ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

பைபிள் வழியாக அரபியை ஏன் கற்கவேண்டும்?

எளிய முறையில் அரபி மொழியை கற்றுக்கொள்ளுங்கள்

அரபியில் படிக்க மற்றும் புரிந்துக்கொள்ள 

ஒரு மொழியை புதிதாக கற்றுக்கொள்வது என்பது மிகவும் சலிப்பான  விஷயம். இதனை நாம் நம்முடைய ஆரம்ப பள்ளி காலத்திலிருந்தே அறிந்திருக்கிறோம். அன்று நமக்கு மொழியைக் கற்றுக்கொள்வது ஏன் கடினமாக தெரிந்தது? அதற்கு இரண்டு காரணங்களை கூறலாம்:

1) நமக்கு மொழியை கற்றுக்கொள்ள ஆர்வம் இருந்ததில்லை அல்லது கட்டாயத்தின் பேரில் வேறு வழியில்லாமல் நாம் மொழியை கற்க முன் வந்தோம் (நம் பெற்றோர்கள் அடிப்பார்கள் என்பதால் பள்ளிக்கு கட்டாயத்தின் பேரில் அழுதுக்கொண்டே சென்றோம்).

2) நமக்கு மொழியை கற்றுக்கொடுத்தவர்களில் சிலர் பின்பற்றிய பாணியும், அவர்களுக்கு இருந்த ஆர்வமின்மையும் தான் காரணம். (சில அரசு பள்ளிகளில் இதனை நாம் கண்கூடாக காணலாம்).

ஆனால், இன்று நமக்கு அரபியை கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வமும் (!) இருக்கிறது, தேவையும் இருக்கிறது. எனவே, ஒரு புதிய மொழியை கற்றுக்கொள்ளும் பாணியை மாற்றி இந்த பாடத்திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது.  ஒவ்வொரு நாளும் உங்களுக்கு கிடைக்கும் சில மணித்துளிகளை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளவும், சலிப்பில்லாமல் அரபியை கற்றுக்கொள்ளவும் இப்பாடங்கள்  உதவும். வாருங்கள் தொடருவோம்.

ஒரு மொழியை முழுவதுமாக நாம் கற்றுக்கொள்ள கீழ்கண்ட அனைத்தையும் நாம் கற்கவேண்டும்:

1 படிக்க (Read) 

2 புரிந்துக்கொள்ள (Understand)

3 எழுத (Write) 

4 பேச (Speak) 

ஆனால், நம்முடைய முக்கிய நோக்கம், குர்-ஆனை அரபியில் படித்து, அதனை புரிந்துக்கொள்ளவேண்டும் என்பது மட்டுமேயாகும். ஆகையால், இத்தொடர் கட்டுரைகளின் மூலமாக, நாம் அரபியை படிக்கவும், புரிந்துக்கொள்ளவுமே கற்றுக்கொள்ளப் போகிறோம், அரபி மொழியில் எழுதவோ, அல்லது சரளமாக பேசவோ அல்ல.  ஆகையால், நாம் மேற்கண்ட  நான்கு தலைப்புகளில் முதல் இரண்டை மட்டுமே கற்றுக் கொள்ளப்போகிறோம் (படிக்கவும், புரிந்துக்கொள்ளவும்).

அரபியில் பேசவும், எழுதவும் வேண்டுமென்றால் என்ன செய்வது?

நாம் அரபி மொழியை படிக்கவும், படித்ததை புரிந்துக்கொள்ளவும் செய்தால், தானாகவே ஓரளவிற்கு அரபியில் பேசவும் கற்றுக்கொண்டு விடுவோம். மேலும், விருப்பமுள்ளவர்கள் சிறிது அதிக நேரத்தை ஒதுக்கி அரபியில் எழுதவும் கற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு பாடத்தின் கடைசியில் அரபியில் பேசவும், எழுதவும் விருப்பமுள்ளவர்களுக்கு தனியாக பயிற்சிகள் தரப்படும், அவைகளை கோர்வையாக பின்பற்றினால், நாம் சரளமாக பேசலாம் மற்றும் எழுதலாம். 

ஆக, இத்தொடர் கட்டுரைகளில் கொடுக்கப்பட்ட பாடங்களை ஒழுங்காக நாம் கற்றுக்கொண்டால், குர்-ஆன் வசனங்களை நாமும் அரபியில் படிக்கலாம், அவைகளை புரிந்துக் கொள்ளலாம். 

ஏன் பைபிள் வழியாக அரபியை கற்கவேண்டும்?

நான் இத்தொடர் கட்டுரைகளுக்கு கொடுத்த உப தலைப்பை கவனியுங்கள்: "பைபிள் வழி அரபிக் குர்-ஆனை கற்றுக்கொள்வோம்" என்பதாகும். இதனை படித்தவுடன் நமக்கு சில கேள்விகள் எழும்:

• அரபி மொழிக்கும் பைபிளுக்கும் என்ன சம்மந்தம்?

• அரபி குர்-ஆனை படிப்பதற்கும், பைபிளை படிப்பதற்கும் என்ன சம்மந்தம்? 

• "பைபிள் வழி அரபி குர்-ஆனை கற்றுக்கொள்வோம்" என்றால் என்ன பொருள்?  

இவைகளுக்கான பதில்களை அறிந்துக் கொள்ள மேற்கொண்டு படியுங்கள்.

ஒரு மொழியை இரண்டு வகையாக கற்கலாம்:

1. முதலாவதாக அரபி எழுத்துக்களை கற்றுக்கொண்டு, அதன் பிறகு வார்த்தைகளைக் கற்றுக்கொண்டு, பிறகு வாக்கியங்கள் மற்றும் இலக்கணம் என்று கோர்வையாக கற்பது முதலாவது வகையாகும்.  இந்த வழிமுறையில் தான் நாம் அனைவரும் மொழிகளை பள்ளிக்கூடங்களில் கற்கிறோம். இந்த பாணியில் ஒரு மொழியைக் கற்பது பலருக்கு சலிப்பை உண்டாக்கும். முதல் நாள் பாடத்திலேயே எல்லா உயிர் எழுத்துக்களை கற்றுக்கொண்டு, ஒவ்வொரு எழுத்தையும் பத்து முறை வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டு வாருங்கள் என்று வாத்தியார் சொன்னால், பிஞ்சு உள்ளங்களுக்கு சலிப்புண்டாகாமல் இருக்குமா!

2. இரண்டாவதாக, ஒரு வார்த்தையை எடுத்துக்கொண்டு, அந்த வார்த்தையில் வரும் எழுத்துக்களை மட்டும் கற்றுக்கொள்வது. அதன் பிறகு இன்னொரு வார்த்தையை எடுத்துகொண்டு, அதில் வரும் எழுத்துக்களை கற்றுக் கொள்வது. இவ்விதமாக, அனைத்து எழுத்துக்களையும் கற்றுக் கொள்வது மிகவும் சுலபமான வழியாகும். மேலும் தேவையான இடங்களில், இலக்கணங்கள் மற்றும் இதர விவரங்களை கற்றுக்கொள்வோம். 

இந்த இரண்டாம் வகையில் தான் நாம் இப்போது அரபி மொழியை கற்றுக்கொள்ளப் போகிறோம். மேலும், நாம் கற்றுக்கொள்ளப் போகும்  வார்த்தைகள், பைபிள் மற்றும் குர்-ஆனில் காணப்படும் வார்த்தைகளாக இருக்கும். அதாவது A for Apple, B for Ball என்று கற்காமல், A for Allah, B for Bethlahem என்ற முறையில் கற்கப்போகிறோம். இதன் மூலம், பைபிள் மற்றும் குர்-ஆனில் வரும் அரபி வார்த்தைகளை கற்றுக்கொள்வோம்.  

