ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

திங்கள், 28 டிசம்பர், 2015

யாருக்கு முதன்மையான இடம் தரப்படவேண்டுமென இறைவன் கட்டளை கொடுத்தான்? ஏன்?

The Place of Prominence

என் தேவனுக்கு நன்றிகளை செலுத்த நான் கடமைப்பட்டுள்ளேன், ஏனென்றால் "இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம்" பற்றிய கட்டுரைகளை நான் எழுதும்போதெல்லாம், இஸ்லாமின் இறைவனாகிய அல்லாஹ் எப்படி பைபிளின் தேவனுக்கு முரண்பட்டு காணப்படுகிறார் என்பதை தெளிவாக காண தேவன் உதவி செய்கிறார். உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமென்றால், இயேசுவும் முஹம்மதுவும் தம்முடன் இருக்கும் நபர்களிடம் எப்படி நடந்துக் கொண்டார்கள் என்பதைச் சொல்லலாம். குறிப்பிட்டுச் சொல்வதானால், இயேசுவும் முஹம்மதுவும் தங்கள் உள்வட்ட சீடர்கள் அல்லது தொழர்களிடம் எப்படிப்பட்ட எதிர்ப்பார்ப்பை கொண்டிருந்தார்கள் என்பதைச் சொல்லலாம்.

முஹம்மதுவோடு வாழ்ந்தவர்கள் எவ்விதம் முஹம்மதுவிடம் நடந்துக் கொள்ளவேண்டும் என்று குர்-ஆன் எதிர்ப்பார்க்கிறது? இதே போல, சீடர்கள் இயேசுவிடம் எவ்விதம் நடந்துக் கொள்ளவேண்டும் என்று பைபிள் எதிர்ப்பார்க்கிறது? இவைகளைத் தான் இந்த கட்டுரையில் சுருக்கமாக நாம் ஆய்வுச் செய்யப்போகிறோம்.

சஹாபாக்களிடம் அல்லாஹ் எதிர்ப்பார்த்தவைகள்:

முதலாவதாக, முஹம்மதுவிடம் சஹாபாக்கள் எவ்விதம் நடந்துக் கொள்ளவேண்டும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டார்கள் என்பதைக் காணலாம். இந்த விவரத்தை சரியாக புரிந்துக் கொள்வதற்கு குர்-ஆன் சொல்வதைப் படிக்கவேண்டும். குர்-ஆன் பொதுவாக முஸ்லிம்கள் எப்படி நடந்துக் கொள்ளவேண்டும், அவர்களின் நம்பிக்கை எப்படி இருக்கவேண்டும் என்பதைப் பற்றி அனேக கட்டளைகளை கொடுத்துள்ளது.  ஆனால், இந்த கட்டளைகளை குர்-ஆன் சுருக்கமாகச் சொல்கிறதே தவிர, அவைகளை தெளிவாக விவரிப்பதில்லை.  உதாரணத்திற்கு, ஒவ்வொரு நாளும் அல்லாஹ்வை தொழுதுக் கொள்ளும்படி குர்-ஆன் கட்டளையிடுகிறது, ஆனால், ஒரு நாளுக்கு எத்தனை முறை தொழவேண்டும் என்று சரியான எண்ணிக்கையை அது தெளிவாகச் சொல்வதில்லை. மேலும், தொழுகையின் போது எவைகளை முதலாவது செய்யவேண்டும், எந்த வசனங்களை ஓதவேண்டும்? அடுத்தது என்ன செய்யவேண்டும்? போன்ற தொழுகையின் விவரங்களை கோர்வையாக குர்-ஆன் சொல்வதில்லை. தொழுகையின் முழு விவரமும் நமக்குத் தேவையென்றால், அவைகளை ஹதீஸ்களில் மட்டுமே காணமுடியும். ஆகையால், ஒன்றை நாம் தெளிவாக புரிந்துக் கொள்ளவேண்டும், அது என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட செயலை குர்-ஆன் செய்யச் சொன்னால், அது முக்கியமானது என்று அறிந்துக் கொள்ளவேண்டும், ஆனால், அந்தச் செயலை எப்படி செய்யவேண்டும் என்ற விவரம் மட்டும் குர்-ஆனில் காணப்படாது, அது ஹதீஸ்களில் மட்டுமே காணப்படும், இதனை மனதில் வைக்கவேண்டும். 

