் பங்கெடுத்த போர்கள் எத்தனை?' என்று வினவப்பட்டபோது, 'பதினேழு' என்றார்கள். 'இவற்றில் முதல் போர் எது?' என்று நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள், 'உஸைரா' அல்லது 'உஷைர்' என்று பதிலளித்தார்கள்.

மேற்கண்ட அட்டவணையை பார் சார்ட் (Bar Chart) வரைபடமாக பார்க்கும் போது, விவரம் இன்னும்  தெளிவாக புரியும்:

வரைபட விளக்கம் - உதாரணம்:

ஹிஜ்ரி ஆண்டு 1: மதினாவிற்கு முஹம்மது ஹிஜ்ரத் செய்த பிறகு முதலாம் ஆண்டில், நான்கு வன்முறைகளை கட்டளையிட்டுள்ளார். அதில் ஒரு வன்முறையில் முஹம்மது சுயமாக பங்கு பெற்றுள்ளார், மீதமுள்ள 3 வன்முறைகளில் அவர் பங்கு பெறவில்லை, முஸ்லிம்கள் மட்டுமே பங்கு பெற்றுள்ளனர்.

ஹிஜ்ரி ஆண்டு 8: முஹம்மது மதினாவிற்குச் சென்ற 8ம் ஆண்டை கவனித்தால், முஹம்மது கட்டளையிட்ட வன்முறைச் செயல்கள் 20 ஆகும், அதில் 4ல் அவரே சுயமாக பங்கு பெற்றுள்ளார்.

2) முஹம்மதுவின் மரணம் தொடங்கி, முதல் நான்கு (ரஷீதுன்) கலீஃபாக்கள் நடத்திய போர்கள் மற்றும் கைப்பற்றிய நாடுகள்

முதல் தலைப்பில் முஹம்மது  தம் வாழ்நாளில் (கடைசி 10 ஆண்டுகளில்)  பங்கு பெற்ற போர்கள் மற்றும் வன்முறைச் செயல்களைக் கண்டோம். இந்த தலைப்பில் அவருக்கு  அடுத்து வந்த நான்கு கலீஃபாக்கள்(முஸ்லிம் தலைவர்கள்) புரிந்த போர்களைப் பற்றி சுருக்கமாக காண்போம். 

சிலுவைப்போர்கள் பற்றி அறியவேண்டிய இடத்தில் ஏன் இஸ்லாமிய போர்கள்  பற்றி  பார்க்கிறோம் என்று சில வாசகர்களுக்கு கேள்வி எழலாம். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், இஸ்லாமியர்கள் முதலில் கிறிஸ்தவ நாடுகளில் மீது போர் தொடுத்து அவைகளை ஆக்கிரமித்துக் கொண்டதால் தான், நீண்ட காலத்துக்குப் பிறகு கிறிஸ்தவர்கள் கொதித்தெழுந்து எதிரடி கொடுத்தார்கள் (முஸ்லிம்களின் கணக்குப்படி பார்த்தால், கிறிஸ்தவர்கள் ரொம்ப லேட்டாக பதிலடி கொடுத்திருக்கிறார்கள் என்று அர்த்தம். முஸ்லிம்களாக இருந்திருந்தால், உடனே அடி விழுந்திருக்கும்).

அஸ்திபாரத்தை புரிந்துக்கொள்ளாமல், அதன் மீது கட்டப்பட்ட மாளிகையை புரிந்துக்கொள்ளமுடியாது. அஸ்திபாரத்தின் ப்ளூ பிரிண்டைப் பார்த்தல் தான் மாளிகை ஏன் இப்படி கட்டப்பட்டுள்ளது(சிலுவைப்போர்கள் ஏன் தொடங்கப்பட்டன) என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும்.

முதல் கலீஃபா: அபூ பக்கர் (கி.பி. 632-634)

முஹம்மது மரித்த பிறகு அரவது நெருங்கிய தோழர் அபூ பக்கர் அவர்கள் முதல் இஸ்லாமிய கலீஃபாவாக (ஆட்சியாளராக) நியமிக்கப்படுகின்றார். ஒருமனதாக முஸ்லிம்கள் இவரை நியமிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இஸ்லாமின்படி,  முஹம்மது ஒரு நபியாக இருந்தும், தன்னுடைய மரணத்துக்கு பிறகு யார் இஸ்லாமிய ஆட்சியாளராக இருக்கவேண்டும் என்று சொல்லாமல் மரித்துவிடுகின்றார். இதனால் நாற்காலியில் யார் உட்காரவேண்டும் என்ற வாக்குவாதங்கள் சஹாபாக்களின் இடையில் உண்டானது. கடைசியாக அரைகுறை மனதோடு முஸ்லிம்கள் அபூ பக்கரை தலைவராக ஒப்புக்கொள்கிறார்கள்.

இவர் இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார், 634ம் ஆண்டு மரித்துவிடுகின்றார்.

இந்த இரண்டரை ஆண்டுகளில் இவர் என்ன செய்தார்? பல நாடுகளுக்கு இஸ்லாமிய ஊழியர்களை அனுப்பி இஸ்லாமிய அழைப்புப்பணி செய்தாரா? இஸ்லாமிய அழைப்புப் பணிக்கு எவ்வளவு பணம் இவரால் செலவிடப்பட்டது? இதற்கெல்லாம் பதில் முஸ்லிம்களிடம் இல்லை. ஆனால், இவர் எத்தனை போர்களை புரிந்தார், எந்தெந்த பகுதிகளை இஸ்லாமிய ஆட்சிக்குள் கொண்டுவந்தார் போன்ற விவரங்கள் கிடைக்கும்.

சரி, அபூ பக்கர் அவர்கள் புரிந்த போர்கள்/வன்முறைகளை  ஆண்டு வரிசையாக கீழ்கண்ட படத்தில் காண்போம். இந்த விவரங்க‌ள்  இஸ்லாமிய சரித்திர நூல்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது, சரி பார்க்க  விரும்புகிறவர்கள் கொடுக்கப்பட்ட விக்கிபீடியா தொடுப்பை சொடுக்கவும்.

கீழ்கண்ட அட்டவணைப் படங்களை கவனியுங்கள். 

முஹம்மதுவிற்கு முன்பு அரேபியா எப்படி இருந்தது என்பதை முதலாவது படம் காட்டுகின்றது. முஹம்மது மதினாவிற்கு சென்ற ஆண்டிலிருந்து (622), முஹம்மது மரிக்கும் போது, அதாவது 632ம் ஆண்டு வரை பத்து ஆண்டுகளில் முஹம்மது கைப்பற்றிய அரேபிய தீபகர்ப்பத்தை இரண்டாம் படம் காட்டுகின்றது. மூன்றாம் படத்தில் முதல் கலீஃபா அபூ பக்கர் அவர்கள் கைப்பற்றிய நாடுகள் குறிக்கப்பட்டுள்ளது. முஹம்மது கைப்பற்றிய நாடுகளை அபூ பக்கர் இன்னும் விருத்தி செய்தார். 

இரண்டாம் கலீஃபா உமர் (634 - 646)

முதல் கலீஃபா அபூ பக்கர் மரித்த பிறகு உமர் இரண்டாம் கலீஃபாவாக பதவி ஏற்றார், இவர் 634 லிருந்து 644 வரை (10 ஆண்டுகள் மற்றும் சில மாதங்கள்) ஆட்சி புரிந்தார். இவர் தம்முடைய 10 ஆண்டு கால ஆட்சியில், இன்னும் அனேக நாடுகளை ஆக்கிரமித்தார். முக்கியமாக, எருசலேமை இவர் கைப்பற்றினார் (637). கிறிஸ்தவ பைசாந்திய ஆட்சியாளரிடமிருந்து இஸ்லாம் எருசலேமை கைப்பற்றியது. சிலுவைப் போர்களின் முக்கிய நோக்கமாக, கிறிஸ்தவ புனித  ஸ்தலங்களை முஸ்லிம்களிடமிருந்து திரும்பப்பெருவதாக இருந்தது என்பதை இங்கு நியாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

இரண்டாம் கலீஃபா கைப்பற்றிய நாடுகள் ஆண்டு வரிசையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உமரின் ஆட்சியின் முடிவில் மத்திய கிழக்கு நாடுகளில் எந்தெந்த பகுதிகள் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தது என்பதை கீழ்கண்ட படம் காட்டுகின்றது.  உமர் தம் ஆட்சி காலத்தில் எகிப்து, எருசலேம், பைசாந்திய நாடுகள், பெர்சியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளை இஸ்லாமின் ஆட்சிக்குள் கொண்டு வந்தார். அபூ பக்கர் கைப்பற்றிய நாடுகளோடு, உமர்  கைப்பற்றிய நாடுகளை (படங்களை) ஒப்பிட்டுப்பாருங்கள்.

மூன்றாம் மற்றும் நான்காம் கலீஃபாக்களின் ஆட்சி காலம் (உஸ்மான் மற்றும் அலி – 644- 661)

இரண்டாம் கலீஃபா உமர் கொல்லப்படுகின்றார், அதன் பிறகு உஸ்மான் மூன்றாம் கலீஃபாவாக பதவி ஏற்கிறார். இவரும் தம் பங்கிற்கு பல நாடுகளை பிடிக்கிறார். இவரது ஆட்சியில் அதிருப்தி கொண்டு முஸ்லிம்களே இவர்களை கொல்கிறார்கள். அதன் பிறகு நான்காம் கலீஃபாவாக அலி அமருகிறார், இவரும் சில நாடுகளை பிடிக்கிறார்.

இவ்விருவரின் ஆட்சியில் இவர்கள் செய்த போர்களை கீழ்கண்ட அட்டவணையில் ஆண்டு வரிசையில் விளக்கியுள்ளோம்.

இப்போது அரேபியா இஸ்லாமின் நான்காவது கலிஃபான அலியின் கால அடைசியில் எப்படி இருந்தது என்பதை பாருங்கள். மேலும் உமையத் கலீஃபாக்கள் கைப்பற்றிய நாடுகளையும் இந்த படத்தில் குறிப்பிட்டுள்ளோம்.

  • கி.பி. 622 - 632 முஹம்மது கைப்பற்றிய நாடுகள்
  • கி.பி. 632 - 661 நான்கு கலீஃபாக்கள் கைப்பற்றிய நாடுகள்
  • கி.பி. 661 - 750 உமையத் கலீஃபாக்கள் கைப்பற்றிய நாடுகள்

முஹம்மது மரித்த 30 ஆண்டுகளில் நான்கு கலீஃபாக்கள் எகிப்து, எருசலேம், பைசாந்திய பேரரசு, பெர்சியா போன்ற இடங்களை பிடித்துவிட்டார்கள். அடுத்த 90 ஆண்டுகளில் உமையத் முஸ்லிம்கள் ஸ்பெயின் வரையில் பிடித்துவிட்டார்கள், கிழக்கில் இப்போதுள்ள பாதி பாகிஸ்தான்வரை (சிந்து பகுதி) பிடித்துவிட்டார்கள்.

இது தான் கி.பி. 622 முதல் கி.பி. 750 வரையிலான சுருக்கமான இஸ்லாமிய விஸ்தரிப்பு விவரங்கள்.

முஸ்லிம்கள் கைப்பற்றிய நாட்டு மக்கள், தங்கள் நாடுகளை முஸ்லிம்களிடமிருந்து விடுவிக்க  போர் செய்தால்  அது தவறாகுமா? முஸ்லிம்கள் ஏன் தங்கள் நாடுகள் மீது முதலில் போர் தொடுத்தார்கள் என்ற கேள்வி அந்நாட்டு மக்களுக்கு எழாதா? சிந்தியுங்கள்!

3) ஐந்தாவது கலீஃபா தொடங்கி, சிலுவைப்போர் வரை இஸ்லாமிய அரசுகள்  நடத்திய போர்கள் மற்றும் கைப்பற்றிய நாடுகள் (660-1095)

முதல் சிலுவைப்போர் 1095/1096ம் ஆண்டு தொடங்கியது.

பில் வார்னர் என்ற அறிஞர், இஸ்லாமின் போர்கள் பற்றியும் சிலுவைப்போர்கள் பற்றியும் ஆய்வுச் செய்து, நாம் மேலே கண்ட விவரங்களையும், இன்னும் 1095ம் ஆண்டு வரை முஸ்லிம்கள் செய்த போர்களையும் தொகுத்து ஒரு அருமையான வீடியோவை தயாரித்துள்ளார்.

முஹம்மது முதல் சிறுவைப்போர்கள் வரையிலான விவரங்கள சுருக்கமாக இந்த வீடியோவில் விளக்கியுள்ளார். இதுவரை கண்ட விவரங்களை இன்னும் தெளிவாக சில நிமிடங்களில் நாம் கற்றுக்கொள்ளமுடியும். இந்த வீடியோவில் 1:20 நிமிடத்திலிருந்து பாருங்கள், இஸ்லாமியர்கள் கைப்பற்றிய நாடுகள், அவர்கள் தொடுத்த போர்களின் விவரங்களை தெளிவாக பார்க்கலாம். கடைசியாக, சிலுவைப்போர் பற்றியும் இந்த வீடியோ விளக்குகிறது.

இஸ்லாம் புரிந்த 548+ போர்கள்:

இவருடைய ஆய்வில் "ரோம மற்றும் கிரேக்க நாடுகளில்" இஸ்லாம் 548 போர்களை புரிந்துள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் ஆப்ரிக்கா, இந்தியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இஸ்லாம் புரிந்த போர்களை கணக்கில் கொள்ளவில்லை.  இதனை கீழ்கண்டவாறு விவரிக்கிறார்..

Well, what I would like to talk about here, are facts. I created a database of 548 battles that Islam fought: jihad battles against classical civilization. This isn't even all the battles. It doesn't include battles Africa, India, Afghanistan and other locations. It's primarily at data base of the battles against the classical civilization of Rome and Greece.

மூலம்: Jihad vs Crusades - Bill Warner, PhD - www.politicalislam.com/jihad-vs-crusades/

4) எத்தனை சிலுவைப்போர்கள் நடந்தன? எந்தெந்த ஆண்டுகளில் நடந்தன‌?

இதுவரை சிலுவைப்போர்களுக்கு முன்பு (இஸ்லாமுக்கு பின்பு மற்றும் 1095க்கு முன்பு) என்ன நடந்தது என்பதை படங்கள், வீடியோக்கள் மூலமாக கண்டோம். இப்போது சிலுவைப் போர்கள் பற்றி காண்போம். அதன் பிறகு இஸ்லாமிய போர்கள் மற்றும் சிலுவைப்போர்கள் இரண்டையும் ஒப்பிட நமக்கு தேவையான விவரங்கள் கிடைத்துவிடும்.

இஸ்லாமிய போர்களாக இருக்கட்டும், அல்லது சிலுவைப்போர்களாக இருக்கட்டும், ஆய்வு செய்து முடிந்த அளவிற்கு அவைகளின் ஆணிவேர் வரைச் சென்றால் தான், நாம் சொல்லும் கருத்து உண்மையின் அடிப்படையில் உள்ளதா இல்லையா என்பதை அறியமுடியும். 

எத்தனை சிலுவைப்போர்கள் நடந்துள்ளன? அவைகளின் ஆண்டுகள் என்ன?

1095ம் ஆண்டிலிருந்து 1270வரை 8 சிலுவைப்போர்கள் நடந்ததாக சரித்திரம் சொல்கிறது. நான் பொதுவாக செய்வதுப்போன்று, இந்த 8 போர்கள் பற்றிய விவரங்களை சுலபமாக புரிந்துக்கொள்வதற்காக, படமாக இங்கு தருகிறேன்.

இந்த பட்டியலில் 'இடைவெளி ஆண்டுகள்' என்ற பத்தியை கவனிக்கவும்.

 

இடைவெளி ஆண்டுகள் - ஏன் & எப்படி கணக்கிட்டீர்கள்? 

ஒவ்வொரு சிலுவைப்போர்களுக்கும் இடையே சில ஆண்டுகள் இடைவெளி உள்ளது. நான் இந்த பட்டியலை தயாரிக்கும்போது, ஒரு சிலுவைப்போர் முடிந்த ஆண்டிலிருந்து அடுத்த சிலுவைப்போர் துவங்கிய ஆண்டுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை மட்டுமே கணக்கில் கொண்டேன்.

உதாரணத்திற்கு:

முதல் சிலுவைப்போர் 1095ம் ஆண்டு துவங்கி, 1099ம் ஆண்டு முடிவடந்தது.

இரண்டாம் சிலுவைப்போர் 1147ம் ஆண்டு துவங்கியது.

நாம் 1147ம் ஆண்டிலிருந்து, 1099ம் ஆண்டை கழிக்கும் போது நமக்கு 48 ஆண்டுகள் இடைவெளி வருகிறது.  முதல் சிலுவைப்போர் துவங்கிய ஆண்டுக்கும், இரண்டாம் சிலுவைப்போர் துவங்கிய ஆண்டுக்கும் இடையே வித்தியாசத்தை கணக்கிட்டால் அது  52 ஆண்டுகள்  என்று வரும் (1147 – 1095 = 52).  ஆனால், நான் 48 என்ற கணக்கை மட்டுமே எடுத்துக்கொண்டேன்.

ஏன் சிலுவைப்போர்களின் இடைவெளி ஆண்டை கணக்கிடுகிறீர்கள்? என்று கேட்டால், இதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு, அதனை அடுத்தடுத்த கட்டுரையில் குறிப்பிடுவேன். இந்த கட்டுரைக்கு  இந்த விவரம் போதும். ஆனால், இப்போதைக்கு ஒவ்வொரு சிலுவைப்போருக்கு இடையேயுள்ள இடைவெளி ஆண்டுகள் மீது ஒரு கண் வைக்கவும்.

சிலுவைப்போர்கள் எத்தனை எட்டா? ஒன்பதா?

சிலுவைப்போர்களை வகைப்படுத்துவதில் சரித்திர ஆசிரியர்கள் வித்தியாச எண்ணிக்கையை கொண்டுள்ளார்கள். சிலர் எட்டு என்றும் சிலர் ஒன்பது என்றும் கூறுகிறார்கள்.

உதாரணத்திற்கு, கீழ்கண்ட எட்டாம் சிலுவைப்போர் பற்றிய விவரங்களை படிக்கவும்:

The Eighth Crusade was a crusade launched by Louis IX of France against the city of Tunis in 1270. The Eighth Crusade is sometimes counted as the Seventh, if the Fifth and Sixth Crusades of Frederick II are counted as a single crusade. The Ninth Crusade is sometimes also counted as part of the Eighth. The crusade is considered a failure after Louis died shortly after arriving on the shores of Tunisia, with his disease-ridden army dispersing back to Europe shortly afterwards.[1]

விக்கிபீடியா தமிழ் பக்கம் இதைப் பற்றிச் சொல்லும் போது:

புனித நிலத்தில் இடம்பெற்ற சிலுவைப்போர்கள், 1095-99இல் இடம்பெற்ற முதலாம் சிலுவைப்போரிலிருந்து, 1271 -72 வரை இடம்பெற்ற ஒன்பதாம் சிலுவைப்போர் வரை, பொதுவாக ஒன்பது என்றே இனங்காணப்பட்டிருக்கின்றன. போர்களை முன்னின்று நடத்தியவரைக் கருதி, இத்தொடர்களை ஏழாகவும் குறைத்து நோக்கலாம்.[1]

மேலும், சிலுவைப்போர்களில் பிரதானமானது கிறிஸ்தவ‌ புனித இடங்களை முஸ்லிம்களின் ஆட்சியிலிருந்து கைப்பற்றுவதற்காக நடத்தப்பட்டவைகளாகும் (1095 லிருந்து 1270 வரை). கி.பி. 1270க்கு பிறகு நடத்தப்பட்ட சிலுவைப்போர்களுக்கு வேறு பல காரணங்கள் கூறுகின்றார்கள். அவைகள் பேகனிசம் மற்றும் கள்ள உபதேசங்களுக்கு எதிராக நடத்தப்பட்டவைகள் என்று சொல்லப்படுகின்றது.

The best-known crusades are those fought against the Muslims of the eastern Mediterranean for the Holy Land in the period between 1096 and 1271. Other crusades were fought from the 12th century for a variety of reasons including the suppression of paganism and heresy, the resolution of conflict among rival Catholic groups, against the Iberian Moors and the Ottoman Empire.

இஸ்லாமிய போர்கள் மற்றும் சிலுவைப்போர்கள் ஒப்பீடு

கீழ்கண்ட இரண்டு படங்களை கவனிக்கவும்.

முஹம்மது தொடங்கி சிலுவை போர்கள் வரையில் எத்தனை போர்களை இஸ்லாம் செய்துள்ளது என்பதை முதல்படம் காட்டுகின்றது. இதைப் பற்றிய விவரங்கள் மேலே கொடுக்கப்பட்ட யுடியூப் வீடியோவில் காணலாம்.

இரண்டாம் படத்தில், சிலுவைப்போர்கள் எத்தனை மற்றும் எங்கே நடத்தப்பட்டது என்பது சிலுவை குறியீடு மூலம் காட்டப்பட்டுள்ளது.  

இவ்விரண்டையும் ஒரே ஒரு நிமிடம் கவனித்தாலே, நனக்கு உண்மை புரியும்.  சிலுவைப் போர்கள் நடைப்பெற்ற நாடுகளை இடங்களை கவனிக்கவும். 

இஸ்லாமிய போர்கள் மற்றும் சிலுவைப்போர்கள் ஒப்பீடு
இஸ்லாமியர்கள் அரங்கேற்றிய போர்கள், பிடித்த நாடுகள்
கி.பி. 632 முதல் கி.பி. 1100 வரை
ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் அரங்கேற்றிய சிலுவைப்போர்கள்
கி.பி. 1095 முதல் கி.பி. 1270 வரை

முடிவுரை:

இந்த தொடரில் இஸ்லாமிய போர்கள் மற்றும் சிலுவைப்போர்கள் பற்றிய விவரங்களை அட்டவணைகளாகவும், படங்களாகவும் பார்த்தோம். இந்த தொடர் கட்டுரைகளை தொடர்ந்து படித்துக்கொண்டு இருக்கின்ற உங்களுக்கு சிலுவைப்போர்கள் பற்றியும், இஸ்லாமியர்களின் ஆக்கிரமிப்புக்கள் பற்றியும் ஓரளவுக்கு புரிந்திருக்கும்.  இன்னும் ஆழமாக, இவைகளை அடுத்தடுத்த தொடர்களில் காண்போம்.

ஒரு விவரத்தை மறுபடியும் தெளிவாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், அது என்னவென்றால், சிலுவைப்போர்கள் பைபிளில் கட்டளையிடப்படாதது மற்றும் இயேசு அங்கீகரிக்காதது ஆகும்.  பைபிளுக்கு எதிராக திருச்சபை மனிதர்கள் எடுத்த தவறான முடிவு தான் சிலுவைப்போர்கள். கிறிஸ்தவ சபை ஒரு போதும் அதனை அங்கீகரிக்கவில்லை. ஆனால், நாடுகளை ஆக்கிரமித்து இஸ்லாமை அங்கு ஸ்தாபிப்பது குர்‍ஆனின் கட்டளையாகும், அல்லாஹ்வின் கட்டளையாகும்.

தேதி: டிசம்பர் 30, 2019


ஜிஹாதின் அடிச்சுவடுகளில் சிலுவைப்போர்கள் - பொருளடக்கம்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/crusades/crusades-3.html


வெள்ளி, 27 டிசம்பர், 2019

2019 கிறிஸ்மஸும் NRCயும்: இயேசுவும், மரியாளும், யோசேப்பும் அகதிகளாக இருந்தார்களா?

இது என்ன புது கூத்து? தற்போது நாட்டில் நடக்கும் NRC & CAA கூத்து போதாதா? என்று கேள்வி கேட்கத்தோன்றுகிறதா உங்களுக்கு?

தலைப்புக்கள்:

1) இயேசுவையும், மரியாளையும், யோசேப்பையும் அகதிகளாக சித்தரிக்கும் படம்

2) தேசிய  குடிமக்கள் பதிவேடு (NRC) செய்யச் சென்ற இயேசுவின் குடும்பம்

3) எகிப்து தேசத்தில் இயேசுவும், அவரது குடும்பமும் அகதிகளாக இருந்தார்களா?

4) அந்நியர்களை/அகதிகளை எப்படி கவனிக்கவேண்டும் என்று பைபிள் சொல்கிறது?

5) முஹம்மதுவும் அகதியாக மதினாவிற்குச் சென்றார், 10 ஆண்டுகளில் அவர் என்ன செய்தார்?


1) இயேசுவையும், மரியாளையும், யோசேப்பையும் அகதிகளாக சித்தரிக்கும் படம்

கலிபோர்னியாவில் உள்ள க்ளார்மொன்ட் யுனைடெட் மெதடிஸ்ட் சர்ச் (Claremont United Methodist Church) என்ற சபை, இயேசுவையும், அவரது தாய் மரியாளையும், யோசேப்பையும் அகதிகளாக சித்தரித்து, ஒவ்வொருவரையும் ஒரு கூண்டில் வைத்து ஒரு படத்தை வெளியிட்டு இருந்தது.

அந்த படத்தையும், கட்டுரையையும் இங்கு காணலாம்:

A church nativity scene depicts Jesus, Mary and Joseph as refugees separated in cages

The biblical story of Mary and Joseph fleeing from Israel to Egypt to escape King Herod's decree that all baby boys be killed is symbolic of the plight of thousands of refugees seeking asylum in America, she said.

"In the Claremont United Methodist Church nativity scene this Christmas, the Holy Family takes the place of the thousands of nameless families separated at our borders," Ristine said in the post. "Imagine Joseph and Mary separated at the border and Jesus no older than two taken from his mother and placed behind the fences of a Border Patrol detention center as more than 5,500 children have been the past three years."

"If this sparks conversation, that would be one good goal," Ristine told KABC.

முகநூல் மற்றும் இதர இணைய தளங்களில் இந்த படத்திற்கு  எதிர்ப்பும் வரவேற்பும் கிடைத்தது. அதாவது, அமெரிக்காவில் அகதிகளாக வருபவர்களுக்கு எதிராக நடக்கும் தீமைகளுக்கு எதிராக குரல் கொடுக்க இந்த படம் வெளியிடப்பட்டது என்று அந்த சபையில் ஊழியர் சொல்கிறார். 

குழந்தை இயேசுவையும், அவரது தாய் மரியாளையும் தனியாக கூண்டில் வைத்திருப்பதைப் பார்த்தால், எப்படி மனம் துக்கம் கொள்ளுமோ, அதே போல, அகதிகளாக வருபவர்களில் பெற்றோர்களை தனியாகவும், குழந்தைகளை தனியாகவும் பிரித்து அகதிகள் முகாம்களில்  வைப்பது தவறில்லையா?  அவர்களுக்கு  எதிராக செயல்படுவது தவறு இல்லையா? என்ற முறையில் இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது. 

நம் இந்தியாவிலும், என்ஆர்சி (NRC) என்றும் சிஎஎ (CAA) என்ற பெயரில் உலாவரும் மூன்றெழுத்துக்கள், மிகப்பெரிய பிரச்சனையை உண்டாக்கிக்கொண்டு  இருக்கிறது என்பதை நாம் அறிவோம். இதைப் பற்றி இங்கு எழுதுவது என் நோக்கமல்ல. தேவைப்படும் போது தனியாக அதைப் பற்றி சிந்திப்போம்.

மேற்கண்ட படத்தை பார்த்தபோது, எனக்கு தோன்றிய கேள்வி: இயேசுவும், அவரது தாய் மரியாளும், அவரது கணவர் யோசேப்பும் அகதிகளாக எகிப்தில் இருந்தார்களா?  இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

2) தேசிய  குடிமக்கள் பதிவேடு (NRC) செய்யச் சென்ற இயேசுவின் குடும்பம்

அரசாங்கம் எடுக்கும் குடிமக்கள் கணக்கெடுப்பில் தங்கள் பெயர்களை பதித்துக்கொள்வது தான் என் ஆர் சி (NRC - National Register of Citizens) என்று சுருக்கமாகச் சொல்லலாம் (முழூ விவரங்களுக்கு இந்த தொடுப்பை கவனிக்கவும்: en.wikipedia.org/wiki/National_Register_of_Citizens).

இயேசுவின் தாய் மரியாளும், யோசேப்பும் குடிமதிப்பு எழுதச் சென்ற போது மரியாளுக்கு பிரசவ நேரம் நெருங்கியது.

லூக்கா 2:1-6

1. அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது. 2. சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று. 3. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். 4. அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்த படியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி, 5. கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப்போனான். 6. அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது.

நம் இந்திய அரசாங்கம் என்ஆர்சி சட்டத்தை அமுல் படுத்தும் போது, நாமும் நம்முடைய குடிமதிப்பு எழுதச் செல்லவேண்டும் அல்லது ஆவணங்களை காட்டவேண்டும். இது எந்த முறையில் நடக்கும் என்று தெரியாமல், பல சந்தேகங்கள் இருப்பதினால் தான் பல‌ போராட்டங்கள் தற்போது இந்தியாவில் நடந்துக்கொண்டு இருக்கிறது. சீக்கிரமாக அரசாங்கம் மக்களின் சந்தேகங்களுக்கு பதில் கொடுத்தால், இந்த போராட்டங்கள் குறையும் என்று நான் நம்புகிறேன் (இன்றைய தேதி: 27th Dec 2019).

மேற்கண்ட நிகழ்ச்சியை வைத்துக்கொண்டு இயேசுவும் அவரது குடும்பமும், அகதிகளாக இருந்தார்கள் என்றுச் சொல்லமுடியாது. ஒரே நாட்டில் உள்ள நாசரேத்து என்ற ஊரிலிருந்து பெத்லகேம் என்ற சொந்த ஊருக்குச் சென்றார்கள்.

3) எகிப்து தேசத்தில் இயேசுவும், அவரது குடும்பமும் அகதிகளாக இருந்தார்களா?

இயேசு இரண்டு வயதுடையவராக இருந்த போது இன்னொரு நிகழ்ச்சி நடந்தது. ஏரோது 2 வயதுடைய குழந்தைகளை கொல்ல முயலுகின்றான் என்ற விவரம் அறிந்ததும், யோசேப்பு தன் குடும்பத்தோடு எகிப்துக்கு ஓடிப்போனார். மேலோட்டமாக படித்தால் இயேசுவும் அவரது பெற்றோர்களும் எகிப்து நாட்டில் அகதிகளாக இருந்தார்கள் என்று சொல்லத்தோன்றும்.

மத்தேயு 2:13 - 15

13. அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும் வரைக்கும் அங்கேயே இரு என்றான். 14. அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப் போய், 15. ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று, தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. 

அகதி (Refugee) என்றால் யார்?

போரின் காரணமாகவோ அல்லது இதர வன்முறையினாலோ தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள தன் நாட்டின் எல்லையைத் தாண்டி, வேறு நாட்டுக்குச் சென்று தஞ்சம் புகுபவனை அகதி என்பார்கள்.

ஐக்கிய நாட்டு சபையின் படி அகதி என்பவன்:

Refugees are people who have fled war, violence, conflict or persecution and have crossed an international border to find safety in another country.

Source: www.unhcr.org/what-is-a-refugee.html

இதன்படி பார்த்தால், இயேசுவும் அவரது  பெற்றோர்களும் எகிப்து நாட்டுக்கு உயிர் தப்பிச் சென்றதால், அவர்களை அகதிகள் என்றுச் சொல்லலாம் அல்லவா? மேலோட்டமாக மேற்கண்ட வசனங்களை படிக்கும் போது, அவர்கள் அகதிகள் என்று நினைத்தேன். ஆனால், சிறிது ஆய்வு செய்துப்பார்த்த போது, அவர்கள் அகதிகள் அல்ல என்பதை தெரிந்துக்கொண்டேன்.

இது எப்படி சாத்தியம்? உயிர் தப்பி ஒரு நாட்டிலிருந்து வேறு நாட்டுக்கு சென்றால், அவர்கள் அகதிகள் தானே!

யோசேப்பு தன் பிள்ளையின் உயிரைக் காப்பாற்ற இஸ்ரேல் நாட்டிலிருந்து எகிப்துக்குச் சென்றது உண்மை தான், ஆனால் அவ்விரு நாடுகளும் வெவ்வேறு நாடுகள் அல்ல. இயேசுவின் காலத்தில், ரோம சாம்ராஜ்ஜியத்தின் கீழ் தான் இஸ்ரேல் நாடும், எகிப்தும் இருந்தது. ஆக, யோசேப்பு ஒரு சாம்ராஜ்ஜியத்தின் ஒரு பிராந்தியத்திலிருந்து (இஸ்ரேல்), இன்னொரு பிராந்தியத்திற்கு(எகிப்து) சென்றார். யோசேப்பும், மரியாளும், இயேசுவும் அகதிகளாக எகிப்தில் இருக்கவில்லை. நம் இந்தியாவில் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்குச் சென்று வாழ்வது  எப்படியோ, அதுபோலத்தான், யோசேப்பும் சென்றார்.

4) அந்நியர்களை/அகதிகளை எப்படி கவனிக்கவேண்டும் என்று பைபிள் சொல்கிறது?

மனிதனை படைத்தவர் அவன் வேறு நாட்டில் ஒரு அகதியாக அந்நியனாக இருக்கும் போது, அவன் எப்படி உணருவான் என்பதை அறியாமலா இருப்பார்!  பைபிளின் தேவன் அந்நியர்கள் பற்றி யூதர்களுக்கு என்ன கட்டளைகள் கொடுத்திருக்கிறார் என்று இந்த கட்டுரைக்காக, தேடும் போது, மிகவும் அழகான வசனங்களை கொடுத்துள்ளார் என்பதை அறியமுடிந்தது. அவைகளின் சுருக்கத்தை இங்கு தருகிறேன்.

தமிழில் 'அந்நியன்', 'பரதேசி' என்று மொழிப்பெயர்த்தது, ஆங்கிலத்தில் "Foreigner" என்று வருகிறது.

1) கர்த்தரின் பஸ்கா பண்டிகையை ஆசரிக்க, மண்ணின் மைந்தனுக்கும், வேற்று நாட்டவனுக்கும் ஒரே சட்டம்

யாத்திராகமம் 12:49. சுதேசிக்கும் உங்களிடத்தில் தங்கும் பரதேசிக்கும் ஒரே பிரமாணம் இருக்கக்கடவது என்றார்.

Exodus 12: 49 The same law applies both to the native-born and to the foreigner residing among you.

2) வேற்று நாட்டவனுக்கு அநீதி செய்யாதே, உன் மீது சாபம் உண்டாகும்

உபாகமம் 27:19. பரதேசி திக்கற்றவன் விதவை ஆகிய இவர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறவன் சபிக்கப்படவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

Deut 27:19 "Cursed is anyone who withholds justice from the foreigner, the fatherless or the widow." Then all the people shall say, "Amen!"

3) அந்நியனை சிறுமைப் படுத்தாதே

யாத்திராகமம்  22: 21. அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருப்பீர்களாக; நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்தீர்களே.

Exodus  22:21 "Do not mistreat or oppress a foreigner, for you were foreigners in Egypt.

4) அந்நியனை ஒடுக்கவேண்டாம், ஒரு காலத்தில் நீயும் அந்நியனாக இருந்தவன் தானே

யாத்திராகமம்   23: 9. அந்நியனை ஒடுக்காயாக; எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்த நீங்கள் அந்நியனுடைய இருதயத்தை அறிந்திருக்கிறீர்களே.

Exodus 23:9 "Do not oppress a foreigner; you yourselves know how it feels to be foreigners, because you were foreigners in Egypt.

5) அந்நியனுக்கு இடுக்கன் செய்வது பாவம்

எசேக்கியேல்  22:7. உன்னிலுள்ள தாய் தகப்பனை அற்பமாய் எண்ணினார்கள்; உன் நடுவில் பரதேசிக்கு இடுக்கண் செய்தார்கள்; உனக்குள் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்கினார்கள்.

Ezekiel 22:7 In you they have treated father and mother with contempt; in you they have oppressed the foreigner and mistreated the fatherless and the widow. 

6) கிறிஸ்துவுக்கு அனைவரும் சமமே

கலாத்தியர் 3:28. யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.

Galatians 3: 28 There is neither Jew nor Gentile, neither slave nor free, nor is there male and female, for you are all one in Christ Jesus.

7) அந்நியன் மேல் அன்பு வைக்கும் தேவன், நீயும் அப்படியே செய்

உபாகமம்  10:17. உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல. 18. அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார். 19. நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தபடியால், அந்நியரைச் சிநேகிப்பீர்களாக.

Deuteronomy  10 :17 For the Lord your God is God of gods and Lord of lords, the great God, mighty and awesome, who shows no partiality and accepts no bribes. 18 He defends the cause of the fatherless and the widow, and loves the foreigner residing among you, giving them food and clothing. 19 And you are to love those who are foreigners, for you yourselves were foreigners in Egypt.

8) அந்நிய கூலியாட்களை ஒடுக்கவேண்டாம்

உபாகமம்  24: 14. உன் சகோதரரிலும், உன் தேசத்தின் வாசல்களிலுள்ள அந்நியரிலும் ஏழையும் எளிமையுமான கூலிக்காரனை ஒடுக்காயாக. 15. அவன் வேலைசெய்த நாளில்தானே, பொழுதுபோகுமுன்னே, அவன் கூலியை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; அவன் ஏழையும் அதின்மேல் ஆவலுமாயிருக்கிறான்; அதைக் கொடாவிட்டால் அவன் உன்னைக் குறித்துக் கர்த்தரை நோக்கி முறையிடுவான்; அது உனக்குப் பாவமாயிருக்கும்.

Deuteronomy 24: 14 Do not take advantage of a hired worker who is poor and needy, whether that worker is a fellow Israelite or a foreigner residing in one of your towns. 15 Pay them their wages each day before sunset, because they are poor and are counting on it. Otherwise they may cry to the LORD against you, and you will be guilty of sin.

9) அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்;

எபிரெயர்  13: 1. சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது. 2. அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு.

Hebrews 13:1 Keep on loving one another as brothers and sisters. 2 Do not forget to show hospitality to strangers, for by so doing some people have shown hospitality to angels without knowing it.

10) பரதேசிக்காக இரக்கம் பாராட்டு

லேவியராகமம் 23: 22. உங்கள் தேசத்தின் வெள்ளாண்மையை நீங்கள் அறுக்கையில், வயலின் ஓரத்தில் இருக்கிறதை முற்றிலும் அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும், எளியவனுக்கும் பரதேசிக்கும் அவைகளை விட்டுவிடவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.

Leviticus  23:22 "'When you reap the harvest of your land, do not reap to the very edges of your field or gather the gleanings of your harvest. Leave them for the poor and for the foreigner residing among you. I am the LORD your God.'"

11) சுதேசிக்கும் பரதேசிக்கும் ஒரே தண்டனை கொடுக்கவேண்டும்

லேவியராகமம் 24: 17. ஒரு மனிதனைக் கொல்லுகிறவன் எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும். 18. மிருகத்தைக் கொன்றவன் மிருகத்துக்கு மிருகம் கொடுக்கக்கடவன். 19. ஒருவன் பிறனை ஊனப்படுத்தினால், அவன் செய்தபடியே அவனுக்கும் செய்யப்படக்கடவது. 20. நொறுக்குதலுக்கு நொறுக்குதல், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்; அவன் ஒரு மனிதனை ஊனப்படுத்தினதுபோல அவனும் ஊனப்படுத்தப்படவேண்டும். 21. மிருகத்தைக் கொன்றவன் பதில் கொடுக்கவேண்டும்; மனிதனைக் கொன்றவனோ கொலைசெய்யப்படக்கடவன். 22. உங்களில் பரதேசிக்கும் சுதேசிக்கும் ஒரே நியாயம் இருக்கவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.

Leviticus 24:17 "'Anyone who takes the life of a human being is to be put to death. 18 Anyone who takes the life of someone's animal must make restitution—life for life. 19 Anyone who injures their neighbor is to be injured in the same manner: 20 fracture for fracture, eye for eye, tooth for tooth. The one who has inflicted the injury must suffer the same injury. 21 Whoever kills an animal must make restitution, but whoever kills a human being is to be put to death. 22 You are to have the same law for the foreigner and the native-born. I am the Lord your God.'"

12) பரதேசிக்கு அநியாயம் செய்தவனுக்கு தண்டனை

மல்கியா 3:5. நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபசாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும், எனக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Malachi 3:5 "So I will come to put you on trial. I will be quick to testify against sorcerers, adulterers and perjurers, against those who defraud laborers of their wages, who oppress the widows and the fatherless, and deprive the foreigners among you of justice, but do not fear me," says the Lord Almighty.

13) அந்நியனுக்கு செய்த நன்மை, இறைவனுக்கே செய்த நன்மை

மத்தேயு 25: 35. பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன் என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன் என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்;

Matthew 25:35 For I was hungry and you gave me something to eat, I was thirsty and you gave me something to drink, I was a stranger and you invited me in,

14) பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்

சங்கீதம் 146:9. பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்; துன்மார்க்கரின் வழியையோ கவிழ்த்துப்போடுகிறார்.

Psalm 146:9 The Lord watches over the foreigner and sustains the fatherless and the widow, but he frustrates the ways of the wicked.

 

15) அந்நியனை சிறுமை படுத்தவேண்டாம்

லேவியராகமம்  19:33. யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்தவேண்டாம். 34. உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தீர்களே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். 

சகரியா  7:9. சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீங்கள் உண்மையாய் நியாயந்தீர்த்து, அவனவன் தன்தன் சகோதரனுக்குத் தயவும் இரக்கமும் செய்து, 10. விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் பரதேசியையும் சிறுமையானவனையும் ஒடுக்காமலும், உங்களில் ஒருவனும் தன் சகோதரனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும் இருங்கள் என்றார்.

எரேமியா  7: 5. நீங்கள் உங்கள் வழிகளையும் உங்கள் கிரியைகளையும் நன்றாய்ச் சீர்ப்படுத்தி, நீங்கள் மனுஷனுக்கும் மனுஷனுக்குமுள்ள வழக்கை நியாயமாய்த் தீர்த்து, 6. பரதேசியையும் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்காமலும், குற்றமில்லாத இரத்தத்தை இந்த ஸ்தலத்திலே சிந்தாமலும்; உங்களுக்குக் கேடுண்டாக அந்நிய தேவர்களைப் பின்பற்றாமலுமிருப்பீர்களேயாகில்,

Leviticus 19:33-34 33 "'When a foreigner resides among you in your land, do not mistreat them. 34 The foreigner residing among you must be treated as your native-born. Love them as yourself, for you were foreigners in Egypt. I am the Lord your God.

Zechariah 7:9-10 9 "This is what the Lord Almighty said: 'Administer true justice; show mercy and compassion to one another. 10 Do not oppress the widow or the fatherless, the foreigner or the poor. Do not plot evil against each other.'

Jeremiah 7:5-6 5 If you really change your ways and your actions and deal with each other justly, 6 if you do not oppress the foreigner, the fatherless or the widow and do not shed innocent blood in this place, and if you do not follow other gods to your own harm,

16) அந்நியன் தேவனிடம் ஜெபித்தால், கேட்பீராக‌ - யூத அரசனின் ஜெபம்

I இராஜாக்கள் 8: 41. உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் ஜாதியல்லாத அந்நிய ஜாதியார் உமது மகத்துவமான நாமத்தையும், உமது பலத்த கரத்தையும், உமது ஓங்கிய புயத்தையும் கேள்விப்படுவார்களே. 42. அப்படிக்கொத்த அந்நிய ஜாதியானும், உமது நாமத்தினிமித்தம் தூரதேசத்திலிருந்து வந்து, இந்த ஆலயத்துக்கு நேராக விண்ணப்பம்பண்ணினால்,  43. உமது வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அதைக் கேட்டு, பூமியின் ஜனங்களெல்லாரும் உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலைப்போல உமக்குப் பயப்படும்படிக்கும், நான் கட்டின இந்த ஆலயத்துக்கு உம்முடைய நாமம் தரிக்கப்பட்டதென்று அறியும்படிக்கும், உம்முடைய நாமத்தை அறியத்தக்கதாக, அந்த அந்நிய ஜாதியான் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் செய்வீராக

1 Kings 8:41-43 41 "As for the foreigner who does not belong to your people Israel but has come from a distant land because of your name— 42 for they will hear of your great name and your mighty hand and your outstretched arm—when they come and pray toward this temple, 43 then hear from heaven, your dwelling place. Do whatever the foreigner asks of you, so that all the peoples of the earth may know your name and fear you, as do your own people Israel, and may know that this house I have built bears your Name.

17) என் வீட்டுக்கதவுகள் அந்நியனுக்கு திறந்தே இருந்தன, யோபுவின் ஜெபம்

யோபு  31: 32. பரதேசி வீதியிலே இராத்தங்கினதில்லை; வழிப்போக்கனுக்கு என் வாசல்களைத் திறந்தேன்.

Job 31:32 but no stranger had to spend the night in the street, for my door was always open to the traveler

18) உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக - இது அனைத்து சட்டங்களின் சுருக்கம்

கலாத்தியர்  5: 13. சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள். 14. உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும். 15. நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தீர்களானால் அழிவீர்கள். அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

Galatians 5:13-15 13 You, my brothers and sisters, were called to be free. But do not use your freedom to indulge the flesh[a]; rather, serve one another humbly in love. 14 For the entire law is fulfilled in keeping this one command: "Love your neighbor as yourself." 15 If you bite and devour each other, watch out or you will be destroyed by each other (all quotes taken from NIV English translation.)

இவைகள் பைபிளிலிருந்து எடுத்த சில வசனங்கள் மட்டுமேயாகும்.  இவைகளில் பெரும்பான்மையான வசனங்கள் பழைய ஏற்பாட்டிலிருந்து எடுத்தவைகளாகும்.

5) முஹம்மதுவும் அகதியாக மதினாவிற்குச் சென்றார், 10 ஆண்டுகளில் அவர் என்ன செய்தார்?

முஹம்மது ஆரம்பகாலத்தில் மக்காவில் தன் இறைச்செய்தியை அறிவித்தார். சிலர் ஏற்றனர், பலர் வெறுத்தனர், துன்புறுத்தினர். ஒரு கூட்ட முஸ்லிம்களை கிறிஸ்தவ நாட்டுக்கு (அபிசீனியாவிற்கு) தஞ்சம் புக முஹம்மது அனுப்பினார். கிறிஸ்தவ நாட்டு அரசன் அவர்களுக்கு  தஞ்சம் கொடுத்தான்.

ஒரு குறிப்பிட்ட காலத்தில் தன் உயிருக்கு ஆபத்து வரும் போது, உயிர் தப்ப முஹம்மது மக்காவிலிருந்து மதினாவிற்கு ஹிஜ்ரத் (இடம் பெயர்ந்தார்) செய்தார். அவரோடு முஸ்லிம்களும் சென்றார்கள்.

மதினாவில் இவருக்கு தஞ்சம் கொடுத்தார்கள். ஆனால், அடுத்த 10 ஆண்டுகளில் முஹம்மது என்ன செய்தார்? தனக்கு தஞ்சம் கொடுத்த நாட்டுக்கு முஹம்மது ஆற்றிய தொண்டு என்ன?  வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டார், வன்முறைச் செயல்களில் ஈடுபட்டார், வலியச் சென்று போர் புரிந்தார். 10 ஆண்டுகளில் தன் ஆள்பலத்தின் மூலமாக, ஒட்டு மொத்த அரேபிய தீயகர்ப்பத்தை ஆக்கிரமித்தார், இரத்தம் சிந்தினார், ஆண்களைக் கொன்று பெண்களை அடிமைகளாக விற்றார், குழந்தைகளை அடிமைகளாக விற்றார். பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள்.

மொத்தம் 10 ஆண்டுகளில் 95 போர்கள் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டார், பார்க்க: https://en.wikipedia.org/wiki/List_of_expeditions_of_Muhammad

இந்த கட்டுரையின் முடிவுக்கு வந்துள்ளோம்.

முடிவுரை:

பைபிளின் படி, பஞ்சம் உண்டானபோது, ஆபிரகாம் எகிப்துக்குச் சென்றார், ஈசாக்கும் இதே போன்று எகிப்துக்குச்  சென்றார், யாக்கோபின் குடும்பமும் சென்றது. யாக்கோபின் குடும்பம் அதாவது இஸ்ரவேலர்கள் 400க்கும் அதிகமான ஆண்டுகள் எகிப்தில் வாழ்ந்தார்கள். எகிப்தியர் அவர்களை அடிமைப்படுத்தினார்கள்.

பைபிளின் தேவன் இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து விடுதலைச் செய்து, கானானுக்கு கொண்டுச் சென்றார். அங்கே மேற்கண்ட விதத்தில் அந்நியர்களை ஒடுக்கவேண்டாம் என்று யூதர்களுக்கு தேவன் கட்டளையிட்டார். நீங்கள் ஒரு காலத்தில் எகிப்தில் அந்நியர்களாக இருந்தீர்கள் என்பதை மறக்கவேண்டாம் என்று அனேக முறை அவர்களை தேவன் எச்சரித்தார். பழைய ஏற்பாட்டின் கடைசி தீர்க்கதரிசன புத்தகம் (மல்கியா) வரையில் தேவன் அந்நியர்களை ஒடுக்கவேண்டாம் என்று கட்டளை கொடுத்துக்கொண்டே இருந்தார்.

தாவீது ராஜா கூட ஒரு காலத்தில் அந்நிய தேசத்தில் தஞ்சம் புகுந்தார், அந்த நாட்டுக்கு தீங்கு செய்யவில்லை. தஞ்சம் கொடுத்த தேசத்திற்கு துரோகம் செய்யவில்லை.

இஸ்ரவேலர்கள் பாபிலோனில் சிறைபிடிக்கப்பட்டுப்போனபோது கூட, தேவன் அவர்களுக்குச் சொன்ன கட்டளை இது தான்: பாபிலோனுக்காக ஜெபியுங்கள், அந்நாட்டுக்காக நன்மையை சமாதானத்தை தேடுங்கள், அப்போது நீங்கள் சமாதானமாக இருப்பீர்கள்.

எரேமியா 29:4. இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர், தாம் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போகப்பண்ணின அனைவருக்கும் அறிவிக்கிறது என்னவென்றால், 5. நீங்கள் வீடுகளைக் கட்டி, குடியிருந்து, தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைச் சாப்பிடுங்கள். 6. நீங்கள் பெண்களை விவாகம்பண்ணி, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்று, உங்கள் குமாரருக்குப் பெண்களைக்கொண்டு, உங்கள் குமாரத்திகளைப் புருஷருக்குக் கொடுங்கள்; இவர்களும் குமாரரையும் குமாரத்திகளையும் பெறட்டும்; நீங்கள் அங்கே குறுகாமல் பெருகி, 7. நான் உங்களைச் சிறைப்பட்டுப்போகப்பண்ணின பட்டணத்தின் சமாதானத்தைத் தேடி, அதற்காகக் கர்த்தரை விண்ணப்பம்பண்ணுங்கள்; அதற்குச் சமாதானமிருக்கையில் உங்களுக்கும் சமாதானமிருக்கும்.

Jeremiah 29:4 This is what the Lord Almighty, the God of Israel, says to all those I carried into exile from Jerusalem to Babylon: 5 "Build houses and settle down; plant gardens and eat what they produce. 6 Marry and have sons and daughters; find wives for your sons and give your daughters in marriage, so that they too may have sons and daughters. Increase in number there; do not decrease. 7 Also, seek the peace and prosperity of the city to which I have carried you into exile. Pray to the Lord for it, because if it prospers, you too will prosper."

இயேசுவும் அவரது குடும்பமும் எகிப்துக்குச் உயிர் தப்ப சென்றார்கள், மறுபடியும் திரும்ப தங்கள் நாட்டுக்குத் திரும்பினார்கள். அந்த காலத்தில் உலகளாவிய சட்டம் இல்லை எனவே, போர்கள் நடந்தன மக்கள் அகதிகளாக மற்ற நாடுகளுக்கு உயிர்தப்பச் சென்றார்கள். ஆனால், இக்காலத்தில் இவ்வளவு நாகரீகம் வளர்ந்த பின்பும் மக்கள் அகதிகளாக இதர நாடுகளுக்குச் செல்வது என்பது மனித வர்க்கத்திற்கு அவமானமாகும்.

முஹம்மதுவும் உயிர் தப்ப மதினா சென்றார், அகதியாக இருந்தார், ஆனால் நடந்தது என்ன? சரித்திரம் என்ன சொல்கிறது? நடந்துமுடிந்த சரித்திரத்தை யாரும் மாற்றமுடியாது, திருப்பி எழுதமுடியாது. 

முஹம்மது விதைத்தார், இன்று அப்பாவி முஸ்லிம்கள் அறுவடைச் செய்கிறார்கள், துன்புறுத்தப்படுகிறார்கள், முஸ்லிம் நாடுகளிலும் அவர்கள் துன்புறுகிறார்கள், முஸ்லிமல்லாத நாடுகளில் சிலவற்றிலும் துன்புறுகிறார்கள்.

இந்த துன்பத்தை யாரிடம் சென்று முறையிடுவது? முஸ்லிம்களை நோக்கியே காய்கள் நகர்த்தப்படுகின்றனவே!, அரசியல் செய்யப்படுகின்றதே! இவர்களை காப்பாற்ற யார் வருவார்கள்? தங்களை காப்பாற்றிக்கொள்ள முஸ்லிம்கள் என்ன செய்யப்போகிறார்கள்?

இதற்கு ஒரே வழி உண்டு, சமாதானப் பிரபுவாகிய இயேசுவை தங்கள் இருதயத்தில் வரும்படி துவா செய்வது தான். பெத்லகேமில் பிறந்த இயேசு இருதயங்களில் பிறக்கவேண்டும், அப்போது முஸ்லிம்கள் வித்தியாசத்தை காண்பார்கள். முஸ்லிம்கள் இயேசுவை தங்கள் இருதயத்தில் வாசம் செய்யும் படி அழைப்பார்களா?

முஸ்லிம்களுக்கு வழிகாட்டியாக முஹம்மதுவும், குர்‍ஆனும் இருக்கும்வரை, முஸ்லிம்களுக்கு உலகில் எங்கும் சமாதானம் கிடைக்காது, அதே போல உலகத்துக்கும் சமாதானம் கிடைக்காது. இயேசுவே வழி, அவரே சத்தியம், அவரே ஜீவன்.


2019 கிறிஸ்மஸ் தொடர் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/crusades/jesus_is_refugee_nrc.html

ஞாயிறு, 15 டிசம்பர், 2019

2019 கிறிஸ்துமஸ்: சிலுவைப்போர் என்றால் என்ன? அவைகள் தொடங்கப்பட காரணங்கள் யாவை? பாகம் 2

சிலுவைப் போர்கள் (குருசேட்ஸ்) என்றால், கி.பி. 11வது நூற்றாண்டின் கடைசியிலிருந்து, 13வது நூற்றாண்டு வரை ஐரோப்பிய கிறிஸ்தவர்களால் நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளாகும் அல்லது போர்களாகும்.  
புனித நகரமாக கருதப்பட்ட  எருசலேம் நகரையும், இதர புனித இடங்களையும் முஸ்லிம் ஆட்சியாளர்களிடமிருந்து மீட்டுக்கொள்ளவும், முஸ்லிம் ஆக்கிரமிப்புக்களுக்கு தடை போடவும் இந்த போர்கள் நடத்தப்பட்டன‌.

சிலுவைப்போர்கள் பற்றி கலைக்களஞ்சிய தளங்களிலிருந்து மேற்கோள்கள்:

1) Brittanica Encyclopedia

Crusades, military expeditions, beginning in the late 11th century, that were organized by western European Christians in response to centuries of Muslim wars of expansion. Their objectives were to check the spread of Islam, to retake control of the Holy Land in the eastern Mediterranean, to conquer pagan areas, and to recapture formerly Christian territories; they were seen by many of their participants as a means of redemption and expiation for sins. Between 1095, when the First Crusade was launched, and 1291, when the Latin Christians were finally expelled from their kingdom in Syria, there were numerous expeditions to the Holy Land, to Spain, and even to the Baltic; the Crusades continued for several centuries after 1291. Crusading declined rapidly during the 16th century with the advent of the Protestant Reformation and the decline of papal authority.

Approximately two-thirds of the ancient Christian world had been conquered by Muslims by the end of the 11th century, including the important regions of Palestine, Syria, Egypt, and Anatolia. The Crusades, attempting to check this advance, initially enjoyed success, founding a Christian state in Palestine and Syria, but the continued growth of Islamic states ultimately reversed those gains. By the 14th century the Ottoman Turks had established themselves in the Balkans and would penetrate deeper into Europe despite repeated efforts to repulse them.

2) Ancient History Encyclopedia

The Crusades were a series of military campaigns organised by Christian powers in order to retake Jerusalem and the Holy Land back from Muslim control. There would be eight officially sanctioned crusades between 1095 CE and 1270 CE and many more unofficial ones. Each campaign met with varying successes and failures but, ultimately, the wider objective of keeping Jerusalem and the Holy Land in Christian hands failed.

சிலுவைப் போர்கள் ஏன் தொடங்கப்பட்டன?

சிலுவைப்போர்கள் என்றுச் சொன்னாலே, முஸ்லிம்கள் கோபம் கொள்வார்கள்.  கிறிஸ்தவர்கள் செய்தது தவறு என்பார்கள். முஹம்மது மரித்த பிறகு, முஸ்லிம்கள் உலகம் அனைத்திற்கும் சென்று அமைதியான முறையில் இஸ்லாமை பரப்பியது போல நினைத்து இன்றுள்ள முஸ்லிம்கள் பேசுகிறார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் புரிந்த போர்கள், செய்த கொலைகள், சிந்திய இரத்தம், அழித்த தேவாலயங்கள் போன்றவற்றிற்கு அளவே இல்லை. 

கத்தோலிக்க போப் முதன் முதலாக சிலுவைப்போர் பற்றி அறிவிப்பு கொடுப்பதற்கு முன்பு என்ன நடந்தது?  சிலுவைப்போர்களின்  ஆணிவேர் யார் என்று சரித்திர ஏடுகளை படிக்கும் போது, முஸ்லிம்களின் மண்ணாசையும், பொருளாசையும் தான் காரணம் என்பதை அறிய முடியும்.

ஏன் சிலுவைப்போர்கள் தொடங்கப்பட்டன என்ற கேள்விக்கு பதில் எங்கு கிடைக்கும்? முஹம்மது மரித்த ஆண்டிலிருந்து முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் ஆட்சி புரிந்துக்கொண்டு இருந்த நாடுகளில் புரிந்த போர்களைப் ஆய்வு செய்தால் பதில் கிடைக்கும். ஒரு வரியில் பதில் சொல்வதானால், 400 ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம்களால் கைப்பற்றப்பட்டிருந்த கிறிஸ்தவ நாடுகள், மிகவும் காலதாமதமாக‌ தொடுத்த எதிர் போர் தான் சிலுவைப்போர்கள்.

முஹம்மதுவின் கடைசி காலம் கி.பி. 630 முதல்  1095ம் ஆண்டு வரையுள்ள பட்டியல்:

(சிகப்பு வண்ணத்தில் கொடுக்கப்பட்ட விவரங்களை சிறிது அதிக கவனம் செலுத்தி படிக்கவும். புனிதப்போர் என்ற ஒன்றை கிறிஸ்தவர்களுக்கு அறிமுகம் செய்து, போர் செய்யத்தூண்டியதே முஸ்லிம்கள் என்பதால் அவர்களை இந்த பட்டியலில் 'முஸ்லிம் குருசேடர்கள்' என்று குறிப்பிட்டுள்ளேன்.)

கி.பி. 630ம் ஆண்டு (முஹம்மது மரிப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு) முஹம்மது தன் இஸ்லாமிய குருசேடர்களுடன் தபூக் என்ற இடத்திற்கு போருக்குச் சென்றார். அவர் 30,000 ஜிஹாதிகளுடன் பைஜாண்டைன் கிறிஸ்தவர்களோடு சண்டையிட தபூக் என்ற இடம்வரைக்கும் சென்றார். தன்னுடன் போர் புரிய பைஜாண்டைன் அரசன் இராணுவத்துடன் வருகிறார் என்ற வதந்தியை முஹம்மது நம்பி இப்படி மிகபெரிய இராணுவத்துடன் சென்றார். பைஜாண்டைன் இவரோடு சண்டையிட வரவே இல்லை. இதனால், முஹம்மது திரும்பிச் சென்றுவிட்டார்.

கி.பி. 632 – 634: அபூ பக்கர் அவர்கள் கலிஃபாவாக இருந்தார். இவர் தன்னுடைய முஸ்லிம் குருசேடர்களின் உதவியுடன், அரேபியா பகுதியில் இருந்த அனேக சிற்றரசர்களிடம் போரிட்டு, அவர்களை மறுபடியும் இஸ்லாமிய ஆட்சிக்குள் கொண்டுவந்தார். முஹம்மது மரித்தவுடன், அனேகர் இஸ்லாமை விட்டு வெளியே சென்றனர், ஜிஸ்யா வரி கட்ட மறுத்தனர். அபூபக்கர் போர் புரிந்து மறுபடியும் எல்லோரையும் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார்.

கி.பி. 633: காலித் அல்வாலித் என்பவரின் தலைமையில் முஸ்லிம் குருசேடர்கள் உல்லேஸ் என்ற பட்டணத்த பிடித்தார்கள்.  முஹம்மது காலித் அல்வாலித்தை "அல்லாஹ்வின் வாள்" என்று அழைப்பதுண்டு (தபரி 8:158/1616-17). இந்த காலித் அல்வாலித் ஒரு கால்வாயில் அனேகரை கொன்று அவர்களின் இரத்தத்தை சிந்தினார், அந்த கால்வாயில் இரத்தம் ஓடியது, அதனை இரத்தக் கால்வாய் என்று அழைத்தனர் (Blood Canal) (தபரி 11:24 / 2034-35)

கி.பி. 634-644 உமர் இப்னு அல் கத்தாப், கலிஃபாவாக இருந்தார், இவர் மிகவும் கொடூரமானவராக கருதப்படுகிறார்.

கி.பி. 635 இஸ்லாமிய குருசேடர்கள் தமாஸ்கஸ் நாட்டை ஆக்கிரமித்தார்கள்.

கி.பி. 636 முஸ்லிம் குருசேடர்கள் பைஜாண்டைன்ஸை ஆக்கிரமித்தார்கள் (யர்முக் யுத்தம்)

கி.பி. 637 முஸ்லிம் குருசேடர்கள் ஈராக்கை ஆக்கிரமித்தார்கள் (அல் கதிஸிய்யா யுத்தம், 635 அல்லது 636)

கி.பி. 638 முஸ்லிம் குருசேடர்கள் எருசலேமை முற்றுகையிட்டு, பைஜாண்டைன்ஸிடமிருந்து எருசலேமை ஆக்கிரமித்தார்கள். (638 Muslim Crusaders conquer and annex Jerusalem, taking it from the Byzantines.)

கி.பி. 638-650 முஸ்லிம் குருசேடர்கள் ஈரானை ஆக்கிரமித்தார்கள் (காஸ்பியன் கடலோர பகுதிகளைத் தவிர)

கி.பி. 639-642 முஸ்லிம் குருசேடர்கள் எகிப்தை ஆக்கிரமித்தார்கள்.

கி.பி. 641 முஸ்லிம் குருசேடர்கள் சிரியா மற்றும் பாலஸ்தீனாவை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார்கள்.

கி.பி. 643-707 முஸ்லிம் குருசேடர்கள் வட ஆஃப்ரிக்காவை ஆக்கிரமித்தார்கள்.

கி.பி. 644 கலிஃப் உமர் அவர்கள் பெர்சிய அடிமையினால் கொல்லப்பட்டார். உஸ்மான் மூன்றாவது கலிஃபாவாக நியமிக்கப்பட்டார். உமரை விட உஸ்மான் கொஞ்சம் நல்லவர் என்று கருதப்படுகிறார்.

கி.பி. 644-650 முஸ்லிம் குருசேடர்கள் சைப்ரஸ் நாட்டையும், வட  ஆஃப்ரிக்காவில் உள்ள ட்ரிபோலி நாட்டையும், பிடித்தார்கள். மேலும், ஈரான், ஆப்கானிஸ்தான், மற்றும் சிந்துவில் இஸ்லாமிய ஆட்சியை அமைத்தார்கள்.

கி.பி. 656 கலிஃபா உஸ்மான் அவர்கள் ஒரு இஸ்லாமிய இராணுவரால் கொல்லப்பட்டார். அடுத்த கலிஃபாவாக அலி அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். இவர் முஹம்மதுவின் மருமகன் ஆவார்.

கி.பி. 656 "ஒட்டகப்போர்" என்ற போரில் முஹம்மதுவின் மனைவி ஆயிஷா அவர்கள், அலியுடன் போரிட்டார்கள். இதில் அலி அவர்கள் வெற்றிப் பெற்றார்கள்.

கி.பி. 657 எருசலேமின் கவர்னருக்கும், அலிக்கும் இடையே "சிப்பின் யுத்தம்" என்ற போர் நடந்தது.

கி.பி. 661 அலி அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அலியின் ஆதரவாளர்கள் அலியின் மகனாகிய ஹுசேன் அடுத்த கலிஃபாவாக வரவேண்டும் என்று விரும்பினர். ஆனால், அவர் முஅவிய்யாஹ் 1  என்பவரோடு ஒரு உடன்படிக்கை செய்தார்.

கி.பி. 661-680 முஅவிய்யாஹ் அடுத்த கலிஃபா ஆனார்.  இவர் உமய்யித் ராஜவம்சத்தை ஸ்தாபித்தார் மேலும் தலைநகரை மதினாவிலிருந்து தமாஸ்கஸ்ஸுக்கு மாற்றினார்.

கி.பி. 673-678 அரபியர்கள் பைஜாண்டன் சாம்ராஜ்ஜியத்தின் தலைநகர் கான்ஸ்டானொபிலை பிடித்தார்கள் (Arabs besiege Constantinople, capital of Byzantine Empire)

கி.பி. 680 முஹம்மதுவின் பேரன் ஹுசேனும், அவரது குடும்பம், மற்றும் ஆதாரவாளர்கள் ஈராக்கின் கர்பலா என்ற இடத்தில் கொல்லப்பட்டனர்.

கி.பி. 691 எருசலேமின் பெரிய கோபுரம் அமைக்கப்பட்டு முடிவுபெற்றது. முஹம்மதுவின் மறைவிற்கு பிறகு 60 ஆண்டுகளில் இது நடந்தது. (Dome of the Rock is completed in Jerusalem, only six decades after Muhammad's death.)

கி.பி. 705 அப்த் அல் மாலிக் உம்மாயித் சாம்ராஜ்ஜியத்தை மறுபடியும் புதுப்பித்தார்.

கி.பி. 710-713 முஸ்லிம் குருசேடர்கள் இந்தஸ் பள்ளத்தாக்கை ஆக்கிரமித்தார்கள் (lower Indus Valley).

கி.பி. 711-713 முஸ்லிம் குருசேடர்கள் ஸ்பெயின் நாட்டை ஆக்கிரமித்தார்கள். அங்கு அந்தலுஸ் ஆட்சியை அமைத்தார்கள்.

[முஸ்லிம்கள் ஸ்பெயின் நாட்டை விட்டு விரட்டப்பட்டு 700 ஆண்டுகள் ஆகியும், இந்த முஸ்லிம்கள் இன்னும் அதனை நினைத்து துக்கம் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். இதனை விளக்கும் கட்டுரை இதுவாகும். ஸ்பெயின் தங்களுடைய சொந்த நாடு என்று இவர்கள் நினைக்கிறார்கள். (This article recounts how Muslims today still grieve over their expulsion 700 years later. They seem to believe that the land belonged to them in the first place.)]

கி.பி. 719 கொர்டொவா, ஸ்பெயின் அரபியர்களின் ஆளுகையின் கீழ் வந்தது. (Cordova, Spain, becomes seat of Arab governorship).

கி.பி. 732 பொய்டியர்ச் யுத்தத்தில் முஸ்லிம் குருசேடர்கள் தடுக்கப்பட்டார்கள். பிரான்ஸ் அரபிய விஸ்தரிப்பை தடுத்துவிட்டது.

கி.பி. 749 அப்பாஸித்கள் குஃபாவை பிடித்தார்கள், உம்மயித்களின் ஆட்சியை கவிழ்த்தார்கள்.

கி.பி. 756 உம்மயித் தனி அரசாட்சியாக அமைக்க கொர்டொவா, ஸ்பெயின் நாடுகளில் முயற்சிகள் எடுக்கப்பட்டது.

கி.பி. 762 பாக்தாத் ஸ்தாபிக்கப்பட்டது.

கி.பி. 785 கொர்டொவாவில் மிகப்பெரிய மசூதி அமைக்கப்பட்டது.

கி.பி. 789 மொரொக்கோவில் முஸ்லிம் குருசேடர்கள் (இத்ரிசித்கள்) உருவாகினார்கள். இஸ்லாமியராக இருந்து கிறிஸ்தவராகிய மாறிய கிற்ஸ்டொஃபொரஸ் என்பவர் தூக்கிலிடப்பட்டார். (Christoforos, a Muslim who converted to Christianity, is executed.)

கி.பி. 800 அக்லபித் ராஜ்ஜியம் துனிசியாவில் முஸ்லிம் குருசேடர்களால் உருவானது.

கி.பி. 807 கலிஃப் ஹாருன் அல் ரஷீத் என்பவர், எருசலேமில் உள்ள இஸ்லாமியரல்லாத ஜெப வீடுகள், மற்றும் சர்ச் ஆஃப் மக்தலேனா மரியாள் திருச்சபையை அழிக்கும் படி கட்டளையிட்டார். (Caliph Harun al-Rashid orders the destruction of non-Muslim prayer houses and of the Church of Mary Magdalene in Jerusalem.)

கி.பி. 809 அக்லபித் முஸ்லிம் குருசேடர்கள் சர்தினியா, இத்தாலியை ஆக்கிரமித்தார்கள்.

கி.பி. 813 பாலஸ்தீனாவில் உள்ள கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டார்கள், அனேகர் நாட்டை விட்டு ஓடிப்போனார்கள்.

கி.பி. 831 முஸ்லிம் குருசேடர்கள் இத்தாலின் பாலேமோவை கைப்பற்றினார்கள், இத்தாலியின் தென் பகுதியை கொள்ளையிட்டார்கள்.

கி.பி. 850 கலிஃப் அல் மடவக்கில் இஸ்லாமியரல்லாத ஜெப வீடுகளை அழிக்கும் படி கட்டளையிட்டார்.

கி.பி. 855 சிரியாவில் (ஹிம்ஸ்) கிறிஸ்தவர்கள் மத்தியிலே ஒரு கிளர்ச்சி எழும்பியது.

கி.பி. 837-901 அக்லபித்ஸ் இஸ்லாமிய குருசேடர்கள் சிசிலியை கைப்பற்றினார்கள், கொர்சிகா, இத்தாலி, பிரான்ஸ் நாடுகளை கொள்ளையிட்டார்கள் (Aghlabids (Muslim Crusaders) conquer Sicily, raid Corsica, Italy, France.)

கி.பி. 869-883 ஈராக்கில் கருப்பு இன அடிமைகள் மத்தியிலே ஒரு கிளர்ச்சி எழும்பியது. (Revolt of black slaves in Iraq)

கி.பி. 909 துனிசியாவில் ஃபதிமத் என்ற இஸ்லாமிய குருசேடர்கள் எழும்பினார்கள். இவர்கள் சிசிலி, சர்டினியாவை கைப்பற்றினார்கள்.

கி.பி. 928-969 பைஜாண்டையில் இராணுவ எழுச்சி உண்டானது, அவர்கள் தங்களின் பழைய பகுதிகளை பிடித்துக்கொண்டார்கள். (Byzantine military revival, they retake old territories, such as Cyprus (964) and Tarsus (969).)

கி.பி. 937 ஒரு கொடூரமான இஸ்லாமிய தலைவர், ரோமனஸ் கவர்னருக்கு கடிதம் எழுதினார். புனித ஸ்தலங்கள் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் உள்ளது என்று பெருமையடித்துக் கொண்டார். (The Ikhshid, a particularly harsh Muslim ruler, writes to Emperor Romanus, boasting of his control over the holy places.)

கி.பி. 937 உயிர்தெழுதலின் சபை என்ற பெயர் கொண்ட சபை முஸ்லிம்களால் தீயிக்கு இறையாக்கப்பட்டது. எருசலேமின் அனேக திருச்சபைகள் தாக்கப்பட்டன. (The Church of the Resurrection (known as Church of Holy Sepulcher in Latin West) is burned down by Muslims; more churches in Jerusalem are attacked.)

கி.பி. 960 கராகனித் துருக்கிகள் இஸ்லாமுக்கு மாற்றப்பட்டார்கள்.

கி.பி. 966 எருசலேமின் கிறிஸ்தவர்களுக்கு எதிராக கலகங்கள் எழும்பின. (Anti-Christian riots in Jerusalem)

கி.பி. 969 ஃபதிமித் இஸ்லாமிய குருசேடர்கள் எகிப்தை கைப்பற்றினார்கள், கெய்ரோவை ஸ்தாபித்தார்கள்.

கி.பி. 970 செல்ஜுக்ஸ் என்பவர்கள் கிழக்கு பகுதியிலிருந்து இஸ்லாமிய பகுதிகளில் நுழைந்தார்கள்.

கி.பி. 973 சிரியாவும், இஸ்ரவேலும் ஃபதிமித்களால் ஆக்கிரமிக்கப்பட்டது.

கி.பி. 1003 அல் ஹகீம் முதலாவதாக கொடுமைப்படுத்த ஆரம்பித்தார். எகிப்தில் உள்ள பரிசுத்த மாற்கு திருச்சபை அழிக்கப்பட்டது.

கி.பி. 1009 அல் ஹகீம் என்பவரால் உயிர்த்தெழுதல் சபை அழிக்கப்பட்டது. (Destruction of the Church of the Resurrection by al-Hakim (see 937))

கி.பி. 1012 அல் ஹகீம் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் கொடுமைப்படுத்த கட்டளைகளை கொடுத்தார்.(Beginning of al-Hakim's oppressive decrees against Jews and Christians)

கி.பி. 1015 பாலஸ்தீனாவில் பூமியதிர்ச்சி உண்டானது. இஸ்லாமியர்கள் கட்டிய டூம் ஆஃப் ராக், விழுந்தது. (Earthquake in Palestine; the dome of the Dome of the Rock collapses.)

கி.பி. 1031 உம்மாயித் கலிஃபா ராஜ்ஜியம் உடைந்துவிட்டது, 15 தனித் தனி இராஜ்ஜியங்களாக் பிரிந்தது.

கி.பி. 1048 உயிர்த்தெழுதலின் திருச்சபை மறுபடியும் கட்டப்பட்டு முழுமைப்பெற்றது (Reconstruction of the Church of the Resurrection completed)

கி.பி. 1050  அல்மொரவித் (முஸ்லிம் குருசேடர்கள்) இயக்கம் மௌரேடானியாவில் உருவாகியது. இஸ்லாமியர்கள் குர்-ஆன், ஹதீஸ் மற்றும் மாலிகி சட்டத்தில் அதிக கவனம் செலுத்தினார்கள் (Creation of Almoravid (Muslim Crusaders) movement in Mauretania; Almoravids (also known as Murabitun) are coalition of western Saharan Berbers; followers of Islam, focusing on the Quran, the hadith, and Maliki law.)

கி.பி. 1055 செல்ஜுக் இளவரசர் தக்ரூல் பாக்தாதை பிடித்தார், தன் இராஜ்ஜியத்தில் பாக்தாத்தை இணைத்துக்கொண்டார்.

கி.பி. 1055 உயிர்த்தெழுதலின் சபை என்ற திருச்சபையின் சொத்துக்கள் பிடுங்கப்பட்டது (Confiscation of property of Church of the Resurrection)

கி.பி. 1071 மஞ்சிகெர்ட் யுத்தம், செல்ஜுக் துருக்கிகள்(முஸ்லிம் குருசேடர்கள்) பைஜாண்டனை தோற்கடித்து, அனடோலியாவில் அதிகமான இடங்களை கைப்பற்றிக்கொண்டனர்.

கி.பி. 1071  துருக்கிகள் (முஸ்லிம் குருசேடர்கள்) பாலஸ்தீனாவை ஆக்கிரமித்தார்கள்.

கி.பி. 1075 செல்ஜுக் முஸ்லிம் குருசேடர்கள் நைசியாவை ஆக்கிரமித்து, அனடோலியாவிற்கு தலைநகரமாக்கினார்கள்.

கி.பி. 1076 அல்மொரவித்கள் (முஸ்லிம் குருசேடர்கள்) கானா மேற்கு பகுதியை ஆக்கிரமித்தார்கள் (Almoravids (Muslim Crusaders) (see 1050) conquer western Ghana.)

கி.பி. 1085 டொலெடோ கிறிஸ்தவ இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது. (Toledo is taken back by Christian armies.)

கி.பி. 1086 அல்மொரவித்கள் (முஸ்லிம் குருசேடர்கள்) அந்தலுஸ் என்பவருக்கு உதவி புரிந்தார்கள் (Almoravids (Muslim Crusaders) (see 1050) send help to Andalus, Battle of Zallaca.)

கி.பி. 1090-1091 அல்மொரவித்கள் (முஸ்லிம் குருசேடர்கள்) அந்தலுஸ் அனைத்தையும் ஆக்கிரமித்துக்கொண்டார்கள். (சரகோசா மற்றும் சில தீவுகளைத் தவிர)

கி.பி. 1094 பைஜாண்டைன்ஸின் ஆளுநர், அலேக்சியஸ் காம்னெனஸ் 1, மேற்கில் உள்ள கிறிஸ்தவர்களிடம் உதவி கேட்டார். தன்னுடைய இராஜ்ஜியத்தை செல்ஜுக் முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. இந்த செல்ஜுக்ஸ் என்பவர்கள் துருக்கி முஸ்லிம்களாக இருந்தார்கள் (பார்க்க 970).

Byzantine Emperor Alexius Comnenus I asks western Christendom for help against Seljuk invasions of his territory; Seljuks are Muslim Turkish family of eastern origins; see 970.

கி.பி. 1095 போப் அர்பன் 2, சிலுவைப்போர் பற்றி முதல் பிரசங்கம் செய்தார், மற்றும் இவர்கள் 1099ம் ஆண்டு எருசலேமை கைப்பற்றினார்கள்.(1095 Pope Urban II preaches first Crusade; they capture Jerusalem in 1099)

ஆக, இஸ்லாமியர்களின் அனேக ஆக்கிரமிப்பிற்கு கொடுமைகளுக்கு பிறகு தான் மேற்கத்திய கிறிஸ்தவர்கள் முதல் சிலுவைப்போரை துவக்கினார்கள்.

அடுத்த கட்டுரையில், மேற்கண்ட விவரங்களை வரைபடங்கள் மூலமாக இன்னும் தெளிவாக புரியும் வண்ணம் காண்போம்.

இந்த கட்டுரைக்கு உதவிய தமிழ் கட்டுரை:

தேதி: டிசம்பர் 15, 2019