இந்த இரண்டாம் வகையில் ஒரு மொழியை கற்றுக்கொள்வது சலிப்பை உண்டாக்காது, மேலும் சுவாரசியமாகவும் இருக்கும்.  இந்த வகையில் நாம் கற்கும் போது, ஒவ்வொரு பாடத்தை முடிக்கும் போதும், அதன் பலன் நமக்கு உடனே கிடைக்கும். அதாவது, ஒவ்வொரு பாடத்தை முடிக்கும் நேரத்தில் நாம் பல வார்த்தைகளை கற்றுக்கொண்டு இருப்போம், சில இலக்கண விதிகளை கற்றுக்கொண்டு இருப்போம். அரபியில் முதல் வார்த்தையை கற்றுக்கொள்ள பல நாட்கள் காத்திருக்கவேண்டிய அவசியமில்லை, அரபியின் எல்லா எழுத்துக்களை கற்கவேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு பாடத்தை முடிக்கும் போதும், நாம் பல வார்த்தைகளை சுலபமாக கற்றுக்கொண்டிருப்போம். இதனை நீங்கள் முதலாவது அத்தியாயத்தை படித்ததும் புரிந்துக் கொள்வீர்கள்.

ஒரு மொழியை சீக்கிரமாக கற்றுக்கொள்ள வேண்டுமென்றால், நாம்  அந்த மொழியை பேசும் மக்களின் மத்தியில் வாழ்ந்தால் சீக்கிரத்தில் கற்றுக் கொள்ளமுடியும். இந்தியாவில் இருந்துக்கொண்டு அரபிமொழியை புத்தகங்கள் மூலமாக கற்றுக்கொள்பவர்களைக் காட்டிலும், அரபு நாடுகளில் சென்று வேலைச் செய்பவர்கள் சீக்கிரமாக அதனை கற்றுக்கொள்வதை காணமுடியும். ஏனென்றால், எவ்வளவுக்கு அதிகமாக அந்த புதிய மொழியை நாம் கேட்கிறோமோ, படிக்கிறோமோ அவ்வளவு சீக்கிரமாக அதனை கற்றுக்கொள்ளமுடியும். 

ஆனால், கிறிஸ்தவ ஊழியர்களாகிய நம்மை பொறுத்தமட்டில், அரபியை கற்க நாம் அரபு நாடுகளுக்குச் சென்று கற்கமுடியாது. இதனை மனதில் வைத்து தான் இந்த "பைபிள் வழி அரபிக் குர்-ஆனை கற்றுக்கொள்வோம்" என்ற தொடர் கட்டுரைகள் எழுதப்படுகின்றன. அதாவது ஒவ்வொரு நாளும் நாம் பைபிளை வாசிக்கிறோம், அதனை தியானிக்கிறோம், மற்றவர்களிடம் பேசும்  போதும், சபைகளிலும் பைபிள் வசனங்களை பயன்படுத்துகிறோம். எனவே, அரபி பைபிளை அடிப்படையாகக் கொண்டு நாம் அரபி மொழியை கற்றுக்கொண்டால், சீக்கிரத்தில் அதனை கற்றுக்கொள்ளமுடியும்.  எனவே, அரபி மொழியை சீக்கிரத்தில் கற்றுக்கொள்ள, குர்-ஆனை அதன் மூல மொழியில் படித்து புரிந்துக்கொள்ள இத்தொடர் கட்டுரைகள் வகை செய்யும். 

நினைவில் வையுங்கள்

இந்த அரபி பாடங்களை கற்பவர்கள் கீழ்கண்ட விவரங்களை மனதில் வைக்க வேண்டும்:

1) நம்முடைய நோக்கம் அரபியில் புலமை பெற்று, முஸ்லிம்களுக்கு அரபியில் சவால் விடவேண்டும் என்பதல்ல, அவர்களுக்கு சுவிசேஷம் சொல்லவேண்டும் என்பது தான்.

2) அரபியைக் கற்றுக்கொண்டு, அரபி குர்-ஆனை அதற்கான இராகத்தில் முஸ்லிம்களைப் போல ஓதவேண்டும் என்பது நம் நோக்கமல்ல. நம்முடைய நம்பிக்கையின் படி, குர்-ஆனை நாம் இராகத்தில் ஓதுவதினால் எந்த நன்மையும் இல்லை. இதே போல, பைபிளை எபிரேய மற்றும் கிரேக்க மொழியில் நாம் படிப்பதினால், தமிழில் படிப்பவர்களைக் காட்டிலும் அதிகபடியான நன்மையை தேவன் நமக்கு கொடுப்பது இல்லை. வேதத்தை புரிந்துக் கொண்டு அவைகளுக்கு கீழ்படிவதையே தேவன் நம்மிடம் எதிர்ப்பார்க்கிறார். எனவே, குர்-ஆனின் அரபி வசனங்களை இராகம் போட்டு, மெட்டு போட்டு வாசிக்க நாம் முயலப்போவதில்லை, அது நம் நேரத்தை வீணடிக்கும். ஆனால், விருப்பமுள்ளவர்கள் நேரமுள்ளவர்கள் குர்-ஆனை இராகமாக வாசிக்க முயற்சி எடுக்கலாம் இதில் தவறில்லை. முயன்றால் முடியாதது எதுவுமில்லை, விசுவாசிக்கிறவர்களால் எல்லாம் கூடும்.

3) சில அரபி வார்த்தைகளை சரியாக உச்சரிப்பதற்கு நமக்கு மிகவும் கடினமாக இருக்கும். ஒரு ஆசானை வைத்துக் கொண்டு அவைகளை படித்தால் தான் நாம் சரியாக அவைகளை உச்சரிக்கமுடியும். நாம் அதிகமாக அவ்வார்த்தைகளை கேட்டு நம் உச்சரிப்பை சரி செய்துக் கொள்ளலாம். நீ ஏன் குர்-ஆன் அரபி வசனங்களை, பைபிள் அரபி வசனங்களை சரியாக உச்சரிக்கவில்லை என்று தேவன் நம்மிடம் கேள்வி கேட்கமாட்டார் என்பதை மனதில் வையுங்கள். (எத்தனை முறை நம் சபைகளில் "இயேசுவே வழியாக இருக்கிறார்" என்ற சொற்றொடரை "இயேசுவே வலியக இருக்கிறார்"  என்று சிலர் சொல்வதை கேட்டு இருப்போம். இதற்காக நாம் கோபித்துக்கொண்டு சபையை விட்டு சென்றுவிட்டோமா என்ன? அல்லது இயேசு தான் நம்மோடு கோபித்துக்கொண்டு  சென்றுவிட்டாரா? எனவே மனம் தளராதீர்கள்! நம் தாய் மொழியே நமக்கு பிரச்சனையென்றால், அரபி மொழி என்ன விதிவிலக்கா நமக்கு? அரபி நம்மிடம் என்ன பாடுபடப்போகிறதோ?  - அல்லாஹ் தான் காப்பாத்தனும்!)

4) முஸ்லிம் அறிஞர்களில் சிலர் குர்-ஆன் வசனங்களை தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு பொருள் கூறுகிறார்கள். நம்முடைய நோக்கமெல்லாம், முடிந்த அளவிற்கு அரபியை கற்றுக்கொண்டு, குர்-ஆனின் வசனங்களின் உண்மை பொருளை புரிந்துக்கொள்வதாகும். இதன் மூலமாக, முஸ்லிம்களோடு நாம் புரியும் உரையாடல்கள் பயனுள்ளதாக மாறும்.

5) இன்னும் பல இஸ்லாமிய நூல்கள் அரபி மொழியிலேயே உள்ளன, அவைகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்படவில்லை. கிறிஸ்தவர்கள் அரபியை கற்றுக்கொண்டு, அரபியில் புலமைப்பெற்று  இந்த அரபி புத்தகங்களை தமிழாக்கம் செய்யமுடியும். புதிய மொழிகளை கற்றுக்கொள்வதும், அம்மொழிகளில் புலமைப் பெற்று, மொழியாக்கம் செய்வதும் கிறிஸ்தவர்களுக்கு புதிதான மற்றும் கடினமான ஒன்றல்லவே!

6) கடைசியாக, முஸ்லிம்களை பரலோகின் பிரஜைகளாக்க, கர்த்தரின் ஊழியத்தை அவர்களின் மத்தியில் சிறப்பாக செய்ய, அரபி மொழியைக் கற்றுக்கொள்வது பயனுள்ள ஒன்றாக இருக்கும் என்பதை மனதில் வைக்கவும். 

இப்போது முதல் அத்தியாயத்திற்குச் செல்வோம்.


முன்னுரை       பொருளடக்கம்        அத்தியாயம் 1 - ஆமீன் 


Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/learn_arabic/why_arabic.html

கருத்துகள் இல்லை: