ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

புதன், 5 மார்ச், 2025

வண்ணத் திருக்குர்‍ஆன் - அல் ஃபாத்தியா - Chapter 1

வண்ணத் திருக்குர்‍ஆன் - அல் ஃபாத்தியா - Chapter 1

ண்த் திருக்குர்ன்

 

அத்தியாயம் 1: அல் பாத்தியா

1:1

அளவற்ற அருளாளனும்நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

 

1:2

அனைத்து புகழும்அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

 

1:3

(அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.

 

1:4

(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி (யும் ஆவான்).

 

1:5

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

 

1:6

நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!

 

இவைகள் மனித வார்த்தைகளா? அல்லது அல்லாஹ்வின் வார்த்தைகளா?

இந்த முதல் அத்தியாயத்தில் வரும் வசனங்கள், இறைவனிடம் மனிதர்கள் வேண்டும் வகையில் உள்ளன.

முக்கியமாக, கடைசி இரண்டு வசனங்கள் 5 மற்றும் 6 ஐ பாருங்கள்:

1:5

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

1:6

நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!

'உன்னையே, உன்னிடமே, நீ' போன்ற வார்த்தைகளை மனிதன் பேசுவதாகும், அதே போல 'நாங்கள், எங்களை' போன்ற வார்த்தைகள் கூட மனிதர்கள் பேசுவது தான். எனவே இவைகளை மனித வார்த்தைகள் என்று சொல்லலாம்.

ஆனால், இப்படி 'நீங்கள்' வேண்டிக்கொள்ளவேண்டும் என்று அல்லாஹ் எங்களுக்குச் சொல்லியுள்ளான், எனவே இவைகள் 'அல்லாஹ்வின் வார்த்தைகளே' என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள்.

எனவே, நாமும் இப்போதைக்கு இவைகள் அல்லாஹ்வின் வார்த்தைகள் என்றே கருதி விட்டுவிடுகிறோம்.

தேதி: 5th Mar 2025


வண்ணத் திருக்குர்‍ஆன் - பொருளடக்கம்

வண்ணத் திருக்குர்‍ஆன் அறிமுகம் - Color Quran - Introduction

உமரின் கட்டுரைகள் பக்கம்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/ramalan2025/ramalan-2025-01.html


செவ்வாய், 4 மார்ச், 2025

Color Quran - Introduction - வண்ணத் திருக்குர்‍ஆன் அறிமுகம்

Color Quran - Introduction - வண்ணத் திருக்குர்‍ஆன் அறிமுகம்

 

 

ண்த் திருக்குர்ன்

 

இன்னொரு புதிய தமிழாக்கமா? 

தமிழ் மொழியில் ஏற்கனவே பல‌ குர்‍ஆன் தமிழாக்கங்கள் இருக்கும் போது, ஏன் இன்னொரு புதிய‌ குர்‍ஆன் தமிழாக்கம்? என்ற கேள்வி எழும். ஆனால், இந்த வண்ணத் திருக்குர்‍ஆன் புதிய தமிழாக்கம் அல்ல. தமிழ் முஸ்லிம்கள் பயன்படுத்தும் குர்‍ஆன் தமிழாக்கங்களில் ஒன்றான "முஹம்மது ஜான் டிரஸ்ட் தமிழாக்கத்தின் மீது செய்யப்பட்ட ஆய்வு ஆகும்".  

தற்போது தமிழ் மொழியில்,

  1. டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்
  2. அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்
  3. இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்
  4. பி.ஜைனுல் ஆபிதீன் தமிழாக்கம்

போன்ற குர்‍ஆன் தமிழாக்கங்களோடு கூட, இன்னும் சில தமிழாக்கங்கள் உள்ளன. 

எனவே, இந்த வண்ணத் திருக்குர்‍ஆன் என்பது ஒரு தமிழாக்கமல்ல, இது ஏற்கனவே இருக்கும் குர்‍ஆன் தமிழாக்கத்தின் மீது செய்யப்பட்ட ஆய்வு ஆகும்.

அரபி மூல குர்‍ஆன் ஆய்வு?

அப்படியானால், இந்த ஆய்வுக்கும், மூல அரபி குர்‍ஆனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லையா? என்று கேட்டால், நிச்சயம் சம்மந்தம் உண்டு. குர்‍ஆன் தமிழாக்கங்கள் அனைத்தும் மூல அரபி குர்‍ஆனிலுருந்து மொழியாக்கம் செய்யப்பட்டவைகள் தானே! எனவே மறைமுகமாக இந்த ஆய்வு மூல அரபி குர்‍ஆனில் தான் செய்யப்பட்டது. மேற்கொண்டு படித்தால், இதன் உண்மைத் தன்மை புரியும்.

இதன் நோக்கமென்ன? 

மனித வார்த்தைகளை அல்லாஹ்வின் வசனங்களிலிருந்து வேறு பிரித்தல்

நாம் அனைவரும் அறிந்திருக்கின்றபடி, குர்‍ஆன் என்பது இஸ்லாமிய நபி முஹம்மது அவர்களுக்கு சிறிது சிறிதாக 23 ஆண்டுகள் இடைவெளியில் அல்லாஹ்வினால் இறக்கப்பட்டதாக முஸ்லிம்களால் நம்பப்படுகிறது. மேலும், குர்‍ஆனில் அதன் முந்தைய கால பல நிகழ்ச்சிகளை அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான்.  பைபிளிலிருந்து பல நிகழ்ச்சிகளை அல்லாஹ் குர்‍ஆனில் மறுபதிவு செய்கின்றான் . மேலும், முஹம்மதுவின் சமகாலத்தில் மக்கள் பேசிய வார்த்தைகளையும் சுட்டிக்காட்டுகின்றான்.

குர்‍ஆனில் அல்லாஹ் நபிகளோடு செய்த உரையாடல்கள், மக்கள் தங்களுக்குள் செய்த உரையாடல்கள், மலக்குகளின் உரையாடல்கள் என்று பல உரையாடல்களை குர்‍ஆனில் காணலாம்.

உதாரணத்திற்கு கீழ்கண்ட உரையாடல்களைச் சொல்லலாம்:

  1. ஆதாம் படைக்கப்பட்ட பின்பு, அல்லாஹ்விற்கும், இப்லீஸுக்கும் இடையே நடந்த உரையாடல்
  2. நூஹ் நபிக்கும் அக்கால மக்களுக்கும் இடையே நடைப்பெற்ற உரையாடல்
  3. நபி இப்றாஹீமுக்கும் தம் இன மக்களுக்கும் இடையே நடந்த உரையாடல்கள்
  4. நபி மூஸாவிற்கும், ஃபிர்அவ்னிற்கும், சூனியக்கரர்களுக்கும், இஸ்ராயீலர்களுக்கும் இடையே நடந்த உரையாடல்கள்
  5. நபி ஸுலைமான் மற்றும் ஹுத் ஹுத் பறவைக்கும் இடையே நடந்த உரையாடல்
  6. நபி ஸுலைமானின் காலத்தில் எறும்புகளுக்கு இடையே நடந்த உரையாடல்
  7. ஒவ்வொரு காலக்கட்டத்தில் அனுப்பப்பட்ட நபிகளுக்கும் தம் மக்களுக்கும் இடையே நடைப்பெற்ற உரையாடல்கள்
  8. இஸ்லாமிய இறைத்தூதர் முஹம்மதுவோடு குறைஷிகளுக்கும், யூதர்களுக்கும் மற்றும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே நடைப்பெற்ற உரையாடல்கள்

இவ்விதமாக பல கடந்த கால நிகழ்ச்சிகளை, அவர்களின் உரையாடல்களோடு (மனித வார்த்தைகளோடு)  அல்லாஹ் தன் வார்த்தைகளையும் குர்‍ஆனில் பதிவு செய்துள்ளான். மேலும் குர்‍ஆனில் எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளும் அப்போது நடக்கவிருக்கும் உரையாடல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப்லீஸின் பேச்சுக்கள்:

ஒரு எடுத்துக்காட்டு: இப்லீஸின் வார்த்தைகள் அடங்கிய குர்‍ஆன் வசனங்கள்:

குர்‍ஆன் 4:119 "இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன்;. அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்;. (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன்" என்றும் ஷைத்தான் கூறினான்;. எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை அடைந்தவன் ஆவான்.

குர்‍ஆன் 7:12 "நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?" என்று அல்லாஹ் கேட்டான்; "நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்" என்று (இப்லீஸ் பதில்) கூறினான்.

இவ்வசனங்களில் அடிக்கோடிட்ட வார்த்தைகளை கவனித்துப்பாருங்கள். அவைகள் அல்லாஹ்வின் வார்த்தைகள் அல்ல, அவைகள் இப்லீஷின் வார்த்தைகள். அடிக்கோடு இடாத வார்த்தைகள் தான் அல்லாஹ்வின் வார்த்தைகள். 

இந்த உரையாடல் அல்லாஹ்விற்கு, இப்லீஸுக்கும் இடையே ஆதிகாலத்தில் நடந்த ஒன்று என்று குர்‍ஆன் பதிவு செய்துள்ளது. அதனை கி.பி. ஏழாம் நூற்றாண்டில்  குர்‍ஆனில், அல்லாஹ் சுட்டிக்காட்டும்போது, இவ்வுரையாடலை பதிவு செய்கின்றான். அதாவது "இப்லீஸ் அப்படி பேசினான்", "நான் இப்படி பதில் அளித்தேன்" என்று அல்லாஹ் கடந்த கால நிகழ்ச்சியை எடுத்துரைக்கின்றான். இப்லீஷ் பேசிய வார்த்தைகளை அல்லாஹ் மறுபடியும் சொல்லிக்காட்டும் பொது, அவைகள் எப்படி 'அல்லாஹ்வின் வார்த்தைகள் ஆகும்'?

இந்த வண்ணத் திருக்குர்‍ஆனில், குர்‍ஆன் முழுவதிலும் உள்ள 'அல்லாஹ் பேசாத வார்த்தைகள், வரிகள், நிகழ்ச்சிகள்'  வண்ணமிடப்பட்டுள்ளன.  இதன் மூலமாக, அல்லாஹ்வின் வார்த்தைகள் எவையென்றும், மற்றவர்களின் (மனிதர்களின், பறவை, எறும்பு, இப்லீஸ்,..) வார்த்தைகள் எவை என்றும் நாம் சுலபமாக புரிந்துக் கொள்ளலாம்.

குர்‍ஆனில் அல்லாஹ் அல்லாதவர்களின் வார்த்தைகள் உண்டா?

முஸ்லிம்களின் படி  குர்‍ஆன் அல்லாஹ்வின் வார்த்தையாகும், ஆனால், அல்லாஹ் தன் சுய விருப்பத்தின் படி, மனித வார்த்தைகளையும், மலக்குகளின் வார்த்தைகளையும், காஃபிர்களின் வார்த்தைகளையும் இன்னும் எறும்பு மற்றும் ஹுத் ஹுத் பறவையின் வார்த்தைகளையும் சேர்த்துள்ளான். 

அல்லாஹ் முடிவு செய்து சேர்த்த ஒன்றை, இல்லை என்று மறுக்க யாருக்கும் உரிமையோ அதிகாரமோ இல்லை.

கவனிக்கவும், கடந்த கால நிகழ்ச்சிகளை உரையாடல்களை அல்லாஹ் மேற்கோள் காட்டும் போதெல்லாம், மனித வார்த்தைகளை  மற்றவர்களின் வார்த்தைகளை  அல்லாஹ் குர்‍ஆனில் சேர்த்துள்ளான்.

எறும்புகளின் பேச்சுக்கள்:

இந்த கீழ்கண்ட வசனத்தை அல்லாஹ் இறக்கும் போது, எறும்புகளின் வார்த்தைகளை தன் வேதத்தில் சேர்த்துக்கொள்ள அவன் தயங்கியதில்லை.

27:18 இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) "எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)" என்று கூறிற்று.

எறும்புகள் பேசிய வார்த்தைகளை எடுத்துக்கொண்டு, அவைகள் 'அல்லாஹ் பேசிய வார்த்தைகள்' என்றுச் சொல்வது, அல்லாஹ்விற்கு எதிரான குற்றமாகாதா?  

இவ்வசனத்தில் "இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு " என்ற வார்த்தைகளும்,  "என்று கூறிற்று" என்ற வார்த்தைகள் மட்டுமே அல்லாஹ்வின் வார்த்தைகள் ஆகும், மீதமுள்ளது எறும்பு பேசிய வார்த்தைகளாகும்.

சுருக்கமாக சொல்வதென்றால், குர்‍ஆனில் அல்லாஹ்வின் வார்த்தைகளோடு மற்றவர்களின் வார்த்தைகளும் உள்ளன என்பது தான் இதன் மூலமாக நாம் அறியமுடிகின்றது.

ஜின்களின் பேச்சுக்கள்: 

கீழ்கண்ட வசனத்தில் பேசுவது யார்? ஜின்கள். இந்த வசனத்தை அல்லாஹ் இறக்கியிருந்தாலும், அந்த வார்த்தைகளை சொல்பவர்கள் ஜின்கள் தானே! முதல் வக்கியம் எப்படி தொடங்குகிறது என்று பாருங்கள், "(ஜின்கள்) கூறினார்கள்" என்று தொடங்குவதிலிருந்து ஜின்கள் இவ்வார்த்தைகளை பேசுகிறார்கள் என்று புரிகின்றதல்லவா!

குர்‍ஆன் 46:30 (ஜின்கள்) கூறினார்கள்; "எங்களுடைய சமூகத்தார்களே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செவிமடுத்தோம், அது மூஸாவுக்குப் பின்னர் இறக்கப்பட்டிருக்கின்றது, அது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மை படுத்துகிறது. அது உண்மையின் பக்கமும், நேரான மார்க்கத்தின் பாலும் (யாவருக்கும்) ´வழி´ காட்டுகின்றது.

நோவாவின் பேச்சு: 

இந்த வசனத்தில் பேசுபவர் நபி நோவா ஆவார். இந்த வசனத்தில் "என்று கூறினார்" என்பது தான் அல்லாஹ்வின் வார்த்தைகள், மீதமுள்ளது நோவா தம் மக்களுக்கு எடுத்துச் சொன்ன செய்தியாகும்.

குர்‍ஆன் 71:2 "என் சமூகத்தார்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்" என்று கூறினார்.

மக்களின் பேச்சு:

கீழ்கண்ட வசனங்கள் குர்‍ஆனில் இருந்தாலும், இங்கு பேசுபவர்கள் யார்? நம்பிக்கையில்லாத மக்கள் பேசுகிறார்கள். அல்லாஹ்வே தன் வசனங்களை 'சூனியம் என்றோ, இவைகள் மனித வார்த்தைகள்' என்றோ  சொல்லிக்கொள்வானா? சிந்தித்துப் பாருங்கள்?

குர்‍ஆன் 74:24, 25 அப்பால் அவன் கூறினான்: "இது (பிறரிடமிருந்து கற்றுப்) பேசப்படும் சூனியமே அன்றி வேறில்லை. "இது மனிதனின் சொல்லல்லாமலும் வேறில்லை" (என்றும் கூறினான்.)

குர்‍ஆன்  75:6 "கியாம நாள் எப்போழுது வரும்?" என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.

கீழ்கண்ட வசனத்தில், தன்னுடைய இறைத்தூதரை அல்லாஹ்வே "இவர் ஒரு பைத்தியக்காரர்" என்றுச் சொல்வானா? இல்லையல்லவா? இவைகள் மனிதர்கள் பேச்சுக்கள் தானே! அதுவும் இஸ்லாமை நம்பாத மக்களின் பேச்சுக்கள் என்று அல்லாஹ்வே சொல்கிறான். 

குர்‍ஆன் 23:25 "இவர் ஒரு பைத்தியக்கார மனிதரேயன்றி வேறில்லை எனவே இவருடன் நீங்கள் சிறிது காலம் பொறுத்திருந்து பாருங்கள்" (எனவும் கூறினர்).

"இல்லை, இல்லை, நாங்கள் நம்பமாட்டோம், இது குர்‍ஆனில் இருப்பதினால், அது அல்லாஹ்வின் பேச்சுக்கள்" என்று நீங்கள் சொல்வீர்களென்றால், நீங்கள் நேரடியாக அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் கேவலப்படுத்துகிறீர்கள் என்று பொருள். அல்லாஹ் முஹம்மதுவை 'பைத்தியக்காரர்' என்று சொல்வதாக ஆகிவிடுமோ, இது உண்மையென்றால், மொத்த குர்‍ஆனுமே பொய்யாகிவிடுமே!

ஒரு அடிப்படை உண்மையை புரிந்துக்கொள்ளுங்கள்: எந்த வரிகள் ஒருவரின் மூளையிலிருந்து/மனதிலிருந்து/எண்ணத்திலிருந்து வருகிறதோ, அது தான் அந்த நபர் பேசுவதாக அமையும். ஆனால், மற்றவர்கள் சொல்வதை இன்னொருவர் குறிப்பிட்டு "அவர் அப்படி சொன்னார், இவர் இப்படி சொன்னார்" என்று சொல்வாரானால், அது சொல்பவரின் வார்த்தைகளாக கருதக்கூடாது.

உதாரணம்: உமர் என்ற பெயர் கொண்ட ஒரு மாணவன் தன் ஆசிரியரிடம் சென்று, "சார், அப்துல் உங்களை 'நாய்' என்று திட்டிணான்" என்று சொல்கிறான் என்று வைத்துக்கொண்டால், அந்த ஆசிரியர் என்ன செய்வார்?  இப்படிச் சொல்லும் உமரை அடிப்பார்களா? இல்லை. அதற்கு பதிலாக, அந்த அப்துல் என்ற மாணவனை அழைத்து, 'நீ என்னை நாய் என்று திட்டினாயா?' என்று கேட்பார் அல்லவா? அதன் பிறகு, அது உண்மையென்று அறியப்பட்டால், அந்த அப்துலின் மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார்கள். இதே போலத்தான், அல்லாஹ் குர்‍ஆனில் "மக்கள் முஹம்மதுவை பைத்தியக்காரர்" என்றுச் சொல்கிறார்கள் என்று சுட்டிக்காட்டுகின்றானே தவிர, அவரது மனதிலிருந்து அவர் முஹம்மதுவை "பைத்தியக்காரர்" என்று குற்றம்சாட்டவில்லை.

இப்பொழுது வாசகர்களுக்கு புரிந்திருக்கும், குர்‍ஆனில் மனித வார்த்தைகள் எவை, அல்லாஹ்வின் வார்த்தைகள் எவை என்பதை பிரித்துப் பார்ப்பது அவசியம்.

நாம் இந்த தொடர் கட்டுரைகளில், ஒவ்வொரு ஸூராவிலும், எத்தனை வசனங்களில் அல்லாஹ்வின் வார்த்தைகள், எத்தனை வசனங்களில் மற்றவர்களின் வார்த்தைகள் உள்ளன என்ற பட்டியலும் கொடுக்கப்பட்டு இருக்கும். குர்‍ஆனை சரியாக புரிந்துக்கொள்ள இது உதவியாக இருக்கும்.

தேதி: 4th Mar 2025


வண்ணத் திருக்குர்‍ஆன்

உமரின் கட்டுரைகள் பக்கம்

Source: https://www.backend.ai-deutschland.de/tamil/authors/umar/ramalan/ramalan2025/colorquran-intro.html