முஸ்லிம்கள் முஹம்மதுவிடம் எவ்விதம் நடந்துக் கொள்ளவேண்டும் என்று குர்-ஆன் சொல்கிறது, ஆனால் அதைப் பற்றி தெளிவான விவரத்தை குர்-ஆன் தருவதில்லை.  உதாரணத்திற்கு, முஸ்லிம்கள் முஹம்மதுவிடம் அனுமதி பெறாமல், அவரை விட்டு போகக்கூடாது என்று குர்-ஆன் 24:62ல் சொல்கிறது.  இந்த வசனத்தை கீழே படியுங்கள்: 

குர்-ஆன் 24:62. அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும் ஈமான் கொண்டவர்களே! (உண்மை) முஃமின்களாவார்கள், மேலும், அவர்கள் ஒரு பொதுவான காரியம் பற்றி அவருடன் (ஆலோசிக்கக் கூடி) இருக்கும் போது அவருடைய அனுமதியின்றி (அங்கிருந்து) செல்லமாட்டார்கள்; (நபியே!) உம்மிடத்தில் (அவ்வாறு) அனுமதி பெற்றுச் செல்பவர்களே நிச்சயமாக அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் மெய்யாகவே ஈமான் கொண்டவர்கள், ஆகவே தங்கள் காரியங்கள் சிலவற்றுக்காக அவர்கள் உம்மிடம் அனுமதி கேட்டால், அவர்களில் நீர் விரும்பியவருக்கு அனுமதி கொடுப்பீராக; இன்னும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் நீர் மன்னிப்புக் கோருவீராக; நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்; கிருபையுடையவன்.

இப்போது அடுத்த குர்-ஆன் வசனத்தை கவனியுங்கள். முஹம்மதுவின் வீட்டில் முஸ்லிம்கள் இருக்கும் போது, அவரை அதிகமாக சொந்தரவு செய்யாமல் சீக்கிரமாக சென்றுவிடவேண்டும், அதிக நேரம் அவருடன் பேசிக்கொண்டு இருக்கக்கூடாது என்று குர்-ஆன் சொல்கிறது. மேலும் முஹம்மது மரித்துவிட்ட பிறகு, அவரது மனைவிமார்களை முஸ்லிம்கள் மறுமனம் செய்துக் கொள்ளக்கூடாது என்றும் இவ்வசனம் கட்டளையிடுகிறது. 

குர்-ஆன் 33:53 முஃமின்களே! (உங்களுடைய நபி) உங்களை உணவு அருந்த அழைத்தாலன்றியும், அது சமையலாவதை எதிர்பார்த்தும் (முன்னதாகவே) நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர்கள்; ஆனால், நீங்கள் அழைக்கப்பட்டீர்களானால் (அங்கே) பிரவேசியுங்கள்; அன்றியும் நீங்கள் உணவருந்தி விட்டால் (உடன்) கலைந்து போய் விடுங்கள்; பேச்சுகளில் மனங்கொண்டவர்களாக (அங்கேயே) அமர்ந்து விடாதீர்கள்; நிச்சயமாக இது நபியை நோவினை செய்வதாகும்; இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுவார்; ஆனால் உண்மையைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை; நபியுடைய மனைவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களையும் அவர்கள் இருதயங்களையும் தூய்மையாக்கி வைக்கும்; அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது உங்களுக்கு தகுமானதல்ல; அன்றியும் அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் நீங்கள் மணப்பது ஒருபோதும் கூடாது; நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் (பாவ) காரியமாகும்.

கடைசியாக, முஹம்மதுவிடம் பேசும்போது, மக்கள் தங்கள் சப்தத்தை முஹம்மதுவின் சப்தத்தைவிட உயர்த்திப் பேசாமல், சிறிது குறைவான சப்தத்தில் பேசுங்கள் என்று குர்-ஆன் கட்டளையிடுகிறது. யார் தங்கள் சப்தத்தை முஹம்மதுவின் சப்தத்தைவிட அதிகமாக உயர்த்திப் பேசுகிறாரோ, அவர் செய்த நன்மைகள் (அமல்கள்) இதனால் அழிந்துப்போகும் என்றும் குர்-ஆன் எச்சரிக்கிறது.

குர்-ஆன் 49:2. முஃமின்களே! நீங்கள் நபியின் சப்தத்திற்கு மேலே, உங்கள் சப்தங்களை உயர்த்தாதீர்கள்; மேலும், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசுவதைப் போல், அவரிடம் நீங்கள் இரைந்து போசாதீர்கள், (இவற்றால்) நீங்கள் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உங்கள் அமல்கள் அழிந்து போகும்.

இதுவரை கண்ட குர்-ஆன் வசனங்களிலிருந்து ஒன்றை தெளிவாக புரிந்துக் கொள்ளமுடியும், அதாவது, முஹம்மது எங்கு இருந்தாலும், அங்கு அவருக்கு சிறப்பான இடம் அல்லது அந்தஸ்து தரவேண்டும் என்று அல்லாஹ் எதிர்ப்பார்க்கிறார் என்பதாகும். இஸ்லாமின் தீர்க்கதரிசி என்ற முறையில் மக்கள் அவருக்கு தனிச்சிறப்பான மதிப்பு தரவேண்டும், மேலும் அவருடன் இருப்பவர்களைக் காட்டிலும் அவர் உயர்ந்த நிலையில் இருக்கிறார் என்பதை காட்டக்கூடிய வகையில் மக்கள் நடந்துக் கொள்ளவேண்டும். இது தான் முஹம்மதுவைப் பற்றி குர்-ஆன் முஸ்லிம்களுக்குச் சொல்லும் கட்டளைகளாகும்.  

இயேசுவும் முதன்மையான இடமும்:

ஒருவர் சுயமாகச் சென்று உயர்ந்த இடத்தை பிடிப்பதைப் பற்றி இயேசு எச்சரித்துள்ளார் (லூக்கா 14:8). இப்படி செய்பவர்களுக்கு என்ன நடக்கலாம் என்றும் இயேசு எச்சரித்தார் (லூக்கா 14:11). மேலும் இப்படி சுயமாக முக்கியமான இடங்களை தேடுபவர்களை பின்பற்றவேண்டாம் என்றும் இயேசு கட்டளையிட்டார் (லூக்கா 20:46).

இயேசு இப்பூமியில் இருக்கும்போது, அவர் எப்படி நடந்துக் கொண்டார் என்பதை பார்ப்போம். இயேசு இறைவனாக இருந்தபடியினால், அவரோடு "யார் இருந்தார்கள்?" என்பது ஒரு முக்கியமில்லாத ஒன்றாகும். இயேசுவோடு யார் இருந்தாலும் சரி, அந்த இடத்தில் இயேசு மட்டுமே மேன்மையானவராக இருப்பார், ஏனென்றால் அவர் இறைவனாக இருப்பதால், அவரை விட உயர்ந்தவர் யாருமில்லை. ஒரு எல்லைக்குள் உட்பட்டு சில ஆண்டுகள் வாழ்ந்து, நிச்சயமாக  மரிக்கக்கூடிய மனிதர்கள் இயேசுவோடு இருந்ததினால், எவ்விதத்திலும் அவர்கள் இயேசுவைவிட முதன்மையானவர்களாக இருக்கமுடியாது. இப்படிப்பட்ட மேன்மைகளை கொண்ட தெய்வமாகிய இயேசு மனிதர்களின் துதி, புகழ்ச்சி, ஆராதனை போன்ற அனைத்துவிதமான கனத்திற்கு பாத்திரராக இருந்தாலும், அவர் தன்னை ஒரு வேலைக்காரன் (ஊழியக்காரன்) என்ற நிலையிலே தம்மை காண்பித்துக் கொண்டார் (மாற்கு 10:45). 

ஒருமுறை இயேசுவின் சீடர்கள், தங்களில் யார் பெரியவராக இருக்கிறார் என்று பேசிக்கொண்டு இருக்கும் போது, இயேசு பெரியவராக இருந்தாலும், தம்முடைய சீடர்களுக்கு தாம் ஊழியம் செய்கிறவராக (வேலைக்காரனாக) இருப்பதாக இயேசு சொன்னார். தன் தெய்வீகத்தன்மையின் மேன்மையை அவர் வெளிப்படுத்தாமல், தம்மைத் தாழ்த்திக் கொண்டார், இதனை லூக்கா 22:27ல் காணலாம்.

பந்தியிருக்கிறவனோ, பணிவிடைசெய்கிறவனோ, எவன் பெரியவன்? பந்தியிருக்கிறவன் அல்லவா? அப்படியிருந்தும், நான் உங்கள் நடுவிலே பணிவிடைக்காரனைப்போல் இருக்கிறேன். (லூக்கா 22:27)

இந்த சத்தியத்தை அவர் இன்னும் தெளிவாக இன்னொரு முறை நடைமுறையில் செய்து காட்டினார், அதாவது இயேசு சீடர்களின்  கால்களை கழுவும் போது இதனை செய்து காட்டினார் (யோவான் 13:5). அழுக்கு இல்லாத சுத்தமான கால்கள் தான் பரிசுத்தத்திற்கு அடையாளம் என்பதால் அவர் சீடர்களின் கால்களை கழுவவில்லை. அதற்கு பதிலாக, தாம் ஆண்டவராக இருந்தாலும், எல்லா வித கனத்திற்கு பாத்திரராக இருந்தாலும், ஒரு பணிவிடைக்காரனின் நிலையை தரித்துக் கொண்டு தம்மை விட தாழ்வானவர்களுக்கு (மனிதர்களுக்கு) ஊழியம் செய்தார் என்பதை வெளிப்படுத்தவே இப்படி செய்தார். வேறுவகையில் சொல்லவேண்டுமென்றால், இதே போல தம்முடைய சீடர்களும், மற்றவர்களுக்கு ஊழியம் செய்யவேண்டும் என்பதை வெளிப்படுத்தினார் (யோவான் 13:15).

இஸ்லாமிலே முஹம்மதுவிற்கு தனிப்பட்ட சிறப்பு சலுகைகள், மதிப்பு மரியாதை தரப்படவேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டார். கிறிஸ்தவத்திலே, இயேசு மற்றவர்களுக்கு ஊழியம் செய்யவே வந்திருக்கிறார் என்று எடுத்துரைத்தார், அதனை செயலிலும் செய்துக் காட்டினார். இவ்விருவருடைய இச்செயல்களில் உங்களுக்கு ஏதாவது துப்பு தெரிகின்றதா? யார் உண்மை தெய்வத்தை வெளிப்படுத்த வந்தவர்கள் என்று உங்களால் கணிக்கமுடிகின்றதா?

குறிப்பு: குர்-ஆன் வசனங்கள் அனைத்தும் டாக்டர் முஹம்மது ஜான் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: